மானில கனவுகள்




எச்சரிக்கை:
இதன் அப்டேட்டட் வெர்ஷனை படிக்க இங்கு அழுத்தவும்.

இந்திய மானிலங்கள் எப்படி இருக்கனும்னு நமுக்குள்ள சின்னதா ஒரு கனவு இருக்கு. அந்த கனவை நனவாக்க ஒரு திட்டமும் இருக்கு.ஆனால் இதை அமல்படுத்தவேண்டியவுக வேற இருந்தாலும் கனவு காண அல்லாருக்கும் உரிமை இருக்குல்ல.

கனவுகளை ஆட்சியாளர்களுக்கு அனுப்பினா கொரியர் சார்ஜ் தான் வட்டம்.ஆனால் ப்ளாக்ல போட்டா பத்து பேர் படிப்பாய்ங்க. அவிகள்ள ஆரோ ஒருத்தர் எம்.எல்.ஏ,முதல்வர்னு ஆனா திட்டம் அமலாகவும் வாய்ப்பிருக்கு.

அதனால என் மானில கனவுகள் கீழே:

1.அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகள் மறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். உடல் சார்ந்த சோதனைகள் முழுக்க முழுக்க வேறு மானிலங்களில் மட்டுமே நடக்க வேண்டும். நமது மானிலத்தில் கிளைகள் இல்லாத வேற்று மானிலத்து தனியார் மருத்துவ மனைகளிலேயே நடக்கவேண்டும்.

புத்தி சார்ந்த சோதனை கம்ப்யூட்டரைஸ்ட் ஆப்ஜெக்டிவ் டைப்பில் நடக்க வேண்டும், மதிப்பெண்களை கம்ப்யூட்டரே நிர்ணயிக்க வேண்டும். அது ஆட்டோ மெட்டிக்காக அரசு வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுவிட வேண்டும்.

மன நலம் தொடர்புள்ள சோதனைகளும் இவ்விதத்திலேயே நடை பெறலாம். இச்சோதனைகளில் தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே பணியில் தொடர அனுமதி. தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள/தேவையான சிகிச்சை பெற லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதால் முன் கூட்டியே எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் மூப்பு அடிப்படையில் தற்போதுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பு எண்ணிக்கையில் டெண்டர் அடிப்படையில் ( ஒரே தகுதி, குறைந்த பட்ச சம்பளம்) இளைஞர்/இளைஞியரை முன் கூட்டியே அப்பாயிண்ட் செய்து ரிசர்வில் வைத்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்சொன்ன மறு தேர்வில் டப்பாஸான (பாஸுக்கு ஆப்போசிட் தலைவா!) பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் அதாவது தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வருபவர்களை கொண்டு வேலையிடங்களை நிரப்ப வேண்டும். பி.கு: மிச்சம் , மீதி உள்ளவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதெல்லாம் இந்த பதிவில் அவ்வப்போது சொல்லப்படும்.

2. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஓய்வு நேரத்தில்/ லீவு நாட்களில் (அரசு நிறுவனங்களுக்கல்ல) அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.(இப்பத்தான் செல் ஃபோன் இருக்கே சரியா அவிக பணியிடத்தை போய் சேர பிடிக்கும் நேரத்துக்கு 5 நிமிடம் முன்பு மட்டுமே எஸ்.எம்.எஸ் மூலமா தெரிவிச்சா போதும். எஸ்.எம்.எஸ் ரிசீவ் ஆன 3 ஆவது நிமிடம் அந்த ஃபோன் ப்ளாக் செய்யப்படவேண்டும். இதை கூட அவிக பயோடேட்டாவ அனலைஸ் பண்ணி அவிக சாதி,சனம் இல்லாத ஏரியாவா அவிகளுக்கு டச் / அறிமுகமிருக்கிற துறையை ஐடென்டிஃபை செய்து கம்ப்யூட்டரே பணியிடத்தை டிசைட் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பறாப்ல ஏற்பாடு செய்யனும்.

3.மக்களில் 18 வ‌ய‌து நிறைந்த‌ ஆண்,பெண் அனைவ‌ருக்கும் குறுகிய கால /45 நாட்கள் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியிலான அக்கிரமங்கள் குறையலாம்/வெளிச்சத்துக்கு வரலாம்/ போலீஸ் வேலையிலான ரிஸ்க்/ சீரியஸ் நெஸ் புரியலாம். எட்டணா போஸ்ட் கார்டிலோ /எஸ்.எம்.எஸ்ஸிலோ கபாலிக்கும், ஏட்டுவுக்கும் நடக்கும் சம்பாஷணையாக ஜோக் எழுதி அனுப்பாமல் இருப்பார்கள் அல்லவா. மேலும் இவர்களது பயோடேட்டாக்கள் டேட்டா பேசில் ஏறிவிடும். நாளை இவர்கள் க்ரைமில் இறங்கினால் ட்ரேஸ் செய்வது எளிது. போலீஸ் துறை முழு வீச்சில் பணி செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள ஸ்டாஃபை போல் இன்னும் 2 செட் ஆட்கள் தேவை. ஷிஃப்ட் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டும். சின்ன மூவ் மெண்ட் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்பத்தானே அடுத்த ஷிஃப்ட் ஆளு தொடர முடியும்.

4.வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும். ஒரு மேன் பவர் பூல் கிரியேட் பண்ணி அதை கம்ப்யூட்டரைஸ் பண்ண வேண்டும். அவன் /அவள் தகுதிகளை/விருப்பங்களை வைத்து எவன் எங்கே வேலை செய்யவேண்டும் என்று கம்ப்யூட்டர் முடிவு செய்யவேண்டும்.

5.ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அமல் செய்வது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேவையான தொழில் நுட்பம், மேன் பவரை தருவதும், சூப்பர் வைஸ் செய்வதும் மட்டுமே மாவட்ட இயந்திரத்தின் வேலையா இருக்கனும்.

6.அரசு விளம்பரங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிக்கை,ரேடியோ , டி.வி சேனல்களில் வெளியிடப்பட கூடாது.(காசு செலவழித்து) அரசு சார்பில் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டுமே வெளியிடப்படவேண்டும். மானில முழுவதிலுமான மக்களுக்கு தேவைப்படும் விளம்பரங்கள் மெயினாகவும் , மாவட்ட அளவில் மட்டுமே தேவைப்படும் விளம்பரங்கள் தனி இணைப்பாகவும் வெளியாக வேண்டும். தேவைப்பட்டவர்கள் வாங்கி படிக்கலாம் அ இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேற்படி அரசிதழுக்கு ஜம்ப்ளிங் முறையில் தினம் ஒரு பிரபல பத்திரிக்காசிரியர் ஆசிரியத்வம் வகிக்கலாம்.

7.அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். அரசு வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக மேற்சொன்ன ஸ்தலங்களின் அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)

9.வாரத்துக்கு ஒரு தினத்தை சுற்று சூழல் தினமாக அறிவித்து அன்று அனைத்து தனியார் வாகனங்களையும் ( பஸ்ஸு, கூட்ஸ் கேரியர் லாரி வரை விட்டுடலாம் பாஸ். எஸ்காம் தெரிஞ்ச கதைதானே) தடை செய்யலாம். மீறி போய் தான் ஆவேன்னா ஒரு மரம் நட்டு அதை பராமரிக்கிற செலவை அந்த பார்ட்டிக்கிட்டருந்து வசூலிக்கலாம்.

10.காவல் துறை உட்பட அரசு துறைகளுக்கு எழுத/அனுப்பப்படும் விண்ணப்பங்கள்/புகார்கள் அஃபிடவிட்டுடன் அனுப்ப வழி செய்யவேண்டும். பொய்/தவறான தகவல் என்று நிரூபணமானால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

11. சாதா தந்தி,அவசர தந்தி போல 1 மணி முதல் 24 மணி நேரத்தில் தீர்வு தேவைப்படும்/கோரப்படும் ரெப்ரசன்டேஷன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூ.500 காஷன் டெப்பாசிட்டாக செலுத்தப்படவேண்டும். அதில் தவறு/பொய் இருந்தால் கா.டெப்பாசிட் ஸ்வாஹா

12.பஞ்சாயத்து மீட்டிங் ஹால் முதல் சட்டமன்றம் ஈறாக கூட்டம் நடக்காத காலங்களில் தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். என்னைக்கேட்டால் சட்டமன்ற கூட்டமே வீண் வேலை .வெறுமனே மேசையை தட்டிக்கொண்டு , கண்ணாடியை பறித்துக்கொண்டு, சேலையை உறித்துக்கொண்டு.. பேசாமல் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் கதையை முடிக்கலாம். (இது சட்டமன்ற உரிமைக்குழு நடவடிக்கைக்கு இலக்காகாதில்லிங்களா?)

13.காவல்,மருத்துவம், தீயணைப்பு தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் க்ளோபல் டெண்டர் அழைத்து விற்றுத்தொலைக்க வேண்டும் . பேசாமல் கி.மீ க்கு இவ்வளவு என்று காண்ட் ராக்டில் அமர்த்திக்கொள்வது பெஸ்ட் ஆஃபர்.

14. நாள் முழுக்க அலர்ட்டில் இருக்க வேண்டிய துறைகளை தவிர மற்ற துறைகள் அனைத்தும் தினம் காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை உண்மையாக வேலை செய்தால் போதும். என்ன டேபிளுக்கே டீ, நிகோடின் சாக்லெட்,சிக்லெட்,டிஃபன், லஞ்ச், ஒழுங்கான கழிவறை வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.(இவிக 10 மணிக்கு வந்து 12 வரை டீ கடைல இருந்துட்டு மறுபடி டீ கடைக்கு போய் ராத்திரியெல்லாம் வேலை பார்க்கிறதா பம்மாத்து பண்ண அரசு செலவழிக்கிறதை விட இது ஒன்னும் வீணில்லா)

15.முதற்கண் எல்லா பேப்பர்ஸையும் டிஜிட்டலைஸ் பண்ணிரனும். அதை ஒட்டு மொத்த மானில அரசு இயந்திரத்துக்கு அவெய்லபிளா வைக்கலாம். 15 நாளைக்கு முந்தைய காகிதம் கேட்டு யாராச்சும் வந்தா சர்ச் ஃபீ ரூ 10 வசூலிச்சிக்கிட்டு சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துரலாம். ( லெட்டர் காபி கேட்டு சென்னைக்கு எழுதியிருக்கோம்ங்கற பருப்பெல்லாம் வேகாதில்லை). இவிக ஆஃபீசுகளுக்கு திரிஞ்சு திரிஞ்சு தேஞ்சு போற 12 ஜோடி செருப்போட விலையோட ஒப்பிட்டா பத்து ரூபால்லாம் ஜுஜுபி.

16.அரசு பள்ளி, கல்லூரி,ஐ.டி.ஐ,பல்கலை இதெல்லாம் படிப்படியா சொந்த கால்ல நிக்க (அரசு க்ராண்ட் எதிர்பார்க்காம) வழிவகை செய்யனும். உ.ம் வாய்ப்புகளை பொருத்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள், டைம் ஷேர் சிஸ்டம், சோலார் பவர், பயோ கேஸ் யூனிட்ஸ்,காற்றாலைகள்.

17.அரசுத்துறையில் நட்டம் வந்தால் துறை அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவருக்கும் அவரவர் சம்பள விகிதப்படி ஷேர் பண்ணிரனும். அதே போல இதுவரை வந்த லாபத்தை விட கூடுதலா லாபம் வந்தாலும் கூடுதல் லாபத்தை பிரிச்சு (சம்பளங்களின் விகிதத்துல ) கொடுத்துரனும்.

18.ஆடி,மார்கழி மாதத்திலான சொத்து விற்றல்,வாங்கல் பதிவுகளுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணத்தில் 10% தள்ளுபடி.(இது ஏதுக்குனு கேட்டா பதில் அப்புறமா சொல்றேண்ணா)

19.மேற்படி பல வழிகள்ள செலவுகள் குறைஞ்சு, வருவாய் அதிகரிக்கும்போது ஏழை மக்களுக்கு கு.ப வாடகையில் வீடுகள், கடைகள் கட்டித்தரவேண்டும். எவரும் 2 1/2 வருடங்களுக்கு மிஞ்சி அதே வீட்டில் அ கடையில் இல்லாதவாறும் குலுக்கல் முறையில் பந்தாடிக்கொண்டே இருக்கவேண்டும். அலாட்மென்டும் இதே முறையில் நடக்க வேண்டும். (இதனால அரசுக்கு மெடிக்கல் பில் குறையும், க்ரைம் ரேட் குறையும், வரி வசூல் அதிகமாகும்)

20.திருமலைல சிறப்பு தரிசனம் மாதிரி ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம். டபுள் சார்ஜ் போடலாம். அப்போ சாதா பவருக்கு தர்ர சப்சிடியும் ஓரளவு கவர் ஆகும். எதிர்கால முதலீட்டுக்கும் வழி ஏற்படும். இலவச மின்சாரம்னு வழங்கறோம் . கணக்கில்லை.வழக்கில்லை.

ஜெயலலிதா அம்மையார் அடையாள சம்பளம் வாங்கிக்கிட்ட மாதிரி அடையாள கட்டணமா ஒரு ரூபாயாச்சும் வசூல் பண்ணனும். அப்போ எல்லா பயனாளியோட ஜாதகமும் டேட்டா பேஸுக்கு வந்துரும். லட்ச ரூபா பைக் வாங்கறவன் யாரு, ரஹ்மான் ஸ்டார் நைட்டுக்கு போறவன் யாருனு மொத்த டேட்டாவையும் கலெக்ட் பண்ணி பயனாளி பட்டியல்ல இருந்து தூக்கிக்கிட்டே வரவேண்டியதுதான்.

21.அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்சனுக்கு போனா தங்க ஜனதா கெஸ்ட் ஹவுசஸ் கட்டனும். பராமரிப்பு பொறுப்பை ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு தரலாம். பெண்கள் குழுவுக்கு தந்தா நித்யானந்தா சமாசாரம் எதுனா நடந்துரலாம்னு ஒரு முன்னெச்சரிக்கைதான்.

22.அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தர்ர எந்த நிறுவனமா இருந்தாலும் கூடுதல் வரி வசூலிக்கனும். அன் ப்ரொடக்டிவ் விளம்பரங்கள் கட்சி, கருமாந்திரம், பிறந்த நாள் வாழ்த்து, விளம்ப்ரம் தரக்கூடாத விஷயங்களுக்கு விளம்பரம் தந்தாலும் டாக்ஸு எதுவானாலும் இதான் ரூலு.

23.ஞாயிறு கடை திறந்துக்க. வேலையாட்கள் கிட்டேருந்து என்.ஓ.சி கொடு. கூடுதல் டாக்ஸ் கட்டு.

24.ஒரு படம் 100 நாள் ஓடினா அடிஷ்னல் டாக்ஸ் ( மனித வேலை நாட்களை வீணாக்கினதுக்கு நஷ்ட ஈடு)

25.அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்,பாப்பாவுக்கு பிறந்த நாள். 26.ஃப்ளெக்ஸ் வச்சா ஒரு நாளைக்கு இவ்ளோனு டாக்ஸு

27.ஊர்வலம், கூட்டம் ,தர்ணா,கடையடைப்பு நடத்தினா டாக்ஸு.

28.அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் செல்ஃபோன். பரஸ்பர ஃப்ரீ கால் வசதியுடன். (டெலிஃபோன்ஸ் எல்லாம் வாபஸ்)

29.அரிசி அட்டை வச்சிருந்து தனியார் நர்சிங் ஹோம்ல குழந்தை பெத்தா டாக்ஸு. (அதுக்கு மின்னாடி இன் குபேட்டர் ஷார்ட் ஆயிராம, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பத்தாக்குறை வராம பார்த்துக்கனும்ணா இல்லேன்னா ஆஸ்பத்திரியை பத்தவச்சுருவாய்ங்க)

30. ரெண்ட் அக்ரிமெண்ட் விஷ்யத்துல (ஷாப் /ஹவுஸ்) ரீஃபண்டபிள் அட்வான்ஸ்ல 40% அரசு சேமிப்பு பத்திரமா தான் வழங்கப்படனும். பெண்ணை பெத்தவங்க பெண்ணுக்கு பரிசா ( வரதட்சிணை?) தர்ர கோல்டை கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் மூலமாவும், கேஷை அரசாங்க சிறு சேமிப்பு பத்திர மூலமாவும் தான் தரணும்)

31அரசாங்க வெப்சைட்டில் மேட் ரி மோனி, ஆன் லைன் ஜாப்ஸ், சாட் வித் மேதாவிஸ் ,ப்ரொஃபெஷ்னல்ஸ் எல்லாம் வைக்கலாம். அரசே ஒரு சர்ச் இஞ்சின் வைக்கலாம். ஒரு திரட்டி வைக்கலாம் . ப்ரவுசர்ஸ் கருத்துப்படி சிறந்த பதிவுகளுக்கு தினசரி 1000, 500, 250 ரூ பரிசு தரலாம்.

32.லைசென்ஸ் இத்யாதில கூட அர்ஜெண்ட் ஆர்டினரினு வச்சி டபுள் சார்ஜ் பண்ணலாம். அவசரத்துக்கு பிறந்த பயலுவ செலவழிக்கட்டுமே.

33. கொரியர் கம்பெனிகளோட ஒப்பந்தம் வச்சிக்கிட்டு கேஸ்ட்,இன் கம், சாதி சர்ட்டிஃபிகேட்டையெல்லாம் டோர் டெலிவரி தரலாம். அட் ரசும் ப்ரூவ் ஆகும்.பைசாவும் பெயரும்.

34.பொல்யூஷனை க்ரியேட் பண்ற தொழிலுக்கெல்லாம் அந்த பொல்யூஷனை ரெக்டிஃபை பண்ண எத்தனை மரம் நடனும், அதுக்கு என்ன செலவாகும்னு கணக்கு போட்டு வசூலிக்கலாம்.

35.கல்யாணமாகாத, வேலையில்லாத ஆண் பெண்களை கெஜட்டட் ஆஃபீசர் ஒருத்தர் ஐடென்டிஃபை பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும் .அவிகளுக்கு அரசே ஐ.டி வழங்கனும். விடோயர்ஸ், டைவோர்ஸீஸ், நோயாளி பெண்டாட்டி, நோயாளி கணவனுள்ளவங்களையும் இப்படி ஐடென்டிஃபை பண்ணி ஐ.டி கொடுக்கிறது நல்லது. இந்த விவரங்களை அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அவெய்லபிள்ள வைக்கனும். (செக்ஸ் க்ரைமுக்கு இதான் அடிப்படை ) இவிகளுக்கு கவுன்சலிங் தர ஏற்பாடு பண்ணனும் . இவிகளுக்கு சங்கம் வச்சு கூட்டி சாரி கூடி பழக வழி செய்தாலும் ஓகே. ஊத்தி கொடுக்கிறதை விட இது பெட்டர். ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.

36.ஊருக்கொரு ஜனதா மீட்டிங் ஹால். வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ 100+ பவர் சார்ஜ்

37.கல்யாணமாகாம சேர்ந்து வாழ விரும்பறவுகளுக்கு டெம்ப்ரரி ரெஜிஸ்ட் ரேஷன் செய்யலாம்.

38. ஐம்பது பேருக்கு மேல சாப்பிடற மெஸ்,ஹோட்டல், கல்யாண மண்டபம் எல்லா இடத்துலயும் பயோகேஸ் யூனிட் அமைக்கறத கட்டாயமாக்கனும்.

39.குக்கர் இல்லாத வீடுகளுக்கு குக்கரும், கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸும் கட்டாயமா கொடுத்தாகனும். இதனால தண்ணீர் வினியோகம், எரிபொருள் வினியோகம்,பொல்யூஷன் மானாவாரியா குறையும்.
40.லாரி மூலம் தண்ணி சப்ளை பண்றாய்ங்க. ஃபில்லிங்க் பாயிண்ட்லருந்து பைப் லைன் போட்டு அழனும்.

41.பஸ் ஸ்டாண்ட் , பொது இடங்கள் மேல மத்தில ஓப்பன் வராப்ல (வெண்டிலேஷன்/ ஏர் பர்ப்பஸ்) கான் க்ரீட் கூரை அமைச்சு நடை பாதை பார்ட்டிகளுக்கெல்லாம் கழிவறைல பாதி சைஸ்ல கடை போட்டு கொடுக்கனும்.

42. வரி வசூலை அந்தந்த வியாபரிகள் சங்கங்கள் கிட்டயே ஒப்படைச்சுரனும். என்ன ஒரு வருஷ வரி முன் பணமா கட்டனும். அரசு கொடுத்த டார்கெட்டை கவர் பண்ணனும் .ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் டார்கெட் உயர்ந்துகிட்டே போகுங்கற கண்டிஷனை ஏத்துக்கனும்.

43.அரசு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பிள்ளைங்களை வச்சி நியூஸ் ரீல் மாதிரி இல்லாம ஸ்வாரஸ்யமா நோய் தடுப்பு, கருத்தடுப்பு, வன்முறை தடுப்பு,குற்றத்தடுப்பு மாதிரி சமாசாரங்களை படமா எடுக்க செய்து சி.டி.போட்டு வினியோகம் பண்ணனும். கலர் டிவியே கொடுத்தாச்சு அடுத்த ஸ்டெப் குட்டியா (சி)மடி ப்ளேயர் தான் .

44.அரசு ஊழியர்களுக்கு (ஆண்- பேண்ட் சட்டை ,பெண்-சுடிதார் சீருடை) தொந்தி போட்டு,பின் பக்கம் பெருத்துப்போன பார்ட்டிகள் மட்டும் வேட்டி,புடவை கட்டிக்கிட்டு அழட்டும் அதை பார்த்து யார் அழறது. ஆஃபீசுக்குள்ளாற எந்த ரூமுக்கும் கதவே இருக்க கூடாது. இருந்தா கச முசா ஆரம்பிச்சுர்ராய்ங்க. கண்ணாடி கதவுதான் .சன் ஃபிலிமும் ஒட்டக்கூடாது. புதுசா கட்டற ஆஃபீசெல்லாம் நவகிரக சன்னிதி மாதிரி இருக்கனும்.

ஒருத்தன் மூதியை அடுத்தவன் பார்க்க கூடாது. மத்தில இருக்கிற அதிகாரி மட்டும் எல்லாத்தையும் பார்க்க சுழல் நாற்காலி. சவுண்ட் பொல்யூஷனுன்னா எஸ்.டி.டி பூத்மாதிரி கண்ணாடி,கொடுக்கல் வாங்கலுக்கு (பேப்பருங்கண்ணா) கவுண்டர். முக்கியமான சேதி ஆஃபீசுக்குள்ளாற வந்தபிறவு ஆண்களோட பாக்கெட் ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். பெண்களோட பர்ஸு, ஹேண்ட் பாகு எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். (மிஞ்சி போனா ரெண்டு பேட் இருக்கப்போவுது அவ்ளதானே.

டிவில பார்த்து பார்த்து 3வயசு குழந்தைக்கு கூட என்ன சமாசாரம்னு தெரிஞ்சு போனபிறவு என்னத்த சீக்ரெட்டு.

45.துட்டு போனா …ரே போச்சுன்னு எல்லா கம்ப்யூட்டருக்கும் இன்டர் நெட் கனெக்சன். அவன் ப்ரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் பண்ண முடியாம லாக்கு.

46. தேவையான எல்லா இடத்துலயும் ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவறை. கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்க யூனிட்.

47. அம்மாதான் தில்லு துரைசானியாச்சே – கற்புபத்தி கருத்து சொன்ன குஷ்பூவுக்கே அடைக்கலம் கொடுத்தவுக ஆச்சே பாலியல் தொழிலாளிகளுக்கு போதுமான கவுன்சிலிங் கொடுத்து (எய்ட்ஸ் – பால்வினை நோய்கள் குறித்த) ஒர்க் ப்ர்மிட் தரலாம்.

48.முக்கியமான மேட்டரை உட்டுட்டன். டாஸ்மாக் மூலமா வர்ர வருமானத்துல “குடி” மகன்களுக்கு மனம், சிறு நீரகம்,கல்லீரல் தொடர்பான வியாதிகள் வந்தா ரிஸ்க் கவர் ஆகிற மாதிரி இன்ஷ்யூர் பண்ணலாம்.
எச்சரிக்கை:

இந்த யோசனைகளை அந்த காலத்துல எங்க சந்திர பாபுவுக்கு அனுப்ப அவர் பலதும் சுட்டுட்டாரு. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நான் எழுதி அனுப்பின பல யோசனைகள் இன்னைக்கு அமல்ல இருக்கு. இதெல்லாம் ந்டக்கிற விசயமான்னு மலைச்சுப்போயிராதிங்க.மனமிருந்தால் மார்கமுண்டு.

பிற்சேர்க்கை அ புலம்பல்:

ஏற்கெனவே ஒரு பதிவில் சொன்னதாக ஞா. இங்கே எல்லாமே பொய். மரணம் ஒன்றுதான் சத்தியம். அந்த மரணத்தை தாண்டி நிலைக்க கூடியவை நம் எண்ணங்களே. எனவே தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு சொல்லியிருக்காய்ங்க.

எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு. மனித எண்ணங்கள் நல்லெண்ணங்களாக இருக்க மனிதனின் குறைந்த பட்ச அத்யாவசிய தேவைகள் கட்டாயம் நிறைவேற்ற ப்படவேண்டும். உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றுடன் செக்ஸையும்
அத்யாவசிய தேவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும். மனிதன் தன் அத்யாவசிய தேவைகளை உழைப்பின் மூலமே வென்றெடுக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.

முக்கியமாக அகால மரணங்கள் ( 45 வயதுக்குள்ளான மரணங்கள்), துர்மரணங்கள் (விபத்து,கொலை,தற்கொலை, வியாதிகள்)தடுக்கப்பட்டாக வேண்டும்.

சாதி,மதம், இனம், நிறம்,பால்,பிராந்திய  வேறுபாடுகளை மீறி மகத்தானது,மதிப்பு மிக்கது  மனித உயிர். உயிர் இருந்தாத்தான் எதுவுமே .. அதுவே போயிருச்சுன்னா என்ன செய்ய முடியும். மனித உயிருக்கு உலை வைக்கிற விஷயங்கள் அனேகமிருக்கு.
அதுல சில  விஷயங்களை பற்றியாவது  எழுதனும் எழுதனும்னு தள்ளிப்போய் கிட்டே இருக்கு.

ஹோல்சேலா மனித உயிரை பறிக்கிற விஷயம் போர் . இதை பத்தி நிறைய எழுதியிருக்கேன். ரொட்டிக்கில்லாத, சோத்துக்கில்லாத  நாடெல்லாம் ராணுவத்துக்கு வெட்டியா செலவழிச்சுக்கிட்டு இருக்கு. போர் நடக்கனும்.கு.பட்சம் போர் சூழலாவது இருக்கனும். நாடுகளுக்கிடையில் பதட்டம் நிலவனும். அப்பத்தான் அமெரிக்காவுக்கு பொழப்பு ஓடும்.

நம்ம நாட்டோட பொருளாதாரம்  எப்படி விவசாயத்தை சார்ந்து இயங்குதோ அதை போல அமெரிக்காவோட பொருளாதாரம் யுத்த தளவாட உற்பத்தியை நம்பி இயங்குது.  நமக்கு பொழப்பு ஓட மழை பெய்யனும். அவிகளுக்கு யுத்தம் நடக்கனும்.

இந்த இழவெடுத்த பொழப்பாலத்தான் வியட்னாம்லருந்து, ஈரான் - ஈராக், குவைத்-ஈராக் யுத்தங்கள் நடந்தது. ஈராக் சூறையாடப்பட்டது உலகத்தின் ஒரே ஆண்பிள்ளை சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டார். ஆப்கானிஸ்தான்,காபூல், இலங்கை - தமிழ் ஈழம் இப்படி ஒன்னு ரெண்டில்லை அனேக யுத்தங்கள் நடந்தது. நடக்குது.

யுத்தம் நடந்தா என்னனு சோடாபுட்டிகண்ணாடிகள் கேட்கலாம்.யுத்தத்தோட கதை அப்புறம் முதற்கண் ராணுவத்தை ஊருக்குள்ள விட்டா என்ன நடக்கும் தெரியுமா? இலங்கைல கட்டுப்பாட்டுக்கு பேர் போன நம்ம இந்திய ராணுவத்தினரே 90 வயது பாட்டியை கூட விடாம கற்பழிச்சுட்டாய்ங்க.

இன்னைக்கு யுத்தம்னா வாள்,வேல் தூக்கிக்கிட்டு வெற்றி வேல் வீரவேல்னு ஓடற யுத்தமில்லை. அப்பாவி மக்கள் மேல க்ளெஸ்டர் பாம், கிருமி பாம், ஆட்டம் பாம் போட்டு துடைச்சி விட்டுர்ரதுதான் யுத்தம்.

தீவிர வாதம்:
ஸ்தூலமா பார்த்தா தீவிரவாதத்துக்கு பசி,சுரண்டல் தான் காரணம்னு சொல்லிரலாம்.ஆனால் மனித மனம்  விசித்திரமானது. பல நேரங்கள்ள ஸ்தூலமான விஷயங்களை விட மானசிக விஷங்களுக்கே முக்கியத்துவம் தர்ர சாதி. ராம் மந்திர் மேட்டரையே எடுத்துக்கங்களேன். இந்துக்களை பொருத்தவரை இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பாங்கறாய்ங்க. அப்ப எதுக்கு அயோத்தியையே கட்டி அழனும். இஸ்லாமிரை கூட பாருங்க. அவிகள பொருத்தவரை ஓரிறை கொள்கை தான் ஆணி வேர். அந்த ஒரே இறைவனுக்கும் உருவம் கிடையாது,பெயர் கிடையாது. ஆனால் என்னாச்சு?

இன்னைக்கும் தேர்தல்ல நிக்கிற வேட்பாளர்கள் ஒரு ஏரியா ஓட்டை வளைக்கனும்னா அந்த  ஏரியால இருக்கிற கோவிலுக்கு லம்பா ஒரு டொனேஷன் கொடுத்துட்டா போதுங்கற நிலைமை இருக்கு. இதுக்கு என்ன காரணம்னா..

காலம் காலமா மக்கள் மனசுல கூடாரம் அடிச்சி கிடக்கிற எண்ணங்கள், நம்பிக்கைகள். இதுக்கு காரணம் என்னன்னா.. பிறர் உழைப்பில் வாழும் இனங்கள். (இங்கே நானு பிராமணர்களை மட்டும் குறிப்பிடல ..ஒவ்வொரு நாட்டிலயும் இப்படி ஒரு க்ரூப் உண்டு. அதே குணம், அதே புத்தி, அதே ஹிடன் அஜெண்டா)

இந்த விவகாரத்துல மக்கள் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா வளர்ச்சி இருக்கனும். செல்வம் பெருகனும். செல்வம் பெருக்க எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கனும். பெருகிய செல்வம் சமூகத்தின் அடித்தட்டு வரை பகிரப்படனும். இதெல்லாம் நடக்கிற வரை மக்களோட நம்பிக்கைகளை கௌரவிச்சுத்தான் ஆகனும்.

வேதம்,உபனிஷதம்லாம் சோறு போடாது ( சுய மரியாதைக்கு பங்கமில்லாத வகைல), மதராஸா கல்வி சோறு போடாதுனு இப்பவே தெரிஞ்சிருக்கு. விழிப்புணர்ச்சி இருக்கு. இதை அரசும் உணரனும். உணர்ந்து செயல்படனும். அரசு நிர்வாகம்ங்கறது க்ராஸ் ரூட் லெவல்ல இருக்கனும். மத்திய மானில அரசுகள் தங்களோட அதிகாரத்தை 70 சதவீதம் தியாகம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கனும்.

ஸ்தூல வாழ்க்கைல இருக்கிற சாரமற்ற தன்மை தான் மனிதனை நம்பிக்கை,மூட நம்பிக்கை இத்யாதிக்கு தள்ளுது. ஸ்தூல வாழ்க்கை நம்பிக்கை தருவதா இருக்கனும். அப்போ தீவிரவாதம்லாம் பக்கவாதம் வந்து படுக்கைல விழுந்துரும்.

எங்கெல்லாம் நக்ஸல்ஸ் பிடி இறுகியிருக்கோ.. அங்கெல்லாம் அரசாங்கம் வள்ர்ச்சிக்குனு ஒதுக்கற  நிதிய நேரடியா நக்ஸல் அமைப்புகளுக்கோ இல்லை நக்ஸல்ஸ் கைக்காட்டற அமைப்புகளுக்கோ ஒதுக்கிரலாம். இதனால அவிக ஆயுதம் வாங்கிருவாய்ங்க,ஜல்சா பண்ணிருவாய்ங்கன்னா பண்ணட்டும். மக்கள் ஆதரவை மொத்தமா இழந்துருவாய்ங்க. இல்லையா உண்மையான வளர்ச்சி சாத்தியமாகு்ம்.

அடுத்து இந்த பட்டியல்ல வர்ரது க்ரைம். க்ரைம் ரேட் பெருக காரணம் ஏற்கெனவே க்ரைமில் ஈடுபட்டவனுக்கு தண்டனை கிடைக்காததும், தாமதமாகிறதும்தான். போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இப்போ இருக்கிற ஸ்டாஃபுக்கு அடிஷ்னலா ரெண்டு மடங்கு ஸ்டாஃபை அப்பாயிண்ட் பண்ணனும். ஷிஃப்ட் சிஸ்டம் கொண்டுவரனும்.

போலீஸோட வேலை வழக்கு பதிவுபண்றதோட முடிஞ்சுரனும். தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்கு வேற ஒரு அமைப்பை கன்ஸ்டிட்யூட் பண்ணனும்.

க்ரைமுக்கு முக்கிய காரணம் செக்ஸ். பாதிக்கு மேல செக்ஸ் க்ரைம்ஸ்தான். திருமணம், விவாகரத்து சட்டத்தை எளிமையாக்கனும். செக்ஸ் கல்வி, செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு லைசென்ஸ் இத்யாதி மூலமா இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.

க்ரைமுக்கான  காரணங்கள்ள  முக்கிய காரணம் வேலையின்மை,வறுமை, பசி,சுரண்டல் , சாதீயம் .இதையெல்லாம் பக்காவான நிர்வாகத்தை வச்சே சரி பண்ணிரலாம்.  நிர்வாகம்னா என்னமோ ஏதோன்னு பயந்துராதிங்க. ஜஸ்ட் மாவட்ட லெவல்ல ஒரு சரிய்யான எஸ்.பி, சரிய்யான கலெக்டர். மண்டல அளவுல நீதிமானான தாசில்தார், ஒரு சி.ஐ இருந்தா போதும்.

அரசாங்கம் ஒரு பட்டியலை தயாரிக்கனும். க்ரைமுக்கு( முக்கியமா கொலை,கொலை முயற்சி)  காரணமாக கூடிய  எந்த மேட்டரா இருந்தாலும் எந்த வித அரசியல் தலையீடும் இருக்காதுனு சட்டம் கொண்டு வரனும். அப்படி எவனாச்சும் தலையிட்டா அவனை தூக்கி உள்ள போட்டுரனும்.

மேற்படி பட்டியல்ல இதெல்லாம் இருக்கனும்:
நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தகராறு, நிலத்தகராறு, சாதி தகராறு, வரதட்சிணை கொடுமை, வன் கொடுமை, வன் புண்ர்ச்சி, கள்ளக்காதல்

உயிர் பலிக்கு காரணமான இன்னொரு பாயிண்ட் விபத்துக்கள். தாளி இந்த ஆட்டோ மொபைல்  கம்பெனி காரவுக பொலிட்டிக்கல்  பார்ட்டிகளுக்கு எலக்சன் ஃபண்டை கொட்டிக்கொடுத்துர்ரதால வங்கிகள் வகை தொகை இல்லாம கடனை வாரிகொடுக்குது. வாகனங்களோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போவுது. அதுக்கேத்த மாதிரி சாலை வசதிகள் பெருகலை.

நேஷ்னல் ஹை வே மாதிரி ஒட்டு மொத்த  நாட்டையும் இணைக்கிற ஒரு தேசீய  நதியை உருவாக்கனும். (  4 ட்ராக்  அகலத்துக்கு ஒரு கால்வாய்ங்கண்ணே) . எங்கெங்கே  நதிகளோட  உபரி நீர் கடல்ல கலக்குதோ  அங்கெல்லாம் அந்த உபரி நீரை திருப்பி விட்டாலே தேசீய நதி ரெடி. இதையாச்சும் டெண்டர்,காண்ட் ராக்ட் முறையில இல்லாம சிறப்பு ராணுவம் ஒன்னு அமைச்சு போர்கால அடிப்படைல வெட்டனும்.

இருக்கிற மிலிட்டரி எல்லாம் சீனாக்காரன், பாக்கிஸ்தான் காரணோட ஏகவே சரியா இருக்கு. தகராறுக்குட்பட்ட நிலப்பகுதிகளை ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி கொடுத்துட்டு (அதோட பாதுகாப்பை ஐ . நாவின் பாதுகாப்பு சபை ஏத்துக்கிடறாப்ல செய்யனும்)  மிலிட்டரியோட பெரும்பகுதியை இந்த வேலைக்கு உபயோகிக்கலாம்.

இப்படி செய்தா நீர் வழி போக்கு வரத்து பெருகி  நேஷ்னல் ஹை வே மேல வாகனங்களோட ப்ரெஷர் குறையும். (It is not mine. Read somewhere) மேலும் வர்ஜியா வர்ஜியமில்லாம வாகன கடன் கொடுக்கிறதை விட்டொழிக்கனும். இந்த சனங்க கடன் கொடுக்கிறானேனு வாகனங்களை வாங்கிர்ராய்ங்க. ட்ரைவரை வச்சா சம்பளம் தரணுமேனு பூச்சி பூச்சினு ஓட்டறாய்ங்க.பக்கத்துல மச்சினி இருந்தா ஓவர் ஸ்பீட். ஷாட் கட் பண்ணா குடும்பமே காலி.

சமீபத்துல ஏதோ சர்வே எடுத்து ராத்திரி 12 ல இருந்து விடியல் 3 வரை தான் விபத்து நடக்குது. அதுவும் ஹெவி வெஹிக்கிள்ஸ் மூலமா தான் விபத்து நடக்குதுனு கண்டுபிடிச்சு மேற்படி நேரத்துல ஹெவி வெஹிக்கிள்ஸை எல்லாம் ரோட்டோரம் நிறுத்தி போடனும்னு முடிவு செய்திருக்காய்ங்க.

நின்னிருக்கிற வாகனத்து மேல மோதி செத்தவன் எத்தினி லட்சம் பேரு.  விபத்துக்கு முக்கிய காரணம் ட்ரைவிங் லைசென்ஸ் வழங்கறதுல கோல் மால். தூக்கமின்மை. மதுப்பழக்கம். ட்ரைவிங் லைசென்ஸ் தர்ரதுக்கு முந்தி அவனோட மானசிக ஸ்திதியை எக்ஸாமின் பண்ணனும்ங்கறது என் கருத்து. 

மனித உயிர்களுக்கு ஆப்பு வைக்கிற பட்டியல்ல அடுத்து வர்ரது  தற்கொலை. ஒவ்வொரு தாலுக்கா, மாவட்ட மையத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சைக்கிரியாட் ரிஸ்ட் இருக்கனும். கவுன்சிலிங்க தரக்கூடிய  சேவை  நிறுவனங்களை   என் கரேஜ் பண்ணனும். எதையும் மனசுல பூட்டி வைக்க தேவையில்லைங்கற சமூக நிலைய கொண்டு வரனும். இதுக்கு மேற்சொன்ன எல்லா அம்சமும் அமலாகனும். இதெல்லாம் நடக்கிறதா .. போறதாங்கறிங்களா..

ஆட்சியாளர்களோட காதுகள்ள ஊதுற சங்கை ஊதி வைப்போம். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்னு சனம் பொங்கி எழுந்தா வீட்டுக்கு போயிர போறாய்ங்க. அவ்ளதானே..