Friday, October 31, 2008

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்


கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் இதற்கு முன்னான எனது பதிவை காணவும்

Thursday, October 30, 2008

சுய இன்பம் ந‌ல்ல‌தா கெட்ட‌தா?

சுய இன்பம்,கைப்பழக்கம்,முஷ்டி மைதுனம் இதென்ன லாட்ஜு வைத்தியர் மாதிரி என்று குழம்பாதீர்கள். எத்தனையோ குப்பைகளை கிளறியாயிற்று. இந்த,வரும் தலைமுறைகளுக்கு உடனடியாக பலன் தரக்கூடிய இந்த விஷயத்தை விட்டுவைத்தால் எப்படி என்ற ஞானோதயம் ஏற்பட்டது. இத்தனை வார்த்தைகளால் குறிப்பிட்டும் புரியாத ருஷ்ய ஸ்ருங்கர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் 09397036815 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

சுய இன்பம் அனுபவிக்காத ஆண் இருக்கவே முடியாது. நானும் அதை அனுபவித்தவன் தான். இந்த விஷயத்தில் லாட்ஜு வைத்தியர்களும், மருத்துவர்களும் (டாக்டர்கள்) ரொம்பவே குழப்புகிறார்கள்.

இத்த‌னைக்கும் சுய இன்பம் ந‌ல்ல‌தா கெட்ட‌தா? ந‌திக‌ளுக்கு குறுக்கே க‌ட்ட‌ப்ப‌டும் அணைக‌ள் நிர‌ம்பி வ‌ழியும்போது அதிகாரிகளே த‌ண்ணீரை திற‌ந்து விடுவ‌தை செய்திக‌ளில் ப‌டித்திருக்கிறோம்.

அணை கட்டியது நீரை தேக்க, பின் ஏன் திறந்து விடுகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் வயது வந்த இளைஞன் சுய இன்பம் மூலம் அதிகப்படியாக உள்ள விந்துவை வெளியேற்றும்போது மட்டும் ஏன் அதை தடுக்கிறோம்.

வெள்ள‌ம்,ம‌ழை,கால‌ங்க‌ளில் அணையை திற‌ந்து விட்டால் ச‌ரி. அணைக்க‌த‌வுக‌ளை திற‌ந்தே வைத்தால் என்ன‌ ஆகும். அதை போன்ற‌து தான் சுய‌ இன்ப‌மும்.

கஞ்சன் மனைவி


ஒரு கஞ்சன் . வயது 50க்கு மேல். மனைவி துபாய். இரண்டாவதா ஒன்னை பிடிச்சான். காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக பலான காரியத்துக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நான் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. ஆசாமி கிர்ரா யிட்டு என்ன சமாச்சாரம்னு கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா என்னன்னு பதவிசா கேட்டாளாம் அவள்

//project 10tothe100th

அன்புடையீர்,
தமிழகத்து அரசியல்,கலை,கலாச்சாரங்களுக்கு தூரமாக ஆந்திர மாநிலத்தில் பிறந்து வாழ்ந்து வரும் 41 வயது தமிழ் இளைஞன் நான்.

தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

புதிய இந்தியா காண ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்று தமிழ் நாளிதழ்களில் தலைப்பு வெளிவர ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் சமாதி கட்ட 5 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை தீட்டி அதன் வடிவமைப்பு,பிரச்சாரம் மற்றும் அமலுக்கு 1986 முதல் உழைத்துவரும் நான் அதனை இதனை கூகுள் அறிவித்துள்ள //project 10tothe100th //போட்டிக்கு அனுப்பியுள்ளேன். அதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தங்களையும் தங்கள் பதிவை காணவரும் அன்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்
என்னை தங்கள் பதிவை காணும் அன்பர்கள் தொடர்புகொள்ள/என் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ஏதுவாக இந்த மறுமொழியை கு.பட்சம் 7 நாட்களுக்கு விட்டு வையுங்கள். தாய் நாட்டுக்குதவ எனக்கு உதவுங்கள்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்

Wednesday, October 29, 2008

ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம்

அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள். புதிய இந்தியா காண ஆந்திரத் தமிழரின் அற்புத திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்று தமிழ் நாளிதழ்களில் தலைப்பு வெளிவர ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் சமாதி கட்ட 5 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை தீட்டி அதன் வடிவமைப்பு,பிரச்சாரம் மற்றும் அமலுக்கு 1986 முதல் உழைத்துவரும் என்னை தங்கள் பதிவை காணும் அன்பர்கள் தொடர்புகொள்ள ஏதுவாக இந்த மறுமொழியை கு.பட்சம் 7 நாட்களுக்கு விட்டு வையுங்கள். தாய் நாட்டுக்குதவ எனக்கு உதவுங்கள்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


இதனை கூகுள் அறிவித்துள்ள //project 10tothe100 //போட்டிக்கு அனுப்பியுள்ளேன். அதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தங்களையும் தங்கள் பதிவை காணவரும் அன்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்

Monday, October 27, 2008

உலக பொருளாதார நெருக்கடியை குறைக்க சில யோசனைகள்


உலக பொருளாதார நெருக்கடியை குறைக்க சில யோசனைகள்

மனிதனின் ஆசைகள் அளவற்றவை. அவற்றினை நிறைவேற்றிக்கொள்வ‌தற்கான வளங்கள் அளவுக்குட்பட்டவை. இதுவே சகல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒன்று ஆசையை குறைக்க வேண்டும். அல்லது வளங்களை அதிகரிக்க வேண்டும். இரண்டிற்கும் இடையில் மற்றொரு வழியும் உள்ளது. ஜனத்தொகையை குறைக்க வேண்டும்.


ஆசைகள்:

இவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1.ஸ்தூலமானவை(இன்றியமையாதவை உம்.உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்)
2.மானசிகமானவை உம்.பலான ஓட்டலில் சேமியா பலான ஓட்டல் பாயாவுடன்,பலான் பிராண்ட் இம்போர்ட்டட் ஜீன்ஸ்,வில்லா,அப்பார்ட்மெண்ட் ,பலான குட்டிநடிகையுடன் செக்ஸ்
ம‌னித‌ர்க‌ளின் ஸ்தூல‌ கோரிக்கைக‌ளை அர‌சே நிறைவேற்றி வைக்க‌லாம். த‌மிழ‌க‌ அர‌சு ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கும் பாணி அல்ல‌ . சுத‌ந்திர‌மாக‌ வேலை பார்க்கும் வாய்ப்பு.உம். ஒரு தெருவின் இருபுற‌மும் ம‌ர‌ம் வைத்து ப‌ராம‌ரிப்ப‌து(ப‌ல‌னை அனுப‌விக்க‌வும் வாய்ப்பு)கொடுத்து அத‌ற்குண்டான‌ ஊதிய‌த்தை மாநில‌ த‌லைந‌க‌ரிலிருந்தே அவ‌ர் க‌ண‌க்கில் போட்டு விட‌,அவ‌ர் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ள‌லாம்.

Thursday, October 16, 2008

என் கவிதை மூன்றாவது கண்


நான் சிவன்
என் கவிதை மூன்றாவது கண்
எரிப்பேன் சுரண்டலை
என் ஞானம் செஞ்சடை
கோடை கால கங்கையென‌
பெருக்கெடுத்துவரும் பன்னாட்டு பகாசுரர்களை தடுப்பேன்
என் சடை வழி வழிய விடுவேன்
மணி,மாஃபியா,மீடியா முப்புரமும் எரிப்பேன்
ஓர் புன்னகையால்

நான் சிவன்
பாரதத்தின் சிரசில் தோன்றி பெருக்கெடுக்கும் கங்கையை காவிரியில் கலக்கச்செய்வேன்.

நான் சிவன்
மக்களை மறந்த படைப்புலக பிரம்மாக்களும்,அவர்களை காப்பதே தம் தொழில் என்று துள்ளும்(அள்ளும்) விஷ்ணுகளும் அஞ்சி நடுங்க எடுப்பேன் விஸ்வரூபம்

சமதர்ம சமுதாயம் பிற‌க்க தடையான முடை நாற்ற‌மனிதர்களை எரித்து சாம்பலாக்கி அதன் மீது அரங்கேற்றுவேன் ருத்ரதாண்டவம்

எனது ப்ளாக் ஹோல் தியரி

நேற்று சித்தூர் சிந்தூரி ஓட்டலுக்கு சென்றிருந்தேன். திருமலை செல்லும் க்ரூப் போலும் பட்டுப்புடவைகள் என்ன..தக தகக்கும் தங்க நகைகள் என்ன..இவர்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?

எனது ப்ளாக் ஹோல் தியரியை விவரிக்க முடியுமா? ப்ளாக் ஹோல் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு சிறு குறிப்பு:

கருந்துளை என்பது அதனுள் செல்லும் எதையும் காணாமல் போகச்செய்யும். அதனுள் எது சென்றாலும் சக்தி உறிஞ்சப்பட்டு சக்கையாக்கப்படும்.

மணி(money) மார்க்கெட்டிலும் இது போன்ற கருந்துளைகள் உண்டு. உதாரணமாக:
நான் 55 ஆயிரம் செலவழித்து ஒரு டூ வீலர் வாங்குகிறேன். 3 மாதத்திலேயே திடீர் என்று பண நெருக்கடி விற்கப்போகிறேன். 23 ஆயிரத்துக்குதான் விற்க முடிகிறது. மீதி 22 ஆயிரம் என்னாச்சு?

என் மகன் இன்டரிலேயே குண்டு. அவனுக்கு மெடிக்கல் சீட் வாங்கி(விலைக்கு)படிக்க வைக்கிறேன். கடைசி வருடம் சக மாணவனை கொன்று ஜெயிலுக்கு போய்விடுகிறான். அவனுக்கு செலவழித்த பணம் எல்லாம் கருந்துளைக்குள் நுழைந்தாற்போலத்தானே.

அமெரிக்க வங்கிகள் டுபாக்கூர் பார்ட்டிகளுக்கெல்லாம் வீட்டு வசதி கடன் கொடுத்ததும் திவாலானதும் தெரியுமல்லவா? மது,மாது,சூது,லஞ்சம்,கொள்ளை இதெல்லாமே கருந்துளைகள் தான்.

பணம் என்பது ரத்தம் மாதிரி ஃப்ரீயாக சர்க்குலேட் ஆக வேண்டும். இல்லை என்றால் கதை கந்தல் தான்.

மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம்


ஆன்மீகம் என்றால் என்ன? மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம் உள்ளது என்பதை உணர்வதே ஆன்மீகம்.இதற்கு மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உடலை வன்முறையற்ற பிரம்மச்சரியத்தால் அல்லது முறையான,விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவாலும் அமைதியுறச்செய்ய வேண்டும். மனதை நல்லெண்ணங்களால்(சர்வே ஜனா சுக்கினோபந்து) ஓய்வு பெறச்செய்யவேண்டும்.புத்தியை விகசிக்கச்செய்து இந்த படைப்பை தன் புத்தியை கொண்டு ஆராய்ந்து படைப்பு தன் புத்திக்கெட்டாதது என்பதை அனுபவ பூர்வமாய் உணர வேண்டும். அப்போது ஆன்ம தளத்தில் புதிய வாழ்வு துவங்கும்.

அல்லது உடல்,மனது,புத்திகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் சிக்க வேண்டும்,உடல், மனம்,புத்தியால் தீர்வுக்கு முயன்று தோற்க வேண்டும். அப்போது ஆன்மாவிழிப்பு கண்டு தீர்வுக்கு உதவ வரும்.

பக்தமானஸ ஹம்சிகா . இது அன்னையின் திருநாமங்களில் ஒன்று. இதற்கு ஒரு பார்ப்பன பத்திரிக்கையில் வரும் தொடர் ஒன்றில் (இதை எழுதுவதும் ஒரு பார்ப்பன ஆண்/பெண்ணாக இருக்கவே வாய்ப்பு அதிகம்)தரப்பட்டிருக்கும் பொருள் பற்றியே இந்த பதிவு.

ஹ‌ம்ச‌ம் என்றால் அன்ன‌ம் என்று பொருள். அன்ன‌ம் த‌ண்ணீரையும் பாலையும் க‌ல‌ந்து வைத்தாலும் பாலை மட்டும் பிரித்து அருந்தும் என்ப‌து கான்செப்ட். ப‌க்த‌ மான‌ச‌ என்றால் ப‌க்த‌னின் ம‌ன‌தில் என்று பொருள் கொள்ள‌லாம். இத‌ற்கு பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொருள் அம்மா (ஆத்தா) ப‌க்த‌னின் ம‌ன‌தில் உள்ள‌ ந‌ல்ல‌து கெட்ட‌தில் ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு அருள் புரிவாளாம். அட‌ங்கொப்புரானே..இவ‌னுங்க‌ என்ன‌ அம்ம‌னுக்கு பி.ஏ வா இல்லே அஃபிஷிய‌ல் ஸ்போக்ஸ்மேனுங்க‌ளா?
ப‌க்த‌னுடைய‌ ம‌ன‌சுல‌யிருந்துக்கிட்டு ந‌ல்ல‌து கெட்ட‌தை பிரிச்சு காட்டுறானு கூட‌ சொல்ல‌லாமே!


ஒருவேளை க‌ல்கி ஆசிரிய‌ர் , ஆசிரிய‌க்குழு உறுப்பின‌ர்க‌ளோட‌ ம‌ன‌சுல‌ இருக்கிற‌ க‌ழிச‌டைக‌ளை மீறி க‌ல்கி மார்க்கெட்ல‌ குப்பை கொட்டுற‌த‌ வ‌ச்சு இப்ப‌டி போட்டுட்டாங்க‌ளோ என்ன‌மோ?


ஒவ்வொரு ஆண்,பெண்ணிலும் ஆண் த‌ன்மை பெண் த‌ன்மை க‌ல‌ந்திருப்ப‌து போல‌வே, ஒவ்வொரு ம‌னித‌னிலும் நான்கு வ‌ர்ண‌ங்க‌ளுக்கான‌ குண‌ந‌ல‌ன்க‌ள் பொதிந்துள்ள‌ன‌.

வீர‌மே உருவான‌ ஆண் அன்பு காட்டுத‌லில் இற‌ங்கி விட்டால் எப்ப‌டி அன்பே உருவான‌ பெண்ணை முந்திவிடுகிறானோ அதே போல் இறைவ‌ழி புகுந்து விட்ட‌ சூத்திர‌ன் பார்ப்ப‌ன‌னை உஃப் என்று ஊதிவிடுவான்.

த‌லை முறை,த‌லை முறையாய் அரைத்த‌ மாவையே அரைத்து இவ‌ங்க‌ளுக்கு அலுத்து போச்சோ என்ன‌மோ, ஒரு சூத்திர‌ப்ப‌ய‌லின் உண்மை ப‌க்திக்கு முன்பு இவ‌ர்க‌ள் ப‌ரிமாறும் உப்பு ஊறுகாய்க‌ள் ஜுஜுபி என்ப‌தை உண‌ர‌ வேண்டும்

Sunday, October 5, 2008

செக்ஸ் என்ப‌து அனுப‌விக்க‌த்தானே த‌விர

மனிதனின் ஒட்டு மொத்த கவனமும் இன உறுப்பின் மீதே நின்று விடுகிறது. இதுதான் சோக‌ம். பிறந்த குழ‌ந்தையின் க‌வ‌ன‌ம் ஆர‌ம்ப‌த்தில் அத‌ன் ஆச‌ன‌ துவார‌த்தின் மீதே இருக்கும். அதை மேலும் தூண்டும் வ‌ண்ண‌ம் தாய் மார்க‌ள் சோப்பு,புகையிலை இப்படி க‌ண்ட‌தையும் அத‌ன் ஆச‌ன‌த்தில் செருகுவ‌து வ‌ழ‌க்க‌மாக‌ உள்ள‌து. குழ‌ந்தை வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ அத‌ன் க‌வ‌ன‌ம் இன‌ உறுப்புக்கு பெய‌ர்கிற‌து. (சில‌ர் விஷ‌ய‌த்தில் இந்த‌ வ‌ள‌ர்ச்சி கூட‌ நிக‌ழ்வ‌தில்லை. என‌வே அவ‌ர்க‌ள் ஆன‌ல் செக்ஸுக்கு ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விடுகிறார்க‌ள்.

யோக‌ சாஸ்திர‌த்தின் ப‌டி பிர‌ஸ்தாபிக்க‌ப்ப‌டும் ச‌க்க‌ர‌ங்க‌ள் அனைத்தும் உண‌வு குழாயை ஒட்டியே அமைந்துள்ள‌ன‌.

ஆசனத்தை ஒட்டியுள்ளது மூலாதாரம். இன உறுப்பை ஒட்டியுள்ளது ஸ்வாதிஷ்டாணம். மனிதனின் வளர்ப்பு சூழல் ஒத்துழைத்தால் ஆசனத்தை விட்டு இன உறுப்புக்கு கவனம் பெயர்ந்தது போலவே அடுத்தடுத்து தொப்புள்(மணிபூரகம்),இதயம்(அனாஹதம்).கழுத்து(விசுத்தி) ,நடு நெற்றி (ஆக்னா) ,உச்சந்தலை(சஹஸ்ராரம்) என்று வளர்ச்சி தொடரும். இந்த வளர்ச்சிக்கு சூழல் ஒத்து வருவதில்லை. எனவே செக்ஸ் என்பது பாவச்செயலாக கருதப்படும் சமூகத்தில் மனிதனின் கவனம் இன உறுப்பிலேயே நிலைத்து விடுகிறது. இதனால் தான் 70 வயது முதியவன் 6 வயது சிறுமியை கற்பழித்தான் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.

செக்ஸ் என்ப‌து அனுப‌விக்க‌த்தானே த‌விர‌ பேச‌வோ ,எழுத‌வோ ,படிக்கவோ அல்ல‌. அனுப‌விக்க‌ வாய்ப்பில்லாத‌ நிலையில் பேச்சு,எழுத்து ,படிப்பு ம‌ட்டுமே தொட‌ர்கிற‌து. இத‌னால் ப‌டிப‌டிப்ப‌டியாக‌ பாலுண‌ர்வு மூளைக்கு பெய‌ர்ந்து விடுகிற‌து. ஆண்மையின்மை ப‌ர‌வ‌லாகி வ‌ருவ‌த‌ன் கார‌ண‌ம் இதுதான்.