Showing posts with label வலையுலகம். Show all posts
Showing posts with label வலையுலகம். Show all posts

Saturday, June 28, 2014

வலையுலக லேட்டஸ்ட் ட்ரென்ட்: 10 கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே !

வலை உலகத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்றதுதான். இதும் பின்னாடி இருக்கிற மனோதத்துவம் ரெம்ப சிம்பிள். உங்க ஈகோவை திருப்தி படுத்தறது.

உங்களை பத்தி சொல்லிக்க உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறது. ம்..எல்லாம் தெரிஞ்சும் ட்ரென்ட்ல இருக்கனுமேன்னு நானும் பதில் கொடுத்து தொலைச்சிருக்கன்,

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறாவது பிறந்த நாளா? ஹ.. இப்பமே ரெம்ப போரடிக்குது.கடுப்படிக்குது. ஒரு வாய்ப்புகிடைச்சா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமல் படுத்திட்டு உலகத்தோட பார்வையிலருந்தே மறைஞ்சுருவன்.

(மினிமம் கியாரண்டியா நம்ம படைப்புகளை 4 மொழியிலயும் -ஆ.இ.200 ஐ 22 மொழிகள்ளயும் மொழி பெயர்த்து வெளியிட்டுட்டாலே போதும் கழண்டுக்க தயார்)

லோட் லோடா ஐரன் ஸ்க்ராப் வரவழைச்சுக்கிட்டு ஜி.டி நாயுடு வேலைகளை செய்யவச்சுக்கிட்டு நிம்மதியா வாழ்வேன்

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நாடு கிடக்கிற கிடப்புக்கு எதை பத்தியும் கவலைப்படாம அடுத்தவன் பாக்கெட்லருந்து நாலணாவை எப்படி சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழறது எப்படின்னு 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக?
சிரிப்பொலி,ஆதித்யா மற்றும் சில சானல்களின் காமெடிக்களின் உபயத்தில் முக்கியமா வடிவேலு உபயத்துல சிரிச்சுக்கிட்டே இருக்கன்.

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
லேப்டாப்ல பேட்டரி பேக் அப் இருக்கிற வரை வேலை .அது முடிஞ்சு போனா ஊர்பஞ்சாயத்துதேன்.

 5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
சொல்லியாச்சு. லைஃப்ல சக்ஸஸ் ஃபார்முலா ஒன்னுதான் "மானம் ,ஈனம்,சூடு,சுரணை எல்லாத்தையும் விட்டுரனும்" ஆனால் பர்மனென்டா விட்டுட்டா நம்மை படைச்ச கடவுளுக்கே அவமானம். எல்லா கதவும் மூடிக்கிட்டப்போ எமர்ஜென்சி கேட்டா இதை யூஸ் பண்ணுங்க.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவுக்கு யுத்த தளவாடங்கள் தவிர்த்து வேற எதாச்சும் சோர்ஸ் ஆஃப் ரெவின்யூ உருவாக்குவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கடந்த காலத்திடம் . கடந்த காலத்தில் இந்த சிச்சுவேஷன் வந்தப்போ என்ன செய்தனோ அதுக்கு நேர் எதிரிடையா ஒர்க் அவுட் பண்ணுவன். புத்தம் புதுசா பிரச்சினை வந்துட்டா? லாஜிக்கை வச்சு நானே பைசல் பண்ணிருவன்.
தொழில் நுட்பம்னா மட்டும் எனக்கு ஆரு மேல நம்பிக்கை இருக்கே அவிக கேட்பேன்.

 8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
பரப்பினாருங்களே.. அப்பம் இலவச ஜோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பின பார்ட்டி பலன் அனுப்ப கொஞ்சம் போல தாமதமாயிருச்சுங்கற கடுப்புல செமர்த்தியா பரப்பினாரு. ஃபேக் ஐடில்லாம் கிரியேட் பண்ணி சாக்கடை கமெண்ட் எல்லாம் போட்டு நாறடிச்சாரு. இன்னைக்கு நாம இருக்கம். அந்த பார்ட்டி இருக்கா இல்லையான்னு தெரியல. மொதல்ல நமக்குள்ள இருந்த ரஜோ குணம் சிலும்ப கொஞ்ச நாள் மல்லு கட்டி பார்த்துட்டு தூ போ அம்பாளே பார்த்துப்பான்னு விட்டுட்டன். இனியும் இதையே செய்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இதோட வாழ்க்கை முடிஞ்சுரல. இன்னம் எவ்வளவோ இருக்கு. சீக்கிரமா மனச தேத்திக்க. நிறைய சவால்கள் காத்திருக்கு.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
டிஃப்ரன்டா ஒன்னும் கிடையாது. என் வேலைய நான் தொடர்வேன்.

Sunday, December 19, 2010

வலையுலகில் தேக்கம்

சுஜாதா கதைகள்ள கணேஷ் வசந்துக்கு கீர் (Gear) போடவும், வசந்தே தனக்கு தான் உசுப்பேத்திக்கவும் " நீ அனுமார்ரா உன் பலம் உனக்கு தெரியாதும்பாய்ங்க. இதே வசனத்தை நான் சகபதிவர்கள் கிட்டயும் விட விரும்பறேன்.

சுகுமார்ஜி எந்த ஆக்டரும் சூப்பர் ஸ்டாருல்லே. ரசிகன் தான் சூப்பர் ஸ்டாருன்னு போட்ட பதிவை 499 பேர் பார்த்திருக்காய்ங்க. தமிழ் வெளில டாப் ஒன்ல நின்னிருக்கு. (படத்தை பாருங்க ) இந்த வெற்றி கொடுத்த தகிரியத்துல தான் இந்த பதிவையே போடறேன்.

வீட்லயே நெட் கனெக்சன் வந்துட்டதால,  ஒரு நாளைக்கு 3 தாட்டி பூந்துவர்ரதாலயா என்னனு தெரியலை புது பதிவுகள் குறைஞ்சிட்டே வராப்ல ஒரு சம்சயம். வந்த பதிவுகள்ளயும் புதுமைய லென்ஸ் வச்சு தேட வேண்டியதா இருக்கு.

தர்ம யுத்தம் படத்துல ஸ்ரீதேவி பாடுவாய்ங்களே அப்படி எத்தனாம்பெரிய ஜூரியை கூட போய்யா போய்யா (வலை) உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பான்னு பிரிச்சு மேயற வாய்ப்பு இந்த உலகத்துல இருக்கு. ஆனால் திருப்பி திருப்பி கலைஞரை,ஜெயாவை,ராசாவ கிழிக்கறதோட சரி.   விட்டா சினிமா விமர்சனம். இல்லை சக பதிவர்களை கலாய்க்கிறது ( எப்பவாச்சும் ஃப்ரீன்னா பரவால்லை எப்பவுமே ஃப்ரீன்னா எப்படி?) விட்டா ரஜினி,விஜய்.

என் சிற்றறிவுக்கு எட்டின வகையில வலையுலக புதுமைக்கு சில யோசனைகள் குறைஞ்ச பட்சம்  ஒரு 45  நாளைக்கு அமலாக்கினா போதும்

*ஆரியம்,திராவிடம்,பார்ப்பனீயம் எல்லாத்துக்கும் லீவு
* நோ சினிமா விமர்சனம் - நோ நடிகைகள் காசிப்ஸ்
*இலங்கை மேட்டர்ல விசயம்,விசயத்தோட வீரியம்  தெரிஞ்சவுக மட்டும்      டீட்டெய்ல்டா எழுதனும் -மத்தவுகல்லாம் படிக்கலாம் பரப்பலாம்

*.டிவி நிகழ்ச்சிகள் அதுலயும் சீரியலை பத்தி வேணாங்கண்ணா ..வேணம்னா புதுசா ,சனத்துக்கும் உபயோகமா எதுனா நிகழ்ச்சிகளுக்கு ஐடியா கொடுங்க
*பதிவர்களுக்கான யோசனைகள் தலைப்புக்கு தடை( நம்ம பதிவே கடைசி பதிவா இருக்கட்டும் ஜஸ்ட் 45  நாளைக்கு)















மேலே உள்ள காலியிடம் உங்கள்ள யாராச்சும் சொல்ற யோசனையை சேர்த்துக்கத்தேன்.

என்னெல்லாம் எழுதலாம்:
இந்த துணைத்தலைப்புக்கு கீழே எழுத எனக்கு தகுதி  இருக்கானு தெரியலை. நான் கூட  ஜோதிஷம் ,சைக்காலஜி,செக்ஸாலஜி,அரசியல்னு தேங்கிட்டன். இனி நானும் புதுமையா எதுனா எழுதலாம்னு இருக்கேன். இடையில மருந்தா நோய்க்கு விருந்தான்னு ஒரு தொடர் ஆரம்பிச்சு அது தொங்கல்ல இருக்கு.

என்னமோ போங்க இந்த ஞா கிழமை வந்தாலே எல்லாமே கடுப்படிக்குது...

முடிவுரை:
எனக்கு என்ன தோணுதுன்னா இங்கன பைசா புரள்றதில்லைங்கறதே இந்த தேக்கத்துக்கு காரணமோ? யாராச்சும் நகைக்கடைக்காரவுக வந்து பரிசு கொடுக்க ஆரம்பிச்சா புதுவெள்ளம் வருமோ?