Wednesday, November 30, 2016

நால்வகை ராசிகள் :ஜோதிஷ வித்யா ப்ரகாசிகா

நால்வகை ராசிகள் :ஜோதிஷ வித்யா ப்ரகாசிகா

இந்திய நீதி அமைப்பே செத்துவிட்டது



மா.மி. உச்ச நீதிமன்ற /உயர் நீதிமன்ற  நீதியரசர்களுக்கு ஒரு திறந்த மடல் 
ஐயா !
எதுக்கெல்லாமோ தீர்ப்பு தரிங்க. கபாலிக்கெல்லாம் ராவோட ராவா தீர்ப்பு தர்ரிங்க. காவிரி பிரச்சினைல கர்னாடகா முரண்டு பிடிச்சா மட்டும் கண்டுக்க மாட்டேங்கிறிங்க. இப்படி ஆயிரம் சொல்லலாம்.

ஆனால் ஹியர் சேனு தள்ளிருவிங்க. என் சொ(நொ)ந்த கதைய சொல்றேன். அதுவும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மானில நுகர்வோர் மன்றம், மனித உரிமை கமிஷன், ஹை கோர்ட் ,சுப்ரீம் கோர்ட்டுன்னு நான் தட்டாத கதவே இல்லை . கதவு என்ன சன்னலை கூட திறக்கல நீதித்துறை.

அதுவும் மேட்டர் என்ன.. சாமானியப்பட்ட மேட்டரா ? இன்னைக்கு நாடே  நலிஞ்சு கிடக்க பண்ணிருச்சே இந்த கரன்சி ரத்து மேட்டரு இது உட்பட அஞ்சு அம்சம். இதை எல்லாம் அமலாக்க தேவையான நிதி சேகரிப்புக்கு ஸ்கெட்ச் எல்லாம் அடங்கின விஷன் டாக்குமென்டை மத்திய /மானில அரசுகளின் செவிட்டு காதுகளுக்கு கடத்த முயற்சி பண்ணி -அவனுவ பண்ண டார்ச்சருக்கு ரத்த கண்ணீர் விட்டு உங்க கோட்டைக்கு வந்தேன்.

என்ன ஒரு சோகம்னா /அதிர்ஷ்டம்னா என் பேர்ல எந்த சொத்தும் இல்லை. இருந்திருந்தா எல்லாத்தையும் வித்து கேஸ்போட்டு ரோட்டுக்கு வந்திருப்பன்.
ஆனாலும் மனசு கேட்குதா? அந்த காலத்துல ஒரு நாளைக்கு அஞ்சு பத்து கிடைச்சா என் குடும்பமே பசியாறிரும்ங்கற நிலையிலயும் பத்து இருபதுன்னு செலவழிச்சு  உச்ச நீதிமன்றத்துக்கும்/உயர் நீதி மன்றங்களுக்கும்  கூரியர்  மூலமா/பதிவு தபால் மூலமா  லெட்டர் அனுப்பினன்.

எதுக்குன்னா ? சனம் போடற லெட்டரையே ரிட் மனுவா ட்ரீட் பண்ணி கோர்ட் கீசிடும்னு ஏதோ ஒரு பாடாவதி பேப்பர்ல படிச்சு தொலைச்சுட்டன். அந்த நப்பாசையில தான் .

அதனாலதேன் எனக்கும்/இந்த நாட்டுக்கும் நடந்த இன் ஜஸ்டிஸை எல்லாம் கொளந்தைகளுக்கும் புரியறாப்ல ஒன்று இரண்டுன்னு வரிசைபடுத்தி ஆதியோடந்தமா அனுப்பினன் . நடவடிக்கை தான் இல்லை.

இப்பம் இந்த ஓப்பன் லெட்டரை படிச்சுட்டு கோதாவுல இறங்கி நடவடிக்கை எடுத்துருவிங்கன்னு சத்தியமா நான் நம்பல. பின்னே ஏன் எழுதறேன்னா.......
சமீப காலமா சட்டங்களை அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையதா இல்லையான்னு மட்டும் பார்க்கவேண்டிய நீங்க -எல்லா வேலையையும் முடிச்சு போட்டு சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்துட்டிங்களோனு தோன்றாப்ல பல தீர்ப்புகளை பார்க்கிறேன்.

இல்லிங்கய்யா உங்க வேலையே மலையா குவிஞ்சு கிடக்குன்னு ஞா படுத்தத்தேன் இந்த லெட்டரு . இதை புத்திசாலித்தனமா என் ப்ளாக்ல தான் போடப்போறேன்.

நமக்கு சத்ராதிங்க சாஸ்தி . எவனாச்சும் என்னை போட்டு கொடுக்க இதை இந்தியிலயோ /இங்கிலி பீஸுலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி புகார் பண்ணா கோர்ட் அவமதிப்புன்னாச்சும் என்னை கோர்ட்டுக்கு கூப்டுவிங்கல்ல .அதுக்குதேன்.

இந்த லட்டர்ல வருசம்/மாசம்/தேதில்லாம் போட்டா ஃபேஸ்புக்ல படிக்கிற சனம் தெறிச்சு ஓடிரும்.அதனால கதை மாதிரி சொல்லிர்ரன்.

என் லட்சியம் நதிகள் இணைப்பு. இதை இம்ப்ளிமென்ட் பண்ண தோதா ஒரு அஞ்சு அம்சம்/ அப்படியே திட்ட செலவுக்கு சனங்களை டார்ச்சர் பண்ணாம மானில அரசாங்கங்கள் பைசா புரட்ட கொத்து கொத்தா ஐடியாங்க. ஏறக்குறைய ஒரு தீசிஸ் மாதிரி இருக்க்கும்.

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல். 

தீசிஸ் தான் வேணம்னா அது இங்கே .

இந்த திட்டத்தை அமல்படுத்த சனங்களை டார்ச்சர் பண்ணாம மானில அரசாங்கங்கள் பைசா புரட்ட கொத்து கொத்தா ஐடியாங்க இங்கே 

இந்த இழவை எல்லாம் ரோனியோ போட்டு பெருசா பார்சல் கட்டி அன்னைக்கு இருந்த மத்திய ஆளுங்கட்சி கூட்டணி எம்பிக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரி சபா நாயகருக்கு அனுப்பினேன். (1998) மவனுங்க கண்டுக்கல.

பிறகு எங்க தொகுதி எம்.பி ராமகிருஷ்ணா ரெட்டிகாருவுக்கு எழுதி -அவர் அவியளுக்கு எழுதி "பார்சலை காணோம்"னுட்டாய்ங்க.

இன்னொரு தபா ஒரே ஒரு பிரதி அனுப்பினா நாங்களே பிரதி எடுத்து அல்லா எம்பிக்களுக்கும் கொடுத்துர்ரன்னு லட்டர் போட்டானுவ. அனுப்பினன். அவ்ளதான் டீல்ல விட்டுட்டானுவ.

அன்னைக்கிருந்த சபா நாயகர் எங்க ஸ்டேட் காரரு. தெ.தேசம் கட்சிக்காரரு. ஆகவே இந்த மேட்டரை எல்லாம் சந்திரபாபுவுக்கு அனுப்பி என்னான்னு விஜாரிப்பானு ரிக்வெஸ்ட் பண்ணேன். அந்தாளு இன்னம்மோசம் .கண்டுக்கவே இல்லை.

நான் என்னவோ ஒரு தலைகாதலன் மாதிரி /நேர்த்திக்கடன் கணக்கா வாய கட்டி வவுத்தை கட்டி ரிமைண்டர்ஸ் அனுப்பிக்கிட்டே இருக்கன். ம...னா கூட யூஸ் இல்லாம போயிருச்சு.

ஒரு நாள் கடுப்பாகி யோவ் .. இந்த மேட்டர்ல நீ என்னதான் செய்யப்போறே /அல்லது என்னை என்னதான் செய்ய சொல்றே. ஒடனே பதில் போடு .ஒனக்கு போஸ்டேஜ் செலவு கூட வைக்க விரும்பல. இந்த பத்து ரூவாயை வாங்கிக்கிட்டு ஸ்டாம்ப் ஒட்டி பதில் போடுன்னு பத்து ரூவா எம்.ஓ அனுப்பினன்.

அதையும் டெலிவரி வாங்கிட்டானுவ. செரி பெய்டட் சர்வீஸாயிருச்சு. பதில் போட்டே ஆகனும்னு வெய்ட் பண்ணேன். ஒன்னும் பேரல. கன்ஸ்யூமர் ஃபோரத்துல புகார் பண்ணேன்.

இந்த மேட்டர் வார்த்தா மெய்ன் எடிஷன்ல பப்ளிஷ் ஆய்ருச்சா .பாபு ஒடனே பேதியாகி மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்தான்னு ஒரு பதிலை அனுப்பி உட்டாரு .நிற்க கேசை கவனிக்கலாமா?

ஜூரிங்க இந்த கேஸ்ல "டெஃபிசியன்ஸி ஆஃப் சர்வீசே இல்லை"ன்னுட்டு சரித்திர பூர்வமான தீர்ப்பு கொடுத்துட்டாய்ங்க.ஸ்டேட் ஃபோரத்துக்கு அப்பீல் பண்ணேன். கீழ கொடுத்த தீர்ப்போட ஒரிஜினல் பிரதியை வைக்கலன்னு லட்டர் போட்டானுவ. நானும் மண்ணாந்தை கணக்கா அனுப்பிட்டன். அவ்ளதான் மேட்டர் ஓவர்.

திட்டம் போட்டு என் கிட்டே இருந்த ஆதாரங்களை எல்லாம் ஆட்டைய போட்டுட்டானுவ.அப்பத்தேன்  உங்களுக்கு  லட்டர் போடற வேலைய கையில எடுத்தன் .

இதோ நான் டிக்ளேர் பண்றேன் இந்திய நீதி அமைப்பே செத்துப்போச்சு. கொய்யால தில் இருந்தா என் மேல நடவடிக்கை எடுங்க. உங்க வண்டவாளத்தை எல்லாம் .இப்பமே தண்டவாளத்துல ஏற்றிட்டன்.

என்மேல நடவடிக்கை பாய்ஞ்சா இந்த வண்டவாளம்லாம் நாலு கால்பாய்ச்சல்ல பரவும். ஓகேவா ..உடுங்க ஜூட்டு

இந்த மிஷனை இதோட நிறுத்திட்டு ரிட்டையர் ஆயிட்டன்னு நினைச்சுராதிங்க. அசராம அடிச்சு விளையாடிக்கிட்டே இருக்கேன். அதை எல்லாம் ஏன் இங்கே சொல்லலின்னா இந்த காலகட்டத்துலயே நீதிபதிங்க பவிசு என்னன்னு தெரிஞ்சுட்டதால -அவியளுக்கு லட்டர் போட்டா காசு தான் வெட்டின்னு தெரிஞ்சுட்டதால லட்டரே போடல எசமான் . புகாரே பண்ணாம நடவடிக்கை எடுக்கலைன்னு புகார் பண்ணக்கூடாதுல்ல.

இந்த மிஷனோட லேட்டஸ்ட் ட்ரென்ட் வேணம்னா கீழ் காணும் தொடுப்புகளை பாருங்க.

change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india
http://anubavajothidam.com/?p=12051
http://anubavajothidam.com/?p=12117
http://kavithai07.blogspot.in/2016/09/blog-post.html

இவன் செரியான பைத்தாரனா இருக்கான். இவன் ரோசனைல்லாம் சொத்தைன்னு நினைச்சுராதிங்க எசமான் என்னோட பல ஐடியாக்களை அன்னைக்கே சந்திரபாபு சுட்டு அமல்படுத்தினாரு .திதிதேவஸ்தானம் காரவிக சுட்டாய்ங்க. இவ்ள ஏன் இன்னைக்கு ஸ்ரீமான் மோதிஜியோட அலுவலகம் கூட சுட்டிருக்கு. அந்த கதை வேணம்னா இங்கே பாருங்க.

கரன்சி ரத்து மேட்டரை சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்துலயே சொல்லிட்டனே .

குறிப்பு:2
இணைய உலகத்துல காப்பி பேஸ்டெல்லாம் சகஜம். எவனோபெத்த பிள்ளைக்கு தன் இனிஷியலை போட்டுக்கற சனம் சாஸ்தி.அதனால தான் எனக்குன்னு ஒரு ஸ்டைல் /ஒரு ஸ்லாங் ஏற்படுத்திக்கிட்டன்.

இதை எவன் எடுத்து போட்டாலும் நம்ம சரக்குன்னு தெரிஞ்சுரும்ல .ரீரைட் பண்ணா கிளிஞ்சிரும். அதே நேரத்துல இந்த ஸ்லாங்ல எதை சொன்னாலும் நக்கலாவே தோனும். ஆனால் மேட்டர் ரெம்ப சீரியஸ். மேட்டருக்காவ தூக்குல போட்டாலும் சம்மதம்தான். அதுக்காவ இந்த ஸ்லாங்கை ஒரு காரணமாக்கிராதிங்க.

Friday, November 25, 2016

கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !

மோடி அரசு ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்து தடாலடியாக - தான் தோன்றித்தனமாக  அரைகுறையாக -அள்ளித்தெளித்த கோலமாக -அடாவடியாக -எந்த முன்னேற்பாடும் இல்லாது அமல் படுத்தி இந்திய பொருளாதாரத்தையே நாசமாக்கியிருப்பது தெரியும் தானே .


இந்த பாழாப்போன யோசனையை 2014 ஜூலையில அனுப்ப - 2015 மார்ச்சுல பிரதமர் அலுவலகம் ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்னு பதில் கொடுத்ததெல்லாம் தெரியும் தானே?

நாம சோறு   போட சொன்னம். சோத்தை இலை போட்டு தான் போடனுங்கற மினிமம் காமன்சென்ஸ் கூட இல்லாம தரையில சோத்தை போட்டு அது மேல இலையை போட்டா நான் என்ன செய்ய முடியும் பாஸ்?

இந்த ரேஞ்சுல எத்தனை ஒப்பாரி வச்சாலும் போன உசுரு திரும்புமா பாஸ்?

(சோறு =திட்ட அமல் ; இலை =முன்னேற்பாடுகள்)

செரி இதை விடுங்க. இப்ப நாம வெளியிட்ட 4 நூல்களையும் தொகுத்து -எடிட் பண்ணி - டிடிபி செய்து கொடுத்து வெளியீட்டாளரளையும் அறிமுகம் செய்து வைத்த திருவாரூர் சரவணன் அவர்கள் வளரும் எழுத்தாளர். தம் எழுத்துக்கு பிரபல இதழ்கள்,நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றவர்.

என்ன ஆச்சோ என்னமோ பாவம்  நம்ம  ரூட்ல அஃதாவது  " நாட்டை திருத்தற" கிராஸ் ஆகி  கருப்பு பண ஒழிப்புல சில பல யோசனைகளை நம்ம மெயிலுக்கு அனுப்பியிருக்காரு.

உங்க வலைப்பூவுல போடுங்க பாஸ்னா ஊஹூம் உங்க ப்ளாக்ல தான் போடனும்னு உத்தரவு போட்டுட்டார்.

அன்னார் தந்த யோசனைகள் உங்களுக்காக .

கருப்பு பணத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் இவற்றையும் கட்டாயம் செய்ய வேண்டும்... இல்லாதவரையில் இது சாமானிய மக்களின் மீதான தாக்குதல் மட்டுமே என்று தோன்றுகிறது.

மிக குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகளிலும், அரசு, தனியார் என்று எந்த துறையிலும் சாமானிய மக்களை சாகடிக்கும் அளவுக்கு லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளிலும் வேண்டுமானால் அதிகமான வருமான வரி, அந்த வரி விபரங்களை தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் என்று இருக்கலாம். (ஆனால் உண்மை அவ்வாறில்லை. பல நாடுகளில் மிகவும் எளிமையான நடைமுறைதான்)

இந்தியா மாதிரி 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாட்டில் மக்களிடம் சிந்துவது, சிதறுவதை சேகரித்து அரசு கஜானாவுக்கு முறையாக செல்ல வழி ஏற்படுத்தினாலே எல்லா கருப்பு பணத்தையும் ஒழித்து விடலாம் என்பதை மனதில் கொண்டு நான் கீழே சொல்லியுள்ள யோசனைகளை சீர்தூக்கி பார்க்கவும்.

நடுத்தர, ஏழை எளிய மக்கள் உட்பட அனைவருமே வரி ஏய்ப்பு செய்வதோடு நிற்காமல் அது தவறில்லை என்ற மன நிலையில் இருக்க முக்கிய காரணம் இதுநாள் வரை வெளிப்படையாக செலவு செய்பவனுக்கு அதிக வரி விகிதமும் கணக்கில் காட்டாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், செலவு செய்யலாம் என்ற அளவில் இருக்கும் வரி விதிப்பு முறைகள்.
எரிபொருள் முதல் பேஸ்ட், பிரஷ் வரை மறைமுக வரியை பொருளின் விலையோடு சேர்த்து சாமானியன் செலுத்தி விடுகிறான். அது அரசுக்கு போய் சேருவதில்தான் பிரச்சனையே ஆரம்பம்.

வரி வசூலில் ப்ரீபெய்ட்:
அது எப்படி வருமானமும் செலவும் உறுதியாகும் முன்பே ப்ரீபெய்ட் டேக்ஸ் வசூலிக்க முடியும்? அப்படி வசூலித்தாலும் அதிகமாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப பெறுவதற்கு நாலைந்து ஜென்மங்கள் தேவைப்படுமே என்பதுதான் மக்களின் கவலை. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஒரு நபருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்கலாம் என்று லிமிட் வைக்க வேண்டும். அதற்கு கூடுதலாக தேவைப்பட்டால் வங்கி தர மறுக்க கூடாது. ஆனால் அந்த ரொக்கத்தில் 10 சதவீதம் வரியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் எவ்வளவு பேர் பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்கள் என்பதை பாருங்களேன்.

இப்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.5 லட்சமும், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு 2.5 லட்சம் என்று பல நிலைகளில் உள்ளது. இதிலும் மாற்றம் வேண்டும். கார்டு மூலம் மளிகை, ஜவுளி, காய்கறி என்று எதை வாங்கினாலும் அந்த தொகையுடன் வங்கி சேவை கட்டணம் உட்பட 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வேண்டும். இப்படி செலவழிப்பது பொதுமக்களுக்கு சிரமமாக தெரியாது. உதாரணமாக ஆண்டுக்கு 3 லட்சம் செலவழிக்கும் ஒருவர் அதை ரொக்க பரிவர்த்தனையாக இல்லாமல் முழுவதும் வங்கி மூலம் செலவழித்திருந்தால் வருமானத்தில் இருந்து கழித்துவிடலாம் என்று விதிமுறை வகுக்கட்டும்... பிறகு வெளிப்படையாக செலவழிக்க யாருமே தயங்க மாட்டார்கள்.

வாடிக்கையாளர்களிடம் கடைகள் வசூலிக்கும் வரி அரசுக்கு தாமதமின்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் 4ஆயிரத்து எழுநூற்று ஐம்பதுக்கு பொருள் வாங்கி அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 250 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 1 சதவீத வங்கி பரிமாற்ற வரி மூலம் 50 ரூபாய். ஆக கூடுதல் 5 ஆயிரத்து 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால் தானியங்கி முறையில் 4750 சூப்பர் மார்க்கெட் கணக்கிலும் 250 அரசு வரி வருவாய் இன கணக்கிலும், 50 ரூபாய் வங்கி சேவை உட்பட பரிமாற்ற வரி முறையில் வங்கிக்கு 10 ரூபாயும் அரசுக்கு 40 ரூபாயும் செல்லும் வகையில் வங்கி சாப்ட்வேர் இருந்தால் பிரச்சனை ஓவர்.

காய்கறி, பெட்டிக்கடை, தெருக்களில் இருக்கும் சிறு மளிகைக் கடைகளில் அதாவது சில்லரை கடைகளில் ரீசேல் டேக்ஸ் 1 சதவீதம் என்று இருக்கும்பட்சத்தில் 400 ரூபாய் பில்லுக்கு 4 ரூபாய் ரீசேல் டேக்ஸ், 4 ரூபாய் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று ஆட்டோமேடிக்காக பிடித்தம் செய்யும் வகையில் சிறு மளிகைக்கடை கரண்ட் அக்கவுண்ட்டில் வங்கி சாப்ட்வேர் செட்டிங் செய்யும் முறை மிகவும் எளிது.

அது போகட்டும்... காய்கறி, மீன், பால் வியாபாரிகள் கையில் சிறு அளவில் ரொக்கமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கினால் அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது... அதுவும் சின்ன அளவு என்றாலும் கருப்பு பணமாக மாறிவிடுமே என்று கேட்கலாம். அதற்கும் தீர்வு இருக்கிறது. இப்படி சின்ன அளவில் சைக்கிள், தலையில் சுமை தூக்கி சென்று விற்பவர்களால் அவர்களின் விற்று முதல் ரொக்கமாக புழங்குவதில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை. 

அப்படி அதையும் வங்கி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இப்போது பல வங்கிகள் தினமும் வைப்பீடு வசூல் செய்ய கடைகளுக்கு ஆள் அனுப்பி பில்லிங் மெசின் மூலம் பில் கொடுத்து வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வியாபாரிகளின் வீட்டிலோ, அந்த இடத்திலோ அன்றைய வியாபார தொகையை 1 சதவீத டேக்ஸ் செலுத்தி அக்கவுண்டில் போட்டுவட்டு மறுநாள் வியாபாரத்திற்கு ரொக்கமாக அல்லது அவர்கள் கொள்முதல் செய்யும் மொத்த கடைகளுக்கு டிரான்ஸ்பர் செய்ய உதவலாம். 

இதற்கு இந்த சிறு வியாபாரிகள் பிழைப்பை விட்டு விட்டு வங்கிக்கு சென்று காத்திருக்க செய்யாமல் அவர்கள் இடம் தேடி வங்கி ஊழியர் வருவதற்கு வழி செய்தால் மட்டுமே இந்த முறை வெற்றியடையும்.  ஏனென்றால் நாடு நலம் பெற ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் சிரமங்களை பொறுத்திருக்க முடியும். அதை விடுத்து வருடம் பூராவும் வலியை தாங்க முடியாது.

4 வகை வரி விகித பொருள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் என்ன செய்வது?
ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஏ/சிக்கு 28 சதவீத வரி, பேனுக்கு 18 சதவீதம், எல்.இ.டி பல்ப்புக்கு 4 சதவீதம் வரி வசூலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 

அவர்கள் முறையாக பில் போட்டு வியாபாரம் செய்யும்போது அன்றைய மொத்த விற்பனை 40 லட்சம், வரி 4லட்சத்து 28 ஆயிரம் என்று தெளிவாக டீட்டெய்ல் வந்துவிடும். அந்த வரி தொகையை அவர்கள் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ்.எம்.எஸ் செய்து விட வேண்டும். அப்போது அந்த வரி போக மீதத்தொகை சம்மந்தப்பட்ட கடை கணக்குக்கு வரவு ஆகும். பிடிக்கப்பட்ட வரி நேரடியாக அரசின் வரித்துறை வங்கி கணக்கில் கிரடிட் ஆக வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர் செலுத்திய 40 லட்சம் விற்பனை தொகையும் கடையின் கணக்கில் காட்டும். அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஸ்கிரீனில் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முறையில் இருந்தால் எந்த நிறுவனமும் ஏமாற்ற துணியாது.

ஏனென்றால் ஒரு நிறுவனம் ஒரு மாதத்தில் 100 ஏ/சி மெசின் விற்கிறது என்றால் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வரியை சேர்த்து வசூல் செய்து விட்டு 10 இயந்திரத்துக்கு மட்டும் பில் போட்டுவிடுகிறது. டோல்கேட் உள்ளிட்ட பல தொழில்களில் இப்படித்தான் வரி ஏய்ப்பு உருவாகிறது.

கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலவழித்தால் 1 சதவீத வரி... ரொக்கமாக பணத்தை எடுத்தால் 10 சதவீத வரி. மாதம் 25 ஆயிரத்திற்கு மேல் செலவு அனுமதித்து விட்டு (காப்பீடு, கல்வி, மருத்துவம், நீண்டகால, தொடர் சேமிப்பு நீங்கலாக) அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக கொண்டு 3 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே வரி வசூலிக்க வேண்டும்.

சொத்தின் உண்மையான மதிப்புக்கே பத்திரப்பதிவு செய்தால் 1 சதவீதம் மட்டும் முத்திரைக்கட்டணம் என்று கொண்டு வர வேண்டும். அந்த தொகயை சொத்து வாங்குபவர் கொடுப்பவருக்கு வங்கி மூலமாக செலுத்தினால் 1 சதவீதம் மட்டும் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று வைத்துவிட்டால் போதும். ஏனென்றால் ரொக்கமாக வங்கியில் இருந்து பெற வேண்டும் என்றால் 10 சதவீதம் வரி என்றால் யாரும் கணக்கில் காட்டாமல் பணத்தை செலவழிக்க துணிய மாட்டார்கள்.

இந்த விஷயங்களை அமலாக்காமல் மக்கள் வலி தாங்க வேண்டும் என்று மட்டுமே அரசு சொல்லிக்கொண்டிருக்குமேயானால்.... சாமானிய மக்களை மட்டும் கார்னர் செய்து விட்டு யாரோ ஒரு சில பெரிய தலைகளை மேலும் மேலும் கோ.......................................டீஸ்வரர்களாக வளரச்செய்யும் விஷயமாக கருதிக்கொள்ள வேண்டியதுதான்.

ஆண்டவன் விட்ட வழி.

***********************************************************************************************
இலுமினாட்டிகள் என்ற சிலரைப் பற்றி இப்போது பரவலாக பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த நினைத்த உடன் எவ்வளவு சகுனி வேலைகள் இருக்கிறதோ அனைத்தையும் பார்த்து 100 கோடி ரூபாய் சொத்தை 40 கோடிக்கு விற்கும் நிலைக்கு வந்த உடன் அந்த 40 கோடியையும் எந்த நாடாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு புதிய நோட்டாகவே அச்சிட்டு அதை எடுத்து கொடுத்து வாங்கி விடுவதாக சொல்கிறார்கள். 

அது தவிர சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் தொழில் உள்ளிட்ட பல வகையிலும் உரிய முறையில் லோன் கிடைத்தால் அதை வைத்து தன்னிறைவு பெற்றுவிட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வங்கியில் இருக்கும் தொகைகளை 70 லட்சம் கோடி அளவுக்கு இத்தகைய இலுமினாட்டிகள் கடனாக பெற்று அந்த தொகை சாமானியர்களின் வளர்ச்சிக்கு உதவாத வகையில் பொருளாதாரத்தை மெயிண்டெய்ன் பண்ணுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது சாமானிய மக்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை, கல்வி அடுத்து குடியிருப்பு, வணிக நிறுவன வாடகை என்ற அளவில் மக்களை கடனாளியாக வைத்திருக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன.

இப்படி கிடைக்கும் பல்வேறு தகவல்கள் மிரள வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற மிக முக்கிய பண்டிகை காலம் தவிர அவர்கள் நகரத்திற்கு வந்து செலவழித்தது மிக மிக அரிது. அதை சுக்கு கோடியாக (சுக்குநூறாக) உடைத்து 500, 1000 ரூபாய் நோட்டு விஷயத்திலேயே கிராம மக்களையும் அல்லாடும் நிலையை பார்த்தால் (இது சாம்பிள் மட்டுமே) உலகம் முழுவதும் இந்த இலுமினாட்டிகள் பின்னியிருக்கும் மாயவலையின் பிரமாண்டத்தை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

இதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பலரும் சொல்லும் யோசனைகளை யாரும் அமல்படுத்த முன்வரப்போவதில்லை. 

சுருக்கமாக சொன்னால், நமது குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள், வீட்டில் உள்ள தாய், தங்கை, மனைவிக்கு எதுவும் தெரியாது என்று ஓரம் கட்டிவிட்டு தானே எல்லா முடிவையும் எடுப்பார்கள். பெண்கள் பொறுப்பில் விட்டுவிட்டால் எதாவது பெரிய நஷ்டத்தில் விட்டு விடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.

இலுமினாட்டிகள் விஷயத்திலும் இதுதான். உலக மக்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் எல்லா பவரையும் நம் இருபது குடும்பங்கள் மட்டும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டி வைக்க வேண்டும். மக்களை இந்த மாய வலையை விட்டு சுதந்திரமாக இயங்க விட்டால் உலகத்தை வீணாக்கி விடுவார்கள் என்று நினைத்து செயல்படுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இதை எல்லாம் பார்க்கும்போது, அதானி, அம்பானிக்கு கூட எதுவும் தெரியாது என்று கூறி அவர்கள் இயக்கிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. அது உண்மையாக இருந்தால் நாமெல்லாம் எந்த மூலை?... எவ்வளவு போட்டி, பொறாமை, வெட்டு, குத்து... உயிரிழப்பு..... தலைய சுத்துது....

இப்படில்லாம் கூட நடக்குமா?

இப்படிக்கு
திருவாரூர் சரவணன்.

Thursday, November 24, 2016

சினிமா சினிமா சினிமா

ஒரு காலத்துல சினிமா பார்த்தே கெட்டு குட்டிச்சுவரா  போயிருவனு சொல்லாத பெற்றோரே கிடையாது .அந்த காலத்து வீடியோ காஃபி பார்ல பலான படமே பார்த்தும் நான் கெட்டுப்போகல. (அல்லது கெட்டுப்போனதா நினைக்கல). நம்ம ஜாதகத்துல 10 ல ராகு இருந்ததாலயா? அல்லது பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோட கேது சேர்ந்து வித்யா ஸ்தானத்துல இருந்ததாலயா கன்ஃபார்மா சொல்ல மிடியலின்னாலும் சினிமாவால நான் பெற்றது அதிகம்.

இதை எல்லாம் ஏற்கெனவே என் ப்ளாக்ல அப்பப்போ பிட்டு பிட்டா எழுதியிருக்கன். உங்களுக்கு பொறுமை இருந்தா அடுக்குமல்லி , தம்பிக்கு எந்த ஊரு ,கிராதகுடு இப்படி தேடிப்பாருங்க.

நமக்கு சினிமா கொடுத்த காட் ஃபாதர் என்.டி.ஆர். அவரோட ஆளுமை -அதன் வீச்சு என்னன்னு தெரியாமயே அவர்பால் கவரப்பட்டதுக்கு காரணம்  பூர்வ புண்ணியம்னு தான் நினைக்கேன்.

நம்ம கேரக்டருக்கு கொய்ட் ஆப்போசிட் கேரக்டர் என்.டி.ஆரோடது. (இது அந்த காலத்துல நம்ம    நிலையை வச்சு சொன்னது)  அவர் விடியல் 3 மணிக்கு எந்திரிச்சுருவாராம் .நாம மதியம் 12. இங்கே ஆரம்பிக்குது கான்ட் ராடிக்சன்.ஆனாலும் ஒரு புள்ளியிலருந்து கோடு போட்டா  நம்ம சுயமரியாதை , தன்னம்பிக்கையில ஆரம்பிச்சு ஆன்மீகம்வரை என்.டி.ஆர்ல தான் போய் முடியுது.

லேட்டஸ்டா யோக வேதம்னு ஒரு ஒரு புஸ்தவம் தருவிச்சு படிச்சேன். 400+ ரூவா கொடுத்து வாங்கின புஸ்தவத்தோட சாரம் தலீவரோட ஒரு படத்துல ஒரு பாட்டுல கடேசி சரணத்துல பைசல்னா பார்த்துக்கங்களேன் .
நிற்க . வறுமையால கூட சோத்துக்கில்லாத காலத்துல கூட சினிமாவை என் வாழ்க்கையில இருந்து பிரிக்க முடியல. சினிமா பார்த்து நாளாச்சேனு நினைச்சா அன்னைக்குதேன் அமாவாசை சோறு சிக்கும். கடமைகளை எல்லாம் முடிச்சுட்டு உடு ஜூட்டு.

சினிமாவோட இருந்த தொடர்பு எப்ப கட் ஆச்சுன்னு சரியா ஞா இல்லை. 1997 ஆ ..அடுத்த வருசமா தெரியல அன்னமய்யா -ஸ்ரீராம தாஸு படங்களை பல முறை பார்த்தன். அதே டைரக்டர் பால கிருஷ்ணாவை வச்சு அவரை கிருஷ்ணரா போட்டு ஒரு படம் பண்ணாரு. அதை பார்த்ததுல ஆரம்பிச்சது சனி .சினிமாவை நான் மறந்து போக காரணம் நீங்கல்லாம் வீடியோ மீம்ஸா போட்டு கலாய்க்கிற பாலகிருஷ்ணா படம் தான். கருமம் பேர் கூட ஞா வல்ல. அதோட அலர்ஜி ஆயிருச்சு.

பிறவு நாம தியேட்டருக்கு போயி படம் பார்த்ததெல்லாம் விரல் விட்டு எண்ணிரலாம். சிவாஜி -உத்தம வில்லன் -கடேசியா கபாலி.

சமீப காலமா (ஒரு ஆறு மாசம்?) மறுபடி பழைய சீசன் ஆரம்பிச்சுருக்கு. நிறைய பார்க்கிறேன். மனசுல பதியவே மாட்டேங்குது . எழுதியாவது பார்க்கலாம்னு நினைக்கேன். அப்பமாச்சும் மனசுல பதியுதா  பார்ப்பம்

Friday, November 18, 2016

நான் கைது செய்யப்பட்டால்

அண்ணே வணக்கம்ணே !
உங்கள கைது பண்ற அளவுக்கு என்னங்க ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.
இன்னைக்கு நாடே பத்தி எரியற கரன்சி ரத்து மேட்டரை நாமதேன் 1986 லருந்து தனிப்பட்ட வகையிலயும் 1992 ஜன சக்தி இதழ்ல பிரசுரமான பிறவு அஃபிஷியலாவும் புலம்பிக்கிட்டிருக்கம்.

இது நம்ம ஐந்து அம்ச திட்டத்துல ஒரு அம்சம்  அவ்ளதேன். இந்த செனேரியோல 2014 ஜூலையில மோடிக்கும் அனுப்பினம் . ஆர்.டி.ஐ படி கேட்டதுல 2015 ,மார்ச்சுல பிரதமர் அலுவலகம் "ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்"னுட்டு ஒரு பதிலை அனுப்பினாய்ங்க.

நாம பிரதமருக்கு அனுப்பின கன்டென்ட்லருந்து ஒரு சில அம்சங்களை அவிக சுட ஆரம்பிச்சாய்ங்க. என்னடா இது இமிசைன்னு பாம்லெட்டா /பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கும்-வி ஐ பிங்களுக்கும் யதேஷ்டமா அனுப்ப ஆரம்பிச்சம்.

இதன் தொடர்ச்சியா லோக்சபா ஸ்பீக்கருக்கும் அனுப்பினம் (தமிழ் 50/தெலுங்கு 50) .தமிழ் தெலுங்கு எம்பிக்களுக்கு கொடுக்க  சொல்லி  கேட்டிருந்தம் .கண்டுக்கல. ஆர்.டி.ஐ படி கேட்டம்.  ரிப்ளை பாக்ஸை காலியா விட்டு பதில் அனுப்பினானுவ.

இந்த நிலையில கடந்த 8 ஆம் தேதி கரன்சி ரத்து அறிவிப்பு வந்தது. செரி நம்மை மாதிரி பலரும் யோசனை சொன்னதா கதை பண்ணி ராமர் கோவில் சுண்டல் மாதிரி எதுனா லெட்டர் வரும்னு வெய்ட் பண்ணேன். வரல.

செவ்வாயோட செவ்வாய் நவ.15 ஆம் தேதி லோக்கல் ப்ரஸ் க்ளப்ல ப்ரஸ் மீட் வச்சு கிழி கிழின்னு கிழிச்சன். ஒரே ஒரு லோக்கல் சானல்ல மட்டும் வந்தது .

அவிக நம்ம திட்டத்தின் ஐந்து அம்சங்களையும் -மோடிக்கு நாம டோக்கனா நன்றி சொல்ற மேட்டரையும் மட்டும் எடிட் பண்ணி போட்டாய்ங்க. மத்த பத்திரிக்கை எதுலயும் மேட்டர் வல்ல.

ஆனால் போகவேண்டியவிக காதுக்கெல்லாம் நிச்சயமா போயிருக்கும் .போதாக்குறைக்கு முக நூல்ல வேற மொத்த ப்ரஸ் மீட்டையும் போட்டு நாஸ்தி பண்ணியாச்சு.

மோடியும் லேடி ஸ்டைலுக்கு வந்துட்டாப்ல இருக்கு. ஈரோட்ல ஆரோ ஒரு இஸ்லாமிய இளைஞரை கைது பண்ணியிருக்காய்ங்க. ஆக நாமளும் கைது செய்யப்படலாம். இது ஒரு சான்ஸ்.

அடுத்த சான்ஸு?? எங்க ஊரு சந்திரபாபு நாயுடு. கரன்சி ரத்து மேட்டரை மோடி அறிவிக்கிறதுக்கு சரியா ஒரு மாசம் மிந்தி அண்ணாத்த மோடிக்கு இதே மேட்டரை வலியுறுத்து லட்டர் போடறாரு.  நம்ம ப்ரஸ் மீட்ல இதையும் கிளிச்சம்.

கொய்யால 2016, ஜூலை 12 ஆம் தேதி நான் போட்ட லெட்டர்லருந்து சுட்டயா? பிச்சைக்காரன் சினிமா பார்த்தயா ? அல்லது தில்லியிலருந்து ரகசிய தகவல் வந்ததா இதான் கேள்வி.

இந்த ரெண்டு ஆப்பு போதாதுன்னு ஜெ'வுக்கு அப்போலோ முகவரிக்கு ஒரு வீடியோ மடலும் அனுப்பியிருக்கன்.

ஆக இந்த மேட்டர்ல   நாம கைதாக 3 சோர்ஸ் இருக்கு. ஒரு வேளை நெஜமாலுமே கைதானா நீங்க என்ன பண்ணனும்?

ஒன்னுமில்லை   ஃபேஸ்புக்ல நம்ம ஐடில இருந்து என் மவளோ /அல்லது நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கும் அந்த ஐவரில் ஒருவரோ கைது தகவலை தெரிவிப்பாய்ங்க. அப்படி தெரிவிச்சதும்  அந்த பதிவையும் இந்த பதிவையும்  சகட்டுமேனிக்கு கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க. போதும்.

அவியளா "ச்சீ ..போ"ன்னு வெளிய விடற வரை ஜாமீனும் கேட்கமாட்டம் -மன்னாப்பும் கேட்க மாட்டம். ஓகேவா? டீலா ! நோ டீலா !!

Tuesday, November 8, 2016

பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம்?

Footnote: ஆந்திர முதல்வர் அலுவலகம் அஃபிஷியலா திட்டத்தை கேட்டு போட்ட நோட்

அண்ணே வணக்கம்ணே !
கவுண்டமணி ஏதோ படத்துல "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன"ம்பாரே அப்படியொரு நிலையில இன்னைக்கு மோடி நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 ல முக்கியமான ஒரு அம்சத்தை அறிவிச்சிருக்காரு.

அஃதாவது  நவம்பர்8 நள்ளிரவு முதல் ரூ.500,ரூ 1000 நோட்டுல்லாம் செல்லாதுங்கறது அறிவிப்போட சாராம்சம்.

ஆனால் வங்கியில டெப்பாசிட் பண்ணிக்கலாமாம். ஆக இத்தனை காலம் வரி செலுத்தாத கருப்பு பணமா இருந்த பணம்லாம்   டேக்சபிள் ஆயிரும். இந்த ஒரு அறிவிப்பால நாட்டுக்குள்ள இருக்கிற எல்லா கருப்பு பணமும் வெள்ளை ஆயிருமான்னு கேட்டா ஊஹூம்.

படா கேப்பிடலிஸ்ட்லாம் தன் உத்யோகஸ்தர்கள் பேர்லயும் / கஞ்சிக்கு வழியில்லாத சொந்தக்காரவிக பேர்லயும் டெப்பாசிட் பண்ணி டேக்சஷனை குறைக்கப்பார்ப்பான்.

இதை சனம் ஜஸ்ட் ஆப்ளிகேஷனுக்கு செய்வாங்களான்னா ஊஹூம். பர்சண்டேஜ் என்னன்னு கேட்பாய்ங்க. மேலும் இடையில திடீர்னு ரிவர்ஸ் கியர் போடவும் வாய்ப்பிருக்கு. இத்தனை நாள் நாயே பேயேன்னு அலட்டிவன் கிட்டே சூதானமா நடந்துக்கனும்.

சாதாரணமா இப்படி கருப்பு பணம் வச்சிருக்கிறவிக சூனாவ நம்பாதவனாத்தான் இருப்பான். ஆகவே அதிக சதவீதம் கருப்புபணம் வெள்ளையாகி -அரசுக்கு வருமானம் கூட வாய்ப்பிருக்கு. இல்லேங்கல.

என்னைக்கேட்டா வரிவிதிப்பில் லல்லு  ஃபார்முலாவ இம்ப்ளிமென்ட் பண்ணனும். (ரயில்வே கட்டணத்தை மானாவாரியா குறைச்சு -அதிகம் பேரை பயணம் செய்ய வச்ச மாதிரி ) .இன்னைக்கிருக்கிற வரிவிதிப்புல்லாம் "சம்பாதிக்கிறவனுக்கு போடற அவராதம் மாதிரி "

நிற்க இந்த கரன்சி ரத்து பண்ற மேட்டர்லாம் புதுசு ஒன்னும் கிடையாது . முகமது பின் துக்ளக் நாட் நாட்லயே ட்ரை பண்ண மேட்டருதான்.
மொரார்ஜி தேசாய் ,ஏன் இந்திரா கூட டச்சு பண்ண சப்ஜெக்டுதேன். லேட்டஸ்டா 2005 லனு ஞா யுபிஏ சர்க்கார்ல கூட குறிப்பிட்ட வருசத்துக்கு மிந்தி அச்சடிச்சது செல்லாதுன்னு ரூல் கொண்டு வந்தாய்ங்க.

இது மட்டுமில்ல   நம்ம திட்டத்துல உள்ள அஞ்சு அம்சங்களுமே புதுசொன்னும் கிடையாது. திட்டத்தோட பெசாலிட்டி என்னன்னா அஞ்சு அம்சங்களின் சேர்மானம் தான்.

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்

-இது ஏற்கெனவே பல நாடுகள்ள அமல்ல இருக்கு .இந்திரா எமர்ஜென்சி சமயத்துல இதை கொண்டு வர ட்ரை பண்ணதுண்டு.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்

-போன சென்னை வெள்ள சமயத்துல கூட ராணுவத்தை டெப்யூட் பண்ணாய்ங்கல்ல.

3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
-அண்டை தேசங்களோட உறவை பலப்படுத்திக்கிட்டா ராணுவத்தை கொண்டே கூட செய்யலாம். மோடி சர்க்கார் என்னடான்னா கங்கையோட புனிதத்தை காப்பாத்த ராணுவத்தை உபயோகிப்போம்ங்குது.

4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.

-இது ரஷ்யன் மாடல்.ஆனால் அங்கே வலுக்கட்டாயமா அடிச்சு பிடுங்கி அரசே விவசாயம் பார்த்ததா ஞா.

5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.

இந்த ஐந்து அம்சங்களை இன் வேரியஸ் மோட் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் மோடிஜிக்கு தெரியப்படுத்தியிருக்கம். பார்ப்பம் பிச்சைக்காரன் சினிமா டைரக்டருக்கோ அ எனக்கோ பிரதமர் அலுவலகத்துலருந்து நன்றி சொல்லி லெட்டர் வருதான்னு ..

PMO implements my innovative ideas