Friday, December 31, 2010

கில்மா சிறுகதை: 2

1-1-2011
டி.எஸ்.பி தொடர்ந்து கேள்விகளை ஃபாஸ்ட் பவுலர் கணக்காய் வீச  பதில் சொல்லமுடியாமல்  நெளிந்தார் எஸ்.ஐ.

"ஏன்யா நீ பயங்கர தண்ணி பார்ட்டி. விடிய விடிய கூத்தடிச்சுட்டு விடிஞ்ச பிறவு தூங்கப்போற கேசு. சூரியன் உச்சிக்கு வந்த பிற்பாடுதான் முந்தின நாள் நீ என்ன பண்ணேனு சனத்துக்கு ஃபோன் போட்டு கேட்கிற பார்ட்டி.விடியல் 4 மணிக்கு தீவிரவாதிகளை பிடிச்சேன்னா எப்படிய்யா நம்பறது?"

"இல்லிங்கய்யா ரோந்துப்பணிய முடிச்சுக்கிட்டு வர்ரச்ச ஹைதராபாத் உல்வா பஸ் புறப்பட இருந்தது. சரி  நியூ இயர் வேற வருது . எந்த பிக்காலின்னா தலை நகர்ல அலம்பல் பண்ண இங்கருந்து சாமான் செட்டோட  போனா என்ன பண்றதுனு தரோவா செக் பண்ணோம்.."

"யோவ் நீ உன் கதையையெல்லாம் பேப்பர்காரனுக்கு சொல்லு. போயா போய் வேலை பாரு. என்ன நடந்திருக்கும்னு சொல்லவா? நீ பாட்டுக்கு குப்புற படுத்து தூங்கிக்கிட்டிருந்திருப்பே.. உன் ஸ்டேஷன்ல மதுன்னு ஒரு துடியான கான்ஸ்டபிள் இருக்கான். மதுவோ அல்லது வேறு எவனோ ரோந்துல இருந்திருப்பான். அவன் அந்த டெர்ரரிஸ்டுங்களை பிடிச்சு வச்சிக்கிட்டு உனக்கு மெசேஜ் கொடுத்திருப்பான்..நீ ஹேங் ஓவருக்கு ஒரு ஸ்ட்ராங் காஃபி அடிச்சுட்டு ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு ஃபோன் போட்டிருப்பே கரெக்டா?"

"இல்... இல்லை சார்.. நான் தான்.."

"சரி சரி இப்ப எனக்கு  என்ன  போச்சு தீவிரவாதிகளை பிடிச்சாச்சு ..யார் பிடிச்சா என்ன.. ஆகவேண்டியதை பார்க்கிறேன். என்ன ஒரு இன்க்ரிமென்ட், கேஷ் ரிவார்ட், உத்தம காவலர் விருதுக்கு ரெக்கமண்ட் பண்ணனும் அவ்ளதானே"

"சார் மதியம் பிரஸ் மீட்டுன்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க.."

"ஆமாமாம்  நல்லா பவுடரை அப்பிக்கிட்டு வந்திரு.. ஆமய்யா உனக்கு குழந்தைகளே இல்லியாமே யாருனா நல்ல டாக்டரா பார்க்க வேண்டியதுதானே"

"பார்க்கனும் சார் ..வரேன் சார்"

*           *                 *

1-1-2012

எஸ்.ஐ தலைகுனிந்து உட்கார்ந்திருக்க டி.எஸ்.பி முகம் சிவந்திருந்தது.  தூத்தேரி.. போலீஸ் டிப்பார்ட்மென்ட் மானத்தையே வாங்கிட்டயேய்யா..பொம்பளைக்கு செக்ஸ் கூட செகண்டரிதான்யா. எப்பப்பாரு குடி , தீனி இதானா லைஃப்.

சரி நீதான் வகையத்தவனு உனக்கு தெரியும் இல்லியா .அந்த கான்ஸ்டபிள் மது துடியான பையன். அவனை போயி ஆர்டர்லி கணக்கா உன்  வீட்டு வேலைக்கு உபயோகிச்சிருக்கே.

பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு. இப்ப பொஞ்சாதி கர்பம். மது மன்மத வேலை பண்ணிட்டான்னு பதைக்கிறே..

நடவடிக்கை எடுத்தா உன் மானமும் சேர்ந்துதான் போகும். பலான புஸ்தவத்துல கூட உன் கதைய தொடரா போட ஆரம்பிச்சுருவான். அந்த மதுவை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிர்ரன். அவன் தன் உழைப்புல பிடிச்ச தீவிரவாதிலருந்து, கஞ்சா,சந்தனக்கட்டை கும்பல் வரை நீ பிடிச்சதா கணக்கு காட்டி கேமரா ஃப்ளாஷுக்கு முன்னாடி இளிச்சே இல்லை.. இப்போ அவன் நல்லாவே உழைச்சு உன் பொஞ்சாதிய கர்பமாக்கியிருக்கான். எப்படியும் உனக்கு குழந்தைங்க இல்லை. பிறக்கவும் பிறக்காதுன்னு டாக்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டதா நீயே சொல்றே..பேசாம அவன் உழைப்புக்கான மெடலை  நீ வாங்கி நெஞ்சுல  குத்திக்கிட்ட மாதிரி அவனோட வாரிசையும் வாரி அணைச்சுக்க..எப்படியும் நீ நல்ல போலீஸ்காரன் கிடையாது. உன் மூலமா டிப்பார்ட்மென்டுக்கு ஒரு நல்ல போலீஸ்காரனாவது கிடைக்கட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஆதரவளிக்கும் சக அன்பர்களுக்கு சுகுமார்ஜியின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நலங்கள் பல பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்...
அன்பன்
சுகுமார்ஜி
கவிதை07னின் ஒரு செங்கல்

நான் மகான் அல்ல...


                                         லொள்ளு அவார்ட்ஸ்   2010





















                                                   ULTIMATE ONE......




Source:One of the forwarded mail

Thursday, December 30, 2010

கலைஞருக்கு நித்யானந்தா கடும் எச்சரிக்கை

ஒரு தாட்டி ஒரு  ஆனைக்கு  காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சாம். அப்போ ஒரு எலி வந்து "ஒரே தாட்டி ப்ளீஸ்" னு தக்ஜம் பண்ண பார்த்துச்சாம். நம்ம தாத்தாவோட (கலைஞர்) நிலைமையும் அப்படி ஆயிருச்சு.  கில்மா வீடியோ புகழ்  நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்துல பேட்டி கொடுத்தாராம்:

கலைஞர் கிட்டே அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு லெட்டர் எழுதினதாவும் தான் நிரபராதினு நிரூபிக்க உதவனும்னு கேட்டு கடிதாசு போட்டதா சொன்னாராம்

அதுக்கு தாத்தா கிட்டேருந்து பதில்வரலேன்னும் சொல்லி  கீறாரு.அதோட விட்டாலும் பரவால்லை.

பக்தர்கள் கொதிச்சுப்போயிருக்காய்ங்களாம். நித்யாதான் "ஓம் சாந்தி"ன்னுட்டுஅடக்கி வச்சிருக்காராம்.

கலைஞர் தன் கடிதம் மேல  நடவடிக்கை எடுக்கலைன்னா கன்னியாகுமாரிலருந்து லட்சக்கணக்கான பக்தர்களோட பாதயாத்திரை செய்வாராம்.

கலைஞர் அவர்களே,

எப்படியும் ராஜா ராஜினாமா, சிபிஐ ரெய்டு விவகாரங்களால இனமானம், மானிலத்தில் சுயாட்சி, வடவர் ஆதிக்கம் இத்யாதிக்கெல்லாம் உசுரு கொடுத்திட்டிங்க. வேலையோட வேலையா மஞ்ச சால்வையை தூக்கிப்போட்டுருங்க. ஒரு கருப்பு சால்வைய போர்த்திக்கிட்டு  நித்யானந்தா மாதிரி டுபாகூர் சாமியார்ங்களை கிழிக்க புயல் வேக சுற்றுப் பயணம் ஒன்னு துவங்கிருங்க..


இப்படியே விட்டா   நித்யானந்தா "விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்னு"  கூட  அறிவிப்பார் போல..


பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:


* நான் நிரபராதி ( அடங்கொய்யால)

* வீடியோ எல்லாமே மார்ஃபிங் ( தோ..டா)

*ஆசிரமத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க நான் தான் கேமரா வச்சேன் ( தான் திருடி பிறனை நம்பாங்கறது சரியா போச்சு)

* சி.டியை வெளியிடாம இருக்க கோடிக்கணக்குல டிமாண்ட் பண்ணாங்க அவிக ஆருன்னு நேரம் வரப்போ சொல்வேன் (தேர்தலுக்கப்பாறமாவா?)


எச்சரிக்கை:
அண்ணே .. நேத்து நள்ளிரவு ஒரு கில்மா சிறுகதை போஸ்ட் பண்ணியிருந்தேன் படிச்சிங்களா? இல்லைன்னா இங்கன அழுத்தி படிச்சுருங்க

ஒரு கில்மா சிறுகதை

பாவம்!  முரளிக்கு இப்படி ஒரு லட்சியம் வரதுக்கு அப்படி ஒரு காரணம் இருக்கும்னு   நான்  நினைச்சுக்கூட பார்க்கலைங்கண்ணா.

முரளின்ன உடனே சமீபத்துல மேல் லோகத்துக்கு படிக்கப்போயிருக்கிற நிரந்தர மாணவர் நடிகர் முரளிதான் ஞா த்துக்கு வருவாருன்னு தெரியும். ஆனால் நான் சொல்லவந்தது வேற ஒரு முரளி.

போர்ட்டபிள் டிவி கணக்கா சுருக்கமான உருவம்.   நல்ல நிறம். நம்மாளுங்கள்ள ரேரா அமையக்கூடிய ப்ரவுன் ஐ. ஏதோ தனியார் கல்லூரியில  யோகா ,மாரல் சைன்ஸுனு கதை பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.வயசு என்னவோ முப்பதுக்குள்ளத்தான்.

என்னதான் நமக்கும் பொல்யூஷன் இயற்கை பேரழிபத்தி எல்லாம் கொஞ்சம் போல இன்டரஸ்ட் இருந்தாலும் காலங்கார்த்தால காய் கறி மார்க்கெட்டாண்டை நின்னுக்கிட்டு பிளாஸ்டிக் பைல கறி கா வாங்கிட்டு போறவனையெல்லாம் நிக்கவச்சு  பேப்பர் பேக் , க்ளாத் பேகோட சேஃப்டி பத்தியும்,பிளாஸ்டிக்கால ஏற்படக்கூடிய அழிவை பத்தியும்  கிறிஸ்தவ பாதிரியார் மாதிரி பன்னா பன்னானு சனங்கள் கிட்டே பேசி மாய நம்மால முடியாது.

எல்லா பிக்காலிக்கும் தான் என்ன பண்றான்னு தெரியும். தெரியாமயா செய்யறான். தெரிஞ்சுதான் செய்யறான். நாம சொன்ன மாத்திரத்துல விட்டுரவா போறான். இல்லே .தனக்கா தோனினா தான் விடுவான். நாம சொல்லி ஆகப்போறதென்ன? வேணம்னா நம்ம குற்ற உணர்வு குறையலாம் தட்ஸால்

ஆனா முரளிக்கு அதே வேலைதேன். இதுமட்டுமில்லிங்கண்ணா விடியல்ல (மார்கழில உட்பட) சின்ன சின்ன டப்பால பெய்ண்ட் இத்துனூண்டு ப்ரஷ் எடுத்துக்கிட்டு போய்
காலியா இருக்கிற சுவர்ல எல்லாம் சேவ் ஆயில் சேவ் பவர் சேவ் வாட்டர்னு எழுதிக்கிட்டிருக்கிற கேரக்டர்.

இன்னைய தேதிக்கு மீடியாவோட பகாசுரப்பசிக்கு சோனியா, அத்வானி,கலைஞர் ,ஜெயலலிதா மட்டும் போதலை. ஒரு தினசரில எவனோ வேலையத்த நிருபன் நம்ம முரளியை பத்தி சென்டர் ஸ்ப்ரெட்ல படங்களோட ஒரு ஐட்டத்தை போட்டுட்டான்.

முரளிக்கு மகாசனங்க மத்தில பேராதரவு. தாளி சனத்துல சில பேர் இருக்காய்ங்க. அவிக அப்பா பேரு பேப்பர்ல வந்தாதான் அவனை போயி அப்பான்னு கூப்பிடுவாய்ங்க,.அப்படியா கொத்த ஊர்ல சென்டர் ஸ்ப்ரெட்ல வந்த முரளிய விடுவாய்ங்களா என்ன?

பெயிண்ட் கடைகாரர் ஒருத்தர் ஃப்ரீயா பெயிண்ட் கொடுக்கறேன்னாரு.ஒரு ஆர்ட்டிஸ்ட்  நான் ஃப்ரீயா எழுதறேன்னாரு .. நான் மேட்டரை நீங்க சொல்லுங்க. நான் சுருக் நறுக்குனு ஃபார்ம் பண்ணிதரேண்ணேன். ஸ்லோகன்ஸ் எல்லாம் அழகான பெயிண்டிங்கோட நகர சுவர்களை அலங்கரிக்க ஒரு  நகைக்கடைகாரர் இதை பத்தி ஒரு புக்லெட்டே போடலாமேன்னாரு.அதையும் செய்தாச்சு.அட்டையில பெயிண்ட் டப்பாவோட கையில் ப்ரஷ்ஷோட முரளி .

ஊர்ல எங்கப்பாரு இதே பேச்சுத்தேன்.முரளிக்கு  ஒரு ஹீரோ ரேஞ்சில பப்ளிசிட்டி .ஒன்னு ரெண்டு குட்டிங்க ஆட்டோகிராஃப் கூட வாங்கிருச்சுன்னா பாருங்களேன்.
ஊரையடுத்து ஒரு பிரபலகோவில். அதனோட நிர்வாக குழுவுல நம்மாளை மெம்பராக்கிட்டாய்ங்க.

நம்ம ஹெட் ஆஃபீஸ் காரவுக இன்ஸ்பெக்சனுக்குன்னு  ஊருக்கு வர அவிகளை குஜிலி பண்றதுக்காக கோவிலுக்கு கூட்டி போக வேண்டியதாயிருச்சு. தரிசனம் முடிஞ்சு வர்ர பக்தாள் கையிலல்லாம் பிளாஸ்டிக் பிரசாத பை.

நம்ம முரளி இருக்கிற இடத்துல பிளாஸ்டிக்கா? நோ நெவர். உடனே நிர்வாக அலுவலகம் போய் முரளி எங்கேனு கேட்டேன். சூ காட்டினாய்ங்க.

முரளி இப்போ  நல்லாவே புஷ்டியாகியிருந்தான். முகத்துல ஒரு களை. கதர் சட்டை. சட்டைப்பையில ஆயிரம் ரூபா நோட்டுங்க பிதுங்கிக்கிட்டிருக்கு..

என்னப்பா இதெல்லாம்? நீ இருந்துமா இந்த பிளாஸ்டிக் பை?ன்னு கேட்டேன்.

"நீங்கதான் எல்லாத்தையும் செக்ஸோட முடிச்சு போட்டு அனலைஸ் பண்ணுவிகளே இதுக்கு காரணம் என்னனு நீங்களேதான் சொல்லுங்களேன் பார்ப்போம்"னான் முரளி.

" ................................."

"சரி நானே சொல்றேன். அப்போ எனக்கு நிரந்தர வேலையில்லை. டெம்ப்ரரி டீச்சருங்கறதால பைசாவும் பெருசா புரளலை.என் பொஞ்சாதி  நாம நல்ல நிலைக்கு வர்ர வரை கட்டாயம் பிள்ளை பெத்துக்கக்கூடாது" ன்னுட்டா

அதுக்காக ராத்திரியில பொஞ்சாதிய தடவறப்பல்லாம்  பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டியதாயிருச்சு.  பயங்கர கடுப்பு.இயலாமை. இது இருக்கிறதாலதான் இந்த அவலம்னு கொதிப்பு. இதுக்கெல்லாம் அவுட்லெட்டாதான் பிளாஸ்டிக் எதிர்ப்பு

இப்ப பாருங்க நான் ஒரு  அறங்காவலர் குழு மெம்பர் . நீங்க  பார்த்து கொதிச்சிங்களே பிளாஸ்டிக் பிரசாத பை அதுக்கான காண்ட்ராக்டே என்னோடதுதான். பொஞ்சாதி பேர்ல எடுத்திருக்கன். இப்போ  ராத்திரிகள்ள நான்  பிளாஸ்டிக்  உபயோகிக்கிறதில்லை"

திருவிளையாடல் படத்துல " நான் அசைந்தால் அசையும் "பாட்டு போல ஸ்ருஷ்டியே ஒரு கணம் ஸ்தம்பிச்சு இயங்க ஆரம்பிச்சுது..

2ஜி ஸ்பெக்ட்ராம் _ 2G Spectrum

:)

Wednesday, December 29, 2010

காங்கிரசின் மரண வாக்கு மூலம்

என்னங்க முருகேசன்.. காங்கிரஸ் ஐ.சி.யுலதான் இருக்கு அதுக்குள்ள ஏன் மரணவாக்குமூலம்னு கேப்பிக. நான் இன்னா பண்ணட்டும் பாஸ் காங்கிரஸ் கட்சி தன்னோட சுயசரிதைய வெளியிட்டிருக்கு அதுதான் மரண வாக்கு மூலம் மாதிரியே இருக்குதாம்.  (The congress and making of  Indian Nation ) ( நாம எங்கே படிச்சோம் - சாட்சி டிவில கிழிகிழினு கிழிச்சுட்டு இருக்காய்ங்க)

எமர்ஜென்சி கால கொடுமைகளை சஞ்சய் காந்தி பேர்ல தள்ளி விட்டுட்டாய்ங்களாம்.( சோனியா இன்னமும் தன்னை மருமகளாவே நினைக்கிறாய்ங்க. ஓரகத்தி  மேனகா மேல அவிகளுக்கு  கோவம் இன்னம் தணியல போல இருக்கு)

பாவம் ராஜீவ் காந்திக்கு தூர திருஷ்டி இல்லாததால சில விரும்பத்தகாத சம்பவம்லாம் நடந்துருச்சாம்.

அவரென்னவோ  பவர் ப்ரோக்கர்ஸை ஒழிக்க முயற்சிபண்ணாராம். ஆனால் கிழவாடிங்க விடலியாம்.

ஆமா ராஜீவ் என்ன 32 ஆவது வட்டசெயலாளராவா இருந்தாரு. அந்த கிழவாடிகளையெல்லாம் தூக்கி இந்துமகாக்கடல்ல எறியவேண்டியதுதானே

பாவம் எங்க ஊரு  நரசிம்மராவு. அவரு செத்து ஒழிஞ்ச பிற்பாடு கூட அவரோட பாடிய கூட தில்லில புதைக்கவிடாம ஹைதராபாதுக்கு அனுப்பிவச்சவுக இன்னைக்கு இந்த புஸ்தவத்துல அவரை வானளவு புகழ்ந்திருக்காய்ங்களாம்.


ஐயப்ப சாமி பூஜைல அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும் தெரியாமலும்னு மன்னிப்பு கேட்பாய்ங்களே அது மாதிரி ஏறக்குறைய எல்லா தப்பு தவறுகளையும் பட்டியலிட்டு மன்னாப்பு கேட்டிருக்காய்ங்களாம்.

125 வருஷம் பாஸ் ! எல்லா இழவையும் ஞா படுத்தி இப்பயாச்சும் எங்களை புரிஞ்சிக்கிருங்கடா .. ஒழிச்சுக்கட்டுங்கடான்னு இந்த புஸ்தவம் போட்டாப்ல இருக்கு.

இருந்தாலும் என்ன? தமிழினத்தையே அழிச்சா என்ன? நம்ம மீனவனை  சுட்டு தள்ள புல்லெட் கொடுத்தா என்ன? அதைதட்டிக் கேட்ட பார்ட்டிய ஜெயில்ல போட்டா தான் என்ன நம்ம சனம் திருந்துவாய்ங்களா? ஊஹூம் எனக்கு நம்பிக்கையில்லப்பா..

இதுல சொல்லாதது:
ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்த பிற்பாடு மானில அரசுகளை ஒரே கையெழுத்துல வீட்டுக்கு அனுப்பினது

ஆந்திராவுல கவர்னர் ராம்லாலை வச்சுக்கிட்டு  டூ தேர்ட் மெஜாரிட்டி இருக்கிற நிலைல என்.டி.ஆரோட ஆட்சியை கவிழ்த்த கதை

கூடுதல் கலெக்டர் திடுக் பேட்டி : சிதம்பரம் அதிர்ச்சி

மத்திய உள்துறை மந்திரி சிதம்பரம் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேனு மகாராஷ்டிரம் போனாரு. அங்கே ஒரு கூடுதல் கலெக்டர் சிதம்பரத்தை மட்டுமில்லே மத்திய அரசோட முகமூடியையே கிழி கிழினு   கிழிச்சுட்டாரு. நக்சல் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமுள்ள ஒரு மாவட்டத்துல சுத்தி வந்து படம் காட்ட நினைச்சு நம்மாளு மகாராஷ்டிரம் போனாரு.

இதுவரை எந்த உள்துறை மந்திரியும் அங்கன சுத்தினதில்லையாம். நம்மாளு அங்கே டூர்ல இருக்கிறப்பவே அந்த மாவட்டத்து கூடுதல் கலெக்டர் பாண்டே (முழு பேர் மைண்ட்லருந்து எகிறிருச்சு) ப்ரஸ் மீட் வச்சு கிழிக்க ஆரம்பிச்சாரு.

பார்ட்டி குடுமியும், மார் வரைக்கும் தாடியுமா சாமியார் மாறியே கீறாருங்கோ. அவரோட கிழிப்பு:

* இவிக வந்து போறதால ஒரு லாபமும் கிடையாது
* ஹெலிகாப்டர்ல வட்டமடிச்சுட்டு போனா  க்ரவுண்ட் லெவல்ல என்ன   நடக்குதுன்னு  எப்படி தெரியும்?

*உண்மைலயே பிரச்சினை தீரனும்னா பாரா மிலிட்டரி ஃபோர்ஸை  ரீகால் பண்ணுங்க
* மானில அரசு கேட்டாத்தான் ஃபோர்ஸ் அனுப்பனும். உங்க இஷ்டத்துக்கு அனுப்ப கூடாது

பாண்டே இப்படி கிழிக்க அவருக்குள்ள தகுதி இன்னாங்கறிங்களா?

எந்த பாதுகாப்பும் இல்லாம மாவட்டத்துல எந்த மூலைக்கும் போயி வர்ர தில்லு துரையாம்ல


பாவம் சிதம்பரம்.. குளிக்க போயி சேறு பூசிக்கினாப்ல ஆயிருச்சு

கொசுறு:
ஜனவரி மாசத்துலயே மத்தியில ஆட்சி கவிழப்போகுதுன்னு இங்கே  ஒரே புரளியா இருக்கு. ஜகன் சரத் பவாரை சந்திக்க தில்லி போயிருக்காரு. தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், ஜகனும் ஒரு புரிதலுக்கு வந்துட்டாப்ல இருக்கு.

ஜகனோட ஸ்கெட்ச் என்னன்னா ராயலசீமால ஆட்சி -தெலுங்கானால வலுவான எதிர்கட்சி

பார்ப்போம்..


Tuesday, December 28, 2010

நிர்வாணியானேன்

சீவித்திருப்பதாய் கருதப்படும்
என் சக சீவர்களின் ஒருவனென்றே
சமுதாயம் என்னை கணக்கிட்டுக்கொள்ளட்டும்
பிரச்சினை அதனுடையது..

சக சீவர்களின் துயரம் கண்டே
நான் உயரங்கள் நோக்கி ஊரத்துவங்கினேன்.

இவர்களின் உயிர் காக்கவே
என் உயிரை பணயம் வைத்தேன்

இவர்கள் வண்ணத்தொலைக்காட்சியின்
வண்ணங்களில் மங்கி போகட்டும்.

இவர்தம் உயிரோவியங்களுக்கு தூசு தட்டி
புதுவண்ணம் தீட்டுவேன்.

பித்தம் தலைக்கேற இவர்கள்
சத்தமின்றியே சாவு நோக்கி சறுக்குகிறார்கள்

நாளைய என் முயற்சிகளில்
விடம் விளைந்தால் என் தொண்டை அதன்
மரண தாகம் தீர்க்கும்.

அமுதத்துக்கான பாற்கடல் மதனம் மட்டும் நிற்காது

கண்ட பொய்மைகளால்
பொய்யான அமைதி கண்டு கண்ணுறங்க இயலாதே


கலைவாணி கருணையாலே
மர்மங்களை கற்பழித்தேன்
ஆதி மன வாணி கேட்டேன்
பொய்யெலாம் நான் துறந்தே  நிர்வாணியானேன்

சித்தம் சிவனாக யானே சிவனாகும்
சீர் பெற்றேன்

சிவனோ சீவனோ மயக்கம்
தொடரலாம் சில காலம்.

சீவன் நான்  சிவனாகும் நாழி
காத்திருக்கிறது ஒரு ஊழி

அன்று நான் சிவன்

என் கணிணி விசைபலகை உடுக்கையாய் ஒலிக்க
ஓடி மறையும் தங்கு தடைகள்.

கணினித்திரையில் பிறக்கும்  ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு தீப்பொறியாக

இணைய நதி அவற்றை ஏந்தி பிரவிகிக்க
பல்லாயிரம் குமாரர்கள் ஜனிப்பர்

என் கவிதை மூன்றாவது கண்
எரிப்பேன் பசித்தோரை எரிக்கும்
ஊழல் வாதிகளை

சுருக்கிட்டே சூறையாடுவேன் சுரண்டலை

என் ஞானம் செஞ்சடை
கோடை கால கங்கையென‌
பெருக்கெடுத்துவரும் பன்னாட்டு பகாசுரர்களை தடுப்பேன்
என் சடை வழி வழிய விடுவேன்

மணி,மாஃபியா,மீடியா முப்புரமும் எரிப்பேன்
ஓர் புன்னகையால்

நான் சிவன்
பாரதத்தின் சிரசில் தோன்றி பெருக்கெடுக்கும் கங்கையை காவிரியில் கலக்கச்செய்வேன்.

நான் சிவன்
மக்களை மறந்த படைப்புலக பிரம்மாக்களின் ஐந்தாவது சிரசை
சீவித்தள்ளுவேன்

நான் சிவன்
அவள் என்னில் பாதி
தத்..

பாதியென்ன?
அவளே நான்.
நானே அவள்.


அவளென் இடமிருக்க
 சமதர்ம சமுதாயம் சமைக்க  தடையான
முடை நாற்ற‌மனிதர்களின் அல்லவை  எரித்து
சாம்பலாக்கி அதன் மீது அரங்கேற்றுவேன் ருத்ரதாண்டவம்..........


Monday, December 27, 2010

லீனா மணி மேகலையின் கவிதையில் ஆபாசம்?

இந்த பதிவை எழுத தூண்டியது வினவு.காம் லீனா மணி மேகலையின் கவிதையை கிழி கிழி என்று கிழித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்ல நினைத்ததை கமெண்டாக போட்டுவிட்டேன். என்றாலும் கவிதை07 வாசகர்களுக்காக இங்கே..

ஒரு சோகம் என்னன்னா அறிவு ஜீவிகள்ங்கற இமேஜ் இருக்கிற ஆண்கள் கூட பெண்ணை,அவள் எழுத்தை மெலிதான அலட்சியம்,மற்றும் நக்கீரத்தனத்துடனேயே அணுகுகிறார்கள்.

நான் உங்கள் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை.

எப்பவோ என் ப்ளாக்ல எழுதின ஒரே ஒரு வரி உங்களுக்கு பதிலாகட்டும்.

உலகத்துல எந்த மாற்றம் ,முன்னேற்றம், ஏற்றம்,இறக்கம் வந்தாலும் மொதல்ல பெண் மட்டும்தான் பாதிக்கப்படறாள்.

இதைத்தான் அந்தம்மா வயிறெரிஞ்சு
எழுதியிருக்காய்ங்க.

புரிஞ்சுக்கப்பாருங்க துரை

இப்ப கவிதைக்கு போலாமா?

//நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்//

கவிதாயினி உலகமெங்கும் வாழும் பெண்களின் நிலை ஒன்றே போல் இருப்பதை இங்கே பதிவு செய்கிறார். இதை ஸ்தூல ரூபத்துல பார்த்தா ஒரு ம...ரும் புரியாது.

//என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது//

இது தரும் நேரடி அர்த்தம் விபரீதமாக இருக்கும். ஆனால் இந்த வரிகளுக்கு பின்னுள்ள உண்மை ஆணாதிக்க சமுதாயம் பெண் கிட்டே இதைத்தான் எதிர்பார்க்குதுங்கறதே.

//நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்//

ஆக்சுவலா உலகத்தோட மேல் ( ஆண்) பாப்புலேஷன் மொத்தத்தையும் இங்கே சொல்லியிருக்கனும். ஆனால் சாமானியனை விட மேற்சொன்ன கேட்டகிரி பார்ட்டிங்கல்லாம் ரெம்ப ரேஷ்னலா ,ஹ்யூமனா இருப்பாய்ங்கனு சமுதாயத்துல ஒரு ஃபீலிங் ஒரு பிரமை இருக்கு. ஆனா அவிகளுக்கும் "பொட்டப்புள்ளைக்கு வாசப்படில என்னடி வேலை"ன்னு எரிஞ்சு விழற சாமானியனுக்கும் மேற்சொன்ன சம் திங் ஸ்பெஷல் பார்ட்டிகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லைனு கவிதாயினி சொல்றாய்ங்க.

//வன்புணர்வதற்கு ஏதுவாய்//

கவிதையோட மொதல் பாராவ ஸ்தூலமா எடுத்துக்கிட்டு கிழி கிழினு கிழிச்சிருக்காய்ங்க. அந்த பாராவுக்கு பஞ்ச்சே இதான். வண்புணர்வதற்கு
( ரேப்புங்கண்ணா)

எந்த பெண்ணும் உடலுறவுக்கே சுமுகமா இருக்கிறதில்லை. இளமையில சமூக பயம் -கர்ப பயம் -வெப் காம் பயம் -ப்ளாக் மெயில் பயம் -எய்ட்ஸ் பயம் ( தெனாலி ஞா வருதா)

அதுலயும் கண்ணாலங்கட்டியோ அ அசர்ந்தர்ப்பமாவோ உடலுறவுன்னா என்னனு தெரிஞ்சிக்கிட்ட பெண் உடலுறவுன்னாலே "தலைவலி -டேட்ஸு- இடுப்பு வலி -வெள்ளிக்கிழமைன்னு தப்பிச்சுக்கத்தான் பார்க்கிறாள்.

காரணம் என்னனு மறுபடி விவரிக்க தேவையில்லை 7 Vs 23 ஞா இருக்கில்லை. இதுல வன்புணர்ச்சிங்கறதும் அதுக்கு சித்தமா இருக்கிற நிலையும் எந்த அளவுக்கு கொடுமைன்னு புரிஞ்சிக்கிடனும்.

//யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்//

கவிதாயினி என்ன நினைச்சு இதை எழுதினாய்ங்களோ நமக்கு தெரியாது. எனக்கு ஸ்ட்ரைக் ஆறது என்னன்னா பெண்ணுறுப்புல க்ளிட்டோரிசுக்கு அடுத்து ஓரளவுக்காச்சும் உணர்வு மயமானது உதட்டுப்பகுதி தான். அதை அரிந்து போடச்சொல்றாய்ங்கன்னா என்ன அர்த்தம்?

நீ மனுஷ ஜன்மமே கிடையாது. உயிரின் அடிப்படை உரிமையான உடலுறவோ - அதிலான ஆர்காசமோ உனக்கு கிடையாது. எனக்கு தேவை நீ ஜஸ்ட்

உன்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

//அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே//

இங்கனதான் கவிதாயினி டாப் கீர்ல எகிறியிருக்காய்ங்க. பெண்ல அவுசாரி, பத்தினி,பிராமணத்தி,தலித், பணக்காரி,ஏழைங்கற வித்யாசமெல்லாம் இல்லை. பெண் எத்தனை உயர்ந்த சிகரத்துல இருந்தாலும், எத்தனை அதல பாதாளத்துல இருந்தாலும் பெண் பெண் தான். உண்மையான தலித் பெண்தான்.ஏன்னா தலித் ஆண் கூட தன் இனத்து பெண்களை பிராமணனை விட கொடுமையாத்தான் நடத்தறான்.

//அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்//

இங்கே யோனிங்கறது பெண் மனதையும் விந்துங்கறது பெண்ணோட மனசுல தேங்கிக்கிடக்கிற வன் கொடுமை குறித்த கசப்பான நினைவுகளையும் காட்டுது. கவிதாயினி கொஞ்சமா பெரியமனசு பண்ணி "அவ்வப்போது"ங்கற வார்த்தையை உபயோகிச்சிருக்காய்ங்க. ஆனால் ப்ராக்டிக்கலா பார்த்தா மரணத்துக்கு கூட தூர் வாரும் சக்தி இருக்கிறதா நான் நம்பலை.

//எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்//

இங்கே குறிங்கற வார்த்தை குறி (AIM) ங்கற வார்த்தைய குறிக்கிறதா தான் நான் நினைக்கிறேன்.

// தந்தை, சகோதரன், மகன்// எல்லாரையும் இந்த பட்டியல்ல சேர்த்தது வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக இருக்காதுனு நம்பறேன். தாளி அப்பன் அம்மாவை , சகோதரன் அண்ணியை , மகன் மருமகள் கிட்டே எதிர்பார்க்கிறது கூட இதைத்தான்னு பொட்டிலடிச்ச மாதிரி பதிவு செய்திருக்காய்ங்க(ன்னு நான் நினைக்கிறேன்)

//எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்//

மேற்படி பட்டியல்ல உள்ள எதுனா ஒரு இழவாச்சும் பெண்ணை ஒரு மனித ஜன்மமா பார்த்து நடத்தியிருந்தா மணக்கலைன்னாலும் நாறாது. நம்மாளுங்க பண்ண கொடுமை கொஞ்சமா நஞ்சமா? இதெல்லாம் நாறாம என்ன செய்யும்?

//என் உதிர வீச்சமடிக்கும்// செலவில்லாத செருப்படி.

//பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்//

மேற்சொன்ன அம்சங்கள் எல்லாம் ஆணாதிக்க சமுதாயம் பீய்ச்சிய விந்துத்துளிகள். அவை பெண்ணுக்குள் புகுத்தப்பட்டு கலைக்க முயன்றும் (கலையாமல்) சூலகத்தில் தங்கிவிட்ட கருக்களாய் உள்ளதா கவிதாயினி சொல்றாய்ங்க.

ஒரு கருவை பத்து மாசம் சுமக்கிறதே நரகம் .இதுல யுகம் யுகமா சுமந்துக்கிட்டிருக்கிற இனத்தின் பிரதி நிதி இதை இந்த அளவுக்கு நாகரீகமா சொன்னதே சாஸ்தினு நான் நினைக்கிறேன்.

//அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை//

பிணமான பின்பும் தமிழ்பெண்களின் உடலை இலங்கை ராணுவத்தினர் வன் புணர்ந்ததா செய்திகள் வருதே அதை இங்கன நினைச்சுப்பாருங்க. உடல் செத்தாலும் யோனிக்கு சாவில்லைன்னா இதான் சிக்குனு பொருந்துது.

இந்த கவிதைய ஆபாசம்னு சொல்றாய்ங்கன்னா என்ன சொல்ல? ஒரு அரை மணி நேர கடுப்பு/காத்திருப்பு/டென்ஷன்/வெறுப்புல நீங்க இருக்கிறச்ச நான் வந்து டைம் இன்னா சார்னு கேட்டா வெளிப்படக்கூடிய உங்க வார்த்தைய விட இதுல ஒன்னும் ஆபாசமில்லையே.

தாளி யுகம் யுகமா குமுறிக்கிட்டிருந்த எரிமலை வெடிச்சு லாவாவை துப்புது. தட்ஸால்.

இதை போய் ஆபாசம் வெங்காயம்னு மொக்கை போட்டா மேட்டர் ரெம்ப சிக்.......கலாயிரும். ஆமாம் சொல்ட்டேன்.

இதை ஆபாசங்கறவுக மனசுல தான் ஆபாசம் இருக்கு.

வார்த்தைக்கு பொருள் அகராதியில் இருக்கிறது. கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் இருக்கு

-வைரமுத்து

Sunday, December 26, 2010

சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்


சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்
இந்த பேச்சை சொன்னது/சொல்றது  நான் இல்லிங்கண்ணா. சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) மானில செயலாளர் நாராயணா.

இடம்: ஆந்திர மானிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ,சேவெள்ளா

சந்தர்ப்பம்: கட்சியின் 85 ஆவது ஆண்டு விழா

மேலும் கூறியதாவது:

விளக்கு கம்பத்துல தூக்குல போடனும். கம்பத்துல கட்டி வச்சு எரிக்கனும். சோனியா தேவதை, மன்மோகன் உத்தமர்ங்கறாய்ங்க. அப்போ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா ஊழல் எப்படி நடந்தது?

இரும்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியங்கள்

"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து" பழமொழி என்னமோ எஸ்.எம்.எஸ் மாதிரி சுருக்கமா இருக்கு. ஆனால் உள்ளாற பூந்து பார்த்தா இதுல வாழ்க்கையே இருக்கு.

ரசவாதம்னா கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். எந்த உலோகத்தையும் தங்கமா மாத்தற சப்ஜெக்ட்.

எல்லா உயிருமே உன்னதத்தை நோக்கித்தான் பயணம் செய்யுது.

புல்லாகி பூடாகி ...........மனிதனாகி "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்னு உன்னதம் தான் டார்கெட்.

ஆனால் இந்த இன்ஸ்டிங்டை கரெக்டா புரிஞ்சிக்க முடியாத கூட்டம் (ஒரு காலத்துல நானும்) நடிகனாகனும், (இப்ப டிவி சீரியல்ல சித்தப்பா,பெரியப்பா கேரக்டர் அ கேம்பியர் தான் டார்கெட் - பொழப்பு ஓடுமே) பணக்காரனாகனும், தலைவனாகனும், நாடாளனும் துடிக்குது.

இவிகளுக்கும் ரசவாதத்துல தங்கம் பண்றேனு புறப்படறவனுக்கும் அடிப்படையில வித்யாசமில்லை.

எங்க ஊர்ல இந்த மேட்டரால பல குடும்பங்கள் குட்டிச்சுவரா போச்சு. ஒரு புருசங்காரனை பொஞ்சாதி வீட்டை விட்டு துரத்தி கின்னஸ் ரிக்கார்டே பண்ணிருச்சு.

ஒரு பிக்காலி தன்னோட ரெண்டு சகோதிரிகள் நாற்பதை நெருங்கிக்கிட்டு முலைக்காம்பு சுருங்கி கிடக்க இன்னம் ஒரே ஒரு வேர் கிடைச்சா வேலை முடிஞ்சுரும்னு அலைஞ்சுட்டு இருக்கான்.

ஆக பொன் செய் மருந்துன்னா அது ரசவாதம் தேன். அது வேறொன்னுமில்லைடா கண்ணா "போதுங்கற மனசுதான்"ன்னு பழமொழி சொல்லுது.

ரேடியோ இருந்தது. அவிகளுக்கு பிடிச்ச நேரத்துல,பிடிச்ச பாட்டை போட்டுட்டிருந்தாய்ங்க கேட்டுக்கிட்டிருந்தோம். ( வாழ்க்கையும் ரேடியோ மாதிரிதான் -அதனால வாழ்க்கை ஆலாபனை பண்ற பாட்டை கேட்டுக்கற மனப்பக்குவம் இருந்துது )

இப்ப நாம கேட்கிறத அவன் போடனும்னு நினைக்கிறோம். வாழ்க்கையை ஏத்துக்கற பக்குவமும் குறைஞ்சு போச்சு.

ரஜினி கூட ஒரு பாட்ல "இமயம் வரை உயராது எந்தனுயிர் போகாது"ன்னு பாடிட்டாரு. ஆனால் அவரு இமயத்தை நாடறது கூட எஸ்கேப்பிசம்தேன். மனுஷன் பாருங்க எத்தனை உயர்ந்த மேட்டரை கூட என்னமா மிஸ் யூஸ் பண்ணிர்ரான். டிஸ்டில்ட் வாட்டர் கால் கழுவின மாதிரி ..தூத்தேரிக்க.

உயரம் போக போக தனிமை வந்துரும். எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. ஓசோன் படலத்தை தாண்டிட்டா கதை கந்தல்தேன்.

அமெரிக்காவை பாரு..அமெரிக்காவை பாருன்னு பீத்திக்கிட்டிருந்தாய்ங்க. இன்னைக்கு என்னாச்சு அந்த நாட்டு ஜனாதிபதியே வந்து மார்க்கெட்டிங் பண்ற நிலை. நம்மாளுங்க அதை கூட பண்ணமாட்டாய்ங்க.

பசுமை புரட்சி...பசுமை புரட்சின்னுட்டு நிலமகளை மலடாவே ஆக்கிட்டாய்ங்க. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு.

"இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே" - இதுவும் சின்னதா தான் இருக்கு. ஆனா அர்த்தம் பெருசு.


இருக்கிறதுன்னா கைவசமிருக்கிற சோர்ஸஸ், மோட்ஸ். நம்ம கைவசம் உள்ளது நிலம். மக்கள் சக்தி.ஜீவ நதிகள். தாளி ஒழுங்கு மரியாதையா விவசாயத்து மேல கான்சன்ட்ரேட் பண்ணா எங்கயோ போயிரலாம்.

ஆனால் இவிக எஸ்.இ.ஜெட் (சிறப்பு பொருளாதார மண்டலம்) ங்கற பேர்ல உள்ள விளை நிலத்தையெல்லாம் பறிச்சு கதை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. அவன் எந்த காலத்துக்கு ஃபேக்டரி கட்டி ,எந்த காலத்துக்கு நம்மாளூக்கு வேலை கொடுத்து இதெல்லாம் ஆவறதா போறதா?

மேலும் உண்மையான் ப்ரொடக்டிவிட்டின்னா அது ஜஸ்ட் ஒரு விவசாயத்துலதான் சாத்தியம். மத்ததெல்லாம் ஜஸ்ட் கன்வெர்ஷன் தேன். ( பால் பொருட்கள் கூட கன்வெர்ஷன் தேன்) .

"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார்.

இதை தேன் ஸ்கூல் டேஸ்லருந்து படிக்கிறமேனு சலிச்சுக்காதிங்க.இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது கருக ஆரம்பிச்சாலும் நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்) இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட ஒத்துழைப்ப கொடுக்குதுங்க

இந்த விதிப்படி பார்த்தா நாமெல்லாம் மண்ணாந்தைங்க. நாம ஃப்ளாட்டு, வீடு, டி.வி, கம்ப்யூட்டர் மாதிரி பொருட்களை பார்த்து இதை வாங்கிரனும்பா, இத மட்டும் வாங்கிட்டா போதும்னிட்டு நினைக்கிறோம். தப்பி தவறி வாங்கிட்டா அங்கே போடு, இங்கே வை. அங்கே நிற்க வைனு (முட்டாள் தனமா) பேசறோம்.

ஆனால் நான் என்ன நினைக்கிறேன்னா இந்த பொருட்கள்தான் அப்படி நினைக்க வைக்குதா? ரிமோட்டா நம்மை கமாண்ட் பண்ணுதானு ஒரு சம்சயம். மனுஷனுக்கு ஆறு அறிவிருக்கு. மனுஷன் எல்லா உயிர்களை விட மேம்பட்டவனு எழுதி வச்சிருக்காய்ங்க. நாமளும் படிக்கறோம்.

ஆனால் மனுஷனோட மனோபலம் ஜீரோ லெவலுக்கு விழுந்துட்டு ஜஸ்ட் பொருட்கள் அவனை கமாண்ட் பண்ற ஸ்டேஜுக்கு வ்ந்துட்டான். விவேகானந்தர் சொல்வாரு ..

உன் மனசை காட்டிலும் உசந்த வஸ்து இந்த படைப்புலயே கிடையாது. அப்படி எதுனா உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.

நீ ஆசைப்படறதால எதுவும் வந்து சேரப்போறதில்லை. சில நேரங்கள்ள ஜஸ்ட் நம்ம வில் பவரால - நேரங்கெட்ட நேரத்துல அகாலமா - சிலதை சாதிக்க முடியலாம். ஆனால் அது ச்சுட சுட்ட காஃபி ஊத்த ஹாட் வாட்டர் ஊத்தி கழுவி வச்சிருக்கிற ஃப்ளாஸ்க்ல ஊத்தின ஐஸ் வாட்டர் மாதிரி. ஃப்ளாஸ்கே டமாலாயிரும்.

காலம் தன் ஏற்பாட்டின் படி தன் வேகத்துல ஆறப்ப்போட்டு தான் ஊத்த நினைச்ச காஃபிய ஊத்துது

நீ தேடிப்போறது கிடைக்காது. கிடைச்சாலும் நாறிப்போயிருவ. தானா வர்ரது கிடைக்காம போகாது. உன் தேடலே உன் கண்டடைவை தாமதப்படுத்துது.

உங்களுக்கு இந்த ஸ்தூல உலகத்துல நிறைஞ்சிருக்கிற ஸ்தூலமான ஆபத்துகளே முழுசா தெரியாது. ஆனால் சூக்ஷ்ம உலகம் வேற ஒன்னிருக்கு அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.அதுல கை வச்சி திருத்தற கெப்பாசிட்டி ஒரு கடவுளுக்குதான் உண்டு.

கடவுள் ஒன்னும் கலைஞர் இல்லே எவனெவன் பாராட்டு விழாவுக்கு வந்தானு கணக்கு போட்டு அவனுக்கு ஃபேவரா அஜெண்டாவை திருத்த. சோகம் என்னடான்னா அவரால மாத்தவே முடியாது.

நீ வெய்ட்டிங்ல இருக்கனும்னா இருந்துதான் ஆகனும். உங்க இம்சை பொறுக்கமுடியாம கடவுள் வெயிட்டிங் ரூமை திறந்து வைக்கலாம்.ஃபேன் போட்டுவிடலாம். ஆனால் உங்க ஆங்க்சைட்டிய அவரால ஒன்னும் பண்ணமுடியாது. அதை மாத்தறது,மாத்திக்காதது உங்க கையில இருக்கு.

ஒருத்தன் பசி,பட்டினி,சொறி,சிரங்குமா அவதிபடறான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் காரணம் இருக்கும். அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

ஒருத்தன் பெண்டாட்டியால இம்சை பட்டு கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன்னு ஏறியிறங்கறான்னா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

அதுக்கு தேன் சொல்றேன் போதுமென்ற மனமே பொன் செய் மருந்து. ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்.

Saturday, December 25, 2010

பழைய மாணவர்கள் சந்திப்பு மனமுதிர்ச்சியற்ற செயல்

 நான் தமிழ் சினிமா பார்த்து பலகாலமாச்சு. என்றாலும் பத்திரிக்கைகள்,இணையத்தின் மூலம் அவ்வப்போது ஒரு சில என் பார்வைக்கு வருவதுண்டு. சினிமா மேட்டர்லயும் ஒரு குன்ஸுலதான் காலத்தை கழிக்கிறேன். ஏதோ சினிமாவுல பழைய மாணவர்கள் எல்லாம் மறுபடி மீட் பண்ற சீக்வென்ஸ் வராப்ல ஞா. இதே மாதிரியான நிகழ்ச்சி ஒன்னை இன்னைக்கு ஏற்பாடுபண்ணியிருந்தாய்ங்க.  போற வழியில இதுக்கான ஏற்பாடுகளை ஒரு க்ளான்ஸ்  பார்க்க வேண்டியதாயிருச்சு.

இது என்னென்னமோ நினைவுகளை கிளப்பி விட்டுருச்சு. காலச்சக்கரம்ங்கறது நிற்காம சுழலும் தன்மை படைச்சது. அதை நிறுத்த முயற்சிக்கிறது (உ.ம் ஹேர் டை), அதை பின்னோக்கி ஓடவிட முயற்சிக்கிறதோ சிறுபிள்ளைத்தனம். கவுரதையா சொன்னா மனமுதிர்ச்சியற்ற செயல். இந்த செயல்கள்ள ஒன்னுதான் பழைய மாணவர்கள் சந்திப்பு.

மேலும் மாணவர்கள் மட்டும் சந்திச்சுக்கிட்டாலும் ஏதோ ஒரு வகையில உண்மை வெளிப்படவும் - ஆய்வுக்குட்படுத்தவும் சின்ன சான்ஸ் இருக்கும். ஆனால் வாத்தியாருங்களுக்கு சன்மானம்னு ஒரு அஜெண்டாவை வேற சேர்த்துக்கிடறாய்ங்க.

வழக்கமாக கிழவாடிகள் "எங்க காலத்துல.." என்று ஆரம்பித்து தம் காலத்தை பொற்காலமாக எஸ்டாப்ளிஷ் பண்றது வழக்கம். ஆனால் நாட் நாட் காலத்துலயே வாத்தி மாரு பர்சனாலிட்டி இன்னானு தெரிஞ்சுக்கனும்னா இங்கே அழுத்துங்க. ஔரங்கசீப் தன்னோட வாத்திக்கு எழுதின கடிதம் இது.

இன்னைக்கு நடந்த மேற்படி நிகழ்ச்சி பத்தின செய்தியை லோக்கல் டிவில வேற பார்க்க வேண்டி வந்துருச்சு. தாளி அதுல ஒவ்வொரு வாத்தியானை சன்மானம் பண்ணிக்கிட்டிருந்தா ஃப்ளாஷ் பேக் அப்படியே பிச்சுக்கிட்டு வருது.

ஓஷோதான் சொல்வாரு" சரியான ஆள் தப்பான வழியில போனாலும் இலக்கை அடைஞ்சுருவான் ( நம்ம அனுபவம் : இன்னம் சீக்கிரமாவே) தப்பான ஆளு சரியான வழியில போனாலும் பெப்பே தான்.

அதைப்போல சரியான ஸ்டூடெண்ட் தப்பான வாத்திக்கிட்டே மாட்டினாலும் க்ளிக் ஆயிருவான். தப்பான ஸ்டூடெண்ட்டுக்கு  சரியான வாத்தி அமைஞ்சாலும் பெப்பேதான்.

சரி சரி மேட்டர் ரெம்ப பர்சனலா போகுது மானாம். ஹோல்டான்

Friday, December 24, 2010

தெலுங்கு படத்துக்கு தடை கோரிய நித்யானந்தா






நம்ம நித்யாவை தமிழ் பதிவுலகமே மறந்துட்ட நிலைல ஒரு விறு விறு சுறு சுறு நியூஸை புடிங்க. தெலுங்குல பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் "அய்யாரே"ங்கற படத்தை எடுத்து முடிச்சுட்டாரு.


கதை ? நம்ம நித்யானந்தா கதை தான் போல. இதை ஸ்மெல் பண்ணிட்ட நித்யானந்தா தரப்பு இருக்கிற கொஞ்சம் நஞ்சம் மானமும் கப்பலேறிடப்போகுதுன்னு பேதியாயிட்டாப்ல இருக்கு. உடனே நித்யானந்தா தரப்புல் சைலேந்திராங்கற வழக்கறிஞர் ஹைகோர்ட்டுல இந்த படத்துக்கு

*சென்சார் சர்ட்டிஃபிக்கேட் தரக்கூடாது.

*படத்தை திரையிடக்கூடாதுன்னு மனு தாக்கல் பண்ணியிருக்காரு.

மனுவை விசாரித்த ஹை கோர்ட் நீதிபதி நௌஷத் அலி "இந்த படம் உங்க கட்சிக்காரருக்கு எதிரா எடுக்கப்பட்டிருக்குனு எப்படி சொல்றிங்கனு கேட்டிருக்காரு.

அதுக்கு மனுதாரர் ( நித்யானந்தா) தரப்பு வக்கீல் படத்தோட போஸ்டர்களை பார்த்தா அப்படியிருக்குன்னு சொல்லியிருக்காரு.

நீதிபதி மத்திய செய்தித்துறை அமைச்சகத்துக்கும், சென்சார் போர்டுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்காரு.

குறிப்பு:
1.நம்ம சொந்த பத்திரிக்கை தரப்பில் 20x30 மல்ட்டி கலர் காலண்டர் ஒன்னுக்கு ரெண்டா போட்டுக்கிட்டிருக்கம். டோட்டல் காஸ்டே ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபா. பெண்டு கழண்டு போச்சு : டிசைன் கம்ப்ளீட் ஆகி ப்ரஸ் காரவுகளுக்கு அனுப்பியாச்சு. ச்சொம்மா பார்க்கனும்னா இங்கன க்ளிக் பண்ணுங்க
ஹி ஹி .. ஆன் லைன் ஜோதிட ஆலோசனைல ரெம்ப பிசி. அதனால இந்த பிட்டை போட்டு ஒப்பேத்திட்டன்.

Thursday, December 23, 2010

தன் மீதான வன்முறையை தானே தூண்டும் பெண்

இந்த பதிவை புரிஞ்சிக்கிடனும்னா மொதல்ல நீங்க நம்ம சித்தாந்தத்தை புரிஞ்சிக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.
*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது
*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்
*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை
*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு
*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.
*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு
*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு

(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது
*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்
*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது
*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு
*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா பெண்ணடிமை ஆரம்பிச்சுருச்சு
*அடிமை எந்த க்ஷணம் வேணம்னா புரட்சி பண்ணலாமே.அவளோட எங்கனருந்து செக்ஸை ஆற அமர அனுபவிக்கிறது. தன் பிரதான கோரிக்கைகள் நிறைவேற செக்ஸை சிறந்த ஆல்டர்னேட்டிவா வச்சிருந்த மன்சனுக்கு இன்னொரு ஆல்டர்னேட்டிவ் தேவை பட்டுது.அதான் பணம்.

பணத்தை துரத்துறதுல இறங்கி இருந்த கொஞ்ச நஞ்ச பவரையும் இழந்துட்டான் மன்சன். பெண்ணுக்கு பணத்தை துரத்துற வாய்ப்பு கிடைச்சாலும் அந்த பணத்தை வச்சு கொல்லவோ, கொல்லப்படவோ பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கலை( சம்பள கவரை அப்படியே அப்பன்,மாமனார்,புருசன் கையில கொடுத்துர்ராய்ங்களே)

செக்ஸுல ஆர்காசம்/உச்சம் எய்தினாதான் மேற்படி கொல்லப்படும் இச்சை நிறைவேறும். (கொல்லும் இச்சை நிறைவேறிருது -ராத்திரில அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கறச்ச -பகல்ல அவனை பயங்கர மொக்கை பண்ற சமயம் - கலர் டிவி,கல் நெக்லஸ் கேட்டு வதைக்கறச்ச)

இவளோட கொல்லும் இச்சை நிறைவேற இருந்த இன்னொரு வாய்ப்பு குழந்தை பிறப்பு அதுவும் ஃபேமிலி ப்ளானிங் காரணமா மொக்கையாயிருச்சு.

ஆக்சுவலா பெண் இயற்கையால ஆசீர்வதிக்கப்பட்டவள். அவளுக்கு ஆபத்தை  முன் கூட்டியே ஸ்மெல் பண்ற கப்பாசிட்டி அதிகம், அப்படி ஆபத்து தலைகாட்டினாலும் அதை அப்படியே ஃப்ரீஸ் பண்ணிர்ர சாலக்கும் உண்டு ,அட ஆபத்தே வந்திட்டாலும் அதுலருந்து தன்னை காப்பாத்திக்கவும், திருப்பித்தாக்கவும் தேவையான சக்தி அவளுக்கு யதேஷ்டம்.

ஆனாலும் பெண் மீதான வன்முறை அதிகரிச்சுட்டே போகுது. பெண்கள் பலியாயிட்டே இருக்காய்ங்க.

ஒரு வேளை செக்ஸ்,குழந்தை பிறப்பு இத்யாதில நிறைவேறாத தங்களோட கொல்ல்ப்படும் இச்சையை நிறைவேத்திக்க இவிகளா
ஆண்களை தூண்டிவிடறாய்ங்களோங்கற சம்சயம் சாஸ்தியாயிட்டே போகுது .

இதுக்கு தீர்வுதான் என்ன? செக்ஸ் எஜுகேஷன் -கண்ணாலத்துக்கு மிந்தி ஒரு ஷார்ட் டெர்ம் கோர்ஸ் -அதுல படிச்சு பாஸ் பண்ணாதான் கண்ணாலம்னு வைக்கனுமோ?

மிருகங்களோடு பழகுங்கள்


நான் முன்பு திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்கா இடையிலான் பகுதியில் குடியிருந்தேன். ஆமாம்... ஒருபக்கம் மாமன், ஒரு பக்கம் அப்பன், இறைவனை சொன்னேன். :)

அந்த பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தோட்டங்கள் அதிகம். எனவே குரங்குகள் (என்னாது அரசியல்வாதியா? இல்லங்க குரங்குதான்) எப்போதும் வரும். மிக நேர்த்தியாக தோட்ட குழாயை திறந்து தண்ணீர் குடித்து விட்டு மூடத்தெரியாது... போய்விடும். சில நேரம் பூனைகள்... அவ்வளவுதான். வீட்டு கதவு திறந்திருந்தால் அழையாவிருந்தாளியாக உள்ளே வர வாய்ப்பிருக்கும். ஆனாலும் பயமில்லை...

இரண்டாண்டுகளுக்கு முன், இப்பொழுது இருக்கும் பகுதியில் வாசம். இது அதைவிட சுவாரசியமான விசயங்கள் கொண்ட வீடு. ஒரேஒரு பிரச்சனை என்னவென்றால் என் வீட்டிற்கு விருந்தாளிகள் வர பயப்படுகின்றனர். பின்னே என்னங்க... நீங்க என் வீட்டு வாசல்ல உட்கார்ந்து இருக்கையில் பாம்பு வந்தா எப்படி இருக்கும்? அட நெஜம் தாங்க... அது மட்டுமில்ல... மழை பெஞ்சு ஓஞ்சதின்னா தண்ணீர் வரும், அப்புறம் தவளை, தேரை கூட்டமா வரும்... ஆமை வரும், நண்டு வரும், மதில் சுவர்ல ஓணான் வரும். சாதம் வைத்தால் காகம், மைனா, குருவி வரும். அப்பப்போ பெயர் தெரியா பூச்சிகள் வரும். போதும் போதததுக்கு கொசு, குளவி, தேனீ வரும். ஆனா எதுவுமே இதுவரை வீட்டுக்குள் வந்ததில்லை. :)

ஒருவேளை நான் அழைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படி ஒரு வீட்டில் குடியிருந்துதான் ஆகனும்மா? அப்படின்னு கேட்கிறீங்களா? குடி இருக்கதானுங்களே வீடு...

ஆனா... வீட்டை பொறுத்தவரை சில தெய்வாம்சம் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு 4ம் இடத்தில் ராகு... அட இங்க கூட ஜோதிடமா? அதுனால வசிப்பிடம் இப்படித்தான் இருக்கும் என்பது ஒரு சாம்சயம் (வார்த்தை உபயம். திரு. முருகேசன்)

எனக்கு மட்டுமில்லேங்க... என் மனையாளுக்கும் இந்த வீடு பிடித்துவிட்டது. ஆரம்ப காலங்களில் ப்யமிருந்தது உண்மை, ஆனா இப்ப இல்லை.

வீட்டுல தெய்வாம்சம்னு சொன்னேனே...அது... என் வீட்டின் ஒவ்வோரு அறையிலும் கடிகார மணியோசை ஒலிக்குதோ இல்லையோ, கெவுளி சத்தம் விடாம ஒலிக்கும். அது என்னானு அப்புறம் பார்க்கலாம் :) (ஆரம்பிச்சுட்டாங்கப்பா) அதுபோக சின்ன குழந்தை நடந்து போவதைப்போல இரு கால் கொலுசின் மணியோசை ஒலிப்பதாகவும் கூற கேட்டிருக்கிறேன்... என் காதால கேட்டதே இல்லீங்க...

ஆக என் வீடு மிக திருப்தியாக இருக்கிறது... இந்த வாஸ்து எல்லாம் பார்த்தா... கணக்குப்படி எல்லாமே கோல்மால்தான்... ஆனால் மனம் வாஸ்து சிறப்பாக இருக்கிறபடியால், மனை வாஸ்து செயல்பட முடியாது போயிற்று போலும்.



இந்த மாதிரியான வீட்டில் இருந்து பழகிக்கொண்டீர்களென்றால் இந்த உயிரின உலகை நேசிக்கவும கற்றுக்கொள்ளலாம் நண்பர்களே! நான் புலால் உண்பதில்லை... தாவர, கனி வகைகள் மட்டுமே என் உணவு...

என்னங்க... வீட்டிற்கு வர பயமா இருக்கா? பயப்படவே பயப்படாதீங்க... உங்களை சுற்றி இருக்கிற மனித மிருகங்களோடு நீங்கள் பழகி வரும்போது இதெல்லாம் ஜுஜிபி... ஒன்னுமே இல்லீங்க...

வாங்க...

:)

Wednesday, December 22, 2010

திருப்பதியில் 40 பிரசவம் - ஒரே ஒரு பெண் குழந்தை ஏன்?

திருப்பதி மெட்டர்னிட்டி ஆஸ்பத்திரில கடந்த புதன் கிழமை  டோட்டலா 40 பிரசவம் நடந்தது.இதுல 39 ஆண்குழந்தைகள். ஒரே ஒரு பெண் குழந்தைகள். இந்த விகிதம் திருப்பதில மட்டுமா? இல்லை உலகமெல்லாம் இதே கதியா தெரியலை.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் முக்திங்கறது பிறப்புரிமை. தன் முக்திக்கான சாதனைக்கு அனுகூலமான பிறப்பை எடுக்க ஆத்மாக்கள் காத்துக்கிட்டிருக்கும்ங்கறது என் நம்பிக்கை. தாளி கருவுலயே தீர்த்து கட்டிட்டா எங்கனருந்து சாதனை பண்றது? பப்பாளிப்பழம், எருக்கங்குச்சி பாட்டிலருந்து  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல உள்ள ஹாஸ்பிட்டல்ஸ் வரை எல்லா நாதாரியும் எமனா இருப்பாய்ங்கன்னா ஆண் பிறப்பை எடுக்க அந்த ஆத்மாவுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.

இப்பமே ஆண் -பெண் பிறப்பு விகிதம் கச்சா முச்சான்னு உதற ஆரம்பிச்சிருக்கு. பெண் கல்வி, வேலை வாய்ப்புல பெண்ணுக்கு முன்னிரிமை மாதிரி காரணங்களால பெண் சிங்கிள் ஹேண்டா மோத ஆரம்பிச்சுட்டா.

பசங்க காலேஜுக்கு கட்டடிச்சு,பான்,பீடா,குட்கா, பீடி,சிகரட்,கஞ்சா, ரஜினி ,கமல்,அஜித்,விஜய், அரசியல்,சாதிசங்கம்னு டைவர்ட் ஆகி கிடக்க பொண்ணுங்கல்லாம் ஒயுங்கா படிக்குதுங்க. அதுங்க கரப்பான் பூச்சி மாதிரி எந்த வேலைலயும் சஸ்டெய்ன் ஆயிரும்.

எதுக்கு கண்ணாலம்னு வைபரேட்டர்களை ஆப்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா மவனுங்களே கோலாட்டம் தேன். இனியாச்சும் திருந்துங்க. ஆண் ஃபிசிக்கலா வேணம்னா ஸ் ட்ராங்கா இருக்கலாம். ஆனால் பெண் தான் பயாலஜிக்கலா,சைக்காலஜிக்கலா இன்னும் பல ஜிக்கலா பவர் ஃபுல். என்னதான் ரவுடித்தனம் பண்ணி ஆட்டம் போட்டாலும் ஆண்  இன்ஃபிரியர் தேன்.

இன்னம் கூட திருந்தாம அவிக பக்கம் எல்லாத்துக்கும் பொம்பள புள்ளைதானாமே அது இதுனு டகுலு விட்டுக்கிட்டிருந்தா ஆம்பளையெல்லாம் ஹோமோ வாயிருவான். எவனும் ரெண்டு காலை சேர்த்து நிக்க முடியாம போயிரும், மனித குலமே நிர்மூலமாயிரும்.

ஊதுற சங்கை ஊதியாச்சு. திருந்திருங்க. காலம் திருத்தினா வலிக்கும். வேணாம் ..வலிக்குது...அழுதுருவன்னு சொன்னா கேட்காது.

எச்சரிக்கை:
என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு மரணம்=செக்ஸ்=பணம்  என்ற வில்லங்கமான பதிவையும் போட்டிருக்கன். மிஸ் பண்ணாம படிச்சுருங்க.

மரணம் = செக்ஸ் = பணம்

மரணம் வந்த பிறகு உடல் உதிர்ந்து போகுது. உயிர்  முடிவில்லாத இந்த படைப்போட கலந்துருது. செக்ஸ்ல வீர்ய ஸ்கலிதம் நடக்கறச்ச பாடி பத்தின ஞா ஒட்டு மொத்தமா போயிருது. ( ஒரு க்ஷணத்துக்காச்சும்) .இதை காலாதீத நிலை,ப்ளாக் அவுட் குட்டிமரணம்னு கூட சொல்றாய்ங்க.

உடம்புங்கற சிறைல சிக்கிக்கிடந்த உசுரு /ஆன்மா/நினைவு படைப்போட இரண்டற கலந்துருது.

பணம் பல வகையான எல்லைகளுக்குள்ளாற சிக்கி சீரழியற மனிதனை உலகத்தோட ஒன்னு மண்ணா சேரவைக்குது. உ.ம்: மொழி,தூரம், ஜியாக்ரஃபி

மரணம் உங்களை இந்த உலகத்துலருந்து விடுவிக்கிற மாதிரியே செக்ஸ் கூட விடுவிக்குது.

செத்துப்போன பிற்பாடு உங்களுக்கு செக்ஸோ பணமோ தேவையில்லை.

செக்ஸ் அவெய்லபிலிட்டில இருக்கிறச்ச பணத்தோட வேலையிருக்காது. மரணம் பத்தின நினைவு இருக்காது.

உங்க கிட்ட பணம் இருந்தா மரணத்தோட ( ஐம் சாரி மரணத்தோட நிழல்களான தனிமை,இருட்டு,முதுமை எட்செட்ரா) ஃபைட் பண்ணி ஜெயிச்சுக்கிட்டு (அட்லீஸ்ட் ஜெயிச்சுட்டதா நினைச்சுட்டு) சந்தோசமா இருப்பிங்க. இந்த ஃபைட்ல தோத்துட்டுத்தான் இருக்கிங்க. உண்மையில ஹைவேல போயிட்டிருக்கிற மரணத்தை விசிலடிச்சு கூப்ட்டுட்டிங்கனு தெரியற வரை செக்ஸ் குறித்த தேவையிருக்காது ( ஃபிசிக்கல் வீரிய புரளல் இருக்கலாம் - நான் சொல்றது சைக்கலாஜிகல் வில்) மரணம் பத்தின நினைவு இருக்காது.

இப்படி மரணம் -மைதுனம்-தனம்ங்கற மூணுக்கும் உள்ள ஒற்றுமை எந்தளவுக்கு போயிருதுன்னா ஒன்னிருக்கும்போது அடுத்ததுக பத்தின ஞா மே இருக்காதுங்கோ.

எலக்ட் ரானிக் உபகரணங்கள்ள ஆன்,ஆஃப் ஆப்ஷன் இருக்கிறாப்லயே ஒவ்வொரு உயிர்லயும் வாழனுங்கற துடிப்பும்,சாகனுங்கற வெறியும் சமமா இருக்கு.

மரணம் மீதான காதல் கூட வாழனுங்கற வெறியாலத்தான்னா நீங்க சிண்டை பிச்சுக்குவிங்க. ஆமாங்கண்ணா "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இல்லியா? எல்லாம் ஒன்ஸ் மோர்மாதிரிதேன் டேக் ஒன் டேக் டூ மாதிரி தேன்.


மன்சன் காட்ல வாழ்ந்தப்போ சாவு அப்பப்போ கண்ணடிச்சு கூப்புடும், பின்னால தட்டிட்டு போவும், கை குலுக்கும். அந்த கால கட்டத்துல பார்த்திங்கனா செக்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

மரணத்தோட ஸ்பெஷாலிட்டி என்னடான்னா அது ஒவ்வொரு தாட்டி நமக்கு ஹலோ சொல்றப்பயும் வாழ்க்கை பற்றிய நம் எண்ண குப்பைல்லாம் பக்குனு எரிஞ்சு போயிரும். நம்மோட ப்ரியாரிட்டி லிஸ்ட் ரெம்ப சின்னதாயிரும்.  மரணத்துடனான நம்ம அறிமுகமே டாப்ல நிக்கும். இது காட்டு வாழ்க்கைல சாத்தியமாச்சு.அதனாலதான் மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவான செக்ஸுக்கு பெரிய முக்கியத்துவம் இல்ல.


எப்போ இவிக சஞ்சார வாழ்க்கைலருந்து ஸ்திரவாசத்துக்கு மாறினாய்ங்களோ மரணத்துடனான ஹாய்,ஹலோக்கள் குறைஞ்சு போச்சு.

மரணத்தோட விஷயத்துல இன்னொரு பெக்யூலர் திங் என்னடான்னா
அது அப்பப்ப ஹலோ சொல்லலைன்னா உள்ளுக்குள்ளாற சாவு பத்தின பயம் ஸ்டார்ட் ஆயிரும்.  அட்லீஸ்ட் மரணத்தோட நிழல்களாச்சும் நம்மை உரசிக்கிட்டு போகனும்.இல்லைன்னா தாளி தற்கொலை பண்ணிக்க்கிட்டு செத்துப்போயிருவம்.

ஸ்திர வாசத்துல மரணத்துடனான உறவு குறைஞ்சு போச்சு.மரணம் பத்தின பீதி அதிகமாயிருச்சு. மரணத்துலருந்து தப்பிக்க ஒரே வழி செத்துப்போறது. அப்படி சாக தில்லில்லாதவன் தேர்ந்தெடுக்கிற தவண முறை சாவு செக்ஸ்.(ஞா படுத்திக்கங்க குட்டிமரணம்)

ஸ்திரவாசத்துல தான் மன்சன் செக்ஸை ஆற அமர அனுபவிச்சிருக்கனும்.

இயற்கையோட க்ரூர விதி என்னடான்னா எதுமேல உங்களுக்கு எவ்ள சீக்கிரம் எந்த அளவுக்கு ஆர்வம் பிறக்குதோ அந்த அளவுக்கு ,அவ்ள சீக்கிரம் அதை அனுபவிக்கிறதுக்கான சக்தி குறைய ஆரம்பிக்கும்.

உ.ம் தின்னிப்பண்டாரங்களுக்கு ஷுகர்,அல்சர் மாட்டிக்கிறமாதிரி

இப்படியாக செக்ஸில் அதிகமா ஈடுபட்ட மன்சனுக்கு பேட்டரி வீக் ஆக ஆரம்பிச்சது. சாவு ஹலோ சொல்லாததால சாவு பயம் வந்து சாவறதுக்காக செக்ஸுல இறங்கி அஜீஸ் பண்ணிக்கிட்டிருந்தவனுக்கு பேட்டரி வீக்காகி ( இந்த காலத்து வீக்னெஸ்  இல்லிங்கண்ணா அந்த காலத்து பெண்ணை சமாளிக்க முடியாத வீக்னெஸ்) செக்ஸுக்கும் அன்ஃபிட் ஆக ஆரம்பிச்சான்.

இன்னொரு பக்கம் பெண்ணோட செக்ஸ்பவர் என்னானு புரிஞ்சு போச்சு ( ஒரே ராத்திரில பலதடவை உச்சம் பெறும் சக்தி - 7 வெர்ஸஸ் 23ல்லாம் ஞா இருக்கில்லை)

இன்னொரு பக்கம் இவன் பாடுபட்டு பண்படுத்தின நிலம் ஒரு சொத்தா உருவாக ஆரம்பிச்சது. சாவு பயம் மேலும் நெருக்கமா துரத்த - செக்ஸுலயும் அதுக்கு பெருசா  வடிகால் கிடைக்காம இருந்த நிலையில - தன் வாரிசுகள் தன் பிரதிரூபமா - தன்னோட மறுபதிப்பா - தன்னோட நீட்சியா நினைக்க ஆரம்பிச்சான்.

தன் சொத்து தன் வாரிசுக்கே போகனும்னு  நினைச்சான். யோனிய பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்ட ஆரம்பிச்சான். ( சில பார்ட்டிங்க அதை கூட ட்ரை பண்ணியிருக்காய்ங்க)

காட்டு வாழ்க்கைல தன் சகபோராளியா இருந்த பெண்ணை படிப்படியா அடிமையாக்க ஆரம்பிச்சான். அடிமைன்னா அவள் என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணுவானுதானே அர்த்தம்.இவன் எங்கே தன் ஆயுதங்கள்,கவசங்களையெல்லாம் கழட்டி வச்சுட்டு காதல் பண்றது.

செக்ஸுக்காக அவளை அண்டினா அவளுக்கு அடிபணிஞ்சதாயிருமோனு ஒரு சம்சயம்.  அவளோட செக்ஸ் பவர் தந்த எரிச்சல் ஒரு பக்கம். எல்லாமா சேர்ந்து மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸை வச்சுட்டிருந்த இவனை அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா இன்னொன்னை தேட வச்சிருச்சு.

ஆரம்பத்துல பண்ட மாற்றுல ஆரம்பிச்சது பணத்துல போய் முடிஞ்சது. பணம் எல்லா வகையிலயும் மரணம் -செக்ஸுக்கு மாற்றா அமைஞ்சது.

அவனவன் பணம் பணம்னு அலைய முழுமுதற்காரணம் இதான். இவனுக்கு சாவுன்னா பயம், சாகனும்னா பயம், செக்ஸுன்னா பயம்,பொம்பளைன்னா பயம் ஆனால் சாகனும் அதுக்காகத்தான் மன்சன் பணத்தை துரத்த ஆரம்பிச்சான்.

இவன் பணத்தை வெறும்  பணமா பார்த்திருந்தா பிரச்சினையே இல்லை. இவன் சைக்காலஜிக்கலா என்னென்னமோ காம்ப்ளெக்ஸுல மாட்டிக்கிட்டு பணத்துக்கு இல்லாத அருமை பெருமைகளையெல்லாம் கற்பிச்சிக்கிட்டு பணம் பணம்னு அலைய ஆரம்பிக்கிறான்.

ஒரு காலகட்டம் வரை பணம் அவனை திருப்தி படுத்துது. ஒரு கட்டத்துல தாளி செக்ஸுதாண்டா நாம தேடினதுனு தாமதமா ஸ்ட்ரைக் ஆக காம வேட்டைல இறங்கறான்.

அமீபாங்கற ஒரு செல்லுலருந்துதான் எல்லாரும் வந்தோம்.பிரிஞ்சோம். கரீட்டுதான் ஆனால் நம்ம எல்லாரையும் ஒரு  தங்க கயிறு இணைச்சிருக்கு. இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.

மொபைல் தான் உடல். சிம் தான் ஆத்மா. மொபைல்ல எத்தனையோ மேக்ஸ் இருக்கலாம். சிம்ல எத்தனையோ வகையிருக்கலாம்.  பலவித நெட் ஒர்க்ஸ் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொபைலும் இணைக்கப்பட்டுதான் இருக்கு.

டவர் வராத இடத்துல நிக்கிறது, பேட்டரி லோ ஆயிர்ரது, மொபைல தண்ணில போட்டுர்ரது, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிர்ரதுனு இருந்தா நெட் ஒர்க் வேலை செய்யுமா? அழைப்பு வருமா? அழைக்க தான் முடியுமா?

உள்ள நெட் ஒர்க்கை புரிஞ்சிக்கிடாம பிரிஞ்சுட்டோம்னு நினைக்கிறது - மறுபடி ஒன்னு சேர்ரதுக்காக சாகனும்,சாகடிக்கனும்னு நினைக்கிறது -அதுக்கு மாற்றா செக்ஸ் - செக்ஸுக்கு மாற்றா பணத்தை நினைக்கிறது -அந்த பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட ஃபைட் பண்றது - ஹை வேல போற மரணத்தை கை தட்டி கூப்புடறது இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லியா?

Tuesday, December 21, 2010

மருந்தா ? நோய்க்கு விருந்தா?

இந்த தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு தொடராமயே விட்டாச்சு. இன்னைக்கு ஏதோ ரிஃப்ளெக்ஸ்ல வலைதமிழ் திரட்டியை திறந்து பார்த்தா அனைத்திலும் பிரபலமா நின்னிருக்கு.

இன்னய தேதிக்கு இருக்கிற பொல்யூஷனுக்கு ஆரோக்கியத்தை பத்தி நான் பேசினா என்னோட மானசிக ஆரோக்யத்தை பத்தி சந்தேகப்பட்டுருவிக. என்ன செய்ய?  நம்ம மந்திரி,எம்,எல்,ஏ,எம்.பி எல்லாம் சேஃபா இருக்காய்ங்கனு நினைப்போம். ஆனால் இந்த டிவி பேட்டிகள்ள பாருங்க .அல்லாரும் லொக்கு லொக்குனு இருமிக்கிட்டிருப்பாய்ங்க. இவ்ளோ எதுக்கு ஆருனா முக்கிய தலைவரு செத்ததுக்கு ஒரு நிமிஷம் மௌனம்னுவாய்ங்களே அந்த சமயத்துல கூட லொக்கு லொக்கு கேட்குது.

அந்த அளவுக்கு காத்து கரப்ட் ஆயிருச்சு. சோத்துக்கில்லாதவன் கூட மினரல் வாட்டர் குடிச்சாத்தான் பொழைக்க முடியும்ங்கற நிலை வந்துருச்சு. (ஒரு காலத்துல இது லக்சரி)

நிறைய தண்ணி குடிப்பானு டிப்ஸ் கொடுக்கவும் பயம். கண்ட பிராண்டை குடிச்சு சாஸ்தி கம்மியாயிட்டா இன்னா பண்றதுனு பீதி. கீரை சாப்பிடுங்கலாம் பார்த்தா நிலத்துல கொட்டின பூச்சி மருந்து,இரசாயன உரம் ஊறி ஓடிவர கால்வாய் ஓரமாத்தானே இந்த கீரைகளும் விளையுது?

பால் குடிப்பாங்கலாம்னா அதுல யூரியா கலக்குறாய்ங்களாம். கலப்படமில்லாத ஒரே பொருள் தாய்ப்பால்னு ரேங்கிக்கிட்டிருந்தோம்.இன்னைக்கு அதுல கூட பொல்யூஷனோட எஃபெக்ட் தெரியுதுங்கறாய்ங்க.

காலையில காத்தாட நடக்கனும்பானு சொல்லலாம்னா வெறும் டீசல் புகைதேன். ஒரு காலத்துல சீக்கா போட்டு குளிச்சா சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.இன்னைக்கு பே பே காட்டுது. காரணம் என்னடான்னா காத்துல உள்ள டீசல், பெட்ரோல்  புகை.

இதுக்கு மெக்கானிக்குங்க கை கழுவ உபயோகிக்கிற சோப் ஆயிலை முக்கிய ரா மெட்டீரியலா தயாரிக்கிற ஷாம்பூதானே சூட்டபிள்.

எங்க ஊர்ல சுந்தரய்யர் தெருனு ஒரு தெரு இருக்கு தாளி அந்த தெருவுல என்னைக்குமே ,எந்த நேரமுமே ட்ராஃபிக் ஜாம் தான் . இன்னாடா ரீசனுன்னா அங்கனதான் ஊர்ல கீற டாக்டருங்கல்லாம் கீறாங்க.  ஒரு காலத்துல கிராமத்துல மாடு வளர்ப்பாய்ங்க. அந்த பாலை குடிச்சு பிள்ளைங்கல்லாம் பலராமன் கணக்கா இருப்பாய்ங்க. வெண்மை புரட்சின்னு கடைசி சொட்டு வரை டைரிக்கு ஊத்திக்கினு அந்த புள்ளைங்க பாடி எல்லாம் காட்பாடியாப்போச்சு.

அந்த தெருவுல பார்க்கிறேன். முக்காவாசி வில்லேஜ் பார்ட்டிங்க தான் இருப்பாய்ங்க.இன்னாங்கடா இது அக்குறும்பா கீது. நாமல்லாம் டவுன்ல கீற புகை,தூசுக்கு பயந்து தாளி வசதி வந்தா கிராமப்பக்கமா போயி செட்டிலாயிரனும்னு இருந்தா அவிக இப்படி சுந்தரய்யர் தெருவே கதியா கீறாய்ங்கனு  ஒரே கன்ஃப்யூஷன்.

வீடு,வாசல் - கடை கண்ணி - சோறு தண்ணி மாதிரி மருந்து மாயம்னுவாய்ங்க. இது ஏதோ பேச்சுவாக்குல சொன்னதோ,எதுகை மோனைக்காக சொன்னதோவா படலை. அந்த ஃபீல்டே மாயா பஜாருங்கண்ணா.

ஏற்கெனவே சொன்னாப்ல இவிகளோட டார்கெட் நோய்க்கான  காரணம் கிடையாது, நோய் கிடையாது. இவிக டார்கெட் பண்றதெல்லாம் நோய்க்கான அடையாளம். உ.ம்: வீசிங். அடையாளத்தை ஒழிச்சு கட்டிட்டா நோய் தீர்ந்துபோச்சுனு ஒரு ஃபீலிங்.

நாம என்னமோ டாகுட்டருன்னவுடனே கண் கண்ட தெய்வமா நினைக்கிறோம். ஆனால் அவன் படிச்சு வெளியவந்து பல வருஷம் ஆகியிருக்கும்.அவன் சம்சாரமாச்சும் எதுனா மெடிக்கல் மேகசினை ஆட்டா மாவு சலிக்க பயன் படுத்தியிருக்கும்.இவன்  ம...ரு கூட புரட்டியிருக்கமாட்டான்.

ரெப் வருவாரு.அவரு இன்ன நோய்க்கு இன்ன மருந்து புதுசா வந்திருக்கு. இதை இத்தீனி பேருக்கு நீ ப்ரிஸ்க்ரைப் பண்ணா உனக்கு ஃபுல், ஆஃபுனு ( போனசை சொல்றேன் பாஸ்)சொல்ட்டு போவாரு,இவரு அதை ஃபாலோ பண்ணிக்குவாரு.

எனக்கு இந்த அல்லோபதின்னுல்ல எந்த பதி மேலயும் நம்பிக்கை கிடையாது. காரணம் மேற்படி பதிகளோட வரலாறு அப்படி. அதை வழங்கற கல்வி அமைப்பு அப்படி. இன்னைக்கு  இஞ்சினீரா வெளியவரவன்ல 12% மட்டும்தான் நெஜமாலுமே இஞ்சினீராம்.மத்தவன்லாம் டுபாகூராம். மெடிக்கல்ல இந்த சதவீதம் எம்மாத்தம்னு ஐயாமாருங்க சொன்னா சவுரியமா இருக்கும்.

அதனாலதான் நான் நோய்க்கு தடா போட்டுவச்சிருக்கேன். அது எப்படின்னு இந்த தொடர்ல அப்பப்போ சொல்வேன். டோன்ட் ஒர்ரி.

உடம்பு -மனசுங்கற ரெண்டோட அமைப்பும் 90% ஜீன் வழியாவே வந்துருதுனு நினைக்கிறேன். இது எது வலிமையோட இருந்தா அடுத்தது இதை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்.

என் மேட்டர்ல பார்த்திங்கன்னா பாடி காட்பாடி. ஆனால் தாளி நெஞ்சுல மாஞ்சா சாஸ்தி. மதனபல்லி டிபி வார்டுலயே இருந்து ஃப்ரெண்டுக்கு சர்வீஸ் பண்ணிட்டு இருந்தேன். ( ரெண்டு மாசம்) ஒரு ம...ரும் நடக்கலை. இத்தனைக்கும் அந்த தேதில நாம ப்ரெட் ஹண்டர். சரியான தீனி கிடையாது.

ஆனால் என் இன்னொரு ஃப்ரெண்டு இருக்கான். க்ளாக் வைஸ் லைஃப். வாழ்க்கையில போராட்டங்கறதே இல்லை. ஆத்தோட போறதுதான்.சொந்த வீடு,அம்மா அப்பா காலி,  கண்ணாலமாச்சு, ரெண்டு குட்டி போட்டாச்சு. ஏதோ ரெண்டு மூணு பலான மேட்டர்ல சிக்க இருந்தான் அதையும் யாரோ ஒருத்தன் சால்வ் பண்ணி விட்டுட்டானுவ. (இதுல அடியேனும் ஒருத்தன்) . அவனுக்கு அட் எ டைம்  டிபி ,ஷுகர் ரெண்டும் மாட்டிக்கிச்சு. டிபி வந்தா நல்லா திங்கனும்.ஷுகர் வந்தா கொஞ்சமா தின்னுக்கிட்டே இருக்கனும். நல்லா தின்னா ஷுகர் சாஸ்தியாயிரும். திங்கலைன்னா டிபி சாஸ்தியாயிரும். ஒரே மூனு மாசத்துல கருவாடு மாதிரி ஆயிட்டான். பெஞ்சுல உட்கார்ர அளவுக்கு கூட தெம்பில்லாம கொஞ்சம் படுத்துக்கட்டானு கேட்கிற ஸ்டேஜு வந்துருச்சு.

ஒரு நா கூப்டு சொன்னேன். மவனே உனக்கு சாவுன்னா செத்துப்போற அளவுக்கு பயம். வாழ்வுன்னா உசுரு நீ அவ்ள சீக்கிரம் சாகமாட்டே. தகிரியமா இரு.  நம்முது அருள்வாக்கா? இல்லே அது  டைரக்டா அவனோட சப் கான்ஷியஸ்ல போயி தச்சுருச்சா தெரியலை.  நௌ ஹி ஈஸ் ஆல் ரைட்.


இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா மொதல்ல "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு கவிஞர் சொன்னதை மனசுல வச்சி வாழுங்க.

கான்சர்னா என்ன? செல்கள் வர்ஜியா வர்ஜியாமில்லாம திடீர்னு பெருக ஆரம்பிக்கறது. கான்சர் வந்தவனையெல்லாம் பார்த்திங்கனா வாழ்க்கையில பரவனும்,விரிவடையனும், சாதிக்கனும்ங்கற பயங்கர வெறி கொண்டவனா இருப்பான். ஓரளவு இது மெட்டீரியலைஸ் கூட ஆயிக்கிட்டிருக்கும். விளம்பர இடைவெளி மாதிரி கான்சர் வந்து மாட்டிக்கும்.

நான் என்ன நினைக்கிறேன்னா இவனோட அடி மனசோட ஆணை இவன் லைஃப்ல அமலாச்சோ இல்லையோ அதை அவன் உடல்,அவன் உடலிலான செல் ஏத்துக்குச்சோனு ஒரு சம்சயம்.

இதை எல்லாம் ஏன் சொல்லிக்கினு வரேன்னா ஈஸ்ட் மென் கலர்ல மருந்து மாயங்களை மார்க்கெட்ல தள்றாய்ங்களே அவிகளுக்கு ஒவ்வொரு மனிதனும் தனிச்சிறப்புள்ளவங்கறதோ? அவன் பாடி மைண்ட் ரெண்டும் தேன் நோயையும், அதுக்குண்டான தீர்வையும் கொடுக்குதுங்கறதோ தெரியாதா? அ அதை பத்தின அக்கறையில்லையா? பல நாள் என் மனசை குடைஞ்ச வண்டு இந்தகேள்வி .

( இன்னம் நிறைய கேள்விகள் இருக்கு அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்)

Monday, December 20, 2010

சோனியாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

எம்மா ! நீ எங்கயோ பொறந்தே. ஒரு ஹோட்டல்ல வெய்ட்டரா இருந்தப்ப எங்க ராஜீவ் உங்களை கண்ணாலம் கட்டிக்கிட்டாரு. நீ பாவம் இந்திராம்மா கிட்டே ஒட்டவே இல்லையாம். ஏதோ பார்ட்டில உன் கவுன் தையல் பிரிஞ்சிருக்க அதை அவிகளே தச்சு விட்டாய்ங்களாம். அதுக்கப்பாறம் தான் க்ளோசா மூவ் பண்ண ஆரம்பிச்சிங்களாம். (இதை வச்சுத்தானே மேனகாவை கைப்புள்ளையோட வீட்டை விட்டு விரட்டினிங்க)

ராஜீவ் போய் சேர்ந்தாரு. அரசியலும் மானாம் மண்ணாங்கட்டியும் மானான்னு ஓரம் கட்டிக்கினிங்க.ஏதோ எங்க ஸ்டேட் காரரு பி.வி நரசிம்ம ராவ் ஒப்பேத்திக்கிட்டிருந்தாரு. அந்த சமயத்துல சமீபத்துல அஜால் குஜால் வேலை பண்ணி ஸ்டேட்டை விட்டே ஓடிப்போன என்.டி.திவாரிய வச்சு ஒரு பார்ட்டியே ஆரம்பிக்க வச்சிங்களாம். அதுக்காக பிரச்சாரம்லாம் கூட பண்ணிங்களாமே. அந்த கட்சிக்கு ஆறே சீட் வந்துதாமே .நம்ம ரோசா ஒரு டிவி பேட்டில சொன்னப்ப ஜில்லுனு ஆயிருச்சு.

எப்படியோ பார்ட்டில நுழைஞ்சு அதை அப்படியே  ஹைஜாக் பண்ணிட்டிங்க. கட்சில இருக்கிற கிழவாடிங்களோட மென்டாலிட்டய நல்லாவே புரிஞ்சிக்கிட்டிங்க. மேய்க்க ஆரம்பிச்சிட்டிங்க. காந்தி மேல கூட எனக்கு காட்டமான அதிருப்தியெல்லாம் இருக்கு. பாவம் அவிக பண்ண தப்புக்கு உங்களை வையமாட்டேன் . பயந்துக்காதிங்க.

புருசன் பொஞ்சாதியை பெட்டர் ஹாஃப்ங்கறாய்ங்க. ராஜீவ் உங்கள்ள பாதிதானே.அவரை கண்ணாலம் கட்டிக்கிட்டதாலதானே இந்த ராஜபோகம் அனுபவிக்கிறிங்க.

இலங்கை மேட்டர்ல அவரு ஒரு தப்பு பண்ணிட்டாரு. மெஜாரிட்டியான புலிகளை தவிர்த்துட்டு ஒரு சொல்யூஷனை ஏற்படுத்தனும்னு துடிச்சாரு.அப்போ தமிழ் நாட்ல தேர்தல் ஜுரம். பஞ்சாயத்து பண்றதுக்கு போன ஆளூ இவரே பாட்டியா மாறி கையெழுத்து போட்டாரு. அமைதி காக்கறோம்னு ஒரு படைய அனுப்பி வெந்த புண்ல வேலை பாய்ச்சினாரு. விதி விளையாடிருச்சு.அவர் மட்டும் அவாள் பேச்சை கேட்காம புலிக  இல்லாட்டி அது ஒரு தீர்வே கிடையாது. இந்த ஆட்டத்துக்கு நான் வரமாட்டேன்னுட்டு குர்தா மண்ணை தட்டி விட்டுட்டு போயிருக்கலாம். போகலை.

அவரோட பெட்டர் ஹாஃபுனு நிரூபிக்க உங்க ஒரு தாலி அறுந்ததுக்கு இத்தீனி லட்சம் தாலிகளை அறுத்துட்டிங்க.  பெட்டர் ஹாஃபுன்னா கணவன் ஏதாச்சும் தப்பு தண்டா பண்ணியிருந்தா அதை திருத்தப்பார்க்கனும் தாயே.. அதை விட்டுட்டு தமிழ் சினிமா மாதிரி ரிவெஞ்ச்ல மட்டும் பெட்டர் ஹாஃபுனு தப்பா புரிஞ்சிக்கிட்டிங்களே.


இலங்கைக்கு நம்ம அரசு பண்ண உதவிகள்ள நூத்துல அரை சதவீதம் புலிகளுக்கு பண்ணியிருந்தா நமக்கு எல்லை தெயவங்களா இருந்திருப்பாய்ங்க. இன்னைக்கு சீனத்து கைதிகள்ளாம் வந்து அங்கன வளர்ச்சி  பணிகள் செய்றாய்ங்களாம். இது தேவையா?

உங்க நாட்ல நீங்க வார்ட் மெம்பரா கூட எலக்ட் ஆகியிருக்கமாட்டிங்க. ஆனால் இந்த நாட்ல உங்களை சூப்பர் பவர் ஆக்கிவச்சிருக்கோம். இதுல தமிழ் நாடு மாதிரியே ஆந்திராவும் உரிய பங்கை ஆற்றியிருக்கு. ஆனால் இதுக்கு பிரதியா நீங்க என்ன செய்திங்க?

மத்த ஸ்டேட் பத்தியெல்லாம் எனக்கு பெருசா தெரியாது. தெரிஞ்சத மட்டுமே இதுல ரெய்ஸ் பண்றேன். தமிழினத்தையே அழிச்சாலும்.. மானம் கெட்டோ ,மதி கெட்டோ உங்க வேட்பாளர்களுக்கு ஓட்டு ப்போட்டாய்ங்க. யுபிஏவுக்கு மெஜாரிட்டி கிடைக்கிறவரை இருந்த சோனியா வேறே. (2009 வரை) தனி மெஜாரிட்டி கிடைச்ச பிறவு உள்ள சோனியா வேற.

சுப்பிரமணியம் ஸ்வாமி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல 60 சோனியா 30 கருணாநிதி 10 ராசான்னு பகிரங்கமா குற்றம் சாட்ட நீங்க மவுனம் எனது தாய்மொழினு இருக்கிங்க இதுக்கு என்ன காரணம்?  அந்த பார்ட்டி சொல்றது பொய்யா இருந்திருந்தா டங்குவாரு அறுத்திருக்கவேணாமா?

அது சரி  காங்கிரஸ் ப்ளீனரில நீங்க ஊழலை ஒழிக்க ஏதோ அஞ்சு பாய்ண்ட் சொன்னிங்களாமே. இதெல்லாம் டகுலு இல்லைன்னா திமுகவோட கூட்டு முறிஞ்சது. நாங்க உத்தமங்க.ஊழல் கட்சியோட கூட்டுவைக்கமாட்டோம். ஜெயா ஊழல் ராணி அவிகளோடவும் கூட்டில்லை.தனியாத்தான் நிப்போம்னு அறிவிக்கலாமே.

மக்களோட சைக்காலஜிய புரிஞ்சிக்கிறது ரெம்ப கஷ்டம். இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தல்ல கூட  ஆந்திராவுல தெலுகு தேசம் ஸ்வீப் பண்ணிருச்சு.

ஆ.. இதெல்லாம் விதி விலக்கு. ராகுல் காந்தி ..புடிச்சி தந்தா தலைல தெளிச்சிப்பாய்ங்கனு நீங்க நினைக்கலாம். ஆனால் காலம் மாறிப்போச்சு தாயி. ஏதோ ஆந்திரால ஒரு ஒய்.எஸ்.ஆர் இருந்ததால கட்சி பொழச்சுது. இல்லைன்னா மெஜாரிட்டியுமில்லை. ஒரு மண்ணுமில்லை. பீகார்ல பார்த்திங்கல்ல கட்சியோட பாடைய சுமக்க சரியா 4 எம்.எல்.ஏ.

தெலுங்கானான்னு தேன் கூட்டை கலைச்சு விட்டுட்டிங்க டிசம்பர் 31 அன்னைக்கு தெலுங்கானா கொடுக்கறோம்னா ஆந்திராவுல  பத்திக்கும், கொடுக்கமாட்டோம்னா தெலுங்கானால பத்திக்கும்.

என்னமோ போங்க.ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குங்கற மாதிரி இருக்கு. உங்க போக்கு.இதுல உங்க தவப்புதல்வர் ஒரு அன்னிய நாட்டு தூதர்கிட்டே உள் நாட்டு விவகாரத்தை உளறியிருக்காரு.

இப்பவும் ஒன்னும் மிஞ்சிப்போகலை. காங்கிரஸ் மார்ச்சுவரிக்கு  போறது போறதுதான். சாகறப்ப சங்கரா சங்கரான்ன மாதிரி  எதுனா நாலு நல்ல காரியம் பண்ணிட்டு போங்க.

அடுத்த எலக்சன்ல டெப்பாசிட்டாச்சும் கிடைக்கும். ( எலக்சனுக்க் கூட சான்சில்லை தாயீ .. பை எலக்சனே கொணாந்துருவாய்ங்க போல) பெட்டர் ஹாஃபுன்னா கணவனோட பாவத்துக்கு பரிகாரம் தேடனும்மா.

என்ன பாவம் பண்ணமோ கேடு கெட்ட மனுச ஜம்மம் எடுத்துட்டம். எதை செய்தாலும் கர்மம் சுத்திக்கும். அட நீ நல்லதையே செய்தாலும் கர்மம்தான்.அதை அனுபவிக்க மறுபடி பிறக்கனுமாம்.

ஏழேழு சம்மத்து புண்ணியத்தையெல்லாம் இந்த சன்மத்துலயே தீர்த்துகட்டிட்டிங்க. இன்னொரு ஏழேழு ஜன்மத்துக்கு பாவத்தை மூட்டை கட்டிட்டிங்க. காலச்சக்கரம் ரிவர்ஸ்ல சுத்தினா ராகுலாரோட பேச்சு,நடவடிக்கைக்கு உங்களுக்கு கிடைச்ச வெய்ட்டர் வேலை கூட கிடைக்காது.

கொஞ்சமா மாத்தி யோசிங்க. இந்த சனம் அல்ப சந்தோஷிங்க. இவிகளை சந்தோசப்படுத்தறது ரெம்ப ஈஸி.  இந்த நாட்ல இல்லாத வளமே இல்லை இதை வளப்படுத்தறது ஈஸி. இங்கன இல்லாத வலிமையே இல்லை . இதை வல்லரசாக்கிறது ச்சோ ஈஸி.

அமெரிக்காகரனோட அணு ஒப்பந்தம் போட்டுத்தான் கிழிக்கனும்னுல்ல. ஒவ்வொரு நாட்டு தலைவனா வந்து ஒப்பந்தம் மேல ஒப்பந்தம் போடறதை பார்த்தா கடைய கட்ட போறிங்களோ என்னமோனு கூட ஒரு சம்சயம்.

போறது போறிங்க.நாலு நல்ல காரியம் பண்ணிட்டு போ தாயி.

(ஆந்திரா கதைய டீட்டெய்ல்டா  நான் தெலுங்கு ப்ளாக்ல  எழுதிக்கிறேன். தமிழ் நாட்டு கதையமட்டும் தான் இங்கே பேசியிருக்கேன்.)

சொல்லனும்னு தோனுச்சு. சொல்ட்டன் .எடுத்தா எடுங்க.உட்டா உடுங்க.

"அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்"
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்"

இதெல்லாம் தமிழ்ல மட்டுமில்லை இந்தில,இங்கிலீஷ்ல ஏன் இத்தாலிய பாஷைல கூட நிச்சயமா இருக்கும். ஏன்னா இதெல்லாம் ப்ரூவன் ட்ரூத்ஸ். வரலாற்று உண்மைகள்.

வரலாறு ஒரு  பைத்தியம். ஒன்னயே மாத்தி மாத்தி பினாத்திக்கிட்டிருக்கும்.கேட்டா பொழச்சோம் இல்லாட்டி "பாவத்தின் சம்பளம் மரணம்"னு நான் சொல்லலிங்கம்மா.பைபிள் சொல்லுது.

வருந்தறது,திருந்தறதுல்லாம் தான் நமக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்யாசம். திருந்திட்டா பிரச்சினை இல்லை.  திருந்தாட்டா  காலம் திருத்திரும்.அப்ப ரெம்ப வலிக்கும்

Sunday, December 19, 2010

வலையுலகில் தேக்கம்

சுஜாதா கதைகள்ள கணேஷ் வசந்துக்கு கீர் (Gear) போடவும், வசந்தே தனக்கு தான் உசுப்பேத்திக்கவும் " நீ அனுமார்ரா உன் பலம் உனக்கு தெரியாதும்பாய்ங்க. இதே வசனத்தை நான் சகபதிவர்கள் கிட்டயும் விட விரும்பறேன்.

சுகுமார்ஜி எந்த ஆக்டரும் சூப்பர் ஸ்டாருல்லே. ரசிகன் தான் சூப்பர் ஸ்டாருன்னு போட்ட பதிவை 499 பேர் பார்த்திருக்காய்ங்க. தமிழ் வெளில டாப் ஒன்ல நின்னிருக்கு. (படத்தை பாருங்க ) இந்த வெற்றி கொடுத்த தகிரியத்துல தான் இந்த பதிவையே போடறேன்.

வீட்லயே நெட் கனெக்சன் வந்துட்டதால,  ஒரு நாளைக்கு 3 தாட்டி பூந்துவர்ரதாலயா என்னனு தெரியலை புது பதிவுகள் குறைஞ்சிட்டே வராப்ல ஒரு சம்சயம். வந்த பதிவுகள்ளயும் புதுமைய லென்ஸ் வச்சு தேட வேண்டியதா இருக்கு.

தர்ம யுத்தம் படத்துல ஸ்ரீதேவி பாடுவாய்ங்களே அப்படி எத்தனாம்பெரிய ஜூரியை கூட போய்யா போய்யா (வலை) உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பான்னு பிரிச்சு மேயற வாய்ப்பு இந்த உலகத்துல இருக்கு. ஆனால் திருப்பி திருப்பி கலைஞரை,ஜெயாவை,ராசாவ கிழிக்கறதோட சரி.   விட்டா சினிமா விமர்சனம். இல்லை சக பதிவர்களை கலாய்க்கிறது ( எப்பவாச்சும் ஃப்ரீன்னா பரவால்லை எப்பவுமே ஃப்ரீன்னா எப்படி?) விட்டா ரஜினி,விஜய்.

என் சிற்றறிவுக்கு எட்டின வகையில வலையுலக புதுமைக்கு சில யோசனைகள் குறைஞ்ச பட்சம்  ஒரு 45  நாளைக்கு அமலாக்கினா போதும்

*ஆரியம்,திராவிடம்,பார்ப்பனீயம் எல்லாத்துக்கும் லீவு
* நோ சினிமா விமர்சனம் - நோ நடிகைகள் காசிப்ஸ்
*இலங்கை மேட்டர்ல விசயம்,விசயத்தோட வீரியம்  தெரிஞ்சவுக மட்டும்      டீட்டெய்ல்டா எழுதனும் -மத்தவுகல்லாம் படிக்கலாம் பரப்பலாம்

*.டிவி நிகழ்ச்சிகள் அதுலயும் சீரியலை பத்தி வேணாங்கண்ணா ..வேணம்னா புதுசா ,சனத்துக்கும் உபயோகமா எதுனா நிகழ்ச்சிகளுக்கு ஐடியா கொடுங்க
*பதிவர்களுக்கான யோசனைகள் தலைப்புக்கு தடை( நம்ம பதிவே கடைசி பதிவா இருக்கட்டும் ஜஸ்ட் 45  நாளைக்கு)















மேலே உள்ள காலியிடம் உங்கள்ள யாராச்சும் சொல்ற யோசனையை சேர்த்துக்கத்தேன்.

என்னெல்லாம் எழுதலாம்:
இந்த துணைத்தலைப்புக்கு கீழே எழுத எனக்கு தகுதி  இருக்கானு தெரியலை. நான் கூட  ஜோதிஷம் ,சைக்காலஜி,செக்ஸாலஜி,அரசியல்னு தேங்கிட்டன். இனி நானும் புதுமையா எதுனா எழுதலாம்னு இருக்கேன். இடையில மருந்தா நோய்க்கு விருந்தான்னு ஒரு தொடர் ஆரம்பிச்சு அது தொங்கல்ல இருக்கு.

என்னமோ போங்க இந்த ஞா கிழமை வந்தாலே எல்லாமே கடுப்படிக்குது...

முடிவுரை:
எனக்கு என்ன தோணுதுன்னா இங்கன பைசா புரள்றதில்லைங்கறதே இந்த தேக்கத்துக்கு காரணமோ? யாராச்சும் நகைக்கடைக்காரவுக வந்து பரிசு கொடுக்க ஆரம்பிச்சா புதுவெள்ளம் வருமோ?

Saturday, December 18, 2010

ரஜினி சூப்பர் ஸ்டாரா? விஜய் சூப்பர் ஸ்டாரா?

யார் சூப்பர் ஸ்டார்?



ஒவ்வொருவருக்கும் ஒரு காலம், ஒரு வரலாறு, அன்றைய நாட்களில் அன்றைய நிலவரப்படி... திரைப்படங்கள் மூலமாக... ரசிகன் தரும் போற்றுதல்... அந்த போற்றுதல் ஒரு வட்ட நிகழ்வு... ஒரு முழு சுற்று நிகழும் போது, கடந்த சுற்றில் இருந்தவர் மரிப்பார் அல்லது மறக்கப்படுவார். சில நேரங்களில் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் நிலை.

ரசிகனுக்காகவே நடிப்பதாக ஜல்லியடிப்பவர்கள் முதல் நாள் ரசிகனுக்காக இலவச காட்சியல்லவா அளிக்கவேண்டும். ஆனால் நடப்பதென்னவோ கொள்ளை. ரசிகனுக்கும் இத்தனை பணத்தில் ஒரு நடிகனின் டிக்கெட் வாங்கி பார்த்தேன் என்ற பெருமை வேறு... ஒரு திரைப்படம் ஒரு ரசிகனின் 180 நிமிடங்களை கொலை செய்வதாகவே நான் உண்ர்கிறேன்.

ரசிகன் இப்படி உணர்ச்சிவசப்படுதலுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்...

ஐயோடா... விளங்கிரும்...

திரைப்படம் என்பது ஒரு நிகழ்வு...  ரத்தமும், சதையுமாக உயிருள்ள பெண்ணையே “மாய பிசாசு” என்ற அழைத்த மனிதன்,  உண்மையான மாய பிசாசு திரைப்படங்களை போற்றுதலும், அதற்காக சண்டையிடுவதும், காலத்தை தொலைப்பதும், தன் எதிர்காலத்தை அழிப்பதும் கண்டிக்கதக்கது.


திரைப்படம்... ஒரு இலை துளிர் விட்டு, பசுமையாகி, காய்ந்து, உதிர்ந்து மண்ணில் சருகாகி, மக்கி போவதை போல அல்லாமல் என்றுமே 16 ஆக உலவும் மாயப்பதிவு....

திரைப்படத்தை திரைப்படமாகவே பாரக்கும் பக்குவம் உலகில் எவருக்குமே வரவில்லை, இனிமேலாவது வருமா அதும் தெரியவில்லை...

ஒரு ரசிகனாவது, தொலைத்த தன்னை கண்டெடுத்து மீட்டுக்கொள்வானா தெரியவில்லை.



ஒரு ரசிகனின் தோளில் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு நடிகரையும் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுவது சுத்த பைத்தியகாரத்தனம். ஒரு ரஜினிகாந்தல்ல, ரசிகன்தான் எப்பொழுதுமே  சூப்பர் ஸ்டார்.

சூப்பர் ஸ்டார் ரசிகனைத்தவிர எவனுமில்லை.

ஆக...

ஆரம்பமும் முடிவுமில்லா ஒரு பதிவாக இருக்கிறது... கேள்விகள் தொடரலாம்...

Friday, December 17, 2010

விஜய் தனிக்கட்சி பற்றி ரஜினி ரகசிய ஆலோசனை

டெலிகாம் ஊழலில் சிக்கி திணறும் திமுக,  விஜய் தனிக்கட்சி யோசனை இத்யாதி திருப்பங்கள் ரஜினியை குழப்ப தனக்கு பிடித்தமானவர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, சுப்பிரமணியம் ஸ்வாமி, எழுத்து சித்தர் பாலகுமாரன், கே பாலசந்தர் ஆகியோர் இறங்குகின்றனர்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு (மேலுக்கு) வாங்க பாலகுமாரன்..

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சோ: ஆமாம்..இங்கே ஆரம்பிச்சு எப்ப பாய்ண்டுக்கு வர்ரது.. நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .மேட்டர் தெரியுமில்லை ..டெலிகாம் ஊழல்ல திமுக சிக்கி தவிக்குது . விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கபோறாரு இந்த நேரத்துல ரஜினி என்ன செய்தா நல்லாருக்கும்னு ஒரு டிஸ்கஷன்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார். அதனாலதான் ஜெயலலிதா கூட கூப்டு ஐடியா கேட்கிறாய்ங்க

ரஜினி:(எழுந்து நின்று ) முதல்ல எல்லாரும் உட்காருங்க. மேட்டர் தெரியுமில்லை.. இத்தனை நாள் நான் சால்ரா போட்ட கலைஞர் தலைமையிலான திமுக டெலிகாம் ஊழல்ல  சிக்கி தவிக்குது. சினிமா உலகமே கலைஞர் குடும்பத்தோட பிடில இருக்குன்னு பிரச்சாரம் நடக்குது. ஆட்டைகடிச்சு மாட்டை கடிச்சு  விஜய் சினிமாவுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை .. இதே பாய்ண்ட்ல அவரு  தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறாரு. அன்னைக்கு மணி ரத்தினம் எடுத்த வில்லங்க சினிமாக்களால இர்ரிடேட் ஆன எவனோ வீசின வெடிகுண்டுக்கே இர்ரிட்டேட் ஆகி இனி தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பத்தனும்னு வசனம் விட்டேன்.. இப்ப மவுனமா இருந்தா நல்லாருக்காது. இந்த நேரத்துல நான் செய்தா நல்லாருக்கும்னு உங்ககிட்டே  ஐடியா கேட்கத்தான் இந்த டிஸ்கஷன்

சுப்ரமணியம் ஸ்வாமி: இன்னும் என்ன தயக்கம். நம்ம ஜனதா கட்சிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்கோ  சந்திரலேகாதான் முதல்வர் கேண்டிடட்டு நான் டிக்ளேர் பண்ணிர்ரன்..

ரஜினி:  கொஞ்சம் சீரியசா பேசுங்க சார். நீங்க எப்ப சீரியஸ் எப்ப காமெடின்னே புரியறதில்லை.

சு.ஸ்வாமி: என்னை மதிச்சு ஒரு எம்.பி சீட் கொடுத்துட்டா நான் காமெடி.. என்னை மதிக்கலைன்னா சீரியஸ்.

பாலசந்தர்: நீ எதையோ முடிவு பண்ணிட்டே . அப்புறம் எதுக்கு டிஸ்கஷன் டிச்க்சன் எல்லாம். ஆமா விஸ்வ நாதன் டைரக்சன் நடிக்கனும்னு சொன்னியாமே.. நம்ம கவிதாலயாவுக்கு ஒரு படம் பண்ணக்கூடாது

ரஜினி: வேணா சாரி நீங்க அமீர்ஜானை டைரக்ட் பண்ணவைப்பிங்க. நான் டூ ஆர் டை பொசிஷன்ல இருக்கேன். இப்பயாச்சும் எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் டெடிக்கேட்டடா யோசனை பண்ணுங்க

பாலகுமாரன்: பேசாம உடையார்  கதையில நடிக்கப்போறதா அனவுன்ஸ் பண்ணிருங்க. மீடியா மொத்தம் டைவர்ட் ஆயிரும்.

ரஜினி: சுல்தன் தி வாரியரே பாதில  நிக்குது. யந்திரன் நின்னுப்போயிருதேனு சன் பிக்சர்ஸ் கிட்டே மாட்டினேன். நல்ல வேளை பிக்சர் ப்ரமோஷனுக்காக தியேட்டர் காண்டீன்ல சமோசா விக்க சொல்லலை. ப்ளீஸ் .. எல்லாரும் என்னை உபயோகிச்சுக்கத்தான் பார்க்கிறிங்களே தவிர எனக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வார்த்தைனா பேசுங்க சார்

சோ : விஜய் படத்துக்கு தியேட்டர் கொடுக்கனும்னு உண்ணாவிரதம் அனவுன்ஸ் பண்ணிருங்க

ரஜினி: வேண்டாங்க. அப்புறம் விஜயகுமார் வந்து என் பக்கத்துல உட்கார்ந்துக்குவாரு அவங்க அந்தப்புறமே புற நகர் டம்ப் ஸ்பாட் மாதிரி நாறிக்கிடக்கு

ரஜினி:(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்.. ஜெயசுதாவோட அப்பாவை அடிச்சப்பயும் அதைத்தான் செய்தேன். ஹிந்தி ப்ரொடியூசருக்கு காலை உடைச்சப்பயும் அதைத்தான் செய்தேன். இப்போ எங்க போறது? (மேலுக்கு)  எனக்கு ரொம்ப . ரொம்ப குழப்பமா இருக்கு. ஓப்பனா சொன்னா பயம்மா இருக்கு.  விஜயகாந்த் எனக்கு நகலா வந்தவர். விஜய்  என் ரசிகன்னு வேற சொல்லிக்கிறவரு.. இவங்கல்லாம் ஸ்க்ரீனுக்கு வந்த பிறகும் நான் சும்மா இருந்தா எப்படி? ரசிகர்கள் டைவர்ட் ஆயிருவாங்களோ.. மக்கள் ரொம்ப கேவலமா நினைச்சுருவாங்களோனு பயம்.

சோ : நீங்க தான் இதுக்கெல்லாம் காரணம். பொதுக்கூட்டத்துல சாயந்திரத்துலருந்து நள்ளிரவு வரை தலைவர் வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறாருனு அனவுன்ஸ் பண்றமாதிரி பில்டப் பண்ணிங்க.. பொழுது விடிஞ்சி பல வருஷமாயிருச்சு.. இன்னமும் வருவேன்னு தான் சொல்லிட்டிருக்கிங்க

ரஜினி: ஓகே ஓகே எப்பவும் நியூஸ்ல இருக்கிறதுக்காக அப்படி பீலா விட்டது நிஜம்தான். ஆனால் இப்ப நிலைம வேற.

பாலகுமாரன்: சொந்த கட்சி ஆரம்பிச்சுருங்க.

ரஜினி: விஜய்காந்த் திராவிட கட்சிகளை கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டே இருக்கார் .அப்படியும் அவருக்கொன்னும் ஆதரவு பெருகலை. நான் ஜெயலலிதாவை வீர லட்சுமினு பாராட்டியிருக்கேன். கலைஞரை அவரே வெட்கப்படும்படியா பயங்கரமா புகழ்ந்து தள்ளியிருக்கேன்..

சோ: திமுக இப்போ மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல்..

பாலகுமாரன்: திராவிட கட்சிகள்ள சேர்ந்தா தானே கடந்த காலம் குறுக்க வருது .காங்கிரஸ்ல சேர்ந்துருங்க.

ரஜினி: யோவ் திமுகவாவது மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல். காங்கிரஸ் மூழ்கி போச்சுய்யா. அதனோட பிணத்தை தூக்க நாலு எம்.எல்.ஏ ஜெயிச்சு வந்திருக்கான்

சோ: நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிங்கோ.. நான் அதிமுகவோட கூட்டுக்கு ஏற்பாடு பண்றேன். எனக்கென்ன ஒரு ராஜ்யசபா எம்பி போதும்

சுப்ரமணியம் சுவாமி: நீங்க பா.ஜ.கல சேர ஏற்பாடு பண்றேன் எனக்கென்ன ஜஸ்ட் ஒரு எம்.பி

பாலசந்தர்:அதுக்கு முன்னாலே எனக்கு ஒரு டெய்லி சீரியலாச்சும் பண்ணிக்கொடு.  நானே டைரக்ட் பண்றேன் .அப்பத்தான்  பெண்கள் ஆதரவு  உனக்கு கிடைக்கும்.

பாலகுமாரன்: எனக்கென்னவோ உடையார்தான் பெஸ்ட் சாய்ஸுனு தோனுது

ரஜினி: யோவ் ஓடிப்போங்கய்யா .. சாதிபுத்திய காட்டிட்டிங்க .. எங்கப்பா சித்தூர் முருகேசன் .. ஆன்லைன் சாட்லயாவது கனெக்ட் பண்ணுங்கப்பா..

(ஆன்லைன் சாட்)

ரஜினி: ஹலோ!

முருகேசன்: யாரு ரஜினி அய்யரா?

ரஜினி: யப்பா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. நீயும் நோகடிச்சா எப்படி?

முருகேசன்: நீங்க சிவாஜி ராவ் சார்.. சிவாஜி மாதிரி பேசறிங்க

ரஜினி: நெலமை அப்டி.. என்னதான் நீ என்னை கச்சா முச்சான்னு திட்டி எழுதினாலும் உன் எழுத்துல என் மேல உனக்கெந்த அளவுக்கு அக்கறை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.

முருகேசன்:  கெட்டும் பட்டணம் சேர்ங்கற மாதிரி சனம் என் கிட்டே வராய்ங்க. தேறினதும் காணாம போயிர்ராய்ங்க. எனக்கு உங்க மேல பெருசா அக்கறையில்லை. உங்களை ஃபாலோ பண்ற யூத் மேலதான் அக்கறை .

ரஜினி: உனக்கு யார் மேல அக்கறையோ எனக்கு அக்கறையில்லை .இப்ப தலைக்கு மேல போயிருச்சு ஏதோ ஒன்னு பண்ணனும். இல்லைன்னா என்னை நானே கூட சகிச்சுக்க முடியாது..

முருகேசன்: ஓகே ஓகே.. உங்களுக்கென்ன சி.எம் ஆகனும்னு இருக்கா? இல்லை ஜஸ்ட்  சர்வைவல் ப்ராப்ளமா?

ரஜினி: என்னப்பா சூப்பர் மார்க்கெட்ல என்னவேணும்னு கேட்கிறமாதிரி கேட்கறே..

முருகேசன்: இலக்கு எதுன்னு தெரிஞ்சாதானே ரூட் மேப் போட முடியும்?

ரஜினி: ரெண்டுத்துக்குமே ரூட் மேப் போடுப்பா

முருகேசன்: சர்வைவல் போதும்னா எங்கஊரு பழைய லோக் சத்தா மாதிரி ஒரு அமைப்பை ஆரம்பிச்சுருங்க. சொந்த பத்திரிக்கை ஒன்னை ஆரம்பிச்சு கட்சி முக்கியமில்லை வேட்பாளர்தான் முக்கியம்னு ஸ்டாண்ட் எடுத்துக்கங்க. வேட்பாளர்களோட உண்மையான விவரங்களை சேகரிச்சி சொந்த பத்திரிக்கைல வெளியிடுங்க. உங்க சர்வேல நல்ல கிரேடிங்ல உள்ள வேட்பாளர்களோட பொசிஷன் வீக்கா இருந்தா   நேர்ல வந்து பிரச்சாரம் பண்ணுவேனு பயமுறுத்துங்க.

ரஜினி: எல்லா கட்சிலயும் கெட்டவங்க இருப்பாங்களே..

முருகேசன்: எல்லா கட்சிலயும் நல்லவங்களும் இருப்பாங்களே. மேலும் நீங்க தேர்தலுக்கு முன்னாடியே நெட் ஒர்க்கை ஆரம்பிச்சுட்டா எல்லா கட்சியும் உங்களுக்கும்,உங்க அமைப்புக்கும் பயந்து சுமாரான வேட்பாளர்களா பார்த்து டிக்கெட் கொடுப்பாய்ங்க

ரஜினி: பரவால்லை. டேமேஜ் குறைவாதான் இருக்கும். இது  ஓகே. ஒரு வேளை முதல்வராகிறதுதான் இலக்குன்னா?

முருகேசன்: டேமேஜ் அதிகமா இருக்கும். பரவால்லை.

ரஜினி: இதை கேட்கிறதுல எதுவும் டேமேஜ் வந்துராதில்லையா சொல்லுப்பா.

முருகேசன்: மொதல்ல உங்க சொத்தை குடும்ப உறுப்பினர்கள் எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்துருங்க. அதை பப்ளிக்கா அனவுன்ஸ் பண்ணுங்க. உங்க சொத்துல சம் பர்சண்டேஜ்ல   நல்ல சினிமாவை ப்ரமோட் பண்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துங்க அதுக்கு தலைவரா கமல் ஹாசனை போடுங்க

ரஜினி: வெரி குட். அப்புறம்?

முருகேசன்: பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேட்கிறமாதிரி  நீங்க நாளிதுவரை என்னெல்லாம் தப்பு பண்ணிங்களோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி  அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அதுக்கு பரிகாரமா அந்த தப்புகளை திருத்தத்தான் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு ஒரு ஏழெட்டு பாஷைல புஸ்தவமா போடுங்க. ட்ரான்ஸ்லேஷனுக்கு வேணம்னா அய்யரு பசங்களை சேர்த்துக்கிருங்க. அதெல்லாம் கரீட்டா பண்ணுவாய்ங்க. ரேட் தான் காஸ்ட்லியா இருக்கும். அதை ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ல லெஸ்ஸர் ப்ரைஸ்ல ரிலீஸ்பண்ணுங்க (உ.ம் புஸ்தவம் மலிவுப்பதிப்பு ரூ. 20 டிவிடி: 20 ) கட்சி ஆரம்பிக்கப்போறதேதிய டிக்ளேர் பண்ணீருங்க
உங்களோட அஜெண்டாவா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அறிவிச்சுருங்க..

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ரஜினி: ....................

முருகேசன்: ஹலோ ஹலோ ஹலோ...

ரஜினி: ................

(முருகேசன் உடனே ராகவேந்திரா கல்யாணமண்டபத்துக்கு  ஃபோன் செய்து ரஜினி சாருக்கு என்னாச்சு பாருங்கங்கறார். அங்கிருந்து வந்த பதில் "ஒன்னும்மில்லிங்க மயக்கம் போட்டுட்டாரு )

எச்சரிக்கை: மேற்படி உரையாடல் யாவும் என் கற்பனையே.

Thursday, December 16, 2010

உங்க கேரக்டர் இதுதான்

1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள  எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா  உங்க மாதிரி பார்ட்டிங்கள  விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி   கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும்   மனசுல  எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்)  கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு  துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக  பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக.  பணம், பேச்சு, குடும்பம்னால்  வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே  இந்த  விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில்  அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு  துக்கமோ, நஷ்டமோ வந்தா  உடனே  ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.
4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார்.
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க ( நாம எப்பவும் பெண்டாட்டிக்கு ஜே தானே)  .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின்  புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட்.
6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும்  மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு  மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து  நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு  ரிட்டர்ன் வாங்கி  சாப்பிடுவாய்ங்க.
10. மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன்  இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே)  கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும்  நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும்.  பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)