Monday, January 30, 2012

கில்மா கனவுகள் : 1


யார் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் அதன் இறுதி இலக்கை நோக்கியே அமைகிறதோ அந்த வாழ்வு சரித்திரமாவது சத்தியம்.

என்ன பாஸ் .. கில்மா கனவுகள்னுட்டு படு மொக்கையா ஆரம்பிக்கிறிங்கன்னு நொந்துக்காதிங்க. நாயோட படுத்தா உண்ணியோட தான் எந்திரிக்கனும்.மேலும் நாம கில்மா கனவுகள்னு ஆரம்பிச்சதுமே "கொய்யால . இந்தாளு ஒருத்தன் போதும்யா வலையுலகத்தையும் -சோசியத்தையும் நாறடிக்க"ன்னுட்டு நாலு பெரிய மன்சன் முணுமுணுக்க ஆரம்பிச்சிருப்பாய்ங்க. அவிகளையும் கன்வின்ஸ் பண்ணியாகனுமே.

ஒரு எம்.பி.பி.எஸ் மாணவி பார்ட் டைமா கொள்ளையடிச்சிருக்கா. மனித உரிமைகள் பேர்ல நடக்கிற தொண்டு நிறுவனக்காரவுக வங்கியையே கொள்ளையடிக்க பார்த்திருக்காய்ங்க. இவிக இறுதி இலக்கு கம்பி எண்ணறது போலும்.

ஆனால் நம்ம இறுதி இலக்கு முக்தி. சதா சர்வ காலம் இந்த ஜேஜிங்களை கட்டி மாரடிச்சிட்டிருந்தா போரடிக்குது. அதே நேரம் லோகாயதமா கொஞ்சம் போல பொளப்பை பார்ப்போம்னு நினைச்சா முனியடிச்சாப்ல ஆயிருது.

இதுக்கு ஒரு தீர்வா எனக்கு கிடைச்சதுதேன் ஆப்பரேஷன் இந்தியா 2000. நேரிடை ஜன நாயகம் வரட்டும் ஜனாதிபதியா கன்டெஸ்ட் பண்ணி .. கிளிச்சுர்ரலாம்னு ஒரு சுய நல இலக்கை காளை மாட்டுக்கு பச்சை புல்லு காட்டின கதையா காட்டி இன்ன பிற லோகாயத இம்சைகள்ளருந்தெல்லாம் தப்பி பிழைச்சுட்டு இருக்கம்.

ஒரு வகையில என் தாய் நாட்டுக்கான என் செய்தி இதுதான். இதை பெற - தரத்தான் பிறந்து வந்தேனோ என்னமோ? அதுக்கும் கில்மா கனவுகளுக்கும் என்ன சம்பந்தம் .. இத்தீனி நாள் ஆ.இ.2000 என்னாச்சுன்னு கேப்பிக.

நம்ம எழுத்துக்களுக்கு 1000 முதல் 1,500 வரை ஹிட்ஸ் கிடைச்சிட்டிருக்கிறது நெஜம் தான்.ஆனால் சீரியசா எதையாச்சும் ஆரம்பிச்சா படக்குனு விழ ஆரம்பிச்சுருது.

ஆருமே படிக்காத ப்ளாக்ல ஆ.இ.2000 பத்தி சொல்றதை விட கில்மா கலந்து ஆயிரம் பேரை படிக்க வச்சு - சீசனலா ஆ.இ பத்தி சொல்லலாம்ல.

மேலும் நீங்க - நான் ஆரு வேணா சரி ஆக்டிவா இருக்கனும்னா அதுக்கு கில்மாங்கற வேக்குவம் அவசியம். கில்மா பற்றிய புரிதல் இல்லாம பிரம்மச்சரியம் அது இதுன்னு மொக்கை போட்டா வாழ்க்கை துக்க வீடு மாதிரி தான் இருக்கும். நம்மால இந்த சமுதாயத்துக்கோ நாட்டுக்கோ உலகத்துக்கோ நாலணா உபயோகம் கூட இருக்காது.

இந்த கில்மா மேட்டர்லாம் உங்களை உற்சாகப்படுத்த மட்டுமில்லை - மலரும் நினைவுகள் கணக்கா நம்மையும் உ.படுத்துது.

அதே சமயம் ஆ.இ மானவ சேவா மாதவ சேவான்னு ஜல்லியடிக்கிற அளவுக்கு இல்லின்னாலும் கு.பட்சம் உலக வாழ்க்கையில நாம சிக்கி சீரழிஞ்சு காணாம போயிராம நம்மை சேஃப் கார்ட் பண்ற ஐட்டமாவும் ஆ.இ.2000 இருக்கு.

குருட்டாம்போக்குல ஒரு ப்ளாக் வச்சு பினாத்திக்கிட்டிருக்கிறதென்ன? பத்தோட பதினொன்னா நமக்கு தெரிஞ்ச சோசிய மேட்டரை அவுத்துவிடறதென்ன? அது பத்திக்கிறதென்ன? இப்பம் புஸ்தவமாவும் வெளிவர்ரது என்ன?

நம்ம கனவு திட்டமான ஆ.இ.200 பற்றிய கட்டுரையை இந்த புஸ்தவத்துல கடேசி பக்கத்துல கொடுத்திருந்தாலும் நம்ம மொத இலக்கு இறுதி இலக்கு எல்லாமே ஆ.இ.2000 தேன். அதுவும் 2012 புஸ்தவ கண்காட்சிக்கு போறதென்ன? அங்கன தாத்தாவோட சத்திய சோதனை புஸ்தவத்தை வாங்கறதென்ன.. பரீட்சைக்கு படிக்கிறாப்ல படிக்கிறதென்ன? தாத்தாவோட நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி இந்த புஸ்தவத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கிற தாக்கத் வர்ரதென்ன?

ஒரு வேளை இந்த ஆ.இ.2000 பற்றிய செய்தி உங்களுக்கெல்லாம் சேரனும்னு தாத்தாவோட ஆவிதான் நமக்கு அந்த தில்லை கொடுத்ததோ என்னமோ? ஜனவரி ரெண்டாவது வாரத்துல வெளிவர வேண்டிய புஸ்தவம் அப்பம் வெளிவராம போக அதுவரை இந்த தாக்கத் -ஹிம்மத் இல்லாததே காரணம்.

நாம வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்தின கில்மா ஜோதிடம் " ஜோதிட ஓஷோ "ங்கற பட்டத்தை வாங்கி கொடுத்ததால சோதிட நூல் வெளியீட்டு வரலாற்றில் முதல் முறையா காதலர் தினத்தன்னைக்கு இதை ரிலீஸ் பண்றோம்.

ஒருவேளை தாத்தா கடந்த பிறவியில பிரம்மச்சரியம் அது இதுன்னு குழப்பிக்கிட்டதை மறு பரிசீலனை செய்துக்கிட்டாரோ என்னமோ ? தன் தவறை இன்றைய தலைமுறை தொடரக்கூடாதுன்னு நெனச்சதோ என்னமோ? ஆவி அமுதா என்ன சொல்றாய்ங்கனு கேட்டு சொல்லுங்கண்ணே !


1.நிறைவேறாத ஆசைகள் 2.முழுமை பெறாத அனுபவங்கள் 3.கடந்த பிறவிகளின் நினைவுகள் இந்த மூன்றுதான் கனவுகளுக்கு அடிப்படை.


மேஷம்:

இவிக லைஃப்ல ரெம்ப ஆக்டிவா இருப்பாய்ங்க. இவிக லட்சியம் நெம்பர் ஒன்னா இருக்கிறது. அதுக்காவ அடிபட்டு உதைப்பட்டு கதை பாட தயங்க மாட்டாய்ங்க.

ஆனால் பெண் இந்த மாதிரி பார்ட்டிகளை டிவிலயோ ,கிரவுண்ட்லயோ பார்த்து வேணா ரசிச்சுட்டு போயிருவாளே தவிர கண்ணாலம் அது இதுன்னு ப்ரொசீட் ஆனால் கழண்டுக்கவா.

டீன் ஏஜ்ல இந்த ஸ்ட்ரக்ளிங் நேச்சர் அதிகமா இருக்கும். இது தாய்குலத்தை மிரட்டும். அதே போல இசை நடனம் பாட்டு மாதிரி கலைகள் இவிகளை பெரிசா கவராது. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸும் குறைவுதான். தாயுடனான நெருக்கத்துலயும் நிறைய அன்சர்ட்டெனிட்டி இருக்கும்.

இதனால இவிக கனவுகள்ள ரெம்ப ப்ராக்டிக்கலா இருப்பாய்ங்க. நெம்பர் ஒன்னாவது மண்ணாவது "என் ஆளு" விரும்பறாப்ல வாழ்ந்திருந்தா போதும்னு இருப்பாய்ங்க. கனவுகள்ள ஏதோ ஒரு கலையில் டேலன்டட் ஆ இருக்கிறாப்ல வரலாம்.பெண்கள் அந்த கலையை நாடி இவிகளை நெருங்கறாப்ல இருக்கலாம். அவிக கிட்டே " ஸ்வீட் நத்திங்ஸ்" கூட பேசலாம். கனவுகள்ள இவிக அம்மா அந்த காலத்து சினிமால பண்டரி பாய் மாதிரி பாசத்தை பொழிவாய்ங்க. வீடு வினோத்ஜீயின் கனவு இல்லம் மாதிரி இருக்கும்.

இவிகளுக்கு தொலை நோக்கு அதிகம்ங்கறதால டே டு டே அஃபேர்ஸ்ல சிக்க்னத்தை கடைப்பிடிப்பாய்ங்க. தொலை நோக்குன்னா பைனாகுலர் இல்லிங்ணா. எதிர்காலம் பற்றிய விழிப்புணர்ச்சி. சோகம் இன்னாடான்னா இவிக சேமிப்பெல்லாம் விரயமா போகும். (ஐ மீன் வாரிசுகள் அனுபவிப்பாய்ங்க) . ஒர்க்கஹாலிக்ஸா இருப்பாய்ங்க. வேலை வேலைன்னு உழைச்சு ஓடா தேய்வாய்ங்க..அந்த உழைப்பின் பலனை ஆரோ அனுபவிப்பாய்ங்க.

அதனால கனவுகள்ள சில்லறைய வாரி இறைப்பாய்ங்க. வேலை செய்றது எவ்ள முக்கியமோ வேலை செய்யாம இருக்கிறதும் அவ்ளோ முக்கியம் தான். எப்ப வேலை செய்யனும் -எப்ப ஃப்ரீயா இருக்கனும்னு எனக்கு தெரியும்னு வசனம்லாம் விடுவாய்ங்க.

கில்மா கனவுகள்னா ரண்டக்க ரண்டக்கன்னு அய்யராத்து அழகெல்லாம் கிராஸ் ஆகலாம். பூசை அறை,கோவில்,கோவில் குளக்கரைகள்ள சில்மிஷம் பண்றாப்ல கனவுகள் வரலாம்.இவிகளோட புறப்பாடே ஒரு சைனியத்தின் புறப்பாடு மாதிரி இருக்கும்.பற்குறி -நகக்குறில்லாம் சகஜமுங்கோ ..


உஸ்..அப்பாடா கில்மா கனவுகள் தொடரின் மொதல் அத்யாயத்தை எழுதியாச்சு 1/12 பேரை திருப்தி படுத்தியாச்சு . நாளைலருந்து கு.ப ரெண்டு ரெண்டு ராசியா எழுதறேங்ணா.

Friday, January 27, 2012

அடுத்த பிரதமர் ஆரு ? : பகீர் முடிவுகள்



அண்ணே.. வணக்கம்ணே !
சோதிட பதிவை எதிர்பார்த்து வந்திருந்திங்கனா சாரி.. இது இந்தியா டுடே ஆர்க் சர்வே முடிவுகளை பற்றிய பதிவு.

நேரமில்லாததால ஹைலைட்ஸ் மட்டும் இங்கே:

வறுமை ஒழிப்புக்கு பாடுபட கூடிய கட்சி பா.ஜ.க ன்னுட்டு 31 % பேரு நம்பறாய்ங்க. இந்த மேட்டர்ல , காங்கிரஸ் கட்சியை 26% பேர் தான் நம்பறாய்ங்க.( இன்னுமா இந்த சனம் நம்மை நம்பறாய்ங்க: சோனியா)

* சிறந்த பிரதமர் மோடின்னு சொன்னவுக 24 சதம், ராகுலுன்னு சொன்னவுக 17 சதவீதத்துக்கும் குறைவு

* ஒடனே எலக்சன் வந்தா காங்கிரஸ் கட்சிக்கு 110 சீட்டுக்கு மேல வராது.

* பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 140 க்கும் குறைவான சீட்டுதான் வரும்

* சமாஜ் வாதி (முலாயம்) , பி.எஸ்.பி (மாயா) , அ.தி.மு.க , பி.ஜே.டி ( நவீன் பட்னாயக்) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்( ஜகன்) போன்ற கட்சிகள் தான் அடுத்த பிரதமரை டிசைட் பண்ணுவாய்ங்க

கொசுறு:
உங்க தொகுதியில ஹசாரே நின்னா ஓட்டு போடுவிகளான்னு கேட்டா 60% பேர் " நிச்சயமா போடுவோம்"னு சொல்லியிருக்காய்ங்க.

ஆனால் ராகுல் நின்னா அவருக்கு ஓட்டு போடுவோம்னு சொன்னவுக 24% தேன்



அடுத்த பிரதமர் ஆரு ? : பகீர் முடிவுகள்

அண்ணே.. வணக்கம்ணே !
சோதிட பதிவை எதிர்பார்த்து வந்திருந்திங்கனா சாரி.. இது இந்தியா டுடே ஆர்க் சர்வே முடிவுகளை பற்றிய பதிவு.

நேரமில்லாததால ஹைலைட்ஸ் மட்டும் இங்கே:

வறுமை ஒழிப்புக்கு பாடுபட கூடிய கட்சி பா.ஜ.க ன்னுட்டு 31 % பேரு நம்பறாய்ங்க. இந்த மேட்டர்ல , காங்கிரஸ் கட்சியை 26% பேர் தான் நம்பறாய்ங்க.( இன்னுமா இந்த சனம் நம்மை நம்பறாய்ங்க: சோனியா)

* சிறந்த பிரதமர் மோடின்னு சொன்னவுக 24 சதம், ராகுலுன்னு சொன்னவுக 17 சதவீதத்துக்கும் குறைவு

* ஒடனே எலக்சன் வந்தா காங்கிரஸ் கட்சிக்கு 110 சீட்டுக்கு மேல வராது.

* பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 140 க்கும் குறைவான சீட்டுதான் வரும்

* சமாஜ் வாதி (முலாயம்) , பி.எஸ்.பி (மாயா) , அ.தி.மு.க , பி.ஜே.டி ( நவீன் பட்னாயக்) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்( ஜகன்) போன்ற கட்சிகள் தான் அடுத்த பிரதமரை டிசைட் பண்ணுவாய்ங்க

கொசுறு:
உங்க தொகுதியில ஹசாரே நின்னா ஓட்டு போடுவிகளான்னு கேட்டா 60% பேர் " நிச்சயமா போடுவோம்"னு சொல்லியிருக்காய்ங்க.

ஆனால் ராகுல் நின்னா அவருக்கு ஓட்டு போடுவோம்னு சொன்னவுக 24% தேன்



Thursday, January 26, 2012

சர்ருன்னு ஏறனுமா?


அண்ணே வணக்கம்ணே !
திடீர்னு என்ன ஆத்தா மேல மோகம் வந்துருச்சுன்னு கேப்பிக. காரணம் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.ஜோதிடம் 360 எடிட்டிங் கண்ணை கட்டுது. ஆத்தாளுக்கு இருக்கிற ஆயிரங்கண்ணுல ஒரு கண்ணால அரை பார்வை பார்த்தா போதும் அலப்பறை பண்ணிரலாம்.

அதுக்காவத்தேன் இந்த இமிசை. ஆத்தா கூட இன்டராக்ட் ஆன சந்தர்ப்பங்களை ரிகலெக்ட் பண்ணிக்கிற முயற்சி தான் இந்த அவன் அவள் அது தொடர். இன்னாபா எல்லாம் பழங்கதையா பேசறே லேட்டஸ்டா ஒன்னும் நடக்கலியான்னு சனம் கேப்பாய்ங்கன்னுதேன் அம்மன் வாகனம் ஆடுங்கற பதிவை போட்டேன்.

ஆனா இந்த வரியை அடிக்கும் போதுதேன் சமீப காலத்துல ஆத்தாவின் திருவிளையாடல்கள் எதுவும் நடக்கலியேங்கறது ஞா வருது. ஏன் ங்கற கேள்வியும் மனசுல வருது. இதுக்கு ஓஷோ அருமையான பதில் ஒன்னை தருவாரு.

உங்க ஆன்மீக கிராஃப் கீழுக்கு இறங்குதுன்னா அது இரட்டிப்பான உயரத்தை எட்டிப்பிடிக்க போகுதுன்னு அருத்தம். நம்முது சிம்ம ராசியாச்சா .. நாம பசியில இருக்கிறச்ச ( ஐ மீன் பொருளாதார தேவைகள்) நமக்குள்ள இருக்கக்கூடிய வேக்குவமே வேற.

விளையாட்டா.. ஐ மீன் ப்ரவுசிங் செலவுக்கு வ்ரட்டுமேன்னு துவக்கின ஆன்லைன் ஜோதிட ஆலோசனை பத்திக்கிட்டதுலருந்து பிசியாகி ,பசி மட்டுமில்லை நம்ம உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமா மங்கிக்கிட்டே வர ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இந்த மங்கி வரும் உணர்வுகளை நம்ம கான்ஷியஸ் ஒரு கண்ணால கவனிச்சுக்கிட்டே தான் இருக்கு.அது வேற விஷயம்.

நாம உணர்வுகள் சொல்றதை கேட்கவே மாட்டோம். அப்டி கேட்டிருந்தா ..மானாம் வாத்யாரே.உதார் உடறான்னு நினைப்பிக. நாம நம்ம கான்ஷியஸ் சொல்றதை கேட்டுக்கிட்டு அல்லது ஒரு காலத்துல அது சொன்னதை ஞா வச்சுக்கிட்டு அதன்படிதேன் ரெஸ்பாண்ட் ஆகறோம். அது வேற க்தை.

அது சரிப்பா பைசா வந்தா உணர்வு மங்கிருமான்னு கேப்பிக. இதுல ஒரு பெரிய சூட்சுமம் இருக்கு. பணம் .. நம்ம கைக்கு வந்த பிற்காடும் அது ஆரோட பணமோ அது அவிக கையில இருந்திருந்தா எப்டி செலவாகுமோ அப்படியேத்தான் செலவாகும்.

உதாரணமா 2 -8 ல் ராகு கேது உள்ள ஜாதகர் ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்காக நம்ம கணக்குல காசு போட்டாருன்னு வைங்க. அந்த காசு ஆரோ லவட்டிக்கிட்டு போன மாதிரி செலவாயிரும்.

பைசா வரும்போது பைசா மட்டும் வர்ரதில்லை. அந்த பைசா ஆருதோ அவிக கருமங்களையும் கூட்டிக்கிட்டு வந்துருது. இலவச இணைப்பு.

ஒரு ஜாதகம் ஆன் லைன் சோசியர் வரை வருதுன்னா அது லோக்கல் புலிகளால சால்வ் பண்ணப்பட முடியாத சாதகமாத்தான் இருக்கனும் ( பொதுவான லாஜிக் -இதுக்கு நிறைய விதிவிலக்கு உண்டுங்கோ..அம்பேல்)

நம்முது ஏசு நாதர் ரேஞ்சா இருந்தா பரவாயில்லை. நம்ம ரத்தத்தால ட்ரை வாஷ் பண்ணிரலாம். (ஹும் ரத்த தானம் செய்தும் மாசம் பலவாச்சு ) நாமளே ஊர்பட்ட பாவ மூட்டைய சுமந்துக்கிட்டு சவுக்காரத்துக்கு அலை பாய்ஞ்சுக்கிட்டிருக்கம்.

இப்படி மஸ்தா ரீசன்ஸ் கீது நைனா.இம்மாம் ரிஸ்கோட எப்டி வாய்ந்துக்கினு கீறேன்னு கேப்பிக.இதையெல்லாம் ஷேர் பண்ணிக்க பல கேரக்டருங்களை ஆத்தா உருவாக்கி விட்டிருக்கா.அவிக புண்ணியத்துல சேஃபா போயிட்டிருக்கு.

போன வருசம் காலண்டர் போட்டோம். அதுல ஒரு 20 கிராக்கிகங்க பைசாவ மிச்சம் பண்ணிக்கிட்டு நம்ம கருமத்தையெல்லாம் வாங்கிக்கிட்டாய்ங்க. நம்ம வண்டிக்கு கார்ப்பரேட்டர் மாத்தறேன்னுட்டே 3 மெக்கானிக்குங்க ஒரு 2 ஆயிரம் ரூவா வரை மசால் அரைச்சாய்ங்க. இப்பம் லேட்டஸ்டா ஒரு மெக்கானிக்.

இது போதாதுன்னு நம்ம சுந்து மாதிரி கேரக்டருங்க வேற இருக்காய்ங்க. இந்த சுந்து எப்பிசோட்ல நம்மாளூங்க சில பேரு வேலியோரம் போறதை எடுத்துன்னு பழமொழில்லாம் விட்டாய்ங்க.

நம்ம கணக்கு வேற கணக்கு. அடுத்தவுக நம்மை புகழ்ந்தா நம்ம நல்ல நேரம்லாம் அதுலயே ஆவியாயிருது. . இகழ்ந்தா நம்ம கருமத்தையெல்லாம் அவிக வாங்கிக்கிறதால பல தோசங்கள்+ கருமம் குறையுது .

மேலும் புக் ஃபேர்ல வாங்கின முகமது நபி(சல்) வாழ்க்கை வரலாற்றை படிச்சு முடிச்சிருக்கேன். தாத்தாவோட சத்திய சோதனையை படிச்சுக்கிட்டிருக்கேன். சிட்டுக்குருவி லேகியம் சாப்ட கணக்கா நம்ம ஆத்மா முறுக்கோட இருக்கு.

நம்ம லைஃப்ல இந்த மாதிரி கேப் எல்லாம் ஜுஜுபிங்கணா.. கேப்புக்கப்பாறம் செமை தூள் மாப்பே! ஆரோ புண்ணியவான் ஃபோட்டோவை பேசவைக்கலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தாப்ல. அந்த பதிவை படிச்சு சனங்களை இமிசை பண்ணி உங்களையும் இமிசை பண்ண ஒரு கிராஃபிக்ஸ் வீடியோ.

மேற்படி வீடியோவை கீழே உள்ள ப்ளேயர்ல கண்டு -கேட்டு களிங்க."அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் நம்ம சொரிவதை பாருங்க...ஆடியோவை பற்றின உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க

Tuesday, January 24, 2012

அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

அவன்-அவள்-அது : 22


அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

Monday, January 23, 2012

அம்மனின் வாகனம் ஆடு


அண்ணே வணக்கம்ணே !

பக்த சனங்க சைக்காலஜி என்னன்னா இவியளுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சாமிய கண்ணில்லையா, கையில்லயா காலில்லியான்னு ஏகத்துக்கும் கிராஸ் பண்ணுவாய்ங்க.ஆனால் இவிகளுக்கு நல்லது நடக்கும் போது டீல்ல விட்டுருவாய்ங்க.

அது என்னமோ நாம தேன் விசித்திரமான கேரக்டராச்சே. பிரச்சினைன்னு வரும்போது "மட்டும்" ஜேஜிக்கு சோப்பு போடறது நமக்கு பிடிக்காது. சனங்களையும் இப்படித்தேன் டீல் பண்றோம். சோத்துக்கில்லாத நாள்ளயே ஆறு மாசத்துக்கு ஒருக்கா வசதி வந்தாலும் மொதல்ல ஃபுல் டாக் டைம் போட்டுக்கிட்டு "ஒன்னுமில்லை பாஸ்.. ச்சொம்மாதேன்.. டச்ல இருக்கனுமில்லையா"ன்னு பேசற கேஸு நாம.ஜேஜிகிட்டயா வேற மாதிரி நடப்போம்.

நம்ம அம்பறாத்துணியில கச்சாமுச்சான்னு அம்புகள் இருக்கு.பிரச்சினைன்னு வரும்போது அல்லாத்தையும் ஒன்னு பின்னாடி ஒன்னு விட்டுட்டு ..அம்புகள் தீர்ந்த பின்னாடி அம்பறாத்துணியை வீசி ,வில்லை எடுத்து வாத்யார் கணக்கா சுழற்றி அப்பயும் வேலைக்காகலின்னாதான் ஆத்தாளை கூப்டுவம். என்னதான் கேடு கெட்ட மன்ச ஜன்மம்னாலும் பெரியார் ,என்.டி.ஆர் ஊட்டிவிட்ட செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கில்லை.

அப்பம்..ஆத்தாளும்.. சே பாவம் என்னைக்கும் கூப்டாத புள்ளை கூப்டுது. நெஜமாலுமே கிரிட்டிக்கல் போலன்னு பட்டுன்னு புலிமேலயோ ,சிங்கத்து மேலயோ ஏறி ஆஜராயிருவா. இந்த தாட்டி ஆட்டுமேல ஏறி வந்திருக்கா.

அஸ்கு புஸ்கு ஆத்தாளுக்கு ஆட்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா பெத்த அழகான புள்ளை முருகன். முருகனுக்கு ஆரம்பத்துல வாகனம் ஆடுதேன். மயில் எல்லாம் அப்பாறம் பேங்க்ல லோன் போட்டு வாங்கினது.

நம்ம வீட்ல ரெண்டு வண்டி ,ஒரு பழைய சைக்கிள் இருக்கு. ஜா.ரா @ சுந்து சித்தூர் பஸ் ஸ்டாண்ட்லருந்து ஃபோன் போடறாரு.

"அண்ணே.. முருகேசண்ணே .. எப்படி சித்தூர் வந்தேன்னே தெரியலை. ஏதோ ஒரு சக்தி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் வரை தள்ளிக்கிட்டு வந்துருச்சு.. உங்க வீட்டுக்கு வழி தெரியல்லை. பட படன்னு வருது.. கண்ணை இருட்டுது ..விளுந்துருவன் போல இருக்கு.. சீக்கிரம் வாங்கண்ணே"

இப்படி ஒரு ஃபோன் வந்ததும் .. நமக்குள்ள இருக்கிற முகமது (சல்) சீறி கிளம்பறாரு. ரெண்டு வண்டியையும் கிளப்ப பார்க்கிறோம். குளிருக்கு ஜா.ரா மூளை மாதிரி விறைச்சுக்கிடக்கு. அப்பம் என்ன பண்ணுவோம்.

படக்குன்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு கிளம்பிருவம். அப்படித்தேன் .. நம்ம சுந்து பண்ண அலப்பறையையும் - அதுக்கு நாம கொடுத்துக்கிட்டிருந்த கவுண்டர்களையும் பார்த்து கடுப்பான ஆத்தா ஷெட்ல மூலையில.. துணி போர்த்தி வச்சிருந்த முருகனோட வாகனமான ஆடு மேல ஏறி வந்துட்டா..
இப்பம் ஒத்துக்கிடறிங்களா? ஆத்தாவோட வாகனம் ஆடுன்னு.

அவன் அவள் அதுங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டிருந்தம். இப்பம் ஜோதிடம் 360 ஸ்க்ரிப்டை எத்தீனி தபா ட்ரிம் பண்ணி எத்தீனி தபா எடிட் பண்ணாலும் கண்ணைதான் கட்டுதே தவிர அது ஜா.ரா மாதிரியே கிடக்கு.

நம்ம முயற்சியெல்லாம் ஓவர். இனி ஆத்தா கண் பார்த்தாதான் வேலைக்காகும்னு தோனிருச்சு.அதனாலதேன் இந்த பதிவு.

அவன் அவள் அது தொடரோட கடந்த அத்யாயத்தை படிக்காதவுக இங்கன அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டுங்க. அப்பத்தேன் லிங்க் வரும்.

மேற்படி நிருபர் குல திலகத்தோட பெருமையையெல்லாம் படிச்சிங்கல்ல. இந்த கேரக்டரோட நமக்கு முட்டிக்கிச்சி.அப்பம் ஆத்தா எப்படி நம்மை சேஃப் பண்ணாள்னுட்டு அடுத்த பதிவுல சொல்றேன்.

ஆத்தா ஆடு மேல வந்தாள் சரி ..வந்து என்ன பண்ணாள்னு கேட்கிறவுகளுக்கு சுன்டரேசங்கற பேர்ல வந்து ஜா.ரா பண்ண அழிச்சாட்டியம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

மணி அண்ணனோட முத்துச்சிதறல்கள் வலைப்பூவுல இருந்து அண்ணன் மேஷ லக்னத்தை பத்தி மாங்கு மாங்குன்னு எளுதினதை இந்த ஜந்து எளுத்துக்கு எளுத்து காப்பி பண்ணி நம்ம சைட்ல பேஸ்ட் பண்ணிருச்சு. வசம்மா மாட்டி வாங்கி கட்டிக்கிட்டு காணாம போயிருச்சு. இதான் மேட்டர்.

இந்த சந்தர்ப்பம் வரும்னு நமக்கு எப்பமோ தெரியும். இருந்தாலும் இந்த சுந்தரேசன் ஜா.ராவா இல்லாம இருந்தா ஒரு புதிய திறமை வெளிச்சத்துக்கு வர்ரதை தடுத்த பாவம் வந்துருமேன்னு நூல் விட்டுட்டம்.

நம்ம போதைக்கு ( நியாய உணர்வு) மணி அண்ணன் ஊறுகாய் ஆயிட்டாரு. அதனால மணி அண்ணன் கிட்டே இந்த பதிவு மூலமா மன்னிப்பு கேட்டுக்கறோம்

Sunday, January 22, 2012

சுபர் அசுபர் - 6 வித்யாசங்கள்


அண்ணே வணக்கம்ணே !

வாழ்க்கையில நாம பார்க்கிற மன்சங்கள்ள எப்டி பாவி அப்பாவி இருக்காய்ங்களோ அப்படியே சோசியத்துலயும் பாவி - அப்பாவில்லாம் உண்டு. இந்த மேட்டர்லாம் ஏற்கெனவே பேசினதுதேன். நைசர்கிகம் -லக்னாத்.

நைசர்கிக பாவி லக்னாத் சுபனாகும்போது என்னவிதமான பலன் ஏற்படும். நைசர்கிக சுபன் லக்னாத் பாவியாகும் போது என்ன விதமான பலன் ஏற்படும்னு இந்த பதிவுல பார்ப்போம். ஐ மீன் பலன்ல வித்யாசத்தை இன்னைக்கு பார்ப்போம்.

நைசர்கிக பாவி லக்னாத் சுபனாகும்போது:

தரும் நன்மை/ நற்பலன் ஜாதகருக்கும் - அப்பலன் யாரால் ஏற்படுகிறதோ அவர்களுக்கும் துன்பம் தருவதாக இருக்கும். சில சமயம் சட்டவிரோதமானதாக -பல சமயம் நியாயமற்றதாக இருக்கும்.
ஜாதகனுக்கு இந்த நற்பலன்கள் கிட்டும்போது நாடு,மானிலம்,ஊரு சனம்லாம் யுத்தம்,கர்ஃப்யூ,தொற்று நோய்னு அவதிப்பட்டுக்கிட்டிருப்பாய்ங்க. பாபர்கள் தரும் சொத்து தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ - சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம். இவற்றை ஜாதகர் விரட்டி விரட்டித்தான் "கைப்பற்ற"வேண்டியிருக்கும்.


நைசர்கிக சுபன் லக்னாத் பாபியாகும் போது:

இவர் தரும் தீமைகள் உடனடி லாட்டரி மாதிரி உசுருக்கே உலை வச்சுர்ர ரேஞ்சுல இருக்கும். இவர் நாம அவதி படறதை பார்க்க முடியாத அளவுக்கு நல்ல மனசு கொண்டவர் .அதனால "காரியத்தை" பட்டுன்னு முடிச்சுருவார்.

ஒரே நாள்ள திவாலாறது - என் கவுண்டர்ல போயிர்ரது - தூங்கறச்ச ஹார்ட் ஸ்ட்ரைக் பண்ணிர்ரது மாதிரியான வேலைகள்ளாம் இவரோடதுதேன்.


அதின்னா பாஸு .. நைசர்கிக்கம், லக்னாத்துன்னு புச்சா கீதுன்னு கேட்கிற கேஸுங்களுக்காக கீழ் கண்ட பாராக்கள் (மீள் பதிவு)

நைசர்கிக சுபத்வ பாபத்வம்:

குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக சுபகிரகங்கள்.சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக பாப கிரகங்கள்.


லக்னாத் சுபத்வ பாபத்வம்:
அவிகவிக லக்னத்தை பொருத்து கிரகங்களோட சுபத்வம் -பாபத்வம் டிசைட் ஆகும். இதைத்தேன் லக்னாத் சுபத்வ பாபத்வம்னு சொல்றோம்.

இப்பம் ஒவ்வொரு லக்னத்துக்கும் சுபர் ஆரு ..பாபர் ஆருன்னு பார்ப்போம்.

1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் - இந்த சேர்க்கை 6,8,12 போன்ற *துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)

புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.

2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.

சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.

சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.

மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.

சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் பவர் கட் நேரம் நெருங்குதே. அதனால அடக்கி வாசிக்கிறேன்.

3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.


4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.

8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)

சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி - 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கைய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ - அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:

மாரகர்கள் 2,3,7,8,12 ஆம் பாவங்களில் இருந்தால் மரணம்னு சொல்லப்பட்டிருக்கு.உங்களில் சிலர் " என்ன முருகேசன் ! ரெண்டுங்கறது வாக்குஸ்தானம் தானே இது எப்படி மரணத்தை கொடுக்கும்னு கேப்பிக.சொல்றேன்.

2.தனஸ்தானம்:
சத்யம் ராமலிங்கராஜூவை உள்ளே அனுப்பினது இந்த கொடுக்கல் வாங்கல் மேட்டருதேன். வராத லாபத்தை வந்ததா காட்டி தில்லாலங்கடி பண்ணாரு ஞா இருக்குல்ல.

2 : வாக்குஸ்தானம்:
வை.கோ ,சீமான்லாம் சகட்டு மேனிக்கு பேசித்தானே உள்ளாற போனாய்ங்க

2.குடும்பஸ்தானம்:
கனிமொழியை செயிலுக்கு அனுப்பினது குடும்பம்தானே

3.சகோதர ஸ்தானம்:
நிறைய அரசியல்வாதிங்க தாங்கள் நேரிடையா செய்யமுடியாத மேட்டரையெல்லாம் சகோதரர்களை வச்சு செய்றது ஃபேஷன். அப்பாறம் ஆப்படிச்சுக்கறதும் ரொட்டீன். உ.ம் ஆற்காடு வீராசாமி , ஆந்திராபக்கம் வந்தா எங்க சி.எம் கிரண்

3.தைரிய ஸ்தானம்:
அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைங்கற பஞ்சை மறந்துட்டு "வேணம்னா இந்திராகாந்திக்கு விதவை பென்ஷன் தரோம் வரச்சொல்லுங்க"ன்னுட்டு எமர்ஜென்ஸி காலத்துல பல்பு வாங்கினவுகளை கேளுங்க.விவரமா சொல்வாய்ங்க.

7.களத்ர ஸ்தானம்: (ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்)
ராஜீவ் கெட்டது நண்பர்களாலே,ஜெ கெடப்போறது நண்பியாலே, என்.டி.ஆர் கெட்டது காதலாலே, கலைஞர் கெட்டது பார்ட்னராலே (கலைஞரும் -எம்.ஜி.ஆரும் எதை எதையோ ஷேர் பண்ணிக்குவாய்ங்களாமே -அப்பம் பார்ட்னர்ஸ்தானே)

8.ஆயுள் பாவம்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம் இதை எல்லாம் காட்டும் இடம் ஆயுள்பாவம். இதுகளால கெட்டவுக மஸ்தா பேரு கீறாய்ங்க. வேணம்னா ஒரு லிஸ்டை நீங்களே ப்ரிப்பேர் பண்ணுங்க.

12.விரயபாவம்:
ஆனமுதலில் அதிகம் செலவானால் பாட்டு தெரியுமா? வரவு எட்டணா செலவு பத்தணா பழமொழி தெரியுமா? ஸ்ரீ தேவி திவாலாகி /கணவரையும் திவாலாக்கின கதை தெரியுமா? ப்யூட்டி பார்லருக்கே கோடிகளை செலவழிச்சாய்ங்களாம். லேட்டஸ்ட் உதாரணம் விஜய் மால்யா.

Monday, January 2, 2012

புத்தாண்டில் பிரபலங்கள்: விஜய்காந்த்

எச்சரிக்கை:1
புத்தாண்டு புத்தாண்டுன்னு பீத்திக்கறோமே தவிர புத்தாண்டுங்கறதே ஒரு மாயா. ஜனவரி 15 க்காச்சும் சூரியன் மாறுவாரு. ஜனவரி 1 ஆம் தேதி அந்த இழவும் கடியாது. குரு வக்ர நிவர்த்தியும் டிசம்பர் 25 ஆம் தேதியே நடந்துருச்சு. செவ் வக்ர சஞ்சாரம் கூட ஜனவரி 23 ஆம் தேதிதான் துவங்குது.சனி கூட டிசம்பர்லயே மாறிட்டாரு .ஞா இருக்குல்ல. குரு 2012 மே மாசம் தேன் மேசம் டு ரிசபம் ஷிஃப்ட் ஆறாரு

சொந்த ஜாதகத்துல தசாபுக்தியில ஏதேனும் மாற்றம் வந்தாலே தவிர, வருடக்கோள்கள் எதுனா மாறினாலே தவிர புத்தாண்டுக்கு ஒரு மண்ணும் மாறாதுன்னு தெரிஞ்சுக்கங்க.

இருந்தாலும் வெளிய சொல்ல முடியாத சில காரணங்களால புத்தாண்டில் பிரபலங்கள்னுட்டு வி.ஐபிகளோட ஜாதகங்களை வரிசையா அலச முடிவு பண்ணியிருக்கேன். (ச்சொம்மா ரிவிஷன் மாதிரி வச்சுக்குவம். இப்படி ரிவிஷன் பண்ணாத காரணத்தாலதேன் எங்க ஒய்.எஸ்.ஆர் வெற்றிய கணிச்ச நம்மால அவரோட மரணத்தை கெஸ் பண்ண முடியாம போயிருச்சு. அதேன் ஒரு எச்சரிக்கைக்கு இந்த ரிவிசன்.

இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வைங்கற மாதிரி விஜய்காந்த் ஜாதகத்துக்கு ஏன் இந்த ப்ரியாரிட்டின்னு கேப்பிக. என்னதான் பக்கத்து மானிலத்துல வாழ்ந்தாலும் தமிழன்னு ஒரு உணர்வும் - தமிழ் சனம் தேன் வாழ வைக்கிறாய்ங்கங்கற விஸ்வாசமும் இருக்கு.

கொண்டவன் கோலால் அடித்தால் கண்டவன் காலால் உதைப்பாங்கற மாதிரி தமிழன் நிலை ஆயிருச்சு. இதை தட்டிக்கேட்க வை.கோ இருந்தாலும் அவரு ஆர்ட் ஃபிலிம் மாதிரி. தாத்தாவுக்கு கனிமொழியோட எதிர்காலத்தை கனிய வைக்கிறதை விட்டா வேற சிந்தனையே கடியாது. அம்மா பாவம் நம்பினவுக வச்ச ஆப்பை பிடுங்கியெறியதுல பிசி.

மன்மோகனார் சென்னை விசிட் அடிச்சப்ப கொஞ்சம் சினிமாட்டிக்கா இருந்தாலும் நெத்தியடியா ,"ப்ளான் பண்ணி" கருப்பு கொடி காட்டி நம்ம எதிர்ப்பையெல்லாம் பதிவு செஞ்சாரு. அம்மா அடிச்சா மாமா கிட்டே ஓடறாப்ல அம்மா அடாவடி அடிச்சா அதை தட்டிக்கேட்கற விஜய்காந்த் கிட்டே தான் ஓடியாகனும்.

மாமாவோட ஜாதகத்துல விசயமே இல்லேன்னு ஏற்கெனவே டிசைட் பண்ணியிருக்கம். இருந்தாலும் இந்த சைக்கிள் கேப்ல எதுனா மாற்றம் வந்திருக்கான்னு பார்த்துரலாமே..

எச்சரிக்கை: 2
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.

இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம்.

லக்னாதிபதியே எட்டுல கீறாரு ( இதுக்கு எங்க ஊரு சோசியர் கொடுத்த பலன் என்ன தெரியுமா தானும் கெட்டு, தன்னை நம்பினவுகளையும் கெடுத்து ஊரையும் கெடுத்துரும்) .

ஆனால் கும்ப லக்னத்தை பொருத்தவரை சனி விரயாதிபதியாவும் இருக்காரு. அதனால விரயாதிபதி 12 ல் மறைந்த யோகமும் வேலை செய்யனும் .

அனுபவத்தில் பார்க்கும் போது இப்படி ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
இதற்கு ஜாதகரின் ஆயுள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். நான் ஆயுர்தாயம் செய்வதில்லை. பின்னே எப்படிங்கறிங்களா? எந்த வயசுல ஜாதகருக்கு கால் ,நரம்பு,ஆசனம் சம்பந்த பட்ட பிரச்சினை உச்சக்கட்டத்துக்கு போகுதோ அங்கருந்து அந்த வயசைப்போல இரண்டு மடங்கு வாழ்வாரு. வாழ்க்கையின் ரெண்டாவது பாகம் ஆரம்பிக்கும். அந்த ரெண்டாவது பாகம் ராஜயோகத்தை தரும்.

2/11 க்கு அதிபதி போய் 3 ல மாட்டினாரு. ரிஸ்க் எல்லாம் ரஸ்கு சாப்ட மாதிரின்னுட்டு சம்பாதிச்ச காசையெல்லாம் செல்ஃப் ஷேவ் பண்ணி தொலைச்சுக்கட்டிருவாருங்கோ. ( கூடவே குளிகன் மாந்தியும் இருக்காய்ங்க - அப்போ நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க )

5/8 க்கு அதிபதியான புதன் போய் ஆறுல நின்னாரு கூட கேது சேர்ந்தாரு. அஞ்சுதான் நேம் அண்ட் ஃபேமை,வாரிசுகளை, அதிர்ஷ்டத்தை காட்டற இடம் . இவருக்கு பேருனு வந்தா " மொத்தறதாலயோ" "ரேங்கறதாலயோ தான்" வரும்.

எலக்சன் டைம்ல மொத்தினாரு .பேரு வந்தது. இப்பம் மன்மோகனார் மேல ரெங்கினாரு பேரு வந்தது. இவரோட சிந்தனையே நெகட்டிவா இருக்கும். ஆரை ரேங்கலாம்ங்கற மாதிரி. இவரை பொருத்தவரை இவரோட வாழ்க்கையே இவர் கட்டின கல்யாண மண்டபம் மாதிரிதான். நல்லாவே இருக்கும். ஆனா இருக்காது. படக்குனு புல்டோசர் வந்து குப்பையாக்கிட்டு போயிரும்.(ஜெவுடனான கூட்டணியும் இப்படித்தானே ஆச்சு) இதே பலன் தான் இவரோட வாரிசுகளுக்கும்.( பார்த்திருக்கிங்கல்ல. சினிமா பக்கம் வந்தா நாறிரும்)

இந்த கெட்டதுல ஒரு நல்லது இருக்கு. அது என்னடான்னா அஷ்டமாதிபத்யம் வாங்கின புதன் 6 ல நின்னது. இதனால கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். கடன் தீரலை.ஆனால் எதிரிங்க ஒழிஞ்சுட்டாய்ங்க ( வடிவேலு ,ராமதாசு,கலைஞரு)

இப்பம் நடக்கிற தசையே புத தசை தான் . இதனோட பலன் என்ன? கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். எதிரி ஒழியனும்னு நினைச்சா கடன் தீராது. கடன் தீரனும்னு நினைச்சா எதிரி ஒழியமாட்டான்.

ஏழாவது இடத்தை பாருங்க. இங்கன சுக்கிரன் நின்னாரு. 7 ல சுக்கிரன் நின்னாலே நாஸ்தி. இதுல அவரு சூரியனோட வேற சேர்ந்திருக்காரு. மனைவியால யோகம்னு சொல்றது தவறு. 7 ல சுக்கிரன் நிக்கிறது ஜாதகரை போலவே அவரோட மனைவிக்கும் நல்லதில்லை. கூட சூரியன் சேர்ந்தது அதைவிட மொக்கை. சுக்கிரனை எரிக்கப்பட்டுட்டாரு. மனைவி பெண்களுக்கே உரிய மென்மை தன்மையை இழந்து மேன்லியா மாறிட்டு வருவாய்ங்க.

அடுத்துபாருங்க பாக்ய பாவத்துல சந்திரன் நிக்காரு. ஒரு ஜாதகனோட நீண்ட கால திட்டங்களை எல்லாம் காட்டறது 9 ஆமிடம் . அங்கே ரெண்டே கால் நாளைக்கொரு தாட்டி ராசி மாறிர்ர சந்திரன் நிக்கிறாரு. இவரோட ப்ளான் ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி கம்ப்ளீட்டா மாறிரும். ஒரு ரெண்டே கால் வருசம் ஏறுமுகம்னா அடுத்த ரெண்டேகால்லயே இறங்கு முகம் ஆரம்பமாயிரும்.

மேலும் சந்திரனுக்கு ரோகாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இதனால எதிரி நண்பனாதல் - நண்பன் எதிரியாதல் எல்லாம் இவர் லைஃப்ல சகஜமப்பா. சசி அண்ட் கோ அம்மாவுக்கு ஆப்படிச்சா அந்த சமயம் பார்த்து அம்மாவுக்கு கை கொடுத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன். அட கட்சியை கலைச்சுட்டு அம்மா கட்சியில ஐக்கியமாயிட்டா கூட ஆச்சரியப்படமாட்டேன்னா பார்த்துக்கங்களேன்.( அப்பம் டூ இன் ஒன்னா கடனும் தீரும் - எதிரிகளும் ஒழிவாய்ங்க -ஐ மீன் எதிரி நட்பாயிருவாருன்னு சொல்றேன்)

சிரஞ்சீவியாச்சும் பரவால்லை . நாய் பிடிக்கிற வண்டிய முனிசிபாலிட்டில நிறுத்தின மாதிரி நிறுத்தினாரு. நம்மாளு அதுகூட செய்யமாட்டாரு. பாதிவழில இறக்கி "வண்டி இதுக்கு மேல போகாதுன்னிருவாரு"

பத்துல செவ்வாய் நிற்கிறார். இவர் 3,10 க்கு அதிபதி. 3 ன்னா தைரியம் , பத்துன்னா தொழில் . பேசாம போலீஸ் வேஷம், மிலிட்டரி வேஷம் போட்டுக்கிட்டு காலத்தை கழிச்சிருக்கலாம். அந்த சான்ஸும் போச்சு.

ராசிப்படி பார்த்தா ஏழரை ஆரம்பம். அடுத்து வரப்போறது ஜன்ம சனி. இதன் காரணமாக நிறைய அலையனும் ,சட்டை போடாதவனை கூட அணைச்சுக்கிட்டு பேசனும். இதெல்லாம் பொலிட்டிக்கலா லாபம் தரும்லியா?

சனின்னா தொழிலாளிகள், ஏழைகள்,பிற்படுத்தப்பட்டோர். இவிக ஆதரவு ஓரளவு கிடைக்கலாம் (சனி உச்சமா வர்ரதால ) இவர் 3 ஐ பார்க்கிறதால தகிரியம் கூடலாம். 7 ஐ பார்க்கிறதால கட்சியில பிளவும் வரலாம். மனைவியே எதிரியாகலாம் அ நீச ஸ்த்ரீ ஒருவரால் இம்சை வரலாம். டேக் கேர்

மே 8 வரை குரு 6 ல .ஆக எதிர்கட்சியிலதான் கிடக்கனும். குரு 7 க்கு வந்த பிற்காடு அம்மாவோட ஓரளவு ஒத்துப்போக வாய்ப்பிருக்கு.

மே 16 முதல் ராகு கேது 2/8 ல இருந்துக்கிட்டு சகட்டு மேனிக்கு சீறச்செய்வாய்ங்க தேசீய .பாதுகாப்பு சட்டம் பாயாம பார்த்துக்கனும்.

எதிர்காலம்:
இப்பம் புததசையில சுக்கிர புக்தி தேன் நடக்குது ( 20/Aug/2010 => 20/Jun/2013 ) இந்த காலகட்டத்துல சுக்கிரனோட பலன் மருந்துக்கு கூட நடக்காது. சூரியன் தேன் 7ல இருந்து மனைவிக்கும், லக்னத்தை பார்த்து ஜாதகருக்கும் தூக்கமில்லாம செய்வாரு. கை கால் வலி, முதுகு வலிதான் மிச்சமாகும். வேணம்னா ஒன்னு சொல்லலாம் இவர் மேல மனைவியோட கமாண்ட் அதிகமா இருக்கும். ஆனால் இதனால மனைவிக்கு நோய்கள் தான் வருமே தவிர இவரு திருந்தவும் போறதுல்லை. வருந்தவும் போறதில்லை.

பொஞ்சாதி சொல்லை கேட்டு நடக்கிறதை விட சூரிய ஆதிக்கம் பெற்ற "அம்மா" பேச்சை கேட்டு நடந்தா பொளப்பு நாறாம இருக்கும்.

இதான் நம்ம அனாலிசிஸ். நமக்கு விசயகாந்துக்கும் வரப்பு தகராறு - வாய்க்கா தகராறு ஏதும் கிடையாதுங்கண்ணா. இன்னம் சொல்லப்போனா ரஜினி ரசிகனா இருந்து அவரால ஏமாத்தப்பட்ட
( வருவேன்..ஆனா வரமாட்டேன்)நமக்கு வந்தே உட்ட விசயகாந்த் மேல ஒரு மதிப்பு கூட உண்டுங்கண்ணா.


Sunday, January 1, 2012

எந்த ஆண்டுக்கும் புத்தாண்டுபலன்

அண்ணே வணக்கம்ணே !
புத்தாண்டு பலன்னா அது எந்த ஆண்டுக்கு சொல்லப்படுதோ அந்த ஆண்டுக்குத்தேன் பொருந்தும். எல்லா ஆண்டுக்கும் பொருந்தறாப்ல ஒரு ஆண்டுபலன் எழுதினா எப்டி இருக்கும்னு சின்னதா ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்தபதிவு.

பதிவுக்கு போறதுக்கு மிந்தி ஆண்டு பலன் பற்றி சிறுகுறிப்பு:

ஆண்டுபலன்னா சனி,குரு,ராகு,கேது சஞ்சாரத்தை வச்சு எளுதிருவாய்ங்க.ஆனால் நம்ம அனுபவத்துல செவ் தான் சூப்பர் ஸ்டார். சரித்திரத்துல வாழ்க்கையில முக்கியமான டர்னிங் பாய்ண்ட் எல்லாம் செவ் பெயர்ச்சியை ஒட்டியே நடந்திருக்கிறது. அதனால ஆண்டுபலன் எளுதறவுக இனியாச்சு செவ்வாயை சேர்த்துக்கிடனும். வேண்டுகோள் தேன்.

ஆண்டுபலன்ல இன்னொரு ஸ்டைல் இருக்கு.இதுவரை சொன்னது மைக்ரோ ஜோதிடம். அடுத்தது மேக்ரோ ஜோதிடம்.

.உ.ம் சனி உச்சம் பெற்று இருக்கிறதால தொழிற்சங்க அமைப்புகள் பலம் பெறும். உழைக்கும் வர்கம் ,பாட்டாளி மக்கள் (கட்சி இல்லிங்கோ) ,ஏழை மக்கள் நலம் பெறுவர். ஐரன் ஸ்டீல் சுரங்க தொழில் செழிக்கும். இப்படி சொல்றது .

ஆண்டுபலன்ல இன்னொரு ஸ்டைலும் இருக்கு. வருசத்தோட நெம்பரை கூட்டி சிங்கிள் நெம்பர் ஆக்கி அவுத்து விடறது. உ. 2012 இதை கூட்டினா 5 வருது. அஞ்சுன்னா புதன். ஆக இந்த வருசம் புத காரக மனிதர்கள்,தொழில்கள் எல்லாம் புஷ்டியாயிருவாய்ங்க.

சரி சரி.. பதிவுக்கு போகாம என்னய்யா மொக்கை இதுன்னு நீங்க நற நறக்கிறது சித்தூர்ல கேட்குது. பதிவுக்கு போயி உடலாம். உடுங்க ஜூட்..


எந்த ஆண்டுக்கும் பலன்:

எல்லோருக்கும் வருசம் ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பமாகுதுனு வைங்க.உங்களுக்கு மட்டும் உங்க பிறந்த நாளன்னைக்கே புது வருசம் ஆரம்பமாகுதுனு வைங்க. இப்போ மொதல் மாசம் எது மறு மாசம் எதுன்னு 12 மாசத்துக்கு கணக்கு போடுங்க.

உம்: என் பிறந்த நாள் ஆகஸ்ட் 7
என்னோட ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறக்குது. என் ஆண்டின் முதல் மாதம் ஆகஸ்ட் 7 முதல் செப்ட6 வரை. இப்படி உங்க பிறந்த மாதம் தேதியை ஆரம்பமா கொண்டு பட்டியல் ரெடிபண்ணுங்க.

உ.ம்
ஆகஸ்ட் 7 முதல் செப்ட6 வரை : முதல் மாதம்
செப்7 முதல் அக்டோபர்6 வரை :இரண்டாம் மாதம்

இப்படி ஒரு பட்டியலை ரெடி பண்ணியாச்சுல்லியா. இப்போ மாதவாரி பலன் களை சொல்றேன் பாருங்க. கடந்த வருசம் நடந்த சமாச்சாரங்களை வச்சு டேலி பண்ணி உங்க கருத்தை சொல்லுங்க .

முதல் மாதம்:
ஆரோக்கியம் காக்க யோகா,உடற்பயிற்சி,துணி மணி வாங்கறது, ப்யூட்டி பார்லர் போறது .தலை தொடர்பான வேலைகள் (ஹேர் கட்லருந்து,மண்டைக்கு அடிபடறது கூட)

2ஆம் மாதம்:
கொடுக்கல்,வாங்கல் (ரெவின்யூ ஐட்டம்ஸ்), பேச்சு வார்த்தை, குடும்பத்தோட அதிக நேரம் செலவழித்தல், புது புது ரெசிப்பியா சமைக்க சொல்லி சாப்பிடறது கண்,வாய்,தொண்டை தொடர்பான வேலைகள்

3ஆம் மாதம்:
சின்ன சின்ன பிரயாணங்கள். தைரியமா செயல்படறது. நல்ல ம்யூஸிக் கேட்கிறது. ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸ் கூட டைம் பாஸ் பண்றது.அவிக சம்பந்தமான விவகாரங்களை பைசல் பண்றது.காது,புஜம் தொடர்பான வேலைகள்

4ஆம் மாதம்:
தாய்,தாய்வழி உறவுவீடு ,வாகனம்,கல்வி,இதயம் தொடர்பான பணிகள்

5ஆம் மாதம்:
புத்தியை கூர்மை படுத்திக்க கவிதை 07 ல பலான பதிவுகளோட அறிவுப்பூர்வமான பதிவுகளையும் படிக்கிறது. பெயர் புகழ் வர்ரது. சின்னதா அதிர்ஷ்ட வசமா ஒரு வேலை முடியறது. காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா லாபமடையறது. வாரிசுகள் தொடர்பான விசயங்கள்.மார்புக்கும்,வயிறுக்கும் இடைப்பட்ட பாகம் தொடர்பான வேலைகள் (அங்கே எரிச்சல்லருந்து அங்க அங்க துடிப்பு ஏற்படறது உட்பட)

6ஆம் மாதம்:
கடன், நோய்,விரோதம்,விவகாரம்,அஜீரணம்,வயித்துவலி,வாந்தி

7ஆம் மாதம்:
ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தொடர்பான வேலைகள். தொப்புள் சம்பந்தமான பிரச்சினைகள். (ஆம்லெட் போடமாட்டிங்க இல்லயா?)

8ஆம் மாதம்:
தீர்க்க முடியாத கடன் வாங்கறது, கடன் காரன் கழுத்தை (உங்க கழுத்தைங்க) நெறிக்கிறது.தனிமை, திரஸ்காரம் ( நிராகரிப்பு) அடிபடறது,விபத்து, மரண செய்தி, இறுதி ஊர்வலம் ,காரியம் கருமத்துல கலந்துக்கறது. இன உறுப்புல அடிபடறது, அங்கே நோய் தாக்கறது.வீண்பழி சுமக்கறது

9ஆம் மாதம்:
சேமிப்பு,டூர் (முக்கியமா பக்திமயமான),அப்பா,அப்பா வழி உறவினர்,தூர தேசங்கள் போறது,அங்கே உள்ளவங்களோட கடித தொடர்பு,அங்கிருந்து காசு பணம் வர்ரது,கோவில் குளம் போறது,எம் ஜி ஆர் வேலைகள் செய்வது,முழங்கால் தொடர்பான வேலைகள் (பலான நேரத்துல ரெண்டு பேரும் டிவி பார்க்கனும்னா அது இந்த மாசத்துல தான்)

10ஆம் மாதம்:தொழில்,உத்யோகம் வியாபாரங்கள் மேல கான்சன்ட் ரேட் பண்றது.
11ஆம் மாதம்: ஒன்பதாம் மாசத்துல செய்த சேமிப்பால லாபம் அடையறது. 10 ஆம் மாசத்து உழைப்புக்கான பலனை அடையறது.அக்கா அண்ணா சமயத்துக்கு உதவறது.கணுக்கால் துடிப்பு.

12ஆம் மாதம்:
அலைச்சல் திரிச்சல்,கஷ்டம், நஷ்டம், வீண் பிரயாணங்கள், தண்ட செலவுகள், புத்தி வக்கரிச்சு செக்ஸ் தொழிலாளிகளை அணுகறது