Sunday, December 19, 2010

வலையுலகில் தேக்கம்

சுஜாதா கதைகள்ள கணேஷ் வசந்துக்கு கீர் (Gear) போடவும், வசந்தே தனக்கு தான் உசுப்பேத்திக்கவும் " நீ அனுமார்ரா உன் பலம் உனக்கு தெரியாதும்பாய்ங்க. இதே வசனத்தை நான் சகபதிவர்கள் கிட்டயும் விட விரும்பறேன்.

சுகுமார்ஜி எந்த ஆக்டரும் சூப்பர் ஸ்டாருல்லே. ரசிகன் தான் சூப்பர் ஸ்டாருன்னு போட்ட பதிவை 499 பேர் பார்த்திருக்காய்ங்க. தமிழ் வெளில டாப் ஒன்ல நின்னிருக்கு. (படத்தை பாருங்க ) இந்த வெற்றி கொடுத்த தகிரியத்துல தான் இந்த பதிவையே போடறேன்.

வீட்லயே நெட் கனெக்சன் வந்துட்டதால,  ஒரு நாளைக்கு 3 தாட்டி பூந்துவர்ரதாலயா என்னனு தெரியலை புது பதிவுகள் குறைஞ்சிட்டே வராப்ல ஒரு சம்சயம். வந்த பதிவுகள்ளயும் புதுமைய லென்ஸ் வச்சு தேட வேண்டியதா இருக்கு.

தர்ம யுத்தம் படத்துல ஸ்ரீதேவி பாடுவாய்ங்களே அப்படி எத்தனாம்பெரிய ஜூரியை கூட போய்யா போய்யா (வலை) உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பான்னு பிரிச்சு மேயற வாய்ப்பு இந்த உலகத்துல இருக்கு. ஆனால் திருப்பி திருப்பி கலைஞரை,ஜெயாவை,ராசாவ கிழிக்கறதோட சரி.   விட்டா சினிமா விமர்சனம். இல்லை சக பதிவர்களை கலாய்க்கிறது ( எப்பவாச்சும் ஃப்ரீன்னா பரவால்லை எப்பவுமே ஃப்ரீன்னா எப்படி?) விட்டா ரஜினி,விஜய்.

என் சிற்றறிவுக்கு எட்டின வகையில வலையுலக புதுமைக்கு சில யோசனைகள் குறைஞ்ச பட்சம்  ஒரு 45  நாளைக்கு அமலாக்கினா போதும்

*ஆரியம்,திராவிடம்,பார்ப்பனீயம் எல்லாத்துக்கும் லீவு
* நோ சினிமா விமர்சனம் - நோ நடிகைகள் காசிப்ஸ்
*இலங்கை மேட்டர்ல விசயம்,விசயத்தோட வீரியம்  தெரிஞ்சவுக மட்டும்      டீட்டெய்ல்டா எழுதனும் -மத்தவுகல்லாம் படிக்கலாம் பரப்பலாம்

*.டிவி நிகழ்ச்சிகள் அதுலயும் சீரியலை பத்தி வேணாங்கண்ணா ..வேணம்னா புதுசா ,சனத்துக்கும் உபயோகமா எதுனா நிகழ்ச்சிகளுக்கு ஐடியா கொடுங்க
*பதிவர்களுக்கான யோசனைகள் தலைப்புக்கு தடை( நம்ம பதிவே கடைசி பதிவா இருக்கட்டும் ஜஸ்ட் 45  நாளைக்கு)















மேலே உள்ள காலியிடம் உங்கள்ள யாராச்சும் சொல்ற யோசனையை சேர்த்துக்கத்தேன்.

என்னெல்லாம் எழுதலாம்:
இந்த துணைத்தலைப்புக்கு கீழே எழுத எனக்கு தகுதி  இருக்கானு தெரியலை. நான் கூட  ஜோதிஷம் ,சைக்காலஜி,செக்ஸாலஜி,அரசியல்னு தேங்கிட்டன். இனி நானும் புதுமையா எதுனா எழுதலாம்னு இருக்கேன். இடையில மருந்தா நோய்க்கு விருந்தான்னு ஒரு தொடர் ஆரம்பிச்சு அது தொங்கல்ல இருக்கு.

என்னமோ போங்க இந்த ஞா கிழமை வந்தாலே எல்லாமே கடுப்படிக்குது...

முடிவுரை:
எனக்கு என்ன தோணுதுன்னா இங்கன பைசா புரள்றதில்லைங்கறதே இந்த தேக்கத்துக்கு காரணமோ? யாராச்சும் நகைக்கடைக்காரவுக வந்து பரிசு கொடுக்க ஆரம்பிச்சா புதுவெள்ளம் வருமோ?