Showing posts with label Tamil cinema. Show all posts
Showing posts with label Tamil cinema. Show all posts

Sunday, January 30, 2011

கமல்ஹாசனும், மணிரத்தினமும் பிராமணரா?

 பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -2 (இறுதிப்பகுதி)


ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

பிராமண சமுதாய போராட்டங்கள் அரசியலை மையம் கொண்டு இயங்குவதில்லை. இதை பிராமண சமுதாயத்தின் நீண்ட வரலாறு அறியத்தரும். படித்தவரும், பாமரரும் நன்கு அறிவார். ஒரு தவறான நெறியை தந்த பொறுப்பு பிராமணரல்லாத திரை உலகை சார்ந்தவர்களையே சாரும். ஒரு பிராமண சமூகத்தைச்சார்ந்தவர் திரை உலகில் காலடி எடுத்துவைத்தல் நடக்காத காரியம். அதோடு நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, கவிஞராகவோ முடியவே முடியாது. முன்னொரு காலத்தில் திரை உலகம், அதில் பிராமணர்கள் இருந்த நிலையில் நல்ல முன்னேற்றமும், நிலையான வளர்ச்சியும் பெற்றது. ஆனால் இப்பொழுது,   பிராமணரல்லாதோரால் சினிமா உலகம் நீர்த்துப்போய்விட்டது.


(ஆனால் பிராமணரான கமல்ஹாசனும், மணிரத்தினமும் நல்ல நிலையில் இருக்கிறார்களே என்று குறிப்பிட்ட பொழுது )
கமல்ஹாசன் ஒரு மாட்டுக்கறி விருப்பன், திராவிட கழகத்தின் கொள்கைகளை வசீகரித்துக்கொண்டவர். மணிரத்தினம் புத்தி கூர்மையான, நல்ல அம்சத்தை தரக்கூடிய இயக்குனர். ஆனால இன்னமும் சிறு பத்திரிக்கைகள் ஒரு வட்டத்திற்குள் இயங்குவதைப்போலவே அவர் திரைப்படங்களும் இருக்கின்றன. இது பிராமணரல்லாதோருக்கு இருக்கும் ஒரு தேக்க நிலை.




தமிழக பிராமண சமுதாயம் அழிவின் நிலையில் இருப்பதாக தோன்றுகிறது. எனக்குத்தெரிந்து இந்த சமுதாயத்தை வழி நடத்திச்செல்ல நல்ல தலைவர்கள் இல்லை. ஜெயேந்திர சரஸ்வதி இந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டார். அவர் மதத்தையும், அரசியலையும் சரிவர புரிந்துகொள்ளாதவர். திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஒரு அருமையான, பொருத்தமான தலைவர், ஆனால் அவர் நம்மிடையே இல்லை. நமக்குத்தேவையான தலைவரை உருவாக்குவதாக தற்கால கல்வி அமைப்புக்கள் இல்லை. பிராமண சமுதாயம் ஒரு மறுமலர்ச்சியை பெருவதில் வாய்ப்பற்று இருக்கிறது. வழக்கமான பிராமண சமுதாயத்தில் ஒரு சிலரே வேதங்களை கற்று தேர்கின்றனர்.



மடங்கள் வேத பாட வகுப்புக்களை இலவசமாகவே தருகிறது. ஆனால் பயன்பெறுபவர்கள் வெகு சிலரே. புரோகிதம் செய்வதும், வேதங்களின் வழியும் வாழ்க்கைக்கு உதவுவதாக இப்பொழுது இல்லை. நிலத்திற்கும், பண்ணைக்கும் சொந்தக்காரர்களாக பிராமணர்கள் இல்லை. என் மாமன் ஒருவர் நிறைய நிலங்கள் வைத்திருந்தார். ஒவ்வொரு மகளின் திருமணத்தின் போதும் தன் நிலத்தை ஒவ்வொன்றாக விற்றுவந்தார். இப்பொழுது ஒரு மண்ணுமில்லை. எளிய விழாக்கள் சமூக நிலையில் இல்லை, ஆனாலும் திருமணம் எளிமையாக நடக்குமானால் செலவுகளை குறைக்கலாம். இக்காலத்தில் கூட உபநயனம் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவது சந்தோசமளிக்கிறது. சந்தியாவந்தனம் தினமும் மூன்று முறை பூணூல் அணிந்த பிராமணனால் நடத்தப்படவேண்டும். இப்போழுது எந்த பிராமணன் இதைச் செய்கிறான்? ஒரு பிராமணன் தன் வாழ்நாளில், ஒருநாள், ஒருதடவையாவது சந்தியாவந்தனம் செய்தானானால் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆனாலும் ஐம்பது ஆண்டுகளாக உபநயனம் நிகழ்ச்சி நடத்தப்படுவதே நல்லகாரியம்.


மனிதனின் கடமைகளை சரிவர செய்வது முறைப்படுத்துதல் கடினம்தான். இதற்கு உழைப்பையும், பணத்தையும் செலவழிக்க வேண்டிதாக இருக்கும். மனித உயிருக்கு 13ம் நாளில் காரியம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கும்.  என் சகோதரி இறந்த நேரத்தில் தகன கிரியையை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் சடங்குகளைச் செய்ய புரோகிதர் கிடைக்கவில்ல. நாங்களும் இந்த இறுதி சடங்குகளை எப்படி செய்வதென அறியாதிருந்தோம். நான் என் மகனிடம் இபோழுதே “எனக்கு இதெல்லாம் நீ செய்யவேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டேன்.

என் தகப்பனார் இறந்த அந்த நாளை நான் நினைவு கொள்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு விசயம் குறித்து வியக்கிறேன்... “ இறந்து போன மனிதர்களின் ஆன்மாக்களை இந்த முட்டாள் உலகிற்கு அழைப்பதின் அர்த்தமென்ன?”

Saturday, December 18, 2010

ரஜினி சூப்பர் ஸ்டாரா? விஜய் சூப்பர் ஸ்டாரா?

யார் சூப்பர் ஸ்டார்?



ஒவ்வொருவருக்கும் ஒரு காலம், ஒரு வரலாறு, அன்றைய நாட்களில் அன்றைய நிலவரப்படி... திரைப்படங்கள் மூலமாக... ரசிகன் தரும் போற்றுதல்... அந்த போற்றுதல் ஒரு வட்ட நிகழ்வு... ஒரு முழு சுற்று நிகழும் போது, கடந்த சுற்றில் இருந்தவர் மரிப்பார் அல்லது மறக்கப்படுவார். சில நேரங்களில் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் நிலை.

ரசிகனுக்காகவே நடிப்பதாக ஜல்லியடிப்பவர்கள் முதல் நாள் ரசிகனுக்காக இலவச காட்சியல்லவா அளிக்கவேண்டும். ஆனால் நடப்பதென்னவோ கொள்ளை. ரசிகனுக்கும் இத்தனை பணத்தில் ஒரு நடிகனின் டிக்கெட் வாங்கி பார்த்தேன் என்ற பெருமை வேறு... ஒரு திரைப்படம் ஒரு ரசிகனின் 180 நிமிடங்களை கொலை செய்வதாகவே நான் உண்ர்கிறேன்.

ரசிகன் இப்படி உணர்ச்சிவசப்படுதலுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்...

ஐயோடா... விளங்கிரும்...

திரைப்படம் என்பது ஒரு நிகழ்வு...  ரத்தமும், சதையுமாக உயிருள்ள பெண்ணையே “மாய பிசாசு” என்ற அழைத்த மனிதன்,  உண்மையான மாய பிசாசு திரைப்படங்களை போற்றுதலும், அதற்காக சண்டையிடுவதும், காலத்தை தொலைப்பதும், தன் எதிர்காலத்தை அழிப்பதும் கண்டிக்கதக்கது.


திரைப்படம்... ஒரு இலை துளிர் விட்டு, பசுமையாகி, காய்ந்து, உதிர்ந்து மண்ணில் சருகாகி, மக்கி போவதை போல அல்லாமல் என்றுமே 16 ஆக உலவும் மாயப்பதிவு....

திரைப்படத்தை திரைப்படமாகவே பாரக்கும் பக்குவம் உலகில் எவருக்குமே வரவில்லை, இனிமேலாவது வருமா அதும் தெரியவில்லை...

ஒரு ரசிகனாவது, தொலைத்த தன்னை கண்டெடுத்து மீட்டுக்கொள்வானா தெரியவில்லை.



ஒரு ரசிகனின் தோளில் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு நடிகரையும் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுவது சுத்த பைத்தியகாரத்தனம். ஒரு ரஜினிகாந்தல்ல, ரசிகன்தான் எப்பொழுதுமே  சூப்பர் ஸ்டார்.

சூப்பர் ஸ்டார் ரசிகனைத்தவிர எவனுமில்லை.

ஆக...

ஆரம்பமும் முடிவுமில்லா ஒரு பதிவாக இருக்கிறது... கேள்விகள் தொடரலாம்...

Saturday, February 20, 2010

தாயை பெண்டாள எண்ணும்

தாயை பெண்டாள எண்ணும் மன நிலையை "ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்" என்பார்கள். மகனை முயலும் தாயின் மன நிலையை என்ன சொல்வார்கள் ? தெரியவில்லை. இந்த முடிச்சோடு நான் எழுதிய கதை இது ..

ஒரு பணக்கார வாலிபன் ஏழைப்பெண்ணை காதலிக்கிறான்.அவள் ஒரு மாடல். சந்தர்ப்பம் காரணமாக சவுண்ட் பார்ட்டியான மாமன் மகளையே மணந்து கொள்கிறான். அவன் காதலியான ஏழைப்பெண் அப்போது கர்பிணியும் கூட. இந்த துரோகத்தால் மனம் துவண்டு அவள் தற்கொலைக்கே முயற்சி செய்கிறாள். பின் மனம் தேறி குழந்தை பேறுக்கு தயாராகிறாள். அதே நேரம் காதலன் மணந்து கொண்ட மாமன் மகளும் கர்பம் . பிரசவத்துக்கு அட்மிட் ஆகிறாள்.

மாமன் மகளுக்கு குழந்தை செத்து பிறக்கிறது. காதலிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. வழக்கமாய் தமிழ் சினிமாவில் நடக்கும் குழந்தை மாற்றம் நடக்கிறது.

காதலி வாழ்வில் முன்னேறுகிறாள். தனக்கு துரோகம் செய்த காதலனுக்கு போட்டியாக வளர்ந்து அவனை துடிதுடிக்க செய்கிறாள்.

இவன் மனைவியோ அவனை விலைக்கு வாங்கிய பொம்மையாக பார்க்கிறாள் இவனை பல வகையிலும் கொடுமைப்படுத்துகிறாள். ஒரு புறம் மாஜி காதலியின் பகை , இவனை செல்லா காசாக்க அவள் செய்யும் சதிகள், மறு புறம் கட்டிய மனைவியின் கொடுமைகள் என்று தவிக்கிறான். மகனையாவது தன் விருப்பப்படி வளர்க்க முயல்கிறான்.மனைவி அவனை வெளி நாட்டுக்கு அனுப்பிவிடுகிறாள். இவன் வாழ்க்கை நரகமாகிறது.

ஒரு வழியாக மனைவி ஒரு விபத்தில் செத்துப்போகிறாள். மாஜி காதலியின் போட்டியை,சதிகளை இவனால் தனியே சமாளிக்க முடியாமல் வெளி நாட்டில் வளர்ந்து வரும் தன் மகனை இந்தியா வரவழைக்கிறான்.

படத்தின் முதல் ஷாட்டில் ரம்யா கிருஷ்ணா தனமான அ அண்ணி சங்கீதா தனமான ஹீரோயின் இளைய தலைமுறை ஹீரோவை ஏதோ ட்ரிக் செய்து ஏர் ஹெலிபேடில் காத்திருக்கும் அவன் தந்தைக்கு முன்னதாக சந்திக்கிறாள். (உதாரணம் : ஏர் போர்ட்டிலிருந்து ஹெலிகாப்டரில் வரும் அவனை ஆகாய வெளியிலேயே கடத்தில் தன் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு செல்வது.)

அவனை மயக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறாள்.அவன் தன் சொந்த மகன் என்ற உண்மை தெரியாது தன் காதலனின் ஜாடை இருப்பதால் இவள் கவரப்படுகிறாள். இதை கண்டு காதலன் பதை பதைக்க இவள் மேலும் மேலும் முன்னேறுகிறாள்.

பெற்றவர்களுக்கு தூரமாய் வளர்ந்ததாலும், இவள் பெற்ற தாய் என்பதாலும் இயல்பாகவே இவர்களிடையில் கவர்ச்சி தோய்ந்த நட்பு ஏற்படுகிறது. இதை பிரிக்க பணக்கார காதலன் முனைய , இவள் அவன் முயற்சிகளை முறியடித்து நெருங்க சந்தர்ப்பங்கள் வேறு வகையான திருப்பங்களை தருகிறது. உதாரணமாக இவள் அவன் உதட்டில் முத்தமிட முயல அந்த முத்தம் நெற்றியில் முடிகிறது. இவள் அவனுக்கு ப்ரசன்ட் செய்ய ராதா கிருஷ்ணன் பொம்மை வாங்கி பேக் செய்யச்சொல்ல அவன் கிஃப்ட் பேக்கை பிரிக்க யசோதா கிருஷ்ணன் பொம்மை வரும்.

இந்த டென்ஷனில் காதலனுக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்துவிடுகிறது. இன்டெசிவ் கேர் யூனிட்டில் போட்டு உடைக்க உண்மை தெரிக்கிறது. அப்போது ராதா கிருஷ்ணர் பொம்மை ,யசோதா கிருஷ்ணராக மாறுவது, உதட்டில் முயன்ற முத்தம் நெற்றியில் முடிவது இத்யாதி காட்சிகள் கட் ஷாட்ஸில் மீண்டு மீண்டும் வரவேண்டும்.

இடையில் காதலன் - காதலியிடையில் பகை வளர்த்து மாடலாக இவள் உழைப்பை சுரண்டி இவள் வென்று முடித்த பின் அவளிடமே மேனேஜராக இருக்கு வில்லன் ஏதோ சிமிஷம் செய்ய காதலன்,காதலி, மகன் எல்லோரும் சேர்ந்து அதை முறியடிக்கிறார்கள். சுபம்.