Wednesday, November 30, 2016

நால்வகை ராசிகள் :ஜோதிஷ வித்யா ப்ரகாசிகா

நால்வகை ராசிகள் :ஜோதிஷ வித்யா ப்ரகாசிகா

இந்திய நீதி அமைப்பே செத்துவிட்டது



மா.மி. உச்ச நீதிமன்ற /உயர் நீதிமன்ற  நீதியரசர்களுக்கு ஒரு திறந்த மடல் 
ஐயா !
எதுக்கெல்லாமோ தீர்ப்பு தரிங்க. கபாலிக்கெல்லாம் ராவோட ராவா தீர்ப்பு தர்ரிங்க. காவிரி பிரச்சினைல கர்னாடகா முரண்டு பிடிச்சா மட்டும் கண்டுக்க மாட்டேங்கிறிங்க. இப்படி ஆயிரம் சொல்லலாம்.

ஆனால் ஹியர் சேனு தள்ளிருவிங்க. என் சொ(நொ)ந்த கதைய சொல்றேன். அதுவும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மானில நுகர்வோர் மன்றம், மனித உரிமை கமிஷன், ஹை கோர்ட் ,சுப்ரீம் கோர்ட்டுன்னு நான் தட்டாத கதவே இல்லை . கதவு என்ன சன்னலை கூட திறக்கல நீதித்துறை.

அதுவும் மேட்டர் என்ன.. சாமானியப்பட்ட மேட்டரா ? இன்னைக்கு நாடே  நலிஞ்சு கிடக்க பண்ணிருச்சே இந்த கரன்சி ரத்து மேட்டரு இது உட்பட அஞ்சு அம்சம். இதை எல்லாம் அமலாக்க தேவையான நிதி சேகரிப்புக்கு ஸ்கெட்ச் எல்லாம் அடங்கின விஷன் டாக்குமென்டை மத்திய /மானில அரசுகளின் செவிட்டு காதுகளுக்கு கடத்த முயற்சி பண்ணி -அவனுவ பண்ண டார்ச்சருக்கு ரத்த கண்ணீர் விட்டு உங்க கோட்டைக்கு வந்தேன்.

என்ன ஒரு சோகம்னா /அதிர்ஷ்டம்னா என் பேர்ல எந்த சொத்தும் இல்லை. இருந்திருந்தா எல்லாத்தையும் வித்து கேஸ்போட்டு ரோட்டுக்கு வந்திருப்பன்.
ஆனாலும் மனசு கேட்குதா? அந்த காலத்துல ஒரு நாளைக்கு அஞ்சு பத்து கிடைச்சா என் குடும்பமே பசியாறிரும்ங்கற நிலையிலயும் பத்து இருபதுன்னு செலவழிச்சு  உச்ச நீதிமன்றத்துக்கும்/உயர் நீதி மன்றங்களுக்கும்  கூரியர்  மூலமா/பதிவு தபால் மூலமா  லெட்டர் அனுப்பினன்.

எதுக்குன்னா ? சனம் போடற லெட்டரையே ரிட் மனுவா ட்ரீட் பண்ணி கோர்ட் கீசிடும்னு ஏதோ ஒரு பாடாவதி பேப்பர்ல படிச்சு தொலைச்சுட்டன். அந்த நப்பாசையில தான் .

அதனாலதேன் எனக்கும்/இந்த நாட்டுக்கும் நடந்த இன் ஜஸ்டிஸை எல்லாம் கொளந்தைகளுக்கும் புரியறாப்ல ஒன்று இரண்டுன்னு வரிசைபடுத்தி ஆதியோடந்தமா அனுப்பினன் . நடவடிக்கை தான் இல்லை.

இப்பம் இந்த ஓப்பன் லெட்டரை படிச்சுட்டு கோதாவுல இறங்கி நடவடிக்கை எடுத்துருவிங்கன்னு சத்தியமா நான் நம்பல. பின்னே ஏன் எழுதறேன்னா.......
சமீப காலமா சட்டங்களை அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையதா இல்லையான்னு மட்டும் பார்க்கவேண்டிய நீங்க -எல்லா வேலையையும் முடிச்சு போட்டு சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்துட்டிங்களோனு தோன்றாப்ல பல தீர்ப்புகளை பார்க்கிறேன்.

இல்லிங்கய்யா உங்க வேலையே மலையா குவிஞ்சு கிடக்குன்னு ஞா படுத்தத்தேன் இந்த லெட்டரு . இதை புத்திசாலித்தனமா என் ப்ளாக்ல தான் போடப்போறேன்.

நமக்கு சத்ராதிங்க சாஸ்தி . எவனாச்சும் என்னை போட்டு கொடுக்க இதை இந்தியிலயோ /இங்கிலி பீஸுலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி புகார் பண்ணா கோர்ட் அவமதிப்புன்னாச்சும் என்னை கோர்ட்டுக்கு கூப்டுவிங்கல்ல .அதுக்குதேன்.

இந்த லட்டர்ல வருசம்/மாசம்/தேதில்லாம் போட்டா ஃபேஸ்புக்ல படிக்கிற சனம் தெறிச்சு ஓடிரும்.அதனால கதை மாதிரி சொல்லிர்ரன்.

என் லட்சியம் நதிகள் இணைப்பு. இதை இம்ப்ளிமென்ட் பண்ண தோதா ஒரு அஞ்சு அம்சம்/ அப்படியே திட்ட செலவுக்கு சனங்களை டார்ச்சர் பண்ணாம மானில அரசாங்கங்கள் பைசா புரட்ட கொத்து கொத்தா ஐடியாங்க. ஏறக்குறைய ஒரு தீசிஸ் மாதிரி இருக்க்கும்.

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல். 

தீசிஸ் தான் வேணம்னா அது இங்கே .

இந்த திட்டத்தை அமல்படுத்த சனங்களை டார்ச்சர் பண்ணாம மானில அரசாங்கங்கள் பைசா புரட்ட கொத்து கொத்தா ஐடியாங்க இங்கே 

இந்த இழவை எல்லாம் ரோனியோ போட்டு பெருசா பார்சல் கட்டி அன்னைக்கு இருந்த மத்திய ஆளுங்கட்சி கூட்டணி எம்பிக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரி சபா நாயகருக்கு அனுப்பினேன். (1998) மவனுங்க கண்டுக்கல.

பிறகு எங்க தொகுதி எம்.பி ராமகிருஷ்ணா ரெட்டிகாருவுக்கு எழுதி -அவர் அவியளுக்கு எழுதி "பார்சலை காணோம்"னுட்டாய்ங்க.

இன்னொரு தபா ஒரே ஒரு பிரதி அனுப்பினா நாங்களே பிரதி எடுத்து அல்லா எம்பிக்களுக்கும் கொடுத்துர்ரன்னு லட்டர் போட்டானுவ. அனுப்பினன். அவ்ளதான் டீல்ல விட்டுட்டானுவ.

அன்னைக்கிருந்த சபா நாயகர் எங்க ஸ்டேட் காரரு. தெ.தேசம் கட்சிக்காரரு. ஆகவே இந்த மேட்டரை எல்லாம் சந்திரபாபுவுக்கு அனுப்பி என்னான்னு விஜாரிப்பானு ரிக்வெஸ்ட் பண்ணேன். அந்தாளு இன்னம்மோசம் .கண்டுக்கவே இல்லை.

நான் என்னவோ ஒரு தலைகாதலன் மாதிரி /நேர்த்திக்கடன் கணக்கா வாய கட்டி வவுத்தை கட்டி ரிமைண்டர்ஸ் அனுப்பிக்கிட்டே இருக்கன். ம...னா கூட யூஸ் இல்லாம போயிருச்சு.

ஒரு நாள் கடுப்பாகி யோவ் .. இந்த மேட்டர்ல நீ என்னதான் செய்யப்போறே /அல்லது என்னை என்னதான் செய்ய சொல்றே. ஒடனே பதில் போடு .ஒனக்கு போஸ்டேஜ் செலவு கூட வைக்க விரும்பல. இந்த பத்து ரூவாயை வாங்கிக்கிட்டு ஸ்டாம்ப் ஒட்டி பதில் போடுன்னு பத்து ரூவா எம்.ஓ அனுப்பினன்.

அதையும் டெலிவரி வாங்கிட்டானுவ. செரி பெய்டட் சர்வீஸாயிருச்சு. பதில் போட்டே ஆகனும்னு வெய்ட் பண்ணேன். ஒன்னும் பேரல. கன்ஸ்யூமர் ஃபோரத்துல புகார் பண்ணேன்.

இந்த மேட்டர் வார்த்தா மெய்ன் எடிஷன்ல பப்ளிஷ் ஆய்ருச்சா .பாபு ஒடனே பேதியாகி மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்தான்னு ஒரு பதிலை அனுப்பி உட்டாரு .நிற்க கேசை கவனிக்கலாமா?

ஜூரிங்க இந்த கேஸ்ல "டெஃபிசியன்ஸி ஆஃப் சர்வீசே இல்லை"ன்னுட்டு சரித்திர பூர்வமான தீர்ப்பு கொடுத்துட்டாய்ங்க.ஸ்டேட் ஃபோரத்துக்கு அப்பீல் பண்ணேன். கீழ கொடுத்த தீர்ப்போட ஒரிஜினல் பிரதியை வைக்கலன்னு லட்டர் போட்டானுவ. நானும் மண்ணாந்தை கணக்கா அனுப்பிட்டன். அவ்ளதான் மேட்டர் ஓவர்.

திட்டம் போட்டு என் கிட்டே இருந்த ஆதாரங்களை எல்லாம் ஆட்டைய போட்டுட்டானுவ.அப்பத்தேன்  உங்களுக்கு  லட்டர் போடற வேலைய கையில எடுத்தன் .

இதோ நான் டிக்ளேர் பண்றேன் இந்திய நீதி அமைப்பே செத்துப்போச்சு. கொய்யால தில் இருந்தா என் மேல நடவடிக்கை எடுங்க. உங்க வண்டவாளத்தை எல்லாம் .இப்பமே தண்டவாளத்துல ஏற்றிட்டன்.

என்மேல நடவடிக்கை பாய்ஞ்சா இந்த வண்டவாளம்லாம் நாலு கால்பாய்ச்சல்ல பரவும். ஓகேவா ..உடுங்க ஜூட்டு

இந்த மிஷனை இதோட நிறுத்திட்டு ரிட்டையர் ஆயிட்டன்னு நினைச்சுராதிங்க. அசராம அடிச்சு விளையாடிக்கிட்டே இருக்கேன். அதை எல்லாம் ஏன் இங்கே சொல்லலின்னா இந்த காலகட்டத்துலயே நீதிபதிங்க பவிசு என்னன்னு தெரிஞ்சுட்டதால -அவியளுக்கு லட்டர் போட்டா காசு தான் வெட்டின்னு தெரிஞ்சுட்டதால லட்டரே போடல எசமான் . புகாரே பண்ணாம நடவடிக்கை எடுக்கலைன்னு புகார் பண்ணக்கூடாதுல்ல.

இந்த மிஷனோட லேட்டஸ்ட் ட்ரென்ட் வேணம்னா கீழ் காணும் தொடுப்புகளை பாருங்க.

change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india
http://anubavajothidam.com/?p=12051
http://anubavajothidam.com/?p=12117
http://kavithai07.blogspot.in/2016/09/blog-post.html

இவன் செரியான பைத்தாரனா இருக்கான். இவன் ரோசனைல்லாம் சொத்தைன்னு நினைச்சுராதிங்க எசமான் என்னோட பல ஐடியாக்களை அன்னைக்கே சந்திரபாபு சுட்டு அமல்படுத்தினாரு .திதிதேவஸ்தானம் காரவிக சுட்டாய்ங்க. இவ்ள ஏன் இன்னைக்கு ஸ்ரீமான் மோதிஜியோட அலுவலகம் கூட சுட்டிருக்கு. அந்த கதை வேணம்னா இங்கே பாருங்க.

கரன்சி ரத்து மேட்டரை சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்துலயே சொல்லிட்டனே .

குறிப்பு:2
இணைய உலகத்துல காப்பி பேஸ்டெல்லாம் சகஜம். எவனோபெத்த பிள்ளைக்கு தன் இனிஷியலை போட்டுக்கற சனம் சாஸ்தி.அதனால தான் எனக்குன்னு ஒரு ஸ்டைல் /ஒரு ஸ்லாங் ஏற்படுத்திக்கிட்டன்.

இதை எவன் எடுத்து போட்டாலும் நம்ம சரக்குன்னு தெரிஞ்சுரும்ல .ரீரைட் பண்ணா கிளிஞ்சிரும். அதே நேரத்துல இந்த ஸ்லாங்ல எதை சொன்னாலும் நக்கலாவே தோனும். ஆனால் மேட்டர் ரெம்ப சீரியஸ். மேட்டருக்காவ தூக்குல போட்டாலும் சம்மதம்தான். அதுக்காவ இந்த ஸ்லாங்கை ஒரு காரணமாக்கிராதிங்க.

Friday, November 25, 2016

கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !

மோடி அரசு ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்து தடாலடியாக - தான் தோன்றித்தனமாக  அரைகுறையாக -அள்ளித்தெளித்த கோலமாக -அடாவடியாக -எந்த முன்னேற்பாடும் இல்லாது அமல் படுத்தி இந்திய பொருளாதாரத்தையே நாசமாக்கியிருப்பது தெரியும் தானே .


இந்த பாழாப்போன யோசனையை 2014 ஜூலையில அனுப்ப - 2015 மார்ச்சுல பிரதமர் அலுவலகம் ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்னு பதில் கொடுத்ததெல்லாம் தெரியும் தானே?

நாம சோறு   போட சொன்னம். சோத்தை இலை போட்டு தான் போடனுங்கற மினிமம் காமன்சென்ஸ் கூட இல்லாம தரையில சோத்தை போட்டு அது மேல இலையை போட்டா நான் என்ன செய்ய முடியும் பாஸ்?

இந்த ரேஞ்சுல எத்தனை ஒப்பாரி வச்சாலும் போன உசுரு திரும்புமா பாஸ்?

(சோறு =திட்ட அமல் ; இலை =முன்னேற்பாடுகள்)

செரி இதை விடுங்க. இப்ப நாம வெளியிட்ட 4 நூல்களையும் தொகுத்து -எடிட் பண்ணி - டிடிபி செய்து கொடுத்து வெளியீட்டாளரளையும் அறிமுகம் செய்து வைத்த திருவாரூர் சரவணன் அவர்கள் வளரும் எழுத்தாளர். தம் எழுத்துக்கு பிரபல இதழ்கள்,நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றவர்.

என்ன ஆச்சோ என்னமோ பாவம்  நம்ம  ரூட்ல அஃதாவது  " நாட்டை திருத்தற" கிராஸ் ஆகி  கருப்பு பண ஒழிப்புல சில பல யோசனைகளை நம்ம மெயிலுக்கு அனுப்பியிருக்காரு.

உங்க வலைப்பூவுல போடுங்க பாஸ்னா ஊஹூம் உங்க ப்ளாக்ல தான் போடனும்னு உத்தரவு போட்டுட்டார்.

அன்னார் தந்த யோசனைகள் உங்களுக்காக .

கருப்பு பணத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் இவற்றையும் கட்டாயம் செய்ய வேண்டும்... இல்லாதவரையில் இது சாமானிய மக்களின் மீதான தாக்குதல் மட்டுமே என்று தோன்றுகிறது.

மிக குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகளிலும், அரசு, தனியார் என்று எந்த துறையிலும் சாமானிய மக்களை சாகடிக்கும் அளவுக்கு லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளிலும் வேண்டுமானால் அதிகமான வருமான வரி, அந்த வரி விபரங்களை தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் என்று இருக்கலாம். (ஆனால் உண்மை அவ்வாறில்லை. பல நாடுகளில் மிகவும் எளிமையான நடைமுறைதான்)

இந்தியா மாதிரி 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாட்டில் மக்களிடம் சிந்துவது, சிதறுவதை சேகரித்து அரசு கஜானாவுக்கு முறையாக செல்ல வழி ஏற்படுத்தினாலே எல்லா கருப்பு பணத்தையும் ஒழித்து விடலாம் என்பதை மனதில் கொண்டு நான் கீழே சொல்லியுள்ள யோசனைகளை சீர்தூக்கி பார்க்கவும்.

நடுத்தர, ஏழை எளிய மக்கள் உட்பட அனைவருமே வரி ஏய்ப்பு செய்வதோடு நிற்காமல் அது தவறில்லை என்ற மன நிலையில் இருக்க முக்கிய காரணம் இதுநாள் வரை வெளிப்படையாக செலவு செய்பவனுக்கு அதிக வரி விகிதமும் கணக்கில் காட்டாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், செலவு செய்யலாம் என்ற அளவில் இருக்கும் வரி விதிப்பு முறைகள்.
எரிபொருள் முதல் பேஸ்ட், பிரஷ் வரை மறைமுக வரியை பொருளின் விலையோடு சேர்த்து சாமானியன் செலுத்தி விடுகிறான். அது அரசுக்கு போய் சேருவதில்தான் பிரச்சனையே ஆரம்பம்.

வரி வசூலில் ப்ரீபெய்ட்:
அது எப்படி வருமானமும் செலவும் உறுதியாகும் முன்பே ப்ரீபெய்ட் டேக்ஸ் வசூலிக்க முடியும்? அப்படி வசூலித்தாலும் அதிகமாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப பெறுவதற்கு நாலைந்து ஜென்மங்கள் தேவைப்படுமே என்பதுதான் மக்களின் கவலை. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஒரு நபருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்கலாம் என்று லிமிட் வைக்க வேண்டும். அதற்கு கூடுதலாக தேவைப்பட்டால் வங்கி தர மறுக்க கூடாது. ஆனால் அந்த ரொக்கத்தில் 10 சதவீதம் வரியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் எவ்வளவு பேர் பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்கள் என்பதை பாருங்களேன்.

இப்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.5 லட்சமும், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு 2.5 லட்சம் என்று பல நிலைகளில் உள்ளது. இதிலும் மாற்றம் வேண்டும். கார்டு மூலம் மளிகை, ஜவுளி, காய்கறி என்று எதை வாங்கினாலும் அந்த தொகையுடன் வங்கி சேவை கட்டணம் உட்பட 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வேண்டும். இப்படி செலவழிப்பது பொதுமக்களுக்கு சிரமமாக தெரியாது. உதாரணமாக ஆண்டுக்கு 3 லட்சம் செலவழிக்கும் ஒருவர் அதை ரொக்க பரிவர்த்தனையாக இல்லாமல் முழுவதும் வங்கி மூலம் செலவழித்திருந்தால் வருமானத்தில் இருந்து கழித்துவிடலாம் என்று விதிமுறை வகுக்கட்டும்... பிறகு வெளிப்படையாக செலவழிக்க யாருமே தயங்க மாட்டார்கள்.

வாடிக்கையாளர்களிடம் கடைகள் வசூலிக்கும் வரி அரசுக்கு தாமதமின்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் 4ஆயிரத்து எழுநூற்று ஐம்பதுக்கு பொருள் வாங்கி அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 250 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 1 சதவீத வங்கி பரிமாற்ற வரி மூலம் 50 ரூபாய். ஆக கூடுதல் 5 ஆயிரத்து 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால் தானியங்கி முறையில் 4750 சூப்பர் மார்க்கெட் கணக்கிலும் 250 அரசு வரி வருவாய் இன கணக்கிலும், 50 ரூபாய் வங்கி சேவை உட்பட பரிமாற்ற வரி முறையில் வங்கிக்கு 10 ரூபாயும் அரசுக்கு 40 ரூபாயும் செல்லும் வகையில் வங்கி சாப்ட்வேர் இருந்தால் பிரச்சனை ஓவர்.

காய்கறி, பெட்டிக்கடை, தெருக்களில் இருக்கும் சிறு மளிகைக் கடைகளில் அதாவது சில்லரை கடைகளில் ரீசேல் டேக்ஸ் 1 சதவீதம் என்று இருக்கும்பட்சத்தில் 400 ரூபாய் பில்லுக்கு 4 ரூபாய் ரீசேல் டேக்ஸ், 4 ரூபாய் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று ஆட்டோமேடிக்காக பிடித்தம் செய்யும் வகையில் சிறு மளிகைக்கடை கரண்ட் அக்கவுண்ட்டில் வங்கி சாப்ட்வேர் செட்டிங் செய்யும் முறை மிகவும் எளிது.

அது போகட்டும்... காய்கறி, மீன், பால் வியாபாரிகள் கையில் சிறு அளவில் ரொக்கமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கினால் அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது... அதுவும் சின்ன அளவு என்றாலும் கருப்பு பணமாக மாறிவிடுமே என்று கேட்கலாம். அதற்கும் தீர்வு இருக்கிறது. இப்படி சின்ன அளவில் சைக்கிள், தலையில் சுமை தூக்கி சென்று விற்பவர்களால் அவர்களின் விற்று முதல் ரொக்கமாக புழங்குவதில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை. 

அப்படி அதையும் வங்கி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இப்போது பல வங்கிகள் தினமும் வைப்பீடு வசூல் செய்ய கடைகளுக்கு ஆள் அனுப்பி பில்லிங் மெசின் மூலம் பில் கொடுத்து வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வியாபாரிகளின் வீட்டிலோ, அந்த இடத்திலோ அன்றைய வியாபார தொகையை 1 சதவீத டேக்ஸ் செலுத்தி அக்கவுண்டில் போட்டுவட்டு மறுநாள் வியாபாரத்திற்கு ரொக்கமாக அல்லது அவர்கள் கொள்முதல் செய்யும் மொத்த கடைகளுக்கு டிரான்ஸ்பர் செய்ய உதவலாம். 

இதற்கு இந்த சிறு வியாபாரிகள் பிழைப்பை விட்டு விட்டு வங்கிக்கு சென்று காத்திருக்க செய்யாமல் அவர்கள் இடம் தேடி வங்கி ஊழியர் வருவதற்கு வழி செய்தால் மட்டுமே இந்த முறை வெற்றியடையும்.  ஏனென்றால் நாடு நலம் பெற ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் சிரமங்களை பொறுத்திருக்க முடியும். அதை விடுத்து வருடம் பூராவும் வலியை தாங்க முடியாது.

4 வகை வரி விகித பொருள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் என்ன செய்வது?
ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஏ/சிக்கு 28 சதவீத வரி, பேனுக்கு 18 சதவீதம், எல்.இ.டி பல்ப்புக்கு 4 சதவீதம் வரி வசூலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 

அவர்கள் முறையாக பில் போட்டு வியாபாரம் செய்யும்போது அன்றைய மொத்த விற்பனை 40 லட்சம், வரி 4லட்சத்து 28 ஆயிரம் என்று தெளிவாக டீட்டெய்ல் வந்துவிடும். அந்த வரி தொகையை அவர்கள் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ்.எம்.எஸ் செய்து விட வேண்டும். அப்போது அந்த வரி போக மீதத்தொகை சம்மந்தப்பட்ட கடை கணக்குக்கு வரவு ஆகும். பிடிக்கப்பட்ட வரி நேரடியாக அரசின் வரித்துறை வங்கி கணக்கில் கிரடிட் ஆக வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர் செலுத்திய 40 லட்சம் விற்பனை தொகையும் கடையின் கணக்கில் காட்டும். அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஸ்கிரீனில் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முறையில் இருந்தால் எந்த நிறுவனமும் ஏமாற்ற துணியாது.

ஏனென்றால் ஒரு நிறுவனம் ஒரு மாதத்தில் 100 ஏ/சி மெசின் விற்கிறது என்றால் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வரியை சேர்த்து வசூல் செய்து விட்டு 10 இயந்திரத்துக்கு மட்டும் பில் போட்டுவிடுகிறது. டோல்கேட் உள்ளிட்ட பல தொழில்களில் இப்படித்தான் வரி ஏய்ப்பு உருவாகிறது.

கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலவழித்தால் 1 சதவீத வரி... ரொக்கமாக பணத்தை எடுத்தால் 10 சதவீத வரி. மாதம் 25 ஆயிரத்திற்கு மேல் செலவு அனுமதித்து விட்டு (காப்பீடு, கல்வி, மருத்துவம், நீண்டகால, தொடர் சேமிப்பு நீங்கலாக) அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக கொண்டு 3 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே வரி வசூலிக்க வேண்டும்.

சொத்தின் உண்மையான மதிப்புக்கே பத்திரப்பதிவு செய்தால் 1 சதவீதம் மட்டும் முத்திரைக்கட்டணம் என்று கொண்டு வர வேண்டும். அந்த தொகயை சொத்து வாங்குபவர் கொடுப்பவருக்கு வங்கி மூலமாக செலுத்தினால் 1 சதவீதம் மட்டும் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று வைத்துவிட்டால் போதும். ஏனென்றால் ரொக்கமாக வங்கியில் இருந்து பெற வேண்டும் என்றால் 10 சதவீதம் வரி என்றால் யாரும் கணக்கில் காட்டாமல் பணத்தை செலவழிக்க துணிய மாட்டார்கள்.

இந்த விஷயங்களை அமலாக்காமல் மக்கள் வலி தாங்க வேண்டும் என்று மட்டுமே அரசு சொல்லிக்கொண்டிருக்குமேயானால்.... சாமானிய மக்களை மட்டும் கார்னர் செய்து விட்டு யாரோ ஒரு சில பெரிய தலைகளை மேலும் மேலும் கோ.......................................டீஸ்வரர்களாக வளரச்செய்யும் விஷயமாக கருதிக்கொள்ள வேண்டியதுதான்.

ஆண்டவன் விட்ட வழி.

***********************************************************************************************
இலுமினாட்டிகள் என்ற சிலரைப் பற்றி இப்போது பரவலாக பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த நினைத்த உடன் எவ்வளவு சகுனி வேலைகள் இருக்கிறதோ அனைத்தையும் பார்த்து 100 கோடி ரூபாய் சொத்தை 40 கோடிக்கு விற்கும் நிலைக்கு வந்த உடன் அந்த 40 கோடியையும் எந்த நாடாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு புதிய நோட்டாகவே அச்சிட்டு அதை எடுத்து கொடுத்து வாங்கி விடுவதாக சொல்கிறார்கள். 

அது தவிர சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் தொழில் உள்ளிட்ட பல வகையிலும் உரிய முறையில் லோன் கிடைத்தால் அதை வைத்து தன்னிறைவு பெற்றுவிட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வங்கியில் இருக்கும் தொகைகளை 70 லட்சம் கோடி அளவுக்கு இத்தகைய இலுமினாட்டிகள் கடனாக பெற்று அந்த தொகை சாமானியர்களின் வளர்ச்சிக்கு உதவாத வகையில் பொருளாதாரத்தை மெயிண்டெய்ன் பண்ணுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது சாமானிய மக்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை, கல்வி அடுத்து குடியிருப்பு, வணிக நிறுவன வாடகை என்ற அளவில் மக்களை கடனாளியாக வைத்திருக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன.

இப்படி கிடைக்கும் பல்வேறு தகவல்கள் மிரள வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற மிக முக்கிய பண்டிகை காலம் தவிர அவர்கள் நகரத்திற்கு வந்து செலவழித்தது மிக மிக அரிது. அதை சுக்கு கோடியாக (சுக்குநூறாக) உடைத்து 500, 1000 ரூபாய் நோட்டு விஷயத்திலேயே கிராம மக்களையும் அல்லாடும் நிலையை பார்த்தால் (இது சாம்பிள் மட்டுமே) உலகம் முழுவதும் இந்த இலுமினாட்டிகள் பின்னியிருக்கும் மாயவலையின் பிரமாண்டத்தை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

இதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பலரும் சொல்லும் யோசனைகளை யாரும் அமல்படுத்த முன்வரப்போவதில்லை. 

சுருக்கமாக சொன்னால், நமது குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள், வீட்டில் உள்ள தாய், தங்கை, மனைவிக்கு எதுவும் தெரியாது என்று ஓரம் கட்டிவிட்டு தானே எல்லா முடிவையும் எடுப்பார்கள். பெண்கள் பொறுப்பில் விட்டுவிட்டால் எதாவது பெரிய நஷ்டத்தில் விட்டு விடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.

இலுமினாட்டிகள் விஷயத்திலும் இதுதான். உலக மக்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் எல்லா பவரையும் நம் இருபது குடும்பங்கள் மட்டும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டி வைக்க வேண்டும். மக்களை இந்த மாய வலையை விட்டு சுதந்திரமாக இயங்க விட்டால் உலகத்தை வீணாக்கி விடுவார்கள் என்று நினைத்து செயல்படுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இதை எல்லாம் பார்க்கும்போது, அதானி, அம்பானிக்கு கூட எதுவும் தெரியாது என்று கூறி அவர்கள் இயக்கிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. அது உண்மையாக இருந்தால் நாமெல்லாம் எந்த மூலை?... எவ்வளவு போட்டி, பொறாமை, வெட்டு, குத்து... உயிரிழப்பு..... தலைய சுத்துது....

இப்படில்லாம் கூட நடக்குமா?

இப்படிக்கு
திருவாரூர் சரவணன்.

Thursday, November 24, 2016

சினிமா சினிமா சினிமா

ஒரு காலத்துல சினிமா பார்த்தே கெட்டு குட்டிச்சுவரா  போயிருவனு சொல்லாத பெற்றோரே கிடையாது .அந்த காலத்து வீடியோ காஃபி பார்ல பலான படமே பார்த்தும் நான் கெட்டுப்போகல. (அல்லது கெட்டுப்போனதா நினைக்கல). நம்ம ஜாதகத்துல 10 ல ராகு இருந்ததாலயா? அல்லது பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோட கேது சேர்ந்து வித்யா ஸ்தானத்துல இருந்ததாலயா கன்ஃபார்மா சொல்ல மிடியலின்னாலும் சினிமாவால நான் பெற்றது அதிகம்.

இதை எல்லாம் ஏற்கெனவே என் ப்ளாக்ல அப்பப்போ பிட்டு பிட்டா எழுதியிருக்கன். உங்களுக்கு பொறுமை இருந்தா அடுக்குமல்லி , தம்பிக்கு எந்த ஊரு ,கிராதகுடு இப்படி தேடிப்பாருங்க.

நமக்கு சினிமா கொடுத்த காட் ஃபாதர் என்.டி.ஆர். அவரோட ஆளுமை -அதன் வீச்சு என்னன்னு தெரியாமயே அவர்பால் கவரப்பட்டதுக்கு காரணம்  பூர்வ புண்ணியம்னு தான் நினைக்கேன்.

நம்ம கேரக்டருக்கு கொய்ட் ஆப்போசிட் கேரக்டர் என்.டி.ஆரோடது. (இது அந்த காலத்துல நம்ம    நிலையை வச்சு சொன்னது)  அவர் விடியல் 3 மணிக்கு எந்திரிச்சுருவாராம் .நாம மதியம் 12. இங்கே ஆரம்பிக்குது கான்ட் ராடிக்சன்.ஆனாலும் ஒரு புள்ளியிலருந்து கோடு போட்டா  நம்ம சுயமரியாதை , தன்னம்பிக்கையில ஆரம்பிச்சு ஆன்மீகம்வரை என்.டி.ஆர்ல தான் போய் முடியுது.

லேட்டஸ்டா யோக வேதம்னு ஒரு ஒரு புஸ்தவம் தருவிச்சு படிச்சேன். 400+ ரூவா கொடுத்து வாங்கின புஸ்தவத்தோட சாரம் தலீவரோட ஒரு படத்துல ஒரு பாட்டுல கடேசி சரணத்துல பைசல்னா பார்த்துக்கங்களேன் .
நிற்க . வறுமையால கூட சோத்துக்கில்லாத காலத்துல கூட சினிமாவை என் வாழ்க்கையில இருந்து பிரிக்க முடியல. சினிமா பார்த்து நாளாச்சேனு நினைச்சா அன்னைக்குதேன் அமாவாசை சோறு சிக்கும். கடமைகளை எல்லாம் முடிச்சுட்டு உடு ஜூட்டு.

சினிமாவோட இருந்த தொடர்பு எப்ப கட் ஆச்சுன்னு சரியா ஞா இல்லை. 1997 ஆ ..அடுத்த வருசமா தெரியல அன்னமய்யா -ஸ்ரீராம தாஸு படங்களை பல முறை பார்த்தன். அதே டைரக்டர் பால கிருஷ்ணாவை வச்சு அவரை கிருஷ்ணரா போட்டு ஒரு படம் பண்ணாரு. அதை பார்த்ததுல ஆரம்பிச்சது சனி .சினிமாவை நான் மறந்து போக காரணம் நீங்கல்லாம் வீடியோ மீம்ஸா போட்டு கலாய்க்கிற பாலகிருஷ்ணா படம் தான். கருமம் பேர் கூட ஞா வல்ல. அதோட அலர்ஜி ஆயிருச்சு.

பிறவு நாம தியேட்டருக்கு போயி படம் பார்த்ததெல்லாம் விரல் விட்டு எண்ணிரலாம். சிவாஜி -உத்தம வில்லன் -கடேசியா கபாலி.

சமீப காலமா (ஒரு ஆறு மாசம்?) மறுபடி பழைய சீசன் ஆரம்பிச்சுருக்கு. நிறைய பார்க்கிறேன். மனசுல பதியவே மாட்டேங்குது . எழுதியாவது பார்க்கலாம்னு நினைக்கேன். அப்பமாச்சும் மனசுல பதியுதா  பார்ப்பம்

Friday, November 18, 2016

நான் கைது செய்யப்பட்டால்

அண்ணே வணக்கம்ணே !
உங்கள கைது பண்ற அளவுக்கு என்னங்க ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.
இன்னைக்கு நாடே பத்தி எரியற கரன்சி ரத்து மேட்டரை நாமதேன் 1986 லருந்து தனிப்பட்ட வகையிலயும் 1992 ஜன சக்தி இதழ்ல பிரசுரமான பிறவு அஃபிஷியலாவும் புலம்பிக்கிட்டிருக்கம்.

இது நம்ம ஐந்து அம்ச திட்டத்துல ஒரு அம்சம்  அவ்ளதேன். இந்த செனேரியோல 2014 ஜூலையில மோடிக்கும் அனுப்பினம் . ஆர்.டி.ஐ படி கேட்டதுல 2015 ,மார்ச்சுல பிரதமர் அலுவலகம் "ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்"னுட்டு ஒரு பதிலை அனுப்பினாய்ங்க.

நாம பிரதமருக்கு அனுப்பின கன்டென்ட்லருந்து ஒரு சில அம்சங்களை அவிக சுட ஆரம்பிச்சாய்ங்க. என்னடா இது இமிசைன்னு பாம்லெட்டா /பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கும்-வி ஐ பிங்களுக்கும் யதேஷ்டமா அனுப்ப ஆரம்பிச்சம்.

இதன் தொடர்ச்சியா லோக்சபா ஸ்பீக்கருக்கும் அனுப்பினம் (தமிழ் 50/தெலுங்கு 50) .தமிழ் தெலுங்கு எம்பிக்களுக்கு கொடுக்க  சொல்லி  கேட்டிருந்தம் .கண்டுக்கல. ஆர்.டி.ஐ படி கேட்டம்.  ரிப்ளை பாக்ஸை காலியா விட்டு பதில் அனுப்பினானுவ.

இந்த நிலையில கடந்த 8 ஆம் தேதி கரன்சி ரத்து அறிவிப்பு வந்தது. செரி நம்மை மாதிரி பலரும் யோசனை சொன்னதா கதை பண்ணி ராமர் கோவில் சுண்டல் மாதிரி எதுனா லெட்டர் வரும்னு வெய்ட் பண்ணேன். வரல.

செவ்வாயோட செவ்வாய் நவ.15 ஆம் தேதி லோக்கல் ப்ரஸ் க்ளப்ல ப்ரஸ் மீட் வச்சு கிழி கிழின்னு கிழிச்சன். ஒரே ஒரு லோக்கல் சானல்ல மட்டும் வந்தது .

அவிக நம்ம திட்டத்தின் ஐந்து அம்சங்களையும் -மோடிக்கு நாம டோக்கனா நன்றி சொல்ற மேட்டரையும் மட்டும் எடிட் பண்ணி போட்டாய்ங்க. மத்த பத்திரிக்கை எதுலயும் மேட்டர் வல்ல.

ஆனால் போகவேண்டியவிக காதுக்கெல்லாம் நிச்சயமா போயிருக்கும் .போதாக்குறைக்கு முக நூல்ல வேற மொத்த ப்ரஸ் மீட்டையும் போட்டு நாஸ்தி பண்ணியாச்சு.

மோடியும் லேடி ஸ்டைலுக்கு வந்துட்டாப்ல இருக்கு. ஈரோட்ல ஆரோ ஒரு இஸ்லாமிய இளைஞரை கைது பண்ணியிருக்காய்ங்க. ஆக நாமளும் கைது செய்யப்படலாம். இது ஒரு சான்ஸ்.

அடுத்த சான்ஸு?? எங்க ஊரு சந்திரபாபு நாயுடு. கரன்சி ரத்து மேட்டரை மோடி அறிவிக்கிறதுக்கு சரியா ஒரு மாசம் மிந்தி அண்ணாத்த மோடிக்கு இதே மேட்டரை வலியுறுத்து லட்டர் போடறாரு.  நம்ம ப்ரஸ் மீட்ல இதையும் கிளிச்சம்.

கொய்யால 2016, ஜூலை 12 ஆம் தேதி நான் போட்ட லெட்டர்லருந்து சுட்டயா? பிச்சைக்காரன் சினிமா பார்த்தயா ? அல்லது தில்லியிலருந்து ரகசிய தகவல் வந்ததா இதான் கேள்வி.

இந்த ரெண்டு ஆப்பு போதாதுன்னு ஜெ'வுக்கு அப்போலோ முகவரிக்கு ஒரு வீடியோ மடலும் அனுப்பியிருக்கன்.

ஆக இந்த மேட்டர்ல   நாம கைதாக 3 சோர்ஸ் இருக்கு. ஒரு வேளை நெஜமாலுமே கைதானா நீங்க என்ன பண்ணனும்?

ஒன்னுமில்லை   ஃபேஸ்புக்ல நம்ம ஐடில இருந்து என் மவளோ /அல்லது நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கும் அந்த ஐவரில் ஒருவரோ கைது தகவலை தெரிவிப்பாய்ங்க. அப்படி தெரிவிச்சதும்  அந்த பதிவையும் இந்த பதிவையும்  சகட்டுமேனிக்கு கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க. போதும்.

அவியளா "ச்சீ ..போ"ன்னு வெளிய விடற வரை ஜாமீனும் கேட்கமாட்டம் -மன்னாப்பும் கேட்க மாட்டம். ஓகேவா? டீலா ! நோ டீலா !!

Tuesday, November 8, 2016

பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம்?

Footnote: ஆந்திர முதல்வர் அலுவலகம் அஃபிஷியலா திட்டத்தை கேட்டு போட்ட நோட்

அண்ணே வணக்கம்ணே !
கவுண்டமணி ஏதோ படத்துல "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன"ம்பாரே அப்படியொரு நிலையில இன்னைக்கு மோடி நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 ல முக்கியமான ஒரு அம்சத்தை அறிவிச்சிருக்காரு.

அஃதாவது  நவம்பர்8 நள்ளிரவு முதல் ரூ.500,ரூ 1000 நோட்டுல்லாம் செல்லாதுங்கறது அறிவிப்போட சாராம்சம்.

ஆனால் வங்கியில டெப்பாசிட் பண்ணிக்கலாமாம். ஆக இத்தனை காலம் வரி செலுத்தாத கருப்பு பணமா இருந்த பணம்லாம்   டேக்சபிள் ஆயிரும். இந்த ஒரு அறிவிப்பால நாட்டுக்குள்ள இருக்கிற எல்லா கருப்பு பணமும் வெள்ளை ஆயிருமான்னு கேட்டா ஊஹூம்.

படா கேப்பிடலிஸ்ட்லாம் தன் உத்யோகஸ்தர்கள் பேர்லயும் / கஞ்சிக்கு வழியில்லாத சொந்தக்காரவிக பேர்லயும் டெப்பாசிட் பண்ணி டேக்சஷனை குறைக்கப்பார்ப்பான்.

இதை சனம் ஜஸ்ட் ஆப்ளிகேஷனுக்கு செய்வாங்களான்னா ஊஹூம். பர்சண்டேஜ் என்னன்னு கேட்பாய்ங்க. மேலும் இடையில திடீர்னு ரிவர்ஸ் கியர் போடவும் வாய்ப்பிருக்கு. இத்தனை நாள் நாயே பேயேன்னு அலட்டிவன் கிட்டே சூதானமா நடந்துக்கனும்.

சாதாரணமா இப்படி கருப்பு பணம் வச்சிருக்கிறவிக சூனாவ நம்பாதவனாத்தான் இருப்பான். ஆகவே அதிக சதவீதம் கருப்புபணம் வெள்ளையாகி -அரசுக்கு வருமானம் கூட வாய்ப்பிருக்கு. இல்லேங்கல.

என்னைக்கேட்டா வரிவிதிப்பில் லல்லு  ஃபார்முலாவ இம்ப்ளிமென்ட் பண்ணனும். (ரயில்வே கட்டணத்தை மானாவாரியா குறைச்சு -அதிகம் பேரை பயணம் செய்ய வச்ச மாதிரி ) .இன்னைக்கிருக்கிற வரிவிதிப்புல்லாம் "சம்பாதிக்கிறவனுக்கு போடற அவராதம் மாதிரி "

நிற்க இந்த கரன்சி ரத்து பண்ற மேட்டர்லாம் புதுசு ஒன்னும் கிடையாது . முகமது பின் துக்ளக் நாட் நாட்லயே ட்ரை பண்ண மேட்டருதான்.
மொரார்ஜி தேசாய் ,ஏன் இந்திரா கூட டச்சு பண்ண சப்ஜெக்டுதேன். லேட்டஸ்டா 2005 லனு ஞா யுபிஏ சர்க்கார்ல கூட குறிப்பிட்ட வருசத்துக்கு மிந்தி அச்சடிச்சது செல்லாதுன்னு ரூல் கொண்டு வந்தாய்ங்க.

இது மட்டுமில்ல   நம்ம திட்டத்துல உள்ள அஞ்சு அம்சங்களுமே புதுசொன்னும் கிடையாது. திட்டத்தோட பெசாலிட்டி என்னன்னா அஞ்சு அம்சங்களின் சேர்மானம் தான்.

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்

-இது ஏற்கெனவே பல நாடுகள்ள அமல்ல இருக்கு .இந்திரா எமர்ஜென்சி சமயத்துல இதை கொண்டு வர ட்ரை பண்ணதுண்டு.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்

-போன சென்னை வெள்ள சமயத்துல கூட ராணுவத்தை டெப்யூட் பண்ணாய்ங்கல்ல.

3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
-அண்டை தேசங்களோட உறவை பலப்படுத்திக்கிட்டா ராணுவத்தை கொண்டே கூட செய்யலாம். மோடி சர்க்கார் என்னடான்னா கங்கையோட புனிதத்தை காப்பாத்த ராணுவத்தை உபயோகிப்போம்ங்குது.

4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.

-இது ரஷ்யன் மாடல்.ஆனால் அங்கே வலுக்கட்டாயமா அடிச்சு பிடுங்கி அரசே விவசாயம் பார்த்ததா ஞா.

5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.

இந்த ஐந்து அம்சங்களை இன் வேரியஸ் மோட் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் மோடிஜிக்கு தெரியப்படுத்தியிருக்கம். பார்ப்பம் பிச்சைக்காரன் சினிமா டைரக்டருக்கோ அ எனக்கோ பிரதமர் அலுவலகத்துலருந்து நன்றி சொல்லி லெட்டர் வருதான்னு ..

PMO implements my innovative ideas

Thursday, October 27, 2016

குஷ்புவும் -ஸ்ரேயாவும் (சிறுகதை)


மாலை டிஃபனுக்கு பின் அந்த நடுத்தர ஓட்டலில் இருந்து வெளியே வந்து நின்ற போது தான் அவள் எதிர்ப்பட்டாள்.

அவளை இந்த நிலையில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இரண்டே வருடங்களில் இத்தனை மாற்றமா?

அவள் அப்பா பெரிய தொழிலதிபர். கல்லூரி காலத்தில் புசுபுசுவென்று இருப்பாள்.அவளை காலையில் ட்ராப் செய்ய ஒரு காரும்.. மாலையில் பிக் அப் செய்ய ஒரு காரும் வரும்.

என்னதான் மனதில் காதல் பொங்கி வழிந்தாலும் தூக்கத்தில் கூட அதை உளறிவிடமுடியாத நடுத்தர குடும்பத்து அக்மார்க் ஹிப்பாக்ரட் நான். படித்து முடித்து அதே கல்லூரியில் லெக்சரனாக குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.

கல்யாணம் கட்டி ஒன்னுக்கு இரண்டாய் குழந்தைகள். என் வரை திருப்தியான வாழ்க்கை தான். வருவது அவள் தானா? என்ற சந்தேகத்தில் பவர் க்ளாஸை கழட்டி துடைத்து போட்டு கொண்டேன். போன வருசம் தான்  ஷுகர்  ஆஜர் சார் சொல்லியிருக்க - வாயை கட்டா விட்டால்  மாத்திரைகளில் இருந்து சீக்கிரமே இன்சுலினுக்கு மாற வேண்டி வரும் என்று டாக்டர் பயமுறுத்தி இருக்கிறார்.

அவளே தான். ஒல்லியோ ஒல்லியாக பழைய குஷ்பு தனம் எல்லாம் ஆவியாகி ரொம்பவே இளைத்திருக்கிறாள். வசதியான இடத்தில் தானே திருமணம் கூட தகைந்தது?

குழம்பிப்போய் சிந்தித்து கொண்டிருந்த வேளை அருகில் வந்து என் தோளை தட்டி "ஏய்.. நீ டபுள்யு.ஆர் .ராஜேஷ் தானே? என்ன இது ரெண்டு வருசத்துல பவர் க்ளாஸு ,தொந்தி எல்லாம் வச்சு அங்கிள் மாதிரி ஆயிட்டிருக்கே " என்றாள்.

 கிட்டே இருந்து பார்க்கையில் லேசாக  ஸ்ரேயா போலத்தான் தெரிகிறாள்.

நான் அதிர்ந்து போய் -சமாளித்து கொண்டு "அது சரி ..நீ என்ன இப்படி இளைச்சிருக்கே? எனி ப்ராப்ளம்" என்றேன்.

அவள் "பேலியோ மேன்" என்றாள்.




Wednesday, September 14, 2016

ஆசைகளின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !

உலக துன்பங்களுக்கு ஆசையே காரணம்னு புத்தர் சொன்னார். எந்த பிரச்சினையா இருந்தாலும் அதனோட மூலம் என்னன்னு தெரியாம தீர்த்து வைக்கவே முடியாது .இந்த பதிவுல ஆசைகளின் மூலம் என்னனு சொல்லப்போறேன்.

ஆசை  வெட்கமறியாது ! காமாதுரானாம் நா பயம் நா லஜ்ஜானு சொல்லியிருக்காங்க. அதாவது காம வயப்பட்டவனுக்கு பயமோ வெட்கமோ இருக்காதாம். காமம்ங்கறது உயிரின் அடிப்படை -அடி நாதம். அதை நாம என்னைக்குமே எதிர்த்ததில்லை. இன்னம் சொல்லப்போனா பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதியே வழங்கிரனுங்கறதுதான் நம்ம ஸ்டாண்ட். அதை விடுங்க..

காமம்ங்கற வார்த்தைக்கு வெறுமனே செக்ஸ் மட்டும் பொருளில்லை . ஆசைகளும் தான். ஆசைன்னா ஸ்பைஸ் வச்சுக்கறதுலருந்து - ஏரியாவுக்கு ஒரு ஃப்ளாட் வாங்கறது வரை ஆசைதான். "அந்த"ஆசை தீராத சன்மங்க தான் /அதுக்கு குவாலிஃபைடா இல்லாத சனம் தான்/ அதுக்கான வேலிட்டிட்டி தீர்ந்து போன சன்மங்க தான் இப்படி அலையுதுங்கறதுதான் என் ஹஞ்ச்.

நம்ம ஆசைகளை எல்லாம் 3 கேட்டகிரியா பிரிச்சுக்கலாம் மொத கேட்டகிரி  "அதுக்கு" ப்ரிப்பேர் ஆறதுக்குண்டா ஏற்பாடுகள் (கல்வி/வேலை /சம்பளம்/ஃப்ளாட்/க்யாஸ் சிலிண்டர்) . அடுத்தது அது கிடைச்ச பிறவு பலகீனமடையும் உடலுக்கு/மனசுக்கு  ஒத்தாசையா /இதம்மா சில ஏற்பாடுகள். அடுத்த கேட்டகிரியில தான் அவலை நினைச்சு உரலை இடிக்கிற காரியங்கள்ளாம் வருது .

இதுல உள்ள சோகம் என்னடான்னா எந்தவித ப்ரிப்பிரேஷனும் இல்லாம இயற்கை ஒரு கொடை போல /பம்பர் பரிசு போல செக்ஸ் பவரை கொடுத்திருக்கு .அது பொங்கி சீறும் போது வடிகால் கிடையாது . காளை மாட்டுக்கு புல்லை காட்டி ரேக்கி விட்டே வேலை வாங்கறாப்ல படிப்பை முடிச்சாச்சுன்னா வேலை -வேலை கிடைச்சதுமே பலாந்து பலாந்துனு குடும்பம்/சமூகம் எல்லாமே ட்ரில் வாங்குது .

எப்ப இவன் குவாலிஃபைட் ஆகிறானோ அதுக்குள்ளயே இயற்கை தன் கொடையை அளந்து கொடுக்க ஆரம்பிச்சிருது . இவன் எதுக்கு குவாலிஃபைடாகனும்னு ஒர்க் அவுட் பண்ணானோ அந்த ஒர்க் அவுட்லாம் சேர்ந்து அந்த அசலான மேட்டருக்கே ஆப்பு வச்சிருது .

இப்ப அந்த அசலான மேட்டர்ல உள்ள டெஃப்சிட்டை ஈடு கட்ட என்னென்ன இழவையோ இட்டு கட்ட வேண்டியதாயிருது. ஒரு கட்டத்துல ஈடு கட்டவே முடியாதுங்கற தெளிவு வந்தோன்ன இவரு வேட்டைக்கு புறப்படுறாரு. தங்க வேட்டை /பண வேட்டை .ஜஸ்ட் எஸ்கேப்பிசம்.

யதார்த்தம் என்னன்னா பலான மேட்டரு மட்டும் பக்காவா இருந்தா எந்த டெக்கரெஷனும் தேவையில்லை. பலான மேட்டரு புட்டுக்குச்சின்னா எந்த டெக்கரேஷனும் ஒர்க் அவுட் ஆகாது.

பொஞ்சாதிக்கு செக்ஸ் கொடுக்க முடியாதவன் அவ பெத்ததுக்கு சொத்து சேர்க்கறதா பம்மாத்து பண்றான். என்னா லாஜிக்கு?

ஆசைகளின் சில்லி வேரை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தா ஆசைகளுக்கு முடிவே இல்லை .
ஆசையோட ஆணி வேரை கெல்லி எடுத்து பார்த்தாச்சுன்னா ஆசைகளுக்கு அர்த்தமே இல்லை ..


Friday, September 9, 2016

மோடியின் நிஜமுகம் -ஜெ'வின் கோரமுகம்






#கவர்ஸ்டோரி #அதிரிபுதிரிதகவல்கள் #ஜெஅரசின்கோரமுகம் #மோடியின்நிஜமுகம்






பாஸ் !


இந்த மேட்டரு கோர்வையாவே இல்லாம உதிரியா இருக்கிறதா தோனினாலும் ஒரு கவர் ஸ்டோரிக்குண்டான "தாக்கத்" இதுல இருக்கு. அதுக்கு நான் கியாரண்டி.


இருந்தாலும் இதை மீடியா முதல் முக நூல் பிரபலங்கள் வரை யாரும் கண்டுக்கறதே இல்லை. அதான் இந்த ஸ்லாங் மற்றும் அலட்சியத்துக்கு காரணம்.


நீங்க இதை பொதுவெளியில போட்டு உடைக்கிறதா இருந்தா எந்த டீடெய்ல் /எத்தனை ஆதாரம் வேணம்னாலும் தரேன்.


ஜன நாயகம்/மக்களாட்சின்னா என்ன? மக்கள் தங்களை தாங்களே ஆள்வது .இந்தியாவுல சனத்தொகை சாஸ்தி. ஸ்விஸ் மாதிரி நேரிடையா ஆள முடியாதுங்கறதால மக்கள் தங்கள் பிரதி நிதிகளை அனுப்பி வைக்கிறாய்ங்க.


அவர்கள் தான் மக்கள் கருத்தை பிரதிபலிக்கனும். மக்கள் நலன் நாடும் சட்டங்கள் செய்யனும்.


அதுக்காவ மக்கள் தங்கள் கருத்தையே சொல்ல கூடாதுன்னும்/மக்கள் கருத்தை மேற்படி பிரதி நிதிகள் பிரதிபலிக்காவிட்டாலும் அடுத்த தேர்தலுக்காக வெய்ட் பண்ணனும்ங்கறதும் கயவாளித்தனம்.


மக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியா தங்கள் பிரதி நிதிகளுக்கோ /அவர்களை வழி நடத்தும் சபா நாயகர்களுக்கோ அனுப்ப முடியும். அவர் தம் கட்சி தலைமைக்கும் அனுப்ப முடியும்.


அவற்றை பரிசீலிக்க வேண்டியது அவர்களின் கடமை . ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் தலை எழுத்து. கு.பட்சம் நிராகரிக்கவாவது செய்யனும்ல?


சுய புத்திதான் இல்லை. சொல் புத்தியாவது இருக்கும்னு நினைச்சது தப்பா? இப்படி நினைத்துதான் இந்த நாடும்,இந்திய மானிலங்களும் உருப்பட திட்டம் தயாரிச்சு அனுப்பினம்.ஆனால் எவனும் கண்டுக்கல. கண்டுக்காட்டியும் பரவால்ல. கொய்யால ஃப்ராடு பண்றானுவ.


பிரதமர் அலுவலகம் என்னடான்னா 2014 ஜூலை முதல் 2015 மார்ச் வரை டைம் எடுத்துக்கிட்டு -அதுவும் ஆர்.டி.ஐல கேட்ட பிறவு " ரிசீவ்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்"ங்குது . ரிக்கார்ட்ல வச்சு என்ன பண்ணுவானுவன்னு நமக்கு தெரியாதா என்ன? (லேசு பாசா சுடவும் ஆரம்பிச்சுட்டாய்ங்க) இதை எல்லாம் இந்த வீடியோவுல சொல்லியிருக்கன்.

https://youtu.be/LVbSriWmZBQ







தமிழ் நாடு முதல்வர் சிறப்பு பிரிவு என்னடான்னா டாஸ்மாக் எம்.டிக்கு ஃபார்வர்ட் பண்ணுது . டாஸ்மாக் எம்டி தான் பதில் தராரு.


வக்கணையா கேள்வி கேட்டு வீடியோ போட்டு வீடியோவோட தொடுப்பையும் கொடுத்து  தனிப்பிரிவுக்கு எழுதினா......... மறுபடி டாஸ்மாக் எம்.டி.தான் பதில்கொடுக்கிறாரு .


தமிழகத்தை ஆள்றது முதல்வரா? அல்லது டாஸ்மாக் எம்.டியா? இந்த கேள்வியை கேட்டு முக நூல்ல அலப்பறை பண்றம் -கலைஞர்/ஸ்டாலினுக்கெல்லாம் புகார் அனுப்பறம். முக நூல்ல அப்டேட் பண்றம்.
திடீர்னு டாஸ்மாக் எம்.டியும் -முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியும் "மாற்றல்" ஆனால் வெளி உலகத்துக்கு இந்த மாற்றலுக்கு பின்னானா காரணம் தெரியாது. சோகம் !


திமுகவுக்கு நீதிபோதனை செய்யும் சபா நாயகர் வருச கணக்கா நம்ம திட்ட பிரதிகளை டிக்கி கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டே இருக்காரு ..


செரி ஆளுங்கட்சிதான் கண்டுக்கலன்னா எதிர்கட்சி தலைவர்கள் நிலையும் இதுவே.


கலைஞர்,ஸ்டாலின்,ஜகன் மோகன் ரெட்டி இப்படி ஆருமே ரெஸ்பான்ட் ஆகமாட்டேங்கிறாய்ங்க.

தாளி உன் திட்டம்லாம் சின்ன புள்ளத்தனமா இருக்குன்னு சொல்லி களட்டி விட்டுட்டாலும் பரவால்ல. ஊற வச்சு ஊறுகா போடுறாய்ங்க. அதான் கடுப்பாகுது.. தூத்தேறி ..

முக நூலில் பட்டையை கிளப்பும் .................... போன்றவர்கள் இந்த சப்ஜெக்டை கண்டுக்கிட்டா பத்திக்கும்.


(புள்ளியிட்ட இடத்தை உங்கள் ஆதர்ச பதிவரின் பெயர்கொண்டு நிரப்பி கொள்ளவும்). அவர்கள் பார்வைக்கு செல்ல இன் பாக்ஸ் வழியே சொல்விங்களோ?

சகட்டுமேனிக்கு ஷேர் பண்ணுவிகளோ உங்க விருப்பம்


என் திட்டங்கள் சுருக்கமாக:



தேச கனவுகள் (இந்தியாவின் முன்னேற்றத்துக்கான ப்ளூ ப்ரிண்ட்)


http://kavithai07.blogspot.in/p/blog-page.html



மானிலகனவுகள் (மானில அரசுகளின் நிர்வாக செலவை குறைத்து -மக்கள் மேல் பாரம் சுமத்தாமல் உபரி வருவாய் ஈட்ட யோசனைகள்)


http://kavithai07.blogspot.in/2016/09/2016.html



நரேந்திர மோடிக்கு அனுப்பிய யோசனைகள்


http://anubavajothidam.com/?p=12051



ஜெ'வை கிளிச்சு போட்ட வீடியோ


https://youtu.be/1kTric-nCcg



இதை எல்லாம் எப்படியாவது பொதுவெளிக்கு கொண்டு போகனும்னு துடிக்கிறேன். எப்பலருந்து? கடந்த 16 வருசமா.


நீங்களாவது உங்க டைம்லைன்ல/உங்க வலைப்பூவில்/வலைதளத்தில் போடுங்க. தகிரியமான ரிப்போர்ட்டர்ஸ் ஆருனா உங்க வட்டத்துல இருந்தா அவியளுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க ப்ளீஸ் ..






தங்கள் உண்மையுள்ள,


சித்தூர்.முருகேசன்









வாட்சப்: 9397036815

Thursday, September 8, 2016

மானிலகனவுகள் (அப்டேட்டட்2016)

அண்ணே ! வணக்கம்ணே !

மக்கள் மேல் பாரம் சுமத்தாமல்  மானில அரசின் வருவாயை கூட்டி /நிர்வாக செலவுகளை குறைத்து /அப்படியே சனத்துக்கும் பெட்டர் கவர்னென்ஸ் கிடைக்க வழி செய்யும் யோசனைகள்.

1.அரசு -அரசு சார்  நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ சோதனைகள் -  உடல் பருமன் மற்றும் அவர் தம் வேலை திறனுக்கு பங்கம் விளைவிக்கும் சுகவீனம் இருந்தால் கட்டாய ஓய்வு (பாதிசம்பளத்துடன்) ஆல்கஹால் இருந்தால் டி-அடிக்சன் சிகிச்சைக்கு அனுப்பவேண்டும். ஃபிட்னஸ் சர்ட்டிஃபிக்கேட்டுடன் வந்த பிறகு அடுத்த வரிசை எண்ணில் விவரித்திருக்கும்  அப்டேஷன் டெஸ்ட்.

2.உடல் ரீதியான தேர்வில் தேறியவர்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் உலக/தேசீய/மானில அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் /தனியார் துறை தாக்கம் + அரசு  நிறுவனங்கள் தம்மை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் -அதற்கான வழி முறைகள் குறித்து பயிற்சி -தேர்வு .தோற்றவர்களுக்கு பாதி சம்பளத்துடன் கட்டாய ஓய்வு -பிறகு மறு தேர்வு -அதிலும் தோற்றால் கோல்டன் ஷேக் ஹேண்ட்.

3.மேற்படி அரசு ஆணை வெளியிடும் முன்பாக தற்போதுள்ள காலியிடங்கள் + மேற்படி தேர்வுகளில் தோற்கும் வாய்ப்புள்ள ஊழியர்களின் பணியிடங்களை ரீ ஃபில் செய்யும் வகையில் தேவையான குறைந்த பட்ச தகுதி+ எதிர்பார்க்கும்  அதிகபட்ச லீஸ்ட் சேலரி அடிப்படையில் ஆண்/பெண்களை  தேர்வு செய்து /பயிற்சி கொடுத்து ரிசர்வில் வைத்துக்கொள்ள வேண்டும்.

4.கு.பட்சம் டிகிரி படித்து முடித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகாத - நிருத்யோகர்களாய் இருக்கும் இளைஞர் இளைஞியரை  11 மாத காலத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்து உர்ய பயிற்சி தந்து அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் துறைகள்/அவை  சார்ந்த அலுவலகங்கள்/அவற்றை நாடி வரும் பொதுமக்களை பேட்டி கண்டு எங்கெல்லாம் லீக்கேஜ் இருக்கிறது /அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று அறிக்கை வாங்கலாம். (வீடியோக்களாக)

5.மக்களில் பத்தாம் வகுப்பு படித்து 18-35 வயதுக்குள் திருமணம் இன்றி /விவாகரத்தாகி /மனைவியை இழந்து வாழும் அனைவருக்கும் போலீஸ் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். இவர்களை ஸ்டான்ட் பையில் வைத்து ஹானரோரியம் போல ஒரு தொகையை வழங்கலாம்.

குற்றங்கள்/குற்றவாளிகள்  குறித்த தகவல்களை சேகரித்தல் உள் துறை அமைச்சகத்துக்கு தருதல் இவர்கள் வேலையாக இருக்க வேண்டும்.
(எச்சரிக்கை: 4,5 வரிசை எண்களில் சொன்ன நியமனங்களுக்கு முன் கட்டாயம் மருத்துவ பரிசோதனை +அப்டேஷன் டெஸ்ட்  நடந்தேற வேண்டும்)

5.பொதுமக்கள் தாமாக முன் வந்து தம்மை குறித்த விவரங்களை ஆன்லைன் வழியே கொடுக்கும் ஏற்பாடு .அதன் ப்ரிண்ட் அவுட்டுடன் ஒரு அஃபிடவிட் கட்டாயம் .(தகவல்கள் உண்மை.தவறெனில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்)  உடனடியாக எந்த சரிப்பார்ப்பும் இன்றி இந்த விவரங்களின் அடிப்படையில் நல திட்டங்கள் /வளர்ச்சி திட்டங்களில் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். பிறகு  ரேண்டமா கிராஸ் செக் பண்ணி பத்து பேரை உள்ளே வச்சா தவறான தகவல் கொடுத்தவன்லாம் திருத்திருவான்/கழண்டுக்குவான்.

6.அரசு விளம்பரங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமான தினசரியில் மட்டுமே வெளியாக வேண்டும் . இந்த தினசரிக்கு வளரும் எழுத்தாளர்கள் கு.பட்ச ஊதியத்துக்கு ஜம்ப்ளிங் முறையில் எடிட்டர் ஷிப் வகிக்கலாம்.

7.அரசு கட்டிடங்களை டைம் ஷேர் முறையில் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம். அதிக பட்ச காப்பு தொகையுடன்.

8 இதற்கு முன் அரசு கட்டிடங்களை நல்ல வெளிச்சம்/காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யலாம்.தாமே ஆல்ட்டர் செய்து உபயோகித்துக்கொள்ள முன் வரும் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை.

9.இது மட்டுமல்ல அரசு கட்டிடங்களை உபரி வருவாய் ஈட்டித்தரும் வகையில் திட்டமிட வேண்டும். பொருத்தமான இடங்களில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்/பயோகியாஸ்/சோலார் பவர்/காற்றாலை/மரம் நடுதல் (பலன் தரும்)

10. பாழடைந்த அரசு கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டி டைம் ஷேர் முறையில் உபயோகித்துக்கொள்ள முன் வரும் தனியார் நிறுவனங்களுக்கு உரிய காப்பு தொகையுடன் உடனடி அனுமதி .

11.அரசு பேருந்து நிலையங்களில்  சுற்றிலும் பில்லர் அமைத்து பறக்கும் பாலம் கணக்காய் கட்டி அதன் மேல் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் . BOT முறையில்.
_____________________

12.வாரத்துல ஒரு நாளை மாசு எதிர்ப்பு தினமா கடை பிடிக்கனும். பேருந்துகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தடை (பாதுகாப்பு - தீயணைப்பு - மருத்துவ அத்யாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு விதி விலக்கு ) சைக்கிளுக்கு வரி விலக்கு . டூ வீலர்ஸ்/கார்/வேன் களுக்கு மாசு வரி.வார நாட்களில் தில்லி கேஜ்ரிவால் ஃபார்முலாவை அமல் படுத்தலாம்.

13.போலீஸ் உட்பட அனைத்து துறைகளுக்கும் மக்கள் அளிக்கும் மனுவுடன் அஃபிடவிட் சேர்த்து தர உத்தரவு . 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மனுதாரருக்கு உடனடியாக ரூ.500. தவறான மனு /புகார் அளித்தவர்களுக்கு ரூ.1000 அபராதம்.

14.பஞ்சாயத்து  கூட்டம் நடக்கும் மீட்டிங் ஹால் முதல்  சட்டமன்ற ஹால் வரை ஓய்வு நாட்களுக்கு வாடகைக்கு தருதல் ( உச்சபட்ச காப்பு தொகையுடன்)

15.அரசு போக்குவரத்து ஊழியர்கள்,முன்னாள் ஊழியர்கள்,பயணிகள் இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒரு கூட்டுறவு சங்கம். என்ட் ரன்ஸ் ஃபீஸ்/ வருடாந்திர சந்தா உள்ளிட்ட தொகைகளை அரசு போக்கு வரத்து கழகத்துக்கு வட்டியில்லா கடனாக தர ஏற்பாடு .  உறுப்பினர்களுக்கு அவர்தம் பயணங்களில்  உரிய தள்ளுபடி .இதனால் அ.போ.கழகம் தன்னை அப்டேட் செய்து கொள்ளும். உறுப்பினர்களுக்கு இது நம்முடையது என்ற ஃபீல் வரும் (எரிக்க மாட்டாய்ங்க)

16.பாதுகாப்பு தேவைப்படும் அரசு வி.ஐபிக்களுக்கான வாகனங்கள் தவிர மற்ற அரசு வாகனங்கள் அனைத்தையும் க்ளோபல் டெண்டர்  அழைத்து விற்று தொலைத்தல் .(அதான் ஓலா கீலான்னு ஆயிரம் ஆப்ஷன் இருக்குல்ல?)

17.அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை காலை 6.00 முதல் மதியம் 2 வரை என்று மாற்றி விட வேண்டும். அனைத்து அலுவலக நடவடிக்கைகளையும் நெட் காஸ்டிங் செய்ய /மக்கள் பார்வையிட வாய்ப்பு தரப்பட வேண்டும்.

18.ஆடி/மார்கழி இத்யாதி மாதங்களில் நடக்கும் பத்திர பதிவுகளுக்கு தாராளமாக சலுகை வழங்குதல் .

19.ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஜப்பான் மாதிரி சின்ன சைஸ் சூட்ஸ் ஏற்பாடு செய்தல் இஸ்லாமியர்கள் வெளியூர் செல்லும் போது அந்தந்த ஊர் மசூதிகளில் தங்குவது போல் அரசு பணி நிமித்தம் வரும் அரசு ஊழியர்கள் மேற்படி சூட்ஸில் மட்டுமே தங்க உத்தரவு .

20.தினசரிகளில் அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தரும் நிறுவனங்களுக்கு சிறப்பு வரி (எலக்ட் ரானிக் மீடியா  விளம்பரத்துக்கும்  இதே போல் ஒரு சீலிங்)

22.  வீடு /அப்பார்ட்மென்ட்/கடைகளுக்கான வாடகை அக்ரிமென்ட் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். முன் பணம் அரசு  சேமிப்பு பத்திரங்களாக மட்டுமே கொடுக்க/வாங்க படவேண்டும்.   பழைய வாகன விற்பனை /கொள்முதல் விஷயத்திலும் பத்திர பதிவை  கட்டாயமாக்கலாம்.
______________

23.லைசென்ஸ் /சர்ட்டிஃபிகேட்ஸ் வழங்கும் விவகாரத்தில் அர்ஜெண்ட் ஆர்டினரி முறை . ஆர்டினரி 15 நாட்களில் .அவசரம் 24 மணி நேரத்தில் . அவசர சேவைக்கு ஒரு கட்டணம் வசூலிக்கலாம்.

24. மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் நிரந்தர தீர்வை அமல் செய்யும் வரை /தம்மால் ஏற்படும் மாசை பேலன்ஸ் செய்யும் வகையில் எத்தனை மரங்கள் நடவேண்டுமோ அத்தனை மரங்களை கட்டாயம் நட்டு/பரமாரிக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும்.

25.திருமண மாகாதவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவர்கள், தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதியற்றவரை வாழ்க்கை துணையாக பெற்றவர்கள் இணைந்து சமூக சேவை ஆற்றும் களம் ஒன்றை அமைக்க வேண்டும்.

26 ஒவ்வொரு சின்ன ஊருக்கும் ஒரு கம்யூனிட்டி ஹால் வாடகை/ மின் கட்டணம் சேர்த்து ரூ.500 க்கு கூடுதலாக இருக்க கூடாது .

மெயின்டெய்னென்ஸ் அந்த ஏரியா மகளிர்  சுய உதவி குழுக்களுக்கு தரப்பட வேண்டும். அரசு விருந்தினர் பங்களாக்களின் மெயின்டெய்னென்ஸும் இவர்களுக்கே.

27. திருமணமின்றி சேர்ந்து வாழ கோருபவர்களுக்கான பிரத்யேக சட்டம். தற்காலிக பதிவு

28. ஐம்பது பேருக்கு மேல் உணவு உண்ண கூடிய மெஸ்/ஹோட்டல்/திருமண மண்டபங்கள் பயோ கியாஸ் யூனிட் வைப்பது கட்டாயமாக்க படவேண்டும்.
29.வணிகவரி வசூல் அந்தந்த ஏரியா வணிகர் சங்கங்களுக்கு ஒப்படைக்க பட வேண்டும். உரிய பேங்க் கியாரண்டியுடன் .

30. நோய் தடுப்பு/ நோய் கட்டுப்பாடு/சிகிச்சைகள் , குற்றத்தடுப்பு ,மனித உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை ,கர்ப தடுப்பு போன்ற விஷயங்களை கருவாக கொண்டு ஷார்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்க ஏற்பாடுகள் . திரையுலக பிரபலங்கள் ஒத்துழைக்க உத்தரவு .ஸ்க்ரிப்ட் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இதற்காக போட்டிகளும் நடத்தலாம். இவற்றை திரையரங்குகள்/லோக்கல் கேபிள் நிறுவனங்கள் கட்டாயம் ஒளிபரப்ப ஏற்பாடு.

44. அரசு ஊழியர்களுக்கு யூனிஃபார்ம் - சம்பிரதாய உடைகள் - கதர் ஆடைகள் கட்டாயம். தலைமை அதிகாரியின் சேம்பர்களுக்கு கண்ணாடி கதவுகள்.

45.பாலியல் தொழிலாளிகளுக்கு  பால்வினை  நோய் தடுப்பு குறித்து  உரிய பயிற்சி அளித்து ஒர்க் பர்மிட்.

46.மானிலம் தழுவிய மேன் பவர் டேட்டா பேஸ் ஒன்று கிரியேட் செய்து அதை கணிணி மயமாக்க வேண்டும். இதில் பயிற்சி தேவைப்படுவோர்க்கு பயிற்சி /தொழில் துவங்க கடன்/மார்க்கெட்டிங் உதவி .கிராமபுற வேலை வாய்ப்பு திட்டம் போல் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம்.

47.சிறைக்கைதிகளை வெட்டியாய் வைத்து சோறு போடுவதை விட அவர்களை நகர் புற உள் கட்டுமான அபிவிருத்தியில் பங்கேற்க வைக்கலாம். கு.பட்சம் மரம் நடுதல் /அரசு நிலங்களை சீராக்குதல் /ஏரி குளங்களை தூர் வாருதல் இத்யாதி பணிகளுக்கு உபயோகிக்கலாம்.

Thursday, August 25, 2016

இருமை என்ற இருண்மை

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
பல காலத்துக்கு பிறகு  தமிழ் எழுத்தாளர்களின் சராசரி நடையில எழுத ட்ரை பண்ணியிருக்கன்.

நடை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா "மகிழ்ச்சி"


ஒவ்வொரு வாழ்விலும் இருமை தன்மை -அதாவது இரு வித போக்கு ,இருண்மை -அதாவது ஒரு வித மர்மம் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு யோகியின் சுயசரிதை படித்து கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது முறை. முதல் முறை படிக்கும் போது தெலுங்கில் இத்தனை ஃப்ளூயன்ஸி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . அடுத்து அது இரவல் புத்தகம் என்பதால் புரட்டி விட்டு திருப்பி கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது .

இந்த முறை படித்த போது இந்த ஆளு நல்லா "விடறான்யா" என்ற எண்ணம் தான் தோன்றியது, காரணம் தர்கமே இல்லாத பல விஷயங்கள்.
இவற்றை  நண்பர் ஒருவரிடம் பட்டியலிட்டு கொண்டிருந்த போது அதில்  சுய சரிதரின்  அப்பாவும் -இவர் தேடியலைந்து பிடித்த குருவும் ஒரே குருவின் சீடர்கள் என்ற கான்செப்ட்டையும் எடுத்து விட்டேன்.

அதற்கு அவர் இதே விஷயம் தன் வாழ்விலும் நடந்ததாய் கூறினார்.  தான் பல்லாண்டுகள் தேடியலைந்து பிடித்து தீட்சை பெற்ற  குருவிடமே தன் தந்தையும் தீட்சை பெற்ற கதை பின்னாளில் தெரிந்தது தான்  விஷயம்.
ஓஷோ போகிற போக்கில் அள்ளி விடும்  விதிகள் மேல் எனக்கு  நம்பிக்கை உண்டு.காரணம் அவை அச்சாக அப்ளை ஆவது தான். அவரது விதிகளுள் ஒன்று "எது உன்னை வெறுப்புக்கு உள்ளாக்குகிறதோ அதுவே உன் சாய்ஸ்/உன் இலக்கு இத்யாதி"

இதில் தூங்காத யோகி ஒருவரை பற்றி வருகிறது .அவர் சொல்வதாய் சரிதம் சொல்லும் விஷயங்கள் இரண்டு .

1.முக்தியை தருவது மலைகள் அல்ல
2.இறைவனை தன்னில் கண்டவன்/காணதுடிப்பவன் புறத்திலும் காணவேண்டும்

மேற்படி விஷயங்களின் அடர்த்தி புரிய வேண்டுமானால் சுய சரிதையில் இருந்து இரண்டு ஃப்ளாஷ் பேக்குகளை சொல்லியாக வேண்டும்.

1.சுயசரிதர் இள வயதிலிருந்தே இமயம் மீது தீராக்காதல் கொண்டவர்.அங்கு தங்கி "தவம்" செய்ய வேண்டும் என்பது அவர் வாழ் நாள் லட்சியம். யுக்தேஸ்வர் என்ற தமது குருவுடன் 6 மாத ஆசிரம வாசம் செய்த பின்னும் அவர் தடுத்த பின்னும் இமய மலைக்கு சென்றாக வேண்டும் என்று கிளம்புகிறார்.

2.தூங்காத யோகியை சந்திக்கும் முன் தாரகேஸ்வர கோவிலில் சிவலிங்கத்தை வணங்க மறுக்கிறார்.

இந்த தூங்கா யோகி எனும் கான்செப்ட் மற்றும் அவர் கூறும் இரண்டு விஷயங்கள் ரெம்பவே டச்சு பண்ணிருச்சுங்கோ.  ஒரு வேளை மேற்படி தூங்கா யோகியின் மறுபிறவி தான் நாமளோங்கற ரேஞ்சுக்கு கற்பனை விங் சிறகடிச்சிங்..

இந்த தியானம் இத்யாதில்லாம் முயற்சிங்கற அளவுல இருக்கே கண்டி -எப்பவோ ஒன்னு ரெண்டு தாட்டி ஒரு ஸ்பார்க் அடிச்சிருக்கே கண்டி நம்ம ரூட் என்னமோ நாம ஜெபம் தான்.அதும்பாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும்.

ராப்பூரா கண்விழிக்கும் போது "பொளப்பை " நினைச்சா கொஞ்சம் உதறுமே தவிர மத்ததெல்லாம் பக்காவா தான் இருக்கும். (என்ன மறு நாள் வெய்யில் ஏற ஏற கடுக்கும்) இந்த எனர்ஜிக்கு காரணம் நம்ம  நாம ஜெபம் தான்னு ஒரு ஹன்ச்.

இருமை -இருண்மை ரெண்டும் டாலி ஆய்ருச்சா?

இது இந்த யோகியின் சுயசரிதை மேட்டர்லயே இல்லிங்ணா நம்ம வாழ்க்கையில ஆதி முதல் இந்த நொடி வரை ஒர்க் அவுட் ஆயிட்டே இருக்கு .
ரெம்ப டீப்பா போனா சொந்த கதை ஆயிரும் .ஆகவே நாம ஒரு சுய சரிதை எழுதற ரேஞ்சுக்கு வரும்போது பார்த்துக்கலாம்னு அம்பேலாயிர்ரன்.

Wednesday, August 17, 2016

என்ன செய்யலாம் திமுக ?

அண்ணே வணக்கம்ணே !

வெற்றிய தவற விட்டோமே தவிர தோத்துப்போகல,ஜஸ்ட் 23 தான் வித்யாசம் . 1% தான் வித்யாசம்னு கெத்தா போயி அலப்பறை கொடுத்தாய்ங்க.
அந்தம்மா க்ளவரா சட்டசபைக்கு வராமலே செயலகத்துல உட்கார்ந்துக்கிட்டே "தூக்கி வீசிருச்சு"கலைஞர் என்னடான்னா ஆற அமர 22 ஆம் தேதி பொதுக்கூட்டம்ங்கறாரு .

பொதுக்கூட்டத்துக்கு ஆரு வரப்போறா? 90% கட்சிக்காரன் தான் வருவான். இதனால என்ன புண்ணியம்?

1.கலைஞரும் -ஸ்டாலினும் நினைச்சிருந்தா அந்த மவராசிய பேதியாக்கியிருக்கலாம். கலைஞருக்கு இட வசதி மேட்டர்லயே தலைமை செயலக கேட் வாசல்ல போய் தாத்தா உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணியிருந்தா நேஷ்னல் சேனல்லாம் பதறி அடிச்சு ஓடி வந்திருக்கும்.

2.மாக் பட்ஜெட் போட்டிருக்கலாம். சனங்க மேல பாரம் சுமத்தாம அரசு வருவாயை கூட்டிக்க யோசனைகளை அள்ளி விட்டிருக்கலாம். இந்த காரியத்தை தனி ஒருவனா நானே செய்திருக்கன்.சபா நாயகருக்கு 234 காப்பி அனுப்பி மாமாங்கமாச்சு. இந்த மேட்டரை எல்லாம் தாத்தாவுக்கும் அனுப்பியாச்சு -ஸ்டாலினுக்கும் அனுப்பியாச்சு .கண்டுக்கத்தான் ஆளில்லை

3.சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யனும்னு நேஷ்னல் வைட் நாஸ்தி பண்ணியிருக்கலாம். சுப்ரீம் கோர்ட்ல அவசர மனு போட்டிருக்கலாம். கொய்யால காசில்லன்னா விலகு எங்க செலவுல பண்றம்னு சீன் போட்டிருக்கலாம். ஒன்னும் பண்ணல

4.நமக்கு நாமே டூர்ல ஸ்டாலினுக்கு 4 லட்சம் மனுக்கள் தரப்பட்டதா சொல்றாய்ங்க. எல்லாத்தையும் ஒரு டெம்போல போட்டு த.செயலகம் கொண்டு போய் கொட்டி ரசீது கொடுங்கடான்னு லந்து பண்ணியிருக்கலாம்.

5.செரி தூக்கி விசிட்டாய்ங்க. வேட்டிய உதறிக்கட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிட்டா ஆச்சா? ஏன் சன் நியூஸ்லயோ -கலைஞர் செய்திகள்ளயோ ஒரு மாடல் அசெம்ப்ளி நடத்தலாமே?

6.சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பை ஒத்தி வச்சானுவளா? இல்லை ஒத்திக்கு விட்டுட்டானுவளா தெரியல. இதுக்கு ஒரு கேசை போட்டு பேதியாக்கியிருக்கலாம்.

7.ஒரு 23 பேர் தான் வித்யாசம்னு வாயால சொல்லிக்கிட்டிருந்தா ஆச்சா? ஒரு 46 பேர் மேல ஃபைல் ரெடி பண்ணி மருவாதியா ராஜினாமா பண்ணனும்.இல்லின்னா மக்கள் மன்றத்துல வைப்போம்னு அனல் காட்டலாம்ல? ஒரு 23 பேராச்சும் பிச்சுக்கிட்டு வந்திருப்பான்ல?

8.சசி கலா புஷ்பா தில்லியில பம்மியிருக்கு . நீ வா தாயி நாங்க செக்யூரிட்டி தர்ரோம்னு ஊருக்குள்ள விட்டிருந்தாலே பித்தம் தலைக்கேறி பாயை பிறாண்டியிருக்கும் அந்தம்மா.

9.பேசிக்கலா சட்டமன்றத்துல திமுக உறுப்பினர்களை அதிமுக தான் ஆப்பரேட் பண்ணியிருக்காய்ங்க. ரேக்கி விட்டு வெளி நடப்பு செய்ய வைக்கிறது முதல் தூக்கி வீசறது வரை .

கலைஞரை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.ஸ்டாலினை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.

10.இதை விட ஒரு ஹிடன் கேமரா அரேஞ்சு பண்ணி  ஆளுங்கட்சி பவிசை   பதிவு பண்ணி லீக் பண்ணியிருக்கலாம் .

11.அந்த நாள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாரும் சஸ்பென்ட் ஆனப்போ ஜெ - பரபரன்னு பேப்பரை திருப்பி ஏத்த இறக்கத்தோட வாசிக்கல. அந்த வேலையை கலைஞர் செய்ய முடியாதா என்ன?

எதிர்கட்சியா இருக்கும் போதே - இந்த ஆட்சியை ஊதித்தள்ளி ஆட்சியை கைப்பத்தற மோமென்ட்லயே இப்படி தூங்கி வழிஞ்சா ..எப்பூடி?

Sunday, July 31, 2016

நூல் விற்பனை : பிடிச்சாதான்காசு‬ ‪பிடிக்காட்டிஅன்புப்பரிசு



இரண்டு முறை அச்சாகி சாதனை படைத்து 3 ஆவது முறையாக ரீ ப்ரிண்ட் ஆகி பட்டையை கிளப்பி வரும் ஜோதிட நூல்கள் -எளிய பேச்சுத்தமிழில்
_______________
தபால் /பேக்கிங் செலவு நிமித்தம் ரூ.50/ மட்டுமே செலுத்துங்கள் . ரூ.400 மதிப்புள்ள கீழ் காணும் 4 நூல்களின் இரண்டு செட்டை பெறுங்கள் !!

ஆற அமர புரட்டுங்கள் .உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ஒரு செட் நூல்களுக்கான விலையை மட்டும் அனுப்புங்கள். (ரூ.200)

உங்களுக்கு பிடிக்க வில்லையா.. நூல்களுக்காக ஒரே ஒரு பைசா கூட செலுத்த தேவையில்லை .டீலா? நோ டீலா??

நான்கு நூல்களும் ஒவ்வொன்றும் எண்பது பக்கங்கள் - மல்ட்டிக்கலர் ரேப்பர்- ஒரு செட் விலை ரூ.200.ஒரு செட் வாங்குபவர்களுக்கு ஒரு செட் இலவசம்.
______________
‪#‎நூல்1‬
ஜோதிடம்360 .இதுல ஜோதிடத்தின் பேசிக்ஸ் எல்லாத்தையும் கொடுத்திருக்கம்.
இதுகூட முக்கியம் இல்லை .மேற்படி பேசிக்ஸ்ல எது முக்கியம் எது முக்கியமில்லைன்னும் கொடுத்திருக்கம்.
வைத்தியருக்கு காய் கிடக்காது ஜோஸ்யருக்கு நாள் கிடைக்காதுனு ஒரு சொலவடை உண்டு. காரணம் எந்த காயை எடுத்தாலும் இது உஷ்ணம் ,இது சீதம் ,இது வாதம்னுவாரு வைத்தியரு .
இதே போல எந்த ஜாதகத்தை எடுத்தாலும் அந்த கிரகம் செரியில்லை /இந்த பாவம் செரியில்லம்பாரு ஜோசியரு.
இந்த புஸ்தவம் 12 பாவம் - 9 கிரகமும் செரியில்லின்னாலும் மினிமம் கியாரண்டியோட வாழ ஒரு ரூட்டை போட்டு கொடுக்கும் பாஸ் !
‪#‎நூல்2‬
ஜோதிடமும் தாம்பத்யமும்
திருமண பொருத்தம்/தோஷங்கள் /பரிகாரங்கள்னு ஆரம்பிச்சு பலான மேட்டர்லயும் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை கடை பரப்பியிருக்கம்.
பெண்களை 9 வகையா பிரிச்சு அவிக கல்யாணகுணங்களை படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சிருக்கம்.
ஜாதகமே இல்லின்னாலும் இந்த 9 கேரக்டரிஸ்டிக்ஸை படிச்சு -வீட்டம்மா எந்த கேட்டகிரின்னு தெரிஞ்சுக்கிட்டு சூதானமா நடந்துக்கலாம் . பரிகாரம் பண்ணிக்கலாம். பூரிக்கட்டை அடியிலருந்து தப்பிக்கலாம்
‪#‎நூல்3‬
ஆண்பெண்வித்யாசங்கள்
சாதாரணமா ஆண் பெண் ஜாதகங்களுக்கிடையில் வித்யாசம்னு பார்த்தா எட்டாமிடம்/நாலாமிடம் தான்.
எட்டு:
ஆண்கள் -ஆயுள் ,பெண்கள்-மாங்கல்யம்
நான்கு :
ஆண்கள்-கல்வி பெண்கள்-கற்பு (?)
ஆனால் நாம மாறி வரும் காலம் கருதி 12 பாவங்களும் அவற்றின் பலனும் ஆண் பெண்கள் விஷயத்தில் எப்படி எல்லாம் மாறியிருக்குன்னு விவரிச்சிருக்கம்.
ஆண்கள் பெண்களையும் /பெண்கள் ஆண்களையும் புரிஞ்சுக்க ஒரு ரூட்டை போட்டு கொடுத்திருக்கம்.
ஆண் பெண்கள் இடையில் புரிதல் இல்லாததாலதான் காதல் /கத்திரிக்காய்ல இருந்து ஈவ் டீசிங்/ டொமஸ்டிக் வயலன்ஸ்
பெட் ரோல் ஊத்தி கொலை வரை போகுதுங்கோ ..
(ஆக்சுவலா இந்த புஸ்தவத்துக்கு ஞானபீட் கொடுக்கனும்)
‪#‎நூல்4‬
பணம் பணம் பணம்
படைப்பின் ஆரம்ப காலத்துக்கே போய் -ஒரு செல் அங்கஜீவியான அமீபாவில் ஆரம்பிச்சு ..
.
வனவாசம், சஞ்சாரம் ,ஸ்திரவாசம்னு விவரிச்சுக்கிட்டே போய்
பணம் எப்படி வந்தது.பணம் எதுக்கு மாற்றா வந்தது? எதுக்கு மாற்றா இருக்கு?
பணம் எப்படி சனத்துக்கு உசுரா ஆரம்பிச்சதுன்னு ஒரு ப்ளூ ப்ரிண்டே கொடுத்திருக்கம்.
சம்பாதிக்கிறவன் சைக்காலஜி /சம்பாதிக்காதவன் சைக்காலஜி ..
சம்பாதிக்க எப்படி ரூட்டை போடலாம் -இப்படி பல மேட்டரை கொடுத்திருக்கம்.
இலவச இணைப்பு:
நாம பணம் சம்பாதிக்கனும்னா நம்மை சுத்தி உள்ளவன் எல்லாமே பண சம்பாதிச்சுக்கிட்டிருக்கனும்.
இதை சாத்தியமாக்க நாம நம்பறது நதிகள் இணைப்பு .இதை பத்தி Sardar IAS, தமிழரிமா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் .
நதிகள் இணைப்பு சாத்தியமாக என்னெல்லாம் செய்யனுங்கற நம்ம கட்டுரை
ரூபாயின் பிரச்சினை என்ற பாபாசாகேப்பின் ஆராய்ச்சி கட்டுரை சுருக்கம்
மேலதிக விவரங்களுக்கு swamy7867@gmail.com
_____________
எதுக்கு பாஸ் 2 செட்டு?
விரும்பினால் நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் .அல்லது வீட்ல ஒன்னு ஆஃபீஸ்ல ஒன்னு .
அல்லது ஹால்ல ஒன்னு பெட் ரூம்ல ஒன்னு .எப்பூடி?

Thursday, July 21, 2016

கபாலி -ஒரு மகாபலி

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ..ச்சும்மா வேடிக்கை பார்க்கலாம்னு ஓரமா நின்னா தேரை இழுத்து தெருவுல விட்டுர்ரானுங்கப்பு. ஸ்..யப்பா மிடியல .

வேற என்ன கபாலிக்கு நான் பலியான கதைதான்.ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி என்னன்னா படத்துல ரஜினி மட்டும் சொதப்பல .. டைரட்டரும் செமயா சொதப்பியிருக்காரு .

ராத்திரி பூரா சிவராத்திரி . துலாம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன் எழுதிட்டு - பலன் டெக்ஸ்டா தான் வேணம்னு அடம் பிடிச்சு ஒப்புக்க வச்ச க்ளையண்டுக்கு பலன் அனுப்பிட்டு ஆஹா விடிஞ்சுருச்சா இனி தூங்கிர வேண்டியதுதான்னு படுத்தேன். பொறுக்கல !

அம்பதுக்கே ஃபர்ஸ்ட் மார்னிங் ஷோ ஆசைல்லாம் ஒடுங்கி கிடக்கம் நாம .60 வயசு செட்டியாருக்கு இளமை ஊஞ்சலாடுது . நேரம்டா. பாவம் ரஜினி !
ஓவராலா ஒரே வரியில சொல்லனும்னா கவர் பால வச்சு சுவத்துல கோடு கிழிச்சு விளையாடற பசங்களை டெஸ்ட் மேட்சுக்கு அனுப்பினாப்ல.

ரஜினிய பத்தி பெசலா சொல்லனும்னா பழைய ஞாபகத்துல பாட்டி மஞ்ச குளிச்சாளாம் கதைதான்.இந்த படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் கொடுத்த கைக்கு குஷ்டம் தான் வரும் . எம்மாம் ரத்தம்?

கழுத்தறுக்கறதை எல்லாம் கமல் கிட்டருந்து சுட்டாப்ல இருக்கு . தூங்காவனம் த்ரிஷா ஞாபகத்துல மவ கேரக்டர் .

வளரும் கலைஞர்கள் யாரும் இந்த மாதிரி மெகா ப்ராஜக்ட்ல சிக்கவே கூடாது போல. அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன். நெல்ல நெல்ல வளரும் பயிரை எல்லாம் கழுதை கணக்கா மேஞ்சிருக்கு கபாலி . உ.ம் தினேஷ், மெட்ராஸ் இளவரசன்

ரஜினி படம்னா வில்லங்கமில்லாம எப்பூடி?  தானும் தமிழன்ங்கற நெனப்புல பேசிட்டாப்ல இருக்கு. ஆயிரம் அவதூறு வழக்கு போடலாம் .அந்தளவுக்கு கயிவி கயிவி ஊத்திக்கிறாரு .

அதே போல ஆரோவில் ஆசிரமத்துல எவ்ள பெரிய ரத்தக்களறி? ஏற்கெனவே அது வில்லங்கத்துல சிக்கின ரெத்த பூமி.

ரஜினிய இளமையா காட்டறேனு செம சொதப்பல்.அச்சா லிங்கா தான்.  மிடியல. பொஞ்சாதிய பார்க்கபோற குஜிலில டை போட்ட ரஜினி கொஞ்சம் பரவால்ல.

ரஜினியோட ஃப்ளாஷ்பேக்கை கொடுத்த விதம் இருக்கே ..தூர்தர்ஷன் மலரும் நினைவுகள் ரேஞ்சுல இருக்கு .

நாசர் ஓவர் ஆக்டிங் பார்த்து ஏதோ பாரதிராஜா படம் /கமல் படம் மாதிரி இவர் தான் வில்லனோனு நினைச்சிட்டன். அவ்வ்வ்வ்வ்

ஈரோ செயில்ல இருந்து ரிலீஸ் ஆகறச்ச பறவை பறக்கறதை  காட்டறதை  1980 ல சர்தார் பாப்பாராயுடுலயே பார்த்துட்டம்.

சமீபத்துல நான் போட்ட ஸ்டேட்டஸ் பக்கா . பாட்சாவுல டான் பிறவு  ஆட்டோக்காரன் -பிறவு டான். இதுல டான் -பிறவு செயில் கைதி -மறுபடி டான்.

செத்துட்டானு நினைச்ச பொஞ்சாதிய அத்தீனி வருசத்துக்கு பிறவு சந்திக்கப்போறது தெரிஞ்சு ரஜினி உச்சா போக போயிர்ராரேனு பார்த்தா ஓன்னு  அழுவறாராம்.

ரிஷி மூலம் சோகம்லாம் ரஜினிக்கு ரத்த   மூலம் வந்தா கூட இம்பாசிபிள். டான் கதைதான் ஆனாலும் இழுக்குதேன்னு நினைச்சதும் கொய்யால இது இன்னாடா இழுவை இப்ப பாருடான்னு பொஞ்சாதிய தேடி போற எப்பிசோட்.
க்ளைமேக்ஸ்  கிட்டே தெலுங்கு படம்லாம் பிச்சை எடுக்கனும். ரெண்டு துப்பாக்கி /மிஷின் கன்.. அய்யோ.. வேண்டான்டா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ரஞ்சித் அந்த அரசியலை முன்னெடுப்பார் இந்த அரசியலை முன்னெடுப்பாருன்னு பீசிக்கிட்டாய்ங்களே இந்த படத்தோட ஊஊஊஊஊஊஊஊஊ சங்குதான் போல .

பா.ஜ.க அம்பேத்கர் காந்திய ஓன் பண்ண பார்க்கிறதுக்கும் இந்த படத்துல ரஜினி செய்ற வேலைக்கும் எதுனா வித்யாசம் இருக்கா என்ன?
சந்தேகத்துக்கு இடமில்லாம யோகா க்ளாஸ் வேற.போதும் பாஸ் ! இதோட இதை முடிச்சுக்கறேன். இப்பமே ரஜினி ரசிகர்கள்ளாம் செமகடுப்புல இருப்பாய்ங்க..

ரஞ்சித்துக்கு ஷொட்டு:

மாணவர்கள் கையில் அணியும் பேண்டுகளை சுட்டியமை
ரஜினி -மனைவியை சந்திக்கும் காட்சியை ப்ளர்ரா காட்டினது  இப்படி சின்ன சின்னதா நிறைய செய்திருக்காரு .ஆனால் ....................


குருப்பெயர்ச்சி 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )

குருப்பெயர்ச்சி 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )

Tuesday, June 14, 2016

Youth rails Jayalalitha

கெயவிய கயிவிகயிவி ஊத்தியிருக்கம்

Monday, April 18, 2016

ஆன்மீக அனுபவம் : ஆத்தாவே ..!!! உன்னை நம்பி ..... ( " ஸ்ரீ அம்ம...

ஆன்மீக அனுபவம் : ஆத்தாவே ..!!! உன்னை நம்பி ..... ( " ஸ்ரீ அம்ம...: ஆத்தாவே ..!!!   உன்னை   நம்பி ..... (  " ஸ்ரீ அம்மன் சதநாமாவளி "  ) அனைவரும் அன்னையின் அருள் வேண்ட...

Monday, March 28, 2016

முரசொலிக்கு ஒரு ஃபேக்ஸ்

அண்ணே வணக்கம்ணே !
இந்த ப்ளாக்ல நேரடி பதிவு போட்டு மாமாங்கமாச்சு.ஒரு அவசரத்துக்கு இங்கே இந்த பதிவை போடறேன். இந்த கன்டென்ட் முழுக்க முரசொலிக்கு இன்னைக்கு  அனுப்பிய ஃபேக்ஸ் தான்.

மத்தபடி நம்ம ஜோதிட பதிவுகள் அனுபவஜோதிடம் வலைதளத்துல தொடர்ந்து பப்ளிஷ் ஆயிட்டு தான் இருக்கு .உடுங்க ஜூட்டு .

________________

ஐயா !
ஜெயா ஆட்சியின் அவலங்கள் விலகி நின்ற திமுகவினரையும்,அனுதாபிகளையும் ,ஏன் நடு  நிலையாளர்களையும் கட்சியின் பால் சற்றே திரும்பிப்பார்க்க செய்திருக்கிறது . என்னை பொருத்தவரை கடந்த திமுக ஆட்சிகாலத்தை கடுமையாக விமர்சித்தவன் நான்.

ஆனாலும் இன்றைக்கிருக்கும் நிலையில் கலைஞர் தலைமையிலான ஆட்சியும் அவர் அனுபவமுமே தமிழகத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.  திமுக தன்னை அப்டேட் செய்து கொண்டு  வரும் தேர்தலில் பெரிய வெற்றியை பெற என் சிற்றறிவுக்கு எட்டிய யோசனைகளை   கடந்த பிப் 22 ஆம் தேதி தலைவர்  கலைஞருக்கும்  -பொருளாளர் ஸ்டாலினுக்கும் தபால் வழியாக அனுப்பியுள்ளேன்.

மேற்படி யோசனைகள்  இங்கு  உள்ளன. கழக நலன் கருதி .தமிழக நலன் கருதி இந்த யோசனைகள் கலைஞர் அ ஸ்டாலின் பார்வைக்கு செல்ல உதவுங்கள்.

Sunday, February 14, 2016

யார் இந்த கலைஞர் ?

படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு: தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...