Saturday, December 4, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம் : 2

காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே வாழற பொம்பளைங்கள விரல் விட்டு எண்ணிரலாம்.  மத்த பார்ட்டியெல்லாம் எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுதான். இது வால்மீகி காலத்துலயே இருந்திருக்கு. நாரதர் வால்மீகி மத்தில நடக்கிற உரையாடல்.

"ஏம்பா கொள்ளையடிக்கிறே?"
"என் குடும்பத்தை காப்பாத்த"
"இதெல்லாம் பாவமாச்சேப்பா? இந்த பாவத்துல அவிக பங்கு வாங்கிப்பாய்ங்களா?"
" நிச்சயமா?"
"ஒரு பேச்சு கேட்டுட்டு வாயேன்"

வால்மீகி போய் கேட்க "அஸ்கு புஸ்கு எங்களை காப்பாத்த வேண்டியது உன் கடமை. அதுக்கு உன்னை கொள்ளையடிக்க சொன்னோமா என்ன? உன் பாவம் உன்னோடது.. எங்களுக்கு அதுல ஏன் பங்கு"ன்னிர்ராய்ங்க. வால்மீகி ரிஷியாயிர்ராரு.

உண்மை என்னடான்னா பங்கு நிச்சயம். புருசங்காரனோட கருமத்தால வந்த காசு பணத்தை அனுபவிச்சு அனுபவிச்சு அவனோட நிழலாவே மாறிர்ரா பொஞ்சாதி. அவனோட கோபம், நோய்கள் ஏன் வே திங்கிங்கே வந்துரும்.

குடும்பத்தை நடத்த புருசங்காரன் என்ன பண்றான்? ஏது பண்றான்? அவனுக்கு என்ன வருது? அதுக்குள்ள என்ன கிடைக்கும். ஆனா நமக்கு என்னெல்லாம் கிடைக்குது? அதுக்கு என்ன பண்றான்? இப்படியே எத்தீனி நாளைக்கு நடக்கும்னு யோசிக்கிற பொஞ்சாதிங்க எத்தீனி பேரு கீறாய்ங்க? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏசிபி ரெய்டுல மாட்டி சந்தி சிரிக்கிறவன் பொஞ்சாதிக்கெல்லாம் தெரியாதா இவன் லஞ்சம் வாங்கறான் என்னைக்கோ ஒரு நா ஏசிபில மாட்டுவான்னு தெரியாதா? இவள் அதை தடுக்க முயற்சி பண்ணலியா?

பண்ண மாட்டாள்.ஏன்? மன்சங்க என்னா பண்ணாலும் அவிகளை அதுக்கு
என்கரேஜ் பண்றது  ரெண்டே ரெண்டு இன்ஸ்டிங்ட் தான். ஒன்னு கொல்லுதல் ரெண்டு கொல்லப்படுதல். இதுல வீக்கர் செக்ஸெல்லாம் கொல்லப்படுதலை தேர்வு செய்யவும், ஸ்ட் ராங்கர் செக்ஸெல்லாம் கொல்லுதலை ஆப்ட் பண்ணவும் நிறைய வாய்ப்பிருக்கு.

பொம்பளை கொல்றதை செலக்ட் பண்ணிக்கிட்டா புருசன் ஊழல் வாதியாயிர்ரான். லஞ்ச பிசாசாயிர்ரான்.  வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லை. நீங்க இன்னைக்கு கொன்னா நாளைக்கு கொல்லப்படுவிங்க.

புருசனை அது வேணம் இது வேணம்னு இவ கொல்ல ஆரம்பிச்சா அவன் பணம் பண்ண ஆரம்பிக்கிறான். பணம் இவனை என்னென்னவோ பண்ண ஆரம்பிச்சுருது. ஒரு நா குடிச்சுட்டு வருவான். இன்னொரு நா எவளையோ வச்சிருக்கானு தெரியவரும். பணம் ஒரு பவர்ஃபுல் வயாக்ரா. அது அவனுக்குள்ள ஆண்மைய பெருக்குது. அவனுக்குள்ள இருக்கிற கொல்லும் இச்சைய ஊக்குது. இவன் கொல்ல ஆரம்பிச்சுர்ரான். ஒரு நாள் இல்லே ஒரு நாள் ஏசிபி காரன் இவனை கொல்றான். இல்லைன்னா  இவனை மாதிரி ஒரு லஞ்ச பிசாசு நடத்தற ஏலச்சீட்ல பார்ட்னராகிறான். இல்லை சீட்டு போடறான். அவன் ஏசிபில மாட்டினா இவன் தலைல துண்டு.

சரி பாஸ்.. இந்த கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற சக்கரத்தை நிறுத்தவே முடியாதானு கேப்பிக. கொல்ல ஆரம்பிச்சா கொல்லப்படுவது கியாரண்டி. அதைவிட கொல்லுங்கடானு விட்டுர்ரதே பெட்டர். அடுத்த டர்ன்ல கொல்ற சாய்ஸ் வரும். அப்போ போடாங்கொய்யாலனு விட்டுரனும். நியூட்ரலாயிரனும். அப்போ இந்த விஷ வளையத்துலர்ந்து வெளிய வரலாம். இல்லைன்னா நீங்க இப்ப கொல்ல அவிக நாளைக்கு கொல்லனு புனரபி மரணம் புனரபி ஜனம்னு போயிட்டே இருக்கும்.  கொன்னா கருமம் கூடும். பிறவி உண்டு. கொல்லப்பட்டா கருமம் தொலையும்.பிறவி இருக்காது. இதான் சூட்சுமம்.

இதுக்கெல்லாம் ஆல்ட்டர்னேட்டிவாதான் செக்ஸை இயற்கை படைச்சது. இதுல உள்ள சூட்சுமத்தை ஏற்கெனவே விலாவாரியா சொல்லியிருக்கேன். 7 வெர்சஸ் 23. இந்த வித்யாசத்தை ஓவர்லுக் பண்ணா பிரச்சினையே கிடையாது.  பெண்ணின் மறுபக்கம் வெளிப்பட 70 முதல் 90 சதவீதம் வரை  7 வெர்சஸ் 23.  சமாசாரம்தான் காரணம்.

தாளி இவன் தினசரி தலைவாழை இலை போட்டு அதை பரிமாற போறேன் இதை பரிமாறப்போறேன்னுட்டு பந்தா காட்டி படக்குனு பாயாசத்தை கொட்டி விருந்து ஆயிப்போச்சுன்னா என்ன ஆகும்?

உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் இச்சை வன்முறையா வெடிக்குது.

நிறைய படிச்சவள், நிறைய சொத்து இருக்கிறவள், நிறைய அண்ணன், தம்பி, நிறைய மாமன் மார் இருக்கிறவள் , மாசத்துக்கு 60 அ 70 ஆயிரம் சம்பாதிக்கிறவள் "இவனால எனக்கு ஆர்காசம் தர முடியலை விவாகரத்து கொடுங்க" னு  கோர்ட்டு கதவை தட்டறாள்/ லோ க்ளாஸா இருந்தா " த.. அவன் ஆம்பளையே இல்லை அவன் கூட நான் வாழமாட்டேன்னிர்ரா"

இதுல சிக்கல் எல்லாம் எங்கன வருதுன்னா கொஞ்சமா படிச்சவ, கொஞ்சூண்டு சொத்து இருக்கிறவள், வழுக்கை வாங்கி ,பொஞ்சாதிக்கு உள்பாவாடை துவைச்சி போடற ஒரே ஒரு அண்ணனோ தம்பியோ உள்ளவள்,  ரெண்டு அஞ்சு ஆயிரம்னு சம்பாதிக்கிறவள் / சம்பாதிக்க துப்பில்லாதவள் என்ன பண்ணுவா?

அவளால அசலான மேட்டரை சொல்லவும் முடியாது , அதுக்காக வெடிச்சு கிளம்பற கோபம்,ஆத்திரம்,ஆங்காரம், வன்முறை இச்சையை அடக்கிக்கவும் முடியாது. (சில கேஸ்ல தனக்கு ஏன் இத்தனை கோபம் வருதுங்கறதுக்கான காரணமே தெரியாம இருக்கும்) என்ன பண்றது?

இவளா வீக்கர் செக்ஸ். உடல் பலமில்லை. பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லை. பண பலமும் இல்லை. இங்கன ஆரம்பிக்குது பெண்ணின் மறு பக்கம். இவளுக்கே தெரியாம அழகா பள்ளம் வெட்டி, தென்னங்கீற்றை பரப்பி, மண்ணை தூவி, சாணி மெழுகி, செம்மண் வச்சு , விட்டா பொங்கலுக்கு போடற மாதிரி பெருசா கோலமும் போட்டு வச்சிருவாள். இதெல்லாம் எதுக்கு பண்றானு அவளுக்கே தெரியாதயும் இருக்கலாம்ங்கறதுதான் சோகம்.

அதுக்குன்னு எல்லா தாய்குலமும் இப்படித்தான்னு சொல்லிரமுடியாது.கர்ணன் சாவுக்கு எத்தனை காரணம் இருந்ததோ அத்தீனி காரணம் ஒரு பெண் பேயா மாறவும் இருக்கு. அதையெல்லாம் விவரிக்கத்தான் போறேன்.

எரியறதை பிடுங்கினாத்தான்  கொதிக்கிறது  அடங்கும். அதை விட்டுட்டு தாயி,தங்கச்சி,அக்கான்னுட்டு எத்தீடி தாட்டி ஊதினாலும் அடுத்த செகண்டு கொதிக்கத்தான் ஆரம்பிக்கும்.

பாஸ் ! ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி நேரிடை ஜன நாயகம் வந்து, ஜனாதிபதி பதவிக்கு டைரக்ட் எலக்சன் வந்து நீங்க கன்டெஸ்ட் பண்ணா ஒரு பொம்பளை கூட ஓட்டுப்போடறதில்லைன்னு மறுமொழி வரும்.

எனக்கு நம்பிக்கையிருக்கு. தாய்குலத்தோட ஹிப்பாக்ரசி, உண்மை குறித்த அச்சம், பொய் மீதான காதல் இதெல்லாம் ஃபேர் அண்ட் லவ்லி பூச்சை விட லேசானது. அதுக்குள்ளாற அவிக நம்மை விட ப்ராக்டிக்கல், நம்மை விட தில்லு துரைசானிங்க, நாளிதுவரை அவிகளை இந்த சமுதாயம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கு, இப்பயும் எப்படியெல்லாம் ஏமாத்துதுன்னு அவிகளுக்கு தெரியும். நிச்சயமா என்னோட இந்த தொடர்பதிவுக்கு தாய்குலத்தோட ஆதரவு நிச்சயம்.

நான் தாயி,தங்கச்சின்னு வசனம்லாம் விடமாட்டேன். தாளி மனித குலத்தோட பயணமே சாவுங்கற இலக்கை நோக்கித்தான். இதுல அவிக சக பயணிகள் தட்ஸால். அவிகளை பத்தி கூட எனக்கு பெருசா அக்கறை கிடையாது ( மானசீகமா நான் ஒரு பெண் -பெண்ணை விட மென்மையானவன்) எனக்கு இந்த கிடாய்ங்க மேல தான் அக்கறை தாளி சூட்சுமம் தெரியாம , அவிகளை பேயாக்கி இவிக பலியாகி, மனிதத்தையே நலியாக்கி தூத்தேறிக்க இதை விடப்போறதில்லை.

தினசரி ஹிட்ஸ் ஜீரோவுக்கே வந்தாலும் சரி தொடரத்தான் போறேன்..
ஜனாதிபதியாறது அப்பாறம் கீட்டம் பாஸு.. இண்டிலிலயும் ,உலவுலயும் ஒரு ஓட்டை போட்டுத்தான் பாருங்களேன்.

நீங்க ஓட்டுப்போட்டா பதிவு பிரபலமாகும். பிரபலமானா இன்னம் நிறைய பேர் படிப்பாய்ங்க. மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கை பயணத்துல சக பயணிகளான பெண்களை  இன்னம் நிறைய பேரு புரிஞ்சிக்கிடட்டுமே ..

பெண்களே புரிஞ்சிக்கிட்டா டபுள் ஓகே