Tuesday, December 2, 2014

பெண் @ 40 வயசு :எல்லாம் க்ளோஸ் தானா?

பெண் எழுத்தாளர் அமரர் லட்சுமிய தெரியாதவுக இருக்க முடியாது.
குங்குமத்துல(?) இவர் எழுதின  காவிரியை போலனு ஒரு தொடர் கதைய சூட்டோட சூடா படிச்சது ஞா வருது. இதுக்கு தான் சாகித்ய அகாதமி அவார்ட் கிடைச்சுதாம். என்னை பொருத்தவரை "மிதிலா விலாஸ்" சூப்பர். இன்னைக்கும் ஒரு மல்ட்டி ஸ்டார் ஃபேமிலி என்டர்டெய்னரா எடுக்கலாம்.(பாலகுமாரனை இவரது பிள்ளைப்பேறு நூல் கவர்ந்திருக்கிறது.)

எனக்கென்னமோ இந்தம்மா ஒரே கதையை மறுபடி மறுபடி எழுதி அந்த ப்ராசஸ்ல  மிதிலாவிலாஸ் கரீட்டா சிட் ஆச்சுன்னு ஒரு சம்சயம்.
நிற்க "தேடி கொண்டே இருப்பேன்"னு ஒரு கதை .லேசா கிரைம், அடல்ட்ரி, சஸ்பென்ஸ் ,த்ரில்லர்னுல்லாம் ட்ரை பண்ணியிருக்காய்ங்க.
மொதல்ல கதை சுருக்கம்:

தமிழ் சினிமா மாதிரி கிராமத்து பெரியதனக்காரர் மகன் -ஏழை வாத்யார் மகள் லவ்ஸு. ஈரோ வேற பொண்ணை கட்டிக்கிறாரு. ஈரோயின் அவனை இன்சல்ட் பண்ணனும்னுட்டு வேற ஒரு பார்ட்டியோட நெருக்கம் காட்டறாய்ங்க. அவன் ஏற்கெனவே மேரீட்.  இதை மறைச்சு வவுத்துல புள்ளைய கூட கொடுத்து வச்சிருக்கான்.

இன்னொரு பார்ட்டிக்கு கூட்டி வேற கொடுக்கிறான், தான் ஹோட்டல்ல ரூம் போட்டதா தகவல் கொடுத்து அந்த ரூம்ல தேர்ட் பார்ட்டிய வச்சு மாமா வேலை.

அந்த தேர்ட் பார்ட்டிக்கு நிறைய எதிரிங்க.ஆரோ ஆள் வச்சு போட்டு தள்ளிர்ராய்ங்க. அந்த நேரம் பார்த்து ஈரோயின் என்டர் ஆகி வாய்ல கைய வச்சு "கொலை கொலை"ன்னு அலர்ராய்ங்க. போலீஸ் வந்து தூக்கி உள்ள வச்சுருது.

காதலன் உன் பிள்ளைய காப்பாத்தறேன், அப்பனை காப்பாத்தறேன்னு தேர்தல் வாக்குறுதி கணக்கா அள்ளி விட்டு தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பே வெளிய வராம பார்த்துக்கறாரு.

ஈரோயின் ஆயுள் தண்டனை அனுபவச்சிட்டு வெளிய வர்ராய்ங்க. ஈரோ இப்பம்  பெரிய பத்திரிக்கையோட அதிபர். பொஞ்சாதி செத்து விடோயர்.மகன்,மகள் எல்லாமே அப்ராட்+ரேஷ்னல். மறுமணம் பத்தி ப்ரஷர் பண்றவுக தன் ரிப்போர்ட்டரை வச்சு ஈரோயினுக்கு  வீடு முதற்கொண்டு எல்லா வசதியும் பண்றாரு.

பிள்ளை அனாதை இல்லத்துல செத்துபோயிட்டான்னு தெரியுது. இந்தம்மா வேற ஒரு சிறுமியை தத்தெடுத்துக்குது. ஈரோ வராரு நாம ஒன்னு சேரலாம்ங்கறாரு .இவிக அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயினு மாதிரி நான் களங்கப்பட்டுட்டேன் -பூஜைக்கு உதவாத மலர் அது இதுன்னு வசனம் விட்டு கழட்டி விட்டுர்ராய்ங்க.

அக்கா அக்கான்னு ஒட்டிக்கிட்ட ரிப்போர்ட்டர் பையன் எனக்கு ஆருமில்லை நீங்களே அக்காவா இருங்க .நான் காப்பாத்தறேனு தன் பேச்சிலர் ரூமுக்கு அழைச்சிட்டு போயிர்ரான்.

லட்சுமி அம்மா எழுதின காலத்துக்கு இது சாடிக்கேத்த மூடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம்.ஆனால் 2014 ல் படிக்கும் போது செம கடுப்பு.
இத்தினிக்கும் ரைட்டர் ஒரு டாக்டர்.பிள்ளைப்பேறு இத்யாதி பத்தி புஸ்தவம்லாம் எழுதியிருக்காய்ங்க. நாட் நாட்லயே கலப்பு திருமணம் பண்ணியிருக்காய்ங்க. தென் ஆப்ரிக்காவுல வாழ்ந்திருக்காய்ங்க.ஆனாலும் பாருங்க என்ன ஒரு ஹிப்பாக்கிரசி.

பொம்பளைக்கு நாற்பது வயசாயிருச்சா எல்லா முடிஞ்சுருமா? அவள் வெறும் கட்டை தானா?புள்ளைக்காக பல்லை கடிச்சுக்கிட்டு தண்டனை காலத்தை கழிக்கனும்.புள்ள செத்துட்டான்னா ஒடனே சிறுமியை தத்தெடுக்கனும். செம கடுப்ஸ்.

இதை விட ரிப்போர்ட்டர் வெர்சஸ் ஈரோயின் மத்தியில அக்கா பிசினஸை கொண்டு வராம, பத்திரிக்கையோட எம்.டி மனிதாபிமானத்துல உதவறாருன்னு நினைச்சு இவன் சின்சியரா உதவிக்கிட்டிருக்க - எம்.டி "காதல் கத்திரிக்காய்னு ஜொள்ளுவிட  நான் என்ன யூத்தா? அவளோட கதையை தொடரா போட்டா சர்க்குலேஷன் எகிறிக்கும் தெரியுமா"ன்னு பிசினஸ் லைக்கா பேச இவன் வேலைய விட்டு வெளிய வந்து  ஈரோயினி கிட்டே "இங்கே இனி ஒரு நிமிட் கூட இருக்க கூடாது  நீங்க வந்துருங்க நண்பர்களா இருப்போம்"னு சொல்ராப்ல பாலிஷ்டா முடிச்சிருக்கலாம். அல்லது ப்ரப்போஸ் பண்றாப்லயும் முடிச்சிருக்கலாம்.

அட ..அந்தம்மா பில்டப் பண்ண மாதிரி பத்திரிக்கை எம்.டி உத்தமர்னே வச்சுக்கிட்டா ரெண்டு கிழத்தையும் சேர்த்து வச்சிருக்கலாம்.
ஓ அந்த காலம் அப்படி போல.. லூஸ்ல விடறா முருகேசா.. இப்பம் மட்டும் என்ன ஈரோயினிக்கு புருசன்/காதலன் செத்தான்னா எல்லாம் போச்சுன்னு தானே படமே எடுக்கிறாய்ங்க.
லட்சுமிம்மா ஐம் சாரி !

Saturday, September 27, 2014

உடனடி தேவை: திராவிட இயக்கங்கள் இடையில் ஒருங்கிணைப்பு

அண்ணே வணக்கம்ணே !
ஜெ.சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துருச்சு. ஏதோ 4 வருசம் சிறை -100 கோடி அபராதம்-சொத்து பறிமுதலாம். அக்டோபர் 5 வரை கோர்ட் விடுமுறைன்னாலும் -திங்கள் கிழமை எதாச்சும் அற்புதம் நடக்கலாம். அம்மா பெயில்ல வெளிய வந்துருவாய்ங்க.

இது ஏதோ ஜெயலலிதா ஒருவர் தொடர்பான வழக்கு -இது அவருக்கு கிடைச்ச தீர்ப்பு .அடுத்து ஜெ என்ன செய்வார்னு ஹேஷ்யங்களை சொல்றது இந்த பதிவின் நோக்கமில்லை.

தீர்ப்புக்கு பின்னணி குற்றம், குற்றத்துக்கு காரணம்? நம் அரசியல் களம். இன்று எல்லா விலைவாசிகளையும் போலவே கட்சி  நடத்துவதும் காஸ்ட்லி ஆயிருச்சு. ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது ஒருத்தர் சொன்னாரு (பேர் மறந்துட்டன்) செயிச்சவன் வீட்டுக்கு போய் அழுவான்.தோத்தவன் அங்கயே அழுவான்.

ஏன்னா அவனவன் பொஞ்சாதி தாலிய கூட வித்து செலவழிச்சான். இது தேவையா? நேத்திக்கு லல்லு - இன்னைக்கு ஜெயலலிதா. நாளையிலருந்து வரிசையா மத்த அரசியல் தலைவர்கள்.

நான் என்ன சொல்லவரேன்னா அரசியல் என்பது நேரத்தை மட்டும் செலவழிக்க கேட்பதாய் இருக்கவேண்டும். அந்த மாதிரி மாற வேண்டும்,மாற்ற வேண்டும்.

எங்க ஊருல ஜெராக்ஸ் கடை வச்சிருந்தவுக போட்டி போட்டுக்கிட்டு அம்பது பைசா,நாலணாவுக்கெல்லாம் எடுத்து கொடுத்துக்கிட்டிருந்தாய்ங்க. ஒரு ஆள் இந்த போட்டி யாவாரத்தை சமாளிக்க சகட்டு மேனிக்கு கடன் தொல்லையில சிக்கி தற்கொலை பண்ணிக்கிட்டான். ஒடனே மத்தவுகல்லாம் அரண்டு போய்  ஒரு யூனியன் ஃபார்ம் பண்ணி ஒரு காப்பி 2 ரூபான்னு ஆக்கிட்டாய்ங்க.
ஜெராக்ஸ் கடைக்காரர்களை விட மோசமா அரசியல் கட்சிகள்?

கூடி பேசலாமே ? நல்ல முடிவா எடுக்கலாமே!  தங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் செய்து அளவா செலவழிக்கலாம். செலவுக்காக ஊழல் பண்றத தவிர்க்கலாம். இது தற்காலிக ஏற்பாடுதான். மத்தபடி தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்.
அடுத்து தமிழக அரசியலை கொஞ்சம் ஜூம் போட்டு பார்க்கனும். திமுக-அதிமுக இடையிலான பிளவுல ஆப்பை செருகி கேப்புல கிடா வெட்ட பார்க்குது பி.ஜே.பி.

திராவிட சக்திகள் ஒன்றுபட வேண்டிய கால கட்டம் -காலத்தின் கட்டாயம் வந்திருச்சு. இப்பமே கவர்னர் ஹோம் செக்ரட் ரி கிட்டே ரிப்போர்ட் கேட்கிறாரு, மத்திய உள் துறை மந்திரி கவர்னர் கிட்டே ரிப்போர்ட் கேட்கிறாரு. ஜனாதிபதி ஆட்சிய கொண்டு வந்து கொட்டைய நசுக்கி , வேட்டி அவுத்து ஓட ஓட உதைச்சாலும் திமுக காரனை அடிச்சா அதிமுக காரன் சந்தோசப்படுவான். அதிமுக காரனை அடிச்சா திமுக காரன் சந்தோசப்படுவான்.

பெரியார் ,அண்ணான்னு வசனம் மட்டும்  விட்டுக்கிட்டிருந்தா சமஸ்கிருதம் முன்னாடி சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ண வேண்டி வந்துரும். இந்தி பந்தி வைக்கப்படும். அமித் ஷா தமிழக முதல்வர் ஆனாலும் ஆச்சரிய படமாட்டேன்.

கலைஞர் வீழ்ச்சியை எதிர் நோக்கியிருந்த கடைசி வருசத்துலனு ஞா யாரோ ஒரு சாமியார் கலைஞர் தலைய கொண்டு வர சொன்னப்பவே எழுதினேன்.
"தாத்தா ! சோனியாவுக்கு சொம்படிச்சது போதும்,பகையாளிய விட பங்காளி பெட்டர் .ஜெவை சந்திச்சு பேசுங்க. திராவிட இயக்கங்களை ஒரு குடை கீழே கொண்டு வரப்பாருங்கன்னேன்" கேட்கல.

சமீபத்துல ஜெ வை கெஞ்சினேன் "யம்மாடி ! தலைக்கு மேல கத்தி தொங்குது. அப்பர் ஹேண்ட்ல இருக்கிங்க. இப்பமே கலைஞரை சந்திச்சு பேசுங்க. திராவிட இயக்கங்களை ஒரு குடை கீழே கொண்டு வரப்பாருங்கன்னேன். உங்களுக்கு பிறகு உங்க அடிமைகள் உங்கள் நினைவு நாள்ள ஒரு மலர் வளையம் கூட வைக்க மாட்டாய்ங்க. திமுக வோட இணைஞ்சுட்டா கலைஞர் காவியமே பாடுவாரு .முப்பெரும் விழா நாற்பெரும் விழாவா கொண்டாடப்படும்"  கேட்கலை. (உங்க பிறந்த நாளையும் சேர்த்து)

இப்பமும் காரியம் மிஞ்சி போகல. மத வாத ஒட்டகம் தலைய தான் நுழைச்சிருக்கு. கூடாரத்தை அடிச்சு தூக்கறதுக்குள்ள எதாச்சும் செய்ங்க.
திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவே. வேணம்னா அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகம்னு கூட பேரை வச்சுக்கங்கப்பா..

கவுரவ தலைவர் ஜெ, தலைவர் கலைஞர், செயல் தலைவர் ஸ்டாலின்,உப தலைவர்கள் ? வை.கோ, விஜய்காந்த் .சின்னம்? அண்ணா தந்த உதய சூரியன் .ஜனதா பீரியட் போல ரெட்டை உறுப்பினர் அட்டை வச்சுக்கலாம். ஒழுங்கா உட்கட்சி தேர்தல் நடத்தலாம். பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் தேர்வாகி வரட்டும் . கட்சி வேட்பாளர்களையும்டாப் டென் ப்ரியாரிட்டி வச்சுக்கிட்டு செயல்படுங்க.

அவசரம்:
 நாளை நடை பெற உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சீக்ரட் பாலட் வைத்து முதல்வரை தேர்ந்தெடுக்கவேண்டும்.

இனியாவது டாப் ப்ரியாரிட்டிஸ் வச்சுக்கிட்டு வேகமா செயல்படனும்.

எச்சரிக்கை:
ஜெ வழக்கு விவகாரத்தில் நாம ஆரூடத்தை அடிப்படையா வச்சு சொன்ன கணிப்புகள் உண்மையானதை அடுத்து ஜோதிட ஆலோசனைக்கு இன் பாக்ஸுல கூட்டம் அம்முது.
அவிகளுக்கு நான் சொல்லிக்க வேண்டியது ரெண்டு மேட்டர்.
1.உணர்ச்சி வசப்பட்டு டிசைட் பண்ணாதிங்க. சோசியத்துல நாம ஒன்னும் பெரிய ஜூரி கிடையாது. சின்சியரா கணக்கு போட்டு பார்க்கறம் அவ்ளதான்.
2.மோடி மேட்டர்ல இதைவிட அடிச்சு சொன்னம். வரமாட்டாருன்னு - ஜட்ஜு கணக்கா இருக்கவேண்டிய சோசியருக்கு விருப்பு வெறுப்பு இருந்தா என்னாகும்னு புரிஞ்சுக்கிட்டம்.
3.இப்பம் பைப் லைன்ல உள்ள ஜாதகங்களை பைசல் பண்னனும்னாலே கு.பட்சம் ஒரு வாரம் ஆகும். இப்பமே நீங்க அனுப்பினாலும் ஒரு வாரம் கழிச்சு தான் கையில எடுப்பம்.அதனால நன்னா ரோசிச்சு ஒரு வாரம் கழிச்சே அனுப்புங்க.
4.அவசரம்னா உங்க ஊர்லயே நம்மை விட அனுபவஸ்தரான -ஜூரியான சோசியர் இருக்க கூடும் .விஜாரிச்சு அவரையே அணுகப்பாருங்க.
5.இன்பாக்ஸுல வராதிங்க.மெயில் பண்ணுங்க. swamy7867@gmail.com

Friday, August 29, 2014

ரஜினி முதல்வராகனும்னா


ரஜினிக்கும் நமக்கும் உள்ள உறவு தெரியாதவுகளுக்கு மட்டும் சின்ன விளக்கம். சிவப்பு விளக்கை எரியவிட்டு தொழில் பண்ற பாலியல் தொழிலாளிக்கு கூட ஆதரவு தெரிவிச்சு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்னு குரல் கொடுக்கிற கேரக்டர் நாம. அதே நேரத்துல பத்து பேரை முந்தானையில வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போட்டா மட்டும் கடுப்பாயிருவம். இதான் நம்ம  கேரக்டர்.

ரஜினி மட்டும் பாரதியார் கணக்கா "நடிப்பு எமக்கு தொழில்+வீட்டுக்குழைத்தல்"னு சொல்லிட்டு பெர்ஃபார்ம் பண்ணியிருந்தா "ஒழிஞ்சு போவட்டும் வயித்து பொளப்பு"ன்னு விட்டிருப்பம்.

ஆனால் இவரு எம்.ஜி.ஆர் கணக்கா -வாலி /வைரமுத்து -மற்றும் வசன கர்த்தாக்கள்  உபயத்துல கொள்கை முழக்கம்லாம் செய்துக்கிட்டிருந்து "அதெல்லாம் வசனம்யா -அந்த கேரக்டர் பேசின வசனம்யா"ன்னு அடிச்சு விட்டாரு பாருங்க. அங்கதான் ஏதோ படத்துல செந்திலை கனவுல கண்டு தலைகீழா குதிச்ச கவுண்டர் ஆயிட்டாரு ரஜினி.

என்னடா இது எல்லாம் கழுவி ஊத்தறதா இருக்குன்னு கழண்டுக்காதிங்க நெஜமாலுமே ரஜினி முதல்வராகனும்னா என்ன பண்ணனும்னு ஒரு ப்ளூ ப்ரிண்டும் கொடுத்துர்ரன்.

இன்னைக்கு புதியதலைமுறையில ஒருத்தர் மளிகை ஜாமான் லிஸ்டு கணக்கா போட்டாரு. ரஜினியோட அரசியல் எதிர்வினைகள் எல்லாமே தன்னை-தன்னவர்களை சார்ந்த விஷயத்துக்கானதா தான் இருந்தது. மம்மிக்கு எதிரா வாய்ஸ் கொடுத்ததுலருந்து - முந்தா நாள் "மோடி நெல்ல நிர்வாகி"ன்னு கேன்வாஸ் பண்ணதுவரை எல்லாமே தன் நலம் அல்லது தன்னவர் நலம் தான்.

(அதே விவாதத்துல எம்.ஜி.ஆரை விட ரஜினி பெரிய ஆள்னு ஒரு பார்ட்டி சொன்னதை சீரியசா எடுத்துக்கல. இல்லின்னா இந்த பதிவே அதை பத்தி தான் வந்திருக்கும்)

செரி செரி மேட்டருக்கு வந்துர்ரன்.ரஜினி முதல்வராகனும்னா அவரு என்ன பண்ணனும்னு சொல்லி விட்டுர்ரன்.

1.ஏற்கெனவே தனக்கு சொத்துக்களை வித்தவுகளை எல்லாம் காண்டாக்ட் பண்ணி ஒரு இடத்துல கூட்டி   மீடியா முன்னே "எக்காரணம் கொண்டும் நில ஆக்கிரமிப்பு வழக்கு போடமாட்டோம்"னு சொல்ல வச்சிரனும்.

2.ஐஸ்வர்யாவோட கடனை எல்லாம் பைசல் பண்ணி நோ ட்யூ சர்டிஃபிக்கேட் வாங்கிக்கனும்.

3.அரசாங்கத்துக்கும் தனக்கும் உள்ள டீலிங்கெல்லாம்  கரெக்டா இருக்கா. பார்த்துரனும். ( விதி மீறல்)  அதை எல்லாம் பைசல் பண்ணிரனும். மொதல்ல ஓட்டர் லிஸ்டுல பேர் இருக்கா பார்த்துரனும் -ஒவ்வொரு வாக்காளர் சேர்ப்புலயும் இதை ஃபாலோ அப் பண்ணிக்கனும்.

4.ரசிகர்களுக்கு வாக்களிச்ச கல்யாண விருந்தை ஒடனே நடத்திரனும்.( எவனும் அதுல பல்லி,பூரான்னு போட்டுவிட்டுராத பார்த்துக்கனும்.

5.நதி நீர் இணைப்புக்கு வாக்களிச்ச ஒரு கோடி ,கும்ப கோணம் பள்ளி பிள்ளைகளுக்கு வாக்களிச்ச உதவித்தொகை எல்லாம் பைசல் பண்ணிரனும்

6.முழு மேக்கப்போட ஒரு செட் போட்டு  ஒரு ஸ்பீச்சை ஷூட் பண்ணிக்கனும்.அதுல மொத அஞ்சு மினட் தான் எடுத்த தப்பான ஸ்டாண்டுக்கெல்லாம் மன்னாப்பு கேட்டுக்கனும். (முக்கியமா குசேலன் வசனத்துக்கு)  என் படத்துல வந்த எல்லா வசனம் - பாட்டுக்கு நான் தான் பொறுப்பு. நான் தான் ஓகே பண்ணேன்னு சொல்லனும்.

பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . எனக்கு சாதி இல்லை.மதம் இல்லை.மொழி இல்லை. நான் மனிதன். என் கொள்கை மனிதம் . என் இயக்கம் /கட்சி தனியானது. தேர்தலுக்கு பிறவு என்னால தனிச்சு ஆட்சி அமைக்க முடியாம போனா பா.ஜ.கவை தவிர ஆரு என் கட்சி கொள்கைகளை ஏத்துக்கிட்டு சனத்துக்கு நல்லது பண்ணுவாய்ங்களோ அவிகளை ஆதரிப்பேன்.மந்திரிசபையில சேர மாட்டேன்னு எச்சி மீஞ்சி சத்தியம் பண்ணனும்.

கட்சியோடகொள்கைகள்னு ஜஸ்ட் பத்து பாய்ண்ட். மட்டும் சொல்லனும்.
அ)எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஏழ்மை -அதற்கு காரணம்  விவசாயத்தை கைவிட்டது. பாசன வசதிகளை மேம்படுத்தாதது.  உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை விவசாயம் ஒன்னுதான். அதுக்கு டாப் மோஸ்ட் ப்ரியாரிட்டி கொடுப்பேன். தமிழக நதிகளை இணைப்பேன். இந்திய நதிகள் இணைப்புக்காக போராடுவேன்.
ஆ)வறுமை ஒழிய நதிகள் இணைக்கப்படனும்- இதனால் விவசாயம் செழிக்கும். படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு திருப்புவேன். விவசாய உற்பத்திகளை மதிப்பு கூட்டு முறைகளை அமலாக்கி விவசாயிகள் துணையுடன் மானில அரசே மார்க்கெட் பண்ணும்.  லாபத்துல விவசாயிக்கு சம பங்கு.

இ)மேற்படி மிஷன் நிறைவேற தடையா இருக்க கூடிய எல்லா நிர்வாக சீர்கேட்டையும் ஒழிச்சு கட்டிருவன். இந்த மிஷனோட பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வழி செய்வேன்.
இந்த செனேரியோல பத்து பாய்ண்ட் -அதையும் ஒரு அஃபிடவிட்டா ரிலீஸ் பண்ணனும்.

மேற்படி ஷூட்டோட டிவிடியை மீடியாவுக்கு ரிலீஸ் பண்ணி விட்டுரனும். எல்லாம் பேசி பேசி மாய்வானுங்க. இந்த கேப்ல கட்சி பதிவு-உறுப்பினர் பதிவு வேலையை எல்லாம் முடிச்சுரனும்.

விஸ்தாரமா ஒரு பிரஸ் மீட் (காலை 10 முதல் மதியம் 2 வரை ) 


7.கண்ணாலத்துக்கு வந்தவுகல்லாம் மொய் எழுதறாப்ல இந்த ஸ்பீச் -குறைஞ்ச பட்சம் ஹைலைட்சாவது எல்லா சேனல்லயும் டெலிகாஸ்ட் ஆயிரும்.

-இதுக்கப்பாறம் தேர்தலுக்கு ஆறுமாசம் வரை தமிழக  நதிகளை பக்கவாட்ல கவர் பண்றாப்ல ஒரு பொலிட்டிக்கல் டூர்.

தேர்தல் அறிவுப்பு வந்தபிறவு எல்லா ரசிகர்களையும் திரட்டிக்கிட்டு நதிகளை இணைக்க நானே கால்வாய் வெட்டறேன்னு மம்முட்டி,கடப்பாறையோட கிளம்பி கைதானா  சிரேஷ்டம்.

(ரஜினி மேல லவ்ஸ் இருக்கிற பார்ட்டிங்க கிண்டிவிட்டா மேலும் அவிழ்த்து விடுவேன்.இல்லின்னா அம்பேல்)



Saturday, July 5, 2014

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

மோடிக்கு ஒரு ஆன்லைன் ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
மோடிய மெசய்யா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாய்ங்க. ஒரு ராட்சத பலூன் கணக்கா ஊதினாய்ங்க. இப்பமே காத்து இறங்கிக்கிட்டுதான் இருக்கு.
பஞ்சர் பண்ணா எப்படி இருக்கும்னு ரோசிச்சன்.

சமீபத்துல நான் பிரதமரானால்ங்கற டேக் லைனோட பல நிலைச்செய்திகள் போட்டேன்.

அதை எல்லாம் தொகுத்து நண்பர் திருமுருகன் கார்த்திகேயனுக்கு அனுப்ப அவரு இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்பினாரு.

அதை அப்படியே நம்ம இங்கிலீஷ் ப்ளாக்ல போட்டு அதனோட லிங்கை மத்திய அரசாங்கத்தோட ஆன்லைன் மனு பைசல் மையத்துக்கு அனுப்பினன்.
அவிக என்னமோ ஒரு ரெஃபரன்ஸ் நெம்பர் மெயில் பண்ணாய்ங்க (ஆட்டோமேட்டட் தான்)  நேத்திக்கு  போது போகாம மனு என்னதான் ஆச்சுன்னு நோண்டினேன்.



பலான ஆஃபீசர் பார்க்கிறாய்ங்க.அவிக டீட்டெய்ல்ஸ் இதுன்னு வந்தது. ஒடனே அந்த கன்செர்ன் ஆஃபீசருக்கும் ஒரு பொட்டலம் அனுப்பிட்டன். (ராமர் கோவில் சுண்டல் மாதிரி)

பார்ப்போம் தப்பித்தவறி அது மோடி டேபிளுக்கு போகனும். (அதுல நிறைய உள் குத்தெல்லாம் இருக்குங்கோ)  அப்பாறம் இருக்கு கூத்து..

இதுவரை நான் பிரதமரானால் நிலை செய்திகளை நீங்க படிக்கலின்னா இங்கே அழுத்தி படிக்கலாம். தமிழ் ஆங்கிலம் ரெண்டுலயும் தந்திருக்கம்.

Saturday, June 28, 2014

வலையுலக லேட்டஸ்ட் ட்ரென்ட்: 10 கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே !

வலை உலகத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்றதுதான். இதும் பின்னாடி இருக்கிற மனோதத்துவம் ரெம்ப சிம்பிள். உங்க ஈகோவை திருப்தி படுத்தறது.

உங்களை பத்தி சொல்லிக்க உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறது. ம்..எல்லாம் தெரிஞ்சும் ட்ரென்ட்ல இருக்கனுமேன்னு நானும் பதில் கொடுத்து தொலைச்சிருக்கன்,

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறாவது பிறந்த நாளா? ஹ.. இப்பமே ரெம்ப போரடிக்குது.கடுப்படிக்குது. ஒரு வாய்ப்புகிடைச்சா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமல் படுத்திட்டு உலகத்தோட பார்வையிலருந்தே மறைஞ்சுருவன்.

(மினிமம் கியாரண்டியா நம்ம படைப்புகளை 4 மொழியிலயும் -ஆ.இ.200 ஐ 22 மொழிகள்ளயும் மொழி பெயர்த்து வெளியிட்டுட்டாலே போதும் கழண்டுக்க தயார்)

லோட் லோடா ஐரன் ஸ்க்ராப் வரவழைச்சுக்கிட்டு ஜி.டி நாயுடு வேலைகளை செய்யவச்சுக்கிட்டு நிம்மதியா வாழ்வேன்

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நாடு கிடக்கிற கிடப்புக்கு எதை பத்தியும் கவலைப்படாம அடுத்தவன் பாக்கெட்லருந்து நாலணாவை எப்படி சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழறது எப்படின்னு 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக?
சிரிப்பொலி,ஆதித்யா மற்றும் சில சானல்களின் காமெடிக்களின் உபயத்தில் முக்கியமா வடிவேலு உபயத்துல சிரிச்சுக்கிட்டே இருக்கன்.

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
லேப்டாப்ல பேட்டரி பேக் அப் இருக்கிற வரை வேலை .அது முடிஞ்சு போனா ஊர்பஞ்சாயத்துதேன்.

 5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
சொல்லியாச்சு. லைஃப்ல சக்ஸஸ் ஃபார்முலா ஒன்னுதான் "மானம் ,ஈனம்,சூடு,சுரணை எல்லாத்தையும் விட்டுரனும்" ஆனால் பர்மனென்டா விட்டுட்டா நம்மை படைச்ச கடவுளுக்கே அவமானம். எல்லா கதவும் மூடிக்கிட்டப்போ எமர்ஜென்சி கேட்டா இதை யூஸ் பண்ணுங்க.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவுக்கு யுத்த தளவாடங்கள் தவிர்த்து வேற எதாச்சும் சோர்ஸ் ஆஃப் ரெவின்யூ உருவாக்குவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கடந்த காலத்திடம் . கடந்த காலத்தில் இந்த சிச்சுவேஷன் வந்தப்போ என்ன செய்தனோ அதுக்கு நேர் எதிரிடையா ஒர்க் அவுட் பண்ணுவன். புத்தம் புதுசா பிரச்சினை வந்துட்டா? லாஜிக்கை வச்சு நானே பைசல் பண்ணிருவன்.
தொழில் நுட்பம்னா மட்டும் எனக்கு ஆரு மேல நம்பிக்கை இருக்கே அவிக கேட்பேன்.

 8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
பரப்பினாருங்களே.. அப்பம் இலவச ஜோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பின பார்ட்டி பலன் அனுப்ப கொஞ்சம் போல தாமதமாயிருச்சுங்கற கடுப்புல செமர்த்தியா பரப்பினாரு. ஃபேக் ஐடில்லாம் கிரியேட் பண்ணி சாக்கடை கமெண்ட் எல்லாம் போட்டு நாறடிச்சாரு. இன்னைக்கு நாம இருக்கம். அந்த பார்ட்டி இருக்கா இல்லையான்னு தெரியல. மொதல்ல நமக்குள்ள இருந்த ரஜோ குணம் சிலும்ப கொஞ்ச நாள் மல்லு கட்டி பார்த்துட்டு தூ போ அம்பாளே பார்த்துப்பான்னு விட்டுட்டன். இனியும் இதையே செய்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இதோட வாழ்க்கை முடிஞ்சுரல. இன்னம் எவ்வளவோ இருக்கு. சீக்கிரமா மனச தேத்திக்க. நிறைய சவால்கள் காத்திருக்கு.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
டிஃப்ரன்டா ஒன்னும் கிடையாது. என் வேலைய நான் தொடர்வேன்.

அணு உலையும் கெயில் பைப் லைனும்

அண்ணே வணக்கம்ணே !

அணு உலை மேட்டரு நமக்கு தெரியாது. ஆனால் வெடிச்சா மட்டும் துடிச்சு சாகற அளவுக்கெல்லாம் டைம் கொடுக்காதுங்கற மேட்டரு தெரியும். ஒரு நூறு வருசத்துக்கு அதனோட பாதிப்பு சுத்து வட்டாரத்துல இருக்குன்னு மட்டும் தெரியும்.

இந்த கெயில் பைப்லைன் மேட்டரு மட்டும் சானல்கள் உபயத்துல ப்ரா போடாத முலை மாதிரி பட்டவர்த்தனமா தெரியுது.

1991 ல போட்ட பைப் லைனாம்.  மெனோஃபஸ் வந்த பொம்பளைக்கு போல 2 மாசமா  லீக் அடிச்சுக்கிட்டே இருந்திருக்கு. ஒரு வாரமா ரிப்பேர் பார்த்துக்கிட்டே இருந்திருக்காய்ங்க.

பேட்டரி அவுட் ஆயிட்ட பர்சன் பலான மேட்டருக்கு வெங்காயம் சேர்த்துக்கறாப்ல இரும்பு பைப்லருந்த ஓட்டையில புளி அடைச்சுட்டு சாரி வெல்டிங் பண்ணிட்டு போயிட்டாய்ங்களாம்.

கூப்பிடு தூரத்துல ஓன்.என்.ஜி.சி இருக்காம்.ராத்திரி முழுக்க லீக் அடிச்சு ஒன்னரை கி.மீ தூரத்துக்கு கியாஸ் பரவி இருந்திருக்கு.

யு.பி.ஏ அரசாங்க மேட்டர்ல சனம் வரட்டும்டா தேர்தல்னு சனம் காத்திருந்தாப்ல காத்துல பரவின கியாஸ் வெய்ட்டிங்.
விடியல் அஞ்சு மணிக்கு ஓட்டல் காரரு அடுப்பு பத்த வச்சிருக்காரு. ஊரு பத்திக்கிச்சு  பைப் வெடிச்சு மத்தியில ஒரு பீசே காணோம். சுற்றிலும் பத்தடிக்கு பள்ளம்.

ஹோட்டல் காரரும் அவர் குடும்பமும் பஸ்மம்.  அந்த வழியா பைக்ல வந்த அப்பா மகள் மெட்டாஷ். ஜஸ்ட் 10 ஏக்கர் தென்னந்தோப்பு காலி . குடிசை வீடுகளோட  கதைய சொல்லவே தேவையில்லை.ஓட்டு வீடுக கூட இருந்த இடம் தெரியாம குப்பை மேட்டா போயிருச்சு.  வாத்து கோழில்லாம் செமி குக்டா கிடக்கு.ஊரோட பேரு "நகரம்" ஒரே நொடியில நரகம் ஆயிருச்சு.
வெடிச்சதுக்கு காரணம் காலாவதியான பைப் லைன்,அதை மாத்த மனசில்லாத  நிர்வாகம். இதெல்லாம் ஒருபக்கம். வெடிச்ச பிறவு நிலைமை என்னடான்னா ..

தகவல் தொழில் நுட்ப புரட்சி காரணமா சனம் கையில செல் ஃபோன் இருந்திருக்கு. விரல் தேய கீ பேட் தேய ஃபோன் மேல ஃபோன் போட்டிருக்காய்ங்க. ஒரே ஒரு டி.எஸ்.பி தவிர ஒரு மயிரானும் ஸ்பாட்டுக்கு உடனே வரல.

கெயில் காரனும் வரல,ஓ.என்.ஜி.சி காரனும் வரல, அட 108 ஆம்புலன்ஸ் கூட வர்லிங்ணா. டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ப்ரஸ்டீஜியஸா கொண்டு வந்து கறாரா அமல் செய்த திட்டம் அது.அதுக்கும் கருமாதி பண்ணிட்டானுவ போல.
விஷயங்களை எளிமை படுத்தலாம் .ஆனால் ரெம்ப படுத்திரக்கூடாதுன்னு ஒரு சேயிங் ஞா வருது.சரி அவிக யாவாராத்துக்கு எளிமை

படுத்திக்கிட்டாய்ங்க.ஓகே. தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மாறுது.ஆனால் 1991 ல இருந்த  தொழில் நுட்பத்தை (?) பயன் படுத்தி போட்ட பைப் லைனை "சிந்தாம சிதறாம" தொடர்ந்திருக்கான்னா என்ன சொல்ல?
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளாங்கறாப்ல ஊரு உலகத்து மேட்டரை எல்லாம் ஈயடிச்சான் காப்பி அடிக்கிறாய்ங்க.

அது நம்ம நாட்டுக்கு , அதுவும் அடிமைப்பட்டு கிடந்த  நாட்டுக்கு,அதுவும் வர்ணாசிரமதர்மம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அமல்ல இருக்கிற இந்த நாட்டுக்கு ,அதன் காரணமா ஒரு மேஜர் க்ரூப் ஆஃப் பீப்புள் இன்னமும் கல்வி,விழிப்புணர்ச்சி இல்லாம இருக்கிற இந்த நாட்டுக்கு சூட் ஆகுமா?னு ரோசிக்க வேணாம்.

இந்தியனாய் இரு -இந்திய பொருளையே வாங்குங்கறாய்ங்க. 

கெயில்,ஓ.என்.ஜி.சில்லாம் என்ன ஜப்பான் நாட்டு நிறுவனமா?
இந்திய பொருளையே வாங்குன்னா  அப்பம் இந்திய முதலாளியை மட்டும் வாழ வைனு அருத்தமா?  அவனவன் தலா 10 எம்பியை  கை வசம் வச்சுக்கிட்டு ஆட்டைய போடட்டும்னு சொல்ல வராய்ங்களா? (கிரிக்கெட் டீம் விலைக்கு வாங்கறாப்ல ஆயிருச்சு நிலைமை)

எம்பியை பிடிச்சு அசலான ஆளை பிடிச்சுன்னு சுத்தல் எதுக்குன்னு இப்பல்லாம் அசலான ஆளையே பிடிச்சு வச்சுராய்ங்க போல. தரம், தந்தூரி சிக்கன்லாம் விளம்பர வாசகங்களுக்கு மட்டுமா?

இயந்திர மயம்,தொழில்மயம் லாம் ஏதோ ஒரு பிரமையில ஆனால் நெல்ல எண்ணத்துல வந்த மாற்றங்கள். இந்த பட்டியல்ல பசுமை புரட்சி ,வெண்மை புரட்சி,நீல புரட்சியை எல்லாம் சேர்த்துக்கலாம். இதுகளோட விளைவு என்னாச்சுன்னா

சுவாமி நாதன் என் வாழ்க்கையில செய்த பெரிய தப்பு பசுமை புரட்சிங்கறாராம். நல்ல எண்ணத்தோட வந்த  மேட்டரே இப்படி பிட்டர் எக்ஸ்பீரியன்ஸை கொடுத்திருக்குன்னா

இந்த உலக மயம், தனியார் மயம்லாம் எதுல போயி முடியுதோ பார்க்கனும். (பொளச்சி கிடந்தா).

இதெல்லாம் வேற சப்ஜெக்ட். என் கேள்வி ஒன்னு தான் .கொய்யால கியாஸ் பைப் லைனையே ஒளுங்கு மருவாதியா போட முடியாத -மெயின்டெய்ன் பண்ண முடியாத நாட்டுக்கு அணு உலை தேவையா?

அட வெடிச்ச பிறவாச்சும் எதுனா கன்ஸ்ட்ரக்டிவா பேசறானா ? திட்டமிடறானான்னா அதுவும்  கிடையாது. மத்திய அரசு,மானில அரசு,கெயில்,ஓ.என்.ஜி.சி எல்லாம் பிச்சு பிச்சு செத்துப்போனவனுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அனவுன்ஸ் பண்ணியிருக்காய்ங்க.

அது எப்பம் அந்த சனங்க கைக்கு போகுமோ ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆதார் அட்டைக்கு ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சானுவ. படக்குனு ஒன் ஃபைன் மார்னிங் எல்லாம் கேன்ஸல்னுட்டானுவ.

அணு உலை  மேட்டர்ல மட்டும் செலவழிச்சாச்சு ..நிறுத்த முடியாதிங்கறானுவ. என்னடா லாஜிக் இது? ரேட் கொடுத்து புக் பண்ணிட்டம்னு எய்ட்ஸ் வந்தவளை ...க்க முடியுமா?

Monday, June 23, 2014

மோடிக்கு சில ரோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ல சில நாட்களுக்கு மிந்தி நான் பிரதமராகியிருந்தாங்கற தலைப்புல சில ஐடியாக்களை அள்ளி விட்டிருந்தம்.

அந்தத பட்டியலை கீழே தந்திருக்கன். கொஞ்சம் போல அப்டேட் பண்ணியிருக்கன். ஆருனா இதை இங்கிலீஷ்ல டப்பிங் பண்ணி போட்டா புண்ணியமா போகும்.

இதை எல்லாம் படிச்சுட்டு அட இதெல்லாம் நமக்கு தோனலியேன்னு சிலருக்கு தோனும்.பலர் அட நாம கூட இப்படி எல்லாம் ஒரு சந்தர்ப்பத்துல நினைச்சிருக்கமேன்னு தோனும்.

நான் கொடுத்திருக்கிற ஐடியா எல்லாம் ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.  இந்த மாதிரி ஐடியால்லாம் வரனும் -தொகுத்து எழுதனும்னா மனசு இருக்கனும். எல்லாரும் நல்லாருக்கனும்ங்கற மனசு இருக்கனும் .அவ்ளதான்.

க்ளோபல் வில்லேஜுங்கறாய்ங்க. உலகமே தெப்பக்குளம் மாதிரி ஆயிருச்சு. எவனோ ஒரு பன்னாடை ஒரு கூழாங்கல்லை தூக்கி போட்டா அலை உங்க படித்துறைக்கும் வரும். டீசல் விலை ஏறினா எனக்கென்ன? ரயில் கட்டணம் ஏறினா எனக்கென்னனு இருக்க முடியாது.

ஒரு முட்டாள் அரசாங்கத்தோட முட்டாள் தனமான முடிவு  நம்ம எல்லாரையும்  நேரிடையா -உடனடியா பாதிக்கும். பெட் ரூம் வரை -கழிவறை வரை வந்து பாதிக்கும்.

இந்த ரோசனைகளை ஆருனா ட்ரான்ஸ்லேட் பண்ணா அதை மோதிஜிக்கு அனுப்பலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

பெரீ மன்சங்களுக்கு லெட்டர் போட்டா பதில் வரும்ங்கற தவறான நம்பிக்கையை கொடுத்தது என்.டி.ஆர். ஆப்புமேல ஆப்படிச்சா பதில் வந்தே தீரும்ங்கற நம்பிக்கைய கொடுத்தது சந்திரபாபு.

நீ தலைகீழ நின்னு ரசத்துல மூஞ்சி கழுவினாலும் வராதுன்னு சொல்லாம சொன்னது மம்மி . மோடி என்ன சொல்லப்போறாரு? என்னமாதிரி அனுபவத்தை கொடுக்கப்போறாருன்னு பார்க்கத்தானே போறேன்.

நிர்வாகம்னா அது ஒன்னும் மோடி மஸ்தான் வேலை இல்லை.  கொஞ்சம் தில் வேணம். தில்லுன்னா தகிரியம்னு தெரியும். தில்லுன்னா மனசுன்னு கூட ஒரு அருத்தம் இருக்கு.

சீர் திருத்தம்னு இறங்கிட்டா ஒவ்வொரு அடியையும் சாக்கிரதையா எடுத்து வைக்கனும்.இருக்கிற ஊழியர்களை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வரனும்னா மொதல்ல ஆல்ட்டர்னேட்டிவ் அரேஞ்ச் பண்ணிக்கனும்.

காலி இடத்தை எல்லாம் போர்கால அடிப்படையில நிரப்பனும். அவிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்கனும். புதுசா சேர்ந்தவன் புதுசா இருக்கும் போதே பழைய ஒட்டடைய எல்லாம் தட்டனும்.வேலை நிறுத்தம் அது இதுன்னு இறங்கினாலும் புது வெள்ளத்தை வச்சு சமாளிக்கனும்.

நிர்வாகம்னா பாராளுமன்றமோ -தலைமை செயலகமோ -அங்கன குப்பை தொட்டி வைக்கிறதோ இல்லை. நிர்வாகம்னா மக்கள் பார்வையில  எது நிர்வாகம்னு தெரிஞ்சுக்கனும்.

மக்கள்னா வங்கிக்கடன் வாங்கி லக்சரி டீசல் கார் வச்சிருக்கிறவனும் மக்கள் தான்.ஆனால் அவனை கொஞ்சம் தீர்ப்பாட்டா கவனிக்கலாம்.

டாப் ப்ரியாரிட்டி நடை பாதி வாசி. குடிசை வாசி, ஒண்டு குடித்தனவாசி,

விசிட்டிங் கார்டோ ,பெரீ மன்சங்க லெட்டர் பேடோ ,கார்ப்பரேட் கம்பெனி ஐடியோ இல்லாத அவனை பொருத்தவரை அரசாங்கம்னா லட்டியில தட்டி "யார்ரா நீ"ங்கற போலீஸ் காரர் தான்.

சனத்தை பொருத்தவரை அவன் தினசரி புழங்கற இடம் , வாரம் ஒரு தாட்டி அல்லது மாசம் ஒரு தாட்டி விசிட் அடிக்கிற இடம் பர்ஃபெக்டா இருந்தா போதும் .

அது போலீஸ் ஸ்டேஷனா இருந்தாலும் சரி . தாலுக்காஃபீஸ், கரண்டாஃபீஸ், போஸ்டாஃபீஸ், காய்கறி மார்க்கெட்,அவன் பிள்ளை படிக்கிற ஸ்கூலு .இப்பிடி ஒரு லிஸ்டை போட்டா மொத்தமே இருபது இருபத்தஞ்சு தான் வரும். அந்த இடங்களை ஆசிட் ஊத்தி கழுவி சென்டட் ஃபெனாயில் போட்டு வச்சுட்டா போதும் "சீமான்யா.. என்னமா ஆட்சி நடத்தறான்"னு சொல்ட்டு போயிக்கினே இருப்பாய்ங்க.

இப்பம் " நான் பிரதமாராகியிருந்தா"ங்கற  தலைப்புல கொடுத்திருந்த ஐடியாக்களை பாருங்க.

பாராளுமன்றம்,ஜனாதிபதி மாளிகை,பிரதமர் இல்லம் மூன்றையும் க்ளோபல் டென்டர் மூலம் 99 வருடங்களுக்கு லீசுக்கு விட்டிருப்பன்.
தற்போதைய கரன்சி ரத்து -புதிய கரன்சி அறிமுகம் (கருப்பு பணத்துக்கு காயடிப்பு)

10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் சிறப்பு ராணுவம் கொண்டு நதிகள் இணைப்பு -கூட்டுறவு பண்ணை விவசாயம்

நம் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ.நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி அதன் பாதுகாப்பை சர்வதேச ராணுவத்துக்கு ஒப்படைப்பு.( சீனா விஷயத்திலும் இதே ஃபார்முலா) அவர்கள் வசம் உள்ள நிலப்பகுதியையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்க சொல்லி அழுத்தம்.
வழிக்கு வரலின்னா சீனா,பாக்கிஸ்தான்,இலங்கை மீது பொருளாதார தடை,ராஜீய உறவுகள் கட்

ராணுவத்துக்கு நதி நீர் இணைப்பில் பங்கு .நதி நீர் இணைப்பில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி.

இந்த நாட்டின் தொழில் விவசாயம்-நாட்டின் அனைத்து சக்தியும் விவசாய மேம்பாட்டிற்கு திருப்பி விடப்படும்.அடுத்த முக்கியத்துவம் விவசாயம் சார்ந்த தொழில்கள்,விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி

ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம் செக்ஸுக்கு உத்திரவாதம்.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி

அனைத்து மானிலங்களிலும் தலா ஒரு மாதம் பிரதமர்,தலைமை செயலகம் செயல்படும் (டிஜிட்டல் மயமாக்கி விடுவதால் மனிதர்கள் மட்டும் ரயிலை பிடிச்சு போனா போதும்.

பூரண மதுவிலக்கு -போதை பொருட்களுக்கு தடை
ஒரு வருடத்துக்கு மேற்படிப்புகள்,தொழிற்கல்விக்கு தடை - ஆஃப்டர் அப்டேஷன் ஒன்லி ரீ ஸ்டார்ட்.

படிச்சவனுக்கு அவன் படிச்ச நிறுவனமே வேலை கொடுக்க சட்டம்

ஆறுகள் எத்தனை சின்னதாய் இருந்தாலும் ராணுவம் கொண்டு மீட்பு , கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டால் அன்றி நதியில் விட தடை. சட்டத்தை மீறினால் கொலை வழக்கு பதிவு

பள்ளிகள், கல்லூரிகள்,ஹாஸ்டல்கள்,பிரார்த்தனை ஸ்தலங்கள்,அரசு அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை அவிகளே ஜெனரேட் பண்ணிக்கனும் . (சோலார்,பயோ கியாஸ்,காற்றாலை)

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.லக்சரி கார்களுக்கு மானிய விலை டீசல் கட்.

பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு டாப் ப்ரியாரிட்டி.வாரத்துல ஒரு நாள் மாசு எதிர்ப்பு தினம். அன்று பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தவிர்த்து அனைத்து  வாகனங்களுக்கும் தடை .

அரசு அலுவலகங்களில் காகிதங்களுக்கு தடை. நிருபர்கள்,பொதுமக்களுக்கு தகவல் தர மட்டுமே காகிதம்.மற்றபடி அனைத்தும் டிஜிட்டல் மயம்
பீக் ஹவர்ஸில் ஃபோர் வீலர்களுக்கு தடை .18+ வயதுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் இலவச சைக்கிள்.சைக்கிள்களுக்கு மெயின் ட்ராக்

மத,ஆன்மீக நடவடிக்கைகளுக்கு உடலுறவு போன்று சாத்திய கதவுகளுக்குள் மட்டுமே அனுமதி .

கிராமங்கள் உற்பத்தி மையங்களாய்,நகரங்கள் விற்பனை மையங்களாய்
காவலர் பணியிடங்கள் நிரப்புதல் - அப்டேட்டட் ட்ரெய்னிங். 3 மாதங்களில் மொத்த பணியிடங்கள் போல் மேலும் இரண்டு மடங்கு ஆளெடுப்பு. ஷிஃப்ட் சிஸ்டம். காவல் நிலையங்களில் சிசி கேமரா.

அனைத்து மத்திய,மானில அரசு ஊழியர்களுக்கும் மெடிக்கல் டெஸ்ட். ஃபெய்ல் ஆனவுக வீட்டுக்கு. காலியிடங்கள் அனைத்தும் நிரப்புதல்.
ஒவ்வொரு அரசு ஊழியனையும் அரசே தத்தெடுக்கும். A to Z அரசே வழங்கும். பார்த்துக்கொள்ளும்.

லஞ்சம் வாங்கினால் ரிமூவ்ட் ஃப்ரம் சர்வீஸ்

வருடத்தின் 11 மாதங்கள் உழைத்தவர்களுக்கு மட்டும் 1 மாதம் சுற்றுலா அனுமதி .(ஆன்மீக சுற்றுலாவுக்கும் இதுவே விதி)

நோய் தடுப்பு,குற்ற தடுப்பு,விபத்து தடுப்புக்கு டாப் ப்ரியாரிட்டி .
ஸ்விஸ் வங்கி கணக்காய் வங்கி துவங்கி நாட்டின் கடனை எல்லாம் செட்டில் பண்ணிர்ரது. பஞ்சாயத்து பேசி வட்டில்லாம் எகிறடிச்சுட்டு ஒன் டைம் செட்டில்மென்ட்.

காய்கறி மார்க்கெட்,சந்தையில எல்லாம் எஸ்.டி.டி பூத் கணக்கா வங்கி கவுண்டர்கள். காலையில கடன் கொடுத்து மாலையில வசூல்.

ஒருரெண்டு வருசத்துல எல்லாத்துக்கும் வேலைவெட்டி கொடுத்து அவிகளாகவே எங்களுக்கு நல திட்டங்கள் வேணாம்னு கழண்டுக்கனும் .பிறவு நல திட்டங்கள் கை விடப்பட்ட முதியோர்,பெண்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர்,வயதான திரு நங்கைகளுக்கு மட்டுமேங்கற நிலைய கொண்டு வருவம்

ச்சும்மா பாய்லா காட்டாம -ஹார்ட் ஃபுல்லா -பத்து வருடங்கள் இட ஒதுக்கீடு அமல் செய்தால் போதும். இனி எம் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அவர்களே எழுதிக் கொடுத்துவிடுவார்கள்

எந்த குடிமகன் எந்த மானிலத்துக்கு பெயர்ந்தாலும் அங்கு அவனுக்கு வேலை தங்குமிடம் தயாராக இருக்கவேண்டும்.

100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கும் வரை ஆளில்லா வாக்கு பதிவு மையங்கள் தொடரவேண்டும் .

ஆறு,ஏரி,குளம்,வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியவர்கள் தம் சொந்த செலவில் அவற்றை தம் கட்டிடங்களின் கீழ் புனரமைக்க வேண்டும்.

கடலில் கலக்கும் ஒவ்வொரு டி.எம்.சி தண்ணீரும் அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே கலக்கவேண்டும்.

தடுப்பணைகள் கல்லணை ஃபார்முலா கொண்டு அமைக்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கு புரியும் வகையில் ஒவ்வொரு குடிமகன் குறித்த டேட்டாவையும் அவனே தரும்படி செய்து -அதை அடிப்படையாக வைத்து மைக்ரோ ப்ளானிங்.தவறான தகவல் தந்திருந்தால் ஏழரை வருட கடுங்காவல்    
தண்ணீர் ,ரயில் போக்குவரத்துக்கு டாப் ப்ரியாரிட்டி. ஏற்கெனவே போட்டு தொலைச்ச சாலைகளை அவை பாழ்பட்டு போன பின் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள்
365 நாளும் 16 மணி நேரம் கோர்ட் வேலை செய்யனும். எவனும் 8 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது. நிலுவையில் உள்ள கேஸ் எல்லாம் பைசல் ஆயிட்டா படிப்படியா குறைச்சுர்ரது

படிப்படியாக மத நிறுவனங்கள் அனைத்தும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை சுருக்கி கொண்டு நாட்டு வளர்ச்சியில், எதிர்கால சந்ததிகளின் உடல்,மன,புத்தி நலனுக்கு செயலாற்றும் வகையில் மாற்றப்படும்

இதை எல்லாம் ஒரு ரெண்டு வருசத்துல பைசல் பண்ணிட்டு நேரிடை ஜன நாயகத்துக்காக அரசியல் சாசன திருத்தம். பிரதமருக்கு வீட்டோ பவர். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விகிதாச்சார முறை தேர்தல் . நோ இடை தேர்தல் .ஒரு உறுப்பினர் டிக்கெட் போட்டா பட்டியல்ல உள்ள அடுத்த நபர் தேர்வு

படிப்படியாக அதிகாரங்கள் மானிலங்களுக்கு,மானிலங்களிடமிருந்து மாவட்டங்களுக்கு இறுதியில் கிராம சபைகளுக்கு கை மாற்றப்படும்
மத்திய மானில தனியார் நிறுவனங்களில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு. நாடு சுபிட்சமான பிறவு (என்ன ஒரு 4 வருசத்துல பைசல் ஆயிரும்) இன்னம் என்னெல்லாம் பண்ணலாம்ங்கறதை நாலு வருசத்துக்கு பிறவு சொல்றன்.
   

Saturday, June 7, 2014

எம்.எல்.ஏ சார் நம்ம காதோடு சொன்ன மேட்டரு..


அண்ணே வணக்கம்ணே !
 நம்ம பதிவுகள்ளயும் - முக நூல் நிலை செய்திகளிலும் அப்பப்போ எங்க எம்.எல்.ஏ னு பீத்திக்கிறத கவனிச்சிருப்பிங்க. ஏதோ 2009 எலீக்சன்ல ஏப்ரல் 7 லருந்து 21 வரை ஒரு 14 நாள் டெய்லி பார்த்ததுண்டே தவிர பேசி பழகறது இத்யாதிக்கெல்லாம் சான்ஸே கிடையாது.

நாம போடற லோக்கல் தெலுங்கு பேப்பர் சார்பில் அவரோட ஆதரவாளர்கள் ஸ்பான்சர்ஷிப்போட அப்பப்போ எதையாச்சும் போட்டு சனங்களுக்கு கொடுக்கறது வழக்கம்.

அதுல எதாச்சும் முக்கியமானதா -ஹை பட்ஜெட் ஐட்டமா இருந்தா அவரை பிடிச்சு ஒப்புத்துக்க வச்சு ஓப்பன் பண்ண வைக்கறது உண்டு. அதுக்கும் செமையா கலாய்ப்பாரு "ஏன்யா என் படம் போட்ட காலண்டரை நானே ஓப்பன் பண்ணா நல்லாவா இருக்கும்" அது இதுன்னு எஸ் ஆகவே பார்ப்பாரு. எப்படியோ கோஞ்சாடி வேலை முடிக்கிறது.

நாம அவரை சந்திக்கிற அரிதிலும் அரிதான அந்த மினட்ல நடக்கிற கான்வெர்சேஷனை ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் பின்னால எழுதிரலாம்.
ஒரு தாட்டி மட்டும் செம கலாய்ப்பு. மேட்டருக்கு வரேன்.
சமீபத்துல ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம்னு ஒரு குறுந்தொடரை எழுதினம். ஞா இருக்குல்ல? ஒரு தசராவுக்கு மேற்படி நாமாவளியை பாக்கெட் புக்கா போட்டு சனங்களுக்கு கொடுக்கிறதா ப்ளான் பண்ணி ரெடி பண்ணிட்டம். அவர்ட்ட போயி கொடுத்தம் . ஓப்பன் பண்ணிட்டாரு.

சத நாமாவளி மேட்டர் எல்லாம் ப்ளாக் அண்ட் வைட்லயும் அவரோட ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் எல்லாம் மல்ட்டிக்கலர்லயும் இருந்தது. இதை பார்த்துட்டு கச்சேரிய ஆரம்பிச்சாரு.

கொஞ்ச தூரத்துல  ரூரல் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு சேர் போட்டு வெயிட்டிங்ல வச்சிருக்காய்ங்க. ரேப்பர்ல அம்மன் படம் கீழே சின்னதா பாக்ஸ் போட்டு ஸ்பான்ஸர்ட் பை சி.கே.ஃபேன்ஸ்னு போட்டிருந்தம் டப்பாவுக்குள்ள குட்டியா அவரோட ஃபோட்டோ.

சின்ன பசங்களை கேட்கிறாப்ல அம்மன் படத்தை காட்டி
"இது யாரு"
"அம்மன் சார்"
தன் படத்தை காட்டி "இவன் யாரு?"
"நீங்க சார்"
"இதுல என் ஃபோட்டோ ஏன் வருது?"
"உங்க ஃபேன்ஸ் தான் இந்த பாக்கெட் புக்கை ஸ்பான்சர் பண்ணியிருக்காங்க"
"அப்ப அவங்க படங்களை போட வேண்டியதுதானே"
"சார் ..அவிக மொத்தம் 32 பேர் இருக்காங்க சார். எல்லார் படத்தையும் ரேப்பர்ல போட முடியாதே "
"சரி .. சத நாமாவளி ப்ளாக் அண்ட் வைட்ல வந்திருக்கு .விளம்பரம்லாம் கலர்ல வந்திருக்கு..இது சரியா?"

"சார் .. அவிக காசு கொடுத்து விளம்பரம் போட்டுக்கறாங்க"

"அப்போ ..அம்மன் காசு கொடுத்தாதான் சத  நாமாவளி கலர்ல வருமா?"
இங்கே ஷாட் கட் பண்ணிக்கலாம்.  நம்ம நெடு நாள் க்ளையண்டு விமலாதித்தன். மேற்படி தசரா பிரசுரத்தை பத்தி போற போக்குல நாம ஒரு ஸ்டேட்டஸ் போட படக்கு ரூ.10 ஆயிரத்தை நம்ம அக்கவுண்டுக்கு மாத்தி விட்டுட்டாரு.

நாம அலறியடிச்சு ..அய்யா நான் போட போறது தெலுங்குல -அதையும் எங்க ஊர் சனங்களுக்கு கொடுக்கிறதா தான் ப்ளான். அதுக்கு ஸ்பான்சரர்ஸ் எல்லாம் ரெடி . நான் சும்மா தகவலுக்காக போட்ட ஸ்டேட்டஸ பார்த்துட்டு இப்டி காசை போட்டுட்டிங்களேன்னு பம்மினேன். ஏன் சார் தமிழ்ல போடக்கூடாதா? தமிழ் மக்களும் தெரிஞ்சுக்கலாமில்லையான்னாரு.
விமல் மட்டுமில்லை இன்னும் சிலரும் அப்போ கான்ட்ரிப்யூட் பண்ணாய்ங்க. லண்டன்ல இருக்கிற ஒரு ரெட்டியாரு, திருவாளர்கள் துரை பாண்டியன், மருதப்பன்,அருள்ராஜ்குமார்,கஜபதி ,கோபி நாத் சிதம்பரம் இவிக கொடுத்த காசுக்கெல்லாம் பேப்பர் வாங்கி போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியாச்சு. வீடே ப்ரஸ் மாதிரி ஆயிருச்சு.

அச்சாயிட்டா போதுமா? சனங்களுக்கு போய் சேரனுமே? என்னடா பண்றதுன்னு புலம்பிக்கிட்டிருந்தப்போ நம்ம லோக்கல் நகைக்கடைக்காரர் ஒருத்தரு கிருஷ்ணகிரி வரை போகனும் சும்மா இருந்தா வாய்யான்னாரு. கார் பயணம். ஒடனே நம்ம மேட்டரை சொன்னேன். இவ்ளதானே மூட்டைகளை ஏத்து.பையன் ஒருத்தனை பிக் அப் பண்ணிக்க. போறச்ச நேர கிருஷ்ணகிரி போயிரலாம். வரச்ச எத்தனை ஊரு இருக்கோ எல்லாம் ஊருலயும் நிறுத்த சொல்றேன்.பையன் கொடுக்கட்டும்னுட்டாரு.

இப்படி ரெண்டு தபா போனோம். மேட்டர் ஓவரு. தீர்பாடா உட்கார்ந்து கணக்கு பார்த்தா சனங்க கொடுத்த காசுக்கு இன்னம் 1492 பிரதி போட்டிருக்கனும். சரி அடுத்த மாசம் போட்டுரலாம்னு விட்டன். இதோ வருசங்களே ஓடிருச்சு. இதுக்கு வட்டி போல சொந்த செலவுல ஒரு ரெண்டாயிரம் பிரதி போட்டுரலாம்னு சில வாரங்களாவே ஒரு ஐடியா.

இதுல எம்.எல்.ஏ விட்ட "பொளேர்" வேற ஞாபகத்துல க்ளாஷ் ஆகுது. ஆத்தா காசு கொடுத்தாதான் சத நாமாவளி மல்ட்டி கலர்ல வருமா? ஏன் நாமளே மல்ட்டி கலர்ல போடக்கூடாது? பட்ஜெட் தாங்குமாங்கற சந்தேகம் ஒரு பக்கம். புக் மேக்கிங் மேன்யுவலா பண்றதால காஸ்ட் அதிகம்.இதை விட பெரிய சவால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கறதுதான். இப்படி குழப்பிக்கிட்டிருந்த சமயம்

 ரெண்டு நாளைக்கு மின்னே  விமலாதித்தன் ஃபோன் பண்ணாரு "சார் ! மறுபடி சத நாமாவளி போடற ஐடியா இருக்கா?"

ஏற்கெனவே நீண்ட நெடும்பயணம் போயி டாரா கிளிஞ்சு கிடந்தோமா? கொய்யால மறுபடி பயணமா ஆள விடுங்கற ஃபீல் தான் வந்தது. "இல்லை சார்.. நானே ஒரு 1,492 பிரதி பாக்கி -அதை போடவே ரோசிக்கிறேன். டிஸ்ட் ரிப்யூஷன் தான் பிரச்சினை" என்று கழண்டு கிட்டேன்.
ஒரு நெல்ல காரியத்துக்கு காசு கொடுக்கிறேனு ஒருத்தர் முன்வரதே கஷ்டம்.அதை கூட தடுத்துட்டமேனு ஃபீல் ஆச்சு.

எல்லாத்தையும் பைசல் பண்றாப்ல ஒரு ப்ளான் பண்ணியிருக்கன்.
இந்த சத நாமாவளி மேட்டர்ல பங்கெடுத்தவுக எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில ஒரு லிஃப்ட் கிடைச்சிருக்கு. அது தெரியும். ச்சும்மா டிசைன் பண்ண என் மவளுக்கே அஞ்சு வருசமா இழுத்துக்கிட்டிருந்த கண்ணாலம் கால் காசு கடனில்லாம ஆயிருச்சுன்னா பாருங்களேன். ஆகவே இந்த வேலைய செய்றது வெட்டியில்ல. லைன் க்ளியர்.

புக் மேக்கிங் ப்ராசசை அவாய்ட் பண்ணனும்னா ப்ரவுச்சர் மாதிரி போட்டுரலாம். புக் மேக்கிங் ப்ராசஸ் காஸ்டுக்கு மல்ட்டி கலர்லயே போட்டுரலாம்.

2000 பிரதி ப்ளாக் அண்ட் வைட்ல போடறதுக்குண்டான காஸ்ட் என்னவோ அதை நான் கான்ட் ரிப்யூட் பண்ணிர்ரன். இது வரை ஓகே.

அடுத்த கண்டம் வினியோகம். இங்க தான் உங்க உதவி தேவைப்படுது. வெள்ளிக்கிழமைகள்ள ராகு காலத்துல எப்படியும் அம்மன் கோவில்ல கூட்டம் அம்மும். அந்த சமயம் யாராச்சும் பையனுக்கு நூறோ நூத்தம்பதோ கொடுத்து நிப்பாட்டிட்டா பக்தாளுக்கு கொடுத்து தீர்த்துருவான்.

அந்த காசு பிரச்சினை இல்லை. நானே அனுப்பி வச்சுர்ரன். பிரவுச்சர் கணக்கா ப்ரிண்ட் ஆன சத நாமாவளியை கூரியர்ல அனுப்பிரலாம்.
ஆனால் பிரதிகளை வீணடிக்காம, பொறுப்பா,சரியான ஆள பிடிச்சு வினியோகம் பண்ண வைக்கனுமே.அதுக்கு யார் தயார்?
ஜஸ்ட் ஒரு பத்து பேர் நான் ரெடின்னா போதும் வேலைய ஆரம்பிச்சுரலாம். நான் ரெடி . நீங்க ரெடியா?

நீங்க ரெடியான பிற்காடு விமலுக்கு தகவல் சொல்றேன். ஆரும் ரெடியில்லின்னா நான் பாக்கியா இருக்கிற 2000 பிரதிகளை ப்ளாக் அண்ட் வைட்லயே புக்கா போட்டு வச்சுக்கிட்டு வாய்ப்பு கிடைக்கிறப்பல்லாம் -தமிழ் நாடு பக்கம் போறப்பல்லாம் நானே வினியோகம் பண்ணி கடனை கழிச்சுர்ரன். அவ்ள தானே உடுங்க ஜூட்டு.

எச்சரிக்கை:
எம்.எல்.ஏ என் கிட்ட ரகசியம் பேசினதால - அதுவும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை வெய்ட்டிங்குல வச்சு பேசினதால ஒரு அபலைக்கு நீதி கிடைச்சது தனி கதை. அதை கேட்டவுகளுக்கு சொல்றேன்.

Monday, May 26, 2014

Focus on Tomorrows: An Ultimate solution 4 the over all success in lif...

Focus on Tomorrows: An Ultimate solution 4 the over all success in lif...: In these days people are not particular about actually what is said. People care only about who told. Only for those people I am to waste...

Sunday, April 27, 2014

அனுபவஜோதிடம் » Blog Archive » ஸ்ரீ அம்மன் சத நாமாவளி : பொருள் விளக்கம்

அனுபவஜோதிடம் » Blog Archive » ஸ்ரீ அம்மன் சத நாமாவளி : பொருள் விளக்கம்

அனுபவஜோதிடம் » Blog Archive » எமனுக்கும் டேக்கா கொடுக்கலாம் !

அனுபவஜோதிடம் » Blog Archive » எமனுக்கும் டேக்கா கொடுக்கலாம் !

நவீன பரிகாரங்கள்: பாய்ண்ட் டு பாய்ண்ட்







நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்களுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கதை அவர் சொன்னபடியே முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான். அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம்.



நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வந்த சிறுவன் மீண்டும் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?



பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் அவை கால ஓட்டத்தில் அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.



பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின.



பின்பு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.

பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.



2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். ஆசிரியர் தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவ , சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்து அது ஜோதிட பூமி மாத இதழில் முழுமையாக வெளிவந்தது ஒரு துணைக்கதை. பிரிண்டிங் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாய் புத்தகம் அச்சிட பெண்டாட்டி தாலியை அடகு வைக்கவேண்டிய‌அவசியமில்லாத காரணத்தாலும்...



சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ், தேஜா ஸ்வீட்ஸ், துர்கா ஸ்வீட்ஸ், ஆற்காடு ஸ்வீட்ஸ், துர்கா மோட்டார் டிரைவிங் ஸ்கூல்



போன்ற விளம்பரதாரர்களின் பெரியமனதாலும் லோக்கல் மாதமிருமுறை நடத்திய அனுபவம் கை கொடுக்க, தினத்த‌தந்தியின் அபயக்கரம் ரொட்டி வேட்டைக்கு தள்ளாதிருக்க இந்த சிறு நூல் வெளிவருகிறது.



"விருந்துண்ணப் போகும்போது விருந்து குறித்த விளக்கம் ஏதுக்கு" என்பது தெலுங்கு



பழமொழி. எனவே குதியுங்கள் புதிய வெள்ளத்தில். அடித்து செல்லட்டும் ஜோதிடம் குறித்த தவறான நம்பிக்கைகள்.



தங்கள்,



சித்தூர்.எஸ்.முருகேசன்,

ஜோதிட ஆய்வாளர்





நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்



ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.



ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.



உதாரணமாக:தங்கம்: குரு,இரும்பு:சனி



உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.



ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:



ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன்.



மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் ஜோதிட முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.



நவக்கிரகத் தோஷங்கள்:



நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.



நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.



ஒன்று:



எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.



இரண்டு:

குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.



மூன்று:

தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).



1. தேவதைகளுக்கு யாகங்கள்:



யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.



லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!



செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.



2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:



மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?



3. தானம் வழங்குதல்:

நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும்.



யோசியுங்கள்!

அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!



விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.



இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.



நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.



நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.



ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து "நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.





1. சூரியன் பேசுகிறேன்

உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.



கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.



நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.



ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.





நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.



இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.



என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும்.



கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?



இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க

2. காயத்ரி மந்திரம் படிக்கவும்

3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.

4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.

5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.

6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.



2. சந்திரன் பேசுகிறேன்



வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.



நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.



நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்:

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).

2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.

4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.

6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.

7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.

9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது



3. செவ்வாய் பேசுகிறேன்



இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!



ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.



நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?



சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா?



ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா?



அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா?



"ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?

2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).

3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.

5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.

6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.

7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்





4. ராகுபேசுகிறேன்



சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன்.



இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன?



கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன்.



நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.



சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்!



நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள்.



இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.



சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன.



பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.



நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.



பரிகாரங்கள் :

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.

2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.

3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.

4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.

5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்

6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.

7. பரமபதம் ஆடுங்கள்.

8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.

9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.

10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.

11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.



5. குருபேசுகிறேன்



"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள்.



கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.



பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார்.



சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.



அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.



சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம்.



எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.



நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!



உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.



கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.



ப‌ரிகார‌ங்க‌ள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.

2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.

3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.

4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.

6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.

7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.

8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.

9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.

10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.

11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.



6. சனிபேசுகிறேன்



செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.



மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.



19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும்.



ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள்.



சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன்.



இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன்.



ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி.



சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன்.



இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.



நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.



பரிகாரங்கள்:

1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.

2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.

3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.

4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.

5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.

6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.

7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.

8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.

9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.

10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.

11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.

12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.

13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.



7. புதன்பேசுகிறேன்:



"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.



புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே.



விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கு

ம்.

புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.



சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும்.



பரிகாரங்கள்

1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.

2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.

3. வியாபாரம் வேண்டாம்.

4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.

5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.

6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.

7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.

8. கள்ள உறவு உதவாது.

9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள்.

10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்

8. கேதுபேசுகிறேன்:



கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது.



இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.



ப‌ரிகார‌ங்க‌ள்:

1. எளிமையான வாழ்வு.

2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.

3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.

4. யோகம் பயிலுதல்.

5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.

6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.

7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.

8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.



குறிப்பு:

ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



9. சுக்கிரன்பேசுகிறேன்



யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை.



சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி.



தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே.



ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும்.



நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.



பரிகாரங்கள்

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.

2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.

3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.

4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.

5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.

6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.

7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).

8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.

9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.

10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.



முடிவுரை



எதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள்.ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.