Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Wednesday, July 25, 2012

3 மனைவியரால் கற்பழிக்கப்பட்டு கணவன் மரணம்


அண்ணே வணக்கம்ணே !
நைஜீரியா நாட்டின் பென்யூ மானிலத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும்பணக்காரரான இவருக்கு மொத்தம் 6 மனைவியர். ஒனோஜா லேட்டஸ்டா கண்ணாலம் கட்டின குட்டியோடயே கூத்தடிச்சிக்கிட்டிருந்தாரு. மத்த 5 மனைவியர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.ஆனால் பார்ட்டி கண்டுக்கலை.

தசரதன் கைகேயி மேல வச்சிருந்தது போல 6 ஆவது மனைவி மேல "பாசம்" வச்சிருந்தாரு. கடந்த வாரம்
ஒனோஜா 6 ஆவது மனைவியுடன் கில்மாவில் ஈடுபட்டிருந்த சமயம்.. மத்த 5 மனைவியரும் கூட்டு சேர்ந்து பயங்கர ஆயுதங்களோட படுக்கையறையுள் நுழைந்தனர்.

தங்களோடும் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று தாக்கினர். 5,4,3 ஆவது மனைவிகள் அவரை கற்பழித்தனர்(?) அவிக காரியத்தை முடிச்சு 2 ஆவது மனைவிக்கு சான்ஸ் கொடுத்தாய்ங்க. அதுக்குள்ர அண்ணாச்சியோட "கதை" முடிஞ்சு போச்சு.

ஒடனே கூட்டு கற்பழிப்பில்(?) ஈடுபட்ட 5 மனைவியரும் காட்டுக்குள்ளே ஓடிட்டாய்ங்களாம். ஆறாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன மனைவியரை வலைவீசி தேடி வர்ராய்ங்களாம்.

இந்த சம்பவம் நைஜீரிய பத்திரிக்கையான டெய்லி போஸ்ட்டில் பிரசுரமாகியுள்ளது

ஆதாரம்: சாட்சி ,தெலுங்கு தினசரி

Thursday, July 21, 2011

மரணம் குறித்த பார்வை :ஆண் -பெண் வித்யாசம்


மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா - அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல - அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட - சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு )

பெண்கள் எந்த பொசிஷன்ல இருந்தாலும் அடிமைகள் தாங்கற கான்செப்டாலயோ என்னவோ பெண்கள் இடையில (அதுவும் ஃபங்சன்ஸ்ல) பெருசா வித்யாசங்கள் வெளிப்படுத்தப்படறதில்லை. ஆனால் ஆண்கள் அப்படியில்லை .. தன் குழு - அ தன் நண்பன் ரேஞ்சுலயே நின்னுர்ராய்ங்க.

பெண்களோட ரிலேஷன்ஸ் ஹிப்பாக்கிரடிக்கா இருந்தாலும் - நாடகமா இருந்தாலும் அவிக ஆல்வேஸ் ரஷிங் டுவார்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோ.

மரணமும் ஏறக்குறைய ரஷிங் டுவோர்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோங்கறதால மரணத்தை நேருக்கு நேரா சந்திக்க பயப்படறதில்லை.

ஆனால் ஆண் தான் மரணத்துக்கு ஆல்ட்டர்நேட்டிவ்ஸ் தேடிப்பறக்கறான். உ.ம் செக்ஸ், பணம்,பதவி,வன்முறை .

மரணங்கறது ஒரு சின்ன மாற்றம்தேன். இருப்பு நிலையில் மாற்றம். மேட்டரா உள்ளது பவரா மாறுது தட்ஸால்.

ஆண் ,பெண் இருவர் வாழ்விலும் மாற்றம் என்பது கட்டாயம். தாய் மடியிலருந்து -பாட்டி மடி - அப்பாறம் அப்பாவோட தோள் - பக்கத்து வீட்டு ஆன்டி - பள்ளி ஆசிரியை - கல்லூரி -வேலைன்னு மாறித்தான் ஆகனும்.

ஆண் குழந்தை ஒவ்வொரு மாற்றத்தையும் கண் மூடித்தனமா எதிர்க்கும். பெண் குழந்தை ரெசிப்டிவ். ஃப்ளெக்சிபிள். ஆண் குழந்தை ரெஜிட்டா இருக்கு.

ஆண் குழந்தை தன் சரீர பலத்தை வச்சு மாற்றத்தை எதிர்க்குது அது தன் சர்வைவலுக்கு தேவைன்னு போராடுது.

பெண் குழந்தை தன் சரீர பலகீனம் காரணமா மாற்றத்தை ஏத்துக்கறதே தன் சர்வைவலுக்கு நல்லதுன்னு நினைச்சு அஜீஸ் ஆயிருது.

ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிற குழந்தைகள்ள ஆண் குழந்தைகள் தான் அதிகம். அட இவ்ள எதுக்கு ஏழு கழுதை வயசாகி ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எதிர்த்து கோர்ட்டுக்கு போற பார்ட்டிங்க இல்லையா என்ன?

வீட்டோட மாப்பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிரலாம். அதே போல புகுந்த வீட்ல செட் ஆகாம தவிக்கிற பெண்களையும் விரல் விட்டு எண்ணிரலாம்.

ம்ரணங்கறது ஒரு மாற்றம். பெண் அதை தன் பலகீனத்தின் காரணமா ஏத்துக்கிட்டு பலப்படறாள். ஆண் அதை எதிர்த்து பலகீனப்படறான்.

மாற்றம் விசித்திரமானது. அதை ஏத்துக்க தயாராயிட்டா அது ஒரு மாற்றம் அவ்ளதான். ஆனால் அதை எதிர்க்கும் போது அந்த மாற்றம் மரணத்தை விட கொடுமையா இருக்குது.

(ஜோதிட டிப்: சர ராசிக்காரவுக மாற்றத்துக்கு தயாரா இருப்பாய்ங்க -ஸ்திர ராசிக்காரவுக ஊஹூம்)

மன்சன்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது வெளிப்பட்டே ஆகனும். வாய்ப்பிருந்தா செக்ஸ் பவராவே வெளிப்படுது - அதுக்கான வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்துல முதிர்ச்சி கொண்ட மனம் இருந்தா படைப்பாற்றலா வெளிப்படுது - முதிர்ச்சியற்ற மனம் வன்முறையா வெளிப்படுத்துது . இது உயிரியல் -மனோவியல் விதி.

மன முதிர்ச்சியை பொருத்தவரை பெண் குழந்தைக்கு அது சீக்கிரமே சித்திக்குது. 40 வயசு ஆணுக்குள்ள மனமுதிர்ச்சி 12 வயசு பெண்குழந்தைக்கு இருக்கிறதை எத்தனையோ தாட்டி நானே வாட்ச் பண்ணியிருக்கேன்.

இந்த மனமுதிர்ச்சிக்கு காரணம்? சரீர பலகீனமா இருக்கலாம் .. சர்வைவல் அவசியங்கள் அவளை சீக்கிரமா மெச்சூராக்குது. ஆண் இந்த விஷயத்துல துரதிர்ஷ்ட சாலி.

முதிச்சி பெற்ற மனம் செக்ஸ் பவரை கிரியேட்டிவ் பவரா வெளிப்படுத்துதுன்னு சொன்னேன். பெண்ணுக்கு உள்ள சரீர பலகீனம் , அவளுக்கு எதிரா உள்ள சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகள் காரணமா அவளோட கிரியேட்டிவ் பவர் ஸ்தூலமா வெளிப்பட இயலாத ஒரு நிலை இருக்கு. அதனால அவளோட கிரியேட்டிவ் பவர் சூட்சுமமான வடிவத்துல வெளிப்படுது . அ சமூக,பொருளாதார ,அரசியல் அமைப்புகள் அனுமதித்த அளவில் மட்டுமே வெளிப்படுது.

இதனாலதான் பெண்ணுக்கு செக்ஸ் மேல ஆர்வம் ஏற்படறதில்லை. ( மனம் சார்ந்த் ஆர்வம் ) உடலை பொருத்தவரை அது புரட்சி செய்யலாம் அதுவேற சங்கதி - அதையும் அவள் தன் மனமுதிச்சியை கொண்டு மேனேஜ் பண்ணிர்ரா)

ஆனால் ஆணை பொருத்தவரை அவனோட படைப்பார்வம் ஸ்தூலமாவே படைக்க விரும்புது .( ஃபிசிக்கல் அண்ட் என்விரான்மென்டல் எபிலிட்டி) . பிரச்சினை என்னன்னா ஸ்தூலமான படைப்பில் தடைகளுக்கு நெம்பர் ஆஃப் சான்ஸஸ் இருக்கு. இந்த தடை அவன் மனதை செக்ஸ் அல்லது வன்முறைக்கு திருப்பி விட்டுருது.

மேலும் செக்ஸை பொருத்தவரை ஆணுக்கு அது அனுமதிக்கப்பட்டிருக்கு. ஹி மே பி மேரீட் ஆர் அன் மேரிட். வித் வைஃப் ஆர் அனதர் பர்சன். " ஒரு கால் கட்டு போட்டா சரியாயிரும் - இவள் சரியில்லை -அவனை சொல்லி என்ன? மாதிரி டயலாக்ஸ் எல்லாம் கேட்டிருப்பிங்க.

இதனால ஆணோட செக்ஸ் பவர் செக்ஸாவே செலவழிஞ்சு போயிருது - மிச்சம் மீதி இருந்தா அதையும் அவன் ஸ்தூலமான படைப்புக்கே திருப்பி விடறான்.

பெண்ணை பொருத்தவரை 45 வயசு கிழவியாவே ஆயிட்டாலும் அச்சம், நாணம்,மடம் அது என்னாது பயிர்ப்புல்லாம் மெயின்டெய்ன் பண்ணவேண்டி இருக்கு. அதனால அவளோட படைப்பு சக்தி மனம் சார்ந்து ,மனவெளியில் இயங்குது. அங்கே தங்கு தடையில்லாம..

"காற்றுக்கென்ன வேலி - கடலுக்கென்ன மூடி -கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது" ரேஞ்சுல அவிக கிரியேட்டிவ் பவர் வேலை செய்யுது. ( சிலர் அந்த மன வெளி படைப்புக்கு உயிர் கொடுக்க நினைக்கும்போது கணவன் - வீடு - ஊர் -உலகம் அதிர்ச்சியில் நொறுங்கி போகுது.

பெண்ணுக்கு இயற்கை கொடுத்த இன்னொரு வரம் ப்ரக்னன்சி. படைப்பின் உச்சம் இது. (இதுக்கப்பறம் பெண்ணுக்கு ஏற்பட உடல்,மன சிதைவுகள் அவளுக்கு செக்ஸ் மீது இருந்த ஓரளவு ஆர்வத்தையும் ஆஃப் பண்ணிர்ரதால - அதை ஒரு ஆயுதமா வச்சு பேரம் பேசற அவலமும் நடக்குது.

ஆணை பொருத்தவரை ஒவ்வொரு உடலுறவிலும் உச்சத்தை தொடுகிறான். குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அனுபவிக்கிறான். மரணத்தோட சின்ன அறிமுகமாச்சும் இருக்கு. அதனால டிப் ஆஃப் தி ஐஸ் பர்க் மாதிரி மரணம் அவனை கவருது.

அதனாலதேன் ஆண்களை பொருத்தவரை லைஃப்ல ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. ஆனால் பெண்ணுக்கு அந்த பாக்கியமில்லை.

அதனால அவளுக்கு மரணத்தை மரணமா சந்திக்கிறதே பிடிச்சிருக்கு. ம்ரணத்தோட நிழல்களுக்கு அவள் பெருசா அதிர்ந்து போறதில்லை. இருட்டு /ஏழ்மை/தனிமை/ நிராகரிப்பு

அதனாலதேன் பெண்கள் பார்ஷியலா சாகனும்னு வேகமா ட்ரைவ் பண்றதில்லை /ஆயுதத்தை தூக்கிட்டு அலையறதில்லை - இன்னும் என்னென்னமோ இல்லை.

பெண் செக்ஸுக்கு இன்னொரு மாற்றான படைப்பின் உச்சத்துல இருக்கிறதால அவள் மரணத்தின் நிழல்கள்ள / தவணை மரணங்கள்ள திருப்தி அடையறதில்லை. அவளோட அடிமனசு மரணத்தையே எதிர்பார்க்குது.

புருசன் காரன் லேசா ரெண்டு தட்டு தட்டினா உடனே "கொல்லு ..கொன்னுருன்னு ஹிஸ்டீரிக்கா அலற இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.


மரணத்தின் நிழல்கள் அவளுக்கு திருப்தியையோ பயத்தையோ தர்ரதில்லை. ஆனால் மரணமே அவளை நெருங்கும்போது அதுவும் ஒரு மாற்றம்ங்கற முதிர்ச்சியோட ஏத்துக்க தயாராயிர்ரா. எத்தனையோ பெண்கள் தங்களுக்கு வந்த உயிர்கொல்லியான வியாதிகளை கூட ஜஸ்ட் லைக் தட் ஏத்துக்கிட்டு புருசனுக்கு கூட சொல்லிக்காம செத்துப்போயிர்ராய்ங்க.

மேலுக்கு பார்க்கும் போது ஆண்கள் மரணத்துக்காக ஆலா பறக்கிறதா தோனும்.

பெண்கள் மரணத்தை கனவிலும் நினைக்காதவர்கள் போல தோனும்.

மேட்டர் இன்னாடான்னா ஆண் செக்ஸில் தன் மரண தாகத்தை தீர்த்துக்கறான். அவனுக்கு உள்ள மரண தாகம் குளிர்காலத்து தாகம்.

பெண்ணுக்கு செக்ஸ்ல மரண தாகம் தீரும் வாய்ப்பு மறுக்கப்படுது அவளுக்கு உள்ள மரண தாகம் நெஜமாலுமே கோடை காலத்து மரண தாகம்..

Wednesday, July 20, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம் (5)



வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி.

ஜாதகத்துல எட்டாம் பாவம் மரணத்தை காட்டுதுனு சொல்லியிருக்கேன்.மரணத்தை ரத்து பண்ண முடியாதுதேன்.

ஆனால் கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு - அதுக விரட்ட விரட்ட ( ஏழ்மை -தனிமை இருட்டு நிராகரிப்பு) மரணத்தை நோக்கி பிடி உஷா கணக்கா ஓடறது பை.தனமில்லியா?

அட வர்ரச்ச வரட்டுமே . நாம எதுக்கு லவ் சப்ஜெக்ட் சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஹீரோவை நோக்கி ஓடற ஹீரோயின் மாதிரி ஓடனும்?

இது ஏதோ இந்த ஜென்மத்துல மட்டும் இப்படினு நினைக்காதிங்க. பழக்க தோஷம் காரணமா இதையேதான் எல்லா ஜென்மத்துலயும் செய்துக்கிட்டு இருக்கம்.

ஒன்னு மரணத்தை துரத்த வேண்டியது இல்லையா மரணத்தின் மறுவடிவான பெண்ணை துரத்த வேண்டியது.பெண்ணுக்காகவோ அ பெண்ணை கவரவோ அ பெண்ணை மறக்கவோ பணத்தை/பதவியை/பெயர் புகழை /ஞானத்தை ஏதோ ஒரு இழவை துரத்த வேண்டியது . இதுதான் வாழ்க்கையா?

ஏன் மரணம் நம்மை விரட்டுது? ஏன் மரணத்தை நாம விரட்டறோம்/ மரணத்தின் மறுவடிவான பெண்ணை அவளுக்காக அ அவளின் கவனம் வர அ அவளிலிருந்து விலகி ஓட ஏதோ ஒரு Etc Etc இழவை துரத்தறோம்.

பெண்ணை அடைந்தவன் அந்த பெண்ணிலிருந்து ஓடறான். அ இன்னொரு பெண்ணை நோக்கி அடையாதவன் பெண்ணுக்காக ஓடறான். அந்த பெண்ணுக்காக எதையெதையோ தேடி ஓடறான்.ஆயுளை இழக்கிறான்.

பெண்ணே மரணத்தின் மறுவடிவம்னு சொன்னேன். ( பெண்ணுக்கு ஆண் மரணத்தின் மறுவடிவம்) .ஒரு பெண்ணுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொண்ட ஆண் அந்த பிணைப்பு வெற்றியடைஞ்சாலும் சரி /தோத்தாலும் சரி தன்னை இழந்துர்ரான். அதுவும் ஒரு மரணம்தானே.

நம்மை இல்லாம பண்றது மரணம்னா பெண்ணும் இதே வேலையத்தான் செய்யறா. நாம இருந்தா நமக்கு எங்கே வலிக்குது?

நாம ஈகோ நிறைஞ்சு இருக்கும்போது நம்மை நம்மாலயே சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா அது பொய். பொய்யை அதை கிரியேட் பண்ணவனால கூட சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா உள்ளூற அவன் ஆன்ம வடிவா இருக்கான்.அது ஒளிமயமானது. எந்த காரிருளும் அதும் மின்னாடி நிக்கற தாக்கத் கிடையாது.கேமராவை பார்த்த ஐட்டம் நடிகையோட ஆடைகள் மாதிரி பொய் எல்லாம் உதிர்ந்து போகுது.

மரணத்தை வெல்ல ஒரே வழி அது மரணம் இல்லேங்கறதை உணர்ந்துக்கறதுதான். கரும்பு பாகா மாறுது.பாகு வெல்லமா மாறுது .வெல்லம் சர்க்கரையா மாறுது.அதைப்போல நாம ஏதோ ஒரு ஸ்டேட்டுக்கு மாறிர்ரம்.அதான் மரணம்.

மரணத்துக்கு பின்னாடி என்ன மிஞ்சும்னு ரோசிச்சா மரணத்துக்கு மிந்தி நாம என்னவா இருந்தோம்ங்கறதை கெஸ் பண்ணிரலாம்.

நாம என்னவா இருக்கோம்னு ஸ்மெல் பண்ண முடிஞ்சா மரணம்ங்கறதே இல்லேனு புரிஞ்சுரும்.
(ஒரு குன்ஸாவாச்சும்)

மரணம்ங்கறது தொடர்ச்சியை வெட்டிருதுன்னு நாம நினைக்கிறோம். அதனாலதேன் மரணத்துக்கு பயப்படறோம். ஆனால் அதுதான் உண்மையான தொடர்ச்சியை தருது.

இந்த இயற்கை/படைப்பின் மையம் நீங்கள் கிடையாது - இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் நீங்கனு உணர்ந்துட்டாலே பாதி வெற்றி. அப்பத்தேன் வாழ்வின் தொடர்ச்சி மரணத்துக்கு பின்னும் தொடர்ரதை உணர முடியும்.

நீங்க எதையெல்லாம் சப்கான்ஷியஸா மரணம்னு நினைச்சு பேதியாக்கிறிங்களோ அதெல்லாம் உங்களை உங்களுக்கு உணர்விப்பதை உணரமுடிஞ்சதானு ஃப்ளாஷ் பேக்குக்கு போய் ரோசிங்க.

ஒரு நிராகரிப்பு - இருள் - ஏழ்மை - இதெல்லாம் தான் உங்களை உங்களுக்கு நெருக்கமா கொண்டுவருது. உங்களுக்குள்ள உள்ளே இருக்கிற எதுவோ இயற்கையை நோக்கி திரும்புது. இயற்கை உங்களுக்கு ஆறுதலை உண்டாக்குது.

ஒரு அங்கீகாரம் / ஒரு வெளிச்சம் / கொஞ்சம் சில்லறை உங்களை இந்த மக்களோட போலியா இணைக்குது. உங்கள நீங்க மறந்துர ஆரம்பிக்கிறிங்க.

தன்னில் தான் நிலைத்திருப்பவனை - தான் இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை அறிந்தவனை - போன்சாய்க் ட்ரீ மாதிரி தான் ஒரு மினி படைப்பு என்பதை உணர்ந்து தெளிந்தவனை எட்டாம் பாவத்து தோஷங்கள் ஒன்னும் பண்றதில்லை.

இந்த தெளிவு இல்லாதவுக தேன் மரணத்துக்கும் -மரணத்தின் நிழல்களுக்கும் சப்கான்ஷியசா டர்ராகி மரணத்தை நோக்கி ஓடறாய்ங்க.

இந்த புரிதல் இல்லாதவரை நான் அடுத்த பதிவுல எட்டுல சூரியன் இருந்தா என்ன ஆகும் -அதுக்கென்ன பரிகாரம், சந்திரன் இருந்தா, செவ் இருந்தானுட்டு சுக்கிரன் வரை வரிசையா தரப்போற பலன்கள் நடக்கலாமே தவிர அந்த துர்பலன்களை தவிர்க்க நான் தரப்போற பரிகாரங்கள் மட்டும் சமச்சீர் கல்விக்கான புஸ்தவங்க மாதிரி மக்கித்தான் போயிட்டு இருக்கும்.

ஓகே எட்டாம் பாவத்துல எந்த கிரகம் நின்றால் என்ன பலன்? எந்த பாவாதிபதி நின்னா என்ன பலன்? ஒரு வேளை துர்பலனா இருந்தா என்ன பரிகாரம்ங்கறதை பார்ப்போம்.

அதுமட்டுமில்லிங்கண்ணா.. ஜாதகம் இல்லாதவுக தங்களோட வாழ்க்கை நிலைய வச்சு தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் இந்த லீலைய செய்யுதுனு கெஸ் பண்ணி உரிய பரிகாரங்களை செய்துக்கலாம்.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸு மாதிரி இந்த பரிகார பேக்கேஜிலும் ஆண்கள் ,பெண்கள் தனித்தனி வரிசையில் மட்டும் வரனும்.

உடு ஜூட்..

Tuesday, July 19, 2011

ஆண் பெண் வித்யாசம்: பாவம் 8 பகுதி: 4


எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையிலான வித்யாசங்களை திகட்டும் அளவுக்கு பார்த்தாச்சு. ஆணோ பெண்ணோ எட்டாம் பாவம் தொடர்பான தீயபலனை குறைத்துக்கொள்ள என்னெல்லாம் செய்யலாம்னு இந்த பதிவுல பார்ப்போம் ?

எட்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும்? பெண் சீக்கிரம் விதவையாவாள் (இது பொது விதிங்கண்ணா - நம்ம அனுபவத்துல நாம கண்டது என்னன்னா இது ஹார்ட்ஃபுல்லா கணவனே வாழ்க்கைன்னு வாழற ஹவுஸ் வைஃபுக்கு மட்டும்தேன் ஒர்க் அவுட் ஆகுது )

மற்றபடி ஆண் பெண்கள் இருபாலாருமே எட்டாம் பாவம் கெட்டால் ஆயுள் பங்கம் , தீராக்கடன், மஞ்ச கடிதாசு தருதல் , விபத்து ,வீண் பழி விழுதல் ,சிறைப்படுதல் ,தீர்க ரோகங்கள், தீராக்கடன், உயிரச்சம் தரும் எதிரிகள்,அடிமையாதல்,அறுவை சிகிச்சை ,கொலை முயற்சி , தனிமைப்பட்டு போதல், நிராகரிக்கப்படுதல் , மர்ம ஸ்தானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலக்காயிருவாய்ங்க. எட்டுங்கறது மறைவு ஸ்தானம் அதனால மரணத்துல மர்மம் கூட நிலவலாம்.

இந்த பட்டியல்ல உள்ள எல்லா தீய பலனையும் தவிர்க்க முடியாதுங்னா. நாம வந்து எலக்ட் ரிக்கல் இஞ்சினீர் மாதிரி. எவ்ளோ கரண்ட் கீது. அதை எப்படி எதுக்கு உபயோகிக்கலாம்னு மட்டும் தேன் சொல்லுவம்.

புதுசா பவர் வேணம்னா புதுசா பவர் கிடைக்கனும். அப்பம் நம்ம புரட்சி தலைவி மாதிரி மன்மோகனாருக்கு உபரி மின்சாரம் கேட்டு ப்ரஷர் கொடுக்கலாம். உபரி மின்சாரம் கிடைக்கனும்னா அதுக்கு கச்சா முச்சான்னு வழி இருக்கு.

இப்பம் நம்மையே எடுத்துககங்க.ராசிக்கு ரெண்டுல சனி .ஆனால் நாளிதுவரை அடி உதை வாங்காம பதிவு போட்டுக்கிட்டே தான் இருக்கோம்.

நமக்கு உபரி பவர் எப்படி கிடைச்சதுங்கற சீக்ரெட்டை போட்டு உடைக்கத்தேன் அவன் அவள் அதுன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சோம். ஆனால் நம்மாளூங்கள்ளயே அனானி /போலி கமெண்ட் போடற பார்ட்டி இருக்கு - அது இருக்கிற பவரையே என்ன பண்றதுனு தெரியாம தவிக்குது. இதுக்கெல்லாம் உபரி பவர் கொடுத்து எதுக்கு சனத்தை இம்சை பண்றதுன்னு ஆத்தா நம்மை ஆஃப் பண்ணிட்டா.

பவர் போனதும் ஜெனரேட்டர் ஆன் பண்ற பார்ட்டி நாம இல்லை. ஆத்தா சொன்னா கேட்டுக்கனும்னு விட்டுட்டம். சில மாதங்களுக்கு மிந்தி நல்ல கோடையில இந்த ஈபி காரவுக லந்து தாங்க முடியாம இர்ரிட்டேட் ஆகி யுபிஎஸ் ஏற்பாடு பண்ணிட்டன். ஒரு வாரம்தேன். படக்குனு ரியலைஸ் ஆகி அதை நம்ம பாப்பா வேலை செய்யற ஃபோட்டோ ஸ்டுடியோவுக்கு கொடுத்தனுப்பிட்டன்.

அடிஷ்னல் பவர் -சோலார் பவர் - சைக்கிக் பவர் பத்தியெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்பம் பவர் மேனேஜ்மென்ட் மட்டும்தேன்.

மேற்சொன்ன தீயபலன்ல எதையெல்லாம் உங்களால தாங்கிக்கமுடியும் -எதை தாங்கவே முடியாதுன்னு ரெண்டு பிரிவா பிரிச்சு ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணிக்கங்க.

தாங்கிக்கமுடியாத ஐட்டங்களை தவிர்க்க தாங்கக்கூடிய ஐட்டங்களை நீங்களே வாலன்டியரா ஒபே பண்ணுங்க.

உ.ம் சிறை வாசத்தை தவிர்க்கனுமா? உங்க அறையே சிறையாகட்டும்.

ஆனால் நான் மட்டும் இந்த பதிவுல எல்லா தீயபலன் களையும் தவிர்க்க பரிகாரங்களை தந்துர்ரன். எல்லாத்தையும் கலந்து கட்டியா பண்ணா பெருசா பலன் கிடைக்காது. குவாலிட்டி ஏறனும்னா குவான்டிட்டிய குறைச்சுத்தேன் ஆகனும். பாக்கெட் தயிர்ல பக்கெட் மோர் வருமா பாஸ்? .

அல்ட்டிமேட் சொல்யூஷன்:

உதிரி உதிரியா அதுக்கு இதுக்குன்னு தனித்தனியே பரிகாரம் செய்து அல்லாடாம எதுனா சுருக்கமான குறுக்குவழி இருக்கான்னு கேப்பிக. சொல்றேன்.

எட்டாமிடத்து தோஷம் மேக்சிமம் என்ன செய்துரும்? மரணத்தை தரும். மரணத்தை தவிர்க்க ஒரே வழி மரணமடைஞ்சுரனும்.

ம ...........ர..................ண...............மா?

ம்ரணத்துல எத்தனையோ வகை இருக்கு தெரியுமோ? எக்கனாமிக்கல்,சோஷியல்,பொலிட்டிக்கல், சைக்கலாஜிக்கல்னுட்டு பல வகை மரணங்கள் இருக்கு. .

மேலும் உங்க மரணத்தால என்ன நடந்துரப்போகுது? நீங்க பதிவ்ரா இருந்தா அடுத்த பதிவு வெளிவராது அம்புட்டுதேன்.

அதை நீங்க உசுரோட இருக்கிறப்பயே செய்து தொலைச்சா பதிவரா நீங்க செத்துப்போயிட்டிங்க தானே? மரணம்னா நீங்க இருக்கமாட்டிங்க தட்ஸால் . நீங்கன்னா ஆரு? உங்க ஈகோ.

இந்த பூமி உருண்டை மேல பூமத்திய ரேகை ,கடக ரேகை அதுஇதுன்னு கோடெல்லாம் இருக்கும். அது இயற்கையிலயே உள்ள கோடா ? இல்லை . புவியியல் நிபுணர்கள் தங்கள் வசதிக்காக போட்ட கோடு.
உங்க ஈகோவும் இதே இழவுதேன்.

ஈகோன்னா என்ன? தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை பார்க்கிறது. இந்த படைப்புக்கு மையம் எது? எதுவா வேணா இருக்கலாம். ஆனால் நீங்களோ நானோ சைட் மெம்பர்ஸ் மட்டும்தான் கமெண்ட் போடனும்னு என்னை செட்டிங்சை மாத்த வச்ச அந்த அராத்தோ மட்டும் இல்லை.

அந்த அராத்து தன்னை மையமாவே வச்சு ரோசிக்குது. நானும் ஆன்மீகம் எழுதறேன். இந்த பயலும் எழுதறான் ( அடியேன்) ஆனால் நான் எழுதறத 40 பேர் படிக்கமாட்டேங்கறான். இந்த பயல் எழுதினா ஆயிரத்து சில்லரை பேர் படிக்கிறாய்ங்களே..

நான் கைக்காசை மாசம் எண்பது ரூபா செலவழிச்சு பிரவுஸ் பண்றேன். இந்த பயல் கொத்து கொத்தா ஜாதகம் பார்த்து பைசா பார்த்து பிராட்பேண்ட் வச்சுட்டு தாளிக்கிறானே.

பிரச்சினை எங்க வருது? தன்னை மையமா வச்சு யோசிக்கிறப்பதேன். பேசிக்கலா நான் வாசகன் . நான் எழுதவந்ததே எனக்கான எழுத்து கிடைககாம போனதாலதான்.

நான் இன்னைக்கு எழுதற மேட்டரை ஒரு ஜானகிராமனோ, தனிக்காட்டு ராசாவொ எழுதிக்கிட்டிருந்தா நான் பேசாம படிச்சுட்டு ஓட்டுப்போட்டுட்டு போயிருப்பேன்.

நான் யாரோ ஒருத்தரு மையமா இருந்துட்டு போகட்டும்னு தான் பார்க்கேன். எங்க ஸ்டேட்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்ல அணைகள் கட்ட ஆரம்பிச்சாரு. ஒட்னே நான் ஆ.இ 2000 ஐ ஏறக்கட்டி வச்சுட்டு மைக்கும் கையுமா அலைஞ்சேன்.

இப்பம் சூட்சுமம் புரியுதுங்களா? இந்த படைப்புக்கு நாம மையம் கிடையாது. அப்படி மையம்னு நினைச்சு வாழ்ந்தா நிறைய ஏமாற்றங்களை தாங்க வேண்டி வரும். நானும் எட்டாம்பு படிக்கிற காலத்துல இருந்து டிகிரி செகண்ட் இயர் வரை அப்படி ஒரு பிரமையில தான் வாழ்ந்தேன்.

யாதார்த்தம் படக்குனு என்ட்ரி கொடுத்து பளார்னு ஒரு அறைவிட்டுது. ரோசிக்க ஆரம்பிச்சுட்டன். கவனிக்க ஆரம்பிச்சுட்டன். அதனோட பலன் தான் இந்த பதிவுகள்.

நான் யார்? இந்த படைப்பின் ஒரு அங்கம். பிரிக்கவே முடியாத அங்கம். இரண்டற கலந்துவிட்ட ஒரு அங்கம். இந்த இயற்கைக்கு எங்கே எது நடந்தாலும் அது என்னையும் பாதிக்கும். உ.ம் அல்மட்டி டேம்ல தண்ணி திறந்து விட்டாய்ங்கன்னா அது தத்தி தத்தி எங்க ஊர் என்.டி.ஆர் நீர் தேக்கம் வரை வரும். தெலுங்கு கங்கை கால்வாய் வழியா சென்னைக்கும் வரும்.

இன்னும் ஒரு படி மேல போனா எனக்கு என்ன நடந்தாலும் /எனக்குள்ளே என்ன நடந்தாலும் இந்த இயற்கையும் அதனால மெருகூட்டப்படும் அ மொக்கையாகும்.

இப்படி ஒரு மன நிலை ( ஜஸ்ட் ஃபீடட் நாலெட்ஜா இல்லாம - உரிய அவதானிப்பு -ஆராய்ச்சி - அனுபவத்தோட ) ஒரு மன்சனுக்கு ஏற்பட்டுருச்சுன்னா எட்டாம் பாவம் என்ன? எந்த பாவமும் ஒன்னும் பண்ணமுடியாது.

மரணம் உங்களை பாதிக்காம இருக்கனும்னா மரணத்தோட கை குலுக்கிரனும். மரணம்னா உடல் ரீதியான மரணமாவே இருக்கனுங்கற அவசியமில்லை. நீங்க உங்க ஆன்மாவாவே நினைச்சு பில்டப் பண்ணி வச்சிருக்கிற ஈகோவோட மரணம் கூட போதுமானது.

ஒரு வேளை நீங்களும் என்னாட்டம் மென்மையான மனம் கொண்டவரா இருந்தா ஒரு பிரிவு கூட மரணம் தேன். ஒரு நிராகரிப்பு கூட மரணம்தேன்.

ஒவ்வொரு பிரிவையும்/ நிராகரிப்பையும் டாலரேட் பண்ணிக்கிட்டு -உங்களை நீங்க ம்ராமத்து பண்ணிக்கிட்டு மீண்டு வர்ரிங்க பாருங்க அது உங்களோட மறு பிறவி. உங்க மரணம் ஏற்கெனவே நடந்தி போச்சு . எட்டாம் பாவத்து தோஷம் ஃபணால். நீங்க புதுசா பிறந்துருவிங்க. உங்க ஆயுள் இரட்டிப்பாகும். உங்கள்ள இருந்த மலினத்துல ஒரு 10% ஆச்சும் எரிக்கப்பட்டிருக்கும்.

அப்படியல்லாது எருமைத்தோலோட , மூக்கடியில வந்துட்டானேங்கற பதைப்பு கூட இல்லாம தொடர்ந்து அனானி கமெண்ட் போடற பிக்காலிங்க எத்தீனி தாட்டி உடல் ரீதியாவே செத்து மறுபடி மறுபடி பிறந்து வந்தாலும் அந்த பிறப்பும் ஒரு மரணம்தேன்.

இயற்கை அவனை பார்த்து வடிவேலு கணக்கா " இவன் அவனா"ன்னு ஐடென்டிஃபை பண்ணிரும்.

(தொடரும்)

Tuesday, March 22, 2011

மரணம் என் ஆசான்


ஜாதகசக்கரத்துல ஒன்பதாவது இடம் அப்பவை மட்டுமில்லை. குருவை கூட காட்டுது. ஐ மீன் எப்படி ஃபிகரை கரெக்ட் பண்றதுனு கத்துக்கொடுத்த குருவை இல்லிங்கண்ணா. குருவை ஆசான் என்றும் சொல்றோம். ஆசான் என்ற இந்தி  வார்த்தைக்கு  ஈசினு அர்த்தம். கடினமான மேட்டரை எளிமையாக்கி தர்ரவுகளை ஆசான் என்று சொல்வது பொருத்தம் தானே. Read More

Wednesday, December 22, 2010

மரணம் = செக்ஸ் = பணம்

மரணம் வந்த பிறகு உடல் உதிர்ந்து போகுது. உயிர்  முடிவில்லாத இந்த படைப்போட கலந்துருது. செக்ஸ்ல வீர்ய ஸ்கலிதம் நடக்கறச்ச பாடி பத்தின ஞா ஒட்டு மொத்தமா போயிருது. ( ஒரு க்ஷணத்துக்காச்சும்) .இதை காலாதீத நிலை,ப்ளாக் அவுட் குட்டிமரணம்னு கூட சொல்றாய்ங்க.

உடம்புங்கற சிறைல சிக்கிக்கிடந்த உசுரு /ஆன்மா/நினைவு படைப்போட இரண்டற கலந்துருது.

பணம் பல வகையான எல்லைகளுக்குள்ளாற சிக்கி சீரழியற மனிதனை உலகத்தோட ஒன்னு மண்ணா சேரவைக்குது. உ.ம்: மொழி,தூரம், ஜியாக்ரஃபி

மரணம் உங்களை இந்த உலகத்துலருந்து விடுவிக்கிற மாதிரியே செக்ஸ் கூட விடுவிக்குது.

செத்துப்போன பிற்பாடு உங்களுக்கு செக்ஸோ பணமோ தேவையில்லை.

செக்ஸ் அவெய்லபிலிட்டில இருக்கிறச்ச பணத்தோட வேலையிருக்காது. மரணம் பத்தின நினைவு இருக்காது.

உங்க கிட்ட பணம் இருந்தா மரணத்தோட ( ஐம் சாரி மரணத்தோட நிழல்களான தனிமை,இருட்டு,முதுமை எட்செட்ரா) ஃபைட் பண்ணி ஜெயிச்சுக்கிட்டு (அட்லீஸ்ட் ஜெயிச்சுட்டதா நினைச்சுட்டு) சந்தோசமா இருப்பிங்க. இந்த ஃபைட்ல தோத்துட்டுத்தான் இருக்கிங்க. உண்மையில ஹைவேல போயிட்டிருக்கிற மரணத்தை விசிலடிச்சு கூப்ட்டுட்டிங்கனு தெரியற வரை செக்ஸ் குறித்த தேவையிருக்காது ( ஃபிசிக்கல் வீரிய புரளல் இருக்கலாம் - நான் சொல்றது சைக்கலாஜிகல் வில்) மரணம் பத்தின நினைவு இருக்காது.

இப்படி மரணம் -மைதுனம்-தனம்ங்கற மூணுக்கும் உள்ள ஒற்றுமை எந்தளவுக்கு போயிருதுன்னா ஒன்னிருக்கும்போது அடுத்ததுக பத்தின ஞா மே இருக்காதுங்கோ.

எலக்ட் ரானிக் உபகரணங்கள்ள ஆன்,ஆஃப் ஆப்ஷன் இருக்கிறாப்லயே ஒவ்வொரு உயிர்லயும் வாழனுங்கற துடிப்பும்,சாகனுங்கற வெறியும் சமமா இருக்கு.

மரணம் மீதான காதல் கூட வாழனுங்கற வெறியாலத்தான்னா நீங்க சிண்டை பிச்சுக்குவிங்க. ஆமாங்கண்ணா "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இல்லியா? எல்லாம் ஒன்ஸ் மோர்மாதிரிதேன் டேக் ஒன் டேக் டூ மாதிரி தேன்.


மன்சன் காட்ல வாழ்ந்தப்போ சாவு அப்பப்போ கண்ணடிச்சு கூப்புடும், பின்னால தட்டிட்டு போவும், கை குலுக்கும். அந்த கால கட்டத்துல பார்த்திங்கனா செக்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

மரணத்தோட ஸ்பெஷாலிட்டி என்னடான்னா அது ஒவ்வொரு தாட்டி நமக்கு ஹலோ சொல்றப்பயும் வாழ்க்கை பற்றிய நம் எண்ண குப்பைல்லாம் பக்குனு எரிஞ்சு போயிரும். நம்மோட ப்ரியாரிட்டி லிஸ்ட் ரெம்ப சின்னதாயிரும்.  மரணத்துடனான நம்ம அறிமுகமே டாப்ல நிக்கும். இது காட்டு வாழ்க்கைல சாத்தியமாச்சு.அதனாலதான் மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவான செக்ஸுக்கு பெரிய முக்கியத்துவம் இல்ல.


எப்போ இவிக சஞ்சார வாழ்க்கைலருந்து ஸ்திரவாசத்துக்கு மாறினாய்ங்களோ மரணத்துடனான ஹாய்,ஹலோக்கள் குறைஞ்சு போச்சு.

மரணத்தோட விஷயத்துல இன்னொரு பெக்யூலர் திங் என்னடான்னா
அது அப்பப்ப ஹலோ சொல்லலைன்னா உள்ளுக்குள்ளாற சாவு பத்தின பயம் ஸ்டார்ட் ஆயிரும்.  அட்லீஸ்ட் மரணத்தோட நிழல்களாச்சும் நம்மை உரசிக்கிட்டு போகனும்.இல்லைன்னா தாளி தற்கொலை பண்ணிக்க்கிட்டு செத்துப்போயிருவம்.

ஸ்திர வாசத்துல மரணத்துடனான உறவு குறைஞ்சு போச்சு.மரணம் பத்தின பீதி அதிகமாயிருச்சு. மரணத்துலருந்து தப்பிக்க ஒரே வழி செத்துப்போறது. அப்படி சாக தில்லில்லாதவன் தேர்ந்தெடுக்கிற தவண முறை சாவு செக்ஸ்.(ஞா படுத்திக்கங்க குட்டிமரணம்)

ஸ்திரவாசத்துல தான் மன்சன் செக்ஸை ஆற அமர அனுபவிச்சிருக்கனும்.

இயற்கையோட க்ரூர விதி என்னடான்னா எதுமேல உங்களுக்கு எவ்ள சீக்கிரம் எந்த அளவுக்கு ஆர்வம் பிறக்குதோ அந்த அளவுக்கு ,அவ்ள சீக்கிரம் அதை அனுபவிக்கிறதுக்கான சக்தி குறைய ஆரம்பிக்கும்.

உ.ம் தின்னிப்பண்டாரங்களுக்கு ஷுகர்,அல்சர் மாட்டிக்கிறமாதிரி

இப்படியாக செக்ஸில் அதிகமா ஈடுபட்ட மன்சனுக்கு பேட்டரி வீக் ஆக ஆரம்பிச்சது. சாவு ஹலோ சொல்லாததால சாவு பயம் வந்து சாவறதுக்காக செக்ஸுல இறங்கி அஜீஸ் பண்ணிக்கிட்டிருந்தவனுக்கு பேட்டரி வீக்காகி ( இந்த காலத்து வீக்னெஸ்  இல்லிங்கண்ணா அந்த காலத்து பெண்ணை சமாளிக்க முடியாத வீக்னெஸ்) செக்ஸுக்கும் அன்ஃபிட் ஆக ஆரம்பிச்சான்.

இன்னொரு பக்கம் பெண்ணோட செக்ஸ்பவர் என்னானு புரிஞ்சு போச்சு ( ஒரே ராத்திரில பலதடவை உச்சம் பெறும் சக்தி - 7 வெர்ஸஸ் 23ல்லாம் ஞா இருக்கில்லை)

இன்னொரு பக்கம் இவன் பாடுபட்டு பண்படுத்தின நிலம் ஒரு சொத்தா உருவாக ஆரம்பிச்சது. சாவு பயம் மேலும் நெருக்கமா துரத்த - செக்ஸுலயும் அதுக்கு பெருசா  வடிகால் கிடைக்காம இருந்த நிலையில - தன் வாரிசுகள் தன் பிரதிரூபமா - தன்னோட மறுபதிப்பா - தன்னோட நீட்சியா நினைக்க ஆரம்பிச்சான்.

தன் சொத்து தன் வாரிசுக்கே போகனும்னு  நினைச்சான். யோனிய பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்ட ஆரம்பிச்சான். ( சில பார்ட்டிங்க அதை கூட ட்ரை பண்ணியிருக்காய்ங்க)

காட்டு வாழ்க்கைல தன் சகபோராளியா இருந்த பெண்ணை படிப்படியா அடிமையாக்க ஆரம்பிச்சான். அடிமைன்னா அவள் என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணுவானுதானே அர்த்தம்.இவன் எங்கே தன் ஆயுதங்கள்,கவசங்களையெல்லாம் கழட்டி வச்சுட்டு காதல் பண்றது.

செக்ஸுக்காக அவளை அண்டினா அவளுக்கு அடிபணிஞ்சதாயிருமோனு ஒரு சம்சயம்.  அவளோட செக்ஸ் பவர் தந்த எரிச்சல் ஒரு பக்கம். எல்லாமா சேர்ந்து மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸை வச்சுட்டிருந்த இவனை அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா இன்னொன்னை தேட வச்சிருச்சு.

ஆரம்பத்துல பண்ட மாற்றுல ஆரம்பிச்சது பணத்துல போய் முடிஞ்சது. பணம் எல்லா வகையிலயும் மரணம் -செக்ஸுக்கு மாற்றா அமைஞ்சது.

அவனவன் பணம் பணம்னு அலைய முழுமுதற்காரணம் இதான். இவனுக்கு சாவுன்னா பயம், சாகனும்னா பயம், செக்ஸுன்னா பயம்,பொம்பளைன்னா பயம் ஆனால் சாகனும் அதுக்காகத்தான் மன்சன் பணத்தை துரத்த ஆரம்பிச்சான்.

இவன் பணத்தை வெறும்  பணமா பார்த்திருந்தா பிரச்சினையே இல்லை. இவன் சைக்காலஜிக்கலா என்னென்னமோ காம்ப்ளெக்ஸுல மாட்டிக்கிட்டு பணத்துக்கு இல்லாத அருமை பெருமைகளையெல்லாம் கற்பிச்சிக்கிட்டு பணம் பணம்னு அலைய ஆரம்பிக்கிறான்.

ஒரு காலகட்டம் வரை பணம் அவனை திருப்தி படுத்துது. ஒரு கட்டத்துல தாளி செக்ஸுதாண்டா நாம தேடினதுனு தாமதமா ஸ்ட்ரைக் ஆக காம வேட்டைல இறங்கறான்.

அமீபாங்கற ஒரு செல்லுலருந்துதான் எல்லாரும் வந்தோம்.பிரிஞ்சோம். கரீட்டுதான் ஆனால் நம்ம எல்லாரையும் ஒரு  தங்க கயிறு இணைச்சிருக்கு. இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.

மொபைல் தான் உடல். சிம் தான் ஆத்மா. மொபைல்ல எத்தனையோ மேக்ஸ் இருக்கலாம். சிம்ல எத்தனையோ வகையிருக்கலாம்.  பலவித நெட் ஒர்க்ஸ் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொபைலும் இணைக்கப்பட்டுதான் இருக்கு.

டவர் வராத இடத்துல நிக்கிறது, பேட்டரி லோ ஆயிர்ரது, மொபைல தண்ணில போட்டுர்ரது, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிர்ரதுனு இருந்தா நெட் ஒர்க் வேலை செய்யுமா? அழைப்பு வருமா? அழைக்க தான் முடியுமா?

உள்ள நெட் ஒர்க்கை புரிஞ்சிக்கிடாம பிரிஞ்சுட்டோம்னு நினைக்கிறது - மறுபடி ஒன்னு சேர்ரதுக்காக சாகனும்,சாகடிக்கனும்னு நினைக்கிறது -அதுக்கு மாற்றா செக்ஸ் - செக்ஸுக்கு மாற்றா பணத்தை நினைக்கிறது -அந்த பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட ஃபைட் பண்றது - ஹை வேல போற மரணத்தை கை தட்டி கூப்புடறது இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லியா?

Tuesday, December 14, 2010

இறந்தவன் பேசுகிறேன்

மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம். இத்தனை நாள் மட்டும்  நான் இந்த உலகத்துல இருந்ததுக்கு என்ன ஆதாரம்? ஒரு ம..ரும் கிடையாது. உலகத்தோட பேச்சு எனக்கு மையமா ,கிசு கிசுன்னு தான்   கேட்குது. என் பேச்சு இந்த உலகத்துக்கு கேட்டதே இல்லை.

உலகம் பாட்டுக்குஅது ரூட்ல அது போய்க்கினு கீது. போற பாதைதான் அழிவுப்பாதைங்கறது என் தாழ்ந்த அபிப்ராயம். பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ் மாதிரி வேகமா போகுது.

நான் பாட்டுக்கு என் உலகத்துல இருந்துக்கிட்டு புது உலகத்தை கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். என் கற்பனையால இந்த உலகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

இந்த உலகத்தால எனக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்புன்னா .. ஒரு காலத்துல ரஜினி பட பாதிப்புல "பணம் பணம் பணம் .. பணம் என்னடா பணம் "னு வசனம் விட்டுக்கிட்டிருந்தன்.

இப்போ இந்த உலகம் நம்மை பாதிக்கக்கூடாதுன்னா.. நாம நம்ம ரூட்ல போகனும்னா கொஞ்சம் பணம் கூட தேவைப்பான்னு வர்ரதை வேணாம்னாம வாங்கிக்கிறேன். அதை மகள் கிட்டே கொடுத்துர்ரன். தினசரி ரூ.20 வாங்கிக்கிறேன். இதுக்கு மின்னாடியெல்லாம் 30 இப்போ வீட்டுக்கே ப்ராண் பாண்ட் வந்துட்டதால 20ரூ தேன்.

இந்த மரணத்தை பத்தி ரோசிக்க ஆரம்பிச்சது ஒரு வகையில நல்லதா போச்சுங்கண்னா. எது முக்கியம் எது முக்கியமில்லைங்கற சந்தேகம் வரப்பல்லாம் ஒரே கேள்வி தான் கேட்டுப்பன்.

இதுனால நாம செத்துப்போயிருவமா? இது நம்மை சாவை தள்ளிப்போடுமா? இது நம்ம சாவுக்கப்பாறமும் தொடருமா?

மரணத்தை பத்தின சிந்தனை இல்லாத வாழ்க்கை செத்துப்போகுதுங்கண்ணா. மரணத்தை பத்தின சிந்தனை செத்துப்போன  வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்குதுங்கண்ணா..

இதான் வாழ்க்கையின் முரண்பாடு. ஒய்.எஸ்.ஆர் செத்துப்போயிட்டாரு. என்னாட்டம் ஆளுங்க அவரை புகழோ புகழ்னு புகழறோம். காங்கிரஸ்லயே சில கருங்காலிங்க அவரை சாக்கடைத்தனமா விமர்சிக்கிறாய்ங்க. ஆனால் சோனியா மட்டும் உத்தமியாம்.

ஒரு வேளை ... ஒரு வாதத்துக்கு வச்சுக்குவம். ஒய்.எஸ். கொள்ளையடிச்சிருந்தா சோனியா பார்த்துக்கிட்டா இருந்தாய்ங்க.. அப்ப அவிகளுக்கும் ஷேர் போச்சானு கேட்டா இவிக முகத்தை எங்கன கொண்டு போய் வச்சுக்குவாய்ங்க.

பாய்ண்டுக்கு வரேன். ஒய்.எஸ் இறந்துட்டாரு. அவரை புகழ்ந்தாலோ ..இகழ்ந்தாலோ அவர் ரெஸ்பாண்ட் ஆகப்போறதில்லை.  அப்படியே வேறு ஒரு தளத்துல ரெஸ்பாண்ட் ஆனாலும் நமக்கு தெரிய போறதில்லை.

என் நிலையும் 99.99 சதவீத அதானே. பதிவுலகத்துல என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்ல விமர்சனங்கள் மேலே  ரெம்ப காட்டமா ரெஸ்பாண்ட் ஆகிக்கிட்டிருந்தேன். ஆனால் இப்போ .. அதையும் விட்டாச்சு.

மரணம்னா இதானே. நான் இல்லாத உலகம். நான் இருந்தும் இந்த உலகத்தை அழிவுப்பாதையில இருந்து இம்மி கூட திருப்ப முடியலை. அப்போ நான் இறந்தவன் தானே. இது நான் இல்லாத உலகம் தானே.


இந்த பதிவுலகத்தையே எடுத்துக்குவம். ரெண்டாவது இன்னிங்சை துவக்கி மாஞ்சு மாஞ்சு எழுத ஆரம்பிச்சு 3 வருஷம் ஆகப்போகுது. ஒரே ஒரு கடுகளவும் மாற்றத்தையாவது ஏற்படுத்த முடிஞ்சதா? இல்லை.

பாடாவதி சினிமாவுக்கு பக்கம் பக்கமா விமர்சனம், சூப்பற ஸ்டாருக்கு பிறந்த தினம்னா பதிவு.. கோலம், விரதம் எதுலயும் மாற்றமில்லை. அப்போ நான் இறந்தவன் தானே.

ஆனால் ஒன்னுங்கண்ணா நான் இறந்தவனோனு மதிமயங்கற அளவுக்காச்சும் கொஞ்சம் போல சொரணையிருக்குதுன்னா. மஸ்தா பேருக்கு அவிக செத்துக்கிட்டிருக்காய்ங்கங்கற சொரணை கூட இல்லிங்கண்ணா..

Wednesday, November 17, 2010

பணம் பணம் பணம் : 2

பணத்தை புரிஞ்சிக்கிட்டா பணத்தை சம்பாதிக்கலாம் அ தத் .. இந்த மயித்துக்குத்தான் சம்பாதிக்கிறாய்ங்களானு விட்டுரலாம்.

இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு.  பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..

ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..


13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.

14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை..  நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?

15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா  பொசுங்கிருவம்.

16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?

17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்


18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)

18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.

19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது  குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.

20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை .  இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான்.  மரணத்தின்  நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா  பணம் கொஞ்சம் போல  தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது  எல் ஐ சி பாலிசியா போடறோம்

21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.

22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது

23.பணம் ஜஸ்ட்  ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.

24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்


எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு  செல்  அங்கஜீவி - அது கொழுத்து  செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது ஜீவராசிகள்- குரங்கு குரங்குலருந்து மனிதன் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்தச்ச காலம் , தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது  -  ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு - ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு  மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க  செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க.  மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.


ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. 

வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும். 

அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.

செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம்  பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு  லோ லோனு அலையுது

குழந்தைக்கு தாய் முலைக்காம்பு மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா  விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம். 

அடங்கொய்யால முலைக்காம்புலயாச்சும் பால் கிடைக்கும், சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கடா கீது?

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல்  பல்லுயிரா  மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள்  டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால்  அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னா.. பணம் பணம்னு அலைஞ்சு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?

Tuesday, May 25, 2010

மரணத்துக்கு பின்

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன?  நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம   உலகம்  மட்டும் தொடர்ந்து இயங்கும்.  இது உண்மையா? இல்லிங்கண்ணா.

நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.

டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர்  இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க  நினைவுகள்  எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது.  22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.

 நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு  சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.

"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல  எதெதுக்கோ  இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.

வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன்.  நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.

பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம்  எல்லாமே  பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?)  காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.

ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி  கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.

சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.

எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி  ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு.  ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.

மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா?  எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ  சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.

நீங்க என்ன ஆட்டம் போட்டாலும்  உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.

நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.

இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும்.  அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.

Monday, May 24, 2010

மரணம் வருமுன் உணர‌

சாவை தள்ளிப்போட

ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது.  அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன்  பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது.  அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.

அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)

பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா)  ஓஷோ "  சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள்  நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது"ங்கறார்.

பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன்  என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.

"என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா"ன்னேன்.

"அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.

இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல  சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு   நான் ஒரு  சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி  வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.

எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி ...பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.

(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.

பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.

இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே.  ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும்,  ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி  நாற்காலில இருந்து தவறி விழும்.

யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.

1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.

எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை  டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.

இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட  இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.

 மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான்  T.A, DA, HRA  கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.

மரணம் இவனை ஹலோ சொல்லப்போற  தினம் வீட்ல இருந்து  புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.

சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

ஓகே உடு ஜூட்.

Wednesday, May 5, 2010

சாவின் நிழல்கள்

" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த  தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே  வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"