Wednesday, November 28, 2007

நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?

நியூஸ் வ்யூஸ் நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?
பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?


ப‌திவ‌ர்க‌ளே த‌ங்க‌ள் க‌ருத்தை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்!

Tuesday, November 27, 2007

என்னகங்காரம் சுண்டைக்காய்

அம்மா உனை நான் போற்றிடவே
பாமாலை நூறு சாற்றிடவே
பிறப்பித்தாய் இன்று நானறிந்தேன்
சத்தியம் இதனை அறியாது தறிகெட்டுத்தானே நான் திரிந்தேன்
நீ வறுமை என்னும் வலை வீச வசமாய் நானும் சிக்கிவிட்டேன்
சிக்கிய என்னை சிக்கெடுத்து சிங்/காரமாக நீ பதித்தாய்
தாயே உந்தன் பொற்பாதம்

வேதம் யாவும் வெற்றெனவும், உன்னை மறத்தல் ஒன்றே கூற்றெனவும்
அறிந்திட அலைந்தேன் பலகாதம்
படைப்பின் ரகசியம் உணர்த்தி விட்டாய்
விதியின் கைகளை தளர்த்தி விட்டாய்
ஆயிரம் தந்தாய் அம்மாவே என் வறுமை தன்னை ஒழித்திட்டால்
எல்லா முடிச்சும் சும்மாவே
ஞான மொட்டிதைமலர்வித்தாய்
விழி நீர் தன்னை உலர்வித்தாய்

தாயே நானோர் பாத்திரமே
எனை ஆட்டிவைப்பதுன் சூத்திரமே
பாத்திரம் அறியா பதர்களிடை மணிபோலே கிடக்கும் என்னை அள்ளி சேர்ப்பாய் கலத்தினிலே
மரணம் தவிர மற்றெல்லாம் வாழ்வில் என்றும் சும்மாவே
ஞானம் ஒன்றே தொடர்ந்து வரும்
அருகாய் உயிரில் படர்ந்து வரும்
என் ஞான விளக்கின் ஒளியினையே
அகந்தை புகையது மூடிடினும்
அவமானம் ஒன்றே துடைத்திடுமே
புது சரித்திரம் தன்னை படைத்திடுமே

உன்னை அறிந்தேன் போதுமடி
வரும் பிறவிகள் யாவுக்குமாகுமடி
வாணியாக மனம் நின்று கலைகள் தந்திடும் கலைவாணி
வேதம் அறியா என் மனதில் வேத சாரம் இறைத்தாய் போதுமடி
அம்மா விதியை நான் அறிந்தேன்(முன்)
வினைகள் செய்யும் சதியறிந்தேன்
உன்னருளால் சிறக்கும் வழியறிந்தேன்
ஆதியந்தம் நீயென்ற அடிப்படை தத்துவம் நான்றிந்தேன்
கற்பகம் உந்தன் பொற்பதமே பணியும் பணியை நானறிந்தேன்
உன் திட்டம் தன்னை தானறிந்தேன்

என்னகங்காரம் சுண்டைக்காய்
என் செவிகள் தவிப்பதுன் தண்டைக்காய்
அது சிணுங்கிட சீறிடும் என் கவிதை
சுமக்கும் உனக்கே புது சிவிகை
வலித்தேன்,சலித்தேன் வ்ண்டியிதை
பிழைத்தேன் அம்மா அண்டியுனை

என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ

வாணீ ! கலை வாணீ ! என் நாவில் வா நீ!

தேன் தமிழ் தந்தது போதும், தேள் தமிழ் தா நீ

(ஈங்கிவர்) முழுக்கக் கொட்டி கவிழ்ப்பதற்குள்
கொட்டி பார்த்திடனும் அழிவைத் தடுக்க முயன்றிடனும்

பகுத்தறிவு பகலவனாம் ஈ.வெ.ரா தொகுத்தவர் தந்த கருத்தினையே கருவில் அழிக்க பார்க்கின்றார்.


காதல் பேசி இவர் நின்றார். பின்
பெண்ணுக்கு சாமரம் வீசி நின்றார்.

இன்றோ பார்ப்பனர் மனம் நொந்தால் வான் மழை பொழியாதென்று வேதம் கூறுகின்றார்.
வேடம் கலைகின்றார்.
புராண புருடாக்கள் புழுத்துப் போனதென்று
புதிதாய் இட்டு கட்டுகின்றார்
நோயென தொற்றுகின்றார்.
தாயே நீ உண்டு
நான் நின் அருள் தேன் உண்டு மயங்கிய பொழுதுண்டு

என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு தங்கள் ஜாதக பலன் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். உதாரணமாக:
தங்கம்: குரு
இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:


ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.

Monday, November 26, 2007

Relief From Rays

Which is Dosha?
The Evil effects of the planets are called as Doshas

Which are pariharas:
The remedies like pooja, yaga which are done for reducing the evil effects of the planets are called as pariharas

Three types of Pariharas:
1.Poojas,yaagas done to the Lord related with the specific planet.
2.Visiting the pilgrim centers related with the specific planet.
3. Donating things. Ie. Land, meal, gold etc

1.Yagas for Gods:
Which is yaga ? creating fire and throwing the valuable things in to it. Fire is ruled by Mars. So that you can control the evil effects of Mars. In the same way according the things thrown you can get relief from those planets which rule the things thrown in to fire. Ie. Gold is ruled by Jupiter, silk saris ruled by Venus.

Mangalik;
Especially yagas control the evil effects of mangalik Dosha (Mars in other than 3,6,10,11 th houses from lagna. That too there are some restrictions.
Example: Imagine that Mars is at 12th house. What is the result? You have to face loss due to fire. If you voluntarily through things in to fire.. you are voluntarily creating loss to your property in to fire.

But if the Mars is in 7th house? What is the result you have to be separated from your wife. If u through things in to fire will your wife return home? No..

(To be cont.)

யாது செய்ய திருவுளமோ..

தாயே நாயேன் நிலைகண்டும்
நாயகியின் மனம் இர‌ங்காதோ ?

அன‌லில் புழுவென‌ த‌ரை மேல் மீனென‌
உவ‌மைக‌ல் நூறு கூறிட‌லாம்.

ஆனால் என் நிலை நீ உண‌ர‌ அவை யேதும் உத‌வா அறியாயோ?
ப‌ட்டேன் ப‌ட்டேன் துளிர்க்க‌வில்லை

எனினும் உன் விழி ப‌னிக்க‌வில்லை
யாதே செய்வேன் யாகினியே !
மோகினி யோகினி டாகினியே

பாவிய‌ர் காற்றும் என் மீது வீசா நிலையை தாராயோ?
ஆவி சோர‌ அம்மா நின் நாம‌ம் த‌னையே ஜெபித்தேனே

அர்த்த ஜாம‌ம் வ‌ரையெல்லாம் ஜ‌க‌ன் மாதா உனை நான் நினைந்தேனே
என் வ‌றுமை த‌ன்னை எரிக்காது என்னை உன் விழி எரிப்ப‌துவோ?
அம்மா உனை நான் நாடிடினும்
பேடி போலே கிட‌ப்ப‌துவோ

அணு ஆயுத‌ம் பெற்று ஆண்,பெண்ணை அடியோடொழிக்க எண்ணுகின்றார்.
இதை தடுக்க எண்ணும் என் உயிரை பஞ்சு மிட்டாய் போலே உண்ணுகின்றார்.‌

ஜனநாயகம் வந்து பலகாலம் ஆகியும் வாரிசு மண்ணாள் இரவும் பகலும் தவிக்கின்றார்.
10 கோடி இளைஞர்களில் ஒருவரேனும் இங்கிலையோ பாரத தேசம் தனை யாள‌

மனித உயிர்கள் மலிவாகி ,மண்மிசை விழுகுது 100 பிணம்.
மற்றொரு பிணமாய் கிடக்கின்றேன் ..என்று என் குரல் இங்கொலிக்கும்

படைத்தாய் பிறந்தேன். வாழ்கின்றேன்
ஒரு நாள் எனை நீ உயர்த்துவை என்று கயவர் முன்பும் தாழ்கின்றேன்

யாது செய்ய திருவுளமோ..
உனக்கும் வரையனும் திருமுகமோ

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே


கணபதி தாள் தொழுது,சண்டியவள் வாள் தொழுது,
என் நிலையை நினைந்த‌ழுது
தாளின்றி, ஒரு கோலின்றி நானெழுதும் மடலிதுவே !
மாலவனும் மண்மிசை மலர்மகளை இழந்த காலை/அவன்
விட்டதொரு கண்ணீரால் நிரம்பியது கடலதுவே
உன்னருள் தானின்றி அவள் மால் மார்பில் சேர்தல் கனவே
இதனால் தானன்றோ பார்ப்பனர் போற்றி நின்றார்
"ல‌க்ஷ்மீப்ர‌தாயை ந‌ம‌ஹ‌ " என்றே !

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே
சிறு நரியெனவே தந்திரம் வளர்த்து
சிர்கெட்டிருந்த நாட்களிலே
அண்ண‌ல் உந்த‌ன் உற‌வை நாடி நாளும் பொழுதும் உனை துதித்தேன்
குருவிர‌ல் தானே தெய்வ‌ம் சுட்டும் /
நீ தெய்வமே என்றாலும்
திக்கொன்றே திருமால் திருவடி என்று குருவாகி சுட்டினையே
என் பால் குருவும் நீயே தெய்வ‌மும் நீயே
கடலெல்லாம் கடந்த கப்பல்
கணவாயில் தவிப்பது போல் இன்றும் தவிக்கின்றேன்

சீதையை பிரிந்து ராமன் அனல் மிசை புழுவென துடித்துத் தான் கிடக்க
சேதிகள் தமை சுமந்தாய் ,சேது தனை சமைத்தாய்
ராமன் நானல்லேன் எனினும் திரு பிரிந்தாள் தெரு நாயாய் மிதிக்கின்றார்

இற‌ந்த‌வ‌ன் போல் கிட‌க்கின்றேன். சிர‌ஞ்சீவி நீ கொண‌ர்வாய்.
பிற‌ தெய்வ‌ம் என‌க்கு செய்ய‌ நானுன‌க்கு செய்தேன் துரோக‌ங்க‌ள்.
ம‌ன்னித்து நீ அருள்வாய்.
ம‌ண்மிசை என் ம‌ருள் அழிப்பாய்.

இன்றே வ‌ருவாய்
எனை புதிதாய் ஈன்று நீ த‌ருவாய்

Sunday, November 25, 2007

ஏப்ரல் வரை மிதுனத்தில் செவ்வாய் ஸ்தம்பனம்:

செவ்வாய் வழக்கமாக ஒரு ராசியில் 45 நாட்கள் மட்டுமே தங்குவார். தற்போது 2008 ஏப்ரல் வரை மிதுனத்திலேயே ஸ்தம்பிக்கிறார். இது பொதுவாகவே உலகத்துக்கே கேடு விளைவிப்பதாகும். அதிலும் மிதுனம் என்பது காதல்,உடலுறவு போன்றவற்றை காட்டுமிடம் என்பதால் இந்த வகையில் சிக்கல்கள் ஏற்படும். எதிர் பால்,செக்ஸ் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும். ராசி சக்கரத்தில் இது 3 ஆவது ராசி என்பதால் சகோதர ,சகோதிரிகளே பகைவராவர்.விபத்துகள் அதிகரிக்கும். செவ்வாய் பூமி காரகன் என்பதால் பூகம்பங்கள் அதிகரிக்கும். மேலும் ராணுவ ஆட்சி,போலீஸ் அடக்கு முறை,என் கவுண்டர்கள்,அடித்து கொலை, ஆயுத புரட்சி,குண்டு வெடிப்பு,தீவிபத்து ,ரத்த சேதம் அதிகரிக்கும்.


இந்நிலையில் முதல் கட்டமாக செவ்வாய் கடக,விருச்சிக,மகரம்,சிம்மம் ஆகிய ராசியினருக்கு 2008 ஏப்ரல் வரை தர உள்ள பலன் களை பார்ப்போம்.


1.கடகம்:
உங்களுக்கு 5,10க்கு அதிபதியான செவ்வாய் 12 ல் ஸ்தம்பிப்பது நிச்சயமாக நல்லதல்ல. இதனால் ஞாபக மறதி,தவறான முடிவுகள் எடுத்து அவதி படுதல்,அவமானம்,பிள்ளைகளுக்கு தீமை ஆகிய பலன் கள் ஏற்படும். விற்ப‌னை துறையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும்,நில‌ம் விற்கும் முய‌ற்சியில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கும் எண்ணிய‌து ஈடேறும்.அதே நேர‌ம் ர‌த்த‌ம்,எரிச்ச‌ல் தொட‌ர்பான‌ தொல்லைக‌ள் ஏற்ப‌டும். மின்சார‌ம்,எரிபொருள்,பால் பொருட்க‌ளால் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌ட‌லாம். ச‌கோத‌ர‌ர்க‌ளால் தொல்லை ந‌ஷ்ட‌ம் நேர‌லாம். ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌வ‌ர்கள் தம் குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ர‌த்த‌தான‌ம் த‌ர‌லாம்.(ரத்தத்துக்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாயால் ஏற்படக்கூடிய ரத்த விரயத்தை முன் கூட்டியே நடத்திக் கொள்வது எதிர்கால விபத்து முதலானவற்றை தடுத்து விடும்). இய‌லாத‌வ‌ர்க‌ள் தீவிப‌த்தில் சிக்கிய‌வ‌ர்க‌ள், விப‌த்தில்/கலவரத்தில் கை,கால் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு மாமிச‌ உண‌வு இட‌லாம். தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

2.விருச்சிக‌ம்:

த‌ங்க‌ளுக்கு செவ்வாய் 1,6 க்கு அதிப‌தி என்ப‌தால் 50:50 என்ற‌ வித‌த்தில் ந‌ல்ல‌து,கெட்ட‌து க‌ல‌ந்து ந‌ட‌க்கும். 1 க்கு அதிப‌தி 8ல் வ‌ருவ‌தால் ர‌த்த‌ம்,எரிச்ச‌ல் தொட‌ர்பான‌ தொல்லைக‌ள் ஏற்ப‌டும். மின்சார‌ம்,எரிபொருள்,பால் பொருட்க‌ளால் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌ட‌லாம். ச‌கோத‌ர‌ர்க‌ளால் தொல்லை ந‌ஷ்ட‌ம் நேர‌லாம். ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌வ‌ர்கள் தம் குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ர‌த்த‌தான‌ம் த‌ர‌லாம்.(ரத்தத்துக்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாயால் ஏற்படக்கூடிய ரத்த விரயத்தை முன் கூட்டியே நடத்திக் கொள்வது எதிர்கால விபத்து முதலானவற்றை தடுத்து விடும்). இய‌லாத‌வ‌ர்க‌ள் தீவிப‌த்தில் சிக்கிய‌வ‌ர்க‌ள், விப‌த்தில்/கலவரத்தில் கை,கால் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு மாமிச‌ உண‌வு இட‌லாம். அதே நேர‌த்தில் அவ‌ர் 6க்கும் அதிப‌தி என்ப‌தால் க‌ட‌ன் தீர‌லாம். நோய்க‌ள் குண‌மாக‌லாம். வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ தீர்ப்பு வ‌ர‌லாம். எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர். தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

3.ம‌க‌ர‌ம்: ஆக‌ஸ்ட் 5 முத‌ல் அஷ்ட‌ம‌ ச‌னியாலும்,ந‌வ‌ம்ப‌ர் 22 முத‌ல் விர‌ய‌ குருவாலும் ப‌டாது பாடு ப‌ட்டுவ‌ரும் உங்க‌ளுக்கு 6 ல் செவ்வாய் ஸ்த‌ம்பிப்ப‌தை ஒரு பெரும் ஆத‌ர‌வாக‌வே கூற‌வேண்டும். இத‌னால் அஷ்ட‌ம‌ச‌னி,விர‌ய‌ குருவையும் மீறி
க‌ட‌ன் தீர‌லாம். நோய்க‌ள் குண‌மாக‌லாம். வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ தீர்ப்பு வ‌ர‌லாம். எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர். செவ்வாயால் நிகழக்கூடிய ந்ற்பலன் கள் இரட்டிப்பாக தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

செவ்வாய் த‌ங்க‌ளுக்கு 4,11 க்கு அதிப‌தி என்ப‌தால் தாய் நோய்வாய் ப‌ட‌லாம், அவ‌ருட‌ன் உர‌ச‌ல்க‌ள் ஏற்ப‌ட‌லாம், இத‌ய‌ ப‌ட‌ப‌ட‌ப்பு அதிக‌ரிக்கும், வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் எதிரிக‌ளாக‌ தோற்ற‌ம் த‌ருவ‌ர்.வாக‌ன‌ம் தொட‌ர்பாக‌வும் சிறு ம‌ன‌க்க‌ஷ்ட‌ம் அல்ல‌து சிறு விப‌த்து ஏற்ப‌ட‌லாம். எச்ச‌ரிக்கை. அவ‌ர் 11க்கும் அதிப‌தியாக‌ இருப்ப‌தால் மூத்த‌ ச‌கோத‌ர‌ர்,ச‌கோதிரிக்கும், அவ‌ர்க‌ள் வ‌கையில் த‌ங்க‌ளுக்கும் தொல்லைக‌ள் ஏற்ப‌ட‌லாம்.


4.சிம்ம‌ம்: த‌ங்க‌ளுக்கு செவ்வாய் 4,9க்கு அதிப‌தியாவார். இவ‌ர் 11 ல் ஸ்த‌ம்பிப்ப‌து ந‌ல்ல‌தே. மேலும் த‌ங்க‌ளுக்கு குருவும் 5 ல் வ‌ந்திருக்கும் இந்த‌ நிலையில் ஏப்ர‌லுக்குள் ஒரு ட‌ர்னிங் பாயிண்டே கூட‌ ஏற்ப‌ட‌லாம். தாய்,வீடு,வாக‌ன‌ம்,க‌ல்வி,தாய்வ‌ழி உற‌வு வ‌கைக‌ளில் அனுகூல‌ம் ஏற்ப‌டும். த‌ந்தை,த‌ந்தையுட‌ன் உற‌வு,அவ‌ர‌து சொத்துக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள், ந‌ல்ல‌ அபிவிருத்திய‌ட‌யும்.

செவ்வாயால் நிகழக்கூடிய ந்ற்பலன் கள் இரட்டிப்பாக தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

குறிப்பு: ஜ‌ன்ம‌ச‌னி உட‌ல் ந‌லிவை,குழ‌ப்ப‌த்தை த‌ர‌ காத்திருக்கிறார். என‌வே எச்ச‌ரிக்கை தேவை.குரு பார்வை உங்க‌ள் ராசியின் மேல் விழுவ‌தால் உட‌ல் ந‌லிவையும்,குழ‌ப்ப‌த்தையும் த‌விர்த்து விட‌லாம். கையில் ஸ்டீல் மோதிர‌ம் அல்ல‌து வ‌ளைய‌ம் அணிய‌வும். கால் ச‌ட்டை, ச‌ட்டை ஒரே நிற‌த்தில் அணிவ‌தும் ந‌ல்ல‌து. ரொம்ப‌வே உட‌ல் சுத்த‌ம்,உடை சுத்த‌த்திற்கு மென‌க்கெட‌ வேண்டாம்.

சமகாலர்களே! உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..

சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் ம‌ட்டும‌ல்ல‌ என் பேனாவும்
உங்க‌ளுக்காக‌ குனிவ‌தாயில்லை
நான் உர‌க்க‌ சொல்லும் உண்மைக‌ளை உர‌சிப்பார்க்கும்
துணிச்ச‌ல் உம‌க்கிருந்தால்
உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..
உம‌க்கும் ம‌ற்றெந்த‌ மிருக‌த்துக்கும் வித்யாச‌மிருக்கிற‌தா என்று.
தொட‌ர்ந்து போர்த்த‌ப்ப‌ட்ட‌ துணிகள்
உம் உரோம‌ங்க‌ளை ச‌ற்றே குறைத்திருக்க‌லாம்.
டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட‌ உண‌வு
உங்க‌ள் மோப்ப‌த்திற‌னை ச‌ற்று குறைத்திருக்க‌லாம்.
பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உற‌வு உங்க‌ளிலான‌
இணை தேடும் திற‌னை குறைத்திருக்க‌லாம்.
அத‌ற்காக‌ நீங்க‌ள் ம‌னித‌ர்க‌ள் என்ற‌ முடிவுக்கு வ‌ந்த‌தால்தான்
ம‌னித‌ம் இம்ம‌ண்மிசை ம‌ண்ணாகிவிட்ட‌து.
உம்மை நீங்கள் மிருக‌ங்க‌ளாய் ஒப்புக்கொண்டால‌ன்றி
நீங்க‌ள் என்றைக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ முடியாது.
நோயை அங்கீக‌ரித்தால‌ன்றி சிகிச்சை சிக்க‌லாகிவிடும்.
உம் ம‌ல‌‌ச்சிக்க‌லுக்கே ம‌ட்டும‌ல்ல
ம‌ன‌ச்சிக்க‌ல்க‌ளுக்கும் ஒரே கார‌ண‌ம்தான்
நீங்க‌ள் மிருக‌ங்க‌ள் என்ப‌தை ம‌றுத்து
ம‌னித‌ர்க‌ளாய் மாறுவேட‌ம் போடுவ‌துதான்.
உங்க‌ளில் இருக்கும் மிருக‌த்தின் உட‌ற்ப‌சி,உட‌லுற‌வு ப‌சியை ம‌றுத்து
23.59 நிமிட‌ம் ம‌னித‌ராய் வேட‌மிட்டு ஒரு நிமிட‌த்தில் மிருக‌மாகி
த‌மிழ் நாளித‌ழில் செய்தியாகிறீர்க‌ள்.

Saturday, November 24, 2007

குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி

நைட் வாச்மேன் , தன் எஜமானருக்கு தீமை நடக்க விருப்பதை கனவில் கண்டு முன் கூட்டி சொல்கிறான். கனவு நிஜமாகிறது. எஜமானர் காப்பாற்றப்படுகிறார். பின் நைட் வாச்மேனை டிஸ்மிஸ் செய்கிறார்.இந்த கதையை எங்கோ கேட்டது போலிருக்கிறதல்லவா? நிஜம் தான் இது குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.

அட போங்கண்ணா..வர்ர கோவத்துக்கு சரியா வஞ்சிரப்போரேன்.

அய்யா குமுதம் ஆசிரியரே.. என்னாதான் உம் ஆசிரியர் குழு கிணற்றுத் தவளைகளாக இருந்தாலும் அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி என்பது கூட தெரியாது ஒரு சிறுகதையை பிரசுரித்திருக்கிறீர்கள். இதென்ன வெட்கக்கேடு.

ஜமுனாவுக்கு தெரிந்து பதறிவிட்டாள்

இடையில் ஒரு தடவை தாய் வீட்டுக்கு வந்த விஜிக்கும்,பக்கத்து வீட்டு அழகுவுக்கும் ‌ காத்ல் ஏற்பட்டது.அழகுவின் அப்பா பெரிய அதிகாரி வீடு,வாசல் யாவும் உண்டு. இந்த விஷயம் வெளியூரிலிருந்த ஜமுனாவுக்கு தெரிந்து பதறிவிட்டாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக இருக்கும் விஜி வசதியானவனை கல்யாணம் கட்டிக் கொண்டு போய் விட்டால் வீட்டு வேலைகளை ஜமுனாதானே பார்க்க வேண்டி வரும். எனவே விரைந்து வந்த ஜமுனா கொட்டி முழக்கினாள்,காதலுக்கு குறுக்கே விழுந்து தடுத்தாள். எல்லாவற்றையும் மீறி விஜி‍/அழகு தம்பதியானார்கள். ஆரம்பத்தில் அழகுவின் உறவுகள் போர் பரணி பாடினாலும் 4 மாதங்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது.

காதல் கடிமணம் புரிந்து கொண்டவர்களிடையில் வழக்கமாய் தோன்றும் பூசல்கள் விஜி அழகு தம்பதியிடையிலும் தோன்றின. விஜி 7 ஆம் வகுப்புவரை மட்டும் படித்தவள். அழகுவின் அம்மாவே படித்து பட்டம் வாங்கி டீச்சராக வேலை பார்த்தவள்.திருமண வாழ்க்கை, மனைவி இத்யாதி குறித்த பார்வையே வேறாக இருந்தது. விஜி கனவு கண்ட திருமண வாழ்வில் மீன்,கருவாடு,டி.வி,சினிமா,புதிய உள்பாவாடை தவிர வேறு எதற்கும் இடமில்லாமல் இருந்தது. இந்நிலையில் க‌ச‌ப்புக‌ள் தோன்றுவ‌து ச‌க‌ஜ‌ம் தானே. விஜி முட்டாள் த‌ன‌மாய் த‌ன் ம‌ன‌க்குறைக‌ளை ஜ‌முனாவிட‌ம் கொட்டினாள். ஜ‌முனாவுக்கு இது வ‌ச‌தியாக‌ போய்விட்ட‌து. ஏற்கென‌வே குழ‌ப்ப‌த்தில் இருந்த‌ விஜியை மேலும் குழ‌ப்பி அவ‌ளை அழ‌குவிட‌மிருந்து பிரித்து மீண்டும் ச‌ம்ப‌ள‌மில்லாத‌ வேலைக்காரியாக்கி விட்டாள்.


அழ‌குவை ப‌ற்றியும் 4 வ‌ரிக‌ள் சொல்லியாக‌ வேண்டும். எப்ப‌டியெல்லாம் வாழ‌க்கூடாதோ அப்ப‌டியெல்லாம் வாழ்ந்து பார்த்துவிட்டு ,ஆடி முடித்து இற‌ங்கி வ‌ந்து இப்ப‌டித்தான் வாழ‌வேண்டும் என்று வாழ்ந்து வ‌ருப‌வ‌ன். ஜ‌முனாவின் " நாலு நாள் காய‌ப்போட்டா ஃபார்முலாவெல்லாம் எப்ப‌டி வேலை செய்யும்.

ஜ‌முனா "நீ பாரு அழ‌கு வ‌ருவான். உன்னை திருப்பிய‌னுப்ப‌ சொல்லி என் காலை பிடிச்சு கெஞ்சுவான். உன்னை க‌ண்ணுக்குள்ள‌ வ‌ச்சு பார்த்துக்க‌ற‌ மாதிரி நான் ப‌ண்றேன்" என்று ஃபிலிம் காட்டி வ‌ந்தாள்.

Friday, November 23, 2007

சுக்கிரன் கேது சேர்க்கை

எந்த லக்னமானாலும் சரி மிகுந்த கேட்டை தரும் சேர்க்கை இது. சுக்கிரன் எதிர்பாலினர் மீதான கவர்ச்சி,அவர்களுடனான நட்பு,வீடு,வாகனம்,அறுசுவை உணவு,தூக்கம்,உடலுறவு இப்படி மனிதனுக்கு சுகம் தரும் எல்லா விஷயங்களுக்கும் அதிபதி சுக்கிரன். இவருடன் கேது சேருவது மேற்படி சுகங்களுக்கு தடை ஏற்படுத்துவதோடு இளமையில் இவற்றின் மீது அதீத கவர்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை சிக்கல்மயமாக்கும் வாய்ப்பு அதிகம். கேது என்பவர் சன்யாசத்தை தரும் கிரகமாவார். எனவே தம்பதிகள் (வேலை நிமித்தமோ அல்லது மன வேறுபாடு காரணமாகவோ) பிரிந்து வாழ நேரலாம். வாழ்வின் பிற்பகுதியில் ஏறக்குறைய சன்யாசியை போல் வாழ வேண்டி வரலாம்.

இதற்கு பரிகாரம்:
கணபதியை தவிர வேறு தெய்வங்களை வழிபடக்கூடாது. இயன்றால் கணபதிய கூட தவிர்த்து விட்டு தியான வழியை மட்டும் பின்பற்றிய படி சன்யாசியை போல் வாழவேண்டும். இதர மத கிரந்தங்களை படித்தல்,தர்கா,சர்ச் செல்லுதலும் நலம் பயக்கும். வீட்டில்,பீரோவில்,பர்ஸில் ட்ராகன் படம் வைத்துக் கொள்ளவும், பாம்பு போன்ற மோதிரம் அணியவும். வைடூரியம் பதித்த மோதிரம் அணியவும். பாம்புகள்,கொள்ளையர்,கடத்தல்காரர்கள்,யோகிகள்,சன்யாசிகள் குறித்த படங்கள் பார்க்கவும்,புத்தகங்கள் படிக்கவும்.

குறிப்பு: இந்த பரிகாரங்கள் செய்தால் மேற்சொன்ன தீயபலன் கள் குறைவதோடுவீடு,வாகனம் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் மறைந்து நல்ல தூக்கம்,அறுசுவை உணவு பெற்று சற்றே நிம்மதியாய் வாழலாம்.

Thursday, November 22, 2007

அனைவருக்கும் தனயோகம்

 
ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.


ஆம் ..மிக சாதாரண ஜாதக‌த்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் ம‌ட்டும் ஈடுப‌ட்டு த‌ன‌யோக‌த்தை அனுப‌விப்ப‌தை காண‌முடிகிற‌து. ம‌ற்ற‌ 8 கிர‌க‌ங்க‌ள், 11 பாவ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விஷ‌ய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ள் இருந்தாலும் த‌ன‌ யோக‌ம் ம‌ட்டும் தொட‌ர்கிற‌து.


அதே நேர‌த்தில் 11 பாவ‌ங்க‌ள்,8 கிர‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ நிலையில் இருந்தாலும் அவை கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் விஷ‌ங்க‌ளையெல்லாம் விட்டு விட்டு த‌ம் ஜாத‌க‌த்தில் தீய‌ப‌ல‌ன் த‌ரும் ஒரே ஒரு பாவ‌ம் அல்ல‌து ஒரே ஒரு கிர‌க‌த்தின் கார‌க‌த்துவ‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு உல‌கே மாய‌ம் என்று பாடி, சோக‌ம் கொண்டாடுவ‌தையும் காண‌முடிகிற‌து. இந்த‌ க‌ட்டுரைத் தொட‌ருக்கான‌ அடிப்ப‌டை தத்துவ‌ம் இதுதான்…….

நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..

நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள‌ வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி ச‌ற்று விரிவாக‌ பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.

லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.

3ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஜாத‌க‌ங்க‌ளை ஜோதிட‌ரிட‌ம் காட்டி அல்ல‌து தாங்க‌ளே பார்த்து அவ‌ர்களில் யாருடைய‌ ஜாத‌க‌ம் ப‌ல‌ம் வாய்ந்த‌தாக‌ உள்ள‌தோ அவ‌ர்க‌ளுடைய‌ யோச‌னைப்ப‌டி,அவ‌ர்க‌ளின் கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.(குறிப்பிட்ட‌ ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியின் ராசி த‌ங்க‌ளுக்கு வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக‌ இருக்க‌வேண்டும்)

4ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தாய்,தாய் வ‌ழி உற‌வுக‌ளை காடுமிட‌ம். என‌வே சென்ற‌ ப‌த்தியில் கூறிய‌ ப‌டி தாய்,தாய் வ‌ழி உற‌வுகளின் ஜாத‌கங்களை,ராசிகளை ப‌ரிசீலி‌த்து அதில் தேர்வு பெறுப‌வ‌ரின் யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

5ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது புத்தி,புத்திர‌ர்க‌ளை காட்டுமிட‌ம். என‌வே டேபிள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க் ம‌ட்டும் செய்து வ‌ர‌வேண்டும். வ‌ய‌து வ‌ந்த‌ ம‌க‌ள்/ம‌க‌ன் இருந்தால் அவ‌ர்க‌ள‌து யோச‌னை,துணையை நாட‌லாம்.(அவ‌ர்க‌ளின் ஜாத‌க‌ங்க‌ள் சுப‌ப‌ல‌மாயிருப்ப‌து முக்கிய‌ம். அவ‌ர்க‌ளின் ராசி தங்கள் ராசிக்கு வ‌சிய‌ம் அல்ல‌து ந‌ட்பாக‌ இருப்ப‌தும் முக்கிய‌ம்). மேலும் பெய‌ர் ,புக‌ழுக்கு ஆசைப்ப‌டாது,புத்திர‌,புத்திரிக‌ள் த‌ம் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ வேண்டும் என்று எண்ணாது வாழ‌வேண்டும்)

7ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது க‌ண‌வ‌ன்/ம‌னைவியை காட்டுமிட‌ம். கணவன்/ம‌னைவியின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

9ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

11ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.
 
 
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.


ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர‌ ஸ்தான‌ம். டேபுள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க்கில் ஈடுப‌ட‌க்கூடாது. அதிர்ஷ்ட‌த்தை ந‌ம்பி எந்த‌ செய‌லிலும் இற‌ங்க‌ கூடாது.சொந்த‌ யோசனையுட‌ன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன‌தே வ‌ழி என்று செய‌ல் ப‌ட‌க்கூடாது."தென்னைய‌ பெத்தா/பிள்ளைய‌ பெத்தா க‌ண்ணீரு!" என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் வ‌ரிக‌ளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வ‌யிறும் வேறு" என்று உண‌ர்ந்து வாழ‌வேண்டும். பிள்ளைக‌ள் மேல் ப‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ கூடாது.


ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது ம‌னைவியை காட்டுமிட‌ம். வீதி வ‌ரை ம‌னைவி என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் த‌த்துவ‌பாட‌ல் வ‌ரி. இற‌ப்புக்கு பின் ந‌ம்முட‌ன் வ‌ர‌ப்போவ‌து இப்பிற‌வியின் நினைவுக‌ளே. என‌வே உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்று வாழ‌வேண்டும். ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எல்லாம் பிற‌ப்பிலேயே அமைந்துவிடுகின்ற‌ன‌. ஆனால் க‌ண‌வ‌ன்/ம‌னைவி என்ற‌ உற‌வு விசயத்தில் ம‌ட்டும் ந‌ம‌க்கு இறைவ‌ன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை த‌ருகிறான். என‌வே 7 ஆம் பாவ‌ம் கெட்டிருப்பின் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ தேர்வு செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

ஒவ்வொரு ஆணும் உல‌க‌ அழ‌கியே ம‌னைவியாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் ம‌ன்ம‌த‌னே த‌ன் க‌ண‌வ‌னாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் ய‌தார்த்த‌த்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவ‌ம் கெட்டுள்ள‌ ஆண்,பெண்ணுக்கு அவ‌ர்க‌ள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது ந‌ர‌க‌மாக‌ மாறிவிடுகிறது. அதே நேர‌ம் 7 ஆம் பாவ‌ம் கெட்டிருந்தாலும் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ ஏற்று ஒற்றுமையுட‌ன் வாழ்ந்துவ‌ருவ‌தை காண‌முடிகிற‌து.

9ஆம் பாவம் கெட்டிருந்தால்:

சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.
 
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுய‌முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைப்பீர்க‌ள்.(அதே நேர‌ம் தைரிய‌ம் அள‌வுக்கு அதிக‌மாகிவிடாம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்) பிர‌யாண‌ங்க‌ளால் ஏற்ப‌டும் நோய்க‌ளான‌
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வ‌ராது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்க‌ள் தான் இறுதி வாரிசாக‌ இருக்க‌ வாய்ப்பு அதிக‌ம். இத‌ர‌ கிர‌க‌ங்க‌ளின் பாதிப்பால் உங்க‌ளை அடுத்து வாரிசுக‌ள் பிற‌ந்தாலும் அவ‌ர்க‌ளை விட‌ நீங்க‌ள் உய‌ர்ந்த‌ நிலையில் இருப்பீர்க‌ள். என்ன‌ ஒரு பிர‌ச்சினை என்றால் வ‌யதாக‌ வ‌ய‌தாக‌ காதுக‌ள் தான் ட‌ப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர்.க‌ட‌ன் க‌ள் தீரும்,நோய்க‌ள் குண‌மாகும்.கோர்ட்டு வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ம் ஏற்ப‌டும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு  துஸ்தான‌ம் என்ப‌தால் இது ப‌ல‌ம் பெறுவ‌து ஆயுட்குறைவை காட்டும். என‌வே இந்த‌ பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால் திடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்த‌துடன் தானும் கெட்டார்."

"ஆன‌ முத‌லில் அதிக‌ம் செல‌வானால் எல்லோர்க்கும் க‌ள்ள‌னாய்,ந‌ல்லோர்க்கும் பொல்ல‌னாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரிய‌ம் தீர்ந்து விட்டால் சுந்த‌ரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்க‌ள் அறியாத‌ ஒன்ற‌ல்ல‌ .. ஆக‌ தூக்க‌ம்,செல‌வு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உய‌ர்வு ஏற்ப‌டும் என்ப‌து உறுதி. இவை குறைய‌ 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆக‌வேண்டும். என‌வே தான் மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள் கெட்டிருந்தால் த‌ன‌யோக‌ம் பெற‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று கூற‌வில்லை. மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள்
வாழ்வில் தொல்லைக‌ள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக‌ த‌ன‌யோக‌ம் ஏற்ப‌ட்டு விடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, November 21, 2007

இருட்டடிப்பு செய்யப்பட்ட என் படைப்புகள்:

திருவேங்க‌ட‌ன் தீந்த‌மிழ் பாம‌ல‌ர் மாலை இது ஒரு ‌ க‌விதை தொகுப்பு:
ஏழும‌லையானை எண்ணி உருகி,உருகி அவ‌ன் அருள‌முதை ப‌ருகி ,ப‌ருகி எழுதியகவிதைகள் அடங்கியதாகும். தேவ‌ஸ்தான‌த்தார் ஒரு முறை திருவேங்க‌ட‌ன் குறித்த‌ ப‌டைப்புக‌ள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்ட‌ன‌ர். அத‌ற்கு அச்சான‌,அச்சாகாத‌ ப‌டைப்புக‌ளை வ‌ர‌வேற்ற‌ன‌ர். நான் மேற்சொன்ன‌ க‌விதை தொகுதியை அனுப்பி வைத்தேன். அந்த‌ ப்ராஜ‌க்டின் த‌லைவ‌ர் என் ப‌டைப்புக‌ளை பெரிதும் பாராட்டிய‌தோடு தி.தி.தேவ‌ஸ்தான‌த்தாரின் நிதி உத‌வியுட‌ன் அச்சிட‌ முய‌ற்சிக்கும்ப‌டி கூறி அத‌ற்கான‌ விண்ண‌ப்ப‌த்தையும் அனுப்பினார். நானும் உட‌னே விண்ண‌ப்பித்தேன். ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்தில் அற‌ங்காவ‌ல‌ர் குழு அத‌ற்கு நிதி உத‌வி வ‌ழ‌ங்க‌ அனும‌தி த‌ர‌வில்லை என்ற நல்ல ப‌தில் கிடைத்த‌து.

பத்திரிக்கை ஆசிரியர்களால்/பெரிய மனிதர்களால் தேர்ந்தெடுக்கவும் படாமல்,திரஸ்கரிக்கவும் படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட என் படைப்புகள்:
மலரவன் என்ற புனைப்பெயரில் என்னால் எழுதப்பட்ட கவிதை தொகுப்புகள்:
1. தீய்ந்து போன தீக்குச்சிகள் 2.நிதர்ஸனங்கள்

சுஜாதாப்ரியன் என்ற புனைப்பெயரில் என்னால் எழுதப்பட்ட குறுநாவ‌ல்க‌ள்:

1.ஆப‌த்தான‌ வ‌ளைவுக‌ள் 2.ப்ள‌ட் ரோஸ்

Tuesday, November 20, 2007

எல்லோருக்கும் தன யோகம் ..தொடர்ச்சி

ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.


ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர‌ ஸ்தான‌ம். டேபுள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க்கில் ஈடுப‌ட‌க்கூடாது. அதிர்ஷ்ட‌த்தை ந‌ம்பி எந்த‌ செய‌லிலும் இற‌ங்க‌ கூடாது.சொந்த‌ யோசனையுட‌ன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன‌தே வ‌ழி என்று செய‌ல் ப‌ட‌க்கூடாது."தென்னைய‌ பெத்தா/பிள்ளைய‌ பெத்தா க‌ண்ணீரு!" என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் வ‌ரிக‌ளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வ‌யிறும் வேறு" என்று உண‌ர்ந்து வாழ‌வேண்டும். பிள்ளைக‌ள் மேல் ப‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ கூடாது.


ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது ம‌னைவியை காட்டுமிட‌ம். வீதி வ‌ரை ம‌னைவி என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் த‌த்துவ‌பாட‌ல் வ‌ரி. இற‌ப்புக்கு பின் ந‌ம்முட‌ன் வ‌ர‌ப்போவ‌து இப்பிற‌வியின் நினைவுக‌ளே. என‌வே உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்று வாழ‌வேண்டும். ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எல்லாம் பிற‌ப்பிலேயே அமைந்துவிடுகின்ற‌ன‌. ஆனால் க‌ண‌வ‌ன்/ம‌னைவி என்ற‌ உற‌வு விசயத்தில் ம‌ட்டும் ந‌ம‌க்கு இறைவ‌ன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை த‌ருகிறான். என‌வே 7 ஆம் பாவ‌ம் கெட்டிருப்பின் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ தேர்வு செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

ஒவ்வொரு ஆணும் உல‌க‌ அழ‌கியே ம‌னைவியாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் ம‌ன்ம‌த‌னே த‌ன் க‌ண‌வ‌னாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் ய‌தார்த்த‌த்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவ‌ம் கெட்டுள்ள‌ ஆண்,பெண்ணுக்கு அவ‌ர்க‌ள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது ந‌ர‌க‌மாக‌ மாறிவிடுகிறது. அதே நேர‌ம் 7 ஆம் பாவ‌ம் கெட்டிருந்தாலும் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ ஏற்று ஒற்றுமையுட‌ன் வாழ்ந்துவ‌ருவ‌தை காண‌முடிகிற‌து.

9ஆம் பாவம் கெட்டிருந்தால்:

சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.

ஆத்தாளுக்கு அல்ட்டிமேட்டம் !

த‌ பாரும்மா உன் கதை..உன்னை ப்ரமோட் பண்ற போர்வைல தங்களை ப்ரமோட் பண்ணிக்கற பார்ப்பனர் கதை எல்லாமே தெரியும். என்னமோ புது பெண்டாட்டி மாதிரி சீன் எல்லாம் காட்டறியே! நீ என் தாய்ங்கற சங்கதிய மறந்துட்டயா.. ஆமாம் இருந்தாலும் இருக்கும் ஒன்னா ரெண்டா ..மில்லியன் ட்ரில்லியன் கணக்கா பெத்தவ நீ. உனக்கெங்கே ஞாபகமிருக்கபோவுது. அடிக்கு அடி..பேச்சுக்கு பேச்சுன்னு வாழ்ந்துகிட்டிருந்தேன் இப்பா எல்லாம் ஆத்தாளே பாத்துப்பான்னு விட்டுர்ரன். இது என் கையாலாகாத்தனம்னு நீ நினைச்சுட்டாப்ல இருக்கு.

நீ ட்ராகுலா மாதிரி என் ரத்தத்தை குடிக்கற கதை தெரியும். இருந்தாலும் உன்னை விடாம வச்சிருக்கிறது மனித ஆழ்மனதில் இருக்கும் அடிப்படை கோரிக்கைதான் . ஒன்னு சாகனும் இல்லே சாகடிக்கனும். சாகடிச்சா கர்மம் கூடும். செத்தால் கர்மம் தொலயும்.

என் பார்வையில எந்த மிருகம்,புழு ,பூச்சிய விட நீசமான பிறவி மனித பிறவிதான். இந்த குறைபட்ட மனிதர்களால கொல்ல படறத விட உன் கையால சாகறதே பெருமைன்னுதான் உன்னை வணங்கறது. நீ என்னை காப்பாத்துவே..கடை தேற்றுவேங்கற பேராசையெல்லாம் எனக்கு கிடையாது. அதை கொடு/இதை கொடுன்னு கேக்கற ஜாதி நானில்லே. என் தன்மானத்தை மட்டும் காப்பாத்துன்னு கூட கேக்கலை. காப்பாத்திக்க விடுன்னுதான் கேட்டுகிட்டு இருந்தேன் . அதை கூட பல சந்தர்ப்பத்துல த்ராட்டுல விட்டுட்ட. நானும் கலைஞர் மாதிரி நடந்தவை நடந்தவையா இருக்கட்டும் நடப்பவை நல்லவையா இருக்கட்டும்/மறப்போம் மன்னிப்போம்னு இருந்துட்டன்.

நீ என்னமோ ஜூனியர்களை ராக் பண்ற சீனியர் மாதிரி பில்டப் கொடுக்கறே..என‌க்கு ,மனிதர்களை புரிஞ்சுக்கறது தான் கஷ்டம். உன்னை உள்ளபடி புரிஞ்சு வச்சிருக்கேன். என்ன ஒரு லொள்ளுன்னா சிலசமயம் உன் பாஷை புரியாம போயிருது. இருந்தாலும் எப்படியோ இட்டுகட்டி புரிஞ்சிகிட்டு சமாளிச்சிக்கிட்டு தான் வ‌ரன், நானும் நல்லா கவனிக்கிறேன் நான் ஏதாவது எம்.ஜி.ஆர் வேலைல இறங்கும்போது தான் லொள்ளு பண்றே. சும்மா தின்னு,தூங்கி ஊர் சுத்தறப்பல்லாம் எந்த பிரச்சினையும் கொடுக்கறதில்லே. நீ என்னதான் நினைச்சிருக்கே..
நமக்குள்ள என்ன அக்ரிமென்ட்டு? அம்மா நீ என்னை காப்பாத்து/நான் இந்தியாவுல வறுமைகோட்டுக்கு கீழ வாழும் 40 கோடி மக்களை நான் காப்பாத்த முயற்சி பண்றேன் அதுக்கு நீ சகாயம் பண்ணனுங்கறது தான். நீ இந்த விஷயத்துல சகாயம் பண்ண சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணிடலாம். கை கொடுத்த சந்தர்ப்பங்கள் ஆயிரமாயிரம். எப்பப்பாரு ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்டுதானா?

இதெல்லாம் நல்லால்லே..நல்லாவே இல்லே.. ஆமா சொல்லிப்புட்டேன்.


குறிப்பு:(இப்ப 30 கோடி தாங்கறாங்க/இது நிச்சயம் பொய்யாதான் இருக்கும்/சித்தூருலயே இந்த பத்து வருசத்துல மேலும் ஆயிரம் குடும்பமாவது பிழைப்பு கெட்டு நடுத்தெருவுக்கு வந்திருக்கே தவிர உருப்பட்ட குடும்பங்களை விரல் விட்டு எண்ணிடலாம்)

வறுமையை விரட்ட நான் தீட்டின ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் ஏறக்குறைய கோமால இருக்கு.(விவரங்களுக்கு: //www.tamilvasam.blogspot.com//) சரி ஒழியட்டும்

நீ கொடுத்த ஜோதிஷ ஞானத்தை(?) உபயோகிச்சு வறுமையை விரட்டலாம்னு எல்லாருக்கும் தனயோகம் எழுத ஆரம்பிச்சா ரொம்பத்தான் லொள்ளு பண்றே

நான் ராத்திரி 10.30 மணிக்கு தூங்கற ஜாதியா ..நடுராத்திரி வரைக்கும் அதை இதை உருட்டிக்கிட்டு நல்லா விடிஞ்ச பிறகு தூங்க முயற்சி செய்து ஃபெயிலாகிற ஜாதி. என்னை ராத்திரி 10.30 க்கெல்லாம் சதி பண்ணி தூங்க வைக்கிறே..
ஏதோ ராமனுக்கு ஆஞ்சனேயர் மாதிரி என் மகள் எனக்கு துணையாயிருந்தாள். அவளையும் பிரிச்சுட்ட. பணமா வந்தா நாசமா போகுது.இல்லே சோத்துக்கே லாட்டரி.

த‌ பாரு..ஜோதிஷ பூமில தொடர் வந்தது. ஜனம் என் நவீன பரிகாரங்களை ஃபாலோ பண்ணி வறுமைலருந்து ரிலீசாயிட்டாங்களா இல்லயே.

அதே மாதிரிதான் எல்லோருக்கு தனயோகம் சீரியலும். நீ ஏன் பயப்படறே..உன் சதிதான் வெல்லும். தெரிஞ்ச கதைதான். அதுக்காக நான் சும்மா இருக்க முடியுமா?

ஜாண் பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளையில்லியா?


உனக்கு என்னை விட்டா வேற கதியில்லே..எனக்கு உன்னைவிட்டா வேற கதியில்லே
ந‌ம‌க்குள்ள‌ என்ன‌ த‌க‌ராறு. நான் செய்ய‌ நினைக்க‌ற‌தை செய்ய‌ விடு. நீ செய்ய‌ற‌த‌ செய்.


அன்னமய்யா கீர்த்தனை ஒன்ரின் ராகத்துக்கு தமிழில் எழுதிய பாடல்:

வாடுமோ ..வாடுமோ உனக்கென தொடுத்திட்ட தீந்தமிழ் பாமலர் மாலையே
எனக்கென நான் கொண்ட காவலே நீ தான் பெருமானே.


உயர்விலும் தாழ்விலும் என்னை துரத்துது என் பகையே

அமுதினை கடைந்திடும் வேளையிலாங்கே கூர்மத்தின் வடிவினில் நின்றவனே
வரம் தந்து ஈசனும் தவிக்கின்ற வேளையில் மோகினியாக வந்தவனே

தூணிலும் துரும்பிலும் இருப்பவன் நீயென்று தந்தைக்கு கூறிய பிரகலாதன்
துதித்திட தூணினை பிளந்து வந்தாயே எண்ணவும் குளிருது என்மனம்

கயலென வந்தவன் நீயன்றோ
உயிர்களை காத்தவன் நீயன்றோ

Sunday, November 18, 2007

அனைவருக்கும் தனயோகம்

முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.

லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.

3ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஜாத‌க‌ங்க‌ளை ஜோதிட‌ரிட‌ம் காட்டி அல்ல‌து தாங்க‌ளே பார்த்து அவ‌ர்களில் யாருடைய‌ ஜாத‌க‌ம் ப‌ல‌ம் வாய்ந்த‌தாக‌ உள்ள‌தோ அவ‌ர்க‌ளுடைய‌ யோச‌னைப்ப‌டி,அவ‌ர்க‌ளின் கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.(குறிப்பிட்ட‌ ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியின் ராசி த‌ங்க‌ளுக்கு வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக‌ இருக்க‌வேண்டும்)

4ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தாய்,தாய் வ‌ழி உற‌வுக‌ளை காடுமிட‌ம். என‌வே சென்ற‌ ப‌த்தியில் கூறிய‌ ப‌டி தாய்,தாய் வ‌ழி உற‌வுகளின் ஜாத‌கங்களை,ராசிகளை ப‌ரிசீலி‌த்து அதில் தேர்வு பெறுப‌வ‌ரின் யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

5ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது புத்தி,புத்திர‌ர்க‌ளை காட்டுமிட‌ம். என‌வே டேபிள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க் ம‌ட்டும் செய்து வ‌ர‌வேண்டும். வ‌ய‌து வ‌ந்த‌ ம‌க‌ள்/ம‌க‌ன் இருந்தால் அவ‌ர்க‌ள‌து யோச‌னை,துணையை நாட‌லாம்.(அவ‌ர்க‌ளின் ஜாத‌க‌ங்க‌ள் சுப‌ப‌ல‌மாயிருப்ப‌து முக்கிய‌ம். அவ‌ர்க‌ளின் ராசி தங்கள் ராசிக்கு வ‌சிய‌ம் அல்ல‌து ந‌ட்பாக‌ இருப்ப‌தும் முக்கிய‌ம்). மேலும் பெய‌ர் ,புக‌ழுக்கு ஆசைப்ப‌டாது,புத்திர‌,புத்திரிக‌ள் த‌ம் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ வேண்டும் என்று எண்ணாது வாழ‌வேண்டும்)

7ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது க‌ண‌வ‌ன்/ம‌னைவியை காட்டுமிட‌ம். கணவன்/ம‌னைவியின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

9ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

11ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

அனைவருக்கும் தனயோகம்

ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.


ஆம் ..மிக சாதாரண ஜாதக‌த்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் ம‌ட்டும் ஈடுப‌ட்டு த‌ன‌யோக‌த்தை அனுப‌விப்ப‌தை காண‌முடிகிற‌து. ம‌ற்ற‌ 8 கிர‌க‌ங்க‌ள், 11 பாவ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விஷ‌ய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ள் இருந்தாலும் த‌ன‌ யோக‌ம் ம‌ட்டும் தொட‌ர்கிற‌து.


அதே நேர‌த்தில் 11 பாவ‌ங்க‌ள்,8 கிர‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ நிலையில் இருந்தாலும் அவை கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் விஷ‌ங்க‌ளையெல்லாம் விட்டு விட்டு த‌ம் ஜாத‌க‌த்தில் தீய‌ப‌ல‌ன் த‌ரும் ஒரே ஒரு பாவ‌ம் அல்ல‌து ஒரே ஒரு கிர‌க‌த்தின் கார‌க‌த்துவ‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு உல‌கே மாய‌ம் என்று பாடி, சோக‌ம் கொண்டாடுவ‌தையும் காண‌முடிகிற‌து. இந்த‌ க‌ட்டுரைத் தொட‌ருக்கான‌ அடிப்ப‌டை தத்துவ‌ம் இதுதான்…….

நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..

நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள‌ வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி ச‌ற்று விரிவாக‌ பார்ப்போம்.

Thursday, November 15, 2007

நம் தாத்தாக்களையும் பெற்றவள்.

நம் தாத்தாக்களையும் பெற்றவள். ..மகோதரி(மகா‍/பெரிய,உதரம்/வயிறு)
ஆனால் கிழவிகளாகவே பிறக்கும் எந்த பேத்தியை விடவும் இளையவள்

அவளை அன்னை என்று அகிலம் கூறும். நான் கூறுவேன் அவள் ஒரு சதிகாரி.
ஆம் ..

முகிலுக்கு நீர் தந்தவள்/அகிலுக்கு மணம் தந்தவள்.

என்னை சரணடைந்தால் நானுன் கை பொம்மை என்ற சத்தியத்தை இத்தனை சாவகாசமாகவா உணர்த்துவது.


அவ‌ள் யார்? க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர்/விண்ட‌வ‌ர் க‌ண்டில‌ர்

ஏன‌ய்யா ஊத்த‌றிங்க‌..என் வாழ்விலான‌ நேற்றையும் இன்றையும் பாருங்க‌ள்
அவ‌ற்றிற்கிடையிலான‌ வித்யாச‌மே அவ‌ள் இருப்புக்கு சாட்சி.

அவ‌ள் கால‌டியோசை என் செவிக‌ளுக்கெட்டாம‌ல் இருக்க‌லாம்.

இப்புவிமிசை என்னை ந‌ட‌த்துவ‌தே அவ‌ள் தானே !


அவ‌ள் வளை‌யோசை எனக்கு கேட்காதிருக்க‌லாம் ..இன்னும‌வ‌ள் என்னை முழுமையாக‌ மீட்காதிருக்க‌லாம்.

அத‌ற்காக‌ அந்த‌ மாய‌க்க‌ர‌த்தாளின் இருப்பை ம‌றுக்க‌ முடியுமா?


எத்த‌னை எத்த‌னை வ‌டிவ‌ங்க‌ள். தன் மீது பூசப்பட்ட பார்ப்ப‌ண‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌ க‌ளிம்புக‌‌ளையெல்லாம் மீறி ஒவ்வொன்றும் ஜொலிப்ப‌தை காண‌ ஆயிர‌ம் க‌ண் வேண்டும். அதையும் அவ‌ளிட‌ம் தான் இர‌வ‌ல் பெற‌ வேண்டும்.

கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம்

இத்தனை வருடங்கள் ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே வாழ்ந்து விட்டீர்கள். உங்களுக்கு சமமான பெயர், புகழ்,தகுதி பெற்றவர்கள் எல்லாம் மறைந்து விட்டனர். உங்கள் இடமே மட்டுமல்லாது தங்கள் மகன் ஸ்டாலினின் இடமும் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இனி சர்வைவல் ப்ராப்ளம் என்பது உங்களுக்கில்லை. எதிரியைவிட ஒரு நாள் அதிகம் வாழ்ந்துவிட்டாலும் அது தான் வெற்றி. அந்த வகையில் பார்த்தால் எப்போதோ வென்று விட்டீர்கள். இனி சரித்திரத்தில் ஒரு இடத்தை வெல்ல நீங்கள் ஏன் முயலக்கூடாது.

நதிகளை இணைக்க சோனியா அம்மையாருடன் பேசி வரும் தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் தொலைநோக்கு தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

(திட்டத்தின் முக்கிய அம்சங்கள)
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அணைத்தையும் அதற்கு உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அம்மையாரின் ஆதரவைப் பெற அவர்களுக்கு ஜாதகம் எல்லாம் கணித்து பலன் எழுதி அனுப்பியவன் நான். என் கணிப்பு நிஜமானதும்,அதற்கு அம்மையார் தேங்க்ஸ் கார்டு அனுப்பியதும் உண்மை.(அதையிம் ஸ்கான் செய்து என் வலைப்பூவில் வைத்துள்ளேன்.(கவிதை07)

தங்கள் நீண்ட‌ வாழ்வில் எத்தனையோ நல்லது,கெட்டதுகளை பார்த்திருப்பீர்கள். அரசு அலுவலகங்களில் வைக்கப் படும் பிரதமர்களின் படம் மாறும். காந்தியடிகளின் படம் மாறாது.

காந்தியடிகளின் படத்தோடு தங்கள் படமும் நிரந்தரமாக இருக்க இந்த திட்டத்தை பற்றி சோனியா அம்மையாருக்கு கூறுங்கள்.

(ரகசியம்: தினகரன் இதழ் கடந்த சட்டம‌ன்ற தேர்தல்கள் குறித்த ஜோதிட கணிப்புகளை வெளியிட்ட போது..தங்கள் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும் என்றும் ராமதாசு தாங்கொணாத குடைச்சல் கொடுப்பார் என்றும் உறுதியாக கணித்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். ஆனால் தினகரன் என் கணிப்பை வெளியிடவில்லை. இன்னும் என்னிடம் நான் அனுப்பிய குரியர் தபாலுக்கான ரசீது உள்ளது)

Wednesday, November 14, 2007

ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் காண்பது மாதிரி ஒரு வயசு கோளாறுதான்

ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் காண்பது மாதிரி ஒரு வயசு கோளாறுதான்

நானும் ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் மாதிரி ஒரு வயசு கோளாறுதான்
அதை தாண்டி வரணும். வராதவங்க இன்னும் ரஜினி ரசிகராவே இருந்துர்ராங்க. என்னதான் நான் மானசீகமா முதிர்ச்சி அடைஞ்சு ரஜினியை சீரியஸா எடுத்துக்க கூடாதுனு நினைச்சாலும் அவருக்கு அவமானம் நடக்கும்போது நான் நடை பழகிய நடை வண்டியை யாரோ அடுப்பெரிக்க உபயோகிக்கறாப்ல ஒரு ஃபீலிங்க். ரஜினிக்கு ஒரே வார்த்தை சொல்ல விரும்பறேன்.
ரஜினி சார்..சைலன்ஸ் ப்ளீஸ் ! ஏன் இப்படி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிறிங்க.

தெலுங்கில் ஒரு சூப்பர் பழமொழி உண்டு. *நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி. அதாவது
வாய் நல்லதாயிருந்தா ஊர் நல்லதாவே இருக்குமாம். மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுலயே ஜகா வாங்கிகிட்டது நல்லதா போச்சு. இல்லாட்டி இன்னைக்கு ரஜினி உளர்ர உளறலுக்கெல்லாம் வக்காலத்து வாங்கி செத்து சுண்ணாம்பாயிருக்கனும். பார்ப்பன,மேற்கத்திய கலாச்சாரத்தை தமிழர்கள் மேல் திணித்து காசு பொறுக்கிய மணிரத்தினத்துக்கு வக்காலத்து வாங்கினது முதல் இன்றைய சித்தர் ஆட்சி வரை ரஜினியில் லொள்ளு தாங்க முடியாததாக இருக்கிறது.

அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உழைத்து வாழும் சாமானிய மக்களுக்கு சமாதி கட்டப்பட்ட போதெல்லாம் கட்டின பசுவாய் இருந்த ரஜினி சீறியெழுந்ததும், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஆட்சி மாறியதும் சாதனை என்று ரஜினியும்,ரஜினி ரசிகர்களும் இன்றுவரை நினைத்து வருகிறார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் ரஜினியின் சாதனைகள்(?) தொடர்கின்றன.

நம் வீட்டில் வைத்து சில காலம் போஷித்த பிறகு லொள்ளு தாங்க முடியாமல் துரத்திவிட்ட தூரத்து சொந்தமான கிழம் ஒன்று ஆற்றங்கரையில் நாயடி பேயடி வாங்கும் போது மனசு அடித்துக் கொள்ளுமே அது போல் என் மனசு அடித்து கொள்கிறது. கடைசி வேண்டு கோள் ! மிஸ்டர் ரஜினி கொஞ்சம் பொத்திக்கிட்டு இருங்க‌
சிவாஜி படம் ரிலீசான புதிதில் உள்ளிட்ட என் வலைப் பதிவை மீண்டும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். படித்துப் பாருங்கள் ! ரஜினி சாருக்கு யாராவது சொல்லிவைங்கப்பா ..கொஞ்சம் ..பொத்திக்கிட்டு இருக்க சொல்லுங்கப்பா
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.

ரஜினி: வாங்க மிஸ்ட‌ர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...

பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே

சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..

ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?

சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?

ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி

பாலா: யம்மாவா..

ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல‌

சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.

ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்ன‌து அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?

பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.

ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....

ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?

ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்

ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?

ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து

ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..

ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு

ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே

ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க

ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..

ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..

ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?

ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?

சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்

ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?

ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!

பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி

ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?

பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!

சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்

ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்

ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே

ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..

ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்

சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்

பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..

ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மக‌ளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா

ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே

ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.

சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..

ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்க‌ளாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்க‌ளாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

மனித உயிர்கள் கொள்ளை போய் கொண்டிருக்கும்போது

என்னைப் பொருத்தவரை உயிர் ஒன்றுதான் நிஜம். மொழி , இலக்கியம்,அரசியல் எல்லாம் முக்கியம் தான். ஆனால் மனித உயிர்கள் கொள்ளை போய் கொண்டிருக்கும்போது நாம் உயிர் பிரச்சினைகளை விட்டு இதர பிரச்சினைகள் பற்றி பேசுவது மனிதகுலத்துக்கு நாம் செய்யும் துரோகம் என்பது என் தாழ்மையான கருத்து.

மனித உயிர்களை கொள்ளை கொள்ளும் யுத்தங்கள் (இலங்கை),ராணுவ அடக்கு முறைகள்(பாக்கிஸ்தான்),போலீஸ் என்கவுண்டர்கள்(தமிழகம்,ஆந்திரம்) போலீஸ் அராஜகம் (பீகார்) இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். விபத்து,வரதட்சிணை,பொய்த்துப் போன விவசாயம்,சாதி கலவரம் இப்படி எத்தனை எத்தனையோ மனித உயிர்களை கொள்ளையடித்து கொண்டிருக்கும் காலத்தில் சிந்திக்க தெரிந்தவர்கள் கூட உயிர் பிரச்சினைகளை விட்டு கவைக்குதவாத விசயங்களை விவாதிப்பது உறுத்தலாக இருக்கிறது

Tuesday, November 13, 2007

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

நான் ஏற்கெனவே என் பதிவுகளில் கூறியுள்ளேன்.பேசுபவன்/எழுதுபவன் எல்லாம் ஒன்று தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவனாக இருப்பான் அல்ல்து செக்ஸில் செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை படைப்பாற்றல் மிக்கவனாக இருப்பான். வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. காரியத்தில் செய்ய முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்வான்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை.

நாடு இருக்கும் இழி நிலையில் தேவை செய‌ல் வீர‌ர்க‌ள்
வாய் பேச்சு வீர‌ர்க‌ள் அல்ல‌

Monday, November 12, 2007

பாக்கிஸ்தானில் நெருக்கடி நிலை இந்தியாவில் 1947 கலவர சூழல் திரும்புமா?


கீழ்காணும் வலைப்பூவை ஒரு தடவை படித்து பாருங்கள். புதிதாக எழுத என்ன இருக்கிறது.

Thursday, November 1, 2007

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருது

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருதுஆம் பிரம்மங்காரு எழுதிய காலஞானப்படி யானாலும்.தற்போதுள்ள கிரக நிலைப்படிட்யானாலும் நல்லகாலம் பிறக்குது என்று சொல்ல முடியாது.
சிம்மம் சூரியனின் வீடு,சூரியனுக்கு பகை கிரகமான சனி சிம்மத்தில் உள்ளது.( 2005 ,ஆகஸ்ட் 5 முதல்), மேலும் 45 நாட்களில் ராசியை விட்டு ஓட வேண்டிய செவ்வாய் வரும் வருடம் ஏப்ரல் வரை மிதுனத்திலேயே இருக்கப் போகிறார்.
தம்பதிகள்,பங்குதாரர்கள்,கூட்டணி கட்சிகள் இவற்றுக்கெல்லாம் காரகம் வகிப்பது மிதுன ராசியாகும் . இங்கு யுத்தகாரகனான் செவ்வாய் ஸ்தம்பித்துள்ளார். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கதை கந்தல்தான்.
மேலும் சுதந்திரம் வந்து 60 வருடம் பூர்த்தியாகி மற்றொரு சுற்றில் உள்ளோம். அடையை பிடிடா பரதப்பட்டா கதைதான். மீண்டும் யுத்தம்,பிரிவினை,மத கலவரம், மக்கள் நாடு விட்டு செல்லுதல் எது நடந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

Posted by chittoor.S.Murugeshan at 7:12 AM

நீயும் பெரிய மனுஷங்க லிஸ்டுல சேர்ந்துட்டயா ?

மனசாட்சி: என்னா நைனா. நீயும் பெரிய மனுஷங்க லிஸ்டுல சேர்ந்துட்டயா ? பழசயெல்லாம் மறந்துட்டயா?

முருகேஷன்: இல்ல மனசாட்சி..பழச மறந்தா கதி மோட்சமே கிடையாது


மனசாட்சி: பின்னே..ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தின பேச்சே காணோமே!

முருகேஷன்: அதெல்லாம் ஒன்னுமில்லே இந்த‌ மாச‌ம் த‌ந்தில‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கின‌ உட‌னே முத‌ல் வேலை இய‌ர் பேன‌ல் விள‌ம்ப‌ர‌ம் கொடுத்து என் வ‌லைப்பூக்க‌ளுக்கு ஹிட்ஸை அதிக‌ரிக்க‌ போறேன்

மனசாட்சி: பார்த்த‌யா..ச‌த்யா ல‌ட்சுமி பூஜை ப‌ண்ற‌துக்கும் நீ விள‌ம்ப‌ர‌ம் த‌ர்ர‌துக்கும் வித்யாச‌மே இல்லையே

முருகேஷன்:பின்னே ஒவ்வொரு ஆசாமிக்கும் மெயில்,ஸ்க்ராப் அனுப்ப‌ சொல்றியா

மனசாட்சி: அதுலதான் க‌ண்ணா த்ரில். ஒவ்வொரு மெயில்,ஸ்க்ராப்போடயும் உன் ஆத்ம சக்தி சேர்ந்து போகும்பா ..விளம்பரம்லாம் ஈஸ்வர்ராவ் பண்ற வேலை

முருகேஷன்: ச‌ரி அப்ப‌டியே செய்தா போச்சு

மனசாட்சி: ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா ப‌த்தி சுப்ரீம் கோர்ட்டுல‌ ரிட் போட‌ற‌தா சொன்னாப்ல‌ ஞாப‌க‌ம்.

முருகேஷன்:அட‌ ஆமாம் ம‌ன‌சாட்சி அதுக்கு இன்க‌ம் ச‌ர்ட்டிஃபிகேட் வேற‌ வாங்க‌னும். என்ன‌த்தை ப‌ண்ணி என்ன‌ புண்ணிய‌ம் எல்லாம் கிண‌த்துல‌ போட்ட‌ க‌ல்லுதான். ச‌மீப‌த்துல‌ கூட‌ எல்லா ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர்க‌ளுக்கும் ஆ.இ ப‌த்தி டைப்ட் மேட்ட‌ரே அனுப்பி வ‌ச்சேன். ஒரு வி.ம‌. ம‌க‌ன் கூட‌ போட‌லே

மனசாட்சி: த‌ பார்..இந்த‌ கெட்ட‌ வார்த்தையெல்லாம் சுஜாதா நாவ‌ல்ல‌தான் ஒத்துக்குவாங்க‌, நீ உப‌யோகிச்சா உன் வலைப் பூவை த‌டை ப‌ண்ணிருவாங்க‌

முருகேஷன்: அம்பேல்! அம்பேல்! வாப‌ஸ் வாங்கிக்கிற‌ம்பா ஏதோ என் வ‌யித்தெரிச்ச‌லை தேன் கூடு,த‌மிழ் ம‌ண‌ம் உப‌ய‌த்துல‌ 10 பேராவ‌து ப‌டிக்கிறாங்க‌ அதுக்கும் ஆப்பு வ‌ந்துர‌ப் போவுது

மனசாட்சி: ஜோதிட‌ பூமி, நிலாச்சார‌லுக்கெல்லாம் அடுத்த‌ப‌டியா என்ன‌ த‌ர்ர‌தா உத்தேச‌ம்

முருகேஷன்:"மாறி வ‌ரும் அர‌சிய‌ல் சூழ‌லில் ராஜ‌ யோக‌ம்"

மனசாட்சி: கிழிஞ்ச‌து ல‌ம்பாடி லுங்கி ..பெருவாரியான ஜன‌த்துக்கு உப‌யோக‌மான‌ விஷ‌ய‌த்தை எழுதுப்பா

முருகேஷன்: அப்போ எல்லோருக்கும் த‌ன‌ யோக‌ம் எழுதிர்ர‌ன்

மனசாட்சி: வெரி குட்.. கீப் இட் அப்

முருகேஷன்: இன்னொரு விஷ‌ய‌ம் தெரியுமா ..பெண்டாட்டிய‌ ஒரு 3 மாச‌த்துக்கு பேர‌ணாம்ப‌ட்டுக்கு பார்ச‌ல் ப‌ண்ணிட்டு முழு மூச்சா எழுத்துல‌ இற‌ங்க‌ போறேன்

மனசாட்சி: த‌ பார்ரா..எழுத்து எழுத்துன்னுட்டு ப‌ட‌க்குனு எதாச்சும் குட்டியை தொட்டுட‌ப்போற‌பா

முருகேஷன்: பாரு ம‌ன‌சாட்சி நான் த‌ப்பு ப‌ண்ண‌வ‌ன் தான்/ இனியும் ப‌ண்ண‌ப்போற‌வ‌ன் தான் ஆனால் புதுசு புதுசா தான் த‌ப்பு ப‌ண்ணுவேன்

Sunday, November 11, 2007

செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை

எனக்கு சாதி மத பேதங்கள் ஏதுமில்லை. ஆனால் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு வித தனிப்பட்ட கல்யாண குணங்கள் இருப்பதை பார்க்கிறேன்.
மைனஸ் பாயிண்ட்ஸை டிஸ்கஸ் செய்யுமத்தனை தைரியம் எனக்கில்லை. அந்தந்த சாதியினர் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. நரி நண்டின் வளைக்குள் முதலில் தன் வாலை விடுமாம் அது போல் செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை என்ற பழமொழியை முன்வைக்கிறேன். பதிவர்கள் தம் அனுபவத்தை கருத்தை தெரிவிக்கலாம்.

நான் யார் ?

பெயர்: எஸ்.முருகன்

புனைப்பெயர்: சித்தூர்.எஸ்.முருகேஷன்

ஊர்: ஆந்திர‌பிர‌தேச‌ம்,சித்தூர்.(வேலூரை அடுத்துள்ள‌)

த‌ந்தை:

மாவ‌ட்ட‌ க‌ருவூல‌ அதிகாரியாய் வேலை பார்த்தும் க‌டைசி வ‌ரை சைக்கிளில் ஆஃபீஸ் போன‌ லேட். எம்.சுந்த‌ரேச‌ன்

அம்மா:

ம‌ணியாக்கார‌ர் பெண்ணாய் பிற‌ந்தும் அட்டெண்ட‌ருக்கு வாழ்க்கை ப‌ட்டு அவ‌ர் ஆஃபீஸ‌ரான‌ ச‌ம‌ய‌ம் கேன்ஸ்ர் வ‌ந்து செத்த‌ லேட்.என்.சுசீலாதேவி


ஜீவ‌ன‌ம்: ஜோதிட‌ம் & எழுத்து

முழு நேர‌த்தொழில்: இந்தியாவை ப‌ண‌க்கார‌ நாடாக்குவ‌து

சமீபத்திய சாதனைகள்:

தினத்தந்தியில் நிருபராய் குப்பை கொட்டுவது

ஜோதிட பூமி மற்றும் நிலாச்சாரல் டாட் காமில் தொடர் கட்டுரை எழுதியது

தமிழ் வாசம், கவிதை07,அனுபவஜோதிடம் பெயர்களில் வலைப்பூ எழுதுவது


எழுத்தாளனாய் அரங்கேற்றம்: பாக்யாவில் 1987

வ‌ருத்த‌ம்:

ஆன்மீக‌ம் இத‌ழ் 2000 ல் என் இர‌ண்டு தொட‌ர்க‌ளை பாதியில் நிறுத்திய‌து

உண்மையை சொன்ன‌ பாவ‌த்துக்கு ஓர்குட் பாலா க்ரூப்பிலிருந்து வெளியேற்றிய‌து

காசினி டாக்டர் (?)அக்பர் கவுசர் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

பல வருடங்களுக்கு முன் தேவி வார இதழில் தங்கள் தெய்வீக மருத்துவம் மாத இதழுக்கு உதவி ஆசிரியர் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தீர்கள். நான் உள்ளூர் தபாலில் அப்ளை செய்திருந்தேன். தாங்கள் பெருந்தன்மையுடன்(?) நேர்முக தேர்வுக்கு அழைப்பு அனுப்பியிருந்தீர்கள். நானும் வாணியம்பாடி வந்தேன். பணியில் சேர்ந்தேன். ஆமை நுழைந்த வீடும் நான் கால் வைத்த இடமும் உருப்படாது என்பது அனுபவம். ஆனால் சற்றே ஆன்மீக ஈடுபாடு வந்த பிறகு உணர்கிறேன். நான் தர்மத்தின் பிரதிநிதி. நான் அடி வைக்கும் இடத்தில் அதர்மம் இருந்தால் அது தூள் தூளாகும். நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு தேவியில் தங்கள் விளம்பர/கட்டுரை கண்டேன். கலைஞரின் வாழ்க்கை வரலாறை வாங்க ஆளில்லை என்பதால் இலவசமாய் தருவதான தங்கள் அறிவிப்பை கண்டேன். நான் வாணியம்பாடியில் இருக்கும்போது நான் கண்ணால் கண்ட காட்சிகளை இந்த வலைப் பூவில் வைத்தால் தனி மனித தாக்குதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் என் வலைப்பூவே தடைக்குள்ளாகலாம் என்பதால் ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

"போதும் சார்..!

லிங்கன் சொன்னதை நினைச்சு பாருங்க

"பலரை சிலகாலம்..சிலரை பல காலம்..ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது"

Saturday, November 10, 2007

திமுக அரசு மைனாரிட்டி அரசி என்பது முட்டாள் தனம்

திமுக அரசு மைனாரிட்டி அரசி என்பது முட்டாள் தனம்

தமிழகத்தில் அமைந்திருப்பது திமுக தலைமையிலான கூட்டணி அரசு. திமுக அரசல்ல. திமுக தலைமையிலான கூட்டணி அரசுக்கு கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ்,பாம கட்சியினர் ஆதரவளிப்பதால் திமுக தலைமையிலான அரசு மெஜாரிட்டி அரசு தான். திமுக அரசு மைனாரிட்டி அரசு என்று சொல்வது முட்டாள் தனம். இந்த விஷயத்தில் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியை மட்டும் சுட்டிக்காட்டி டாடா..(பிர்லா?) சொல்கிறேன்.

நாம் எல்லோருமே பைத்தியங்களாகத்தானிருக்கிறோம்

நாம் எல்லோருமே பைத்தியங்களாகத்தானிருக்கிறோம், பெர்ஸன்டேஜில் தான் வித்யாசம். இதற்கு காரணம் செக்ஸ். மனித வாழ்விலான சிறு பாகமாக இருக்கவேண்டிய செக்ஸ் அது மனிதனுக்கு நியாயமாக கிடைக்காத காரணத்தால் மனித வாழ்வையே ஆக்கிரமித்து விடுகிறது.

உண்மையான உலகம் வேறு. மனிதன் தன்னைச் சுற்றி ஊகித்துக்கொள்ளும் உலகம் வேறு. அவனை தன் உலகத்திலிருந்து பார்வையை திருப்பி,உண்மையான உலகத்தை பார்க்காதிருக்கச் செய்வது அவன் மனதின் காம விகாரங்களே. இயற்கையின வரபிரசாதமான பத நீர் புளித்து கள்ளாவதை போல இயற்கையான உடலுறவு ஆர்வம் காம விகாரமாக மாறி மனிதனின் அந்தரங்க,குடும்ப,சமூக வாழ்வை பாதிக்கிறது.

இத‌ற்கு தீர்வு செக்ஸ் க‌ல்வியா? இல்ல‌வே இல்லை . த‌ற்போதைய‌ அர‌சு இய‌ந்திர‌த்தை கொண்டு செக்ஸ் க‌ல்வி வ‌ழ‌ங்குவ‌து ஆப‌த்தில் தான் முடியும். இதைவிட‌ உல‌க‌ செக்ஸ் மேதைகள், மனோதத்துவ மேதைக‌ளை க‌ல‌ந்தாலோசித்து செக்ஸ் கல்வியை வ‌டிவ‌மைத்து ந‌ம் க‌லாச்சார‌ம்,ப‌ண்பாட்டுக்கு உட‌ன்பாடான‌ வ‌கையில் க‌தைக‌ள், காவிய‌ங்க‌ள், அல்ல‌து கார்ட்டூன் ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் அவ‌ர‌வ்ர் வீட்டு ஹாலில் தொலைக்காட்சி மூல‌ம் செக்ஸ் க‌ல்வியை பெறும்ப‌டி செய்வ‌தே புத்திசாலித் த‌ன‌ம்.
மனிதர்களின்,அந்தரங்க ,குடும்ப, சமூக வாழ்வில் பிரச்சினைகள் பின்னிப் பிணைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. இவற்றிற்கான தீர்வுகளை யோசிக்கும்போது தான் எனக்கும் இந்த சமுதாயத்துக்கும் தகராறு ஏற்படுகிறது. சமுதாயம் தொழுநோய்க்கு அவில் மாத்திரையை பரிந்துரைக்கிறது. முதற்கண் நோய் இருப்பதை கண் கொண்டு பார்க்க மறுக்கிறது. என் செய்வேன் ?

மனிதர்களை மனிதர்களாக கருத்தில் கொண்டு இயற்றியதால் தான் சட்டங்கள் தோற்றுவிடுகின்றன. என்னதான் ஆடை அணிய கற்றுக் கொண்டாலும் மனிதன் மிருகம் தான். மிருகத்திற்கு தேவை பசிக்கு உணவு, தினவுக்கு தேவை உடலுறவு, உயிர் பாதுகாப்பு. ஒரு அரசாங்கத்தின் முழு முதல் கடமை மக்களுக்கு உணவளித்தல்,அடுத்து அவர்களிலான மிருகத்தை வெளிக்கொணரும் சக்தி படைத்த காமம்,உயிர் பயத்திலிருந்து பாதுகாப்பளித்தல்.

விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தாலே என் போன்ற தினத் தந்தி நிருபர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். கள்ளக்காதல்,கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி இத்யாதிக்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விடும். செக்ஸ் எண்ணங்கள் அழுத்தப்பட்டு அவை வன்முறையாக கிளர்ந்தெழும் நிலை மாறும். உடலுறவுக்கு மாற்றாக பணம்,பதவி,அதிகாரம் இவற்றைக் கொண்டு மக்களை கொன்று, இறுதியில் மக்களால் கொல்லப்படும் (பதவி தானே உயிராய் இருக்கிறது/மக்கள் ஓட்டை மாற்றிப்போட்டால் பதவி கோவிந்தா../பதவி போன அரசியல் வாதி பிணம் தானே) நிலை மாறும்.

Friday, November 9, 2007

இந்திய பொருளாதார சீரழிவுக்கு காரணமா செக்ஸ் காரணங்கள்

பொருளாதாரத்துக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் உண்மை நிலை இதற்கு மாறாகவே உள்ளது. ஒரு தந்தை தன் மகளுக்கு மணம் முடிக்கிறார். இதற்கு தன் சேமிப்பையெல்லாம் துடைத்து ஆங்காங்கே கடன்,உடன் வாங்கி திருமணம் செய்கிறார். இங்கே அவர் மகளின் திருமண வாழ்வு சுமுகமாக நடக்க ஆரம்பித்து விட்டால் பிரச்சினை இல்லை. குடும்ப வாழ்வென்ன இழவு.. அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..

1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்

என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.

தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள்.

ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான். ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான். இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..


இந்த நிலையில் தான் என் அம்மாவை ம‌திக்கிற‌தில்லே..
க‌ல்யாண‌த்துக்கு போட்ட‌ ந‌கை எடை குறைவா இருக்கு
மெத்தை த‌ர‌லை,க‌ட்டில் த‌ர‌லை எல்லாம் ச‌பையில் வைக்க‌ப்ப‌ட்டு க‌தை காவ‌ல் நிலைய‌த்துக்கோ, குடும்ப‌ கோர்ட்டுக்கோ செல்கிற‌து.

ச‌ரி திரும‌ண‌த்துக்கு அவ‌ள் த‌ந்தை வாங்கிய‌ க‌ட‌ன் என்னாகும்? வ‌ட்டி கூட‌ க‌ட்ட‌முடியாத‌ நிலை , கேட்க‌வும் முடியாத‌ நிலை ஏற்ப‌ட்டுவிடுகிற‌து. ப‌ண‌ம் என்ப‌து ர‌த்த‌ம் மாதிரி சுற்றி வ‌ர‌வேண்டும். அது தேங்கினால் என்னாகும்? பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி ம‌ண்ணாகும்.

Thursday, November 8, 2007

கடன் வாங்குவோர்/கொடுப்போர் மனோதத்துவம்

முதலில் கடன் வாங்குவோர் மனோதத்துவம்:

மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காமம். காமத்தின் நோக்கம் படைத்தல், விரிவாக்கம் செய்தல்,பரவுதல். இதெல்லாம் பணமிருந்தால் சாத்தியப்படும் செயல்களாகும். காம சக்திக்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது . அது கொல்லுதல் அல்லது கொல்லப்படுதல். இது இரண்டுமே செக்ஸில் சாத்தியமாகிறது. ஆண் விஷயத்தில் எடுத்துக் கொண்டால் விந்து வெளியாகும் வரை கொல்லும் இச்சை நிறைவேறுகிறது. விந்து வெளியான‌ பிற‌கு சாகும் இச்சை நிறைவேறுகிற‌து.

பெண் விஷ‌ய‌த்தில் ஆணுக்கு விந்து வெளியாகும் வ‌ரை இவ‌ளின் கொல்ல‌ப்ப‌டும் இச்சையும், அவ‌னுக்கு விந்து வெளியான‌ பிற‌கு இவ‌ள‌து கொல்லும் இச்சையும் நிறைவேறுகின்ற‌ன‌. இத‌னால் தான் ம‌னித‌னில் உள்ள‌ ஒரே ச‌க்தியான‌ காம‌ச‌க்தி அவ‌னை உட‌லுற‌வுக்கு ஈர்க்கிற‌து. மேலும் காம‌த்தின் மூல‌ம் ப‌டைப்புக்கும் வ‌ழி ஏற்ப‌டுகிற‌து. (இப்போதும் கூட‌ காலை பிடித்த‌ல், கை தூக்கி ச‌ர‌ண‌டைத‌ல், இத்யாதி காரிய‌ங்க‌ளின் பின் இருப்ப‌து பாலுற‌வு சார்ந்த‌ கார‌ண‌ங்க‌ளே. நாம் உப‌யோகிக்கும் ப‌ல‌ பொருட்க‌ள் ஆண்,பெண் உறுப்புக‌ளின் சாய‌லில் இருப்ப‌து த‌ற்செய‌லான‌ ஒன்ற‌ல்ல‌. ம‌னித‌னின் நினைவிலி ம‌ன‌தை ஆளும் செக்ஸின் பிர‌திப‌லிப்பே).

ம‌னித‌ன் நாக‌ரீக‌ம‌டைந்த‌ பிற‌கு உட‌லுற‌வுக்கு மாற்று வ‌டிகால் தேட‌வேண்டிய‌தாகிவிட்ட‌து. அதுதான் ப‌ண‌ம். எவ‌னொருவ‌ன் த‌ன் ஒரே ச‌க்தியான‌ காம‌ ச‌க்தியை உட‌லுற‌வில் முழுவ‌துமாக‌ செல‌வ‌ழிக்க‌ முடியாதிருக்கிறானோ அவ‌னுக்கு தான் ப‌ண‌த்தின் மீது அதீத‌ வெறி இருக்கும். அவ‌னை பொருத்த‌வ‌ரை ப‌ண‌ம் என்ப‌து உட‌லுற‌வுக்கு ஒரு மாற்று தான். (சுய‌ இன்ப‌ம் போல‌)

யார் உட‌லுற‌விலேயே த‌ம் காம‌ ச‌க்தியை செல‌வ‌ழித்து விடும் வாய்ப்பை பெற்றுள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌த்தின் மீது ஆர்வ‌மிருப்ப‌தில்லை. யார் உட‌லுற‌விலேயே முழுதாக‌ செல‌வ‌ழிந்துவிடும‌த்தைனை கு.ப‌. காம‌ச‌க்தியை கொண்டுள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கும் ப‌ண‌த்தின் மீது ஆர்வ‌மிருப்ப‌தில்லை. இவர்கள் தான் கடன் வாங்குகிறார்கள். ஒளித்து,அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறைக்கு தூண்டுகின்றன. பணம் சம்பாதிக்க வன்முறை அவசியம். வன்முறைக்கு காரணமான நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் இல்லாததால் இவர்களுக்கு பொருளீட்டும் ஆர்வம் இருப்பதில்லை. முக்கியமாய் கொல்லும் இச்சை நிறைவேறி , கொல்லப்படும் இச்சையே மிஞ்சி இருப்பதால் கடன் வாங்குவதன் மூலம் காலனுக்கு அழைப்பு விடுகிறார்கள்.


கடன் கொடுப்போர் மனோதத்துவம்:
இத‌ற்கு மாறாக‌ எவ‌ர் அதீத‌ காம‌ ச‌க்தியை கொண்டிருந்தும், அதை செல்வ‌ழிக்க‌ உட‌லுற‌வுக்கு வாய்ப்பின்றி இருக்கின்ற‌ன‌ரோ அல்லது செக்ஸில் செல‌வழிந்து போகாத அளவுக்கு அமித செக்ஸ் பவர் கொண்டுள்ளனரோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ண‌த்தின் மீது அதீத‌ ஆர்வ‌ம் ஏற்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை (அதாவ‌து த‌ம் ஈகோவை) கொன்று தான் அந்த‌ ப‌ண‌த்தை ஈட்டுகின்றன‌ர். என‌வே சாகும் இச்சை நிறைவேறி, சாக‌டிக்கும் இச்சை மிச்ச‌மிருக்க‌ மேற்சொன்ன‌ பார்ட்டிக‌ளுக்கு க‌ட‌ன் கொடுத்து அவ‌ர்க‌ளை கொல்லுகின்ற‌ன‌ர்.

"கட‌ன் பட்டார் நெஞ்சம் போல் கல‌ங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் கம்பர். "ஆன முதலில் அதிகம் செலவானால்.." ,"வரவு எட்டணா செலவு பத்தணா" இதெல்லாம் நீங்கள் அறிந்தவையே.. The things given above are which U don’t know..

Wednesday, November 7, 2007

தையல் சொல் கேளேல் !


எத்தனை எத்தனை தீபாவளியோ ? நரகாசுரன் ஒழிந்தது மட்டும் ஒரு முறைதான். கண்ணன் சோர்ந்த போது சத்யபாமா ரதம் செலுத்தினாளாம். இன்றைய சத்யபாமாக்கள் கணவன் சம்பளமும்,கிம்பளமுமாய் வாரி கொட்டினால் அனுபவிக்கத் தயாரே தவிர சஸ்பெண்ட் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டாலோ, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி வேலை போனாலோ வேலை கொடுத்துவிடுகிறார்கள். (துரோகம் என்பதற்கு தெலுங்கு பிரயோகத்தின் மொழி பெயர்ப்பு இது)

தையல் (பெண்)சொல் கேளேல் என்று சொன்ன அவ்வையாரே தையல் தான் எனும்போது இதை சற்று யோசிக்க வேண்டியதாகிறது. பெண்ணின் உடல் பலவீனமானது. //strong mind in strong body// என்பது தெரிந்ததே..

இயற்கை ஒரு பலவீனத்தை மற்றொரு பலத்தின் மூலம் சமன் செய்கிறது. பெண்ணுக்கு அது ஸ்தூலமான பலவீனத்தையும், தற்காப்பு உணர்வையும்,எதிர்காலம் குறித்த பயத்தையும் தந்துள்ளது. //Too much is always bad// என்பதும் தெரிந்ததே.. மேற்சொன்னவை அதிகரிக்க அதிகரிக்க தந்திரங்கள், சுய நல எண்ணங்கள் பெருகுகின்றன. சற்றே பெண் தன்மை மிகுந்த கணவன் மார்கள் மனைவி மார்களின் பேச்சுக்கு தாளம் போட்டு சமுதாயத்தை சுரண்டி, தம் குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலகி பெண்டாட்டி பிள்ளைகளுடனேயே வாழ்ந்துவிட முயன்று அதே பெண்டாட்டி,பிள்ளைகளால் திரஸ்கரிக்கப் பட்டு நாயடி படுகிறார்கள். இவர்களுக்கு ரியலைசேஷன் வருவதற்குள் சூழ்நிலை கைமீறி போய்விடுகிறது.

எனவே தையல் சொல் கேளீர்

Tuesday, November 6, 2007

நான் ஒரு கட்டியங்காரன் ..

இது ஒன்றும் புதிதல்ல
யாவும் எனக்கு எதிராகி
காரணம் புதிராகி
நான் மலைப்பது புதிதல்ல ..

வெறுமனே உண்டு கழிக்கும்
மாமிசங்கள் இதை உணராதிருக்கலாம்.
அனுதினம் இறையருளின் ஜெட் கேட்டகிரி பாதுகாப்பில்
வாழும் என் மனம் இதை உணர முடிகிறது.

எனக்கு இவர்களோடு எவ்வித பந்தமும் இல்லை.

இங்கு எதுவும் எனக்கு சொந்தமுமில்லை.

நான் ஒரு கட்டியங்காரன் ..
அழிவின் வருகையை கூறவந்தேன்
என் அக‌ங்கார‌ம் திருப்தியுறுவ‌தற்காக
புதிய இந்தியாவுக்காக ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா என்று
க‌தை பண்ண‌ வைத்திருக்கும்
இறைய‌ருளின் வியூக‌த்தை
அறியாத‌ முட்டாளில்லை நான்..

என‌க்கு எதுவுமே முக்கிய‌மில்லை.
என் இறையோடு முறை கேடான
உற‌வேனும் தொட‌ர‌ வேண்டும்.
இது ஒன்றுதான் முக்கிய‌ம்.

இது கைவ‌ருமோ என்றுதான்
இந்த‌ நாத்திக‌ர்க‌ளின் ந‌ல‌ம் நாடி
உழைத்து வ‌ருகிறேன்.
இவ‌ர்க‌ளுக்காக‌ தெய்வீக‌த்தையும்
எதிர்த்து போராடுவ‌தாக‌
பிலிம் காட்டி வ‌ருகிறேன்
எது கைவ‌ரின் ம‌ற்றேதும் தேவையில்லையோ
அதையே பெற்றுவிட்டேன்..
இனி எதை இழ‌க்க‌வும் நான் த‌யார்.


ம‌ர‌ண‌ம் என்ன‌ க‌ஸ்ட‌ம்ஸ் அதிகாரியா கடத்தல் பொருளை
ஆச‌ன‌த்தில் செருகிக் கொண்டால் ஏமாந்து போக‌..

இங்கிருந்து என்னுட‌ன் வ‌ர‌விருப்ப‌து நின‌வுக‌ள் ஒன்றே..
அது போதும் என்னை வ‌ழி ந‌ட‌த்த‌..

ஐ யாம் வெரி க்ளிய‌ர் அப‌வுட் மை கான்ஷ‌ஸ்..
என்னில் எவ்வித‌ குற்ற‌ம‌ன‌ப்பான்மையுமில்லை..

என் நாட்டில் அடுத்த‌ வேளை
சோற்றுக்கு க‌தியில்லாது கிட‌க்கும்
த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளுக்காக‌
ஞான‌வில்லை நாணேற்றி யுத்த‌ க‌ள‌த்தில்
நிற்கும் தற்கொலை ப‌டை வீர‌ன் நான்.

நானே என‌து சைன்ய‌ம்.
வெறும‌னே என் ச‌ங்க‌ல்ப‌ ப‌ல‌த்தால்
நான் சாதித்த‌வை எத்த‌னையோ
என் இறைவ‌னை மிர‌ட்டியும் கூட‌
பார்க்கும‌த்த‌னை நெருக்க‌ம் வ‌ள‌ர்த்த‌வ‌ன் நான்.
என் "வில் " உச்ச‌த்தில் இருக்கும்போது நானே
இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌த்தை கூட‌
எதிர்கொண்ட‌வ‌ன் நான்.

இந்த‌ இடைவெளிக‌ள் யாவும் என்னை என‌க்கு
புரிய‌ வைக்க‌த்தான் என்ப‌து என‌க்கு தெரியும்..

வேலும் ம‌யிலும் துணை ..ஆம் த‌ணிகை முருக‌ன்
துணை நிற்கிறானோ இல்லையோ
என் த‌ந்தையின் ஆசி க‌டைசி புக‌லாக‌ என்னை காக்கிற‌து.

முப்ப‌து முக்கோடி தெய்வ‌ங்க‌ள், ராம‌ன்,அனும‌ன்,
க‌ண‌ப‌தி,அல்லா (முஸ்லீம்க‌ள்),ச‌த்திய‌ம்,
(என்.எஸ்.ச‌த்யா)/பௌத்த‌ம் (அஷோக்)
எல்லாமே கைவிட்ட‌ பிற‌கும் என்னை காத்த‌து
வேலும் ம‌யிலுமே/அத‌ற்கு கார‌ண‌ம்
என் த‌ந்தையின் தார்மீக‌ வாழ்வு , அவ‌ருடைய‌ ஆன்மாவின் ஆசி

Monday, November 5, 2007

நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள்

நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகளே வன்முறை,வஞ்சம்,சுரண்டல்,அதிகார வெறியாக வெளிப்படுகின்றன. ஒரு தாய் தன் குழந்தையை துன்புறுத்துவதற்கும் அவளது செக்ஸ் வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறது.

இதையே ஒரு கட்சித் தலைவி, பெண் அதிகாரி,ஆசிரியை விசயத்துக்கும் பொருத்தி பார்க்கலாம். ஒரு ஆண் தனது நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகளை பலவிதத்தில் திருப்தி செய்து கொள்கிறான். இந்த மேல் ஷேவனிஸ்டு சொஸைட்டி அதை அனுமதிக்கிறது.

ஆனால் பெண்ணுக்கு உள்ள இரண்டே வழி ஒன்று வழுக்கி விழ வேண்டும் அல்லது தன்னுள் வன்முறை இச்சையாக மாறிவிட்ட செக்ஸ் இச்சையை வன்முறையாகவே வெளிப்படுத்தியாக வேண்டும்.


பெருகி வரும் ஆண்மையின்மை:

லாட்ஜு வைத்தியர்கள் கூறும் கரப்பழக்கத்தால் இல்லா விட்டாலும் வரவு எட்டணா செலவு பத்தணா வாழ்வுக்கு முதல் பலி ஆண்மை சக்தி தான். பின் இருக்கவே இருக்கின்றன சத்தில்லாத,தவறான உணவு பழக்கங்கள், உறக்கமின்மை,செக்ஸ் குறித்த தெளிவின்மை, நித்திய வாழ்விலான டென்ஷன்,ட்ராஃபிக் ஜாம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்களால் ஆண்மையின்மை பெருகிவருகிறது. 12 வயதில் ஆண்மை பெற்று விடும் ஆணுக்கு 36 வயதில் திருமணமானால் அவன் நிலை என்ன? பெண்ணுக்கு மெனோஃபாஸ் சமயத்தில் தான் திருமணம் நடக்கிறது. பெண்களுக்கு செக்ஸ் அறிவின்மை கூட பல நேரங்களில் ஆணின் ஆண்மைக்கு உலை வைத்து விடுகிறது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு ?

கால‌ம் தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்.

Sunday, November 4, 2007

நான் ஒரு அராஜகவாதி.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்பது நம் கொள்கை. தமிழில் அராஜகம் என்பது நெகட்டிவ் மீனிங்குடன் உபயோகிக்கப் படுகிறது. அராஜகம் என்றால் பஸ்ஸை,பிரஸ்ஸை கொளுத்துவது அல்ல. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா என்று வாழ்வதே அராஜகம். அந்த அர்த்தத்தில் நான் ஒரு அராஜகவாதி.

என்னைப் பொருத்தவரை ஜெயா/கலைஞர்/ரஜினி/விஜயகாந்த் எல்லோரும் ஒன்றுதான். என்ன ஒரு சிக்கல் என்றால் நான் எரிச்சலில் இருக்கும்போது அவர்கள் மக்களுக்கு செய்த துரோகங்கல் எல்லாம் சரமாரியாய் நினைவுக்கு வந்து திட்டி தீர்த்துவிடுவேன். நவதுவாரங்களும் குளிர்ந்திருக்கும்போது அவங்க மட்டும் என்ன செய்வாங்கய்யா சிஸ்டம் மாறனும் என்று சொல்வேன். சரி கமிங்க் டு தி பாயிண்ட்..

கலைஞர் தமிழ் செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது ஜெயலலிதாவின் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதை கேள்வி கேட்காவிட்டால் இந்த பூ(மி)கிரகத்தில் மனிதம் மண் மூடி போகும். தமிழ் செல்வன் யார்? விடுதலை புலிகளின் அரசியல் தலைவர். விடுதலைபுலிகள் யார்? இலங்கை தமிழர்களின் உரிமையை காக்க ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள். ‌

புலிகள் செய்த பாவம் என்ன? ராஜீவை கொன்றது. ராஜீவின் சாவில் நேரடியாய் பாதிக்கப்பட்ட சோனியாவே கொலையாளிகளில் ஒரு பெண்ணை மன்னிக்கச்சொல்லியாகிவிட்டது. புலிகள் விஷயத்தில் ராஜீவை வழிநடத்திய பிராமணோத்தமர்களின் தயவால் பிரபாகரன் இல்லாமலே இலங்கைபிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி நடந்தது. வரதராஜ பெருமாள் முதல்வரானார். அவருக்கு மயிலாப்பூரை சேர்ந்த பிராமணோத்தமர் பெண் கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணம் நடக்குமோ?

கிழ‌க்கு வ‌ங்காள‌த்தில் ம‌க்க‌ள் பாக் அர‌சுக்கு எதிராக‌ திர‌ண்ட‌போது இந்தியா அவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ க‌ள‌த்தில் இற‌ங்கிய‌து உண்டா இல்லையா? (அத‌ன் விளைவாக‌ ம‌த்த‌ள‌த்துக்கு ரெண்டு ப‌க்க‌மும் அடி என்ப‌து போல் பாக்கிஸ்தானும் கிழக்கு வங்காளமும் இந்தியாவுக்கு விஸ்வாசமாக இல்லாது போனது வேறு விஷயம்).

அட‌ த‌மிழ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்துக்கு இர‌ங்க‌ல் தெரிவிப்ப‌த‌ற்கும் இல‌ங்கை பிர‌ச்சினைக்கும் என்ன‌ங்க‌ ச‌ம்ப‌ந்த‌ம்? இதுக்கு என்ன‌ங்க‌ க‌ண்ட‌ன‌ம்.

"காக்கா கூட்ட‌த்தை பாருங்க‌ அதுக்கு க‌த்து குடுத்த‌து யாருங்க‌?" பாட்டை ஒரு த‌ட‌வை கேளுங்க‌ மேட‌ம்!

இல்லான்னா இந்த க‌விதைய படிங்க‌:

செத்து விழுந்த‌து ஒற்றை காக‌ம்.
முட்டி மோதும் காக்கை கூட்ட‌ம்
ரோட்டோர‌ம் அநாதைப் பிண‌ம்

Saturday, November 3, 2007

செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி

மனைவி என்றதும் உங்கள் மூளையில் பல்வேறு பிம்பங்கள் மின்னலாம். அவற்றையெல்லாம் முதற் கண் துடைத்து விடுங்கள்.(மெட்றாஸ் ஐ என்றால் வேண்டாம்)

உலக அழகி ஐஸ்வர்யாராயே என்றாலும் சரி மனைவி என்ற ஸ்தானத்திற்கு (ஸ்தனம் அல்ல)வந்து விட்டால் அவர்களின் சகலமும் மாறிவிடுகிறது. சாலையோர ரோமியோக்கள் கண்ணுக்கு வேண்டுமானால் ப்யூட்டிஃபுல் ஆண்டி யாக தோன்றலாம்.

ஆனால் தன்னை ஆண்டியாக்கி விட்டபடியால் கணவன் கண்ணுக்கு மட்டும் அவள் ட்ராகுலாவாகவோ,அட்டையாகவோத் தான் தோன்றுவாள். பெண் என்பவள் வேறு எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் சோபிக்கிறாளே தவிர மனைவி பாத்திரத்தில் மட்டும்,சோகிக்கத் தான் வைக்கிறாள். இது நற்குடியில் பிறந்த‌ (காஸ்ட்லி மது இல்லிங்க) ஆதர்ஸ குணங்கள் நிறைந்த பெண்களுக்கும் பொருந்தும்.

ஏதோ என் கடுப்பை பதித்து வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொள்ளலாம் (அது என்ன நாயர் கடை டீயா) என்று ஆரம்பித்து சுஜாதா சொன்னது போல ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேன் சாரி.(புடவை யில்லிங்க)

விஷயத்துக்கு வரேன். பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

1.நிறைய பெண்களிடம்,மனைவிகளிடம் நான் கண்டது:
செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது. ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள்,ஃபோர்வீலர்கள்,
கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம்
் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது. ஒன்றொ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது.

5.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

6.விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

7.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. எப்ப‌டியோ ம‌னைவிக‌ள் திருந்தினால் ச‌ரி. திருந்தாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்

கிராஃபிக் III


குடிக்க கூழில்லை கொப்பளிக்க பன்னீர் என்ற பழமொழிக்கு எங்கள் பரசு ராமனைத்தான் உதாரணமாக சொல்ல வேண்டும். தங்கை கணவர் இவன் காலுக்கும்,கண்ணுக்கும் வைத்தியம் பார்த்து,இவன் பெண்குழந்தைகளுக்கு காது,மூக்குக்கு நகை வாங்கி கொடுத்து ,இவன் அம்மாவின் கேன்ஸருக்கு வைத்தியம் பார்த்து,பிணமெடுத்து,காரியம் செய்து,சித்தூர் வீட்டை ரிப்பேர் செய்து பூக்காரியை குடிவைத்து வாடகைக்கு வழி செய்த பிறகு காலுக்கு கட்டுப் போட என்று தங்கை கணவரிடம் பணம் வாங்கிக் கொண்டு காட்பாடி காவல் நிலயத்தில் புகார் கொடுத்துவிட்டு ஷாட் கட் செய்தால் சித்தூர் ,கிராஃபிக் ஆர்ட்ஸ். அப்போது நான் ஆந்திரபிரபாவில் ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் என்பது பிறகு அதற்கு முன்பே கூட மனிதாபிமான அடிப்படையில் இது போன்ற கேஸ்களை நான் டேக் அப் செய்வது வழக்கம். அந்த ஆயிரம் கேஸ்களில் பரசு ஒரு கேஸ்.

ச‌த்யா பாஷையில் சொன்னால் துட்டு ,துக்காணிவ‌ராத‌ கேஸ். ந‌ம் மொழியில் சொன்னால் தேங்காய் மூடி கேஸ். விவ‌ர‌ம் அறிந்து ஆணித்த‌ர‌மாக(துருப்பிடித்து விடாதோ) சொன்னேன். த‌ர்ம‌ப்ப‌டி பார்த்தா சித்தூர் வீடு ராம‌லிங்க‌த்துக்கு தான் சொந்த‌ம். ஆனால் ச‌ட்ட‌ப்ப‌டி பார்த்தால் உன‌க்கு மூணில் ஒரு பாக‌ம் வ‌ர‌லாம். ம‌யிரைக் க‌ட்டி ம‌லையை இழுப்போம் வ‌ந்தால் ம‌லை போனால் ம‌யிர் என்று ராம‌லிங்க‌த்துக்கு போன் போட்டேன். ப‌ந்தாவாய் ஆந்திர‌ ப்ர‌பா ரிப்போர்ட்ட‌ர் என்று அறிமுக‌ம் செய்து கொண்டேன்.ம‌னித‌ர் பாவ‌ம் ப‌ய‌த்தில் வேட்டியை ஈர‌மாக்கிக் கொண்டிருக்க‌வேண்டும். நேரில் வ‌ந்தால் விவ‌ர‌ம் சொல்வ‌தாக‌வும்,பிர‌ச்சினையை சுமுக‌மாக‌ முடித்துக் கொள்வ‌தாக‌வும் கூறினார். நானும் சென்றேன்.

பார்ட்டி ப‌ஞ்சாய‌த்து துறையில் நிர்வாக‌ அலுவல‌ர். கிம்ப‌ள‌ம் வாங்கியே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு உல‌க‌மே கிம்ப‌ள‌ ம‌ய‌மாக‌ காட்சிய‌ளிக்கும் ம‌ன‌நிலையில் இருந்தார். என் ஜாத‌க‌ராசி இர‌ண்டு க‌ட்சியில் எவ‌ன் சோப்ளாங்கியோ அவ‌ன் தான் என‌க்கு மாட்டுவான். நான் அந்த‌ சோப்ளாங்கிக்காக‌ சில‌ ச‌ம‌ய‌ம் த‌ர்ம‌ம் த‌வ‌றியும் செய‌ல்ப‌ட்டு அந்த‌ சோப்ளாங்கியிட‌மே மொக்கையாவ‌து தொட‌ர்க‌தை. ரா.லி. என் வாயை மூட‌ எத்த‌னை வேண்டுமானாலும் த‌ர‌த்த‌யாராக‌ இருந்தார். ஆனால் நான் பில்/குல் ப‌ர‌சுவுக்கு பாக‌ம் வாங்கியே தீருவ‌தாய் இருந்தேன்.என்றாலும் அவ‌ர் என்னை வெறுங்கையுட‌ன் அனுப்ப‌வில்லை.

Astro Scientist

Friday, November 2, 2007

சிரிப்பா சிரிச்சி

நான் 1987 ல் பாக்யாவில் என் சிறுகதைகள் தொடர்ந்து பிரசுரமாகி கொண்டிருந்த நேரம் அப்போது என் அண்ணன் செல்வராஜின் நண்பர் திரு.வளையாபதி திரு.கே.சி.முனி எனும் ஜோதிடரிடம் அழைத்துச் சென்றார். * சரித்திரத்தில் உங்களுக்கு ஒரு இடம் கர்சீஃப் போட்டு வச்சிருக்கு என்றதால் அவரை மன்னித்தேன். கோபத்துக்கு காரணம் உங்க எழுத்துல சோகச்சுவையை கொண்டுவாங்க என்ற அவர் ஆலோசனை தான்.

1989க்கெல்லாம் " நோவும் என்னை விரும்பவில்லே/சாவும் என்னை நெருங்கவில்லே என்று கவிதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது நினைத்தால் அந்த சிச்சுவேஷனுக்கு அந்த வரிகள் ஓவர் ஆக்ஷன் என்று தோன்றுகிறது. அதன் பிறகு எத்தனையோ முறை என் மானம் ஆக்ஷனில் போனதை பார்த்து பார்த்து பார்ப்பதையே விட்டு விட்டேன். நிற்க..

ஒரு காலத்தில் சோகச்சுவை நிரம்பிய திரைக்காவியங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. காரணம் அப்போது மக்களின் தேவை குறைவு, தேவைகள் நிறைவேறுவதற்கான மார்கங்களில் சிக்கலிருந்தது. எனவே ,மக்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாது பசுமை நிறைந்த நினைவுகளில் மூழ்கியிருந்தனர்.

இப்போது அகன்ற திரையில் தாத்தாவுக்கு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை ஓப்பனிங்க் ஷாட்டிலிருந்து சுபம் போடும்வரை அலம்பல் செய்தால் தான் ரசிக்கிறார்கள்.

காரணம் மக்களின் வாழ்வு சோகமயமாகிவிட்டது. மனித மனம் விசித்திரமானது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவது தானே நம் பாணி. சுக ஜீவனத்தில் சோகம் வெல்கிறது. சோகவாழ்வின் போது சுகஜீவனத்தை கனவு காண்கிறது.

உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம்,மேற்க‌த்திய‌ க‌லாச்சார‌ம்,க‌ன்ஸியூம‌ரிச‌ம்,பெருகிவிட்ட‌ தேவைக‌ள்,போட்டிக‌ள் என்று ம‌னித‌ வாழ்வு புலிவாலை பிடித்துவிட்ட‌ நாய‌ர் க‌தையாகிவிட்ட‌து.

அதை விட‌வும் முடியாது. இந்த‌ நிலையில் மேற்சொன்ன‌ சுக‌ஜீவ‌ன,ஃப்ளாஷ் பேக் கதைகள் (உ.ம்;ஆட்டோகிராஃப் ) கிருபான‌ந்த‌ வாரியார் சொன்ன‌ தேன் துளிக‌ள் ஆகிவிடுகின்ற‌ன‌.

என‌வே என் ப‌ங்குக்கு சிரிக்க‌ வைக்க‌ முடியாவிட்டாலும் முய‌ன்று பார்க்கிறேனே !

என் ந‌ண்ப‌ர் ச‌த்யா. (இவ‌ரும் ஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌ வ‌ளையாப‌தி மாதிரி என் அண்ண‌ன் செல்வ‌ராஜின் ந‌ண்ப‌ரான‌ கிராஃபிக் ர‌வி மூல‌ம் அறிமுக‌மான‌வ‌ர்தான்) வ‌ய‌து 50. குடிகார‌ன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்க‌ள். ச‌த்யா விஷ‌ய‌த்தில் செட்டியார் ஒழுக்க‌ம் இர‌வு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்ல‌வேண்டும்.

தினசரி காலை எழுந்து துள‌சி வாங்குவ‌தென்ன‌,பூ வாங்குவ‌தென்ன‌ ம‌ணிக்க‌ண‌க்கில் பூஜை போடுவ‌தென்ன‌..க‌ராறாய் வியாபார‌ம் செய்வ‌தென்ன‌..ஏழும‌லையானே சும்மா பார்த்துட்டு போக‌லாம்னு வ‌ந்தேன் என்று வ‌ந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.

இரவு 9 ஆனால் போதும் கழுதை கெட்டால் குட்டிசுவர் கணக்காய் வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.

இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).

அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.

சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரிய‌ர் டெக்க‌ரேஷ‌ன் செய்ய‌ப்ப‌ட்ட‌ முத‌ல் க‌டை ச‌த்யாவின் க‌டைதான். செட்டியார்க‌ளில் முத‌லில் ச‌ட்டையை இன்செர்ட் செய்த‌து ச‌த்யாதான். க‌டையை திற‌ந்து வைத்த‌து எஸ்.பி. இடையில் சில‌ கால‌ம் கிருஷ்ண‌கிரியில் அக்காவின் ப‌ல‌ச‌ர‌க்கு க‌டையில் பொட்ட‌ல‌ம் க‌ட்டிய‌ அனுப‌வ‌மும் உண்டு என்றாலும் இப்போது க‌டை மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்து கொண்டிருக்கிற‌து .

ஆறு மாத‌ங்க‌ளாய் அட‌கில் மூழ்கிய‌ வ‌ண்டியை ஓட்டி அலுத்து விட்ட‌ ச‌த்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ண‌ம் வ‌ந்து விட்ட‌து. வாங்கியாயிற்று. தீர்த்த‌ம் முடிந்த‌து.

தீனிக்கு விஷ்ணுப‌வ‌ன் சென்றோம். ச‌ர்வ‌ர் இறுதியில் கிடைக்க‌ப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக‌ ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.

ச‌த்யாவின் மூளை ப‌டுவேக‌த்தில் வேலை செய்யும். இத‌ற்கு சாட்சி ப‌ட‌ப‌ட‌த்துக் கொண்டே இருக்கும் கை விர‌ல்க‌ள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உத‌டுக‌ள்.

இத‌னால் ச‌த்யாவின் பேச்சு ஜெட் வேக‌த்தில் வெளிப்ப‌டும் .சில‌ நேர‌ம் எதிராளிக்கு புரிவ‌து க‌ஷ்ட‌மாகிவிடும்.

ச‌த்யா ச‌ர்வ‌ரை கிட்டே அழைத்து நிற்த்து நிதான‌மாக‌ வார்த்தை வார்த்தையாக‌ "கொஞ்ச‌ம் மோர், கொஞ்ச‌ம் ர‌ச‌ம் கொண்டு வா" என்றார். அப்போது ச‌த்யாவின் பாடி லேங்குவேஜில் ஏதோ த‌வ‌று இருந்திருக்க‌ வேண்டும் .

ச‌ர்வ‌ர் ஒரே த‌ம்ள‌ரில் மோரையும்,ர‌ச‌த்தையும் ஊற்றி ,ஆற்றிய‌ப‌டியே கொண்டு வ‌ந்த‌தை பார்த்து திருவிளையாட‌ல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இய‌ங்க‌ ஆர‌ம்பித்த‌தை சொல்லித் தானாக‌ வேண்டும்.










































Thursday, November 1, 2007

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருது

கேடுகாலம் வருது, கேடுகாலம் வருதுஆம் பிரம்மங்காரு எழுதிய காலஞானப்படி யானாலும்.தற்போதுள்ள கிரக நிலைப்படிட்யானாலும் நல்லகாலம் பிறக்குது என்று சொல்ல முடியாது.
சிம்மம் சூரியனின் வீடு,சூரியனுக்கு பகை கிரகமான சனி சிம்மத்தில் உள்ளது.( 2005 ,ஆகஸ்ட் 5 முதல்), மேலும் 45 நாட்களில் ராசியை விட்டு ஓட வேண்டிய செவ்வாய் வரும் வருடம் ஏப்ரல் வரை மிதுனத்திலேயே இருக்கப் போகிறார்.
தம்பதிகள்,பங்குதாரர்கள்,கூட்டணி கட்சிகள் இவற்றுக்கெல்லாம் காரகம் வகிப்பது மிதுன ராசியாகும் . இங்கு யுத்தகாரகனான் செவ்வாய் ஸ்தம்பித்துள்ளார். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கதை கந்தல்தான்.
மேலும் சுதந்திரம் வந்து 60 வருடம் பூர்த்தியாகி மற்றொரு சுற்றில் உள்ளோம். அடையை பிடிடா பரதப்பட்டா கதைதான். மீண்டும் யுத்தம்,பிரிவினை,மத கலவரம், மக்கள் நாடு விட்டு செல்லுதல் எது நடந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.