Saturday, June 28, 2014

வலையுலக லேட்டஸ்ட் ட்ரென்ட்: 10 கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே !

வலை உலகத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்றதுதான். இதும் பின்னாடி இருக்கிற மனோதத்துவம் ரெம்ப சிம்பிள். உங்க ஈகோவை திருப்தி படுத்தறது.

உங்களை பத்தி சொல்லிக்க உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறது. ம்..எல்லாம் தெரிஞ்சும் ட்ரென்ட்ல இருக்கனுமேன்னு நானும் பதில் கொடுத்து தொலைச்சிருக்கன்,

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறாவது பிறந்த நாளா? ஹ.. இப்பமே ரெம்ப போரடிக்குது.கடுப்படிக்குது. ஒரு வாய்ப்புகிடைச்சா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அமல் படுத்திட்டு உலகத்தோட பார்வையிலருந்தே மறைஞ்சுருவன்.

(மினிமம் கியாரண்டியா நம்ம படைப்புகளை 4 மொழியிலயும் -ஆ.இ.200 ஐ 22 மொழிகள்ளயும் மொழி பெயர்த்து வெளியிட்டுட்டாலே போதும் கழண்டுக்க தயார்)

லோட் லோடா ஐரன் ஸ்க்ராப் வரவழைச்சுக்கிட்டு ஜி.டி நாயுடு வேலைகளை செய்யவச்சுக்கிட்டு நிம்மதியா வாழ்வேன்

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நாடு கிடக்கிற கிடப்புக்கு எதை பத்தியும் கவலைப்படாம அடுத்தவன் பாக்கெட்லருந்து நாலணாவை எப்படி சுட்டுரலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழறது எப்படின்னு 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக?
சிரிப்பொலி,ஆதித்யா மற்றும் சில சானல்களின் காமெடிக்களின் உபயத்தில் முக்கியமா வடிவேலு உபயத்துல சிரிச்சுக்கிட்டே இருக்கன்.

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
லேப்டாப்ல பேட்டரி பேக் அப் இருக்கிற வரை வேலை .அது முடிஞ்சு போனா ஊர்பஞ்சாயத்துதேன்.

 5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
சொல்லியாச்சு. லைஃப்ல சக்ஸஸ் ஃபார்முலா ஒன்னுதான் "மானம் ,ஈனம்,சூடு,சுரணை எல்லாத்தையும் விட்டுரனும்" ஆனால் பர்மனென்டா விட்டுட்டா நம்மை படைச்ச கடவுளுக்கே அவமானம். எல்லா கதவும் மூடிக்கிட்டப்போ எமர்ஜென்சி கேட்டா இதை யூஸ் பண்ணுங்க.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவுக்கு யுத்த தளவாடங்கள் தவிர்த்து வேற எதாச்சும் சோர்ஸ் ஆஃப் ரெவின்யூ உருவாக்குவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கடந்த காலத்திடம் . கடந்த காலத்தில் இந்த சிச்சுவேஷன் வந்தப்போ என்ன செய்தனோ அதுக்கு நேர் எதிரிடையா ஒர்க் அவுட் பண்ணுவன். புத்தம் புதுசா பிரச்சினை வந்துட்டா? லாஜிக்கை வச்சு நானே பைசல் பண்ணிருவன்.
தொழில் நுட்பம்னா மட்டும் எனக்கு ஆரு மேல நம்பிக்கை இருக்கே அவிக கேட்பேன்.

 8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
பரப்பினாருங்களே.. அப்பம் இலவச ஜோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பின பார்ட்டி பலன் அனுப்ப கொஞ்சம் போல தாமதமாயிருச்சுங்கற கடுப்புல செமர்த்தியா பரப்பினாரு. ஃபேக் ஐடில்லாம் கிரியேட் பண்ணி சாக்கடை கமெண்ட் எல்லாம் போட்டு நாறடிச்சாரு. இன்னைக்கு நாம இருக்கம். அந்த பார்ட்டி இருக்கா இல்லையான்னு தெரியல. மொதல்ல நமக்குள்ள இருந்த ரஜோ குணம் சிலும்ப கொஞ்ச நாள் மல்லு கட்டி பார்த்துட்டு தூ போ அம்பாளே பார்த்துப்பான்னு விட்டுட்டன். இனியும் இதையே செய்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இதோட வாழ்க்கை முடிஞ்சுரல. இன்னம் எவ்வளவோ இருக்கு. சீக்கிரமா மனச தேத்திக்க. நிறைய சவால்கள் காத்திருக்கு.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
டிஃப்ரன்டா ஒன்னும் கிடையாது. என் வேலைய நான் தொடர்வேன்.

அணு உலையும் கெயில் பைப் லைனும்

அண்ணே வணக்கம்ணே !

அணு உலை மேட்டரு நமக்கு தெரியாது. ஆனால் வெடிச்சா மட்டும் துடிச்சு சாகற அளவுக்கெல்லாம் டைம் கொடுக்காதுங்கற மேட்டரு தெரியும். ஒரு நூறு வருசத்துக்கு அதனோட பாதிப்பு சுத்து வட்டாரத்துல இருக்குன்னு மட்டும் தெரியும்.

இந்த கெயில் பைப்லைன் மேட்டரு மட்டும் சானல்கள் உபயத்துல ப்ரா போடாத முலை மாதிரி பட்டவர்த்தனமா தெரியுது.

1991 ல போட்ட பைப் லைனாம்.  மெனோஃபஸ் வந்த பொம்பளைக்கு போல 2 மாசமா  லீக் அடிச்சுக்கிட்டே இருந்திருக்கு. ஒரு வாரமா ரிப்பேர் பார்த்துக்கிட்டே இருந்திருக்காய்ங்க.

பேட்டரி அவுட் ஆயிட்ட பர்சன் பலான மேட்டருக்கு வெங்காயம் சேர்த்துக்கறாப்ல இரும்பு பைப்லருந்த ஓட்டையில புளி அடைச்சுட்டு சாரி வெல்டிங் பண்ணிட்டு போயிட்டாய்ங்களாம்.

கூப்பிடு தூரத்துல ஓன்.என்.ஜி.சி இருக்காம்.ராத்திரி முழுக்க லீக் அடிச்சு ஒன்னரை கி.மீ தூரத்துக்கு கியாஸ் பரவி இருந்திருக்கு.

யு.பி.ஏ அரசாங்க மேட்டர்ல சனம் வரட்டும்டா தேர்தல்னு சனம் காத்திருந்தாப்ல காத்துல பரவின கியாஸ் வெய்ட்டிங்.
விடியல் அஞ்சு மணிக்கு ஓட்டல் காரரு அடுப்பு பத்த வச்சிருக்காரு. ஊரு பத்திக்கிச்சு  பைப் வெடிச்சு மத்தியில ஒரு பீசே காணோம். சுற்றிலும் பத்தடிக்கு பள்ளம்.

ஹோட்டல் காரரும் அவர் குடும்பமும் பஸ்மம்.  அந்த வழியா பைக்ல வந்த அப்பா மகள் மெட்டாஷ். ஜஸ்ட் 10 ஏக்கர் தென்னந்தோப்பு காலி . குடிசை வீடுகளோட  கதைய சொல்லவே தேவையில்லை.ஓட்டு வீடுக கூட இருந்த இடம் தெரியாம குப்பை மேட்டா போயிருச்சு.  வாத்து கோழில்லாம் செமி குக்டா கிடக்கு.ஊரோட பேரு "நகரம்" ஒரே நொடியில நரகம் ஆயிருச்சு.
வெடிச்சதுக்கு காரணம் காலாவதியான பைப் லைன்,அதை மாத்த மனசில்லாத  நிர்வாகம். இதெல்லாம் ஒருபக்கம். வெடிச்ச பிறவு நிலைமை என்னடான்னா ..

தகவல் தொழில் நுட்ப புரட்சி காரணமா சனம் கையில செல் ஃபோன் இருந்திருக்கு. விரல் தேய கீ பேட் தேய ஃபோன் மேல ஃபோன் போட்டிருக்காய்ங்க. ஒரே ஒரு டி.எஸ்.பி தவிர ஒரு மயிரானும் ஸ்பாட்டுக்கு உடனே வரல.

கெயில் காரனும் வரல,ஓ.என்.ஜி.சி காரனும் வரல, அட 108 ஆம்புலன்ஸ் கூட வர்லிங்ணா. டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ப்ரஸ்டீஜியஸா கொண்டு வந்து கறாரா அமல் செய்த திட்டம் அது.அதுக்கும் கருமாதி பண்ணிட்டானுவ போல.
விஷயங்களை எளிமை படுத்தலாம் .ஆனால் ரெம்ப படுத்திரக்கூடாதுன்னு ஒரு சேயிங் ஞா வருது.சரி அவிக யாவாராத்துக்கு எளிமை

படுத்திக்கிட்டாய்ங்க.ஓகே. தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மாறுது.ஆனால் 1991 ல இருந்த  தொழில் நுட்பத்தை (?) பயன் படுத்தி போட்ட பைப் லைனை "சிந்தாம சிதறாம" தொடர்ந்திருக்கான்னா என்ன சொல்ல?
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளாங்கறாப்ல ஊரு உலகத்து மேட்டரை எல்லாம் ஈயடிச்சான் காப்பி அடிக்கிறாய்ங்க.

அது நம்ம நாட்டுக்கு , அதுவும் அடிமைப்பட்டு கிடந்த  நாட்டுக்கு,அதுவும் வர்ணாசிரமதர்மம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அமல்ல இருக்கிற இந்த நாட்டுக்கு ,அதன் காரணமா ஒரு மேஜர் க்ரூப் ஆஃப் பீப்புள் இன்னமும் கல்வி,விழிப்புணர்ச்சி இல்லாம இருக்கிற இந்த நாட்டுக்கு சூட் ஆகுமா?னு ரோசிக்க வேணாம்.

இந்தியனாய் இரு -இந்திய பொருளையே வாங்குங்கறாய்ங்க. 

கெயில்,ஓ.என்.ஜி.சில்லாம் என்ன ஜப்பான் நாட்டு நிறுவனமா?
இந்திய பொருளையே வாங்குன்னா  அப்பம் இந்திய முதலாளியை மட்டும் வாழ வைனு அருத்தமா?  அவனவன் தலா 10 எம்பியை  கை வசம் வச்சுக்கிட்டு ஆட்டைய போடட்டும்னு சொல்ல வராய்ங்களா? (கிரிக்கெட் டீம் விலைக்கு வாங்கறாப்ல ஆயிருச்சு நிலைமை)

எம்பியை பிடிச்சு அசலான ஆளை பிடிச்சுன்னு சுத்தல் எதுக்குன்னு இப்பல்லாம் அசலான ஆளையே பிடிச்சு வச்சுராய்ங்க போல. தரம், தந்தூரி சிக்கன்லாம் விளம்பர வாசகங்களுக்கு மட்டுமா?

இயந்திர மயம்,தொழில்மயம் லாம் ஏதோ ஒரு பிரமையில ஆனால் நெல்ல எண்ணத்துல வந்த மாற்றங்கள். இந்த பட்டியல்ல பசுமை புரட்சி ,வெண்மை புரட்சி,நீல புரட்சியை எல்லாம் சேர்த்துக்கலாம். இதுகளோட விளைவு என்னாச்சுன்னா

சுவாமி நாதன் என் வாழ்க்கையில செய்த பெரிய தப்பு பசுமை புரட்சிங்கறாராம். நல்ல எண்ணத்தோட வந்த  மேட்டரே இப்படி பிட்டர் எக்ஸ்பீரியன்ஸை கொடுத்திருக்குன்னா

இந்த உலக மயம், தனியார் மயம்லாம் எதுல போயி முடியுதோ பார்க்கனும். (பொளச்சி கிடந்தா).

இதெல்லாம் வேற சப்ஜெக்ட். என் கேள்வி ஒன்னு தான் .கொய்யால கியாஸ் பைப் லைனையே ஒளுங்கு மருவாதியா போட முடியாத -மெயின்டெய்ன் பண்ண முடியாத நாட்டுக்கு அணு உலை தேவையா?

அட வெடிச்ச பிறவாச்சும் எதுனா கன்ஸ்ட்ரக்டிவா பேசறானா ? திட்டமிடறானான்னா அதுவும்  கிடையாது. மத்திய அரசு,மானில அரசு,கெயில்,ஓ.என்.ஜி.சி எல்லாம் பிச்சு பிச்சு செத்துப்போனவனுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அனவுன்ஸ் பண்ணியிருக்காய்ங்க.

அது எப்பம் அந்த சனங்க கைக்கு போகுமோ ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆதார் அட்டைக்கு ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சானுவ. படக்குனு ஒன் ஃபைன் மார்னிங் எல்லாம் கேன்ஸல்னுட்டானுவ.

அணு உலை  மேட்டர்ல மட்டும் செலவழிச்சாச்சு ..நிறுத்த முடியாதிங்கறானுவ. என்னடா லாஜிக் இது? ரேட் கொடுத்து புக் பண்ணிட்டம்னு எய்ட்ஸ் வந்தவளை ...க்க முடியுமா?

Monday, June 23, 2014

மோடிக்கு சில ரோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ல சில நாட்களுக்கு மிந்தி நான் பிரதமராகியிருந்தாங்கற தலைப்புல சில ஐடியாக்களை அள்ளி விட்டிருந்தம்.

அந்தத பட்டியலை கீழே தந்திருக்கன். கொஞ்சம் போல அப்டேட் பண்ணியிருக்கன். ஆருனா இதை இங்கிலீஷ்ல டப்பிங் பண்ணி போட்டா புண்ணியமா போகும்.

இதை எல்லாம் படிச்சுட்டு அட இதெல்லாம் நமக்கு தோனலியேன்னு சிலருக்கு தோனும்.பலர் அட நாம கூட இப்படி எல்லாம் ஒரு சந்தர்ப்பத்துல நினைச்சிருக்கமேன்னு தோனும்.

நான் கொடுத்திருக்கிற ஐடியா எல்லாம் ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.  இந்த மாதிரி ஐடியால்லாம் வரனும் -தொகுத்து எழுதனும்னா மனசு இருக்கனும். எல்லாரும் நல்லாருக்கனும்ங்கற மனசு இருக்கனும் .அவ்ளதான்.

க்ளோபல் வில்லேஜுங்கறாய்ங்க. உலகமே தெப்பக்குளம் மாதிரி ஆயிருச்சு. எவனோ ஒரு பன்னாடை ஒரு கூழாங்கல்லை தூக்கி போட்டா அலை உங்க படித்துறைக்கும் வரும். டீசல் விலை ஏறினா எனக்கென்ன? ரயில் கட்டணம் ஏறினா எனக்கென்னனு இருக்க முடியாது.

ஒரு முட்டாள் அரசாங்கத்தோட முட்டாள் தனமான முடிவு  நம்ம எல்லாரையும்  நேரிடையா -உடனடியா பாதிக்கும். பெட் ரூம் வரை -கழிவறை வரை வந்து பாதிக்கும்.

இந்த ரோசனைகளை ஆருனா ட்ரான்ஸ்லேட் பண்ணா அதை மோதிஜிக்கு அனுப்பலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

பெரீ மன்சங்களுக்கு லெட்டர் போட்டா பதில் வரும்ங்கற தவறான நம்பிக்கையை கொடுத்தது என்.டி.ஆர். ஆப்புமேல ஆப்படிச்சா பதில் வந்தே தீரும்ங்கற நம்பிக்கைய கொடுத்தது சந்திரபாபு.

நீ தலைகீழ நின்னு ரசத்துல மூஞ்சி கழுவினாலும் வராதுன்னு சொல்லாம சொன்னது மம்மி . மோடி என்ன சொல்லப்போறாரு? என்னமாதிரி அனுபவத்தை கொடுக்கப்போறாருன்னு பார்க்கத்தானே போறேன்.

நிர்வாகம்னா அது ஒன்னும் மோடி மஸ்தான் வேலை இல்லை.  கொஞ்சம் தில் வேணம். தில்லுன்னா தகிரியம்னு தெரியும். தில்லுன்னா மனசுன்னு கூட ஒரு அருத்தம் இருக்கு.

சீர் திருத்தம்னு இறங்கிட்டா ஒவ்வொரு அடியையும் சாக்கிரதையா எடுத்து வைக்கனும்.இருக்கிற ஊழியர்களை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வரனும்னா மொதல்ல ஆல்ட்டர்னேட்டிவ் அரேஞ்ச் பண்ணிக்கனும்.

காலி இடத்தை எல்லாம் போர்கால அடிப்படையில நிரப்பனும். அவிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்கனும். புதுசா சேர்ந்தவன் புதுசா இருக்கும் போதே பழைய ஒட்டடைய எல்லாம் தட்டனும்.வேலை நிறுத்தம் அது இதுன்னு இறங்கினாலும் புது வெள்ளத்தை வச்சு சமாளிக்கனும்.

நிர்வாகம்னா பாராளுமன்றமோ -தலைமை செயலகமோ -அங்கன குப்பை தொட்டி வைக்கிறதோ இல்லை. நிர்வாகம்னா மக்கள் பார்வையில  எது நிர்வாகம்னு தெரிஞ்சுக்கனும்.

மக்கள்னா வங்கிக்கடன் வாங்கி லக்சரி டீசல் கார் வச்சிருக்கிறவனும் மக்கள் தான்.ஆனால் அவனை கொஞ்சம் தீர்ப்பாட்டா கவனிக்கலாம்.

டாப் ப்ரியாரிட்டி நடை பாதி வாசி. குடிசை வாசி, ஒண்டு குடித்தனவாசி,

விசிட்டிங் கார்டோ ,பெரீ மன்சங்க லெட்டர் பேடோ ,கார்ப்பரேட் கம்பெனி ஐடியோ இல்லாத அவனை பொருத்தவரை அரசாங்கம்னா லட்டியில தட்டி "யார்ரா நீ"ங்கற போலீஸ் காரர் தான்.

சனத்தை பொருத்தவரை அவன் தினசரி புழங்கற இடம் , வாரம் ஒரு தாட்டி அல்லது மாசம் ஒரு தாட்டி விசிட் அடிக்கிற இடம் பர்ஃபெக்டா இருந்தா போதும் .

அது போலீஸ் ஸ்டேஷனா இருந்தாலும் சரி . தாலுக்காஃபீஸ், கரண்டாஃபீஸ், போஸ்டாஃபீஸ், காய்கறி மார்க்கெட்,அவன் பிள்ளை படிக்கிற ஸ்கூலு .இப்பிடி ஒரு லிஸ்டை போட்டா மொத்தமே இருபது இருபத்தஞ்சு தான் வரும். அந்த இடங்களை ஆசிட் ஊத்தி கழுவி சென்டட் ஃபெனாயில் போட்டு வச்சுட்டா போதும் "சீமான்யா.. என்னமா ஆட்சி நடத்தறான்"னு சொல்ட்டு போயிக்கினே இருப்பாய்ங்க.

இப்பம் " நான் பிரதமாராகியிருந்தா"ங்கற  தலைப்புல கொடுத்திருந்த ஐடியாக்களை பாருங்க.

பாராளுமன்றம்,ஜனாதிபதி மாளிகை,பிரதமர் இல்லம் மூன்றையும் க்ளோபல் டென்டர் மூலம் 99 வருடங்களுக்கு லீசுக்கு விட்டிருப்பன்.
தற்போதைய கரன்சி ரத்து -புதிய கரன்சி அறிமுகம் (கருப்பு பணத்துக்கு காயடிப்பு)

10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் சிறப்பு ராணுவம் கொண்டு நதிகள் இணைப்பு -கூட்டுறவு பண்ணை விவசாயம்

நம் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ.நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி அதன் பாதுகாப்பை சர்வதேச ராணுவத்துக்கு ஒப்படைப்பு.( சீனா விஷயத்திலும் இதே ஃபார்முலா) அவர்கள் வசம் உள்ள நிலப்பகுதியையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்க சொல்லி அழுத்தம்.
வழிக்கு வரலின்னா சீனா,பாக்கிஸ்தான்,இலங்கை மீது பொருளாதார தடை,ராஜீய உறவுகள் கட்

ராணுவத்துக்கு நதி நீர் இணைப்பில் பங்கு .நதி நீர் இணைப்பில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி.

இந்த நாட்டின் தொழில் விவசாயம்-நாட்டின் அனைத்து சக்தியும் விவசாய மேம்பாட்டிற்கு திருப்பி விடப்படும்.அடுத்த முக்கியத்துவம் விவசாயம் சார்ந்த தொழில்கள்,விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி

ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம் செக்ஸுக்கு உத்திரவாதம்.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி

அனைத்து மானிலங்களிலும் தலா ஒரு மாதம் பிரதமர்,தலைமை செயலகம் செயல்படும் (டிஜிட்டல் மயமாக்கி விடுவதால் மனிதர்கள் மட்டும் ரயிலை பிடிச்சு போனா போதும்.

பூரண மதுவிலக்கு -போதை பொருட்களுக்கு தடை
ஒரு வருடத்துக்கு மேற்படிப்புகள்,தொழிற்கல்விக்கு தடை - ஆஃப்டர் அப்டேஷன் ஒன்லி ரீ ஸ்டார்ட்.

படிச்சவனுக்கு அவன் படிச்ச நிறுவனமே வேலை கொடுக்க சட்டம்

ஆறுகள் எத்தனை சின்னதாய் இருந்தாலும் ராணுவம் கொண்டு மீட்பு , கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டால் அன்றி நதியில் விட தடை. சட்டத்தை மீறினால் கொலை வழக்கு பதிவு

பள்ளிகள், கல்லூரிகள்,ஹாஸ்டல்கள்,பிரார்த்தனை ஸ்தலங்கள்,அரசு அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை அவிகளே ஜெனரேட் பண்ணிக்கனும் . (சோலார்,பயோ கியாஸ்,காற்றாலை)

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.லக்சரி கார்களுக்கு மானிய விலை டீசல் கட்.

பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு டாப் ப்ரியாரிட்டி.வாரத்துல ஒரு நாள் மாசு எதிர்ப்பு தினம். அன்று பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தவிர்த்து அனைத்து  வாகனங்களுக்கும் தடை .

அரசு அலுவலகங்களில் காகிதங்களுக்கு தடை. நிருபர்கள்,பொதுமக்களுக்கு தகவல் தர மட்டுமே காகிதம்.மற்றபடி அனைத்தும் டிஜிட்டல் மயம்
பீக் ஹவர்ஸில் ஃபோர் வீலர்களுக்கு தடை .18+ வயதுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் இலவச சைக்கிள்.சைக்கிள்களுக்கு மெயின் ட்ராக்

மத,ஆன்மீக நடவடிக்கைகளுக்கு உடலுறவு போன்று சாத்திய கதவுகளுக்குள் மட்டுமே அனுமதி .

கிராமங்கள் உற்பத்தி மையங்களாய்,நகரங்கள் விற்பனை மையங்களாய்
காவலர் பணியிடங்கள் நிரப்புதல் - அப்டேட்டட் ட்ரெய்னிங். 3 மாதங்களில் மொத்த பணியிடங்கள் போல் மேலும் இரண்டு மடங்கு ஆளெடுப்பு. ஷிஃப்ட் சிஸ்டம். காவல் நிலையங்களில் சிசி கேமரா.

அனைத்து மத்திய,மானில அரசு ஊழியர்களுக்கும் மெடிக்கல் டெஸ்ட். ஃபெய்ல் ஆனவுக வீட்டுக்கு. காலியிடங்கள் அனைத்தும் நிரப்புதல்.
ஒவ்வொரு அரசு ஊழியனையும் அரசே தத்தெடுக்கும். A to Z அரசே வழங்கும். பார்த்துக்கொள்ளும்.

லஞ்சம் வாங்கினால் ரிமூவ்ட் ஃப்ரம் சர்வீஸ்

வருடத்தின் 11 மாதங்கள் உழைத்தவர்களுக்கு மட்டும் 1 மாதம் சுற்றுலா அனுமதி .(ஆன்மீக சுற்றுலாவுக்கும் இதுவே விதி)

நோய் தடுப்பு,குற்ற தடுப்பு,விபத்து தடுப்புக்கு டாப் ப்ரியாரிட்டி .
ஸ்விஸ் வங்கி கணக்காய் வங்கி துவங்கி நாட்டின் கடனை எல்லாம் செட்டில் பண்ணிர்ரது. பஞ்சாயத்து பேசி வட்டில்லாம் எகிறடிச்சுட்டு ஒன் டைம் செட்டில்மென்ட்.

காய்கறி மார்க்கெட்,சந்தையில எல்லாம் எஸ்.டி.டி பூத் கணக்கா வங்கி கவுண்டர்கள். காலையில கடன் கொடுத்து மாலையில வசூல்.

ஒருரெண்டு வருசத்துல எல்லாத்துக்கும் வேலைவெட்டி கொடுத்து அவிகளாகவே எங்களுக்கு நல திட்டங்கள் வேணாம்னு கழண்டுக்கனும் .பிறவு நல திட்டங்கள் கை விடப்பட்ட முதியோர்,பெண்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர்,வயதான திரு நங்கைகளுக்கு மட்டுமேங்கற நிலைய கொண்டு வருவம்

ச்சும்மா பாய்லா காட்டாம -ஹார்ட் ஃபுல்லா -பத்து வருடங்கள் இட ஒதுக்கீடு அமல் செய்தால் போதும். இனி எம் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அவர்களே எழுதிக் கொடுத்துவிடுவார்கள்

எந்த குடிமகன் எந்த மானிலத்துக்கு பெயர்ந்தாலும் அங்கு அவனுக்கு வேலை தங்குமிடம் தயாராக இருக்கவேண்டும்.

100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கும் வரை ஆளில்லா வாக்கு பதிவு மையங்கள் தொடரவேண்டும் .

ஆறு,ஏரி,குளம்,வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியவர்கள் தம் சொந்த செலவில் அவற்றை தம் கட்டிடங்களின் கீழ் புனரமைக்க வேண்டும்.

கடலில் கலக்கும் ஒவ்வொரு டி.எம்.சி தண்ணீரும் அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே கலக்கவேண்டும்.

தடுப்பணைகள் கல்லணை ஃபார்முலா கொண்டு அமைக்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கு புரியும் வகையில் ஒவ்வொரு குடிமகன் குறித்த டேட்டாவையும் அவனே தரும்படி செய்து -அதை அடிப்படையாக வைத்து மைக்ரோ ப்ளானிங்.தவறான தகவல் தந்திருந்தால் ஏழரை வருட கடுங்காவல்    
தண்ணீர் ,ரயில் போக்குவரத்துக்கு டாப் ப்ரியாரிட்டி. ஏற்கெனவே போட்டு தொலைச்ச சாலைகளை அவை பாழ்பட்டு போன பின் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள்
365 நாளும் 16 மணி நேரம் கோர்ட் வேலை செய்யனும். எவனும் 8 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது. நிலுவையில் உள்ள கேஸ் எல்லாம் பைசல் ஆயிட்டா படிப்படியா குறைச்சுர்ரது

படிப்படியாக மத நிறுவனங்கள் அனைத்தும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை சுருக்கி கொண்டு நாட்டு வளர்ச்சியில், எதிர்கால சந்ததிகளின் உடல்,மன,புத்தி நலனுக்கு செயலாற்றும் வகையில் மாற்றப்படும்

இதை எல்லாம் ஒரு ரெண்டு வருசத்துல பைசல் பண்ணிட்டு நேரிடை ஜன நாயகத்துக்காக அரசியல் சாசன திருத்தம். பிரதமருக்கு வீட்டோ பவர். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விகிதாச்சார முறை தேர்தல் . நோ இடை தேர்தல் .ஒரு உறுப்பினர் டிக்கெட் போட்டா பட்டியல்ல உள்ள அடுத்த நபர் தேர்வு

படிப்படியாக அதிகாரங்கள் மானிலங்களுக்கு,மானிலங்களிடமிருந்து மாவட்டங்களுக்கு இறுதியில் கிராம சபைகளுக்கு கை மாற்றப்படும்
மத்திய மானில தனியார் நிறுவனங்களில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு. நாடு சுபிட்சமான பிறவு (என்ன ஒரு 4 வருசத்துல பைசல் ஆயிரும்) இன்னம் என்னெல்லாம் பண்ணலாம்ங்கறதை நாலு வருசத்துக்கு பிறவு சொல்றன்.
   

Saturday, June 7, 2014

எம்.எல்.ஏ சார் நம்ம காதோடு சொன்ன மேட்டரு..


அண்ணே வணக்கம்ணே !
 நம்ம பதிவுகள்ளயும் - முக நூல் நிலை செய்திகளிலும் அப்பப்போ எங்க எம்.எல்.ஏ னு பீத்திக்கிறத கவனிச்சிருப்பிங்க. ஏதோ 2009 எலீக்சன்ல ஏப்ரல் 7 லருந்து 21 வரை ஒரு 14 நாள் டெய்லி பார்த்ததுண்டே தவிர பேசி பழகறது இத்யாதிக்கெல்லாம் சான்ஸே கிடையாது.

நாம போடற லோக்கல் தெலுங்கு பேப்பர் சார்பில் அவரோட ஆதரவாளர்கள் ஸ்பான்சர்ஷிப்போட அப்பப்போ எதையாச்சும் போட்டு சனங்களுக்கு கொடுக்கறது வழக்கம்.

அதுல எதாச்சும் முக்கியமானதா -ஹை பட்ஜெட் ஐட்டமா இருந்தா அவரை பிடிச்சு ஒப்புத்துக்க வச்சு ஓப்பன் பண்ண வைக்கறது உண்டு. அதுக்கும் செமையா கலாய்ப்பாரு "ஏன்யா என் படம் போட்ட காலண்டரை நானே ஓப்பன் பண்ணா நல்லாவா இருக்கும்" அது இதுன்னு எஸ் ஆகவே பார்ப்பாரு. எப்படியோ கோஞ்சாடி வேலை முடிக்கிறது.

நாம அவரை சந்திக்கிற அரிதிலும் அரிதான அந்த மினட்ல நடக்கிற கான்வெர்சேஷனை ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் பின்னால எழுதிரலாம்.
ஒரு தாட்டி மட்டும் செம கலாய்ப்பு. மேட்டருக்கு வரேன்.
சமீபத்துல ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம்னு ஒரு குறுந்தொடரை எழுதினம். ஞா இருக்குல்ல? ஒரு தசராவுக்கு மேற்படி நாமாவளியை பாக்கெட் புக்கா போட்டு சனங்களுக்கு கொடுக்கிறதா ப்ளான் பண்ணி ரெடி பண்ணிட்டம். அவர்ட்ட போயி கொடுத்தம் . ஓப்பன் பண்ணிட்டாரு.

சத நாமாவளி மேட்டர் எல்லாம் ப்ளாக் அண்ட் வைட்லயும் அவரோட ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் எல்லாம் மல்ட்டிக்கலர்லயும் இருந்தது. இதை பார்த்துட்டு கச்சேரிய ஆரம்பிச்சாரு.

கொஞ்ச தூரத்துல  ரூரல் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு சேர் போட்டு வெயிட்டிங்ல வச்சிருக்காய்ங்க. ரேப்பர்ல அம்மன் படம் கீழே சின்னதா பாக்ஸ் போட்டு ஸ்பான்ஸர்ட் பை சி.கே.ஃபேன்ஸ்னு போட்டிருந்தம் டப்பாவுக்குள்ள குட்டியா அவரோட ஃபோட்டோ.

சின்ன பசங்களை கேட்கிறாப்ல அம்மன் படத்தை காட்டி
"இது யாரு"
"அம்மன் சார்"
தன் படத்தை காட்டி "இவன் யாரு?"
"நீங்க சார்"
"இதுல என் ஃபோட்டோ ஏன் வருது?"
"உங்க ஃபேன்ஸ் தான் இந்த பாக்கெட் புக்கை ஸ்பான்சர் பண்ணியிருக்காங்க"
"அப்ப அவங்க படங்களை போட வேண்டியதுதானே"
"சார் ..அவிக மொத்தம் 32 பேர் இருக்காங்க சார். எல்லார் படத்தையும் ரேப்பர்ல போட முடியாதே "
"சரி .. சத நாமாவளி ப்ளாக் அண்ட் வைட்ல வந்திருக்கு .விளம்பரம்லாம் கலர்ல வந்திருக்கு..இது சரியா?"

"சார் .. அவிக காசு கொடுத்து விளம்பரம் போட்டுக்கறாங்க"

"அப்போ ..அம்மன் காசு கொடுத்தாதான் சத  நாமாவளி கலர்ல வருமா?"
இங்கே ஷாட் கட் பண்ணிக்கலாம்.  நம்ம நெடு நாள் க்ளையண்டு விமலாதித்தன். மேற்படி தசரா பிரசுரத்தை பத்தி போற போக்குல நாம ஒரு ஸ்டேட்டஸ் போட படக்கு ரூ.10 ஆயிரத்தை நம்ம அக்கவுண்டுக்கு மாத்தி விட்டுட்டாரு.

நாம அலறியடிச்சு ..அய்யா நான் போட போறது தெலுங்குல -அதையும் எங்க ஊர் சனங்களுக்கு கொடுக்கிறதா தான் ப்ளான். அதுக்கு ஸ்பான்சரர்ஸ் எல்லாம் ரெடி . நான் சும்மா தகவலுக்காக போட்ட ஸ்டேட்டஸ பார்த்துட்டு இப்டி காசை போட்டுட்டிங்களேன்னு பம்மினேன். ஏன் சார் தமிழ்ல போடக்கூடாதா? தமிழ் மக்களும் தெரிஞ்சுக்கலாமில்லையான்னாரு.
விமல் மட்டுமில்லை இன்னும் சிலரும் அப்போ கான்ட்ரிப்யூட் பண்ணாய்ங்க. லண்டன்ல இருக்கிற ஒரு ரெட்டியாரு, திருவாளர்கள் துரை பாண்டியன், மருதப்பன்,அருள்ராஜ்குமார்,கஜபதி ,கோபி நாத் சிதம்பரம் இவிக கொடுத்த காசுக்கெல்லாம் பேப்பர் வாங்கி போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியாச்சு. வீடே ப்ரஸ் மாதிரி ஆயிருச்சு.

அச்சாயிட்டா போதுமா? சனங்களுக்கு போய் சேரனுமே? என்னடா பண்றதுன்னு புலம்பிக்கிட்டிருந்தப்போ நம்ம லோக்கல் நகைக்கடைக்காரர் ஒருத்தரு கிருஷ்ணகிரி வரை போகனும் சும்மா இருந்தா வாய்யான்னாரு. கார் பயணம். ஒடனே நம்ம மேட்டரை சொன்னேன். இவ்ளதானே மூட்டைகளை ஏத்து.பையன் ஒருத்தனை பிக் அப் பண்ணிக்க. போறச்ச நேர கிருஷ்ணகிரி போயிரலாம். வரச்ச எத்தனை ஊரு இருக்கோ எல்லாம் ஊருலயும் நிறுத்த சொல்றேன்.பையன் கொடுக்கட்டும்னுட்டாரு.

இப்படி ரெண்டு தபா போனோம். மேட்டர் ஓவரு. தீர்பாடா உட்கார்ந்து கணக்கு பார்த்தா சனங்க கொடுத்த காசுக்கு இன்னம் 1492 பிரதி போட்டிருக்கனும். சரி அடுத்த மாசம் போட்டுரலாம்னு விட்டன். இதோ வருசங்களே ஓடிருச்சு. இதுக்கு வட்டி போல சொந்த செலவுல ஒரு ரெண்டாயிரம் பிரதி போட்டுரலாம்னு சில வாரங்களாவே ஒரு ஐடியா.

இதுல எம்.எல்.ஏ விட்ட "பொளேர்" வேற ஞாபகத்துல க்ளாஷ் ஆகுது. ஆத்தா காசு கொடுத்தாதான் சத நாமாவளி மல்ட்டி கலர்ல வருமா? ஏன் நாமளே மல்ட்டி கலர்ல போடக்கூடாது? பட்ஜெட் தாங்குமாங்கற சந்தேகம் ஒரு பக்கம். புக் மேக்கிங் மேன்யுவலா பண்றதால காஸ்ட் அதிகம்.இதை விட பெரிய சவால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கறதுதான். இப்படி குழப்பிக்கிட்டிருந்த சமயம்

 ரெண்டு நாளைக்கு மின்னே  விமலாதித்தன் ஃபோன் பண்ணாரு "சார் ! மறுபடி சத நாமாவளி போடற ஐடியா இருக்கா?"

ஏற்கெனவே நீண்ட நெடும்பயணம் போயி டாரா கிளிஞ்சு கிடந்தோமா? கொய்யால மறுபடி பயணமா ஆள விடுங்கற ஃபீல் தான் வந்தது. "இல்லை சார்.. நானே ஒரு 1,492 பிரதி பாக்கி -அதை போடவே ரோசிக்கிறேன். டிஸ்ட் ரிப்யூஷன் தான் பிரச்சினை" என்று கழண்டு கிட்டேன்.
ஒரு நெல்ல காரியத்துக்கு காசு கொடுக்கிறேனு ஒருத்தர் முன்வரதே கஷ்டம்.அதை கூட தடுத்துட்டமேனு ஃபீல் ஆச்சு.

எல்லாத்தையும் பைசல் பண்றாப்ல ஒரு ப்ளான் பண்ணியிருக்கன்.
இந்த சத நாமாவளி மேட்டர்ல பங்கெடுத்தவுக எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில ஒரு லிஃப்ட் கிடைச்சிருக்கு. அது தெரியும். ச்சும்மா டிசைன் பண்ண என் மவளுக்கே அஞ்சு வருசமா இழுத்துக்கிட்டிருந்த கண்ணாலம் கால் காசு கடனில்லாம ஆயிருச்சுன்னா பாருங்களேன். ஆகவே இந்த வேலைய செய்றது வெட்டியில்ல. லைன் க்ளியர்.

புக் மேக்கிங் ப்ராசசை அவாய்ட் பண்ணனும்னா ப்ரவுச்சர் மாதிரி போட்டுரலாம். புக் மேக்கிங் ப்ராசஸ் காஸ்டுக்கு மல்ட்டி கலர்லயே போட்டுரலாம்.

2000 பிரதி ப்ளாக் அண்ட் வைட்ல போடறதுக்குண்டான காஸ்ட் என்னவோ அதை நான் கான்ட் ரிப்யூட் பண்ணிர்ரன். இது வரை ஓகே.

அடுத்த கண்டம் வினியோகம். இங்க தான் உங்க உதவி தேவைப்படுது. வெள்ளிக்கிழமைகள்ள ராகு காலத்துல எப்படியும் அம்மன் கோவில்ல கூட்டம் அம்மும். அந்த சமயம் யாராச்சும் பையனுக்கு நூறோ நூத்தம்பதோ கொடுத்து நிப்பாட்டிட்டா பக்தாளுக்கு கொடுத்து தீர்த்துருவான்.

அந்த காசு பிரச்சினை இல்லை. நானே அனுப்பி வச்சுர்ரன். பிரவுச்சர் கணக்கா ப்ரிண்ட் ஆன சத நாமாவளியை கூரியர்ல அனுப்பிரலாம்.
ஆனால் பிரதிகளை வீணடிக்காம, பொறுப்பா,சரியான ஆள பிடிச்சு வினியோகம் பண்ண வைக்கனுமே.அதுக்கு யார் தயார்?
ஜஸ்ட் ஒரு பத்து பேர் நான் ரெடின்னா போதும் வேலைய ஆரம்பிச்சுரலாம். நான் ரெடி . நீங்க ரெடியா?

நீங்க ரெடியான பிற்காடு விமலுக்கு தகவல் சொல்றேன். ஆரும் ரெடியில்லின்னா நான் பாக்கியா இருக்கிற 2000 பிரதிகளை ப்ளாக் அண்ட் வைட்லயே புக்கா போட்டு வச்சுக்கிட்டு வாய்ப்பு கிடைக்கிறப்பல்லாம் -தமிழ் நாடு பக்கம் போறப்பல்லாம் நானே வினியோகம் பண்ணி கடனை கழிச்சுர்ரன். அவ்ள தானே உடுங்க ஜூட்டு.

எச்சரிக்கை:
எம்.எல்.ஏ என் கிட்ட ரகசியம் பேசினதால - அதுவும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை வெய்ட்டிங்குல வச்சு பேசினதால ஒரு அபலைக்கு நீதி கிடைச்சது தனி கதை. அதை கேட்டவுகளுக்கு சொல்றேன்.