Friday, December 30, 2011

வி(எ)டுபட்ட பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !
புதிய பதிவு போடவே இல்லின்னாலும் 1,200 வரை ஹிட்ஸ் வாங்கித்தர்ர ப்ளாக் இதான்.ஆனாலும் சோஷியலிஸ்ட் மனோபாவத்தோட சோனியா கிடக்கிற அனுபவஜோதிடத்தை தூக்கி நிறுத்த புதிய பதிவுகளை அதுல மட்டும் போட்டுக்கிட்டிருக்கன்.

நீங்க இந்த ப்ளாகை மட்டும் ஃபாலோ பண்ற பார்ட்டியா இருந்தா அந்த பதிவுகளை எல்லாம் மிஸ் பண்ணியிருப்பிங்க.

உங்களுக்காவ அந்த பதிவுகளோட சுட்டிகள்

பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_14.html

சோதிட கேள்வி – பதில் : 1
http://anubavajothidam.blogspot.com/2011/12/1-anubavajothidamcom.html

கேள்வி -பதில் : 2 ஆம் பகுதி
http://anubavajothidam.blogspot.com/2011/12/2.html

சசி நீக்கம் : 9 மாதங்களுக்கு முன்பே சொன்ன அ.ஜோ
http://anubavajothidam.blogspot.com/2011/12/9.html

கீதை உட்டாலக்கடின்னாலும் தடை சரியில்லை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_19.html

"சுதேசி" யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_22.html

பிட்டு படம் பார்த்த அனுபவம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_23.html

சமையல் கலை அறிவோம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_24.html

இன்றைக்கு நாள் எப்படி?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_25.html

ஹைகோர்ட் நீதியரசராய் ஒரு கிரிமினல்

http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_26.html

ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?
http://anubavajothidam.blogspot.com/2011/12/23-anubavajothidamcom.html

"சேட்டைய" எங்கருந்து ஆரம்பிக்கலாம்?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_29.html


இசை பிரியர்களின் "கொலை வெறி"


பரிசில் கேட்டு
பாவலர் செல்வார்
பாராளும் மன்னர் அவை தனுக்கே

பாடல் கேட்டு அன்னை வந்தாள்
பாவலன் எனது குடிலினுக்கே

எமக்கிடை நிகழ்ந்த சம்வாதம்
நாளை உமக்கே ஒரு வேதம்

பாவலன்:

அன்னையே வா..
அற்பன் எனை தேடி
கற்பகம் வருவதா?

( இந்த ரேஞ்சுலயே இதை கொண்டு போனா போடா பொங்கின்னுட்டு கழண்டுக்குவிங்க..அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துர்ரன்)

நான்:
வா.. தாயீ.. திடீர்னு தே.சீனிவாசன் படத்துல பெருமாள் மாதிரி விசிட் அடிச்சிருக்கே.. நான் ஏதும் பெருசா பாக்கி கீக்கின்னு கூட சொல்ல முடியாதே..

அவள்:
ஒன்னுமில்லைப்பா நீ அப்பப்போ நம்மை வச்சு கவிதைல்லாம் எழுதுவியே.. இடையில சுத்தமா நிப்பாட்டிட்டாப்ல இருக்கு?

நான்:
முள்ளை முள்ளால எடுத்த பிற்காடு ரெண்டையும் தூக்கி போட்டுரனும்னு சொல்வாய்ங்க.அப்படி வறுமைங்கற முள்ளை எடுக்க ஒன்னை முள்ளா உபயோகிச்சேன். முள்ளை எடுத்தாச்சு.அதான் உன்னையும் வீசிட்டன் போல ..என்னருந்தாலும் நானும் மன்சன் தானே..

அவள்:
என்னப்பா இது உன்னாட்டம் கவிஞர்ங்க எல்லாம் நான் தேவன் இறைவன்னு பந்தாவா எழுதிக்குவிப்பிக. நானும் .மன்சந்தானே ங்கறே

நான்:
யம்மாடி.. கண்ணதாசன் கூட எனக்கு மரணமில்லைன்னு எழுதினாரு.. ஆனால் இன்னைக்கு தமிழ் கூறு நல்லுலகே கொலைவெறியில தானே அலையுது.. அப்பம் கண்ணதாசனுக்கும் மரணம் வந்துட்டாப்ல தானே..

அவள்:
இன்னா ஆச்சு மகனே ..எம்.எஸ்.உதயமூர்த்திக்கே தன்னம்பிக்கைய இரவல் கொடுக்கிற பார்ட்டி நீ .அப்படியா கொத்தது நீயே இப்டி பேசலாமா?

நான்:
கொலை வெறி தலைக்கேறின சமயமும் கண்ணதாசனை தமிழ் மனம் மறக்காது. பத்து நாளைக்கப்புறம் கொலை வெறியை நினைக்காதுன்னு கவர் பண்ணி பேசலாம்.ஆனால் இந்த பத்து நாள் கண்ணதாசனுக்கு இறப்புங்கறது யதார்த்தமில்லியா?

அவள்:
நான் ஏதோ ஒரு பாட்டு வாங்கிக்கினு போயிக்கலாம்னு வந்தேன்.. உன் மூடு சரியில்லை போல இருக்கு. நான் கழண்டுக்கறேன்.

நான்:
ஹய்யோ ஹய்யோ.. பத்து வருசம் போனா நான் எழுதற இந்த தமிழையே பேச ஆளில்லை,எழுத ஆளில்லை. படிக்க ஆளில்லை இதுல புராதன தமிழ்ல நான் பாடி என்ன ஆகப்போகுது. ஆளை விடு தாயி..

அவள்:
பார்த்தயா இரும்பை காய்ச்சறாப்ல இத்தனை காச்சியும் உன் திமிர் போகலியே..

நான்:
ஆத்தா.. பாட்டுங்கறது ஓட்டுலருந்து பழம்புளி மாதிரி கழண்டு வரனும். புளியங்காயை நசுக்கினா என்னாகும்..

அவள்:
அப்போ உனக்கு எட்டு இடமும் குளிர்ந்திருந்தாதான் பாடுவேங்கறே..

நான்:
நான் அப்படி சொல்லலே. என் தமிழை தட்டி தரம் பார்த்து அதன் உரம் கண்டு வரம் கொடுக்க நீ மட்டும் இருந்தா போதாது..தரணியில தமிழ் தழைக்கனும். அப்பம் பாடினா ஒரு அருத்தம் இருக்கும்.

அவள்:
மகனே.. கால சக்கரம் வட்டமா சுழலும்.சரித்திரம் ஒரு பைத்தியம் மாதிரி .ஒரே மேட்டரை மறுபடி மறுபடி சொல்லும். வெய்ட் அண்ட் சீ..

நான்:
நம்ம ஃபிலாசஃபியே லைஃப் ஈஸ் வெய்ட்டிங் - என்பது தான்.காத்திருக்கிறதுல எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்லை.

அவள்:
அப்பம் பாட்டு இல்லேங்கறே..

நான்:
ஆமா தாயீ .. நீ கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணி - காலண்டர் மேட்டரை சொதப்பி - ரெக்கார்டிங்குக்கு உபயோகிக்கிற மொபைலை மொக்கை பண்ணி என்னென்னமோ செய்து பார்த்தே. ஆனாலும் பாட்டு வரலை..

நான் இந்த நாட்டை - என் மொழியை - தருமத்தை - நியாயத்தை - காலைல அஞ்சு மணிக்கு எழுந்து சோறாக்கி வேலைக்கு போயி ஆறின சோத்தை தின்னு - கூலி வாங்கி -அரிசி வாங்கி -புளி வாங்கி சமைக்கிறாளே அந்த சித்தாளை கூட உன் உருவமாத்தான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிற்காடு பாட்டு என்ன பாட்டு காவியமே தீட்டிருவம்ல.. வெய்ட் அண்ட் சீ..




Wednesday, December 14, 2011

பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?


அண்ணே !
வணக்கம்ணே.. முழுப்பலன் - 10 கேள்விக்கு பதில்னு ஜாதகங்கள் ஓவர் ஃப்ளோ ஆயிட்டிருக்கு. மேலும் நமக்கு சொந்தமான AD PAGES சார்பில் 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பட்ஜெட்ல 8 ஆயிரம் காலண்டர் போட்டுக்கிட்டிருக்கம். ( விளம்பரம் பிடிச்சு போட்டு ஃப்ரீ டிஸ்ட்ரிப்யூஷனுதேன்). மேலும் ஜோதிடம் 360 புஸ்தவ வேலையும் ஓடிக்கிட்டிருக்கு.

அல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தினசரி பதிவும் போட்டுக்கிட்டிருக்கம். எங்க என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சாலும் நேரம் போதலை. ஜாதகபலன் மேட்டர்ல ஆத்தா ரேஷன் வச்சுட்டாப்ல இருக்கு ரெண்டு ஜாதகத்துக்கு பலன் பதிவு பண்ணாலே மூளை பஜ்னு ஆயிருது .

சரி பதிவு போட்டு நாலு கமெண்ட் வந்தா சரி விடு போட நினைச்சவுக 400 பேரா இருந்தாதான் நாலு கமெண்ட் வரும்னு ஆறுதல் பட்டுக்கலாம். ஹிட்ஸ் மட்டும் கூடுதே தவிர குறையலை.ஆனால் கமெண்ட் சுத்தமா ஜீரோவுக்கு வந்துருச்சு.

பதிவு போடற வேலையும் இருக்கக்கூடாது.அதே நேரத்துல கமெண்டும் ஹவுஸ் ஃபுல் ஆகனும் எப்படினு சந்திரபாபு ரேஞ்சுல ரோசிச்சதுல ஒரு ஐடியா வந்தது. அது இன்னாடான்னா கேள்வி பதில் (ஆரும் கேட்கலின்னா நாமளே பினாமியா கேள்வி எழுதி பதில் போட்டுரலாம்ல)

இந்த ஏற்பாடு ஜோதிடம் 360 வெளிவரும் வரை தேன்.அப்பாறம் நிறைய எழுதுவம்ல.

கேள்வி கேட்பவர்கள் கவனத்துக்கு:

முடிஞ்சவரை நாலு பேருக்கு உபயோகமான கேள்விய கேளுங்க. ( என்னுது பலான லக்னம் -கிரக நிலை இது- எனக்கு பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா போன்ற கேள்விகளை அவாய்ட் பண்ணுங்க)

ஜா.ரா கவனத்துக்கு:
உடனே எனக்கு இடது விதை வலிக்கிறது மாதிரி கேள்விகளை போலி பெயர்கள்ள கேட்டுராதிங்க

கேள்விகளை கேட்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்

Tuesday, December 13, 2011

தவற விட்டவை: 2011 டிச 2 ஆவது வாரம்

அண்ணே வணக்கம்ணே !
கடந்த ஓரிரண்டு வாரங்களாக அனுபவஜோதிடம் ப்ளாகை மட்டும் அப்டேட் பண்ணிக்கிட்டிருக்கேன்.

அதனால அ.ஜோ ப்ளாகில் போட்ட புதிய பதிவுகளுக்கான சுட்டிகள் உங்கள் வசதிக்காக

கூறு கெட்ட குக்கர் கைப்பிடிகள்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_06.html

நாங்களும் பிரபலம் தேன் !
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_07.html

சனியும் ஆஞ்சனேயரும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_08.html

வேசியாவதே வெற்றிக்கு வழி !
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_09.html

வீடு தந்த ஹனுமான்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_5647.html

கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_11.html

கேதுவும் வினாயகரும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_6606.html

முல்லை பெரியார் அணை - தீர்வு
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_6393.html

இளமையின் வேகம் - சுக்கிரனின் தாக்கம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_13.html

Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..

Tuesday, December 6, 2011

விடுபட்ட பதிவுகள் ( டிசம்பர் முதல் வாரம்)

அண்ணே வணக்கம்ணே ..

ரெண்டு வலைப்பூக்கள் - ஒரு வலைதளம் மூன்றுக்கும் தீனி போட நம்மால ஆகலை. சில காலம் ஒரே விஷயத்தை பேர்பாதி போட்டு ச்சூ காட்டிக்கிட்டு இருந்தம். அதுவும் கில்ட்டிய தர -ஒரே வலைப்பூவில் ஐட்டம் போட்டு மற்றதை திராட்டுல விட்டு வாரத்துக்கு ஒரு தரம் போல இப்படி விடுபட்ட பதிவுகளின் சுட்டிகளை தந்துக்கிட்டிருக்கேன்.

ஒரு வேளை நீங்க இந்த வலைப்பூவை மட்டும் படிக்கிற பார்ட்டியா இருந்தா கீழ்காணும் பதிவுகளையெல்லாம் மிஸ் பண்ணியிருப்பிங்க.

இப்பம் அனுபவஜோதிடம் வலைப்பூவை மட்டும் தான் தினமும் அப்டேட் பண்றேன். நிர்வாண உண்மைகள் வளர்ந்த பிள்ளை வித் அவுட் அப்டேஷன் தூள் கிளப்பும் நிலைக்கு வந்தாச்சு.

அனுபவஜோதிடம் வலைப்பூ கொஞ்சம் சோனி .அதனால அதை அப்டேட் பண்ணிக்கிட்டிருக்கேன்.

இப்பம் நீங்க மிஸ்பண்ண பதிவுகள் - தலைப்பின் கீழேயே அதற்கான சுட்டியை தந்திருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க ப்ளீஸ்..

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி : தொடர் தொகுப்பு
http://anubavajothidam.blogspot.com/2011/11/blog-post_3313.html

ஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு
http://anubavajothidam.blogspot.com/2011/11/blog-post_25.html

ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க..
http://anubavajothidam.blogspot.com/2011/11/blog-post_23.html

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஜமாய்க்கலாம் வாங்க!
http://anubavajothidam.blogspot.com/2011/11/blog-post_22.html

சனி பிடிச்சா ஆரை வணங்கனும்?
http://anubavajothidam.blogspot.com/2011/11/blog-post_29.html

கிரகமும் -கடவுளும்
http://anubavajothidam.blogspot.com/2011/11/blog-post_30.html

சந்திரனும் -கன்யாகுமாரியும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_02.html

சுக்கிரனும் லட்சுமியும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_7253.html

செவ்வாயும் -முருகனும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_781.html

ராகுவும் துர்கையும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_03.html

குருவும் தட்சிணா மூர்த்தியும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/vs.html

Sunday, November 20, 2011

வறுமைக்கு மிஞ்சிய செல்வமில்லை

தாய்மொழியின் அடிப்படை இலக்கணம் நமக்கு ஜீன் வழியாவே வந்துருதுன்னு எங்கயோ படிச்சேன். குழந்தை கருவில் இருக்கும்போதே சொல் -பொருள் -வார்த்தை,வாக்கிய அமைப்புல்லாம் ஃபைனலஸ் ஆயிரும் போல.

நம்ம வாக்கிய அமைப்புகள்ள 99.99 சதவீதம் ஆக்டிவ் வாய்ஸாவே இருக்கும். ( இதுக்கு தமிழ்ல என்ன?)
உ.ம்: கலைஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினார்

இதை பாசிவ் வாய்ஸுக்கு மாத்தினா அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரால் கட்டப்பட்டது.

எனக்கென்னமோ இந்த ரெண்டு வாய்ஸுமே ஈகோயிஸ்டிக்கா இருக்குன்னுதான் தோனுது. மனித குலமே ஈகோயிஸ்டிக் தான். வாய்ஸும் அப்படித்தானே இழவெடுக்கும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரை கொண்டு தன்னை கட்டிக்கொண்டதுன்னு நான் சொன்னா பைத்தியக்காரத்தனமா நினைப்பிங்க. கால வெள்ளத்தின் ஓட்டத்தை - அதிலான சம்பவ கோர்வைகளை பார்க்கும் போது நான் சொன்னதுதான் கரெக்டுன்னு தோனுது. Read More

Saturday, November 19, 2011

உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்

அண்ணே வணக்கம்ணே,
சனிப்பெயர்ச்சி பலன்லாம் தந்தாச்சு. அதை வச்சு ஹிட்ஸ் அள்ள இருக்கிற ஒரே வழி பரிகாரங்கள் தான்.

உங்க ராசிக்கு சனி 3,6,10,11 ல இருந்தா பரிகாரம் தேவையில்லை. நீங்க இந்த பக்கத்தை மூடிட்டு டாட்டா காட்டிரலாம்.

மத்தவுக உங்க ராசிக்கு சனி எத்தனையாவது வீட்ல இருக்காருன்னு பார்த்து வச்சுக்கிட்டு ( உங்க ராசிக்கு சனி எத்தனையாவது ராசியில இருக்காருங்கறதை உங்க ராசிக்கு பக்கத்துல ப்ரா'க்கெட்'ல தந்திருக்கேன்.)அப்பாறம் அடியில உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி ஆடியோ கேளுங்க‌.

1. மேஷம் (7)
2. ரிஷபம்(6)
3. மிதுனம்(5)
4. கடகம்(4)
5. சிம்மம்(3)
6. கன்னி (2)
7. துலாம்(1)
8. விருச்சிகம்(12)
9. தனுசு(11)
10. மகரம்(10)
11. கும்பம் (9)
12. மீனம் (8)

பரிகாரங்கள் Vs நவீன பரிகாரங்கள்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கும் நம்ம வலைப்பூ/வலைதளங்களுக்கும் அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் டெவலப் செய்து பிரச்சாரம் செய்துவரும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும்.

வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

Thursday, November 17, 2011

ராசியா? லக்னமா?


ஜாதகத்தை அனலைஸ் பண்ணும்போது,தசாபுக்திகளுக்கான பலனை கணிக்கும்போது லக்னத்தையும்,கோசார பலனை கணிக்கும்போது ராசியையும் பேஸ் பண்ணிக்கனுங்கறது அடிப்படை விதி. அதே சமயம் ராசியாதிபதி,லக்னாதிபதி ரெண்டு பேர்ல ஆரு பலம்மா இருக்காய்ங்கனு பார்த்து ஒர்க் அவுட் பண்ணனும்னுல்லாம் நேத்து சொல்லியிருந்தேன்.

ஒரு வேளை ராசியாதிபதி -லக்னாதிபதி ரெண்டு பேரும் பலம்மா இருந்தா ஆரை பேஸ் பண்றதுன்னு சிண்டை பிச்சுக்கனும் -அனுபவத்தை வச்சுத்தேன் டிசைட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். இந்த மேட்டர்ல மொத பேஷண்ட் நாமதேன்.

நம்முது கடகலக்னம்,சிம்மராசி. லக்னாதிபதியான சந்திரனும் -ராசியாதிபதியான சூரியனும் பரிவர்த்தனம் அடைஞ்சிருக்காய்ங்களா.. ஒவ்வொரு சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சிக்கும் அது அனுகூலமா பிரதிகூலமான்னு சிண்டை பிச்சுக்கறதே வேலை.

ராசிய வச்சு பார்த்தா 3 ல சனி வேலை செய்யனும். லக்னத்தை வச்சுப்பார்த்தா 4 ல சனி வேலை செய்யனும். சமீபத்திய அனுபவங்களை வச்சுப்பார்த்தா ரெண்டுமே வேலை செய்யறது.

3-ல் சனி:

தினத்தந்தியில 2007 ஏப்ரல்ல சேர்ந்ததுலருந்தே வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் மகளுக்கு கொடுத்து விட்டாச்சு. அதனால கொஞ்சம் பொளச்சம். தினசரி தாதா மாமூல் கணக்கா காலை 30 மாலை 30 வாங்கி அதை மட்டும் அழிக்கிறது. அப்படியும் ரெண்டு தாட்டி பல்லு கட்டி மொக்கை. இப்பம் 3 ஆவது.

போன மாசம் (2-ல் சனி இருக்கிறச்ச) பொஞ்சாதியும் மகளும் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்க.மறு நாள் திரும்பிர்ரதா திட்டம். நமக்குன்னு பாப்பா ரூ.100 வச்சுட்டு போனாள். தாளி எதையாச்சும் உருப்படியா பண்ணா என்னன்னு வண்டியோட சைலன்ஸரை க்ளீன் பண்ண விட்டேன். அந்த பிக்காலி நம்ம தொப்பைய,முகத்துல தேஜஸை பார்த்து பார்ட்டி தாங்கும்டான்னுட்டு ஆயில் மாத்தினேன், ஸ்விட்சை மாத்தினேன்னு ரூ.300 க்கு பில்லை தீட்டி விட்டுட்டான். பல நாளைக்கப்பாறம் கை மாத்து வாங்கி சமாளிக்கவேண்டியதாயிருச்சு.

இதுவே சனிப்பெயர்ச்சிக்கப்பாறம் இதே போல ஒரு சந்தர்ப்பம் வந்தப்ப 400 ரூ வரை சர்ப்லஸ் பட்ஜெட்ல இருந்தம். பரவால்லடா மாப்ளே ராசிக்கு 3 ல சனி வேலை செய்றாருன்னு நிமிர்ந்தம். நம்ம பங்காளி ஜா.ராவுக்கு ஏதோ வேலை கிடைச்சுட்டாப்ல இருக்கு. பாவம் நேரமில்லை போல .வீக் எண்ட்ல மட்டும் கமெண்ட் போடறாரு

4-ல் சனி:
இந்த ஊட்டுக்கு பாடிகைக்கு வந்து 1 வருசமாகுது. வந்த நாளே ஊட்டுக்காரவுகளுக்கு நாம போட்ட கண்டிஷன் தனி மீட்டர் போட்டுரனுங்கறது.ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட். சரி ஒளிஞ்சு போவட்டும்னு நாமளே ரூ.2000 கொடுத்தம் ஏறப்போட்டு போட்டுருன்னுட்டம். இதுவரை ஒரு ம..ரும் நடக்கலை. இன்னைக்கு புதுசா தண்ணி விடமுடியாதுன்னுட்டாய்ங்க ( இதுக்கு அடிஷ்னல் சார்ஜு ரூ.300) .வண்டில சைலன்சர் ரெண்டு தாட்டி க்ராக்.கழட்டி -வெல்ட் பண்ணி மாட்டியிருக்கம். வீடு,வாகனம்லாம் நாலாவது இடம்தானே.

நம்ம ப்ளாகையும் ,சைட்டையும் (விதியில்லாம) பார்க்கிற சோதிடப்புலிகாள்! நீங்களே சொல்லுங்க. நமக்கு சனி 3 ல வேலை பார்க்கிறாரா? 4 ல வேலை பார்க்கிறாரா?

Wednesday, November 16, 2011

எந்த கிரகம் கொல்லும்?


அண்ணே வணக்கம்ணே !
பதிவுலகத்துக்கு வந்து 11 வருசம் ஆகுது ( 200,ஜூலை,31) ஓரளவுக்கு பேர் சொல்ல ஆரம்பிச்சும் பல காலம் ஆகுது ( 2009,மே) ஆனாலும் இந்த மேட்டரை டச் பண்ணவே இல்லை. எதைத்தான் விட்டுவச்சிருக்கம்.அதனால இதையும் இன்னைக்கு தோரஹா பண்ணிருவம்.அதாவது ஜாதகத்தில்
/கோசாரத்தில் எந்த கிரகம் கொல்லும் ,எந்த கிரகம் நன்மையை செய்யும்னு இப்பம் பார்த்துருவம்.

கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் இருக்கு. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ங்க அனுபவத்துல இதான் சரியா வருதுன்னு பல தடவை சொல்லியிருக்கேன். ஏனோ எந்த லக்னத்துக்கு எந்த கிரகம் நன்மை தரும் -தீமை தரும்ங்கற மேட்டருக்குள்ள மட்டும் போகவே இல்லை. அதை இப்ப பார்த்துரலாம்.

அதுக்கு மிந்தி ஒரு விஷயம் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது 2,3,7,8,12 ஆம் பாவங்கள் மாரகஸ்தானங்கள்னு சொல்றாய்ங்க. மாரகம்னா தெரியும்ல. மரணம். ஜோதிடப்படி மரணம் -சிறை -அவப்பேர் -ஐ.பி போடறது -அண்டர் கிரவுண்ட் போறது இது எல்லாமே சமம் தான்.

இவை 2,3,7,8,12 பாவ காரகத்வத்தால நடக்க அதிகமான வாய்ப்பிருக்கு.அதனாலதேன் இவற்றை மாரகஸ்தானம்னு சொல்லிவச்சாய்ங்க.

2.தனஸ்தானம்:
சத்யம் ராமலிங்கராஜூவை உள்ளே அனுப்பினது இந்த கொடுக்கல் வாங்கல் மேட்டருதேன். வராத லாபத்தை வந்ததா காட்டி தில்லாலங்கடி பண்ணாரு ஞா இருக்குல்ல.

2 : வாக்குஸ்தானம்:
வை.கோ ,சீமான்லாம் சகட்டு மேனிக்கு பேசித்தானே உள்ளாற போனாய்ங்க

2.குடும்பஸ்தானம்:
கனிமொழியை செயிலுக்கு அனுப்பினது குடும்பம்தானே

3.சகோதர ஸ்தானம்:
நிறைய அரசியல்வாதிங்க தாங்கள் நேரிடையா செய்யமுடியாத மேட்டரையெல்லாம் சகோதரர்களை வச்சு செய்றது ஃபேஷன். அப்பாறம் ஆப்படிச்சுக்கறதும் ரொட்டீன். உ.ம் ஆற்காடு வீராசாமி , ஆந்திராபக்கம் வந்தா எங்க சி.எம் கிரண்

3.தைரிய ஸ்தானம்:
அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைங்கற பஞ்சை மறந்துட்டு "வேணம்னா இந்திராகாந்திக்கு விதவை பென்ஷன் தரோம் வரச்சொல்லுங்க"ன்னுட்டு எமர்ஜென்ஸி காலத்துல பல்பு வாங்கினவுகளை கேளுங்க.விவரமா சொல்வாய்ங்க.

7.களத்ர ஸ்தானம்: (ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்)
ராஜீவ் கெட்டது நண்பர்களாலே,ஜெ கெடப்போறது நண்பியாலே, என்.டி.ஆர் கெட்டது காதலாலே, கலைஞர் கெட்டது பார்ட்னராலே (கலைஞரும் -எம்.ஜி.ஆரும் எதை எதையோ ஷேர் பண்ணிக்குவாய்ங்களாமே -அப்பம் பார்ட்னர்ஸ்தானே)

8.ஆயுள் பாவம்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம் இதை எல்லாம் காட்டும் இடம் ஆயுள்பாவம். இதுகளால கெட்டவுக மஸ்தா பேரு கீறாய்ங்க. வேணம்னா ஒரு லிஸ்டை நீங்களே ப்ரிப்பேர் பண்ணுங்க.

12.விரயபாவம்:
ஆனமுதலில் அதிகம் செலவானால் பாட்டு தெரியுமா? வரவு எட்டணா செலவு பத்தணா பழமொழி தெரியுமா? ஸ்ரீ தேவி திவாலாகி /கணவரையும் திவாலாக்கின கதை தெரியுமா? ப்யூட்டி பார்லருக்கே கோடிகளை செலவழிச்சாய்ங்களாம். லேட்டஸ்ட் உதாரணம் விஜய் மால்யா.

ஆகவே இந்த பாவங்கள்/பாவாதிபதிகள் கெடுவது,பலகீனப்படுவது நெல்லது பாஸ்.

1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய,சனி சேர்க்கை தொடர்பு ஏற்பட்டா கால்ஷிய குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் வரலாம், மேலும் இது அப்பாவுக்கும் அப்பாவுடனான உறவுக்கும் நல்லதில்லை, குரு சனி சேர்க்கை ஏற்பட்டா வயிறு இதயம் பிரச்சினைய கொடுக்கும்.ஜாதகர் பெரியாரிஸ்டா மாறும் வரை வறுமை தனிமை வாரிசின்மை எல்லாம் வாட்டும்.

சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் - இந்த சேர்க்கை 6,8,12 போன்ற துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)

புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.

எப்டி எப்டின்னு கேப்பிக.சொல்றேன். மேஷ லக்னத்துக்கு சனி 10,11 க்கு அதிபதி புதன் 3,6 க்கு அதிபதி.

உதாரணமா சனி 2 ஆவது இடத்துல நின்னா அவரு லாபஸ்தானாதிபதிங்கறதால வீண் பேச்சு (அதுவும் நம்ம ப்ளாகோட பேரு மாதிரி பட்டவர்த்தனமா நிர்வாண உண்மைகளை பேசி ரெட் கார்டு வாங்கலாம், அல்லது ரெண்டு ஃபேமிலின்னு ட்ரபுள் கொடுக்கலாம்.

அல்லது அவர் ஜீவனஸ்தானாதிபதிங்கறதால ச்சொம்மா பேசிக்கிட்டிருந்தா போதும் அதான் நம்ம வேலைங்கற மென்டாலிட்டி வந்துரலாம்.அல்லது தன் தொழில் ரகசியங்களை கூட உளறிக்கொட்டி தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கலாம்.

பொதுவாவே சனி ரெண்டுல நின்னா ஆப்புதேன். ( நம்ம கேஸையே பார்க்கறிங்கள்ள - சனி 3 க்கு பெயர்ந்தும் அப்பப்போ தடுக்குது) மேலும் பேமெண்ட் எல்லாம் டிலே ஆகும்.குடும்பத்துல ஒரு விதமான சோம்பல் -வறுமை நிலை இருக்கலாம்.

( கிருஷ்ணா ! திருத்தியாச்சு.ஓகேவா )

இப்படியே 3,7,8,12 ல சனி இருந்தா என்னெல்லாம் தீமை நடக்கும்னு கெஸ் பண்ணிப்பாருங்க. கமெண்டா போட்டாலும் ஓகே.

2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.

சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.

சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.

மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.

சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் பவர் கட் நேரம் நெருங்குதே. அதனால அடக்கி வாசிக்கிறேன்.

3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.


4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.

8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)

சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி - 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கைய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ - அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.


எச்சரிக்கை:
(இந்த விதிகளை ஜாதகத்துக்கு ,தசாபுக்திகளுக்கு மட்டுமில்லே கோசாரத்துக்கும் அப்ளை பண்ணலாம்.ஆக்யுரேட் ரிசல்ட் கடிக்கும். அடச்சே கிடைக்கும். இந்த விதிகளை கோசாரத்துக்கு அப்ளை பண்ணும்போது ராசியை அடிப்படையா வச்சுக்கறது நல்லது . ராசியாதிபதி-லக்னாதிபதிகளுக்கிடையில் பரிவர்த்தனம் அ ரெண்டுபேருமே ஆட்சி ,உச்சம் மாதிரி அமைப்புகள் உங்க ஜாதகத்துல இருந்தா சிண்டை பிச்சுக்க வேண்டியதுதான். ஆனால் உங்க அனுபவப்படி ராசி வேலை செய்யுதா லக்னம் வேலை செய்யுதான்னு கண்டுக்கிடலாம்.கவலை வேண்டாம்)

Tuesday, November 15, 2011

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்: 2


அண்ணே வணக்கம்ணே!
ரெண்டு நாளைக்கு மிந்தி ஜாதகம் இல்லாதவுக தங்கள் பிரச்சினைகளை வைத்தே அந்த பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க ஒரு பதிவு போட்டோம். நேத்து பிரச்சினைக்கு காரணம்சூரியன்,சந்திரன்,செவ்வாய்னு தெரிஞ்சா செய்துக்கவேண்டிய பரிகார பேக்கேஜையும் தந்திருந்தம்.

இன்னைக்கு உங்க பிரச்சினைக்கு காரணம் ராகு,குரு,சனி,புத,கேது,சுக்கிரன்னு தெரிஞ்சா செய்துக்க வேண்டிய பரிகாரங்களை பதிவா போட்டிருக்கம்.

உங்க பிரச்சினைக்கு காரணம் ராகுவா?

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்

உங்க பிரச்சினைக்கு காரணம் குருவா?
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

உங்க பிரச்சினைக்கு காரணம் சனியா?

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

உங்க பிரச்சினைக்கு காரணம் புதனா?
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.


உங்க பிரச்சினைக்கு காரணம் கேதுவா?

1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உங்க பிரச்சினைக்கு காரணம் சுக்கிரனா?

உங்க பிரச்சினைக்கு காரணம் சுக்கிரனா?

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

Monday, November 14, 2011

உயிரை பறித்த பரிகாரம்: திகீர் அனுபவம்

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்: 2

அண்ணே வணக்கம்ணே .. நேத்து பவர் கட்டோட டக் அஃப் வார் செய்து ஒரு பதிவு போட்டம். மேட்டரு இன்னாடான்னா ஜாதகம் இல்லாமயே நமக்கு வர்ர/வந்த பிரச்சினைகளை வச்சு மேற்படி பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கறதுதேன்.

உங்க பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கினவுங்க இங்கே கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்ய ஆரம்பிங்க. நோயை விட சில நேரம் ட்ரீட்மென்டே பயங்கர லொள்ளு பண்ணிரும். அதனால பரிகாரங்களை ஸ்டார்ட் பண்றதுக்கு மிந்தி எப்போ -எப்பூடி ஸ்டார்ட் பண்றதுங்கற டிப்ஸை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிற ப்ளேயரோட ப்ளே பட்டனை அழுத்தி முழுசா கேட்டுருங்க.

சகட்டுமேனிக்கு செய்து சீன் ரிவர்ஸ் ஆயிட்டா நாம பொறுப்பு கடியாதுங்கோ

1.உங்க பிரச்சினைக்கு சூரியன் காரணம்னா :

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்/கேட்கவும் சொல்லும்போது தொப்புள் பகுதியில் இருந்து த்வனி புறப்படனும்.( அப்படி கற்பனை பண்ணுங்க)
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
7.படுக்கைக்கு முன் -டேபிள் கண்ணாடியின் கீழ் சூரியோதய காட்சி கொண்ட போஸ்டர் வைத்து அதை இமைக்காது பார்த்து மனதில் பதிக்கவும். தூங்கும் முன் தூங்கி எழுந்தபின் அக்காட்சியை மனதில் கொண்டுவரவும்.
8.காலை மாலை வெயில் உடல் மேல் படும்படி வாக் பண்ணவும்.
குறிப்பு:கிரகங்களின் காரகத்வங்களை அறிய நாளை வரை காத்திருக்கவும்.(ஸ் அப்பாடா நாளைய பதிவுக்கு இப்பமே கர்ச்சீஃப் போட்டாச்சு)
2.உங்கள் பிரச்சினைக்கு காரணம் சந்திரனானால்:

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).ஜாலியா அப்படி நடந்துட்டும் வரலாம்

2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.

7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.

9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

11.படுக்கைக்கு முன் -டேபிள் கண்ணாடியின் கடல்+சந்திரன் இணைந்த காட்சி கொண்ட போஸ்டர் வைத்து அதை இமைக்காது பார்த்து மனதில் பதிக்கவும். தூங்கும் முன் தூங்கி எழுந்தபின் அக்காட்சியை மனதில் கொண்டுவரவும்.

உங்கள் பிரச்சினைக்கு காரணம் செவ்வாய் என்றால்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

( மற்ற கிரகங்களுக்கான பரிகாரம்+காரகத்வங்கள் அடுத்த பதிவில்)

இப்பம் ப்ளேயர் -எச்சரிக்கைகள்.உசாரய்யா உசாரு..டோட்டல் சைட்ஸ் உசாரு.

Sunday, November 13, 2011

ஜாதகம் இல்லாதவுக : பிரச்சினையும் காரணமும்

ஜாதகம் இல்லாதவுக தங்களோட பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு ஒரு குன்ஸா தெரிஞ்சுக்க இன்னைக்கு சிறப்பு பதிவு போட்டிருக்கம். பவர் கட் ஆற நேரம் அதனால டெக்ஸ்ட் குறைவு. ஆடியோ பதிவை கேட்க கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்துங்க.

பிரச்சினைக்கு காரணமான கிரகத்துக்குண்டான பரிகாரத்தை நாளைக்கு டெக்ஸ்டாவே தந்துர்ரன் தூள் பண்ணுங்க

Friday, November 11, 2011

நான் ஜோதிடனான கதை



அண்ணே வணக்கம்ணே !
நம்ம வலைப்பூவிலும் - வலை தளத்திலும் படித்த அதே பேச்சுத்தமிழை நீங்க இங்கேயும் எதிர்பார்த்தா அது உங்கள் தவறு அல்ல. அடுத்த பத்திய படிச்சுட்டு பயந்துக்காதிங்க . முன்னுரையும் ஒரு சில சமாசாரங்களும் மட்டும்தேன் லேசு பாசான இலக்கண தமிழ் மற்ற படி நூல் முழுக்க பேச்சுத்தமிழ்தேன். உடுங்க ஜூட்!

ஜோதிடம் 360 டிகிரி என்ற இந்த நூலுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. இதுல நாம சோசியரானது எப்படிங்கற கதையும் அடக்கம். ( நம்ம எழுத்துக்களின் நெடு நாள் வாசகர்களுக்கு இது ரெம்ப ஓல்ட் நியூஸுதேன்)

முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கல்யாண கதை அவர் சொன்னபடியே அல்பாயுசில் முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான்.

அவர் பெயர் ராமசாமி. அக்மார்க் நடைபாதை ஜோதிடர். வயசான கட்டை. அவர் மேட்டர் புட்டுக்கும்னு சொன்ன போது "அதையும் பார்த்துரலாம்"னு நான் வீம்பா நினைச்சது நிஜம். கடேசி கணம் வரை அவரோட கணிப்பை பொய்யாக்க ட்ரை பண்ணதும் நிஜம் ஆனால் அவரோட கணிப்புத்தான் ஜெயிச்சுது.

பை பர்த் நமக்கு ஈகோ சாஸ்தி. இன்னாங்கடா இது நாம உடம்பெல்லாம் மூளைய வச்சிட்டு இருக்கோம்.சனம் என்னவோ நம்மை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு தூக்கறாய்ங்க.ஆஃப்டர் ஆல் ஒரு மரத்தடி சோசியனுக்கு நம்ம ஃப்யூச்சர் தெரிஞ்சிருக்கு. நமக்கு தெரியலின்னா எப்டின்னு கேள்வி ஆரம்பிச்சுருச்சு.

அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம். நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வீடு திரும்பிய சிறுவன் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?

அப்பம் சோசியம் கத்துக்க நமக்கு குருவா இருந்ததும் -ஓரளவு சப்ஜெக்ட் தெரிஞ்ச பிற்காடும் ஹேண்ட் புக் கணக்கா கை கொடுத்ததும் லிஃப்கோ பப்ளிகேஷன்ஸாரின் "குடும்ப ஜோதிடம்"தான். அதுல ஒவ்வொரு பாவாதிபதியும் லக்னாத் துவாதச பாவங்களில் நின்றால் என்ன பலன்னு பத்தி பத்தியா கொடுத்திருந்தாய்ங்க.

மத்தவுக அப்படியே பை ஹார்ட் பண்ணி ஒப்பேத்துவாய்ங்க போல. நமக்கு அது முடியாத காரியம். ஆறாங்கிளாஸ்லயே இங்கிலீஷ் அசைன்மென்ட் கேள்விக்கு கூட சொந்த வார்த்தையிலதான் பதில் எழுதி பழக்கம்.

எனவே இந்த பலனுக்கெல்லாம் இன்னாதான் பேசிக்னு நோண்ட ஆரம்பிச்சேன்.ஸ்பார்க் ஆயிருச்சு. அசலான மேட்டர் வெளிய வந்துருச்சு.ஒரு சில அடிப்படையான விஷயங்களை தவிர மற்ற எந்த விதிகளையும் மனப்பாடம் பண்ற சமாசாரமே கடியாது. எல்லாம் "சொந்த கதைதேன்" "நாட்" பிடிப்பட்டு போனா கதை சொல்றது கஷ்டமா என்ன?

தமாசு என்னடான்னா மேற்படி குடும்பஜோதிடம் வருசா வருசம் ரீ ப்ரிண்ட் ஆகுமே தவிர மறுபதிப்பு/திருத்தப்பட்ட பதிப்புங்கற பாவத்தே கிடையாது.அதை பார்க்கிறப்பல்லாம் ஒன்னாங்கிளாஸ் வாத்யாரை பார்த்தாப்ல பரிதாபமா இருக்கும்,..

ஒரு தாட்டி பாஸ் கொஞ்சமா அப்டேட் பண்ணலாம்ல -வேணம்னா நான் பண்ணித்தர்ரேன்னு லெட்டர் கூட போட்டேன்.அதுக்கு அவிக "ஐயா.. நீங்க அப்டேட் பண்ணலாம். ஆனா அதை சரி பார்க்க அந்த காலம் மாதிரி எங்க கிட்டே ஆள் கிடையாதே"னு பதில் போட்டாய்ங்க. ஹும் கலிகாலம்!

இப்படில்லாம் கு.ஜோ வை நக்கலடிச்சாலும் அதுல முன்னுரையில படிச்ச ஒரு வரி மட்டும் நம்ம மனசுல பச்சக் " ஃபூல்ஸ் ஒபே தி ப்ளேனட்ஸ்.பட் தி க்ளெவர் கண்ட்ரோல் தெம்"

முட்டாள்கள் கிரகங்களுக்கு கீழ் படிகிறார்கள்.அறிவாளிகள் அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். தூளா இருக்கா இல்லியா?

பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் காலப்போக்கில் கால தேச வர்த்தமான மாற்றங்களால் அவை இன்றைய தேதிக்கு உப்புக்கு சப்பாவாக மாறிவிட்டிருப்பதையும் புரிந்து கொண்டேன்.

ஒரு சில ஜோதிடர்களின் "அஜீஸ்மெண்ட்"களால் அவை யாவும் நீர்த்து அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.

பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின. டர்ராகி எழுதுவித்த அனைத்தையும் தீக்கிரையாக்கிவிட்டேன்.

பின்பு அதே விஷயம் மறுபடி எழுதப்பட்டு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.
பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.

2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். மேலாளர் நம்ம சப்ஜெக்டை கேட்டுவிட்டு ஆசிரியர் கிட்டே பேசுங்க தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவினார். சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்தேன். அது ஜோதிட பூமி மாத இதழில் தான் முழுமையாக வெளிவந்தது பரிகார காண்டம் முடிஞ்சதா?

பாரதியார் சொன்னாரே " சென்றிடுவீர் எட்டுத்திக்கும்"னு அதைப்போல ஒரு ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல எத்தனயோ டேட்டா தேவைப்பட்டுது. அதையெல்லாம் நான் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்துக்கிட்டே வந்தேன். அதெல்லாம் ஆக்சிடென்டலா ஷேப் அப் ஆகி ஒரு "முறை"யே உருவாயிருச்சு.

படக்குன்னு நான் போய் சேர்ந்துட்டன்னு வைங்க அதெல்லாம் காலி. இதுக்கப்பாறம் சோசியம் கத்துக்கறவனும் நம்மை போலவே வாழ்க்கைய தொலைச்சுத்தான் கத்துக்கனும்.குருவி மாதிரி தான் சேர்க்கனும். அப்படியில்லாம நம்ம மைண்ட்ல இருக்கிற டேட்டா பேஸை கேப்ஸ்யூல் வடிவத்துல பத்திரப்படுத்தினா என்னங்கற "நெல்ல" எண்ணம் பலகாலமாவே இருந்தது.

அந்த எண்ணம் செயலாக இணையம் ஒரு கருவியாக உதவியது. சிறுவாடு பணத்தை போல நாளொரு பதிவு ,மாதமொரு மினி தொடர்னு ஒரு பெரிய டேட்டா பேஸ் உருவானது. புதிய பதிவே போடலின்னாலும் பழைய பதிவுகளையே குறைஞ்சது ஆயிரம் பேர் தினசரி படிக்க ஆரம்பிச்சாய்ங்க.

2009 ,மே மாசத்துலருந்து இந்த நூல் வெளிவர்ர 2011 ,ஜனவரிக்குள்ள 5 லட்சம் ஹிட்ஸ் நிச்சயம் கம்ப்ளீட் ஆகியிருக்கும். ( இன்றைய தேதிக்கு டோட்டல் ஹிட்ஸ் : ?????????????) அப்பத்தான் நாம எழுதினதுலயும் விஷயம் இருக்குடி மாப்பிள்ளேன்னு மரமண்டைக்கு உறைச்சது.

அதனாலதான் இந்த புஸ்தவம் வெளிவருது. அதுவும் நம்ம எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைர் ஆனவுக முன் கூட்டி காசு கொடுத்து முன்பதிவு செய்துக்கிட்டிருக்காய்ங்க. கைக்காசு பாங்குல இருக்கு. சின்னதா மார்க தர்சியில லட்ச ரூபாய்க்கு ஒரு சீட்டு போட்டிருந்தம். அது கேப்பார் மேய்ப்பார் இல்லாத சந்தர்ப்பத்துல ரூ.87 ஆயிரத்து சில்லறை கைக்கு வந்தது. என்ன ஒரு வில்லங்கம்னா பெத்த கடனிருக்கே. அதை செட்டில் பண்ணனுமே. மகள் கண்ணாலத்துக்கு சேர்த்த பணத்தை வச்சு புஸ்தவம் போட்டு புகழ் தேடறது கேணத்தனமில்லையா?

அதனாலதேன் இந்த முன் பதிவு திட்டம்.

Thursday, November 10, 2011

அடுத்த பிரதமர் மோடியா? : ஜோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு டபுள் தமாக்கா. ஜோசியராக ஆசையான்னு நேத்து ஒரு மினி தொடரை ஆரம்பிச்சம். அதை 1,112 + 400 = 1,512 பேர் படிச்சாய்ங்க இன்றைய பதிவோட தலைப்பை படிச்சுட்டு என்னடா இது அதுக்குள்ளார முருகேசன் ட்ராக் மாறிட்டாருன்னு நொந்துக்காதிங்க. இன்னைக்கு நரேந்திர மோடியோட ஜாதக கணிப்பை எடுத்துக்கிட்டாலும் இந்த பதிவுல ஜோசியராக ஆசைப்படறவுகளுக்கு தேவையான டிப்ஸ் ஏராளமா கொட்டிக்கிடக்கு.

அதனாலதான் சொல்றேன். இன்னைக்கு டபுள் தமாக்கா. பதிவை கேட்க கீழ்காணும் ப்ளேயரில் உள்ள ப்ளே பட்டனை அழுத்துங்க. நெட் ஆக்சஸ்ல பிரச்சினை இருந்தா இங்கே அழுத்தி டவுன் லோட் பண்ணி கேட்டுக்கங்க.

உடுங்க ஜூட்.

ஜோதிடராக ஆசையா? இன்றே இப்போதே ஆகலாம்


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். உபரி தகவல் என்னன்னா இந்த மேட்டர் எல்லாம் நம்ம புஸ்தவத்துல பாய்ண்ட் டு பாய்ண்ட் வரப்போகுது.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. ஆயிரம் புஸ்தவம் படிச்சா வர்ர தெளிவு ஒரு நூறு ஜாதகத்தை பார்த்தா வந்துரும். அதுக்கு சில அடிப்படைகளாவது தெரியனும்ல. எனவே இந்த ஜோதிடராக ஆசையா வரிசையில வரப்போற ஆடியோ பதிவுகளை தொடர்ந்து கேளுங்க.

பதிவை கேட்க கீழ்காணும் ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்துங்க. நெட்ஸ்பீட் இல்லாதவுக டவுன் லோட் பண்ணிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

Tuesday, November 8, 2011

அணு உலைக்கு கலாம் ஆதரவு : காலம் செய்த கோலம்


கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். இயங்கவும் ஆரம்பித்துவிடும். என்னைக்கோ சுனாமியோ பூகம்பமோ வந்தா சனம் கொத்தா சாவாய்ங்க. இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம்லாம் சோனி. நிக்காது.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும்.

காந்தி ராம ராஜ்ஜியம்னு பேசினாலும் கிராம ராஜ்ஜியத்துக்கு வாதாடினது இந்த மாதிரி இழவெல்லாம் கிராஸ் ஆகக்கூடாதுன்னுட்டுதேன். ஒரு தர்ப்பைய மாப்பிள்ளைன்னு சொல்லி எடுத்து போட்டாலே அது ஏகத்துக்கு சிலும்புமாம்.

இதுல அரசு -ஆட்சியாளர்களை பத்தி சொல்லவே தேவையில்லை. அதிகாரம் எந்தளவு பரவலாக்கப்படுதோ அந்தளவுக்குத்தேன் ஜன நாயகம் - மனித உரிமைகள், மண்ணாங்கட்டி குதிரை முட்டைல்லாம் பேர் சொல்லும்.

இந்தியாவை பொருத்தவரை மானில அரசெல்லாம் சத்திரத்துல சாப்பிட வந்த ரேஞ்சுதேன். வந்தியா சாப்பிட்டியா போனு இருந்தா சரி. இல்லின்னா ஊட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.

இந்த அழகுல மாநகராட்சி, நகராட்சி,ஊராட்சி,பஞ்சாயத்து ஒன்றியம் பத்தியெல்லாம் சொல்லனுமா என்ன? இந்தியாவோட அணு ஒப்பந்தம் - அணு கொள்கை பிரதமர் மந்திரிகள் இத்யாதியினரோட பேச்சு கூட நம்மை அந்த அளவுக்கு இர்ரிட்டேட் பண்ணலை.

தாளி நாடு போற்றும் நல்லவர் அப்துல் கலாம் நள்ளிரவு உலையை பார்க்கிறதென்ன கரண்டி விட்டு நாலு பருக்கைய நசுக்கி பார்த்து " அட சூப்பரா வெந்திருக்கு வடிச்சுரவேண்டியதுதான்னு சொல்றதென்ன? இதான் நம்மை பைல்ஸ் நோயாளி மாதிரி ஆக்கிருச்சு.

கலாமை நாம என்னைக்குமே நம்பினதில்லை ( இப்பமும் பூத் கேப்சர் பண்ற கவுன்சிலரை வேணம்னா நம்பினாலும் நம்புவமே தவிர பியூராக்ரெட்ஸை மட்டும் நம்பறதாவே இல்லை).ஆனா சாமானிய சனம் கலாமை எப்படில்லாம் கொண்டாடினாய்ங்கன்னு நினைச்சா வா.வெ.

இன்னைக்கு பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு -சாயம் வெளுத்துருச்சு -கலாமோட அசலான ரேஞ்சு என்னனு புரிஞ்சுருச்சு. இப்பமும் புரிஞ்சிக்கிடாதவுகளுக்காவ 2009, செப்டம்பர்,29ல நாம போட்ட பதிவு ஒன்னை ட்ரிம் பண்ணி இங்கன தர்ரேன்.

கண்ணுள்ளவர் பார்க்கக்கடவர். கிட்னி உள்ளவர் புரிந்துகொள்ளக்கடவர். ( இந்த பதிவை படிச்சுட்டு கலாமை புரிஞ்சிக்கனும்னா மூளைல்லாம் தேவையில்லை தலை. கிட்னி போதும்)

ஜனாதிபதி ஆன கதை:

கலாம் மட்டும் ஒரு முஸ்லீம் தம்பதிகளுக்கு பிறக்காம இருந்திருந்தா ஜனாதிபதி என்ன கவர்னரா கூட ஆகியிருக்க முடியாது. அன்னைக்கு பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ வுக்கு ஒரு மதச்சார்பற்ற முத்திரை தேவைப்பட்டுது, கலாமை ஆப்ட் பண்ணாய்ங்க. தங்களுக்கு மெஜாரிட்டி இல்லாத குறைக்கு கூட்டணியிலான கட்சிகளை + காங்கிரசை தாஜா பண்ணியே தீரனும்ங்கற காலத்தின் கட்டாயத்தால கலாமை சகிச்சுக்கிட்டாய்ங்க தட்ஸால்.

உலகமே போற்றும் மனிதரை விமர்சிப்பது ஒரு மனோ வியாதி என்று சைக்காலஜி சொல்கிறது. ஆனால் நான் சைக்காலஜியையோ, என் சமகாலத்தவர்களையோ கருத்தில் வைத்து எழுதுவதில்லை. நாளை ஒருவன் வரப்போகிறான். அவன் மனதில் கடந்த நூற்றாண்டுகளின் வாசனை கூட இருக்காது. அவன் இன்றைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் எடை போட இருக்கிறான். வைர முத்து சொன்னது போல் "பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கிலிடப்போகிறான்.

இன்று நாம் உடன் கட்டையேறுதல், விதவைக்கு மொட்டை போடுதல் இத்யாதியை எப்படி காட்டுமிராண்டி தனம் என்று கொதிக்கிறோமோ.. அதே போல் இன்றைய நமது முற்போக்கான (?) எழுத்துக்களை நாளை வரப்போகிறவன் காட்டுமிராண்டித்தனம் என்று காட்டுக்கூச்சல் போடப்போகிறான்.

இன்று நாம் யார் பிரதமர், யார் முதல்வர், யார் என்ன ஜாதி, செய்தித்துறை மந்திரியில் சின்ன வீடு எந்த ஜாதி, அவர்கள் வீட்டு ட்ரைவர் என்ன ஜாதி, மாவட்ட பி.ஆர்.ஓ யார் என்றெல்லாம் கணக்கு போட்டு எழுதுகிறோமே..இந்த எழுத்துக்களை , இவை அச்சான காகிதங்களை கறைபடிந்த கேர்ஃப்ரீயை விட கேவலமாக தூக்கி போட்டு எரிக்கப்போகிறார்கள். நாலு பேரில் நாராயணா என்று கோசம் போட என்னால் முடியாது. எனவே தான் இந்த பதிவு.

சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமை அமெரிக்க அதிகாரிகள் சோதனை போட்டதை பத்திரிக்கைகள் தீவிரமாக விமர்சித்து எழுதியிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த விசயத்தில் மக்கள் வழியே என் வழி. கலாமே அல்ல சித்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திராட்சை விற்கும் சலாமுக்கு இந்த நிலை ஏற்பட்டாலும் நான் கண்டிப்பேன்.

அதே சமயம் நான் அறிவிக்கிறேன் பதவி சுகத்துக்கு குலாம்(அடிமை) அப்துல் கலாம். அரசுகளின் கடைக்கண் பார்வைக்காக எந்த "புரோக்கர்" வேலையை செய்யவும் தயாரா இருக்கிற ஆசாமி ( உ.ம்: அணு ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் தலைமையிலான அரசை காக்க முலயம் சிங் - அமர்சிங் கிட்டே பேச்சு நடத்தினது.

நான் மற்றெந்த அரசியல்வாதியையும்(இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை கண்டு கொள்ளாதவர்களை கூட பெரிதாய் விமர்சித்ததில்லை. காரணம் அவர்கள் புலிகள்.(தமிழ் புலிகள் அல்ல) மக்கள் ரத்தம் குடிக்கும் புலிகள். நான் கவலைப்படுவது கலாம் போன்ற பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றித்தான்.

பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம் என்பதை நான் என்றோ அறிவேன். ஆனால் உலகம் அவரை ஆதர்ச புருஷராக கொண்டாடியது. இதற்கு பார்ப்பன ஆதிக்கம் மிக்க மீடியாவும் ஒரு காரணம். மைனாரிட்டி வர்கத்தை சேர்ந்த கலாமுக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் தம் சுயமுகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும்,குற்ற மனப்பான்மையிலும் என்.டி.ஏ சர்க்கார் காலத்தில் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது.

அவர் கிழித்தது என்ன? அவர் நெனச்சிருந்தா கருணை மனுவை ஏற்றிருந்தால் பேரறிவாளன்,முருகன்,
சாந்தனுக்கு கயிறு தப்பியிருக்காதா?

அட அவர் பொறந்த ஏரியாவ சேர்ந்த மீனவர்களை இலங்கை ராணுவம் கொத்து பரோட்டா போடறது அந்த மன்சனுக்கு தெரியாதா என்ன? வாயை திறந்தா ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வை விலகிருமே.

என்னதான் நாடு முன்னேறினாலும் அச்சில் வந்ததெல்லம் உண்மை என்று நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். (ஒரு வழக்கில் ஆந்திரஹை கோர்ட்டு நீதிபதி முன்பு பத்திரிக்கை கட்டிங்குகளை ஆதாரமாக சம்ர்ப்பித்தபோது அவர் ரூபாய் செலவழித்தால் எந்த செய்தி வேண்டுமானாலும் பத்திரிக்கையில் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொன்னாராம்.)

எனவே பத்திரிக்கைகளில் கலாம் பற்றி பத்திரிக்கைகளில் படித்தவற்றை மறந்து விட்டு (தற்காலிகமாகவேனும்) இந்த பதிவை படியுங்கள்.நிற்க..கலாம் கதைக்கு வருவோம். அரசுத்துறை நிறுவனங்கள்,அவற்றில் நிலவும் சிகப்பு நாடாத்தனம்.ஊழல் குறித்து அறியாதவர்கள் இல்லை. ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் யாதொரு முரண்பாடும் இல்லாது நீண்ட காலம் பணியாற்றியதை கொண்டே கலாமின் ஜாதகத்தை கணித்துவிடலாம்.

சரி ஒழியட்டும் இவர் உந்துதலில் அரசு செய்த அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தவர்கள் மறக்க முடியுமா? இதையும் மேரா பாரத் மகான் கோஷங்கள் மழுப்பிவிட்டன.

இதுகூட போகட்டும்..நான் எளிமையானவன்,அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளும் கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும். செய்தாரா இல்லை.(ஒரே ஒரு அறையை உபயோகித்துக்கொண்டாராம். பஸ் நிலையத்து நாற்றம் பார்த்து பயணிகள் மூக்கைப்பொத்திக்கொண்டால் புரிந்து கொள்ளலாம் . மேயரே அந்த வேலையை செய்தால். மற்ற 1999 அறைகளை கலாம் உபயோகிக்காத மாத்திரத்தில் அரசுப்பணம் மிச்சமாகிவிட்டதா ? ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.)


அதுவும் ஒழியட்டும் அந்த மாளிகையின் வியர்த்த செலவுகளையாவது பாதிக்கு குறைத்திருக்க வேண்டாமா? கு.ப. அதை மாறுபட்ட,ஆக்கப்பூர்வமான வழிகளில் உபயோகித்திருக்கலாமே. இன்று கணக்கெடுக்க சொல்லுங்கள் ஜ.மாளிகையில் கலாமை சந்தித்த பிர‌முகர்களை..இதில் வயிறு நிறைந்தவர்கள் எத்தனை பேர்? பார்ப்பன அ.ஜீவிகள் எத்தனை பேர்,ஆளும்,அதிகார வர்க முதலைகள் எத்தனை பேர்?

பீகார் சட்டமன்ற கலைப்பு விவகாரம் ஒன்று போதுமே கலாம் பதவி சுகத்துக்கு குலாம் என்பதை நிரூபிக்க.எம்.பி.க்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார்கள்..தொகுதி நிதியில் விளையாடினார்கள் .கலாம் கழட்டியது என்ன?

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கு.ப.உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டவாவது செய்தாரா? இல்லை.
சரி ஒழியட்டும் வந்த மாதிரியே போயிருந்தாலும் மன்னித்திருக்கலாம். போகும்போது ஆந்திரத்து தந்திர பாபு(அச்சுப்பிழையல்ல) இவரை மீண்டும் ஜானாதிபதியாக போட்டியிட கோரியபொது வெற்றி நிச்சயம் என்றால் ஓ.கே என்று வாயை விட்டார்..பின் ஜ.மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டு மேலுதட்டில் பட்ட மண்ணை துடைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

என்ன ஒரு ஆறுதல் என்றால் இன்றைய ஜனாதிபதி போல் கலாம் மணமானவர் அல்ல. கலாமின் மனைவி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கவில்லை தட்ஸ் ஆல்.

( எச்சரிக்கை: இந்த பதிவின் மீதான சக பதிவர்களின் கமெண்டுகளையும் படிக்க விரும்புவோர் இங்கே க்ளிக் பண்ணுங்க)

Monday, November 7, 2011

பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே - இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க.

அப்படியல்லாது பொருளாதார முடக்கத்துக்கு பரிகாரம் எங்கய்யானு உணர்ச்சி வசப்படற பார்ட்டியா இருந்தா இந்த பதிவோட கடேசியில ஒரு ப்ளேயர் இருக்கும். அதுல ப்ளே பட்டனை அழுத்தி பரிகாரங்களை கேட்டுக்கிட்டு கழண்டுக்கங்க.

உங்களோட நெட் கனெக்சன் ஸ்லோவா இருக்கும்னா இங்கே அழுத்தி டவுன்லோட் பண்ணி கேட்டுக்கோங்க

சோசியங்கறது கடல். நம்ம கிட்டே இருக்கிறது ஒரு சின்ன டெஸ்ட் ட்யூப் நிறைய அந்த கடல் நீர் மட்டும் தேன் .அதுல கொஞ்சம் லாஜிக்,கொஞ்சம் பகுத்தறிவு,கொஞ்சம் மனிதம்லாம் போட்டு வச்சிருக்கம்.

அப்பப்போ தெரியாத்தனமா கடந்த பிறவிகளில் நாம தேடி வச்ச பூர்வ புண்ணியம் + சமகால எம்.ஜி.ஆர் வேலைகள் காரணமா அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் அந்த டெஸ்ட் ட்யூப்ல தெறிச்சுருதா. சனம் ஆகா ஓகோங்கறாய்ங்க. (அதையெல்லாம் நாம காதுல போட்டுக்கறதில்லை - நாம யாருன்னு நமக்கு தெரியும்ல)

இத்துனூண்டு சரக்கை வச்சுக்கிட்டு புஸ்தவம் போட நினைக்கலாமான்னு ஒரு கில்ட்டி. ஆனால் பலர் " நீங்க எழுதின புஸ்தவங்க எங்கன கிடைக்கும்" " நீங்க ஏன் உங்க ஆராய்ச்சி+அனுபவத்தை புஸ்தவமா எழுதக்கூடாது?" நீங்க ஏன் உங்க பதிவுகளை தொகுத்து புஸ்தவமா போடக்கூடாது" ன்னு மெயில் மூலமா விஜாரிச்சுக்கிட்டே இருக்காய்ங்க.

ரஜினி, கமல் 50 விழாவுல சொன்னாப்ல இன்னைக்கு ஃபீல்டுல இருக்கிற சோதிடப்புலிகள் சோதிடத்துல இதுவரை தொடாததை தொட்டாத்தான் கொஞ்சத்துக்கு கொஞ்சமாச்சும் பேர் சொல்லமுடியும்.அது நமக்கு தெரியும்.

அதனாலதேன் ஜாதகம் இல்லாமயே தங்கள் நிலையை வைத்து -தங்கள் வாழ்வின் போக்கை வைத்து தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் வீக் ,அதுக்கு என்ன பரிகாரம்னு தெரிஞ்சிக்க ஒரு புஸ்தவம் எழுதினா என்னன்னு ஒரு ஸ்பார்க்.

காசு போட்டு நம்ம புஸ்தவத்தை வாங்கினவுக தாங்கள் புஸ்தவத்துக்காக செலவழிச்ச காசை போல குறைஞ்சது ஆயிரம் மடங்காவது சம்பாதிக்க தேவையான டிப்ஸை நாம கொடுத்தாகனும். இது ஒரு சவால்.

சமீப காலமா பொருளாதார முடக்கத்துக்கு என்னெல்லாம் காரணமா இருக்கக்கூடும்னு ஒரு பட்டியலை போட்டு ( சாபங்கள்/தோஷங்கள்) பரிகாரங்களை பொளந்து கட்டிக்கிட்டிருக்கம். ஆரம்ப காலத்துல கதிரவன், தேவி,ஆரூடம், ராஜரிஷி, ஜோதிட பூமி ,ஆன்மீகம் போன்ற இதழ்களில் சோதிட உலகிற்கு நம்மோட கான்ட்ரிப்யூஷனான நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்களை டச் பண்ணியிருக்கம்.

உபரியா ஜோதிட பூமியில அனைவருக்கும் தனயோகம்னு (ஜோதிட ரீதியா -ஜாதகத்தை வச்சு மட்டும் ஒர்க் அவுட் பண்றாப்ல ஒரு தொடர்கட்டுரையும் எழுதியிருக்கம்.

மேலும் நம்ம வலைப்பூ,வலைதளங்கள்ள ஜோதிடம் தொடர்பாக நிறைய்ய ஆய்வு கட்டுரைகள் எழுதியிருக்கம்.

எல்லாத்தையும் தொகுத்து - டெலிகிராம் கணக்கா ட்ரிம் பண்ணி "அனுபவ ஜோதிடம்"ங்கற தலைப்புல - ஒரு புஸ்தவம் வெளியிடலாமேனு உத்தேசம்.

ஹார்ட் போர்ட் -மல்ட்டி கலர் ரேப்பர் போட்டு -பத்து ஃபாரம் நல்ல பேப்பர்ல ப்ரிண்ட் பண்ணி -பின்னிங் -பைண்டிங் -கட்டிங் -ட்ரான்ஸ்போர்ட் -கூரியர்-போஸ்டல் செலவெல்லாம் முடிக்கனும்னா ஆயிரம் பிரதிக்கு - இன்னைக்கிருக்கிற விலை வாசிக்கு ரூ.50,000 ஆகும்னு ப்ரஸ்ல உத்தாரா சொன்னாய்ங்க.
அப்போ ஒரு பிரதியோட அடக்க விலை ரூ.50 மட்டுமே.

ஆனால் இப்படி புஸ்தவத்தை ரூ 50 க்கு வித்தா ஜா.ரா மாதிரி ஆளெல்லாம் வாங்கி ஊரை ஏமாத்த ஆரம்பிச்சுருவாய்ங்க. அதனால புஸ்தவத்தோட விலைய குறைஞ்ச பட்சம் ரூ.250 ஆ ஃபிக்ஸ் பண்ணனும்.

அதே நேரம் அம்பது ரூவா அடக்கமுள்ள பொருளை இரு நூற்று அம்பது ரூவாய்க்கு வித்தா நாம ஏற்கெனவே நம்ம பதிவுகள்ள சொல்லியிருக்காப்ல குஷ்டம் தான் வரும். ( விரைவாதம்லாம் உபரி)

அதனால ஆன்லைன் ஜோதிட ஆலோசனையையும் இந்த புஸ்தவத்தையும் மெர்ஜ் பண்ணலாம்னு நினைக்கிறேன். நமக்கு ஆன்லைன் ஜோதிட ஆலோசனை கட்டணமா சனம் ரூ.250 தந்துக்கிட்டிருக்காய்ங்க. ( ஆன்லைன்ல இது டெட் சீப் போல - கூட்டம் அம்முது -ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்தாலும் முடிய..லை )

ஒரு ஜாதகத்துக்கு பொதுப்பலன் -பரிகாரம் -தசாபுக்தி பலன்னு 3 ஆடியோ ஃபைல் அனுப்பவேண்டியிருக்கு. நம்ம அறிவுப்பு அப்படி.( வாக்குல சனி)

இப்பம் சனி 3 க்கு வந்துட்டதால தில்லுதுரையாக இந்த அறிவிப்பை வெளியிட திட்டம்.

1.ஆன் லைன் ஜோதிட ஆலோசனையில் இனி ஒரு ஜாதகத்துக்கு பத்து கேள்விகளுக்கு (துணைக்கேள்விகள் உட்பட) விரிவான பதில் (மட்டுமே) அளிக்கப்படும். கட்டணம் மட்டும் அதே ரூ.250 தான்.

2.ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெறுபவர்களுக்கு "அனுபவஜோதிடம்" நூல் இலவசம். ஆலோசனை கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தும் போதே பதிவு தபால்/கூரியர் செலவை ( நெல்லா விஜாரிச்சு) சேர்த்து கட்டிரனும்.

3.புஸ்தவம் தமிழர் திருநாளான பொங்கலன்று ரிலீஸ்.

நிபந்தனை:
1.பொங்கல் திரு நாளுக்கு முன் தினம் வரை ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்காக வங்கிக்கணக்கில் கட்டணம்+கூரியர்/பதிவு தபால் செலவை செலுத்துபவர்களுக்கு மட்டுமே நூல் இலவசமாக அனுப்பப்படும்
( மெயில்ல பர்த் டீட்டெய்ல்ஸ், தபால் முகவரி தெரிவிக்க மறந்துராதிங்க)

2.அப்போதைக்கே ஜாதகங்கள் குவிந்து விட்டிருக்கும் என்பதால் தமிழ் வருடப்பிறப்பு வரை ஆன் லைன் ஜோதிட ஆலோசனை நிறுத்தப்படும்.

(இந்த அறிவிப்பை நவம்பர் 17 முதல் அமல்படுத்த எண்ணம். இது குறித்த உங்கள் கருத்தை உடனே தெரிவிக்கவும்)

Sunday, November 6, 2011

எனது டைரி ( ப்யூர்லி பர்சனல்)


அண்ணே வணக்கம்ணே !

அந்த காலத்துல பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு திங்கள் கிழமையானா ஜுரம் வந்திரும். ரீஜன் இன்னடான்னா சனி ,ஞாயிறு லீவை நெல்லா எஞ்ஜாய் பண்ணியிருப்பாய்ங்க. ஊட்ல தாத்தா பாட்டி, அத்தை, சித்தப்பா,பெரியப்பா, ஊட்டாண்ட பசங்க இப்படி டைம் பாஸுக்கு குறைவே இருக்காது.

படக்குனு லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போவனும்னா ரெம்ப கஷ்டமா இருக்கும். அவிக சப்கான்ஷியஸ் மைண்ட்ல "கொய்யால ஜுரம் வந்துட்டா நெல்லா இருக்குமே ஸ்கூலுக்கு போகாம தப்பிச்சுக்கலாம்னு" ஒரு தாட் பலம்மா இருக்கும்.

ஹ்யூமன் பாடி ரெம்ப நொய்மையானது . ஆனால் மனசு ரெம்ப பலமானது. மனசு அதிலயும் உள் மனசு போடற உத்தரவுக்கு உடல் உடனே அடி பணியும் .

இந்த மேட்டரை சொல்றப்ப அந்த காலத்துலன்னு ஒரு வார்த்தையோட ஆரம்பிச்சேன். அப்பம் இந்த காலத்துல லீவு முடிஞ்சு வர்ர ஒர்க்கிங் டேவுல பிள்ளைகளுக்கு ஜுரம் வர்ரதில்லையான்னு கேப்பிக .

மோஸ்ட்லி வர்ரதில்லிங்ணா. ஏன்னா அவிகளுக்கு ஸ்கூலு -ஊடு ரெண்டுக்கும் பெருசா வித்யாசம் கடியாது. ரெண்டு இடமும் அவிகளோட சுதந்திரம் -கிரியேட்டிவிட்டி - கவிதை போன்ற அறியாமை எல்லாத்துக்கும் ஆப்படிக்கிற இடங்களாத்தான் இருக்கு.

அதனால பெருசா வித்யாசம் இருக்கிறதில்லை. ஸ்கூல்லயும் படி படி , தாளி வீட்லயும் படி படி..கட்டிடம்னு இருந்தா வாசப்படி ,மாடிப்படின்னு ஏதோ ஒரு இழவு இருந்துதானே தீரனும். அதை எதுக்கு "பன்னா பன்னா"னு ஞா படுத்தனும்?

போன பத்திக்கு முந்தின பத்தியை மோஸ்ட்லி வர்ரதில்லைன்னு ஆரம்பிச்சேன். இந்த காலத்துலயும் ஜூரம் வருது. அது எப்பம்னா ஸ்கூல்ல டார்ச்சர், செக்ஸ் டார்ச்சர்னு எதுனா கிராஸ் ஆனா வருது,

1967 ல பிறந்த நான் 1972 ல ஸ்கூல் போக ஆரம்பிச்சு 1987 ல படிப்பு முடிஞ்சு போச்சு. நாம ஸ்கூல் படிச்ச கதையெல்லாம் சொன்னா 1977 க்கு அப்பாறம் பிறந்த புள்ளைங்க கண்ணீர் விடுவாய்ங்க. அந்த மாதிரி ஒரு அசால்ட்டான படிப்பு. அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் வருசத்துக்கு 3 பரீட்சை தேன்.

( காலாண்டு,அரையாண்டு,ஆண்டு தேர்வுதேன்) அசைன்மென்டு ,யூனிட் டெஸ்டுன்னா என்னன்னு கூட தெரியாது.

தமிழ் புஸ்தவம் மட்டும் தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அதே புஸ்தவம்தேன். மத்த சப்ஜெக்டுக்கெல்லாம் புஸ்தவமும் கடியாது . ம..ரும் கிடையாது. ஆனாலும் படிச்சோம்.

நாலாங்கிளாஸ்ல மொதல் முறையா இங்கிலீஷுக்கு ஒரு புஸ்தவம். ஆப்பிள்,பேபியில ஆரம்பிச்சு கடைசி பாடமே ஹி ஈஸ் அவர் டீச்சர். ஹி டீச்சஸ் இங்கிலீஷுன்னு பத்து வரி வந்தா சாஸ்தி.நமக்கு அப்பம் இங்கிலீஷுன்னாலே அலர்ஜி.

ஆறாம் க்ளாஸ்ல ஜே.வி.நாகராஜ்னு ஒரு வாத்யாரு. என்.டி.ஆர் மாதிரி ஒரு ஃபிசிக். சூப்பர் பர்சனாலிட்டி, சினிமால கூட ஆக்டு குடுத்தாருங்கோ. அவரு நம்ம முகராசி,அங்கலட்சணம்,சாமுத்ரிகம் பார்த்து ஏமாந்து போய் அசைன்மெண்ட் பேப்பரை திருத்திக்கிட்டு வரச்சொல்லிட்டாரு.அன்னைக்குதேன் போர்கால அடிப்படையில கீ ரெடி பண்ணிக்கிட்டு ஒப்பேத்தினம்.

மேலும் ஒரு கேள்விக்கு தப்பு தப்பா சொந்த வார்த்தைகள்ள எழுதியிருந்த பதிலை படிச்சு ரெம்பவே ஸ்லாகிச்சாருங்களா இங்கிலீஷ் மேல ஒரு ஆர்வம் வந்தது.

ஆறாங்கிளாஸ் வந்தப்பாறம் தேன் அசைன்மென்டு ,யூனிட் டெஸ்டுன்னா என்னன்னு தெரியவந்தது. அதுவும் சீரியஸ் எல்லாம் கடியாது. ரேங்க் மண்ணாங்கட்டியெல்லாம் தெரியாது.

ஆறுல இருந்து பத்துவரைக்கும் கூட சமூகவியல்,அறிவியல்,கணக்குக்கெல்லாம் டெக்ஸ்ட் புக் கடியாது. ஆரோ பொளைக்க தெரியாத வாத்யாரு பன்னெடுங்காலத்துக்கு மிந்தி டப் பண்ணி டிக்டேட் பண்ண நோட்ஸு தலைமுறை தலைமுறையா செலாவணியாயிட்டிருந்தது.

இந்தி மேட்டர்லயும் நாம லேட் பிக்கப்புதேன். ஆறாங்கிளாஸ்லயே இந்தி ஆரம்பிச்சிட்டாய்ங்க.ஆனால் 6 ,7 இந்தி டீச்சர் நெல்லா படிக்கிற பிராமண பிள்ளைங்களை மட்டும் டேபிளண்டை கூப்டு வச்சிட்டு பாடம் நடத்திட்டு (?) போயிரும். இதுல கடுப்பாகி இந்தின்னாலே வெறுப்பு. இத்தனைக்கும் டீச்சர் ப்ராமின் கடியாது.

எட்டாங்கிளாஸ்ல இந்தி வாத்யாரோட குடுமியோ அ அவர் உபயோகிச்ச வசவுகளோ ஏதோ ஒன்னு நம்மை கவர - அதே நேரம் தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா கோச்சிங்கும் கை கொடுக்க இந்திலயும் பந்தி வைக்க ஆரம்பிச்சோம்.

கைவசம் இந்தி பழமொழியெல்லாம் கூட உண்டுங்கண்ணா. திருப்பதியில தனியார் ஹை ஸ்கூல்ல 4th To 10th வாத்யாரா கூட வேலை செய்திருக்கமில்லை.

கணக்குல இந்த அல்ஜீப்ரா கொஞ்சம் போல தண்ணி காட்டினாலும் தெரியாத சங்கதியை எக்ஸுன்னு வச்சுக்கிட்டு டீ கோட் பண்ற மேட்டர் கொஞ்சம் பிடிக்கும். சைன்ஸுல கெமிஸ்ட்ரி ஃபார்முலால்லாம் கொஞ்சம் கலாய்க்கும்.ஆனாலும் உன்னைப்பிடி என்னைப்பிடின்னு 72 பர்சண்டோட பாஸ் பண்ணியாச்சு. ( மீடியம் ஆஃப் இன்ஸ்ட்ரக்சன் தமிழ் தேன்)

இண்டர்ல சிவிக்ஸ்,எக்கனாமிக்ஸ்,காமர்ஸ் (இங்கிலிஷ் மீடியம்) காமர்ஸ்ல மட்டும் ஃபர்ஸ்ட் இயர்ல பேலன்ஸ் ஷீட் டாலி ஆகாம 23 மார்க் வாங்கி குண்டு. அர்ரியர்ஸ்ல எழுதி 72 வாங்கியாச்சு.

நமக்கு ரெம்ப பிடிச்ச விஷயம் தோல்வி. அது கொடுக்கிற வாக்குவம் தான் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. இந்த சொந்தகதையெல்லாம் இங்கன சொல்றதுக்கு காரணம் என்னடான்னா இந்த மாதிரியான அசால்ட்டான படிப்பு நம்ம பால்யத்தை சிதைக்கலைன்னு சொல்லத்தேன்.

இந்த பக்கத்து வீட்ல பூச்செண்டு சுத்தறது, தீக்குச்சி அடுக்கறது, சேவல் பிடிக்கிறது, மணியில நோன்பு தட்டு போடறது,பொம்மை கொலு வைக்கிறது பொம்பள பிள்ளைகளோட சேர்ந்து நொண்டி விளையாட்டு,அஞ்சு கல்லு ,பல்லாங்குழி, அம்மா அப்பா விளையாட்டு, இதெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்.

இன்னொரு பக்கம் ஏரிக்குபோய் நீஞ்சறது , மிட்டூர்ல முக்கி ரெட்டி தோப்புல உள்ள கிணத்துல (இப்பம் தோப்பும் கடியாது -கிணறும் கடியாது) நீச்சல், தோப்புல மாங்கா அடிக்கிறது , ஆத்துக்கு போய் மீன் பிடிக்கிறது(இப்பம் அது சாக்கடை) பஸ் ஸடாண்டெல்லாம் போய் தீப்பெட்டி லேபிள் பொறுக்கறதும் நடக்கும்.

துண்டு பீடி அடிக்கிறது, தெருவுல பம்பரம் , ஜவுரா பில்லை, கபடி விளையாடறது இப்படி ஒன்னு விடாம சைல் ஹுட்டை எஞ்ஜாய் பண்றதுக்கு வழி விட்டதே மேற்படி அசால்ட்டான படிப்புன்னுதான் நினைக்கிறென்.

நம்ம வீட்டுக்கு சௌத்ல ஒரு மைதானம். மைதானம் நிறைய குடிசைங்க. அவிகளோடவும் இன்டராக்ட் ஆற வாய்ப்பு கிடைச்சது. அது ஒரு உலகம்.

நாலாங்கிளாஸ் படிக்கிறச்ச உடலுறவுன்னா என்னன்னு தெரியும் (தர்ம தரிசனம்) பருவம்னு எட்டணா விலையில புஸ்தவம்லாம் படிச்சிருக்கேன்னா காலேஜ் முடியறதுக்குள்ள என்னெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிக்கங்க..

ஊட்ல நம்ம படிப்பை பத்தி ஆரும் கண்டுக்கிடமாட்டாய்ங்க. அப்பா கெவுர்மென்ட் உத்யோகஸ்தர் . எவனுக்கும் வளைஞ்சு கொடுக்காத ,கை சுத்தமான கேரக்டர். ஆந்திராவுல எல்லா ஜில்லாலயும் வேலை செய்துட்டாரு.

லீவுல ஊட்டுக்கு வந்தா எங்கம்மாவை கேப்பாரு "சுசி! முருகன் இப்ப எந்த கிளாஸு? . ரெண்டு அண்ணனுங்களும் படிப்பை முடிச்ச பிறவு அன் எம்ப்ளாய்டா இருக்கிற ஃப்ரஸ்ட் ரேஷன்லயோ என்னமோ கொஞ்சம் ஓவர் ஆக்சன் செய்தது உண்டு. அதுவும் கன்டின்யூ ஆகாது.

இப்படி பல விஷயங்கள் நமக்கு தோதா அமைஞ்சதால ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி ஆயிட்டம். இல்லாட்டி நாம இருக்கிற கலருக்கும் அதுக்கும் பார்ப்பான்னு நினைச்சு மாஸ் கேரக்டருங்க நம்ம கிட்டே இஷ்டா....த்துக்கு விளையாடி ட்டிருப்பாய்ங்க.

ஒரு ஃப்ரெண்டோட பையன் ( ஆறாங்கிளாஸ் படிக்கிறான்) "அங்கிள்.. அங்கே ஜனங்கல்லாம் பையோட வெய்ட் பண்றாங்களே ..அது என்ன இடம்?"னு கேட்டான்.

"ரேஷன் கடை"ன்னு சொல்லவேண்டியதாயிருக்கு. இவனெல்லாம் படிச்சு இஞ்சினீர்,டாக்டரு,கலெக்டருன்னு ஆயிட்டா என்ன கதி?