என்னைப்பற்றி

சித்தூர்,
24/05/2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு  "பாராட்டுங்கள்"என்று தமிழக முதல்வர்,மற்றும் மந்திரிகளின் செல் நெம்பர்கள் முக நூலில் பரப்பப்பட "பாராட்டி" ஆவது என்ன என்று அந்த எண்களுக்கு கீழ் காணும் செய்தியை அனுப்பியிருக்கிறேன்.

Mr.CM !
Pl click on this below link .It is my vision and mission for Indian States.

http://kavithai07.blogspot.in/2016/09/2016.html

I am proposing the same to Ms.Jayalalitha for the last 16 Years. Sent the same to Zail , Apolo Hospital  too.

Pl look in to it and do the needful.

S.Murugesan,Chittoor

மேற்படி மந்திரிகளோ /அல்லது அவர் தம் உதவியாளர்களோ யார் இந்த பக்கின்னு தேடும் போது ஒரு கன்டென்ட் இருந்தா நல்லது என்று தோன்றவே லேட்டஸ்டா நாம வெளியிட்ட ஆறில் இருந்து அறுபது வரை நூலின் பின் பக்க அட்டை மேட்டரை இங்கே தந்திருக்கேன்.

__________

வேலூரை அடுத்துள்ள சித்தூரை (ஆந்திரமானிலம்) சேர்ந்தவர் .1967 ல் பிறந்தவர்  எழுத்தாளர்,கவிஞர்,சிந்தனையாளர் .கல்வி  பிகாம் ..தமிழ்,தெலுங்கு,இந்தி ,ஆங்கிலத்தில் "பேர்"பண்ணக்கூடியவர். இவரது எழுத்துக்கள் 1987 -1990 கால கட்டத்திலேயே பிரசுரம் கண்டு -கவனம் ஈர்த்தவை. கலப்பு மணம், ஒரே மகள் ,மகள் மணமாகி இரண்டு பேரன் மார்களை மடியில் போட்ட பிறகும் யூத்து -கெத்து என்று "சின்ன புள்ளத்தனமாய்" புகைப்படங்களை வெளியிட்டு கலங்க செய்பவர்.

வீட்டை பாதிக்கும் ,சமூகம், சமூகத்தை பாதிக்கும் அரசியல்,அரசியலை பாதிக்கும் உலக அரசியல் ,உலகமயமாக்கம்  இவை அனைத்தையும் பாதிக்கும் மனவியல் -பாலியல் பின்னணிகளில் ,ஆராய்ச்சியில்  ஆர்வம் கொண்டவர். வெறுமனே விமர்சன புலியாக இருந்து விடாமல் அதிரடி தீர்வுகளை சொல்லி அதிர செய்பவர். தன் தீர்வுகளின் பால் அரசுகளின் கவனம் ஈர்க்க 30 வருடங்களாய் தொடர்ந்து தபால் போட்டு தபால் துறையை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்.

"கத்த வித்தை" எதுவும் சோறு போடாத நிலையில் சுஜாதா கதைகளில் வசந்த் கணக்காய் "குட்டிகளை" ஈர்க்க கற்றுக்கொண்ட எண் கணிதம்- ஜோதிடம் இரண்டும் சோறு போட்டன. ஏற்கெனவே தன்னை ஈர்த்த மனவியல் -பாலியல் உண்மைகளை ஜோதிடத்துடன் குழைத்து தந்து இணைய வெளியில் எழுதி குவித்ததில் 6 கோடி பார்வைகளை பெற்ற வலைஞர். ஏற்கெனவே 4 நூல்களை ஒரே தவணையில் வெளியிட்டு -இரு முறை மறு அச்சிட்டு  விற்று தீர்த்தவர்.

ஆன்மீகம் என் ஓ.எஸ் -பெரியார் என் ஆன்டிவைரஸ் என்று அறிவித்துக்கொண்டவர்மனிதர்களை பிரித்துப்பார்ப்பது மன நோய் -ஒருங்கிணைப்பதே ஆரோக்கியமான மனதின் செயல் என்பவர்.
ஜோதிடம் ஆன்மீகத்தின் முதல் படி என்று நம்பி  தமது ஜோதிட ஆய்வு கட்டுரைகள் மூலம் மக்களை ஆன்மீகத்துக்கு திருப்பிவிடமுடியும் என்று "நம்புபவர்"