Monday, December 31, 2007

ரிமோட் குண்டு வெடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் நசுங்கியது.



ரிமோட் குண்டு வெடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் நசுங்கியது. வட்டமிட்ட இடத்தில் தான் குண்டு புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. உள் படத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சி.கே.பாபுவை பார்க்கலாம்.

Sunday, December 30, 2007

நேற்று ஒரு கதை . பெண்ணின் கதை.

கதை கேளுங்க !

ஒவ்வொரு மனிதனும் கதை சொல்ல தயார். ஆனால் நாம் கேட்க தான் தயாரில்லை. 7 ஆம் வகுப்பு காலத்திலிருந்தே தெரிந்தோ தெரியாமலோ ஊர் பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால் என்னால் ஓராயிரம் கதை கள் சொல்ல முடியும். நேற்று ஒரு கதை . பெண்ணின் கதை. அவள் பி.படுத்தப்பட்டவள். தலித் இளைஞன் ஒருவனை காதல் கடிமணம். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது 5 மாதம் கர்பம். இவள் ஒரு பிரபல நர்சிங் ஹோமில் ஃப்ரண்ட் டெஸ்க் எம்ப்ளாய். பணம் போக்கு வரத்து எல்லாம் பார்த்துக்கொள்ளவேண்டிய வேலை. சம்பளம் ரூ.1800 .டைமிங்ஸ் காலை 8 முதல் இரவு 10. இவளோடு சேர்த்து 25 பேர் வேலை பார்க்கிறார்கள்.

தேனை எடுப்பவன் புறங்கையை நக்கித்தீருவான் என்பது போல் கடைசி 4 மாதங்கள் தினசரி ரூ.1000 வரை ஒதுக்கி இருக்கிறாள். தன் கணவன் பேரிலான வங்கி கணக்கில் டெப்பாஸிட் செய்து வந்திருக்கிறாள். கணக்கு வழக்கில் எந்த வித்யாசமும் கிடையாது. கொள்ளையடிப்பவனுக்கு கணக்கு பார்க்க நேரம் ஏது?


ஒரு நாள் தன் சக ஊழியை ஒருவளிடம் பணம் கொடுத்து வங்கியில் போட்டு வரச் சொல்லியிருக்கிறாள். அந்த பெண் டாக்டரிடம் ஊதியிருக்கிறது. பற்றிக்கொண்டுவிட்டது. டாக்டர் பந்தாவாய் அந்த தனியார் வங்கி மேனேஜருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லவும், வங்கி இவள் கணக்கை முடக்கி விட்டது.

மேலும் டாக்டர் ஒன் டவுன் எஸ்.ஐ க்கு ஓரலாக கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டார். இந்த நிலையில் என் உதவி கேட்டு வந்தனர். நான் என்ன செய்திருப்பேன்? வேலைக்கு ஆகியதா? இல்லையா? ட்டட்ட டாய்ங் அடுத்த பதிவில் சந்திப்போம்

Saturday, December 29, 2007

பெனாசிர் புட்டோ மரணம் : பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலிய வாக்கு. பெனாசிர் புட்டோவின் மரணத்தை பாவத்தின் சம்பளமாகத்தான் கூற வேண்டும். அவர் தம் மதத்துக்கோ,நாட்டுக்கோ ,பெண்மைக்கோ ஒரு நாளும் உண்மையாக இருந்ததில்லை.

இந்தியா பாக்கிஸ்தான் இரண்டும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள். இவற்றினிடையில் வேறுபாடுகளை வளர்த்த,வளர்க்கும் எவரையும் சரித்திரம் மன்னிக்காது. இன்று நிலவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அகண்ட பாரதம் அல்ல வெல்ஸ் கனவு கண்ட உலக அரசு கூட சாத்தியமே. தொலைநோக்குடன் யோசிக்காது,உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் எந்த தலைவருக்கும் இதே கதி தான்.

இன்றைய உலகத்தின் பொது எதிரி தீவிரவாதம். தீவிர வாதத்துக்கு எதிராக உலகமக்கள்(அமெரிக்காவின் தலைமையில் அல்ல) திரண்டெழ வேண்டிய காலகட்டம் இதுதான். தீவிரவாதத்தின் ஆணி வேர் வறுமை. வறுமை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டால் தீவிரவாதம் தானே மறைந்து விடும்.

அதை விடுத்து குறுகிய நோக்கங்களுடன் மக்களை பிரித்தாண்டு , ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தலைவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

உலக நாடுகள் ஒன்று கூடி தம் ராணுவத்தை உருப்படியான வேலைகளில் ஈடுபடுத்தினால் வறுமை தலை தெறிக்க ஓடும்.

உல‌க‌ ம‌க்க‌ள் காலை 6 ம‌ணிக்கு விழித்து,மாலை 6 ம‌ணிக்கு ப‌டுக்க‌ச்சென்றாலே போதும் மின்சார‌ம்,எரிபொருள், விநியோக‌ம் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விடும். இத‌னால் க்ளோப‌ல் வார்மிங் குறைந்து ஜ‌ல‌ப்பிர‌ள‌ய‌ம் த‌டுக்க‌ப்ப‌டும். அணு ஆயுத‌ங்க‌ள்,அணு மின் ச‌க்திக்கு விடை கொடுக்க‌ வேண்டும். ந‌திக‌ள் இணைக்க‌ப்ப‌ட்டு விவ‌சாயம்,கால் நடை வளர்ப்பு, ஆக்ரோ தொழிற்சாலைகள்,பால் பொருள் உற்பத்தி மட்டுமே தொழிலாக‌ கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும். இர‌சாய‌ண‌ உர‌ங்க‌ள் ,பிளாஸ்டிக் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

போதும் போதும் இப்பிறவி

அம்மா!
இதுவும் உந்தன் விதியென்றே விழுங்கி வைத்தேன் வருந்தாதே
காளி யாகி என் உதிரம் நாளும் பொழுதும் அருந்தாதே

மனிதன் என்றே பிறந்திட்டேன்
விதிக்கு புறம்பாய் சுய நலமே புவிமிசை நானே துறந்திட்டேன்

கலைகள் யாவிலும் சிறந்திட்டேன்
விதியின் ரகசியம் அறிந்திட்டேன்

செவிடர் காதில் சங்கெனவே ஆனது எந்தன் தமிழ் பேச்சே
பிணப்புகை யானது என் மூச்சே

தொண்டை வறள பேசிவிட்டேன்
பேனா முனையும் தேய எழுதிட்டேன்

மாற்றம் தானே வரவில்லை
ஏமாற்றம் இன்னும் மாறவில்லை

யாதே செய்வேன் புவனேசி
இனியேனும் நீயே எனை யோசி


பாவியர் பலரும் புவிமிசையே பவிசாய் தானே வாழ்ந்தாச்சு
என் நிலை தானே தாழ்ந்தாச்சு

உயிர்கள் செய்வது இரு வேலை
கொல்வது அன்றேல் சாவது தான்
கொன்றால் கருமம் தொடர்ந்து வரும்
மீண்டும் மீன்டும் பிறவி தரும்

மனித பிறவி அற்பம் என்று அறிந்தேன் புரிந்தேன்
அறிந்ததனால் விட்டேன் கொல்வதை அம்மாவே
மக்கள் என்னை கொல்லட்டும்
என் கருமம் யாவும் தொலையட்டும்
நித்தம் தேசம் முன்னேற எழுதி வந்த என கரத்தை
அரிவாள் கொண்டே வெட்டட்டும்
அனுதினம் அகில மாந்தரெலாம் உயர்ந்திட உழைத்த என் உடலை
நெருப்பிலிட்டு மகிழட்டும்
வருந்தேன் திருந்தேன் அம்மாவே
போதும் போதும் இப்பிறவி
வற்றாதெந்தன் தமிழருவி

12 ராசியினருக்கும் காதலில் வெற்றி

காதலில் வெற்றிக்கு முதல் வழி சரியான ராசிக்காரரை காதலிப்பதுதான். சரியான ராசி என்றால் உங்கள் ராசிக்கு வசியமாகும் ராசி என்று பொருள்.

யாருக்கு/யார் வசியம்:
மேஷத்துக்கு சிம்ம,விருச்சிக ராசியினர் வசியம். எனவே மேஷ ராசியினர் சிம்மம் அல்லது விருச்சிக ராசிக்காரரை காதலிக்கலாம். இதே போல் ரிஷப ராசியினர் கடகம் அல்லது துலா ராசியினரையும்,மிதுனராசிக்காரர் க்ன்னி ராசிக்காரரையும்,கடக ராசிக்காரர் விருச்சிக ,தனுசு ராசிக்காரரையும்,சிம்ம ராசிக்காரர், துலா அல்லது மகர ராசிக்காரரையும் காதலிக்கலாம். இதே போல் கன்னி‍க்கு மீன,மிதுன‌ம் வசியம், துலாத்துக்கு மகரம்,கன்னி வசியம். விருச்சிகத்துக்கு கடகம்,தனுசுக்கு மீனம்,மகரத்துக்கு கும்பம்,கும்பத்துக்கு மீனம், மீனத்துக்கு மகரம் வசியம்.

மேலும் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது கவிஞர் வாக்கு. எனவே உங்கள் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும். இதே போல் தங்கள் காதலர் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும்.

மேலும் உங்கள் ராசிக்கு குருபலம் உள்ளதா பார்த்துக் கொள்ள வேண்டும். குருபலம் இருந்தால் தான் உங்கள் கவர்ச்சி பெருகும், வசிய ராசிக்காரரானாலும் உங்களுக்கு குருபலம் இருந்தால் தான் உங்களை நாடுவார்.

ஜாத‌க‌மே இல்லாது தங்களுக்கோ, த‌ங்க‌ள் காத‌ல‌ருக்கோ செவ்வாய் தோஷ‌ம் உள்ள‌தா என்ப‌தை அறிய‌ வ‌ழியிருக்கிற‌து. தோஷ‌ம் இருந்தால் இருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டும், இல்லாவிட்டால் இருவ‌ருக்கும் இருக்க‌க்கூடாது. ஒருவ‌ருக்கு இருந்து,அடுத்த‌வ‌ருக்கு இல்லையென்றால் பிரிவு நிச்ச‌ய‌ம்.


மேலும் காத‌லில் வெற்றிக்கு சுக்கிர‌ ப‌ல‌ம் முக்கிய‌ம். ஜாத‌க‌த்தையே பார்க்காது உங்க‌ள் ஜாத‌க‌த்தில் சுக்கிர‌ ப‌ல‌ம் உள்ள‌தா இல்லையா என்ப‌தை அறிய‌வும் வ‌ழியுண்டு.


அடுத்த‌ ப‌டியாக‌ த‌ங்க‌ள் காத‌லை சொல்லும் நேர‌ம் முக்கிய‌மான‌து. உங்க‌ள்/அடுத்த‌வ‌ர் ராசிக்கு ச‌ந்திராஷ்ட‌ம‌ கால‌த்தில் காத‌லை சொல்லாதீர்க‌ள். சுக்கிர‌ன் 7,10ல் இருக்கும்போதும் கூடாது. குரு ப‌ல‌ம் இல்லாத‌ போது காத‌லை சொன்னால் தோல்வி நிச்ச‌ய‌ம்.

யாரை காத‌லிக்க‌ கூடாது:

த‌ங்க‌ள் ராசிக்கு 6,8,12 ஆவ‌து ராசிக்கார‌ரை காத‌லித்தால் க‌ட‌ன்,விரோத‌ம்,நோய்,பிராண‌ க‌ண்ட‌ம்,விப‌த்து,வீண்விர‌ய‌ம் உறுதி.

அடுத்த‌ ப‌திவில் விரிவாக‌ பார்க்க‌லாம்.

12 ராசியினருக்கும் காதலில் வெற்றி

காதலில் வெற்றிக்கு முதல் வழி சரியான ராசிக்காரரை காதலிப்பதுதான். சரியான ராசி என்றால் உங்கள் ராசிக்கு வசியமாகும் ராசி என்று பொருள்.

யாருக்கு/யார் வசியம்:
மேஷத்துக்கு சிம்ம,விருச்சிக ராசியினர் வசியம். எனவே மேஷ ராசியினர் சிம்மம் அல்லது விருச்சிக ராசிக்காரரை காதலிக்கலாம். இதே போல் ரிஷப ராசியினர் கடகம் அல்லது துலா ராசியினரையும்,மிதுனராசிக்காரர் க்ன்னி ராசிக்காரரையும்,கடக ராசிக்காரர் விருச்சிக ,தனுசு ராசிக்காரரையும்,சிம்ம ராசிக்காரர், துலா அல்லது மகர ராசிக்காரரையும் காதலிக்கலாம். இதே போல் கன்னி‍க்கு மீன,மிதுன‌ம் வசியம், துலாத்துக்கு மகரம்,கன்னி வசியம். விருச்சிகத்துக்கு கடகம்,தனுசுக்கு மீனம்,மகரத்துக்கு கும்பம்,கும்பத்துக்கு மீனம், மீனத்துக்கு மகரம் வசியம்.

மேலும் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது கவிஞர் வாக்கு. எனவே உங்கள் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும். இதே போல் தங்கள் காதலர் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும்.

மேலும் உங்கள் ராசிக்கு குருபலம் உள்ளதா பார்த்துக் கொள்ள வேண்டும். குருபலம் இருந்தால் தான் உங்கள் கவர்ச்சி பெருகும், வசிய ராசிக்காரரானாலும் உங்களுக்கு குருபலம் இருந்தால் தான் உங்களை நாடுவார்.

ஜாத‌க‌மே இல்லாது தங்களுக்கோ, த‌ங்க‌ள் காத‌ல‌ருக்கோ செவ்வாய் தோஷ‌ம் உள்ள‌தா என்ப‌தை அறிய‌ வ‌ழியிருக்கிற‌து. தோஷ‌ம் இருந்தால் இருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டும், இல்லாவிட்டால் இருவ‌ருக்கும் இருக்க‌க்கூடாது. ஒருவ‌ருக்கு இருந்து,அடுத்த‌வ‌ருக்கு இல்லையென்றால் பிரிவு நிச்ச‌ய‌ம்.


மேலும் காத‌லில் வெற்றிக்கு சுக்கிர‌ ப‌ல‌ம் முக்கிய‌ம். ஜாத‌க‌த்தையே பார்க்காது உங்க‌ள் ஜாத‌க‌த்தில் சுக்கிர‌ ப‌ல‌ம் உள்ள‌தா இல்லையா என்ப‌தை அறிய‌வும் வ‌ழியுண்டு.


அடுத்த‌ ப‌டியாக‌ த‌ங்க‌ள் காத‌லை சொல்லும் நேர‌ம் முக்கிய‌மான‌து. உங்க‌ள்/அடுத்த‌வ‌ர் ராசிக்கு ச‌ந்திராஷ்ட‌ம‌ கால‌த்தில் காத‌லை சொல்லாதீர்க‌ள். சுக்கிர‌ன் 7,10ல் இருக்கும்போதும் கூடாது. குரு ப‌ல‌ம் இல்லாத‌ போது காத‌லை சொன்னால் தோல்வி நிச்ச‌ய‌ம்.

யாரை காத‌லிக்க‌ கூடாது:

த‌ங்க‌ள் ராசிக்கு 6,8,12 ஆவ‌து ராசிக்கார‌ரை காத‌லித்தால் க‌ட‌ன்,விரோத‌ம்,நோய்,பிராண‌ க‌ண்ட‌ம்,விப‌த்து,வீண்விர‌ய‌ம் உறுதி.

அடுத்த‌ ப‌திவில் விரிவாக‌ பார்க்க‌லாம்.

பல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

பல்துறை திறமைகளிபல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்
ன் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

சித்தூர்(டிச‌ம்ப‌ர்29)
தமிழ்,தெலுங்கு மொழிகளில் எழுத்து,கவிதை,விளம்பர வடிவமைப்பு,கணிணி போன்ற பல் துறை திற‌மைக‌ளின் உறைவிட‌ம் சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன் என்று ஆந்திர‌மாநில‌ம்,சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். வ‌ல்ல‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இல்லாத‌தால் தான் ந‌ம் நாடு ப‌ல்வேறு துறைக‌ளிலும் பின் த‌ங்கி வ‌ருகிற‌து என்ப‌தை நாட‌றியும். பல துறைகளில் வ‌ல்ல‌வ‌ராக‌ இருப்ப‌தோடு ந‌ல்ல‌வ‌ராக‌வும் இருப்ப‌தே முருகேஷ‌னின் புக‌ழுக்கு கார‌ண‌ம் என்று வேலூரை அடுத்துள்ள‌ சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் சொல்வ‌தை கேட்க‌ முடிகிற‌து. 1967 ல் ஓய்வு பெற்ற மாவட்ட க‌ருவூல‌ அதிகாரியின் 3 ஆவ‌து ம‌க‌னாக‌ பிற‌ந்த‌ முருகேஷ‌ன்
1987 க‌ல்லூரி தேர்த‌ல்க‌ளில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ர‌ட‌ரியாக‌ போட்டியிட்டு 468 வாக்குக‌ள் பெற்று த‌ம‌து ச‌ரித்திர‌த்தை துவ‌க்கி இந்த‌ 20 ஆண்டுக‌ளில் பிர‌ப‌ல‌ தெலுங்கு நாளித‌ழ் வார்த்தாவில் அரைப் ப‌க்க‌ அள‌வில் த‌ம்மை ப‌ற்றி செய்தி வெளிவ‌ரும‌ள‌வுக்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இவ‌ர‌து சாத‌னைக‌ளில் குறிப்பிட‌த்த‌க்க‌வை வ‌ருமாறு:


1984லேயே க‌ல்லூரி ஆண்டு ம‌ல‌ரில் முத‌ல் க‌விதை பிர‌சுர‌ம்
1987ல் பாக்யாவில் முத‌ல் சிறுக‌தை பிர‌சுர‌ம். 1990 க்குள் வாசுகி,க‌ல்கி,க‌விதாச‌ர‌ண் இத‌ழ்க‌ளில் க‌தைக‌ள் பிர‌சுர‌ம்.

1991 ல் க‌ல‌ப்புத்திரும‌ண‌ம். முத‌ல் குழ‌ந்தை வ‌யிற்றிலிருக்கும்போதே சமூக பொறுப்புடன் கு.க‌. செய்து கொண்ட‌மை

1992 முத‌ல் ஆண்டுக்கு ஒருமுறையாவ‌து ர‌த்த‌தான‌ம் செய்து வ‌ருவ‌து.

இந்தியாவின் எல்லா பிர‌ச்சினைக‌ளுக்கும் தீர்வாக‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌ம் தீட்டி அத‌ன் பிர‌ச்சார‌த்துக்கும்,அம‌லுக்கும் தொட‌ர்ந்து உழைத்து வ‌ருவ‌து

விள‌ம்ப‌ர‌ வ‌டிவ‌மைப்பில் ஈடுபாடு கொண்டு முத‌ல் 6 மாத‌ங்க‌ளிலேயே சென்னை,விவேகான‌ந்தா க‌ல்வி நிலைய‌ம், அபிசாரிக்கா தெலுங்கு மாத‌ இத‌ழ் நிர்வாக‌ங்க‌ளிட‌மிருந்து ரொக்க‌ப் ப‌ரிசு பெற்ற‌து
1986 முதல் தமது காம நினைவுகளிலிருந்து விடுதலை பெற அனுமனின் அருள் வேண்டி ராம நாமம் ஜெபித்து வருகிறார். குண்டலி விழிப்பு நிலைக்கு சென்றால் காலஞானம் ஏற்பட வேண்டும் என்பது யோகசாஸ்திர வாக்கு.

எந்த குருவிடமும் அப்பியாசம் செய்யாது ஜோதிட வியலை பயின்று தேர்ச்சி பெற்றதோடு அனுபவ ஜோதிடம் என்ற பெயரில் தனியொரு கலையை உருவாக்கியிருப்பது சிறப்பு.

நவகிரக தோஷங்களுக்கு சம்பிரதாய பரிகாரங்களோடு, தமது கண்டுபிடிப்பான நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்து பேரும் புகழும் பெற்று வருகிறார்.

தமது ஆன்மீக வாழ்விலும் தொடர்ந்து முன்னேறி 2000 டிசம்பர் 23 முதல் ஹ்ரீம் என்ற மாயா பீஜத்தை ஜெபித்து வருகிறார். இறையருளை பொறிவைத்து பிடிப்பது எப்படி என்று நூல் எழுதுமத்தனை அனுபவங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவேங்கடன் தீந்தமிழ் பாமலர் மாலை என்ற தலைப்பில் எளிய,அழகு,பழகு தமிழில் காவியம் எழுதி திருப்பதி திருமலை தேவஸ்தான ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் . ராகவாச்சாரியின் பாராட்டைப்பெற்றது

ஒரே நேர‌த்தில் ஆன்மீகம்‌ மாத‌ இத‌ழில் 2 தொட‌ர்க‌ள் எழுதிய‌மை.(ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்க‌ள்,ஸ்ரீ பிர‌ம்ம‌ங்காரு)
ஜோதிட பூமி மாத இதழில் தமது கண்டுபிடிப்பான ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்களை எழுதி முடித்து, அனைவருக்கும் தனயோகம் என்ற தொடரை ஜனவரி இதழில் துவக்க உள்ளார்.

தமிழனாய் இருந்து, தெலுங்கை கற்றுத் தேர்ந்து தெலுங்கிலும் இலக்கியங்கள் படைப்பதோடு 2 ஆண்டுகள் ஆந்திர பிரபா தெலுங்கு நாளிதழின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தினத்தந்தி நாளிதழின் சித்தூர் நிருபராக பணியாற்றிவருகிறார்.

Thursday, December 27, 2007

விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆந்திர அரசு திட்டம்.

மேலோட்டமாக பார்க்கும் போது இது சீரிய திட்டமாகவே தோன்றும்.முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெறும்போது அவர்கள் ஜீவனாம்சம் பெற வழியில்லை என்பதால் இது அவசியம் என்றே தோன்றும். முஸ்லீம் பெண்கள் என்றே இல்லை எந்த மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவள் பொருளாதார சுதந்திரம் பெற வழி வகுக்க வேண்டும். அதை அவள் பெற்ற பிறகே மணம் முடிக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வரவேண்டும்.

இந்த காலகட்டத்தில் ஆண் ஆண்மையை இழந்து வருகிறான். பெண் தன் பெண்மையை ,மென்மையை இழந்து வருகிறாள். உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம் ஆண்/பெண் உறவுக்கு வேட்டு வைத்திருப்பதை என்னால் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியும்.இனி பெண்ணுக்கு கணவன் ஆண் அல்ல. பணம் தான். ஒரு பெண்ணை காலமெல்லாம் வைத்து காப்பாற்றுமத்தனை ஆண்மை ஆண்களில் இல்லை. அவனவன் கார்ப்போரேட் கல்வி நிலையத்துக்கு கட்டியும், வேலை வாங்க லஞ்சம் கொடுத்தும்,குடித்தும்,சூதாடியும்,கூத்தாடியும் இழந்த பணத்தை வரதட்சிணை வடிவில் வாங்கிவிடத்தான் துடிக்கிறான்.


ருசி கண்ட பூனை உறிக்கே தாவுவதை போல், ஒரு திருமணம்,ஒரு வரதட்சிணை போதாது மறுமணம், மறு வர தட்சிணைக்கு திட்டமிடுகிறான். பெண்ணுக்கு ஆர்காசம் தருமத்தனை ஆண்மை இல்லாத இந்த அலிப்பயல்களுக்கு வரதட்சிணை கொட்டிக் கொடுத்து,பெற்ற‌ ம‌க‌ளை க‌ட்டிக் கொடுக்கும் பெற்றோருக்கு அறிவில்லை. இதைவிட‌ ந‌ல்ல‌தொரு வைப‌ரேட்ட‌ர் வாங்கித் த‌ர‌லாம்.

என்னை கேட்டால் ஸ்கேன் மூல‌ம் பால் அறித‌ல்,பெண் சிசுக்கொலை மீதான‌ த‌டையை நீக்கி விட‌ வேண்டும். ச‌ப்ளை குறைந்தால் தான் டிமாண்ட் ஏற்ப‌டும். கையில் பிடித்து கொண்டு(ஜாதகத்தை) அலைந்தால்,ஓரின‌சேர்க்கையில் எயிட்ஸ் வாங்கினால்,பீட்ஸா,ஓட்ட‌ல் சோறு சாப்பிட்டு அல்ஸ‌ர்,பைல்ஸ் வாங்கினால் தான் இந்த‌ கேடுகெட்ட‌ ஆண்க‌ளுக்கு பெண்ணின் பெருமை தெரியும்.

வ‌ர‌த‌ட்சிணையை ஒழிக்க‌ முடியாது. வ‌ர‌த‌ட்சிணைக்கீடான‌ தொகை ஒன்றை வ‌ர‌த‌ட்சிணையுட‌ன் சேர்த்து ஆண்/பெண் பெய‌ரில் ஜாயிண்ட் அக்க‌வுண்டாக‌ போட‌ வேண்டும்.விவாக‌ர‌த்தின் போது அந்த‌ தொகை பெண் பெய‌ருக்கு மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.
என்னைக்கேட்டால் திரும‌ண‌ம் என்ப‌தே வெட்டிச்செல‌வு. எல்லாத்திரும‌ண‌மும் காவ‌ல் நிலைய‌த்திலேயே ந‌ட‌க்க‌ வேண்டும்.(காவ‌ல‌ர்க‌ள் சாந்தி முகூர்த்த‌த்தை ந‌ட‌த்திவிடாதிருப்பார்க‌ளாக‌ இதை த‌விர்க்க‌ எல்லா காவ‌ல் நிலைய‌த்துக்கும் ஒரு சி.சி.கேம‌ரா வைத்து 24 ம‌ணி நேர‌மும் டைர‌க்ட் ரிலே கொடுக்க‌லாம்)

POWER : One line for a Movey

மின்சாரம் இல்லாத மலைகிராமத்துக்கும், அந்த கிராமத்து இளைஞன் ஒருவனுக்கும் பவர் வரும்போது எப்படி கெட்டழிகிறார்கள் என்பது நாட்.

கதை சுருக்கம்:

ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தலைவர்(பிழைக்க தெரியாத). ஒரு கோவில். ஒரு அம்மன். அம்மன் கழுத்தில் ஒரு வைர மாலை.(அதற்கு லாஜிக்கலான கிளைக்கதை) சப்பாணி மாதிரியான ஒரு நாயகன், வெள்ளந்தியான நாயகி. ஒரு லட்சியவாதி ஆசிரியர்.

பவர் இல்லாத காரணத்தால் படிப்பில் பின் தங்குவதாக கருதி ஆசிரியர் பவர் கேட்டு அலைகிறார். இறுதியில் ஸோலார் பவர் பெற திட்டம். அதற்கு காசு வேண்டும்.


விஜயகாந்த் மாதிரி புதிதாக அரசியலுக்கு வந்த நடிகரை தானம் கேட்டு மானம் போகிறது. ஊர் தலைவர் சப்பாணியை சூப்பர் ஸ்டார் ஆக்குவதாக சபதம். அம்மன் கழுத்து வைரமாலையை அடகு வைத்து லோ பட்ஜெட் படம் தயாரிக்கிறார்கள்.

கிராமம்,சப்பாணி இருவருக்கும் பவர் கிடைக்கிறது.

அத‌ன் விளைவுக‌ள் எதிரிடையாக‌ இருக்கிற‌து.

கிராம‌த்து பெரிய‌வ‌ர் சோலார் ப‌வ‌ர் யூனிட்டை வெடி வைத்து த‌க‌ர்க்கிறார்..டைட்டில்ஸ்

சுஜாதா : உன்னைப்பற்றி எழுதாதே

Jaya padma visalakshi, jaya thwam sri pathi priye,
Jaya mathar maha Lakshmi, samasarnavarnava tharini.
Mahalakshmi namasthubhyam, namasthubhyam sureswari,
Hari priye namasthubhyam, namasthubhyam daya nidhe.



1967 ல் பிறந்தேன் இது 2007 . ஆக 40 வருடங்கள் மெட்டாஷ் ! 1973 ல் மஞ்சா ஸ்கூல் ( க்ரிட்லி கேல்) 1978 ல் பி.ஜட் (10 ஆம் வகுப்பு வரை) 1982 ல் 10 ஆம் வகுப்பு. 1984 வரை இண்டர் மீடியட். 1987 வரை பி.வி.கே.என். இந்த 20 வருடங்கள் பற்றி பெரிதாய் குறைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. ரெகுலர் லைஃபில் தான் இருந்ததாக சொல்ல முடியும். அங்கிருந்து 2007 ஏப்ரல் வரை நாயடி தான். இந்த 20 வருடங்களில் தான் அனுபவம் என்று ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும். இன்றைய என் எழுத்துக்களில் ஏதேனும் முதிர்ச்சி தெரிந்தால் அது இந்த 20 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சுஜாதா உன்னைப்பற்றி எழுதாதே என்று கூறுவது வழக்கம். இது அவர் மாதிரி வெள்ளை சாம்பார்களுக்கு பொருந்தும். அவரே சொல்வது மாதிரி சிறுகதைக்கு உயிர் நாடி முரண்பாடு. என் வாழ்க்கையின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் முரண்பாடு என்பது உறுதியாக தென்படும். இன்றைய தினத்தந்தி நிருபர் வேலை உட்பட. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பருவம் என்ற புத்தகத்தை (எட்டணா விலை) படித்திருக்கிறேன். செக்ஸுக்கு முயன்றிருக்கிறேன்.

வகுப்புத்தலைவன்,தமிழ் சங்கத்துணைத்தலைவன். பெட் ஸ்டூடண்ட் ஃபார் டீச்சர்ஸ். அதே நேரம் மாங்காய் அடிப்பது,நீவா நதியில் மீன் பிடிப்பது,சினிமா போடுவது,காத்தாடி நூலுக்கு மாஞ்சா போடுவது, பம்பரத்தில் பாப்பாரு(?), தலாரி, ஜவுரா பில்லை,சீன் பார்ப்பது,சைட் அடிப்பது, மிட்டூர் முக்கி ரெட்டி தோப்பில் நீச்ச‌ல் எதையும் விட்ட‌தில்லை. க‌டைசி பென்ச் ப‌ச‌ங்க‌ கூட‌ இடைய‌றாத‌ தொட‌ர்பு தொட‌ர்ந்து இருந்து வ‌ந்த‌து.

6,7, வ‌குப்பு ப‌டிக்கும்போது வாத்தியார்க‌ள் பெண் பிள்ளைக‌ளிட‌ம் செய்யும் சிலுமிஷ‌ங்க‌ளின் உண்மை உத்தேச‌ம் என‌க்கு தெரியும். ச‌காக்க‌ளை மோட்டிவேட் செய்து அணிதிர‌ட்டிய‌து நான். ஆனால் ச‌ந்தேக‌ ப‌ட்டிய‌லில் இருந்த‌வ‌ர்க‌ளை விசாரிக்கும் போது நான் த‌ப்பிவிட்டேன். இது தான் என் கேரக்டர்.(இரண்டாம் முறை பிடிப‌ட்டு ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி ப‌ட்ட‌ம் வாங்கிய‌து த‌னிக்க‌தை).5 ஆம் வகுப்பு முதலே எனக்கு செக்ஸில் நாட்டமிருந்தாலும் எனக்கே தெரியாது ஒருவித பெரிய மனிதத்தனம் என்னில் இருந்தது. நான் தர்மங்களை பின்பற்றாதிருந்திருக்கலாம். ஆனால் என் தர்மங்களை நான் கை விட்டதே இல்லை.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மாதிரி என் பால்யத்துக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தால் நோப‌ல் உறுதி. ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல‌ என்னிட‌மிருப்ப‌து இந்த‌ வ‌லைப்ப‌திவு ம‌ட்டுமே..

பார்ப்போம் மார்ச் , ஏப்ர‌லில் ந‌ம் கால‌த்து நாய‌க‌ன் என்ற‌ த‌லைப்பில் என்னைப்ப‌ற்றிய‌ ஒரு சிறு நூலை வெளியிட‌ உத்தேச‌ம். என் இல‌க்கிய‌ க‌ட‌மைக‌ளை விட‌ , நாடு குறித்த‌ க‌ட‌மை உண‌ர்வே என்னை பெரிதும் வ‌யப்ப‌டுத்துகிற‌து. அத‌ற்கு ப‌ய‌ன் ப‌டும் வ‌கையில், ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்டு போல் உப‌யோகிக்க‌ இந்த‌ நூலை ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்போகிறேன்.

என் வ‌லை த‌ள‌த்துக்கான‌ தொடுப்பை த‌ங்க‌ள் வ‌லைத‌ள‌த்தில் வைப்ப‌தாயிருந்தால் த‌ங்க‌ள் வ‌லை த‌ள‌த்துக்கான‌ தொடுப்பை என் வ‌லை த‌ள‌த்தில் வைக்க‌ ஆவ‌ல்

சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன்

Wednesday, December 26, 2007

கதை,திரைக்கதை,வசனம்,டைரக் ஷ‌ன் ,பாடல்கள்

இப்ப‌டி டைட்டிலில் பெய‌ர் வ‌ர‌வேண்டுமென்று க‌ன‌வு க‌ண்ட‌துண்டு. அந்த‌ க‌ன‌வு மெய்ப்ப‌டும் நாள் வெகு அருகில் உள்ள‌தாய் ஒரு உண‌ர்வு. இடையில் 1991 முத‌ல் நாளிது வ‌ரை அதை நனவாக்கிக் கொள்ளும் பொருளாதார‌ வ‌ச‌தி இல்லை. த‌ற்போது கார்ப்போரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் திரையுல‌கில் கால் ப‌தித்திருக்கும் நிலையில் என‌து திரைக்க‌தை சுருக்க‌ங்க‌ளை இந்த‌ வ‌லை த‌ள‌த்தில் வைக்க‌ நினைத்து 2 முறை ஷெட் ஆகிவிட்ட‌து.(முழுக்க‌ த‌ட்ட‌ச்சிய‌ பிற‌கு)

என‌வே மேலும் சுருக்(க‌மாக):

1.ஆண்பிள்ளை சிங்கம்:
இருவேடங்களில் ரஜினி. பெரியவர்(அப்பா) ஜொள்ளு பார்ட்டி. எஸ்டேட் அதிபர். வில்லி வலையில் சிக்கி உயிர் விடுகிறார். வில்லி மகன் ரஜினியை வளர்க்கிறார், வில்லனாக.

குறிப்பு: ராம்கியின் தொட்டில் சபதம் வெளிவருவதற்கு முன்பே எழுதப்பட்ட திரைக்கதை இது.


2.ந‌ண்ப‌ர்க‌ள்:


நான் கு ந‌ண்ப‌ர்க‌ள். ஒரே அறையில் வாச‌ம். மாத‌த்தின் 29 நாள் வெள்ளை சாம்பார்க‌ளாக‌ இருக்கும் இவ‌ர்க‌ள் ஒரு நாள் ம‌ட்டும் ஹீரோக்க‌ளாகிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அந்த‌ ஒரு நாளில் சென்னைக்கு வ‌ரும் கிராம‌த்தி நாய‌கியை காப்பாற்றி அறையில் வைத்துக் கொண்டு அவ‌ஸ்தை ப‌டுகிறார்க‌ள். நால்வ‌ரில் ஒருவ‌னால் திர‌ஸ்க‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் தான் ஹீரோயின். அதாவ‌து அப்பா பார்த்து ஓகே செய்திருப்பார். ஹீரோ போட்டேவைப் பார்த்து ரிஜெக்ட் செய்திருப்பார். இத‌னால் ஹீரோயின் அப்பாவுக்கு மார‌டைப்பு . ப‌ழி வாங்க‌ கி.ஹீரோயின் ப‌ட்டண‌ம் வ‌ந்து லொள்ளு ப‌ண்ணுகிறார்.
குறிப்பு: இது புதுவ‌ச‌ந்த‌ம் வ‌ருவ‌த‌ற்கு முன்பே எழுத‌ப்ப‌ட்ட‌ திரைக்க‌தை

Monday, December 24, 2007

மரம்

மரம் மாதிரி நிக்கறான் பாரு என்பார்கள். மரம் நிற்பதால் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மனிதனுக்கும்,சகல ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கிறது.உரம் கிடைக்கிறது. மனிதன் நிற்பதால் தான் இயற்கை தடுமாறுகிறது. குளோபல் வார்மிங் என் கிறார்கள். பனி உருகி சமுத்திரமட்டம் உயருமாம். சுனாமி வருமாம். ஜலபிரளயம் என்றால் இதுதானாம்.

தெலுங்கில் வம்சாவளியை (ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தம். தீபாவளி, தீபங்களின் வரிசை) வம்ச விருட்சம் என்பார்கள். என்.டி.ஆர் காங்கிரஸ் காரர்களை, மரத்தின் பெயர் சொல்லி காய்கள் விற்பவர்கள் என்று விமர்சித்தார்.

புத்த‌ருக்கு ஞான‌ம் த‌ந்த‌து ஒரு ம‌ர‌ம் தான். ஜோதிட‌த்தில் கூட‌ ஒவ்வொரு ந‌ட்ச‌த்திர‌த்துக்கும் ஒவ்வொரு ம‌ர‌ம் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. (அடிபாகத்தை கழுவி/நீர் ஊற்றி, ம‌ஞ்ச‌ள் பூசி/பூச்சி அரிக்காதிருக்கும், வ‌ல‌ம் வ‌ந்தால்/ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌ன் கிடைக்கும்,ந‌ல‌ம் விளையும் என்ப‌து ஆன்றோர் க‌ருத்து.

ஒவ்வொரு த‌ல‌த்துக்கும் ஒவ்வொரு ம‌ர‌ம் உண்டு. அந்த‌ த‌ல‌த்தில் அம்ம‌ர‌த்தை எவ‌ரும் வெட்ட‌ துணிய‌ மாட்டார்க‌ள்.

ஒவ்வொரு பொறுப்புள்ள‌ த‌க‌ப்ப‌னும் ம‌ர‌ம் மாதிரி. பிள்ளைக‌ள் த‌லையெடுத்து விழுது போல் தாங்க‌ வேண்டும். அநேக‌ பிள்ளைக‌ள் புல்லுருவியாக‌த் தான் வ‌ள‌ர்கிறார்க‌ள்.


இன்றைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் தாம் உட்கார்ந்திருக்கும் கிளையை (ம‌க்க‌ளை) வெட்டுகிறார்க‌ள்.

ஆலும்.வேலும் ப‌ல்லுக்குறுதி என்றார்க‌ள். ச‌மீப‌த்தில் புகையிலை க‌ரை ப‌டிந்த‌ என் ப‌ற்க‌ளை கிரானைட் க‌ல்லுக்கு பாலிஷ் போட்ட‌ தினுசில் ப‌ல் டாக்ட‌ர் சுர‌ண்டிய‌ போது இந்த‌ ப‌ழ‌ மொழி த‌மிழ் பாட்டில் ல‌ல்ல‌ல்லா மாதிரி கேட்டுக்கொண்டே இருந்த‌து.

ரிஷிக‌ள் ம‌ர‌த்தால் ஆன‌ கால‌ணியை அணிவார்க‌ள். கார‌ண‌ம் பூமி ஒரு காந்த‌ம். ம‌னித‌ உட‌லில் இரும்பு ச‌க்தி உண்டு. இதை அது க‌வ‌ராத‌ ப‌டிக்கு காப‌ந்து.

ம‌ர‌த்தாலான‌ உல‌க்கை,கொட்டாங்க‌ச்சியாலான‌ அக‌ப்பை இதையெல்லாம் யார் உப‌யோகிக்கிறார்க‌ள்.

தாவ‌ர‌ங்க‌ளுக்கு உயிர் உண்டு என்ப‌தை ஏற்கென‌வே ஜ‌க‌தீஷ் ச‌ந்திர‌ போஸ் நிரூபித்துவிட்டார். ஒரு ஆட்டை வெட்ட‌ அத‌ன் முன் க‌த்தி தீட்ட‌ப்ப‌டும்போது அத‌ன் ர‌த்த‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ளை யார் க‌ண்டா ?

இதே நிலை தாவ‌ர‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌டலாம் அல்லவா? அதிலும் காய்,க‌றிக‌ளை உலோக‌ பாத்திர‌ங்க‌ளில் போட்டு,உலோக‌ க‌ர‌ண்டியால் க‌ல‌க்கி விஷ‌மாக்கி தானே உண்கிறோம். உங்க‌ளில் யார் வீட்டிலாவ‌து ம‌ண் பாத்திர‌த்தில் ச‌மைப்ப‌துண்டா?( அடுத்த‌ மாத‌ம் 20 தேதிக்கு பிற‌கு நான் முய‌ற்சிக்க‌ போகிறேன்.

ரிக் ஷா தொழிலாளிகள் சார்பில்


சித்தூர்(டிச‌ம்ப‌ர் 24)சித்தூர் டவுன் மார்க்கெட் சவுக் பகுதியில் கை ரிக் ஷா தொழிலாளிகள் சார்பில் எம்.ஜி.ஆர் 20 ஆவது நினைவுநாள் அனுச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ழைய‌ இரும்பு வியாபாரி ஆர்.ராஜேந்திர‌ன் (அண்ணாச்சி),தலைமையில் ரிக்ஷா தொழிலாளிக‌ள் ஆர்.விஜயகுமார்,ஏழும‌லை,முருகேச‌ன்,முனுசாமி,சின்ன‌ப்பைய‌ன்,குமார்,ராஜா,நாக‌ராஜ்,மூர்த்தி,செல்வ‌ம் சின்னோடா ஆகியோர் அம‌ர‌ர் எம்.ஜி.ஆரின் ப‌ட‌த்துக்கு ம‌ல‌ர்மாலை அணிவித்து அஞ்ச‌லி செலுத்தின‌ர். ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் (இட‌து: ஆர்.விஜயகுமார், வ‌ல‌து: ஆர்.ராஜேந்திர‌ன்)

Sunday, December 23, 2007

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஐயா.. நான் பிராமணனல்ல. மூடநம்பிக்கையாளனுமல்ல. என்னை நம்பி வருபவர்களுக்கு ஜோதிடம் குறித்த என் ஆராய்ச்சியிலான இடைக்கால முடிவுகளை மட்டுமே தெரிவித்து வருகிறேன்.

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஜோதிடவியலில் ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அறிந்தால் ஜோதிடம் என்பது ஏய்த்து பிழைப்பவர்களுக்கானதே தவிர ,உழைத்து பிழைப்பவர்களுக்கல்ல என்பதை உணரலாம். என்னைப் பொருத்தவரை ஜோதிட விதிகளை வகுத்தளித்த நம் ரிஷிகள்,மகரிஷிகள் தாம் ஆதி கம்யூனிஸ்டுகள்.


ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்:


சுக்கிர அஸ்தமனத்தின் போது வீடு மாறுவது கூடாது என்பது விதி. இதற்கான விதிவிலக்கில் யுத்த பயம்,தொற்று நோய்கள் பரவும் காலம், பஞ்சம் பிழைக்க வீடு மாறும்போது சுக்கிர அஸ்தமனம் பற்றி கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தன்னலமற்ற லட்சியத்துடன் உழைப்பவர்கள் விஷயத்தில் கிரகங்கள் வேலை செய்யாது என்றும் ஒரு விதி உள்ளது. இதற்கு பார்வதி தேவி சாபம் காரணமாக கூறப்பட்டுள்ளது.

பத்து வட்டி வாங்குபவன் ராகு,எம, காலம் பார்த்தால் எத்தனையோ ஏழைகள் காப்பாற்றப்படுவார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் இதெல்லாம் பார்த்ததால் தான் இன்று சில கட்டிடங்களேனும் மிச்சம் உள்ளன. இல்லாவிட்டால் தமிழ்நாடே கபளீகரம் ஆகியிருக்கும்.

இருப்பவன் பஞ்சாங்கம் பார்த்தே வாழட்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. இல்லாதவன் ஆண்டுக்கு ஒரு முறை சேவை மனப்பான்மை உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்து பலனறிந்து அதற்கேற்ப செயல்பட்டாலே போதும். ஏழைக்கு ராகு,எம,காலங்கள் வேலை செய்யாது. இதை நிரூபிக்க நான் தயார்.


ச‌னி பிடித்த‌ போது பிற‌ரிட‌ம் வேலை செய்தும், ச‌னி விடுத‌லையான‌ போது சொந்த‌ வியாபார‌ம்,தொழில் செய்தும் வ‌ந்தாலே போதும் ஏழைக‌ள் ப‌ண‌க்கார‌ர்க‌ளாவ‌து உறுதி

விஞ்ஞானத்தை வளர்க்க போறேங்க !

கலைவாணர் தம் பாடலில் "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி' என்பார். தமிழ் நாட்டு பெண் மேயர்களிடம் (ப்ரவுஸர்ஸ்) உதை வாங்கும் தெம்பு இல்லாததால் பாட்டை மாற்றிவிட்டேன்.

விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சி தெருச்சாக்கடைகளிலெல்லாம் பாலும்,தேனும் ஓடவைக்கும் என்று சொல்ல‌ மாட்டேன். அது அலாவுதீன் பூத‌ம் போன்ற‌து. க‌ணிணி,செல் போன்ற‌ க‌ண்டுபிடிப்புக‌ளையெல்லாம் த‌ம் செக்ஸ் தின‌வை தீர்த்துக் கொள்ள‌வே பெரும்பாலோர் உப‌யோகிப்ப‌தை நான் ம‌றுக்க‌ மாட்டேன். அதே நேர‌ம் இத‌ற்கு ந‌ம் ம‌த‌,அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் கார‌ண‌ம். செக்ஸ் ப‌ற்றிய‌ த‌ம் த‌வ‌றான‌ க‌ருத்தை மாற்றிக்கொண்டு பாலிய‌ல் தொழிலாளிக‌ளுக்கு உரிய பயிற்சிக்கு பிறகு அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கி விட்டால் போதும், விஞ்ஞான‌த்துக்கும்/செக்ஸுக்கும் உள்ள‌ தொட‌ர்பு அறுந்து விடும்.

இன்றைக்கு உள்ள‌ விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சியில்,முக்கிய‌மாக‌ த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ புர‌ட்சியில் ராம‌ராஜ்ஜிய‌ம் என்ன‌ அந்த‌ ராம‌னும் வெட்கி த‌லை குனிய‌த்த‌க்க‌ ந‌ல்லாட்சியை வ‌ழ‌ங்க‌ முடியும்.

என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திவிட்டால் ஸ்தூல‌ பிர‌ச்சினைக‌ள் யாவும் ஒழிந்து நிர்வாக‌ சிக்க‌ல்க‌ள் ம‌ட்டுமே இருக்கும்.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ஒவ்வொரு வார்டு மெம்ப‌ருக்கும் க‌ணிணியை உப‌யோகிக்க‌ க‌ற்றுக்கொடுத்துவிட்டால் போதும் பிற‌கு எம்.பி,எம்.எல்.ஏ, க‌லெக்ட‌ர்,போன்ற‌ இர‌ண்ட‌டுக்கு,மூன்ற‌டுக்கு நிர்வாக‌ இய‌ந்திர‌மே தேவையில்லை. ஸ்விட்ஜ‌ர்லாந்து போல் நேரிடை ஜ‌ன‌நாய‌க‌த்தை வார்ட் அள‌வில் அம‌ல் ப‌டுத்தி விட‌லாம். காந்தி கூறிய‌ கிராம‌ ராஜ்ஜிய‌ம்,ராம‌ ராஜ்ஜிய‌ம் எல்லாமே சாத்திய‌மாகிவிடும். மாவ‌ட்ட‌ அள‌வில் உள்ள‌ நிதி,நீதி,நிர்வாக‌ இய‌ந்திர‌த்தை கிராம‌,வார்டு அள‌விலேயே ஏற்ப‌டுத்தி விட‌லாம். வார்டில் கொலை ந‌ட‌ந்த‌ 24 ம‌ணி நேர‌த்தில் தீர்ப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு கொலை செய்த‌வ‌ர் சிறைக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு விடுவார்.


தேர்த‌ல் சீர்திருத்த‌ம்:

நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் ஒரு ப்ரொஃபார்மாவை கொடுத்து அதை கிராம‌,வார்டு இய‌ந்திர‌ம் உத‌வியுட‌ன் நிர‌ப்பி ஆன்லைனில் அனுப்ப‌ச்சொல்லி,அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை ஒரு சூப்ப‌ர் க‌ணிணி உத‌வியுட‌ன் ச‌லித்தெடுத்து திட்ட‌ம் தீட்டினாலே போதும் ,அதை அம‌ல் ப‌டுத்தும் அதிகார‌த்தை ம‌ட்டும் கிராம‌,வார்டு நிர்வாக‌த்துக்கு த‌ர‌வேண்டும்.

தேர்த‌ல் என்ப‌து ஆன்லைன் மூல‌ம் 15 நாட்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும். 90 ச‌த‌வீத‌ம் வாக்குப்ப‌திவு ந‌ட‌க்கும் வ‌ரை முடிவு தெரிவிக்க‌ப்ப‌ட‌க்கூடாது. அவ‌ர‌ர் க‌ட்டை விர‌ல் ரேகையையே பாஸ் வோர்டாக்கி விட‌லாம்.



ஹ்ம்.. எத்த‌னையோ செய்ய‌லாம் ! ம‌ன‌மிருந்தால் மார்க‌ம் உண்டு. ம‌ன‌மில்லையே ஆள்வோருக்கு.

Thursday, December 20, 2007

ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும்

ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும் இருப்பதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மீண்டும் சுஜாதா குங்குமம் வார இதழில் ஜோதிடம் குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாளென்செயும் கோளென்செயும் என்று பழம் பாடலை குறிப்பிட்டுள்ளார். அந்த பழம் பாடலின் இறுதியில் ஒரு வரி வரும்: அதையும் சேர்த்து படிக்கும்போது:

குமரேசரிரு தாளும்,சிலம்பும்,சதங்கையும் நம் கண் முன் வந்து தோன்றிய பிறகு தான் நாள் என் செய்யும் , கோள் என் செய்யும் என்ற நிலை ஏற்படும் என்பது தெரிய வரும். இந்த 40 வயதுக்கே இந்த பாடலின் கடைசி வரியை சரியாக குறிப்பிட முடியவில்லை. குங்குமத்தை அரை,குறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை பார்க்கவே வாங்கி படிக்கும் டீன் ஏஜர்களுக்கு இந்த பாடலின் வாசனை கூட தெரியாதிருக்கலாம்.

சுஜாதா திட்டமிட்டே ஜோதிடம் குறித்து இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். ராமர் ஜாதகத்தில் குரு,சந்திர சேர்க்கை இருந்ததால் தான் வனவாசம் செய்தார், செவ்வாய் 7 ல் இருந்ததால் தான் சீதையை பிரிந்திருக்க வேண்டிவந்தது என்று கூறும் சனாதனர்களின் வழி வந்த சுஜாதா ஜோதிடத்தை பழிக்க ஒரே ஒரு காரணம் தான்:

பிராமணர்கள் தம் பஞ்சாங்கங்களை விட்டெறிந்தனர் , அநாதையாக்கிவிட்டனர்.தலைமை செயலகத்தில் ஆளப்போய் விட்டனர். சூத்திரர்கள் அவற்றை தத்தெடுத்து நாட்டுடைமை ஆக்கி விட்டனர். இந்த வயிற்றெரிச்சலில், குலாபிமானத்தில் தான் சுஜாதா ஜோதிடத்தை பழித்து வருகிறார்.

Wednesday, December 19, 2007

Logicla Remedies for the evil effects of 9 planets

Logicla Remedies for the evil effects of 9 planets

-Chittoor.s.Murugeshan
You might have already heard that “if u want to get some thing u have to give up some thing.” It is not at all a saying but also a scientific –logical fact . It is the basic for my logical remedies for the evil effects of the planets.

Do u agree with this? Are u ready to give up some thing and get some thing? Astrology gives you a clear picture to achieve your goal.

Roll of the God and 9 planets:
God is the prime minister and the 9 planets are the ministers. As a PM allots portfolio to the ministers the God had allotted portfolios to the planets.

Fruitful planets:
Think a minister is very close to you . What will happen? You can be benefited in the fields which come under the portfolio of the minister who is close to you. In the same way if a planet is in favorable condition at your horoscope there will a red carpet welcome at the fields which come under the portfolio of the concerned planet.

Neutral planets:
Now think that a minister is a distant relative to you. What will be the position? You can go with only one proposal, that too with a clean image. In the same way if a planet is in 50% favorable condition at your horoscope you can expect success in only one thing governed by particular planet. For this u may have to give up unnecessary matters and the fields which come under the portfolio of the concerned planet .

An example:
There is low voltage problem at your house. If u switch on all the electrical goods at home in a same time what will happened? Bulbs will give low light. Fans will give very little air. Refrigerator may give low chill. If you switch of all the goods except than one, you may get full result.

In the same way you can preplan the results to be given by the planets.

Is it applicable for all?
Sure. Except some exceptional horoscopes all the planets are not 100% harmful or 100% fruitful. If all the planets are 100% harmful u cannot expect good results even in a single filed even if you give up 99 fields that are governed by planets. But u can live a peaceful life without any fall downs.

Imagine that all the planets are 100% fruitful in your horoscope then u need not approach an astrologer for remedy.

If you reveal your problem, I will see which planet is creating the problem. I will tell you the portfolio of that planet. You have to go through it and give up which are not necessary to achieve your goal. Just u give-up. Concentrate on the things which are essential for your success. Then u will be free from the evil effect of that planet and your problem would be solved. Its dam sure.

Saturday, December 15, 2007

த‌ம்மையே க‌டித்து தின்னும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ பின் என் செய்வேன்?

அம்மா அச்சம் பிறக்கிறதடி நெஞ்சில்
மனதில் மிச்சமிருக்கும் மனிதமும்
ஆவியாகிவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறதடி நெஞ்சில்
எய்த‌வ‌னிருக்க‌ அம்பை நோவ‌து போல்
இவ‌ர் வ‌றுமைக்கு கார‌ண‌ம் எங்கோ இருக்க‌

ஒருவ‌ரையொருவ‌ர் தின்னும் இவ‌ர்க‌ளை க‌ண்டால்
அச்ச‌ம் பிற‌க்கிற‌த‌டி நெஞ்சில்

நான் க‌விஞ‌ன் ..என்னிட‌மிருப்ப‌தெல்லாம்
செத்த‌வ‌ரை உயிர்ப்பிக்கும் அமுத‌ வ‌ரிக‌ள்
நான் க‌விஞ‌ன் என்னிட‌மிருக்குது
ம‌னித‌ மிருக‌ங்க‌ளை க‌வி பாடியே அழிக்கும்
க‌ல‌ம்ப‌க‌ம்

என் செய்வேன்? இவ‌ர்க‌ள் ஆட்டைக் க‌டித்து,மாட்டை க‌டித்து ,ம‌னித‌ரை க‌டித்து த‌ற்போது த‌ம்மையே க‌டித்து தின்னும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ பின் என் செய்வேன்?

நான் செய்த‌ பாவ‌மெல்லாம் இர‌ண்டே !

பாரத தேசத்திலிருந்து ப‌சியை விர‌ட்ட‌ முனைந்தேன்
சுர‌ண்டலுக்கு சுறுக்கிட‌ முய‌ன்றேன்..அவ்வள‌வே!

பெரிய‌ சூதாட்ட‌மே ஆடிவிட்டேன்.
இதில் பசி என்னை உண்ணட்டும் என்று
என் உண‌வை ம‌ட்டும‌ல்ல
மண் உண்ணட்டும் என்று என்னையே ப‌ண‌ய‌ம் வைத்தேன்.

வெற்றி தான் கிட்ட‌வில்லை.
வ‌ட‌க்கில் வெள்ளம், தெற்கில் வ‌ற‌ட்சி
ந‌திக‌ளை இணைப்போம் என்றால்,
அந்த திட்டத்தை சிக‌ப்பு நாடா சுருக்கிட்டே கொன்று போடுவார்க‌ள்.

10 கோடி வேலைய‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் அமைத்திட‌ க‌ன‌வு க‌ண்டேன்.

என் க‌ன‌வுக்கு 20 வ‌ருட‌ உழைப்பை உண‌வாக‌ த‌ந்தேன். அத‌ன் ப‌காசுர‌ ப‌சி தீர்வ‌தாயில்லை.

ஆட்சி முறை மாறினால் வ‌ழி பிற‌க்கும் என்று அதிப‌ர் முறை தேர்த‌லுக்கு குர‌ல் கொடுத்தேன்.

என் தொண்டை வ‌ற‌ண்ட‌து.
அதை ந‌னைக்க‌ த‌ண்ணீர் கிடைக்க‌வில்லை. ஒரு ரூபாய் செல‌வ‌ழித்து மின‌ர‌ல் வாட்ட‌ர் வாங்குவ‌தை விட‌ யாரேனும் இர‌ண்டு த‌லைவ‌ர்க‌ளுக்கு 9999 ஆவ‌து முறையாக‌ இர‌ண்டு த‌பால் கார்டாவ‌து எழுத‌லாமே என்று தாக‌த்தை த‌ள்ளிப்போட்டேன்.

வீட்டு உரிமையாள‌ர்க‌ளின் உரிமையில்(?) த‌லையிடும் துணிச்ச‌ல் இல்லாத‌தால்
ந‌ள்ளிர‌வுக‌ளில் நாட்டுத்த‌லைவ‌ர்க‌ளுக்கு தாக்கீதுக‌ள் த‌யாரிக்க‌ என்னைப்போன்றே தானுருகி, ஒளிபெருக்கும் மெழுகுவ‌ர்த்திக‌ளை உப‌யோகித்தேன்.

இந்த‌ உழைப்பு த‌ந்த‌ நிறைவில் என் பிழைப்பையும் ம‌றந்தேன்.

நாட்டின் த‌லையெழுத்தை மாற்றும் உத்வேக‌த்தில் என் த‌லையெழுத்தின் த‌ர‌த்தை த‌ர‌ம் கெட்ட‌வ‌ரும் த‌ட்டித் த‌ர‌ம் பார்க்கும் நிலைக்கு வ‌ந்துவிட்டேன்.

என் ல‌ட்சிய‌த்தை அல‌ட்சிய‌ம் செய்த‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி என்றுமே நான் அல‌ட்டிக்கொள்ள‌வில்லை

கேவ‌ல‌ம் சுய‌ ந‌ல‌த்துட‌ன் முழு முட்டாள்க‌ள் தொட‌ர்ந்து வென்றாலும்
மாசு ம‌ருவ‌ற்ற‌ என் பொது ந‌ல‌த்துட‌ன் முப்போதும் நான் தோற்றாலும்
க‌வ‌லையுற வில்லை.

உழுத‌வ‌னுக்கு உழ‌க்கும் மிஞ்சாத‌ நிலை மாற்ற‌ கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌த்துக்கு வாதாடினேன்.
க‌ருப்புப்ப‌ண‌த்தை க‌ருவ‌றுக்க‌ புதிய‌ க‌ர‌ன்சி அறிமுக‌ம் என்றேன்.

வ‌ழுக்கை த‌லைய‌ர்க‌ள், த‌ம் சோடா புட்டி க‌ண்ணாடிக‌ள் வ‌ழியாக‌ என் திட்ட‌த்தை பார்த்து ஓட்டைக‌ளை தேடுவார்க‌ள் என்று தெரியும். அத‌ற்காக‌வே பொருளாதார‌ த‌த்துவ‌ங்க‌ளை புர‌ட்டினேன்.

என‌க்கு க‌லைம‌க‌ள் அருள் இருந்த‌தே த‌விர‌, அலைம‌க‌ள் அன்றும், இன்றும் ம‌ருள் த‌விர‌ வேறேதும் த‌ந்த‌தில்லை, பார‌திக்கு ச‌க்தியை த‌ந்த‌ அதே ச‌க்தி கொடுத்த‌ ச‌க்தியில் பார‌த‌ பாராளும‌ன்ற‌த்தின் க‌த‌வுக‌ளை ப‌ல‌மாக‌வே த‌ட்டினேன்.

ஆந்திர‌ முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ குப்பை கூடைக‌ளுக்கு தெரியும், என் திட்ட‌ம் ப‌ற்றி நான் எழுதிய‌ நினைவூட்டு க‌டித‌ங்க‌ளின் எண்ணிக்கை.

மேற்ப‌டி நினைவூட்டு க‌டித‌ங்க‌ள் எழுதிய‌ நேர‌த்தில் ஸ்ரீராம‌ஜெய‌ம் எழுதியிருந்தால் ராம‌ன் என்னிட‌ம் கொத்த‌டிமையாக‌ இருந்திருப்பான்.

ச‌ரி பார‌த‌த்தின் வ‌றுமை நிலை க‌ண்டு என் நெஞ்சு வேத‌னையில் வேக‌ வேண்டும், வெந்து சாக‌ வேண்டும் என்ப‌து விதியானால் டோன்ட் கேர் ..

Thursday, December 13, 2007

கலைஞரை விமர்சித்து குங்குமத்தில் ஒரு ஜோக்

கலைஞரை விமர்சித்து குங்குமத்தில் ஒரு ஜோக் வெளிவந்துள்ளது. தலைவர் ஏன் ரத்தவங்கிக்கு போறார்? _ இது கேள்வி.

"கட்சிக்கு புதிய இளரத்தம் வேண்டுமாம்" _ இது பதில்.

கலைஞர் கட்சிக்கு இளைஞர்களை வரவேற்று தொடர்ந்து உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதி வருவது தெரிந்ததே !

இந்நிலையில் இந்த ஜோக் வெளிவந்துள்ளது நிச்சயம் உள் நோக்கத்த்தோடு வெளிவந்திருப்பதாகவே கூறலாம்.

"வளர்த்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா போன ஜென்ம பாவமடி அம்மாளு" என்ற பாட்டு வரிதான் நினைவுக்கு வருகிறது.

யாரையெல்லாம் கலைஞர் வளர்த்து விடுகிறாரோ அவர்களெல்லாம் கலைஞரின் முதுகில் குத்துவது அவர் ஜாதக ராசி போலும்.

கலைஞர் இனியாவது நன்றி கெட்ட குடும்ப உறவுகளை விட்டு, முதுகில் குத்தும் அரசியலை விட்டுத்தொலைத்து தன் வாழ்வை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை முடிக்க அர்ப்பணிக்க வேண்டும் .

லிவிங் டு கெதர்

லிவிங் டு கெதர் பற்றி பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்யுமத்தனை சிகரத்துக்கு தமிழர்கள் உயர்ந்துள்ளது மனதை குளிர வைக்கிறது. இருந்தாலும் ஏதோ ஒரு சமயம் ஒரு பெண் எழுத்தாளர் குறிப்பிட்டதை போல நிர்வாணத்தை மறைக்காது முகத்தை மறைத்து என்ன பயன். எனவே தான் இந்த விஷயம் பற்றிய என் கருத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன்.


உடன் உறைதலில் ஆணுக்கு பொறுப்பு குறைகிறது.பெண்ணுக்கு ரிஸ்க் அதிகரிக்கரிக்கிறது அவ்வளவே..அதே சமயம் அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிறது.

பெற்றோர் இருந்தே குழந்தைகளின் பாதுகாப்பு கேலிக்கூத்தாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது.



இன்றுள்ள‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ம்,த‌னியார் ம‌ய‌மாக்க‌ம்,நுக‌ர்வோர் க‌லாச்சார‌த்தில் பெற்ற‌ குழ‌ந்தையை ப‌ந்த‌ய‌க் குதிரையாக்கி அதிலும் காசு பார்க்கும் த‌ன்மை பெற்றோரில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து.

என் வ‌ய‌து 40 தான். நான் 10 ஆம் வ‌குப்பு ப‌டித்த‌ கால‌த்தில் என‌க்கு 70 பெர்செண்ட். நான் ஸ்கூல் செக‌ண்ட். என்னைவிட‌ ஒன்றோ இர‌ண்டோ ச‌த‌வீத‌ம் அதிக‌ம் பெற்ற‌ தியாக‌ராஜ‌ன் ஸ்கூல் ஃப‌ர்ஸ்ட். இன்று 100 பெர்சென்ட் பார்ட்டியே ஸ்கூலுக்கு ரெண்டோ,மூன்றோ உள்ள‌ நிலை இருக்கிற‌து.

என் அப்பா ட்ர‌ஷ‌ரீஸ் அண்ட் அக்க‌வுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் அட‌க்க‌டி மாற்ற‌ல் ஆகிய‌வாறே இருப்பார். ஒவ்வொரு வ‌ருட‌ம் சொந்த‌ ஊர் வ‌ரும்போதும் ப‌க்க‌த்து வீட்டு பைய‌னை கேட்ப‌து போல் த‌ம்பி! இப்ப‌ எத்தனாம் க்ளாஸ் ப‌டிக்கிறே என்றுதான் கேட்பார்.

இப்போது ப்ரிகேஜி ப‌டிக்கும் குழ‌ந்தை ச‌ரியாக‌ ப‌டிக்க‌வில்லை என்று தாய்மார்க‌ள் ஜோதிட‌ம் கேட்க‌ வ‌ந்துவிடுகிறார்க‌ள்

இந்த‌ நிலையில் தாலி,திரும‌ண‌ம் இல்லாது உட‌னுறையும் பெற்றோர் பிரிந்துவிட்டால் ,பிரிந்த‌வ‌ர்க‌ள் ம‌றும‌ண‌ம் செய்து கொண்டுவிட்டால் அந்த‌ குழ‌ந்தைக‌ளின் க‌தி அதோ க‌திதான்.

தாலி க‌ட்டி க‌ல்யாண‌த்தில் ம‌ட்டும் என்ன‌ வாழுது என்று நீங்க‌ள் கேட்டு விட‌க்கூடாது என்று இத்த‌னை சொன்னேனே த‌விர‌ வேலி என்ப‌தே "தாவு !" என்று ம‌றைமுக‌மாய் தூண்டுவ‌து தான். தாலி ,உண்மையிலேயே வேலியாக‌ இருப்ப‌தானால் தின‌த்த‌ந்தியில் க‌ள்ள‌க்காத‌ல் எதிரொலிக‌ள் கேட்காத‌ல்ல‌வா?

Tuesday, December 11, 2007

கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும்.


இந்த சமூக,அரசியல்,பொருளாதார அமைப்பில் கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும். இந்த கேடு கெட்ட அமைப்பில் மாட்டிக்கொண்டு யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் பலியாகிக்கொண்டிருக்கிறேன்.

என் தவறு ஒன்றே இந்த அமைப்பின் ஓட்டைகள் தெரிந்த பிறகு இதை சுரண்டியே லக்ஸரியாக வாழும் அறிவுத்திறனிருந்தும் இதை மாற்றி ராம ராஜ்ஜியத்தை மீண்டும் ஸ்தாபிக்க தவிப்பது தான். அதுவும் நானே ப்ரெட் ஹன்டராக இருந்து கொண்டு இந்த முயற்சியை தொடர்கிறேனே இது தான் என் தலையாய தவறு.

தெய்வங்களுக்கு அச்சம் எங்கே இவன் தமது பிரளய கால அஜெண்டாவை நிறைவேறாது செய்துவிடுவானோ என்று.

எனக்கு யாரும் துணையில்லை, தருமம் காத்தால் அது என்னை காக்கும். தருமம் என்னை காத்தால் நான் நாட்டை காக்கலாமே என்றுதான் தருமத்தை காத்து வருகிறேன்.

தெய்வங்களின் இருப்பை உணர்கிறேன். தருமத்தை காத்திருந்த காரணத்தால்
தெய்வங்கள் எனக்கு எனக்கு எல்லையில்லாத ஞானத்தையும், அதிகாரத்தையும் கொடுத்திருந்தாலும் அதனால் என் லட்சியம் நிறைவேறாது என்பது எனக்கு புரிந்துவிட்ட‌து.

என் லட்சியம் நிறைவேற பணம் தேவை. அதையும் என் சங்கல்ப பலத்தால், தெய்வங்களை நச்சரித்து பெற்று விட்டேன். இருந்தும் பொறுப்பற்ற மனைவி,மகளால் அந்த பணம் வீணாகி எனக்குள் குற்ற மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

வெறுமனே தெய்வம் என் பக்கம் என்ற பிரமையில், கையில் காலணா இல்லாது ஒரு மாநில முதல்வரையே எதிர்த்து போராடிய நான், இன்று மாதம் ரூ.6,000 சம்பளம் வாங்கியும், ஆஸ்ட்ரோ கன்ஸல்டன்ஸியில் சில ஆயிரம் சம்பாதித்தும் என் லட்சிய போராட்டத்தை தொடரமுடியாது தவிக்கிறேன்.

எனக்கு புரிகிறது. இறைவனுக்கு என்னை கண்டு பொறாமை. இவன் எங்கே மக்களுக்கு கவுரவமான வேலை, உணவு,உடை,இருப்பிடம், உயிர் பாதுகாப்பு தந்து தன் பிராபல்யத்தை குறைத்துவிடுவானோ என்று அச்சம்.

மேலும் என் வாழ்வில் நான் நினைத்த‌தெல்லாம் ந‌ட‌ந்து வ‌ருகிற‌து. அது ந‌ட‌க்கும்போதுதான் அது புதிய‌ ந‌ர‌க‌மாகிவிடுகிற‌து. இந்த‌ ர‌க‌சிய‌ம் என‌க்கே தெரிந்திருக்கும் போது, இறைவ‌னுக்கு தெரியாதா என்ன‌? அத‌னால் தான் என் மேலான‌ க‌ருணையால் தான் இறைவ‌ன் என் ல‌ட்சிய‌ப்போரை முட‌க்கி வைத்திருக்கிறான்.

இருந்தாலும் என்ன‌ முட‌க்குவ‌து அவ‌ன் வேலை. தொட‌ர்ந்து முய‌ல்வ‌து என் வேலை.

Note: The photograph in this post is of my friend or a foe Mr.K.karthikeyan. He is running a lending library in chittoor.

For the many years he is conducting essay, and drawing comoetitions to the students in chittoor town.

In this year last sunday there was a prize distribution programme in a private chowltry in chittoor.

I had extracted his photo from a phorograph shot in the above occassion. He is allergetic of focusing. But for my psycological satisfaction I am to display his photo in this post.

Monday, December 10, 2007

மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை

மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை
ஆம். ஆனந்த விகடனில் குஜராத் தேர்தல்கள் பற்றிய கட்டுரையில் ஆ.வி. பார்ப்பணீயத்துக்கே உரிய நாசூக்குடன், சொல்லாமலே சொல்லும் வகையில் தன் தணியாத ஆசையை தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடியோ அவர் கட்சியினரோ கூட தயாரிக்க முடியாத அளவில், ஏறக்குறைய துண்டு பிரசுர ரேஞ்சுக்கு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மோடி இந்த முறை ஜெயித்து விட்டால் பாஜக அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட அறிவிக்கப்பட்டுவிடுவார் என்று அச்சம்( ஆசை) தெரிவித்துள்ளது.மோடியின் ஆட்சியில் நடந்த வளர்ச்சிப் பணிகளை கர்ம சிரத்தையுடன் பட்டியலிட்டிருக்கிறது. வளர்ச்சி பணிகள்தாம் முக்கியம் என்று முடிவெடுத்து விட்டால்...

கேவலம் பார்ப்பணர்களை மட்டும் வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்து தேவாலயங்களில் தூசு படிந்து கொண்டிருக்கும் தங்கத்தை அமெரிக்கா காலடியில் கொட்டி விற்றாலும் வளர்ச்சி பணிகள் நடக்கும் தான்.
விற்றுவிட‌லாமா த‌ங்க‌த்தை?


இந்திய‌ நாட்டு ச‌கோதிரிக‌ளின் அழகுக்கு அகில‌மே அடிப‌ணியும் தான். அவ‌ர்க‌ளை விற்றால் கூட‌ வ‌ள‌ர்ச்சி ப‌ணிக‌ள் ந‌ட‌க்கும் தான்..
விற்றுவிட‌லாமா ச‌கோதிரிக‌ளை?

என்ன‌டா இது த‌ங்க‌த்த‌மிழ்நாட்டில் த‌மிழுக்கு வ‌ந்த‌ சோத‌னை?

ஒரு மாநிலத்தின் வ‌ள‌ர்ச்சி,முன்னேற்ற‌ம் எல்லாம் விக‌ட‌ன் க்ரூப் ப‌த்திரிக்கைக‌ளின் ச‌ர்க்குலேஷ‌னா ? பாரத தேசத்து,த‌மிழ‌க‌த்து,ச‌கோதிரிக‌ளை நிர்வாண‌மாக‌வோ, அரை குறையாக‌வோ அச்சிட்டாலும் போதுமான‌து. ச‌ர்க்குலேஷ‌ன் எகிறும்.

ஒவ்வொரு முஸ்லீமும் இந்த‌ நாட்டின் பிர‌ஜை, முஸ்லீம் சகோதரனின் ர‌த்தத்தில் தோய்ந்த அபிவிருத்தியை அனுபவிப்பதை விட க‌ட்டை வ‌ண்டியில் ப‌ய‌ணிப்ப‌து மேல். அபிவிருத்திக்காக‌ என் ச‌கோத‌ர‌னை, ச‌கோதிரியை விட்டுக் கொடுப்ப‌து க‌டைந்தெடுத்த‌ க‌ய‌வாளித்த‌ன‌ம்

Saturday, December 8, 2007

பொறுத்திருக்கச் சொல்லும் சிரஞ்சீவி /அரசியல் குதிப்பு விவகாரம்


இன்று சிரஞ்சீவி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி தம்மிடமிருந்து அடுத்த அறிக்கை வெளியாகும் வரை, ரசிகர்களை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அமாவாசைக்காக காத்திருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை. பிரதமை கழித்து நல்ல நாள் பார்த்து அடுத்த அறிக்கை வெளிவரும் போலுள்ளது. என்னங்கடா இது..

வர்ர பார்ட்டியெல்லாம் நாட்டையும்,மாநிலத்தையும் ஆள நினைப்பதில் தவறில்லை. இதில் பார்ப்பனர்,ஜோதிடர்கள் சொற்படி நடந்து கொள்வதுதான் கவலை அளிக்கிறது.

நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்ற வகையில் கூறுவது என்னவென்றால் அமாவாசையில் சிரஞ்சீவி அறிக்கை வெளிவந்தால் ஒர்க் அவுட் ஆகும். எஸ்.வி.சேகர் அறிக்கை எந்த நாளில் வெளி வந்தாலும் அதன் கதி அதோ கதிதான். வாஸ்து,வாஸ்து என்று அரற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று ஏன் இந்த கதியில் இருக்கிறது?

அமாவாசை என்றால் என்னவோ ஏதோ என்னும் பிரமைகள் உள்ளன. எனவே அமாவாசை குறித்து சில வரிகள்:
இன்று அமாவாசை. அதாவது சூரிய ,சந்திரர்கள் ஒரே ராசியில்,ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். சூரியன் ஆத்ம காரகன்,சந்திரன் மனோகாரகன். சூரியன் அறிவை தருபவன், சந்திரன் உணர்ச்சியை ஊட்டுபவன். சாதாரணமாக மனம் ஒரு பாதை, ஆத்மா ஒரு பாதையில் போகும். அறிவு சொல்வதை உணர்ச்சி ஏற்காது. உணர்ச்சி செல்லும் பாதையை அறிவு ஒப்பாது. மொத்தத்தில் அமாவாசை என்றால் நல்ல கான்ஸன்ட்ரேஷன் ஏற்படும் அவ்வளவே.

இதில் அவரவர் ராசிக்கு சூரிய ,சந்திரர்கள் எந்த பாவத்துக்கு ஆதிபத்யம் வகிக்கிறார்கள், எங்கே சேர்கிறார்கள் என்பதை பொருத்து பலன் வேறுபடும். உதாரணமாக, சிம்மத்துக்கு சூரியன் ராசியாதிபதி,சந்திரன் விரயாதிபதி. இதனால் அமாவாசை என்பது சிம்மத்துக்கு விரயத்தை தரவே வாய்ப்பு அதிகம்.


இன்றைய அமாவாசை சூரிய சந்திரர்கள் விருச்சிகத்தில் சேர்கின்றனர். விருச்சிகம் இவர்களுக்கு 4,9 க்கு அதிபதியான செவ்வாயின் வீடு. செவ்வாய் இப்போது 11 ல் உள்ளார். இது ப்ளஸ் பாயிண்ட். 2,11 க்கு அதிபதியான புதனும் இங்கு சூரிய,சந்திரரோடு சேர்கிறார். இதுவும் ப்ளஸ் பாயிண்ட் தான். ஆனால் விரயாதிபத்யம் உள்ள சந்திரன் சேர்வதால் தன நஷ்டம்,வாக்கு தவறுதல்,வீண்செலவு,வீடு,தாய் விஷயத்தில் மனக்கஷ்டம் இத்யாதியும் ஏற்படலாம்.

நானே இறைவன்

நானே இறைவன் என்ற எண்ணம் அவ்வப்போது என்னில் தோன்றுவதுண்டு. எல்லோருக்கும் இப்படியேவா என்பது தெரியாது. "யத்பாவம் தத் பவதி" என்றால்.நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது இதன் பொருள். நான் 1986 ஜனவரி முதல் அனுமனையே நினைத்து,அவருக்கு பிடிக்கும் என்பதால் ராம நாமம் ஜெபித்து வருகிறேன். 1997 ல் என் கான்ஷியஸ் பரிசுத்தமாக இருந்ததாலோ என்னமோ பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்தன. 2003 ல் தான் ஜஸ்ட் இர்ரிடேஷன் காரணமாய் அஹிம்சையை கைவிட்டு ஹிம்ஸைக்கு தாவினேன். கெட்டது செய்தவனுக்கும் நல்லதே செய்வது என்ற நிலையை ஒரே ஒரு தடவை என்று விட்டொழித்தது என் கான்ஷியஸை மலினப்படுத்தி விட்டது உண்மைதான். என்றாலும் என் வாழ்வில் அற்புதங்களுக்கு பஞ்சமில்லை.

முந்தா நாள் கூட இலவச தங்குமிடம் கொடுத்து, பஜ்ஜி கடை போட, ஷ்யூரிட்டி ஏற்பாடு செய்து லோன் வாங்கித் தந்த முத்து சற்றே என்னை,என் ஈகோவை உரசிப்பார்த்த பாவத்துக்கு கை வெந்து போனது.

நேற்று ஒரு ஆசாமி சாமியெல்லாம் பணம் படைத்தவர்களுக்குத்தான் அது இது என்று ப்ளேடு போட நான் என் அனுபவத்தை, தெய்வீக சக்தி செயல்படும் விதத்தை, மனிதனுக்கும்,தெய்வத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்து விட்டேன். அவர் நக்கலாகவே ரெஸ்பாண்ட் ஆகிக் கொண்டிருந்தார். மறு நாளே சைக்கிளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே வரும்போது சர்ச் தெருவில் எதிர்பட்டார்.

இதையெல்லாம் சொல்வது நான் இறைவன் என்றோ,இறைவனுக்கு ஏஜெண்ட் என்றோ நிரூபிக்க அல்ல. இறைவனை நான் புரிந்து கொண்டதை அறிவிக்கும் நாள் இன்னும் வரவில்லை. தற்போதும் ஒரு குண்ட்ஸாக தான் புரிகிறது. திடீர் என்று என் கண்டுபிடிப்புகள் யாவுமே வாயை பிளந்துவிடுவதையும் காண முடிகிறது. எது எப்படியிருந்தாலும் தெய்வீக சக்தியின் இருப்பை என்னால் அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அது தூய ஆன்மாக்களின் சக்தியா அல்லது கடைசிவரை முட்டாள் தனமான் முருக பக்தராகவே வாழ்ந்து செத்த என் அப்பாவின் ஆன்ம சக்தியா புரியவில்லை. இருந்தாலும் ஒரு சக்தி யிருக்கிறது. அது என்னை காக்கவே விரும்புகிறது. நான் மக்களிடமிருப்பதாய் பட்டியலிடும் அருட்தடைகள் என்னிலும் இருப்பதால் முழுக்க காக்க முடியாது தவிக்கிறது. அதே நேரத்தில் இறைவ‌னின் அருளை நான் பூர‌ண‌மாக‌ பெறுவ‌தை சில‌ ச‌க்திக‌ள் த‌டுப்ப‌தையும் உண‌ர‌முடிகிற‌து.


என் ச‌க்தி உத‌வாக்க‌ரை விஷ‌ய‌ங்க‌ளில் செல‌வாவ‌தையும் உண‌ர‌ முடிகிற‌து. இனியேனும் ஒரு விதி செய்ய‌வேண்டும் அருட்த‌டை ச‌க்திக‌ளை முறிய‌டித்து இறைவ‌ன் திருவ‌ருளை முழுமையாக‌ பெற‌வேண்டும். நான் இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌ம் ஏற்ப‌டும‌த்த‌னை உற‌வு என‌க்கும்/இறைவ‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டு விட்ட‌ பிற‌கு கூட‌ அருட்த‌டைக‌ளை தொட‌ர‌ விடுவ‌து வ‌டிக‌ட்டிய‌ முட்டாள் த‌ன‌ம்.

Friday, December 7, 2007

சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார்?

சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆந்திரஜோதி தெலுங்கு நாளிதழ் சில தினங்களாய் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இத்தனைக்கும் சிரஞ்சீவி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.அவர் மகள் காதல் கடி மணம் புரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்தே அவர் வெளி வராத நிலையில் வெறும் வாய்க்கு அவல் கொடுத்து வருகிறது ஆந்திர ஜோதி. என்.டி.ஆருக்கும் சிரஞ்சீவிக்கும் பெங்களூருக்கும்/புங்கனூருக்கும் உள்ள அத்தனை வித்யாசமிருக்கிறது. என்.டி.ஆர் காலத்தில் காங்கிர‌ஸின் டெல்லி தலைமையால் முதல்வர்கள் பந்தாடப்பட்டார்கள். என்.டி.ஆர் தரித்த வேடங்கள்,அவரது கள்ளம்,கபடற்ற குழந்தை மனம்,ஆவேசம் நிறைந்த‌ பேச்சு , மக்களை கவர்ந்தது. திரையுலக வாழ்க்கையிலும் அவருக்கென்று ஒரு சரித்திரம் இருந்தது. அவர் அரசியலில் குதித்தபோது ஈநாடு பத்திரிக்கை மோனோபலியாக இருந்தது. அது ஜாதி அபிமானத்தில் கொடுத்த விளம்பரம் ஓரளவு என்.டி.ஆர் வெற்றிக்கு உதவியது.


சிரஞ்சீவி கதையே வேறு. விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் தவிர அவர் படங்கள் எல்லாமே டீன் ஏஜர்களை குறிவைத்து எடுக்க பட்டவையே. இப்போதைய டீனேஜர்கள் அவரை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 20 வருடங்களுக்கு முன்பு அவரை தம் ஆதர்ஸ புருஷனாக வரித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வாழ்வின் அர்த்த‌ம‌ற்ற‌ த‌ன்மையை புரிந்து கொண்டுவிட்ட‌ முக்கால் கிழ‌ங்க‌ளாகி விட்டார்க‌ள். நான் உட்ப‌ட. ஆனால் ஆந்திர ஜோதி சிரஞ்சீவி அரசியலில் குதித்து முதல்வராகவே வந்துவிட்டது போல் ஏக‌ பில்ட‌ப் கொடுத்துவ‌ருகிற‌து.

இந்த‌ நேர‌த்தில் நாம் யோசித்தே ஆக‌வேண்டிய‌ அம்ச‌ம்

நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்பதே.

பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?

Wednesday, December 5, 2007

Threateningcall from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad)

Threateningcall from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad)

To day I was to receive a threatening call from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad ). You may be surprised to know this.

What is the cause for this threatening call?:

I am a writer, thinker. I was proposing an alternative economical and political set up. It is action plan consisting mainly 5 points given below. I named it as Operation India 2000. I had also enclosed Economy package to generate funds for implementing my plan. By this all the center and state governments in India can minimize their admn. Expenditure by 50%. Along with the operation India 2000 and economy package I had sent a spl package for APSRTC and also Endownment boards in India .

From 1997 November I was proposing this to Mr.Nara chandrababu Naidu. But there was no response. Not only as a CM but also an opposition leader he was not interested in my proposal . Yet his deputy Secretary had wrote me a letter quoting the CM, promised for the appropriate usage of my plan.

For What?:
In the year 2002 April 22nd I had send a MO for Rs.10 requested the CM’s office to take it as a service charge and respond on my plan. The MO was delivered. Still there was no response. As it has become paid service I had complained to the District Consumer’s Forum in Chittoor. This was flashed in News Magazines . So that just to divert the media the DS to CM had wrote a letter.

Letter to NTR Bhavan:
I hadn’t given up my mission. In the mean time I had became a reporter for Andhraprabha/A Telugu Daily. Now working as reporter for Daily thanthi. In the last month I was to attend the press meet by Mr.Narachandrababu. I had planned to give a representation by hand to him. Unfortunately it was not possible. So that I had send it by couriers. As there was no response for the last 10 years , I had admitted that the dust bins at NTR Bhavan are hungry and eating papers.

Threatening:
In this occasion I was to receive a threatening call from NTR Bhavan. A person called me to my cell (bearing Number: 9397036815) from a land number 040-23542108. He had threatened me to stop writing unparliamentarily words. If not so the results may be seviour.(Murder?)

I request you to take necessary action on this issue. I am prepared to file a compliant in writing also. I am also prepared to attend before the any enquiring authority if necessary security given.

From:
Chittoor.s.Murugeshan,Reporter-Daily Thanthi, #7-85, Banala street , chittoor(A.P)

Tuesday, December 4, 2007

அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது.

2008 ஏப்ரலுக்குள் 3 ஆவது உலக யுத்தம்?
ரஷ்யா,அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் இரண்டு பட்டிருந்த நிலையில் தான் 2 ஆவது உலக யுத்தம் நடந்தது. தற்போது ரஷ்ய தேர்தல்கள் குறித்து புஷ் கொளுத்திப்போட்டுள்ள விமர்ஸன வெடிகள் இரு நாடுகளின் உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்து விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலக ம‌னித‌ உரிமைக‌ளின் காவ‌ல‌ன் என்ற‌ வேட‌ம் க‌ட்டி கூத்தாடும் அமெரிக்காவின் சுய‌ரூப‌ம் ப‌ல‌ நாட்டு அதிப‌ர்க‌ளுக்கு தெரிந்தே உள்ள‌து. ஆனால் பூனைக்கு ம‌ணிக‌ட்டுவ‌து யார் என்ப‌து தான் கேள்வி. அன்று விய‌ட்னாம் ஆச்சு. முந்தா நாள் அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் சாக்கில் ஈராக் ஆச்சு, தாலிபன்,பின்லாடன் சாக்கில் ஆப்கானிஸ்தான் ஆச்சு. இப்போது இஸ்ரேலை காத்தே தீருவோம் என்று அமெரிக்கா சூளுரைத்திருக்கிற‌து. அத‌ற்கான‌ அமைதி பேச்சுக்கு ஈரானுக்கு அழைப்பில்லையாம்.

அமெரிக்கா என்பது செல்லரித்துப்போன மர யானை பொம்மை. டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதே இதற்கு சாட்சி. மேலும் தன் வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பது உலக நியதி. நாளும் கோளும் என் செய்யும் என்று நிம்மதியாயிருக்க , அமெரிக்கா குமரேசரிரு தாளும் கடம்பும் துணை என்று இருந்த தில்லையே !

கலியுகம் 5000 ஆம் ஆண்டு முதல் 108 வருடங்களுக்கான எதிர்கால டயரி காலஞானம் ஆகட்டும், வியாசரின் பவிஷ்ய புராணமாகட்டும், நேஸ்ட்ரோ டாமஸின் தி செஞ்சுரீஸ் ஆகட்டும் , தற்போதைய கிரக நிலை ஆகட்டும் எதை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. அதுவும் கலியுகம் 108 ஆம் வருடம் நடைபெறும் இந்த காலகட்டத்தில் வரும் ஏப்ரலுக்குள் உலகின் 7ன் கீழ் 6 பாகம் அழிந்தே ஆகவேண்டும். அந்த அழிவு அமெரிக்காவால் தான் ஏற்பட வேண்டும் என்றிருந்தால் யார்தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.

அவ‌ளை விய‌ப்பேன்,அவ‌ளில் ல‌யிப்பேன்

அன்னையவள் பின்னிருக்க என்னிலென்ன தயக்கம்.
கண்ணென அவளென்னை காத்திருக்க இனியென்ன மயக்கம்
அகோ வாரும் பிள்ளாய் ! இனி சகலமும் முடிப்பேன் தூளாய்
எழுவேன் இனி சேர‌ன் கை வாளாய்
சுய‌ ந‌ல‌ம் என்ப‌து எனிலில்லை
பொதுந‌ல‌ம் ஒன்றே என் எல்லை
எல்லை தாண்டி செல்வ‌தில்லை
சுய‌ந‌ல‌ம் என்றும் வெல்வ‌தில்லை
அவ‌ளை விய‌ப்பேன்,அவ‌ளில் ல‌யிப்பேன் அவ‌ளே இங்கு என் காவ‌ல்
நானோ என்றும் அவ‌ள் ஏவ‌ல்.
கோள்க‌ள் யாவும் கோல‌ விழி அசைவிற்கேற்ப‌ ப‌ல‌ன் த‌ருமே
அவ‌ள் விழி மொழி அறிந்த‌ வித்த‌க‌ன் நான்
வ‌ருவ‌தை உரைப்பேன் கேளீரோ?(நான்)

Monday, December 3, 2007

கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்

கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்

பிரதமுரும்,சிதம்ப‌ரமும் இந்திய பொருளாதாரம் விரைந்து முன்னேறுவதாக கூறுகின்றனர். இதற்கு வாங்கும் சக்தி அதிகரிப்பு,ஷேர் மார்க்கெட் சென்செக்ஸ் உயர்வு, ஸ்தூல உறபத்தி அதிகரிப்பு,அந்நிய முதலீடு அதிகரிப்பு என்றெல்லாம் ஆதாரம் காட்டுகின்றனர்.இவற்றை சற்றே விசாரித்துவிட்டு பின் யதார்த்த நிலையையும் பார்ப்போம்.
வாங்கும் சக்தி அதிகரிப்பு:இதை விலை வாசி உயர்வு என்று ஏன் சொல்ல கூடாது. அரசு கொசுவை ஒழிக்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள கொசுவர்த்தி வாங்கித் தானாக வேண்டும். அரசு சுகாதாரமான குடி நீரை வழங்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள குடி நீரை விலைக்கு வாங்கித் தானாக வேண்டும். அது எந்த விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்கித் தானாக வேண்டும். இதே போல் அரசின் கையாலாகாத்தனத்தால், உலக அளவிலான சதியால் கல்வி,மருத்துவம்,எல்லாவற்றையும் வாங்கித்தானாக வேண்டியிருக்கிறது. இதை வாங்க நான் எதை குறைத்து கொண்டேன் என்று மாண்பு மிகு.பிரதமர்,நிதியமைச்சர்களுக்கு தெரியாதிருக்கலாம். சிலர் பட்ஜெட் குறைப்புக்காக வேலைக்காரியை நிறுத்தி வாஷிங் மிஷின் வாங்கலாம். சிலர் ட்ரைவரை நிறுத்தி விட்டு தாமே சாரத்யம் செய்யலாம். அல்லது வயதான அப்பா,அம்மாவை ரோட்டுக்கு அனுப்பலாம். இனி அந்த வேலைக்காரி நிலை? விபச்சாரம் . அந்த ட்ரைவரின் கதி கொள்ளைக்காரன். இனி அந்த பெற்றோரின் நிலை? பிச்சை. வாங்கும் சக்தி அதிகரித்தது இப்படித்தானே தவிர உண்மையான வருவாய் பெருகியதால் அல்ல.

ஆனால் நான் பார்க்கு சமுதாயத்திலோ மைனாரிட்டி,மெஜாரிட்டி, உயர் ஜாதி, கீழ் ஜாதி, ஆண், பெண், ஏழை ,பணக்காரன் வித்யாசமில்லாமல் எல்லோருமே கடனில் இருக்கிறார்கள். வட்டி கட்டி வருகிறார்கள். அல்லது கடன் கொடுத்து விட்டு அசலோ,வட்டியோ திரும்பாது அவதி படுகின்றனர். இது தொடர்பாக தற்கொலை முயற்சி,கொலை முயற்சி,தலை மறைவாதல் , குடும்ப பெண்களை விபச்சாரத்துக்கு தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்கள் மதுவில் மிதக்கிறார்கள். பள்ளி பிள்ளைகள் ஃபீஸ் கட்ட முடியாது முட்டி போடுகிறார்கள். உடல் நலிவுற்ற முதியவர்கள் ரோட்டில் விடப்படுகிறார்கள். மேஸ்திரி,சித்தாள் கூலி உயர்ந்திருக்கிறது, ஆட்கள் கிடைப்பதில்லை. என்னங்கடா இது?‌
அரசு காண்ட்ராக்டு வேலை செய்தவர்களுக்கு பணம் வரமாட்டேன் என் கிறது. அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கி, லஞ்சம் வாங்கி,பத்து வட்டிக்கு கடன் வாங்கி, அதுவும் போதாது மனைவிகளை வரதட்சிணை கேட்டு கொளுத்தி, அரசு பணத்தை கையாடி தந்தியில் செய்தியாகிறார்கள். என்னதான் நடக்கிறது புரியவில்லை.

வழக்கறிஞர்கள்,டாக்ட‌ர்க‌ள்,சாஃப்ட்வேர் இஞ்சினீர்க‌ள்,ம‌ருத்துவ‌ க‌ல்லூரி கார‌ர்கள்,மந்திரிகள்,அரசியல்வாதிகள் தான் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். ம‌க்க‌ள் ப‌ண‌த்தை சுர‌ண்டி கொழிக்கிறார்க‌ள் என்றால் அதுவும் ஓர‌ள‌வுதான் உண்மை. சுர‌ண்டிய‌ ப‌ண‌த்தை மீண்டும் முத‌லீடு செய்து தானே ஆக‌வேண்டும். பாலைவ‌னமாய் வ‌ற‌ண்டிருக்கும் மார்க்கெட்டில் கோடிக‌ள் முத‌லீடாகும் போது மார்க்கெட் நிச்ச‌ய‌மாக‌ பாதியை உறிஞ்சி விடுகிற‌து. உடலில் ரத்தம் போல், மார்க்கெட்டில் தொடர்ந்து பாய வேண்டிய ப‌ண‌ம் ஆங்காங்கே க்ளாட் ஆகிற‌து,ஆவியாகிற‌து,உறிஞ்ச‌ப்ப‌ட்டு விடுகிற‌து.


ஒருவ‌னின் ந‌ஷ்ட‌மே, அடுத்த‌வ‌னின் லாப‌மாக‌ மாறுகிற‌து. உற்ப‌த்தி என்ப‌து மாயா. க‌ன்வெர்ஷ‌ன் ஆஃப் ரிசோர்ஸ‌ஸ்தான் உற்ப‌த்தி. க‌ன்வெர்ஷ‌ன் தேவையில்லாத‌ உற்ப‌த்தி பொருட்க‌ள் கூட‌ போக்குவ‌ர‌த்து,ஹேண்ட்லிங் காஸ்ட்,இருப்பு வைத்த‌ல் கார‌ண‌மாய் ம‌திப்பு கூட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ம‌னித‌னின் வாழ்க்கை முறை மாறிவிட்ட‌து. தேவைக‌ள் கூடிவிட்ட‌ன‌. பிர‌ச‌வ‌ம் என்ப‌து இய‌ற்கை ச‌ம்ப‌வ‌ம். ஆனால் த‌வ‌றான‌ உண‌வுப்ப‌ழ‌க்க‌ம்,உரிய‌ புரித‌லின்மை,சுர‌ண்ட‌ல் போக்கு கார‌ண‌மாய் கு.ப‌.ரூ.10,000/
செல‌வு பிடிப்ப‌தாய் ஆகிவிட்ட‌து. இனி குழ‌ந்தைக்கான‌ நேப்கின் முத‌ல் க‌ல்வி,ஆடை,ம‌ருத்துவ‌ம் எல்லாமே உல‌க‌ம‌ய‌ம்,த‌னியார் ம‌ய‌ம்,நிறுவ‌ன‌ம‌ய‌ம் கார‌ண‌மாய் ல‌ட்ச‌ங்க‌ளுக்கு போய் நிற்கிற‌து.இப்ப‌டி வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணோ ,ஆணோ ஒரு இனிய‌ காலை ஹாஸ்ட‌லில் தூக்கு போட்டு செத்தால் மொத்த‌ம் ஆவியாகிவிடுகிற‌து. அந்த‌ ம‌க‌ன் அல்ல‌து ம‌க‌ளின் க‌ல்வி நிமித்த‌ம் வாங்கிய‌ க‌ட‌ன்,விற்ற‌ சொத்து எல்லாம் கோவிந்தா!

ஐந்து,ப‌த்துக்கு கொலை,விப‌ச்சார‌ம் ந‌ட‌க்குது நாட்டில். இந்நிலையில் பொருளாதார‌ம் வ‌ள‌ருதென்று சொல்லும் பிர‌த‌ம‌ர்,நிதிம‌ந்திரியை என்ன‌ செய்ய‌?

மாறிடுங்க‌ப்பா ! இல்ல‌ன்னா நாறிடும்

எனக்கென்று ஒரே ஒரு பிரதி கூட இல்லாது போய்விட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சத நாமாவளி

தலைப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இது ஆல்ஃபபிடிகல் ஆர்டரில் நானே தயாரித்த நாமாவளி. சித்தூரில் நான் வெளியிட்டு வரும் தெலுங்கு மாதமிருமுறை இதழில் இதனை 1000 பிரதிகள் அச்சிட்டு விநியோகித்திருக்கிறேன். இதில் சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா என்று ஒரு நாமாவளி. இந்த நாமாவளியை வாரம் ஒருமுறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ படித்து வந்தேன். சுதந்திர ஜீவனம் செய்து வந்தேன்.இருந்தும் என்ன லாபம் எனக்கென்று ஒரே ஒரு பிரதி கூட இல்லாது போய்விட்டது. ஞாபக‌சக்தியா சூனியம். படக்கென்று மாதம் ரூ.900 சம்பளத்துக்கு /அதுவும் டவுனிலிருந்து 5+5 ரூ. தூரத்தில் அடிமை வேலை செய்ய வேண்டி வந்து விட்டது. அந்த 900 ரூபாயிலும் அந்த தனியார் பள்ளி உரிமையாளருக்கு வாடகையாக‌ ரூ300 ம், மின் கட்டணமாக ரூ.100 ம் போய் கைக்கு ரூ 500 தான் வரும். தினசரி ஆட்டோவுக்கு எனக்கு+என் மகளுக்கு ரூ.20 பச்சா ! பின்பொரு தினம் ஞானோதயமாகி நாமாவளிகளை ஞாபகத்திலிருந்து கோர்த்து கணிணியில் தட்டச்சி வைத்துக் கொண்ட பிறகுதான் சுதந்திரம் கிடைத்தது. இதோ அந்த நாமாவளிகள்:

முதலில் ஓம் ஹ்ரீம் இறுதியில் நமஹ சேர்த்து வாசிக்கவும்.

ஓம் ஹ்ரீம் அம்பிகாபுர வாசின்யை நமஹ
ஓம் ஹ்ரீம் அன்னபூர்னேஸ்வர்யை நமஹ
ஓம் ஹ்ரீம் அகிலாண்டேஸ்வர்யை நமஹ
ஓம் ஹ்ரீம் அம்ருத்தாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் ஆர்த்த ஜன ரக்ஷின்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் ஆத்யந்த சிவரூபாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அபயவரத ஹஸ்தின்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அனாமிகாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அங்காள பரமேஸ்வர்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அனந்தாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் ஆத்யந்த ரஹிதாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் அருணாயை நமஹ‌
ஓம் ஹ்ரீம் பால பீட அதிரோஹின்யை நமஹ‌
ஓம் ஹ்ரீம் பஹளாமுகே நமஹ‌
(தொடரும்)

Saturday, December 1, 2007

அரசியலில் கொலைமுயற்சிகள் பழிவாங்கல்களுக்கு ஒரு உதாரணம்

அரசியலில் கொலைமுயற்சிகள் பழிவாங்கல்களுக்கு ஒரு உதாரணம்
சித்தூர் 26 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத் தேர்தல்


ஆந்திரமாநிலம்,சித்தூர் வேலூரை அடுத்துள்ளதால் தமிழ் வாசகர்களும் தெரிந்து கொண்டு உஷாராக வந்து போகட்டுமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை வைக்கிறேன். படித்து மகிழுங்கள்.

சித்தூர் ஒரு காலத்தில் "மலைமேடு" ராமசந்திரன் என்ற ஒரே தாதாவின் பிடியில் இருந்தது. அவர் தமிழர்,வன்னியர் வகுப்பை சேர்ந்தவர். ஒரு நிலையில் அவர்,அவரது சிஷ்ய கோடிகளின் லொள்ளு தாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவர் வெடி குண்டு வீசப்பட்டு, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அவர் உயிருடன் இருந்த போதே கல்லூரி தேர்தல்கள் இத்யாதியில் அவரது ஏக சக்ராதிபத்யத்தை இன்றைய முன்னாள் எம்.எல்.ஏ. சி.கே.பாபு கேள்விக்குள்ளாக்கி வந்தார். இது காரணமாய் சி.கே. மீது கொலை முயற்சியும் நடந்ததுண்டு. இதனால் ராமசந்திராவின் மறைவுக்கு பிறகு தன்னாலேயே சி.கே வின் பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் முதலில் சுயேச்சையாகவும்,பின்பு காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு தொடர்ந்து எம்.எல்.ஏ வாக வென்று வந்தார்.

இந்நிலையில் மூன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சி.கே சொற்பமான வாக்கு வித்யாசத்தில் தோற்கடிக்கப் பட்டார்.(இதற்கு பல காரணங்கள் உண்டு .முழு விவரங்களுக்கு/www.chittoortigerckbabu.blogspot.com./என்ற‌ வலைப்பதிவை படியுங்கள். அதையடுத்து நகராட்சி தேர்தல்கள் வந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைம தேர்தலில் வெற்றிக்கான முழு பொறுப்பையும்
சி.கே.பாபுவிற்கு தந்தது. சி.கே.களமிறங்கினார்.((இந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் ஒற்றைப்படையிலான வார்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது வேறு விஷயம்)

சித்தூர் காஜி ஸ்கூல் வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டி காங்கிரஸ் சார்பிலும், பார்த்தசாரதி என்பவர் தெலுகு தேசம் சார்பிலும் களத்திலிருந்தனர்.

ம‌திய‌ம் ரிக்கிங் ந‌ட‌ப்ப‌தாய் பார்த்த‌சார‌தி தெ.தே.எம்.பி ஆதிகேச‌வுலுக்கு போன் போட்டார். காங்கிர‌ஸ் தொண்ட‌ர்க‌ள் சி.கே.வுக்கு த‌க‌வ‌ல் கொடுத்த‌ன‌ர். ஆதிகேச‌வுலு பூத்துக்குள் நுழைந்தார். அப்போது ஏற்ப‌ட்ட‌ த‌ள்ளுமுள்ளுவில் ஓட்டிங் மிஷின் ஒன்று கீழே விழுந்து உடைந்த‌து. அடுத்த‌ நிமிட‌ம் சி.கே.ச‌ம்ப‌வ‌ இட‌த்துக்கு வ‌ந்து விட்டார். ஸ்கூல் கேட்டுக்கு உட்புற‌ம் ஆதிகேச‌வுலு/கேட்டுக்கு வெளியே சி.கே. அப்போது இருவ‌ருக்கும் க‌டுமையான‌ வாக்கு வாத‌ம் ஏற்ப‌ட்ட‌து.

அந்த‌ ச‌ம‌ய‌ம் இதில் சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டி ஓரிரு வார்த்தைக‌ளை விட்ட‌தாக‌வும், அதில் ஆதிகேச‌வுலுவின் ம‌ன‌ம் புண்ப‌ட்டுவிட்ட‌தாக‌வும் த‌க‌வ‌ல். தேர்த‌ல் முடிந்த‌ சில‌ நாட்க‌ளிலேயே சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டிமீது பெட்ரோல் குண்டு வீச‌ப்ப‌ட்ட‌து. இது ந‌ட‌ந்த அதே நாள் மாலை த‌லைப்பில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ 26 ஆவ‌து வார்டு க‌வுன்ஸில‌ர் க‌ட்டாரி மோக‌ன் மீது கொலை முய‌ற்சி ந‌ட‌ந்த‌து.

சி.கே.வின் ஒன்றுவிட்ட சகோதரர் புருஷோத்தம் ரெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச‌ப்ப‌ட்ட‌த‌ன் பிண்ண‌னியில் க‌ட்டாரி மோக‌ன் இருந்த‌தாய் புருஷோத்த‌ம் ரெட்டி த‌ர‌ப்பு எண்ணியிருக்க‌லாம். கொலை முய‌ற்சிக்குள்ளான‌ க‌ட்டாரி மோக‌ன் ஆஸ்ப‌த்திரியிலிருந்து அப்ப‌டியே த‌லைம‌றைவாகிவிட்டார்.

சில‌மாத‌ங்க‌ள் க‌ழித்து சி.கே.மீது துப்பாக்கி ஏந்திய‌ வாட‌கை கொலையாளிக‌ள் துப்பாக்கி
சூடு ந‌ட‌த்தின‌ர். இதில் 3 உயிர்க‌ள் ப‌லியான‌து. சி.கே அதிச‌ய‌மாக‌ உயிர் த‌ப்பினார். க‌ட்டாரி மோக‌ன் இந்த‌ கொலை முய‌ற்சி வ‌ழ‌க்கில் முத‌ல் குற்ற‌வாளியாக‌ சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். சுருக்க‌மாக‌ கூறினால்:
புருஷோத்த‌ம் ரெட்டி ஆதிகேச‌வுலுவை பேச்சால் புண்ப‌டுத்தினார். க‌ட்டாரி மோக‌ன் ஜாதி அபிமானத்தாலும்,கட்சி அபிமானத்தாலும் ஆதிகேச‌வுலு சார்பில் புருஷோத்த‌ம் ரெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச ஏற்பாடு செய்தார். இத‌ற்கு ப‌ழிவாங்க‌ மோக‌ன் மீது கொலை முய‌ற்சி ந‌ட‌ந்த‌து. அத‌ற்கு ப‌ழி வாங்க‌ சி.கே வை கொல்ல‌ முய‌ற்சி ந‌ட‌ந்த‌து. தொட‌ர்ந்து 3 கூட்ட‌ங்க‌ளுக்கு வ‌ராத‌தால் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் மோக‌னின் ப‌த‌வியை ப‌றித்த‌து. நாளை அங்கு தேர்த‌ல் ந‌ட‌க்க‌ விருக்கிற‌து.


நாளை ந‌ட‌ப்ப‌தை ஆரே அறிவார் ப‌ராப‌ர‌மே !

தினத்தந்தியில் வெளிவந்த எனது வரி விளம்பரத்தைக் கண்டு என்னை தொடர்பு கொண்ட

அன்புடையீர் !

தினத்தந்தியில் வெளிவந்த எனது வரி விளம்பரத்தைக் கண்டு என்னை தொடர்பு கொண்ட தங்களுக்கு என் ந‌ன்றி. ஜோதிட பலன் களை கூறும்போது திரும்ப திரும்ப அதே விஷயங்களை கூறவேண்டி வருகிறது. இதற்கு காரணம், தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தங்கள் ஜாதகத்தில் நின்றுள்ள 9 கிரகங்களின் பலமும், 12 பாவங்களின் பலமும் தான். இவை சுபபலமாக இருந்தால் இவை காரகத்வம் வகிக்கும் எல்லா விஷயங்களிலுமில்லாவிட்டாலும், ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட விஷயங்களில் வெற்றி உங்களை தேடிவரும். இவற்றில் எந்தெந்த பாவம்,கிரகம் கெட்டுள்ளதோ அது காரகத்வம் வகிக்கும் விஷயங்களில் தொல்லைகள் வந்து கதவை தட்டும். எனவே ஒளிவு மறைவில்லாது 9 கிரகங்களின் காரகத்துவத்தையும், 12 பாவங்களின் காரகத்துவத்தையும் http:www.anubavajothidam.blogspot.com என்ற என் வலைதளத்தில் வைத்துள்ளேன்.படித்து பயன் பெறுங்கள்.

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் :
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன்.

உதாரணமாக:
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன்.

செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.

நான் இக்கடிதத்துடன் இணைத்துள்ள தங்கள் ஜாதக பலன் களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கடிதம்/மெயில்/செல் மூலம் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

நன்றி.



தங்கள் உண்மையுள்ள,



சித்தூர்.எஸ்.முருகேஷன்

ஐதராபாத் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திலிருந்து என் செல்லுக்கு போன் வந்தது.

இன்று மாலை 6.05 மணிக்கு ஐதராபாத் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திலிருந்து என் செல்லுக்கு போன் வந்தது. தொடர்பு கொண்டு பேசியவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 குறித்து கேட்டறிந்து கொண்டார்.

1997 நவம்பர் முதல் முதல்வர் சந்திரபாபுவுக்கு தலைமைச் செயலக முகவரிக்கு நான் எழுதிய கடிதங்களை எடைக்கு போட்டால் என் எடைக்கு எடை அரிசி வாங்கலாம்), சந்திரபாபு எதிர்கட்சி தலைவரான பிறகு ஐதராபாதில் உள்ள தெலுகு தேசம் கட்சி அலுவலகத்துக்கு(என்.டி. ஆர் பவன்) போட்ட கடிதங்களை எடைக்கு போட்டால் எடைக்கு எடை கோதுமை வாங்கலாம். இதெல்லாம் போனில் பேசியவருக்கு தெரியாதிருக்கலாம் என்ற எண்ணத்தில் பொறுமையாக திட்டத்தை விளக்கினேன்.


இறுதியில் அவர் எங்கு வந்து நின்றார் தெரியுமா? உங்க அலுவலகத்து குப்பைக் கூடைகளுக்கு பசி அதிகம்னு எப்படி எழுதலாம் என்று கேட்டார். "என் அனுபவத்தை எழுதிட்டேண்ணே.." என்று கூறி போனை கட் செய்தேன்.

அக‌லிகையை இந்திர‌ன் கெடுத்த‌தால் அவ‌ன் உட‌லெங்கும் யோனியாகிவிட்ட‌தாக‌ புராண‌த்தில்

சரோஜா தேவி(பழம் பெரும் நடிகை அல்ல) கதைகள் படிக்காத தமிழ் இளைஞனே இருக்க முடியாது. நிச்சயமாக ஒரு ஆண் தான் அவற்றை எழுதியிருக்கவேண்டும். இப்போதும் வெளிவருகிறதா தெரியவில்லை. சுஜாதா கூட சரோஜா தேவி நாவல் களை பற்றி குறிப்பிட்டுள்ளார். நானும் படித்திருக்கிறேன். இப்போது என் வயது 41. என் டீனேஜில் படித்த பருவகாலம் முதலான பலான இதழ்கள் இப்போது வெளிவருகின்றனவா தெரியவில்லை. இது போன்ற புத்தகங்களை வெளியிடுப‌வர்கள்,வாங்கி விற்பவர்கள்,படிப்பவர்களின் சைக்காலஜி என்னவென்று யாரேனும் ஆராயலாம். சுவாரஸ்யமாக இருக்கும். நிற்க..மனைவியரின் சைக்காலஜி பற்றி யாரேனும் எழுதலாமே.சரோஜா தேவி கதைகளை ஒன்றுமில்லாது செய்துவிடுமத்தனை சரக்கு இந்து புராணங்களில் உள்ளது.

அக‌லிகையை இந்திர‌ன் கெடுத்த‌தால் அவ‌ன் உட‌லெங்கும் யோனியாகிவிட்ட‌தாக‌ புராண‌த்தில் வ‌ருகிற‌து. யோனி என்ப‌து பொதுப்பெய‌ர். இத‌ற்கு "குறி " என்று பொருள். ஜோதிட‌த்தில் கூட‌ திரும‌ண‌ப்பொருத்த‌ங்க‌ளில் ஆண் யோனி,பெண் யோனி என்று வ‌ருவ‌தை இத‌ற்கு ஆதார‌மாக‌ கொள்ள‌லாம். இந்திர‌ன் உட‌லெங்கும் யோனியாகி விட்ட‌து என்றால் அது ஆண் யோனியாக‌வும் இருக்க‌லாம்.பெண் யோனியாக‌வும் இருக்க‌லாம். பால் வினை நோய்க‌ளில் "ப‌ட‌ர் தொடை வாழை" என்று ஒரு நோய் உண்டு. (ஆதார‌ம்:க‌ந்த‌ர் சஷ்டி க‌வ‌ச‌ம்) இத‌ற்கு தொடையில் வாழைக்காயை போல் வ‌ரும் க‌ட்டி என்று பொருள். அதாவ‌து ஆண் குறியை போன்ற‌ வ‌டிவ‌த்திலான‌ க‌ட்டி. என‌வே அக‌லிகையை கெடுத்த‌ (உட‌லுற‌வு கொண்ட‌) இந்திர‌னுக்கு ப‌ட‌ர் தொடை வாழை என‌ப்ப‌டும் பால் வினை நோய் ஏற்ப‌ட்ட‌தாக‌ புராண‌ம் கூறுகிற‌து.

என‌க்கொரு ச‌ந்தேக‌ம். அக‌லிகைக்கு இந்த‌ வியாதி எப்ப‌டி ஏற்ப‌ட்ட‌து? ஒரு வேளை க‌ண‌வ‌ர் கௌத‌ம‌ முனிவ‌ரிட‌மிருந்து தொற்றிய‌தா? பௌராணிக‌ர்க‌ள் இந்த‌ அபிஷ்டுவின் ச‌ந்தேக‌த்தை தீர்த்து வைக்க‌ க‌ட‌வ‌து.

புராண‌ங்க‌ளை பாக்கெட் நாவ‌ல்க‌ளில் அளித்து வ‌ரும் ப‌க்கெட் சாம்பார் பாலா இத‌ற்கு ப‌தில் சொல்ல‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளார்.

Wednesday, November 28, 2007

நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?

நியூஸ் வ்யூஸ் நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?
பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?


ப‌திவ‌ர்க‌ளே த‌ங்க‌ள் க‌ருத்தை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்!

Tuesday, November 27, 2007

என்னகங்காரம் சுண்டைக்காய்

அம்மா உனை நான் போற்றிடவே
பாமாலை நூறு சாற்றிடவே
பிறப்பித்தாய் இன்று நானறிந்தேன்
சத்தியம் இதனை அறியாது தறிகெட்டுத்தானே நான் திரிந்தேன்
நீ வறுமை என்னும் வலை வீச வசமாய் நானும் சிக்கிவிட்டேன்
சிக்கிய என்னை சிக்கெடுத்து சிங்/காரமாக நீ பதித்தாய்
தாயே உந்தன் பொற்பாதம்

வேதம் யாவும் வெற்றெனவும், உன்னை மறத்தல் ஒன்றே கூற்றெனவும்
அறிந்திட அலைந்தேன் பலகாதம்
படைப்பின் ரகசியம் உணர்த்தி விட்டாய்
விதியின் கைகளை தளர்த்தி விட்டாய்
ஆயிரம் தந்தாய் அம்மாவே என் வறுமை தன்னை ஒழித்திட்டால்
எல்லா முடிச்சும் சும்மாவே
ஞான மொட்டிதைமலர்வித்தாய்
விழி நீர் தன்னை உலர்வித்தாய்

தாயே நானோர் பாத்திரமே
எனை ஆட்டிவைப்பதுன் சூத்திரமே
பாத்திரம் அறியா பதர்களிடை மணிபோலே கிடக்கும் என்னை அள்ளி சேர்ப்பாய் கலத்தினிலே
மரணம் தவிர மற்றெல்லாம் வாழ்வில் என்றும் சும்மாவே
ஞானம் ஒன்றே தொடர்ந்து வரும்
அருகாய் உயிரில் படர்ந்து வரும்
என் ஞான விளக்கின் ஒளியினையே
அகந்தை புகையது மூடிடினும்
அவமானம் ஒன்றே துடைத்திடுமே
புது சரித்திரம் தன்னை படைத்திடுமே

உன்னை அறிந்தேன் போதுமடி
வரும் பிறவிகள் யாவுக்குமாகுமடி
வாணியாக மனம் நின்று கலைகள் தந்திடும் கலைவாணி
வேதம் அறியா என் மனதில் வேத சாரம் இறைத்தாய் போதுமடி
அம்மா விதியை நான் அறிந்தேன்(முன்)
வினைகள் செய்யும் சதியறிந்தேன்
உன்னருளால் சிறக்கும் வழியறிந்தேன்
ஆதியந்தம் நீயென்ற அடிப்படை தத்துவம் நான்றிந்தேன்
கற்பகம் உந்தன் பொற்பதமே பணியும் பணியை நானறிந்தேன்
உன் திட்டம் தன்னை தானறிந்தேன்

என்னகங்காரம் சுண்டைக்காய்
என் செவிகள் தவிப்பதுன் தண்டைக்காய்
அது சிணுங்கிட சீறிடும் என் கவிதை
சுமக்கும் உனக்கே புது சிவிகை
வலித்தேன்,சலித்தேன் வ்ண்டியிதை
பிழைத்தேன் அம்மா அண்டியுனை

என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ

வாணீ ! கலை வாணீ ! என் நாவில் வா நீ!

தேன் தமிழ் தந்தது போதும், தேள் தமிழ் தா நீ

(ஈங்கிவர்) முழுக்கக் கொட்டி கவிழ்ப்பதற்குள்
கொட்டி பார்த்திடனும் அழிவைத் தடுக்க முயன்றிடனும்

பகுத்தறிவு பகலவனாம் ஈ.வெ.ரா தொகுத்தவர் தந்த கருத்தினையே கருவில் அழிக்க பார்க்கின்றார்.


காதல் பேசி இவர் நின்றார். பின்
பெண்ணுக்கு சாமரம் வீசி நின்றார்.

இன்றோ பார்ப்பனர் மனம் நொந்தால் வான் மழை பொழியாதென்று வேதம் கூறுகின்றார்.
வேடம் கலைகின்றார்.
புராண புருடாக்கள் புழுத்துப் போனதென்று
புதிதாய் இட்டு கட்டுகின்றார்
நோயென தொற்றுகின்றார்.
தாயே நீ உண்டு
நான் நின் அருள் தேன் உண்டு மயங்கிய பொழுதுண்டு

என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு தங்கள் ஜாதக பலன் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். உதாரணமாக:
தங்கம்: குரு
இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:


ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.

Monday, November 26, 2007

Relief From Rays

Which is Dosha?
The Evil effects of the planets are called as Doshas

Which are pariharas:
The remedies like pooja, yaga which are done for reducing the evil effects of the planets are called as pariharas

Three types of Pariharas:
1.Poojas,yaagas done to the Lord related with the specific planet.
2.Visiting the pilgrim centers related with the specific planet.
3. Donating things. Ie. Land, meal, gold etc

1.Yagas for Gods:
Which is yaga ? creating fire and throwing the valuable things in to it. Fire is ruled by Mars. So that you can control the evil effects of Mars. In the same way according the things thrown you can get relief from those planets which rule the things thrown in to fire. Ie. Gold is ruled by Jupiter, silk saris ruled by Venus.

Mangalik;
Especially yagas control the evil effects of mangalik Dosha (Mars in other than 3,6,10,11 th houses from lagna. That too there are some restrictions.
Example: Imagine that Mars is at 12th house. What is the result? You have to face loss due to fire. If you voluntarily through things in to fire.. you are voluntarily creating loss to your property in to fire.

But if the Mars is in 7th house? What is the result you have to be separated from your wife. If u through things in to fire will your wife return home? No..

(To be cont.)

யாது செய்ய திருவுளமோ..

தாயே நாயேன் நிலைகண்டும்
நாயகியின் மனம் இர‌ங்காதோ ?

அன‌லில் புழுவென‌ த‌ரை மேல் மீனென‌
உவ‌மைக‌ல் நூறு கூறிட‌லாம்.

ஆனால் என் நிலை நீ உண‌ர‌ அவை யேதும் உத‌வா அறியாயோ?
ப‌ட்டேன் ப‌ட்டேன் துளிர்க்க‌வில்லை

எனினும் உன் விழி ப‌னிக்க‌வில்லை
யாதே செய்வேன் யாகினியே !
மோகினி யோகினி டாகினியே

பாவிய‌ர் காற்றும் என் மீது வீசா நிலையை தாராயோ?
ஆவி சோர‌ அம்மா நின் நாம‌ம் த‌னையே ஜெபித்தேனே

அர்த்த ஜாம‌ம் வ‌ரையெல்லாம் ஜ‌க‌ன் மாதா உனை நான் நினைந்தேனே
என் வ‌றுமை த‌ன்னை எரிக்காது என்னை உன் விழி எரிப்ப‌துவோ?
அம்மா உனை நான் நாடிடினும்
பேடி போலே கிட‌ப்ப‌துவோ

அணு ஆயுத‌ம் பெற்று ஆண்,பெண்ணை அடியோடொழிக்க எண்ணுகின்றார்.
இதை தடுக்க எண்ணும் என் உயிரை பஞ்சு மிட்டாய் போலே உண்ணுகின்றார்.‌

ஜனநாயகம் வந்து பலகாலம் ஆகியும் வாரிசு மண்ணாள் இரவும் பகலும் தவிக்கின்றார்.
10 கோடி இளைஞர்களில் ஒருவரேனும் இங்கிலையோ பாரத தேசம் தனை யாள‌

மனித உயிர்கள் மலிவாகி ,மண்மிசை விழுகுது 100 பிணம்.
மற்றொரு பிணமாய் கிடக்கின்றேன் ..என்று என் குரல் இங்கொலிக்கும்

படைத்தாய் பிறந்தேன். வாழ்கின்றேன்
ஒரு நாள் எனை நீ உயர்த்துவை என்று கயவர் முன்பும் தாழ்கின்றேன்

யாது செய்ய திருவுளமோ..
உனக்கும் வரையனும் திருமுகமோ

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே


கணபதி தாள் தொழுது,சண்டியவள் வாள் தொழுது,
என் நிலையை நினைந்த‌ழுது
தாளின்றி, ஒரு கோலின்றி நானெழுதும் மடலிதுவே !
மாலவனும் மண்மிசை மலர்மகளை இழந்த காலை/அவன்
விட்டதொரு கண்ணீரால் நிரம்பியது கடலதுவே
உன்னருள் தானின்றி அவள் மால் மார்பில் சேர்தல் கனவே
இதனால் தானன்றோ பார்ப்பனர் போற்றி நின்றார்
"ல‌க்ஷ்மீப்ர‌தாயை ந‌ம‌ஹ‌ " என்றே !

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே
சிறு நரியெனவே தந்திரம் வளர்த்து
சிர்கெட்டிருந்த நாட்களிலே
அண்ண‌ல் உந்த‌ன் உற‌வை நாடி நாளும் பொழுதும் உனை துதித்தேன்
குருவிர‌ல் தானே தெய்வ‌ம் சுட்டும் /
நீ தெய்வமே என்றாலும்
திக்கொன்றே திருமால் திருவடி என்று குருவாகி சுட்டினையே
என் பால் குருவும் நீயே தெய்வ‌மும் நீயே
கடலெல்லாம் கடந்த கப்பல்
கணவாயில் தவிப்பது போல் இன்றும் தவிக்கின்றேன்

சீதையை பிரிந்து ராமன் அனல் மிசை புழுவென துடித்துத் தான் கிடக்க
சேதிகள் தமை சுமந்தாய் ,சேது தனை சமைத்தாய்
ராமன் நானல்லேன் எனினும் திரு பிரிந்தாள் தெரு நாயாய் மிதிக்கின்றார்

இற‌ந்த‌வ‌ன் போல் கிட‌க்கின்றேன். சிர‌ஞ்சீவி நீ கொண‌ர்வாய்.
பிற‌ தெய்வ‌ம் என‌க்கு செய்ய‌ நானுன‌க்கு செய்தேன் துரோக‌ங்க‌ள்.
ம‌ன்னித்து நீ அருள்வாய்.
ம‌ண்மிசை என் ம‌ருள் அழிப்பாய்.

இன்றே வ‌ருவாய்
எனை புதிதாய் ஈன்று நீ த‌ருவாய்

Sunday, November 25, 2007

ஏப்ரல் வரை மிதுனத்தில் செவ்வாய் ஸ்தம்பனம்:

செவ்வாய் வழக்கமாக ஒரு ராசியில் 45 நாட்கள் மட்டுமே தங்குவார். தற்போது 2008 ஏப்ரல் வரை மிதுனத்திலேயே ஸ்தம்பிக்கிறார். இது பொதுவாகவே உலகத்துக்கே கேடு விளைவிப்பதாகும். அதிலும் மிதுனம் என்பது காதல்,உடலுறவு போன்றவற்றை காட்டுமிடம் என்பதால் இந்த வகையில் சிக்கல்கள் ஏற்படும். எதிர் பால்,செக்ஸ் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும். ராசி சக்கரத்தில் இது 3 ஆவது ராசி என்பதால் சகோதர ,சகோதிரிகளே பகைவராவர்.விபத்துகள் அதிகரிக்கும். செவ்வாய் பூமி காரகன் என்பதால் பூகம்பங்கள் அதிகரிக்கும். மேலும் ராணுவ ஆட்சி,போலீஸ் அடக்கு முறை,என் கவுண்டர்கள்,அடித்து கொலை, ஆயுத புரட்சி,குண்டு வெடிப்பு,தீவிபத்து ,ரத்த சேதம் அதிகரிக்கும்.


இந்நிலையில் முதல் கட்டமாக செவ்வாய் கடக,விருச்சிக,மகரம்,சிம்மம் ஆகிய ராசியினருக்கு 2008 ஏப்ரல் வரை தர உள்ள பலன் களை பார்ப்போம்.


1.கடகம்:
உங்களுக்கு 5,10க்கு அதிபதியான செவ்வாய் 12 ல் ஸ்தம்பிப்பது நிச்சயமாக நல்லதல்ல. இதனால் ஞாபக மறதி,தவறான முடிவுகள் எடுத்து அவதி படுதல்,அவமானம்,பிள்ளைகளுக்கு தீமை ஆகிய பலன் கள் ஏற்படும். விற்ப‌னை துறையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும்,நில‌ம் விற்கும் முய‌ற்சியில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கும் எண்ணிய‌து ஈடேறும்.அதே நேர‌ம் ர‌த்த‌ம்,எரிச்ச‌ல் தொட‌ர்பான‌ தொல்லைக‌ள் ஏற்ப‌டும். மின்சார‌ம்,எரிபொருள்,பால் பொருட்க‌ளால் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌ட‌லாம். ச‌கோத‌ர‌ர்க‌ளால் தொல்லை ந‌ஷ்ட‌ம் நேர‌லாம். ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌வ‌ர்கள் தம் குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ர‌த்த‌தான‌ம் த‌ர‌லாம்.(ரத்தத்துக்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாயால் ஏற்படக்கூடிய ரத்த விரயத்தை முன் கூட்டியே நடத்திக் கொள்வது எதிர்கால விபத்து முதலானவற்றை தடுத்து விடும்). இய‌லாத‌வ‌ர்க‌ள் தீவிப‌த்தில் சிக்கிய‌வ‌ர்க‌ள், விப‌த்தில்/கலவரத்தில் கை,கால் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு மாமிச‌ உண‌வு இட‌லாம். தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

2.விருச்சிக‌ம்:

த‌ங்க‌ளுக்கு செவ்வாய் 1,6 க்கு அதிப‌தி என்ப‌தால் 50:50 என்ற‌ வித‌த்தில் ந‌ல்ல‌து,கெட்ட‌து க‌ல‌ந்து ந‌ட‌க்கும். 1 க்கு அதிப‌தி 8ல் வ‌ருவ‌தால் ர‌த்த‌ம்,எரிச்ச‌ல் தொட‌ர்பான‌ தொல்லைக‌ள் ஏற்ப‌டும். மின்சார‌ம்,எரிபொருள்,பால் பொருட்க‌ளால் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌ட‌லாம். ச‌கோத‌ர‌ர்க‌ளால் தொல்லை ந‌ஷ்ட‌ம் நேர‌லாம். ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌வ‌ர்கள் தம் குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ர‌த்த‌தான‌ம் த‌ர‌லாம்.(ரத்தத்துக்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாயால் ஏற்படக்கூடிய ரத்த விரயத்தை முன் கூட்டியே நடத்திக் கொள்வது எதிர்கால விபத்து முதலானவற்றை தடுத்து விடும்). இய‌லாத‌வ‌ர்க‌ள் தீவிப‌த்தில் சிக்கிய‌வ‌ர்க‌ள், விப‌த்தில்/கலவரத்தில் கை,கால் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு மாமிச‌ உண‌வு இட‌லாம். அதே நேர‌த்தில் அவ‌ர் 6க்கும் அதிப‌தி என்ப‌தால் க‌ட‌ன் தீர‌லாம். நோய்க‌ள் குண‌மாக‌லாம். வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ தீர்ப்பு வ‌ர‌லாம். எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர். தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

3.ம‌க‌ர‌ம்: ஆக‌ஸ்ட் 5 முத‌ல் அஷ்ட‌ம‌ ச‌னியாலும்,ந‌வ‌ம்ப‌ர் 22 முத‌ல் விர‌ய‌ குருவாலும் ப‌டாது பாடு ப‌ட்டுவ‌ரும் உங்க‌ளுக்கு 6 ல் செவ்வாய் ஸ்த‌ம்பிப்ப‌தை ஒரு பெரும் ஆத‌ர‌வாக‌வே கூற‌வேண்டும். இத‌னால் அஷ்ட‌ம‌ச‌னி,விர‌ய‌ குருவையும் மீறி
க‌ட‌ன் தீர‌லாம். நோய்க‌ள் குண‌மாக‌லாம். வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ தீர்ப்பு வ‌ர‌லாம். எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர். செவ்வாயால் நிகழக்கூடிய ந்ற்பலன் கள் இரட்டிப்பாக தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

செவ்வாய் த‌ங்க‌ளுக்கு 4,11 க்கு அதிப‌தி என்ப‌தால் தாய் நோய்வாய் ப‌ட‌லாம், அவ‌ருட‌ன் உர‌ச‌ல்க‌ள் ஏற்ப‌ட‌லாம், இத‌ய‌ ப‌ட‌ப‌ட‌ப்பு அதிக‌ரிக்கும், வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் எதிரிக‌ளாக‌ தோற்ற‌ம் த‌ருவ‌ர்.வாக‌ன‌ம் தொட‌ர்பாக‌வும் சிறு ம‌ன‌க்க‌ஷ்ட‌ம் அல்ல‌து சிறு விப‌த்து ஏற்ப‌ட‌லாம். எச்ச‌ரிக்கை. அவ‌ர் 11க்கும் அதிப‌தியாக‌ இருப்ப‌தால் மூத்த‌ ச‌கோத‌ர‌ர்,ச‌கோதிரிக்கும், அவ‌ர்க‌ள் வ‌கையில் த‌ங்க‌ளுக்கும் தொல்லைக‌ள் ஏற்ப‌ட‌லாம்.


4.சிம்ம‌ம்: த‌ங்க‌ளுக்கு செவ்வாய் 4,9க்கு அதிப‌தியாவார். இவ‌ர் 11 ல் ஸ்த‌ம்பிப்ப‌து ந‌ல்ல‌தே. மேலும் த‌ங்க‌ளுக்கு குருவும் 5 ல் வ‌ந்திருக்கும் இந்த‌ நிலையில் ஏப்ர‌லுக்குள் ஒரு ட‌ர்னிங் பாயிண்டே கூட‌ ஏற்ப‌ட‌லாம். தாய்,வீடு,வாக‌ன‌ம்,க‌ல்வி,தாய்வ‌ழி உற‌வு வ‌கைக‌ளில் அனுகூல‌ம் ஏற்ப‌டும். த‌ந்தை,த‌ந்தையுட‌ன் உற‌வு,அவ‌ர‌து சொத்துக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள், ந‌ல்ல‌ அபிவிருத்திய‌ட‌யும்.

செவ்வாயால் நிகழக்கூடிய ந்ற்பலன் கள் இரட்டிப்பாக தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

குறிப்பு: ஜ‌ன்ம‌ச‌னி உட‌ல் ந‌லிவை,குழ‌ப்ப‌த்தை த‌ர‌ காத்திருக்கிறார். என‌வே எச்ச‌ரிக்கை தேவை.குரு பார்வை உங்க‌ள் ராசியின் மேல் விழுவ‌தால் உட‌ல் ந‌லிவையும்,குழ‌ப்ப‌த்தையும் த‌விர்த்து விட‌லாம். கையில் ஸ்டீல் மோதிர‌ம் அல்ல‌து வ‌ளைய‌ம் அணிய‌வும். கால் ச‌ட்டை, ச‌ட்டை ஒரே நிற‌த்தில் அணிவ‌தும் ந‌ல்ல‌து. ரொம்ப‌வே உட‌ல் சுத்த‌ம்,உடை சுத்த‌த்திற்கு மென‌க்கெட‌ வேண்டாம்.

சமகாலர்களே! உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..

சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் ம‌ட்டும‌ல்ல‌ என் பேனாவும்
உங்க‌ளுக்காக‌ குனிவ‌தாயில்லை
நான் உர‌க்க‌ சொல்லும் உண்மைக‌ளை உர‌சிப்பார்க்கும்
துணிச்ச‌ல் உம‌க்கிருந்தால்
உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..
உம‌க்கும் ம‌ற்றெந்த‌ மிருக‌த்துக்கும் வித்யாச‌மிருக்கிற‌தா என்று.
தொட‌ர்ந்து போர்த்த‌ப்ப‌ட்ட‌ துணிகள்
உம் உரோம‌ங்க‌ளை ச‌ற்றே குறைத்திருக்க‌லாம்.
டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட‌ உண‌வு
உங்க‌ள் மோப்ப‌த்திற‌னை ச‌ற்று குறைத்திருக்க‌லாம்.
பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உற‌வு உங்க‌ளிலான‌
இணை தேடும் திற‌னை குறைத்திருக்க‌லாம்.
அத‌ற்காக‌ நீங்க‌ள் ம‌னித‌ர்க‌ள் என்ற‌ முடிவுக்கு வ‌ந்த‌தால்தான்
ம‌னித‌ம் இம்ம‌ண்மிசை ம‌ண்ணாகிவிட்ட‌து.
உம்மை நீங்கள் மிருக‌ங்க‌ளாய் ஒப்புக்கொண்டால‌ன்றி
நீங்க‌ள் என்றைக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ முடியாது.
நோயை அங்கீக‌ரித்தால‌ன்றி சிகிச்சை சிக்க‌லாகிவிடும்.
உம் ம‌ல‌‌ச்சிக்க‌லுக்கே ம‌ட்டும‌ல்ல
ம‌ன‌ச்சிக்க‌ல்க‌ளுக்கும் ஒரே கார‌ண‌ம்தான்
நீங்க‌ள் மிருக‌ங்க‌ள் என்ப‌தை ம‌றுத்து
ம‌னித‌ர்க‌ளாய் மாறுவேட‌ம் போடுவ‌துதான்.
உங்க‌ளில் இருக்கும் மிருக‌த்தின் உட‌ற்ப‌சி,உட‌லுற‌வு ப‌சியை ம‌றுத்து
23.59 நிமிட‌ம் ம‌னித‌ராய் வேட‌மிட்டு ஒரு நிமிட‌த்தில் மிருக‌மாகி
த‌மிழ் நாளித‌ழில் செய்தியாகிறீர்க‌ள்.

Saturday, November 24, 2007

குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி

நைட் வாச்மேன் , தன் எஜமானருக்கு தீமை நடக்க விருப்பதை கனவில் கண்டு முன் கூட்டி சொல்கிறான். கனவு நிஜமாகிறது. எஜமானர் காப்பாற்றப்படுகிறார். பின் நைட் வாச்மேனை டிஸ்மிஸ் செய்கிறார்.இந்த கதையை எங்கோ கேட்டது போலிருக்கிறதல்லவா? நிஜம் தான் இது குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.

அட போங்கண்ணா..வர்ர கோவத்துக்கு சரியா வஞ்சிரப்போரேன்.

அய்யா குமுதம் ஆசிரியரே.. என்னாதான் உம் ஆசிரியர் குழு கிணற்றுத் தவளைகளாக இருந்தாலும் அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி என்பது கூட தெரியாது ஒரு சிறுகதையை பிரசுரித்திருக்கிறீர்கள். இதென்ன வெட்கக்கேடு.

ஜமுனாவுக்கு தெரிந்து பதறிவிட்டாள்

இடையில் ஒரு தடவை தாய் வீட்டுக்கு வந்த விஜிக்கும்,பக்கத்து வீட்டு அழகுவுக்கும் ‌ காத்ல் ஏற்பட்டது.அழகுவின் அப்பா பெரிய அதிகாரி வீடு,வாசல் யாவும் உண்டு. இந்த விஷயம் வெளியூரிலிருந்த ஜமுனாவுக்கு தெரிந்து பதறிவிட்டாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக இருக்கும் விஜி வசதியானவனை கல்யாணம் கட்டிக் கொண்டு போய் விட்டால் வீட்டு வேலைகளை ஜமுனாதானே பார்க்க வேண்டி வரும். எனவே விரைந்து வந்த ஜமுனா கொட்டி முழக்கினாள்,காதலுக்கு குறுக்கே விழுந்து தடுத்தாள். எல்லாவற்றையும் மீறி விஜி‍/அழகு தம்பதியானார்கள். ஆரம்பத்தில் அழகுவின் உறவுகள் போர் பரணி பாடினாலும் 4 மாதங்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது.

காதல் கடிமணம் புரிந்து கொண்டவர்களிடையில் வழக்கமாய் தோன்றும் பூசல்கள் விஜி அழகு தம்பதியிடையிலும் தோன்றின. விஜி 7 ஆம் வகுப்புவரை மட்டும் படித்தவள். அழகுவின் அம்மாவே படித்து பட்டம் வாங்கி டீச்சராக வேலை பார்த்தவள்.திருமண வாழ்க்கை, மனைவி இத்யாதி குறித்த பார்வையே வேறாக இருந்தது. விஜி கனவு கண்ட திருமண வாழ்வில் மீன்,கருவாடு,டி.வி,சினிமா,புதிய உள்பாவாடை தவிர வேறு எதற்கும் இடமில்லாமல் இருந்தது. இந்நிலையில் க‌ச‌ப்புக‌ள் தோன்றுவ‌து ச‌க‌ஜ‌ம் தானே. விஜி முட்டாள் த‌ன‌மாய் த‌ன் ம‌ன‌க்குறைக‌ளை ஜ‌முனாவிட‌ம் கொட்டினாள். ஜ‌முனாவுக்கு இது வ‌ச‌தியாக‌ போய்விட்ட‌து. ஏற்கென‌வே குழ‌ப்ப‌த்தில் இருந்த‌ விஜியை மேலும் குழ‌ப்பி அவ‌ளை அழ‌குவிட‌மிருந்து பிரித்து மீண்டும் ச‌ம்ப‌ள‌மில்லாத‌ வேலைக்காரியாக்கி விட்டாள்.


அழ‌குவை ப‌ற்றியும் 4 வ‌ரிக‌ள் சொல்லியாக‌ வேண்டும். எப்ப‌டியெல்லாம் வாழ‌க்கூடாதோ அப்ப‌டியெல்லாம் வாழ்ந்து பார்த்துவிட்டு ,ஆடி முடித்து இற‌ங்கி வ‌ந்து இப்ப‌டித்தான் வாழ‌வேண்டும் என்று வாழ்ந்து வ‌ருப‌வ‌ன். ஜ‌முனாவின் " நாலு நாள் காய‌ப்போட்டா ஃபார்முலாவெல்லாம் எப்ப‌டி வேலை செய்யும்.

ஜ‌முனா "நீ பாரு அழ‌கு வ‌ருவான். உன்னை திருப்பிய‌னுப்ப‌ சொல்லி என் காலை பிடிச்சு கெஞ்சுவான். உன்னை க‌ண்ணுக்குள்ள‌ வ‌ச்சு பார்த்துக்க‌ற‌ மாதிரி நான் ப‌ண்றேன்" என்று ஃபிலிம் காட்டி வ‌ந்தாள்.

Friday, November 23, 2007

சுக்கிரன் கேது சேர்க்கை

எந்த லக்னமானாலும் சரி மிகுந்த கேட்டை தரும் சேர்க்கை இது. சுக்கிரன் எதிர்பாலினர் மீதான கவர்ச்சி,அவர்களுடனான நட்பு,வீடு,வாகனம்,அறுசுவை உணவு,தூக்கம்,உடலுறவு இப்படி மனிதனுக்கு சுகம் தரும் எல்லா விஷயங்களுக்கும் அதிபதி சுக்கிரன். இவருடன் கேது சேருவது மேற்படி சுகங்களுக்கு தடை ஏற்படுத்துவதோடு இளமையில் இவற்றின் மீது அதீத கவர்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை சிக்கல்மயமாக்கும் வாய்ப்பு அதிகம். கேது என்பவர் சன்யாசத்தை தரும் கிரகமாவார். எனவே தம்பதிகள் (வேலை நிமித்தமோ அல்லது மன வேறுபாடு காரணமாகவோ) பிரிந்து வாழ நேரலாம். வாழ்வின் பிற்பகுதியில் ஏறக்குறைய சன்யாசியை போல் வாழ வேண்டி வரலாம்.

இதற்கு பரிகாரம்:
கணபதியை தவிர வேறு தெய்வங்களை வழிபடக்கூடாது. இயன்றால் கணபதிய கூட தவிர்த்து விட்டு தியான வழியை மட்டும் பின்பற்றிய படி சன்யாசியை போல் வாழவேண்டும். இதர மத கிரந்தங்களை படித்தல்,தர்கா,சர்ச் செல்லுதலும் நலம் பயக்கும். வீட்டில்,பீரோவில்,பர்ஸில் ட்ராகன் படம் வைத்துக் கொள்ளவும், பாம்பு போன்ற மோதிரம் அணியவும். வைடூரியம் பதித்த மோதிரம் அணியவும். பாம்புகள்,கொள்ளையர்,கடத்தல்காரர்கள்,யோகிகள்,சன்யாசிகள் குறித்த படங்கள் பார்க்கவும்,புத்தகங்கள் படிக்கவும்.

குறிப்பு: இந்த பரிகாரங்கள் செய்தால் மேற்சொன்ன தீயபலன் கள் குறைவதோடுவீடு,வாகனம் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் மறைந்து நல்ல தூக்கம்,அறுசுவை உணவு பெற்று சற்றே நிம்மதியாய் வாழலாம்.

Thursday, November 22, 2007

அனைவருக்கும் தனயோகம்

 
ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.


ஆம் ..மிக சாதாரண ஜாதக‌த்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் ம‌ட்டும் ஈடுப‌ட்டு த‌ன‌யோக‌த்தை அனுப‌விப்ப‌தை காண‌முடிகிற‌து. ம‌ற்ற‌ 8 கிர‌க‌ங்க‌ள், 11 பாவ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விஷ‌ய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ள் இருந்தாலும் த‌ன‌ யோக‌ம் ம‌ட்டும் தொட‌ர்கிற‌து.


அதே நேர‌த்தில் 11 பாவ‌ங்க‌ள்,8 கிர‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ நிலையில் இருந்தாலும் அவை கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் விஷ‌ங்க‌ளையெல்லாம் விட்டு விட்டு த‌ம் ஜாத‌க‌த்தில் தீய‌ப‌ல‌ன் த‌ரும் ஒரே ஒரு பாவ‌ம் அல்ல‌து ஒரே ஒரு கிர‌க‌த்தின் கார‌க‌த்துவ‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு உல‌கே மாய‌ம் என்று பாடி, சோக‌ம் கொண்டாடுவ‌தையும் காண‌முடிகிற‌து. இந்த‌ க‌ட்டுரைத் தொட‌ருக்கான‌ அடிப்ப‌டை தத்துவ‌ம் இதுதான்…….

நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..

நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள‌ வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி ச‌ற்று விரிவாக‌ பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.

லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.

3ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஜாத‌க‌ங்க‌ளை ஜோதிட‌ரிட‌ம் காட்டி அல்ல‌து தாங்க‌ளே பார்த்து அவ‌ர்களில் யாருடைய‌ ஜாத‌க‌ம் ப‌ல‌ம் வாய்ந்த‌தாக‌ உள்ள‌தோ அவ‌ர்க‌ளுடைய‌ யோச‌னைப்ப‌டி,அவ‌ர்க‌ளின் கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.(குறிப்பிட்ட‌ ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியின் ராசி த‌ங்க‌ளுக்கு வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக‌ இருக்க‌வேண்டும்)

4ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தாய்,தாய் வ‌ழி உற‌வுக‌ளை காடுமிட‌ம். என‌வே சென்ற‌ ப‌த்தியில் கூறிய‌ ப‌டி தாய்,தாய் வ‌ழி உற‌வுகளின் ஜாத‌கங்களை,ராசிகளை ப‌ரிசீலி‌த்து அதில் தேர்வு பெறுப‌வ‌ரின் யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

5ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது புத்தி,புத்திர‌ர்க‌ளை காட்டுமிட‌ம். என‌வே டேபிள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க் ம‌ட்டும் செய்து வ‌ர‌வேண்டும். வ‌ய‌து வ‌ந்த‌ ம‌க‌ள்/ம‌க‌ன் இருந்தால் அவ‌ர்க‌ள‌து யோச‌னை,துணையை நாட‌லாம்.(அவ‌ர்க‌ளின் ஜாத‌க‌ங்க‌ள் சுப‌ப‌ல‌மாயிருப்ப‌து முக்கிய‌ம். அவ‌ர்க‌ளின் ராசி தங்கள் ராசிக்கு வ‌சிய‌ம் அல்ல‌து ந‌ட்பாக‌ இருப்ப‌தும் முக்கிய‌ம்). மேலும் பெய‌ர் ,புக‌ழுக்கு ஆசைப்ப‌டாது,புத்திர‌,புத்திரிக‌ள் த‌ம் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ வேண்டும் என்று எண்ணாது வாழ‌வேண்டும்)

7ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது க‌ண‌வ‌ன்/ம‌னைவியை காட்டுமிட‌ம். கணவன்/ம‌னைவியின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

9ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

11ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.
 
 
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.


ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர‌ ஸ்தான‌ம். டேபுள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க்கில் ஈடுப‌ட‌க்கூடாது. அதிர்ஷ்ட‌த்தை ந‌ம்பி எந்த‌ செய‌லிலும் இற‌ங்க‌ கூடாது.சொந்த‌ யோசனையுட‌ன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன‌தே வ‌ழி என்று செய‌ல் ப‌ட‌க்கூடாது."தென்னைய‌ பெத்தா/பிள்ளைய‌ பெத்தா க‌ண்ணீரு!" என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் வ‌ரிக‌ளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வ‌யிறும் வேறு" என்று உண‌ர்ந்து வாழ‌வேண்டும். பிள்ளைக‌ள் மேல் ப‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ கூடாது.


ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது ம‌னைவியை காட்டுமிட‌ம். வீதி வ‌ரை ம‌னைவி என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் த‌த்துவ‌பாட‌ல் வ‌ரி. இற‌ப்புக்கு பின் ந‌ம்முட‌ன் வ‌ர‌ப்போவ‌து இப்பிற‌வியின் நினைவுக‌ளே. என‌வே உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்று வாழ‌வேண்டும். ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எல்லாம் பிற‌ப்பிலேயே அமைந்துவிடுகின்ற‌ன‌. ஆனால் க‌ண‌வ‌ன்/ம‌னைவி என்ற‌ உற‌வு விசயத்தில் ம‌ட்டும் ந‌ம‌க்கு இறைவ‌ன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை த‌ருகிறான். என‌வே 7 ஆம் பாவ‌ம் கெட்டிருப்பின் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ தேர்வு செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

ஒவ்வொரு ஆணும் உல‌க‌ அழ‌கியே ம‌னைவியாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் ம‌ன்ம‌த‌னே த‌ன் க‌ண‌வ‌னாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் ய‌தார்த்த‌த்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவ‌ம் கெட்டுள்ள‌ ஆண்,பெண்ணுக்கு அவ‌ர்க‌ள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது ந‌ர‌க‌மாக‌ மாறிவிடுகிறது. அதே நேர‌ம் 7 ஆம் பாவ‌ம் கெட்டிருந்தாலும் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ ஏற்று ஒற்றுமையுட‌ன் வாழ்ந்துவ‌ருவ‌தை காண‌முடிகிற‌து.

9ஆம் பாவம் கெட்டிருந்தால்:

சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.
 
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுய‌முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைப்பீர்க‌ள்.(அதே நேர‌ம் தைரிய‌ம் அள‌வுக்கு அதிக‌மாகிவிடாம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்) பிர‌யாண‌ங்க‌ளால் ஏற்ப‌டும் நோய்க‌ளான‌
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வ‌ராது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்க‌ள் தான் இறுதி வாரிசாக‌ இருக்க‌ வாய்ப்பு அதிக‌ம். இத‌ர‌ கிர‌க‌ங்க‌ளின் பாதிப்பால் உங்க‌ளை அடுத்து வாரிசுக‌ள் பிற‌ந்தாலும் அவ‌ர்க‌ளை விட‌ நீங்க‌ள் உய‌ர்ந்த‌ நிலையில் இருப்பீர்க‌ள். என்ன‌ ஒரு பிர‌ச்சினை என்றால் வ‌யதாக‌ வ‌ய‌தாக‌ காதுக‌ள் தான் ட‌ப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர்.க‌ட‌ன் க‌ள் தீரும்,நோய்க‌ள் குண‌மாகும்.கோர்ட்டு வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ம் ஏற்ப‌டும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு  துஸ்தான‌ம் என்ப‌தால் இது ப‌ல‌ம் பெறுவ‌து ஆயுட்குறைவை காட்டும். என‌வே இந்த‌ பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால் திடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்த‌துடன் தானும் கெட்டார்."

"ஆன‌ முத‌லில் அதிக‌ம் செல‌வானால் எல்லோர்க்கும் க‌ள்ள‌னாய்,ந‌ல்லோர்க்கும் பொல்ல‌னாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரிய‌ம் தீர்ந்து விட்டால் சுந்த‌ரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்க‌ள் அறியாத‌ ஒன்ற‌ல்ல‌ .. ஆக‌ தூக்க‌ம்,செல‌வு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உய‌ர்வு ஏற்ப‌டும் என்ப‌து உறுதி. இவை குறைய‌ 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆக‌வேண்டும். என‌வே தான் மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள் கெட்டிருந்தால் த‌ன‌யோக‌ம் பெற‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று கூற‌வில்லை. மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள்
வாழ்வில் தொல்லைக‌ள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக‌ த‌ன‌யோக‌ம் ஏற்ப‌ட்டு விடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, November 21, 2007

இருட்டடிப்பு செய்யப்பட்ட என் படைப்புகள்:

திருவேங்க‌ட‌ன் தீந்த‌மிழ் பாம‌ல‌ர் மாலை இது ஒரு ‌ க‌விதை தொகுப்பு:
ஏழும‌லையானை எண்ணி உருகி,உருகி அவ‌ன் அருள‌முதை ப‌ருகி ,ப‌ருகி எழுதியகவிதைகள் அடங்கியதாகும். தேவ‌ஸ்தான‌த்தார் ஒரு முறை திருவேங்க‌ட‌ன் குறித்த‌ ப‌டைப்புக‌ள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்ட‌ன‌ர். அத‌ற்கு அச்சான‌,அச்சாகாத‌ ப‌டைப்புக‌ளை வ‌ர‌வேற்ற‌ன‌ர். நான் மேற்சொன்ன‌ க‌விதை தொகுதியை அனுப்பி வைத்தேன். அந்த‌ ப்ராஜ‌க்டின் த‌லைவ‌ர் என் ப‌டைப்புக‌ளை பெரிதும் பாராட்டிய‌தோடு தி.தி.தேவ‌ஸ்தான‌த்தாரின் நிதி உத‌வியுட‌ன் அச்சிட‌ முய‌ற்சிக்கும்ப‌டி கூறி அத‌ற்கான‌ விண்ண‌ப்ப‌த்தையும் அனுப்பினார். நானும் உட‌னே விண்ண‌ப்பித்தேன். ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்தில் அற‌ங்காவ‌ல‌ர் குழு அத‌ற்கு நிதி உத‌வி வ‌ழ‌ங்க‌ அனும‌தி த‌ர‌வில்லை என்ற நல்ல ப‌தில் கிடைத்த‌து.

பத்திரிக்கை ஆசிரியர்களால்/பெரிய மனிதர்களால் தேர்ந்தெடுக்கவும் படாமல்,திரஸ்கரிக்கவும் படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட என் படைப்புகள்:
மலரவன் என்ற புனைப்பெயரில் என்னால் எழுதப்பட்ட கவிதை தொகுப்புகள்:
1. தீய்ந்து போன தீக்குச்சிகள் 2.நிதர்ஸனங்கள்

சுஜாதாப்ரியன் என்ற புனைப்பெயரில் என்னால் எழுதப்பட்ட குறுநாவ‌ல்க‌ள்:

1.ஆப‌த்தான‌ வ‌ளைவுக‌ள் 2.ப்ள‌ட் ரோஸ்