Showing posts with label பாலகுமாரன். Show all posts
Showing posts with label பாலகுமாரன். Show all posts

Friday, April 18, 2014

"உணவெடுத்தான்" -இந்த வார்த்தை சரியா?

எழுத்தாளர் பாலா தமிழ் பண்டிதை வயிற்றில் பிறந்து " உணவெடுத்தான்" என்று எழுதுகிறார். மிருகங்கள்தான் உணவெடுக்கும்.

மனிதன் உணவு உட்கொள்வான். (அ) உண்பான் (அ) தின்பான் (அ) துன்னுவான். தமிழ் என்பது வளமான மொழி. ஒரே பொருள் தருவதாய் தோன்றினாலும் மேற்சொன்ன வார்த்தைகளை சமயோசிதமாய் உபயோகித்தால் சாப்பிடுபவனின் சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு மதிப்பையும் ஒரே வரியில் கோடி காட்டிவிட முடியும்.

நிறைய எழுதிவிட்டதால் பாலாவுக்கே தமது எழுத்துக்களின் மீது சலிப்பு ஏற்பட்டு ஸ்டீரியோதனமாக தோன்றிதான் உணவெடுத்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்திருக்க வேண்டும்.

பாலாவை தெய்வமாகவே கொண்டாடும் இளைஞர், இளைஞிகளும் அவரை பின்பற்றத்துவங்கிவிட்டால் எழுதப்படாத விதிகள், மனிதனின் மூளையின் சப்கான்ஷியசில் ரஸ்னா பவுடர் தனமாய் பொதிந்திருக்கும் சூட்சுமமான வேறுபாடுகள் மறைந்து கழுதையும் - குதிரையும் ஒரே கொட்டிலில் கட்டப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. ஓ.கே...

Friday, December 17, 2010

விஜய் தனிக்கட்சி பற்றி ரஜினி ரகசிய ஆலோசனை

டெலிகாம் ஊழலில் சிக்கி திணறும் திமுக,  விஜய் தனிக்கட்சி யோசனை இத்யாதி திருப்பங்கள் ரஜினியை குழப்ப தனக்கு பிடித்தமானவர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, சுப்பிரமணியம் ஸ்வாமி, எழுத்து சித்தர் பாலகுமாரன், கே பாலசந்தர் ஆகியோர் இறங்குகின்றனர்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு (மேலுக்கு) வாங்க பாலகுமாரன்..

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சோ: ஆமாம்..இங்கே ஆரம்பிச்சு எப்ப பாய்ண்டுக்கு வர்ரது.. நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .மேட்டர் தெரியுமில்லை ..டெலிகாம் ஊழல்ல திமுக சிக்கி தவிக்குது . விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கபோறாரு இந்த நேரத்துல ரஜினி என்ன செய்தா நல்லாருக்கும்னு ஒரு டிஸ்கஷன்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார். அதனாலதான் ஜெயலலிதா கூட கூப்டு ஐடியா கேட்கிறாய்ங்க

ரஜினி:(எழுந்து நின்று ) முதல்ல எல்லாரும் உட்காருங்க. மேட்டர் தெரியுமில்லை.. இத்தனை நாள் நான் சால்ரா போட்ட கலைஞர் தலைமையிலான திமுக டெலிகாம் ஊழல்ல  சிக்கி தவிக்குது. சினிமா உலகமே கலைஞர் குடும்பத்தோட பிடில இருக்குன்னு பிரச்சாரம் நடக்குது. ஆட்டைகடிச்சு மாட்டை கடிச்சு  விஜய் சினிமாவுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை .. இதே பாய்ண்ட்ல அவரு  தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறாரு. அன்னைக்கு மணி ரத்தினம் எடுத்த வில்லங்க சினிமாக்களால இர்ரிடேட் ஆன எவனோ வீசின வெடிகுண்டுக்கே இர்ரிட்டேட் ஆகி இனி தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பத்தனும்னு வசனம் விட்டேன்.. இப்ப மவுனமா இருந்தா நல்லாருக்காது. இந்த நேரத்துல நான் செய்தா நல்லாருக்கும்னு உங்ககிட்டே  ஐடியா கேட்கத்தான் இந்த டிஸ்கஷன்

சுப்ரமணியம் ஸ்வாமி: இன்னும் என்ன தயக்கம். நம்ம ஜனதா கட்சிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்கோ  சந்திரலேகாதான் முதல்வர் கேண்டிடட்டு நான் டிக்ளேர் பண்ணிர்ரன்..

ரஜினி:  கொஞ்சம் சீரியசா பேசுங்க சார். நீங்க எப்ப சீரியஸ் எப்ப காமெடின்னே புரியறதில்லை.

சு.ஸ்வாமி: என்னை மதிச்சு ஒரு எம்.பி சீட் கொடுத்துட்டா நான் காமெடி.. என்னை மதிக்கலைன்னா சீரியஸ்.

பாலசந்தர்: நீ எதையோ முடிவு பண்ணிட்டே . அப்புறம் எதுக்கு டிஸ்கஷன் டிச்க்சன் எல்லாம். ஆமா விஸ்வ நாதன் டைரக்சன் நடிக்கனும்னு சொன்னியாமே.. நம்ம கவிதாலயாவுக்கு ஒரு படம் பண்ணக்கூடாது

ரஜினி: வேணா சாரி நீங்க அமீர்ஜானை டைரக்ட் பண்ணவைப்பிங்க. நான் டூ ஆர் டை பொசிஷன்ல இருக்கேன். இப்பயாச்சும் எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் டெடிக்கேட்டடா யோசனை பண்ணுங்க

பாலகுமாரன்: பேசாம உடையார்  கதையில நடிக்கப்போறதா அனவுன்ஸ் பண்ணிருங்க. மீடியா மொத்தம் டைவர்ட் ஆயிரும்.

ரஜினி: சுல்தன் தி வாரியரே பாதில  நிக்குது. யந்திரன் நின்னுப்போயிருதேனு சன் பிக்சர்ஸ் கிட்டே மாட்டினேன். நல்ல வேளை பிக்சர் ப்ரமோஷனுக்காக தியேட்டர் காண்டீன்ல சமோசா விக்க சொல்லலை. ப்ளீஸ் .. எல்லாரும் என்னை உபயோகிச்சுக்கத்தான் பார்க்கிறிங்களே தவிர எனக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வார்த்தைனா பேசுங்க சார்

சோ : விஜய் படத்துக்கு தியேட்டர் கொடுக்கனும்னு உண்ணாவிரதம் அனவுன்ஸ் பண்ணிருங்க

ரஜினி: வேண்டாங்க. அப்புறம் விஜயகுமார் வந்து என் பக்கத்துல உட்கார்ந்துக்குவாரு அவங்க அந்தப்புறமே புற நகர் டம்ப் ஸ்பாட் மாதிரி நாறிக்கிடக்கு

ரஜினி:(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்.. ஜெயசுதாவோட அப்பாவை அடிச்சப்பயும் அதைத்தான் செய்தேன். ஹிந்தி ப்ரொடியூசருக்கு காலை உடைச்சப்பயும் அதைத்தான் செய்தேன். இப்போ எங்க போறது? (மேலுக்கு)  எனக்கு ரொம்ப . ரொம்ப குழப்பமா இருக்கு. ஓப்பனா சொன்னா பயம்மா இருக்கு.  விஜயகாந்த் எனக்கு நகலா வந்தவர். விஜய்  என் ரசிகன்னு வேற சொல்லிக்கிறவரு.. இவங்கல்லாம் ஸ்க்ரீனுக்கு வந்த பிறகும் நான் சும்மா இருந்தா எப்படி? ரசிகர்கள் டைவர்ட் ஆயிருவாங்களோ.. மக்கள் ரொம்ப கேவலமா நினைச்சுருவாங்களோனு பயம்.

சோ : நீங்க தான் இதுக்கெல்லாம் காரணம். பொதுக்கூட்டத்துல சாயந்திரத்துலருந்து நள்ளிரவு வரை தலைவர் வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறாருனு அனவுன்ஸ் பண்றமாதிரி பில்டப் பண்ணிங்க.. பொழுது விடிஞ்சி பல வருஷமாயிருச்சு.. இன்னமும் வருவேன்னு தான் சொல்லிட்டிருக்கிங்க

ரஜினி: ஓகே ஓகே எப்பவும் நியூஸ்ல இருக்கிறதுக்காக அப்படி பீலா விட்டது நிஜம்தான். ஆனால் இப்ப நிலைம வேற.

பாலகுமாரன்: சொந்த கட்சி ஆரம்பிச்சுருங்க.

ரஜினி: விஜய்காந்த் திராவிட கட்சிகளை கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டே இருக்கார் .அப்படியும் அவருக்கொன்னும் ஆதரவு பெருகலை. நான் ஜெயலலிதாவை வீர லட்சுமினு பாராட்டியிருக்கேன். கலைஞரை அவரே வெட்கப்படும்படியா பயங்கரமா புகழ்ந்து தள்ளியிருக்கேன்..

சோ: திமுக இப்போ மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல்..

பாலகுமாரன்: திராவிட கட்சிகள்ள சேர்ந்தா தானே கடந்த காலம் குறுக்க வருது .காங்கிரஸ்ல சேர்ந்துருங்க.

ரஜினி: யோவ் திமுகவாவது மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல். காங்கிரஸ் மூழ்கி போச்சுய்யா. அதனோட பிணத்தை தூக்க நாலு எம்.எல்.ஏ ஜெயிச்சு வந்திருக்கான்

சோ: நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிங்கோ.. நான் அதிமுகவோட கூட்டுக்கு ஏற்பாடு பண்றேன். எனக்கென்ன ஒரு ராஜ்யசபா எம்பி போதும்

சுப்ரமணியம் சுவாமி: நீங்க பா.ஜ.கல சேர ஏற்பாடு பண்றேன் எனக்கென்ன ஜஸ்ட் ஒரு எம்.பி

பாலசந்தர்:அதுக்கு முன்னாலே எனக்கு ஒரு டெய்லி சீரியலாச்சும் பண்ணிக்கொடு.  நானே டைரக்ட் பண்றேன் .அப்பத்தான்  பெண்கள் ஆதரவு  உனக்கு கிடைக்கும்.

பாலகுமாரன்: எனக்கென்னவோ உடையார்தான் பெஸ்ட் சாய்ஸுனு தோனுது

ரஜினி: யோவ் ஓடிப்போங்கய்யா .. சாதிபுத்திய காட்டிட்டிங்க .. எங்கப்பா சித்தூர் முருகேசன் .. ஆன்லைன் சாட்லயாவது கனெக்ட் பண்ணுங்கப்பா..

(ஆன்லைன் சாட்)

ரஜினி: ஹலோ!

முருகேசன்: யாரு ரஜினி அய்யரா?

ரஜினி: யப்பா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. நீயும் நோகடிச்சா எப்படி?

முருகேசன்: நீங்க சிவாஜி ராவ் சார்.. சிவாஜி மாதிரி பேசறிங்க

ரஜினி: நெலமை அப்டி.. என்னதான் நீ என்னை கச்சா முச்சான்னு திட்டி எழுதினாலும் உன் எழுத்துல என் மேல உனக்கெந்த அளவுக்கு அக்கறை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.

முருகேசன்:  கெட்டும் பட்டணம் சேர்ங்கற மாதிரி சனம் என் கிட்டே வராய்ங்க. தேறினதும் காணாம போயிர்ராய்ங்க. எனக்கு உங்க மேல பெருசா அக்கறையில்லை. உங்களை ஃபாலோ பண்ற யூத் மேலதான் அக்கறை .

ரஜினி: உனக்கு யார் மேல அக்கறையோ எனக்கு அக்கறையில்லை .இப்ப தலைக்கு மேல போயிருச்சு ஏதோ ஒன்னு பண்ணனும். இல்லைன்னா என்னை நானே கூட சகிச்சுக்க முடியாது..

முருகேசன்: ஓகே ஓகே.. உங்களுக்கென்ன சி.எம் ஆகனும்னு இருக்கா? இல்லை ஜஸ்ட்  சர்வைவல் ப்ராப்ளமா?

ரஜினி: என்னப்பா சூப்பர் மார்க்கெட்ல என்னவேணும்னு கேட்கிறமாதிரி கேட்கறே..

முருகேசன்: இலக்கு எதுன்னு தெரிஞ்சாதானே ரூட் மேப் போட முடியும்?

ரஜினி: ரெண்டுத்துக்குமே ரூட் மேப் போடுப்பா

முருகேசன்: சர்வைவல் போதும்னா எங்கஊரு பழைய லோக் சத்தா மாதிரி ஒரு அமைப்பை ஆரம்பிச்சுருங்க. சொந்த பத்திரிக்கை ஒன்னை ஆரம்பிச்சு கட்சி முக்கியமில்லை வேட்பாளர்தான் முக்கியம்னு ஸ்டாண்ட் எடுத்துக்கங்க. வேட்பாளர்களோட உண்மையான விவரங்களை சேகரிச்சி சொந்த பத்திரிக்கைல வெளியிடுங்க. உங்க சர்வேல நல்ல கிரேடிங்ல உள்ள வேட்பாளர்களோட பொசிஷன் வீக்கா இருந்தா   நேர்ல வந்து பிரச்சாரம் பண்ணுவேனு பயமுறுத்துங்க.

ரஜினி: எல்லா கட்சிலயும் கெட்டவங்க இருப்பாங்களே..

முருகேசன்: எல்லா கட்சிலயும் நல்லவங்களும் இருப்பாங்களே. மேலும் நீங்க தேர்தலுக்கு முன்னாடியே நெட் ஒர்க்கை ஆரம்பிச்சுட்டா எல்லா கட்சியும் உங்களுக்கும்,உங்க அமைப்புக்கும் பயந்து சுமாரான வேட்பாளர்களா பார்த்து டிக்கெட் கொடுப்பாய்ங்க

ரஜினி: பரவால்லை. டேமேஜ் குறைவாதான் இருக்கும். இது  ஓகே. ஒரு வேளை முதல்வராகிறதுதான் இலக்குன்னா?

முருகேசன்: டேமேஜ் அதிகமா இருக்கும். பரவால்லை.

ரஜினி: இதை கேட்கிறதுல எதுவும் டேமேஜ் வந்துராதில்லையா சொல்லுப்பா.

முருகேசன்: மொதல்ல உங்க சொத்தை குடும்ப உறுப்பினர்கள் எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்துருங்க. அதை பப்ளிக்கா அனவுன்ஸ் பண்ணுங்க. உங்க சொத்துல சம் பர்சண்டேஜ்ல   நல்ல சினிமாவை ப்ரமோட் பண்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துங்க அதுக்கு தலைவரா கமல் ஹாசனை போடுங்க

ரஜினி: வெரி குட். அப்புறம்?

முருகேசன்: பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேட்கிறமாதிரி  நீங்க நாளிதுவரை என்னெல்லாம் தப்பு பண்ணிங்களோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி  அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அதுக்கு பரிகாரமா அந்த தப்புகளை திருத்தத்தான் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு ஒரு ஏழெட்டு பாஷைல புஸ்தவமா போடுங்க. ட்ரான்ஸ்லேஷனுக்கு வேணம்னா அய்யரு பசங்களை சேர்த்துக்கிருங்க. அதெல்லாம் கரீட்டா பண்ணுவாய்ங்க. ரேட் தான் காஸ்ட்லியா இருக்கும். அதை ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ல லெஸ்ஸர் ப்ரைஸ்ல ரிலீஸ்பண்ணுங்க (உ.ம் புஸ்தவம் மலிவுப்பதிப்பு ரூ. 20 டிவிடி: 20 ) கட்சி ஆரம்பிக்கப்போறதேதிய டிக்ளேர் பண்ணீருங்க
உங்களோட அஜெண்டாவா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அறிவிச்சுருங்க..

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ரஜினி: ....................

முருகேசன்: ஹலோ ஹலோ ஹலோ...

ரஜினி: ................

(முருகேசன் உடனே ராகவேந்திரா கல்யாணமண்டபத்துக்கு  ஃபோன் செய்து ரஜினி சாருக்கு என்னாச்சு பாருங்கங்கறார். அங்கிருந்து வந்த பதில் "ஒன்னும்மில்லிங்க மயக்கம் போட்டுட்டாரு )

எச்சரிக்கை: மேற்படி உரையாடல் யாவும் என் கற்பனையே.

Tuesday, December 14, 2010

பாலகுமாரன் சிந்தனைகள் : ஒரு அலசல்

அரசியல்ல கலைஞர்,எம்.ஜி.ஆருக்கு மாத்தி மாத்தி சால்ரா போட்டாப்ல, சினிமாவுலயும் சால்ரா போட்டு "பொழப்ப" நடத்தலாம்னு பார்த்து சங்கர் கண்ணாலத்துக்கு சாம்பார் பக்கெட்டெல்லாம் கூட தூக்கிப்பார்த்துட்டு வேலைக்காகாம பையனை விட்டு என்னென்னவோ தகிடுதத்தம் பண்ணி பார்த்துக்கிட்டிருக்காரு.

என்னை பொறுத்தவரை எழுத்தாளன் என்பவனே ஒரு கையாலாகாத கேஸ். அதிலயும் காதல், குடும்பம்னு குண்டு சட்டியில குதிரை ஓட்டறவன், சரித்திரம், சமூசான்னு போறவன், சமூக வாழ்வு வாழாதவன், அரசியலை அவதானிச்சு தன் கருத்துக்களை வெளியிடாதவன்,  தனக்குனு ஒரு லட்சியம் இல்லாம, அந்த லட்சியத்துக்காக எதிர் நீச்சல் போடாதவன்லாம் டேமேஜ் பார்ட்டி.ஸ்க்ராப். தள்ளு கேஸு.

அதுலயும் பாலாவை பத்தி சொல்லவே தேவையில்லை. பாவம் அவருக்குன்னு சைட் எல்லாம் வச்சு பார்த்தாய்ங்க , தாளி சுஜாதாவோட சைட்டே பேர் சொல்லலை.இதுல பா.குமாரன் எல்லாம் எங்கே.

ஒரு காலத்துல அப்போ அரும்பு மீசையா இருந்த பார்ட்டிகளுக்காக லவ் ஸ்டோரி எழுதி வவுத்தை ரொப்பிக்கினு கடந்து வயசாக வயசாக ( அவரோட ரீடருக்கும் தேன்) இப்போ .. ..........(கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா தொப்புள் தேன்) வரை தாடி வளர்த்துக்கிட்டு சரித்திரம்,புராணம்னு சல்லியடிச்சிகிட்டிருக்காப்ல.

சைட்டு தேன் புட்டுக்குச்சு. ப்ளாகாச்சும் வச்சு பார்ப்போம்னு சனம் வச்சாப்ல இருக்கு. பாலகுமாரன் சிந்தனைகள்ங்கற பேர்ல வச்சிருக்காய்ங்க.  வச்சதுதான் வச்சாய்ங்க. அவரோட ஆரம்ப கால எழுத்துக்களை அப்படியே வலையேத்தியிருந்தாலும் பரவாயில்லை.

பழைய நினைப்புடா பேராண்டினு என்னாட்டம் கிழவாடிங்க அப்படி இப்படி மேய்ஞ்சிருப்போம். ஆனால் பாருங்க சிந்தனைகளாம். அவாளோட எழுத்தை சூத்திரன் விலை கொடுத்து வாங்கி படிக்க பாம்லெட் போட்ட கதைதேன்.

தெலுங்குல வேமன சதகம் ஒன்னிருக்கு."எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா  நலுப்பு நலுப்பேகானி தெலுப்பு காது"

அதாவது எலித்தோலை கொண்டுவந்து ஒரு வருசம் துவைச்சாலும் அது கருப்புதேன். வெளுப்பாகாதுனு அர்த்தம்.

பா.குமாரன் இளமையில தானேதோ யூஸ்லெஸ் ஃபெலோவா இருந்ததாவும் கால கிரமத்துல மோல்ட் ஆயிட்டதாவும் சொல்லிக்கிறது வழக்கம்.

தாளி பூனைக்கு வயசானா புலியாயிருமா? ஒரு ம..ரும் கிடையாது. ஒரு சாம்பிளுக்கு அவரோட சிந்தனைகளை சீந்தி சிக்கெடுக்கிறேன். இத இதோட விட்டுட்டா ஓகே. அவரோட சீட,பக்த, ரசிக கோடிகள் ஆ ஊன்னா மொத்த குப்பையையும் கொட்டி நாறடிச்சுர்ரதா இருக்கேன்.


//மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.//

இதை அவரு தன் கோணத்துல ,தன்னை பத்தி எழுதிக்கிட்டாப்ல இருக்கு.  பாவம்! இன்னைக்கு தாத்தா கூப்டு நீதான் எம்.எல்.சினு இளிச்சுட்டு ஓட கூடிய பார்ட்டி இது ஏதோ நரி " சீ சீ இந்த பழம் புளிக்கும்னுச்சாமே அதான் இது.

//மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.//

ஆத்திகன் நாத்திகங்கற க்ளாசிஃபிகேஷன் எல்லாம் இல்லை ராசா. சனம் மரணத்தை சிந்திச்சிருந்தா இந்த நாடு எங்கனயோ போயிருக்கும். சனத்துக்கு மரணத்தோட நிழல்களோடதான் டீலிங்கே. அதை புறக்கணிச்சவன் ஏழையாவே இருந்துர்ரான். அந்த நிழல்களுக்கு பயந்தவன் சம்பாரிக்க பார்க்கிறான். இதுல ஆத்திகம் நாத்திகம் எங்க வருது?

//அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.//

அடங்கொய்யால.. பா.கு தன் அறிவை பத்தி சொல்லிக்கிட்ட போல கீது உண்மையான அறிவே தான் எத்தனாம் பெரிய முட்டாள்னு தெரிஞ்சிக்கிடறதுதான்.

//ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும்.//

கலைஞரோட ஆணவத்தின் அலட்டலால் அன்பு அழிஞ்சு போச்சா என்ன? புள்ளை,குட்டி,பேரன்,பேத்தி,கொள்ளு பேரன் ,கொ.பேத்தினு விரிஞ்சிக்கிட்டே போவுது


//அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும்//
இது உண்மையா இருந்திருந்தா தாத்தா எப்பவோ குடும்பம் கழகமில்லை. கழகம் தான் குடும்பம்னு ரியலைஸ் ஆகியிருப்பாரே


//அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும்//

த பார்ரா.. இந்த க்ளோபலைசேஷன், லிபரலைசேஷன், ப்ரைவைட்டைசேஷன் எல்லா இழவையும் மீறி ஏதோ சிலராச்சும் அன்புகாட்டிக்கிட்டிருக்காய்ங்க. அவிகளையும் முட்டாள் பட்டம் கொடுத்து நோகடிக்கிறாப்ல கீதே

//அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.//

அவர் அவர் "அனுபவத்துல" இந்த ம..ரைத்தான் தெரிஞ்சிக்கிட்டாப்ல இருக்கு


//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன்//

இவனைதான் ஞானிங்கறாய்ங்க. புத்தர் கூட உண்மை அங்கன இங்கன இல்லை மத்தில இருக்குன்னாரு. ஆனால் நம்ம பா.கு இன்னா சொல்றாரு பாருங்க

//நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்//

தோடா..

//உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள். -என்னுயிர்த்தோழி.//

இந்தியா கூட ஒள்ளார ஓழிங்க சதிகளையெல்லாம் மீறி வல்லரசாயிருச்சு.. வலிமையான நாடாயிருச்சுனு பேசிக்கிறாய்ங்க.. அப்போ பணம் வச்சிருக்கிறவன், படை வச்சிருக்கிறவன்லாம் ரெண்டும் கெட்டான்னா இந்த இழவுக்கெல்லாம் ட்ரை பண்ணி ஃபெயில் ஆயிட்ட பா.கு மட்டும் பர்ஃபெக்டா?


இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?


________________