Tuesday, December 2, 2014

பெண் @ 40 வயசு :எல்லாம் க்ளோஸ் தானா?

பெண் எழுத்தாளர் அமரர் லட்சுமிய தெரியாதவுக இருக்க முடியாது.
குங்குமத்துல(?) இவர் எழுதின  காவிரியை போலனு ஒரு தொடர் கதைய சூட்டோட சூடா படிச்சது ஞா வருது. இதுக்கு தான் சாகித்ய அகாதமி அவார்ட் கிடைச்சுதாம். என்னை பொருத்தவரை "மிதிலா விலாஸ்" சூப்பர். இன்னைக்கும் ஒரு மல்ட்டி ஸ்டார் ஃபேமிலி என்டர்டெய்னரா எடுக்கலாம்.(பாலகுமாரனை இவரது பிள்ளைப்பேறு நூல் கவர்ந்திருக்கிறது.)

எனக்கென்னமோ இந்தம்மா ஒரே கதையை மறுபடி மறுபடி எழுதி அந்த ப்ராசஸ்ல  மிதிலாவிலாஸ் கரீட்டா சிட் ஆச்சுன்னு ஒரு சம்சயம்.
நிற்க "தேடி கொண்டே இருப்பேன்"னு ஒரு கதை .லேசா கிரைம், அடல்ட்ரி, சஸ்பென்ஸ் ,த்ரில்லர்னுல்லாம் ட்ரை பண்ணியிருக்காய்ங்க.
மொதல்ல கதை சுருக்கம்:

தமிழ் சினிமா மாதிரி கிராமத்து பெரியதனக்காரர் மகன் -ஏழை வாத்யார் மகள் லவ்ஸு. ஈரோ வேற பொண்ணை கட்டிக்கிறாரு. ஈரோயின் அவனை இன்சல்ட் பண்ணனும்னுட்டு வேற ஒரு பார்ட்டியோட நெருக்கம் காட்டறாய்ங்க. அவன் ஏற்கெனவே மேரீட்.  இதை மறைச்சு வவுத்துல புள்ளைய கூட கொடுத்து வச்சிருக்கான்.

இன்னொரு பார்ட்டிக்கு கூட்டி வேற கொடுக்கிறான், தான் ஹோட்டல்ல ரூம் போட்டதா தகவல் கொடுத்து அந்த ரூம்ல தேர்ட் பார்ட்டிய வச்சு மாமா வேலை.

அந்த தேர்ட் பார்ட்டிக்கு நிறைய எதிரிங்க.ஆரோ ஆள் வச்சு போட்டு தள்ளிர்ராய்ங்க. அந்த நேரம் பார்த்து ஈரோயின் என்டர் ஆகி வாய்ல கைய வச்சு "கொலை கொலை"ன்னு அலர்ராய்ங்க. போலீஸ் வந்து தூக்கி உள்ள வச்சுருது.

காதலன் உன் பிள்ளைய காப்பாத்தறேன், அப்பனை காப்பாத்தறேன்னு தேர்தல் வாக்குறுதி கணக்கா அள்ளி விட்டு தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பே வெளிய வராம பார்த்துக்கறாரு.

ஈரோயின் ஆயுள் தண்டனை அனுபவச்சிட்டு வெளிய வர்ராய்ங்க. ஈரோ இப்பம்  பெரிய பத்திரிக்கையோட அதிபர். பொஞ்சாதி செத்து விடோயர்.மகன்,மகள் எல்லாமே அப்ராட்+ரேஷ்னல். மறுமணம் பத்தி ப்ரஷர் பண்றவுக தன் ரிப்போர்ட்டரை வச்சு ஈரோயினுக்கு  வீடு முதற்கொண்டு எல்லா வசதியும் பண்றாரு.

பிள்ளை அனாதை இல்லத்துல செத்துபோயிட்டான்னு தெரியுது. இந்தம்மா வேற ஒரு சிறுமியை தத்தெடுத்துக்குது. ஈரோ வராரு நாம ஒன்னு சேரலாம்ங்கறாரு .இவிக அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயினு மாதிரி நான் களங்கப்பட்டுட்டேன் -பூஜைக்கு உதவாத மலர் அது இதுன்னு வசனம் விட்டு கழட்டி விட்டுர்ராய்ங்க.

அக்கா அக்கான்னு ஒட்டிக்கிட்ட ரிப்போர்ட்டர் பையன் எனக்கு ஆருமில்லை நீங்களே அக்காவா இருங்க .நான் காப்பாத்தறேனு தன் பேச்சிலர் ரூமுக்கு அழைச்சிட்டு போயிர்ரான்.

லட்சுமி அம்மா எழுதின காலத்துக்கு இது சாடிக்கேத்த மூடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம்.ஆனால் 2014 ல் படிக்கும் போது செம கடுப்பு.
இத்தினிக்கும் ரைட்டர் ஒரு டாக்டர்.பிள்ளைப்பேறு இத்யாதி பத்தி புஸ்தவம்லாம் எழுதியிருக்காய்ங்க. நாட் நாட்லயே கலப்பு திருமணம் பண்ணியிருக்காய்ங்க. தென் ஆப்ரிக்காவுல வாழ்ந்திருக்காய்ங்க.ஆனாலும் பாருங்க என்ன ஒரு ஹிப்பாக்கிரசி.

பொம்பளைக்கு நாற்பது வயசாயிருச்சா எல்லா முடிஞ்சுருமா? அவள் வெறும் கட்டை தானா?புள்ளைக்காக பல்லை கடிச்சுக்கிட்டு தண்டனை காலத்தை கழிக்கனும்.புள்ள செத்துட்டான்னா ஒடனே சிறுமியை தத்தெடுக்கனும். செம கடுப்ஸ்.

இதை விட ரிப்போர்ட்டர் வெர்சஸ் ஈரோயின் மத்தியில அக்கா பிசினஸை கொண்டு வராம, பத்திரிக்கையோட எம்.டி மனிதாபிமானத்துல உதவறாருன்னு நினைச்சு இவன் சின்சியரா உதவிக்கிட்டிருக்க - எம்.டி "காதல் கத்திரிக்காய்னு ஜொள்ளுவிட  நான் என்ன யூத்தா? அவளோட கதையை தொடரா போட்டா சர்க்குலேஷன் எகிறிக்கும் தெரியுமா"ன்னு பிசினஸ் லைக்கா பேச இவன் வேலைய விட்டு வெளிய வந்து  ஈரோயினி கிட்டே "இங்கே இனி ஒரு நிமிட் கூட இருக்க கூடாது  நீங்க வந்துருங்க நண்பர்களா இருப்போம்"னு சொல்ராப்ல பாலிஷ்டா முடிச்சிருக்கலாம். அல்லது ப்ரப்போஸ் பண்றாப்லயும் முடிச்சிருக்கலாம்.

அட ..அந்தம்மா பில்டப் பண்ண மாதிரி பத்திரிக்கை எம்.டி உத்தமர்னே வச்சுக்கிட்டா ரெண்டு கிழத்தையும் சேர்த்து வச்சிருக்கலாம்.
ஓ அந்த காலம் அப்படி போல.. லூஸ்ல விடறா முருகேசா.. இப்பம் மட்டும் என்ன ஈரோயினிக்கு புருசன்/காதலன் செத்தான்னா எல்லாம் போச்சுன்னு தானே படமே எடுக்கிறாய்ங்க.
லட்சுமிம்மா ஐம் சாரி !