Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Thursday, July 21, 2016

கபாலி -ஒரு மகாபலி

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ..ச்சும்மா வேடிக்கை பார்க்கலாம்னு ஓரமா நின்னா தேரை இழுத்து தெருவுல விட்டுர்ரானுங்கப்பு. ஸ்..யப்பா மிடியல .

வேற என்ன கபாலிக்கு நான் பலியான கதைதான்.ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி என்னன்னா படத்துல ரஜினி மட்டும் சொதப்பல .. டைரட்டரும் செமயா சொதப்பியிருக்காரு .

ராத்திரி பூரா சிவராத்திரி . துலாம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன் எழுதிட்டு - பலன் டெக்ஸ்டா தான் வேணம்னு அடம் பிடிச்சு ஒப்புக்க வச்ச க்ளையண்டுக்கு பலன் அனுப்பிட்டு ஆஹா விடிஞ்சுருச்சா இனி தூங்கிர வேண்டியதுதான்னு படுத்தேன். பொறுக்கல !

அம்பதுக்கே ஃபர்ஸ்ட் மார்னிங் ஷோ ஆசைல்லாம் ஒடுங்கி கிடக்கம் நாம .60 வயசு செட்டியாருக்கு இளமை ஊஞ்சலாடுது . நேரம்டா. பாவம் ரஜினி !
ஓவராலா ஒரே வரியில சொல்லனும்னா கவர் பால வச்சு சுவத்துல கோடு கிழிச்சு விளையாடற பசங்களை டெஸ்ட் மேட்சுக்கு அனுப்பினாப்ல.

ரஜினிய பத்தி பெசலா சொல்லனும்னா பழைய ஞாபகத்துல பாட்டி மஞ்ச குளிச்சாளாம் கதைதான்.இந்த படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் கொடுத்த கைக்கு குஷ்டம் தான் வரும் . எம்மாம் ரத்தம்?

கழுத்தறுக்கறதை எல்லாம் கமல் கிட்டருந்து சுட்டாப்ல இருக்கு . தூங்காவனம் த்ரிஷா ஞாபகத்துல மவ கேரக்டர் .

வளரும் கலைஞர்கள் யாரும் இந்த மாதிரி மெகா ப்ராஜக்ட்ல சிக்கவே கூடாது போல. அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன். நெல்ல நெல்ல வளரும் பயிரை எல்லாம் கழுதை கணக்கா மேஞ்சிருக்கு கபாலி . உ.ம் தினேஷ், மெட்ராஸ் இளவரசன்

ரஜினி படம்னா வில்லங்கமில்லாம எப்பூடி?  தானும் தமிழன்ங்கற நெனப்புல பேசிட்டாப்ல இருக்கு. ஆயிரம் அவதூறு வழக்கு போடலாம் .அந்தளவுக்கு கயிவி கயிவி ஊத்திக்கிறாரு .

அதே போல ஆரோவில் ஆசிரமத்துல எவ்ள பெரிய ரத்தக்களறி? ஏற்கெனவே அது வில்லங்கத்துல சிக்கின ரெத்த பூமி.

ரஜினிய இளமையா காட்டறேனு செம சொதப்பல்.அச்சா லிங்கா தான்.  மிடியல. பொஞ்சாதிய பார்க்கபோற குஜிலில டை போட்ட ரஜினி கொஞ்சம் பரவால்ல.

ரஜினியோட ஃப்ளாஷ்பேக்கை கொடுத்த விதம் இருக்கே ..தூர்தர்ஷன் மலரும் நினைவுகள் ரேஞ்சுல இருக்கு .

நாசர் ஓவர் ஆக்டிங் பார்த்து ஏதோ பாரதிராஜா படம் /கமல் படம் மாதிரி இவர் தான் வில்லனோனு நினைச்சிட்டன். அவ்வ்வ்வ்வ்

ஈரோ செயில்ல இருந்து ரிலீஸ் ஆகறச்ச பறவை பறக்கறதை  காட்டறதை  1980 ல சர்தார் பாப்பாராயுடுலயே பார்த்துட்டம்.

சமீபத்துல நான் போட்ட ஸ்டேட்டஸ் பக்கா . பாட்சாவுல டான் பிறவு  ஆட்டோக்காரன் -பிறவு டான். இதுல டான் -பிறவு செயில் கைதி -மறுபடி டான்.

செத்துட்டானு நினைச்ச பொஞ்சாதிய அத்தீனி வருசத்துக்கு பிறவு சந்திக்கப்போறது தெரிஞ்சு ரஜினி உச்சா போக போயிர்ராரேனு பார்த்தா ஓன்னு  அழுவறாராம்.

ரிஷி மூலம் சோகம்லாம் ரஜினிக்கு ரத்த   மூலம் வந்தா கூட இம்பாசிபிள். டான் கதைதான் ஆனாலும் இழுக்குதேன்னு நினைச்சதும் கொய்யால இது இன்னாடா இழுவை இப்ப பாருடான்னு பொஞ்சாதிய தேடி போற எப்பிசோட்.
க்ளைமேக்ஸ்  கிட்டே தெலுங்கு படம்லாம் பிச்சை எடுக்கனும். ரெண்டு துப்பாக்கி /மிஷின் கன்.. அய்யோ.. வேண்டான்டா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ரஞ்சித் அந்த அரசியலை முன்னெடுப்பார் இந்த அரசியலை முன்னெடுப்பாருன்னு பீசிக்கிட்டாய்ங்களே இந்த படத்தோட ஊஊஊஊஊஊஊஊஊ சங்குதான் போல .

பா.ஜ.க அம்பேத்கர் காந்திய ஓன் பண்ண பார்க்கிறதுக்கும் இந்த படத்துல ரஜினி செய்ற வேலைக்கும் எதுனா வித்யாசம் இருக்கா என்ன?
சந்தேகத்துக்கு இடமில்லாம யோகா க்ளாஸ் வேற.போதும் பாஸ் ! இதோட இதை முடிச்சுக்கறேன். இப்பமே ரஜினி ரசிகர்கள்ளாம் செமகடுப்புல இருப்பாய்ங்க..

ரஞ்சித்துக்கு ஷொட்டு:

மாணவர்கள் கையில் அணியும் பேண்டுகளை சுட்டியமை
ரஜினி -மனைவியை சந்திக்கும் காட்சியை ப்ளர்ரா காட்டினது  இப்படி சின்ன சின்னதா நிறைய செய்திருக்காரு .ஆனால் ....................


Friday, August 29, 2014

ரஜினி முதல்வராகனும்னா


ரஜினிக்கும் நமக்கும் உள்ள உறவு தெரியாதவுகளுக்கு மட்டும் சின்ன விளக்கம். சிவப்பு விளக்கை எரியவிட்டு தொழில் பண்ற பாலியல் தொழிலாளிக்கு கூட ஆதரவு தெரிவிச்சு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்னு குரல் கொடுக்கிற கேரக்டர் நாம. அதே நேரத்துல பத்து பேரை முந்தானையில வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போட்டா மட்டும் கடுப்பாயிருவம். இதான் நம்ம  கேரக்டர்.

ரஜினி மட்டும் பாரதியார் கணக்கா "நடிப்பு எமக்கு தொழில்+வீட்டுக்குழைத்தல்"னு சொல்லிட்டு பெர்ஃபார்ம் பண்ணியிருந்தா "ஒழிஞ்சு போவட்டும் வயித்து பொளப்பு"ன்னு விட்டிருப்பம்.

ஆனால் இவரு எம்.ஜி.ஆர் கணக்கா -வாலி /வைரமுத்து -மற்றும் வசன கர்த்தாக்கள்  உபயத்துல கொள்கை முழக்கம்லாம் செய்துக்கிட்டிருந்து "அதெல்லாம் வசனம்யா -அந்த கேரக்டர் பேசின வசனம்யா"ன்னு அடிச்சு விட்டாரு பாருங்க. அங்கதான் ஏதோ படத்துல செந்திலை கனவுல கண்டு தலைகீழா குதிச்ச கவுண்டர் ஆயிட்டாரு ரஜினி.

என்னடா இது எல்லாம் கழுவி ஊத்தறதா இருக்குன்னு கழண்டுக்காதிங்க நெஜமாலுமே ரஜினி முதல்வராகனும்னா என்ன பண்ணனும்னு ஒரு ப்ளூ ப்ரிண்டும் கொடுத்துர்ரன்.

இன்னைக்கு புதியதலைமுறையில ஒருத்தர் மளிகை ஜாமான் லிஸ்டு கணக்கா போட்டாரு. ரஜினியோட அரசியல் எதிர்வினைகள் எல்லாமே தன்னை-தன்னவர்களை சார்ந்த விஷயத்துக்கானதா தான் இருந்தது. மம்மிக்கு எதிரா வாய்ஸ் கொடுத்ததுலருந்து - முந்தா நாள் "மோடி நெல்ல நிர்வாகி"ன்னு கேன்வாஸ் பண்ணதுவரை எல்லாமே தன் நலம் அல்லது தன்னவர் நலம் தான்.

(அதே விவாதத்துல எம்.ஜி.ஆரை விட ரஜினி பெரிய ஆள்னு ஒரு பார்ட்டி சொன்னதை சீரியசா எடுத்துக்கல. இல்லின்னா இந்த பதிவே அதை பத்தி தான் வந்திருக்கும்)

செரி செரி மேட்டருக்கு வந்துர்ரன்.ரஜினி முதல்வராகனும்னா அவரு என்ன பண்ணனும்னு சொல்லி விட்டுர்ரன்.

1.ஏற்கெனவே தனக்கு சொத்துக்களை வித்தவுகளை எல்லாம் காண்டாக்ட் பண்ணி ஒரு இடத்துல கூட்டி   மீடியா முன்னே "எக்காரணம் கொண்டும் நில ஆக்கிரமிப்பு வழக்கு போடமாட்டோம்"னு சொல்ல வச்சிரனும்.

2.ஐஸ்வர்யாவோட கடனை எல்லாம் பைசல் பண்ணி நோ ட்யூ சர்டிஃபிக்கேட் வாங்கிக்கனும்.

3.அரசாங்கத்துக்கும் தனக்கும் உள்ள டீலிங்கெல்லாம்  கரெக்டா இருக்கா. பார்த்துரனும். ( விதி மீறல்)  அதை எல்லாம் பைசல் பண்ணிரனும். மொதல்ல ஓட்டர் லிஸ்டுல பேர் இருக்கா பார்த்துரனும் -ஒவ்வொரு வாக்காளர் சேர்ப்புலயும் இதை ஃபாலோ அப் பண்ணிக்கனும்.

4.ரசிகர்களுக்கு வாக்களிச்ச கல்யாண விருந்தை ஒடனே நடத்திரனும்.( எவனும் அதுல பல்லி,பூரான்னு போட்டுவிட்டுராத பார்த்துக்கனும்.

5.நதி நீர் இணைப்புக்கு வாக்களிச்ச ஒரு கோடி ,கும்ப கோணம் பள்ளி பிள்ளைகளுக்கு வாக்களிச்ச உதவித்தொகை எல்லாம் பைசல் பண்ணிரனும்

6.முழு மேக்கப்போட ஒரு செட் போட்டு  ஒரு ஸ்பீச்சை ஷூட் பண்ணிக்கனும்.அதுல மொத அஞ்சு மினட் தான் எடுத்த தப்பான ஸ்டாண்டுக்கெல்லாம் மன்னாப்பு கேட்டுக்கனும். (முக்கியமா குசேலன் வசனத்துக்கு)  என் படத்துல வந்த எல்லா வசனம் - பாட்டுக்கு நான் தான் பொறுப்பு. நான் தான் ஓகே பண்ணேன்னு சொல்லனும்.

பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . எனக்கு சாதி இல்லை.மதம் இல்லை.மொழி இல்லை. நான் மனிதன். என் கொள்கை மனிதம் . என் இயக்கம் /கட்சி தனியானது. தேர்தலுக்கு பிறவு என்னால தனிச்சு ஆட்சி அமைக்க முடியாம போனா பா.ஜ.கவை தவிர ஆரு என் கட்சி கொள்கைகளை ஏத்துக்கிட்டு சனத்துக்கு நல்லது பண்ணுவாய்ங்களோ அவிகளை ஆதரிப்பேன்.மந்திரிசபையில சேர மாட்டேன்னு எச்சி மீஞ்சி சத்தியம் பண்ணனும்.

கட்சியோடகொள்கைகள்னு ஜஸ்ட் பத்து பாய்ண்ட். மட்டும் சொல்லனும்.
அ)எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஏழ்மை -அதற்கு காரணம்  விவசாயத்தை கைவிட்டது. பாசன வசதிகளை மேம்படுத்தாதது.  உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை விவசாயம் ஒன்னுதான். அதுக்கு டாப் மோஸ்ட் ப்ரியாரிட்டி கொடுப்பேன். தமிழக நதிகளை இணைப்பேன். இந்திய நதிகள் இணைப்புக்காக போராடுவேன்.
ஆ)வறுமை ஒழிய நதிகள் இணைக்கப்படனும்- இதனால் விவசாயம் செழிக்கும். படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு திருப்புவேன். விவசாய உற்பத்திகளை மதிப்பு கூட்டு முறைகளை அமலாக்கி விவசாயிகள் துணையுடன் மானில அரசே மார்க்கெட் பண்ணும்.  லாபத்துல விவசாயிக்கு சம பங்கு.

இ)மேற்படி மிஷன் நிறைவேற தடையா இருக்க கூடிய எல்லா நிர்வாக சீர்கேட்டையும் ஒழிச்சு கட்டிருவன். இந்த மிஷனோட பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வழி செய்வேன்.
இந்த செனேரியோல பத்து பாய்ண்ட் -அதையும் ஒரு அஃபிடவிட்டா ரிலீஸ் பண்ணனும்.

மேற்படி ஷூட்டோட டிவிடியை மீடியாவுக்கு ரிலீஸ் பண்ணி விட்டுரனும். எல்லாம் பேசி பேசி மாய்வானுங்க. இந்த கேப்ல கட்சி பதிவு-உறுப்பினர் பதிவு வேலையை எல்லாம் முடிச்சுரனும்.

விஸ்தாரமா ஒரு பிரஸ் மீட் (காலை 10 முதல் மதியம் 2 வரை ) 


7.கண்ணாலத்துக்கு வந்தவுகல்லாம் மொய் எழுதறாப்ல இந்த ஸ்பீச் -குறைஞ்ச பட்சம் ஹைலைட்சாவது எல்லா சேனல்லயும் டெலிகாஸ்ட் ஆயிரும்.

-இதுக்கப்பாறம் தேர்தலுக்கு ஆறுமாசம் வரை தமிழக  நதிகளை பக்கவாட்ல கவர் பண்றாப்ல ஒரு பொலிட்டிக்கல் டூர்.

தேர்தல் அறிவுப்பு வந்தபிறவு எல்லா ரசிகர்களையும் திரட்டிக்கிட்டு நதிகளை இணைக்க நானே கால்வாய் வெட்டறேன்னு மம்முட்டி,கடப்பாறையோட கிளம்பி கைதானா  சிரேஷ்டம்.

(ரஜினி மேல லவ்ஸ் இருக்கிற பார்ட்டிங்க கிண்டிவிட்டா மேலும் அவிழ்த்து விடுவேன்.இல்லின்னா அம்பேல்)



Wednesday, October 19, 2011

ரஜினி காந்த் பரபரப்பு பேட்டி



கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல திடீர் உடல் நல பாதிப்பால் மீடியா வெளிச்சத்துல இருந்து ஒதுங்கி இருந்த ரஜினி நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு அஃபிஷியலா தானே நிருபர்களை சந்திச்சு பேட்டி கொடுக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்.

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி (கீழ்) வந்த ரஜினி , அங்கே காத்திருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினி சொன்னதாவது:

என் ஹெல்த் நல்லாவே இருக்கு. ரசிகர்களின் பூஜைகளாலதான் நான் மீண்டு வந்தேன். ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்" ராவண் " படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ( ஆருப்பா அது ரஜினி நடிக்கவே இல்லைன்னு பதிவு போட்டது ) ரெண்டு மூனு மாசத்துல ராணா ஷூட்டிங் ஆரம்பிக்கும். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் வந்திருந்தார் ரஜினி. இரவு 7.30 க்கு ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்

ஹி ஹி.. இப்படித்தாண்ணே சனம் துண்டு துக்கடா பதிவு போட்டு ஹிட்ஸை அள்றாய்ங்க. ( பேட்டி மட்டும் நெஜம் தேன்)

கொசுறு:

தமிழ்மணம் பெரியார் வழிக்கு வந்துருச்சு. சோதிடப்பதிவுகளையெல்லாம் நீக்கப்போறாய்ங்களாம். ( நம்முதை நாமே நீக்க சொன்ன பிற்காடு நீக்கியிருக்காய்ங்க. -ஸ் அப்பாடா மரியாதை பிழைச்சது) அடுத்தது ஆன்மீக பதிவா? சொல் தமிழ்மணமே..!

Sunday, August 14, 2011

ரஜினியை சந்தித்தேன்


2009 மே மாசத்துல ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சதுலருந்து அவுட் டோர் கன்சல்டன்சிக்கு போறதே கிடையாது. இருந்தாலும் நம்ம கெட்ட நேரம் ஒரு மெட்ராஸ் பார்ட்டி நை நைன்னு நச்சரிச்சுட்டே இருக்கவே தெரியாத்தனமா புறப்பட்டோம். அதிகாலை பாலவினாயகரை பிடிச்சு கோயம்பேடுல இறங்கி நண்பருக்கு ஃபோன் போட்டோம்.

நண்பர் நம்மை பிக் அப் பண்ண வழக்கமா டூவீலர்ல தான் வருவார். நேத்தென்னவோ பந்தாவா இன்னோவால வந்தார். கார் சென்னை சாலைகளில் பறக்க ஆரம்பிச்சது. நாமும் வழக்கப்படி பராக்கு பார்த்துக்கிட்டே கிடந்தோம்.

படக்குனு கார் நின்னது.ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம்னு ஒரு போர்டு தெரிஞ்சதும்..திகீர்னுச்சு " "என்னப்பா இது ரஜினியோட கல்யாண மண்டபம் மாதிரி இருக்கு"ன்னு கேட்டம். நண்பர் சிரிச்சிக்கிட்டே நீங்க சந்திக்கப்போறது ரஜினி சாரை தான்னு சொன்னார்.

' இதென்னடா வம்பா போச்சு. நாம கேள்விபட்டது நிஜமா இருந்தா ஆர்.எம்.வீ இருந்தப்ப எதுனா அட்வென்சர் பண்ணிட்டு அவரோட ஆஃபீஸ்ல போய் உட்கார்ந்துக்குவாரு. இப்பம் ஆர்.எம்.வீயே பிரச்சினை வந்தா எந்த ஆஃபீஸுக்கு போறதுன்னு தெரியாம கிடப்பாரு. எந்த தைரியத்துல நம்மை கூப்பிட வச்சிருப்பான் மன்சன்."ன்னு சிந்தனைகள் ஓட நண்பரை பின் தொடர்ந்தோம். ஓடினா துரத்துவாய்ங்க.துரத்தினா பிடிச்சுருவாய்ங்க. ச்சொம்மா ஆயாசம் தேன் மிச்சம்.

ரஜினி ஒரு சோஃபால வெள்ளை குர்தாவும் பட்டை கொட்டை இத்யாதி அலங்காரங்களோட இருக்க நண்பர் நம்மை அறிமுகம் செய்தார்.

அதுக்கப்பாறம் நடந்த உரையாடல் இதோ :

"வணக்கம் .. வாங்க இவர் தானே பிரபல ப்ளாகர் முருகேசன் "

"என்ன சார் அமிதாப் மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கப்போறிங்களா? இந்த மேட்டர்ல தமிழ் நாட்டின் கிங் மேக்கர் ச்சோவை கன்சல்ட் பண்ணா அவரு தன்னோட ப்ளாக் உலக ஏஜெண்டை அறிமுகப்படுத்தி வைப்பாரே"

" நோ நோ ப்ளாக் எல்லாம் எழுத போறதில்லை. உங்களை உங்களுக்காகவே சந்திக்கத்தான் இன்வைட் பண்ணேன் "

" நல்ல வேளை .. நீங்க ப்ளாக் எழுதினா ஹிட்ஸ் என்னவோ பிச்சுக்கும். அப்பாறம் ரசிகர்களுக்கு விருந்து வச்சே தீரனும். இல்லின்னா வண்டை வண்டையா வண்டி வண்டியா கமெண்ட் போடுவாய்ங்க. அதுலயும் ஜா.ரான்னு ஒருத்தர் இருக்காரு .இதுல அவர் ஸ்பெஷலிஸ்ட்"

" ஓ .. நோ நோ .. "

"நல்லது. இல்லைன்னா எம்.கே ஸ்டாலின், ராஜா டிஎம்கே சைட்ஸ் மாதிரி உங்களுதும் போன்டியாகியிருக்கும்"

"அதையெல்லாம் விடுங்க முருகேசன் ! நெறய விஷயங்களை பத்தி எழுதறிங்க..நல்லா இருக்கு. நம்மை பத்தியும் எழுதியிருக்கிங்க நல்லா இருக்கு "

"நன்றி . இங்கே ஆஃபீஸ் ரூம் எங்கே இருக்கு?"

"ஹா ஹா ஹா ஹா .. சிவாஜி படத்தை வச்சு கிண்டலடிக்கிறிங்க"

"இல்லை சார்.. யதார்த்த வாழ்க்கையில நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்கத்தானே உங்க சினிமாவுல எல்லாம் இந்த மாதிரி காட்சியெல்லாம் வைக்கிறிங்க .அதுவாச்சும் பரவால்லை. உங்களை நீங்களேதிரையில வர்ர ரஜினியா நினைச்சு ஏமாத்திக்கிறிங்களே "

"நோ நோ நெவர்.. சினிமா என் தொழில்.தட்ஸால்"

"அ சொம்மா விடாதிங்க சார். படையப்பாவுல ரம்யா கிருஷ்ணனையா கலாய்ச்சிங்க. அம்மாவைத்தானே"

" ஒங்களுக்கு நல்ல இமேஜினேஷன் இருக்கு ..வெரி குட்"

"ஒங்களுக்கு நல்ல இமேஜ் இருக்கு வெரி பேட்'

"ஏன் ஏன் ஏன்?"

"உங்க இமேஜுக்கு ஏத்த ஸ்டாண்ட் எடுக்கமாட்டேங்கறிங்க - இமேஜுக்கு ஏத்த செயல்பாடு இல்லை"

' நான் சாதாரண மனுஷன். என் மேல ஏன் உங்க கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸையெல்லாம் இம்போஸ் பண்ரிங்க"

' இல்லிங்க சார்.. சிவாஜிராவ் மேல ரஜினிங்கற பிக்சர் டபுள் இம்போஸ் ஆயிருச்சு. அதுல எது நீங்கங்கற மேட்டர்ல நீங்களே குழப்பத்துல இருக்கிங்க"

"நீங்க தெளிவா இருக்கிங்களா?"

" நல்ல வேளையா அவாள் எனக்கு பெண் கொடுக்கிற அளவுக்கு -என்னை சுத்தி சேர்ந்து என்னை குழப்பற அளவுக்கு இன்னம் பெரிய ஆளாகலை "

"எல்லா பெரிய மன்சனும் குழப்பத்துல தான் இருக்காங்கறிங்களா?"

"இல்லையா பின்னே.. அன்னா ஹசாரே மேல ஊழல் புகார் சொல்றாய்ங்கன்னா காங்கிரஸ் குழப்பத்துல இருக்காய்ங்கன்னு அர்த்தம் .அழகிரியை இன்னம் தூக்கலின்னா அம்மா குழப்பத்துல இருக்காய்ங்கன்னு அர்த்தம்"

"ஹோல்டான்.. அரசியல் வேணாமே ப்ளீஸ்"

"இதை நீங்க பாட்ஷா வெற்றி விழாவுலயே சொல்லியிருந்தா பெஸ்ட். "

" கதம் கதம் "

"அது சரி நீங்க உசுப்பேத்தினதுல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் க்கதம் ஆயிட்டாய்ங்களே"

"த பாருங்க முருகேசன் நம்ம ராணாவுல"

"அதான் பேரை மாத்திட்டிங்களாமே.."

" சரி நம்ம படத்துல உங்களை ஒரு சின்ன ரோல் பண்ண வைக்கனும்னு "

' தோடா..தேர்தல் பிரச்சாரத்துல உங்களை திட்டித்தீர்த்த ஆச்சிக்கு வாய்ப்பு கொடுத்து அவிகளை மொக்கை பண்ணாப்ல . நீங்க உத்தமர். உங்களை திட்டினவுகளுக்கு கூட வாய்ப்பு கொடுப்பிங்கன்னு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்க நான் தான் கிடைச்சேனா.. ராமதாஸ் பாவம் .. மண்டை காஞ்சு கிடக்காரு.அன்பு மணி நல்ல ஹேண்ட்சம் பர்சன் அப்பா -பையனாவே வாய்ப்பு கொடுங்க வில்லனா கொடுத்தா தூள் பண்ணுவாய்ங்க"

"நீங்க ஏன் கடந்த காலத்தை பத்தியே பேசறிங்க.. ?"

" கடந்த காலம் நெகட்டிவ் . வருங்காலம் பாசிட்டிவ். நெகட்டிவை வச்சுத்தானே பாசிட்டிவ் போட முடியும்"

" அப்ப உங்களுக்கு வாய்ப்பு வேணாம்"

" ஏன் சார் உங்க டைம் பாஸுக்கும் இமேஜ் பூஸ்டிங்குக்கும் நாந்தான் கிடைச்சேனா? அதான் பேரன் பேத்தி எல்லாம் எடுத்து வச்சிருக்கிங்களே .அவங்களோட பண்ணுங்க சார் டைம் பாஸு ஆளை விடுங்க "

" நல்லா யோசிச்சு சொல்லுங்க அவசரமில்லை"

"குழப்பத்துக்கு ஆரம்பமே சிந்தனைதான். நாம வைக்கிற ஒவ்வொரு அடி மேலயும் மரணத்தோட அடிகள் பதிஞ்சுக்கிட்டே இருக்கு. இதுல அவசரமில்லைன்னா எப்டி? ஊர்ல இருந்திருந்தா ரெண்டு ஜாதகம் பைசல் பண்ணியிருப்பேன்"

" சரி சினிமாவை விட்டுருவம் .ப்ளாகை பத்தி சொல்லுங்க"

'சுகாசினி அம்மாவ கேளுங்க. ஆனந்த விகடன் ஆசிரியரை கேளுங்க. விவரமா சொல்வாய்ங்க. நமக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"

"என்ன ஹேர் கட் பண்ணனுமா?"

"என்ன சார் ..மண்டபத்துலயே சலூன் கூட வச்சிட்டிங்களா"

"ரொம்ப அக்ரசிவா பேசறிங்க"

"எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.. அப்பாறம் உங்களை விட விவரமா ஜல்லியடிக்க ஆரம்பிச்சுருவன்"

"ஏன் ஏன் ஏன்"

"பைசா சேர்ந்துரும்ல .. ஆமா சனம் மாற்றத்தை விரும்பறாய்ங்கன்னு வசனம் விட்டிங்க. நீங்களே போயஸ் கார்டனை விட்டு மாறிடப்போறதா பேசிக்கறாய்ங்க"

ரஜினி "இவரை நம்ம ஆஃபீஸ் ரூமுக்கு கூட்டிட்டு போங்கப்பா"ன்னதும் பதறியடிச்சுக்கிட்டு ஒடப்பார்க்கிறேன். ஓடவே முடியலை.

அப்பாறம் பார்த்தா படுக்கையில கிடக்கோம். என்ன பதிவு போடலாம்னு ரோசிச்சிக்கிட்டே தூங்கிட்டம் போல.ஹி ஹி.........






Monday, August 1, 2011

ரஜினி வாயில் "நாதாரி" என்ற வார்த்தை


ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? "என் வழி தனி வழி" இதை தெலுங்குல டப் பண்ணப்ப " நா தாரி ரஹதாரி"ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா?

நான் விரும்பி பார்க்கும் ஒரே சேனல் ஆதித்யா.எப்படியும் தாத்தா அழவைக்கிறாரு. நாமளாச்சும் சனத்தை கொஞ்சமா சிரிக்க வைப்போம்னு வச்சாய்ங்க போல. வாழ்க. அதுல (குழந்தைகள் கூட விரும்பி பார்க்கிறதை கவனிச்சிருக்கேன்) ஆம்பளை சோடா வேணமா பொம்பள சோடா வேணமா - பல்பு ஃப்யூஸ் ஆயிருச்சு - கோழி மிதிச்சு குஞ்சு சாகிறது மாதிரி காட்சியெல்லாம் கச்சா முச்சான்னு வருது.

குழந்தைங்களும் பார்க்கிற சானலே கோலி ஆடும்போது நிர்வாண உண்மைகள்னு பேரை வ்ச்சிருக்கிற ப்ளாக்ல கோலி மேட்டர் வரலாம் தான்.

நம்ம ஜோலிக்கு வந்த பிக்காலிகளுக்கு கோலி எப்படி காலியாச்சுங்கற கேள்விக்கு பதிலா இந்த பதிவு. ஆண் பெண் வித்யாசம் தொடர் ஞா இருக்குங்ணா. ஆன்லைன் கன்சல்ட்டன்சில 30 நாளுக்கு மேல வயசான ஜாதகம்லாம் பெண்டிங் இருக்கிறதால - அடுத்து எழுத வேண்டிய 10 ஆம் பாவம் சிக்கலான சப்ஜெக்டுங்கறதால இந்த பைபாஸ்.

நம்ம ராசா வேற இந்த மேட்டரை எழுதினா நல்லாருக்குமேன்னு கேட்டிருந்தாரு. அதான் இப்படி டைவர்ட் ஆயிட்டன்.

மார்க்கெட் சவுக்ல ஆஃபீஸ் ஓப்பன் பண்ணின புதுசு. எவனோ குடிகார நாயி செத்தான். அதுக்கு எவ்னோ ஒரு கு.நா போதையில நம்ம ஆஃபீஸ் பக்கம் வந்து " இன்னா.. சாமீ.. க.....டையெல்லாம் திறக்க ப்படாது.ஒடனே .மூடு"ன்னான் அம்புட்டுதேன். வேற ஒன்னும் பண்ணலை.

போலி பேர்ல வந்து கமெண்ட் போடலை. நம்ம பேர்ல போலி ஐடி கிரியேட் பண்ணலை. வேற ஒன்னும்.. ஒன்னும் பண்ணலை. ஜஸ்ட் போதையில என்ன பேசறோம் ஆருகிட்டே பேசறோம்ங்கற சொரணையில்லாம வாயு வெளியேறின கணக்கா வந்த பேச்சு இது.

அது இன்னா வருசம்? 1998 . இன்னி வரைக்கும் பாவம் தலை தூக்கலை. அண்ணன் தம்பி வெட்டி மடிஞ்சானுக. நாமதேன் பஞ்சாயத்து. அம்மா ஒரு தாட்டி கோச்சிக்கினு பூட்சி. நாமதேன் ப்ரஸ்னம். அண்ணன் காரன் கவுரதையா ஆட்டோ ஓட்டறான். இவன் கண்னெல்லாம் பஞ்சடைச்சுப்போய் -தாடி மீசையோட - சாயம் போன லுங்கி - ஹவாய் செருப்போட மாசம் ஒரு தாட்டி கிராஸ் ஆகிறான். அவ்ளதேன். நானும் எத்தனையோ தாட்டி ஆத்தா கிட்டே அப்பீல் பண்ணி பார்த்தேன். ஒன்னம் பேரலை.

இதுவாச்சும் பரவால்லை. இன்னொரு கேஸை சொன்னா நம்ம ஜா.ரா நொந்து நூடுல்ஸாயிருவாரு. ஒரு ஆசாமி. இவனோட குணச்சித்திரத்தை விவரிக்க ஒரே வரி போதும். எங்க ஏரியா வடிவேலுன்னு வச்சுக்கங்களேன்,

பெரிய டான் மாதிரி பயங்கர பந்தா பண்ணுவான். எவனாச்சும் வேர்க்குதே வேர்வையில சட்டைகாலர் நனையுதேன்னு கைய கழுத்துக்கு பின் புறமா விட்டா போதும் நம்மாளு ஒன் பாத்ரூம்தேன். ஒரு நாள் வேற ஒரு நண்பரோட வண்டிய பிச்சை எடுத்து எங்கயோ போகவேண்டி வந்தது ( நாம இல்லை.அந்த நாதாரி - அந்த வேலையில நமக்குதேன் கீ ரோல் )

அந்த வண்டிக்காரன் வீடு ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருக்கு. தலைவாசல்ல பெரிய கேட்டு. நம்மாளு கேட்டை திறந்துக்கிட்டு போய் வண்டிய தள்ளி ஸ்டார்ட் பண்ணிட்டான். கேட் சாத்தியிருக்கு. நம்ம பக்கம் பார்த்தான் . அந்த பார்வைக்கு அர்த்தம் "கேட்டை திற"ங்கறது.

நமக்கு தான் இந்த போலி கமெண்டு மாதிரியே போலி கவுரதையும் பிடிக்காதே. ஒழிஞ்சு போனுட்டு கேட்டை திறந்துவிட்டேன். அம்புட்டுதேன்.

என்னாச்சுங்கறிங்க? நாம போன வேலை பத்து நிமிச வேலை . கழண்டுகிட்டோம். பார்ட்டி ஆரோ பார்ட்டி தராய்ங்க - ஓசில குடிச்சு கூத்தடிக்கலாம்னு இன்னொரு வில்லங்க பேர்வழியை சோடி போட்டுக்கிட்டு போயிருக்கான்.

திரும்பி வர்ர வழியில ஆக்சிடெண்ட். கூடப்போனவனுக்கு தாடை நகர்ந்து போச்சு. சவுக்குல என்னடா பேச்சாயிருச்சுன்னா கூட போன வில்லங்க பேர் வழி ஊரெல்லாம் கடன். நம்மாளா சரியான ஆள் காட்டி. இவன் எங்கயோ ஆள் காட்டிட்டான்யா.ப்ளான் போட்டு கூட்டுப்போய் மாட்டிவிட்டுட்டானு அகுடாயிருச்சு. அவன் பொயப்பை பார்க்கனுமே. நா.........றிருச்சு. ஃபைனான்ஸ் கொடுத்துக்கிட்டிருந்த பார்ட்டி ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துட்டான். இதுல டீஃபால்ட்டர் வேற.

ஆடி அமாவாசை ஸ்பெசலா ஒரு சில கவிதைகளை பதிவா போட்டிருந்தோம். ஒரு பார்ட்டி அம்மன் பக்தர்னு எஸ்டாப்ளிஷ் ஆன கிராக்கி. சரி இவ்ளோ பணம் விரயமாக்கறானே. பார்ஷியலா ஸ்பான்ஸர் பண்ணா இன்னம் ரெண்டு பார்ட்டிகளை பிக் அப் பண்ணி அம்மன் கவிதைகளை மலிவு பதிப்பா போட்டு சனத்துக்கு இலவசமா வினியோகிப்போம்னு ஒரு போஸ்ட் கார்டை தட்டிவிட்டேன். லோக்கல் பார்ட்டிதேன்.

பார்ட்டி கண்டுக்கிடலை. போடாங்கொய்யால ஒனக்கு கொடுத்துவைக்கலைன்னு விட்டுட்டன். ஆனால் காலப்போக்குல என்னாச்சுடான்னா சாவற வரை நாம இஷ்யூ போட்டப்ப எல்லாம் ரூ.500 மொழி எழுத வேண்டி வந்துருச்சு.இப்பம் அந்தாளு இல்லை.ஆனாலும் மகன் எழுதிக்கிட்டுதான் இருக்காப்ல.

நாம இன்டர் காஸ்ட் பண்ணிக்கிட்டு வெளிய வந்துட்டம். பெரிய அண்ணன், தம்பி எல்லாம் வெளி ஊரு. சின்ன அண்ணன் தான் வீட்ல .அவன் பொஞ்சாதி இம்சைக்கு அப்பா ஒரு ஓட்டல்ல சாப்பிடறதை வழக்கமா வச்சிருந்தாரு.

அந்த முதலாளிக்கு பெரியபெரிய பின்னணில்லாம் உண்டு. ஆனால் நமக்கு அதெல்லாம் கணக்கில்லை. நாம புள்ளையா இருந்தும் நம்ம அப்பனுகு இவன் சோறு போட்டானேங்கற ஃபீலிங் /கில்ட்டி நமக்கு. அந்த பக்கம் போறச்சல்லாம் இது ஞா வந்துரும்.

என்னாச்சுங்கறிங்க? அந்தாளுக்கு திடீர்னு பாடி பீடி மாதிரி ஆயிருச்சு. அந்தாளுக்குள்ள பெரிய பின்னணியில நாமளும் ஒரு அங்கம். அதனால நம்மை கேர் டேக்கரா போட்டு ஒரு நர்சிங் ஹோம்ல அட்மிட் பண்ணிட்டாய்ங்க. அங்கன நாமதான் பார்ட்டிக்கு சோறாக்கி போட்டோம்.

நானே நினைச்சுக்கறது " ஆத்தா.. இது இன்னா நியாயம்? ஆக்சுவலா அந்தாளு நல்லதை தான் செய்தான். அப்பனுக்கு சோறு போடவேண்டியது மகனா என் கடமை.அதை செய்யமுடியாத நிலைமையில காசு வாங்கிக்கிட்டு தான் போட்டான்னாலும் சோறு போட்டான். எனக்கு லேசா கில்ட்டி. இதுக்குப்போயி அவன் பாடியை ஏன் பீடியாக்கனும்.அவன் ஏன் அட்மிட் ஆகனும்.அவனுக்கு நானே ஏன் கேர் டேக்கரா போகனும். சோறாக்கி போடனும்னு ஆத்தாவை பல தாட்டி கேட்டிருக்கேன். பதில்தான் இல்லை.

இப்படியாகொத்த இன்சிடென்டுங்க நூத்துக்கணக்குல இருக்கு. 1986 ல தேன் ராம நாம ஜெபம் ஆரம்பிச்சோம். 2000 டிசம்பர் 23க்கு அப்பாறம்தேன் ஹ்ரீங்கார பீஜ ஜபம் ஆரம்பிச்சோம். ஆனால் விவரம் தெரியறதுக்கு மிந்தியே.. ரெம்ப சின்ன வயசுலருந்தே நம்மை ஆருனா சீண்டினா - தங்களோட
கண்ட்ரோல்ல கொண்டு வரனும்னு நினைச்சாலே பல்புதேன்.

இதுக்கு ஜோதிட ரீதியா என்ன காரணம்னு அப்பாறம் சொல்றேன். நான் நினைக்கிறது என்னன்னா நம்ம மைண்ட் க்றிஸ்டல் க்ளியரா இருக்கு. நேத்து இன்னைக்குல்ல அம்புலி மாமா,ரத்னபிரபா படிக்கிற காலத்துலருந்தே நம்ம கான்செப்ட் ஒன்னுதேன். கொய்யால .. சரித்திரத்துல நின்னுரனும். அதுக்கு எதுனா செய்துரனும்.

நாளைக்கு பரீட்சைன்னா இன்னைக்கு நோட்ஸ் இரவல் கேட்டாலும் தந்துருவன். இப்படி ஒரு எண்ணம் இருந்ததால இப்படி ஒரு பவர் ஏற்பட்டுதாங்கற சந்தேகமும் நமக்குண்டு. காமம் தலைக்கேறி இருந்த காலத்துல அட .. நாலணா தேவடியாளா இருந்தாலும் நம்ம மொத கேள்வி "சாப்டியா? ஹோட்டல் போலாமா வரவச்சுரலாமா"

ஒரு பன்னாடைன்னா பல்பு வாங்கி வாங்கி நொந்து நோக்காடா போயி - எத்தனை நாளு மனசுல வச்சு குமைஞ்சுதோ - வந்து கேட்டுருச்சு - நீ என்னமோ பண்றே - இந்த கேள்விய கேட்க தில் வர்ரதுக்கு ஒரு ஃபுல் அடிக்க வேண்டி வந்துருச்சாம்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான அனுபவங்கள். இதை வச்சுத்தேன் ஆடி அமாவாசை ஸ்பெசல்ல ஆத்தாளுக்கு

" உன் தாள் பிடித்தவர்களையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை அள்ளி அணைத்த கையை காட்டு"ன்னுட்டு கவிதை எழுதினோம்.

Wednesday, July 27, 2011

ரஜினியும் ஆனந்த விகடனும்



ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.

ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது "தம்பிக்கு எந்த ஊரு" படத்துல.

அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)

நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.

(அதென்னமோ எம்ஜியார் ரசிகரா இருந்தவுகல்லாம் ரஜினி ரசிகர்களா மாறிட்டாய்ங்க -என் அண்ணன் உட்பட. சிவாஜி ரசிகர்கள்? கமல் ரசிகர்களா? )

கமல் படத்துல பண்ணிக்கிட்டிருந்த "உணர்ச்சிகள்" மேட்டரையெல்லாம் நாம பிராக்டிக்கலாவே பண்ணிக்கிட்டிருந்தம் . இன்னம் பெட்டரா. மனித மனம் தன்னில் இல்லாததை /தனக்கு கிட்டாததைத்தான் கனவு காணும். அப்படி நாம ரஜினிக்கூட்டத்துல சேர்ந்துட்டம்.

நம்ம வெள்ளை தோலு/ ஜாதி காரணமாவோ .ஜீன்ஸ் காரணமாவோ மாஸுன்னாலே ஒரு உதறல் உண்டு. ஆனா ரஜினி படங்கள் -அதுல அவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாமே என்னை அடுத்த இருண்ட காலத்தை சந்திக்க சைக்காலஜிக்கலா ப்ரிப்பேர் பண்ணுச்சுனு சொல்லலாம்.

ரஜினிய இன்ஸ்பிரேஷனா வச்சுக்கிட்டு கஷ்ட காலத்துல அ ஒரு த்ரில்லுக்காக கல்யாண மண்டபத்துல பூவலங்காரம் பண்ணியிருக்கன் - அட்டெண்டரா ஒர்க் பண்ணியிருக்கேன் -பஸ் செக்கிங்கா பண்ணியிருக்கேன். ரஜினி மேலான அட்மைரேஷன் இல்லாம நம்ம ஃபேமிலி பேக் கிரவுண்டு /ஜாதகம் இத்யாதிப்படி மேற்படி அட்வென்சர் எல்லாம் செய்திருக்கவே முடியாது.

ரஜினியோட ஒவ்வொரு படம் .அவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும் விலாசம் சரியில்லாத தபால் கார்டுல போஸ்ட் மேன் மாதிரி கச்சா முச்சான்னு முத்திரை போட்டதென்னவோ வாஸ்தவம்.

ரஜினி பக்தர்கள் சொல்ற கண்டக்டர் டு சூப்பர்ஸ்டார் சித்தாந்தம் என்னை பெருசா கவரலை. என்னை கவர்ந்தது அவரோட வேகம் - அண்டர் ப்ளே - அவர் ஏற்ற பாத்திரங்களில் இருந்த ப்ராக்டிக்காலிட்டி. (இதெல்லாம் நம்ம கேரக்டர்ல கடியாது)

மிஸ்டர் பாரத் வரைக்கும் இந்த அட்மைரேஷன் கன்டின்யூ ஆயிட்டிருந்தது. அதுல ஏதோ ஒரு காட்சியில டீப்பாய்க்கு காங்கிரஸ் பார்டர்/ காமராஜர்/ராஜீவ் கணக்கா கெட்டப்பு இத்யாதி பார்த்து

தள்ளிக்கிட்டு போன குட்டிக்கு எய்ட்ஸுன்னு பலான நேரத்துல தெரிஞ்ச கணக்கா நொந்து பூட்டன்.

நம்ம காங்கிரஸ் எதிர்ப்புக்கும் நம்ம ஃபேமிலி பேக் கிரவுண்டுதேன் காரணம். நம்ம சித்தப்பா ஒருத்தர் கலைஞர் கருணா நிதியோட ஆளு. சின்ன அண்ணன் தேன் நமக்கு ஒரு வகையில ரோல் மாடல் மாதிரி. அந்த பாவியும் Anty congress தேன். எப்படி சகிக்கும்?

அப்பத்துலருந்து ரஜினிய கொஞ்சம் எட்டி நின்னே -சந்தேகத்தோடயே ரசிக்க ஆரம்பிச்சேன். நம்ம சந்தேகங்கள் உறுதியாகவே விலகிட்டம். இங்கன சம்பந்தா சம்பந்தமில்லாம ஒரு கதை.

ஒரு குரு ஒரு சிஷ்யன். எந்த ஊரு போனாலும் ஒரு ராவுக்கு மேல தங்க மாட்டாய்ங்க.ஒரு ஊருக்கு போனப்ப ஒரு செல்வந்தர் வீட்ல தங்கறாய்ங்க. மேற்படி செல்வந்தருக்கு ஒரு பெண். நின்னு விளையாடுது. குரு ஜொள்ளிட்டாரு. செல்வந்தரும் சக்தி வாய்ந்த பேரன் பிறப்பான்னுட்டு சம்மதிச்சிட்டாரு. கண்ணாலமாச்சு. குருவுக்கு ஒரு கொளந்தையும் பிறந்துருச்சு.

சிஷ்யன் தன் குருவுக்கு அவர் சன்னியாசத்துல இருந்தப்ப எப்படி சர்வீஸ் பண்ணுவானோ அதே மாதிரி சர்வீஸ் பண்ணிக்கிட்டிருந்தான். ஒரு நா குழந்தை படுக்கையிலயே கக்கா போயிட்டு அழுதுக்கிட்டிருக்கு. குரு சிஷ்யனை பார்த்து "சிஷ்யா! என் ஆடைகளை எப்படி சுத்தம் செய்வாயோ அப்படி இந்த குழந்தைய சுத்தம் பண்ணி கொண்டா"ன்னாரு.

சிஷ்யன் குழந்தைய தலை கீழா பிடிச்சு துணிதுவைக்கிற கல்லுல துணிய அடிச்சு துவைக்கிறாப்ல அடிக்க அது ரத்தம் கக்கி செத்துப்போச்சு.

என்னடா கொல்லைப்பக்கம் போன சிஷ்யனை காணோமேன்னு குரு வந்தாரு. சீனை பார்த்து பேஸ்தடிச்சு போய் நின்னுட்டாரு. அவருக்குள்ள பூர்வ ஞானம் வேக் அப் ஆய்ருச்சு. எடுரா தண்டத்தை /எடுரா கமண்டலத்தைன்னு தேசாடனம் புறப்பட்டுட்டாரு.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்னு நான் கவிதை எழுதினாலும் கடகம் எண்ணற்ற பன்முக பரிமாணங்களை கொண்டதுன்னு சனம் சொன்னாலும் நமக்குள்ள மேஜரா இருக்கிற இன்ஃப்ளுயன்ஸ் என்.டி.ஆர் அண்ட் ரஜினிதேன்.

வெற்றி வரிச்சதா என்.டி.ஆர் கணக்கா டிசிப்ளின் -பன்ச்சுவாலிட்டி - ராஜசம் - எட்செட் ரா. கொய்யால அங்கீகாரம் கிடைக்கலை அதுக்காவ போராடறமா? ரஜினி ஸ்டைலுதேன்.

என்னடா பிரச்சினைன்னா கதையில வர்ர குரு மாதிரி ரஜினியே தான் உபதேசிச்சிட்டிருந்த ரூட்டை விட்டுட்டு "பொயப்ப " பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.

நாம நகலுதேன். ஆனால் ரூட்டை மாத்த முடியாம கொஞ்சம் போல தவிச்சம். கடேசியில மாத்தவேண்டிய அவசியமில்லைன்னு முடிவு பண்ணிட்டம்.

ஒரு காலத்துல நம்மை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண ரஜினியோட பிற்கால "பொயப்பு" ஃபார்முலாவும் எங்கே நம்மை கவர்ந்துருமோங்கற பயத்துலதேன் ரஜினியை கிழி கிழின்னு கிழிக்கிறது.

கதையில வர்ர சிஷ்யனுக்குள்ளே ஊசலாட்டமில்லை. குரு தனக்கு தந்ததை குரு இழந்துட்டதை -அவருக்கு தர ட்ரை பண்றான்.

ஆனால் நமக்குள்ள ஊசலாட்டம் இருந்தது. (இப்பவும் இருக்கலாம்) அதை அவாய்ட் பண்ணத்தேன் ரஜினியிடமிருந்து பெற்ற அந்த வார்த்தைக்கடங்காத உணர்வை அவரில் தூண்ட முயற்சி பண்றோம்.

அது சரி இத்தீனி நாளு ரஜினியை திட்டின திட்டு திட்டாம கொத்து பரோட்டா போட்டுட்டு இன்னைக்கு என்ன இந்த வழியல்னு கேப்பிக. சொல்றேன்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களை முக்கியமா ரசிகைகளை நக்கலடிச்சு ஜெயகாந்தன் எழுதின "சினிமாவுக்கு போன சித்தாளு" கதைய உல்ட்டா அடிச்சு ரஜினி ரசிகன் -கண்ணீர் கதைங்கற தலைப்புல ஒரு கதை ஆனந்த விகடன்ல வந்ததுங்ணா அதைபடிச்சேன்.

சிவசங்கரி மதுவால் சீரழியறவன் கதைய " ஒரு மனிதனின் கதை"யா எழுதினாப்ல ரஜினி மேல அபிமானத்தால ஒரு ரசிகன் சீரழியற கதை இது. இதைப்படிச்ச ஒடனே கண்ணில் நீர் வராத குறை.

பிராமண இனத்தோட ஸ்பெஷாலிட்டியே இதுதான். அவிகளோட அஜீஸ் ஆனாலும் பொலி போடற நேரத்துல போட்டே தீருவாய்ங்க. இதுல டபுள் கேம் வேற சிங்கப்பூர்ல ரஜினி எக்ஸ்க்ளூசிவும் இதே இதழ்ல வந்திருக்கு. நடு நிலை வகிக்கிறதுன்னா இதான் போல. கற்பழிச்சுட்டு -கர்பம் கலைச்சுக்க மாத்திரையும் தராப்ல இருக்கு.

அந்த கதைய படிச்ச உடனே பதிவு போட்டா ரெம்ப உ.வ பட்டுருவம்னு அடக்கி வாசிச்சு இன்னைக்கு போடறேன்.

ஒரு ஆளுமைங்கறது சூப்பர் பஜார் மாதிரி.அதுல ஆயிரம் கொட்டிக்கிடக்கும். உன்னை அது கூப்பிடறதில்லை. நீயாதான் கவரப்பட்டு போறே . போறவன் நல்லதா நச்சுன்னு நாலு ஐட்டத்தை தள்ளிக்கிட்டு வெளிய வரனும்.

அதை விட்டுட்டு கக்கூஸு பயிட்டு, டூத் பேஸ்ட் மூடிகளை பொறுக்கிக்கிட்டு வந்துட்டா அதுக்கு அந்தசூப்பர் பஜாரா பொறுப்பு.

ஆனந்த விகடன்ல போடற பொம்பள படங்கள் கூட சில சமயம் வயாக்ராவ விட பயங்கரமா வேலை செய்யுது. அதை பார்த்துட்டு கண்டவ கைய புடிச்சு இழுத்துட்டா ஆனந்த விகடன் ஆசிரியரா வந்து ஜாமீன்ல எடுப்பாரு?

Friday, December 17, 2010

விஜய் தனிக்கட்சி பற்றி ரஜினி ரகசிய ஆலோசனை

டெலிகாம் ஊழலில் சிக்கி திணறும் திமுக,  விஜய் தனிக்கட்சி யோசனை இத்யாதி திருப்பங்கள் ரஜினியை குழப்ப தனக்கு பிடித்தமானவர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, சுப்பிரமணியம் ஸ்வாமி, எழுத்து சித்தர் பாலகுமாரன், கே பாலசந்தர் ஆகியோர் இறங்குகின்றனர்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு (மேலுக்கு) வாங்க பாலகுமாரன்..

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சோ: ஆமாம்..இங்கே ஆரம்பிச்சு எப்ப பாய்ண்டுக்கு வர்ரது.. நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .மேட்டர் தெரியுமில்லை ..டெலிகாம் ஊழல்ல திமுக சிக்கி தவிக்குது . விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கபோறாரு இந்த நேரத்துல ரஜினி என்ன செய்தா நல்லாருக்கும்னு ஒரு டிஸ்கஷன்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார். அதனாலதான் ஜெயலலிதா கூட கூப்டு ஐடியா கேட்கிறாய்ங்க

ரஜினி:(எழுந்து நின்று ) முதல்ல எல்லாரும் உட்காருங்க. மேட்டர் தெரியுமில்லை.. இத்தனை நாள் நான் சால்ரா போட்ட கலைஞர் தலைமையிலான திமுக டெலிகாம் ஊழல்ல  சிக்கி தவிக்குது. சினிமா உலகமே கலைஞர் குடும்பத்தோட பிடில இருக்குன்னு பிரச்சாரம் நடக்குது. ஆட்டைகடிச்சு மாட்டை கடிச்சு  விஜய் சினிமாவுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை .. இதே பாய்ண்ட்ல அவரு  தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறாரு. அன்னைக்கு மணி ரத்தினம் எடுத்த வில்லங்க சினிமாக்களால இர்ரிடேட் ஆன எவனோ வீசின வெடிகுண்டுக்கே இர்ரிட்டேட் ஆகி இனி தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பத்தனும்னு வசனம் விட்டேன்.. இப்ப மவுனமா இருந்தா நல்லாருக்காது. இந்த நேரத்துல நான் செய்தா நல்லாருக்கும்னு உங்ககிட்டே  ஐடியா கேட்கத்தான் இந்த டிஸ்கஷன்

சுப்ரமணியம் ஸ்வாமி: இன்னும் என்ன தயக்கம். நம்ம ஜனதா கட்சிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்கோ  சந்திரலேகாதான் முதல்வர் கேண்டிடட்டு நான் டிக்ளேர் பண்ணிர்ரன்..

ரஜினி:  கொஞ்சம் சீரியசா பேசுங்க சார். நீங்க எப்ப சீரியஸ் எப்ப காமெடின்னே புரியறதில்லை.

சு.ஸ்வாமி: என்னை மதிச்சு ஒரு எம்.பி சீட் கொடுத்துட்டா நான் காமெடி.. என்னை மதிக்கலைன்னா சீரியஸ்.

பாலசந்தர்: நீ எதையோ முடிவு பண்ணிட்டே . அப்புறம் எதுக்கு டிஸ்கஷன் டிச்க்சன் எல்லாம். ஆமா விஸ்வ நாதன் டைரக்சன் நடிக்கனும்னு சொன்னியாமே.. நம்ம கவிதாலயாவுக்கு ஒரு படம் பண்ணக்கூடாது

ரஜினி: வேணா சாரி நீங்க அமீர்ஜானை டைரக்ட் பண்ணவைப்பிங்க. நான் டூ ஆர் டை பொசிஷன்ல இருக்கேன். இப்பயாச்சும் எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் டெடிக்கேட்டடா யோசனை பண்ணுங்க

பாலகுமாரன்: பேசாம உடையார்  கதையில நடிக்கப்போறதா அனவுன்ஸ் பண்ணிருங்க. மீடியா மொத்தம் டைவர்ட் ஆயிரும்.

ரஜினி: சுல்தன் தி வாரியரே பாதில  நிக்குது. யந்திரன் நின்னுப்போயிருதேனு சன் பிக்சர்ஸ் கிட்டே மாட்டினேன். நல்ல வேளை பிக்சர் ப்ரமோஷனுக்காக தியேட்டர் காண்டீன்ல சமோசா விக்க சொல்லலை. ப்ளீஸ் .. எல்லாரும் என்னை உபயோகிச்சுக்கத்தான் பார்க்கிறிங்களே தவிர எனக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வார்த்தைனா பேசுங்க சார்

சோ : விஜய் படத்துக்கு தியேட்டர் கொடுக்கனும்னு உண்ணாவிரதம் அனவுன்ஸ் பண்ணிருங்க

ரஜினி: வேண்டாங்க. அப்புறம் விஜயகுமார் வந்து என் பக்கத்துல உட்கார்ந்துக்குவாரு அவங்க அந்தப்புறமே புற நகர் டம்ப் ஸ்பாட் மாதிரி நாறிக்கிடக்கு

ரஜினி:(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்.. ஜெயசுதாவோட அப்பாவை அடிச்சப்பயும் அதைத்தான் செய்தேன். ஹிந்தி ப்ரொடியூசருக்கு காலை உடைச்சப்பயும் அதைத்தான் செய்தேன். இப்போ எங்க போறது? (மேலுக்கு)  எனக்கு ரொம்ப . ரொம்ப குழப்பமா இருக்கு. ஓப்பனா சொன்னா பயம்மா இருக்கு.  விஜயகாந்த் எனக்கு நகலா வந்தவர். விஜய்  என் ரசிகன்னு வேற சொல்லிக்கிறவரு.. இவங்கல்லாம் ஸ்க்ரீனுக்கு வந்த பிறகும் நான் சும்மா இருந்தா எப்படி? ரசிகர்கள் டைவர்ட் ஆயிருவாங்களோ.. மக்கள் ரொம்ப கேவலமா நினைச்சுருவாங்களோனு பயம்.

சோ : நீங்க தான் இதுக்கெல்லாம் காரணம். பொதுக்கூட்டத்துல சாயந்திரத்துலருந்து நள்ளிரவு வரை தலைவர் வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறாருனு அனவுன்ஸ் பண்றமாதிரி பில்டப் பண்ணிங்க.. பொழுது விடிஞ்சி பல வருஷமாயிருச்சு.. இன்னமும் வருவேன்னு தான் சொல்லிட்டிருக்கிங்க

ரஜினி: ஓகே ஓகே எப்பவும் நியூஸ்ல இருக்கிறதுக்காக அப்படி பீலா விட்டது நிஜம்தான். ஆனால் இப்ப நிலைம வேற.

பாலகுமாரன்: சொந்த கட்சி ஆரம்பிச்சுருங்க.

ரஜினி: விஜய்காந்த் திராவிட கட்சிகளை கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டே இருக்கார் .அப்படியும் அவருக்கொன்னும் ஆதரவு பெருகலை. நான் ஜெயலலிதாவை வீர லட்சுமினு பாராட்டியிருக்கேன். கலைஞரை அவரே வெட்கப்படும்படியா பயங்கரமா புகழ்ந்து தள்ளியிருக்கேன்..

சோ: திமுக இப்போ மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல்..

பாலகுமாரன்: திராவிட கட்சிகள்ள சேர்ந்தா தானே கடந்த காலம் குறுக்க வருது .காங்கிரஸ்ல சேர்ந்துருங்க.

ரஜினி: யோவ் திமுகவாவது மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல். காங்கிரஸ் மூழ்கி போச்சுய்யா. அதனோட பிணத்தை தூக்க நாலு எம்.எல்.ஏ ஜெயிச்சு வந்திருக்கான்

சோ: நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிங்கோ.. நான் அதிமுகவோட கூட்டுக்கு ஏற்பாடு பண்றேன். எனக்கென்ன ஒரு ராஜ்யசபா எம்பி போதும்

சுப்ரமணியம் சுவாமி: நீங்க பா.ஜ.கல சேர ஏற்பாடு பண்றேன் எனக்கென்ன ஜஸ்ட் ஒரு எம்.பி

பாலசந்தர்:அதுக்கு முன்னாலே எனக்கு ஒரு டெய்லி சீரியலாச்சும் பண்ணிக்கொடு.  நானே டைரக்ட் பண்றேன் .அப்பத்தான்  பெண்கள் ஆதரவு  உனக்கு கிடைக்கும்.

பாலகுமாரன்: எனக்கென்னவோ உடையார்தான் பெஸ்ட் சாய்ஸுனு தோனுது

ரஜினி: யோவ் ஓடிப்போங்கய்யா .. சாதிபுத்திய காட்டிட்டிங்க .. எங்கப்பா சித்தூர் முருகேசன் .. ஆன்லைன் சாட்லயாவது கனெக்ட் பண்ணுங்கப்பா..

(ஆன்லைன் சாட்)

ரஜினி: ஹலோ!

முருகேசன்: யாரு ரஜினி அய்யரா?

ரஜினி: யப்பா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. நீயும் நோகடிச்சா எப்படி?

முருகேசன்: நீங்க சிவாஜி ராவ் சார்.. சிவாஜி மாதிரி பேசறிங்க

ரஜினி: நெலமை அப்டி.. என்னதான் நீ என்னை கச்சா முச்சான்னு திட்டி எழுதினாலும் உன் எழுத்துல என் மேல உனக்கெந்த அளவுக்கு அக்கறை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.

முருகேசன்:  கெட்டும் பட்டணம் சேர்ங்கற மாதிரி சனம் என் கிட்டே வராய்ங்க. தேறினதும் காணாம போயிர்ராய்ங்க. எனக்கு உங்க மேல பெருசா அக்கறையில்லை. உங்களை ஃபாலோ பண்ற யூத் மேலதான் அக்கறை .

ரஜினி: உனக்கு யார் மேல அக்கறையோ எனக்கு அக்கறையில்லை .இப்ப தலைக்கு மேல போயிருச்சு ஏதோ ஒன்னு பண்ணனும். இல்லைன்னா என்னை நானே கூட சகிச்சுக்க முடியாது..

முருகேசன்: ஓகே ஓகே.. உங்களுக்கென்ன சி.எம் ஆகனும்னு இருக்கா? இல்லை ஜஸ்ட்  சர்வைவல் ப்ராப்ளமா?

ரஜினி: என்னப்பா சூப்பர் மார்க்கெட்ல என்னவேணும்னு கேட்கிறமாதிரி கேட்கறே..

முருகேசன்: இலக்கு எதுன்னு தெரிஞ்சாதானே ரூட் மேப் போட முடியும்?

ரஜினி: ரெண்டுத்துக்குமே ரூட் மேப் போடுப்பா

முருகேசன்: சர்வைவல் போதும்னா எங்கஊரு பழைய லோக் சத்தா மாதிரி ஒரு அமைப்பை ஆரம்பிச்சுருங்க. சொந்த பத்திரிக்கை ஒன்னை ஆரம்பிச்சு கட்சி முக்கியமில்லை வேட்பாளர்தான் முக்கியம்னு ஸ்டாண்ட் எடுத்துக்கங்க. வேட்பாளர்களோட உண்மையான விவரங்களை சேகரிச்சி சொந்த பத்திரிக்கைல வெளியிடுங்க. உங்க சர்வேல நல்ல கிரேடிங்ல உள்ள வேட்பாளர்களோட பொசிஷன் வீக்கா இருந்தா   நேர்ல வந்து பிரச்சாரம் பண்ணுவேனு பயமுறுத்துங்க.

ரஜினி: எல்லா கட்சிலயும் கெட்டவங்க இருப்பாங்களே..

முருகேசன்: எல்லா கட்சிலயும் நல்லவங்களும் இருப்பாங்களே. மேலும் நீங்க தேர்தலுக்கு முன்னாடியே நெட் ஒர்க்கை ஆரம்பிச்சுட்டா எல்லா கட்சியும் உங்களுக்கும்,உங்க அமைப்புக்கும் பயந்து சுமாரான வேட்பாளர்களா பார்த்து டிக்கெட் கொடுப்பாய்ங்க

ரஜினி: பரவால்லை. டேமேஜ் குறைவாதான் இருக்கும். இது  ஓகே. ஒரு வேளை முதல்வராகிறதுதான் இலக்குன்னா?

முருகேசன்: டேமேஜ் அதிகமா இருக்கும். பரவால்லை.

ரஜினி: இதை கேட்கிறதுல எதுவும் டேமேஜ் வந்துராதில்லையா சொல்லுப்பா.

முருகேசன்: மொதல்ல உங்க சொத்தை குடும்ப உறுப்பினர்கள் எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்துருங்க. அதை பப்ளிக்கா அனவுன்ஸ் பண்ணுங்க. உங்க சொத்துல சம் பர்சண்டேஜ்ல   நல்ல சினிமாவை ப்ரமோட் பண்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துங்க அதுக்கு தலைவரா கமல் ஹாசனை போடுங்க

ரஜினி: வெரி குட். அப்புறம்?

முருகேசன்: பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேட்கிறமாதிரி  நீங்க நாளிதுவரை என்னெல்லாம் தப்பு பண்ணிங்களோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி  அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அதுக்கு பரிகாரமா அந்த தப்புகளை திருத்தத்தான் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு ஒரு ஏழெட்டு பாஷைல புஸ்தவமா போடுங்க. ட்ரான்ஸ்லேஷனுக்கு வேணம்னா அய்யரு பசங்களை சேர்த்துக்கிருங்க. அதெல்லாம் கரீட்டா பண்ணுவாய்ங்க. ரேட் தான் காஸ்ட்லியா இருக்கும். அதை ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ல லெஸ்ஸர் ப்ரைஸ்ல ரிலீஸ்பண்ணுங்க (உ.ம் புஸ்தவம் மலிவுப்பதிப்பு ரூ. 20 டிவிடி: 20 ) கட்சி ஆரம்பிக்கப்போறதேதிய டிக்ளேர் பண்ணீருங்க
உங்களோட அஜெண்டாவா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அறிவிச்சுருங்க..

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ரஜினி: ....................

முருகேசன்: ஹலோ ஹலோ ஹலோ...

ரஜினி: ................

(முருகேசன் உடனே ராகவேந்திரா கல்யாணமண்டபத்துக்கு  ஃபோன் செய்து ரஜினி சாருக்கு என்னாச்சு பாருங்கங்கறார். அங்கிருந்து வந்த பதில் "ஒன்னும்மில்லிங்க மயக்கம் போட்டுட்டாரு )

எச்சரிக்கை: மேற்படி உரையாடல் யாவும் என் கற்பனையே.

Thursday, October 21, 2010

ரஜினியும் (அய்யரும்) ஃபில்ட்டர் காஃபியும்

ரஜினி மேட்டர்ல என்னதான் அடக்கிவாசிக்கனும்னு நினைச்சாலும் ரஜினி பக்தர்கள் விடமாட்டாய்ங்கபோல. இன்னைக்கு "ரஜினி  எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!"  ங்கற பதிவு நம்ம கண்ணுல பட்டுது. ரெம்ப டீப்பா போகாம ஒரு வரி ரெண்டு வரி கமெண்டுல கதைய முடிச்சுர்ரண்ணே.

//என்டிடிவி – இந்துவில் ரஜினி எனும் அதிசயம்: சூப்பர் ஸ்டார் பவரா அல்லது அசுரத்தனமான மார்க்கெட்டிங்கா? //ங்கற தலைப்புல ஒரு டிஸ்கஷன் நடந்திருக்கு. அதை பார்ட்டி கிழிச்சிருக்காரு. இந்த வில்லங்கத்தனமான  டிஸ்கஷனே ஒரு அசுரத்தனமான மார்க்கெட்டிங்க் தான். எத்தனையோ நல்ல படம்லாம் வந்திருக்கு. அதுக்கெல்லாம் இப்படி ஒரு டிஸ்கஷ்ன் நடக்குமா? காது.

//இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை// இந்த பாய்ண்டை நானே பல தடவை சொல்லியிருக்கேன். இந்த தாட்டி  ஒரே ஒரு வரியை  சேர்த்து சொல்றேன். ஏகத்துக்கு சிலும்பி அலம்பல் பண்ணும் சில தக்கை மேட்டருங்களால தான் //இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை//. யந்திரனோட இரைச்சலால எத்தனையோ காற்றினிலே வரும் கீதங்கள் ரசிகர்கள் செவிகளை அடைய முடியாதே போயிருச்சுங்கண்ணா.

//எம்ஜிஆர் என்ற மனிதர் பிறப்பால் மலையாளத்தவராக இருந்தாலும், வளர்ப்பால், உணர்வால் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். தமிழர் திருநாளை மட்டுமே கொண்டாடினார், தமிழிலேயே எம்ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போட்டார். அவரை மக்கள் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைத்துவிட்டனர்.//

எம்.ஜி.ஆர் புலி. அந்த புலியை பார்த்து எத்தினியோ நரிங்க சூடு போட்டுக்குச்சு. ஒரு ம....ரும் பேரலை.ஏண்டான்னா எம்சியாரு ஒன்னு அட்வான்ஸா ப்ளான் பண்ணி செய்துருக்கனும் அ அவருக்குள்ள ஒரு சின்சியாரிட்டி நெஜமாலுமே இருந்திருக்கனும்.

ரஜினி ஆந்திரா போனா என்.டி.ஆர், ஏ.என்.ஆர், கர்னாடகா போனா ராஜ்குமார், இங்கன வந்தா எம்சியார் சிவாஜி, மஹாராஷ்டிரா போனா பால் (பல் போன) தாக்கரேனு  அந்தர் பல்ட்டி அடிக்கிறாருங்களே அதையும் சொல்ல வேண்டியதுதானே..

//ஆனால் அறிவு ஜீவிகள் என்ற மக்கள் விரோத கூட்டமிருக்கிறதே… அது அவரை விமர்சனம் என்ற பெயரில் அவமானப்படுத்தியது கொஞ்சமல்ல. //

விமர்சனங்கற வார்த்தையையும் உபயோகிச்சுட்டு அப்பாறம்  அவமானப்
படுத்தியதுங்கற வார்த்தை எதுக்கு?

நாலு பேர் தூக்கிப்பிடிக்கறதாலயே அவிக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவுக ஆயிருவாய்ங்களா என்ன?

//ரஜினி படங்களை ரஜினிக்காக மட்டுமே பார்க்கிறார்கள் ரசிகர்கள்//
அப்ப என்ன மயித்துக்கு ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கருனு கூட்டு சேர்ரது, என்ன மயித்துக்கு சன் பிக்சர்ஸ் ஷூவை நக்கறது?

பேசாம ஸ்ரீராகவேந்திரர்,வள்ளினு எடுத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதானே. சினிமாங்கறதே டீம் ஒர்க் பாஸ்.

ஆனந்த விகடன்ல  நம்ம கண்களை ஐஸ்வர்யாவை விட்டு ரஜினி பக்கம் திருப்பவே முடியலைனு விமர்சனம் எழுதியிருக்காய்ங்களே.. அதுக்கும் ஒரு பதிவு போடுவிங்களாண்ணா

//ஆனால் சாமியே இல்லாமல் வெற்றாக ஒரு கோயிலிருந்தால், விழா எடுத்தால்… யாராவது வருவார்களா?//

மசூதி,சர்ச்லல்லாம் இப்படித்தான் பண்றாங்கண்ணா.

//ஞாநி, சுதாங்கன் வகையறாக்கள் சாமியை விட்டுவிட்டு பூசாரியை பூஜிக்கிற மூடர்களைப் போலவே பேசுகிறார்கள். //

என்னங்கண்ணா படக்குனு ட்ராக் மாறிட்டிங்க ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கரு,சன் பிக்சர்ஸையெல்லாம் ஒயிலாட்டம் ரேஞ்சுக்காச்சும் சொல்லிக்கிட்டிருந்து படக்குனு பூஜாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டிங்க?

//ரஜினிக்கு எதிரான வயிற்றெரிச்சல் கோஷ்டியின் மொத்தப் பிரதிநிதிகளாகவே இந்த இருவரும் வந்திருந்தனர்.//

ரஜினிக்கும் எங்களுக்கும் வரப்பு தகராறு வாய்க்கா தகராறா இருக்கு.வயிறெரிய. மனுஷன்  நாசமா போறாரே, புலி மேல சவாரி பண்றாரே அந்த புலியே தின்னுரப்போகுதுங்கற பரிதாபம் தான் . மேலும் கூவற கழுதை மேயற கழுதைய கெடுத்த கணக்கா ஒரு லீடிங் பர்சனா இருந்துக்கிட்டு தானும் கெட்டு தன் பின்னால வரப்போற ஹீரோக்களையும்  படங்களையும் கெடுக்கறாரேனு ஒரு ஆதங்கம்

//சொந்தக் காசில் போய் யாராவது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றைச் செய்வார்களா? //

நிச்சயமா செய்வாய்ங்க. ( நானே மிட்டாய் இறைச்சிருக்கேன்) எதுவரை? 20 வயசு வரை, மிஞ்சிப்போனா 30 வயசுவரை. அரிசி,பருப்பு விலை தெரிஞ்சவன் தெரிஞ்ச பிற்பாடு செய்வானா? அப்படியும் செய்தா அவனுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருக்குனு அர்த்தம்.

//பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டனவாம்.//
இல்லையா பின்னே. அன்னைய தேதிக்கு கலைப்புலி இன்டர் நேஷ்னல்ஸ் தான் கார்ப்போரேட் கம்பெனி. கலைப்புலி தாணு கொடுத்ததுதானே சூப்பற ஸ்டார் பட்டம்.

இதைப்பத்தி ஒரு பதிவே போட்டிருக்கேன் படிச்சு பாருங்க "ரஜினிக்கு ஒரு சவால்" ( ச்சொம்மா கூகுல்ல அடிச்சி தேடுங்க வாத்யாரே)


//ஆஹா, ரஜினியையே எதுத்துப் பேசறான் பாருய்யா” என்று பெயர் வாங்க நினைக்கும் அற்ப புத்தி இது.//

அய்யோ அய்யோ .. (வடிவேலு மாடுலேசன்)  இன்னைக்கு எதிர்ப்பு நாளைக்கே வீரலட்சுமிங்கறதெல்லாம் காமெடி பீஸு குரு! அதை போயி எதுக்கவேண்டியிருக்குதேனு வருத்தம் தேன்.

//முத்து, படையப்பாவின் வெற்றிக்கு காரணம் என ஒன்றைச் சொன்னார் பாருங்கள் அந்த ‘அஞ்ஞாநி’… உண்மையாகவே பக்கென்று சிரித்துவிட்டேன். அதுவும் மீனா, ரம்யா கிருஷ்ணனுக்காகத்தான் ஜப்பானின் அந்தப் படங்கள் ஓடின என்கிறாரே… இதைவிட முட்டாள்தனமான வாதம் இருக்க முடியுமா?//

பார்க்க: ஆனந்த விகடன் விமர்சனத்திலிருந்து நான் கொடுத்துள்ள குறிப்பை. ரஜினி என்னைக்காச்சு ஸ்டார் நைட் பண்ணியிருக்காரா? ரஜினியோட வீச்சு ஒரு விதம் .ரம்யா மீனாவோட வீச்சு ஒரு விதம் இதைத்தான் ஞானி சார் அனலைஸ் பண்ணியிருக்காரு

//இந்திய நாட்டின் பிரதமரே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் ரஜினியை வானளாவப் புகழ்ந்து, ‘இந்திய – ஜப்பானிய கலாச்சார உறவுக்குப் பாலம் எங்கள் நாட்டு ரஜினி’ என்று கூறினாரே, அதெல்லாம் இந்த அசட்டு ஆசாமிகளுக்குத் தெரியுமா..?//

யாரு.. நம்ம பிரதமரா .. கொஞ்சம் இருங்க வாய் விட்டு சிரிச்சிக்கிறேன். ஆந்திராவுல ஜகன் போர்கொடி தூக்கினதுமே சிரஞ்சீவிய கூப்டு சரண்டர் ஆன பார்ட்டிங்கப்பா.. நாளைக்கு என் கையில பத்து எம்.எல்.ஏ இருந்தா அ பத்து பேரை எம்.எல்.ஏ ஆக்கற சரிஸ்மா இருந்தா என்னையும் பாலம் ,ஓவர் பிரிட்ஜுனு சொல்லுவாய்ங்கப்பா. (சோகம் என்னடான்னா ரஜினியால  ஒரே ஒரு கவுன்சிலரை ஜெயிக்க வைக்கமுடியாது.. - அவரு பார்ட்டி வைக்க ஆத்துல ஒத்துக்க மாட்டாய்ங்களே..)

//நீலாம்பரியாக யாரும் நடிக்கலாம்… ஆனால் படையப்பாவாக ரஜினி மட்டுமே நடிக்க முடியும்//

ஆ...........மா படையப்பா தில்லானா மோகனாம்பாள் ஷண்முக சுந்தரம் மாதிரி ஒரு ஜீவனுள்ள படைப்பு. அதுல ரஜினி மட்டுமே நடிக்க முடியும்.

//இதே எந்திரன் ஓடாமல் போயிருந்தால்//

அப்படித்தானே தகவல்

//ஆனால் ரஜினி மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நடிகராகவே இருக்கிறார். //

தபார்ரா சில காலம் ராமராஜன் கூட டாப்புல இருந்தாருப்பா

உலக திரையுலகம் இருக்கட்டும்.. லோக்கலை பார்ப்போம்.

//வட இந்தியர்கள் ரஜினிக்கும் ஷங்கருக்கும் தலை வணங்குகிறார்கள்.//

அப்ப ஏங்கண்ணா  எந்திரன் இந்தி பட போஸ்டர்ல ரஜினி  மூஞ்சி என்ன  ,பேரை கூட போடலியாமே சன் பிக்சர்ஸ் காரவுக

//இந்த விவாதத்தின் முடிவில், “ரஜினி என்ற நட்சத்திரத்தின் பவர்தான் இன்றைய வெற்றிகளுக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!” என்று கூறி எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரி பூசினார் தொகுப்பாளர் சஞ்சய்.//

இதுக்கு பேர்தாங்கண்ணா அசுரத்தனமான மார்க்கெட்டிங்

//எப்போதெல்லாம் ரஜினி பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போது டிஆர்பியும் கூடுகிறது.//

அண்ணா .. நான் இதுவரை 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கேன் ஆனா லதாரஜினிகாந்தும் என் எதிரிகளும்ங்கற பதிவு தான் சூப்பர் ஹிட். இதுக்கு என்ன அர்த்தம்னா ரஜினிக்கு அந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்குனு அர்த்தம்

//அதுதான் ரஜினி சாரின் பவர்//

இல்லிங்கண்ணா ரஜினி சாருக்குள்ள எதிர்ப்புக்கான பவர்

//தமிழ்நாட்டையும் இரண்டு விஷயங்களையும் பிரிக்கவே முடியாது. அவை ஃபில்டர் காபி… ரஜினிகாந்த்!” என்றார் சஞ்சய்.//

ரஜினி காந்து சரிங்கண்ணா ( அவிக மார்க்கெட்டிங் உத்தேசமே அதான்) அதென்னா ஃபில்ட்டர் காபி ? அய்யரம்மாவை மணந்து மகளை மடில உட்கார்த்தி வச்சு தாரை வார்த்து கொடுத்ததால ரஜினியை அய்யராவே ஆக்கிட்டிங்களா?


படிக்கவும்: ரஜினி அய்யராத்து திருமணம்

அப்போ அவரோட குண்டி சூட்டை தாங்கி தூக்கி வச்சு ஆடின சூத்திரனுக்கெல்லாம்  அஸ்கு புஸ்குதானா?