Thursday, December 31, 2009

குரு பெயர்ச்சி பலன் (மெய்யாலுமே)

"சாமி ! ஏதோ குரு மாறிட்டாருனு பேசிக்கிறாங்க ! மேஷ ராசிக்கு எப்டி கீது சாமி !"

"பரவாயில்லே தம்பி ! பாஸ்ட்ல பத்துல இருந்த குரு 11 க்கு வந்திருக்காரு. கோல்ட்,ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு எல்லாம் கிடைக்கும். கண்ணாலம் ஆகாதவங்களுக்கு ஆகும். சில பேருக்கு  லவ் சக்சஸ் ஆகும். ஏற்கெனவே கண்ணாலம் ஆனவுகளுக்கு மனைவி கூட நாலு இடத்துக்கு பந்தாவா போய் வர மாதிரி ஒர்க் அவுட் ஆகும்.   சிலருக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை வெட்டி கிடைக்கும். இவரு உங்களுக்கு 9,12 க்கு அதிபதிங்கறதால சிலரு சொத்து வாங்கலாம். சிலர் சொத்தை  வித்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம். ஆனா ஒன்னுப்பா இப்போ சனி 6 ல இருக்காரு. நானே ராஜா  நானே மந்திரினு ஆடச்சொல்லும் . அடக்கி வாசிச்சா எதிர்காலத்துக்கு நல்லது "

"சாமீ ! எங்க சம்சாரம் ரிஷபராசி சாமி.. அவளுக்கு எப்படி இருக்கு?"
9ல இருந்து குரு 10க்கு வந்திருக்காரு. பாஸ்ட்ல அப்பா சைட்ல ஒரு டெத் கூட நடந்திருக்கலாம். இப்போ பத்து ஒன்னும் நல்ல இடம் கிடையாது. ஆனாலும் தொழில்முயற்சி கைகூட வாய்ப்பு இருக்கு. வேலை செய்ற இடத்துல ஒரு டெத் நடக்கலாம்"

"இன்னா சாமி ..டெத் டெத்துனு பேதிக்கு குடுக்கறே"
" நான் என்ன செய்யட்டும்பா ? குரு ரிஷபராசிக்கு அஷ்டமாதிபதியாச்சே.. என்ன ஒரு நல்ல விசயம்னா ஒரே நேரத்துல ரெண்டு தொழில் கூட செய்ய சந்தர்ப்பம் அமையலாம். ஆனா சனி 5 ல இருக்கிறதால பெரியவங்களை கன்சல்ட் பண்ணி முடிவெடுக்கிறது நல்லது. அதே சமயம் இவரு 9,10 க்கு அதிபதிங்கறதால அதிர்ஷ்ட வசமா தொழில் அமையலாம், வேலை கிடைக்கலாம்"

"இதின்னா சாமி நல்லது கெட்டது கலந்து சொல்றே"

"அதான் நைனா லைஃபு . இப்போ என்ன கேட்க போறே ? உன் அண்ணனுது மிதுன ராசி அதுக்கெப்படி இருக்குனுதானே கேட்க போறே "

"அட ஆமா சாமி !"

"கேட்டுக்க. மிதுன ராசிக்கு குரு  9க்கு வரார். இது நல்லதுதான். பொதுவா குரு அனுகூலமா வந்தா கிடைக்கிற நல்ல பலனெல்லாம் கிடைக்கும்.கோல்ட்,
ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு, புருசன் பொஞ்சாதி மத்தில ஒத்துமை ஜாஸ்தியாவும், புத்திர பாக்யம் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கல் சரளமா இருக்கும்.
இவரு 7,10க்கு அதிபதிங்கறதால அன் மேரீட் ஃபெலோஸுக்கு அப்பா வகையறால மனைவி அமையலாம். திருமணமானவுக பொஞ்சாதியோட கோவில் குளம்னு போய்வர வாய்ப்பு ஏற்படும் . பொது வேலைகள், கோவில் திருப்பணி மாதிரி வேலைகள்ள பங்கெடுக்க வேண்டி வரலாம். ஆனால் இவிங்களுக்கு சனி சுகஸ்தானத்துல இருக்கிறதால தாய் வீடு வாகனம் கல்வி வகையறால சிக்கல் ஏற்படும். வெகு சிலர் வீடு வாங்கவோ கட்டவோ கூடும்."

"சாமி உன்னை ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்கமாட்டியே."
" நீ  என்ன கேட்க போறேனு தெரியும். உன் தம்பிக்கு கடகராசி அதுக்கெப்படி இருக்குனு கேட்க போறே அவ்ளதான அதையும் சொல்லிர்ரேன். கடகராசிக்கு குரு பாஸ்ட்ல 7 ல இருந்தாரு. ஜனம் ஆகா ஓகோன்னிருப்பாங்க ஒரு ..ம் நடந்திருக்காது. இப்போ எட்டுல குரு கெட்டது குடின்னிருவாங்க டோண்ட் ஒர்ரி. கடன் தீரும்,விவகாரம் ஜெயமாகும், நோய் குணமாகும் என்ன ஒரு வில்லங்கம்னா அப்பா அ அப்பா வழி உறவுக்கு ஒரு கண்டமிருக்கு. அல்லது 3 நாளாவது பார்க்காம/பேசாம இருக்க வேண்டி வரும். அதை நீங்களாவே கூட ப்ளான் பண்ணிக்கலாம். அதான் பரிகாரம். சனி மூண்ல இருக்காரு. தைரியம்,சாகசம் லக்ஷ்மிம்பாங்க . துணிஞ்சு நில்லுங்க துக்கமில்லே

ஒரு பலான உரையாடல்

"ஸ்வாமி! உங்க ப்ளாக் பார்த்தேன்"
"நல்லதும்மா"
"என்ன நல்லதும்மா ? அசிங்க அசிங்கமா எழுதிவச்சிருக்கிங்க"
" உங்க அப்பா அம்மா அசிங்கம் பண்ணாம நீங்க பிறந்திங்களா ? இல்லை எங்க அப்பா அசிங்கம் பண்ணாம நான் பிறந்துட்டனா? "
"அவங்க வீட்ல,பெட் ரூம்ல செய்தாங்க , விளக்கை அணைச்சுட்டு"
" நான் என்ன பட்டப்பகல்ல பார்க்லயா செய்ய சொல்லியிருக்கேன்?"
" உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் ஸ்வாமி !"
"அதனால நீங்க சொல்ற படி நான் பதிவுகள் எழுதனுங்கறிங்களா ?"
"அய்யோ ! என் உத்தேசம் அது இல்லே !"
"உத்தேசம் எதுவா இருந்தாலும் கான்செப்ட் அதானே. "
" நீங்க ஏன் தப்பாவே புரிஞ்சிக்கிறிங்க ?"
"இல்லம்மா நான் உங்க பிரச்சினைகளை சரியா புரிஞ்சிக்கிட்டேன். அதை நான் ஓப்பன் ப்ளாக்ல எழுதறதுதான் உங்க பிரச்சினை"
" நானும் இது மாதிரி ஒரு பிரச்சினைக்காக வந்து உங்க கிட்டே சஜஷன் வாங்கி பயனடைஞ்சவதான். அதை மறக்கல .ஆனால் இப்படி பகிரங்கமா ?"
" ஏம்மா ! உன் அம்மா ஏற்கெனவே என் க்ளையண்ட். அதனால உனக்கு பிரச்சினைன்ன உடனே நேரே எங்கிட்ட அழைச்சுட்டு வந்துட்டாங்க . இல்லேன்னா என்னாயிருக்கும் ? குடலேற்றம் தெரியாம கோடி பணம் செலவழிச்ச கதையா ஆயிட்டிருக்காது"
"என்ன சாமி நீங்க சொல்றது? என் அம்மாவும் உங்க க்ளையண்டா ?"
" ஆமா தாயி ! உங்க அம்மா ச்சும்மா கண்ட விரதம்னு இருந்துக்கிட்டு உன் அப்பா அம்மா இடையிலே "அது" ஏறக்குறைய நடக்காமயே போயிருச்சு. பக்கத்துல லாண்டரி வச்சு இருந்த ஆளு பொம்பிளைங்களுக்கு சுளுக்கு புடிச்சா மந்திரம் போடுவான். அப்படி வர்ர கேஸ்கள்ள எது காஞ்சி கிடக்குதோ அதை கை வச்சுர்ரது வழக்கம் . உங்கப்பாவுக்கு அந்தாளோட ஸ்னேகம் ஏற்பட்டு போச்சு. அவன் எவளையோ கன்வின்ஸ் பண்ணி "அதுக்கு" அரேஞ்ச் பண்ணியிருக்கான். உங்க அப்பா பாவம் ப்ரின்ஸ்பிள் மேன். அவருக்கு கில்ட்டினாலயோ என்னவோ ட்ரை பண்ணி ஃபெயில் ஆன மாதிரி இருக்கு. அன்னைலருந்து ஏற்கெனவே இருந்த குடிப்பழக்கம் ஓவராயிருச்சு. உங்கம்மா அலறி யடிச்சுக்கிட்டு அதை எவ்ளதான் கண்ட்ரோல் பண்ண பார்தாலும் லாண்டரி காரன் ரகசியாமா டோர் டெலிவரியே கொடுக்க ஆரம்பிச்சுட்டான். உங்க அப்பா தண்ணீயா? கன்னியா ? ன்னிட்டு மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்த தொழில்ல பயங்கர நஷ்டம். அப்பதான் உங்கம்மா ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு வந்தாங்க"

" நீங்க என்ன சஜஸ்ட் பண்ணீங்க ?"
" ஒரு பேஷண்டை பத்தி இன்னொரு பேஷண்டுக்கு சொல்லகூடாது அது அம்மா பெண்ணாவே இருந்தாலும்"

"ச்சும்மா சொல்லுங்க சாமி ! "
" நீ காசு கொடுத்தா கூட சொல்லமுடியாது தாயி. சரி போவட்டும் நீ பிரச்சினைனு வந்தப்ப நான் என்ன சஜஸ்ட் பண்ணேன் சொல்லு பார்க்கலாம்"

"எதுக்கு அந்த அசிங்கமெல்லாம் இப்ப கேட்கிறிங்க"

"பார்த்தியா அடுத்தவங்களுக்கு கொடுத்த சஜஷன் , கவுன்சிலிங்க் மட்டும் நீங்க கேட்கணும். ஆனால் உங்க பிரச்சினை, உங்களுக்கு கொடுத்த சஜஷன், கவுன்சிலிங்க் மட்டும் யாருக்கும் தெரியக்கூடாது. இப்படியே எல்லாரும் நினைக்கிறதாலதான் - எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்-ன்னிட்டு பப்ளிக் ப்ளாக்ல எழுதிக்கிட்டுருக்கேன். சரி .. உனக்கென்ன உன் தாயோட பிரச்சினை என்ன ? அதுக்கு நான் கொடுத்த சஜஷன் என்னனு தெரிஞ்சுக்கனும் அவ்ளதானே. சொல்லிட்டா போவுது. ஏன் சொல்றேனு கடைசில சொல்றேன்"

"உங்கம்மா பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலனு உனக்கு தெரியும். அந்த கிராமத்துல இவங்க பக்கத்து வீட்ல ஒருத்தனுக்கு புதுசா கல்யாணமாகியிருக்கு. அவன் சரியான் காஞ்சான் போலிருக்கு. வேலை வெட்டி எல்லாத்தயும் விட்டுட்டு வீட்டோடவே இருந்திட்டிருக்கான். ஒரு வருஷத்துல திவால் நிலைக்கு வந்துட்டான். இத பார்த்துட்டு அக்கம்பக்கத்துக்காரவுக - செக்ஸ்ங்கறது என்னவோ அசிங்கம் மாதிரியும் அதுல தொடர்ந்து ஈடுபட்டா தரித்திரம், ஏழையாயிருவாங்கங்கற மாதிரியும் பேசிக்கிட்டிருந்திருக்காங்க . இந்த கான்செப்ட் உங்கம்மா மைண்டல நல்லாவே பதிவாகியிருந்திருக்கு. எல்லா ஆம்பளையும் கல்யாணமான 90 நாள் எப்படி தேன் குடிச்ச நரி மாதிரி இருப்பானோ அதே மென்டல் ஸ்டேட் நாற்பது வயசுல ஒரு தரம் ரிப்பீட் ஆகும். நம்ம நாட்ல ஆண், பெண்ணுக்கு இடையில் 5 முதல் 10 வயசு வித்யாசம் இருக்கும்படியா கல்யாணம் பண்றதால இந்த மென்டல் ஸ்டேட் (மெனோஃபஸுக்கு முன்னாடி) பெண்ணுக்கும் வரும் என்ன .. அஞ்சு அ பத்துவருசம் லேட்டா . இதை பெண்கள் புரிஞ்சிக்கிட்டு "தொலையுது போனு" அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பிரச்சினையிருக்காது. அதை விட்டுட்டு "இந்த வயசுல என்ன இழவு இதுனு" மக்கர் பண்ணா பிரச்சினைதான். உங்கப்பா கேஸை யே எடுத்துக்க அவர் ஏதோ ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலலருந்து வந்தவர் ஸோ லாண்டரிகாரர் அரேஞ்ச் பண்ண பெண்ணோட அவரால செக்ஸ் செய்ய முடியாம லிக்கருக்கு டைவர்ட் ஆனாரு. சப்போஸ் அவர் அந்த அஃபேர்ல மாட்டியிருந்தா ? என்னாயிருக்கும் . அந்த பொம்பளையும் மேரீட். உங்கம்மாவோட மைண்ட்லதான் நல்லா ரிக்கார்ட் ஆகியிருக்கே அதெல்லாம அசிங்கம் குடும்பம் சீக்கிரமா திவாலாயிரும் அது இதுனு உடனே இந்தம்மா விரத நாடகம் போட ஆரம்பிச்சுட்டாங்க அது அடல்ட்ரிக்கு டைவர்ட் ஆக இருந்து ஏதோ லிக்கரோட நின்னு போச்சு"

"நீங்க என்ன சஜஸ்ட் பண்ணிங்க?"

" நீங்க என் ப்ளாக்ல எதெல்லாம் அசிங்கம்னிங்களோ அதோட சாரத்த 15 நிமிசத்துல சொன்னேன்"

"இப்போ ஒரு தடவை சொன்னா தான் என்ன சாமி"

"இனி யார்க்கும் தனித்தனியா சொல்ற மாதிரியில்லே .எல்லோரும் ப்ளாக்ல படிச்சுக்க வேண்டியதுதான்"

"சாமி ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக "

"என்னம்மா இது அனியாயமா இருக்கு ப்ளாக்ல வச்சா திட்டறிங்க அசிங்கம்ன்றிங்க . நேர்ல வந்து வக்கணையா கேட்கனும்னு அடம் பிடிக்கிறிங்க அதெல்லாம் சொல்லமுடியாது. சுருக்கமா சொல்றேன். இந்த உலகத்துல எதை வேணம்னா பொய்யின்னு ஸ்தாபிச்சுரலாம். தவிர்க்கலாம். இல்லாமயும் வாழ்ந்துரலாம். பிறப்பு, இறப்பு இது ரெண்டுக்கிடைல செக்ஸை மட்டும் பொய்யினு யாரும் ஸ்தாபிக்கமுடியாது. தவிர்க்க முடியாது. சிவலிங்கத்தோட வடிவமே என்ன ? பெண் குறிக்குள்ள புதைஞ்சிருக்கிற ஆண்குறிதானே அஸ்கலித பிரம்மச்சாரினு ஆஞ்சனேயரை சொல்றோம். அவரோட வியர்வையே விந்துவா மாறி மச்ச கந்திய கர்பமாக்கிருச்சு. அது இதுனு ப்ரோ செக்ஸா 15 நிமிஷம் பேசி அதைவிட முக்கியமான வேலையே உலகத்துல கிடையாது. பிற வேலைகளை ஒருத்தன் செய்தா அவனுக்கு செக்ஸ் கிடைக்காம அ கிடைக்காத தருணத்துல அ அதுக்கான சக்தி இல்லாத தருணத்துல தான் செய்றான். அவன் என்ன செய்தாலும் சப் கான்ஷியாஸா அவனுக்குள்ள ஓடறது செக்ஸ் தானு சொன்னேன்"

" சாமி .. உங்களுக்கு அரசியல்ல நல்ல சேன்ஸிருக்கு சாமி"

"என்னை ஏன்மா அந்த சாக்கடைல தள்ளிவிடறிங்க"

"எனக்கு ஒரு பிரச்சினைனு வந்தப்போ செக்ஸுங்கறதே மகா பாவம், தவணல சாவு. அது இதுனு சொல்லி விரதமெல்லாம் சஜஸ்ட் பண்ணிங்க"

"எம்மாடி.. உன்னுது லவ் மேரேஜு. உன் வீட்டுக்காரன் அப்போ அன் எம்ப்ளாயிட். நீயும் ஹவுஸ் வைஃப். உன் ஜாதகப்படி உனக்கு கவர்ன்மென்ட் ஜாப் வர்ர நேரம் அது. கல்யாணமாகி 3 மாசம் ஆன பின்னாடியும் 24 மணி நேரம் வீட்டுக்குள்ள கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்திங்க அதனாலதான் தோசைய திருப்பி போட்டேன். நீ விரதம் அது இதுனு டைவர்ட் ஆனதாலதான் உன் வீ.காரன் வேலை வெட்டினு தேடப்போயிட்டான். நீயும் ரெண்டு பரீட்சை எழுதி ஜாப்ல சேர்ந்தே"

"மொத்தத்துல செக்ஸ் நல்லதா? கெட்டதா ?"

" அய்யருங்க பாஷைல சொன்னா அது கால தேச வர்த்தமானங்களை பொருத்தது. தமிழ்ல சொன்னா இடம்,பொருள்,ஏவல் , உடல்,உள்ள நலனை பொருத்தது."

"சாமி எனக்கொரு சந்தேகம் .. எங்கம்மாவுக்கு என்ன பிரச்சினை, அதுக்கு நீங்க என்ன தீர்வை கொடுத்திங்கனு சொல்லவே மாட்டேன்னிங்க அப்புறம் எப்படி சொல்ட்டிங்க?"

"நாளைக்கு ப்ளாகை பார்"

"அய்யய்யோ ப்ளாக்ல எழுதப்போறிங்களா?"
"இது நல்ல ஐடியாவா இருக்கே."
"அய்யய்யோ வேணாம் சாமி .. எழுதினாலும் பேரை கீரை எழுதிர போறிங்க"
"இல்ல தாயி.. என்னுது தகப்பன் ஸ்தானம் . என் மகளுக்கு என்ன செய்வனோ அதை தான் உனக்கும் செய்வேன். என் மகளுக்கு எதை செய்யமாட்டேனோ அதை கட்டாயம் செய்யமாட்டேன்"
" தேங்க்யூ ஸ்வாமி ! நானும் ரொட்டீன் தாய்குலமா அசிங்க கிசிங்கம்னு பேசிட்டேன் "
"யம்மாடி ! நீங்க ரொடீனா ,ஹிப்பாக்ரடிக்கா இருந்தாதானே நான் புரட்சி பண்ணமுடியும். சரி சரி நேரமாச்சு நீ கிளம்பு"

Wednesday, December 30, 2009

நாளைய பிரதமருடன்* ஒரு பேட்டி

பத்திரிக்கைகள்ள வர விளம்பரங்களை பார்க்கிறவுகளுக்கு இந்த ஸ்டார் * மார்க்குக்கு என்ன அர்த்தம்னு தெரியும். ஒரு தங்க சொம்பு வாங்கினவுகளுக்கு ஒரு வெள்ளி சொம்பு இலவசம் பெரிய்ய எழுத்துல போட்டிருப்பான். இலவசத்துக்கு மேல * மார்க் இருக்கும் . கண்டிஷன்ஸ் அப்ளைனு போட்டிருப்பான். விளம்பரத்துக்கு கீழே பொடியான எழுத்துல தாலியறுத்துட்டு ராகு காலத்துல வாங்குறவுகளுக்கு மட்டும்னு இருக்கும். அந்த மாதிரி பிரதமருடன் என்ற வார்த்தைக்கு பக்கத்துல ஸ்டார் மார்க் வச்சிருக்கேன்.

பிரதமர்னா நம்ம சரண்சிங், தேவிலால், குஜ்ரால்,சந்திரசேகர்,பி.வி, வாஜ்பேய், மன்மோகன் சிங் அண்ணாத்தைங்க கூட பிரதமர்தான். இந்த கேட்டகிரில பிரதமராயி என்னாத்த பேட்டி கொடுத்து என்னாத்த கிழிக்கிறது. அந்த பேட்டிய விட நமீதா போட்டு அவிழ்த்த பெட்டிகோட்டுக்கு பெட்டர் ரீச் இருக்கும். அதனாலதான் இந்த கன்டிஷன்ஸ் அப்ளை ஸ்டார் மார்க்.

அதென்ன பிரதமர் பதவி மேல மட்டும் ( ஹை ஹீல்ஸ் போட்ட )உசந்த அபிப்ராயம்னு கேட்டா பொட்டைக்கு நொள்ளை மேலுன்ற எண்ணம் தான். மெனோஃபஸ் கேஸை விட ஆன்டி பெட்டர்தானே.

மெனோஃபஸ் கேஸ் எதுன்றிங்களா ? இருக்கே அதாங்க இந்த இந்திய ஜனாதிபதி பதவி. ! இந்த பதவி மாதிரி வெட்டியான ஒன்னு வேற கிடையவே கிடையாது என்பது என் கருத்து. ராஜேந்திர பிரசாத் மாதிரி கன் பார்ட்டிங்களை இந்த பதவில வச்சு அவிகளை வீணாக்கிட்டாங்கனு நினைக்கிறேன்.

உண்மையான அதிகாரம் இல்லாத பதவியும், ஆண் உறுப்புல எழுச்சி இல்லாத ஆணும் ஒன்றுதான். எப்பவோ ஒரு ஜெயில்சிங் தவிர சொந்தமா ரோசிச்ச ஜனாதிபதியே கிடையாது. அவர் கூட இந்திரா அம்மையார் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னா பெருக்க தயார்னு சொன்னவர்தானே. அப்துல் கலாமை எல்லாம் இந்த கேட்டகிரில கூட சேர்க்கமாட்டேன்.

இதுல முதல்வர், கவர்னர் பதவிய பத்தி என் கருத்து என்னவா இருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் அம்சமே பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனுங்கறதுதான்.அதான் தாது புஷ்டி லேகியம் மாதிரி. வீட்டோ பவர் இருக்கும். அப்படி ஒரு அரசியல் சாசன திருத்தம் செய்து தேர்தல் வந்து நான் ஜெயிச்சு பிரதமரான பின்னாடி ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை குதிரையை தட்டி விட்டதுல முதல்ல ஏற்பட்ட உணர்ச்சி திகில் தான். இருந்தாலும்
பிரச்சினை பெரிசுன்னால் அதுக்கு தீர்வும் பெரிசா இருக்கனுங்கற மைண்ட் பளாக்கை உதறிட்டு ரோசிச்சேன். இதோ அந்த பேட்டி ( நீங்க தொடர்ந்து படிக்கனுங்கறதுக்காக கொஞ்சம் பாக்யராஜ் ஐட்டம்லாம் சேர்த்திருக்கேன். பிடிக்காதவுக விட்டுத்தள்ளுங்க. நயந்தாராவோட டூ பீஸ் பிடிக்கலன்னா மூஞ்சிய பாருங்க தலை !

நிருபர்: வணக்கம்
பிரதமர்: வணக்கம்
நிருபர்: நீங்க பிரதமர் பதவிய பிடிச்சு 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை மாற்றங்கள் எப்படி சாத்தியமாச்சு.
பிரதமர்:மனமிருந்தால் மார்கமுண்டு. உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் வரை உடலுறவு திறன் உண்டு
நிருபர்: அந்த மனம் எப்படி உங்களுக்கு வந்தது?
பிரதமர்: ஜஸ்ட் ஒரு இர்ரிட்டேஷன். நான் ஜனதா ஆட்சி காலத்துல இருந்து இந்திய அரசியலை கவனிக்கிறேன். நேரு காலத்துல இருந்து நடந்த குழப்படிகளை படிச்சிருக்கேன். தத் ..! எத்தனை சிம்பிளா சால்வ் பண்ண கூடிய பிரச்சினைய இவ்ள கலீசா டீல் பண்ணி இத்தனை காம்ப்ளிக்கேட் ஆக்கிட்டானுகளேனு ஒரு இர்ரிட்டேஷன்
நிருபர்: தேர்தலுக்கு முன்னாடி உங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஆதரிக்காதவங்க ஆதரவை வாங்க அதை பலவிதமா டைல்யூட் பண்ணி காமன் ப்ரோக்ராம்ல வச்சிங்க. ஆனால் பதவி வந்ததும் காட்டடி அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க .
பிரதமர்: காதலிய ஓரங்கட்டறப்ப கண்ணு ! உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா போதும்னு கூப்டா தான் வருவா. உன்னை தொட கூட மாட்டேனு சத்தியம் பண்ணாதான் வருவா. அவளுக்கு தெரியாதா அசல் விஷயம் என்னன்னு
நிருபர்: உங்க திட்டங்களுக்கு உங்க கட்சிக்குள்ளயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது . அதை எப்படி சமாளிச்சிங்க.
பிரதமர்: எப்படியோ சமாளிச்சேன் .. அதனாலதான் இன்னமும் நான் பி.எம்.
நிருபர்: உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க எல்லாம் அடுத்தடுத்து பிரச்சினைல மாட்டிக்கிறாங்களே
பிரதமர்: எல்லாம் அவன்/ள் செயல்
நிருபர்: இப்படி சொல்லிக்கிட்டு நீங்க தான் திரை மறைவுல இருந்து ஆட்டிவைக்கிறதா பேசிக்கிறாங்க
பிரதமர்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங் இவங்க மாதிரி பதவி போனா .... போன மாதிரினு நான் இருந்திருந்தா இந்த பேட்டியெடுக்க நீங்க வந்திருக்க மாட்டிங்க.
நிருபர்: அப்போ உங்களுக்கு பதவி மோகம் இருக்கு. பதவிய காப்பாத்திக்க நீங்க இதையெல்லாம் செய்றிங்க
பிரதமர்:மோகம்னு ஏன் சொல்றிங்க. இந்த பதவினால கொஞ்சம் லொள்ளு இருந்தாலும் நிறைய எம்.ஜி.ஆர் வேலைகள்ளாம் செய்ய முடியுது. ஐ டோன்ட் ஃபீல் இட் ஏஸ் முள் கிரீடம் எட்ஸெட்ரா !
நிருபர்: உயிர்களின் உயிரியல் கடமை உயிர் வாழறது, இனப்பெருக்கம் செய்யறது. சப்கான்ஷியஸா பார்த்தா இதனோட உண்மையான நோக்கம் ஜியாக்ரஃபிக்கலா எக்ஸ்பேன்ட் ஆகிறது. நாய் விளக்கு கம்பங்களை தேடிப்போய் மூத்திரம் விடுது சரவணபவன் அண்ணாச்சி உலக நாடுகள்ள ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறாரு. அதான் வித்யாசம். எக்ஸ்பேன்ட் ஆகனும்னா சர்வைவ் ஆகனுமில்லயா ?
நிருபர்:இந்த போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தில்லயா ?
பிரதமர்: எது ?
நிருபர்: உங்களை எதிர்க்கிறவங்களை யெல்லாம் ஒழிச்சு கட்டறது.
பிரதமர்: அப்படினு நீங்கதான் சொல்றிங்க . இப்படி நடந்தா நல்லாருக்கும் நினைச்சது உண்டு. அது தானா நடந்தா நான் என்ன செய்ய முடியும். வெறுமனே மனசுல நினைக்கிறது ஐபிசி படி குற்றமில்லியே
நிருபர்: ஓகே ஓகே .. நீங்க பிரதமாரானதுமே இந்த புதுமையான பாதைல நீங்க வச்ச முதல் அடி ?
பிரதமர்: பாக்கிஸ்தான்.
நிருபர்: என்னதான் பேசினிங்க? எப்படி ஒத்துக்க வச்சிங்க. ?
பிரதமர்: நான் சொன்னது சத்தியம். சத்தியத்துக்கு ஃபேர் அண்ட் லவ்லி , ஃபேசியல் எல்லாம் தேவயில்லே. படார்னு போட்டு உடைச்சேன். தபாருப்பா ! காஷ்மீர்தானே பிரச்சினை. பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு நாங்க சொல்றோம். ஆஜாத் காஷ்மீர்னு நீங்க சொல்றிங்க. இந்த பீடையெல்லாம் எதுக்கு? எப்படியும் க்ளைமேட் சூப்பரா இருக்கு. உங்க பாதி எங்க பாதி ரெண்டயும் ஐ. நாவுக்கு ஒப்படைச்சிரலாம். அவிக ஏதாச்சும் ஆஃபீஸ் வச்சுக்கட்டும். இன்டர்னேஷ்னல் மிலிட்டரி பாதுகாப்பு தரட்டும். அதுல பாக் மிலிட்டரியும் இருக்கும், இந்திய மிலிட்டரியும் இருக்கும் . பாக்ல ரொட்டியில்லாம சாகிறான். இந்தியால சோறில்லாம் சாகறோம் எதுக்கு வெத்து வேட்டுனு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன்.
நிருபர்: இப்போ நிலைமை எப்படியிருக்கு.
பிரதமர்:அது இந்தோ,பாக் தலைவலி இல்லே. ஐ. நாவோட தலைவலி.
நிருபர்: சீனாவோடவும் இதே ஃபார்முலாதான் அப்ளை பண்ணிங்க !
பிரதமர்: யெஸ் ! என்ன கொஞ்சம் லேட் ப்ராசஸாயிருச்சு.
நிருபர்: அரசு நிர்வாக செலவை பாதியா குறைக்க நிறைய புதுமை திட்டம்லாம் கொண்டு வந்திங்க. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையிழந்தாங்க அதை பத்தி என்ன நினைக்கிறிங்க
பிரதமர்: வேலை தர்ரது வேலை வாங்கறதுக்காக. அவங்களை போஷிக்கிறதுக்காக இல்லே. வேலையால சம்பளம் வந்து அவங்க போஷிக்க படறது பை ப்ராடக்ட், செகண்டரிதான். முதல்ல நாட்டில் இருக்கிற எல்லா அன் எம்ப்ளாயிடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போடச்சொன்னேன். அவங்களுக்கு ஹார்டி பாடி, வின்டி மைண்ட், ஹோலி சோலுக்கு தேவையான ட்ரெயினிங் ப்ரோக்ராமை உலக தரத்துல கொடுத்தோம். அவிகளை வெய்ட்டிங்க்ல வச்சிகிட்டு ஏற்கெனவே இருக்கிற அரசு ஊழியர்களை மருத்துவ சோதனை, சைக்ரியாற்றி சோதனைக்கு உள்ளாக்கினேன். இதுல டிஸ்க்வாலிஃபை ஆனவுங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு வெய்ட்டிங்க் லிஸ்ட்ல இருந்த ஆளுங்களை போட்டு ஃபில் அப் பண்ண சொன்னேன்
நிருபர்: அதுல பாதி பேருக்கு கூட வேலை கொடுக்க முடியல. 6 மாசம் வெட்டியா சம்பளம் கொடுத்திங்க
பிரதமர்: அவங்க என்ன பாக்கிஸ்தான சேர்ந்தவங்களா? இல்லியே நம்ம பசங்க தானே. அப்புறமா கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ்கெல்லாம் டேலன்ட் டெஸ்ட் வச்சு வடி கட்டினோம். அதுல ஃபெயில் ஆனவுங்களை வீட்டுக்கு அனுப்பி புது பசங்களை போட்டாச்சே
நிருபர்: இதனால லட்சக்கணக்கான் உத்யோகஸ்தர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க
பிரதமர்: மொட்டையா சொன்னா எப்படி ? ஆறு மாசம் பாடி, மைண்ட் ரிப்பேருக்கு டைம் கொடுத்து ரீ எக்ஸாமினேஷன் செய்தோம் . அதுலயும் புட்டுக்கனவங்களை தான் வீட்டுக்கு அனுப்பினோம். அவங்களுக்கு கூட கை நிறைய பென்ஷன் கொடுக்கிறோம். அவங்களோட ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸை பேங்க்ல வச்சு அதுக்கு வட்டி தரோம் என்ன கெட்டு போச்சு. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வந்து பல துறைகள்ள சாதனை படைச்சிக்கிட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வேலை மக்கள்கிட்டே இருந்து பணம் வாங்கி ( வரி) அந்த பணத்தை கொண்டு மக்கள் தேவைகளை நிறைவேத்தறது. தாளி பல தடவை நான் சொல்லியிருக்காப்ல ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு . எப்படி உருப்படும்? அதனால தான் நிர்வாக செலவை பாதியா குறைச்சேன். பழைய ஊழியர்களில் ஆசிட் டெஸ்ட்ல தேறின பாதிபேரையும் புதுசா அப்பாயிண்ட் பண்ண அரசு ஊழியர்களையும் அரசு தத்தெடுத்து அவர்களோட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைக்குது. மேற்படி ஃபெசிலிட்டீஸ் + ரொக்கம் சேர்த்து கணக்கிட்டா கூட கடந்த கால நிர்வாக செலவுல பாதி குறைஞ்சி போச்சு

நிருபர்: நீங்க அன் எம்ப்ளாயிடை பத்தி தேனா பேசினாலும் அவங்க மேல ஒன்னும் உங்களுக்கு பாசமிருக்கிறா மாதிரி தெரியலயே . நதிகளை இணைக்கிறேனு அவங்களை மண்வெட்டி தூக்க வச்சிட்டிங்க

பிரதமர்: மேலதிகாரிக்கு ஷூ தூக்கறத விட ,டாஸ்மாக்ல பாட்டில் தூக்கிறத விட இது பெட்டர்தானே . சுதந்திரம் வந்து 62 வருசமாயிருச்சு. எத்தனையோ விஞ் ஞானிக எல்லாம் ஆட்சி பண்ணியிருக்காங்க . ஒரு சின்ன விசயம் அதை கோட்டை விட்டதால இந்த கதியாயிருச்சு. லல்லு சொன்னாப்ல கறக்கர மாட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடனும். தீனி போட்ட மாட்ட கன்னுக்கு விட்டு (மறு முதலீடு) ஒட்ட கறக்கனும் வரி வசூல்).தனிமனிதனோட ஆண்டு வருமானத்தை வச்சு அவன் செல்வ நிலையை தீர்மானிக்கிறாப்ல நாடோட தேசீய வருமானத்தை வச்சு தான் நாட்டின் செல்வ நிலைய நிர்ணயிக்கிறாங்க அது அதிகமாகனும்னா மக்கள் அதிகமா பொருளீட்டனும். தலைவருமானம்னு இன்னொரு அடிப்படை இருக்கு. நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகயால வகுத்து ஆகா தலைவருமானம் அதிகமாயிருச்சு இந்தியா பணக்கார நாடாயிருச்சுனு கூச்சல் போட்டாங்க. சூப்பர் ஸ்டார்களோட வருமானத்தையும் , குப்பன் சுப்பனோட வருமானத்தையும் கூட்டி பேப்பர்ல பங்கு போடற கதை இது. ஒட்டு மொத்தமா தேசீய வருமானம் உயரனும்னாலும், உண்மையிலயெ தலைவருமானம் அதிகரிக்கனும்னாலும் என்ன பண்ணனும் ? மக்கள் தொகைல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தின் பேர்ல டிபெண்ட் ஆகியிருக்காங்க . அவங்க பொருளீட்டினால் தானே தேசீய வருமானம் உயரும். 70 சதவீத மக்களோட வருமானம் உயர்ந்தால் தானே உண்மையிலேயே தலை வருமானம் உயரும். விவசாயத்துக்கு அடிப்படை நீர்ப்பாசனம். அதுக்குதான் நதிகள் இணைப்பு.
நிருபர்: இதெல்லாம் சரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து கொடுத்து சட்டம் போட்டிங்க.
பிரதமர்: இது காமன் ப்ரோக்ராம்ல இருந்த அம்சம் தான் .நான் பிரதமரானால் பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் ஃபைல் மீது தான் என் முதல் கையெழுத்தை போடுவேன்னு பிரச்சாரத்துல சொன்னேன். செய்தேன். இதை பற்றி நிறைய பேசியிருக்கேன். புதுசா ஒரு காரணத்தை சொல்றேன். நான் கொண்டுவர நினைத்த அசல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் , மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து சீறி கிளம்ப கூடிய எதிர்ப்புகளை முன் கூட்டியே வேறு திசைக்கு திருப்பிவிடுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா மனிதனுக்கு மாற்றம் என்பது மரணத்துக்கொப்பா இருக்க காரணம் என்ன ? பிறக்கிறான். பிறந்த நொடி முதலே மாற்றம் ஆரம்பமாயிருது. அந்த மாற்றங்களின் உபயத்தில் சிறுவனாகிறான். இளைஞனாகிறான். சக்தி ஏறிக்கிட்டே போகுது. ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்னாப்ல இருக்கிற ஒரே சக்தி பலான சக்திதான். சமூகமா ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. மடி நிறைஞ்ச பசு மாடு மாதிரி கறக்க ஆள் தேடி/குடிக்க கன்னுக்குட்டி தேடி தவிக்கிறான். மாற்றமா தொடருது. இன்னம் இன்னம் மாற்றம் ஏற்பட்டா என்னாகும் ? கிழவனாயிருவான். கிழவனானா என்னாகும் ? சாவான். இளமையையா சரியா அனுபவிக்கலை மாற்றமா மரணத்துக்கு கிட்டே கொண்டு போகுது இதனால் இந்த வயசுல மாற்றத்தை எதிர்க்க ஆரம்பிச்சுர்ரான். ரிஜிட் ஆக மாறிர்ரான். இந்த காலகட்டத்துல மாற்றத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறான். அவனுக்கு இளமையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்பட்டுட்டா ஃப்ளெக்ஸிபில் ஆயிர்ரான். மாற்றத்தை எதிர்க்கிறதில்லை. இது வயசு தொடர்பான விஷயம் மட்டுமில்லே. உடலுறவு வாய்ப்பு , உடலுறவு திறன் தொடர்பான விஷயம். நீங்க வேணம்னா வாட்ச் பண்ணீ பாருங்க. உடலுறவு திறன் இருந்து உடலுறவுக்கான வாய்ப்பில்லாதவன் மாற்றத்தை ஏத்துக்கவே மாட்டான். ( எந்த வயாசானாலும் சரி)
இதையெல்லாம் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணும்போது உங்களில் ஒரு சிலர் என்னை நல்ல மூளைக்காரம்பா என்று நினைத்திருக்கலாம். அந்த இழவெல்லாம் கிடையவே கிடையாது. எனக்கே மூளை இருந்திருந்தால் இந்த மாதிரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து தர்ர சட்டத்தை கொண்டு வந்தே இருக்கமாட்டேன். லேட்டஸ்ட் சர்வேல பெண்கள் மத்தியில 15 சதவீதம் ஆதரவு குறைஞ்சிருக்கிறதா வந்திருக்கு
நிருபர்: பேச்சலர்ஸ் மத்தியில 85 சதவீதம் ஆதரவு அதிகரிச்சிருக்கிறதாவும் அதே சர்வே சொல்லுது
பிரதம்ர்: யெஸ் ! அது வேற விஷயம்
நிருபர்: இது ரிஸ்க் இல்லயா ?
பிரதமர்: ரிஸ்க் தான். நான் 2006 ஜூலைலயிருந்தே ப்ளாகரா இருந்தவன். ஆரம்பத்துல ஏறக்குறைய 3 வருசம் உத்தமமான விசயங்களை தான் எழுதிக்கிட்டிருந்தேன். 3 வருச காலத்துல வந்த ஹிட்ஸ் 2006 தான். அதுக்கப்புறம்தான் பலான ஜோக்ஸ், காமசூத்திரமெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். எத்தனையோ முறை என் ப்ளாகுக்கு தடை வந்தது . ஆனால் ரெண்டே மாசத்துல 77000 ஹிட்ஸ் வந்தது. ரிஸ்க் எடுத்தா தான் லட்சியத்தை அடையமுடியும். என்ன ஒரு வருத்தம்னா ஒழுங்கு மரியாதையா ஜோதிஷ்ய சாஸ்திரத்துல இருக்க கூடிய சமஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீசி (அப்பதானே புரியாது) பம்மாத்து பண்ணி பத்து காசு தேத்தியிருக்கலாம். அதை செய்யலே. இது மாதிரி குட் வில் அடிவாங்கும்னு எனக்கு முன் கூட்டி தெரியாதுன்னுல்ல . தெரியும் . நீ மூளைகெட்ட ஜன்மம்னு சொல்றிங்களா? அதுவும் கிடயாது. நான் மனசால யோசிச்சு, மூளைய வச்சு ( இருக்கிறது நாலணா மூளை தானுங்கோ) ப்ளான் பண்றேன். அண்ட வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் சொரிந்து என் திட்டங்களை உயிர் பெற வைக்கின்றன

நிருபர்: உங்க எதிர்கால திட்டம்?

பிரதமர்: முதல்ல பாராளுமன்றம் முதல், முனிசிபாலிட்டி மீட்டிங் ஹால் வரை எல்லாத்தயும் ஆஸ்பத்திரியாவோ, கல்வி நிலையமாவோ மாத்திரனும். மீட்டிங்னா அது ஜஸ்ட் வீடியோ கான்ஃபிரன்ஸ்தான். அவனவன் வீட்லயிருந்தே கலந்துக்கனும். மத்திய, மானிலஅதிகாரத்தை கிராம / நகர நிர்வாகங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜஸ்ட் மேற்பார்வைதான் .

நிருபர்: இதெல்லாம் சாத்தியமா?

பிரதமர்: நான் சாத்தியமா அசாத்தியமானு யோசிச்சதே இல்லை .

நிருபர்: விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பிரதமர்: தேங்க்யூ

Tuesday, December 29, 2009

குருபெயர்ச்சி பலன் 2009


டாக்டர் ருத்ரன் அவர்கள் குருபெயர்ச்சி என்று துவங்கி லேசாய் கிண்டலடித்து சூப்பர் பதிவு போட்டிருந்தார். நான் அக்மார்க் ஜோதிடனாக இருந்தால் உடனே வரிந்து கட்டி எதிர்வினை செய்திருக்க வேண்டும்.  தமிழ் ஓவியா அவர்களும் ஜோதிடத்தை பல முறை கிண்டலடித்து எழுதியிருந்தாலும் நான் எதிர்வினை புரிவதில்லை காரணம் ?

என்னை பொருத்தவரை நான் ஒரு  தேடுபவன். ஆம் மனித வாழ்வின் அவலங்களை மாற்றி "எல்லோரும் நலம் வாழ" வழி தேடுபவன்.  டீன் ஏஜ் முதலே என்னுள் எழுந்த வினாப்புயலுக்கு ஜோதிடம் பதில் சொன்னது.

என் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் "சந்தேக புத்தி கொண்டவன்" எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.

இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .

நானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.

நான் கண்டு கொண்ட ரகசியம் என்னவென்றால்:

ஆன்மீகத்தின் முதல் படி ஜோதிட நம்பிக்கை. ஜோதிட நம்பிக்கை கொண்டு சேர்க்கும் இறுதிப்படி ஆன்மீகம். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" பைபிளில் என்னை கவர்ந்த பல வசனங்களில் ஒன்று. கிரகங்கள் கர்த்தரின்  படைப்புகள் தான்.

தான் என்ற எண்ணம், சுய நலம், பேதபாவம், ருசி, அருசி, ரசம், விரசம் கொண்ட மாந்தர் கிரகங்களில் கால்களின் கீழே ஃபுட்பாலை விட கோரமாக உதைக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் அகந்தையற்றோர், பொது நலம் காப்போர், அபேதபாவம் கொண்டோர் விஷயத்தில் அந்த கிரகங்களே சைடு கொடுப்பதை கண்டிருக்கிறேன்.  ஜாதக பலன் விஷயமே இப்படி என்றால் ராசிபலன் பற்றி என்ன சொல்ல ?

ஜோதிடத்தில் இந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில்  உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.

உங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.

டப்பா காரா இருந்தா ?  எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காக இந்த  கும்ப குருவோட பலனை எழுதலாம்னு ஒரு ஐடியா.

நாளை சந்திப்போம் !  கும்ப குரு பலனுடன் !

( ஒரே மூச்சுல 12ராசிக்கும் போட்டுரலாம் டோண்ட் ஒர்ரி . பீ ஹேப்பி ! ஜூட்)

Monday, December 28, 2009

பலான இடத்தில் மச்சம்

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால்  கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்

பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை  அறிய பற்பல வழிமுறைகள் உள்ளன. ( நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து  எவ்வித  இலக்கண விதிகளும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடுத்துபாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது) 

ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோர் தம் எதிர்காலத்தை அறிய என்னதான் செய்வது?

"எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்" என்று துள்ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாமல் போவதில்லை அல்லவா?

சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சிலவற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

1.திருமணமானவராய் இருந்தால்:
திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம்  இருந்தால் அதை வைத்து தம் எதிர்காலத்தை அறியலாம்.  உங்கள் குடும்ப ஜோதிடரிடமோ அ என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து " சாமீ .. நமக்கு ஜாதகமில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிடத்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க " என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியாரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல்லலாம்.

தர்க பூர்வமானது தானா?
கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணுக்கோ வரன் அமையாத பட்சம் " ஹும் இனி இவனுக்குனு/இவளுக்குனு பிறந்து வரவா போறாள்/ன் " என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷயத்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ.வெ.ரா பெரியார். மணியம்மை)

கிராமத்தில் "தாயைப்போல் பிள்ளை நூலை போல் சேலை " என்று சொல்லி வந்தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார்கள் அவ்ளதான் வித்யாசம்.

இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள்ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வரப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத்துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார்.

1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்களை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோன்றுகிறது

திருமணமாகாதவிக:
அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா
அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9 ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம்னா 4 ஆமிடம், அக்கா,  அண்ணன் ஜாதகம்னா 11 ஆமிடம், தம்பி தங்கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ்சுக்கனும்

யாருக்குமே ஜாதகமில்லன்னா?

அதுக்கும் ஒரு வழி இருக்கு .ஜோசியர்கிட்டே எப்போ போகனும்னு முன் கூட்டி ப்ளான் பண்ணாம, அவர்கிட்டயும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம,  திடீர்னு போங்க. " சாமி !/ அய்யரே! ஆரூட சக்கரம் போட்டுப்பாருங்க"னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்யரையே பார்க்காதவங்க விசயத்துல ரொம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.

வெளியூர் ஜோசியர்ட்ட தபால் மூலம் பலன் கேட்கும்போது  நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேரத்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.

ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?
1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும்போதே அது என்ன மாதிரி வீட்டில் வசிக்கனும்னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரகம் பலகீனமடைஞ்சிருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல பிரச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசால்வ் பண்ணிட்டா அந்த வீட்டையே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயிருது.

மூச்சை கவனிங்க:
சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச்சை கவனிங்க

ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

அங்கத்துடிப்புகள்:
மனிதனின் அறிவு 100 சதம்  பொல்யூட்டட். (  நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெருமக்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ்டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மனமும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடிவமைக்கிறாங்க)

ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடையறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என்னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்களை  வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு கண்ட வேளையில் கழிந்து , ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய்தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமும் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதித்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனாலே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொடர்புறும். சரி அதை விடுங்க.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு"  கிரகங்களின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவில்லை. இங்கே மனித உடலிலும் தான் நடக்கிறது.

நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்திரன். ராசிச்சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம் தான்  நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படியாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.

இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங்கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண்ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல்லலாம்.  (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந்தால் "அங்கே" மச்சமிருக்கும். அதனால் தான் "அங்கே " மச்சமிருந்தால் தரித்திரம் என்று கூறுகிறார்கள்.

ஆக மனித உடலுக்கும், இயற்கைக்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கலெக்டிவ் அன் கான்ஷியஸ் மைண்ட் என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதாவது  நம் அடிமனதில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற்கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதிவாகியிருக்குமாம்.

நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வதில்லையே. அடிமனதை எங்கே கண்டு கொள்ளபோகிறோம். ஆனால்  நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்களையும் கண்டு கொள்கிறது. ரேடியோ ரிசீவர் தனமாய் செய்திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய்தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சிக்கிறது.
ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்கலாம்.

ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால்   அசுபம்

பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்

அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப்பதையே நம்மவர்கள் அர்த நாரீஸ்வர தத்துவமாக வைத்தார்கள். ஆனால் பாருங்கள் உமைக்கு இட பாகத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். ஏன் ? எதற்கு ? இதன் உட்பொருள் என்ன? அடுத்த பதிவு வெளிவரும் வரை கொஞ்சமா ரோசிச்சு பாருங்கண்ணே

Sunday, December 27, 2009

எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லில

இது தமிழின காவலர் கலைஞர் (?) உள்ளிட்டோரின் ஒரு காலத்து முழக்கம். ஆனால் இவர்கள் இந்த முழக்கமிடுவதற்கான வயது, அருகதை யாவும் இழந்து பலகாலமாகிறது.  நம் இந்திய அரசியல் சாசனம்,  மற்றும் நிர்வாக அமைப்பே பிரிட்டனிடம் கடன் வாங்கியது என்பதை யாரும் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அவன் வெளி நாட்டுக்காரன். நம் நாட்டை ஆள முனைந்த போது அவனுக்கு இங்குள்ள சுதேசிகள் மீது சந்தேகம் எனவே பல அடுக்கு நிர்வாகத்தை ஏற்படுத்தி , பல நிலைகளில் செக் வைக்க வழி செய்துகொண்டான். சுதந்திரத்துக்கு பின் நம்மை நாமேதானே ஆண்டு வருகிறோம். நம்ம ஆட்களை நாமே நம்பாவிட்டால் எப்படி?
மேலும் எத்தனை அடுக்கு நிர்வாகமிருந்தால் அத்தனை அடுக்கிலும் ஊழல்தான் தலைவிரித்தாடுகிறது.

மேலும் நம்முடையது ஜன நாயக அமைப்பு. ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இரண்டுமல்லாத பட்சத்தில் இதென்ன ஜன நாயகம் ?

அதிலும் கவர்னர் பதவி என்பது  வெள்ளை யானை மாதிரி . ஆந்திரத்தில் அன்று ராம்லால் , இன்று திவாரி லட்சணத்தை பார்த்திருக்கிறோம். அங்கே கே.கே.ஷா.

அரசாங்கம் மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் வசூலிக்க பத்து காசு, மறுபடி அதை மக்கள் பணிகளுக்கு செலவழிக்க பத்து காசு, செலவிட்டதை சரிபார்க்க பத்துகாசு, ஊழல் 25 காசு என்று 55 காசு தண்ட கருமாந்திரமாய் போகிறது. சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்காபணம் கதைதான்.

அதிலும் இந்த கவர்னர் பதவி கிரிமினல் வேஸ்ட் என்று தான் நினைத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது கவர்னர்களே கிரிமினல்கள்களாக இருக்கக்கூடும் என்பது .இதில் இந்த இழவெடுத்த பதவியில் இருக்கும் பீடைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேறே.  கவர்னர் தப்பு செய்தால் ராஷ்டிரபதிக்கு புகார் செய்யனுமாம்.

அங்கே மட்டும் என்ன வாழுது ஜனாதிபதியின் கணவர் ஒரு டிஃபால்டர்.  கையும் களவுமாய் பிடிபட்ட கிழவாடி கில்மா பார்ட்டியை உடல் நல காரணம் காட்டி ராஜினாமா செய்ய அனுமதிக்கிறோம். இது என்னத்த ஜன நாயகம் புரியவில்லை.

கவர்னர் செய்யும் வேலையை (அதாங்க பதவி பிரமாணம்,  மேல்/கீழ் சபை கூட்டு கூட்டத்தில் பீசறது , ஆட்சி அமைக்க அழைக்கிறது ) ஹை கோர்ட் தலைமை நீதிபதியே செய்யலாமேனு சிலர் சொல்றாங்க.  நான் மறுபடி மறுபடி சொல்றது என்னன்னா இது ஜன நாயகம். இதில்  ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஹை கோர்ட் தலைமை நீதிபதியை மக்களா தேர்ந்தெடுத்தாங்க? இல்லே மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுத்தாங்களா? கர்னாடகத்துல பார்க்கிறோம்ல மாண்பு மிகு  நீதிபதி பஞ்சாயத்தை?

முதல்ல தலையணை சைஸுக்கிருக்கிற அரசியல் சாசனத்துக்கு டாட்டா  சொல்லிட்டு 64 பக்கத்துல சின்னதா, க்யூட்டா, லாஜிக்கலா, ஹ்யூமனா, ஒரு அரசியல் சாசனத்தை தயார் பண்ணனும்.  பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனும். ஓட்டுரிமைக்கும் சில தகுதிகள் நிர்ணயிக்கனும். ஓட்டு போடுவது  கட்டாயமாக்கப்படனும். கிராமம்/ நகராட்சி வார்டை யூனிட்டா வச்சுக்கிட்டு திட்டமிடனும். திட்டம் வார்டுலருந்து, கிராமத்துலருந்து வரணும்.

கீய்வைத்னாங்குப்பத்ல எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லிலயா முடிவு பண்றது. ஷிட் ! மக்கள் பிரதி நிதியா தேர்தல்ல நிற்க ஒரு தகுதியை அறுதியடனும். அறுபது வயது ஆயிருச்சுன்னா  ஒவ்வொரு வருடமும்  ஒரு டாக்டர், ஒரு சைக்கிரியாட்ரிஸ்ட் சர்ட்டிஃபை பண்ணனும் அப்போதான் கன்டின்யூ பண்ண விடனும். இல்லேன்னா முதியோர் இல்லத்துக்கோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கோ அனுப்பனும் .

தேர்தல்ல நிக்கிறவனுக்கு மட்டுமில்லாம ஓட்டு போடறவனுக்கும் தனியா ஒரு டிப்ளமா படிப்பை அறிமுகப்படுத்தனும். ( பிரதமரா நிக்கனுன்னாலும் சரி வார்டு மெம்பரா சேரனும்னாலும் சரி  நாடு, நிர்வாகம், சரித்திரம், அரசியல் , பற்றின கு.பட்ச  கேள்வி ஞானமாவது இருக்கனும்.  இந்த தேர்வை கணிணி மயமாக்கனும். கணிணி கேட்கிற கேள்விக்கு பார்ட்டிங்க பதில் சொல்றாப்ல இருக்கனும். அவனவனோட கட்டைவிரல் ரேகையையே ரோல் நெம்பரா உபயோகிக்கனும்.

வேணம்னா இவிகளுக்கு கணிணி அறிவுள்ள பி.ஏ க்களை உதவியா நியமிக்கலாம். வீடியோ கான்ஃபிரன்சிங் லொட்டு லொசுக்குனு இருக்குல்ல. அப்புறம் என்னத்த நகர் மன்ற வளாகம் மயிரு. அவனவன் வீட்லருந்தே கலந்து கிடட்டும்.

கவர்னர் வசிக்கும் ராஜ் பவனை மட்டுமல்ல, ராஷ்டிரபதி பவன், பிரதமரின் அதிகார பூர்வ இல்லம், மத்திய , மானில செயலகங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் அனைத்தையும் பல்கலை கழகங்களாக, மருத்துவமனைகளாக மாற்றவேண்டிய காலம் வந்து விட்டது.

பல்கலை கழகம்னாலே திகீர்ங்குது. கல்விங்கறது அதை பயில்றவனுக்கு தன் உடல், மனம், புத்தி,ஆத்மா, தன்னை பெற்றெடுத்த அப்பா, அம்மா, குடும்பம், சமுதாயம், மாவட்டம், மானிலம், நாடு பற்றிய அறிவை கொடுக்கனும். அவன் தன் சொந்த கால்ல நின்னு தன் தேவைகளை ( உயிர் பாதுகாப்பு, உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ்) பெற உதவுவதாய் இருக்கவேண்டும். அதான் கல்வி. மற்றதெல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்

 கையோட கையா இந்த ஐ.பி.சி ( அதாங்க இண்டியன் பீனல் கோட்) யையும் ஒரு வழி பண்ணிரனும். இந்த கிழவாடி, கிழட்டு காமப்பேய் விவகாரத்தையே எடுத்துக்குங்க . ஒரு தனியார் டி.வி.  சேனல் இது பற்றின  ஸ்டோரியை டெலிகாஸ்ட் பண்ணுது. அது என்ன ஏதுனு பார்க்காம லீவு நாள்ள கூட ஹவுஸ் மோஷன் கமிட்டி போட்டு உடனே இன்டிரியம் ஆர்டர் கொடுக்கிறாங்க.

நான் என்னோட ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபால்ல அனுப்பறேன். எம்.பிக்களுக்கு  கிடைக்கச்செய்யுமாறு கேட்கிறேன். ஒரு மயித்து பதிலும் காணோம். இதை பத்தி ஹை கோர்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிவு தபால்  அனுப்பறேன். சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிச்சு 12  நாள்  ஹங்கர் ஸ்ட் ரைக் பண்றேன். ஒரு மயிரு ஆக்ஷனும் கிடையாது. ஆனால் கே.சி.ஆர்னு ஒரு டுபாகூர் பார்ட்டி ஒன்னரை நாள் உண்ணாவிரதம் இருந்துட்டு டி.பி.என் ( டோட்டல் பேரண்டல் ந்யூற்றிசன்) ஏத்திக்கிட்டு ட்ராமா போடுது. (இதை ஏத்திக்கிட்டா  35 வருசம் சாப்பாடே இல்லாம நாடகம் போடலாம்) உடனே ஹ்யூமன் ரைட் கமிஷ ரெஸ்பாண்ட் ஆகுது. என்னத்த நீதி ? என்னத்த கோர்ட்டு.

குற்றம்  நடந்த  பிறகு அதுக்கு தண்டனை கொடுக்கிறது மடத்தனம். இந்தியா விவசாய நாடு. இருக்கிற விளை நிலங்கள்ள பெரும்பகுதி  சில ஆயிரம் நிலாச்சுவான் தார்கள் கையில இருக்கு. 10 கோடி ஆண்,பெண் வேலை வெட்டியில்லாமல் இருக்கிறார்கள் .   ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ  13 வயசுல செக்ஸ் தேவைப்படுது ஆனால் அவனுக்கு/அவளுக்கு 33 வயசுலதான் கல்யாணமே நடக்குது.  திவாரி கதையையே எடுத்துக்குங்க பெண்டாட்டிக்கு கேன்சர் வந்து செத்து போறா. இந்த கிழவாடி ஊர்ல இருக்கிற குட்டிகளை எல்லாம் பெண்டாள்றான்.  கர்பிணிக்கு , குழந்தைகளுக்கு தடுப்பூசி எவ்ள முக்கியமோ வயது வந்த ஆண் பெண்ணுக்கு செக்ஸ்  அவ்ளோ  முக்கியம். உடலுறவு வேட்கை+ திறன் கொண்டவர்க்கு செக்ஸை மறுப்பது அவரை கிரிமினலாகவோ , மன நோயாளியாகவோ மாற்றுவது உறுதி.

ஒன்று எல்லோருக்கும் வேலை கொடு. திருமணத்தை கட்டாயமாக்கு. செக்ஸ் கல்வி கொடு. குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கு. இல்லையா விபச்சாரத்தை லீகலைஸ் செய். அடிப்படையிலேயே ஓட்டைய வச்சுக்கிட்டு தொழு நோய்க்கு அவில் மாத்திரை கொடுத்த கணக்கா இருக்கிற அரசியல் சாசனம்,சட்டத்தை வச்சுக்கிட்டு என்னத்த கிழிக்கிறது.

விஸ்வேஸ்வரய்யா பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். இவர் ஆதி காலத்துலயே சொல்லி வச்சாரு. இந்தியால ஒருத்தன் சம்பாதனைல பத்து பேர் வாழறாங்க (இவிகளை நீங்க தண்டத்தீனிம்பிங்க எக்கனாமிக்ஸ் அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர்ஸுங்குது)   இது நல்லதில்லை. சீக்கிரம் நாடு திவாலாயிருமுனு சொல்லியிருக்காரு.

இன்றைய தேதிக்கு அதி பெரிய அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர் யாருன்னா அரசாங்கம்தான். அரசாங்கத்தின் செயல்பாடுகளை இரண்டா பிரிக்கலாம்.ப்ரொடக்டிவ், அன் ப்ரொடக்டிவ். இப்போ 90 சதவீதம் அன் ப்ரொடக்டிவ் செயல்பாடுதான் இருக்கு. ( கலர் டிவி எட்ஸெட் ரா) டோட்டல் செட் அப்பே தூங்கி வழியுது. நான் எல்லா அரசு அதிகாரி, ஊழியனையும் வீட்டுக்கு அனுப்ப்ச்சொல்லலே.கொடுக்கிற சம்பளத்துக்கு சரிய்யா வேலை வாங்குங்கறேன்.

வடக்குல வெள்ளம், தெற்குல குண்டி கழுவ தண்ணியில்லே. நதி நீர் இணைப்பை ஏன் துவங்க கூடாது. 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணி நதிகளை இணைக்க துவங்கினா தூங்கி வழியற நிர்வாகத்துல ஒரு சுறுசுறுப்பு வரும். நாட்டின் அனைத்து சக்தி, சோர்ஸையும் இதுக்கு ஏன் திருப்பி விடக்கூடாது.

Friday, December 25, 2009

கவர்னர் பவனில் காமக்களியாட்டம்



எந்த காரணத்துக்காக நான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுத்து வந்தேனோ அது நடந்தே விட்டது. ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் காமக்களியாட்டங்களும், அதன் பின்னான பேரங்கள், பேரங்களுக்கு பின்னான எம்.பிக்கள் என்று எல்லா விவகாரங்களும் வெளிவந்துவிட்டன.

கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா. உத்தாரஞ்சலில் இருந்து தில்லி ஆந்திரா பவனுக்கு பலான பார்ட்டிகளை அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க் . ஆந்திராபவ‌னிலிருந்து கிளிகளை கவர்னர் பவனுக்கு அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க்.

இங்கே கவர்னர் பவன் வளாகத்தில் பி.எம், ப்ரசிடென்ட் வந்தால் தங்கக்கூடிய கஸ்ட் ஹவுசில் சரோஜா தேவி கதை தனமான பஜனைகள்.விஷயங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பட்சிகளை கஸ்டடிக்கு கொண்டு வந்து மசாஜில் ஆரம்பித்து கண்ட கருமங்களை அரங்கேற்றி அந்த கருமங்களை வீடியோவில் பதித்து பார்த்தும் மகிழ்ந்துள்ளனர்.

இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து நேற்று டமால் ஆகிவிட்டது. மேற்படி வீடியோக்களை வைத்து ப்ளாக் மெயிலும் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்ப‌ட்ட ஒரு 7 மாத கர்பிணியும், 18 வயது பெண்ணும் மேற்படி தனியார் சேனலை அணுகி தங்கள் "வயிற்றெரிச்சலை" கொட்டி ஃபோட்டோஸ் & வீடியோக்களை கொடுத்துள்ளனர்இந்த ஸ்டோரி வெள்ளிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் என்று (மங்களகரமான நாள்) அதே சேனலுக்கு சொந்தமான தினசரியில் பேனர் செய்தி வெளியானது. ஸ்டோரியும் ஒளிபரப்பாகி ஆந்திர மானிலத்தின் மானம் விர்ரென்று பறந்து தற்போது சந்திர மண்டலத்தில் பறப்பதாக கேள்வி.

கேள்விகள்:
பி.எம், ப்ரசிடென்ட் தங்க வாய்ப்பிருக்கும் கஸ்ட் ஹவுசில் இந்த கருமாந்திரங்களை அரங்கேற்றியுள்ள நிலையில் , ஹைதராபாத் டெர்ரரிஸ்டுகளின் ஹிட்லிஸ்டில் உள்ள நிலையில் இவர்கள் பிக் அப் செய்து வரும் குட்டிகள் ஒரு டைம் பாமை ஹேண்ட் பாகில் கொண்டுவர எத்தனை நேரமாகும், அவற்றை பி.எம், ப்ரசிடென்ட் தங்கும் நேரம் பார்த்து ரிமோட்டில் வெடிக்க வைக்க எத்தனை செகண்டாகும்.

ஏற்கெனவே ஒரு இளைஞர் திவாரிதான் என் அப்பா என்று கோர்ட்டு படியேறிய போதே ஒரு டி.என்.ஏ டெஸ்டுக்கு இந்த பாடாவதி கோர்ட்டுகள் ஒரு உத்தரவு கொடுத்திருந்தால் கதை அப்போதே கந்தலாகியிருக்குமே.

இப்போதும் கூட மேற்படி ஸ்டோரி டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கும்போதே ஹவுஸ் மோஷன் கமிட்டி மூலம் இன்டிரியம் ஆர்டர் கொடுத்து டெலிகாஸ்டை தடுத்து நிறுத்தியுள்ளது கோர்ட்டு.

செக்ஸ் பவர் குறைந்தால் கேரக்டர் டமால் !
இதென்னடா புது கரடி என்று தலை மயிரை பிய்த்துக்கொள்ளாதீர்கள். இது அக்மார்க் சத்தியம். குழந்தையின் பால் நிர்ணய ஜீனும், கேரக்டரை நிர்ணயிக்கும் ஜீனும் ஒன்றேவாம். இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. மனிதனில் இருப்பது ஒரே பவர் அது செக்ஸ் பவர். நீங்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், உடலுறவை கற்பனை செய்தாலும், ஓவியம் வரைந்தாலும் ஒரு பதிவை தட்டச்சினாலும் அதற்கு துணை புரிவது செக்ஸ் பவர் ஒன்றே.

அதன் உத்தேசம் தன் இருப்பை உறுதி செய்தல் (கொல்லுதல் ,கொல்லப்படுதல் மூலமும் இருப்பை உறுதி செய்யலாம். நிறைய முன்னாள் மந்திரிகள் செத்தால் தான் அவர்கள் இத்தனை நாள் உயிருடன் இருந்ததையே அறிகிறோம்) அல்லவா சக உயிருடன் தொடர்பு கொள்ளுதல், அவ்வுயிருடன் இரண்டற கலத்தல் , படைத்தல், (இனப்பெருக்கம்) எக்ஸ்பேண்ட் ஆதல் (விரிவாக்கம், பரவுதல் ) மேலும் இப்படைப்பின் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. அன்று ஓருயிர் ஓருடலாக இருந்த உயிர் சக்திதான் குரங்கானது, மனிதனானது , ஆணானதுபெண்ணானது. ஓருடல் ஓருயிராக இருந்த போது இன்செக்யூரிட்டி இல்லை, க‌ம்யூனிகேஷன் ப்ராப்ளமில்லை, தூரமில்லை, காலமில்லை.

அந்த நி..ம்...மதியான சூழல் ஒவ்வொரு உயிரின் அடிமனதிலும் பத்திரமாக இருக்கிறது. அதை மீண்டும் அடைய ஒரே வழி இந்த உடலை உதிர்த்தல் (அதற்காக தான் கொலை எண்ணம், தற்கொலை எண்ணம்) அல்லது செக்ஸ். செக்ஸில் என்னதால் இணைப்பு சில நிமிடங்களே ஆனாலும் உச்சம் பெறும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. காலச்சக்கரம் நின்று போகிறது. அதுவும் ஒரு மரணமே. ஒரே எலக்ட்ரானிக் பொருளில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருப்பது போல் மனிதனிலும் வாழ வேண்டும் என்ற துடிப்பு இருப்பது போலவே சாக வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது.இதெல்லாம் ஜஸ்ட் செக்ஸ் மூலமே நிறைவேறி விடுகின்றன‌

மேற்படி காரணங்களால் ஒரு மனிதன் செக்ஸில் ஈடுபடுகிறான். எப்போது செக்ஸ் தடை செய்யப்படுகிறதோ ? எப்போது செக்ஸ் பவர் குறைகிறதோ டோட்டலாக அவனது/அவளது கேரக்டரே டமால் ஆகி கோழை வீரனாகிறான், வீரன் கோழையாகிறான், சுதந்திர போராட்ட வீரன் காமாந்தனாகிறான்.

கவர்னருக்கு தெரியாதா? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் தன் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்று தெரியாதா? இது தற்கொலை முயற்சிதானே.

செக்ஸில் செலவழிந்து முடிந்துவிடாத க்ரியேட்டிவிட்டி இருப்பவர்களுக்கு எக்ஸ்பேண்ட் ஆகும் வெறி இருக்கும் . அவரை முதல்வராகவே விட்டிருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. இப்படி பார்த்தால் ஓவர் பவர் ஃப்ளோ. அதை செலவழிக்க வழியில்லை. ( தீவிர அரசியிலில், வியாபார போட்டியில் இருப்பவர்களுக்கு செக்ஸ் பவர் நாளாவட்டத்தில் குறைந்தே போகும் தெரியுமோ?)

இந்தியாவில் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்திருந்தால் மானிலத்தின் மானம் மரியாதை, தனது மரியாதைக்குரிய கடந்த கால சரித்திரம் (சுதந்திர போரில் பங்கு) ஆகியவற்றை பணயம் வைத்து, பி.எம், ப்ரசிடென்ட் ஆகியோரின் உயிரை பணயம் வைத்து திவாரி இந்த கேவலமான செயலுக்கு இறங்கியிருக்க வேண்டாமே.

வெறுமனே இப்படிப்பட்ட பெண்களை சப்ளை செய்து சாதிக்கப்பட்ட காரியங்கள் எத்தனை? இந்த நெட் வொர்க்கில் இருக்கும் கிழவாடிகள்,
மக்கள் தலைவர்கள் எத்தனை பேர்? இதெல்லாம் வெளியே வருமா ?

அல்லது இதெல்லாம் மலச்சிக்கல் உள்ளவன் வெளியேற்றிய வாயுதானா?

ஷிட்.










Thursday, December 24, 2009

முறையற்ற உறவுகள்

முறையற்ற உறவுகளுக்கு காரணம் இன்றைய சமூகத்தில் கூட செக்ஸ் என்பது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருப்பதுதான். 13 வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் உடலுக்கு 33 வயது வரை செக்ஸ் மறுக்கப்பட்டால் என்னாகும்? சுய இன்பம் இத்யாதியால் உணர்ச்சிகள் மழுங்கிப்போய் , அது வெறுமனே இன உறுப்பில் மட்டும் மையம் கொண்டு ஏதேனும் வக்கிரம் ,குரூரம், வேலி தாண்டல் இருந்தாலன்றி எழுச்சியே இல்லாது போய்விடுகிறது. செக்ஸ் வித் மாம், செக்ஸ் வித் சிஸ்டர் இதெல்லாம் இன்டர் நெட்டில் கிடைக்கும் நீலப்படங்களுக்கான டைட்டில்கள். இது ஒரு காரணம் என்றால் குடும்பத்தில் அ கிராமத்தில் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால் முறை வரும் உறவுகளை பார்ப்பதும் சிரிப்பதும் கூட தடை செய்யப்பட்டுவிட முறையற்ற உறவுகள் மட்டுமே பழக அனுமதிக்கப்ப்டுகின்றன. இதனால் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி, நக்குற மாட்டுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாத மாதிரி முறையற்ற உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையின் இந்த இழி நிலையை உங்களால் மாற்றமுடியும் .

மேற்சொன்ன முறையற்ற உறவுகளுக்கு தீர்வு எவனும், எவளும் வேலை வெட்டி இல்லாது இருக்ககூடாது. வயது எவனும், எவளும் திருமணமின்றி இருக்கக்கூடாது. பத்து கோடி ஆண் பெண் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் தான் இது உடுங்க ஜூட்


இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேரோட ஷேர் பண்ணிக்கறதுதான். இந்தியாவோட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு இந்த ஐந்து அம்சங்கள் . இவற்றை நான் 1987 முதல் பிரச்சாரம் செய்து வருகிறேன். இது குறித்து இளைஞர்கள் கவனம் கவரத்தான் இத்தனை நாளும் அடல்ட் ஜோக், செக்ஸாலஜி என்று தாளித்து வந்தேன். இந்த ஐந்து அம்சங்கள் அமலானாலும் மீதமிருக்கக்கூடிய இன்றைய பிரச்சினைகளில் ஒன்றை கூறி நிரூபித்தாலும் அவர்களுக்கு ரூ.100 பரிசாக தர காத்திருக்கிறேன்.

சுய இன்பம், ஈவ் டீசிங், முறையற்ற உறவுகள், க்ரைம், தீவிரவாதம் என்று வழி தவறும் 10 கோடி இந்திய இளைஞர்கள்+ இளம்பெண்கள் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று மணமுடித்து இன்பமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேருடன் ஷேர் பண்ணிக்கொள்வதே

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

Tuesday, December 22, 2009

தேவையற்ற ரோமங்களின் தேவை

செக்ஸ் கேள்வி பதில்
தேவையற்ற இடங்களில் ரோமங்களை நீக்குவது எப்படி?

தேவையற்ற இடங்கள் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம். மனிதனின் அறிவு கல்வியாளர்கள், ஆசிரியர்களால் புகட்டப்பட்ட ஒன்று, மனம் பெற்றோர், சமுதாயத்தால் புகட்டப்பட்ட ஒன்று. அவை இயற்கையிலிருந்து எப்போதோ விலகிவிட்டன. நீங்கள் உங்கள் உடலை செயற்கை அறிவு கொண்டு என்னதான் நவீனப்படுத்தினாலும், என்னதான் ட்யூன் செய்தாலும் அது இன்னும் தன் இயற்கை தத்துவத்தை முழுக்க விட்டுவிடவில்லை.ஆம் மனிதனின் அறிவு, மனம், ஆகியவற்றைவிட அவன் உடன் ரொம்பவே புத்திசாலி. இதற்கு காரணம் அது இயற்கையுடன் 100 சதம் இல்லாவிட்டாலும் 60 சதமாவது தன் தொடர்பை தொடர்கிறது. தாயின் மணிவயிற்றில் உங்கள் செயற்கை சாதனங்களுக்கு தூரமாக, ஒலி,ஒளியலைகளுக்கு தூரமாக 10 மாதம் இருந்தது. வானம் பொழிகிறது பூமி விளைகிறது. விளைந்ததை உடல் ஏற்கிறது. மேலும் மனித உடலை அதில் 70 சதவீதமாக உள்ள தண்ணீர் சந்திரனுடன்  இடையறாத தொடர்பை தொடர வைக்கிறது

ஆரம்பகாலத்தில் மனிதனுக்கு உடலெங்கும் ரோமக்காடே இருந்தது.இதன் உத்தேசம் குளிர் ,கோடையிலிருந்து காப்பது என்பது மேலோட்டமான  வெளிப்படையான காரணம். ஆனால் அவை அண்ட வெளியிலிருந்து , நட்சத்திரங்கள், கிரகங்களிலிருந்து வெளியாகும் தேவையான அதிர்வுகளை உள்வாங்கும், தேவையற்ற அதிர்வுகளை தடுக்கும் சாதனங்க‌ளாக கூட இருக்கலாமே.வானமே கூரையாய் , பூமியே வீடாய்  வாழ்ந்த காலத்திலும் மனிதனில் நோய் எதிர்ப்பு சக்தி பக்காவாக இருந்தது . எவ்வித சைக்காலஜிகல் பிரச்சினைகளும் கிடையாது. முக்கியமாய் தற்கொலைகள் கிடையாது  என்பதை எண்ணிப்பாருங்கள். மனிதன் குகைகளில் வசித்தாலும் மேஜர் டைம் காடுகளில் சுற்றித்திரிந்தான். குகையிலும் குளிர் நடுக்கியது.

சஞ்சாரியாய் இருந்த அவன் எப்போது ஸ்திரவாசம் மேற்கொண்டானோ எப்போது  வீடுகட்டி வசிக்க ஆரம்பித்தானோ அப்போதே மனித உடலுக்கும் இயற்கைக்குமான தொடர்பு இளைக்க ஆரம்பித்தது. ரோம அடர்த்தி குறைய ஆரம்பித்தது. இப்போது நீங்கள் தேவையற்ற இடங்கள் என்று குறிப்பிடும் இடங்களில் உள்ள ரோமங்கள் கூட ஏதோ அவசியம் கருதி இயற்கையால் தரப்பட்ட கொடைகள் தாம். கக்கம், தொடை சந்திப்புகளில் உள்ள ரோமம் ஸ்பாஞ் போல் இருந்து உராய்வை அதனால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கின்றன. மேலும் அவ்விடத்தில் சுரக்கும் வியர்வையில் அதன் வாசத்தில் செக்ஸுக்கான தூண்டுதல் இருக்கிறது. நேரம் கடந்த பின் அங்கு கிருமிகள் குடி புகுவது வேறு விஷயம். ஒரு குளியல் போதும் அவ‌ற்றை துரத்த. ஜன்ய பாகங்களில் உள்ள ரோமங்களின் முக்கியத்துவம் உயிரியல் சார்ந்ததுமட்டுமல்ல. அவற்றில் மிஸ்டிசம் இருக்கிறது. என்னதான் சமூகம், மதம், அரசு அனைத்தும் செக்ஸை 99.9 சதவீதம் தடை செய்திருந்தாலும் காமக்கிளர்ச்சி தோன்ற, அது தோன்றிய போது இதர சமாச்சாரங்கள் எல்லாம் ப்ளர்ராக தோன்ற காரணம் இந்த ரோமங்களில் கூட இருக்கலாம்.

ஆப்ரிக்க காடுகளாய் இருந்தால் சென்சார் அதிகாரியாக கத்திரி போடலாமே தவிர உதவாக்கரை அரசியல்வாதிகள் மாதிரி ப்ளேடு போடுவது நல்லதல்ல. கண்ட கண்ட களிம்புகளையும், திரவங்களையும் உபயோகிப்பது அதை விட ஆபத்து.

இந்நிலையில் லேசர் சிகிச்சை இத்யாதியெல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்குவதே. சாதாரண ஐம்பது பைசா ஷாம்பு பற்றி ஒரு விளக்கம். இதன் மூலப்பொருள் சோப் ஆயில். இதை மெக்கானிக் ஷெட்களில் மெக்கானிக்குகள் க்ரீஸ் கறை, டீசல் நாற்றம் போக  கை கழுவ உபயோகித்து வந்தார்கள். எவனோ ஒரு அதி மேதாவி இதில் நிறம், வாசனை பொருட்கள் சேர்த்து நம்மை ஞானிகளாக்க முடிவு செய்தான் ( தலையில் சொட்டை விழுந்தால் ஞானியாம்ல) புற உபயோகத்துக்கான ஹேர் டை கூட சில பேருக்கு உயிருக்கே உலையாகிவிடும்போது இந்த மயிர் நீக்கி க்ரீம்கள் பெண்களின் இன உறுப்பின் அமைப்பால் உட்புகவும் வாய்ப்பிருக்கிறது . மாதவிலக்கு காலங்களில் கத்திரி போட்டு மேற்படி களிம்பு, திரவம், லேசர்களுக்கு தடா போடுவது நல்லது என்பது என் கருத்து.

Saturday, December 19, 2009

சாரு நிவேதிதா அவர்களே !

சாரு நிவேதிதா அவர்களே,
மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.

எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை என்ற வார்த்தையை நான் உபயோகிக்க காரணம் தங்கள் விமர்சனங்களில் தர்கமே இல்லை. அதனால் தான் இது பகையோ என்ற ஐயம் எனக்குள் பிறந்தது.

//கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார்//

இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான். ஆனால் ஞானி அவர்கள் அடிப்படையில் இடது சாரி சிந்தனைகள் கொண்ட மனிதாபிமானி. இயற்கையாகவே அவரில் போலீஸ் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும். எனவே
இதை கூடவா போலீஸ் இம்போஸ் செய்யும் என்று இர்ரிட்டேட் ஆகி எழுதியிருக்கலாம். இதில் அவர் இரண்டாவது கட்சி பற்றி ( பந்து அடி வாங்குவோர்) யோசிக்காதது தவறுதான்)

//ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி.//
தாலிபான் என்ற வார்த்தையிலேயே பகை எட்டிப்பார்க்கிறது. ஞானி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர். நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவன் என்றும் சொல்லியிருக்கலாம். ஹிப்பிக்கள் தான் காலப்போக்கில் கலப்பற்ற அக்மார்க் ஆன்மீக வாதிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுகிறார்கள் வாழ்க.

//பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம்//
//பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே//
இதே வார்த்தையை கலைஞரும் சொல்லியிருக்கிறார். அவரையும் கண்டிக்கலாமே.

//பூ என்றால் பெண்ணுக்குரியதாம்//
ஞானி பெண்கள் குறித்து கவலை கொண்டவர். அக்கறை கொண்டவர். அவர் பூ வைப்பது, வைக்காதது போன்ற அற்ப சங்கதிகளில் கவனம் வைக்கிறவர் அல்ல.அதே பூவை உங்களுக்கே கொடுக்கும்படி சொல்லியிருந்தால் அதற்கும் இதைவிட கடுமையாக சாடியிருப்பீர்கள். காரணம் பகை . பகைக்கு காரணம் உங்களில் ஒரு ஞானி உள்ளார் .

//4 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? //
ஒரு அரசியல் வாதி 24 மணி நேரமும் நாணயமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? என்று இந்தியாவை சீனாவுக்கு ஒத்திக்கு விட்டு விட்டால் என்னாகும்

//ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும்.//
சூப்பருங்கோவ் !

// ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் //

பாருங்க பாருங்க உங்களுக்குள்ளயும் ஒரு ஞானி இருக்காரு

// ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும். //
உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சியில் ஞானியின் பேச்சில் என்னாத்த தப்பு கண்டிங்களோ புரியலை.

நான் சின்ன வயசுல அப்பா அம்மா வயித்தெரிச்சலை கொட்டிக்காத நாளில்லே. நான் வெளிச்சத்துக்கு வராததுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் எவனாவது டீன் ஏஜனுக்கு அறிவுரை கூறும் சமயம் வரும்போது "த பாரு நைனா இவ்ளோ டேலண்ட் இருந்தும் நான் வெளிச்சதுக்கு வராததுக்கு காரணம் என்னன்னா அப்பா அம்மா ஆசீர்வாதம் இல்லாததுதான்" என்று கூறுவது வழக்கம். ஒரு வகையில் இது தவறாகவும் இருக்கலாம் . நோக்கம் ? அது நல்ல நோக்கம் தானே.

உடல் ஊனமுற்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை பற்றி சொன்னது தவறாகவே இருந்தாலும் அதன் நோக்கம் கல்வி என்ற ஆயுதத்தை ஏந்த சொல்வதே

// அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்? //

அது ஒரு வித தாய்மை உணர்ச்சி. கருணை காரணமாய் சொல்லப்படுவது. ஞானி பேச்சை பற்றி நக்கலடித்திருக்கிறீர்கள். அவர் எப்படி பேசினாலும் பிரச்சினையே இல்லை. கேட்கப்போகிறவர்களில் (என்ன ஒரு இரு நூறு பேரா) உங்களை போன்றவர்கள் எப்படியும் நக்கலடிக்கத்தான் போகிறீர்கள். என்னை போன்றவர்கள் இருந்தால் அவர்கள் ஞானியின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்

ஆனால் கலைஞரின் நிலை அதுவல்ல. பார்ட்டி கழண்டுகொண்டால்
புது வெள்ளம் பாயும் . * நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கே பதவி என்று முடிவு செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்

தெலுங்கானாவும் பலான ஜோக்கும்

தெலுங்கானாவும் பலான ஜோக்கும்


முதல்ல பலான ஜோக். ஒரு விமானம் ரிப்பேராகி பாலைவனத்துல இறங்கிருச்சு. அதுல ஒருத்தன் பயங்கர ஜொள்ளு பார்ட்டி. "அது" இல்லாம தூக்கமே வராது.என்னடா பண்றதுனு போய்க்கிட்டே இருந்தானா ஒரு பெண் ஒட்டகம் தென்பட்டது. சரி இன்னைக்கு இத வச்சே அட்ஜஸ்ட் ஆகிரலாம்னு கிட்டே போனான். அது எழுந்து நின்னுருச்சு. என்னா செய்றதுனு பார்த்தான். அதான் பாலைவனமாச்சே. ஒட்டகம் பின்னாடி ஏறி நிற்க வசதியா மணலை குமிச்சு அது மேல ஏறினான். ஒட்டகம் முன்னுக்கு நகர்ந்துருச்சி. நள்ளிரவு வரைக்கும் இதே சீன் தான். இதை தேவலோகத்துல இருந்து இந்திரன் பார்த்தான்.

அடடா என்னே இவன் கொள்கை (?) பற்று இவனல்லோ ஜொள் திலகம்னு ரம்பையை கூப்டு" த பாரு! உடனே அங்கே போ அவனுக்கு என்ன வேணுமோ செய்" என்றான். ரம்பை பாலைவனத்தில் இறங்கினாள். நம்மாளு மணலை குமிச்சி குமிச்சி கண்ணு கட்டி கிடந்தாலும் மணலை குமிக்கிறத விடலை. ரம்பை வந்ததையே அவன் கண்டுக்கலை. ரம்பை அவனை தொட்டு "மானிடனே உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள். நம்மாளு "ஒட்டகம் முன்னுக்கு நகர்ந்துராம பார்த்துக்க" என்றானே பார்க்கலாம்

* * *

தெலுங்கானா பற்றி பல பதிவர்கள் எழுதியிருந்தாலும் ஆந்திர தமிழன் என்ற வகையில் உள்ளபடி ஒரு பதிவு போடவேண்டியது என் கடமை என்பதால் தான் இந்த சுருக் பதிவு

நம்மவர் டுமீல் விடுவது போல் (கல் தோன்றி மண் தோன்றா காலத்தே) ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது. அது போல் தெலங்கானா பகுதிக்கு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் தெலுங்கானா நிஜாம் ஆட்சியில் தனி நாடாக இருந்தது. நிஜாம் படையப்பா ரஜினி மாதிரி "என் வழி தனி வழி என்று பந்தா காட்ட அன்றைய மத்திய உள்துறை மந்திரி பட்டேல் ஃபோர்ஸ் அனுப்பி இந்தியாவோட சேர்த்துட்டார். நேரு ரெஜிம்ல மொழி வாரி மானிலங்கள் பிரிக்கப்பட்டபோது தெலுங்கானாவுக்கு தனி முதல்வர் ஆனால் அவர் பாவம் டம்மீ பீஸு மாதிரி இருக்கு (இன்றைய சுய நல புழுக்களுடன் ஒப்பிடும்போது) அவர் தன் பதவியை ராஜினாமா செய்து தெலுங்கு பேசுறவக ஒரே மானிலமா இருக்கனும்னு சம்மதிச்சார்.

அப்போ தெலங்கானாவுக்கு ஹைதராபாத் தலை நகரம். ஆந்திராவுக்கு கர்னூல். பெரியவக கூடிப்பேசி கர்னூலுக்கான தலை நகர ஹோதாவை தியாகம் பண்ணி ஒரே மானிலமாக்கிட்டாங்க.

என்னதான் இருந்தாலும் ஒட்டு போட்ட பார்ட் ஆச்சே. மேலும் அரசியல்ல வேலையில்லாத பார்ட்டிகளுக்கு, வேலை போன பார்ட்டிகளுக்கு வேலை அந்த பகுதி மக்களை தூண்டி விடறதுதான். உ.ம் சென்னா ரெட்டி. இவருக்கு காங்கிரஸ் தில்லி தலைமையுடன் பத்திக்கிச்சு. உடனே தனி தெலிங்கானான்னு புலி வேஷம் போட்டார். இந்திரா அம்மையார் வாங்க ரெட்டி நீங்கதான் சி.எம் என்றழைத்ததும் தெலுங்கானாவை தூக்கி உடைப்பில் போட்டு முதல்வராயிட்டார்.

1969 லிருந்து தெலுங்கானா போராட்டம் இருக்குனு சொல்றாங்க. இருந்தாலும் கன்டின்யுட்டி இருக்காது. மேலும் அந்த காலத்துல மீடியா இந்த அளவுக்கு கிடையாது. தகவல் தொடர்பும் கிடையாது. என்.டி.ஆர் வந்தார் அரசியலில் புது சக்திகள் முக்கியமாய் யுவ சக்தி வெள்ளமென புகுந்தது. அவர் வரவு மீடியாவுக்கு நன்றாக தீனி போட்டது. அரசியல் புதுமுகங்கள் என்.டி.ஆரின் ராபின் ஹுட் தனமான ( இடது சாரி சிந்தனைன்னெல்லாம் சொல்ல முடியாது) அணுகுமுறைக்கு மயங்கி கிடந்தனர். என்.டி.ஆரும் என்னென்னமோ பண்ணார் மானிலத்து மாவட்டங்களை தாலுக்கா என்ற அளவிலிருந்து மண்டலம் என்ற சிறுபகுதிகளாக பிரித்தார். இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி , விவசாயிக்கு 250 ரூ க்கு அன்லிமிட்டட் பவர் சப்ளை இத்யாதி காரணங்களால் விவசாயம் செழித்தது. அரசியல் அதிகாரம் புதிய வர்கங்களுக்கு பரவலானது. நிர்வாகம் நெருங்கி வந்தது. இந்த கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்தான் கே.சி.ஆர். என்.டி.ஆர் மீதான ஈர்ப்பில் வந்தவர் இவர். இவர் தன் மகனுக்கு என்.டி.ஆர் பெயரை தான் வைத்திருக்கிறார்

சந்திரபாபு என்.டி.ஆர் முதுகில் குத்தி முதல்வராக பெரிதும் உதவியவர் கே.சி.ஆர். 1999 ல் பாபு மீண்டும் முதல்வரானார். (அவர் வென்றது பாஜக கூட்டினால் கிடைத்த கூடுதலான 2 சதவீதம் ஓட்டால் தான்.ஆனால் அவர் தான் கூட தலைவனாகிவிட்டதாய் மயங்கி ஆட்டத்த துவங்கிட்டார்) கே.சி.ஆரை ஓரங்கட்டினார். கே.சி.ஆர் தெலுங்கான சரித்திர படி வேலை போனதுமே தெலங்கானா போராட்டத்தை துவக்கிவிட்டார்.
என்.டி.ஆருக்கு சினிமா கவர்ச்சி எல்லைகள் தாண்டிய ஆளுமையை கொடுத்திருந்தது. ஒய்.எஸ் .ஆர் "சொன்னா செய்துருவாருய்யா இந்த ஆளு" என்ற குட் வில் காரணமாய் ஆளுமையை விஸ்தரித்து கொண்டார். இவர்கள் இருந்தவரை தனி தெலுங்கானா கோரிக்கை குற்றுயிரும் குலையுயிருமாய் தான் கிடந்தது.
என்.டி.ஆர் நல திட்டங்கள் மழை கணக்காய் ஆறுதல் தர ஒய்.எஸ்.ஆர் சகல துறைகளிலும் தூள் பரத்தினார். பாவம் கே.சி.ஆரும், அவரது டி.ஆர்,எஸ் கட்சியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் தேய்ந்தே போயின. இத்தனைக்கும் 2004 தேர்தல்களில் டி.ஆர்.எஸ் கூட்டுடன் தான் ஜெயித்தார் ஒய்.எஸ்.ஆர்.ஆனால் தேர்தல் அறிக்கையில் மட்டும் "அனைவரின் ஒப்புதல் பெற்று தெலுங்கானா தருவோம் " என்று தான் குறிப்பிட்டார் ஒய்.எஸ்.ஆர். பாபு இதற்கு எதிர்ப்பு என்பதால் பிரச்சினையில்லாது காலம் ஓடிவிட்டது.

மேலும் அவர் தெலிங்கானா ராஷ்டிர சமிதியை மட்டுமல்லாது (பிளவுகளை ஊக்குவிப்பது மூலம்) தெலுங்கானா வாதத்தையே வலுவிழக்க செய்தார். ( லட்சத்து 20 ஆயிரம் கோடி செலவில் துவங்கிய அணைகளில் லயன்ஸ் ஷேர் தெலங்கானாவுக்கு ஒதுக்கினார்)

சப்பை பார்ட்டியான ரோசய்யா சி.எம்.ஆனதும், அவர் உச்சா போக கூட தில்லியை அனுமதி கேட்கும் நிலையில் இருப்பதையும் பார்த்த தண்ணீர் பாம்பான கேசிஆர் ராஜ நாகமாகி சீற ஆரம்பித்தார். இதில் காங்கிரஸ் கட்சிக்குள் ஜகன் கோஷ்டி, தில்லி கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகள் வேறு.

கேசிஆர் பயங்கர தண்ணியடி கேஸு. பகல் 12 மேல தான் அவருக்கு விடியும். தி டீர் திடீர்னு காணாம போயிருவாரு. 2004 எலக்ஷனுக்கு முந்தியே பலமுறை கட்சி பிளவு முக்கியஸ்தர்கள் ராஜினாமா என்று கதை கந்தல். தேர்தலில் சீட்டுகள் பெரிதும் குறைந்து போனது. ஹைதராபாத் கார்ப்போரேட் எலக்ஷனில் போட்டியிடக்கூட முடியாத நிலை. எனவே எடுத்தார் உண்ணாவிரத அஸ்திரம். கடந்த காலத்திலேயே ஆந்திராபவனில் உண்ணாவிரத நாடகம் போட்டு கக்கூஸில் தயிர் சோறு சாப்பிட்டு மாட்டிக்கொண்ட கேணப்பார்ட்டி இது.

கே.சி.ஆரை போ ராஜா உண்ணாவிரதம் தானே இரு போ என்று சூ காட்டியிருந்தால் ரெண்டாம் நாளே யாரெனும் தாசில்தார் உறுதி மொழி பேரில் லைம் ஜூஸ் அடித்திருப்பார். இந்த தண்ணீ பாம்பை பார்த்து பயந்து ஆந்திர அரசு ஓவர் ஆக்ஷன் செய்ய , மாணவர்கள் களத்தில் குதிக்க, இங்குள்ள காங்கிரஸ் கிழவாடிகள் சோனியாவுக்கு சுக பேதி மருந்து கொடுக்க சிதம்பரம் அறிக்கை விட மானிலமே பற்றிக்கொண்டது.

இப்போ என்னடான்னா சட்டசபைல தீர்மானம் போட்டு அனுப்பினாதான் தெலுங்கானானு தில்லி தலைக சப்ப கட்டு கட்டராகளாம். இப்போ ரெண்டு பக்கமும் பத்திக்கிச்சு


இதான் கதை

Friday, December 18, 2009

தூளான பலான ஜோக்

நம்ம வெங்கடேஷ் திடீர் பணக்காரனாகி தாய்லாந்து போனான். அங்கே லைவ் ஷோ ரொம்ப ஃபேமஸ்னு கேள்விப்பட்டிருந்த வெங்கடேஷ் அங்கே போனான். நம்மாளு ஜொள்ளு விஷயத்துல எவ்ளோ தாராளமோ பண விஷயத்துல அவ்ளோ கெட்டி. கவுண்டர்ல விசாரிச்சான். பத்தாயிரம் ரூபா செலவாகும்னு சொன்னாங்க. வெறுமனே பார்க்கிறதுக்கு அவ்ளோவானு வெளிப்படையா நொந்துக்கிட்டு  நம்மாளு பயங்கரமா பேரம் பேசினான். கவுண்டர்ல இருந்தவன் ஒரு ஐடியா கொடுத்தான். பார்க்கிறதுக்குதான் பத்தாயிரம் ரூ. நீயே ஃபீல்டுல இறங்கறதாயிருந்தா நாங்க உங்களுக்கு மணிக்கு  ரூ ஐயாயிரம் தருவோம்னாங்க.

இது நல்ல பேரமாயிருக்கேனு நம்மாளு துள்ளி குதிச்சு உள்ளார போயிட்டான். உள்ளார  போன பிறகு நம்மாளு உலகத்தையே மறந்து செம ஆட்டம் போட்டான். திடீர்னு ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்னு குரல் கேட்டது. அப்புறமா பார்த்தா அந்த ரூம் முழுக்க முழுக்க ப்ளை வுட்ல செஞ்சிருக்கிறதோட பார்டிஷன் முழுக்க கண் வச்சு பார்க்க ஓட்டையும் போட்டு வச்சிருக்கு. நம்மாளு ரொம்ப ஷை டைப்பாச்சா. நான் இந்த ஆட்டத்துக்கு வரமாட்டேனு அடம் பிடிச்சான். அடியாளுங்க வந்து ரெண்டு தட்டு தட்டி "வேலை" செய்ய வச்சாங்க.

நொந்து நூடுல்ஸான வெங்கி ஹோட்டலுக்கு வந்து நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டே யோசிச்சான். சீ சீ இந்த விசயத்துல பணத்தை பார்க்க கூடாது.. நாளைக்கு போனாப்போவுது கழுதைனு பத்தாயிரரூபா கட்டி
"ஆட்டத்தை " பார்த்துர வேண்டியதுதானு முடிவு செய்துக்கிட்டான்.

மறு நாள் கவுண்டர்ல போய் பணம் கட்டிட்டு ஓட்டைல கண் வச்சு பார்த்துக்கிட்டே " கம் ஆன் கம் ஆன் " " ஃபாஸ்ட் மோர் ஃபாஸ்ட்னு" கத்த ஆரம்பிச்சான். பக்கத்துல இருந்த ஆளு"  சே  இன்னைக்கு கொடுத்த பணம் வேஸ்டு.. நேத்து ஒருத்தன் பண்ணான் பாரு.. அப்படியே நாய் கூட தோத்து போயிரும் ச்சும்மா தூளுப்பா" என்றானே பார்க்கலாம்.

Thursday, December 17, 2009

தங்கள் பதிவுகளை அச்சிட விருப்பமா?

நண்பரே !
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.

ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.

சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்

மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)

இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாள‌ர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.

அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.

மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக‌

நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)

பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.

நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:

எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.

நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:

ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.

இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.

வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.

ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.

நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.

2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.

3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.

4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்

ஆண்மை மிக்க பெண்களின்

"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று கூத்திடும் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆண்மை மிக்க பெண்களின் அபத்திர பாவம் அற்ற, அச்சமற்ற, சுய நலமற்ற, தம் அழகு, கவர்ச்சி இத்யாதிகளின் பால் கவனமற்ற , ஆண்களின் பால் நம்பிக்கையுடனான செயல்பாடுகள் மட்டும் அவர்களில் அந்த ஆதிசக்தியையே தரிசிக்கும் பக்தன் நான்.

இதென்ன ஆண்மை மிக்க பெண்கள் என்று குழம்பாதீர்கள். என் அகராதியில் சுய நலம்,அச்சம், குழப்பம்,அபத்திர பாவம் ( அதாங்க இன்செக்யூரிட்டி) இதெல்லாம் பெண்மையின் சின்னங்கள். பொது நலம், தியாகம், தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இதெல்லாம் ஆண்மையின் சின்னங்கள்.

நான் கவனித்தவரை பெண்களில் பெரும்பாலோர் தமது சரீரம் குறித்த எண்ணச்சங்கிலிகளில் இருந்து வெளிவரவே இல்லை. இதற்கு காரணம் இல்லாதுபோகவில்லை.இந்த ஹிப்பாக்ரட் சொஸைட்டியில் செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆண்கள் பெண்களை கேவலம் முலையும், துளையுமாகவே பார்க்கும் நிலையில் பெண்களை மட்டும்  குறை சொல்வது தவறுதான். என்றாலும் என் அவதானிப்பை இந்த பதிவில் கூறுகிறேன்.
ஆதி சக்தியை பக்தன் வழிபடுதற்போல் மேற்படி பெண்களை நான் வழிபடுகிறேன். தியானிக்கிறேன். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் முழுமையானவர்கள் அல்ல. ஆணில் பெண்மை, பெண்ணீல் ஆண்மை கலந்தே உள்ளன என்பது உயிரியல். ஆனால் ஆணில் பெண்மை சதவீதம் அதிகரிக்கும்போது அவனது கேரக்டராகட்டும், பாடி லேங்குவேஜாகட்டும் அருவருப்பூட்டுவனவாக இருக்கும். இதே பெண்களில் ஆண்மை சதவீதம் கூடும்போது அது ஒரு அற்புத கலவையாகிறது. இவள் என் மூத்த சகோதரியாய் இருந்திருக்க கூடாதா? இவள் வயிற்றில் நான் பிள்ளையாக பிறந்திருக்க கூடாதா என்ற எண்ணம் தான் பிறக்கும்.

வெறுமனே என் அவதானிப்பை ( அப்பாடா..இப்பதான் கவிதை07 இன்டெலக்சுவல் ரேஞ்சுக்கு போய்க்கிட்டிருக்குங்கறிங்களா வுடு ஜூட்) சொல்வதை விட சில பெண்களின் வீர வரலாறுகளை சொல்கிறேன்.

சதா சர்வகாலம் பின்னலை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டுக்கொண்டு, துப்பட்டாவையும், முந்தானையையும் சரி பார்த்துக்கொண்டு, மெனோஃபாஸ் வந்து விட்டாலும் குழந்தை கணக்காய் கொஞ்சிக்கொண்டு, ரோட்டில் எவனை கண்டாலும் அவனது பிறப்பின் நோக்கமே அவளை ஜொள்ளுவதும், தள்ளீக்கொண்டு போவதும் என்பது போல் ஆன பில்டப் எல்லாம் தரும் பெண்களை பார்த்து பார்த்து வெறுத்து போன உங்களுக்கு ஃபார் எ  சேஞ்ச் நான் பார்த்த பெண்களை பற்றி சொல்கிறேன்.

நிறைய சதவீதம் இளம் பெண்கள் ரொம்பவே பிராக்டிக்கல் தான். வீட்டுக்கு போனால் தங்கள் நிலை என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.தலைக்கு லைஃப் பாய் சோப்பும், வயிற்றுக்கு ரேஷன் அரிசியும் தான் என்ற நிலையை அவர்கள் மறப்பதில்லை. ஆனால் பின்னே வரும் ஆண் நாய்களின் காரணமாய் அவர்கள் "சிறகின்றி" இறங்கி வந்த தேவதைகள்
என்ற ரேஞ்சில் நடை பயில்வதும், சக மாணவியருடன் கிசு கிசுப்பதும் காரணமேயின்றி சிரிப்பதும் நம்மை  பைல்ஸ் நோயாளியாக்குவது சகஜம்
(கொஞ்சம் பொறுத்துக்கங்கண்ணே அடுத்த பதிவில் சந்திப்போம்)

Wednesday, December 16, 2009

செக்ஸ் குறித்த புரிதலின்றி

திருமதி ஜெயசீலன் அவர்களுக்கு,
தாங்கள் என்னை மனதில் வைத்தே //அய்யா வாங்க,அம்மா வாங்க, பின்னூட்டமிடுங்க என பதிவுலக பிச்சையெடுக்கிறார்கள்.//இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. தாங்கள் பொத்தாம் பொதுவாக ( நாலாந்தர பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதிய ரேஞ்சில் பொத்தாம் பொதுவாக பண்பாடு அது இது என்று ) போட்ட மறுமொழிக்கு எனது தாய்மை நிறை பதிலை டெக்னிக்கல் பிரச்சினையால் போஸ்ட் செய்ய முடியாத நிலையில் கவுரவமளித்து எனது வலைப்பூவில் வெளியிட்டேன். தாங்கள் ரொம்ப க்ளாசாக விரைவில் பதிலளிக்கிறேன் என்று சொல்லி அம்பேலாகி விட்டீர்கள். நானும் கண்டு கொள்ளவில்லை.

இத்தனை நாட்கள் கழித்து ஏன் இப்படி ஒரு பதிவு.

எனது நன்னோக்கங்களை எல்லாம் மறந்து அ மறைத்து ஓகே ஓகே
கு.ப தங்கள் பதிவின் சுட்டியையாவது எனக்கு தந்திருக்கலாம்.
நான் என்ன ஓம்கார் ஸ்வாமிகளா ? மறுமொழி போட்டவுடனேயே படக்கென்று நீக்கிவிட .

தங்களுக்கு என் கருத்துகளில் அBஜெக்சனிருந்தால் ஒரு மறுமொழி தட்டியிருக்கலாம். என் தாய் நான் இன்டர் படிக்கும்போதே யூட்ரசில் கேன்சர் வந்து இறந்துவிட்டார். அதிலிருந்து எனக்குள் ஒரு சங்கல்பம். இனி அனைத்து பெண்களையும் தாயாய் பாவிக்கவேண்டும். எந்த இளைஞனும் தாயை பிரிந்து தாயை தேடி (ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) கண்டவள் பின்னால் போய் அல்லாட கூடாது. கடமை ஒன்று :அவன் தாயை நோய்களிலிருந்து காக்க வேண்டும். அவள் ஆயுளை கூட்ட முயற்சிக்க வேண்டும் கடமை 2: அந்த இளைஞன் செக்ஸ் குறித்த புரிதலின்றி பெண்ணில் தாயை காணாது தாய் ஒத்த வயதுள்ள தாயிலும் பெண்ணையே காணும் காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்க வேண்டும்.

மேலும் என் அசலான் உத்தேசம் இளைய தலைமுறையை ஆன்மீகத்துக்கு கடத்துவதே/ இந்த செக்ஸ் கல்வி எல்லாம் ஷுகர் கோட்டட் மெடிசின் தான்

என்னமோ விடுங்க.. இது மாதிரி எதிர்ப்பை பெண்ணின காவலர்களாய்
வேஷம்கட்டி ஆடும் ஆண்களிடமிருந்து பெற்றே அனுபவம்.

தாய்குலம் இப்படி காய்வது இதுவே முதல் முறை. எனவே தான் சற்றே
ஒரு மி.மி சுருங்கியது நெற்றி.

//சரி போனா போகுது என மனசுக்கு தோணினதை பின்னூட்டமாக்கினால். மறுநாள் sidebar-ல் விமர்ச்சன பின்னூட்டம்.//
.மறு மொழிக்கான மறுமொழியை என் விமர்சனம்னு நினைக்கிறிங்க. அதை சைட் பார்ல போட வேண்டி வந்ததுக்கு காரணம் என் பதில் அளவு அதிகமாக இருந்ததால் கமெண்ட் பகுதியில் போஸ்ட் ஆகாததே !/

//குப்பை பதிவுகளுக்கு //

நீங்க குப்பைன்னு நினைக்கிறிங்க. நிறைய பேரு உரம்னு நினைக்கிறாங்க போல. ஒரு வேளை குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிச்சுர்ராங்களோ

//இவர்தான் பல Usernames -ல் ஓட்டளிகிறாரோ!//

அரசியல்ல நல்ல எதிர்காலமிருக்குங்க. தூள் பண்ணுங்க

வாழிய !

பி.கு:நானும் நீங்கள் காட்டிய வழியில் தனிப்பதிவு போடுகிறேன். என்ன நீங்க ஊரை சொன்னாலும் பேரை சொல்லாதேனு போட்டிங்க . உங்க கருத்தை பத்து பேரு படிச்சிருவாகளா .. நான் பிழைக்க தெரியாத முட்டாள் நானும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி சி.டி.டிவிடி வித்துக்கறத விட்டுட்டு இப்படி "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் .. இங்கு நான் வாழ யார் பாடுவார்"ன்னிட்டு மல்லாடறேன். அதான் பேரைச்சொல்லி தங்கள் பதிவின் சுட்டியையும் கொடுத்துபோடறேன்

http://sirusaralkal.blogspot.com/2009/12/blog-post.html

ஜோதிடமா ? செக்ஸா ?


மனித வாழ்வை தீர்மானிப்பது ஜோதிடமா செக்ஸா என்ற கேள்விக்கு இந்த பதிவில் விடை தேடுவோம். சைக்காலஜி மனிதனின் கேரக்டரை தீர்மானிப்பதில் (வளரும் சூழல்) என்விரான்மென்டல் ஃபேக்டர் பெரும் பங்கு வகிக்கிறது என்று கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் பார்த்தால் வளரும் சூழலே உங்கள் ஜாதகத்தை வைத்துதான் அமைகிறது. வளர்ப்பு சூழலால் உங்கள் செக்ஸ் லைஃப் பாதிக்கப்படுகிறது என்று செக்ஸாலஜி கூறுகிறது. இதையும் கிரகங்களே தீர்மானிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது.

கிரகங்கள், வாஸ்து அனைத்தும் மனித வாழ்வை விதவிதமாக பாதிக்கின்றன. ஆனால் இவை எல்லாம் தான் என்ற அகம் கொண்டு, நான் செய்கிறேன், இது என் எண்ணம், இது என் சொத்து என்று வாழ்வோர் மீதே அதிகம் வேலை செய்கின்றன.

மனிதனில் எப்போது அகந்தை குறைகிறதோ ஆட்டோமேட்டிக்காக கிரக, வாஸ்து பாதிப்புகளும் குறைந்துவிடுகின்றன. ஆண் பாதி உயிர், பெண் பாதி உயிர் இவர்கள் கூடும்போது , இணையும் போது (ஆழமாக/எவ்வித குற்ற மனப்பான்மையோ , பரபரப்போ, அச்சமோ இன்றி) சுக்கில சுரோணிதங்கள் வெளிப்படுவதோடு இன்னும் ஏதோ நடைபெறுகிறது. அது நடைபெற இருவரும் உச்சம் பெறுவது மிக முக்கியம்.

அந்த "ஏதோ ஒன்று நடைபெறும் போது" அவர்களின் அகந்தை கரைகிறது. அகந்தை கரைந்துவிடும்போது அவர்கள் மீதான கிரக,வாஸ்து பாதிப்புகளும் வெகுவாக குறைந்து விடுகின்றன.

கிரகமே வேலை செய்யாதா என்றால் செய்யும்? வாஸ்துவே வேலை செய்யாதா என்றால் செய்யும். எப்படி வேலை செய்யும் என்றால் ?
செக்ஸுக்கு பொறுப்பு வகிக்கும் சுக்கிரன் பாதகமாய் சஞ்சரிக்கும் நிலையில் வீடு,வாகன்ம் இத்யாதி வகையில் பாதிப்புகள் ஏற்படும் (காரணம் சுக்கிரனே வாகன காரகன், சுக்கிரனே கிருக காரகன்)
ஆனால் அவர்களிடையிலான புரிதலோ, ஒற்றுமையோ, காதலோ எள்ளளவும் மாறாது. இதற்கு காரணம் அவர்கள் அவ்விதமாக தொடர்ந்து சம ரதம் அடைவதால் ,ஒரே நேரத்தில் உச்சம் பெறுதலால் அவர்களில் ஒரு வித இணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. (உடல்,மன அளவில் மட்டுமல்லாது ஆன்ம அளவிலும்) நீங்கள் தனித்திருக்கும்போது தான் அகந்தை தலை விரித்தாடும். இணைப்பு ஏற்படும்போது அகந்தை கரைந்து விட்டுக்கொடுத்தல் அதிகரித்து விடுகிறது.


பக்கத்து தெருவில் எவனோ சிகரட் பிடித்தால் இங்கே குமட்டுது என்று சீன் போடும் பெண் கணவனுக்கு ஃபாரின் சிகரட் ப்ரசன்ட் செய்யும் ரேஞ்சுக்கு வர இதுதான் காரணம்.

ஈருயிர் ஓருயிராவதால் ஈகோ ஸ்மாஷ் ஆகிறது. அல் குரானில் சொல்லப்பட்டுள்ளதாய் நான் கேள்விப்பட்ட விஷயம் "உங்களில் இருவர் எதை கேட்டாலும் யாம் மறுப்பதில்லை" என்பதாகும்


எனவோ மனித வாழ்வை அதிகம் பாதிப்பது ஜோதிடமா ? செக்ஸா என்று ஆராயும்போது செக்ஸே என்று தாராளமாக கூறலாம் . ஆனால் அந்த செக்ஸ் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளேன்.

இதே பதிவில் இன்னொரு பஞ்சாயத்து/அதாங்க பட்டிமன்றம். ஒரு ஜோதிடனான நான் செக்ஸ் குறித்த பதிவுகள் போடலாமா? போடக்கூடாதா ?
நண்பர் ஷான் அவர்கள் என் மேல் பெரும் அக்கறை கொண்டு போட்ட நீண்ட மறுமொழிக்கான எனது மறுமொழியை இங்கு தருகிறேன். தாங்களும் ஒரு ஜோதிடனான நான் செக்ஸ் எழுதலாமா எழுதக்கூடாதா என்பது குறித்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்

ஷான் அவர்களே,

//நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.............பலான சமாச்சாரங்களை தேடிய காலம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டது.....இன்று போதும் போது என்னும்மளவுக்கு .........சொல்லபோனால் அனைவருக்கும் பலான சமாச்சாரங்களின் மேல் அலுப்பு வந்து வெகுகாலம் ஆகிறது............இன்றைய யுகத்தில் பலான சமாச்சாரங்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம்........மேலும் அந்தபணியை செவ்வனே செய்ய தரங்கெட்ட தளங்கள் பல உள்ளது.............//

நீங்கள் சொல்வது தங்கள் பகுதி நிலவரமாக இருக்கலாம். ஆனால் எங்கள் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளது. நெட்டிஜன் களை 3 வகையாக பிரிக்கலாம்
1.பலான சமாச்சாரங்களுக்காக வரும் இளைஞர்கள்/ நடுத்தரம்/வயோதிகர்கள்
2.கல்வி,வேலை வாய்ப்பு, ட்ரான்ஸ்ஃபர்,பி.எஃப் (பிராவிடண்ட் ஃபண்ட்ங்கோ வரும் அனைத்து வயதினர்
3.ஏதேனும் தகிடு தத்தம் செய்து பணம் சம்பாதிக்கமாட்டோமா? ( நெட்டில்)என்று வ‌ருவோர்

உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் ரன்னில் போய் ரீசன்ட் என்று அடித்து ஓகே செய்து பாருங்கள். உங்களுக்கு முன் இருந்தவன் என்னத்தை பார்த்தான் என்று தெரிந்து விடும் ( என்னதான் அவெய்லபிலிட்டி இருந்தாலுமதில் வெரைட்டி தேடுவோர் அத்யதிகம். உ.ம்: என் நண்பன் ஒருவன் சுய இன்பத்த காட்டும் க்ளிப்பிங்குகளை தவிர வேறு பார்க்க மாட்டான். நேற்று ரீசன்டில் பார்த்த போது எவனோ வெறும் மார்புகளை மட்டும் சேவ் செய்து வைத்துள்ளான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது போல் சாப்பிட ஆரம்பித்தால் தான்
இரைச்சல் குறையும். அதற்குதான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை சிபாரிசு செய்து வருகிறேன்.


//மேலும்...உங்களின் எழுத்துக்கள்...கருத்துக்கள், உங்களின் தனிமனித ஒழுக்கத்தை, தகுதியை, உங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி எனலாம்.......நீங்களே தவறான பிம்பத்தை ஏன் உருவாக்குகிறீர்கள் !!!!!!!!!!!( நீங்கள் தவறான பிம்பமாக இல்லாதபோது )//

சரி, தவறு எல்லாம் கால தேச வர்த்தமானங்களை பொருத்து மாறுபடும். ஒரு வீட்டுக்கூரையின் மேல் சாக்கடை தண்ணீரை ஊற்றுவது தவறு. இதுவே அவ்வீடு தீப்பற்றி எரியும்போது ?
என் பிம்பத்தின் மீது எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது. நான் அவற்றையெல்லாம் கடந்தவன்.

என் நோக்கம் சிற்றின்பத்துக்கே கதியில்லாது அங்காடி நாயாய் அலையும் அன்பர்களை அதில என்னா இருக்கு ஜுஜுபி.. அதை பார் .. இப்போ இதைபார் (ஆன்மீகத்தை) என்று அவர்களை ஆன்மீக வழிக்கு திருப்புவதே . அதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம் செக்ஸை வழங்க வல்ல மரியாதைக்குரிய தொழில், உத்யோகம், வேலை.இதற்காகத்தான் ஆப்பரேஷன் இந்தியா 20000
//உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும்போது நீங்கள் பொதுநலவாதி என்பதையும், சோர்வடையாமல் போராடும் குணம் உள்ளவர் என்பதையும், எதையும் அரைகுறையாக கற்காமல் ஆழ்ந்து கற்றவர் என்பதையும், இத்தனைக்கும் மேல் மிகவும் எதார்த்தவாதி என்பதையும் அறியமுடிகிறது....//

தங்கள் அனலட்டிகல் அறிவுக்கு நான் சரெண்டர்..

//ஆனால் உங்களை எங்களுக்கு அறிமுகபடித்திய எழுத்துக்களே உங்களின் மீது ஒரு தவறான மதிப்பீடு கொள்வதற்க்கும் காரணமாகிறது எனலாம்.....//

நானும் படாத பாடு பட்டு தான் அதை (செக்ஸ்) கடந்து வந்தேன்.அப்போ எனக்கு ஒரு ஃப்ரெண்ட், கைட் இல்லே. அந்த நிலை அடுத்த தலைமுறைக்கு வரக்கூடாது. அவிக நேரம், சக்தி , அறிவுத்திறன் வீணாகக்கூடாது என்பதே என் நோக்கம்.என்னை சேர்ந்தவர்கள் உயர் நிலை எய்த என் நற்பெயர் மீதான கவலையே தடை என்றால் அதை தூளாக்கி என் கொள்கையை முன்னெடுத்து செல்வேன்

ஹீரோ ஈஸ் ஒன் வூ லே டவுன் ஹிஸ் லைஃப் ஃபார் ஹிஸ் பீப்பிள்

ஆள் கொலையானா என்ன கேரக்டர் கொலையானா என்ன ரெண்டும் ஒன்னுதான். நோ ப்ராப்ளம்.

//மேலும் நீங்கள் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்கிறீர்கள். துன்பப்படும் மக்கள், மனச்சோர்வடைந்த மக்கள், எதிர்காலத்தின் மேல் பயம் உள்ள மக்கள், அடுத்தடுத்த தோல்விகளால் தன்னம்பிக்கை இழந்த மக்கள் போன்றோர் தான் ஜோதிடர்களிடம் வருவார்கள்.................எதற்காக என்றால் ஆண்டவன் எழுதிய தலைஎழுத்தை ஜோதிடன் தான் படிக்க இயலும்....ஜோதிடன் மூலம் கடவுளின் நல்ல செய்தி வாராதா என்ற ஏக்கமும்.....ஜோதிடனின் வாக்கு உண்மையோ பொய்யோ...அதை மனதார ஏற்றுக்கொண்டு மனமகிழ்வுடன் வீடு திரும்புவார்கள்...........உங்கள் வாக்கு அவர்களுக்கு தன்னம்பிக்கையை , மனவலிமையை, ஒரு புத்துணர்வை, புதுவாழ்வை கொடுக்கும்..........அத்தகைய பெருமை வாய்ந்த கலையை சிறப்பாக கற்ற நீங்கள் சில சிற்றின்ப சில்லரைகளுக்காக ஏன் உங்கள் மீதே சேறு பூசி கொள்கிறீர்கள்.........//


நீங்கள் பாவம் ரொம்ப மேலோட்டமாக சிந்திக்கிறீர்கள். எனக்கு இது போன்ற யாரும் சொல்லத்துணியாத விஷயங்களை கூட சொல்லும் தைரியத்தை தந்தது என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வரும் தாய்குலம் தான் என்றால் நம்ப மாட்டீர்கள். என் வயது 42 தான் ஆனால் 60 வயது பெண்ணும் என்னை தன் தந்தையாகவே உணர்கிறாள்.

ஜாதகச்சக்கரத்தில் 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 என்ற பனிரண்டு பாவங்களும் செக்ஸுடன் தொடர்பு கொண்டவையே (எப்படி என்பதை வரும் பதிவுகளில் தெளிவு படுத்துகிறேன். அது வரை பாப்பாரவுக மண்டைய பிச்சிக்கிடட்டும். சூரியன் முதல் சுக்கிரன் வரையான 9 கிரகங்களும் செக்ஸுக்கு தான் தூண்டுகிறார்கள். இதை என்னால் நிரூபிக்க முடியும்.

உண்மை நிலை இப்படியிருக்க "இவற்றை" தவிர்த்து என்னாத்த ,மக்கள்
எதிர்காலத்தை கணிப்பது ?

//உங்களை நீங்கள் சரியான முறையில் மார்கெட்டிங் செய்தால்...உங்கள் வெற்றி நிச்சயம்....அதுதான் உங்கள் பிரச்சனையே............( உ ம ) அமெரிக்காவை விட ரஸ்யா technology யும் சரி.. திறமையிலும் சரி...இயற்க்கை வளங்களிலும் சரி மிகவும் சிறந்த நாடு...ஆனால் அவர்களின் poor marketing திறமையால் வறுமையில் வாடுகிறார்கள்.... நீங்கள் ரஸ்யாவை போல.....//


தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். ( ஒரு ரகசியம் சொல்லவா ? மார்க்கெட்டிங், விளம்பரம் இத்யாதியெல்லாம் ஓவராகிப்போனதாலேயே இது டுபாக்கூர் பார்ட்டியோ என்ற சந்தேகம் கூட சிலருக்கு வந்து விட்டது தலைவா?


பிற சோதிடர்களுக்கு பணம் வரும் நேரம் வந்து விட்டால் ஜாதகர் வந்துவிடுவார்.

நம்ம கேஸ்ல ஜாதகருக்கு சனி விடும் நேரம் வந்தால் தான் நம்மிடம் வரமுடியும்.

பிற ஜோதிடர்களிடம் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் அதிகம். நம்ம கிட்டே ஒரு தரம் வந்தா அதையடுத்து நாம சொன்ன நல்லதோ , கெட்டதோ நடந்தாதான் வரனும் .

//எனவே கொஞ்சம் உங்களை மாற்றிக்கொண்டு, உங்களை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால்....உங்கள் இடத்தை மற்றவர் அடைவது சிரமும்......//

வேணாம் தலை மார்க்கெடிங் பண்ணா பணம் வரும். அந்தபணத்தோடவே கருமமும் வரும். எவனுக்கு கருமம் தொலையற நேரம் வந்திருச்சோ அவன் தானா வருவான். எவனுக்கு நான் கடன் பட்டிருக்கேனோ அவன் கட்டாயம் வருவான்.

போறவன் வரவனை எல்லாம் கூட்டி சொல்ல ஆரம்பிச்சா நாறிடும்.

//இதை நான் உபதேசமாக சொல்லவில்லை.....கடந்த மூன்று மாதகாலமாக ஏறக்குறைய 60 சதவீத பழைய பதிவுகளை எல்லாம் படித்து, பிரம்மித்து.. உங்களின் சமீப கால பதிவுகளினால் வருந்தி இதை எழுதுகிறேன்.........//

பொறுமைசாலி சார் நீங்க. அந்த பதிவுகளை படித்தவர்கள் எத்தனை பேர் இப்போ புதிய பதிவுகளை படிக்கிறவங்க எத்தனை பேர் ? கூட்டி கழிச்சு பாருங்க..

இயற்கை கூட மனிதனை " கண்ணா உடலுறவுல உனக்கு எந்த சுகமும் கிடையாது . ஆனா நீ இனப்பெருக்கம் செய்துதான் ஆகனும்னு வச்சிருந்தா .. நாடெல்லாம் காடாகியிருக்கும்.மனித இனமே மறைந்து போயிருக்கும்.

நல்ல நோக்கத்தை நல்ல வழில அடையறது ராமன் வழி
நல்ல நோக்கத்தை கெட்ட வழியிலயாவது அடையறது கிருஷ்ணன் வழி

//வலைப்பூ, இன்டர்நெட் போன்றவை மிக சக்தி வாய்ந்த மீடியா...இதை சரியான முறையில் உங்களை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல பயன்படுத்துங்கள்,பயன்பெறுங்கள்....//

கட்டாயம் முயற்சிக்கிறேன். நான் ஏதோ பணம் பண்ண வேண்டும் என்றல்ல. ஊரை ஏமாற்றும் டுபாக்கூர் பார்ட்டிகளிடம் மக்கள் மாட்டிசீரழியாதிருக்கவாவது இதை செய்கிறேன்.

//கொஞ்சம் ஓவராக பேசியிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் , ஏனென்றால் நானும் உங்களை போலதான்...மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லி விடுவேன் ...........//

என்ன அண்ணாச்சி ..இவ்ள அக்கறையெடுத்து மறுமொழி போட்டிருக்கிங்க உங்களை போய் தவறா எடுத்துக்குவனா ?

இனிப்பான பொய்யை விட கசப்பான நிஜத்தை நிர்பயமா ஃபேஸ் பண்றவன் நான்.

கிழிச்சு தொங்க போடுங்க தலை ! பிரச்சினையே இல்லை

விஷ் யு ஆல் தி பெஸ்ட்

Monday, December 14, 2009

கேட்க விரசமாக இருந்தாலும்

காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்ன‌ம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்

1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க‌

2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்

3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.

ஒரு ஜோக்:

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"

"வாங்க போய் பார்க்க‌லாம்"

முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"

அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"

டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"

இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமண‌த்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.

இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.



இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)



ஜோதிட டிப்ஸ்:





ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.



உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.



அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

Saturday, December 12, 2009

ஜோதிடமும் செக்ஸும்

ஜோதிடம் நம் எதிர்காலத்தை கூறுகிறது. எதிர்காலம் என்றால் அதில் நமது செக்ஸ் லைஃபும் அடக்கம் தானே. திறமையான ஜோதிடரால் ஜாதகரின் செக்ஸ் லைஃபையும் அனலைஸ் செய்ய முடியும். லக்னம் முதலான‌ ஏழாம் பாவம், ( மனைவி, காதலியரை காட்டுமிடம்), 12 ஆம் பாவம் நித்திரை , தாம்பத்ய வாழ்வை காட்டுமிடம். சுக்கிரன் நின்ற ராசி,அவருடன் சேர்ந்த கிரகங்கள் (இவர் தான் ஆண்களில் இன உறுப்புகள், வீரிய உற்பத்தி, செக்ஸ் உணர்வு, செயல்பாடுகளுக்கு பொறுப்பானவர்) , சுக்கிரன் நின்ற ராசியாதிபதி நின்ற ராசி வாங்கிய சாரம், இவர்கள் பாவச்சக்கரத்தில் நின்ற இடம் போன்ற அம்சங்களை ஆய்ந்து பலன் சொல்லலாம். ஜாதகர் சுய இன்பம் காண்பவரா, கள்ள உறவு பார்ட்டியா, பொருந்தா காமம் கொண்டவரா, மிருகங்களை புணர்பவரா, ஓரல் செக்ஸா, ஓரின சேர்க்கையாளரா, கற்பழிப்புக்கு துணிபவரா போன்ற எல்லா விஷயங்களையும் ஒரு ஜோதிட‌ரால் கணித்து கூற முடியும்.

ஜோதிடத்துக்கும் செக்ஸுக்கும் உள்ள தொடர்பு, அவரவர் ஜாதகம் கொண்டு அவரவ‌ர் செக்ஸ் லைஃபை அறிவது எப்படி போன்ற விஷயங்களை அறியும் முன் ஜோதிடத்தில் ஏபிசிடி போன்ற சில அடிப்படை விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்களின் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று பெண் ராசிகளிலேயே நிற்பது, பெண்களின் ஜாதகங்களில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று ஆண் ராசிகளிலேயே நிற்பது, நபும்சக கிரகங்கள் பலம் பெற்று நபும்சக ராசிகளில் நிற்பது போன்ற அம்சங்களால் தான் திரு நங்கைகள் தோன்றுகின்றனர்.
பெண் மேல் முறை இத்யாதி புதுமைகளும் தோன்றுகின்றன.

இப்போது சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்:

செக்ஸ் லைஃபுக்கு காரகம் வகிக்கும் சுக்கிரன் 3,7,10 ராசிகளில் நின்று 30 வயதுக்கு முன்பே சுக்கிர தசை வந்துவிட்டால் அந்த ஜாதகர் இருபுறமும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி போல் அவரது செக்ஸ் பவர் காலியாகிவிடுகிறது.

அதே போல் செவ்வாய் என்பவர் ரத்தத்துக்கு காரகர், சிறப்பாக ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வெள்ளை அணுக்களுக்கு காரகர் . செவ்வாய் பலம் இல்லாவிட்டால் ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் ஊரில் எந்த நோய் பரவினாலும் இவருக்கு தொற்றும். உடல் நலம், உடலுறவு நாட்டம் இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் நாஸ்தி ஆகிவிடுகிறது.

நிற்க ஜோதிடம் என்பது கடல். உப்பளத்தில் கடல் நீரை தேக்கி உப்பு தயாரிப்பார்களே அதுபோல் ஒவ்வொரு ஜோதிடரும் அந்த கடல் நீரை கொஞ்சம் போல் தேக்கி அது தான் ஜோதிடம் என்று நம்புவதும், நம்ப வைப்பதுமாய் இருக்கிறார்கள். முழு நேர ஜோதிடர்களின் நிலையே இது. மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் என்ற நினைப்பில் கண்ட துறையிலும் நுழைந்து வெளிவரும் என் நிலையை தனியே விவரிக்க வேண்டிய அவசியமில்லை.



மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்யாசம் அவர்களில் பலருக்கு ஜோதிடத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை. "அட நேரம் என்னப்பா நேரம் பணம் இருந்தா எல்லா நேரமும் நல்ல நேரம்தான்" எனும் ஜோதிடர்கள் கூட உண்டு. ஆனால் என்னை பொருத்தவரை ஜோதிடத்தை நூற்றுக்கு நூறு நம்புகிறேன். தினம் தினம் அதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

எந்த கிரக நிலையில் பெண் ஓடிப்போகிறாள், நடுத்தெருவில் நிற்பாள், வயிற்றில் வாங்கி வருவாள்

எந்த கிரக நிலையில் பையன் ஒரு மசாலா தோசைக்காக உடுப்பி ஹோட்டலை வாங்குவான் ( நன்றி சுஜாதா)

எந்த கிரக நிலையில் வீரியம் நீர்க்கும், ஸ்வப்ன ஸ்கலிதமாகும், துரிதஸ்கலிதமாகும் , எந்த கிரக நிலையில் பெண் காஞ்சானாகி அலையும் இத்யாதியெல்லாம் ஜஸ்ட் லைக் தட் உதிர்ப்பது நம் ஸ்டைல்.

மேலும் அவர்கள் தாம் கற்றதே ஜோதிடம் , கிரந்தங்களில் உள்ளதே ஜோதிடம் என்று தேங்கிவிட்டனர். நானோ மாற்றத்துக்கு உட்படாத கலையே இல்லை என்பதால் மாறிவரும் வாழ்வின் போக்கு, சமூக நிலைகளை கருத்தில் கொண்டு ஜாதகங்களை அணுகிவருகிறேன். அவர்கள் அஞ்சி அஞ்சி , தவணையில் கூட சொல்லாததை நான் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையுடன் போட்டு உடைப்பவன். இந்த மெய்கீர்த்திகள் ஒரு புறம் என்றால் ஜோதிடம் என்பது மனித வாழ்வுடன் தொடர்புள்ளது. மனித வாழ்வு தொடர்புறாத விசயமே கிடையாது என்பது தெரிந்ததே. எனக்கு செக்ஸாலஜி, சைக்காலஜி, ஹ்யூமன் பிஹேவியர் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் ஆர்வமிருப்பதால் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து பலன் சொல்வது என் பலம்.கூடுமானவரை சித்தாந்த ஜோதிடத்தின் சாரத்தை அலட்சியப்படுத்தாது அதன் விதிகளை விட்டுக்கொடுக்காது விஞ்ஞான கண்ணோட்டத்துடன் இந்த பதிவை போடுகிறேன்.

ஒரு கிரகம் இன்னபலன் தான் தரும் என்ற உத்திரவாதமில்லை. அது எந்தெந்த விதத்தில் உங்களை பாதிக்க கூடும் என்பதை முடிந்தவரை ஒரு ஆப்ஷனையும் விடாமல் கணித்துவிட்டால் ஜோதிடம் பொய்க்க வாய்ப்பே இல்லை.

ஃப்ளாஷ் ! ப்ளாஷ் !

எந்த பெண் எங்கே வயதுக்கு வருவாள் என்பது கூட ஜோதிடத்தில் தெரியும் .
(விவரம் அடுத்த பதிவில்)

அலட்சியம் காரணமாகவோ , மித மிஞ்சிய தன்னம்பிக்கை காரணமாகவோ ஏதோ ஒரு ஆப்ஷனை ஜோதிடர் விட்டிருக்கலாம். அதுவே எதிர்காலத்தில் நடந்தும் விடலாம். உடனே நீங்கள் ஜோதிடமே டுபாகூர் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை

ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிடர்களின் சிறுமை

என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஜாதகம் என்றால்:

ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்க‌ள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை/ஒவ்வொரு அங்கத்தை காட்டும்.ஜாதக சக்கரத்தில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? ல என்று குறிப்பிடப்பட்டுள்ள பெட்டி தான் லக்னம். மொத்தம் 12 கட்டங்கள் உள்ளன. இவற்றை பாவங்கள் என்கிறோம். மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. ( சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு , சனி, புதன் ,கேது ,சுக்கிரன் ) ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பாவத்துக்கு ஆதிபத்யம் பெற்றுள்ளன.

சூரியன் ‍சிம்மத்துக்கு, சந்திரன் கடகத்துக்கு, செவ்வாய் மேஷ விருச்சிகங்களுக்கு, குரு தனுசு மீனங்களுக்கு, சனி மகர கும்ப ராசிகளுக்கு, புதன் மிதுன ,கன்னி ராசிகளுக்கு, சுக்கிரன் ரிஷப, துலா ராசிகளுக்கு ஆதிபத்யம் வகிக்கின்றனர்.
ஒவ்வொரு லக்னத்துக்கும் மேற்படி கிரகங்களுக்கும் உள்ள உறவை பொருத்து, தாம் நின்ற பாவத்தை பொருத்து, தம்முடன் சேர்ந்த கிரகங்களை பொருத்து கிரகங்கள் பலன் தருகின்றன.

க‌ட‌வுளின் ம‌ந்திரி ச‌பை:
ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌ எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌ பிரித்து அவ‌ற்றின் மீதான‌ அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில் ந‌ல்ல‌ நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான்.

12 சேன‌ல்க‌ள்:

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.

முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்

2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்

5.ஆவது சேனல்:

பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு

6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:

நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.

10ஆவ‌து சேன‌ல்:

வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்

11.ஆவ‌து சேன‌ல்:

மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.

12ஆவ‌து சேன‌ல்:

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

































இது கூடுமானவரை பழைய சம்பிரதாயஙளை விட்டு விடாது,அதே சமயம் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் ஜாதகப் பலன் களை தர உதவும் மாதிரி படிவமாகும். இதனை எல்லா ஜோதிடர்களும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

முன்னுரை:

பொதுவாக ஜாதகபலன் கள் எழுதும் ஜோதிடர்கள் நட்சத்திரபலன் ராசி பலன்,லக்ன பலன் என்று பொது பலன் எழுதுவர். இவையெல்லாம் இந்த கணிணி யுகத்தில் சின்ன தேடலிலே கிடைத்து விட கூடியனவாகும்.மேலும் எல்லா பஞ்சாங்கங்க‌ளிலும் கிடைக்கக் கூடியவையே. மேலும் இவை பொதுப் பலன் களாகும். ஒவ்வொரு ஜாதகருக்கும் நடந்தே ஆக வேண்டிய அவசியமில்லை.

எனவே தேவையான இடத்தில் தேவையான அளவு ஆங்காங்கே கொடுக்கப் படும்.

ஜாதகம் என்றால்:

ஜாதகம் என்பது 12 சேனல்கள் கொண்ட ஒரு டிவி யை போன்றதாகும். ஒவ்வொரு சேனலும் உங்க‌ள் வாழ்வின் ஒவ்வொரு கோணத்தை காட்டும். இதில் 12 பெட்டிகள் உள்ளனவல்லவா? முதல் பெட்டி தான் லக்னம். மொத்தம் 12 லக்னங்க‌ள் உள்ளன. 9 கிரகஙள் உள்ளன. ஒவ்வொரு லக்னத்துக்கும் நல்லதை செய்யும் கிரகங்க‌ளும் உள்ளன ,கெட்டது செய்யும் கிரகங்க‌ளும் உள்ளன.

க‌ட‌வுளின் ம‌ந்திரி ச‌பை:

ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌ எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌ பிரித்து அவ‌ற்றின் மீதான‌ அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில் ந‌ல்ல‌ நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான்.



ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:





ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.



12 சேன‌ல்க‌ள்:

ஜாத‌க‌த்தில் 12 சேன‌ல்க‌ள் உள்ள‌தாக‌ சொன்னேன். அவ‌ற்றில் தெரிய‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளை இப்போது பார்ப்போம்.

முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்

2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்

5.ஆவது சேனல்:

பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு

6.ஆவது சேனல்:

வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:

நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:

வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:

த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.

10ஆவ‌து சேன‌ல்:

வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:

மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.