Showing posts with label கில்மா. Show all posts
Showing posts with label கில்மா. Show all posts

Thursday, June 7, 2012

பொம்பளைய நம்பலாமா?


//வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலே//ங்கற இன்றைய திரைப்பாடல்லருந்து

//ஆலகால விஷத்தை நம்பலாம், கோலமாமத யாணையை நம்பலாம்,
கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம். காலன்விடும் தூதையும் நம்பலாம்.
சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திகைப்பார்தாமே, //ங்கற சித்தர் பாடல் வரை தாய்க்குலத்துக்கு ஆன்டியாவே இருக்கே . இன்னாபா மேட்டருனு கேப்பிக,

(சப்ஜெக்ட் தாவலை தலை! நம்ம தொடர்பதிவோட லைன் அப்பை விட்டு டைவர்ட் ஆகலை பாஸு.. ச்சொம்மா போற போக்குல டச் பண்றேன் தட்ஸால்)

எங்கயோ கேட்டது/படிச்சது.

ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.

அதை விட்டுட்டு தாத்தா கையில உள்ள கைத்தடி கணக்கா ரெம்ப ஊனி நடந்தா மூஞ்சி பல்லு பேர்ந்துரும். பொம்பளைய நம்பாதேன்னவுகள்ளாம் முட்டாள் "பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி" ன்னு சொன்ன நாந்தேன் க்ளெவருன்னு நான் சொல்லமாட்டேன்.

இந்த ஒலகத்துல எல்லா நிஜமும் நிஜமில்லை. எல்லா பொய்யும் பொய்யில்லை. எந்த நிஜமும் 100 சதம் நிஜமில்லை . எல்லா பொய்யும் 100 சதம் பொய்யுமில்லை.

எல்லா நிஜமும் 24 மணி நேரமும் நிஜமா இருக்கிறதில்லை. எல்லா பொய்யும் 24 மணி நேரமும் பொய்யா இருக்கிறதில்லை.

இங்கன எல்லாமே மாறும் .ஆளை பொருத்து , நேரத்தை பொருத்து . டீலிங்கை பொருத்து மாறும்.மாறிக்கிட்டே இருக்கும்.

சகோதிரிகள் உள்ள ஆண், சகோதரர்கள் உள்ள பெண் இவிக லைஃப் பிக்சரை பார்க்கலாம். சகோதிரின்னா ஆரு? தாயின் பிரதி.

ஒவ்வொரு ஆண் குழந்தையும் தாய் மீது மையல் கொள்ளும்னு சைக்காலஜி சொல்லுது. ( அப்பனை போட்டுதள்ளிர்ர ரேஞ்சுக்கு போயிட்டா அது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் - மனோவியாதி) சகோதிரி தாயின் பிரதி.

சகோதிரிகளிடை வளரும் ஆண் குழந்தை விவரம் தெரியறதுக்கு மிந்தி வெள்ளந்தியா ஒன்னு மண்ணா கிடக்கும். டீன் ஏஜ்ல ஒரு மிரட்சி வரும். நெருங்கலாமா கூடாதா?

இந்த மிரட்சி எல்லா பெண்கள் விஷயத்துலயும் பரவிருச்சுன்னா நாஸ்தி.. கான்ஷியஸ் மைண்ட்ல "கூடவே கூடாது"ங்கற கான்செப்ட் இருக்கும். சப் கான்ஷியஸா " வேணும்"ங்கற கான்செப்ட் இருக்கும். நிலத்துல புதை படும் நிலக்கரி அழுத்தம் காரணமா வைரமா மாறலாம். ஆனால் மனசுக்குள்ள அழுத்தப்பட்ட உணர்வு காஷ்மோரா மாதிரி . 12 வருசத்துக்கப்பாறம் பீறிட்டு கிளம்பலாம்.

மேலும் சகோதிரிகளோடு வளரும் ஆண்குழந்தை கொஞ்சம் பயந்த சுபாவமா ஃபிமிலிஷ் ஆ இருக்க வாய்ப்பிருக்கு. (என்விரான்மென்ட்) .

அதுலயும் சுருட்டை முடி,அழகான கண்கள்னு வடிவேலு சொல்றாப்ல சூப்பர் ஃபிகரா இருக்கிற சகோதிரிகள் இடையில் வளர்ர ஆண்குழந்தை பயந்த சுபாவமா வளர வாய்ப்பிருக்கு.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பால்யத்துல ரெம்ப துணிச்சலா இருக்கிறதும் - டீன் ஏஜ்ல பயந்த சுபாவமா மாறுவதும் உண்டு.

பயம் செயல்படுவதை தடுக்கும். சிந்தனையை வளர்க்கும் . அது ஆக்கப்பூர்வமானதா இருந்தா நோ ப்ராப்ளம். இதர ஃபேக்டர்ஸ் சரியில்லின்னா அது பகல் கனவா மாறும்.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா செய்த அட்வென்சர்ஸ் - அந்த குழந்தைய சூடு கண்ட பூனையா மாத்தலாம். ஆனால் இயற்கை விதிகளின் படி பூனை பால் குடிச்சே தீரனும். ( பால்னா இங்கன நான் சொல்றது வள்ளுவர் சொன்ன 3 ஆவது பால்) . இதனால மன அழுத்தம், கான்ட்ராடிக்சன் இத்யாதி இத்யாதில்லாம் டெவலப் ஆகும்.

நினைவெல்லாம் நித்யாங்கற மாதிரி சப் கான்ஷியஸ் முழுக்க பிட்டு படமா ஓடும்.. அதனால ஒரு கில்ட்டி. தன் மேல தனக்கே நம்பிக்கையில்லாத நிலை.

அதனால கில்மாவுக்கு வாய்ப்பே இல்லாத வயசு, முறை உள்ளவுகளோட மட்டும் பழகலாம். அப்படி பழகும்போது உள்ளாற அழுத்தப்பட்ட காஷ்மோரா கிளம்பிருச்சுன்னா நாறிரும்.

இங்கே இன்னொரு பாய்ண்டை சொல்லனும். இறைக்கிற கேணி தான் ஊறும்ங்கறது லாஜிக்.ஆனால் இருக்கிற தண்ணி வயலுக்கு பாய்ஞ்சா தேன் கிணறு தன் கப்பாசிட்டிக்கு ஊறும்.

ஐ மீன் ஒரு ஆண் செக்ஸ் குறித்த நேரிடை கருத்துக்களுடன் "செயல்படுவதற்கான" வாய்ப்புகளுடன் இருக்கும் போது அவனோட பாடி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணி வைக்கும்.

எதிரிடையான கருத்துக்கள் இருந்தாலோ - செயல்படுவதற்கான உந்துதலோ -ஊக்கமோ இல்லாம இருந்தாலோ விந்து உற்பத்தியே குறைஞ்சு போயிரும்.

இதுல இன்னொரு லாஜிக். பால் பாத்திரம் நிரம்பி இருந்து -அதை காய்ச்ச ஆரம்பிச்சா நேரம் பிடிக்கும். இதுவே அதுல ஒரு ஸ்பூன் பால் மட்டும் இருக்குன்னு வைங்க. என்னாவும்?

படக்குனு காய்ஞ்சி , பொங்கி ,தீஞ்சுரும். இதெல்லாம் - இந்த சிக்கல் எல்லாம் அவிக உள் மனசுக்கு தெரியாட்டாலும் - பாடிக்கு தெரியும்.

மனசை உருவாக்கிறது இயற்கையிலருந்து விலகி ஓடிக்கிட்டிருக்கிற சமூகம். பாடியை உருவாக்கிறது ஆதி நாட்கள்ளருந்து அதே தாது உப்புக்கள்,விட்டமின்ஸ்,கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன்ஸ் தான், இதனால மனசை விட பாடிக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கும்.

எதிர்காலத்துல இருக்கவே போறதில்லைங்கற "அலார்ம்" ஒலிச்சிட்டே இருக்க இவன் என்ன பண்ணுவான்? "காஞ்ச மாடு கம்பங்கொல்லை மேஞ்ச மாதிரி " செக்குக்கும் சிவலிங்கத்தும் வித்யாசம் தெரியாத மாடு மாதிரி .. போய்க்கிட்டிருப்பான்

இப்படியா கொத்த பார்ட்டிங்க தான் பொம்பளைய தாத்தா கைத்தடியா உபயோகிச்சுக்கிட்டு - இந்திரியம் தீர்ந்து சுந்தரியும் பேய் போல ஆகிர .. பதிவின் ஆரம்பத்துல சொன்ன தத்துவம்லாம் சொல்லிக்கிட்டு கிடப்பாய்ங்க. இது 12+12 பாலியல் விருப்பத்துல லைஃப் பிக்சர் நெம்பர்: 3

(இது பவர்கட் நேரம் மீதியை நாளைக்கு பார்க்கலாம்)

Wednesday, June 6, 2012

வெறும் பேச்சால் "அது" போச்சு


அண்ணே வணக்கம்ணே !
<இஸ்மாயில் சார் சொன்ன ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் > <பாப்பா> <அதை வளர்க்க பைசா> <லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்க கில்மா> இந்த வரிசையில வரும்போது படக்குன்னு தொடரோட தலைப்பை மாத்தி <படுக்கையறை மர்மங்கள்>ங்கற தலைப்புல ரெண்டு அத்யாயம் மறுபடி டைட்டில் மாத்தி <12+12 பாலியல் விருப்பம்>னு இந்த தொடர் போயிக்கிட்டிருக்கு.

இந்த செனேரியோல 12 விதமான லைஃப் பிக்சர்ஸ் கொடுத்து அதுல பாசிட்டிவ் நெகட்டிவ் காட்டி பரிகாரம் சொல்லலாம்னு ப்ளான் பண்ணோம். இடையில பரிகாரம் இல்லாம வெறுமனே ச்சூ காட்டிட்டு போறாப்ல இருக்கோன்னு ஒரு கில்ட்டி. அதனால படக்குனு பரிகாரத்துக்கு தாவிட்டம்.

இதுல மொதல் பிக்சருக்கு விளக்கம் - பரிகாரம்லாம் நேத்து கொடுத்தம். இன்னைக்கு செகண்ட் பிக்சருக்கு போயிரலாம்.

இங்கன வாயை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிடனும். யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னாரு. இதுல டபுள் மீனிங் இருக்கு. ஒன்னு ருசிக்காக வவுத்தை செப்டிக் டாங்கா மாத்திராதிங்க. இன்னொன்னு தேவையில்லாம வாயை கொடுத்து பைல்ஸ் வரவச்சுக்காதிங்க.

சிலர் பேசுவாய்ங்க. எப்டி இருக்கும் தெரீமா அப்டியே மடியில "தாச்சுக்க "சொல்லி தாலாட்டு பாடறாப்லயே இருக்கும். வவுத்துல இருக்கிற புள்ளை அப்டியே நழுவி வெளிய வந்துரும். உபமான உபமேயம்,பழமொழி, தத்துவம் இப்படி ஒன்னு விடாம உபயோகிச்சு அவ்ளோ சூப்பரா பேசுவாய்ங்க. எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு "யப்பா.. மூக்குப்பொடி"க்கு ஒரு ரெண்டு ரூபா கொடேம்பாய்ங்க.

நம்மாளு ஒருத்தன் இருக்கான். ஏரியால ஆல் இண்டியோ ரேடியோ மாதிரி. செய்திகள் வாசிப்பதுன்னுட்டு ஆரம்பிக்க மாட்டான் அதான் வித்யாசம். "தகவல் வெள்ளம் "அப்டியே பாயும்.. கொய்யால அதுல முக்காவாசி "கிசு கிசு" ரேஞ்சுல தான் இருக்கும்.

தன்னை பத்தி அதி வீர பயங்கரமா பீத்திக்குவான். பிரச்சினைன்னு வந்தா மட்டும் ஆளு காயப் (மாயமா மறைஞ்சுருவான்) அப்படி மறைய நேரமில்லாம புக் ஆயிட்டா ஒன் பாத்ரூம் டூ பாத்ரூம் எல்லாம் சகஜம்.

நாட்ல உள்ள ரவுடிக்கெல்லாம் தானே கேர் ஆஃப் மாதிரி பீலா விடுவான்.ஒரு ஹோம் கார்ட் இவன் கிட்டே நின்னு பேசிட்டா டி.ஐ.ஜி கிட்டயே பேசிட்டாப்ல அலைப்பறை .

இந்த பராக்ரமங்களை சொல்றச்ச ஹை டெசிபல்ஸ் வேற. நாம தான் லைஃப்ல அடிப்பட்டு உதைப்பட்டு கிடக்கமே. எவனாச்சும் "சுமாரா பேசினாலே" அலார்ட் ஆயிருவம் (வைக்கப்போறாண்டா ஆப்புன்னுட்டு) இந்த பிக்காலிக்கிட்ட மாட்டுவமா என்ன?

டாப் சீக்ரெட்:
அப்படியும் அய்யோ பாவம்னுட்டு ரூ.3000 கடனா கொடுத்துட்டு அதை வசூலிக்க பெரிய பெரிய சதி திட்டம்லாம் தீட்ட வேண்டி வந்துருச்சு .அது வேற கதை.

இந்த கேரக்டரை பத்தி முழுக்க சொல்லனும்னா வடிவேலுவை போட்டு ஒரு படமே எடுத்தாகனும். அடடா முக்கியமான மேட்டரை விட்டுட்டமே. கில்மா மேட்டரு.

என்னவோ ஊரு உலகத்துல உள்ள பொம்பளை எல்லாம் தூக்கிக்கிட்டு நிக்கிறாப்லயும் ( வண்டியில ஏற கொசுவத்தை சொன்னேங்ணா) இவரு பெரிய மதன காமராசன் போலவும் ஏகத்துக்கு பில்டாப் பண்ணுவான்.

ஒரு தாட்டி ஒரு ஆசாமி ஒரு கில்மா பார்ட்டிய சொல்லி பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காரு. நம்மாளு போனான் . வந்துட்டான்.

அதுக்கு அந்த ஆசாமி கேட்ட கேள்வி " கொய்யால வாய்ல போட்ட பாக்கு கூட மசியலை .அதுக்குள்ள வந்துட்ட .. என்ன சொம்மா பார்த்துட்டு வந்துட்டயா"

ஃபேஸ் டு ஃபேஸோட நின்னிருந்தா பரவால்லை. ஃப்ரீ டெலிகாஸ்ட் -ஃப்ரீ ப்ராட்காஸ்ட் வேற பண்ணிட்டாரு அந்த ஆசாமி.

இன்னைக்கும் இந்த கேரக்டர் வெறும் வாய வச்சுக்கிட்டு இன்னம் மேனேஜ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கு.

ஆனால் குட்வில்? அது அதலபாதாளத்துக்கு வந்துருச்சு. கூட்டம் குறைஞ்சு போச்சு. எவனும் சீந்தறதில்லை. அக்கா மகளை தான் கட்டியிருக்கான். அக்காவும் - அக்கா மகளும் உட்கார்ரான்னா உட்காரனும் எந்திரிடான்னா எந்திரிக்கனும் இது நிலைமை.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் - பிச்சுப்பார்த்தா ஈறும் பேனுமாம் கதைதான். ஓசியில தின்னு தின்னு அல்சர் வந்துருச்சு. ஓசியில குடிச்சு குடிச்சு லிவர் வீங்கிருச்சுன்னா கிட்னி போச்சுன்னா பொஞ்சாதி தெருத்திண்ணையில கொண்டு வந்து போட்டுருவா.

இம்மாம் பெரிய உபகதையை இங்கன கொண்டு வந்தது எதுக்குன்னா உங்க மைண்ட்ல ஒரு பிக்சர் வரனும்னு தேன். வெறுமனே பேச்சுல கலர் கொடுக்கிறது ,பீலா விடறது மட்டுமில்லை. அலங்காரமா எழுதறது -பேசறதுல்லாம் கூட இதே கேட்டகிரிதான்.

வெறும் பேச்சுங்கறது எம்ப்டி ஸ்பூன் மாதிரி . எம்ப்டி ஸ்பூனை கொண்டு வவுத்தை நிரப்ப முடியுமா என்ன? வாத்தியார் கூட "கத்தி வச்சுக்கங்க" "போஸ்ட் கார்ட் விலையை குறைப்பேன்" "மானில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்"ன்னு பாம்பு விட்டாரு .

அவருது இன்னா மேரி கேரக்டரு. அதுல இந்த பேச்சு எவ்ளோ கலீஜா இருக்குது பாருங்க.காமராஜர் "பார்க்கலாம்ணே"னுட்டா மேட்டர் க்ளோஸ். . மன்சன்னா அப்டி இருக்கோணம். முரசொலியில கலைஞர் பக்கம் பக்கமா அள்ளி விடற மாதிரி விட்டா கதை கந்தலாயிரும்.

மீறி அள்ளி விட்டா வாய் கோணிக்கும் - திங்க சோறு கிடைக்காது - குடும்பம் உருப்படாம போயிரும். கண்ணு டப்ஸாயிரும்.

இதுவரை சொன்னது பிக்சர்ல குவார்ட்டருதேன் . அடுத்த குவார்ட்டரு இன்னாடான்னா திங்கறது . இதை பத்தி விவரமா சொல்ல விரும்பலை. நாம ஏற்கெனவே எழுதின வாயும் இன உறுப்பும் பதிவை படிச்சாலே போதும்.

பேச்சு .. ஆன்டி டேட் போட்ட செக் மாதிரி. செயல் தான் கேஷ். ச்சொம்மா ரப்பர் செக்கை விட்டுக்கிட்டிருந்தா லைஃபே ஸ்மாஷாயிரும். இந்த ரெட்டை வேடம் ,கில்ட்டி, தாழ்வு மனப்பான்மை எல்லாம் சேர்ந்து பேட்டரியை ஒரு வழியாக்கிரும். "பாச்சா குட்டியா" உச்சா மட்டும் தேன் போக முடியும்.

நம்ம பேச்சை ஆரும் நம்பமாட்டாய்ங்க. குடும்பத்துல உள்ளவுக கூட " அதும்பாட்டுக்கு எதுனா பினாத்திக்கிட்டு கிடக்கும் .. அந்த ரிமோட்டை எடும்பாய்ங்க" இந்த பிக்சருக்கு என்ன பரிகாரம்னு நாளைக்கு பார்ப்போம்.

Saturday, October 29, 2011

ராசிக்கல் -கில்மா - தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை


நேற்று கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

ஆனால் இன்னைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ராசிக்கற்களான்னுட்டு ஃபீல் பண்றவுகளுக்கு ஒரு வார்த்தை. சொல்லப்போற மேட்டர் நெஜமாலுமே நாட்டுக்கு தேவையான மேட்டர். இதை எத்தீனி பேரு அடிஷ்னலா படிச்சா அத்தீனி நன்மைகள் கிடைக்கும்.(1000+)

அதனாலதான் மேற்படி கவர்ச்சி தலைப்பு. தலைப்பு மட்டுமில்லை ராசிக்கற்களை பற்றிய மேட்டரும் தரதா இருக்கேன். மொதல்ல ராசி கற்களை பார்ப்போம். பிற்காடு தற்கொலை மாதிரி சொத்தை மேட்டர்.

வானவில் பத்தி தெரியும். நம்ம கவிஞர்கள் அதை விரயமா ஹீரோவுக்கு அரைஞான் கயிறா , ஹீரோயினுக்கு உள்பாவாடை நாடாவா சகட்டுமேனிக்கு உபயோகிச்சிருக்காய்ங்க. அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம். விசயத்துக்கு வருவம்.

வானவில்லுல 7 நிறம். ராகு கேது தவிர்த்து பார்த்தா 7 கிரகம். 7 நிறம். இந்த 7 நிறங்களை ஞா வச்சுக்க வெப்கயாரோ என்னமோ சொல்வாய்ங்க.

மேற்படி 7 நிறமும் உருவாகறது சூரிய ஒளியிலருந்துதேன்ங்கறதை சுட்டிக்காட்டவே இந்த பாய்ண்டு. . நீங்க கலைஞர் போட்டிருக்கிற துண்டு மஞ்ச நிறமுன்னு எப்டி கண்டுக்கறிங்கன்னா சூரிய ஒளியில உள்ள 7 நிறங்கள்ள மஞ்சள் நிற ஒளி அந்த மஞ்சத்துண்டு மேல விழறதில்லை.

இந்த லாஜிக் தான் நீங்க உபயோகிக்கிற ஆடை அணிகலன்களின் நிறத்துலயும் வேலை செய்யுது. அது சரி மற்ற ஜோதிடர்கள் ஜாதகத்துல எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கோ அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலனை அதிகம் உபயோகிக்க சொல்றாய்ங்க.

நீங்களோ எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரகத்தோட நிறமுள்ள ஆடை அணிகலன்களை தானே அதிகமா உபயோகிக்க சொல்றிங்க ( இது நம்மிடம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெற்ற பார்ட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும்)

இந்த இரண்டு கருத்துக்கும் பின்னால் உள்ள லாஜிக் என்ன? இதுல எது கரீட் ? எது தவறு? சொல்ல முடியுமா?

சொல்றேன். ( இன்னாபா ராசிக்கல்லை பத்தி சொல்றேன்னுட்டு நிறத்தை பத்தி சொல்றேன்னு கோச்சுக்காதிங்க. நிறம்ங்கறது ஒரு டம்ளர் ரஸ்னா மாதிரி. ராசிக்கல்லுங்கறது ரஸ்னா பவுடர் பாக்கெட் மாதிரி /கான்சன்ட்ரேட் மாதிரி. வெய்ட் அண்ட் சீ பாய்ண்டுக்கு வந்துருவமில்லை ) .

மற்றவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் (பலர் கிளிப்பிள்ளைகள் தான்) சின்னதா லாஜிக் இருக்கக்கூடும். அது என்னன்னு நமக்கு புரியுது. இருந்தாலும் ஜல்லியடிகளுக்கு நாம ஏன் ஸ்டஃப் தரனும்.அதனால நம்முதை மட்டும் நாம கவனிப்போம்.

ஒரு கிரகம் ஜாதகத்துல காங்கிரஸ் கணக்கா சுயேச்சைய விட மோசமா தேஞ்சு போயிருக்குன்னு வைங்க. உங்க பாடியில சூரிய ஒளியிலான அந்த கிரகத்தோட நிறத்தை கிரகிச்சுக்க கூடிய சக்தி மிக அதிகமா இருக்கும். அதே போல சீக்கிரமா வெளிப்படுத்திடக்கூடிய இயல்பும் இருக்கும்.

உதாரணமா வாயிதா போன செல் ஃபோன் பேட்டரியை சார்ஜ்ல போட்டிங்கன்னா பத்து நிமிசத்துல பேட்டரி ஃபுல்லுன்னு காட்டும். ஆனால் ஒரு கால் பேசிமுடிக்கிறதுக்குள்ள பேட்டரி நில் ஆயிரும்.

ஆனா உருப்படியான பேட்டரி நிதானமாதான் சார்ஜ் வாங்கும் . அதே போல நிதானமாதான் சக்தியை வெளிப்படுத்தும்.

பலமிழந்த கிரகம் - சூரிய ஒளியிலான அதனோட நிறத்தை க்ராஸ்ப் பண்ணிக்கற மேட்டர்ல உங்க பாடியை வாயிதா போன பேட்டரியாக்கிரும்.

உதாரணமா உங்க ஜாதகத்துல சூரியன் பல்பு வாங்கியிருக்காருனு வைங்க .அப்பம் உங்க பாடி சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு நிற ஒளியை கப கபன்னு கிரகிச்சுக்க துவங்கும். இதனால உங்களுக்குள்ளே ஈகோ தலைவிரிச்சாட ஆரம்பிச்சுரும்.

தகுதி உடைய மனிதர்கள் மேட்டர்லயே அவிகளை அவிக ஈகோ குழி தோண்டி புதைச்சுருது. இதுல தகுதியில்லாத ஆசாமி ஈகோயிஸ்டா பிஹேவ் பண்ணா என்ன ஆகும்னு ரோசிங்க.

இதுக்குத்தேன் நாம எந்த கிரகம் ஜாதகத்துல வீக்கா இருந்தா அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலைனை அதிகமா யூஸ் பண்ண சொல்றோம்.

உ.ம் மேற்படி சூரிய பலமில்லாத மனிதர் ஆரஞ்சு நிற ஆடை அணிகலனை அதிகம் யூஸ் பண்ணா சூரியனில் உள்ள ஆரஞ்சு நிற கதிர்களை அவிக பாடி கிரகிக்காது.ஏன்னா ஆரஞ்சு நிற கதிர்கள் அவிக பாடி மேல விழவே விழாதே. ( அப்படி விழாததாலதான் அதை ஆரஞ்சு நிற ஆடைன்னு நம்மால சொல்ல முடியுது)

இந்த மேட்டர்தான் ராசிக்கற்கள் மேட்டர்லயும் வேலை செய்யுது. ராசிக்கல்லுங்கறது இதுவரை சொன்ன அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் ஸ்ட் ராங்கா பண்ணுது.

ஒரே கிரகம் நன்மை & தீமை செய்யக்கூடிய நிலையில இருக்கலாம்.

உ.ம் 1
மிதுனத்துக்கு சனி 8 -9 க்கு அதிபதி. இவிக நீலக்கல் அணியலாம்.
உ.ம் 2
கடகத்துக்கு குரு 6 ,9 க்கு அதிபதி இவிக புஷ்பராகம் அணியலாம்

இதே போல நன்மையே செய்யக்கூடிய கிரக்மா இருந்தாலும் கொஞ்சம் தீமையையும் சேர்த்து தரும்.

உ.ம் 1
சனி யோக காரகனாகும்போது ஏழு தலைமுறைக்கு அழியாத செல்வத்தை தருவாரு.ஆனால் கூடவே அதை நீங்க கிழவாடி ஆன பிற்காடு தருவாரு. கூடவே கஞ்சத்தனம், சோம்பல் இதையெல்லாம் சேர்த்து தருவாரு. மேற்படி சைட் எஃபெக்ட்சை குறைக்க நீலம் அணியலாம்.

( என்ன பாஸ் .. மேட்டர் ஓகேவா? தற்கொலை மேட்டருக்கு போயிரலாமா?)

கேள்வி1:

கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் .

ஆண் பார்வையில்:
விந்து வெளியேறும் வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல் ,முரட்டுத்தனமாக இயங்குதல் இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்:
ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள்.அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது.

உடலுறவு என்பது ஆண் -பெண் இருவரின் கொல்லும் -கொல்லப்படும் இச்சைகளை ஒரு சேர தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு ஆண் தன் உச்சத்தை சற்றே தாமதித்து பெண் உச்சம் பெறுவதை துரிதப்படுத்த வேண்டும்.ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சி அறியும்.

ஆக ஆண் பெண்களின் அடிப்படை இச்சைகள் செக்ஸில் நிறைவேறாத சந்தர்ப்பத்தில் உள்ளடக்கி வைக்கப்பட்ட இச்சைகள் வெடித்து தம் சுயரூபத்தில் வெளிப்படுகின்றன.

பெண் உச்சம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஆண் உச்சம் பெற்றுவிடுகிறான். நாளடைவில் இது ஆணில் குற்ற உணர்ச்சியையும் -பெண்ணில் வன்முறையையும் தூண்டுகிறது.

திருமணத்துக்கு முன்னாவது ஆண்,பெண்களின் அடிமனதில் தம் அடிப்படை இச்சைகளுக்கு ஒரு வடிகால் கிட்டும் என்ற கனவாவது மிச்சமிருக்கிறது. திருமணத்துக்கு பின்னோ அந்த கனவும் கலைந்துவிடுகிறது.

பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வம் குறைகிறது - பெண் செக்ஸை தவிர்க்க ஆரம்பிக்கிறாள். ஆண் தவிக்க ஆரம்பிக்கிறான் இருவரிலும் நிறைவேறாத செக்ஸ் இச்சைகள் வன்முறையாக வெடிக்கின்றன. வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு வலிமை இருக்கும்போது அது கொலையில் முடிகிறது.

வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லாத போது அது தற்கொலையில் முடிகிறது.

கேள்வி:2

பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

பெண்கள் வீக்கர் செக்ஸ். ( உடலளவில்) இதனால் அவள் தன் வட்டத்தை சிறிதாக்கிக்கொள்கிறாள். ( கேமராவை ஜூம் பண்ண மாதிரி) இதனால் சொந்த பிரச்சினை மட்டுமே பூதாகரமாக மாறுகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேள்வி:3

ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க.

ஆண் ஸ்ட்ராங்கர் செக்ஸ்.அவனோட வட்டம் பெரிது. அவன் வேட்டையாட வேண்டியிருக்கு.அதற்காக சமூக பொருளாதார அமைப்புகளுடன் உறவாட வேண்டியிருக்கு. அதனால தான் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்கள் அவனை தற்கொலைக்கு தூண்டுது.

Thursday, September 22, 2011

ஜோதிட ஆடியோ பாடம்: சுக்கிரன் (7 To 12)


அண்ணே வணக்கம்ணே ! ஆடியோ ஜோதிட பால பாடத்துல இன்னைக்கு சுக்கிரன் 7 முதல் 12 ஆம் பாவங்களில் நின்னா என்ன பலன்னு சொல்லியிருக்கேன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம். ,சந்தேகங்களை கேட்கலாம்.

Tuesday, September 20, 2011

சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?


அண்ணே வணக்கம்ணே!http://www.blogger.com/img/blank.gif
இன்னைக்கு ஆடியோ ஜோதிட பால பாடத்துல சுக்கிரன் துவாதசபாவங்கள்ள நின்ன பலனை விவரிச்சிருக்கேன்.

கையோட கையா ஒரு விஷயத்தை ஞா படுத்த விரும்பறேன். மார்ச் 6 ,2011 ஆம் தேதி "விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்"னு ஒரு பதிவை போட்டிருந்தோம்.

அதுல 2011 செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொல்லியிருந்தோம் .

தனித்தெலுங்கானா போராட்டம் காரணமா இது நெஜமாயிரும்போல இருக்கு. இன்னைலருந்து ஆந்திராவுல 6 மணி நேரம் பவர் கட்டாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா? வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Wednesday, August 31, 2011

இளமையில் வரும் சுக்கிரதசை+கில்மா


பால்யத்தில் வரும் சுக்கிர தசை ஏன் பலன் தராது:
இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார். டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

இதற்கு தீர்வுகள்:
1.ஜாதகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாது (பெரும் பிரச்சினைகளில் சிக்காது) விட்டு விட்டு 30 வயதுக்கு பிறகு இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்தல்.
2. இவருக்கு 18 வயது நிறைவடைந்ததும் இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை தேடி மணமுடித்து வைத்துவிடுவது. மணவாழ்வின் ஆரம்பத்தில் ஏற்படும் சிக்கல்களை பெரியவர்கள் பொறுப்பாய் கண்காணித்து தீர்த்துவைப்பது .

30 வயதுக்கு முன் ஏன் பலன் தராது:
முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் என்பவள் ஒரு அதிசயம். தன்னை கண்டு அதிசயிப்பவனை பெண் அலட்சியம் செய்வாள். தப்பித்தவறி அவளும் அவனை விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.

30 வ்யதுக்கு பின் எப்படி பலன் தரும்:
இவனுக்கு பெண் குறித்த பிரமைகள் விலகியிருக்கும். " பொயப்பை பார்க்கனும்டா சாமி"ங்கற தெளிவு வந்திருக்கும். ஆனாலும் இவனோட சுக்ர சை பெண்களை இவனை நோக்கி இழுக்கும். இவன் மனமோ விலகியிருக்கும். அப்பம் அந்த பெண் இவனை வேறு வழிகளில் சரிக்கட்ட இவனுக்கு லாபங்களை அள்ளித்தருவாள். நெஜமாலுமே சுக்ரதசை அடிக்கும். ( ஐ மீன் தோட்டம்,துறவு,வீடு ,வாசல் ,ஷேர்ஸ் இப்படி அவள் மூலம் லாபமடைவான்)

ஹி ஹி.. இந்த பதிவு ஜோதிட பால பாடத்தோட 12 ஆவது அத்யாயந்தான். கொஞ்சம் கேரா இருக்கட்டுமேன்னு இந்த பாடத்தை மேல போட்டேன். இப்பம் பாடம் தொடருது.
அஷ்டம சனிக்கு பரிகாரம்:
ஹனுமான் டாலர் அணிவிக்கவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும்.குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்ததானம் செய்யவும்.

5க்கு அதிபதி விரயம்:
இதனால் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புவார்.இல்லாத பொல்லாத சகுன பைத்தியம்,சென்டிமென்ட்ஸ் இருக்கும். மன நிலையில் திடீர் மாற்றங்கள் இருக்கும்.சொந்த புத்தி இருக்காது.எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்.
உங்க ஜாதகத்துல களத்ர புத்ர தோஷங்கள் இருந்தால்:
தங்கள் முன்னோர் வகையில் ஒருவருக்கு இரண்டு திருமணங்கள் ந்டைபெறுவது,திருமணத்துக்கு முன்பே இறப்பது, அகால மரணங்கள்,துர்மரணங்கள், வாரிசின்றி அல்லது ஆண் வாரிசின்றி இறப்பது, போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவேயல்லாது வாரிசில்லாத சொத்து ஏதோ முன்னோர் காலத்தில் குடும்பத்துக்கு வந்துள்ளது என்று பொருள்.

முக்கிய விதி:
ஜோதிஷத்தில் மரணம், பிரிவு, தீராத வறுமை எல்லாம் சமமே.


கோசாரத்தில் ஆறுல சனி ( தற்சமயம் ரிஷபராசிக்கு இந்த பலன் பொருந்தும்-சனி தரும் முன் கூட்டிய பலனால்)
இரண்டரை வருடங்களுக்கு ஜாதகர் வெற்றிவீரராக வலம் வர வாய்ப்புள்ளது. ஆனால் சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.
மகர லக்னம்/கும்ப லக்னத்துக்கு லக்னாதிபதி சனி எட்டில்
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். சதா ஒரு வித களைப்பு,ஆயாசம், தனிமை உணர்வு,தோற்றுப்போனது போன்ற ஃபீலிங் இருக்கலாம். நரம்பு,ஆசனம் தொடர்பான தொல்லைகள் வரலாம். நெகட்டிவ் தாட்ஸ், பெரிய,பெரிய ஆசைகள் அதே நேரம் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிகளை தொடர முடியாத மானசிக பலவீனம். நெருங்கிய உறவினர் மரணத்தால் லாபம் ஏற்படும். ( நஷ்ட ஈடு,எல்.ஐ.சி பணம் வரலாம்) உயில் மூலம் ஒரு சொத்து கிடைக்கலாம்.
தங்களுக்கு கேடு தரும் துறைகள்;
யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹேண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் ,வில்லங்க சொத்து, ஜப்தியான சொத்து, கஷ்டத்தில் விற்பவன் சொத்து, மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினர், 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமை.
பரிகாரம்:
பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். ( சனி தசா புக்தி காலங்களில் கட்டாயம் செய்யவும்)

கடேசி வரை படிச்ச உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி நம்ம சைட்/ப்ளாக்ல எல்லாம் வந்து சாக்கடை கமெண்டுகள் போட்டுக்கிட்டிருந்த சிவயசிவ புகழ் ஜானகிராமனின்  நீச  செயலுக்கு காரணங்களை காட்டும் அவரது   கண்ணீர் கடிதங்களை இங்க அழுத்தி படிக்கலாம் ( நமக்கு எழுதினதுதேன்)

Monday, August 15, 2011

நம்ம தவத்தை கலைக்க வந்த ஆன்டி


தாத்தாவை போட்டு தள்ள தாத்தா கிட்டயே ஐடியா கேட்டானுவளாம். அவரும் சொன்னாராம்.(பீஷ்மர் Vs பாண்டவர்கள்) அதைப்போல ஆத்தாவுடனான அனுபவங்களை பத்தி எழுத ஆத்தாகிட்டயே ரோசனை கேட்கிற மாதிரி ஆயிருச்சு.

ஒரு பக்கம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை (புதனே காரகன்) இன்னொரு பக்கம் பதிவு (புதனே காரகன்) டபுள் அக்கவுண்ட் ஆயிடறதால இந்த லொள்ளுன்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் நாம பேராசை படறதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவு -ரெண்டு ஜாதகத்துக்கு பலனுன்னுட்டு ரேஷன் வச்சுத்தான் செய்யறோம்.

பதிவோட ஹிட்ஸையும் தக்கவச்சுக்கனும். குவாலிட்டியும் (?) மெயின்டெய்ன் பண்ணனும். ஞாயிறு திங்கள் லீவுங்கறதால சனம் மாமியா வீட்டுக்கு -சொந்த ஊருக்கு ட்ரிப் அடிச்சுட்டாப்ல இருக்கு. வருகையில் துண்டு. அதை கவர் பண்ண ரஜினியை சந்தித்தேன்.சுதந்திர நாள், ஹசாரே உண்ணாவிரதம்னு இறங்கினா பத்தோட பதினொன்னாயிரும்..

இப்படி எத்தனையோ ஃபேக்டர்ஸ் நம்மை எழுத்தை பாதிக்குது. ஆனாலும் தொடரை தொடர்ந்தே ஆகனும்னு ஒரு சங்கல்ப்பம். பல காலமா ஸ்க்ரிப்டாவே இருந்த தெலுங்கு கவிதைகளை ( அம்மன் குறித்தவை) கணிணியில் பதிக்க ரெம்ப நாளா திட்டம். அதுக்காகவே குறைஞ்ச கன்ஃபிகரேஷன்ல -ப்ளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு சிஸ்டம் ரிசர்வ்ல வச்சிருந்தோம். அதுக்கு ஒரு ஆள் கிடைச்சது. சிஸ்டத்தை ஷிஃப்ட் பண்ணிட்டம்.

சரி .. சரி.. சரி .. பதிவுக்கு போயிருவம்.

2000 டிசம்பர் 23 ஆம் தேதி துவங்கின சாதனை + அனுபவங்களை சொல்ல ஆரம்பிச்சு 2 வருச கதையை கூட முடிக்க முடியலை.அதுக்குள்ளாற தர்ம சந்தேகம் வ்ந்துருச்சு.

உலகியல் ரீதியில சாதனைன்னா Achivementனு அருத்தம். ஆன்மீக ரீதியில சாதனைன்னா முயற்சி/பயிற்சின்னு அருத்தம். சங்கீத சாதகம்னா பாடி பார்க்கிறது/வாசிச்சு பார்க்கிறது . சாதனைங்கறது அந்த சாதகம்ங்கற சொல்லில் இருந்து வந்த சொல்லா இருக்கும் போல.

சாதனையாகட்டும் - சாதனையின் பலனா நிகழ்ந்த சம்பவங்களாகட்டும் நடந்து ரெம்ப காலம் ஆச்சு. அதுகளையெல்லாம் ரிகலெக்ட் பண்ணி எழுதும் போது அந்த சம்பவங்களின் கோர்வை மாறிப்போகுது. இதையாச்சும் மன்னிக்கலாம். ஆனால் அந்த சம்பவங்களின் வீரியம் குறித்த நினைவே தேசலாகிப் போச்சு.

சாதனைன்னா பெருசா விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஜெபம் -ஜெபம் -ஜெபம் தான். பலன் தான் ஒவ்வொரு தடவையும் ரெம்ப ஸ்வாரஸ்யமா - புதுசு புதுசா ஏற்பட்டது . இந்த பலனால லைஃப்ல நிரந்தர மாற்றம்னு எதுவும் ஏற்படாவிட்டாலும் யதார்த்த வாழ்க்கையில அந்த நேரத்து தேவை நிறைவேறும். நம்ம பயணப் பாதை கரீட்டுதாங்கற எண்ணம் வலுப்பெறும்.

மத்தபடி நம்ம ஃபிசிக்லயோ - ப்ரொடக்டிவிட்டியிலயோ பெருசா நிரந்தரமா ஏதும் மாற்றம் கிடையாது. ஆனால் அற்புதம் நடக்கும் போது மட்டும் விட்டலாச்சார்யா ,ஏ.பி நாகராஜன் படம்லாம் பிச்சை வாங்கனும் அந்த ரேஞ்சுல நடக்கும். நம்ம மண்டைக்குள்ள நட்சத்திரங்கள் வெட்டும்.

ஆன்மிக சாதனை (பயிற்சி) லௌகீக சாதனைகளுக்கு ( அச்சீவ்மென்ட்) நிரந்தர உதவியை அளிக்க கொஞ்சம் காலம் பிடிக்கும். நம்ம கேஸ்ல 7 வருஷம் பிடிச்சது. அதனால இதை படிக்கிறவுக நாமும் ஜெபத்தை ஆரம்பிச்சுருவம்னு வேட்டிய வரிஞ்சு கட்டிராதிங்க.

மந்திர ஜெபத்தால் நமக்கு கிடைக்கிற அரைகுறை ஃப்யூயல் கூட நமக்கு ஆப்பாவேமுடியவும் சான்ஸ் இருக்கு. மேலும் நாம பெற்றுள்ள வசதி வாய்ப்புகள்ள நமம் கருமங்கள் மிங்கிள் ஆகி இருக்கிறதால எல்லாத்தையும் புதுசா ஆரம்பிச்சாத்தான் வேலைக்காகும்னு ஆத்தா டிசைட் பண்ணி ஒழிச்சு கட்ட ஆரம்பிச்சுருவாள்.

அந்த மாதிரியான அனுபவங்கள்ள் ஒன்னை இப்ப பார்ப்போம்.

நம்ம மேட்டர்ல அப்படித்தேன் நடந்தது.மந்திரோபதேசம் கிடைச்ச க்ரூப்புக்கு ஒரு சென்டர். அங்கன கூடி முன் தினத்து சாதனைகள் - அச்சிவ்மென்ட்ஸை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவம். மாலையில காலேஜ் கிரவுண்டுல சத்சங்கம்.

இந்த சிச்சுவேஷன்ல ஒரு நா சென்டருக்கு சொந்தக்காரன் ஃபுட் மேட்டை உதறிப்போட சொன்னான். உதறிப்போட்டுட்டு ( அவனையும் ) கழண்டுகிட்டோம்.

அப்பம் ஏரியா தலைவருக்கு ஏரியா சனத்துலயே சில ஆள்காட்டிங்க பயங்கர ஆப்பா வச்சி தள்ளியிருக்க அவர் பேண்டை அவுத்து எப்படியெல்லாம் புண்ணாயிருக்குன்னு காட்ட ரெடியாயிட்டாரு. நாம ஆறுதல் சொல்லி நான் இருக்கேன்னு அபயம் கொடுத்தோம்.

அவரோட காம்ப்ளெக்ஸ் மாடியில ஒரு சின்ன ரூம்பு . அதுல ப்ராக்டீஸு. 1989 ல துவங்கின ப்ராக்டிஸ் பீக் ஸ்டேஜுக்கு போனது அங்கனதான். நமம் ரூம்பு என்னவோ சின்னது. ஆனால் நம்ம விசிட்டர்ஸ் பால்கனியை நிரப்பியிருப்பாய்ங்க.

வாணியம்பாடியிலருந்து காணிக்கு கியாரண்டி இல்லாம வந்த நமக்கு ஆத்தா ஒரு ஆஸ்தானத்தையே ஏற்பாடு பண்ணி தந்துட்டா. இதுவரை ஓகே.

பீஜாக்ஷர ஜெபத்தால் இப்படி ஆகர்ஷண சக்தி (வசியம்) எக்கு தப்பா எகிறி போச்சு. தாய்குலத்தோட மென்டாலிட்டி பத்தி ஆண் பெண் வித்யாசம் தொடர்ல விவரமா எழுதியிருக்கேன். அவிகளுக்கு தேவை கொஞ்சம் போல அன்பு.

காய்கறி வண்டி காரன் என்னக்கா டல்லா இருக்கிங்கன்னு கேட்டுட்டாலே ஊர்ல இருக்கிற தம்பியா நினைச்சு கொட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நாம சொல்யூஷன் வேற தந்து தொலைச்சுர்ரமா அதனால
பல ஆன்டிகள் நமக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓவா மாற நாமதேன் அவிகளை கழட்டி விட வேண்டியதாய்ருச்சு.இதுல சில ஆன்டிகள் கோவிச்சுக்கிட்டதும் உண்டு. நமக்கு செக்யூரிட்டியா மகளை ஆஃபீஸ்ல கூட வச்சுக்க ஆரம்பிச்சேன். இதுவாச்சு பரவால்லை நாம குடியிருந்த இடத்துல பக்கத்து போர்ஷன் தாய்குலம் வேற நம்மை கச்சா முச்சான்னு சீண்ட ஆரம்பிச்சுருச்சு.

தாய்குலத்தை பொருத்தவரை நாம ஒன்னு அப்பனோட ரோலை ப்ளே பண்ணுவம்.அல்லது மகனோட ரோலை ப்ளே பண்ணுவம். இதை மொதல்லயே கான்கிரீட்டா எஸ்டாப்ளிஷ் பண்ணிருவம். அவிக சப்கானிஷியஸா வேண்டுவதும் இதைத்தான்.

ஆனால் மேற்சொன்ன பக்கத்து போர்ஷன் ஆன்டிக்கு இந்த ரெண்டு ரோலும் பிடிக்கலை. நமக்கு இந்த ரெண்டு ரோலை விட்டா வேற ரோல் செய்ய பிடிக்காது. அண்ணா தம்பி பிசினஸ் எல்லாம் அலர்ஜி.

ஒரு நாள் நம்மை சீண்ட - நாம குளிக்க தயாரான சமயம் பார்த்து பாத்ரூம்ல புகுந்துக்கிட்டாள். (காமன் பாத்ரூம்) பொஞ்சாதிக்கு இந்த மேட்டர் பின்னாடி இருக்கிற இன்டென்ஷன் தெரியாது. அவள் ரொட்டீனா
" அக்கா! அவரு குளிக்கனும் ..ஒரு பத்து நிமிசம் வெளிய வாங்க' ன்னு ப்ரப்போஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.

கொய்யால .. நாம பார்க்க அவள் தூக்கி கட்டின பாவாடையோட வெளிய வந்து நமக்கு ஒரு தர்ம தரிசனம் தரனும் இதான் அவளோட ஸ்கெட்ச். இதையெல்லாம் நாம 1984-1986 பீரியட்லயே கச்சா முச்சான்னு பார்த்தாச்சு.

க்ரூப் ஸ்டடியில க்டுப்பாக்கி கட்டிலை சுத்தி ஓடவிட்டு தம் போட்ட பார்ட்டி நாம. இதுக்கெல்லாம் ஜொள்ளுவமா என்ன?

பொஞ்சாதிக்கு கண் ஜாடையில .. உன் வேலைய நீ பார்த்துக்கன்னு சொன்னம். அவள் கேட்ச் பண்ணிக்கலை. மறுபடி பாத்ரூம் கதவை தட்டி " அக்கா! பத்து நிமிசம்"

மிகக்குறுகிய கால அளவுல நான் என்னத்தை சொல்லி பொஞ்சாதிய தடுக்கறது. அவள் அக்மார்க் பொஞ்சாதியாகி என்னை குளிக்க வைக்கிறதே பதிவிரதா தர்மம்னு டிசைட் ஆயிட்டாப்ல இருக்கு.

நமக்கா பயங்கர கடுப்பு.ஆஃபீஸ் என்னோடது . நான் குளிக்காம போகலாம் - லுங்கியில போகலாம் - ட்ராக் சூட்ல போகலாம் - ஏன் பெரமுடால கூட போகலாம் -அட போகாமயே இருந்துரலாம். யாரு நம்மை கேட்க முடியும்.

தூத்தெறி .. ஒரு சின்ன மேட்டர்.. இதை கூட புரிஞ்சிக்காம லொள்ளு பண்றாளேன்னு எரிச்சலாகி கன்னத்துல பளார். நாம ஆஃபீஸ் வந்துட்டம்.மதியம் சோத்துக்கு போனா டிவி பெட்டி மேல லெட்டர் " நான் போறேன்'

ஸ்கூலுக்கு போயி மகளையும் பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காள். அவளோட அக்கா காரி ( அது ரெம்ப ஸ்வாரஸ்யமான கேரக்டர் -நம்ம சைக்காலஜி ஸ்டஃபுக்கு அவளும் அவள் பிஹேவியரும் கூட ஒரு காரணம்) பி.பி நெம்பருக்கு ஃபோன் போட்டு "இங்க தான் வந்திருக்காப்பா.. நாலு நல்லது கெட்டது சொல்லி அனுப்பி வைக்கிறேன்' னாள்

நாம .." அய்யய்யோ .. அவளுக்கு இன்னும் 10 மாசத்துக்கு நேரமே சரியில்லை.அவளை அங்கயே வச்சுக்கங்க நான் சொல்றப்ப அனுப்பினா போதும் " னு கட் பண்ணிட்டம்.

ஆக 2003 ஜூன்ல இருந்து 2004 பிப்ரவரி வரை மறுபடி பேச்சிலர் லைஃபு. பக்கத்துலயா துடியா ஒரு ஆன்டி. ஆத்தா எப்படியெல்லாம் கார்னர் பண்றா பாருங்க.

நாமளா மாட்டுவம்.. 24 ஹவர்ஸ்ல வீட்டை ஷிஃப்ட் பண்ணிட்டு நமக்கு ஸ்தான பலம் உள்ள - ஃபேமிலி லைஃப் + பேச்சிலர் லைஃப் ரெண்டுக்கு சூட் ஆகக்கூடிய ஒரு போர்ஷனை பிடிச்சு யோக சாதனையில முழுகிட்டம்.

(தொடரும்)



Saturday, August 6, 2011

ஆண் பெண் வித்யாசம்:விரய பாவம்


அண்ணே வணக்கம்ணே ..

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்ல கடைசி அத்யாயம் இது. விரய பாவ காரகத்வங்கள் என்ன?

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள் இத்யாதிய காட்டுவது விரய பாவம். பொதுவிதிப்படி பார்த்தா இந்த பாவம் காலியா இருக்கிறது நல்லது. காலியாவே இருந்தாலும் இந்த பாவாதிபதியோட நிலைய பொருத்து மேற்படி சமாசாரங்க அதும்பாட்டுக்கு அது நடக்கும்.

உபரியா இந்த பாவத்துல கிரகங்கள் வேற இருந்தா கில்மா, தீனி,தூக்கம் இத்யாதி டபுள் ஆகவும் வாய்ப்பிருக்கிறதால இப்படி ஒரு விதியை ஏற்படுத்தியிருக்கலாம். இருந்தாலும் இன்னொரு சந்தர்ப்பத்துல இங்கன சுபகிரகங்கள் இருந்தா நல்லதுன்னும் ஒரு விதி சொல்லப்படுது.

சுபகிரகங்கள்னா நைசர்கிக சுபர்களா? லக்னாத் சுபர்களான்னு ஒரு கேள்வி வரும். உதாரணத்துக்கு குரு பாவியாக உள்ள ஒரு லக்னம். விரயத்துல குரு உட்கார்ராருனு வைங்க.

குரு சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற செய்யும் ஒரு கிரகம். எனவே ஜாதகர் தூக்கம்,தீனி,செக்ஸ் எல்லாத்துலயும் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற ட்ரை பண்ணுவாரு.

ஆனால் இவரோட லக்னதிபதி பாபகிரகம்னு வைங்க.அப்ப இவரோட மைண்ட் செட் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானதா இருக்கும். நினைப்பது ஒன்று செய்வது ஒன்று. இது மனக்குழப்பத்துக்கு ஹேதுவாகி எலி தரைக்கிழுக்க ,தவளை தண்ணிக்கிழுத்த கதையாயிரும். இந்த முரண்பாடு ஓவரா போனா மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கூட வரலாம் ( அன்னியன் பார்த்திங்கல்ல)

இதுவே ஒரு லக்னத்துக்கு குரு சுபர், அவரேவிரய பாவத்துல உட்கார்ந்தாருன்னு வைங்க.அப்ப எண்ணமும் செயலும் ஒன்னா இருக்க வாய்ப்பு ஏற்படுது.ஆக லக்னாத் சுபர்கள் இங்கன உட்கார்ரதே நல்லது.

பாபர்கள் உட்காரும்போது அவர்களது தீனி,செக்ஸ் இத்யாதி சாஸ்திர விரோதமானதா இருந்தாலும் அவிக மனசு ஒப்பி அதன் அடி நடக்கும்போது அவர்களது செயல் சட்டவிரோதமா இருக்கும் பட்சத்தில் கைக்கு காப்பு வரலாமே தவிர மனக்குழப்பம் - காம்ப்ளெக்ஸ் இத்யாதிக்கு சான்ஸிருக்காது.

இது ஆண் பெண் அனைவருக்கும் பொருந்தக்கூடிய விஷயம்.சரீ........இ இ வித்யாசம்னு தலைப்பை வச்சுட்டு வித்யாசத்தை சொல்லலின்னா எப்படி?

செலவு:
இன்னைக்கு பெண்கள்ள எத்தனை சதவீதம் பேரு பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்காய்ங்கனு பார்த்தா ஒரு பத்து அ இருபது சதவீதம் கூட தேறாது. பொருளீட்டும் சுதந்திரம் வேணம்னா இருக்கலாமே தவிர செலவழிக்கும் சுதந்திரம் உள்ளவுக அதுல பாதி தேறினா யதேஷ்டம்.இவிக செலவுக்கு ஆத்துக்காரரோ
மாமனார் மாமியாரோ ஜீ.ஓ பாஸ் பண்ணாம இருக்கிறது துர்லபம்.

இல்லத்தரசிகள் பற்றி சொல்லவே வேணா. ஆண் பெண்களுடைய செலவெல்லாம் மரணத்தின் நிழல்களோட போராடறதிலேயே வந்து நிக்கும். உ.ம் தனிமை , முதுமை (மேக்கப் செலவு) , நிராகரிப்பு,

அதுலயும் பெண் வீக்கர் செக்ஸ் இவளுடைய எண்ணங்கள் ஒரு குறுகிய வட்டத்தை ஃபோக்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கும். ஆணாவது செக்ஸ்ல வீரிய ஸ்கலிதத்தின் போதான ப்ளாக் அவுட்டை குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அதனால மரணத்தோட ஓரளவாச்சும் அவனுக்கு பரிச்சயம் இருக்கு.ஆனால் பெண்? அதுலயும் இந்திய பெண்? இந்த விஷயத்துல ரெம்ப துரதிர்ஷ்ட சாலி.

இதனால பெண்ணுக்கு மரணத்தை நினைவு படுத்தும் எதுவுமே நடுக்கத்தை கொடுத்துருது. முதுமைங்கறது மரணத்துக்கு முந்திய ஸ்டாப். அதனாலதான் ஏழை -பணக்காரி,படிச்சவ -படிக்காதவ எல்லாருமே வயசை குறைக்க என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்றாய்ங்க.

நாலு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு மூளைய வளர்த்துக்கிட்டா சீக்கிரம் வயசாயிரும்னோ என்னமோ அரசியல் -இலக்கியம் -சினிமா எதை பத்தி கேட்டாலும் " அதென்னமோ எனக்கு தெரியாது. எங்க வீட்டுக்காரர் தான் சதா சர்வ காலம் மல்லாடிக்கிட்டிருப்பாரு" ன்னு சொல்ற தாய்குலம் சாஸ்தி. முதற்கண வருமானம் கிடையாது. அப்படியே இருந்தாலும் செலவழிக்கிற அதிகாரம் கிடையாது. அப்படியே கிடைச்சாலும் அவிக செலவெல்லாம் காலத்தை -காலச்சக்கரத்தை சுழலாம நிறுத்தறதுலயே நின்னுருதுங்கோ.

தீனி:
உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு - அதாவது பெண் சாஸ்தி சாப்பிட கூடாது.(ஏன்னா இவன் 7 -அவள் 23 - இன்னம் சத்தா சாப்பிட்டு கெத்தா வளர்ந்து நின்னா இவன் பாடு கோவிந்தாவாயிருமே) . மிச்சம் மீதியை திங்கறது - நேத்து முந்தா நேத்து சரக்கை வீணாப்போகுதேனு திங்கறது - அள்ளிப்போட்டுக்கறது . இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஆக பெண் ஜாதகத்துல விரயஸ்தானம்ங்கறது செலவையும் -தீனியையும் தர்ரது ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். பின்னே என்னாத்ததான் தருது?

செக்ஸ்:

இதை பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு? செக்ஸோட நோக்கமே ஆர்காசம்தான் (உச்சம்) ஆனால்வாழ் நாள்ல விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஆர்காசங்களை கூட பெண்கள் எய்துவதில்லைங்கறது சர்வே முடிவு.

தூக்கம்:

இவ என்னவோ நாம கொடுத்துவச்சது இவ்ளதான்னு தூங்க ஆரம்பிப்பா. அந்த நேரம் பார்த்து "இவரு" சுரண்டுவாரு. திரும்பி படுடி. தலைவாழை இலை வச்சு தண்ணி தெளிச்சு ஒரு சோறா,காயா ,கறியா,பருப்பா சாம்பாரா, ரசமா, மோரா ஒரு இழவும் பரிமாறாம படக்குனு பாயாசத்தை கவுத்துட்டு விருந்து முடிஞ்சதுன்னு தூங்க ஆரம்பிச்சுருவாரு.

கொய்யால அவளுக்கு முறையான செக்ஸும் போச்சு.வவுத்தெரிச்சல்ல தூக்கமும் போச்சு. பின்னே பெண்கள் ஜாதகத்துல இந்த விரயஸ்தானம் என்னாத்ததான் தருது?

முக்திய தரும்னு வேணம்னா சொல்லலாம். அ ஏழேழு பிறவிகளின் கருமங்களெல்லாம் ஒழிஞ்சு அடுத்த
பிறவியிலயாவது குத்து மதிப்பா சுமாரான வாழ்க்கைய பெற வழி ஏற்படலாம் தட்ஸால்.

ஆணினமா ஆண்மை இழந்து - பெண்ணின் தேவைய நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியில தவிக்குது. ஒரு சில மெச்சூர்ட் மைண்ட் செட் உள்ள ஆண்கள் பாவம் இவளுக்கு " அதை தான்" தரமுடியலை .. ஏதோ அவள் விருப்பத்துக்கு எதையாவது திங்கட்டும்னு ஃப்ரிட்ஜை நிரப்பிர்ராய்ங்க. அல்லது அவள் காலச்சக்கரத்தை நிறுத்த ப்யூட்டி பார்லர், நாவல்ட்டிஸ் அது இதுன்னு செலவழிச்சா கண்டுக்காம விட்டுர்ராய்ங்க.

அன் மெச்சூர்ட் மைண்ட் செட் உள்ள ஆண்கள் தங்களோட குறைய மறைக்க சாடிஸ்டுகளா மாறி உயிரோட கொல்றாய்ங்க.

பின் தூங்கி முன் எழுதல்னு ஒரு விதியை வச்சிருக்காய்ங்க . அதாவது ஆத்துக்காரரு தூங்கின பிற்பாடுதேன் இவள் தூங்கனும்.அவரு எந்திரிக்கிறதுக்கு மிந்தி இவள் எந்திரிச்சுரனும்.தூக்கம் மதர்மதர்ப்பை தந்துரும். 7 -23 வித்யாசம் இன்னம் சாஸ்தியாயிரும்ங்கற பீதி.

ஒரு ஆண் ஒரு இரவில் மேக்சிமம் இரண்டு மூன்று ஆர்காசங்களுக்கே நாக் அவுட். ஆனா பெண்? கவுண்ட்லெஸ் ஆர்காசம்ஸை பெற தாக்கத் உடையவள்னு பயாலஜி சொல்லுது. இப்ப ஒரு திருமணமான பெண் ஜாதகத்துல விரய பாவத்துல எந்தெந்த கிரகங்கள் இருந்தா என்ன பலன்? நம்ம அனுபவஜோதிடம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

1.சூரியன் :

ஆர்காசம் இல்லாத உடலுறவுக்கு பின் விடியல் வரை விழித்திருப்பது.

2.சந்திரன்:

தான் ஆர்காசம் பெற்றுவிட்டதாக கற்பனை செய்து கொள்வது .

3.செவ்வாய்:

ஆர்காசம் இல்லாத உறவு தேவையாங்கற எரிச்சல்ல எனக்கு தூக்கம் வருதுன்னுட்டு முரண்டு பிடிக்கிறது ரத்த காயத்தோட ஏறக்குறைய ரேப்

4.ராகு:

ரெண்டு பெக் போட்டா கில்மால தூள் கிளப்பலாம்னு எவனோ பிக்காலி சொன்ன யோசனைய சிரமேற்கொண்டு லாலா போட்டுட்டு வந்த ஆத்துக்காரரை சகிச்சுக்க வேண்டி வர்ரது

5.குரு:

தன் இயலாமையை மறைக்க ஆத்துக்காரர் உபதேச மஞ்சரி கணக்காய் உபன்யாசம் செய்ய கேட்டுக்கொண்டு தூங்க முயற்சிப்பது.

மற்ற கிரகங்கள் இருந்தா என்ன பலன்னுட்டு சபையில உள்ளவுக சொல்லலாம்.


- ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடர் முற்றும் -

Friday, August 5, 2011

ஆண் பெண் வித்யாசம் : 11 ஆம் பாவம்


ஜாதகத்துல 11 ஆம் பாவத்தை லாபஸ்தானம்ங்கறாய்ங்க. மூத்த சகோதர ஸ்தானம்ங்கறாய்ங்க. பெண்ணோட வாழ்க்கையில லாபம்னு துவங்கறதெல்லாமே நஷ்டமா போயிர்ரது. உ.ம் தாயோட கருப்பையில உயிர் தரிச்சோம் லாபம்னு நினைச்சா உடனே ஸ்கான்ல ஆணா பெண்ணா தெரிஞ்சுக்கிட்டு சங்கு ஊதிர்ராய்ங்க. அல்லது எருக்கங்குச்சி எட்செட்ராவ வச்சு நஷ்டமாக்கிர்ராய்ங்க.

சரி அதையும் மீறி பிறந்து வந்து அப்பாடா ஒரு வாழ்க்கை லாபம்னு நினைக்கிறதுக்குள்ள மூச்சை நிறுத்திர்ராய்ங்க. இப்படியே ஒவ்வொரு ஸ்டெப்லயும் அவள் லாபம்னு நினைக்கிறதெல்லாம் நஷ்டமாவே போயிர்ரது. அதனாலதேன் நிறைய பெண்களோட ஜாதகத்துல 11 ஆவது பாவம் லாபஸ்தானமா ஒர்க் அவுட் ஆகாம மூத்த சகோதர ஸ்தானமாவே ஒர்க் அவுட் ஆகுது.

மூத்த சகோதரம்னா அது அக்காவா இருக்கலாம், அண்ணனாவும் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அக்காவால கிடைக்க கூடிய லாபங்கள் என்ன? நஷ்டங்கள் என்ன? அண்ணனால கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்கள் என்னங்கறதை இந்த பதிவுல பார்ப்போம்.

அக்கா:
அக்கான்னா யாரு? அம்மாவோட டூப்ளிக்கேட். அம்மா யாரு? இவள் பிறந்ததும் பார்த்த ஸ்பரிசித்த முதல் ஆண்மகனான அப்பாவோட அன்பை பங்கு போட்டுக்கற காம்ப்படிட்டர். அதனால இவள் மைண்ட்ல அம்மா -அக்கா ரெண்டு பேரும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க.

அப்பா தன் மனசுல தன் பொஞ்சாதி மேல ( இவளோட அம்மா) உள்ள மோகமெல்லாம் வடிஞ்சு இவள் மேல் தன் பார்வையை திருப்பும் வரை காத்திருக்க வேண்டி வந்துருது. இந்த இழவுல அவரோட அன்புலஅக்ர பாகம் (முதல் பாகம்) அக்காவுக்கு போயிருது.. அதை தக்க வச்சுக்க அவள் மெனக்கெட வேண்டி வந்துருது. இது ஒரு வ்யூ.

இன்னொரு வ்யூல பார்த்தா இவள் அச்சான அதே பதிப்பகத்துல அச்சான - இவளுக்கு முந்திய பதிப்புத்தான் அக்கா. இவளை விட அவளுக்கு பெண்ணுக்கெதிரான கொடுமைகள் பற்றிய ஞானம் அதிகம்.

கொடுமைகளுக்கு இலக்கான மனசு ரெண்டு வகையில ரெஸ்பான்ட் ஆகும். 1. தான் பட்ட கொடுமையை வரிசையில அடுத்து உள்ள பார்ட்டி அனுபவிக்கக்கூடாது 2.கொய்யால நான் பட்ட அவதியை பின்னால
வர்ரவளு(னு)ம் அனுபவிக்கனும்.

இதுல அக்காக்காரி மொதல் ஜாதியா இருந்தா உங்க லாப ஸ்தானம் சூ..ஊ ........ப்பரு. அவளே ரெண்டாவது ஜாதியா இருந்தா டர்ர்ரு.

இது ஒரு வ்யூ. இன்னொரு வ்யூல பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சேம் செக்ஸ். அதனால ஒருத்தர் மேல ஒருத்தருக்கு கவர்ச்சி இருக்காது. மேலும் பருவ வயசுல ஒருத்தருக்கொருத்தரு போட்டியா மாறவும் வாய்ப்பிருக்கு. இதெல்லாம் மைனஸ்.

வயசு வித்யாசம்:
உங்க அதிர்ஷ்டம் நல்லாருந்து உங்க அக்காவுக்கும் உங்களுக்கும் வயசு வித்யாசம் அதிகமா இருந்தா அவிக உங்க அம்மாவோட ரோலை ப்ளே பண்ண சான்ஸ் இருக்கு. நீங்க பிறந்த சமயம் அம்மா கொஞ்சம் போல களைச்சு - பிள்ளை வளர்ப்புல சலிப்பு இருந்தால் உங்களை தன் மூத்தமகள் கிட்டே தள்ளி விட்டுர சான்ஸ் இருக்கு.

ஆண் குழந்தை வளர்ந்து பெருசாகி -ஒன்னை பெத்தாலும் -அதை வளர்த்தாலும் -அட கட்டியே கொடுத்துட்டாலும் - அட அது ஒன்னை பெத்து அதை தூக்கி கொஞ்சினாலும் கூட முழுமையான அப்பனா ஆகமுடியாம போயிரலாம்.

ஆனா பெண்குழந்தைய பொருத்தவரை அது பிறக்கும் போதே தாயாத்தான் பொறக்குது. அவளோட இதயமும் மடியும் ஒரு குழந்தைய தூக்கி வச்சுக்க -கொஞ்சி மகிழ துடிக்குது.

எனவே வயசு வித்யாசம் அதிகமா இருக்கும் பட்சத்துல உங்க அக்கா உங்களுக்கு அம்மாவா மாற வாய்ப்பிருக்கு.

அண்ணன்:
அண்ணன்னா யாரு? அப்பாவோட மறு பதிப்பு. நீங்க யாரு ? அம்மாவோட மறு பதிப்பு. அப்பாவை பொருத்தவரை அம்மா மோகத்துல உங்க பக்கம் பார்வைய திருப்ப அவகாசம் தேவைப்படும். மேலும் வாழ்க்கை போராட்டம் - தொழில்,வேலை உத்யோக கவலைகள் எட்செட்ரா எட்செட்ரா.

ஆனா அண்ணன்? அவன் மொதல் மொதல்ல தவழ்ந்த நெஞ்சு தாயோடது. அவனுக்கு உணவு கொடுத்து அவனோட உயிரை நிலைக்க வச்ச மார்பு தாயோடது. அவன் எந்த கவலையும் இல்லாம செக்யூர்டா இருந்த கருப்பை அவனோட தாயோடது.

அவன் அடிமனசுல மறுபடி தாயின் கருப்பைக்குள் நுழையும் உத்வேகம் இருக்கும்னு சைக்காலஜி சொல்லுது. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் வேற சப்ஜெக்ட். ஆனால் இதுவும் ஆண் குழந்தைக்கு தாயின் பால் ஏற்படும் ஈர்ப்புக்கு ஒரு காரணம்தேன்.

இந்த தீவிரமான உள் மன கொந்தளிப்புகளுக்கு வடிகாலா இருக்கிறது தாயோட ஸ்பரிசம் -கிள்ளல் -முத்தம். அவன் டீன் ஏஜை தொடும்போது தாய் ஸ்பரிசத்தை அவாய்ட் பண்ண அவனையே அவாய்ட் பண்ண ஆரம்பிக்கிறா. "எருமை மாதிரி மேல விழாதே"

உங்கள் தந்தையின் மறுமதிப்பான உங்க அண்ணனுக்கு - உங்கள் தாயின் மறுமதிப்பான உங்க மேல ஈர்ப்பு வர்ரது சகஜம். (ஜாடை முக்கியம் - ஐ மீன் அண்ணனுக்கு அப்பா ஜாடை வந்திருக்கனும் -உங்களுக்கு அம்மா ஜாடை வந்திருக்கனும் )

அப்பா தன் வயதுக்குரிய கடமைகளின் ப்ரஷரால உங்க மேல அன்பை கொட்ட முடியாத தருணத்தில் - அம்மா தன் வயதுக்குரிய உபாதைகள் -களைப்பு -சலிப்பு காரணங்களால் தன் மகன் மேல் அன்பை கொட்ட முடியாத தருணத்தில் கடமைகள் ஏதுமில்லாத அண்ணன உங்க மேல அன்பை காட்ட முடிவது சகஜம்.

பால்யத்துல ஆண் பெண் குழந்தைகளிடையில் பெருசா வித்யாசம் தெரியறதில்லை. பெண் குழந்தையும் ஆண்குழந்தைக்கு சமமா மாங்காய் அடிக்குது - குதிக்குது ஓடுது -அதனால அண்ணன் தங்கை பாச பிசினஸ் எல்லாம் அந்த வயசுல தேசலாத்தான் இருக்கும். இன்னம் சொல்லப்போனா அண்ணன் உங்களை தனக்கு போட்டியா கருதவும் -வெறுக்கவும் - நீங்க எலியும் பூனையுமா இருக்கவும் சான்ஸ் இருக்கு.

ஆனா பருவத்தின் வாசலில் நிற்கும்போது தான் நீங்க ஆணில்லை பெண் - தன் தாயின் மறுபதிப்புங்கற விஷயம் அவன் மனசுக்கு உறைக்குமோ என்னவோ?

வயசு வித்யாசம்:
வயசு வித்யாசம் அதிகமாகும் பட்சத்துல உங்க அண்ணன் அப்பாவோட ரோலை ப்ளே பண்ண ஆரம்பிச்சா தலைவலிதான். அங்கே நிக்காத - செல் ஃபோன்ல என்ன பேச்சு இத்யாதி ..

என்ன நம்ம ஜாரா திடீர்னு சுறுசுறுப்பாயிட்டாரு ? ஓகோ புதுசா ஏதோ வண்டை வார்த்தை ஸ்ட் ரைக் ஆயிருச்சாம்..

Wednesday, August 3, 2011

தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே,

நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.

ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு

1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்

இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.

உயிர் வாழ்தல் இரண்டு விதம்:

உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்


பரவுதல் ரெண்டு விதம்:

பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

பரவுதல்னா தங்கள் பேரும் புகழும் படைப்பும் படைப்புத்திறனும் உலகெங்கும் பரவ வாழறது பலவான்களின் லைஃப் ஸ்டைல்.

ஆண் ஃபிசிக்கலி ஸ்ட்ராங், (சரீர பலம்) . பெண் சைக்கலாஜிக்கலி ஸ்ட்ராங். (மனோ பலம்).

ஆணின் சரீர பலம் உச்சத்தில் இருக்கும்போது சரீர பலம் / முரட்டுத்தனம் தேவைப்படும் துறைகளில் உச்சத்துக்கு போகிறான்.

பெண்ணின் மனோபலம் உச்சத்தில் இருக்கும்போது மனோபலம் தேவைப்படும் துறைகளில் பெண்கள் உச்சத்துக்கு போகிறார்கள்.

ஆணின் சரீர பலத்தை பற்றி பலமுறை சொல்லியிருக்கேன். ஆனால் இதுல ஒரு சின்ன கரெக்சன். ஆணோட சரீர பலம் கொண்டு ஒரு கல்லுரலையே நகர்த்திரலாம். ஏன் இடுப்பு வரை தூக்கியும் காட்டலாம்.

ஆனால் தாளி அவனால ஒரு படி அரிசி கூட அரைக்க முடியாது. எப்படியா கொத்த பாடிபில்டரா இருந்தாலும். (பத்து பதினைஞ்சு நாள் ப்ராக்டிஸு பண்ணி 16 ஆவது நாள் செய்து காட்டலாம் அது வேற விஷயம்)

ஆனால் கண்ல மட்டும் உயிர்வச்சுக்கிட்டு -ஒல்லி பீச்சானா இருக்கிற பொம்பளை மூச்சிரைக்காம பக்கத்து வீட்டு அக்கா கிட்டே தெருவுக்கு புதுசா குடிவந்த பொம்பள டாக்டர் வாக்கிங் போற அழகை பத்தி பேசிக்கிட்டே அசால்ட்டா அஞ்சு படி அரிசியை அரைச்சுரமுடியும்.

இவனுக்குள்ளே சக்தி என்னவோ அதிகமா தான் இருக்கு. ஆனால் அவனால அதை கண்டிஷனிங் செய்து தொடர்ச்சியா வெளிப்படுத்த முடியறதில்லை. அதுக்கு ஒரு ப்ளானிங் வேணம். சக்தியை கட்டுப்படுத்தி கொஞ்சமா - கன்டின்யுவஸா வெளிப்படுத்தன்ம். ஆனால் இந்த டெக்னிக் ஆண்களுக்கு தெரியாது.பெண்களுக்கு தெரியும்.

இந்த மாதிரியான பவர் கண்டிஷனிங் டெக்னிக் தேவைப்படற ஃபீல்ட் ஒர்க்ல கூட ஆண்களால சோபிக்க முடியாது. இது ஃபிசிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா தேவைப்படற தொழில்,உத்யோகங்கள் உண்டு.அவற்றிலும் பெண்கள் தான் நிறைய சாதிக்க முடியும்.

1.உருவாக்குதல் - சூட்சுமமான அசெம்ப்ளிங்ல எல்லாம் பெண்கள் நின்னு விளையாடறாய்ங்க.

2.பராமரிப்பு & பதப்படுத்துதல்: இதுவும் பெண்ணோட இயல்புக்கு ஏற்ற துறை .

( இதுக்கான காரணம் என்னன்னா கருவில் குழந்தை உருவாகிறது வெறும் உயிரியல் தொடர்பான மேட்டர் கிடையாது.அவளோட சப்கான்ஷியஸ்ல இருந்து புறப்படும் கமாண்ட்ஸ் அந்த குழந்தையின் உருவாக்கத்திற்கு நிறைய உதவுது. உருவாக்கும் -பதப்படுத்தும் -பராமரிக்கும் துடிப்பு மற்றும் திறன் இயல்பாகவே பெண்ணில் அமைந்திருக்கிறது)

3. வினியோகித்தல் : இங்கே வரும்போது ஆண்கள் கொடி கட்டி பறக்கிறாய்ங்க.

4..கண்டுபிடிப்புகள்:
இது ஏறக்குறைய ஒரு கற்பழிப்பு மாதிரி தான். வேணம்னா முதலிரவுல நடக்கும் படிப்படியான நிர்வாணப்படுத்துதலை போன்றதுன்னு சொல்லலாம். (குவாரி,சுரங்கம்லாம் கற்பழிப்பே) அதனாலதான் 90 சதவீத கண்டுபிடிப்புகள் ஆண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

உடலுறவின் போது கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிக்கிறான்.ஆனால் பெண் தன் நிர்வாணத்தை கூட தான் ரசிக்கிறதில்லை.

சரிங்ணா இந்த பதிவோட சாரத்தை இப்படி வச்சுக்கலாம் .பெண்ணோட ஜாதகத்துல ஜீவனபாவம் பலம் பெறுவது அவளது உருவாக்கும்,பதப்படுத்தும்,பராமரிக்கும் திறனை அதிகரிக்கும்.

ஆணோட ஜாதகத்துல ஜீவன பாவம் பலம் பெறுவது இன்ன பிற துறைகளிலான அவனது திறமையை அதிகரிக்கும்.

ஜீவன பாவம் ஏறுமாறா இருக்கும் போது ஆண் பெண்கள் தங்கள் இயல்புக்கு மாறான துறைகளில் ஈடுபாடு கொண்டு நுழைந்து அதையும் சீரழித்து தங்கள் முன்னேற்றத்தையும் மூளியாக்கிக்குவாய்ங்க.

Sunday, July 31, 2011

தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்


சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் - நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் - ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.

ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.

இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.

அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.

இந்த விசயங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.இந்த இடத்துல அனாவசியமா செக்ஸை நுழைக்கிறான்னு குறை சொல்லாம இருக்கிறதா இருந்தா அசலான மேட்டரை சொல்லலாம். ஆனால் அனுபவஜோதிடம் இப்பம் அய்யர் ஓட்டல் மாதிரி ஆயிருச்சு ( ஜா.ரா எப்படியாவது நான் வெஜ்ஜா மாத்திர்ரது தவிக்கிறாரு அது வேற விஷயம்) அதனால ஒரு பழைய பதிவோட சுட்டியை மட்டும் தரேன் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

பதிவோட சாரம் ஆண் பெண் இன உறுப்புகளே -அவற்றின் அமைப்பே அவிகளோட பேசிக்கல் கேரக்டரை காட்டிருதுங்கறதுதேன். பதிவின் சுட்டி இங்கே

பெண் தன்னுள் ஒரு வித வெற்றிடத்தை உணர்ந்து அதை நிரப்ப பார்க்கிறா. அந்த வெற்றிடத்தை நிரப்ப வல்லது அன்பு..அன்பு..அன்பு . அன்பு மட்டும்தேன். அதை நிரப்பிருமோங்கற நப்பாசையில அன்பு கிடைக்காத பெண் நகை ,நட்டு,போல்ட்டு,கலர் டிவி,டிவிடி ப்ளேயர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி குவிக்க நினைக்கிறா.

ஆண் நிலை வேற அவன் எதையாவது நிரப்ப துடிக்கிறான். அது தான் ஈட்டும் செல்வத்தால சாத்தியமோங்கற நப்பாசையில சம்பாதிக்கிறான். திரைக்கடலோடி திரவியம் தேடனும்னு தவிக்கிறான். அவனுக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவன் நிரப்ப துடிக்கிறது அன்பால. அது அவனுக்குள்ள பொங்கி புரளுது.

இப்படி பார்த்தா பெண் அன்புக்கு ஏங்கறா. ஆண் கொட்டிக்கவிழ்க்க துடிக்கிறான். ஆனால் சமூக சதிகளின் காரணமா பெண் ஆணை சந்தேகிக்க ,ஆண் பெண்ணை சந்தேகிக்க ரெண்டு பேரும் அன்புக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

பெண் ஸ்தூலமான பொருட்களை ஆல்ட்டர்னேட்டிவா உபயோகிக்க ஆண் தன் விந்தை ஆல்ட்டர்னேட்டிவா உபயோக்கிறான். எவ்ள பெரிய உத்தமனா இருந்தாலும் அவன் தொலை தொடர்பு -தூர தேச பயணம்னு போகும்போது அவனோட அடி மனசுல எங்கயோ இந்த ஆசை ஒளிஞ்சிருக்கும். புதுசா எதுனா கிடைச்சா கொட்டிக்கவிழ்த்துரலாம்.

இவளா இவளுக்குள்ளே வெற்றிடத்தோட இருக்காள்.அதை நிரப்ப வல்லது ஜஸ்ட் அன்புதான். இடை அவள் உணர்ந்தே இருக்கா. அதுக்காக ஏங்கவும் செய்றா.

ஆனால் ஆண்களோட நிலைமை என்னடான்னா தன்னில் பொங்கி பிரவிகிக்கிறது அன்புதான். தன் மனசு கொட்ட நினைக்கிறது அன்பைத்தாங்கற உணர்வு இல்லே. ஒரு சில ஆசீர்வதிக்கப்பட ஜென்மங்களுக்கு அப்படி ஒரு உணர்வு இருந்தாலும் சக ஆண்களே "தூத்தேறி ..அன்பு இன்னாடா அன்பு. கோழி கிடைச்சா அடிச்சு குருமா வச்சு சாப்டமா கைய கழுவினோமான்னு இல்லாம அன்பாமில்லை அன்பு"ன்னு மொக்கை பண்ணிர்ராய்ங்க. இவனோட ஆண்மையையே சந்தேகப்பட ஆரம்பிச்சுர்ராய்ங்க.

இதனால இவனோட அன்பு பின்னடைந்து உடலுறவு இச்சையா வெளிப்படுது. ஆணுக்குள்ளான காமம் பால் மாதிரி பொங்கி வழிஞ்சுரும். ஆணா பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சிட்டே இருக்கும் .அவளோட காமத்தை ஃபேஸ் பண்ற சக்தி எந்த பிக்காலிக்கும் இல்லேன்னு அவளுடைய உள்ளுணர்வுக்கு தெரிஞ்சிருந்தாலும் அன்புக்காக செக்ஸை சகிச்சுக்கவும் தயாராயிர்ரா.

என்ன ஒரு சோகம்னா அன்புக்காக செக்ஸை சகிச்சுக்க சித்தமாயிட்ட பெண்ணை ஆணே "லோலு"ன்னிர்ரான். சமூகம் வேற மாதிரி அட்ரஸ் பண்ண ஆரம்பிச்சுருது. ஆண் தன் உந்துதல் அன்பை கொட்டங்கறதை மறந்து விந்தை கொட்ட தயாராயிர்ரான்.

பெண்ணோ தனக்கு தேவை அன்புங்கறதை உணர்ந்து அதை பெற செக்ஸை சகிச்சுக்கவும் ஒரு கட்டத்துல ப்ரிப்பேர் ஆயிர்ரா. ஆணோ அதை காமம்னு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறான். வெறுமனே காமத்தை கொடுத்து காமத்தை பெற முனையறான். இதனால பெண் தன் உள்ளுணர்வை புறக்கணிச்சு தன்னுள்ளான வெற்றிடத்தை - அன்பால் மட்டுமே நிரம்ப கூடிய வெற்றிடத்தை ஸ்தூல வஸ்துக்களால் நிரப்ப கட்டாயப்படுத்தப்படறாள்.

காமம் எங்கவேணா கிடைக்கும். கிடைச்சது தரமற்றதா இருந்தாலும் உடல்தான் பாதிக்கப்படுமே தவிர மனசு ? ஊஹூம்.

ஆனால் அன்பை பொருத்தவரை அது அரிதிலும் அரிது. அதை முன் பெண் தெரியாத தேசத்துல - முன் பின் தெரியாத ஆட்கள் கிட்டே எதிர்ப்பார்க்க முடியாது. இவளா வீக்கர் செக்ஸ்.எதுனா ஏத்தக்குறைச்சலாயிட்டா எதிர்காலமே ஃபணால். முக்கியமா இவள் மனசு அன்பின் மேலயே நம்பிக்கை இழந்துரும். இனி எந்த காலத்துலயும் இவள் அன்புக்காக ஏங்க கூட முடியாது.

அதனாலதான் பெண்கள்ள இந்த தொலை தொடர்பு, தூரதேசபயணம், சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது இத்யாதியில ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் இருக்கறதை விட்டு பறக்க விடறது தன் கற்பனை பறவையை மட்டும்தேன். சைக்கலாஜிக்கலா
ஸ்ட்ராங்காச்சே. ஆனால் பிராக்டிக்கல் லைஃபுன்னு வரும்போது ஒரு குறுகிய வட்டத்தைதான் தன் பாதுகாப்பு வளையமா நினைக்கிறா.

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்ங்கறாப்ல நல்ல ஆன்டிவைரஸ் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் எப்படி ஒவ்வொரு சின்னை ஃபைலையும் ஸ்கான் பண்ண பிறகே அனுமதிக்குதோ அப்படி அனுமதிக்கத்தான் பெண் மனம் விரும்புது.

இது மேக்ரோ லெவல்ல சாத்தியமில்லை. ஒரு சிறு அளவுல பெண்கள் மேற்சொன்ன ஜூரிஸ்டிக்சன்ல வந்திருக்கலாம். ஆனால் அவிக மைண்ட் மட்டும் ஒரு குறுகியவட்டத்துல மட்டும் - தங்களுக்கு அன்பை தரக்கூடியவுக ஆருன்னு ஸ்கான் பண்ணிக்கிட்டே இருக்கும்.


ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல எந்த பாவமும் எந்த ஜாதகத்துலயும் 100% ஃப்ரூட் ஃபுல் கிடையாது. 100% ஹார்ம் ஃபுல்லும் கிடையாது. இந்த விதிப்படி பெண்ணின் ஜாதகத்தில் அப்பா,அப்பா வழி உறவு -சொத்து -சேமிப்பு - கணவன் -கணவன் வழி உறவு - சொத்து எல்லாம் ஃபணாலாகியிருந்தா அப்பம் அந்த பாவத்தின் கடைசி காரகங்களான தொலை தொடர்பு -தூர தேச பயணம் இத்யாதியில ஆர்வம் -அனுகூலம் ஏற்படுது.

ஆணை பொருத்தவரை அவன் கொட்டனும் (அன்பை சொன்னேங்க) கொட்ட நினைக்கிறவன் பறந்து பறந்து திரிஞ்சுதேன் ஆகனும். ஆனா பெண்ணை பொருத்தவரை அவள் தன்னை நிரப்பிக்க நினைக்கிறவள் .(அன்பைத்தாங்க சொல்றேன்) அதனால அவள் பறக்காம பொறுமையா காத்திருக்கத்தான் செய்யனும்.

ஆணோட ஈகோ வல்லியது (ஸ்ட்ராங்குனு சொல்லவரேன்).. இதை வளர்க்கிறதும் பேரன்ட்ஸ் & சொசைட்டிதேன். ஒனக்கென்னடா ஆம்பள சிங்கம். அதனால அவனுக்குள்ள ஒரு தொலை நோக்கு வந்ததும் சொத்து சுகம்னு செட்டில் ஆற துடிப்பு வந்ததும் தானறிந்த வட்டங்கள் விட்டு விலகி ,தன்னையறியா வட்டங்களில் புழங்க துடிக்கிறான். ஏன்னா ஈகோவை கழட்டி வச்சாத்தானே சில்லறை தேறும்.

ஆனா பெண்ணோட ஈகோ ரெம்ப மெல்லியது. ஆக்சிடென்டலா இதுக்கும் காரணம் பேரன்ட்ஸ் அண்ட் சொசைட்டிதான்.பொம்பளை சிரிச்சா போச்சு எட்செட்ரா.இதனால அவள் தானறிந்த வட்டங்களிலேயே -தன்னை அறிந்த வட்டங்களிலேயே புழங்க முடிகிறது.

குறிப்பு: தொலை தொடர்பு துறையில நிறைய பெண்கள் வேலை செய்றாய்ங்களேன்னு கட்டைய போட பார்க்காதிங்க. அவிக அந்த துறையில யாருக்காகவோ பல்லாயிரம் பேரை தொடர்பு கொள்ளலாம். ஆனால் தங்களுக்கே தங்களுக்குன்னு தொடர்பு கொள்றவுக நெம்பர் சிங்கிள் டிஜிட்டா இருக்கவே அதிகம் வாய்ப்பு.


ஒன்பதாம் பாவத்தை பொருத்தவரை வித்யாசம் முடிந்தது. அடுத்த பதிவுல 10 ஆம் பாவத்தை பார்ப்போம்.

Thursday, July 28, 2011

சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே ! ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)

அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.

கடேசியா நாம டச் பண்ணது ஒன்பதாம் பாவம். இது அப்பா, ஆன்மீகம்ங்கற மேட்டர்களை காட்டறதால இந்த விஷயத்துல ஆண் பெண்களுக்குள்ள வித்யாசத்தை பார்த்தோம்.

9 ஆம் பாவம் அடுத்தபடியா சேமிப்பு முதலீடை கூட காட்டுதுங்கோ. இதுல ஆண் பெண் வித்யாசத்தை கண்டுக்கிடனும்னா ஆண் பெண்களுக்கிடையிலான சில அடிப்படை வித்யாசங்களை புரிஞ்சிக்கிடனும்.

ஆண் :

உடல் ரீதியா பலசாலி /மன ரீதியா பலகீனன்/ பொறுமை கம்மி/கச்சா முச்சானு ரிஸ்க் எடுப்பான்/பரபரனு இருப்பான்/மாற்றத்தை விரும்புவான்/ பரபரனு தன்னை எக்ஸ்பாண்ட் பண்ணிக்க துடிப்பான்/ இவனோட சாகும் இச்சைல்லாம் செக்ஸிலான ஆர்காசத்துல நிறைவேறிர்ரதால சாகடிக்கனும்டானு துடிப்பான்./தன் பலம் குறித்த அதீத நம்பிக்கையால தூரதேசங்கள்/ஏன் சந்திரன்ல கூட ஒரு ப்ராஞ்ச் வைக்கலாமான்னு பார்ப்பான்.

பெண்: உடல் ரீதியா வீக்கு/மன ரீதியா ரெம்ப ஸ்ட்ராங்கு/பொறுமை சாஸ்தி/ரிஸ்கே எடுக்க மாட்டாள்/தேமேனு இருப்பா/மாற்றத்தை விரும்ப மாட்டாள்/ பொறுமையா ஒவ்வொரு எல்லையா தன்னை பலப்படுத்திக்கிட்டு அப்பாறம்தேன் எக்ஸ்பேன்ஷன் எல்லாம்/ இவளோட கொல்லும் வெறியெல்லாம் செக்ஸ்ல நிறைவேறிட்டு (ஆணுக்கு ஆர்காசம் கிடைச்சு அவன் பிணமா சாயற நேரம் இவளுக்கு இது நடக்கும்) சாகும் இச்சை நிறைவேறாம தவிப்பா./சாகத்துடிப்பா

நம்ம தியரியெல்லாம் வரும் காலத்துல நமக்கு பைத்திய பட்டத்தையோ அ டாக்டர் பட்டத்தையோ வாங்கித்தரப்போறது நிச்சயம்னு நமக்கு தெரியும். ஒரு காலத்துல நான் என்ன எழுதினாலும் அதை அசால்ட்டா போட்டு வைப்பேன். எவன்/எவள் காப்பி பண்றேனு கேட்டாலும் அப்படியே தூக்கி கொடுத்துருவன்.

ஆனால் இப்ப கண்ட கண்ட ( ஜாரா.. எதுனா சாக்கடையான ஒரு திட்டு இருந்தா உபயம் பண்ணுங்களேன் ப்ளீஸ்) ..............................எல்லாம் நம்ம எழுத்துக்களை எடுத்து நோகாம நோன்பு கும்பிட்டுருதுங்க.அதனாலதேன் நமக்குனு ஒரு ஸ்டைல வச்சு - கச்சா முச்சான்னு விட்டு விட்டு உபகதைகள் எல்லாம் சேர்த்து எழுதிக்கிட்டு வரேன்.

ஒருத்தன் சைக்கிளை படுக்க வச்சு ..........அட காத்தடிச்சிட்டிருந்ததை சொன்னேங்க. ஏம்பா இப்படின்னு கேட்டேன்.

இதுக்கு மிந்தி மாட்டுக்கு லாடம் அடிச்சிட்டிருந்தேன்னான் அவன். பழக்க தோஷம்னா இதான். காப்பி பேஸ்ட் பிக்காலிங்க உள்ளாற என்ன இருக்கு ஏது இருக்குன்னு இல்லாம ஒரிஜினல் ஐயரோட எழுத்துக்களை காப்பி பேஸ்ட் பண்ண ஜா.ரா மாதிரி பண்ணீருவாய்ங்க.அப்ப படக்குன்னு பிடிச்சுரலாமில்லை.

சரி எதுக்கு இந்த பேச்சு வந்தது ? ஆங் ஆண் பெண் வித்யாசங்களை ரெம்ப அந்தரங்கமா கூட சொல்ற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ. அதையெல்லாம் ப்ளாக்ல போட்டு கா.பே சனம் கா.பே செய்து தொலைச்சுட்டா தூக்குல போட்டுருவாய்ங்க.

நாம அடல்ட் ஜோக்கும் சொல்வோம்/ கில்மா மேட்டரும் சொல்வோம் ஆனால் நமக்கு அது உள்ள பில்டப்புக்கு அஜீஸ் ஆயிரும். மத்தபடி ஃபார்முலா இல்லாம /தகுதி இல்லாம போட்டா டின் கட்டிருவாய்ங்க சனம்.

என்ன ? மொக்கை போதுமா? அப்படியே.. மேட்டருக்கு வந்துர்ரன், ஆண் பெண் வித்யாசத்தை பார்த்திங்க. இப்பம் முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் உள்ள வித்யாசத்தை பார்ப்போம்.

மனித குலத்தோட பேசிக்கல் இச்சைகள் ரெண்டு (அதுக்கு காரணம் ரெம்ப ஸ்பிரிச்சுவலானது .அதை பலதாட்டி சொல்லியிருக்கேன்.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.)

1.கொல்லுதல்
2.கொல்லப்படுதல்

பச்சையா சொன்னா அதுவும் நம்ம எம்.ஆர் .ராதா ஸ்டைல்ல சொன்னா ஒன்னு சாகோனம் அ சாகடிக்கோனும்.

இப்பம் முதலீடு சேமிப்பு பின்னாடி உள்ள இச்சைய பாருங்க. முதலீடுங்கறது ரெம்ப ரிஸ்கானது. ஆனா லாபத்தை தந்துட்டா நம்மை சுத்தி இருக்கிறவன்லாம் செத்துப்போயிருவான்.

கி.பி.2000 வருசம், ஜூலை மாசத்துல இருந்து 2009 மே மாசம் வரை பிரவுசிங்குக்காக தினசரி ஆவரேஜா ரூ.50 செலவழிச்சுட்டே வந்தேன்.

ஆனால் இப்பம் சனம் சாகுது. நம்ம பாப்புலாரிட்டி + சில்லறை புரள்றதை பார்த்து.அதுல முதலிடம் நம்ம ஜா.ராவுது.

ஆக சோற்றுக்கில்லாத நாள்ளயும் இன்வெஸ்ட் பண்ண வச்சது கொல்லும் இச்சைதேன். ஏன் சனத்தை சாகடிக்கோனம்.

ஒரு வேளை நம்ம ப்ளாக் போனியே ஆகாம போயிருந்தா? ஆப்புதேன்.

இன்னொரு உதாரணம்:

நம்ம சன்னி பைக் ட்ராகுலா கணக்கா பெட்ரோல் குடிக்கவே கார்ப்பரேட்டரை மாத்திரலாம் கொய்யால ஒரு 30 கிமீ ஆவது வரட்டும்னு நினைச்சேன். இதுவும் முதலீடுதேன். நம்ம வண்டி லட்சணத்தை பார்த்து
" ங்கோத்தா கண்ட நாய்க்கெல்லாம் அள்ளி வீசத்தெரியுது .. மொதல்ல வண்டியை மாத்து சாமி"னு இலவச ஆலோசனை தந்தவுகளை சாகடிக்கோனமே.

ஆனால் என்னாச்சு ஜாரா மாதிரி ஒரு பிக்காலி மெக்கானிக் கந்து வட்டிக்காரன் கணக்கா 70 கொண்டா -125 கொண்டா -250 கொண்டானு சுரண்டிட்டான் . இதுல அப்பப்ப பத்து இருவது தனி.

ஆனால் அவிக அம்மாவ திட்ட மனசு வரலை. ஆனால் திட்டிரலாமானு ரோசிக்க வச்சுட்டான். டுபாக்கூர் பாக்கிங் வச்சு அரைலிட்டர் பெட்ரோல் காலி. ( ஒழுகியே போச்சு) சன்னி நன்னியில்லாம நின்னுப்
போயி தள்ள வச்சிருச்சு நாக்கையும்.

ஆக முதலீடுங்கறது கொல்லும் இச்சையால் செய்யறது.

சேமிப்புனு பார்த்திங்கனா அதுல ரிஸ்கே கடியாது. உப்பு டப்பாவுல கூட சேமிக்கலாம். ( ஓடிப்போன ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டதெல்லாம் சேமிப்பு லிஸ்டுல வராதுங்ணா -அதெல்லாம் முதலீடுதேன்)

சேமிக்கனும்னா கன்சம்ப்ஷனை குறைக்கனும். இது தன்னை தானே கொன்னுக்கறதுதேன். பெண்ணுக்கு ஆர்காசம் என்பது ஏறக்குறைய இம்பாசிபிளா இருக்கிறதால பெண்கள் சேமிப்புக்கே ஓட்டுப்போடறாய்ங்க. (கொல்லும் இச்சை நிறைவேற) . ஆண்களுக்கு தவறாது ஆர்காசம் கிடைச்சு சாகும் இச்சை நிறைவேறிர்ரதால அவிக முதலீட்டுக்கே ஓட்டுப்போடறாய்ங்க.

தங்க விலை ஏறிட்டே போகக்காரணம் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சதுதாங்கறது என்னோட கெஸ்ஸிங். ஆக 9 ஆமிடம் ஆண் ஜாதகத்துல முதலீட்டையும் -பெண் ஜாதகத்துல சேமிப்பையும் காட்டுது.

எப்பவுமே விஷயத்தை மேலோட்டமா பார்க்கக்கூடாது. அப்பம் அசலான விஷயங்கள் நமக்கு ஸ்பார்க் ஆகாது

நம்ம ஜாரா கழுத்துல ருத்திராட்சை கொட்டை - நெத்தியில விபூதி பட்டைன்னு இருக்கிறதை பார்த்து நம்மாளுங்களே மொத எழுத்து ஜா.கடைசி எழுத்து ன் என்று நீங்க சொல்லியிருக்கக்கூடாதுன்னு சொன்னாய்ங்க.

கம்ப்யூட்டரையே எடுத்துக்கங்க. மேலோட்டமா குயிக் ஸ்கான் போட்டா மசாலா வெளிய வராது . சில சமயம் ஃபுல் டைம் ஸ்கான்ல கூட நான் பத்தினின்னு சொல்லும். ஆனால் பூட் டைம் ஸ்கான் கொடுத்துப்பாருங்க.. மசாலாவா கொட்டும்.

அதனால விஷயங்களை ஸ்தூலமா பார்க்காம அதுக்கான பின்னணியை பாருங்க . மேட்டரு தண்ணியில நனைஞ்ச ஹீரோயினோட .............. - அட ப்ரா பட்டைய சொல்ல வந்தேங்க - அதுமாதிரி ஃபோக்கஸ் ஆகும்.

ஓகே. நாளைக்கு ஒன்பதாம் பாவ காரகங்கள்ள இன்னும் சில அம்சங்கள் -அந்த அம்சங்கள்ள ஆண் பெண்ணுக்கிடையிலான வித்யாசங்க்ளை பார்ப்போம்.

உடு ஜூட்

Thursday, July 21, 2011

மரணம் குறித்த பார்வை :ஆண் -பெண் வித்யாசம்


மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா - அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல - அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட - சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு )

பெண்கள் எந்த பொசிஷன்ல இருந்தாலும் அடிமைகள் தாங்கற கான்செப்டாலயோ என்னவோ பெண்கள் இடையில (அதுவும் ஃபங்சன்ஸ்ல) பெருசா வித்யாசங்கள் வெளிப்படுத்தப்படறதில்லை. ஆனால் ஆண்கள் அப்படியில்லை .. தன் குழு - அ தன் நண்பன் ரேஞ்சுலயே நின்னுர்ராய்ங்க.

பெண்களோட ரிலேஷன்ஸ் ஹிப்பாக்கிரடிக்கா இருந்தாலும் - நாடகமா இருந்தாலும் அவிக ஆல்வேஸ் ரஷிங் டுவார்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோ.

மரணமும் ஏறக்குறைய ரஷிங் டுவோர்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோங்கறதால மரணத்தை நேருக்கு நேரா சந்திக்க பயப்படறதில்லை.

ஆனால் ஆண் தான் மரணத்துக்கு ஆல்ட்டர்நேட்டிவ்ஸ் தேடிப்பறக்கறான். உ.ம் செக்ஸ், பணம்,பதவி,வன்முறை .

மரணங்கறது ஒரு சின்ன மாற்றம்தேன். இருப்பு நிலையில் மாற்றம். மேட்டரா உள்ளது பவரா மாறுது தட்ஸால்.

ஆண் ,பெண் இருவர் வாழ்விலும் மாற்றம் என்பது கட்டாயம். தாய் மடியிலருந்து -பாட்டி மடி - அப்பாறம் அப்பாவோட தோள் - பக்கத்து வீட்டு ஆன்டி - பள்ளி ஆசிரியை - கல்லூரி -வேலைன்னு மாறித்தான் ஆகனும்.

ஆண் குழந்தை ஒவ்வொரு மாற்றத்தையும் கண் மூடித்தனமா எதிர்க்கும். பெண் குழந்தை ரெசிப்டிவ். ஃப்ளெக்சிபிள். ஆண் குழந்தை ரெஜிட்டா இருக்கு.

ஆண் குழந்தை தன் சரீர பலத்தை வச்சு மாற்றத்தை எதிர்க்குது அது தன் சர்வைவலுக்கு தேவைன்னு போராடுது.

பெண் குழந்தை தன் சரீர பலகீனம் காரணமா மாற்றத்தை ஏத்துக்கறதே தன் சர்வைவலுக்கு நல்லதுன்னு நினைச்சு அஜீஸ் ஆயிருது.

ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிற குழந்தைகள்ள ஆண் குழந்தைகள் தான் அதிகம். அட இவ்ள எதுக்கு ஏழு கழுதை வயசாகி ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எதிர்த்து கோர்ட்டுக்கு போற பார்ட்டிங்க இல்லையா என்ன?

வீட்டோட மாப்பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிரலாம். அதே போல புகுந்த வீட்ல செட் ஆகாம தவிக்கிற பெண்களையும் விரல் விட்டு எண்ணிரலாம்.

ம்ரணங்கறது ஒரு மாற்றம். பெண் அதை தன் பலகீனத்தின் காரணமா ஏத்துக்கிட்டு பலப்படறாள். ஆண் அதை எதிர்த்து பலகீனப்படறான்.

மாற்றம் விசித்திரமானது. அதை ஏத்துக்க தயாராயிட்டா அது ஒரு மாற்றம் அவ்ளதான். ஆனால் அதை எதிர்க்கும் போது அந்த மாற்றம் மரணத்தை விட கொடுமையா இருக்குது.

(ஜோதிட டிப்: சர ராசிக்காரவுக மாற்றத்துக்கு தயாரா இருப்பாய்ங்க -ஸ்திர ராசிக்காரவுக ஊஹூம்)

மன்சன்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது வெளிப்பட்டே ஆகனும். வாய்ப்பிருந்தா செக்ஸ் பவராவே வெளிப்படுது - அதுக்கான வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்துல முதிர்ச்சி கொண்ட மனம் இருந்தா படைப்பாற்றலா வெளிப்படுது - முதிர்ச்சியற்ற மனம் வன்முறையா வெளிப்படுத்துது . இது உயிரியல் -மனோவியல் விதி.

மன முதிர்ச்சியை பொருத்தவரை பெண் குழந்தைக்கு அது சீக்கிரமே சித்திக்குது. 40 வயசு ஆணுக்குள்ள மனமுதிர்ச்சி 12 வயசு பெண்குழந்தைக்கு இருக்கிறதை எத்தனையோ தாட்டி நானே வாட்ச் பண்ணியிருக்கேன்.

இந்த மனமுதிர்ச்சிக்கு காரணம்? சரீர பலகீனமா இருக்கலாம் .. சர்வைவல் அவசியங்கள் அவளை சீக்கிரமா மெச்சூராக்குது. ஆண் இந்த விஷயத்துல துரதிர்ஷ்ட சாலி.

முதிச்சி பெற்ற மனம் செக்ஸ் பவரை கிரியேட்டிவ் பவரா வெளிப்படுத்துதுன்னு சொன்னேன். பெண்ணுக்கு உள்ள சரீர பலகீனம் , அவளுக்கு எதிரா உள்ள சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகள் காரணமா அவளோட கிரியேட்டிவ் பவர் ஸ்தூலமா வெளிப்பட இயலாத ஒரு நிலை இருக்கு. அதனால அவளோட கிரியேட்டிவ் பவர் சூட்சுமமான வடிவத்துல வெளிப்படுது . அ சமூக,பொருளாதார ,அரசியல் அமைப்புகள் அனுமதித்த அளவில் மட்டுமே வெளிப்படுது.

இதனாலதான் பெண்ணுக்கு செக்ஸ் மேல ஆர்வம் ஏற்படறதில்லை. ( மனம் சார்ந்த் ஆர்வம் ) உடலை பொருத்தவரை அது புரட்சி செய்யலாம் அதுவேற சங்கதி - அதையும் அவள் தன் மனமுதிச்சியை கொண்டு மேனேஜ் பண்ணிர்ரா)

ஆனால் ஆணை பொருத்தவரை அவனோட படைப்பார்வம் ஸ்தூலமாவே படைக்க விரும்புது .( ஃபிசிக்கல் அண்ட் என்விரான்மென்டல் எபிலிட்டி) . பிரச்சினை என்னன்னா ஸ்தூலமான படைப்பில் தடைகளுக்கு நெம்பர் ஆஃப் சான்ஸஸ் இருக்கு. இந்த தடை அவன் மனதை செக்ஸ் அல்லது வன்முறைக்கு திருப்பி விட்டுருது.

மேலும் செக்ஸை பொருத்தவரை ஆணுக்கு அது அனுமதிக்கப்பட்டிருக்கு. ஹி மே பி மேரீட் ஆர் அன் மேரிட். வித் வைஃப் ஆர் அனதர் பர்சன். " ஒரு கால் கட்டு போட்டா சரியாயிரும் - இவள் சரியில்லை -அவனை சொல்லி என்ன? மாதிரி டயலாக்ஸ் எல்லாம் கேட்டிருப்பிங்க.

இதனால ஆணோட செக்ஸ் பவர் செக்ஸாவே செலவழிஞ்சு போயிருது - மிச்சம் மீதி இருந்தா அதையும் அவன் ஸ்தூலமான படைப்புக்கே திருப்பி விடறான்.

பெண்ணை பொருத்தவரை 45 வயசு கிழவியாவே ஆயிட்டாலும் அச்சம், நாணம்,மடம் அது என்னாது பயிர்ப்புல்லாம் மெயின்டெய்ன் பண்ணவேண்டி இருக்கு. அதனால அவளோட படைப்பு சக்தி மனம் சார்ந்து ,மனவெளியில் இயங்குது. அங்கே தங்கு தடையில்லாம..

"காற்றுக்கென்ன வேலி - கடலுக்கென்ன மூடி -கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது" ரேஞ்சுல அவிக கிரியேட்டிவ் பவர் வேலை செய்யுது. ( சிலர் அந்த மன வெளி படைப்புக்கு உயிர் கொடுக்க நினைக்கும்போது கணவன் - வீடு - ஊர் -உலகம் அதிர்ச்சியில் நொறுங்கி போகுது.

பெண்ணுக்கு இயற்கை கொடுத்த இன்னொரு வரம் ப்ரக்னன்சி. படைப்பின் உச்சம் இது. (இதுக்கப்பறம் பெண்ணுக்கு ஏற்பட உடல்,மன சிதைவுகள் அவளுக்கு செக்ஸ் மீது இருந்த ஓரளவு ஆர்வத்தையும் ஆஃப் பண்ணிர்ரதால - அதை ஒரு ஆயுதமா வச்சு பேரம் பேசற அவலமும் நடக்குது.

ஆணை பொருத்தவரை ஒவ்வொரு உடலுறவிலும் உச்சத்தை தொடுகிறான். குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அனுபவிக்கிறான். மரணத்தோட சின்ன அறிமுகமாச்சும் இருக்கு. அதனால டிப் ஆஃப் தி ஐஸ் பர்க் மாதிரி மரணம் அவனை கவருது.

அதனாலதேன் ஆண்களை பொருத்தவரை லைஃப்ல ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. ஆனால் பெண்ணுக்கு அந்த பாக்கியமில்லை.

அதனால அவளுக்கு மரணத்தை மரணமா சந்திக்கிறதே பிடிச்சிருக்கு. ம்ரணத்தோட நிழல்களுக்கு அவள் பெருசா அதிர்ந்து போறதில்லை. இருட்டு /ஏழ்மை/தனிமை/ நிராகரிப்பு

அதனாலதேன் பெண்கள் பார்ஷியலா சாகனும்னு வேகமா ட்ரைவ் பண்றதில்லை /ஆயுதத்தை தூக்கிட்டு அலையறதில்லை - இன்னும் என்னென்னமோ இல்லை.

பெண் செக்ஸுக்கு இன்னொரு மாற்றான படைப்பின் உச்சத்துல இருக்கிறதால அவள் மரணத்தின் நிழல்கள்ள / தவணை மரணங்கள்ள திருப்தி அடையறதில்லை. அவளோட அடிமனசு மரணத்தையே எதிர்பார்க்குது.

புருசன் காரன் லேசா ரெண்டு தட்டு தட்டினா உடனே "கொல்லு ..கொன்னுருன்னு ஹிஸ்டீரிக்கா அலற இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.


மரணத்தின் நிழல்கள் அவளுக்கு திருப்தியையோ பயத்தையோ தர்ரதில்லை. ஆனால் மரணமே அவளை நெருங்கும்போது அதுவும் ஒரு மாற்றம்ங்கற முதிர்ச்சியோட ஏத்துக்க தயாராயிர்ரா. எத்தனையோ பெண்கள் தங்களுக்கு வந்த உயிர்கொல்லியான வியாதிகளை கூட ஜஸ்ட் லைக் தட் ஏத்துக்கிட்டு புருசனுக்கு கூட சொல்லிக்காம செத்துப்போயிர்ராய்ங்க.

மேலுக்கு பார்க்கும் போது ஆண்கள் மரணத்துக்காக ஆலா பறக்கிறதா தோனும்.

பெண்கள் மரணத்தை கனவிலும் நினைக்காதவர்கள் போல தோனும்.

மேட்டர் இன்னாடான்னா ஆண் செக்ஸில் தன் மரண தாகத்தை தீர்த்துக்கறான். அவனுக்கு உள்ள மரண தாகம் குளிர்காலத்து தாகம்.

பெண்ணுக்கு செக்ஸ்ல மரண தாகம் தீரும் வாய்ப்பு மறுக்கப்படுது அவளுக்கு உள்ள மரண தாகம் நெஜமாலுமே கோடை காலத்து மரண தாகம்..

Sunday, July 17, 2011

ஆண் பெண் வித்யாசம்; 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)


ஜாதகத்துல எட்டாம் பாவம் அடிமைத்தனததை காட்டுது. அந்த அடிமைத்தனத்தால பல நன்மைகள் கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆணும் ஏதோ ஒருவகையில அடிமையாத்தான் இருக்கான். ஆனால் அவனோட அடிமைத்தனத்துக்கு பிரதிபலன் கிடைக்குது. பெண்ணோட அடிமைத்தனத்துக்கு கிடைக்கும் பிரதி பலன் என்ன? இந்த உலக உருண்டையத்தனை பெரிய பூஜ்ஜியம். அதனால பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் சுபபலமா இருந்தா கண்ணாலமாகுது அவள் அடிமையாகிறாள். அடிமையானதுக்கு . அவளுக்கு ஒரு மசுரும் கிடைக்கறதில்லை. இதனாலதேன் தாய்குலத்துக்கு ஆயுள் சாஸ்தி. (கம்பேரிட்டிவ்லி)

அவள் அடிமையா இருக்கிறதால எட்டாமிடம் கெட்டால் ஏற்படக்கூடிய பல தீயபலன் அவாய்ட் ஆயிருது. சுதந்திரம்னு இறங்கினாத்தேன் எட்டாம் பாவத்தோட இதர காரகத்வமெல்லாம் ஆப்பு வைக்குது . உ.ம் சீட்டுப்போட்டா /ஐ.பி போட வேண்டி வருது / தலைமறைவாகவேண்டி வருது/காவல் நிலையம் -கோர்ட்டுனு அல்லாட வேண்டி வருது. சுதந்திரம்னு ட்ராஃபிக்ல டூ வீலர்ல பறந்தா உயிர் ஆக்சிடென்ட் நடக்குது. சுதந்திரம்னு ஆளை மாத்தினா அரிவாள் வெட்டு கிடைக்குது. தன்னைத்தான் கேள்வி கேட்டுக்கிட்டா தற்கொலை பண்ண வேண்டி வருது . புருசனை கேள்வி கேட்டா அவன் கொலை பண்ணிர்ரான். இன்னும் கட்டற்ற சுதந்திரம்னு காண்டொம் யூஸ் பண்ணாம திரிஞ்சா இன உறுப்புல நெருப்பு வச்ச கணக்கா எரியற வியாதியெல்லாம் வந்துருது.

இப்ப ஒடனே என் நெம்பரை டயல் பண்ணி "என்னண்ணே சொல்ல வர்ரிங்க? பெண் அடிமையாவே இருந்துட்டா சேஃப். சுதந்திரம்னு கேட்டா ஆஃப்ங்கறிங்களா? "னு கேட்க போறிங்க. அப்டித்தானே?

கூல்! கூல் ! ஹ்யூமன் லைஃப்ல - வாழ்க்கை சக்கரத்துல - இயற்கையோட சட்ட திட்டங்கள்ள ஒரு வினோத விதி இருக்கு. அதுக்கு ரிவர்ஸ் எஃபெக்டுனு பேரு. (ஓஷோ இதுக்கு சிம்பிளா சின்னவயசுல சிறுவர்கள் சிறுவர்களையும் /சிறுமிகள் சிறுமிகளையும் மட்டுமே விரும்பறதை உதாரணமா சொல்வாரு)

பெண் மட்டுமல்ல எந்த உயிரும் விரும்புவது சுதந்திரத்தை தேன். ஏன்னா அதனோட உண்மையான இறுதியான வடிவம் ஆன்மா. அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆத்தாளை " சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா"ன்னு போற்றிப்பாடறாய்ங்க.

நாமெல்லாம் அவளோட பிள்ளைகள். தாயை போல பிள்ளைங்கறதை அனானி கமெண்ட் போடறதுல தான் ப்ரூவ் பண்றோம் அது வேற விஷயம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ( அனாவசியமா இதுல கலைஞர் -கனிமொழியை போட்டு குழப்பிக்காதிங்க) ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரின்னா நாமளும் சர்வ சுதந்திரர்களாதானே இருக்கனும். ஏன் இப்படி அடிமைப்பட்டு போனோம்.

பாய்ண்ட் நெம்பர் ஒன் இந்த பாடி. பேபி லைட் மேல கவுத்து போட்ட கோழிக்கூடை மாதிரி கிடக்கு. அடுத்து நம்மளோட பிரமைகள். .

எட்டாமிடம் மரணத்தை காட்டுமிடம். மரணம் விசித்திரமானது . ஒரு வகையில நம்மை கவரவும் செய்யுது.
அதனாலதேன் லவ் பண்றோம். ( லவ்வரோட மாமன் மிலிட்டரி பார்ட்டியா இருந்து பொட்டுன்னு சுட்டுருவானே) இன்னொரு வகையில டர்ராக்கவும் செய்யுது..தூக்குப்போட்டு தற்கொலை செய்துகிட்டவுக கழுத்துல ஒன்னுக்கு மேல தூக்குக் கயிறோட அடையாளம் இருக்கும். ஏன்னா கடைசி நொடியில வாழனுங்கற எண்ணம் வந்திருக்கும். இவன் அதை விலக்க ட்ரை பண்ணியிருப்பான்.

நம்ம டோட்டல் லைஃபையும் மரணம்தேன் வழி நடத்துது. ஒன்னு மரணம் குறித்த அச்சம். இன்னொன்னு மரணத்தின் மீதான கவர்ச்சி. எப்படி பார்த்தாலும் மரணம்தான் " எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"ன்னு ஒவ்வொருத்தர் லைஃப்லயும் சோலோவா பாடுது.

கொய்யால மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம் . உனக்கு இந்த உலகத்தை முழுசா தெரியாது. உலகத்துக்கு ? உன்னை தெரியவே தெரியாது. சாவை சிந்திக்கிறது வேற ..சந்திக்க துணியறது வேற சந்திக்கிறது வேற.

சந்திக்க துடிக்கிறது - கச்சாமுச்சான்னு டர்ராகி ஒதகாத மேட்டரையெல்லாம் - இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு - மரணத்தோட முடிச்சு போட்டு அதோட எல்லாம் போராடி என்னைக்கோ வர்ர சாவை இன்னைக்கே வெத்தலைபாக்கு வச்சு கூப்பிடறது வேற.

இந்த மாரி மரணத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துட்டு தெனாலி கமல் மாதிரி பயம் பயம் பயம் அதுலயும் மரண பயம். மரணத்துக்கும் நம்ம பயத்துக்கும் என்ன சம்பந்தம்னே தெரியாத பயம்.

பயம் பலவீனத்தை தருது .பலவீனம் பிரமைகளை அதிகரிக்குது. சத்தியத்தை மறைக்குது. மன்சன் ஜஸ்ட் மரணத்துக்கு மட்டும் பயந்தா கூட இந்த அளவுக்கு நாறியிருக்க மாட்டான். அல்லாரும் ஆடு,மாடு மாதிரி இலை தழைய தின்னுக்கிட்டு ராம் தேவ்பாபா மாதிரி யோகா பண்ணிக்கிட்டு லுல்லாவை ச்சூ ச்சூ போறதுக்கு மட்டும் உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்திருப்போம்.

இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு -தூரம் -பள்ளம் -திறந்தவெளி - இப்படி ஒன்னுதானில்லை சகலத்துக்கும் மரணத்தோட ஒரு முடிச்சை போட்டு பயந்து சாகிறோம். இந்த மரணத்தோட நிழல்களோட மோதி மோதி சாகிறோம் ( முன் கூட்டி)

குழந்தைக்கு குண்டலி ஆக்னால இருக்குமாம். அது ஆணையிடற பொசிஷன்ல இருக்கும். அது ஆருக்கும் அடிமையில்லை. அது அழ ஆரம்பிச்ச பிறவு தாவுத் இப்ரஹீமே ஃபோன் லைன்ல வந்து "மூச்" னுட்டு ஹை டெசிபல்ஸ்ல கத்தினாலும் அதும்பாட்டுக்கு கத்திக்கினே தான் கடக்கும்.

( பேச/பாட முடிஞ்சா - நான் ஆணையிட்டால்னு ஆரம்பிச்சு டி.எம்.எஸ் மாதிரி சோலோ கூட பாடும். ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் சுதந்திரத்தை இழந்துருது. விட்ட குறை தொட்ட குறையா எதுனா வெளிப்புற தூண்டுதல் ஏற்பட்டாலன்றி தின்னு -கழிஞ்சு - மிஞ்சிப்போனா கெட்டகாரியம் பண்ணியே அழிஞ்சு போயிருது.


இப்படி சுதந்திரம்ங்கறது ஆண்குழந்தைக்கு மட்டுமில்லை -பெண்ணுக்கும் பை பர்த் தரப்படுது. அம்மா ஊட்ல அம்மாக்காரி எதுனா நச் அடிச்சா அப்பங்காரன் " அடச்சீ.. அது போற இடத்துல எப்படி இருக்குமோ என்னமோ .. இங்கன கூட ச்சொம்மா கடுப்படிச்சுக்கிட்டு"ன்னு சப்போர்ட் பண்ணுவான்.

அப்பன் காரன் எதுக்குனா சீறிப்பாய்ஞ்சா அம்மாக்காரி " யோவ்.. கைய அடக்கு அது வளர்ந்து அடுத்த வீட்ல வாழப்போற பொண்ணு"ன்னுட்டு ப்ரேக் போடுவாள்.

ஆனால் மனித மனம் விசித்திரமானது அது நிகழ்காலத்தை மதிக்கிறதே இல்லை. எதிர்காலத்தை தேன் கனவு காணுது .அல்லது கடந்த கால நினைவுகள்ள மூழ்கிப்போகுது.

பெண் இயற்கை அவளுக்குள் விதைத்திருக்கும் பொறுப்பின் உந்துதலாலோ பருவம் தரும் துடிப்பாலோ முகம் தெரியாத ஒருத்தனை கனவு காண ஆரம்பிக்கிறாள்.

கனவுக்கு பட்ஜெட் பிரச்சினைல்லாம் கிடையாதே. அந்த கனவு தரும் மதர்மதர்ப்பில் தாய் வீட்டை வெறுக்க ஆரம்பிச்சுர்ரா. எப்பதான் இங்கனருந்து ஒழிவேனோன்னு முனுமுனுக்க ஆரம்பிச்சுர்ரா.

எதையுமே இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமை தெரியுது. அருமை தெரிஞ்சு அதை பொத்தி வச்சுக்கலாம்னு பார்க்கிற நேரத்துல அது திரும்பி வர்ரதே இல்லை.

அப்படித்தேன் பெண் தாய் வீட்டை இழந்துர்ரா. சரி ஒழிஞ்சு போவட்டும் புகுந்த வீட்லயாவது இது நான் கனவு கண்ட சொர்கம்னு அஜீஸ் ஆயிர்ராளான்னா இல்லை. அக்கரைக்கு இக்கரை பச்சை மாதிரி இப்பம் தாய் வீட்டு சுக போகங்களை (?) எண்ணி ஏங்கறா.

இந்த சிச்சுவேஷனுக்கு நான் ஒரு ஜோக் எழுதினேன்.

மனைவி: எங்க வீடு கோவில் மாதிரிங்க
கணவன்: அப்ப தெருத்திண்ணையில கிடக்கிற உங்கப்பன் பிச்சைக்காரனா?

ஆன்மா கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆனால் நாம ஆன்ம வடிவுல இருந்தப்ப உடல் என்ற சிறையை வேண்டி தவம் இருக்கோம். கொய்யால உடலோட இருக்கும்போது ஆஸ்ட்ரோ ட்ராவல் - காத்துல பறக்கறதுனு ஜல்லியடிக்கிறோம். இதெல்லாம் தேவையா?

இந்த எட்டாம் பாவத்துக்கும் அது தர்ர அடிமைத்தனத்துக்கும் ஒரு வேட்டு வைக்க வழியே இல்லையா? முக்கியமா தாய்க்குலம் - சனத்தொகையில சரி பாதி - அடிமைகளா இருந்தா - எப்படா எஜமானனுக்கு பெரலிசிஸ் ஸ்ட்ரோக் வரும் -எப்படா இவன் ஐ.பி போடுவான்னு புரட்சி பண்ண காத்துக்கிட்டிருந்தா -அந்த குடும்பம் என்ன ஆறது ? அந்த குடும்பத்து பிள்ளைகள் நாளைக்கு ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் ஆனா எப்டி? எல்லாத்தையும் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Saturday, July 16, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம்


இந்த தலைப்புல 1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை இன உறுப்பை காட்டற இடம்.

"தலை ! வசம்மா மாட்டிக்கிட்டிங்களா ..இதெல்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுதானே. இதுல எல்லாம் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் கிடக்கு".ன்னுட்டு ஆருப்பா அது குரல் கொடுக்கறது.

மொத பாரால முக்கியமான மேட்டர் விட்டுப்போச்சு எது இன்னாடன்னா ''அடிமைப்படுதல்".இன்னைக்கு தாய்க்குலம் கலெக்டரா இருந்தாலும் எஸ்பியா இருந்தாலும் - தாளி மத்திய மந்திரி அக்கா மகளாவே இருந்தாலும் அடிமையாதான் வாழ்ந்துக்கிட்டிருக்கா. எதிர்த்து கேள்வி கேட்கப்படும்போது கொல்லப்படறா.
( அல்லது புதுசா பிறக்கிறா)

வாத்யாரு . "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு"ன்னு பாடி வச்சாலும் அடிமையா கிடக்கிறதுல நிறைய லாபம் இருக்குங்ணா.

ரோச்சிக்க தேவையில்லை - முடிவெடுக்க வேண்டியதில்லை - தாளி மண்டை சூடாகாது - ராஜ கிரகங்களோட எஃபெக்ட் பெருசா இருக்காது. சாஸ்தி பேச வேண்டியிருக்காது -வாக்கு வாதமா? மூச் ! - தைரியம்? தேவையே இல்லை. மிஞ்சிப்போனா எஜமானருக்கு கில்மா தேவைப்படும்போது லூப்ரிக்கேட்டிங் பிரச்சினை இல்லாம இருந்தா பிரச்சினை ஓவர்.

அடிமையா வாழற பெண்ணுக்கு எந்தெந்த பாவம் தொடர்பான ப்ரஷர் குறையுதுன்னு பாருங்க.

அண்ணன் தம்பி ? ஊஹூம்.. என்னக்கா மாமா நல்லபடியா பார்த்துக்கறாரானு கேட்கறச்ச பார்வைய திருப்பி ( அவிக கண்ணை பார்த்து பொய் சொல்லமுடியாதே) அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லனு கழ்ட்டிவிட்டுரலாம்.


அம்மா பேன் பார்த்து , தலை பின்னி விஜாரிச்சாலும் இதே இழவுதேன். புத்திக்கு அவசியமே இருக்காது.

எதிரி? ஆருமில்லை. எதிர்க்கவேண்டியவனுக்குத்தேன் அடிமையா கிடக்காளே. அப்படியே சுத்துவட்டாரத்துல எவனா எதிரியா இருந்தா எஜமானருக்கு போட்டு கொடுத்துட்டா தீர்ந்தது கதை . சேமிப்பு? ஆஃபீஸ் போக பஸ் டிக்கெட்டுக்கு கொடுத்த காசுல மிச்சம் பிடிக்கனும்னா நடந்துதேன் போகனும்.அப்படியே சேமிச்சாலும் அதுக்கும் எஜமானன் புருசன் தானே.

தொழில்? ஆஃபீஸ்ல அதிகாரம் தூள் பறந்தாலும் வீட்ல மூச். அக்கா அண்ணன் மேட்டரும் லைஃப்ல பெருசா என்ட்ரி ஆவாது .

"ஏங்க அக்கா பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்.."

"போன மாசம் தானே பெரிய அக்கா பையன் கல்யாணத்துக்கு போய் வந்தே. இது வெறும் நிச்சயம்தானே.கல்யாணத்துக்கு போலாம் விடு "

"சரிங்க"

(இதுவரை சொல்லிட்டு வந்த சீக்வென்ஸஸ் எல்லாம் துவாதச பாவ வரிசையில அமைஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சவுக பாக்கியசாலிகள் அவிகளுக்கு காத்திருக்கு ஜோதிட கலைமாமணி பட்டம்.

கட்ட கடைசியா வர்ரது விரய பாவம். இது தூக்கம் ,செக்ஸ், காசு பணத்தை செலவழிக்கிற முறையை காட்டும் இடம்.

காட்சி: 1

"ஏய்.."
"ம் ம்ம் "
"ஏய் உன்னைத்தான்"
"ம்ம்.. டயர்டா இருக்குங்க"
"ஏன் பகல்ல எவனா வந்து டூட்டி பார்க்கிறானா?"

காட்சி: 2

"ஏங்க.."

" ..........."

"ஏங்க தூங்கிட்டிங்களா?"

"கொர் கொர் கொர்"

இதுக்கு மேலயும் காட்சிகள் இருக்கு. அதையெல்லாம் போட்டு தொலைச்சா வம்பாயிரும். ( ஏங்க அதுக்குள்ள ஆயிருச்சானு ஆருப்பா கேட்கிறது -இது அவிக டயலாக்)

இது மெஜாரிட்டி தாய்குலத்தோட செக்ஸ் லைஃப்.. தூக்கம் காலி.செக்ஸ் காலி. காசு பணம்? அதான் முன்னாடியே சொல்ட்டனே பஸ்ஸுக்கு சில்லறை வாங்கிட்டு போற இழவை .

ஒரு பெண்ணுக்கு கண்ணாலமாயி தொலைச்சாலே ( எட்டாம் பாவம் ஆக்டிவேட் ஆகி - இதான் மாங்கல்ய ஸ்தானங்கோ) அவளோட ஜாதகத்துல உள்ள 11 பாவங்களும் சுத்தமா ஃப்யூஸ் போயிருது. ஒரு மண்ணு பலனையும் அவள் அனுபவிக்கிறதில்லை இந்த பாவங்கள்ள . எத்தீனி தோஷமிருந்தாலும் அதெல்லாம் ஃபணால் தேன்.

காரணம் அடிமைத்தனம். அடிமையா இருக்கிற பெண் விஷயத்துல ராஜ கிரகங்கள் -லக்னாதிபதி - சனி - ஏன் நவகிரகங்கள் - துவாதசபாவங்களும் வேலை செய்யறதில்லை. இதான் எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையில் உள்ள வித்யாசம் .

ஒரே ஒரு அடிமைத்தனமே இவ்ளோ பெரிய வித்யாசத்தை ஏற்படுத்திருது.


கடடம் கட்டமா உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம் ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

பிரம்மச்சாரிகளை விட குடும்பிகள் தான் சாஸ்தி நாள் வாழறாய்ங்க. செக்ஸ் நீண்ட ஆயுளையும் -ஆரோக்கியத்தையும் தர்ரதா லேட்டஸ்ட் ஆய்வுகள் உறுதியா சொல்லுது.

இன உறுப்புக்கும் -ஆயுளுக்கும் உள்ள தொடர்பு என்னன்னா நீண்ட ஆயுள் உள்ளவன் "அளவோடு ரசிப்பவனா " இருப்பான். அவனோட கில்மா ப்ராஜெக்டும் நீண்டதா இருக்கும்.

அற்பாயுள் கொண்டவன்" மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா"ன்னு அலைவான்.அல்பாயுசுல போயிருவான்.

ஒரே வேலையை தொடர்ந்து செய்தா முட்டாளுக்கும் அதுல பர்ஃபெக்சன் வந்துரும். ச்சொம்மா ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு இருந்தா கிழிஞ்சுரும்.

எட்டுங்கறது கடுமையான உடல் உழைப்பை காட்டும் இடம். பலான மேட்டர்ல பல நூறு கலோரி செலவழியற அளவுக்கு உழைப்பு இருக்குன்னு செக்ஸாலஜிஸ்டுங்க சொல்றாய்ங்க.

இந்த மேட்டர்ல கூட உழைக்காத சோம்பேறி வாழ்க்கையில எங்கே உழைக்கப்போறான். உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் பலவீனமாயிரும். அதேபோல ஹ்யூமன் பாடியும் பீடியாயிரும். செத்துப்போயிருவான்.

இந்த மேட்டர்ல இன உறுப்புக்கு முக்கிய ரோல் இருக்கு. காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான்.

இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும்.

இது ஆணுக்கு இயல்பாவே நிகழ்ந்துருது. சமுதாயமும் அதை அங்கீகரிக்குது. கல்யாணமானா எல்லாம் சரியா போயிரும்னு சால்ஜாப்பு வேற . அதனால மனிதர்களுக்குள் இருப்பதாக சொல்லப்படும் கொலை -தற்கொலை இச்சை ஆண்களுக்குள்ளே பெருசா - நிரந்தரமா தங்கறதில்லை. ( செக்ஸ் - வன்முறை -பணம்லாம் ஸ்தூலமாதான் வேற மனிதனோட உணர்வுகளை பொருத்தவரை ஒன்னுதேன்)

ஆனா ஒரு பெண் விஷயத்துல மட்டும் டாட்டா விண்வெளி ஆராய்ச்சி மையம் கணக்கா ஒரு பைனாகுலரை வச்சு பார்க்குது சமுதாயம்.

மனிதபிறவியா அவளுக்குள்ளயும் கொல்லும் இச்சை இருக்கு ஆனால் சமூக சூழல் அதை அனுமதிக்கிறதில்லை.ஆல்ட்டர்னேட்டிவா தற்கொலைய ச்சூஸ் பண்ணிக்கிறா. அதான் குடும்ப வாழ்க்கை. ஐ மீன் அடிமை வாழ்க்கை.

ஆண் மனதில் உள்ள கொல்லும் இச்சை நிறைவேறினா அதனோட எக்கோவா இவன் எதிரி மைண்ட்லயும் கொல்லும் இச்சை கிளம்புது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இவனை அவன் போட்டுத்தள்ளிர்ரான்.( இதனால ஆண்களுக்கு லைஃப் ரிஸ்க் அதிகம்)

ஆனால் பெண் மனதில் உள்ள கொல்லும் இச்சை கொல்லப்படும் இச்சையா கன்வெர்ட் ஆகி நிறைவேறுது. இதுக்கு எக்கோ ஏதும் கிடையாது. ரிஸ்க் குறைவு. ( இதனால லாஞ்சிவிட்டி அதிகம்)

ஒரு த்ரில்லிங் ட்ரூத் என்னன்னா கணவனோட பொசிஷன் வீக் ஆகும்போது கொல்லப்படும் இச்சையா
கன்வெர்ட் ஆன கொல்லும் இச்சை தன் சுயரூபத்துல வெளிப்பட்டுருது. அது வேற விஷயம்.

ஆணாகட்டும் பெண் ஆகட்டும் சிலருக்கு பை பர்த் இன உறுப்புகள் குறித்த புரிதல் விழிப்புணர்வுல்லாம் செல்ஃப் கண்ட்ரோல் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது. ராசா,கனி,தயா கைகள் மாதிரி கண்ட இடத்துல நீண்டு தர்ம அடி வாங்கிதந்துருது.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.

செக்ஸ்ல ஈடுபட்ட ஆணுக்கு எண்டார்ஃபின் என்ற இரசாயனம் சுரந்து அடிச்சு போட்டாப்ல ஒரு சூப்பர் தூக்கம் வருதாம். இதனால மறு நாள் வண்டி ஜோரா ஓடும்.

இந்த எண்டார்ஃபின் உச்சம் பெற்ற பின்னாடி தான் சுரக்கும் போல. இல்லின்னா நிறைய வீட்டம்மாவுக காலங்கார்த்தலயே ஏன் பயங்கரமா கடுப்படிக்கிறாய்ங்க. இதை நானே நிறைய கேஸ்ல பார்த்திருக்கேன்.

ஏன்னா அவிகளுக்கு உச்சம்லாம் நை நை. உழைப்புன்னு பார்த்தா கில்மா மேட்டர்ல ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். காம்ப்ளெக்ஸ் இல்லாத புருசன் அமைஞ்சு - அவன் பெண் மேல் முறைய ஊக்குவித்தா இது சாத்தியமாகலாம்.

இதுவரை சொன்ன விஷயங்களோட சுருக்கம்:

எட்டாமிடம் அடிமைத்தனம் , இன உறுப்பு, ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயில் ,ஐபி போடறது இத்யாதியை காட்டற இடம்.

இதுல பெண் விஷயத்துல இந்த எட்டாமிடம் ரெண்டு விதமான ஆப்ஷனை கொடுக்குது .ஒன்னு அடிமையா வாழனும் அ செத்துப்போகனும். அடிமையா வாழறதுக்கும் - செத்துப்போறதுக்கு பெரிய வித்யாசமில்லை. அடிமை இறந்தவனோட சமம். பிணம் மறுபடி இறக்குமா?

அடிமைத்தனத்தை கேள்வி கேட்காம ஏத்துக்கிட்டு வாழ்ந்தா ஆயுள் கூடும். தனக்குள்ளயே கேள்விகள் கேட்டுக்கிட்டிருந்தா அது மனம் உடல் ரெண்டையும் பாதிக்கும் ஆயுள் குறையும்.மன நலம் பாதிக்கும்.

பெண்ணிலான கொலை விருப்பம் தற்கொலை விருப்பமா மாறுது. தற்கொலை விருப்பம் நிறைவேறும்போது எதிராளியின் கொல்லும் விருப்பமும் நிறைவேறுவதால் அங்கே ரிஸ்க் குறைவு.
இதனாலயும் ஆயுள் கூடுது.

ஆனால் ஒன்னு கேள்வியே கேட்காம புருசங்காரனோட கொலை விருப்பத்தை நிறைவேத்திக்கிட்டிருந்தா "பெருசா அடிச்சிட்டதா பீத்திக்காத .. நீ அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை . நல்ல டாக்டரா பாரு"னு வடிவேலு சொல்ற மாதிரி புருசன் ஃபீல் ஆயிட்டா நாஸ்தி.

கொஞ்சமா வலிச்சாலும் நிறையவே வலிச்ச மாதிரி ஃபிலிம் காட்டினா இந்த மெத்தட்ல லாபம் சாஸ்தி. இல்லின்னா உனக்கு எப்படி அடிச்சா வலிக்கும்னு கண்டுபிடிக்கிறேண்டின்னுட்டு அவன் சாடிஸ்டாவே மாறிருவான்.

பெண் கடுமையான உழைப்பை குடும்பத்துக்கு தர்ரதாலயும் அவளோட ஆயுள் கூடுது. அடிமைத்தனம் நிறைய தோஷங்களுக்கு பரிகாரமாயிருது. ஒரு கட்டத்துல புருசன் பொசிஷன் வீக்கானா கொலை விருப்பமாவும் மாறுது. இந்த ஸ்டேஜுல திடீர்னு சொந்தமா ரோசிக்க ஆரம்பிக்கிறதால பழக்கமில்லாத பழக்கம்ங்கறதால இவள் அவனை கொல்லப்போடற் திட்டம் உட்கார்ந்திருக்கிற கிளைய வெட்டின கதையா போயிருது.

இவள் வாழ்க்கையே சிறையா இருக்கிறதால சிறை செல்லும் வாய்ப்பு குறையுது. பல பெண்கள் விசயத்துல திருமணமே ஒரு கொடுமையான விபத்துங்கறதால விபத்துகள் நடக்க இருக்கும் வாய்ப்பும் குறையுது.

ஐபிங்கறிங்களா? (இன்சால்வென்ட் பெட்டிஷன்) திருமணங்கற கம்பெனியே ஃபேக். இதுல அந்த கம்பெனியோட எம்.டி பிக்காலியா இருந்தா சொல்லவே தேவையில்லை. அதுல போட்ட முதல் எல்லாம்
வீண் தான். அதனால திருமணமான ஒவ்வொரு பெண்ணும் ஐ.பி கேஸ் தான்.

அதனாலதான் இந்தியாவுல சராசரியா ஆண்களை விட பெண்கள் நீண்ட நெடுங்காலம் வாழறாய்ங்க
( கண்டிஷன்: அடிமைத்தனத்தை கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டா கதி மோட்சம்தேன் )

மரணங்கறது இன உறுப்பு வழியா வரும்ங்கறது பெண்கள் விஷயத்துலயும் கரீட்டுதேன். ( ஆண்கள் விஷயத்துல இது நோய்களாவும் - பெண்ணோட மாமன்/ப்ருசன் இத்யாதி போட்டு தள்ளிர்ரதாவும் அமையுது.

பெண்கள் விஷயத்துல ஃபெல்விக் போன்ல வர்ர கேன்சர்,கருப்பையில வர்ர கேன்சருக்கெல்லாம் இன உறுப்பு தேன் வாசல்.

பெண்களுக்கு இன்னொரு வரபிரசாதம் பிரசவம். அதும் அவள் ஏழையாவும் இருந்தா நெஜமாலுமே செத்துப்பிழைக்கிறாள்.இதனாலயும் கண்டம் கிண்டம் இருந்தாலும் கழிஞ்சு போயிருது.

மேலோட்டமா பார்த்தா "த பார்ரா அடிமைத்தனத்துல இத்தீனி லாபமிருக்கா. விட்டா 120 வருசம் பூர்ணாயுசா வாழ்ந்துரலாம் போலிருக்கேன்னு தோனும்.

ஆனா அடிமைத்தனத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கு இது அந்த பெண்ணை மட்டுமில்லை -அவிக புருசன் மாரை (ஆமா புருசனுக்கு ஏது மாரு) குடும்பத்தை - பிள்ளை குட்டிகளை - அந்த சாதியை -மதத்தை - நாட்டை ஏன் உலகத்தையே அழிச்சுரும் . அது . எப்படிங்கறதை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.


(வித்யாசங்கள் அடுத்த பதிவுலயும் தொடரும்)

Thursday, July 14, 2011

ஆண் பெண் வித்யாசம்: 7 ஆம் பாவம் தொகுப்புரை






"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
இதில் ஒன்று மட்டும் இல்லை என்றால் எந்த வண்டி ஓடும்"

இங்கன சக்கரம்னா ஆண்,பெண் .ஐ மீன் புருசன் பொஞ்சாதி .ரெண்டு சக்கரத்தையும் ஒரு செயின் லிங்க் பண்ணனும். ஐ மீன் அன்பு .ஒரு சக்கரத்துல கூட சைக்கிள் ஓட்டலாம். ஆனால் அது சர்க்கஸ் ஆயிரும்.

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இது அந்த ஜாதகருக்கு மட்டுமில்லிங்ணா அந்த வைஃபோட சிஸ்டர்ஸ் , அந்த ஹஸ்பண்டோட ப்ரதர்ஸ்க்கு கூட பாதிப்பை தரக்கூடிய பாவம்.

அக்கா மாமன் கிட்டே லோல் படறானு தெரிஞ்சா தங்கச்சி காரி "தாளி நாளைக்கு புருசன்னு.ஒருத்தன் வந்தா அவனை நம்ம கட்டுப்பாட்ல வச்சுக்கனுங்கற முடிவுக்கு வந்துர்ரா - அண்ணிக்கிட்ட மாட்டி அவஸ்தை படற அண்ணனை பார்த்த தம்பி "கொய்யா கல்யாணமும் மானா ஒரு மசுரும் வேணா"னு ரோசிக்க ஆரம்பிச்சிர்ரான்.

சதா சர்வகாலம் வெட்டி மடியற ஆத்தா அப்பனுக்கு பொறக்கறதுங்களும் இதே மாதிரி தயாராயிருதுங்க. அக்கம்பக்கத்து குழந்தைகளோட சைக்காலஜி கூட பாதிக்கப்படுது.

பை மிஸ்டேக் இந்த தம்பதியில ஆரோ ஒருத்தரோ ரெண்டு பேருமோ டீச்சரா போனா அவிக கிட்ட படிக்கப்போற மாணவ/மாணவிகளோட சைக்காலஜியும் பாதிக்கப்படுது.. அதனாலதேன் 7 ஆம் பாவத்தை இம்மாந்தூரம் இஸ்துக்கினு வன்டன்.

பை தி பை இன்னைக்கு ரெண்டு தனி சிறப்பு பதிவுகளும் போட்டிருக்கேன்

1. நம் பதிவை நக்கலடிக்கும் கல்கி வார இதழ்


2. திருவிளையாடலில் பெண்ணடிமை கருத்துக்கள்



ஓவர் டு தொகுப்புரை ...............

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இயற்கையோ /ஆபாசமா சொன்னா கடவுளோ எந்த வித்யாசத்தையும் படைக்கலை.

வித்யாசம்லாம் சமூக அமைப்பை பொருத்துதான் வருது. மாதா -பிதா செய்தது மக்களுக்கு - ஜனனீ சவுக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா

ருணானுபந்த ரூபேணா பசு பத்னீ சுதாலயா - தன்வினை தன்னை சுடும் - வீட்டப்பம் ஓட்டை சுடும் - ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்.

எனவே தற்சமயம் அன் மேரீடா -லவ்ஸ் -கிவ்ஸுனு போகாதவுக மேரீட் பர்சன்ஸை - காதல் சோடிகளை நக்கலடிக்காதிங்க - கேவலமா நினைக்காதிங்க -கேவலமா பேசாதிங்க.

"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று"ங்கற கவிஞர் வாக்கை ஞா வச்சுக்கங்க. ஆண் பெண் வித்யாசம் ஜஸ்ட் இனப்பெருக்க வசதிக்குத்தேன். என்ன 24 மணி நேரமும் "ஷோ"போடமுடியுமா என்ன?

விதைப்பதற்கு ஒரு காலம் உண்டு -அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு. நான் விதைக்க வ்ரமாட்டேன்னா அறுக்கற வேலையும் இருக்காது.

அன்பை விதைக்கனும். அப்ப அன்பு அறுவடையாகும். அன்புன்னா ஊர்பணத்தை ஆட்டைய போட்டு சென்ட்ரல் ஏசி போட்டா கிடைக்கிற அன்பு இல்லை.

நாமெல்லாம் நீண்ட நெடும்பயணத்துல தொடர்ர பயணிகள். பயணத்தின் லட்சியம் முக்தி. முக்திக்கு வழி கருமங்களை - பூர்வ கடன்களை ஒழிக்கிறது தேன்.

அதுல முக்கியமான கடன் வாழ்க்கை துணையோட கடன். உலகத்துல எத்தனையோ குட்டிங்க மூக்கும்,முழியுமா,கொப்பும் குலையுமா இருக்க "இவள் தான்" வந்து வாய்க்கனுமானு ஃபீல் பண்ணாதிங்க.

பார்யா ரூபவதி சத்ரு - பொஞ்சாதி அதிகமா பிடுங்கினா நீங்க அறிவி ஜீவி - பெரிய வி.ஐ.பி ஆகப்போறிங்கனு நினைச்சு சந்தோசப்படுங்க. ( உ.ம் சாக்ரடிஸ் , நெல்சன் மண்டேலா).

நல்ல பொஞ்சாதி அமைஞ்சா அது கடன். அந்த கடனை தீர்க்க மறுபடி பிறவி எடுக்கனும். மேலும் முக்திங்கற லட்சியமே மைண்ட்லருந்து எகிறிரும். நம்ம ஆன்மா உடல்லருந்து பிரிஞ்ச பிறவு மத்திய பொதுக்கணக்கு குழு கணக்கா நல்ல பொஞ்சாதி முக்திக்கான முயற்சிகளுக்கு எப்ப்டியெல்லாம் தடையா இருந்தான்னு கணக்கு போட்டு "அடுத்த ஜன்மத்துல பப்ளிக்கா சாணி கரைச்சு தலையில ஊத்தற பொஞ்சாதிதான் வேணம்னு அடம் பிடிச்சு அதுக்கேத்த கிரக நிலைக்காக காத்திருக்கனும்.

நாறிப்போன பொஞ்சாதி கிடைச்சா

விளம்பர இடைவேளை

உலகப் புகழ்பெற்ற மைசூர் பல்கலை கழகத்தின் அஃபிலியேஷன் பெற்ற பிரபல உயர் கல்வி நிறுவனத்தின் அங்கமாக பணி புரிய விருப்பமா? உங்க ஊர்ல இருந்துக்கிட்டே வேலை செய்யலாம். வ்யது கல்வித்தகுதிகளை விட உங்கள் துடிப்பும் -செயல் திறனுமே கருத்தில் கொள்ளப்பட்டு கை நிறைய ஊதியம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
7 நாட்களில் காலை 7 முதல் 9 க்குள் தொடர்பு கொள்ளவும்
செல்: 090000 36777


பதிவுக்கு போயிரலாம்...

நாறிப்போன பொஞ்சாதி கிடைச்சா போன ஜென்மத்துல நல்ல பொஞ்சாதி அமைஞ்சிருந்தாள் . அவள் உங்க முக்திக்கு தடையா இருந்து ஒரு பிற்வியை வீணாக்கிட்டானு அர்த்தம். முக்தி பாதையில ஒரு மைல் முன்னேறியிருக்கிங்கனு அர்த்தம்.

தாய்குலத்துக்கும் இதையேதான் சொல்லனும். கடவுள் பீக் ஹவர் டீ மாஸ்டர் இல்லே. ஸ்ட்ராங் டீ கேட்டவனுக்கு லைட் டீயும் - லைட் டீ கேட்டவனுக்கு ஸ்ட்ராங் டீயும் கொடுத்துர்ரதுக்கு. இன்னைக்கு உங்களுக்கு அமைஞ்சிருக்கிற வாழ்க்கை துணை உங்க கொட்டேஷன் படி ஸ்பெஷலா டை அடிச்சு - கிரைண்டிங் பண்ணி கொடுத்ததுதேன்.

கொட்டேஷன் ஃபார்மை ஃபில் அப் பண்ணும்போது உங்க நோக்கம் முக்தி. இப்ப உங்க நோக்கம் பக்கத்து போர்ஷன் பரிமளா புருசன் மாதிரி உங்க புருசன் இருக்கனும்ங்கறது.

பவர் கட் 2 மணி நேரத்துக்குன்னா நீங்க வாய்ல வயித்துல அடிச்சுக்கிட்டு அழுது புரண்டாலும் அஞ்சு நிமிசம் முன்னாடி கூட கரண்ட் வராது. (இந்த மேட்டர்ல தாளி ரெம்ப பங்க்சுவல் நம்மாளுங்க)

நான் ஏற்கெனவே சொன்னபடி உங்க வாழ்க்கைதுணையோட குணத்துக்கு அவரோட ஜாதகம் மட்டும் காரணமிலலை. உங்க ஜாதகமும் காரணம். கடந்த பதிவுல எந்தவிதமான எஃபெக்ட் இருந்தா அது எந்த கிரகத்தால வந்த எஃபெக்ட் அதுக்கு என்ன பரிகாரம்னு கரீட்டா கொடுத்து கீறேன்.ஃபாலோ பண்ணிக்கங்க.

வலியை சந்தோசமா ஏத்துக்கங்கனு நான் சொல்லமாட்டேன். எனக்கு வலிக்குதுடா பன்னாடைனு முகத்துல செயல்ல காட்டுங்க. இல்லாட்டி ஏதோ சினிமால வடிவேலு " எனக்கு வலிக்கவே இல்லை"ங்கறாரே அந்த மாதிரி ஆயிரும்.

அவன் இன்னம் ரெண்டு பெக் சாஸ்தி போட்டுட்டு வருவான். நமக்கு எது நடந்தாலும் அதுக்கு 50 சதவீதம் நாமும் பொறுப்பு.

எல்லா பொம்பளையையும் எல்லா ஆம்பளையும் எரிச்சுர்ரதில்லையே. சில பொம்பளைகளை சில ஆம்பளை மட்டும் எரிச்சுர்ரான். அவன் எரிக்கிறான்னா இவ ஜாதகம் அவனை எரிடான்னு தூண்டியிருக்கும்.

ஓட்டப்பந்தயத்துலயாகட்டும் -ஃப்ளைட்டாகட்டும் டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். அது கரீட்டா அமைஞ்சுட்டா வெற்றி நமக்குத்தேன்.

நீங்க பெண் ங்கற மேட்டர் உங்க உரிமைகளை நசுக்க ஆண்களுக்கு இயற்கை கொடுத்த லைசென்ஸ் இல்லை. அதே போல கடமைகள்ளருந்து தப்பிச்சுக்க இயற்கை கொடுத்த எக்செப்ஷனுமில்லை.

நீங்க பெண் என்ற நினைவு கழிவறை -குளியலறை - படுக்கையறையில மட்டும் நினைவுக்கு வந்தா போதும். மத்தபடி நீங்களும் ஒரு உயிர். ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் உங்களுக்கு உண்டு -கட்மைகளும் நிச்சயம் உண்டு.

பொறுத்தார் பூமி ஆள்வார் -பொறுமை பெருமை தரும்னுல்லாம் நான் ஜல்லியடிக்கமாட்டேன். பக்கத்து வீட்டுக்காரன் தன் வீட்டை டெமாலிஷ் பண்றானு வைங்க. நம்ம வீட்டுக்குள்ள தூசு விழும்போதே ' ங்கோத்தா இன்னாடா சோமாறி வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்.ஒயுங்கா தட்டிகட்டிக்கினு வேலைய செய்"னு சொல்லிரனும்.

தூசுதானேனு இருந்தா தூண் விழும். ஜாதகத்துல 7 ஆம் பாவம் -அதன் அதிபதி -அவரோட சேர்ந்த கிரகங்கள் பார்க்கும் கிரகங்கள் இப்படி அனேக அம்சங்கள் அனேக ஆப்ஷன்ஸை தருது. அதுல உங்க டேஸ்டுக்கு /பொசிஷனுக்கு எது பெட்டரோ அந்த கிரகத்தோட ரூட்ல போங்க.

இல்லறமல்லது நல்லறமன்று - அட இன்னைய தேதிக்கு நல்லா ஸ்டடி பண்ணி - மேட்டரை புரிஞ்சிக்கிட்டு 30 வயசுல கண்ணாலமாகி - ஒரு 15 வருசம் போல ஒயுங்கா வாழ்ந்துட்டா போதும் தலை . அப்பாறம் அதுவே பழக்கமாயிரும் . அதை விட்டுட்டு மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்த மாதிரி விழுந்து நாறிராதிங்க.

மஹிளா ஸ்டேஷன் -ஃபேமிலி கோர்ட்டுல்லாம் யதார்த்தத்துல நரகம். பொஞ்சாதிய பார்ட் டைமா ரூட்ல அனுப்பற பிக்காலி கூட அட்வைஸ் பண்ண வந்துருவான். புருசனை காவலுக்கு வச்சுட்டு தொழில் பண்ற பதிவிரதை கூட பழமொழில்லாம் சொல்லி கடுப்பேத்துவா..

தேவை ஒரு புரிதல் மட்டுமே.. ஓகேவா ..