Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Friday, March 11, 2011

தனபாவம் Vs ஆயுள் பாவம் « Anubavajothidam.com


ஜாதகத்துல லக்னத்துக்கு ரெண்டாமிடத்தை தனபாவம்ங்கறாய்ங்க. எட்டாமிடத்தை ஆயுள் பாவங்கறாய்ங்க.
ரெண்டு வாயை காட்டுது எட்டு மர்மஸ்தானத்தை காட்டுது. ரெண்டு குடும்பத்தை காட்டுது எட்டு தீர்க்க முடியாத கடனை காட்டுது. ரெண்டு பேச்சை காட்டுது எட்டு கொலை,கொலை முயற்சி, சிறைப்படல் தற்கொலை,விபத்து இத்யாதியகாட்டுது.

எல்லா கிரகங்களுக்கும் 7 ஆமிடத்தை பார்க்கிற சக்தி உண்டு. ( அதாவது தன் அதிர்வுகளை செலுத்துதல்). ரெண்டுக்கு ஏழாமிடம்னா அது எட்டாமிடம். எட்டுக்கு ஏழாமிடம்னா அது ரெண்டாமிடம்.இப்ப லிங்க் புரியுதா? இல்லியா சரி மொதல்ல .....

தனபாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு:
தனபாவத்துல சுபகிரகம் இருந்தா ஜாதகருக்கு லீகலா, ப்ளஸ் மோரல் வேல்யூஸோட தன சேர்க்கை ஏற்படும். இவர் லக்னத்துக்கு எட்டை பார்த்தாலும் ஏதோ மருந்து மாயத்துல குணமாயிர்ர நோயா வரும். ஒரு வேளை பாபகிரகம் இருந்ததுனு வைங்க. இல்லீகலா இம்மாரல் வேஸ்ல பணம் வந்து கொட்டும். ஆனா அதே கிரகம் எட்டையும் பார்க்கிறதால பாப கிரகத்தோட காரகத்வத்துல உள்ள நோய்கள் வரும். பில்லு எகிறும், சனி செவ் சம்பந்தப்பட்டிருந்தா அறுவை சிகிச்சை ,அங்க ஹீனம் கூட ஏற்படலாம். இதான் தன பாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு.Read More

Wednesday, December 22, 2010

மரணம் = செக்ஸ் = பணம்

மரணம் வந்த பிறகு உடல் உதிர்ந்து போகுது. உயிர்  முடிவில்லாத இந்த படைப்போட கலந்துருது. செக்ஸ்ல வீர்ய ஸ்கலிதம் நடக்கறச்ச பாடி பத்தின ஞா ஒட்டு மொத்தமா போயிருது. ( ஒரு க்ஷணத்துக்காச்சும்) .இதை காலாதீத நிலை,ப்ளாக் அவுட் குட்டிமரணம்னு கூட சொல்றாய்ங்க.

உடம்புங்கற சிறைல சிக்கிக்கிடந்த உசுரு /ஆன்மா/நினைவு படைப்போட இரண்டற கலந்துருது.

பணம் பல வகையான எல்லைகளுக்குள்ளாற சிக்கி சீரழியற மனிதனை உலகத்தோட ஒன்னு மண்ணா சேரவைக்குது. உ.ம்: மொழி,தூரம், ஜியாக்ரஃபி

மரணம் உங்களை இந்த உலகத்துலருந்து விடுவிக்கிற மாதிரியே செக்ஸ் கூட விடுவிக்குது.

செத்துப்போன பிற்பாடு உங்களுக்கு செக்ஸோ பணமோ தேவையில்லை.

செக்ஸ் அவெய்லபிலிட்டில இருக்கிறச்ச பணத்தோட வேலையிருக்காது. மரணம் பத்தின நினைவு இருக்காது.

உங்க கிட்ட பணம் இருந்தா மரணத்தோட ( ஐம் சாரி மரணத்தோட நிழல்களான தனிமை,இருட்டு,முதுமை எட்செட்ரா) ஃபைட் பண்ணி ஜெயிச்சுக்கிட்டு (அட்லீஸ்ட் ஜெயிச்சுட்டதா நினைச்சுட்டு) சந்தோசமா இருப்பிங்க. இந்த ஃபைட்ல தோத்துட்டுத்தான் இருக்கிங்க. உண்மையில ஹைவேல போயிட்டிருக்கிற மரணத்தை விசிலடிச்சு கூப்ட்டுட்டிங்கனு தெரியற வரை செக்ஸ் குறித்த தேவையிருக்காது ( ஃபிசிக்கல் வீரிய புரளல் இருக்கலாம் - நான் சொல்றது சைக்கலாஜிகல் வில்) மரணம் பத்தின நினைவு இருக்காது.

இப்படி மரணம் -மைதுனம்-தனம்ங்கற மூணுக்கும் உள்ள ஒற்றுமை எந்தளவுக்கு போயிருதுன்னா ஒன்னிருக்கும்போது அடுத்ததுக பத்தின ஞா மே இருக்காதுங்கோ.

எலக்ட் ரானிக் உபகரணங்கள்ள ஆன்,ஆஃப் ஆப்ஷன் இருக்கிறாப்லயே ஒவ்வொரு உயிர்லயும் வாழனுங்கற துடிப்பும்,சாகனுங்கற வெறியும் சமமா இருக்கு.

மரணம் மீதான காதல் கூட வாழனுங்கற வெறியாலத்தான்னா நீங்க சிண்டை பிச்சுக்குவிங்க. ஆமாங்கண்ணா "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இல்லியா? எல்லாம் ஒன்ஸ் மோர்மாதிரிதேன் டேக் ஒன் டேக் டூ மாதிரி தேன்.


மன்சன் காட்ல வாழ்ந்தப்போ சாவு அப்பப்போ கண்ணடிச்சு கூப்புடும், பின்னால தட்டிட்டு போவும், கை குலுக்கும். அந்த கால கட்டத்துல பார்த்திங்கனா செக்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

மரணத்தோட ஸ்பெஷாலிட்டி என்னடான்னா அது ஒவ்வொரு தாட்டி நமக்கு ஹலோ சொல்றப்பயும் வாழ்க்கை பற்றிய நம் எண்ண குப்பைல்லாம் பக்குனு எரிஞ்சு போயிரும். நம்மோட ப்ரியாரிட்டி லிஸ்ட் ரெம்ப சின்னதாயிரும்.  மரணத்துடனான நம்ம அறிமுகமே டாப்ல நிக்கும். இது காட்டு வாழ்க்கைல சாத்தியமாச்சு.அதனாலதான் மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவான செக்ஸுக்கு பெரிய முக்கியத்துவம் இல்ல.


எப்போ இவிக சஞ்சார வாழ்க்கைலருந்து ஸ்திரவாசத்துக்கு மாறினாய்ங்களோ மரணத்துடனான ஹாய்,ஹலோக்கள் குறைஞ்சு போச்சு.

மரணத்தோட விஷயத்துல இன்னொரு பெக்யூலர் திங் என்னடான்னா
அது அப்பப்ப ஹலோ சொல்லலைன்னா உள்ளுக்குள்ளாற சாவு பத்தின பயம் ஸ்டார்ட் ஆயிரும்.  அட்லீஸ்ட் மரணத்தோட நிழல்களாச்சும் நம்மை உரசிக்கிட்டு போகனும்.இல்லைன்னா தாளி தற்கொலை பண்ணிக்க்கிட்டு செத்துப்போயிருவம்.

ஸ்திர வாசத்துல மரணத்துடனான உறவு குறைஞ்சு போச்சு.மரணம் பத்தின பீதி அதிகமாயிருச்சு. மரணத்துலருந்து தப்பிக்க ஒரே வழி செத்துப்போறது. அப்படி சாக தில்லில்லாதவன் தேர்ந்தெடுக்கிற தவண முறை சாவு செக்ஸ்.(ஞா படுத்திக்கங்க குட்டிமரணம்)

ஸ்திரவாசத்துல தான் மன்சன் செக்ஸை ஆற அமர அனுபவிச்சிருக்கனும்.

இயற்கையோட க்ரூர விதி என்னடான்னா எதுமேல உங்களுக்கு எவ்ள சீக்கிரம் எந்த அளவுக்கு ஆர்வம் பிறக்குதோ அந்த அளவுக்கு ,அவ்ள சீக்கிரம் அதை அனுபவிக்கிறதுக்கான சக்தி குறைய ஆரம்பிக்கும்.

உ.ம் தின்னிப்பண்டாரங்களுக்கு ஷுகர்,அல்சர் மாட்டிக்கிறமாதிரி

இப்படியாக செக்ஸில் அதிகமா ஈடுபட்ட மன்சனுக்கு பேட்டரி வீக் ஆக ஆரம்பிச்சது. சாவு ஹலோ சொல்லாததால சாவு பயம் வந்து சாவறதுக்காக செக்ஸுல இறங்கி அஜீஸ் பண்ணிக்கிட்டிருந்தவனுக்கு பேட்டரி வீக்காகி ( இந்த காலத்து வீக்னெஸ்  இல்லிங்கண்ணா அந்த காலத்து பெண்ணை சமாளிக்க முடியாத வீக்னெஸ்) செக்ஸுக்கும் அன்ஃபிட் ஆக ஆரம்பிச்சான்.

இன்னொரு பக்கம் பெண்ணோட செக்ஸ்பவர் என்னானு புரிஞ்சு போச்சு ( ஒரே ராத்திரில பலதடவை உச்சம் பெறும் சக்தி - 7 வெர்ஸஸ் 23ல்லாம் ஞா இருக்கில்லை)

இன்னொரு பக்கம் இவன் பாடுபட்டு பண்படுத்தின நிலம் ஒரு சொத்தா உருவாக ஆரம்பிச்சது. சாவு பயம் மேலும் நெருக்கமா துரத்த - செக்ஸுலயும் அதுக்கு பெருசா  வடிகால் கிடைக்காம இருந்த நிலையில - தன் வாரிசுகள் தன் பிரதிரூபமா - தன்னோட மறுபதிப்பா - தன்னோட நீட்சியா நினைக்க ஆரம்பிச்சான்.

தன் சொத்து தன் வாரிசுக்கே போகனும்னு  நினைச்சான். யோனிய பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்ட ஆரம்பிச்சான். ( சில பார்ட்டிங்க அதை கூட ட்ரை பண்ணியிருக்காய்ங்க)

காட்டு வாழ்க்கைல தன் சகபோராளியா இருந்த பெண்ணை படிப்படியா அடிமையாக்க ஆரம்பிச்சான். அடிமைன்னா அவள் என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணுவானுதானே அர்த்தம்.இவன் எங்கே தன் ஆயுதங்கள்,கவசங்களையெல்லாம் கழட்டி வச்சுட்டு காதல் பண்றது.

செக்ஸுக்காக அவளை அண்டினா அவளுக்கு அடிபணிஞ்சதாயிருமோனு ஒரு சம்சயம்.  அவளோட செக்ஸ் பவர் தந்த எரிச்சல் ஒரு பக்கம். எல்லாமா சேர்ந்து மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸை வச்சுட்டிருந்த இவனை அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா இன்னொன்னை தேட வச்சிருச்சு.

ஆரம்பத்துல பண்ட மாற்றுல ஆரம்பிச்சது பணத்துல போய் முடிஞ்சது. பணம் எல்லா வகையிலயும் மரணம் -செக்ஸுக்கு மாற்றா அமைஞ்சது.

அவனவன் பணம் பணம்னு அலைய முழுமுதற்காரணம் இதான். இவனுக்கு சாவுன்னா பயம், சாகனும்னா பயம், செக்ஸுன்னா பயம்,பொம்பளைன்னா பயம் ஆனால் சாகனும் அதுக்காகத்தான் மன்சன் பணத்தை துரத்த ஆரம்பிச்சான்.

இவன் பணத்தை வெறும்  பணமா பார்த்திருந்தா பிரச்சினையே இல்லை. இவன் சைக்காலஜிக்கலா என்னென்னமோ காம்ப்ளெக்ஸுல மாட்டிக்கிட்டு பணத்துக்கு இல்லாத அருமை பெருமைகளையெல்லாம் கற்பிச்சிக்கிட்டு பணம் பணம்னு அலைய ஆரம்பிக்கிறான்.

ஒரு காலகட்டம் வரை பணம் அவனை திருப்தி படுத்துது. ஒரு கட்டத்துல தாளி செக்ஸுதாண்டா நாம தேடினதுனு தாமதமா ஸ்ட்ரைக் ஆக காம வேட்டைல இறங்கறான்.

அமீபாங்கற ஒரு செல்லுலருந்துதான் எல்லாரும் வந்தோம்.பிரிஞ்சோம். கரீட்டுதான் ஆனால் நம்ம எல்லாரையும் ஒரு  தங்க கயிறு இணைச்சிருக்கு. இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.

மொபைல் தான் உடல். சிம் தான் ஆத்மா. மொபைல்ல எத்தனையோ மேக்ஸ் இருக்கலாம். சிம்ல எத்தனையோ வகையிருக்கலாம்.  பலவித நெட் ஒர்க்ஸ் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொபைலும் இணைக்கப்பட்டுதான் இருக்கு.

டவர் வராத இடத்துல நிக்கிறது, பேட்டரி லோ ஆயிர்ரது, மொபைல தண்ணில போட்டுர்ரது, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிர்ரதுனு இருந்தா நெட் ஒர்க் வேலை செய்யுமா? அழைப்பு வருமா? அழைக்க தான் முடியுமா?

உள்ள நெட் ஒர்க்கை புரிஞ்சிக்கிடாம பிரிஞ்சுட்டோம்னு நினைக்கிறது - மறுபடி ஒன்னு சேர்ரதுக்காக சாகனும்,சாகடிக்கனும்னு நினைக்கிறது -அதுக்கு மாற்றா செக்ஸ் - செக்ஸுக்கு மாற்றா பணத்தை நினைக்கிறது -அந்த பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட ஃபைட் பண்றது - ஹை வேல போற மரணத்தை கை தட்டி கூப்புடறது இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லியா?

Sunday, November 21, 2010

பணம் ஒரு கன்னித்திரை

1.பணம் வாழ்க்கை பயணத்துக்கு தேவையான எரிபொருள்

2.பணம் ஜஸ்ட் ஒரு கருவி. அத வச்சு என்னத்த கழட்டப்போறோங்கறதுதான் முக்கியம்

3.லட்சியத்தை அடைய பணமும் ஓரளவு உதவலாம். ஆனால்பணமே லட்சியமாயிட்டா தூத்தேரிக்க..

4.நாம சம்பாதிக்கனும்னா  நம்மை சுத்தி இருக்கற ஒவ்வொருத்தனும் சம்பாதிச்சிட்டே இருக்கனும்.

5.என்னைக்கோ ஒரு நா சம்பாதிச்சா வேஸ்ட். தினம் தினம் சம்பாதிக்கனம்.  நீங்க ஃபீல்டுல இருந்தாதான் பணம் வரும்னா அது  ஒர்ஸ்ட். நீங்க இல்லாட்டாலும் பணம் வந்துட்டே இருக்கும்னா அது பெட்டர்.

6.அடுத்தவனோட நஷ்டம் தான் உங்க லாபம்னா ஒரு நாளில்லை ஒரு நாள்  அவன் நஷ்டப்பட முடியாத இழி நிலைக்கு வந்துருவான் .அப்ப உங்க நிலை கோவிந்தா கோவிந்தா

7.கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது சுகமா வாழத்தான். என்னைக்கோ ஒரு நா சுகப்படலாம்னு கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்தா கதை கந்தலாயிரும்.

8.பணம் பழக்கப்பட்டுட்டாலும் பரவால்லை. அது போதையாயிட்டா பொழப்பு நாறிரும்.

9.பணம் ஒரு சவுண்ட் ப்ரூஃப். பெட்டி நிறைய பணம் இருந்தா ஏழைங்களோட பசி கூச்சல் காதுல விழவே விழாது.

10. பணம் BP டாப்ளெட்ஸை விட  சூப்பரா BPயை கண்ட்ரோல் பண்ணும்.

11.பணத்துக்கு சுய மரியாதை சாஸ்தி. அகங்காரம் பயங்கர எதிரி. எவன் பணத்தை தன்  ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக செலவழிக்கிறானோ அவன் கிட்டே இருந்து கழண்டுக்கும்.

12.பணம் விலை உயர்ந்த சென்டை விட பவர் ஃபுல் .உங்க நாத்தத்தையெல்லாம் கண்ட் ரோல் பண்ணிரும்

35.பணம் ஒரு மவுத் ஃப்ரெஷ்னர் ..உங்க பேச்சுக்கு வாசனைய கூட்டும்.

36.பணம் எலும்பு துண்டு மாதிரி. சனம் நாய் கூட்டம் மாதிரி. எலும்பை வீசிட்டே போகனும். அதுக்காகவாச்சும் எலும்பை பொறுக்கியாகனம்

37.பணம் ஒரு ரா மெட்டீரியல் அதை வச்சு  நீங்க தயாரிக்கப்போற  ப்ராடக்ட் எதுங்கறது முக்கியம். பணத்தையே ப்ராடக்டுனு நினைச்சுட்டா ஒரு வாழ் நாள் வீணாயிரும்.


38.பணம் ஒரு மூங்கில் . அறிவாளி அரையடில ஓட்டை போட்டு புல்லாங்குழலாக்கிர்ரான். முட்டாள் எட்டுக்கு எட்டா வெட்டி பாடையாக்கிக்கறான்.

39.பணம் உங்க கிட்ட மஸ்தா இருந்தா பணம் இல்லாமயே எல்லா வேலையும் ஆயிரும். அது இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் கட்டாயம் பணம் தேவை.

40.பணம் இல்லாதவுக இருக்காய்ங்க. பணத்தேவையில்லாதவுக இல்லவே இல்லை.

41.பணம் சஞ்சீவனி வேர் மாதிரி செத்துப்போனவனுக்கு உயிர் கொடுக்கும். ( என்ன ஒரு லொள்ளுன்னா நீங்க உசுரோட இருக்கிறச்சயே உங்க இதயத்தை கொன்னுரும்)

42. சம்பாதிக்கிறதுக்கு முதல் படி  பேட் பிடிச்சுக்கிட்டு அவுட் ஆகாம நிக்கறதுதான். சிக்ஸர்,ஃபோர் எல்லாம் எப்பயாச்சும் க்ராஸ் ஆகும்.


44. பணம் ஒரு கன்னித்திரை மாதிரி எந்த பட்டி தே.ளையும் கன்னியாக்கிரும்.

45. பணம் ஒரு  காயகல்பம் எந்த கிழவனையும் குமரனாக்கும்

46.பணம் ஒரு வயாக்ரா ( அதை ஈட்டும் ப்ராசஸ்ல  ஆண்மை பலியயாயிர்ரதுதான் சோகம்)

Wednesday, November 17, 2010

பணம் பணம் பணம் : 2

பணத்தை புரிஞ்சிக்கிட்டா பணத்தை சம்பாதிக்கலாம் அ தத் .. இந்த மயித்துக்குத்தான் சம்பாதிக்கிறாய்ங்களானு விட்டுரலாம்.

இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு.  பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..

ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..


13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.

14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை..  நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?

15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா  பொசுங்கிருவம்.

16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?

17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்


18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)

18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.

19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது  குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.

20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை .  இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான்.  மரணத்தின்  நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா  பணம் கொஞ்சம் போல  தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது  எல் ஐ சி பாலிசியா போடறோம்

21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.

22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது

23.பணம் ஜஸ்ட்  ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.

24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்


எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு  செல்  அங்கஜீவி - அது கொழுத்து  செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது ஜீவராசிகள்- குரங்கு குரங்குலருந்து மனிதன் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்தச்ச காலம் , தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது  -  ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு - ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு  மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க  செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க.  மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.


ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. 

வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும். 

அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.

செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம்  பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு  லோ லோனு அலையுது

குழந்தைக்கு தாய் முலைக்காம்பு மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா  விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம். 

அடங்கொய்யால முலைக்காம்புலயாச்சும் பால் கிடைக்கும், சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கடா கீது?

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல்  பல்லுயிரா  மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள்  டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால்  அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னா.. பணம் பணம்னு அலைஞ்சு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?