Wednesday, December 8, 2010

பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக

இது ஆண்கள் உலகம்
இன்னைக்கு பெண் சுதந்திரத்தை  கண்ட மேனிக்கு  விமர்சிக்கிற ஆண்கள் நிறைய இருக்காங்க. அவிகளையெல்லாம் ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாம். 1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக. 2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக ( சுகம்னா "பலான"சுகம் மட்டுமில்லிங்கண்ணா சகல சுகங்களும். இது ஏன் இப்படினு கேப்பிக.சொல்றேன்.

1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக:
இவிகளுக்கு ஒரு சீக்ரெட் தெரியாது.  பெண்ணுக்குள்ள இருக்கிற ரெண்டு பெண்கள்ள ஆரை இன்வைட் பண்றதுங்கற சாய்ஸ்ல தப்பான சாய்ஸை ஆப்ட் பண்ணி  இவிக தலைக்கு இவிகளே கொள்ளிவச்சுட்டாய்ங்கங்கறது தான் அந்த சீக்ரெட்.

அடிப்படை காரணத்தை விட்டுட்டு ஸ்தூலமான காரணங்களையெல்லாம் காரணங்களாக்கிக்கிட்டு அவளை படிக்க வச்சது தப்பு, வேலைக்கு அனுப்பினது தப்புன்னு இவிகளே கற்பிதம் பண்ணிக்கிட்டு இப்படி விமர்சிக்க  ஆரம்பிப்பாய்ங்க.

ஹவுஸ் வைஃப்ல எத்தீனி பொம்பளை புருசனை நடுத்தெருவுல நிக்க வச்சுட்டு   ஓடியிருக்கு தெரியுமா? எத்தீனி ஆஃபீஸ் கோயர்ஸ் இன்னைக்கும் வேலை வெட்டியெல்லாம் தள்ளி வச்சுட்டு தங்களோட தலைவலிய,கால் குடைச்சலை போஸ்ட் போன் பண்ணிக்கிட்டு  புருசனுக்கு தைலம் தேச்சு விடுறாய்ங்க தெரியுமா?

பாஸூ! லைஃப்ல ஒரே ஒரு பாயிண்டை நெல்லா புரிஞ்சிக்கனும். ஒருத்தியோட/ஒருத்தனோட செயல்பாட்டுக்கும் அவனோட ஜீன்ஸ்,என்விரான்மென்ட்,படிப்பு இத்யாதிக்கும் தொடர்பிருக்கிறாப்லயே இருக்கும். ஆனால் அதெல்லாம் சொம்மா ஒட்டடை மாதிரி . அவனுக்குள்ள/அவளுக்குள்ள ஒரு ஸ்ட்ராங் வில் வந்துருச்சுனு வைங்க இந்த ஜீன்ஸ் /என்விரான்மென்ட் எல்லாம் நாலு காலையும் தூக்கிரும்.

லைஃப்ல எல்லாமே இன்டர் லிங்க்ட் போல தோணும். ஆனால் எல்லாமே தனி தனி நைனா. பெண் இம்சை பண்றது தனி. அவள் ஹவுஸ் வைஃபா ,ஆஃபீஸ் கோயராங்கறது தனி . நீ ஏன் மெனக்கெட்டு ரெண்டையும் போட்டு குழப்பிக்கிறே.

ஒரு வீட்ல வாடகைக்கு  குடியிருந்தப்போ ( எப்போ,எந்த வீட்லன்னு டீட்டெய்ல் வேணா பாஸ் மறந்துட்டன்) கோ டெனன்ட் தம்பதி. பொம்பளை மேட்டர் எவ்ரி திங்க்  பிலோ ஆவரேஜ் தான்  . இதுல  வெண் குஷ்டம் வேற. புருசங்காரன் மூட்டைத்துக்கும் தொழிலாளி. கட்டையா குட்டையா இருப்பான்.ரூ.20க்கு மிஞ்சி குடிக்கவே மாட்டான். காசை அப்படியே கொண்டாந்து பொஞ்சாதிக்கிட்ட கொடுத்துருவான். அவனை அந்த பொம்பளையும் அவளோட ஆத்தாக்காரியும் போட்டு குடாய்வாய்ங்க பாருங்க . சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்

இதே இன்னொரு உதாரணம் சொல்றேன். பையன் வெத்துவேட்டு. கொஞ்சம் போல பூர்வீக சொத்து.அதுல ஆயிரம் வெட்டுப்பழி குத்துப்பழி. இவனை ஒரு பெண் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிருச்சு. பத்து நாள்ள தெரிஞ்சு போச்சு. புருசங்காரனை நம்பியிருந்தா பட்டினிசாவு  நிச்சயம்.வேலை தேட ஆரம்பிச்சுருச்சு. கொஞ்ச நாள் ப்ரைவேட்டா DTP ஆப்பரேட்டர். அப்பாறம் இ.பில டெம்ப்ரரி . அப்பாறம் ஏதோ பரீட்சை எழுதி பர்மெனன்ட் ஆச்சு. இன்னைக்கு 3 பெண் குழந்தை. இன்னைக்கும் புருசங்காரன் பத்து ரூபா சம்பாதிச்ச பாடில்லை. அவனுக்கு ஏகப்பட்ட ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இந்த பொண்ணு பாவம் இன்னைக்கும் எல்லா இம்சையையும் பல்லை கடிச்சு சமாளிச்சுக்கிட்டு குடும்பத்தை ஓட்டிக்கிட்டே தான் இருக்கு.

இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு பாருங்க. பெண் சுதந்திரத்தால ஒருத்தி புதுசா கெட்டுப்போறதுமில்லை. கெட்டு குட்டிச்சுவராகவேண்டியவ வீட்டுக்குள்ளாற சிறைவச்சா மாத்திரம் கெடாம இருக்கப்போறதுமில்லை.

பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிறவங்கள்ள அடுத்த க்ரூப்பை பார்ப்போம்.

2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக:
இவிக நினைப்பென்ன நம்மாளு படிக்கலை,வேலைக்கு போல அதனாலதான் அந்த அளவுக்கு அடங்கி ஒடுங்கி நம்மை சுகப்படுத்தினாள். பாஸ் மொத க்ரூப்புக்கு சொன்ன ரெண்டு உபகதைகளையும் ஒரு ஓட்டம் ஓட்டுங்க மேட்டர் வெளிய வரும்


பெண்ணை, பெண் சுதந்திரத்தை  விமர்சிக்கிற ஆணை,  வடிகட்டின முட்டாள்னுதான் சொல்வேன்.ஏன்னா உன் வாழ்க்கை போராட்டத்துல சக போராளியா இருந்திருக்க வேண்டிய பெண்ணை  போர்களத்துலருந்தே விலக்கி வச்சவன் நீ. நிஜமா இருந்த அவளை நிழலாக்கினவன் நீ  ( அல்லது உங்கப்பன்,தாத்தன் ,பாட்டன் ,பூட்டன்)  அந்த நிழலுக்கு பயந்து நடுங்கறதும் நீ.

மனிதமனம் கூட ஒரு வாய்க்கால கரை புரண்டு ஓடற தண்ணி மாதிரிதேன். அதனோட ஓட்டத்துக்கு தடை ஏற்பட்டா தேங்கின மாதிரியே இருக்கும். ஆனால் எங்கனயோ பிச்சிக்கிடும். தனக்குன்னு ஒரு பாதைய  போட்டுக்கிட்டு அதும்பாட்டுக்கு ஓடிப்போயிரும்.

கற்கால வாழ்க்கைல உடல் பலம் பெற்றவன் தான் தலைவன். சக்கர நாற்காலிலல்லாம் வந்தா பொளப்பு நாறிப்போயிரும் .கூட்டத்துல வெள்ளம்,பூகம்பம், குரூர மிருகங்களோட வரவை கெஸ் பண்ணக்கூடிய அளவுக்கு ஓரளவு சூட்சும புத்தி கொண்டவனை அவன்  பலகீனனா இருந்தாலும் தலைவன் கிட்டே சேர்த்துக்கிட்டிருப்பான்.  இந்த அட்வைசர் பொசிஷன்ல உள்ளவன் தனக்குனு ஒரு அஜெண்டா வச்சுக்கிட்டு டெவலப் ஆகியிருப்பான்.தன் வாரிசுகளையும் தயார் படுத்தியிருப்பான். அவன் தான் பிராமணன். உலக நாடுகளின் சரித்திரத்துல எந்த இனத்துல பார்த்தாலும் இதை போல ஒரு க்ரூப் நிச்சயமா இருக்கும்.

இவிக ஃபிசிக்கலா வீக்.ஆனால் மென்டலா ஸ்ட்ராங். கற்கால வாழ்க்கைலயாகட்டும்,சஞ்சார வாழ்க்கையில ஆகட்டும் பெண் ஃபிசிக்கலாவும் ஸ்ட் ராங்கு, மென்டலாவும் ஸ்ட்ராங்கு தேன். ஸ்திர வாழ்க்கை வர்ரச்ச  ரிலாக்ஸ்ட்  செக்ஸ் - பெண்ணின் செக்ஸ் பவர் குறித்த ஞானம் - 7-23 மேட்டர் பாஸ் - பன்முறை உச்சம்- தனியார் சொத்து -வாரிசு பிரச்சினை  எல்லாம் வந்ததும் பெண்ணோட யோனிய லாக் பண்ணி வைக்க முடியாத கையாலாகாத ஆண்கள் கூட்டம் அவளையே பூட்டிவைக்க ஆரம்பிச்சிருக்கலாம்.

ஒரு சில தலைமுறைகளுக்கு பின்னாடி பெண் ஃபிசிக்கலா வீக் மென்டலா ஸ்ட் ராங்குங்கற நிலை வந்திருக்கலாம். இந்த அட்வைசரி கூட்டமும் இதே கேட்டகிரிதான்.  அவிக மைண்ட்ல என்னா ஓடுதுன்னு தாய்குலம் கெஸ் பண்ண, தாய்குலத்தோட மனசுல என்ன ஓடுதுன்னு அவிக கெஸ் பண்ண ஒரு டக் அஃப் வாரே நடந்திருக்கலாம்.

கூட்டத்தலைவன் , இப்படி பெண்கள் - அப்படி ஆலோசகர்கள் இடையில மாட்டி வதை பட்டிருக்கனும். எப்படியோ தலைவன் ஆலோசகர்கள் பக்கம் சாஞ்சுருக்கனும். அங்கன ஆரம்பிச்சதுதான் பெண்ணுக்கு எதிரான அமைப்பு ரீதியிலான  அடக்குமுறை .

நீங்க வேணா கவனிச்சு பாருங்க. எவன் வத்தலும் தொத்தலுமாவோ அல்லது மைதாமாவு பொம்மை மாதிரி மழமழன்னோ ,பூ மாதிரி கை, காலோட இருக்கானோ அவன் தேன் பெண்டாட்டிய நச்சு கொட்டிக்கிட்டே இருப்பான். அவளை கமாண்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். ஏன்னா இவனும் அவளும் ஒரே சாதி. ஃபிசிக்கலா வீக்கு, மெண்டலா ஸ்ட்ராங்கு.

இதுவே கரடு முரடா, கரணை கரணையா புஜமும், புஜபல பராக்கிரமுமா இருக்கிறவன் பொஞ்சாதிய ம..ரு கூட கண்டுக்கவே மாட்டான். பூஞ்சைகளின் க்ரூப் பூவையர் மீதான அச்சத்தால் அடிக்கல் நாட்டி எழுப்பிய சிறைதான் பெண்களுக்கெதிரான  அமைப்பு ரீதியிலான  அடக்கு முறை.

இது தூள் தூள் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. பூஞ்சைங்க புஷ்டியாகனும்.
தாஷ்டிகமாகனும். இல்லைன்னா அடடா நாம இவியளை அடிமைப்படுத்த நினைச்சா இவியளை நமக்கு சமமா , நம்மை இவியளுக்கு சமமா  நினைக்கிறோம்னு அர்த்தம் - இப்படி  ரியலைஸ் ஆகனும் .

ஆண் ஆண்தான். பெண் பெண் தான். அவர்களுக்கான சிறப்பான பலங்களும் உண்டு பல்கீனங்களும் உண்டு. இவிகளை ஒப்பிடறதே முட்டாள்தனம்.ரெண்டும் இரு வேறு பிரக்ருதிகள்.

நான் என்ன சொல்லவரேன்னா தாளி ஆண்கள்ள ஆண்மை தீர்ந்து போச்சு. நீங்களும் பெண்களா மாறியாச்சு. இன்னம் என்னத்துக்கு இந்த கெத்து?

இத்தீனி நூற்றாண்டு காலமா நீங்களே சட்டம் போட்டிங்க, நீங்களே நீதி வழங்கினிங்க, நீங்களே ஆண்டிங்க, நீங்களே யுத்தங்கள் செய்திங்க. நீங்களே இந்த பூமிய அழிச்சு பழஞ்சோறாக்கிட்டிங்க.

நீங்களே அவளை அடிமையாக்கினிங்க. நீங்களே அவளோட சுதந்திரத்தை பத்தி பேசினிங்க .போராடினிங்க. அதை ரேஷன்ல தந்திங்க. அவளோட கருத்தை,ஆடையை, அவளுக்கான பத்திரிக்கை ஏன் அவளுக்கான காப்பர் டி, கேர் ஃப்ரீய கூட நீங்களே தயாரிச்சிங்க.

சனத்தொகையில பாதியா இருக்கிற அவிக கருத்தை தெரிஞ்சிக்கிடாம,அவிகளோட மனப்பூர்வமான பங்கு இல்லாம, பங்களிப்பு இல்லாம ஒரு ம..ரும் பிடுங்க முடியாது. இன்னைக்காச்சும் கேளூங்கப்பா. அவள் என்ன நினைக்கிறான்னு.

பெண் எழுத்தாளர்கள்,பெண் கவிஞர்கள் எல்லாம் ஆண் எழுத்தாளர்கள்,ஆண் கவிஞர்களோட போலிகள். அவிக கருத்துக்கும் மூலம் ஒரு  ஆண் தான்.

அதோ அவளை பாருங்க ஸ்தூலமா பார்த்தா டிவி சீரியல்ல மூழ்கி கிடக்கறாப்ல தான் தோணுது ஆனால் அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?

அதோ அவளை பாருங்க அட்சய திரிதியை விளம்பரத்தை பார்த்து முண்டியடிக்கிற கூட்டத்துல முன்னேறிக்கிட்டிருக்காளே அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா? அந்த மன ஓட்டத்துக்கான ஆரம்ப புள்ளி எதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?

அவளுக்கு தேவை என்னன்னு நான் தீர்மானிக்க விரும்பலை. ஆனால் உங்களோட முதலைக்கண்ணீரும், அக்கா தங்கச்சி சென்டிமென்ட் மட்டுமில்லைன்னு மேசைய தட்டிச்சொல்லமுடியும்.

அவளை அடிமையாக்க பார்த்தா அடிமை என்னைக்கு புரட்சி செய்வாளோனு அஞ்சி நடுங்கனும். நீங்க அவளை அடிமையாக்கி வச்சிருக்கிங்களா  நீங்க  அவள் கழுத்துல போட்டுவச்ச கற்பு இத்யாதி சங்கிலி கண்ணிகளால உங்களை அவள் அடிமையாக்கிவச்சிருக்காளா ரோசனை பண்ணுங்க பாஸு..

இது பயணம்யா.. அதுவும் மரணத்தை நோக்கின பயணம். அவள் சகபயணி. இது யுத்தம்யா? சாவின் நிழல்களோட பண்ற யுத்தம். சாவை நோக்கிய ஃபாஸ்ட் அப் இந்த யுத்தம். இதுல சக போராளிய்யா அவள்.

அவள் இந்த பயணத்தை பத்தி என்னதான் நினைக்கிறாள்னு கேட்டுப்பாருங்கய்யா.. இந்த வெத்து யுத்தத்தை பத்தி என்னதான்  நினைக்கிறான்னு  கேட்டுப்பாருங்கய்யா..

எல்லாம் முடிஞ்சதுக்கப்பாறம் ஏதோ படத்துல படம் முழுக்க  மம்முட்டி இடுப்புல கட்டிவச்சிருந்த துண்டை அவிழ்த்து உதறி தோள்ள போட்டுக்கிட்டு போற கதையா போயிரப்போவுது..