Saturday, July 31, 2010

வாஸ்து ரகசியங்கள்

ஆபத்து.. ஆபத்து.. எச்சரிக்கை
2010,ஆகஸ்ட் 15 முதல் எந்த திரட்டியிலும் பிங் செய்யாமலே 500 உறுப்பினர்களுக்காக மட்டும் அசலான உண்மைகளை, நெருப்பு நிஜங்களை எழுதவேண்டும் என்று முடிவு கட்டியுள்ளேன். ஒரு வேளை 500 உறுப்பினர்கள் சேரவில்லையென்றால் .. 500 உறுப்பினர்கள் சேரும் வரை புதுசா எதுவும் எழுதக்கூடாதுன்னு டிசைட் பண்ணியிருக்கேன். அதனால கவிதை07 வாசகர்கள் உடனடியா உங்க ஆன் லைன் நண்பர்களை கவிதை07ல உறுப்பினர்களாகும்படி தகவலோ மெயிலோ உடனடியா அனுப்புங்க‌. Please !

இன்னைக்கு செலாவணில இருக்கிற வாஸ்துக்காரவுகள்ள மஸ்தா பேரு ஒரிஜினல் சப்ஜெக்ட்ல உள்ள  கடுகளவு மேட்டரை பெருசாக்கி , ஹைலைட் பண்ணி  உங்க மைண்டை தீவு திடலா ஆக்கி விளையாண்டுட்டு போயிர்ராய்ங்க. நீங்க பாட்டுக்கு  கெட்டபின்பு ஞானியாகி வாஸ்து எல்லாம் டுபாகூருன்னு தோஸ்துங்களுக்கு உபதேசிக்க ஆரம்பிச்சுருவிங்க.

ஒவ்வொருத்தரும் டாக்டராகனும்னா அது முடியாது. அட்லீஸ்ட்  போலி டாக்டரா ஒரிஜினல் டாக்டரானு கண்டுபிடிக்கிற கெப்பாசிட்டி  கீணம்.

ஒவ்வொருத்தரும் ஃபார்மசிஸ்டாயிர முடியாதுதான். அட்லீஸ்ட் டாக்டர் எழுதின மெடிசினை தான் ஃபார்மசிஸ்ட் கொடுத்தானா /அளவு அதானா / எக்ஸ்பைரி டேட் இன்னானு பார்க்கற தாக்கத்தாவது கீணம்.

அதே மாதிரி தான் ஜோசியம்,வாஸ்து எல்லாம். அடிப்படையதெரிஞ்சு வச்சுக்கிடனும். எதெல்லாம் ஜோசியர்/வாஸ்து காரவுக ஜூரிஸ்டிக்சன் .. எங்கன ரூட் மாறிர்ராய்ங்கனு உசாரா பார்க்கனும். ரூட் மாறினா போடாங்கோத்தானு கயட்டி உட்டுருனம்.

ஜோசியம், வாஸ்துவுக்கான அடிப்படை:

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. "

பேர் வைக்கிறதுல நம்மாளுங்க விளையாடி கீறாங்கப்பா. வீர்யத்துக்கு சுக்கிலம்னு ஒரு பேரு. இதன் உற்பத்திக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் சுக்கிரன். ஓகே ஓகே

மேட்டருக்கு வாங்கறிங்க. வந்தாச்சு

அண்டம்ங்கற வாத்தைக்கு டபுள் மீனிங்க் கீது பாஸு.
1.(இந்த)உலகம் , அண்டம்னா அண்ட சராசர பிரபஞ்சங்கள் ..   அண்டை வெளியில் மிதக்கும் கிரகங்கள்

2.பெண்ணுடலில் ஓவரிஸ் -ல் உருவாகி கருப்பைக்கு வந்து காத்திருந்து ஆணின் வீரியத்தில் உள்ள உயிரணுவுடன் சேர்ந்து குழந்தையா மாறுதே அதான் அண்டம்
பிண்டம்னா தெரியிமில்லை நம்ம பாடி. 

அந்த அண்டத்துல ( எக் செல்)  என்னெல்லாம் இருந்ததோ அதான் நம்ம பிண்டத்துலயும் இருக்கும்.  இது ஒரு அர்த்தம்.

அண்ட சராசர பிரபஞ்சங்கள் ,அண்டை வெளியில் மிதக்கும் கிரகங்கள்ள உள்ளதுதான் நம்ம பாடில இருக்கும் இது இன்னொரு அர்த்தம்.

அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு.

களி மண் நிறைஞ்ச ஏரிக்கும், களி மண்ணால செய்யப்பட்ட பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு

படிகார கரைசலுக்கு அதுல நூல் கட்டி தொங்க விடப்பட்ட படிகாரகட்டிக்கும் உள்ள தொடர்பு.

ஏழைங்க பணத்துக்கும் பணக்காரனோட வங்கி கணக்குக்கும் உள்ள தொடர்பு

செல் டவர்க்கும், செல்லுக்கும் உள்ள தொடர்பு.

இப்ப பேச்செடுத்தா நவகிரகம் நவகிரகம்ங்கறமே ( நவம்னா 9) ஒரு காலத்துல 7 கிரகம் தான் . ராகு கேது கிடையவே கிடையாது.  நம்ம பாடில   உள்ள சப்த தாதுக்கள் சப்த கிரகங்களால பாதிக்கப்படுது.  நம்ம பாடில   உள்ள  சப்த நாடிகள்
சப்த கிரகங்களால பாதிக்கப்படுது . வலது நாசில நடக்கிற சுவாசம் சூரிய நாடி
இடது நாசில நடக்கிற சுவாசம் சந்திர நாடி (பெண்கள் விஷயத்துல இதை உல்டா அடிச்சிக்கங்க).

உங்க உடம்பை பன்னென்டு ராசிகளா பிரிக்கலாம். உங்க தலை தான் மேஷம் பாதம்தான் மீனம்.சூரியன் உங்க செல்ஃபை குறிக்குது. சந்திரன் உங்க மனசை குறிக்குது.

ஒவ்வொரு கிரகம் ஒவ்வொரு பார்ட்டை குறிக்குது சூரியன்னா தலை. சந்திரன்னா லங்ஸ், கிட்னி, செவ்வாய் போன் மேரோ, ரத்தம், குரு இதயம் வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்/ தோல் சுக்கிரன் இன உறுப்புகள்.

கிரக சஞ்சாரமெங்கயோ மட்டும் நடக்கலை. உங்க பாடிலயும் நடக்குது. ரெண்டுத்துக்கும் ஒத்திசைவு இருந்தா நீங்க பாஷாவுக்கு முந்தின ரஜினி. ஒத்திசைவு இல்லேன்னா பாஷாவுக்கு பிந்தின ரஜினி.

வாஸ்து புருசன் வாஸ்து புருசங்கறாய்ங்களே. நீங்க தான் வாஸ்து புருசன். உங்க வீடு.. உங்க உழைப்புல உருவான வீடு .. மீ கண்டலனு கரிகிஸ்தே ( உங்க எலும்பு
சதைகளை கரைச்சிக்கிட்டதால ) எழுந்த வீடு அது உங்க உடலுக்கு வெளியில வாழற உங்களோட இன்னொரு உடல்.  அது உங்களோட எக்ஸ்டென்ஷன்
 பிரதிபிம்பம். உங்களை காட்டற கண்ணாடி. உடைஞ்ச கண்ணாடிலயோ,ஷேக் இருக்கிற கண்ணாடிலயோ தொடர்ந்த உங்க முகத்தை பார்த்துக்கிட்டிருந்தா என்னாகும்? 

வாடைக்காற்று ( வடக்குலருந்து வீசறது) உடம்புக்கு நல்லதில்லை. தென்றல் நல்லது ( தெற்குல இருந்து வர்ர காத்து) . காலை வெய்யில் ஓகே. மாலை வெய்யில் ஓகே. மதிய வெய்யில் நாட் ஓகே.  இப்படி இயற்கையில இருக்கிற சின்ன சின்ன அம்சங்களையெல்லாம் கவனிச்சு ப்ளஸ் மட்டும் வீட்டுக்கு கிடைக்கிறாப்ல ,மைனஸ் டச் ஆகாத மாதிரி வீட்டை கட்டனும். இதுதான் வாஸ்துவுக்கு பேசிக்.

ஜோசியத்துல எப்படி இந்த கிரகம் இங்கருந்தா இவ்ளதான். இதான் பலன்னு ஜோசியர்கள் சொல்லிட்டு கழண்டுக்குவாங்களே தவிர அந்த பலன் எப்படி ப்ராக்டிக்கலைஸ் ஆகும்  நடக்கும்னு கேட்டா அம்பேலாயிர்ராய்ங்களோ..

வாஸ்துலயும் அப்படித்தான் தெருக்குத்து இருந்தா என்னய்யா நடந்துரும்னு

உங்க டேபிள் எப்படி உங்க மைண்டை காட்டுதோ அப்படியே நீங்க கட்டி வசிக்கிற வீடும் உங்க மைண்டை காட்டிருதுங்கண்ணா

உங்க டேபிள் எப்படி உங்க மைண்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதோ அப்படியே உங்க வீடும் உங்க மைண்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.

சரி விளக்கம் போதும்னு நினைக்கிறேன். இப்போ வாஸ்துவுல உண்மையிலயே பெருஸ்ஸா எஃபெக்ட் கொடுக்க கூடிய விசயங்களை பார்ப்போம். ஓகே.

1.கோவில்கள்:
 (கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கிற எண்ணத்தோட கட்டலாம் அ
எதிர்காலத்துல ஆக்கிரமிக்கிற எண்ணம் வரலாம்) ஊர்காரவுக நிச்சயம் அப்ஜெக்சன் பண்ணுவாய்ங்க. அதை மீறி கட்டறிங்கன்னா நீங்க லிட்டிகன்டுனு அர்த்தம். லிட்டிகண்ட் என்னைக்கு நிம்மதியா வாழ்ந்திருக்கான்?

2.வடக்கு,கிழக்குல மலை,மண் மேடு:
வாஸ்து தெரியாதவுக கூட அசால்ட்டா இந்த  திசைகள்ளதான் தலைவாசல் வைப்பாய்ங்க.  இந்த திசைகள்ள மலை,மண் மேடு இருக்கவே கூடாது.

(இதுக்கெல்லாம் விஞ்ஞான பூர்வமான காரணங்கள் இருக்குங்கண்ணா ரோசிங்க. உங்க வீட்ல கிழக்குப்பக்கம் தலைவச்சு படுத்துருங்க. உங்களுக்கு வலது பக்கம் தெற்கு வரும். இடது பக்கம் வடக்கு வரும்.  சாதாரணமா-  இடது கைபழக்கம் உள்ளவுகளை தவிர - எல்லாருக்கும் வலது கை, வலது மார்பு சைஸ்ல கொஞ்சம் பெருசா இருக்கும். இடது கை,இடது மார்பு சைஸ்ல கொஞ்சம் சின்னதா இருக்கும்.
காலை பார்த்திங்கண்ணா வலது கால் கொஞ்சம் ஒல்லியா இருக்கும். இடது கால் கொஞ்சம் புஸ்டியா இருக்கும் . ஒரு வித ஒத்திசைவுக்காக வடக்கு பக்கம் வெயிட் கூடாது. தெற்கு பக்கம் வெய்ட் இல்லாம இருக்ககூடாதுனு ரூல் வச்சிருக்காய்ங்க
இன்னம் கொஞ்சம் முக்கி ரோசிங்க .. மேலும் முக்கியமான விசயமெல்லாம் கூட இருக்கலாம்)

வீட்டை விட்டு வெளிய வந்ததும் இந்த மலையையும் மண் மேட்டையும் பார்த்தா
இந்த பிம்பம் நாளடைவுல உங்க மைண்ட்ல வந்து உட்கார்ந்துரும். இனி என்ன? எதுல கை வச்சாலும் தடை ,தடங்கல் தான்.

மேலும் இந்த திசைகள்ல மலை,மண் மேடு இருக்குன்னா மேற்சொன்ன ஏதோ ஒரு திசைக்கு இது  ஊர் எல்லையா இருக்க வாய்ப்பு அதிகம்.

ஊருக்குள்ள வாழ முடியாமத்தான் ஊர் எல்லைக்கு வந்திருகானு அர்த்தம். ஊரோட ஒத்துவாழ முடியாதவன் எங்கண்ணே நிம்மதியா இருக்க முடியும்?


( தொடரும்.

Friday, July 30, 2010

ஸ்வீட்டி ஐ லவ் யு

அண்ணே வணக்கம்ணே,
அவாளை கிழிச்சு கொஞ்ச நாளாச்சு. நாமா ஓஞ்சு போவட்டும்னு விட்டா கூட வா கிழினு கூப்பிடறாய்ங்க என்ன பண்ண?  "அவா" மென்டாலிட்டி ங்கற தலைப்புல தனிப்பதிவு போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க.

சரி ஸ்வீட்டி ஐலவ் யு க்கு வந்துருவமா?
இதென்னடா முருகேசனுக்கு வந்த போங்காலம், இந்த 43 வயசுல (அதுவும் ஆகஸ்ட் 7 வந்தா 44)  எவளோ குட்டிய பார்த்து ஜொள்ளு விட்டுட்டாப்ல இருக்குன்னு இந்த பதிவை படிக்க வந்த நீங்க (வழக்கம் போல) செமர்த்தியா ஏமாற போறிங்க. காரணம் ஸ்வீட்டிங்கறது என் மகள் வளர்க்கிற 11 மாச பெண் நாய் குட்டி (பாமரேனியன் தான் ) . நாட்ல எத்தனையோ பிரச்சினை இருக்க நாயை பத்தி எழுதவந்துட்டார்யானு சலிச்சுக்கிறாதிங்க.  நான் எழுதவந்தது நாய்க்குட்டிய பத்தி மட்டுமில்லை. அன்பை பத்தி.

இன்னைக்கு உலகத்துல உள்ள  99.9 சதவீத  பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு இல்லாததே.  நோயாளிகள்  மேல கொஞ்சூண்டு  அன்பு இருந்திருந்தா காலாவதியான மருந்துகளை  லோட் லோடா கொண்டு வந்து வித்திருப்பாய்ங்களா?

நம்ம பிரதமருக்கு மட்டும் 2007லயே ஆந்திரமக்கள் மேல அன்பு பிறந்திருந்தா 2010ல சந்திரபாபு பாப்லி அணைய பார்க்கிறேனு போய் நாறியிருக்கமாட்டாரு.சோனியாவுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல கொஞ்சமே கொஞ்சம் அன்பு பிறந்திருந்தா தனி ஈழம் மலர்ந்திருக்கும். கலைஞருக்கு தமிழ் நாட்டு மக்கள் மேல அன்பு இருந்திருந்தா வெறுமனே இலவசங்களை அள்ளி வீசிக்கிட்டு காலத்தை தள்ளியிருக்கமாட்டாரு.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் தமதென்பும் உரியர் பிறர்க்கு"  தேவேந்திரனுக்கு ஆயுதம் தேவைப்பட ததீச்சிங்கற ரிஷி தன்னோட எலும்புகளை கொடுத்தாராம்.

அன்பு! அன்பு! அன்பு!  இந்த ஒரு ஐட்டம் தம்பதிகள் மத்தில இல்லாம போனா என்னெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிக்க ஒரு வாரத்து தந்தி பேப்பரை படிச்சா போது.
ஒரு ஆசிரியனுக்கு மாணவிகள் மேல காமம் தான் வருது ஏன்? அந்த பிக்காலி மனசுல  அன்பில்லை. .

நான் ஒன்னும் உத்தம புத்திரனும் இல்லே. நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடை பிடிச்சவனும் இல்லே (1986 ல ஒரு ஆறுமாசம் தவிர)  பிடிக்கிறவனுமில்லே .

ஒரு படத்துல (தமிழ்) மணிவண்ணன் பேசற டயலாகை பாருங்க:

ஒரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் அம்மாவா தோணும். இன்னொரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் பெண்டாள தோணும். எந்த பொண்ணை  பார்த்தாலும்  மகளா தோணும்.

என் விளக்கம்:

இதெல்லாம் வளர்ச்சி. "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் " அப்பத்தான் இந்த ஸ்டேஜ் வரும். இப்ப ரெடிமேட் ட்ரஸ்ஸுங்க வேற அதிகமாயிருச்சா. எந்த பொண்ணை பின்னே இருந்து பார்த்தாலும் அந்த மாதிரி ட்ரஸ்ஸை என் மக போட்ட மாதிரியே தோணுது. ஏதோ குட்டி தன் அப்பாவை" டாடி" ன்னு கூப்பிட்டா என் மக என்னை கூப்பிட்ட மாதிரி செல்ஸ்ல வைப்ரேஷன். "அது அது" அந்தந்த வயசுல முடிஞ்சுட்டா அடுத்து வர்ரதெல்லாம் கரெக்டா இருக்கும். அரை குறைங்க சாகிற வரை அரை குறையாவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.

தாய் பால் மேட்டரையே எடுத்துக்குங்க.. கொடுக்கிற நிலைல தாய் இல்லைன்னாலும் ( இன்ஃபெக்சன் ?) குடிக்கிற நிலைல குழந்த இல்லைன்னாலும் அது பாட்டுக்கு சுரந்துக்கிட்டே கிடக்கு. கொடுக்கப்படலன்னா/குடிக்கப்படலன்னா கட்டிக்குது. இயற்கைய எவனும் தடுக்கமுடியாது. தடுக்கிறேனு இறங்கினா அகாலமா தடுக்கி விழவேண்டியதுதான்.

1993ல நான் இந்தி பண்டிட்.கண்ணாலமாகி 2 வருஷம் ஆகியிருக்கு. வயசு 26. 8,9,10 க்ளாஸ் வரை நாமதான் இந்தி டீச்சிங். பாவம் அந்த குழந்தைங்க உடலளவு வளர்ந்திருக்கங்களே தவிர மனசுல கல்மிஷம் கிடையாது.  ஒரு ஃபாதர்லி நெஸ்ஸுக்கு தவிக்கிற வயசு.(பொண்ணு பெருசாயிருச்சுனு அவிக அப்பன் லேசா விலகியிருப்பான்) தேவையில்லாம வந்து வந்து உரசும். கும்பலா உரசும். வேணம்னே குரல்ல கரகரப்பை வரவச்சுக்கிட்டு, " தத் தள்ளி நில்லு . தலைக்கு என்னா எண்ணெய் வச்சுருக்கே"ன்னோ, " வேகுது .. தள்ளி நில்லு காத்துவரட்டும்"னோ, "வெளிச்சம் வரட்டும்"னோ சுத்தமா வெட்டி விட்டுர்ரது.

இந்த மெச்சூரிட்டிக்கு காரணம் 1984டு 1986 போட்ட கெட்ட ஆட்டம்.  ப்ளஸ் 1991 டு 1993
முறையான திருமண வாழ்க்கை. காமத்தை வெல்ல ஒரே வழி அன்புதான். உங்க மனசெல்லாம் அன்பு பொங்கி வழியறப்ப காதலிய கூட உச்சந்தலைல கை வச்சு ஆசீர்வதிக்க தோணுமே தவிர கை போட தோனாது.

கொஞ்சமா வாச்சும் அன்புங்கறது மனிதர்கள் இடையில  நசுங்கலாவோ,தேசலாவோ , தீசலாவோ மினுக் மினுக்னு அடிச்சிக்கிறாதாலதான் வாழ்க்கை சக்கரம் கட முடானு சத்தம் போட்டுக்கிட்டாவது ஓடிக்கிட்டிருக்கு.

மனித உணர்வுகள் தொத்து நோய் போல் பரவக்கூடியவை. நீங்க சிரிச்ச நானும் சிரிக்கிறேன். நீங்க அழுதா நான் அழாட்டாலும் சிரிக்க முடியறதில்லை. ஒரே உயிர்ல இருந்து வந்த (அமீபா) நாமெல்லாம் இணைக்கப்பட்டிருக்கோம்.  நீங்க யாருக்கோ காட்டற அன்பு சரியான விலாசம் இல்லாத தபால் அட்டை மாதிரி தடுக்கி தடுக்கி என்னை வந்து சேருது. நீங்க யாருன்னு எனக்கு தெரியாட்டாலும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நன்றிய நான் யாரோ ஒருத்தருக்கு தெரிவிக்கிறேன்.

சரிங்கண்ணா அன்பு அன்புங்கறியே ஏன் அன்பு காட்டனும்ங்கறிங்களா..சக உயிர்களின் பால் நீங்க காட்டற அன்பு இயற்கைக்கு நீங்க சொல்ற  நன்றி தலை.
இன்னைக்கு நான் இந்த பதிவை போட நீங்க படிக்கிறிங்க. இந்த ரெண்டு செயலுக்கும் இடையில எத்தீனி ப்ராசஸ் கீது. உதாரணத்துக்கு என் தமிழறிவு. கண்ணி ஆர்வம்,  இந்த  அழகி  சாஃப்ட்வேர், இந்த கம்ப்யூட்டர் , அடிச்சதை ஸ்டோர் பண்ணிக்கப்போற பென் ட்ரைவ், இன்டர் நெட் கனெக்சன், ப்ளாகர் டாட்காம் ,இந்த பதிவுகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க போற திரட்டிகள் ஷேர் பண்ணப்போற ஆர்க்குட், ஃபேஸ் புக் மாதிரி தளங்கள். இவிகளுக்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பிச்சா என் ஆயுசு போதாது. மேலும் அவிகளுக்கு என் நன்றியால பெரிசா லாபமும் கிடையாது. இப்ப நான் என்ன பண்ணனும்?

என் நன்றிய வேற யாருக்காச்சும் தெரிவிக்கலாம். ஒரு கண்ணில்லாத தோழன் சாலையை கடக்க உதவலாம், படிப்பறிவில்லாத தாய்குலத்துக்கு எம்.ஓ ஃபார்ம் ஃபில் அப் பண்ணலாம்.

இப்ப ஸ்வீட்டி மேட்டருக்கு வரேன். என் பாயிண்ட் ஆஃப் வ்யூல சட்டைக்கு இஸ்திரிபோடறதே லக்சரி. இதுல பாமரேனியன் எல்லாம் டூ மச். ஆனா என்ன பண்றது? நம்ம கொள்கையே "எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"னு காட்டவேண்டியது. வரலைன்னா அவிக வழிக்கே போயிர்ரது. (இங்கன பலான ஜோக், செக்சாலஜினு தாவினது கூட அந்த வழிதான்) . சரி ஓஞ்சு போவட்டும் வாங்கியாச்சு.

அது என் மேல காட்டற அன்பையும்,  தன் அன்பை வெளிக்காட்ட தன் மொழியை தீட்டிக்கிட்டதையும், அதனோட பாடி லேங்குவேஜையும், டெலிபத்திலயே பேசறதையும் சொன்னா அப்பாறம்  நாய் வளர்க்கிற பார்ட்டிங்கல்லா க்யூ கட்டிருவாய்ங்க அதனால் அம்பேல்.

"அவா" மென்டாலிட்டி

நான் இந்த பதிவு மூலமா அவிகளுக்கு சொல்ல விரும்பற மெசேஜ் "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட்"
காலம் மாறிப்போச்சு. இன்னம் நீங்க பழைய நினைப்புலயே இருந்தா எப்படி? உங்க கிட்டே என்ன இருக்குங்கறது சனத்துக்கு தேவையில்லை. சனத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்தா போதும்.

இங்கே அழுத்தினா ஒரு மேட்டர் வரும். இது ஒரு பிராமணோத்தமர் - கிருஷ்ணர் கோவில் அய்யர் கிஷ்ண ஜெயந்தி  பாம்லெட்டுக்காக  எழுதின மேட்டர்.(அவரு தெலுங்குல எழுத வேணம்னே நானு ராமகிருஷ்ண மட வெளியீடுகளோட பாணில லேஹ்ய தமிழ்ல ட்ராஸ்லேட் பண்ணேன்) பாம்லெட்டோட கான்செப்ட் என்ன? பலான தேதி கிஷ்ண ஜெயந்தி வருது அல்லாரும் வாங்கப்பானு, பைசா கொடுங்கப்பானு  கூப்பிடனும். இதுக்கு அந்த  பா.பு எழுதின மேட்டரை பாருங்க. ஏதோ மதிய நேரத்துல போது போகாத பிராமண விதவைகள் மத்தில மைக்ல பேசவேண்டிய மேட்டரையெல்லாம் போட்டு குழப்பியிருக்கு.

இன்னைக்கு அவனவன் பறக்கறான். ஒரு காலத்துல புது சினிமா ரிலீஸுக்கு பாம்லெட் கொடுத்துக்கிட்டு வண்டி போனா தாய் குலம் பசங்களை கெஞ்சு கூத்தாடி வாங்கி படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாய்ங்க. இன்னைக்கு எவனுக்கு நேரம் இருக்கு.

நீங்க ஓஷோவோட "கிருஷ்ணா"வை  படிச்சிருந்தா  இந்த மேட்டர் எந்த அளவுக்கு பத்தாம் பசலித்தனமா இருக்கோ புரியும். கோவில் யாதவர்களோடது. பாம்லெட் போகவேண்டியதும் அவிகளுக்குத்தான். புரிய வேண்டியதும் அவிகளுக்குத்தான்.
ரெஸ்பாண்ட் ஆகவேண்டியதும் அவிக தான். எனக்கு 43 வயசாகுது எனக்கே இந்த மேட்டரை படிச்சா (அடிச்சேன் தலை அதான் சோகம் - கோவில் நிர்வாகிகள்ள ஒருத்தர் நம்ம டைப்பு. ஓஞ்சு போவுதுய்யா அப்படியே அடிச்சு கொடுத்துருனு கெஞ்சிக்கினார்) கடுக்குது.

இன்னைக்கு நூடுல்ஸ், கார்ட்டூன் சேனல்ல மூழ்கியிருக்கிற குட்டீஸுக்காகட்டும், ஜீனு, செல்லுனு பறக்கற டீன் ஏஜர்ஸுக்காகட்டும் இந்த பாம்லெட்டை பார்த்தா என்ன தோணும்? ஓடிப்போயிரமாட்டான்?

அய்யரோட இந்த  லேங்குவேஜுல பொது கக்கூஸுல  ஆண் பெண்கள்னு எழுதினா கூட குழப்பம் வந்துருமே.யாதவர்களை வச்சுத்தான் கோவில்.  கோவிலை வச்சுத்தான் அய்யரு.  யாதவர்கள், யாதவ குல வாரிசுகள் கிருஷ்ணனை பத்தியும், கிருஷ்ண ஜெயந்தியை பத்தியும் ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சிக்கிட்டா அய்யரோட சர்வைவலுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் பாருங்க தன்னோட மேதாவிலாசத்தை காட்டிக்க அய்யரு எழுதின பாம்லெட் மேட்டர் அவருக்கே ஆப்பா முடிஞ்சுரப்போவுது.

தேவையில்லாத மேட்டரையெல்லாம் வரிஞ்சு வரிஞ்சு எழுதின பார்ட்டி உறியடியை அவாய்ட் பண்ணிருச்சு. இப்படிக்குனு வருமே சூத்திரங்களோட பேரு அதையும் அவாய்ட் பண்ணிருச்சு. அதைல்லாம் சேர்த்து ஒப்பேத்தி அடிச்சு முடிக்கிறதுக்குள்ள நெஜமாவே கண்ணை கட்டிருச்சுப்பா

(வேணம்ணே பண்ணாரோ இல்லே தேவையில்லாத மேட்டர்ல சக்தி செலவழிஞ்சு போயிட்டதால ஓஞ்சுபோயி விட்டுட்டாரோ கெரகம்டா சாமி

பி.கு:
என்னதான் கச்சாடாவா இருந்தாலும் ரெண்டு பாயிண்ட் நம்ம கொள்கைக்கு நெருக்கமா வர்ரதால அந்த ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் பச்சை கலர்ல கொடுத்திருக்கேன்.  (க்ரீன் சிக்னல்)  தன் மூளையில படிஞ்சிருக்கிற  வேத, புராண ஒட்டடைகளை  மீறி செய்திருக்கிற  வித்யாசமான முயற்சிகளை  மெருன் கலர்ல கொடுத்திருக்கேன்.( இதுக்கு அதிபதி செவ்வாய். புரட்சிக்கு இவர்தான் காரகர்)

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்

அனைவரும் வருக!                                                               கண்ணன் திருவருள் பெருக !!

ஸ்ரீகிருஷ்ண பரபிரம்ஹனே நமஹ
ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூர்

2010,செப்டம்பர், 2 (வியாழக்கிழமை) &  5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்
ஸ்லோகம்:
வேதேஷு யக்னேஷு தப: சைவ
தானேஷு மத்புண்ய பலம் ப்ரதீஷ்டம்
அத்யேதி தத்பர்யமிதம் விதித்வ
யோகே பரம் ஸ்தானம் பைதி சாத்யம்
பொருள்:
வேத அத்யயனம், தவம்,யாகம்,தானம்,தாத்விக கர்மம்,காம்ய கர்மங்களால் கிட்டும் பலன்கள் பக்தி மார்கத்தை கடைபிடிக்கும் மனிதர்களுக்கு கிட்டாது போகலாம்.
ஆனால் பக்தி காரியங்களால் அவர்கள் மேற்சொன்னவற்றையெல்லாம் பெறுவதோடு  முடிவில் திவ்யமான பரந்தாமத்தையும் பெறுகிறான்.

அன்புள்ள பகவத் பக்தர்களே!
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாள் நம்மை பவித்திரர்களாக்க இவ்வாண்டு அதாவது ஸ்ரீ விக்ருதியாண்ட் பகுள அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினம் அதாவது  (2/9/2010 செப்டம்பர் 2 ஆம் தேதி ,வியாழன்) ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூரில் கீழ் கண்டபடி  வைபவமாக நடைபெறும் என்று தெரிவிக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்
2010,செப்டம்பர், 2 ஆம் தேதி (வியாழக்கிழமை)

காலை 6 மணி        :           சுவாமிக்கு விசேஷ அபிஷேக,அலங்கார,ஆராதனை
மதியம் 12 மணி      :        அன்னதானம்
மாலை 6 மணி         :         கருடாழ்வார் வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் வீதி உலா
                                       ( ஊர்வலம்) புஷ்ப பல்லக்கு சேவை, பாட்டுக்கச்சேரி,வாண                              வேடிக்கை, நையாண்டி மேளம்,கரகாட்டம்,                                         பம்பை,புல்லாங்குழல், மங்கள வாத்தியம், பறை                            வாத்தியங்களுடன் நடைபெறும்.
2010,செப்டம்பர், 5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
மாலை 6 மணிக்கு உறியடித்திருவிழா நடைபெறும்


இந்த நல்வாய்ப்பை பக்தர்கள் பயன் படுத்திக்கொள்ளும்படி, மேற்சொன்ன நிகழ்ச்சிகளை வெற்றிபெற செய்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனின் அனுக்கிரகத்தை, அருளை பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

யுகதர்மத்தின் படி தர்ம சம்ஸ்தாபனத்திற்காக துஷ்டர்களை சிட்சித்து, சிஷ்டர்களை ரட்சிக்க ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுக யுகங்களில் பிறப்பேன் என்று பகவத்கீதையில் உபதேசித்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணன் சாமானிய மக்கள் நடுவில் சாமானிய மனித உருவில் பிறந்து துஷ்ட சக்திகளை  நசிக்க செய்து, சாமானிய மக்களுக்கு தேறுதல் அளித்தபடி மனிதர்களெல்லாம் எப்படி ஒன்று பட்டு வாழவேண்டுமோ ஞான போதனை செய்தார். இத்தகு பெருமைவாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை புனிதமானதாக கருதுகிறோம். பக்தர்களின் கலக்கங்களை போக்கி ஆன்மீக ஆனந்தத்தை தருதல் அவரது முதற்கடமையாகும். யார் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மனின் திவ்ய ஞானத்தை கிரகித்து அவரது நாம,ரூப,லீலா,குண விசேஷங்களை புரிந்துகொள்கிறார்களோ அவர்களின் இடம் இனி கோலோக பிருந்தாவனமே (அழகான தேவ தேவனின் நிவாசம்).அதனால் பக்தி சிரத்தைகளுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி  ஜெயந்தி தினத்தன்று ஸ்வாமியை பூஜித்தால் கோதானம் செய்த பலன் கிடைக்குமென்று புராணங்கள் சொல்கின்றன.

நம் வாழ்வில் உள்ளவை,கிடைப்பவை யாவும் பூர்வ புண்ணிய பலனே. உள்ளவை யாவும் நமக்காகத்தான் ஆனால் நம்முடையவையல்ல.உள்ளவை யாவும் உமாபதிக்கு சொந்தமானவையே. அதனால் நம் தேவைக்கு மிஞ்சி  கூடுதலாய் உள்ளவற்றை பிறருக்கு சமர்ப்பிக்கிறோம். சமர்ப்பணத்தின் போது இன்னொரு மனிதர் பிரவேசிக்கிறார்.அவரே பகவான். கொடுக்க பொருட்களை, கொடுக்கும் கைகளை,  கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்தையும் பரமாத்மனே அனுக்கிரஹித்தார்.

பவித்திர ஹ்ருதயம் சமர்ப்பிக்கிறது. அவ்வாறு பக்தியுடன் சமர்ப்பிப்பதால் ஹ்ருதயம் பவித்திரமாகிறது. பக்தி எந்தளவுக்கு பிரதானமோ பக்தி காரியமும் அந்தளவுக்கு பிரதானமே. ஸ்தூலமாக பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணன் முரளி கான லோலன். ஆனால் சற்று ஆழமாக சூட்சுமமாக பார்த்தால் அவர் வெறுமனே புல்லாங்குழலை ஊதியவர் அல்லர். விசுவத்திற்கெல்லாம் ஒரே தடவையில் உயிரை ஊதியவர். இத்தகு பெருமை வாய்ந்த பிராண தாதாவை நாம் பவித்திரமாக பூஜிக்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணன்  முழங்கும் பாஞ்சஜன்யம் வேறேதோ அல்ல. அது ஞான முழக்கம். அதனால் மனிதர்கள்  மரணத்தை தாண்டிச்செல்ல ஞானமே பிரதானமென்ற சத்தியத்தை தன் வாழ்வில் உறுதி செய்தான் ஸ்ரீகிருஷ்ணன் . வெண்ணை என்றால் சாரம் என்று அர்த்தம். பாலின் சாரமே வெண்ணை. பிரபஞ்சத்தின் சாரம் ஞானம். எனவே வெண்ணை என்றால் ஏதோ அல்ல ஞானம் .எப்போது ஸ்ரீகிருஷ்ணன் உன் இதயத்தில் இறங்குகிறாரோ அதுவே ஸ்ரீகிருஷ்ண ஜனனம். அதுவரை இதயத்தில் இருள் இருக்கும். எனவே தர்ம ஜீவிதத்தை பகவானுக்கு அர்ப்பியுங்கள். ஞானாத்தால் அவரை அர்ச்சித்து வாருங்கள்.

சபரியிடமிருந்து ஸ்ரீராமன் பழங்களை பெற்று மோட்சத்தை தந்தான். கஜேந்திரனிடமிருந்து பூக்களை பெற்று முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான்.குசேலனிடமிருந்து அவலை பெற்று ஐஸ்வரியத்தை தந்தான்.  பரமாத்மா நம்மிடமிருந்து எதையோ  கிரஹித்தான் (பெற்றுக்கொண்டான்) என்றால் அனுக்கிரஹிப்பான் என்று பொருள்.  நாம் பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது பெற்றுக்கொள்பவர் யாராயிருந்தாலும் உண்மையில் கிரஹிப்பவர் (பெற்றுக்கொள்பவர்) பரமாத்மனே.  எனவே நமக்கு பகவானின் அனுகிரஹம்  நிச்சயம் கிட்டும்.

அதனால் தங்களால் இயன்றவற்றை இந்த காரியத்துக்கு சமர்ப்பித்து புனிதர்களாகி, தேவானுக்கிரகம் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

* இந்த துண்டு பிரசுரத்தை   தேவ பிரசாதம் &மதிப்புடையதாய் கருதி  மதிப்புடையவர்களுக்கே சமர்ப்பிக்கவும்

இங்ஙனம்:
வி.ரவீந்திர நாத் யாதவ்,                 எஸ்.சுரேஷ் யாதவ்,
     செயலாளர்                              தலைவர்

மற்றும் சித்தூர் நகர யாதவ குலத்தவர்கள்

Thursday, July 29, 2010

வாஸ்து வாஸ்தவம் தான்

ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். என் பரிசோதனைகளுக்கு  நான் தான் என்னோட லேப். நான் தான் எலி. மொத ஊசி எனக்கு தான். அப்பாறம் பூட்ட கேசுங்களுக்கு போட்டு பார்ப்பேன். (அதாவது இன்னம் கெட்டுப்போக வாய்ப்பே இல்லைங்கற கேசுங்களுக்கு) அப்பாறம் தான் சனத்துக்கு.

வாஸ்து கதை கூட அப்படித்தான். ஜோசியருங்க  மாதிரியே வாஸ்துகாரவுக கூட பயங்கரமா பீலா விடுவாய்ங்க. மொத்தமா நம்பிராதிங்க. தனித்தனியா பார்த்தா எல்லாமே பூதாகரமா தெரியும். மொத்தமா பார்த்தாதான் ஒரு ஐடியா வரும்.

ஜோசியக்காரவுக கிரகத்தையே கட்டி அழுவாய்ங்க. இந்த குரு வரட்டும் கண்ணாலமாயிரும்னுவாய்ங்க. கண்ணாலம் நடக்கலைன்னா  சனி லேசா பார்த்துட்டாரும், அடுத்த குரு வரட்டும் ஆயிரும்னு காலத்தை கடத்துவாய்ங்க.

பல தடவை சொல்லியிருக்கன் கோசார பலனோட இம்பாக்ட்  20 சதவீதம் கூட கிடையாது. தசாபுக்திகள் சாலை மாதிரி. உங்க ஜாதகம் ஒரு கார் மாதிரி . கார்ல ஷாக் அப்சர்பர் கரெக்டா இருந்தா எப்படி மோசமான ரோட்ல கூட குஷாலா பயணம் பண்றமோ அப்படி ஜாதகத்துல ஸ்டஃப் இருந்தா கெட்ட நேரமும் இல்லே ..ஒரு ....ரும் இல்லே.(லேசா குலுங்கும். பக்கத்துல குட்டி இருந்தா உரசிக்கலாம்). டப்பா காரு 6 ட்ராக் ரோடுக்கு போனதும் கண்டசாவா மாறிருமா? நோ .. சாலை தான் மாறுமே தவிர வண்டி மாறாது. மேல் மாடிக்கு வேலை கொடுக்காம எந்த வித அறிவியல் பார்வையோ ,ஆன்மீக பார்வையோ  இல்லாம ஜோசியத்தை ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி ஒப்பிக்கிற பார்ட்டிங்களாலதான் பிரச்சினையே.

ஒரு படத்துல சார்லி ஜோசியரா வருவாரு. செத்துப்போனவன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பலனை அள்ளிவிடுவாரு. ஜோசியர்களுக்கு ஒரு எச்சரிக்கை :

ஜாதகத்தை கையில கொடுத்ததும் பிட் பிட்டா பலன் சொல்லாதிங்க. முதல்ல லக்னம்,லக்னாதிபதிய பாருங்க. சூரிய சந்திரர்களை பாருங்க, ஆயுள் காரகனான சனி,அஷ்டம ஸ்தானம் , ஆயுள் ஸ்தானாதிபதி நிலைகளை பாருங்க. முக்கியமா ஜாதகம் வந்த நேரத்தை பாருங்க (ஆரூட லக்னம்) அப்பாறம் பலன் சொல்ல ஆரம்பிங்க.

ஜோசியருங்க  ஜாதகத்தை, கிரகபலத்தை எல்லாம் விட்டுட்டு கோசாரத்தை கட்டி அழறாப்ல வாஸ்துக்காரவுகளும் அசலான மேட்டருங்களை விட்டுட்டு ( உ.ம் காம்பவுண்ட் இல்லேன்னா வாஸ்துவே வேலை செய்யாது. அந்த வரிசைல காம்பவுண்ட் போட்ட வீட்டுக்கு இந்த பக்கத்து காம்பவுண்ட் வால் வரை ஒரே ப்ளாக் தான். இதுக்கு ப்ளாக் வாஸ்துனு நாமகரணம் பண்ணியிருக்கேன்) எத்தனை படி,எத்தனை சன்னலுனு ஜல்லியடிக்கிறாய்ங்க   அத்தை இடி இத்தை இடினு இடி அமீன் கணக்கா அமீனா வர்ர வரை வீட்டுக்காரனை  திவாலாக்கிர்ராய்ங்க.

மனித வாழ்வை வெறுமனே கிரகங்களோ வாஸ்துவோ மட்டும் இன்ஃப்ளுயன்ஸ் பண்றதில்லை. எத்தனையோ ஃபேக்டர்ஸ் இருக்கு.

இந்த ஜாதக ஆராய்ச்சி,வாஸ்து ஆராய்ச்சிங்கறது ப்ரிலிமினரி. மினிமம் கியாரண்டி. ரிட்டர்ன் டெஸ்ட் மாதிரி . நாரதர் சீதேவிக்கும் மூதேவிக்கு வச்ச ரிட்டர்ன் டெஸ்ட் இல்லிங்கண்ணா( நடந்து போய் ரிட்டர்ன் வர்ர டெஸ்ட்) எழுத்து தேர்வு. ரிட்டர்ன் டெஸ்டுக்கு அப்பாறம் எத்தனையோ ஃபில்ட்டர்ஸ் இருக்கு.

ஜெயலலிதா பிறந்த அதே நிமிஷத்துல இந்தியாவுல மட்டும் 4 குழந்தை பிறந்திருக்கும். மத்த 3 குழந்தை என்ன ஆச்சு? அவிக பிறந்த லக்னத்துல (சுமார் 2 மணி நேரத்துல 60 நி+60 நி = 120 நிமிடம். 120நிமி X  நிமிடத்துக்கு 4 குழந்தைன்னா மொத்தம் 480 குழந்தை ஏறக்குறைய அம்மா ஜாதகத்துல பிறந்திருப்பாய்ங்க. அவிகல்லாம் எங்க போனாங்க?

மனித வாழ்வை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.  ஒரு கிரகம் தன் இம்பாக்டை காட்டறதுக்கு நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ் இருக்கு. இங்கன ஒவ்வொரு நொடியும் ஒரு ஜங்ஷன் பாயிண்ட். இந்த நொடி நீங்க என்ன பண்றிங்கங்கறதுதான் அடுத்த செகண்டை டிசைட் பண்ணுதுங்கண்ணா.

உங்க டெசிஷன் மேக்கிங்கை தான் இந்த கிரகம்,வாஸ்து எல்லாம் துவைச்சி எடுக்குது.

உங்களை நீங்க இந்த படைப்புலருந்து தனியா உணர்ந்தா இதெல்லாம் ஃபுட் பால் மாதிரி அடிச்சு விளையாடும். நான் இந்த படைப்புல ஒரு அங்கம்.பிரிக்க முடியாத அங்கம்னு நீங்க அனுபவ பூர்வமா உணர்ரப்ப இதெல்லாம் ஜுஜுபி.


இந்த பதிவுல வாஸ்து ஜோதிடம்ங்கற ரெண்டு ஃபேக்டர்ஸை மட்டும் பார்ப்போம். இந்த ரெண்டுத்துக்கும் இடையில ஒரு லிங்க் இருக்கு. ஒரு குழந்தை பிறக்கும்போதே அது இன்னா மாதிரி வீட்ல வாழனும்னு அதனோட ஜாதகத்துலயே சொல்லப்பட்டிருக்கு. ( நாலாவது பாவம், அந்த பாவாதிபதி, அவர் நின்ன இடம், கூட சேர்ந்த கிரகங்களை வச்சு இதை டிசைட் பண்ணலாம்)

ஒவ்வொரு வீடும் கட்டப்பட்ட வாஸ்துவை பொருத்து அந்த வீட்ல எந்த மாதிரி ஜாதகன் வாழனும்னு டிசைட் ஆயிருது. எத்தனையோ பன்னாடைங்க அப்பா,அம்மாவுக்கு சோறு போடாம,கூட பிறந்த அக்கா தங்கச்சிக்கு நல்ல நாள்ள  ஒரு ப்ளவுஸ் பீஸ் கூட  வச்சி கொடுக்காம வாழ்ந்து பீ தின்னு பிண்ணாக்கு தின்னு வீடு கட்டிருதுங்க.ஆனால் அதுல குடியிருக்கமுடியாம போயி  வாடகை வீட்லயே காலத்தை தள்ளுதுங்க.

இங்கன ஒரு ரகசியம். ஜாதகத்துல பயங்கர தரித்திர யோகம் இருக்கும்.ஆனா இவன் லட்சம் லட்சமா சேர்ப்பான். எப்டி? எப்டி? இவன் சம்பாதிக்கிறது இவனுக்காக இல்லை. எவனோ இவனை ஏமாத்த போறான். அவனுக்காக முன்னே அனுப்பி வைக்கப்பட்ட கலெக்ஷன் ஏஜெண்ட் இவன்.

இதே ஃபார்முலா தான் வீடு கட்டற மேட்டர்ல கூட ஒர்க் அவுட் ஆகுது.இவனுக்கு நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறப்பான்.ஆனால் தாஜ்மகால் மாதிரி வீடு கட்டுவான். எதுக்குங்கறிங்க? எவனோ வந்து அனுபவிக்கபோறான். அவனுக்காகத்தான் இவன் ஓடி ஓடி வீடு கட்டறான்.

சின்ன குன்ஸ்:
1.ஒரு பிக்காலி. பணம் பணம்னு அலைஞ்சு பறை சாத்துதுனு வைங்க. நிச்சயமா அவனோடது சீடை ஜாதகம்னு அர்த்தம். அது பணத்தை சேர்க்க சேர்க்க கண்ணாலம் தள்ளி தள்ளி போகும். (குருதான் கங்கண-கல்யாண -காரகன், அதே குருதான் தனகாரகனும். தனகாரகனா ஒர்க் ஆகிறதால கங்கண காரகனா கை கொடுத்துர்ரார்). குறைபிரசவமா நடக்கும். ஆண்குழந்தை இருக்காது. (பிறக்காது), பொறந்ததெல்லாம் உருப்படாமத்தான் போகும். இவனுக்கு நடுவயசுல வயிறு ட்ரபிள் கொடுக்க ஆரம்பிக்கும். 50 தாண்டினதும் ஹார்ட் ப்ராப்ளம் வரும். உண்மையான தனயோகம் இருக்கிறவன் கனவுல கூட பணத்தை நினைக்க மாட்டான்.ஆனால் அது தானா இவனை வந்து சேரும்.

2.இன்னொரு பன்னாடை வீடு கட்டனும் வீடு கட்டனும்னு துடிக்குதா? அது சர்வ நிச்சயமா  நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறந்திருக்கும். இந்த மாதிரி கேஸ்ல வீடு கட்டிக்கிட்டிருக்கிறப்பவோ கட்டி முடிச்ச 3 அ 6 மாசத்துலயோ அம்மா செத்து போயிருவாய்ங்க அ பெண்டாட்டி. ஒரு வாகன விபத்து நடக்கும். அ செக்ஸ் ஸ்கேண்டல்ல மாட்டுவான் அ வீட்டு மேலயே வில்லங்கம் வரும் அ பேட்டரி சுத்தமா மெட்டாஷ் ஆயிரும்.

மேலே சொன்ன மேட்டர் எத்தனை கேஸ்ல ஒர்க் அவுட் ஆச்சுனு நீங்க தான் சொல்லனும் (  நம்முது தான்  அனுபவ ஜோசியமாச்சே)

மொதல்ல நான் பிறந்து 24 வருஷம் வாழ்ந்த  வீட்டையும் அதனோட வாஸ்துவை  பத்தியும்  சொல்றேன். 19X64 கிழக்கு பார்த்த வாசல். ( மினிமம் கியாரண்டி. கடைசி வரை எங்க வீட்ல சிதம்பரம் தான்) ஆண்களும் டம்மி பீஸுங்க கிடையாது. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு விதத்துல ஜூரிங்க தான்.

வடகிழக்குல தெருக்குத்து.( எங்கப்பா ஜாதகத்துலயும் குரு உச்சம், என் ஜாதகத்துலயும் குரு உச்சம் .ரெண்டு பேருதும் கடகலக்னம்தான் .அதனால சமாளிச்சுக்கிட்டம்)  மேற்குல கிணறு. ( எங்கம்மாவுக்கு யூட் ரஸ் கேன்சர். அப்பா ஜில்லா ஜில்லாவா போய் அரச(சு) சேவை செய்துக்கிட்டிருந்தாரு.அதனால மொத்த பாரமும் அவிக மேலதான்). 

நைருதில தான் தலைவாசல். எங்க அப்பா மாவட்ட கருவூல அதிகாரி. லாலா,மசாலா, பீடி,சிகரட்,பான் எதுவும் கிடையாது. ஜஸ்ட் டி.ஏ.எஸ் ரத்தினம் பொடி மட்டும் தான். அதையும் பெரிய டப்பாவா ஹோல்சேல் ரேட்ல ஒன்னு வாங்கிருவாரு. இருந்தாலும் மாசா மாசம் பட்ஜெட் போட்டுத்தான் செலவு பண்ணுவாய்ங்க. ஒரு கண்ணாலம், கல்லெடுப்புன்னா பட்ஜெட் உதைக்கும்.

 நம்ம டீன் ஏஜ்ல மணியகாரரான தாய் வழி தாத்தா எங்கம்மாவுக்கு சீதனமா கொடுத்த வெள்ளி கிளாஸெல்லாம் ஒவ்வொன்னா கால் முளைச்சு காசு கடைக்கு போயிருச்சு ( நம்ம வேலைதான்). அப்பா பாக்கெட்ல ,பூஜை ரூம் தகர டப்பால இருக்கிற கரன்ஸிய ஆட்டை போடறதும் உண்டு ஏழுமலையான் உண்டி உட்பட) .
இதெல்லாம் ஒரு பக்கம்னா 1983-84ல அம்மாவை சி.எம்.சில அட்மிட் பண்ணிட்டு ஏறக்குறைய திவால் ஆன நிலைல அரசு ஊழியர்களோட ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கி 3 வருஷம் அடிஷ்னல் சர்வீஸ் கிடைச்சு பொழச்சோம்.

மொதல்ல அப்பாவுக்கு ஊர் ஊரா ட்ரான்ஸ்ஃபர் பெரிய அண்ணன் எம்.ஏ படிக்க திருப்பதி ஹாஸ்டல்.கண்ணாலமான கையோட தனிக்குடித்தனம் போயிட்டான். சின்ன அண்ணன் எத்தனை வேலை வாங்கி கொடுத்தாலும் அவனே வாங்கினாலும் போகாம தண்டத்தீனி. நம்ம கதை தெரிஞ்சதுதானே. ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தினு ஊர்சண்டைய இழுத்துட்டு போறது, பலான இடத்துக்கெல்லாம் போறது ஒன்னா ரெண்டா .சின்ன அண்ணனுக்கு கண்ணாலம் நடக்கறதுக்கு முந்தி நமக்கு ஆயிருச்சு.இத்தனைக்கும் அவனை விட பத்து வயசு சின்னவன் நான்.

ஆரம்பத்துல தெற்கு திசைல மைதானம் இருந்தது. வீட்டுக்குள்ள தெற்கு திசையிலதான் கடைசி வரை பேசேஜ். அப்பாவை பிக் அப் பண்ண கலெக்டரே வண்டில வருவாரு. ஜீப்பை ரோட்ல நிறுத்திட்டு விறு விறுனு நடந்து வந்துருவாரு. போதாதா ஏரியா சனங்க காதுல புகை. அப்பனுக்கு ரத்தக்கொதிப்பு, பெப்டிக் அல்சர். தம்பின்னா  ரத்த வாந்தியே எடுத்தான் .கருப்பை புற்றுக்கு ஆதி என்ன தெரியும்ல ஒழுங்கற்ற மென்ஸ்ட்ருவல் சைக்கிள் தான்.


இந்த வாஸ்து  குறைகள்- குறைகளோட பலன்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒர்க் அவுட் ஆறதில்லைங்கறது தான் ஆச்சரியம். இந்த மாதிரி வீட்ல இருந்தும் ஸ்தூலமா வறுமைய அனுபவிச்சாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காம அவமதிக்கப்பட்டாலும் மனம் தளராம என்னை மாறு வேடத்துல அன்னிய தேசத்துல இருக்கிற இளவரசனாவே உணர காரணம் என்ன?


முதல் காரணம் உச்ச குரு. அடுத்த காரணம் பத்துல ராகு.  நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு வேலைய செய்துக்கிட்டே இருந்தேன். கரும யோகம்னு கீதை சொல்லுதே அப்படி.

மூணாவது காரணம் முக்கிய காரணம். எங்கப்பா எனக்கு மாடில தனி அறை கட்டிக்கொடுத்துட்டாரு. 1986 டு 1991 அதுலதான் இருந்தேன். மாடில இருந்தா வாஸ்து தோஷம் பாதி குறையும்ங்கண்னா

யுத்த‌ கைதிங்க கிட்டே இருந்து  உண்மைக‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ உயரம் குறைவான  கூரை,குறுகிய பரப்பளவு கொண்ட‌‌ அறைக‌ள்ள அடைச்சு வைப்பாய்ங்களாம்.  கைதிக‌ள் ஒருசில‌ தின‌ங்க‌ளிலேயே உண்மையை க‌க்கி விடுவாய்ங்களாம்.

சில‌ வீடுக‌ளுக்கு போனால் இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருக்க‌லாமா என்று தோன்றும், சில‌ வீடுக‌ளுக்குச் போனா  தாளி  எப்ப‌டா வெளிய‌ வ‌ருவோம்னிருக்கும். 

1997 ல் நான் ஒரு குடிசையில் குடியிருந்தேன். உஞ்ச விருத்தி பிராமணரை விட மோசமான நிலை.  என் ந‌ண்ப‌ரான‌ ஒரு  பால்கார‌ர் "சுவாமி..! ச‌ர்ரியான‌ (அச்சுப் பிழை இல்லை) இட‌த்தை பிடிச்சிருக்கிங்க‌ ..ப‌க்க‌த்து வீட்டுக்கார‌னுக்கு நீங்க‌ க‌ட‌ன் கொடுக்க‌ப் போறிங்கன்னாரு

நான் ப‌ட‌க்குனு  அவ‌ர் வாயை பொத்தி "பிழைப்ப‌ கெடுத்துருவிங்க‌ போலிருக்கே..இந்த குடிசை இருக்கிறதுஅவன் அண்ணனோட‌ இட‌ம். இந்த‌ குடிசை த‌ம்பிக்கார‌ன் தான் வீடுக‌ட்டும்போது சிமெண்டு மூட்டை அடுக்க‌ போட்ட‌ ஷெட்..த‌ம்பிக் கார‌ன் த‌ய‌வுல‌ இங்க‌ குடியிருக்கேன். ஆள‌ விடுப்பா"ன்னு பார்ஸ‌ல் பண்ணேன்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌. நம்பாட்டி போங்க ஒரே ஆறு மாசத்துல  ப‌.வீ. கார‌னுக்கு ரூ.35,000/ க‌ட‌ன் கொடுத்தேன். ரெண்டு வட்டிக்கு. இதான்யா வாஸ்து. வாஸ்து வாஸ்தவம்பா. வாஸ்துகாரவுக வேணம்னா பொய்யனுகளா இருக்கலாம். சரியான வாஸ்து கலைஞன் கிடைக்கனும்னாலும் உங்க ஜாதகம் அதுக்கு ஒத்துழைக்கனும் அண்ணாத்தை.

அடுத்த பதிவுல வாஸ்து பத்தின வாஸ்தவங்களை  இன்னம் விவரமா பார்ப்போம்.இப்போதைக்கு உடுங்க ஜூட்

தமிழ் மணமே பதில் சொல் !

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவை மட்டும் படிச்சுட்டு போயிராதிங்க. சரஸ்வதி சபதம் தொடருது. அதையும் படிங்க. உங்க கருத்துக்கள், யோசனைகளையும் சொல்லுங்க. இன்னும் சில திரட்டிகளால் கவிதை07 தடை செய்யப்பட 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. உடனே மெம்பராயிருங்க அ சப்ஸ்க்ரைப் பண்ணிருங்க‌

போஃபர்ஸ் ஊழல் வெடிச்சப்ப ராம்ஜெத்மலானி  ராஜீவை தினசரி 10 கேள்வி கேட்டு குடைஞ்சாரு. அப்போ ராஜீவ் குலைக்கிற நாய்க்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்னாரு. அப்போ ரா.ஜெ " நாய் திருடனை பார்த்துதான் குலைக்கும்"னு போட்டாரு ஒரு போடு.

தினசரி 100 கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைல ரா.ஜெ.இருக்காரு .அது வேற மேட்டர். இந்த சீக்வென்ஸ்ல தமிழ் மணம் நிர்வாகிங்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.என்னதான் பதில் சொல்றாய்ங்கனு  பாப்போம். பதில் வரலைன்னா என் கேள்விகள்ள நெருப்பு இருக்குனு அர்த்தம். (அதாங்க நெஜம்)

2000 ஜூலை முதல் பதிவுகள் போட்டுக்கிட்டு இருக்கிற நான் டச் பண்ணாத மேட்டரே கிடையாது. எதையும் ஒளிச்சு வச்சு பதிவு போட்டதும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா யோகம், தியானம்,பக்தி,சமூக அக்கறை ,பெண்ணியம் தொடர்பான பதிவுகளுக்கு கூட  ஆபாச தலைப்பு வச்சி தான் பதிவு போட்டேன். அப்பல்லாம் தடை வரலை.

பத்துவருஷமா நான் டச் பண்ணாம இருந்து புதுசா டச் பண்ண மேட்டர் பிராபகனோட ஜாதக ஆராய்ச்சிதான். பிரபாகரன் மேல எனக்கு  வை.கோ மாதிரி, திருமா மாதிரி ஹீரோ ஒர்ஷிப் எல்லாம் கிடையாது.  என்னைக்கும் நான் விடுதலைப்புலிகளோட வீரத்தை(?) போற்றிப்பாடினதும் கிடையாது.எழுதினதும் கிடையாது.

ஜோதிட விதிகளின் படி  பிரபாகரன் சாக வாய்ப்பில்லேனு எழுதினதுதான் உங்க டர்ருக்கு காரணம்னு குற்றம் சாட்டறேன். என் வாதம் என்னன்னா பத்துவருசமா டச் பண்ணாத,புதுசா போட்ட  மேட்டர் இது ஒன்னுதான். இதை உங்களால மறுக்க முடியுமா?

உதிரி கேள்விகள்:

1.என் கடைசியா உங்க வலைதளத்துல வெளியான பதிவுல  ஆபாசம் இருக்கிறதா சொல்லி தடை பண்ணிங்க.ஓகே. அதுக்கு மின்னாடி வெளியான என் பதிவுகள் எல்லாம் யு சர்ட்டிஃபிகேட் தானு கியாரண்டி தரமுடியுமா?

2.நீங்க இப்போ தடை பண்ணாம வச்சிருக்கிற ப்ளாக்,பதிவுகள் எதுலயும் ஆபாசமில்லேன்னு உறுதி சொல்ல முடியுமா?

3.ஆபாசத்துக்கான  உங்க அளவுகோல்தான்  என்ன? அதை நீங்க வெளியிட்டா உங்க திரட்டிலருந்து தினசரி 10  பதிவுகள் உங்க அளவுகோல் படி ஆபாசம்னு நான் நிரூபிக்கிறேன். அதெல்லாத்தயும் தடை பண்ண நீங்க தயாரா?

4.கலைஞர் எழுதின பலான கதைனு ஒரு பதிவை போட்டிருக்கேன். படிச்சு பாருங்க. இந்த பலான கதைல இருகிறதை விட பலான மேட்டர் என் பதிவுல இருந்ததா ப்ரூஃப் பண்ண முடியுமா?

5.நான் என் பதிவுகள்ள பல பெரிய மனிதர்களோட முகத்திரையை கிழிச்சேன். அவிகளை பத்தின நிர்வாண உண்மைகளை  வெளிச்சம் போட்டேன். அவிகளோட ப்ரஷரை தாங்க முடியாமத்தான் நீங்க என் ப்ளாகை தடை பண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். உங்களால மறுக்க முடியுமா?

6.ஜோதிஷம்ங்கறது தெய்வீகமானது கலைஞருக்கும்,அவரோட வாரிசுகளுக்கும் ஜூலை 13 முதல் செப் 5 வரை கண்டமிருக்குனு நான் எழுதினதால தான் பயந்துக்கினு என் ப்ளாகை தடைபண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். மறுக்க முடியுமா? எங்க ஸ்டேட்ல என்.டி.ஆர் உயிரோட இருந்தப்பயே ஒரு முன்னாள் ஐ.ஏ,எஸ் பலான தேதில என்.டி.ஆர் செத்துப்போவாருனு தன் பத்திரிக்கைல எழுதினாரு. உடனே ரெஜிஸ்ட் ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் அதை தடை பண்ணலியே (அதும்படியே நடந்தது)

7.என் பதிவுகள்ள ஆபாசமிருந்ததா குற்றம் சாட்டி தடை பண்ணிங்க. ஓகே  உண்மையிலயே நீங்க கலாசார காவலர்களாயிருந்தால்  ஆபாசத்தை வெளியிடற எல்லா வலைதளங்கள், பத்திரிக்கைகளையும்  தடை செய்ய ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்ககூடாது.

(அரசியல், சமூக,பொருளாதார,மீடியா  தளங்களிலான ஆபாசத்தை ஜஸ்ட் 300 டு 400 பேர் பார்க்கிற தம்மாத்தூண்டு ப்ளாக்ல எழுதினதுக்கே என்னை தடை பண்ண வச்சுட்டாய்ங்க பாஸு.  நீ உ.வ பட்டு என் சவாலை ஏத்துக்கிட்டு வேட்டி வரிஞ்சு கட்டுனு புறப்பட்டிங்கனு வைங்க தமிழ் மணத்துக்கு சங்குதான்.வாணாம் ராசா. போர்த்திக்கினு படுத்துக்க. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் -குறள்)

சரஸ்வதி சபதம்

முன் கதை
(பூலோகத்தில் தரமான கல்வி, நேர்மையான பொருளாதாரம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த முப்பெரும் தேவியர் முடிவு பண்றாய்ங்க. இதுக்கு உதவக்கூடிய பார்ட்டி முருகேசன் தானு நாரதர் சொல்ல லட்சுமி ஸ்னேகா வடிவதுல முருகேசனை சந்திக்கிறாய்ங்க. அவர் யதார்த்தத்தை விளக்க  மொதல்ல மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அவிகளுக்கு உதவ ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் . நாளடைவுல நம்ம பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இந்த சிஸ்டத்துல இருக்கிற கோளாறோட சைட் எஃபெக்ட்ஸ் தானு புரிஞ்சுரும். அப்ப அவிகளை திரட்டி ஒட்டு மொத்த மாற்றத்துக்கு போராடலாம்னு முருகேசன் ஐடியா கொடுக்கிறாரு. இதை பத்தி ஸ்னேகா வடிவத்துல இருக்கிற  லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தறாய்ங்க)

ஸ்னேகா:
வேலையை ஆரம்பிச்சுருவமா?

முருகேசன்:
அது சரி. மொதல்ல இந்த ப்ராஜக்டுல  என் ரோல் என்ன? ரெம்யூனரேஷன் என்ன? முடிவு பண்ணுங்க

ஸ்னேகா:
நீயே சொல்லு.

முருகேசன்:
என் ரோல் ஒரு அவுட்டராதான் இருக்கனும். ஜஸ்ட் ஏஸ் எ பி.ஆர்.ஓ .என் ரெம்யூனரேஷன் மரியாதை + என் குடும்பம் பசியில்லாம காலத்தை ஓட்ட கொஞ்சமா காசு

ஸ்னேகா:
இதென்னப்பா ஆச்சரியமா இருக்கு? இந்த ப்ரஜக்டே உன்னை நம்பி தான் ஆரம்பிக்கிறேன்.

முருகேசன்:
ஆ...........மா இப்படித்தான் எல்லாருமே ஆரம்பிக்கிறாய்ங்க. எனக்கு வேணா தாயி. ஒரு ஆறு மாசத்துல அடுத்த ஆளை ட்ரெய்ன் பண்ணிட்டு நான் கழண்டுக்கறேன்.

ஸ்னேகா:
அது சரி அவுட்டருங்கறியே ஏன்?

முருகேசன்;
எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல  உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது. இதே மாதிரி நீங்க ஆரம்பிக்க நினைச்சிருக்கிற இயக்கம்கூட நாறிப்போகலாம். நான் அவுட்டரா இருந்தா எனக்கொன்னும் சம்பந்தமில்லேப்பா ..புனிதமான லட்சியம் அது இதுனு  சொன்னாய்ங்க. கூப்டாய்ங்க.. நான் அவிகளுக்காக  ஸ்பென்ட் பண்ற  நேரத்துக்கு பைசா தரேன்னாங்க. அவிக சொன்னதையெல்லாம் நடைமுறைல செய்தா நெஜமாலுமே நல்லது நடக்கும்னு நினைச்சேன். போனேன். எதுவும் உருப்படறாப்ல இல்லைனு புரிஞ்சது. அதான் கழண்டுகிட்டேனு சொல்லிக்கலாம்

ஸ்னேகா:
அதென்ன ரெம்யூனரேஷனுக்கு மிந்தி மரியாதைனு கேட்டே

முருகேசன்:
அதுவா.. மனிதன் சமூக பிராணிங்கறாய்ங்களே சமூகத்துக்குள்ள என்டர் ஆனதுமே பறிபோறது தனிமனித  சுதந்திரம். சமூகத்தோட முட்டாள் தனம்,ஹிப்பாக்ரசியையெல்லாம் ஏத்துக்கிடனும். அதுலயும் ஒரு நிறுவனத்துக்குள்ள என்டர் ஆனா இன்னம் நாஸ்தி. தினத்தந்தில ஒரு சப் எடிட்டர் " என்னய்யா தமிழ் எழுதறே. மொதல்ல உனக்கு தமிழ் சரியா  தெரியுமானு " கேட்டுப்புட்டார்.

ஸ்னேகா:
அடட ..தினத்தந்தி பராம்பரியம் மிக்க பத்திரிக்கையாச்சே. அதுலயா இப்படி?

முருகேசன்:
அதான் மொதல்லயே  சொன்னேனே எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல  உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது.

ஸ்னேகா:
சப் எடிட்டர் தமிழ் தெரியுமானு கேட்டாரு சரி .. அதுக்கு நீ என்ன சொன்னே?

முருகேசன்:
அட பிக்காலி ! சலவைக்கணக்கை கூட சந்தக்கவிதையா எழுதற பார்ட்டி நானு. என் தமிழை தட்டித்தரம் சொல்ற தகுதி உங்க சி.எம்முக்கே கிடையாது. அந்தாளு எழுதறது அவுட் டேட்டட் தமிழ். நான் எழுதறது அப் டு டேட் தமிழ். போனை வைடா
தண்டம்னேன்

ஸ்னேகா:
அதனால தான் மரியாதைக்கு ஃபர்ஸ் ப்ரிஃபரன்ஸா?

முருகேசன்:
இன்னொரு காரணமும் இருக்கு. எல்லா கிரகமும் கோண (1,5,9) கேந்திரங்கள்ள (4,7,10) இருந்தா அது பரிவ்ராஜக யோகமோ என்னமோனு படிச்சிருக்கன். என் ஜாதகத்துல ஜஸ்ட் சந்திரனும் சுக்கிரனும் மட்டும்தான் வாக்கு ஸ்தானத்துல இருக்காய்ங்க.பரிவ்ராஜக யோகம்னா எல்லாத்தயும் விட்டு விலகி நிக்கிற நிலைனு அர்த்தம். சுக்கிரன்னா செக்ஸாலஜி, சந்திரன்னா சைக்காலஜி. இது ரெண்டையும் சொல்றது மட்டும்தான் நம்ம வேலை. மத்தபடி இவிக யாரோ? நான் யாரோ? தேவையில்லாம என்னை இன்சல்ட் பண்ணா அது இவிகளுக்கே நல்லது கிடையாது.

ஸ்னேகா:
அ.. சொம்மா விடாதேப்பா

முருகேசன்:
இல்ல தாயி .. என் அனுபவத்தை சொல்றேன். எவனெல்லாம் என் மின்னாடி புலி வேஷம் போடாறானோ அவனெல்லாம் தக்கையாகி,மொக்கையாகி நாறி பூடறான்

ஸ்னேகா:
நாங்க கூடவா?

முருகேசன்:
தாயீ .. ரசிகர்களாலதான் ரஜினி சூப்பர் ஸ்டாரானாரு. அந்த ரசிகர்களை மொக்கையாக்கினதாலதான் பாஷா ஷுகர் பேஷண்ட் ஷூ கீழே பாதுஷா மாதிரி நாசுங்கிருச்சு. சனங்களாலதான்  தெய்வத்துக்கு பலம். சனம்  சாமியில்லே பூதமில்லேனு முகத்தை திருப்பிக்கிட்டா ரோசய்யா கதிதான்.

ஸ்னேகா:
என்னமோப்பா செமர்த்தியா டர்ராக்க கத்துக்கிட்டிருக்கே. அவுட்டராவே இரு. மரியாதை நிச்சயமா கிடைக்கும் . பைசான்னியே அது எவ்ளோனு சொல்லிரு தீர்த்துரலாம்

முருகேசன்:
ரூ.6000/

ஸ்னேகா: என்னது ?  ரூ.6 ஆயிரமா? அவனவன் அஞ்சு இலக்க சம்பளமே பத்தாம அந்த லோனு,இந்த லோனு ,க்ரெடிட் கார்டுன்னு அல்லாடறான். 6 ஆயிரம் ரூபாயையும் மரியாதையயும்  வச்சுக்கிட்டு என்ன பண்ணுவே?

முருகேசன்:
வாழுவேன். என் இனத்தை வாழவைக்க உழைப்பேன்.

ஸ்னேகா:
தோடா இந்த டகுலுதானே வேணாங்கறது.. 6ஆயிரம் ரூபாய்ல நீ வாழறதே கஷ்டம். இதுல இனத்தை வேற வாழ வைப்பயா

முருகேசன்:
ஜஸ்ட் செல்ஃபிஷ் கோல்ஸ் இருக்கிறவன் மாசத்துக்கு 40 ஆயிரம் இல்லை 40 கோடி சம்பாதிச்சாலும் அவனுது பொழப்புதான். நோபல் கோல்ஸோட வாழறவன் மாசத்துக்கு 6 ஆயிரமில்லே 3ஆயிரம் சம்பாதிச்சாலும் அது வாழ்க்கை.

ஸ்னேகா:
சரி கண்ணா ரூ.6 ஆயிரம் சேங்ஷன்ட். வேலையை ஆரம்பி

முருகேசன்:
அ அஸ்கு புஸ்கு. நீங்க மொத்தம் 3 பார்ட்டி. மூணு பார்டிங்களுக்கும்  என் திட்டம் ருசிக்கனும். அவிகளும் என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிடனும்.

ஸ்னேகா;
அதுக்கென்ன உடனே வரவச்சுர்ரேன்

Tuesday, July 27, 2010

அனுமார் காட்சியளிக்காததால் பக்தர் தற்கொலை

அண்ணே வணக்கம்ணே பதிவு அனுமார்ல இருந்து அனுமார் மாதிரி பெரியாருக்கு தாவுது. கேராயிராம படிங்க மேட்டர் கீது. மேலும் சரஸ்வதி சபதம் தொடருது. உடுங்க ஜூட்

ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.

இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு  கமெண்ட் அடிப்பாய்ங்க.  நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.

பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும்,  வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு  சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.

நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.

குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.

படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட  வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.

கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து  ஸ்வாதிஷ்டானத்தை  நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே  கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.

தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா  ஆசனப்பருவம் தாண்டி ,  செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.

இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல   தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) .  குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க.  குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.

பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .

மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க  பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான ,  சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும்.  குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.

குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே  கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.

ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை  எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.

எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்"  தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்?  ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.


கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?

நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள்  சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க

எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர்  ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே  காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..

சரஸ்வதி சபதம்

28/7/2010

முன் கதை

( பூவுலகில் தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த அலைமகள்,கலைமகள், மலை மகள் டிசைட் ஆயிர்ராய்ங்க, இதுக்குண்டான ஸ்கெச்சுக்காக முருகேசனை தேடி லட்சுமி  ஸ்னேகா சைஸ்ல பூலோகம் வராய்ங்க. இதுக்கெல்லாம் வழி பண்ணனும்னா நீங்க மூணு பேரும் எம்.பி ஆகனும்னு முருகேசன் சொல்றாரு. ஆயிட்டாப்போச்சுனு ஸ்னேகா வடிவத்துல வந்த லட்சுமி சொல்ல அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதேன்னுட்டு முருகேசன் மயங்கி விழறாரு.)

ஸ்னேகா: வாட்டர் ப்ளீஸ்! ( நெட் ஓனர் தண்ணி கொண்டு வந்து கொடுக்க தெளிக்கிறாய்ங்க)
முருகேசன்: ( கண் விழிச்சு, தூசு தட்டிக்கிட்டே )  யம்மாடி நீ வா வீட்டுக்கே போவோம்

ஸ்னேகா: வீட்டுக்கா? என்னவோ எம்.பியா ஜெயிக்கனும்னே

முருகேசன்:
என்னங்க இது நீங்க நக்கல் பண்றிங்களா என்னனு புரியலை. எம்.பி ஆகனும்னா முதல்ல ஒரு கட்சில சேரனும்

ஸ்னேகா:
சேர்ந்தா போச்சு

முருகேசன்:
 தாயே நீ அட்லீஸ்ட் பஹுஜன் சமாஜ் கட்சில சேரனும்னா கூட மாயாவதி அம்மாவுக்கு ஆயிரம் ரூபா நோட்ல மாலை போடனும் தெரிஞ்சுக்க.

ஸ்னேகா:
அட்லீஸ்ட் ஆப்ஷன்  எல்லாம் வேணாம் . லீடிங் பார்ட்டிலயே சேரனும் .  வேற எந்த  கட்சில சேரலாம்னு சொல்லு

முருகேசன்:
விவரமில்லாம பேசாதிங்க. எல்லா கட்சிகளுக்கும் எல்லா கார்ப்போரேட் கம்பெனிகளும் நன்கொடை கொடுக்கிறாய்ங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் ஸ்கூல் நடத்தறாய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் கேம்பஸ் இன்டர்வ்யூ நடத்தி புள்ளைங்களை கொத்தடிமையாக்கிக்கறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் சில்லறை வணிகத்துல இறங்கி லட்சக்கணக்கான குடும்பங்களை ரோட்டு கொண்டுவராய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் அந்த குடும்பத்து புள்ளைங்களை கூலிக்காரவுகளாக்கி சுரண்டறாய்ங்க இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் வியாபார போட்டி காரணமா மாஃபியாவ வச்சு  குத்து கொலைனு போறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் மார்ஷ்ல் ஆர்ட்ஸ் ஸ்கூலோட ஆண்டுவிழாவையும் ஸ்பான்ஸர் பண்றாய்ங்க. இந்த அழகுல இதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்ட டொனேஷன் வாங்கி அரசியல் நடத்தற கட்சிகள்ள சேர்ந்து தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தையெல்லாம் நீங்க  எங்கருந்து கொண்டுவரமுடியும்?

ஸ்னேகா:
அப்ப நாமே ஒரு கட்சி ஆரம்பிச்சுருவம்.

முருகேசன்:
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே . கட்சி வைக்கிறதுன்னா என்ன தமாசா .மொதல்ல நீங்க எவனாச்சும் பெண்டாட்டி இல்லாத தலைவனுக்கு வலது கையாவோ இடது கையாவோ இருக்கனும். அவன் செத்த பிறவு அந்த கட்சியை அப்படியே ஹைஜாக் பண்ணனும்

ஸ்னேகா:
சீ சீ இதென்ன நாத்தம் பிடிச்ச வேலையா இருக்கு நான் மாட்டேம்பா

முருகேசன்:
பல கட்சிகளோட ரிஷிமூலம் இதான்.

ஸ்னேகா:
சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சா என்ன?

முருகேசன்:
என்ன என்.டி.ஆருனு நினைப்பா ? அது 1982. அந்த காலத்துல சனம் ஏதோ சிம்பிள் லைஃப் லீட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. சூடு சுரணை எல்லாம் இருந்தது. அதென்னடா தில்லிலருந்து சிட் ஸ்டாண்ட் சொல்றதுனு காங்கிரசுன்னா கடுப்படிச்சி போயி ட்டாய்ங்க. இதையெல்லாம் இஷ்யூவாக்கின என்.டி.ஆருக்கு  தேவுடுனு ஒரு இமேஜ் இருந்தது. பல்ப் மாட்டிக்கிச்சு. அதே என்.டி.ஆர் 1994 ல மதுவிலக்கை கொண்டுவரேனு வாய விட்டு ............ஐ புண்ணாக்கிக்கிட்டு தான் லிக்கர் லாபியோட சதியால ஆட்சியை சந்திரபாபுவுக்கு பலி கொடுத்து  கதியில்லாத சாவு செத்தாரு. இது 2010 .அந்த பருப்பெல்லாம் வேலை செய்யாது.

என் டி ஆராச்சும் சினிமாலதான் ஹீரோ. ஒய்.எஸ்.ஆர் நெஜமாலுமே ஹீரோ. கோதாவரி பேசின்ல எரிவாயு கிடைச்சது. அதை பங்கு போட்டுக்க ரிலயன்ஸ் ப்ரதர்ஸ் தங்களோட  தாயார் கிட்டே பஞ்சாயத்துக்கு போனாய்ங்க. அப்போ ஒய்.எஸ்.ஆர் வாயை விட்டாரு . அந்த எரிவாயு தேசீய சொத்து அதை பங்கு போட வேண்டியது திருபாய் அம்பானியோட திருமதி இல்லே மத்திய அரசுன்னு . வேட்டு வச்சிட்டாய்ங்க.


நீங்களும் நானும் ஒரு கணக்கா ? வேணம்னா அஜெண்டா கிஜெண்டா எல்லாம் தூக்கி குப்பைல போட்டுருங்க அதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்டே டொனேஷன் வாங்கி  கட்சி நடத்தலாம்.  தப்பித்தவறி ஆட்சியை பிடிச்சா அவிக சொல்றாப்ல ஆட்சிய   நடத்தலாம்.இதுக்கு நான் ரெடியில்லை. நீங்க ரெடியாயிருந்தா உடுங்க ஜூட்

ஸ்னேகா:
(பேஸ்தடித்து போய்) அய்யய்யோ இதுல இவ்ளோ விவகாரம் இருக்கா? இதென்னப்பா அநியாயமா  இருக்கு சன நாயகம் அது இதுனு கேள்வி பட்டேன்.  நீ சொல்றத பார்த்தா நிறைய ரத்த சேதமாகிறாப்ல இருக்கு  இதெல்லாம் நம்மால ஆவற வேலையில்லை பார்வதி அக்காவையே வரச்சொல்லிர்ரன்

முருகேசன்:
வெயிட் வெயிட். வரச்ச சிங்கம் கிங்கமெல்லாம் வேணா . பிராணிவதை சட்டம் பாயும். சூலம் கீலமெல்லாம் வேணா ஆயுததடை சட்டம் பாயும்.

ஸ்னேகா:
சரிப்பா அப்படியே ஆகட்டும்.

முருகேசன்:
வெயிட் வெயிட் இப்ப பார்வதியம்மா கோதாவுல இறங்கிட்டா நீங்க ஃபேட் அவுட் ஆயிருவிங்க பரவாயில்லையா..

ஸ்னேகா:
ஆங் அதெப்படி..

முருகேசன்:
உங்களுக்கென்ன அதிகாரத்தை பிடிக்கனும் அவ்ளதானே

ஸ்னேகா:
ஆமாம்.அப்படியே தரமான கல்வி

முருகேசன்:
நேர்மையான செல்வம், உண்மையான வீரம் ஓகே ஓகே. உங்க பட்ஜெட் என்ன?

ஸ்னேகா:
வானமே எல்லை.

முருகேசன்:
இது பாலசந்தர் படம்னு நினைக்கிறேன்

ஸ்னேகா:
அய்யோ எவ்ள செலவானாலும் பரவாயில்லேனு சொல்ல வந்தேன்.

முருகேசன்:

ஐ சீ.. நான் சொல்ற ஃபார்ம்லா நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு சொல்ல முடியாது. இந்த சனத்து மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. இருந்தாலும் என் ப்ரெயினோட பைசாவும் சேர்ரதால ஒரு ஆட்டம் ஆடிப்பார்ப்போம்.

ஸ்னேகா:
உன் ப்ளான் என்ன சொல்லு

முருகேசன்:
சொல்றேன். பிரச்சினை இல்லாத சனமே கிடையாது.  தீர்வு இல்லாத பிரச்சினையும் கிடையாது அவிக  பிரச்சினை என்ன? அதை எப்படி யாருக்கு சொல்றது ? அதுக்கு தீர்வு என்ன? அந்த தீர்வை எங்கே பெறலாம்னு கூட சனத்துக்கு தெரியாது. எடுத்த எடுப்புல கட்சியெல்லாம் வேணாம். பேசாம ஒரு வாலன்டரி ஆர்கனைசேஷன் ஃபார்ம் பண்ணலாம். நம்ம இயக்கத்தோட வேலை மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முயற்சி பண்றதா இருக்கட்டும். மக்கள் நம்ம கிட்டே வர ஆரம்பிக்கட்டும். அவிக தனிப்பட்ட  பிரச்சினைகளுக்கான  தீர்வுக்காக நாம  சின்சியரா ட்ரை பண்ணுவோம்.  நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லே. நம்ம நாட்டு நிர்வாக அமைப்புல இருக்கு பிரச்சினைனு நாளடைவுல அவிகளுக்கே தெரிஞ்சுரும். அப்ப , இரும்பு நல்லா காஞ்சி சிவந்து கிடக்கிறப்ப ஒரே போடா போடுவோம்.

ஸ்னேகா:
ஐடியா என்னவோ நல்லாருக்கு . இதை எப்படி சனங்க கிட்டே கொண்டு போறது?

முருகேசன்:
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க செக்ல சைன் மட்டும் பண்ணிக்கிட்டிருங்க.

ஸ்னேகா:
ஓகேப்பா.
_____________________________________-

Monday, July 26, 2010

திருமா,வைகோ சின்ன (புள்ள) த்தனம்

அண்ணே ,
வணக்கம்ணே. இன்னைக்கு இந்த சுறு சுறு பதிவோட "தாய்குலம் ட்ரைவரோட ஓடிப்போயி"ங்கற தலைப்புல மக்கள் மனங்களை சந்திரன் எப்படியெல்லாம் பாதிக்கிறாருனு சொல்லியிருக்கேன். இதை படிக்க இங்கே
.ஹ்ட்ம்ல் அழுத்துங்க‌. சரஸ்வதி சபதம் தொடருது


இலங்கை  தூதரகத்தை இழுத்து மூடுங்க இல்லாட்டி மக்களே மூடற நாள் வரும்னு தொல்.திருமாவளவன் சொல்லியிருக்காரு. கலைஞரின் முன்னாள் போர்வாளான வைகோவும் இதே பாட்டை பாடியிருக்காரு (ஆ.வி).

அந்த காலத்துல வாஜ்பாயி பத்தி சொல்வாய்ங்க தப்பான கட்சில இருக்கிற சரியான ஆளுனு ஒரு குத்து விடுவாய்ங்க. என்னைக்கேட்டா வாஜ்பாயி பி.எம்மா  வந்ததாலதான் அன்னைக்கு பா.ஜ.க ஆட்சி ரெண்டும் கெட்டானா ஆயிருச்சு. இதுவே அத்வானி வந்திருந்தா ஏக் மார் தோ துக்கடா .கு.ப மோடியோட ஆட்சி மாதிரியாவது இருந்திருக்கும். ( க்கும் ..அத்வானியை கூட்டணி கட்சிங்க ஒத்துக்கிடாததாலதான் வாஜ்பாயி வந்தாருங்கறிங்களாக்கும். என்ன பண்றது நம்ம நாட்ல வெளி வேஷத்துக்குதானே மரியாதை சாஸ்தி.)

வை.கோவை பத்தி கூட இப்படி சொல்ல ஆளிருக்கு. தப்பான கூட்டணிலனு திருத்திக்கங்க. நீ சரியான ஆளாயிருந்தா ஏன்யா தப்பான கட்சிலயோ/கூட்டணியிலயோ இருக்கப்போறே. உனக்குள்ள எங்கயோ இருட்டு இருக்கு. அதான் அங்கன இருக்கே. இன்னைக்கு வை.கோ பேசற பேச்செல்லாம் ஆதி காலத்துல கலைஞர் பேசின பேச்சுத்தானே.  தாத்தாவுக்கு வயசாயிருச்சு விட்டுட்டாரு. வைகோவுக்கு விவரம் புரியலை பேசிக்கினே கீறாரு )

கையது கொண்டு மெய்யது பொத்தின்னுவாங்களே அந்த மாதிரி போயஸ் தோட்டத்துல இருந்துட்டு ரோட்டுக்கு வந்து வீர வசனம் பேசறாரு வைகோ. திருமாவும் இந்த கேட்டகிரிதான் திமுக கூட்டணில சேஃப்டியா இருந்துக்கிட்டு வீ.வ.
பேசறாரு.

மேலும் இப்படி முனியாண்டி விலாஸ் சேர்வா மாதிரி கட முடானு பேசறவிக கிட்டே ஒரு பெரிய குறை இருக்கு. பிரபாகரனை பத்தி பேசும்போது இவிக ரஜினி ரசிகன் ரேஞ்சுக்கு போயிர்ராய்ங்க.

பாமரன் இன்னும் ஒரு படி மேல போயி இலங்கைக்கு போன ,  ட்ரஸ்ட் வச்சு எதையோ செய்ய முனைஞ்ச ரெண்டு ஹீரோக்களோட ரிஷி மூலம் நதி மூலத்தை எல்லாம் ஆராய்ஞ்சியிருக்காரு ( தமிழக அரசியல்). "ரெடி" சினிமா ஷூட்டிங்குக்கு போன ஹீரோயினையும் , சூர்யாவையும் கூட காய்ச்சியிருக்காரு.இவிக தெரிஞ்சித்தான் பேசறாய்ங்களா? இல்லை உ.வ பேசி/எழுதி வைக்கிறாய்ங்களா புரியமாட்டேங்குது.

ஸ்டேட் லிஸ்ட்( மானில அரசுக்கு மட்டும் தொடர்புடைய அம்சங்கள்) ,சென்டர் லிஸ்ட் (மத்திய அரசுக்கு தொடர்புடைய அம்சங்கள்)  ,கன் கரன்ட் லிஸ்டு ( மானில மத்திய அரசுகள் இணைஞ்சு செயல்படற அம்சங்கள்) . வெளி நாட்டு உறவு (ஃபாரீன் அஃபேர்ஸ்) சென்ட்ரல் லிஸ்டுல இருக்கு. இந்த சப்ஜெக்டு முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்புடையது.

சென்னைல இருக்கிற ஒரு தூதரகத்தை மூடிட்டா இலங்கை பிரச்சினை தீர்ந்துருமா?
தூதரகம்ங்கறது ஒரு அடையாளம் அம்புட்டுதேங். அடையாளத்தை அழிச்சுட்டா இந்திய இலங்கை உறவு அழிஞ்சுருமா?  உண்மையிலயே பிரச்சினை தீர்க்கனும்ங்கற எண்ணமிருந்தா என்ன செய்யனும்?

மகாராஷ்டிர அரசு சட்ட விரோதமா பாப்லி அணைய கட்டிருச்சு( கொசுறா 13 அணைகள் இருக்காம்) சந்திரபாபு தன் கட்சி எம்.எல்.ஏக்கள், மக்கள் பிரதி நிதிகள் எல்லாரையும் கூட்டிக்கிட்டு போனார். எங்கே போனார்?  மகாராஷ்டிராவுக்கு போனார். கைதானாரு. கொசுக்கடி,பவர் கட், நாத்தம் பிடிச்ச கக்கூஸு (அத்தீனி பேருக்கும் ஒன்னே - பெண்கள் உட்பட), உண்ணாவிரதம் இருந்தாய்ங்க. தள்ளு முள்ளு,அடி உதை, செல்ஃபோன் பறிப்பு ,தங்க நகை பறிப்பு எல்லாம் நடந்தது. நேத்து பிரதமர் கிட்டே அனைத்து கட்சிகள் டெலிகேஷன் போயி பேச்சு வார்த்தை நடந்தது. பிரதமர் 45 நிமிஷம் பேசினாரு.

2007லயும் இதே மாதிரி அனைத்து கட்சிகள் டெலிகேஷன் போயி பேச்சு வார்த்தை நடந்தது. ஆனா 45 நிமிஷம் பேசினாரா ?இல்லே . காயிதம் கையில வாங்கிக்கினு கும்பிடு போட்டு அனுப்பிட்டாரு. 2007 க்கும் 2010 க்கும் என்ன வித்யாசம்? 2010ல சந்திர பாபு புலி வேஷம் கட்டினாரு. ரிஸ்க் எடுத்தாரு. ஒரு நா முன்னாடி  தில்லி போனாரு. எதிர்கட்சி தலைவர்களையெல்லாம் சந்திச்சாரு.ஆதரவு திரட்டினாரு.

சரி ஷாட் கட் பண்ணி இலங்கை மேட்டருக்கு வருவோம்.

இங்கே சீமான் மேட்டரு, தொல்.திருமாவளவன் ஸ்டேட்மென்ட், பாமரன் எழுத்து எல்லாமே எங்கன நடக்குது இங்கே தமிழ் நாட்ல நடக்குது. இவிக விசிர யார் மேல காட்டறாய்ங்க. யாரோ ரெண்டு ஹீரோ மேல ,ஒரு ஹீரோயின் மேல. கொசுறுக்கு சூரியா மேல. இந்த மேட்டர்ல நடிகர் சங்க தலைவரா சரத் குமாரோட ஸ்டாண்ட் சூப்பரப்பு. பாராட்டுக்கள்.

ஏங்கணா தில்லி சரியில்லை.கருக்கட்டிக்கினு தமிழினத்தை ஒழிச்சு கட்டுது. ஓகே . தமிழக அரசு சொல்லவே தேவையில்லை. இலங்கை அந்த கால ரஷ்யா மாதிரி இரும்புத்திரைக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டிருக்கு. அதுக்குள்ள என்ன நடந்தாலும் கேள்வி நாதி கிடையாது. அங்கன என்ன நடக்குதுனு இன்ஃபர்மேஷனே கிடையாது

இந்த நிலைல உண்மையிலயே ஈழத்தமிழர்கள் மேல அக்கறை இருந்தா நீங்க என்னங்கண்ணா பண்ணனும்? ஒன்னு நீங்க இலங்கைக்கு போய் போராடனும்.( உ.வ.பட்டு போயிராதிங்கண்ணா கேவலம் அண்டை மானிலமே எங்க எம்.எல்.ஏக்களுக்கு சுளுக்கெடுத்துவிட்டுட்டாய்ங்க. ஒவ்வொரு எம்.எல்.ஏ வையும் 25 பேர் சுத்திக்கிட்டு குமுக்கி எடுத்தாய்ங்களாம்.

அதுக்கு தான் சொல்றேன். உட்டேன்னுங்க.. அடுத்த ஆல்ட்டர் நேட்டிவை பார்ப்போம்.

நீங்க இலங்கை போகப்போறதில்லை. நெக்ஸ்ட் என்ன பண்ணனும்? முடிஞ்ச வரை வெளிக்காற்று இலங்கையில வீசற மாதிரி செய்யனும். முக்கியமா லைம் லைட்ல இருக்கிறவங்க இலங்கை போய் ஊடாடனும். அட்லீஸ்ட் அவிக மெச்சிக்கவாச்சும் அந்த அரசு ஒன்னு ரெண்டு எம் சியார் வேலை செய்யும். நீங்க என்ன பண்றிங்க?

ராஜபக்சே ஆயி. அங்கன யாரும் போவக்கூடாது. போனவனெல்லாம் துரோகி. போனவனுக்கு உலக அயகி எப்படியெல்லாம்  ஆப்புவச்சானு லிஸ்ட் போடுவம். நடிகைக்கு  வாரினிங். உங்க உத்தேசம் தான் என்ன? அங்கன மிச்சம் மீதி இருக்கிற தமிழன் வெளிக்காத்து படாம மூச்சு முட்டி சாகனுமா?

ஏற்கெனவே சொன்னதுதான். யார் யாருக்கு வசதி கீதோ அல்லாரும் இலங்கை போங்க .ஒரு மாசம் போதும். டூரிஸம் பிச்சிக்கும். ஓட்டல் தொழில் நிமிர்ந்து உட்காரும். இந்த ஒரு மாசம் தமிழ் நாட்ல இருக்கிற  எல்லா ப்ரொடியூசரும் ஒரு பாட்டையாவது இலங்கைல ஷூட் பண்ணுங்க. இங்கன இருக்கிற எல்லா தொழில் அதிபர்களும் இலங்கை போய் அங்கன தொழில் துவங்க  சர்வே பண்ணுங்க.  அங்கன இருக்கிற வங்கியெல்லாம் போட்டி போட்டுக்கிட்டு சுற்றுலா தொடர்பான தொழில்களுக்கு  கடன் கொடுத்துரும்.

31 ஆவது நாள் இலங்கை அரசுக்கு அல்ட்டிமேட்டம் கொடுங்க. தமிழனுக்கு இதை இதையெல்லாம் செய்து கொடு. 24 மணி நேரத்துல வேலை ஆரம்பிக்கனும் இல்லேன்னா எல்லாம் கான்சல்.

இது பிடிக்கலியா தமிழ் நாட்ல இருக்கிற எல்லா  நடிகர்களும் நடிக்க  வில்லங்கமில்லாத சினிமா ஒன்னை எடுங்க. ரூ.25க்கு டிவிடியும் ரிலீஸ் பண்ணுங்க. வந்த பணத்தையெல்லாம் வச்சு ஒரு மல்ட்டி நேஷ்னல் கம்பெனி வைங்க. இலங்கை அரசுக்கு ஆஃபர் கொடுங்க "த பாருப்பா இந்திந்த மேட்டரையெல்லாம் முடிச்சியானா நாங்க இத்தனை ஆயிரம் கோடில ஸ்டுடியோ கட்டறோம்னு சொல்லுங்க. இலங்கை அரசு ஈழத்தமிழனோட வெறுங்காலை நக்கும்.


தூதரகம்னு ஒன்னு இருந்தாதான் உங்க கண்டனங்களையாவது தெரிவிக்க முடியும். நாலு பேரு இங்கருந்து அங்கன போய் வர இருந்தாதான் அந்த அரசு அட்லீஸ்ட் சீனாவது போடும். காரியத்தையே கெடுக்கறிங்களேப்பு.

இலங்கைக்கு போகாதே, அந்த பக்கம் தலை வைக்காதே. அட்லாஸ்லருந்து இலங்கை படத்தை கிழிச்சுரு - என்னய்யா இதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இல்லே.

சரஸ்வதி சபதம்

நடந்த கதை:
( சத்ய லோகத்தில் கோ பூஜை நடக்கிறது.  நாரதர் லட்சுமி கடாட்சமாக இருக்கிறதுனு சொல்லிர்ரார். சரஸ்வதி கோவிச்சுக்கிறாய்ங்க. நாரதர் பூலோகத்துல  கல்விக்கு மரியாதையே இல்லை . ஏம்மா அலட்டிக்கறேனு மொக்கை பண்ணிட்டு  வைகுண்டத்துக்கு போறார் . இங்கே நடந்தை லட்சுமிக்கு சொல்ல அவிக பணம் பத்தும் செய்யும்னு பத்தாம் பசலித்தனமா பழமொழி சொல்ல நாரதர் பணத்தால வர்ர தொல்லைகளையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றாரு.  அங்கே இருந்து நேர கைலாசம் போறாரு. இதுவரை நடந்த கூத்தையெல்லாம் விவரிக்க பார்வதி அப்பாடா என்னருந்தாலும் வீரம் தான் எவர் க்ரீனுன்னு சொல்றாய்ங்க. அதுக்கு நாரதர் வீரம் சோரத்தை விட மோசமாயிருச்சுனு யதார்த்தத்தை எடுத்து சொல்றாரு. பார்வதி கமிட்டி போடலாமானு கேட்க கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்கங்கறாரு. அப்பாறம் லட்சுமி,சரஸ்வதிக்கு எஸ்.எம்.எஸ்.கொடுத்து வரழைக்கிறார் . மூணு பேரும் மொதல்ல முட்டிக்கிறாய்ங்க. நாரதர் ஃபைர் இஞ்சின் வேலை செய்ய  சரஸ்வதி, லட்சுமி,பார்வதி கலந்துரையாடல் தொடர்கிறது)

சரஸ்வதி:
எனக்கென்னவோ இதுக்கெல்லாம் சொல்யூஷன் இங்கே கிடைக்கும்னு தோணலை
லட்சுமி:
பின்னே எங்கே போகனும் அதையாவது சொல்லு
பார்வதி:
பிரச்சினைக்கான  தீர்வு அப்புறம். முதல்ல பிரச்சினைக்கான மூலத்தை பார்க்கனும்
நாரதர்:
உள்மூலமா? வெளி மூலமா?
சரஸ்வதி:
நாரதா.! .(பற்களை கடித்தபடி)
லட்சுமி:
முதல்ல  நாரதனை இங்கே இருந்து வெளியே அனுப்பினாதான் இந்த பேச்சுவார்த்தைல நான் தொடர்வேன்
பார்வதி:
நாரதா .. நீ கொஞ்சம் வெளிய இரு

நாரதர்: ஹும்.. இன்னம் இந்த கலந்தாலோசனை உருப்பட்ட மாதிரிதான். வாணலிக்கு பயந்து அடுப்புல பாஞ்ச மாதிரி முருகேசன் கிட்ட மாட்டப்போறிங்க..

லட்சுமி:
ஹூ இஸ் தட் முருகேசன்?  .. சன் ஆஃப் சர்வேஸ்வரன்?

நாரதர்:
இல்லை தாயே முருகேசன் சன் ஆஃப் சுந்தரேசன்

பார்வதி:
நாரதா புதிர் போடாதே கரெக்டா சொல்லு

நாரதர்:
யம்மா முருகேசன்னா நீங்க நினைக்கிற முருகேசன் இல்லே. பூலோகத்துல இருக்கிற ஒரு வில்லங்க பேர்வழி. இந்தியாவையே சொர்க பூமியாக்கறேன்னு பீலா விட்டுக்கிட்டு பொழப்பை ஓட்டற பார்ட்டி

சரஸ்வதி:
சரியப்பா இப்ப நாங்க பேசப்போற பிரச்சினைக்கும் நீ சொல்ற பார்ட்டிக்கும் என்ன சம்பந்தம்?

நாரதர்:
நீங்க பாக்கெட் பாக்கெட்டா பிஸ்கட்டும், ட்ரம் ட்ரம்மா டீயும் சாப்பிட்டு எந்த முடிவையும் எடுக்கப்போறதில்லை. ஆனால் நான் சொல்ற முருகேசனை மட்டும் இங்கன வரழைச்சுட்டிங்க சிங்கிள் டீ, சிகரட்ல மேட்டரையே பைசல் பண்ணுருவாப்ல

பார்வதி;
நீதான் வில்லங்க பேர்வழிங்கறியே..

நாரதர்:
அதுக்கு நான் என்ன பண்ணட்டும்..க்லைஞர் கூடத்தான் குடும்ப பைத்தியம் பிடிச்சு அலையறாரு அதுக்குனு அவர் தமிழை அலட்சியப்படுத்திர முடியுமா என்ன?

சரஸ்வதி:
அதுசரி நாரதா.. நீயாச்சும் தெரிஞ்ச பூதம் .. தெரியாத பேய்கிட்டே எப்படி டீல் பண்றது. வில்லங்க பேர்வழின்னு மொட்டையா சொன்னா எப்படி?  ஒரு க்ளூ கொடுப்பா.

நாரதர்:
கொடுக்கறேன் கொடுக்கறேன்.என்.டி.ஆருக்கு ஆப்பு வச்சுட்டு சந்திரபாபு சி.எம் ஆன பீரியட்ல நடந்த சம்பவம் இது. என்.டி.ஆருக்கு இருந்த தேவுடு இமேஜுக்கு அவர் ஓவர் நைட்ல என்ன டிசைட் பண்ணி என்னா செய்தாலும் செலாவணி ஆயிட்டிருந்தது . பாபு பேக்யார்ட்ல இருந்து பூந்ததால என்ன செய்தாலும் வில்லங்கமாவே போயிட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்துல  பாபு ஒரு  அனவுன்ஸ்மென்ட் கொடுத்தாரு. " இது மக்கள் அரசு. மக்களே நல்லாட்சி நடத்த  யோசனை சொல்லுங்க, ஃபாலோ பண்ணிக்கிறேன்.  எங்கயாச்சும் தப்பு நடந்தா புகார் கொடுங்க நடவடிக்கை எடுக்கறேன். போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு குண்டுபோட்டார்.

லட்சுமி: நல்ல மேட்டர்தானே இதுல எப்படிவில்லங்கம் பண்ண முடியும்?

நாரதர்: அங்கனதான் முருகேசன் நிக்கிறாரு.  சி.எம் ஐடியா கேட்டா கொடுக்கிற அளவுக்கு எவன் வேலை வெட்டி இல்லாம இருந்தான். எல்லாருக்கும் கிழிஞ்சு தொங்கிக்கிட்டிருந்தது.பாபு கொஞ்சமா ஆடலே. கரண்ட் சார்ஜை டபுளாக்கிட்டாரு, ஒரு நாள் லேட்டானாலும் அம்பது ரூபா ஃபைன், ஆர்.டி.சி பஸ் சார்ஜை ஏத்திவிட்டுட்டாரு. ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் காலி. ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசிதிட்டத்துக்கு வாய்க்கரிசி. ஐஏஎஸ் ஐபிஎஸ்ஸையெல்லாம் கவர்மென்டு பில்டிங்குக்கு சுண்ணாம்படிக்க வச்சாரு பாபு. இந்த அழகுல
ஐடியாவாவது, ஐனாவரமாவதுனு சனம் கண்டுக்கிடலை .நம்மாளும் ப்ரெட் ஹண்டர்தான். ஆனால் ஜோசியம்ங்கறது தொழிலே கிடையாது. மக்கள் ஜோசியம் பார்த்துக்கிட்டு கொடுக்கிற பணம் மக்கள் பணம் நான் வெறும் ட்ரஸ்டிதான். மக்கள் நலத்துக்காகவே செலவழிப்பேனு சிலும்பற கேரக்டர்.

பார்வதி:
அடப்பாவமே இப்படி ஒரு கொடுங்கோலாட்சியா?

நாரதர்:
ஆமா இப்ப கேளுங்க. அவர் ஆண்ட ஒன்பது வருஷத்துல ஒன்பது கிரகமும் ஒரே நேரத்துல வக்கிரமாயிட்ட மாதிரி சனம் நா............றிப்போயிட்டாய்ங்க.  பெரிய லிஸ்டே கீது. அத்தல்லாம் எடுத்துவுட்டா சனம் பக்கத்தை மூடிட்டு ஓடிப்போயிருவாய்ங்க . மேட்டருக்கு வரேன். நம்ம முருகேசன் இன்னா பண்ணாருன்னா சென்ட்ரல் கவர்மென்டுக்கு ஒரு பேக்கேஜ் (ஆப்பரேஷன் இந்தியா 2000) ,ஸ்டேட் கவர்மென்டுக்கு ஒரு பேக்கேஜ் (எகானமி பேக்கேஜ்) ப்ரிப்பேர் பண்ணாரு. சி.எம்முக்கு அனுப்பினாரு.

சரஸ்வதி:
இதுல என்ன வில்லங்கமிருக்கு?

நாரதர்:
வருது வருது ..ஏன் அவசரப்படறிங்க. 1997லருந்து 2002 வரை 5 வருஷம் கன்டின்யுவஸா ரெண்டு பேக்கேஜையும் சி.எம் ஆஃபீஸுக்கு அனுப்பிக்கிட்டே இருந்தாரு.

லட்சுமி:
யாரும் கண்டுக்கலயா?

நாரதர்:
கண்டுக்கவே இல்லை தாயே. கண்டுக்கிட்டா தான் ஆச்சரியம். உங்களுக்கு கவர்மென்ட் ஆஃபீஸ் ரெட் டேப்பிசம் பத்தி தெரியாது. அதான் ஆச்சரியப்படறிங்க.  முருகேசன் என்ன பண்ணாரு தெரியுமா ? ஒரே ஒரு பத்து ரூபா அதுவும் இண்டியன் கரன்சிதான் சி.எம்முக்கு எம்.ஓ பண்ணாரு. அப்பல்லாம் சந்திரபாபு " நிதி நிலைமை மோசமா கீது .சனம தியாகத்துக்கு சித்தமாகனும்" னு சொல்லிக்கிட்டே இருப்பாரு அதனால முருகேசன் எம்.ஓ ஃபார்ம்ல ஸ்பேஸ் ஃபார் கம்யூனிகேஷன்ல  "அய்யா, பாவம் பதில் போட போஸ்டேஜுக்கு கூட கவர்மென்ட்ல துட்டில்லைனு நினைக்கிறேன்.அதுக்குதான் பத்து ரூ எம்.ஓ. உடனே ஸ்டாம்பு வாங்கி பதில் போடு துரை"னு  எழுதி விட்டாரு. அதை அங்கன சி.எம். ஆஃபீஸ்ல  யாரோ சீல் போட்டு வாங்கிட்டாய்ங்க.உடனே முருகேசன் பதினைஞ்சு நாள் பார்த்துட்டு டெஃபிஷியன்ஸி இன் பெய்டட் சர்வீஸுனு  கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸை போட்டுட்டாரு. ஸ்டேட்டே நாறிப்போச்சு

பார்வதி:
அய்யய்யோ அந்த முருகேசன் சங்காத்தமே வேணாம்பா. இருக்கிற பிரச்சினையையே தீர்க்க முடியாம தவிக்கிறப்ப இந்த பிரச்சினை வேற எதுக்கு

லட்சுமி:
ஆமாம் . வேணாம்.

சரஸ்வதி:
நீங்க ஏன் இப்படி பயந்து நடுங்கறிங்க. சந்திரபாபு மேல எப்ப கேஸ் போட்டாரு . அஞ்சு வருஷம் கழிச்சுத்தானே. நாம சந்திரபாபு மாதிரி  அவன் ஐடியாவ வச்சு  ஊறுகா போடவா ஐடியா கேட்க போறோம். உலகத்துல முக்கியமா கர்ம பூமியான இந்தியால உண்மையான கல்வி,செல்வம் ,வீரம் செழிக்க ஐடியா கேட்கப்போறோம்
பிடிச்சிருந்தா ஒடனே அப்ளை பண்ணப்போறோம். இல்லேன்னா தபாருப்பா உன் ஐடியா சரியில்லை. போய் வானு T.A, D.A கொடுத்து அனுப்பிர போறோம்.

பார்வதி,லட்சுமி:
ஆமாம். மொதல்லயே நம்ம கண்டிஷனையெல்லாம் எழுதி கை.எ வாங்கிருவம்.

சரஸ்வதி:
அதுவும் கரெக்டுதான். முருகேசனை மொதல்ல யார் போய் காண்டாக்ட் பண்றது?

நாரதர்:
நான் போகவா?

லட்சுமி:
வேண்டவே வேண்டாம் . இங்கன இருக்கிற வீக் பாயிண்டையெல்லாம் போட்டுக்கொடுத்துருவான். நானே போறேன்.

மற்றவர்கள்: (கோரஸாக) சரி

காட்சி: 4

(ஒரு இன்டர் நெட் சென்டர். ஸ்னேகா சைஸ்ல ஒரு  ஆன்டி. உள்ளே நுழையறாய்ங்க. முகம் லட்சுமிகரமா இருக்கு. அதே சென்டர்ல முருகேசன் ப்ரவுஸ் பண்ணிக்கிட்டிருக்காரு .)

ஸ்னேகா:
ஏங்க  நெட்ல ஒரு ப்ளாகை சர்ச்  பண்ணனும். தேடிக்கொடுக்கிறிங்களா?

இன்டர் நெட் காரர்:
ப்ளாகா? அதை பத்தி எனக்கு பெரிசா ஐடியா இல்லிங்க. இங்க முருகேசன்னு ஒருத்தர் இருக்காரு .அவர் தமிழ்ல லீடிங் ப்ளாகர். அவர் தேடித்தருவாரு. (உள்ளாற பார்த்து ) முருகேசன் சார் ஒரு லேடி ஏதோ ப்ளாக் சர்ச் பண்ணனும்னு வந்திருக்காய்ங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

ஸ்னேகா:
நீங்க.. முருகேசன்னா சித்தூர் முருகேசனா?

முருகேசன்:
ஆமாங்க.

ஸ்னேகா:
அட உன்னைத்தான் தேடிவந்தேன். தேடிக்கிட்டிருந்த ரிலீஸ்பட சி.டி ஃப்ரீ டவுன் லோட்ல மாட்ன மாதிரி கரெக்டா மாட்னிங்க.. வாங்க போலாம்

முருகேசன்:
யம்மா .. நீ என்ன தமிழ் நாடு மகளிர் போலீஸா?

ஸ்னேகா:
ஏன் அப்படி கேட்கிறே?

முருகேசன்:
ஒன்னுமில்லை கலைஞர் எழுதின பலான கதைன்னு ஒரு போஸ்ட் போட்டேன். அதான் தேடிவந்துட்டிங்களோன்னு

ஸ்னேகா:
அப்படித்தான் வச்சுக்கலாமே

முருகேசன்:
சரி. பேஸ்ட் ,ப்ரஷ்,லுங்கி எல்லாம் பேக்ல இருக்கு புறப்படலாமா?

ஸ்னேகா:
ஏம்பா போலீஸுன்னா உனக்கு பயமா இல்லே.

முருகேசன்:
மிஞ்சிப்போனா என்கவுண்டர் பண்ணூவாய்ங்க. அவ்ளதானே. நான் சாகனும்னு எத்தீனி பார்ட்டி வேண்டிக்கினு கீதோ . அவிக ஆசையும் ஒரு நா நிறைவேறனுமில்லியா?

ஸ்னேகா:
இல்லப்பா நான் தான் லட்சுமி

முருகேசன்:
யாரு பழம்பெரும்  நாவலாசிரியை லட்சுமியா? அய்யய்யோ ஒரே கதையை திருப்பி திருப்பி எழுதினாங்கனு எழுதிவச்சதுக்கு ஆவியா இருந்தவுக  உங்க உடம்புல இறங்கி வந்துட்டாய்ங்களா?

ஸ்னேகா:
இல்லப்பா.. நான் தேவலோகத்துல இருந்து இறங்கி வந்த லட்சுமி

முருகேசன்:
அ சொம்மா விடாதிங்க. நீங்க என்னை தேடிவர்ர அளவுக்கு நேரம் வந்துருச்சுங்கறது நிஜம்னா கூகுல் ஆட் சென்ஸ் என் ப்ளாகை அப்ரூவ் பண்ணியிருக்கனுமே

ஸ்னேகா:
மெயில் பாக்ஸை ஓப்பன் பண்ணி பாரு
(முருகேசன் பரபரப்பாக தன் ஜிமெயிலை ஓப்பன் பண்ன கூகுல் ஆட் சென்ஸ் கவிதை 07 ப்ளாகை அப்ரூவ் பண்ணியிருக்கிறதா மெயில் அனுப்பியிருக்கு)

முருகேசன்:
அட ஆமாங்க. ஆனா ஒரு சின்ன சந்தேகம் . நான் 1986லருந்து இந்தியாவை பணக்கார நாடா மாத்தனும்னு தான் துடிச்சேனே தவிர நான் பணக்காரனாகனும்னு நினைச்சதே இல்லியே .. நீங்க எப்படி என்னைத்தேடி

ஸ்னேகா:
இந்தியா கேடு கெட்ட நிலைல இருக்கிறதாலதான்பா நீ இன்டர் நெட்டுக்கு வந்து பத்துபதினைஞ்சு கொடுத்து ப்ளாக் மெயிண்டெய்ன் பண்றே. இந்தியா பணக்கார நாடாயிட்டா .. அதுவும் உன்னால ஆயிட்டா உனக்கிருக்கிற திறமைக்கு நீயும்  பணக்காரனாயிருவே. சைட் எஃபக்ட்.

முருகேசன்:
அப்படிங்கறிங்க. அது சரி என்ன தேடிவந்த காரணம்?

ஸ்னேகா:
சொல்றேன். வீட்டுக்கு போலாமா?

முருகேசன்:
அய்யய்யோ உங்க வீட்டுக்கா?  செத்தாதானேம்மா வைகுண்டம்  வர முடியும்? ஏதோ இந்த நாட்டுக்கு டைரக்ட் எலக்சன்ல ஜனாதிபதியாகி ஆப்பரேசன் இந்தியா 2000 ஐ அமல்படுத்திரனும்னு சின்னதா ஒரு ஆசை. அதுக்குள்ளவா ஆயுசு முடிஞ்சு போச்சு. குரு உச்சமா இருந்தா தீர்காயுசுனு ஒரு ரூல் இருக்கு தாயே

ஸ்னேகா:
தத்.. உங்க வீட்டுக்கு போலாம்பா

முருகேசன்:
எங்க வீட்டுக்கா? வேணாம் தாயே இந்த சாடே சத்ரா வருமானத்துக்கே வீட்டு சனத்துக்கு கண்ணு மண்ணு தெரியமாட்டேங்குது.

ஸ்னேகா:
மொத்தத்துல நாரதன் சொன்னது கரெக்டு

முருகேசன்:
நாரதனா? ஓ எஸ்.வி.சேகர் கொஞ்ச நாள் நடத்தி விட்டுட்டாரே அந்த நாரதன் பத்திரிக்கையா?  நம்ம ப்ளாக் தமிழ் 10 டாப் சைட்ஸ்ல நெம்பர் ஒன்னாவே  ஆனாலும் பத்திரிக்கைல எழுத மாட்டாய்ங்க..  முக்கியமா அவாள் பத்திரிக்கைல

ஸ்னேகா:
மனசை ரெம்ப தாவ விடறே. நாரதன்னா ஒரிஜினல் நாரதனே சொன்னானப்பா.

முருகேசன்:
த பார்ரா வாட் கென் ஐ டூ ஃபார் யூ !

ஸ்னேகா:
இந்தியாவை பணக்கார நாடாக்கனும்னு தானே நீயும் உழைச்சிக்கிட்டிருக்கே. உன் லட்சியத்துல உண்மையான  வீரம் நிறைஞ்ச  நாடா, கல்வியில் சிறந்த  நாடா மாத்தறதையும் சேர்த்துக்க நாங்களும் உதவி பண்றோம்.

முருகேசன்:
நாங்கன்னா..

ஸ்னேகா:
பார்வதியும்,சரஸ்வதியும்

முருகேசன்:
அதுக்கு மொதல்ல நீங்க 3 பேரும்  அட்லீஸ்ட் ஒரு எம்.பியாவாச்சும் ஜெயிச்சாகனுமே.

ஸ்னேகா:
ஜெயிச்சா போச்சு

முருகேசன்:
இன்னாமா நினைச்சிக்கினு பேசிக்கினு கீறே நீ .. எம்.பியா ஜெயிக்கனும்னா ஜெயிச்சா போச்சுங்கறே!  .மொதல்ல உனக்கு இந்திய ஜன நாயகத்தை பத்தி தெரியுமா? தேர்தல் பத்தி தெரியுமா? அரசியல் கட்சின்னா இன்னா தெரியுமா? ஒரு கட்சில சீட் வாங்கனும்னா இன்னா பண்ணனும் தெரீமா? ஒரு மீட்டிங் போட்டு சனத்தை சேர்க்கனும்னா இன்னா பண்ணனும் தெரீமா? அட்லீஸ்ட் ஒரு ப்ரஸ்மீட் வைக்க இன்னா பண்ணனும் தெரீமா? எவ்ளோ செலவாகும் தெரீமா.

ஸ்னேகா:
அதெல்லாம் நீ சொல்லுப்பா தெரிஞ்சிக்கிட்டா போச்சு. உனக்கென்னா நாங்க மூணு பேரு எம்.பி ஆகனும் அவ்ளதானே..

முருகேசன்: அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதே (மயங்கி விழுகிறார்)

(தொடரும்

தாய்குலம் ட்ரைவரோட ஓடிப்போயி

"ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா "னு கவிஞர் எழுதி வச்சிட்டாரு.மனசு ஒத்துப்போனா ஒரு புளியமரத்து இலை மேல ரெண்டு பேர் படுத்துக்கிடலாமாம். ஒத்துப்போகலன்னா முழு உலகம் கூட பத்தாது.

நாப்பது வயசு வரை ஒரு புருசன் கூட குடும்பம் நடத்தின தாய்குலம்  ட்ரைவரோட ஓடிப்போயிர்ராய்ங்களே அவிக மனச எது மாத்திருச்சு? .

புருசங்காரன் மொடாக்குடியனா இருந்து , சாராயத்துக்கு காசு கேட்டு இழுத்து போட்டு அடிச்சாலும் அவனோட வாழ்ந்து அவனோடவே சாகிறாளே அவள் மனசுக்கு அந்த உறுதிய கொடுத்தது யாரு?

இந்த வேலையை சந்திரன் செய்யறதா ஜோதிஷம் சொல்லுது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்ட் அதனோட கெமிக்கல் காம்பினேஷன் சமுத்திர தண்ணியை ஒத்திருக்கிறது, சமுத்திர நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் இதையெல்லாம் மறுபடி மறுபடி சொல்றதுல எனக்கு விருப்பமில்லே .


1.ஜோதிஷத்துல சந்திரன் ஜலகாரகன்னு சொல்வாய்ங்க. நேத்தோ முந்தா நேத்தோதான் சந்திரன்ல வாட்டர் ரிசோர்ஸ் இருக்கிறதா ப்ரூவ் ஆச்சு.
2.சந்திரனோட ராகு,கேது சேர்ந்தா நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான வியாதிகள் வரும்னு சொல்லப்பட்டிருக்கு. உங்களுக்கோ உங்களை சுத்தி இருக்கிறவுகளுக்கோ வீஸிங்க இருந்தா விசாரிச்சு பாருங்க. வீசிங் இருக்கிற வரை சிறு நீரே வெளியேறாது. இதான் நுரையீரலுக்கும், கிட்னிக்கும் இருக்கிற லிங்க்
3.பல் பிரச்சினை இருக்கிறவுகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினை வர வாய்ப்பு அதிகம்னு முந்தா நேத்துகண்டு பிடிச்சாய்ங்க. ஆனால் சோசியத்துல பல்,இதயம் ரெண்டுத்துக்கும் பொறுப்பு சூரியன் தானு சொல்லப்பட்டிருக்கு.

இப்படி ஆயிரம் சொல்லலாம். மேட்டருக்கு வந்துர்ரன். சந்திரன் மனுசங்களோட மனசை இன்ஃப்ளுயன்ஸ் பண்றாருன்னா எப்டி எப்டினு ரஜினி காந்த் மாதிரி கேட்பிங்க. சொல்றேன்.


ஒன்பது கிரகங்கள்ள சந்திரனும்  ஒரு கிரகம்  . அதுவும் எலக்சன் எலக்சனுக்கு கூட்டணி மாத்திர்ர பா.ம.க மாதிரி  ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிர்ர பார்ட்டி. இவர் எப்படி என்னாத்த பாதிச்சுர முடியும்னு  ஜோசியருங்கள்ள கூட சிலருக்கு அண்டர் எஸ்டிமேஷன் இருக்கு.

தாகம், சிறு நீர் கழிக்கனும்ங்கற உணர்வு உந்துதல், உடலுறவு நாட்டம் இதெல்லாம் ஏற்படறது சந்திரனோட எஃபெக்ட் தான். உங்க சுவாசம்  இடது நாசி வழியா நடக்கும்போதுதான் இதெல்லாம் ஏற்படும் ( பெண்களா இருந்தா வலது) . இதை சந்திர நாடிம்பாய்ங்க.

தாகம்,சிறு நீர் கழிக்கனும்ங்கற உணர்வு உந்துதலால என்னா நடந்துரும். இது போய் மனசை எந்த அளவுக்கு பாதிச்சுரும்னு கேட்பிங்க. சின்ன உதாரணம்:

சித்தூர்ல  ஜில்லா பரிஷத் மீட்டிங்க் நடந்தது - சித்தூர் எம்.எல்.ஏ  சி.கே .பாபுவும் கலந்து கிட்டாரு - அவருக்கு இந்த ரெட் டேப்பிசம்னாலே அலர்ஜி. அவரோட ராஜாங்கமே தனி. உடனடி லாட்டரித்தான். அதனாலதான் நாலாவது தடவையா எம்.எல்.ஏ ஆகியிருக்காரு.

இந்த மாதிரி லொடக்காச்சி மீட்டிங்குக்கெல்லாம் போகறது ரேர். சமீபத்துல பிரஜா பதம்னு ஒரு ப்ரோக்ராம் பண்ணாய்ங்க. ( உங்க ஊர்ல கிராம சபைங்கறாங்களா) அதிகாரிங்கல்லாம் வார்டு வார்டா வந்து ஊர் சனத்துக்கிட்டருந்து மனு வாங்கிக்கிட்டு போனாய்ங்க. இதுல இந்த தடவை எம்.எல்.ஏவையும் அதுக்கு  புக் பண்ணிட்டாய்ங்க. சனம் பாபு (எம்.எல்.ஏ)கூட  வராரேமே.. மேட்டர் பைசல் தான்னு சனம் மனு கொடுக்கிறதுல  கின்னஸ் சாதனையே  பண்ணிட்டாய்ங்க.மாசம் மூணாகியும் அந்த மனுக்கள் மேல ஒரு நடவடிக்கையும் கிடையாது. வழக்கமா இங்கன என்னடா நடைமுறைன்னா "எம்.எல்.ஏ கிட்ட ஒரு பேச்சு சொல்லிருப்பா மேட்டர் க்ளோஸு"

இந்த சிச்சுவேஷன்ல ஜி.ப மீட்டிங் நடக்குது. சி.கே பாபு மனு மேல நடவடிக்கையில சுணக்கம் (?) பத்தி சாதாரணமா பேச ஆரம்பிச்சாரு. மேடையில இருந்த வனத்துறை மந்திரி   பெத்தி ரெட்டி ராமசந்திரா ரெட்டிக்கு அந்த அவசரம் படக்குனு எந்திரிச்சு போயிட்டாரு. கதை கந்தலாயிருச்சு.

சி.கே.பாபுவுக்கு  சித்தூர் டைகர்னு ஒரு பட்டம் உண்டு .புலி அன்னைக்கு சகட்டுமேனிக்கு உறுமிருச்சு.இத்தனைக்கும் காரணம் மந்திரிக்கு அந்த நேரம் பார்த்து மூத்திரம் வந்துட்டதுதான். பார்த்திங்கல்ல சந்திரன் என்னமா வேலை காட்டறாருன்னு.

இந்த சந்திரன் மேட்டர்ல ஒரு வசதி என்னடான்னா இவரு எங்கன இருக்காருனு பார்க்க ஜாதகத்தையே பார்க்க தேவையில்லை. ஜன்ம நட்சத்திரத்தை,பாதத்தை வச்சே சொல்லிரலாம். மேலும் சந்திரன் எந்த ராசில நிக்கிறாரோ அதைத்தான் உங்க ஜன்ம ராசினு கோவில்ல அர்ச்சனை செய்றப்பல்லாம் சொல்லிக்கிட்டிருக்கிங்க.

இந்த 12 ராசிகள்ள சந்திரனோட நிலைய வச்சு பார்க்கும் போது ரிஷபம், கடகம், விருச்சிகம் ங்கற மூணு ராசிகளை பத்தி மட்டும் ஸ்பெஷலா சொல்லவேண்டியிருக்கு.

ரிஷபராசி:
இவிக கேஸ்ல சந்திரன் உச்சமா இருக்கிறதால இவிகளை  வருத்தமடைய செய்யறது அவ்ள ஈஸியில்லை.மேலும் இவிக ராசியாதிபதியான சுக்கிரன் ஒரு வருஷத்துல ஒரே தடவைதான் நீசமாவார். ஜஸ்ட் மூணு மாசம்தான் ட்ரபிள் கொடுப்பார். ( 3,6,8 ல வரச்ச) சுக்கிரனை பத்தி தெரியுமில்லியா ஜுஜுலிப்பாவுக்கு பொறுப்பு வகிக்கும் கிரகம் இவர் . இதனால ரிஷபராசிக்கராவுக  இன்னா மாதிரி கிரைசிஸ்லயும் சின்ன சின்ன சந்தோஷங்களை விடவே மாட்டாய்ங்க ( உ.ம் கலைஞர். முள்வேலிக்குள்ள தமிழினம் என்னதான் தட்டுக்கெட்டாலும் பாராட்டு விழா, சினிமாவுக்கு கதை வசனம்னு எதையாவது விடறாரா பார்த்திங்களா. எல்லாம் உச்ச சந்திரனோட எஃபெக்ட் தான்)

அட் தி சேம் டைம் நல்ல கற்பனை திறன் இருக்கும் . சனத்துக்கு இவிக நல்லது பண்றாய்ங்களோ இல்லையோ சனம் விளக்குல போய் விழற மாதிரி இவிக கிட்டே விழுந்துக்கிட்டே இருப்பாய்ங்க.  நல்ல ரசனை  இருக்கும். பெண்களா இருந்தா பார்த்து பார்த்து சமைப்பாய்ங்க. ஹேண்டி க்ராஃப்ட்ஸ்ல கூட இன்டரஸ்ட் இருக்கும். ஆண்களா இருந்தா கேட்டு விசாரிச்சு சமைக்க சொல்வாய்ங்க. மேட்டர் அடுப்புல இருக்கிறச்சயே வெந்துச்சா இலலியானு எடுத்து ருசி பார்ப்பாய்ங்க. ஸ்னாக்ஸ், நொறுக்கு தீனின்னா பறப்பாய்ங்க. மனுஷனுக்கு என்னய்யா வேணும் நல்ல துணி, சாப்பாடு ,தூக்கம் பலானது"னு தத்துவம் பேசுவாய்ங்க.

உண்மை காரணம் என்னடான்னா ஒரு ரேஞ்சுக்கு மேல  பிரச்சினைகள் பத்தி  யோசிக்கவே பயப்படுவாய்ங்க, வில்லங்கமாயிரப்போவுதுனு அப்படி ஒரு பிரச்சினையே இல்லாதமாதிரி பிஹேவ் பண்ணுவாய்ங்க.

கடகராசி:
இவிகளுக்கு அதிபதியே சந்திரன்தான்.இவர் ஆட்சியடையறது ரெண்டேகால் நாள். உச்சம் பெறுவது ரெண்டேகால் நாள். ஆக ஏழரை நாட்கள் .ஆக இந்த ஏழரை நாட்கள் மட்டும் ரிஷபராசிகாரவுக மாதிரியே பிஹேவ் பண்ணுவாய்ங்க. ஆனால் இவர் பாதி நாள் ஏறுமுகமாவும் ,பாதி நாள் இறங்குமுகமாவும்  இருக்கிறதால காடாறு மாசம்  நாடாறு மாசம் கதையா இருப்பாய்ங்க. அதாவது சந்திரன் வளர்ர காலத்துல ஓரளவு  ரிஷபராசிக்காரவுக மாதிரி இருப்பாய்ங்க.ஆனால் அதே சந்திரன் தேய ஆரம்பிச்சதுமே விருச்சிகராசிகாரவுக மாதிரி பிஹேவ் பண்ணுவாக.

விருச்சிக ராசி:
இவிக ராசில மனோகாரகனான சந்திரன் நீசம் பெறுவதால எப்பவுமே கடுப்புல இருப்பாய்ங்க.அடுத்தவனையும் கடுப்பாக்கிக்கிட்டே இருப்பாய்ங்க. ஒரு ரோசாவ பார்த்தா கூட "ஹும் முள்ளுல தானே இருக்கு"ம்பாய்ங்க.உசரத்துல பறக்கிற கழுகை பார்த்தாலும் "ஹும்.. செத்த எலிய தூக்க கீழே வந்துதானே ஆகனும்பாய்ங்க" சந்திரன் ஜல காரகன்ங்கறதால ஒரு வீட்ல ஒரு  விருச்சிக ராசி இருந்தா போதும் தண்ணிக்கு லாட்டரிதான். இதனாலதான் போர் போடறச்ச கூட விருச்சிக ராசிக்காரவுக யார்னா இருந்தா காசு கொடுத்து வெளியூர் அனுப்பிருங்கப்பானு சொல்லிர்ரது. இவிக எப்பயும் அதிருப்திலயே இருப்பாய்ங்க. சண்டைக்கு தயாரா இருப்பாய்ங்க.

சண்டைல ஜெயிக்கனும்னா செவ்வாய்  அனுகூலமா இருக்கனும். செவ்வாய் 3,6,10,11ல இருந்தாதான் நல்லது. ஆனால் இந்த செவ்வாய் இவிகளுக்கு லக்னாதிபதியாவும் இருக்கிறதால 3,6 ராசிகள்ள ஒர்க் அவுட் ஆகமாட்டாரு. அதனால மொக்கை தான். அதுசரி செவ்வாய் லக்னாதிபதிங்கறதால கோணம் ப்ளஸ் கேந்திரமான லக்னத்துலயோ  கோண ஸ்தானமான  5,9 லயோ, கேந்திர ஸ்தானமான 4,7,10 லயோ வந்தா நல்லாருக்குமேனு கேட்பிங்க.

இருக்கும் தான் ஆனா பின்னாடியே சைட் எஃபெக்டும் வந்திரும் . உ.ம் அஞ்சுல வரும்போது கோபம்,அவமானம், ஒன்பதுல வரும்போது அப்பா கூட தகராறு . விருச்சிக ராசிக்கு நான் கொடுக்கிற அட்வைஸ் என்னன்னா தேள் மாதிரி பதுங்கி இருங்க. வாயை விடாதிங்க. ஃபிஸிக்கல் எக்ஸர்ஸைஸ் மஸ்ட். புகை,தூசுக்கு தூர இருங்க.

ஓகேங்கண்ணா மத்த ராசிகளை பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போமா. (கிழிஞ்சது போங்கறிங்க அப்படித்தானே. எதை எதை அரைகுறையா விட்டமோ அததுவெ தன்னை கம்ப்ளீட் பண்ணிக்கும் தலை. நாம என்ன ஜஸ்ட் ஒரு  கருவி மாதிரி)

இவிகளை திருப்தி படுத்தறது ரெம்ப கஷ்டம்.இவிக பேச்சு தேள் கொட்டினாப்ல இருக்கும். லங்ஸ் ,கிட்னி தொடர்பான பிரச்சினைக வரும்.

Sunday, July 25, 2010

கலைஞர் எழுதிய பலான கதை

அண்ணே வணக்கம்ணே, வான் கோழிங்கற டைட்டில கலைஞர் ஒரு சூப்பர் பலான கதை எழுதியிருக்காருங்கோ. அதை படிக்க இங்கே   அழுத்துங்க.

ஒரு ஜோதிடரின் ஓப்பன் டாக் என்ற தலைப்பில் ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேண்ணா . கவிதை07 தடை செய்யப்படற வாய்ப்பு அதிகரிச்சுட்டே போகுது . சீக்கிரம் புக் மார்க் பண்ணிக்கங்க/ மெம்பராயிருங்க/ அல்லது சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க. ஏமாந்துராதிங்க‌

வான் கோழிங்கறது ஏறக்குறைய கோழிதான். என்ன ஒரு இம்சைன்னா அப்பப்ப மயில் மாதிரி தோகைய விரிச்சு ஆட முயற்சி பண்ணுமாம். இதுக்கு " கான மயிலாட கண்டிருந்த வான்கோழி"னு ஒரு கவிதையே இருக்கப்பு.

இப்ப விஜய் காந்த் இருக்காரு. இவரு எம்.சி.யாரா மாறனும்னு ஒரு ட்ரெயில். இளைய தளபதி ( எந்த ராணுவத்துலிங்கண்ணா?) விஜய் இருக்காரு. இவருக்கு ரஜினியாயிரனும்னு ஒரு அரிப்பு. இதெல்லாம் ஆதி காலத்துலருந்தே நடக்கறாப்ல இருக்கப்பு. அதனால தான் இந்த மேட்டருக்கு  பொருந்தறாப்ல கச்சா முச்சானு பழமொழிங்க இருக்கு.

"புலிய பார்த்து பூனை சூடுபோட்டுக்கிட்ட கதை.." "உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா?"


இப்ப  மேட்டருக்கு வந்துருவம். ஒவ்வொருத்தருக்கு ஒரு ஸ்டைல் இருக்கும். அது அவிகளுக்குத்தான் தகும். வேற யாராச்சும் என்னை மாதிரி கில்மா ஜோக்ஸ்,பலான மேட்டரை எல்லாம் எழுதியிருந்தா தமிழ் மணம் 24 மணி நேரத்துல தடை பண்ணியிருக்கும். ஆனால் நம்மை தடை பண்ண இத்தீனிகாலமாச்சு.ஏன்னா கில்மா ஜோக்ஸ் எழுதறது நம்ம நோக்கமில்லை.

அதை சாக்கா வச்சிக்கிட்டு வாழ்க்கைய ,அதிலான பிரச்சினைகளை  விளக்கறதுதான் நம்ம நோக்கம்.  ஒரு பார்ட்டியோட ஸ்டைல் அந்த பார்ட்டிக்குத்தான் தகும். அதை காப்பி பண்ணா என்னாகும்னு  நீங்க தெரிஞ்சிக்கத்தான் இந்த பதிவை போடறேன்.

கட்டை பஞ்சாயத்து பண்டரி , செட்டில்மென்ட் சேது , பெட்டிஷன் பரமசிவம் இப்படி பல கேரக்டருங்க சேர்ந்த கேரக்டர் நம்முது.  அஞ்சறை பெட்டில இருக்கிற கடுகு,உளுத்தம்பருப்பு  இத்யாதிகளை சமைக்கிற மெனுவுக்கு ஏத்த மாதிரி தாய்குலம் யூஸ் பண்றாப்ல இந்த கேரக்டர்களை தேவைக்கேத்த படி  எக்ஸிபிட் பண்ணி பாதிக்கப்பட்டவுகளுக்கு குறைஞ்ச விலைல நியாயம் வாங்கி தர்ரது நம்ம ஸ்டைல். ( நியாயம் எங்கண்ணா இலவசமா கிடைக்குது)

உதாரணத்துக்கு ஒரு கேஸை சொல்லிர்ரன். ஒரு  பையன் ஒரு பொண்ணு. பையன் சி.டி கடை வச்சிருந்தான். பொண்ணு கஸ்டமரா வந்தது. ரெண்டு பேரும் நெருங்கிட்டாய்ங்க. அந்த பொண்ணு பாவம் "பொய்யிலே பிறந்து பொய்யிலே" வளர்ர அக்மார்க் பெண் மாதிரி இல்லாம தன் ஃப்ளாஷ் பேக்கை ஒடைச்சிருச்சு.

மேட்டர் ஒன்னுமில்லை. ஏற்கெனவே கண்ணாலமான ஒரு டெம்போ ஓனர் உண்மைய மறைச்சு இவளை காதலிச்சு (?) கண்ணாலம் கட்டி குடித்தனமே நடத்திட்டான். ( இதெல்லாம் பாப்பா வீட்டுக்கு தெரியாம நடக்குது - நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்) 

குடித்தனம்னு சொன்னேனே நெஜமாலுமே "குடி"த்தனம்தான். அந்த நாயி "டம்மி" பீஸு மாதிரி இருக்கு. மொத சம்சாரம் ஒட்ட கறந்துருவா போல. இவன் நாடி நரம்பெல்லாம் நலிஞ்சுரும் போல . இவன் 40 அவள் 20. இவனுக்கு அடங்கற வயசு. பாப்பாவுக்கு ? இதனால சந்தேகம் வேற. பல சமயத்துல அடி உதை வேற. மேலும் ஃபைனான்ஸ் மேட்டர்லயும் பார்ட்டி வீக்கு. அப்பப்போ இவளோட நகை நட்டெல்லாம் கழட்டி அடகுவச்சி மஞ்ச குளிச்சிருக்கான்.


இந்த சமயம் பார்த்து பாப்பாவுக்கு கிட்னில வேற  பிரச்சினை வந்திருச்சு. இவள் "போடாங்கொய்யால ஆள விடு" னு கழண்டு கிட்டு வீட்ல மொத்த மேட்டரையும் கக்கிட்டா.  இது அந்த கண்ணாலமான பார்ட்டிக்கு கடுப்பாயிருச்சு. இவளை கண்டபடி பே(ஏ)சறது ,ப்ளாக் மெயில் பண்றது. ரோட்ல பார்த்தா சபிக்கிறது . இது ஃப்ளாஷ் பேக்.

காதலுக்கு கண்ணில்லைங்கறாங்களே அது உண்மைதான் போலும். கிளி கொத்தின பழம்னா பரவாயில்லை. இது பன்னி கடிச்சு குதறின பழம். இதுல கிட்னில வேற பிரச்சினை.  நான் மொதல்ல அந்த பையனுக்கு என் வயசுக்கேத்த புத்தி மதி  சொன்னேன்.

"நைனா.. பாப்பா பிரச்சினையை தீர்க்கிறது பெரிய மேட்டரில்லை .தீர்த்து வச்சுருவம். .இந்த லவ்ஸ் எல்லாம் வேணாம் கண்ணா. எதிர்காலத்துல வருத்தப்படுவே"

ஊஹூம். பையன் கேட்கிறாப்ல இல்லை. எம்.எல்.ஏவை பார்க்க ஏற்பாடு பண்ணேன். எம்.எல்.ஏ அபயம் கொடுத்துட்டாரு. " நீ போய் உங்க கவுன்சிலரை பாரும்மா. நான் சொன்னேனு சொல்லு.. உனக்கு நியாயம் நடக்கும்"

கவுன்சிலர் கிட்டே போயிருக்காய்ங்க. அவரும் டெம்போ ஓனர் போல. தொழில் ஒன்னாயிருக்கிறதால முலாஜா போல. பார்ட்டி கண்டுக்கற மாதிரியே இல்லை. படக்குனு பெட்டிஷன் பத்ம நாபமாகி ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதி எஸ்.ஐ கிட்ட கொடுத்துரும்மா பிரச்சினை ஓவருண்ணேன்.

இந்த பாப்பா  போன சமயம் எஸ்.ஐ ஸ்டேஷன்ல இல்லே. ரைட்டர்,ஹெட் கான்ஸ்டபிள் கம்ப்ளெயிண்டை பார்த்து ( ஸ்டேஷன் பக்கத்துலயே டெம்போ ஸ்டாண்ட்)  கவுன்சிலரையும், பாப்பாவை சீரழிச்ச பிக்காலியையும் வரவச்சு உட்கார வச்சு பேசி அனுப்பிட்டாய்ங்க.

பாப்பா கேரக்டர் சரியில்லையாம். இன்னொருத்தியோட புருசனை மயக்கி வீடியோ ப்ளாக் மெயில் பண்ணுதாம் . இனி அப்படி செய்யக்கூடாதாம். பொண்ணுங்கறதால இதோட விடறோம்னு தீர்மானம் பண்ணி அனுப்பிட்டாய்ங்க.

ஆந்திரபிரபா நிருபரா அந்த எஸ்.ஐயோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததால மேட்டரை கூரியர் மூலமா போட்டுக்கொடுத்துட்டேன். எஸ்.ஐ பாப்பாவையும், அவளை சீரழிச்சவனையும் கூப்டு  விஜாரிச்சுருக்காரு.  அந்த பன்னாடைக்கு நல்லா ரெய்டு விட்டு பாப்பாவோட நகை அ அதுக்கீடான பணத்தை பத்து நாள்ள செட்டில் பண்ணனும் இல்லேன்னா  ............................................ செக்ஷன்ல எல்லாம் கேஸ் புக் பண்ணி ஏழரை வருஷம் உள்ளே அனுப்பிர்ரேனு பேதிக்கு கொடுத்திருக்காரு. இது மட்டுமில்லாம  டெம்போவை விக்கறச்ச  பேர் மாத்திக்கொடுக்கிற ஃபார்ம்ல எதுலயோ கை.எ போடனுமாம்ல ( டி.பி.ஓ ?) அந்த ஃபார்மயும் தருவிச்சு கை.எ வாங்கிக்கிட்டாரு.

மவனே பத்து நாள்ள அந்த பாப்பாவுக்கு பணத்தை செட்டில் பண்ணலை உன் டெம்போவ வித்து வந்த பணத்தை அப்படியே கொடுத்துருவேன்னு டகுலு விட்டிருக்காரு.  மேட்டர் ஓவர். இந்த மாதிரி ஒண்ணு ரெண்டுல்ல , நிருபரான பிற்பாடுடான்னுல்ல 1991லயே நம்ம ஸ்டேஷன் விஜயங்கள் துவங்கிருச்சு. இன்னை வரைக்கும் தொடர்ந்துகிட்டே இருக்கு.

நாம் என்ட்ரி கொடுத்தா கேஸ் ஜினைன், பார்ட்டி நெஜமாலுமே பாதிக்கப்பட்டவனு புரிஞ்சிக்கிடுவாய்ங்க. பெரிசா எதிர்பார்க்க முடியாது ஏதோ ஸ்டேஷன் செலவுக்கு வந்துரும்னு அட்ஜஸ்ட் பண்ணிக்குவாய்ங்க.

இதையெல்லாம் ஒரு பன்னாடை பார்த்து பார்த்து  முருகேசன் என்னத்த பெரிசா பண்ணிர்ரான். நாமளும் பண்ணா என்னனு நினைச்சு இறங்கி கம்ப்ளெயினென்டும், விக்டிமும் கொலைட் ஆகி, இவனை தேடி  நந்தியாலா  போலீஸ் வந்து   நோண்டி நுங்கெடுத்த கதையெல்லாம்.........சொல்லனுமா?

(மீதி அடுத்த பதிவில்)

கலைஞரின் கவிதை வரி:
"இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர்" ( அடங்கொக்கா மக்கா !)

(எஸ்.ஐ க்கும் நமக்கு அண்டர்ஸ்டேண்டிங்குனு சொன்னேனே அதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு அதை இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.) 

 ஒருத்தன் நம்ம கிட்டே  வந்தான். டீன் ஏஜ் தான். கேஸ் இப்போ பையனோட வார்த்தைகள்ளயே:

ஒரு ஜோதிடரின் ஓப்பன் டாக்

ஒரு ஜோதிடனாக சில விஷயங்களை  மனம் விட்டு  ( வேணம்னா மானம் விட்டுனு கூட வச்சிக்கலாம்) பகிர்ந்துக்கலாம்னு இந்த பதிவை போடறேன்.

நீங்க ஜோசியர்கிட்டே போறிங்க. அவரு உங்க ஜாதகத்துல கிரகங்களோட இருப்பை வச்சி முதல்ல ஒரு சில கேள்விகள் கேட்பார். உ.ம் நீங்க தான் கடைசி பிள்ளையா?

உடனே நீங்க "அடங்கொய்யால இத  கூட கரெக்டா சொல்லத்தெரியல"னு ஜோசியரை பத்தி அண்டர் எஸ்டிமேட் போட்டுருவிங்க. உங்க  ஜாதகத்துல இளைய சகோதரத்தை காட்டற 3 ஆவது இடத்துல பாப கிரகம் இருந்திருக்கும் அதை வச்சி அவர் இப்படி சொல்லியிருப்பார் 3 ஆவது இடத்துல பாப கிரகம் இருந்தா நீங்க கடைசி வாரிசா இருக்கிறது ஒன்னு மட்டும் பலனில்லை.  அதுக்கு அனேக பலன் கள் சொல்லப்பட்டிருக்கு.  உதாரணமா : இங்கன பாபகிரகம் இருந்தா உங்க சவுண்ட் பாக்ஸ் அவுட்டாகலாம். உங்களுக்கு பிறகு பெண் குழந்தைகளே பிறந்திருக்கலாம். ஆண் குழந்தை பிறந்திருந்தாலும் அது ஜாதகரை விட இன்ஃபிரியர் க்வாலிட்டியோட இருக்கலாம். அல்லது வேறு இடத்துல வளரலாம். அல்லது ஜாதகருக்கு அப்புறம் அவிக அம்மாவுக்கு மிஸ் கேரி நடந்திருக்கலாம்.இப்படி மானாவாரியா பட்டியல் போட்டா பையில கல்லை போட்டு மாங்கா அடிச்ச கதையாயிராது

உண்மை நிலவரம் என்னடான்னா ஜோசியம்ங்கறதே ஒரு அட்வென்சர். எதிர்காலம்ங்கறது  கடவுள் கையில இருக்கிற அஜெண்டா. அது கடைசி நொடி கூட மாற்றப்பட வாய்ப்பிருக்கு.  ஜோசியம்ங்கறதே அந்த அஜெண்டாவை காப்பியடிக்கிற மாதிரிதான்.

மேலும் ஜோசியர்கிட்ட நீங்க காட்டினது உங்க ஜாதகத்தை மட்டும் தான்.அதுவும் மிஞ்சிப்போனா ராசி சக்கரம் , நவாம்ச சக்கரம் கொஞ்சம் போல விவரம் தெரிஞ்சவுகளா இருந்தா பாவ சக்கரம்.சாதாரணமா ராசி சக்கரத்துக்கும் பாவச்சக்கரத்துக்கும் மாற்றமே இருக்காது.

( நம்ம ஜாதகத்துல ராசியில ஏற்படாத குருசந்திர  சேர்க்கை கடகலக்னத்துலயே ஏற்பட்டிருக்கு - இந்த அமைப்பு ஸ்ரீராமனோட  ஜாதகத்துல இருந்ததாம். அதனால தான் 14 வருஷம் வனவாசம் அனுபவிச்சாராம்.- நம்ம கதையை எடுத்துக்கிட்டா 1993லருந்து  2007 வரை வனவாசம்  தான். கூடிய சீக்கிரம் பட்டாபிஷேகம் நடக்கப்போவுதுங்கோ. தமிழ் மணம் மாதிரி பார்ட்டிங்களுக்கு இந்த மேட்டர் தெரியாம  தடை பண்ணியிருக்காய்ங்க)

என்னதான் நல்ல டாக்டரா இருந்தாலும் ரிப்போர்ட்ஸ் கரெக்டா இருந்தாதானே கரெக்டா டயக்னைஸ் பண்ண முடியும். ஒரு ஜாதகத்துல ஒரு கிரகம் வலிமையா இருக்கா இல்லையானு டிசைட் பண்றதுக்கு 116 ரூல் இருந்தாலும் கிரகங்களோட பலங்களை அனுபவத்துலருந்துதான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அதனாலதான் நம்ம ஜோசியத்துக்கு அனுபவ ஜோசியம்னு நாமகரணம் பண்ணியிருக்கேன்.

சொம்மா மொக்கையெதுக்கு அண்ணாத்தை ! "அஸ்ட்ராலஜி மீன்ஸ் ஆப்ஷன்ஸ்"னு ஒரே வார்த்தைல சொல்லிரலாம். ஆமாங்கண்ணா. உ.ம் 1-7 ல ராகு கேது இருக்குதுனு வைங்க. உடனே அவன் விதவையோட தான் கெட்ட காரியம் பண்ணுவானு அடிச்சு சொல்லிரமுடியாது. இந்த கிரக ஸ்திதிக்கு சொல்ல வேண்டிய பலன்கள் பலப்பல இருக்கு. 

ஒரு ஜோசியரால மேற்படி பலன் களையெல்லாம் ஒரே மூச்சில சொல்லிரமுடியாது. இதான் நிலைமை. மேலும் இதை சைன்ஸ்னு நிரூபிக்க நான் உள்பட மஸ்தா பேரு ட்ரை பண்ணியிருக்காய்ங்க. இது சைன்ஸுதான்  ஆனால் மிஸ்டிக் சைன்ஸ்.

எதிர்காலம்ங்கறது தேவ ரகசியம். அதை டீ கோட் பண்ண தெய்வத்தோட அனுமதி தேவை. இந்த பதிவுல சொன்ன மாதிரியான  தர்ம சங்கடங்களை தவிர்க்க  ஜோசியருங்களுக்கு சில டிப்ஸ் தரேன். ( உங்க குடும்ப ஜோசியருக்கு இந்த பதிவொட ப்ரிண்ட் அவுட் ஒன்னை கொடுத்துருங்க தலை)

1.நான் சொல்றேன் நீ கேட்டுகங்கற ஸ்டைல் உதவாது
2.ஜாதகத்துல கிரகங்கள் நின்னதுக்கான பலன்  நீங்க படிச்சு உருப்போட்ட புஸ்தவங்கள்ள இருந்தா போதாது. ஜாதகனுடைய வாழ்க்கைல நடந்திருக்கனும். யானை வரும் பின்னே  மணி ஓசை வரும் முன்னேங்கற மாதிரி எதிர்காலத்துல பெரிய எஃபெக்டை கொடுக்க வேண்டிய கிரகம் ஆரம்பத்துல சின்ன சின்ன லொள்ளா கொடுத்திருக்கும். அதை ஜாதகர் கிட்டே பேசி கன்ஃபர்ம் பண்ணிக்கனும்.

3.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க, ராகு கேதுக்களுடன்  மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான். ராகு,கேதுக்களோட சேர்ந்தா சர்ப்ப தோஷ எஃபெக்டே வந்துருதுங்கண்ணா

4.லக்னாதிபதி ,ராசியாதிபதி ரெண்டு பேர்ல யார் ஸ்ட்ராங்கா இருககாங்கனு பாருங்க. ஒரு வேளை ராசியாதிபதி பவர் ஃபுல்லா இருந்தா ராசியையே லக்னமா வச்சி பலன் சொல்லுங்க .

5.கிரகங்களோட உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளை பாருங்க. அஸ் ட்ராலஜி கூட அல்ஜீப்ரா மாதிரி தான் . மைனஸையும் மைனஸையும் கூட்டினா ப்ளஸ் ஆயிரும். ப்ளஸ்ஸையும்,ப்ளஸ்ஸையும் கூட்டினா மைனஸ் ஆயிரும். அதாவது :
நீசனை நீசன் பார்த்தா நீசம் பங்கமாகும். உச்சனை உச்சன் பார்த்தா ரெண்டு பேரும் டப்பாஸு.

6.பரிவர்த்தனம் ஏதாவது இருக்கா பாருங்க . அவர் வீட்ல இவர் .இவர் வீட்ல அவர் . அப்படியிருந்தா ரெண்டு பேருமே ஆட்சில இருக்கிறாப்லதான்.


7.கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் இருக்கு.  இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ங்க.

இப்போ ஏற்கெனவே எழுதி அந்திமழைல டாப் லெவல் ஹிட்ஸ் பெற்ற "ஜோதிட மர்மங்கள் ஆயிரம்" பதிவை அப்படியே கட் பேஸ்ட் பண்ணியிருக்கேன். படிச்சு பாருங்க

நீங்க சொல்ற் நல்ல பலன்/கெட்ட பலன் தவற பல காரணங்கள் இருக்கு . உதாரணத்துக்கு சிலதை பாருங்க ( இலக்கண தமிழுங்கோ)

1.எல்லா கிரகங்களும் செவ்வாய்க்கு பின்னே தங்கியிருத்தல்
2.எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களிடையில் சிக்கியிருந்தல்
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

ராசி பார்த்து நேசி

இந்த தொடர்பதிவு வெறும் யூத்துக்கு,  லவர்ஸுக்கு மட்டுமில்லே, பார்ட்னர்ஸ், ஃப்ரெண்ட்ஸ், எம்.எல்.ஏ, எம்.பி, சி.எம், பி.எம்  எல்லாத்துக்கு யாரை நேசிக்கனும் எப்படி நேசிக்கனும்னு சொல்லப்போவுதுங்கோ. பை தை பை சரஸ்வதி சபதம் தொடருது .அதை இங்கே அழுத்தி படிங்க‌

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்னு வாத்தியார் பாடி வச்சிருக்காருங்கண்ணா. உங்களை மட்டுமில்லை உங்கள சுத்தி இருக்கிறவுகள கூட அறிஞ்சிக்கிட்டா நெஜமாலுமே வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காம வாழலாங்கண்ணா. உங்க ஜன்ம ராசி/லக்னத்தை வச்சு உங்க கேரக்டரை சொல்லியிருக்கேண்ணா.

உங்க ராசிய நீங்க எப்படி டிரைவ் பண்ணிங்கங்கறது ரெம்ப முக்கியம் ஜாதகம், நட்சத்திரம்,பாதம், சந்திரனோட இருப்பை வச்சு டிரைவ் பண்ணியிருந்தா ரெம்ப நல்லது. அதான் சைன்டிஃபிக் அப்ரோச்.ஜாதகப்படி வைக்கப்பட்ட  பெயர்ல முதலெழுத்தை வச்சு பார்த்தாலும் ஓகே. டோனி, பிங்கி மாதிரி இஷ்டாத்துக்கு வச்ச பேரை வச்செல்லாம் பார்க்கிறதை விட 12 கேரக்டரையும் படிங்க. உங்களுக்கு எது செட் ஆகுதோ அதான் உங்க ராசி ஓகே.

வெறுமனே உங்க கேரக்டரை மட்டும் கண்டுகிட்டு பக்கத்தை மூடிராதிங்க. உங்க அப்பா,அம்மா, அப்பப்பா,அம்மம்மா ( சிலோன் ரேடியோ சொல்வாய்ங்களே அந்த மாதிரி ) எல்லாரோடதையும் படிக்கனும்ல . பேசாம ஒரு ப்ரிண்ட் அவுட் கொண்டு போயிருங்க. ஒதவும்.

இன்னொரு சீக்ரெட். தமிழ் மணம் கவிதை07 ஐ தடை பண்ணிட்டதால ஏவரேஜ் ஹிட்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது அதனால சில காலத்துக்கு ஜோசியத்துல கீற டாப் சீக்ரெட்டையெல்லாம் எடுத்து விடப்போறேன். பேசாம இந்த ப்ளாகை  புக்மார்க் பண்ணிக்கங்க/ சைட்ல மெம்பராயிருங்க/ சப்ஸ்க்ரைப் பண்ணிருங்க தொல்லையில்லாத வேலை. ( இப்படி ஒரு சீரியலை ஆன்மீகம் மாத இதழ்ல எழுதப்போயி அய்யர் மாரெல்லாம் எங்க பொழப்பு கெட்டுப்போகுது மூக்கால அழ எடிட்டர் படக்குனு பாதில நிறுத்திட்டாரு. அவிக ப்ரஷருக்கு  இங்கன திரட்டிகள் வலைப்பூவையே  தடை பண்ணிர்ர சான்ஸு இருக்குது டேக் கேர்)

மனித வாழ்க்கைல இத்தனை பிரச்சினை வர காரணமே தன்னை தான் தெரிஞ்சிக்காததும் ( உங்க ஊரு விஜய் காந்த், எங்க ஊரு சிரஞ்சீவி மாதிரி) , தன்னை சுத்தி இருக்கிறவுகளை பத்தி தெரிஞ்சிக்காததும் தான் ( என்.டி.ஆர் மாதிரி)

ஒரு ஹ்யுமேனிஸ்டான  ஜோசியரா எந்த வித ஒளிவு மறைவுமில்லாம ரூ.250 கன்சல்டன்ஸி ஃபீஸா தர்ர க்ளையண்ட்ஸுக்கு சொல்ற பலன்களை  அப்படியே இங்கன தந்திருக்கேண்ணா. பொத்தி பாதுகாத்துக்கங்க. இந்த பக்கத்தை ஆர்க்குட்,ஃபேஸ்புக்,கூகுல் புஸ்,டிவிட்டர்  இப்படிப்பட்ட சைட்ல இருக்கிற உங்க ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம்   கண்ட மேனிக்கு ஷேர் பண்ணுங்க அண்ணாத்த !

உங்களை பத்தியும் தெரிஞ்சிக்காம,உங்கள சுத்தி உள்ளவுகளை பத்தியும் தெரிஞ்சிக்காம கோதாவுல இறங்கறது தற்கொலைக்கு சமானம்.

கட்டுச்சோறு கட்டிக்கொடுத்த மாதிரி வெறுமனே பலனை கொடுத்தாலும் படிச்சிட்டு போயிருவிக. இருந்தாலும் மனசாட்சி கேட்கமாட்டேங்குது . நிறைய ஜோசியர்ங்க இப்படித்தான் புஸ்தவத்தை படிச்சு மனப்பாடம் பண்ணி கதை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. ஆனால் நான் இந்த பலனை ஒர்க் அவுட் பண்ண வழியையும் சொல்லி வைக்கிறேண்ணா.

உங்கள்ள ஆர்வமுள்ளவுக கொஞ்சமா முக்கினா மஸ்தா மேட்டரு வெளிய வருங்கண்ணா. அதை எல்லாம் எனக்கு மெயில் பண்ணா நம்ம வலைப்பூவுல வெளியிடறேங்கண்ணா.

ராசி/லக்னங்களின் குண நலனை  அறிய வழிகள்:
1.முதல்ல அந்த ராசிக்குனு கொடுத்திருக்கிற படத்தை பாருங்க. சின்னவயசுல படம் பார்த்து கதைசொல்லு வந்திருக்கில்ல. நம்ம ரிஷிகள் மகரிஷிகள் வெறுமனே கதை பண்ணிட்டு போயிரல தம்பி ! நிறைய ரோசிச்சு நமக்கெல்லாம் க்ளூ கொடுத்துட்டு போயிருக்காய்ங்க.
2.மேஷத்தை முத ராசியா கொண்டா உங்க ராசி எத்தனையாவது ராசினு பாருங்க. துவாதச பாவங்கள் தெரியுமில்லை. பாவ காரகத்வம் தெரியுமில்லை. அந்த ராசியை பாவமா கொண்டா அந்த பாவ காரக்த்வத்துக்கும் உங்க ராசிக்கும் பிரிக்க முடியாத ஒரு லிங்க் இருக்கிறதை புரிஞ்சிக்கிடலாம்.
3.உங்க ராசி/லக்னத்துக்கு அதிபதி யாருனு பாருங்க. அவரோட காரகத்வம் என்னனு பாருங்க. அவரோட காரகத்வம் உங்க லைஃபை நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். குளிர் காயறச்ச ரெம்ப நெருங்கியும் போயிரக்கூடாது (தோல் வெந்துரும்) ரெம்ப எட்டியும் வந்துரக்கூடாது குளிரும்னு சொல்லுவாய்ங்க. உங்க லக்னாதிபதி/ராசியாதிபதி உங்களுக்கு ரெம்ப நெருக்கமாயிர்ரதால தன்னோட காரகத்வத்துல கொஞ்சம் போல தீங்கும் செய்துருவாருங்கோ.

இனி உங்க குண நலன் களை பார்ப்போமா?
1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள  எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா  உங்க மாதிரி பார்ட்டிங்கள  விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி   கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும்   மனசுல  எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்)  கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு  துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக  பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக.  பணம், பேச்சு, குடும்பம்னால்  வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே  இந்த  விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில்  அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
_______________________
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு  துக்கமோ, நஷ்டமோ வந்தா  உடனே  ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.
4.கடகம்:
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
மற்ற விஷயங்களை இன்னொரு தரம் விளக்கி சொல்கிறேன்.அதுவரை ச்சும்மா கெஸ் பண்ணி வையுங்கள். (கடல்,முகம் பார்க்கும் கண்ணாடிகளின் ப்ளஸ் மைனஸ்களை) . திடீர் கோபம் கொள்ளுதல், சில நிமிடங்களில் சமாதானமடைதல். பெரிய்ய விஷயங்களை சகித்து கொள்ளுதல், சின்ன விஷயங்களுக்கு பெரிதாக கோபித்தல் இத்யாதி குணங்களால் இவர் எப்படித்தான் பிழைக்க போகிறாரோ என்ற எண்ணம் குடும்பத்தார் மனதில் ஏற்படலாம். வீடு கட்ட முனையும் போது ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும். கையில் முழுப்பணத்தை வைத்துக்கொண்டே இறங்கவும். இந்த லக்னக்காரர்கள் வீடுகட்ட ஆரம்பித்து அதை ஒரு தவணையில் முடிப்பது சந்தேகமே
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க ( நாம எப்பவும் பெண்டாட்டிக்கு ஜே தானே)  .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின்  புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட்.
6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும்  மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு  மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து  நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும்.

10.மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.மேலுக்கு மந்த புத்தி உடையவராக, சோம்பல் கொண்டவராக தென்பட்டாலும் அதிர்ஷ்ட சாலி. டெக்னிக்கலாய் முன்னேறி குறைந்த பட்சம் 8 பேருக்கு வேலை வாய்ப்பு தருவார். ஒரே நோக்கத்துடன் ஒரு வாழ் நாள் முழுக்க உழைக்கும் கொள்கை பிடிப்பு ஏற்படும்
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும்  நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும்.  பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)