Tuesday, November 30, 2010

இன உறுப்பும் கேரக்டரும் - மீள்பதிவு

கேரக்டர்னா தெரியுமில்லியா " நம்மளோட குண நலன்கள்". இந்த பதிவுல உங்க கேரக்டரை உங்க செக்ஸ் (பால்) அதாவது ஆணா பெண்ணாங்கற ஃபேக்டர் எப்படி நிர்ணயிக்குதுனு பார்ப்போம்.

சொல்ல மறந்துட்டேங்கண்ணா இது தமிழ் மணம் தடை செய்ய மறந்த பதுவுங்கண்ணா. தாளி பிரபாகரன் சாகலைனு ஒரு ஜோதிஷ கணிப்பை போட்டதுமே பேதி புடுங்கிக்கினு நம்ம வலைப்பூவை தடை பண்ணிட்டாய்ங்க.

பாரதியார் பாரதமாதாவை "முப்பது கோடி முகமுடையாள்"னு பாடினாரு. அதாவது அப்போ இந்திய ஜனத்தொகை முப்பதுகோடி . அதனால அப்படி பாடினாரு. இப்போ 120 கோடிய தாண்டி மீட்டர் ஓடுது. மனித பிறப்பு எப்படி நிகழுதுன்னான்னுட்டு ஆரம்பிச்ச உடனே  செக்ஸை நுழைக்கிறான்பா என்று கடுப்பாகாதீர்கள். நான் என்னவோ நம்ம சொல்ற மடிசஞ்சி விஷயங்களை பத்துக்கு நூறு பேரா படிச்சா ஒருத்தர் ரெண்டு பேரு ஏத்துக்கிடு வாய்ங்களேங்கற ஆத்திரத்துல கில்மாவ நுழைக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு பார்த்திங்கன்னா செக்ஸுக்காகவே செக்ஸு எழுதறாய்ங்க.இவிகளுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷனோன்னு ஒரு கு.உ.

நிற்க..இந்த பதிவு கம்ப்ளீட்டா உயிரியல். முடிஞ்சவரை சப்ஜெக்டை டைல்யூட் பண்ணி சுவாரஸ்யமாவே சொல்றேன்.

தந்தி (டெலிக்ராம்) பாஷைல சொன்னா ஆணும் பெண்ணும் சேர்வதால் மனித பிறப்பு நிகழுது. இதே ப்ராசஸ்ல நீங்க ஆணா பெண்ணா, உங்ககேரக்டர் என்னங்கறதும் நிர்ணயிக்கப்பட்டுருது.

ஆண்,பெண் உடல்களில் பல்லாயிரம் கோடிக்கணக்கான செல்கள் இருக்கின்றன.
ஒரு வீடு செங்கல்லால கட்டப்படற மாதிரி நம்ம உடல் செல்களால கட்டப்பட்டிருக்கு. ( பேசற செல் இல்லிங்கண்ணா) நம்ம உடம்புல கோடிக்கணக்குல இருக்கிற செல்கள் தேஞ்சு அழிய, அழிய அதுக்கு சமமா புதிய செல்கள் உற்பத்தியாகிறது. (ரீ ப்ளேஸ்மென்ட்?) வயசாக வயசாக அழிஞ்சு போன செல்லை விட உற்பத்தியாற செல்லோட நெம்பர் குறைஞ்சிட்டே போவும். அதுவேற விஷயம்

சரி நம்ம வீட்ல ஃப்யூஸ் போன பாத்ரூம் பல்பை மாத்தரப்பவே கலர் மாறிப்போவுது, கம்பெனி மாறிப்போவுது, ஓல்ட் மாறிப்போவுது. புது செல் உற்பத்தியாகனும்னா அது பழைய செல் மாதிரியே இருக்கனும். இல்லேன்னா வம்பாயிரும். உதாரணமா ஒரு வளர்ந்த ஆணோட உதட்டுல இருக்கிற செல் தன் சாதிய சேர்ந்த செல்லை காப்பிபண்ணிக்காம மேலுதட்டுல இருக்கிற செல்லை காப்பி பண்ணிருச்சுன்னா என்னாகும்? உதட்டுல மீசை வளரும்,கின்னஸ்ல போட்டோ வரும்.

அதுக்காக உடம்பு புது செல்களை தயாரிக்கும் போது ரொம்ப எச்சரிக்கையோட செயல்படுது. அது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா செல்லோட அமைப்பை பத்தி தெரிஞ்சுக்கனும். நமக்கு ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும்.

செல்லில உட்கரு இருக்கு. அதுல குரொமோட்டின் ரெட்டிகுலம்னு ( Reddy குலம் ,இல்லிங்கண்ணா Rettikulam) ஒரு வலை இருக்கு. . இந்த வலைலதான் சூட்சுமமே அடங்கியிருக்கு. (ப்ளூ ப்ரிண்ட்) இதை ஒரு ஃபிலிம் ரோலுன்னு வச்சுக்கிட்டா இதுல 46 ஷாட் ஷூட் பண்ணலாம்.

அதே நேரத்துல இந்த ஆறடி உடம்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும். இது நம்ம அப்பா அம்மாவோட கூட்டு முயற்சி. (இனி அப்பா அம்மானு சொல்லாம ஆண்,பெண் என்றே குறிப்பிடலாம்)


பெண்ணோட உட்கருல இருக்கிற செல்லுலயாகட்டும், ஆணோட வீரியத்துல இருக்கிற உயிரணுவுல(செல்)யாகட்டும் மேற்சொன்ன க்ரொமோட்டின் ரெட்டிக்குலம்ங்கற ஃபிலிம் ரோல்ல 46 ஷாட்டுக்கு பதில் 23 ஷாட்ஸ் தான் ஷூட் பண்ணமுடியும். (அதாங்க க்ரோமோசோம்)

உடலுறவின் போது விந்துவிலான உயிரணு விரைக்கு வந்து சேர்ந்து, இன்னும் சில திரவங்களோட சேர்ந்து ஆண் உறுப்பு வழியா புறப்பட்டு பெண்ணுறுப்பின் வாய் வழியாக அவளோட கருப்பைல இருக்கிற அண்டத்தை துளைக்குது. அப்போ 23+23 க்ரோமோ சோம் சேர்ந்து முதல் செல் உருவாகுது.

இந்த 23+23 க்ரோமோசோம்ல உடலுறவுல ஈடுபட்ட ஆண்,பெண்ணோட (அவிக முன்னோர்களோட டேட்டா கூட) கம்ப்ளீட் டேட்டா இருக்கு. தலையோட வடிவம், தலை முடியோட நிறம், நீளம், சுருட்டையா இல்லையா, கண்ணு பாப்பா கருப்பா,பிரவுனா, ப்ளூவா பராம்பரியமா வரக்கூடிய நோய்கள் இப்படி கம்ப்ளீட் டேட்டா பதிவாயிருக்கும்.

இதுல 22 ஷாட் யு சர்ட்டிஃபிகேட். 23 ஆவது ஷாட் தான் ஏ சர்ட்டிஃபிகேட். அதாவது இதுதான் உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்குது. இது வெறும் பாலைத்தான் நிர்ணயிக்குதுன்னு நினைச்சிருந்தாங்க. (இப்போ தயிரை கூட நிர்ணயிக்குதானு கேட்டு நக்கலடிக்க கூடாது ஆமாம் சொல்ட்டேன்பா)

ஆனா இப்போ லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு என்னன்னா உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்கிற அதே குரோமோஜோம் தான் உங்கள் குண் நலன் களையும் நிர்ணயிக்குது " என்பதாகும்.

அப்போ ஆண்பாலுக்கு ஒரு கேரக்டர், பெண்பாலுக்கு ஒரு கேரக்டர் இருக்கும்னுதானே அர்த்தம்? செக்ஸுவல் பிஹேவியரும், நீங்க ஆணா பெண்ணாங்கறத பொருத்து தானே அமையும்? மனிதனின் பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட் செக்ஸ் தான். மனித உடலின் மையம் மட்டுமில்லே மனித மனதின் மையம் கூட செக்ஸ்தான். குளத்து மத்தியில கல்லெறிஞ்சா அது எப்படி குளத்து பரப்பு முழுக்க அலைகளை ஏற்படுத்துதோ அப்படியே பாலை நிர்ணயிக்கிற அதே ஜீன் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது பாஸு !

ஆண்,பெண் சைக்காலஜிய அவிக இன உறுப்பே சொல்லிருது. ஆண் உறுப்பு ஆக்கிரமிக்க துடிக்கிற மாதிரி தோணினாலும் அது இன் செக்யூர்டா ஃபீல் பண்ணுது தஞ்சமடைய இடம் தேடுது.

அதே மாதிரி தான் ஆண் இனம் பெரிய பிஸ்தா மாதிரி பில்டப் கொடுத்தாலும் சரண்டர் ஆயிர்ராங்க. ( என்ன பெண் கொஞ்சம் மதர்லி கேரக்டரோட , அவனோட பிஸ்தா பில்டப்பை சகிச்சுக்கனும். )

பெண்ணோட இன உறுப்பு பாதுகாப்பற்றதா திறந்து வச்ச கோட்டை கதவா தோணினாலும் அது இன்னொரு சமாச்சாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிற ஸ்டேஜ்ல தான் இருக்கு. ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பெண் தன்னை அபலையா உணரலாம். தட்ஸால்.

செக்ஸ் குறித்த உணர்வுகள் கிளம்பறதுக்கு முன்னாடி ஆண்,பெண் குழந்தைகள் ரெண்டோட பிஹேவியரும் ஒரே மாதிரிதான் இருக்கும். பெண் குழந்தை மரமேறி மாங்காய் பறிக்கும் . ஆண் குழந்தை நொண்டி விளையாட்டு விளையாடும். உணர்வுகள் லேசா தீட்டப்பட்டதுமே பிஹேவியர்ல மாற்றம் வந்துருது. அதுவரைக்கும் பிஹேவியர் மட்டுமில்லே ஃபிசிக்கல் ஸ்ட்ரக்சர் கூட ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். (இன உறுப்பை தவிர்த்து)

பால் நிர்ணயம் கருவிலேயே நிர்ணயிக்கப்பட்டூட்டாலும் அது ஜஸ்ட் ரஸ்னா பவுடர் மாதிரி /கான்சன்ட்ரேட்டட் ஃப்ரூட் பல்ப் மாதிரி தான் இருக்கு. குறிப்பிட்ட வயசு/பருவம் வந்த பிறகுதான் அது 22 டம்ளர்ல கலந்து வச்ச மாதிரி விஸ்தரிக்கப்படுது. அப்போதான் தன் பால் குறித்த உணர்வே அந்த குழந்தைக்கு வருது. அம்மா " டேய் கண்ணா .. அந்த டீ கப்புகளை மட்டும் கழுவி கொடுரா "ன்னு கேட்டா பையன், " போ போ.. "ன்னிட்டு போய்க்கினே இருப்பான். பரணைல இருக்கிற ஸ்டீல் அண்டாவை இறக்க வீடு பையனுக்காக காத்திருக்கறப்ப அவன் ஆம்பளையாயிர்ரான்.

சரி பால் (செக்ஸ்) டிசைட் ஆயிருச்சு. உணர்வுக்கு உயிர் வந்துருச்சு. அவன் தன்னை உணர ஆரம்பிச்சுட்டான். அடுத்தது என்ன ? இயற்கையின் பிரதான விதி வழியே அவன் மதி வேலை செய்ய ஆரம்பிக்குது . அதாங்க செக்ஸ், மற்றும் இனப்பெருக்கம்.

ஆண் குழந்தை எல்லாத்தயும் ஆக்கிரமிக்க பார்க்கிறது ஒரு பார்ட்.
தஞ்சமடையறது இன்னொரு பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்

பெண் குழந்தை எல்லா ஆக்கிரமிப்புக்கும் ஈடுகொடுத்துக்கிட்டு "தேமே"ன்னு இருக்கும் இது ஒரு பார்ட்
படிப்படியா எல்லாத்தயும் தன் கட்டுப்பாட்ல கொண்டு வந்துரும். இது செகண்ட் பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்.

பெண்ணுரிமை வாதிகளாகட்டும், ஆணாதிக்க வாதிகளாகட்டும் யாருமே குறை சொல்லமுடியாத வகைல இயற்கை இரு பாலாரையும் பேலன்ஸ் பண்ணி வச்சிருக்கு.

பின்னே எங்கடா வருது வில்லங்கம்னா இரு பாலாருமே தங்களோட க்ரோயிங்க் ப்ராசஸ்ல முதல் பார்ட்லயே நின்னுர்ராங்க.

அதாவது ஆண் சதா சர்வ காலம் ஆக்கிரமிக்கவே பார்க்கான்.
பெண் ஆக்கிரமிக்கப்படவே விரும்பறா.

ஸோ உங்க பால் நிர்ணயிக்கப்படும்போதே அதே க்ரோமோஜோமால உங்க கேரக்டரும் நிர்ணயிக்கப்பட்டுருது . உங்க கேரக்டரை உங்க இன உறுப்பே சிம்பாலிக்கா காட்டுது. க்ரோயிங்க் ப்ராசஸ்ல ரெண்டு பார்ட் இருக்கு. பழக்க தோஷத்துல நீங்க முதல் பார்ட்லயே நின்னுர்ரிங்க.

வாழ்க்கைல ரெண்டையுமே பார்க்கனும். ரெண்டுலயுமே சுகமிருக்கு. ஆக்கிரமிக்கறதுல இருக்கிற சுகம் டெம்ப்ரரி. அதை இழக்கறது உங்க கவுண்டர் பார்ட் கைல இருக்கு. ( புரட்சி வெடிச்சு எப்பவேணா எவிக்ட் ஆயிர்ர வாய்ப்பிருக்கு)

ஆக்கிரமிக்க படறதுல இருக்கிற சுகம் பர்மனென்ட். அதை நீங்களா முயற்சி பண்ணாதான் இழக்க முடியும்.

அதனாலதான் பெண்களுக்கு இதய நோய், பி.பி.ஷுகர்,சர்க்கரை வியாதியெல்லாம் குறைவா வருது.

Monday, November 29, 2010

காந்தி காலத்துலருந்து அதே புத்தி.

நிச்சயமா இந்த பதிவை நீங்க ஸ்க்ரால் பண்ணிருவிங்கனு தெரியும். ஆனால் ஒன்னுங்கண்ணணா இதை படிக்கலைன்னா நஷ்டம் உங்களுக்குதேன். ஏன்னா காங்கிரஸு த. நாட்ல கூட கீதுல்ல. இந்த பிக்காலிங்களுக்கு காந்தி காலத்துலருந்தே ஒரே புத்தி.ஏன் காந்திக்கே இந்த புத்தி இருந்தது. சுபாஷ் சந்திரபோஸ் கட்சி தலைவரா கட்சி தேர்தல்ல நின்னப்ப அவருக்கு  போட்டியா நின்ன பார்ட்டிய இவர் என் வேட்பாளர் .இவர் வெற்றி என் வெற்றி, இவர் தோல்வி என் தோல்வினு காந்தி தாத்தாவே சொன்னாராம்.

இன்னா நடந்தது? சுபாஷ் எலக்ட் ஆயிட்டாரு. ஒடனே காந்தி ஏரி மேல கோச்சுக்கின கதையா பில்டப் தர சுபாஷ் போங்கடாங்கொய்யாலனு ராஜினாமா பண்ணிட்டு தேசிய ராணுவம் ஏற்படுத்த பூட்டாரு.

தாளி சுபாஷ் மட்டும் கட்சிதலைவரா தொடர்ந்திருந்தா இந்தியாவோட தலை எழுத்தே மாறியிருக்கும். காங்கிரஸ் கட்சியோட வரலாறை 4  எபிசோடா பிரிக்கலாம் நேரு ரெஜிம், இந்திரா ரெஜிம்,ராஜீவ் ரெஜிம், சோனியா ரெஜிம்.

நேரு ஷோ மேன்.தனக்கிருந்த  நாடு தழுவிய இமேஜையும், தாத்தா கிட்டே தனக்கிருந்த நெருக்கத்தையும்  வச்சே கிழவாடிகளை இருட்டடிப்பு செய்து சமாளிச்சுட்டாரு (காந்தி தாத்தா கோட்சேவோட குண்டை வாங்கிக்கறதுக்கு மிந்தியே  வல்லப் பாய் படேலுக்கும் நேருவுக்கும் பஞ்சாயத்து பண்ணியிருந்தா இந்திய வரலாறே திசை திரும்பியிருக்கும்.

ஒரு டமாஸு: எங்கனயோ படிச்சேன். கட்சிக்கு யங் லீடர்ஷிப் தேவைனு மோதிலால் நேரு சொன்னா அது நேருவை குறிக்கும். இதே வசனத்தை  நேரு சொன்னா இந்திராவை குறிக்கும். இந்திரா சொன்னா ராஜீவை குறிக்கும்,சோனியா சொன்னா ராகுலை குறிக்கும். அடங்கொக்காமக்கா!

நேருவும் தில்லில உட்கார்ந்துதான் ஆட்சி பண்ணாரு. பல தடைகளை மீறி மக்கள் கருத்து லேசா  அவர் காதுக்குள்ள கசியவாவது வாய்ப்பிருந்தது. அவரும் ஏதோ ஒரு சால்சாப்பு சொல்லி அஜீஸ்மென்ட் ஃபார்முலால போய்க்கினிருந்தார்.

உ.ம் : 1 இந்தி திணிப்பு. தமிழர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியா தொடரும்.

உ.ம்  : 2 தெலுங்கானா இணைப்பு . இது கட்டாய கல்யாணம் மாதிரி எப்பவாச்சும் டைவர்ஸ் வாங்கிக்கிரலாம்.

இந்திரா ரெஜிம்ல பார்த்திங்கன்னா அவிகளுக்கும் இன்செக்யூரிட்டி, கிழவாடிகளுக்கும் இன்செக்யூரிட்டி. ரெண்டு தரப்புமே வீக் . எப்படியோ அடிச்சு பிடிச்சு வங்கிகள் தேசீயமயம், தாழ்த்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடுன்னு இந்திரா தன்னை காபந்து பண்ணிக்கிட்டாய்ங்க.

ஈகோங்கறது ஆருக்கு அதிகம்னா எவன் இன் செக்யூரிட்டில இருக்கானோ,எவன் வீக்கா இருக்கானோ அவனுக்கு தேன் ஈகோ அதிகம். தாழ்வு மனப்பான்மை எப்ப வேணம்னா ஓவர் கான்ஃபிடன்ஸா மாறும். அப்படி இந்திரா மாறி சில சோமாறிங்க பேச்சை கேட்டுக்கிட்டு ஆந்திரால இல்லாத ஆட்டம்லாம் போட்டுது. என்.டி.ஆர் வந்தாரு ஆப்பு வச்சாரு.

இந்திராவுக்கு சந்திராசாமி, திரேந்திரபிரம்மசாரி மாதிரி ராஜீவுக்கும் ஒரு கிச்சன் கேபினட். எல்லா ஆஃபீஸ்லயும் ஒரு டப்பா (கம்ப்யூட்டர்) வச்சுட்டா தேசம் சுபிட்சமாயிரும்னு ஏத்திவிட்டாய்ங்க. ஆந்திரா மேட்டர்ல அவரும் கோட்டை விட்டாரு.

சோனியாம்மா ரெஜிமுக்கு வந்தா.. அவிக இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்தாய்ங்க. இல்லேங்கலை. எதுவரைக்கும்? மத்தில யு.பி.ஏ அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கிற வரை.

தாளி ஒய்.எஸ்.ஆர் எல்லாம்  நேரு மாதிரி ஷோ மேன் கிடையாது. சரிஸ்மா கிடையாது. அக்மார்க் லோ பட்ஜெட்  டப்பிங் சினிமா ஹீரோ மாதிரி. என்.டி.ஆரை எதிர்த்தும் அரசியல் பண்ணாரு. சந்திரபாபுவை எதிர்த்தும் அரசியல் பண்ணாரு.

சந்திரபாபு காலத்துல அவர் காட்டின பூச்சிய பார்த்து பேதியாகி  காங்கிரஸ் கட்சி கிழவாடிங்கல்லாம் நேட்டிவ் விலேஜ்ல விவசாயம் பார்க்க பூட்டானுங்க. இல்லே ஃபாரீன் பேரன்ங்க வீட்டுக்கு ரெஸ்டுக்கு பூட்டானுங்க.

ஆனால் ஒய்.எஸ்.1999 எலக்சன்ல கொடுத்த தேர்தல் வாக்குறுதியையே மறுபடி குடுத்தாரு ( விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்) . 1600 கிமீ பாதயாத்திரை செய்தாரு.  பெராலிஸிஸ் ஸ்ட்ரோக் வந்து பெட் ரிடன் ஆ இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தன் ரத்தத்தை தடவி மசாஜ் பண்ணி உயிரூட்டினாரு.

அப்பல்லாம் சோனியாஜி சோனியாஜியா தான் இருந்தாய்ங்க. எப்போ மத்தில யு.பி.ஏ அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைச்சதோ அங்கன இந்திராஜீயா மாற ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒய்.எஸ் சாகாம இருந்திருந்தாலும் அவரையும் ஒரு ரோசய்யாவாக்க கட்டாயம் ட்ரை பண்ணியிருப்பாய்ங்க. ரெட்டி காங்கிரஸ் மறுபடி வந்திருக்கும். ஆனால் அவர் பண்ண புண்ணியம் கௌரவமா போய் சேர்ந்துட்டாரு.

சாதாரணமா ஒரு கட்சி சட்டமன்ற தேர்தல்ல போட்டியிட்டு,மெஜாரிட்டி சீட்ஸ்ல செயிச்சா சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி வாக்கெடுக்கனும். ஆனால் காங்கிரஸ்ல மட்டும் முதல்வரை நியமிக்க தலைமைக்கு (சோனியாவுக்கு) அதிகாரம் கொடுத்து   ஒரு தீர்மானம் போடுவாய்ங்க. தில்லிலருந்து சீல்ட் கவர் அனுப்புவாய்ங்க. அதுல முதல்வர் பேர் இருக்கும்.


ஒய்.எஸ் ஐ சி.எம்மா எலக்ட் பண்ணதும் இதே மெத்தட்லதான். ஆனால் சீல்ட் கவர்ல ஒய்.எஸ்.பேர் இல்லைன்னா என்ன நடக்கும்னு தில்லிக்கு தெரியும். ஒய்.எஸ்.போய் சேர்ந்த பிறவு 152 எம்.எல்.ஏங்களோட சப்போர்ட் இருந்தும் ரோசய்யாவை ப்ரப்போஸ் பண்ணச்சொல்லி ஜகனை கட்டாயப்படுத்தினாய்ங்க. ஜகனும் காண்டு மாதிரி ப்ரப்போஸ் பண்ணாரு.

தாத்தா நிலைமை ரெம்ப மோசம். ஒன் பாத்ரூம் போகனும்னா கூட சோனியா மேடத்தை ஒரு பேச்சு கேட்டுக்க வேண்டிய  நிலை. சரி தாத்தாவால சமாளிக்க முடியலைன்னு கிரண்குமார் ரெட்டிய கொண்டு வந்தாய்ங்க. ஜகன் தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி ப்ரப்போஸ் பண்ண வச்சிருந்தா  டிசம்பர் 31 வரைக்காச்சும் காலம் வெண்ணையா ஓடியிருக்கும் ( கிருஷ்ணா கமிஷன் ரிபோர்ட் வர்ரவரை).

அதையும் செய்யலை. சாட்சில ஏதோ அனலட்டிகல்ல் எஸ்ஸே வந்ததை பார்த்து இர்ரிடேட் ஆகி சோனியாம்மா ஜகனுக்கு ஆப்பு வைக்கனுங்கற ஆத்திரத்துல சிரஞ்சீவிக்கு ப்ராக்கெட் போட்டாய்ங்க.டெப்புட்டி சி.எம்., 6 மந்திரி பதவி வரை பேரம் பேசினாய்ங்க. கிரணை களமிறக்கினாய்ங்க. எல்லாத்துக்கும் மேல ஒய்.எஸ். சகோதரர் விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் வடைய வச்சு கூண்டுல அடைக்க பார்த்தாய்ங்க.

ஜகனும், அவரோட அம்மாவும் தங்கம் எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு  ராஜினாமா செய்துட்டாய்ங்க. அப்பாறம் பார்க்கனுமே கூத்தை . விவேகானந்த ரெட்டி மந்திரி பதவியும் வேணா ஒரு மசுரும் வேணானுட்டாரு. சிரஞ்சீவி மந்திரி சபைல சேரப்போறதில்லைனு அறிவிச்சுட்டாரு.

காங்கிரஸ் எம்.எல்.ஏங்க ராஜினாமா பண்ணாதிங்க. இந்த அரசு எங்க அப்பாவோட அரசு . இது கவிழக்கூடாதுனு ஜகன் அறிவிச்சுட்டாரு. ஆனால் எம்.எல்.ஏக்கள் தவிர 10,000 பேர் ஜகனுக்கு ஆதரவா  கட்சி, மற்றும் இதர பதவிகளுக்கு  ராஜினாமா பண்ணியிருக்காய்ங்க.

மொதல்ல 30 பேரோட மந்திரி பட்டியல் தயாரிச்சாய்ங்க. அப்பாறம் பதவி கிடைக்காதவன்லாம் ஜகனோட போயிரப்போறான்னுட்டு அதை 11+1 ஆ குறைச்சாய்ங்க.

விரிவாக்கத்துல பதவி கிடைக்கும்னு ஜொள்ளு விட்டுக்கினு வெய்ட் பண்ணுவாய்ங்கனு ஸ்கெட்ச். ஜூன் ஜூலைல உள்ளாட்சி தேர்தல்கள் வரப்போவுது. அப்ப பார்க்கனும் கூத்தை..

லேட்டஸ்ட்:

ஜகன் கடப்பாவை அடுத்துள்ள இடுப்புல பாயால இருக்காரு. கடப்பா ஹைதராபாத் தேசீய நெடுஞ்சாலையே மக்கள்,வாகன வெள்ளத்தால் திணறுது.  நாளைக்கு புதுக்கட்சி அறிவிக்கப்போறாருனு ஹஞ்ச்.

Sunday, November 28, 2010

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்: 2

கடந்த பதிவின் கடைசி பாரா:

" சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க."

"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?"னுவாய்ங்க. இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

எச்சரிக்கை:
இந்த பதிவு ஆரோக்கியர்களுக்கு மட்டுமானது. உடல் குறை ,மனக்குறை உள்ளவுக இழந்தை சக்தி வைத்தியர்களையோ , நல்ல சைக்கியாட்ரிஸ்டையோ பாருங்க.

நிறைய பேரு இன்னா நினைக்கிறாய்ங்கன்னா செக்ஸுக்கு இவன் உடல்ல அந்த  ஒரு சமாசாரமும், பெண் உடல்ல அந்த ரெண்டு உருப்படியும் தான் தேவை.

உங்க பாடியோட அதி மூலம் ஒரு செல். அந்த செல்லுக்கான பேர் பாதி க்ரோமோசோம் கிடைச்சதே டாடி மம்மியோட செக்ஸ் க்ரோமோ சோம்லருந்துதேன். செக்ஸுல பிறந்து வளர்ந்த பாடி இது. அதனால செக்ஸுங்கறது ஒவ்வொரு அணுவுலயும் இருக்கு.

இதை நீங்க முழுக்க உணரணும்னா அதுக்கு பெஸ்ட் வே பிரம்மச்சரியம். என்னங்கடா இது அவுக்கிறதை பத்தி பேசுவாருனு பார்த்தா தண்ணில நனைச்சு கட்டறதை பத்தி சொல்றாருனு கோச்சுக்கிடாதிங்க. நெஜம் இதான்.

நீங்க ஒரு விருந்துக்கு தயாராகனும்னா , ஒரு கட்டு கட்டனும்னா அதுக்கு முன்னாடி ஒரு வேளையாச்சும் வயித்தை காய போட்டிருக்கனும். ஒரு லைம் அடிச்சிருக்கனும். விருந்துக்கு முந்தி தொண்டைக்குழில ஒரு மிடறு தண்ணீர் விடனும் ( இல்லாட்டி விக்கிக்கும்) .அவசரப்படாம நிதானமா சாப்பிடனும். இல்லாட்டி அடைச்சுக்கும்.

செக்ஸும் அதே மாதிரி தேன். நல்ல ஆரோக்கியமான வயசு புள்ளை ஒரு 15 நாள் பொம்பள வாசம் படாம இருந்தா அவனுக்குள்ள கிளர்ச்சியை உருவாக்க ஒரு பெண்ணின் குரல் கூட போதும். அவளோட உடலுக்கும் இவன் உடலுக்கும் 30 செ.மீ கேப் இருக்கும்போதே உடல் புல்லரிக்கும். ( விறைக்கும்னு சொல்லலை) ஒவ்வொரு செல்லும் இன்ப  அதிர்வுகளை உணரும். ஆனந்தத்தில் திளைக்கும்.

அதனால தான் சொல்றேன். செக்ஸுல வெற்றிக்கொடி நாட்டனும்னா பிரம்மச்சரியம் அவசியத்துலயும் அவசியம். ஆணுக்கு உண்மையில கிளர்ச்சியை தர்ரது பெண்ணுடல் அல்ல இவனுடல்தான். என்ன ஒரே ஒரு நிபந்தனைன்னா ரெண்டு முதலிரவுகளுக்கிடையில் அ சுய இன்பங்களுக்கு இடையில்  ஒரு உத்தேசமான கேப் இருக்கனும்.

சுய இன்பம் அனுபவிக்கிற பார்ட்டிகளுக்கு  ஆத்திரம்,அவசரம்,அச்சம்,குற்ற உணர்வு, சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இத்யாதி காரணங்களால் சீக்கிரம் காரியத்தை முடிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிடும். இந்த காரியத்தில் ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் தூண்டப்பட்டு ,தீண்டப்பட்டு காரியம் நடப்பதால் இவர்களின் உணர்வு ஜஸ்ட் இன உறுப்பில் மட்டுமே மையம் கொண்டு மற்ற உணர்வு கேந்திரங்கள் எல்லாம் மழுப்பப்பட்டுவிடும். ( இவிகதேன் சிட்டிபஸ்ல முட்ட கொடுக்கிறது). இவிகளுக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்ங்கறாப்ல ஆஃப்டர் மேரேஜும் இந்த அவசரம் குறையாது. இவிகளா டிலே பண்ண நினைச்சாலும் முடியாத நிலை. இவிகளும் கொஞ்சம் போன மன,உடல் கட்டுப்பாடுகளை கடைபிடிச்சா  மம்முத ராசாக்களா மாறிரலாம் டோன்ட் ஒர்ரி.

(பெண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இவிக இன்னம் அட்வான்ஸ்ட் செயற்கை பொருட்களையெல்லாம் உபயோகிக்கிறதா கேள்வி.. இவிகளுக்கும் உணர்வுகள் இன உறுப்பிலேயே மையம் கொண்டுவிடும் - இவிகளும் நார்மலா மாற கொஞ்ச நாள் பிடிக்கும்)

செக்ஸ் பவர்ங்கறது டோட்டலா உங்க பாடி பவர் மேல டிப்பெண்ட் ஆகி இருக்கும். உடம்புல ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டு இருக்கு. ஒன்னு ஒர்க் ஆகும்போது இன்னொன்னு ஒர்க் ஆகாது. ஆனால் பலவந்தப்படுத்தினா அம்மாவுக்கு தண்ணி கொண்டு போற குரங்கு மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இந்த பழக்கம் தொடர்ந்தா ரெண்டு மண்டலத்தோட செயல் திறனும் பாதிக்கும். செக்ஸுங்கறது வேற, சுய இன்பங்கறது வேற . செக்சுங்கறது அடுத்தவுக கோஆப்பரேஷனோட நடக்கறது. சுய இன்பம்ங்கறது தான் தோன்றித்தனமா நடக்கறது.

முறை எதுவா இருந்தாலும் உணவையும் செக்ஸையும் பிரிச்சு வைச்சுக்கறது நல்லது.
கரப்பான் பூச்சிக்கு ஆயுள் அதிகம்.ஏன்னா அது முதல்ல கில்மா அப்பாறம் தண்ணி அப்பாறம் உணவுனு ஷெட்யூல் வச்சிருக்கு.

அதனால உணவுக்கும் செக்ஸுக்கும், செக்ஸுக்கும் உணவுக்கும் இடையில குறைஞ்ச பட்சம் 3 மணீ நேரமாச்சும் கேப் கொடுக்கிறது உங்க செயல்திறனை அதிகரிக்கும்.


ஆங் இன்னா சொல்லிக்கினிருந்தேன். செக்ஸுல உடலிலான ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இன்பத்தில் திளைக்க முடியும். அதுக்கு தேவை பிரம்மச்சரியம்னு சொன்னேன்.

இந்த பாயிண்டை நிறைய பேர் குறை சொல்லலாம். ஆமா ஏற்கெனவே கேட் எல்லாம் வீக்கா இருக்க அணைய  நிரப்பினா  அசலுக்கு மோசம் வந்துராதானு கேப்பாய்ங்க.

பிரம்மச்சரியம்னா வெறுமனே விந்துவை வெளியேற்றாம இருந்துர்ரதுனு நினைச்சா அந்த இழவுதான் நடக்கும்.

பிரம்மச்சரியம்ங்கறது வேற ஸ்கூலு. லெசன் ப்ளானே வேற அதை இன்னொரு பதிவுல பார்ப்போம்.

இப்போ பொசிஷனுக்கு வந்துரலாம். பத்து பதினைஞ்சு நாள் பிரம்மச்சரியம் -அதுக்கப்பால ஹால் - அம்மா வராய்ங்க.

ஒடனே பெட் ரூமுக்கு ஓடப்படாது.லேசான தொடுகைகள்,சீண்டல், சுளுக்கெடுக்கறது,  சின்னதா முத்தங்கள்னு ஒரு 15 நிமிஷமாவது ஓட்டனும்.

அதுக்கப்பாறம் பெட் ரூம். இப்ப உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே அஜெண்டா ஒன்னு உங்க உணர்ச்சிகளை ஒத்திப்போடறது. அடுத்தது அவிக உணர்ச்சிகளை தூண்டறது.

ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு "கவிதகேதி காது அனர்ஹம்" அதாவது பாடு பொருளாகும் தகுதியற்ற வஸ்துவே கிடையாதாம். அப்படி பெண்ணின் உடலில் உணர்ச்சியை தூண்ட உதவாத அங்கமே கிடையாது. கூந்தல் , நெற்றி, மூக்கு,கன்னம், உதடு, கழுத்து இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஓராயிரம் இருக்கும்.

வாத்சாயனர் சொல்ற தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல்,கடித்தல் (லேசா..வலிக்கும்)  போன்ற ஐட்டங்களையெல்லாமொரு பாட்டம் முடிக்கவே ஒரு மணி   நேரமாகும். குறைஞ்ச பட்சம் அரை மணியாச்சும் முன் விளையாட்டு இடம் பெறலைன்னா இத்தீனி முஸ்தீபும் வீணாயிரும்.

அது சரி இத்தனை விஸ்தாரமா போறதுக்குள்ள காரியம் கை மீறிட்டா என்ன பண்றதுனு கேப்பிக.

முதற்கண் எதிர்காலத்தில் நான் போடப்போற பிரம்மச்சரியம் பத்தின பதிவுகளை படிச்சாகனும்.

ரெண்டாம் கண் (முதற்கண்ணுக்கு அடுத்தது இதானே) வாசனை பாக்கு (இதை எதுக்கு சொல்றேனு ரோசிச்சு பார்த்தா - ட்ரை பண்ணி பார்த்தா புரியும்) , இளவட்டங்களா இருந்தா பபுள் கம் யூஸ் பண்ணலாம். கில்மால இறங்கறதுக்கு முந்தி நிறைய தண்ணீர் எடுத்துக்கனும். ஐஸ்வாட்டர் இருப்புல வச்சுக்கனும். காரியம் கை மீறி போற மாதிரி இருந்தா ஒரு ஜலாபிஷேகம். அந்த பிரதேசம் வரை செஞ்சாலே போதும். எல்லாமே பேக் டு தி பெவிலியன் வந்துரும்  (குளிர்காலம்னா இன்னம் ஸ்ரேஷ்டம்).

இன்னொரு டெக்னிக் என்னன்னா உங்க கான்சன்ட் ரேஷன் எல்லாம் துகிலுறியறதுல  இருக்கலாமே தவிர நீங்க மட்டும் சர்வாலங்கார பூஷிதரா இருக்கனும். வாட்சை கூட கழட்டாதிங்க. மேலும் உங்க இடுப்பு பிரதேசத்தை பாதுகாத்துக்கனும். ( அதாவது உரசல்லருந்து)


 யோனியின் அமைப்பை புரிஞ்சிக்கிடனும். (ஒரு பாட்டம்  வெஜினான்னுட்டு கூகுல் இமேஜஸ்ல சர்ச் பண்ணிப்பாருங்க .படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. இதுல க்ளிட்டோரிஸ்ங்கற மதன பீடம்தான் முக்கியம்மேற்படி தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல் எட்ஸெட்ரா ட்ரீட் மெண்டை இங்கனயும் ஆரம்பிச்சுரனும்.

இந்த எடுப்பு,தொடுப்பு, பல்லவி,அனுபல்லவி, நாலு சரணம்லாம் முடிஞ்சதுக்கு அப்பாறம்தான் நீங்க பார்த்த பாடாவதி நீலப்படம்லாம் . அப்பத்தான் சமரதம்னு சொல்ற ஒரே நேரத்திலான உச்சம் சாத்தியம்.  நாளை மிக்கா நாளைக்கு ஹால்ல உட்கார்ந்து "ஆச்சா ஆச்சானு கேட்டாலே அங்கன பத்திக்கும்.

ஆழமான உடலுறவுன்னா இதான். உங்க உடலுறவு இப்படி அமைஞ்சா அடுத்த உடலுறவு பத்து பதினைஞ்சு நாள் தள்ளி போகும் இயல்பான பிரம்மச்சரியம் கைவரும்.

ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த ப்ராசஸ்லருந்து  நீங்க ஆன்மீகம்ங்கற ப்ராசஸுக்கு ப்ரமோட் ஆவிக.

ஓகே உடு ஜூட்..

Friday, November 26, 2010

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்

நம்ம புள்ளைங்களுக்கு ( நடிகர் திலகம் பாணி) செக்ஸுன்னா என்னனு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  கண் பார்த்தா கை செய்யும்னு ஒரு பழமொழி உண்டு. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்னு நாமக்கல் கவிஞர் சொன்னாரே அல்லாத்தயும் நம்ம புள்ளைங்க தப்பாவே புரிஞ்சிக்கிட்டாய்ங்க.

செக்ஸுன்னா என்னனு தெரியும். ஆனால் அதுல கிடைக்கிற "காலாதீத நிலை" "குட்டி மரணம்" "ப்ளாக் அவுட்"  ஜஸ்ட் ஒரு  சினிமா ஸ்லைடு. அசலான படம் வேற இருக்குனு தெரியாது.

இதுக்கு காரணம் என்னன்னா நின்னு விளையாடறதில்லை. சச்சினாச்சும் எப்பயும் டக் அவுட் ஆனாலும் அப்பப்போ செஞ்சுரி போட்டுர்ராரு. நம்ம புள்ளைங்க எப்பயும் டக் அவுட்டுதேன்.

நாம எப்ப கில்மாவை தொட்டோமோ அப்பத்துலருந்தே பிரபல பத்திரிக்கைலல்லாம் ஒரு காலமாச்சும்  கில்மா எழுத ஆரம்பிச்சுட்டாய்ங்க.

நாம பரிகாரம் எழுத ஆரம்பிச்சா அவிகளும். நாம அனைவருக்கும் தனயோகம் போட்டா அவிகளூம்.

அடங்கொய்யால உங்களுக்கு தில்லிருந்தா இந்த பதிவுல எழுத போற சமாசாரத்தை எழுதுங்கடி.

நம்ம புள்ளைங்களுக்கு 7 : 23 நெம்பர் நல்லா ஞா இருக்கும்னு நினைக்கிறேன். அசலான வேலைக்கு பின்னாடி அவள் உச்சம் பெற  அவளுக்கு 23  அசைவு தேவைப்படுது. இவன் 7 அசைவுலயே நாக் அவுட்.

இடைப்பட்ட 16 நெம்பரை இழுத்துப்புடிக்கத்தேன் இந்த பதிவு. " அழுக்கு போக குளிச்சவனுமில்லை . ஆசை தீர ......வனும் இல்லை"னு சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க.

எல்லாத்துக்கும் ஒரு குன்ஸ் இருக்கு. ஒரு வியூகம் இருக்கு.  அதுல ஒரு பாகம் தான் இந்த முன் விளையாட்டு (இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லிங்கண்ணா)

இந்த ஃபோர் ப்ளேவோட நோக்கம் நிறைவேறனும்னா ஆண்,பெண் ரெண்டு பேருமே மேற்படி 7:23 வித்யாசத்தை புரிஞ்சிக்கிடனும்.

பெண் தன்னோட அச்சம்,  நாணம், வெட்கம்,மடம்,பயிர்ப்பு இத்யாதியையெல்லாம் ஓரளவாச்சும் ரிலாக்ஸ் பண்ணிக்கிடனும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். மேற்படி ஐட்டம்லாம் ஓவராயிருச்சுன்னா அது அசலுக்கே மோசமாயிரும்.

பெண் தன் நிர்வாணத்தை மறைக்கவே விரும்பறா. ஆண் அதை தரிசிக்கவே விரும்பறான். இவள் மறைக்க மறைக்க அவன் அதிகம் உ.வசப்படறான். 7ங்கறது நாலு அஞ்சு அசைவுலயே அவுட்.

 நமக்கு டீ சாப்பிடனும்போல இருக்கும். அந்த நேரம் பார்த்து நம்ம கூட்டாளி "மாமூ.. ஒரு டீ அடிக்கலாமா" னு கேட்டா ஒடனே நம்ம மைண்ட் அவன் கேஸ் ஹிஸ்டரிய புரட்டி பார்க்கும்.

இவனோட டீ குடிச்சா  நம்ம சமூக கௌரவம் பாதிக்கப்படுமா? இவன் காசு கொடுப்பானா? நாம கொடுக்க வேண்டி வருமா? இங்க இவனுக்கு கணக்கிருக்கா ? நமக்கு கணக்கிருக்கா?

செக்ஸுல அதுவும் தம்பதிகளுக்கிடையில இந்த கணக்கெல்லாம் தேவையில்லாத மேட்டர். நான் "சயனேஷு ரம்பா"ன்னுட்டு அவாளே சொல்லியிருக்கா.  இதும்படி பார்த்தா பெட்ல உட்காரச்சொன்னா படுத்துக்கிடனும். அப்படி படுத்தா தாளி அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி போயிரும்.அரண்டு போயிருவான். அந்த ரேஞ்சுக்கு போகலைன்னாலும்..

வாரி சுருட்டிக்கிட்டு ஓடாம, மதியம் சாம்பார்ல உப்பை போட நோகுதானு கேட்டதை ஞா வச்சுக்கிட்டு மரவட்டை கணக்கா சுருட்டிக்காம , ரொட்டீனா " சீ என்ன இழவு இதெல்லாம்"னுட்டு சொம்மா வேடிக்கை பார்த்தாலே போதும் ஆப்பரேஷன் பாதி சக்ஸஸ்.

இந்த ஃபோர் ப்ளேல ஆண் பெண் ரெண்டுபேருக்குமே மணீ ரத்னம் சினிமா மாதிரி ஒரு வரி வசனம் தேன். அவள் " வேணாங்க.. ச்சீ நீங்க ரெம்ப மோசம்" இவன் " ப்ளீஸ்டீ இன்னைக்கு ஒரே நாள்" பிரச்சினை தீர்ந்து போயிரும்.

எச்சரிக்கை:
இந்த டிப்ஸெல்லாம் சைக்காலஜிக்கலா, ஃபிசிக்கலா ஃபிட்டாயிருக்கிறவுகளுக்கு, அதுலயும் சாதாரண சந்தர்ப்பத்துக்குத்தேன். கண்ட நேரத்துல ,கண்டவுக கிட்ட அப்ளை பண்ணி அப்பள கட்டைல அடி வாங்கினா அதுக்கு நான் பொறுப்பில்லிங்கண்ணா.

7:23 க்கிடையில வித்யாசம் 16. இதை பாலன்ஸ் பண்றதுலதான் செக்ஸிலான வெற்றியே அடங்கியிருக்கு.

அந்த காலத்துல 10.30 மணிக்கு ஷோ ஆரம்பம்னா  9 மணிக்கே ரிகார்டு போட ஆரம்பிச்சுருவாய்ங்க. அதே குன்ஸுதான். செக்ஸுல ஆண் தான் முன் மொழியனும். பெண் வழி மொழியனும்.

அதனால ராத்திரி 10.30க்கு ஷோன்னா 10.15க்கு வீடு வந்து அள்ளிப்போட்டுக்கிட்டு பெண்டாட்டி மேல பாயறது முட்டாள் தனம்.

எட்டு எட்டரைக்கெல்லாம் மல்லிகை பூ இத்யாதியோட வீடு வந்து குளிச்சி டிவி பார்த்துக்கிட்டே.. " த .. நீ ச்சொம்மா அது இதுனு நீட்டி முழக்கிக்கிட்டு இருக்காதே எதுனா உப்புமா அது இதுனு சுருக்கமா முடி"ங்கனும்.

"த இன்னும் நீ இந்த பூவை வச்சிக்கலயா"ன்னுட்டு சமையலறைக்கே போய் தேவையில்லாம உரசினபடியே வச்சு விடனும் .

சாப்டுட்டு டிவிய பார்த்துக்கிட்டே "ஆச்சா ஆச்சா.. இன்னம் என்னத்த உருட்டறே நீ"ன்னுட்டு கேட்டுக்கிட்டே இருக்கனும். அப்ப அவிக சைக்கலாஜிகலா பிரிப்பேர் ஆயிருவாய்ங்க.

உங்க மைண்டல் ஒரு பாய்ண்டை கரீட்டா ஃபீட் பண்ணிக்கனும். உங்களோட ஃபோர் ப்ளே அதாங்க முன் விளையாட்டு அவிகளை டெம்ப்ட் பண்ணனுமே தவிர  உங்கள டெம்ப்ட் பண்ணக்கூடாது.

செக்ஸுங்கறது ஒரு வித்யாசமான ரன்னிங் ரேஸ். இதுல ஆண் முயல். பெண் ஆமை.

முயல் தன் வேகத்தை குறைச்சிக்கிட்டு ஆமையோட வேகத்தை கூட்டியபடியே ஓடனும். ஆணோட காமம் பால் பொங்கின மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி .

மெல்ல மெல்ல மோகத்தீய கிளப்பி சுடர் விட்டு பிரகாசிக்க வைக்கனும். அரிசி முழுக்க வேகற வரை தீ தொடரனும். இல்லைன்னா நாளைக்கு நீங்க ஊட்டி மலர் கண்காட்சியையே பேர்த்து எடுத்துக்கிட்டு போனாலும் .. வேஸ்டு.

நிறைய பெண்களுக்கு செக்ஸ் மேல இன்டரஸ்ட் குறைய காரணமே ஆண்களோட டக் அவுட் சமாசாரம்தேன்.

சரி மேட்டருக்கு வருவோம். சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க.

"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?" இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

(மீதி அடுத்த பதிவில்


அதான் பி.கு: சுகுமார்ஜீ  நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 (வல்லரசு கனவுகள்) ப்ளானை விஷுவலைஸ் பண்ணி ஒரு ஒளிப்படம் தயாரிச்சு விட்டிருக்காரு (பார்த்திங்கல்ல) அதை மஸ்தா பேரு பார்க்கனும்னு தான் இந்த கில்மா பதிவு

Thursday, November 25, 2010

புட்ட பர்த்தி பாபாவும் ஆட்டோசங்கரும்


புட்ட பர்த்தி சாயி பாபாவோட பிறந்த  நாளுக்கு பராம்பரிய பத்திரிக்கைங்க எல்லாம் சிறப்பிதழ் போட்டாய்ங்க

( பின்னணி ஒரு இழவுமில்லை : விளம்பரம்தேன் - வாசகனை நம்பி பத்திரிக்கை நடத்தின காலம் போச்சு - இன்னைக்கு விளம்பர தாரனை நம்பி பத்திரிக்கை நடத்தற காலம்)

பிரதமர், முதல்வர்,கவர்னர் (  இந்தாளு சாஷ்டாங்கமா வேற கால்லவிழுந்தாரு ) . நான் ஒரே கேள்விதான் கேட்கறேன்.

இன்னைக்கு நீங்கல்லாம் போனிங்க வந்திங்க. கேட்டா சொந்த சமாசாரம்பிங்க. சரி நைனா நாளைக்கே பாபா ஆசிரமத்துல ஒரு கொலை நடக்குது . தற்கொலை நடக்குது. லோக்கல் போலீஸ் உள்ளார  நுழையுமா? ( நிறையவே நடந்திருக்கு-பாபாவையே சுடப்போனான் ஒருத்தன் -பாபா பாவம் அவசரத்துக்கு சங்கு சக்கரம்லாம் கிடைக்காம (அவர் தான் கடவுளாச்சே) அலாரத்தை அமுக்கி எஸ்கேப் ஆனாரு)  நுழைஞ்சாலும் தில்லா விஜாரிக்குமா?

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு.  ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும்.

அதிலும் சமுதாயத்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும், தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால்  என் கிழிப்பு தொடரும்.

நாம பாபா பத்தி பேசினா ஒடனே தண்ணி கொடுத்தாரு, கண் ஆப்பரேஷன் பண்ணாருங்கறாய்ங்க. ஆட்டோசங்கர் கூட அதைத்தானே பண்ணாரு. அவருக்கு தூக்கு. இவருக்கு ?

( கடந்த காலத்தில் அதிகாலை டாட் காம் விடுதலை டாட் காமில் வெளி வந்த புட்டபர்த்தி பாபாவின் புருடாக்கள் என்ற பதிவை லேசான எடிட்டிங்குடன் இங்கு வெளியிட்டிருக்கிறேன்.படிங்க. கமெண்ட் அடிங்க)


சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா? அதுவேதான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான்தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார்.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா என்கிறார்கள். அதே பரட்டை தலை. அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50- க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க!

புட்டபர்த்திக்காரர்  உங்க முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியர்ல இல்லிங்கண்ணா) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தெய்வமே எனப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். உடனே கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம்? இழுத்து பூட்ட வேண்டாமோ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி

ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய) சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக "கப் ஆஃப் காஃபி" என்றான். பாபா ஏன் அவனிடம் நிற்கிறார்? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்?

சுவர்க்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்

கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார். கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய்ச்சேர்ந்தார்.

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா? கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் என்ன கேனையனா?

இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்றுதானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார். இவரோ நானே கடவுள் என்கிறாரே! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியதுதானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் (முன்னாள்) டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர். ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்னுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும், கண்ணி வெடி வைத்து கொல்லப் பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா? தெரிந்தும் தடுக்கவில்லையா?

குற்றம் நிகழவிருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்துக்கொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ?)

டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:

ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம்.

(இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம் - லேட்டஸ்ட் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கூட விட்டாய்ங்க - வாசனுக்கும் விட்டாய்ங்க - அப்போ பாபாவும் வாசனும் ஒரே ரேஞ்சா)

அட கூமுட்டைகளா! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா?

இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார். ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மாநிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள் (சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன்? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ!

நானே கடவுள்… என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ?

தூர்தர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்

அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின்போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம். உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். “அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க" என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா
பக்தர்தான்.

கொலை முயற்சியின்போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்?

பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான். பாபா கடவுள்தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனைபோல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.

வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு

ஆந்திர மாநிலம், அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்நாடக மாநிலம், வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களான வெளிநாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

குடி நீர் திட்டம்

ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது பாபா நீங்கதான் கடவுளாச்சே.. நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரணும்? என்று கேட்கிறமாதிரி இல்லை.

வெளிநாட்டை சேர்ந்த பெப்சி, கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும், புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வரக்கூடாது என்று அழுத்தம் தரலாமே! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே! மணல் கொள்ளையை தடுத்து, மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்).

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை. அவரும் பாபா பக்தர்தானே. பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே! சரி அதுதான் ஒழியட்டும் மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்ட ஆரம்பித்தாரே  அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி, ஆதரவு தெரிவித்திருக்கலாமே!

எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டு அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்றுவரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்து வருகிறார் ஆதி கேசவுலு. அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போது புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார். கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே!

பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி

பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது, தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும். அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட "லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி"(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது.

ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகி வருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள் மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.

ஒரு அணிலின் உதவி...

ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தின் பாதையில் ஒரு அணிலின் பங்களிப்பு...

திரு. முருகேசன் அவர்களின் திட்டம்... ஒளிவாயிலாக...

Wednesday, November 24, 2010

புருசன் + கள்ளப்புருசனுக்கிடையில

புருசன் கள்ளப்புருசனுக்கிடையில பாலன்ஸ் பண்ணிக்கிட்டு லைஃபை ஓட்டறது எம்மாம் கஷ்டம்னு அவிகளுக்கு தான் தெரியும். பகவத் பக்தி பத்தி சொல்றச்ச ரா.கி பரமஹம்சர் சொல்வாரு " ஒரு பொம்பளை தன் புருசனுக்கு தேவையானதை எல்லாம் பக்காவா செய்துக்கிட்டே இருப்பா. ஆனால் அவள் மனசு கள்ள புருசன் மேல, அவன் வரச்சொன்ன இடத்து மேல,அவன் தரப்போற சுகத்துமேலதான் கான்சன்ட் ரேட் ஆகி கிடக்கும். அதே போல ..

இந்த உலகம்ங்கற கணவனுக்கு செய்யவேண்டிய பணிவிடையையெல்லாம் பக்காவா செய்துட்டு இரு. ஆனால் உன் மனசு மட்டும் கள்ளப்புருசனான கடவுள் மேலயே கான்சன்ட்ரேட் ஆகியிருக்கனும்.

இந்த மேட்டர்ல  பேலன்ஸிங் கப்பாசிட்டி மட்டும் பொம்பளைகளுக்குதேன் அதிகம்னு ஒரு சம்சயம். எவனெல்லாம் உபரியா எவளை வச்சிருக்கானு பட்டுனு தெரிஞ்சுபோவுது. ஆனால் எவள் எவனை உபரியா வச்சிருக்காங்கறது கொலை,தற்கொலைனு எதுனா எக்குதப்பா நடந்தாதான் வெளி உலகத்துக்கு தெரியுது.

ரெண்டு பெண்டாட்டிக்காரவுக பொளப்பு நாறப்பொழப்பு. இவிகல்லாம் கள்ளக்காதல் மேட்டர்ல தாய்குலத்தை ஃபாலோ பண்ணிக்கிட்டா பெட்டர் போல.

கரகாட்டம் பார்த்துருப்பிங்க. ஆட்டம் பாட்டுக்கு நடந்துக்கிட்டிருக்கும்.வாண வேடிக்க ஒரு பக்கம், மேள தாளம் ஒரு பக்கம், சாமி ஊர்வலம் ஒரு பக்கம், வேடிக்கை பார்க்கிற கூட்டம் ஒரு பக்கம்  எவன் ஜாக்கெட்ல நோட்டு குத்துவான் , எவன்    நோட்டை மட்டும் குத்துவான், எவன் கப்பாசிட்டி என்னனு குன்சா கமனிச்சிட்டே இருக்கனும். இத்தீனி இழவுக்கும் இடையில தலையில வச்சிருக்கிற கரகம் விழுந்துராம பார்த்துக்கனும்.

நம்ம நிலையும் இதாண்ணேன்.அஷ்டாவதானம், சதாவதானம்லாம் தாய்க்குலத்துக்கு கை வந்த கலை. கைக்குழந்தைய வச்சிக்கிட்டி காஃபி,டிஃபன்,சோத்துக்கடைய பார்த்துக்கிட்டே ஆத்துக்காரருக்கு வென்னீர் போட்டு, ஷூவை  துடச்சி பாலிஷ் போட்டு  வச்சி, நாறிப்போன சாக்ஸை அவசரமா துவைச்சி ஃபேன் காத்துல உலர்த்தி
ய.......பாஆஆஆஆஆஆஆ

வெளியூர் போறச்ச நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துருதுண்ணே. (ஊரை போய் சேரனுமேங்கற டெட்லைன் - தாளி இந்த உலகமும் வெளியூர்தானே.- ஒரு நாளில்லை ஒரு நா மேலூர் போக வேண்டியதுதானே -அதை மறந்துட்டதாலதான் இந்த குழப்படி -வெத்து அலட்டல்)..

என்னை பொருத்தவரை ரா.கியோட ஃபார்முலாவை விடாப்பிடியா ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன்.

நமக்கு கள்ள புருசன் ஆப்பரேசன் இந்தியா2000. "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோணே"னு நாம எது செய்தாலும் அது ஆ.இ க்காகத்தேன்.

நியூமராலஜிப்படி நவம்பர் 7 முதல் டிசம்பர் 7 வரை ( நமக்கு மட்டும்ணே) அல்லல்,அலைச்சல், சாகசயத்தனம்லாம் தூள் கிளம்பனும். கரீட்டா கீதுண்ணே. எட்டாம் தேதி வீடு மாத்தினேனா , எது எங்கன இருக்குனு தெரியவே ஒரு வாரம் ஆச்சு.


படக்குனு ஆஃபீஸ் போட ஷகரான பஜார் தெருவுல இடம் கிடைச்சது. அந்த வெலை ஒரு வாரம் இழுத்துருச்சு.  இத்தனைக்கும் ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் எதுவும் விடலை. தமிழ்பதிவு, தெலுங்கு பதிவு, ஆன் லைன் ஜோதிட ஆலோசனையெல்லாம் தனி தனி ட்ராக்ல ஓடிக்கிட்டே இருந்தது.


இதுல லோக்கல் பாலிட்டிக்ஸ் வேற சூடாயிருச்சு.ஒரு புதுப்பணம், மந்திரி ஒத்தாசையோட  பயங்கர படம்லாம் காட்ட ஆரம்பிச்சிருச்சு. தமிழ் நாட்ல கதை எப்படியோ ஆந்திராவுல பிற்படுத்தப்பட்டோர் அரசியல்னு தனியே ஒரு பிட்டு தனி  ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். த. நா மாதிரி படு தேசல் இல்லைன்னாலும் சின்னபாம்பையும் பெரிய தடி கொண்டுதானே அடிக்க வேண்டியிருக்கு.

லோக்கல் எம்.எல்.ஏ ஓ.சி. அந்த ஒரு ஆசாமிக்கு ஆப்பு வைக்க BCகர்ஜனானு ஒரு ப்ரோக்ராம் பண்ணாய்ங்க.  BCக்கு அரசியல் அதிகாரம்ங்கறது அஜெண்டா. தாளி .. BCக்கு அதிகாரமா?, BC லீடர்ஸுக்கு அதிகாரமா?, அவிக வாரிசுகளுக்கு அதிகாரமா? தமிழ் நாட்ல தாத்தாவே BC தேன்..

த.நா BCங்க வீட்ல ரெண்டு குழாய் போட்டு ஒன்னுல பாலும்,இன்னொன்னுல தேனுமா வருது..

அரசுவேலைல ரிசர்வேஷன் கேட்டிங்க.. வந்தாச்சு. வானத்தை வில்லா வளைச்சுட்டிங்களா இல்லை. அரசுவேலைய நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்? விவசாயத்தை நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்.. விவசாயத்துக்கு அடிப்படை நிலம். ஜனத்தொகை அடிப்படையில நிலம் கேளு.

டைரக்ட் டெமாக்ரசி கேளுங்கப்பா. அட்லீஸ்ட் பிரதமர்,முதல்வர் பதவிக்கு டைரக்ட் எலக்சன் கேளுங்கப்பா அதை விட்டுட்டு எவனோ பத்து பேரு எம்.எல்.ஏ ஆகனும்னு சனத்துக்கு கொம்பு சீவி விட்டுக்கிட்டு அலப்பறை பண்ணாதிங்கனு  தலையங்கம் எழுதி கொஞ்சம் போல காசு பணம், சனம் மொபிலைஸ் பண்ணி ஒரு ஸ்பெஷல் இஷ்யூ போட வேண்டியதாயிருச்சு.

ஆ.இ வுல மொதல் பாயிண்டே நேரிடை ஜன நாயகம் தேன்.

நேத்து (24/11/2010) பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாச்சு. காங்கிரசுக்கு கல்தானு கூட சொல்ல முடியாது கல்லறையே கட்டிட்டாய்ங்க. இது உலகறிஞ்ச உண்மை. ஆனால் 21 ஆம் தேதி பாதி ராத்திரி ( 22 விடியலுக்கு பூர்வம்)   நமக்கு கொஞ்சம் ஞம ஞமங்கவே சோனியா டேட் ஆஃப் பர்த்தை பீராஞ்சு பார்த்தேன். 9/12/1946.

இப்ப இன்னா வயசு? அதை நேம் நெம்பரால டிவைட் பண்ணா 8. அடடா அப்போ எட்டாவது ரவுண்டா? 2009லயே ஸ்டார்டாயிருச்சா? அதான் தெலுங்கானா மேட்டர்ல கைவச்சு நாறிட்டாய்ங்களா அது இதுனு  கிராஸ் செக் எல்லாம் முடிச்சு சோனியாவுக்கு கஷ்ட (கண்ட) காலம்ங்கற தலைப்புல தெலுங்குல ஒரு பதிவ போட்டேன். அதைப்பார்க்க இங்கே http://sambargaadu.wordpress.com/2010/11/22/futuresoniya/
அழுத்துங்க.

நான் இந்த பதிவை போட்ட பிற்பாடுதான் பீகார்ல ஆப்பு, ஆந்திராவுல முதல்வர் மாற்றம். கிரண் குமார் ரெட்டி சித்தூர் மாவட்டம். ராயலசீமா கல்ச்சர். ஒய்.எஸ். சிஷ்ய கோடி. ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் கைக்கு வந்தா அப்ப இருக்கு கச்சேரி.

ஹய்யா .. யாரு அடுத்த சி.எம்ன்னுட்டு பெட்டிங்கே ஆரம்பிச்சுரலாம்.


9ன்னா செவ். செவ்வாய்க்குரிய காரகத்வங்கள் கீழே: (செவ்வாயே சொல்றாருங்கண்ணா)

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

எச்சரிக்கை: மேற்சொன்ன எல்லா மேட்டர்லயும் ஆப்புத்தேன். இதை எழுதற என் பேர் கூட முருகக்கடவுள் தொடர்பானதா இருக்கிறதை கவனிக்கவும்.

Tuesday, November 23, 2010

மருந்தா ? நோய்க்கு விருந்தா? - 2

இன்னா பாஸ் ஜோசியரா இருந்துக்கிட்டு எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிறிங்களேனு கேப்பிக. இதுலயும் சோசியம் வருது தலை. மருத்துவம் -ஜோசியம் ரெண்டுக்கும் புதன் தான் அதிபதி. மேலும் ஜாதகத்துல 6 ஆவது இடம் கடன்,நோய்,விரோதங்களை காட்டும். இந்த இடம் காலியா இருந்தா நல்லது . இந்த பாவாதிபதி 8 அ 12ல நின்னா நல்லது. அந்த இடத்துல இவருக்கு பலமில்லாம இருந்தா இன்னம் நல்லது.

இது ஜஸ்ட் உங்க ஜாதகப்படி . கோசாரத்துல எடுத்துக்கிட்டா எப்பயும் ஏதோ ஒரு கிரகம் 6 ல மாட்டித்தான் தீரும், ஆறுக்கதிபதி பலம் பெறலாம். அல்லது 8,12 தவிர வேறு இடத்துல வரலாம். அப்ப ரோகம் வந்துதான் தீரும். அந்த கிரகத்தை பொருத்து அந்த கிரகத்தின் காரகத்வம் தொடர்பான ரோகம் வரும்.

நோய்ங்கறதே உங்க பாடி ஹெல்த்தியா இருக்குங்கறதுக்கு ஒரு அடையாளம் தான். பாடில நடக்கிறது ரெண்டு காரியம் . அசிமிலேஷன்,எலிமினேஷன். அசிமிலேஷன்னா ஆக்சிஜனை சுவாசிக்கிறது,லாலா ( தண்ணீர் பாஸ்) குடிக்கிறது, புவ்வா திங்கறது எலிமினேஷனுன்னா கார்பண்டை ஆக்சைடை வெளிய விடறது, மூச்சா போறது,கக்கா போறது.

இந்த காரியம்லாம் பக்காவா நடந்தா நோயே வராது. ஆனால் எப்படியா கொத்த ஹெல்தி பாடியிலயும் தினசரி கொஞ்சம் போல மஷ்டு சேர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.

காரணம் :

நம்ம சுவாசம் ஆழமா இருக்கிறதில்லை (சிந்தனை வேகம், சிந்தனை போக்கை பொருத்து சுவாசமும் மாறும்) காத்துல பொல்யூஷன் இருக்கலாம். தாளி சிக்னல்ல ரெண்டு நிமிசம் நின்னா போதும் லங்ஸுல ஒட்டடை தான்.

தண்ணி சுத்தமானதா இல்லாம இருக்கலாம். போதுமான அளவு குடிக்காம இருக்கலாம். (முக்கியமா பெண்கள் இவிகளுக்கு பப்ளிக் யூரினல்ஸ் இல்லாததால மூச்சா போற தொல்லைய அவாய்ட் பண்ண லாலாவே குடிக்க மாட்டாய்ங்க)

அடுத்தது புவ்வா. வேளையறிந்து,வேலையறிந்து ,பசியறிந்து சாப்பிடனும்.கலப்புணவா இருக்கனும். ஃபைபர் இருக்கனும் ( நார் சத்து) உப்பு காரம் ,புளி,இனிப்பு குறைவா இருக்கனும்.

பச்சையா தின்னா 100% சேஃப். வேக வச்சு சாப்பிட்டா 80% சேஃப். தாளிச்சா 60% சேஃப். வதக்கினா 40% ,எண்ணெயில பொறிச்சா தாளி அது விசம். அதுலயும் கையேந்தி பவன் கஸ்மால எண்ணெயில பொறிச்சிருந்தா கடுமையான விஷம். ஆலாலம் உண்ட ஈஸ்வரனே அதை விழுங்க கஷ்டப்படனும். ( சைட்ல குவார்ட்டர் இருந்தாதான் ட்ரை பண்ணலாம்)

வேளையறிஞ்சு சாப்பிடறதுன்னா என்ன? நம்ம பாடியெல்லாம் சோலார் பேட்டரி மாதிரி . நமக்கு சார்ஜ் கிடைக்கிறது சூரியன்லருந்துதான். சூரியன் மறைஞ்சா நமக்கும் பேட்டரி லோவாயிரும்.

பகல் பொழுது இருக்கக்கூடிய ஈகோ,தன்னம்பிக்கை,கொள்கை பிடிப்பு ( சதைபிடிப்பு இல்லிங்கோ) சமூகம் பற்றின அச்சம்லாம் சந்திரன் உதிச்சதுமே ஃபணாலாயிரும். சந்திரன் மனோகாரகன். மனசு சஞ்சலமானது. சபலம் நிறைஞ்சது.

சூரியன் மறைஞ்சதுமே பேட்டரி வீக்காயிரும். பயாலஜிக்கல் க்ளாக் ஸ்லோவாயிரும். அந்த நேரத்துல லாலா (தண்ணீ)வோட ,மசாலா ,பெருந்தீனின்னு இறங்கினா டோட்டல் பாடி செட்டப் திணற ஆரம்பிக்கும்.

எனக்கப்படி இல்லைன்னு நீங்க சொல்லலாம். ( நிறைய பேருக்கும் இதான் ஃபீலிங்.ஆனா இது பழக்க தோஷம் ) மனிதன் பின்னோக்கியே கூட நடக்கலாம் அதுக்கு பயிற்சி தேவை. ஒரே கால்ல கூட நடக்கலாம். அதுக்கு பயிற்சி தேவை. இதைவிட ரெண்டு காலால முன்னோக்கி நடக்கிறது எத்தனை சிம்பிள். எந்த அளவுக்கு எஃபிஷியன்ஸி அதிகரிக்கும்னு நினைச்சு பாருங்க.

எளிதில் செரிக்கக்கூடிய, குடலை துன்புறுத்தாத, எளிதில் வெளியேறக்கூடிய உணவை நம்ம வேலைக்கேற்ற உணவை சரியான வேளையில், மிதமான சூட்டில் , நல்ல மன நிலையில்  நல்ல கம்பெனியோட நல்ல பார்ட்டி பரிமாற தின்னா கிடைக்கிற ஆரோக்கியமே வேற.

இதெல்லாம் நடக்கிற காரியமில்லை. அதனாலதான் இத்தீனி காம்ப்ளிகேஷன்ஸ்.  போதுமான உணவு கிடைக்காம செத்தவுகளை விட அளவுக்கு அதிகமான தீனிய தின்னு செத்தவுக தான் சாஸ்தி.

கொஞ்சமா திங்கறது,கொறிக்கறது,பசியில்லாம திங்கறது இப்படி நந்தூர்னி , நாமர்தா வேலைல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தாலும் இளமை ஊஞ்சலாடறவரை ,  ஆளு ஓடியாடற வரை சமாளிக்கலாம் ( 3ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மாதிரி) . ரத்தம் யோசிக்காம ஓடறத விட்டுட்டு  நின்னு ரோசிக்கறச்ச பல்ப் மாட்டிக்கிது.

என் ஏஜ் க்ரூப்ல ஏறக்குறைய எல்லாருமே தொந்தி ,பிருஷ்டம், ஷுகருன்னு செட்டிலாயிட்டாய்ங்க. உட்காந்து வேலை செய்யறது சாஸ்தியாயிட்டதால லைஃப் ஓரளவு க்ளாக் வைசா ஓடறதால நமக்கு ஒடம்பு கொஞ்சம் போல பூசினாப்ல இருக்கிறது  நெஜம் தான்.

இதை ஓவர் லுக் பண்ணத்தான் 20X30 ல மல்ட்டிகலர்ல  ரெண்டு  காலண்டர் போடறதுனு டிசைட் பண்ணி ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கேன். டோட்டல் பட்ஜெட்  ஒரு லட்ச ரூபா. 5 ஆயிரம் + 5 ஆயிரம் காலண்டர் . கையிலருந்து பத்து பைசா செலவழிக்காம கடைசி பைசா வரை ஸ்பான்சரர்ஸை பிடிச்சாகனும். ( பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி) காக்கா மாதிரி சுத்தி சுத்தி  மாடிப்படியெல்லாம் இந்திராகாந்தி ரேஞ்சுல ஏறிட்டிருக்கன் அதுவேற விசயம்.

இதுவரை சொன்ன மேற்சொன்ன தவறுகளால பாடி செட்டப், ஃபங்க்ஷனிங்கே தாறுமாறாயிரும்.  உடல் இயக்கத்தில்   என்னென்னமோ கோளாறுகள் எல்லாம் வரும்.

உ.ம்: நாக்குல மாவு படியறது, ருசி தெரியாமை, பசியின்மை, வாயு கோளாறு, வயித்துவலி, வயித்துல எரிச்சல், எதுக்களிப்பு, மலச்சிக்கல், ஆசனகடுப்பு, பைல்ஸ்

இந்த பிரச்சினையெல்லாம் நோய் இல்லை. பாடி ஃபன்ங்க்ஷனிங்ல கோளாறு இருக்குனு காட்டற சிம்ப்டம்ஸ். இதுக்கான காரணம் என்ன? அசிமிலேஷன்,எலிமினேஷன்ல  நடந்த குழப்பம். மேற்சொன்ன பிரச்சினைகள்ளாம்  வந்த பிறவாச்சும் "ஏன் ஏன் ஏன்" வடிவேலு ரேஞ்சுல கேள்வி கேட்காம டாகடர் சொன்ன மருந்து மாயத்தை எல்லாம் விழுங்கி வைக்கிறோம்.

எந்த டாக்டராச்சும் நோய்க்கான காரணங்களை சொல்லி அதையெல்லாம் அவாய்ட் பண்ண சொல்லியிருக்காரா சொல்லுங்க மேற்கொண்டு இந்த மருந்து மாயங்கள் பண்ற கூத்தை அடுத்த பதிவுல  பார்ப்போம்

Monday, November 22, 2010

மருந்தா ? நோய்க்கு விருந்தா?

அண்ணே வணக்கம்ணே,
நிர்வாண உண்மைகள்னு டைட்டில் வச்சிக்கிட்டு, வானத்துக்கு கீழானவை மட்டுமல்லனு சப் டைட்டில் வச்சுக்கிட்டு ஒரு சப்ஜெக்டை பத்தி எழுதாமயெ விட்டுட்டது உறைக்கவே கோதாவுல இறங்கிட்டேன்.

அந்த சப்ஜெக்ட் ..டட்டடாஆஆஆஆஆஆஆய்ங் ..மருத்துவம் தேன். பொதுவா சட்டத்தை பத்தியும் மருத்துவத்தை பத்தியும் நிபுணர் அல்லாதவர்கள் எழுதக்கூடாதுனு சட்டம் இருக்கு.

நாம என்ன 24 மணி நேரத்தில் எடை குறைய, விளக்கு கம்பம் கணக்காய் நிற்க, 6 மணி நேரத்தில் மூஞ்சி செங்குரங்கா மாறனு ஊரை ஏமாத்தவா போறோம் . இல்லை. எப்படியெல்லாம் ஏமாத்தறாய்ங்கனு தான் எழுதப்போறோம். ஒரு மருத்துவனா இல்லாம மருத்துவனா வேஷம் கட்டி எழுதினாதான் சட்டப்படி தவறு.

ஒரு நோயாளியா,ஒரு தனி மனிதனா நம்ம கருத்துக்களை எழுத உரிமை இருக்குங்கண்ணா..

எனக்கு தெரிஞ்ச சட்டப்படி - தீர்க்க முடியாத தீர்க ( நாள்பட்ட)  வியாதியை தீர்க்கறேனு விளம்பரம் தர்ரது தவறு. உ.ம் கான்சர், எய்ட்ஸ், சொரியாசிஸ்,எழுச்சி இன்மை

தீர்க்க முடிஞ்ச வியாதியை கூட தீர்க்கறோம்னு கூட விளம்பரமே தரக்கூடாது. இவ்ள ஏன் போர்டு கூட பெருசா வைக்ககூடாது.(மெடிக்கல் கவுன்சில் நார்ம்ஸ் படி) .

இதையெல்லாம் எத்தீனி பேரு ஃபாலோ பண்றாய்ங்கனு உங்களுக்கே தெரியும்.

நம்ம சிற்றறிவுக்கு எட்டின வரையில எல்லா மருத்துவமுமே டுபாகூர்தான். காரணம் என்னன்னா.. நோய்காரணத்தை ட்ரீட் பண்றதில்லை. நோய் குறிகளைத்தான் ட்ரீட் பண்றாய்ங்க.

உ.ம்: ஜல்பு. ஜல்பு ஏன் வந்ததுனு எந்த டாக்டரும் விஜாரிக்கிறதில்லை. உடனே ஆன்டிபயாடிக் எழுதி கொடுத்துர்ராய்ங்க (டஸ்ட் அலர்ஜி இருக்கலாம் - ஒட்டடை அடிச்சிருப்பான், சன்னலோர சீட்ல பல நூறு மைல் ஜர்னி பண்ணியிருப்பான் . எதுனா ஒரு ஐட்டம் இவனுக்கு ஒத்துக்காததா இருக்கும் -அதையே ஒரு வெட்டு வெட்டியிருப்பான் அட சிறு பருப்பு/ பைத்தியம்பருப்பு சாம்பார் அடிச்சிருப்பான்னு வைங்களேன்).

இன்னொரு சமாசாரம் என்னடான்னா பாடி வேணானு வெளிய தள்ற ஐட்டத்தைதான் லேப்ல வச்சு டெஸ்ட் பண்ணுறாய்ங்க. உடம்பு எடுத்துக்கிட்ட சரக்கை டெஸ்ட் பண்ண வாய்ப்பே இல்லியே..

அல்லோபதில தர்ர மருந்துக்கு ட்ரக்னு பேரு. இதுக்கு டிக்சனரி மீனிங் : மாறுபட்ட விளைவை தூண்டும் பொருள்

உங்களுக்கு ஜுரம்னு போனா வியர்வைய தூண்டற மருந்தை தருவாய்ங்க.பேதினு போனா ப்ளாட்டிங் பேப்பர் கணக்கா மலக்குடல்ல உள்ள நீரை கூட ( உவ்வே)  உறிஞ்சிக்கிற மருந்தை கொடுப்பாய்ங்க. அப்பாறம் நாலு நாளைக்கு கக்காவே வராது

ஹோமியோபதினு ஒரு சப்ஜெக்ட். இதுல நோய்க்கான காரணம் எதுவோ  சிகிச்சையும்  அதுவேங்கறது இதன் சித்தாந்தம். ஹோமோன்னா ஒருனு அர்த்தம் .ஹோமோ செக்ஸுன்னா ஓரின சேர்க்கை. ஹோமியோன்னா நோய்க்காரணத்தையே சிகிச்சையா தர்ர மருத்துவம்னு அர்த்தம்.

அடுத்தது சித்தமருத்துவம். அல்லோபதில செயற்கையா தயாரிச்ச விசத்தை வச்சு ட்ரீட் பண்ணுவாய்ங்க. சித்தமருத்துவம் இயற்கையான விசங்களை யூஸ் பண்ணும்.

உ.ம் ஆஸ்மா/இசிப்பு (?) மூச்சிரைப்பு  காரவுகளுக்கு தர்ர ட்ரீட்மென்ட். பேசண்ட் மூச்சு விடவே முடியாம திணறிகிட்டிருப்பான். டாக்டர் ஹிட் மருந்தடிச்ச கணக்கா ஒரு டப்பாவ எடுத்து வாய்க்குள்ள விட்டு புஸ்கு புஸ்குனு அடிப்பார். ஒடனே ப்ராப்ளம் சால்வ்ட். எப்படி?

தாளி ஒடம்புக்கு ஒத்துவராத ஏதோ ஒரு இழவு உள்ளாற போயிருச்சு. அதை வெளியேற்ற நுரையீரல் டபுள் ட்யூட்டி பண்ணுது. அது வெளியேற்ற முயன்ற சரக்கை விட மோசமான சரக்கை டாக்டர் புஸ்கு புஸ்குனு அடிச்சாரு.

நுரையீரல் "தூத்தெறிக்க ..எக்கேடோ கெட்டுப்போ"னு தன் முயற்சியை நிறுத்திருச்சு தட்ஸால்.

சித்தமருத்துவத்துல சுக பேதியாக விளக்கெண்ணை கொடுப்பாய்ங்க. வி.எண்ணெய் உள்ளாற போனதுமே உடம்பு அதை வெளித்தள்ள ட்ரை ப்ண்ணுது.ஏன் ?அது உணவல்ல. உடலுக்கு ஒத்துக்க கூடிய ஒன்னல்ல. விசம் என்பதால் வெளித்தள்ள பார்க்குது அந்த முயற்சில மஷ்டு எல்லாம் வெளிய வருது..

(இப்படி சொல்ல வேண்டியது  மஸ்தா கீது வாத்யாரே.. அடுத்தடுத்தபதிவுல பார்ப்போம்)

Sunday, November 21, 2010

பணம் ஒரு கன்னித்திரை

1.பணம் வாழ்க்கை பயணத்துக்கு தேவையான எரிபொருள்

2.பணம் ஜஸ்ட் ஒரு கருவி. அத வச்சு என்னத்த கழட்டப்போறோங்கறதுதான் முக்கியம்

3.லட்சியத்தை அடைய பணமும் ஓரளவு உதவலாம். ஆனால்பணமே லட்சியமாயிட்டா தூத்தேரிக்க..

4.நாம சம்பாதிக்கனும்னா  நம்மை சுத்தி இருக்கற ஒவ்வொருத்தனும் சம்பாதிச்சிட்டே இருக்கனும்.

5.என்னைக்கோ ஒரு நா சம்பாதிச்சா வேஸ்ட். தினம் தினம் சம்பாதிக்கனம்.  நீங்க ஃபீல்டுல இருந்தாதான் பணம் வரும்னா அது  ஒர்ஸ்ட். நீங்க இல்லாட்டாலும் பணம் வந்துட்டே இருக்கும்னா அது பெட்டர்.

6.அடுத்தவனோட நஷ்டம் தான் உங்க லாபம்னா ஒரு நாளில்லை ஒரு நாள்  அவன் நஷ்டப்பட முடியாத இழி நிலைக்கு வந்துருவான் .அப்ப உங்க நிலை கோவிந்தா கோவிந்தா

7.கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது சுகமா வாழத்தான். என்னைக்கோ ஒரு நா சுகப்படலாம்னு கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்தா கதை கந்தலாயிரும்.

8.பணம் பழக்கப்பட்டுட்டாலும் பரவால்லை. அது போதையாயிட்டா பொழப்பு நாறிரும்.

9.பணம் ஒரு சவுண்ட் ப்ரூஃப். பெட்டி நிறைய பணம் இருந்தா ஏழைங்களோட பசி கூச்சல் காதுல விழவே விழாது.

10. பணம் BP டாப்ளெட்ஸை விட  சூப்பரா BPயை கண்ட்ரோல் பண்ணும்.

11.பணத்துக்கு சுய மரியாதை சாஸ்தி. அகங்காரம் பயங்கர எதிரி. எவன் பணத்தை தன்  ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக செலவழிக்கிறானோ அவன் கிட்டே இருந்து கழண்டுக்கும்.

12.பணம் விலை உயர்ந்த சென்டை விட பவர் ஃபுல் .உங்க நாத்தத்தையெல்லாம் கண்ட் ரோல் பண்ணிரும்

35.பணம் ஒரு மவுத் ஃப்ரெஷ்னர் ..உங்க பேச்சுக்கு வாசனைய கூட்டும்.

36.பணம் எலும்பு துண்டு மாதிரி. சனம் நாய் கூட்டம் மாதிரி. எலும்பை வீசிட்டே போகனும். அதுக்காகவாச்சும் எலும்பை பொறுக்கியாகனம்

37.பணம் ஒரு ரா மெட்டீரியல் அதை வச்சு  நீங்க தயாரிக்கப்போற  ப்ராடக்ட் எதுங்கறது முக்கியம். பணத்தையே ப்ராடக்டுனு நினைச்சுட்டா ஒரு வாழ் நாள் வீணாயிரும்.


38.பணம் ஒரு மூங்கில் . அறிவாளி அரையடில ஓட்டை போட்டு புல்லாங்குழலாக்கிர்ரான். முட்டாள் எட்டுக்கு எட்டா வெட்டி பாடையாக்கிக்கறான்.

39.பணம் உங்க கிட்ட மஸ்தா இருந்தா பணம் இல்லாமயே எல்லா வேலையும் ஆயிரும். அது இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் கட்டாயம் பணம் தேவை.

40.பணம் இல்லாதவுக இருக்காய்ங்க. பணத்தேவையில்லாதவுக இல்லவே இல்லை.

41.பணம் சஞ்சீவனி வேர் மாதிரி செத்துப்போனவனுக்கு உயிர் கொடுக்கும். ( என்ன ஒரு லொள்ளுன்னா நீங்க உசுரோட இருக்கிறச்சயே உங்க இதயத்தை கொன்னுரும்)

42. சம்பாதிக்கிறதுக்கு முதல் படி  பேட் பிடிச்சுக்கிட்டு அவுட் ஆகாம நிக்கறதுதான். சிக்ஸர்,ஃபோர் எல்லாம் எப்பயாச்சும் க்ராஸ் ஆகும்.


44. பணம் ஒரு கன்னித்திரை மாதிரி எந்த பட்டி தே.ளையும் கன்னியாக்கிரும்.

45. பணம் ஒரு  காயகல்பம் எந்த கிழவனையும் குமரனாக்கும்

46.பணம் ஒரு வயாக்ரா ( அதை ஈட்டும் ப்ராசஸ்ல  ஆண்மை பலியயாயிர்ரதுதான் சோகம்)

Saturday, November 20, 2010

இதான் நைனா சமாசாரம்

நானு 2000 ஜூலை 31லருந்து மாஞ்சி மாஞ்சி இன்னா இன்னாமோ எள்திக்கினு கீறேன். " இத்தினிக்கு நீ இன்னாதான் சொல்றேபா"னு ஆருனா கேட்டா இதான்பா சமாசாரம்னு சொல்லனுமில்லியா?

சின்னப்ப தேவர் தன் கிட்டே கதை சொல்ல வரவங்களை மூணு வரில சொல்லுனுவாராம். அது மாரி என்னை ஆர்னா கேட்டா நான் இன்னா சொல்றது?


இப்ப சொல்லிர்ரேன் நைனா. நாம எல்லாரும் என்னிக்கோ,எங்கனயோ ஒரே உடம்பா ஒரே உசுரா இந்து கீறோம். அந்த கியாபகம் மட்டும் அப்டியே கீது. மறுபடி ஒன்னா சேரனும்னு துடிக்கிறோம்.அதுக்கு இந்த பாடி தான் அட்டம்னு இதை தூக்கி கடாசத்தான் கொல்றோம்.கொல்லப்படறோம்.

மன்சன் இன்னா பண்ணாலும் அதும்பின்னாடி கீறது இந்த ஃபீலிங் தான்னிட்டு சைக்காலஜில சொல்றாங்கபா.

செக்ஸு, பணம்,பதவி ,பேரு ,புகள் எதுனா எட்த்துக்கோ அதை வச்சிகினு இன்னா பண்றோம். கொல்றோம் இல்லே கொன்னுக்கறோம்.

என் குன்ஸு இன்னாடான்னா நாம இப்பத்திக்கும் சேர்ந்துதான் கீறோம். அல்லா மொபைல் ஃபோனையும் டவருங்க மூலியாமா  சேட்டிலட்டு சேர்த்து புடிச்சு வச்சிக்கினு கீற மாதிரி இன்னாமோ ஒன்னு நம்ம நடுவுல கீதுபா.

அத்த நாம தான் பார்க்க மாட்டேங்கறோம் .ஃபீல் பண்ண மாட்டேங்கறோம். சைலன்சர்ல எலுமிச்சங்கா அட்ச்சிக்கின மாரி நான் வேறே இந்த ஒலகம் வேறேனு ஒரு ஃபீலிங் கீது. இத்தை தான் ஈகோன்றானுங்கோ.

நம்போ குடை எட்த்துகினு போறப்போதான் மளை வரனும், நாம ஏ.சி வச்சிக்கினப்பாறம் தான் வெய்ய காலம் வரனுங்கற மாரீ தான் ஃபீல் பண்றோம். ஆனால்  இந்த நேச்சருக்கு மின்னாடி ரஜினிகாந்தும் ஒன்னுதான். கிங்காங்கும் ஒன்னுதான்.

இந்த நேச்சர் ஒரு ப்ரி ரிக்கார்டட் சி.டி மாரி. அதும்பாட்டுக்கு ஓடிக்கினே கடக்கும். நீ பார்த்தாலும் அம்புட்டுதேன்..பார்க்காட்டாலும் அம்புட்டுதேன்.

இந்த லைஃப்ல உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்லல்லாம் மீனிங் தேடிக்கினு லைஃபையே மீனிங்லெஸ் ஆக்கிட்டோம் பாஸு. எனக்கென்னவோ இந்த படைப்பே ஒரு விபத்துன்னுதான் தோணுது. அல்லாமே விபத்துதேன்.

ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதும் விபத்துதேன். மன்சன் செக்ஸுலருந்து பணத்துக்கு தாவினதும் விபத்துதேன்.

இங்கே எது வேணம்னா பொய்யா பூடலாம்.ஆனால் சாவு மட்டும் சத்தியம். அந்த சாவை ஃபேஸ் பண்றதுக்கோசரம் டோட்டல் லைஃபையும் ஸ்பென்ட் பண்றதான் புத்திசாலித்தனம்னு தோனுது.

சாவை எப்டி ஃபேஸ் பண்றதுன்னா தூக்கம்ங்கறது ஸ்லைடு மாரி. தியானம்ங்கறது ட்ரெய்லர் மாரி. சாவுதான் மெயின் ஃபிலிமு.

நாம இன்னாதான் வாய்ந்தாலும் ஒரு நாளில்லை ஒரு  நால் இல்லாம பூடுவோம். நாம இருக்கறப்பயே இல்லாத மேரி இந்து பூட்டா பெரச்சினையே இல்லியோனு தோனுது.

இந்த ஒலகமே ஒரு பெரீ ஷூட்டிங் ஸ்பாட்டு. தாளி ஒரு பக்கம் நீலப்படம் எடுக்கறானுவோ,ஒரு பக்கம் க்ரைம் ,ஒருபக்கம் சோஷியல், ஒரு பக்கம் புராணம் . நான் எந்த யூனிட்லே கீறேன்னே தெரிலை. இர்ந்தாலும் டைரக்டர்னு ஒருத்தன் வந்து பிகில் ஊதி எதுனா சொன்னா செய்துட்டு போறேன்.

நேச்சரை பாரு ப்ரதர். மழைய எட்த்துக்கோ. அது பெய்யனுமே பெய்யனுமேனு டென்ஷன் ஆகுதா .. நோ. நான் பெய்ய கூடாது பெய்ய கூடாதுனு இறுக்கிக்கிதா நோ. அந்த  நேரம் அடிக்கிற காத்த பொருத்து அந்த திசைய பொருத்து அடிச்சிக்கினே பூடுது.

நேச்சர்ல பாரு பாஸு.. நீ தனி நான் தனிங்கற பாவத்தே இல்லே. அல்லாமே டீம் ஒர்க்.ஒரு  டைம் டேபிள் கீது.  அது அதும் பாட்டுக்கு அது அது   நடந்து போய்க்கினே கீது..

இவுனுக்காக ,அவுனுக்காக, இந்த சாதிக்காக அந்த சாதிக்காக, இந்த மதத்துக்காக அந்த மதத்துக்காக இந்த மதத்துக்காக , இந்த நாட்டுக்காக அந்த  நாட்டுக்காகங்கற விவஸ்தை எல்லால் கிடையாது.

அதுனாலதான் சனங்க இன்னானா சொல்லிக்கினு போவட்டும் அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது. அதுக்கு எந்த ஃபீலிங்கும் கடியாது (ரஜினி ஸ்டைல்!)

நாம ஏன் மளை மாரி இருக்க கூடாது.. அதுக்கான சின்ன முயற்சிதான் ஆப்பரேஷன் இந்தியா 2000.

ஆத்துக்கெல்லாம் காவா வெட்டி லிங்க் பண்ணனும், வெவசாயம் பண்ணோனம். பசி கூடாது. வறுமை கூடாதுங்கறேன். இது நடந்தா சந்தோசம்தேன். நடக்கலைன்னா கண்ண கசக்கப்போறது ஒன்னும் கிடையாது.

மளை மாரி இரு நைனா. காத்து மாரி இரு பாஸு நெருப்பு மாரி இரு ப்ரதர் அட கு.ப இந்த பூமி மாரி இரு துரை ..


நோ ஃபீலிங்.. நோ ஹீலிங்.. உடு ஜூட்

Friday, November 19, 2010

இந்திரா & ஃபேமிலி காந்தி பேரை துறக்கனும்

ஆமாங்கண்ணா. காந்திக்கும் நேரு குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்திரா ஃபெரோஸ் லவ்ஸ் மேட்டர்ல பிரச்சினை வந்தப்போ காந்தி ஃபெரோசை தத்து எடுத்துக்கிட்டாரு. அதனால ஃபெரோஸ் பேரோட காந்தி பேர் ஒட்டிக்கிச்சு. இந்திரா ஃபெரோஸ் காந்தியோட மனைவிங்கற ஹோதால காந்தி பேரை சேர்த்துக்கிட்டாய்ங்க. ஆனால் கொஞ்ச காலத்துலயே ஃபெரோஸுக்கு, இந்திராவுக்கு ஒத்துவரலை. கழண்டு கிட்டாய்ங்க. இந்திரா அப்பாவோடதான் வாழ்ந்தார்.

என்னதான்  சட்டப்படி விவாகரத்து வாங்கலைன்னாலும் இந்திரா தன் கணவரோட வாழலைங்கறது மறைக்க முடியாத அக்மார்க் சரித்திர உண்மை. தாளி புருசன் மட்டும் வேணா புருசனோட சர் நேம் மட்டும் வேணுமா?

வாணி  கமலை மணந்தா "வாணி கமல்" கமலை  பிரிஞ்ச்சுட்டா .. வெறும் வாணிதேன்.இந்த விதிப்படி பார்த்தா காந்தி பேரை சேர்த்துக்க  இந்திராவே  அன்ஃபிட். இதுல ராஜீவ்,சஞ்சய், சோனியா,மேனகாவுக்கெல்லாம் காந்தி பேரை சேர்த்துக்க என்ன தகுதி இருக்கு?

சரி இன்ஸ்பிரேஷன்ங்கற கோணத்துல பார்த்தாலும் கனக சுப்புரத்தினம் பாரதி தாசனா மாறினார் .. பாரதிக்கு தாசனாவே வாழ்ந்தார்.

இந்த கூட்டத்துக்கு காந்தி பேரை சேர்த்துக்க  என்ன தகுதியிருக்கு?

Thursday, November 18, 2010

எம்.எல்.என்னை "தூக்கிட்டு" வர சொல்வேன்னாரு

இப்போது நான் சொல்லப் போகும் விஷயங்களை நம்பவே முடியாது. ஆனால் அட்சர சத்தியம். இதற்கெல்லாம் நான் காரணமோ பொறுப்போ அல்ல ..யாவும் தெய்வாதீனம்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் திட்டம் தீட்டியதும்,சந்திரபாபுவுக்கு அனுப்பியது,அவர் அதை 5 வருடம் கிடப்பில் போட்டது,பதில் தர தபால் செலவுக்கு நான் ரூ 10 எம்.ஓ அனுப்பியது ,பிறகு கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு போட்டது,பத்திரிக்கைகள் மூலம் வழக்கு விவரம் அறிந்த சந்திரபாபு என் திட்டத்தை உரிய வகையில் உபயோகித்துக் கொள்வதாய் கடிதம் போட்டது / இந்த விசயமெல்லாம் தங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம்.(லேட்டஸ்டா கூட ஒரு பதிவுல இந்த விருத்தாந்தங்களையெல்லாம் சொல்லியிருக்கேன்)

என்.டி,ஆர் சிங்கம். சந்திரபாபு நரி. முதலில் என்.டி.ஆருக்காக நரி வேலைகள் செய்தார்.பின்பு என்.டி.ஆருக்கே நரி வேலை காட்டி அல்வா கொடுத்து முதலில் வீட்டுக்கும்,பின் எமப்பட்டணத்துக்கும் அனுப்பிய நரி சந்திரபாபு. அவர் 4 காலையும் தூக்கி, திட்டத்தை உரியவகையில் உபயோகித்துகொள்வதாய் கடிதம் போட்ட உடனேயே எனக்குள் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.

முதல்வர் அலுவலகத்திலிருந்தே மாவட்ட அரசு இயந்திரத்துக்கு நான் சப்மிட் செய்யும் எந்த வித மனு,புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்னுடன் வந்து கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளெயிண்ட் மீது நடவடிக்கை எடுக்க 6 மாதம் பிடித்தது. அதுவும் மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு பிறப்பித்த பிறகு.

ச‌ந்திர‌பாபு இடைத்தேர்த‌லுக்கு திட்ட‌மிட்டு ரேஷ‌ன் கார்டுக‌ளை அள்ளிவிட‌ உத்த‌ர‌விட்டார். ஊரில் ல‌ட்சாதிப‌தி,கோடீஸ்வ‌ர‌ன் எல்லாம் அரிசி கார்டு வாங்கிக் கொண்டிருக்க‌, ப‌ஞ்சை ப‌ராரியான‌ என‌க்கு அல்வா கொடுத்து விடுவார்க‌ளோ என்ற‌ அய்ய‌ம். அதுவும் ரேஷ‌ன் கார்டு என்ப‌து நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஆகிவிட்ட‌ கால‌க‌ட்ட‌த்தில் நாட்டுக்காக‌ நாயாய் உழைக்கும் என‌க்கு கார்டு ம‌றுக்க‌ப் ப‌ட‌வே க‌டுப்பாகிவிட்டேன்.

எம்.ஆர்.ஓ வை பிடித்து எகிறினேன்.(1991 ந‌வ‌ம்ப‌ரில் காத‌ல் க‌டிம‌ண‌ம் கொண்ட‌ உட‌னேயே கார்டுக்கு ப‌திவு செய்த‌வ‌ன் நான். 2004 ல் கூட‌ ம‌றுத்தால் எப்ப‌டியிருக்கும்) கோர்ட்டுக்கு போவேன் என்று மிர‌ட்டினேன். "அட‌ போய்யா" என்றார் அவ‌ர்.

கோர்ட்டுக்கு போக‌ ஆட்டோவுக்கே காசில்லாத‌ நான் வ‌க்கீல் பார்த்து ,வ‌ளைக்காப்பு ந‌ட‌த்துவ‌தெல்லாம் ந‌ட‌க்கிற‌ விஷ‌ய‌மா? லோக் அதால‌த்துக்கு த‌ட்டினேன் ஒரு புகார்.

அப்போது யாரோ க‌வுடு தான் மாவ‌ட்ட‌ நீதிப‌தி. பாவ‌ம் ம‌னுச‌ன் எங்கிருந்தாலும் வாழ்க‌ ரொம்ப‌வே ந‌க்க‌ல‌டித்தாலும் " கார்ட் கொடுத்துருங்க‌ப்பா' என்று க‌லெக்ட‌ருக்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார், க‌லெக்ட‌ர் எம்.ஆர்,ஓ வை காய்ச்சினார். எம்.ஆர்.ஓ எம்.எல்.ஏ விட‌ம் ஓடி புகார் செய்தார்.

எம்.எல்.ஏ வுக்கு என்னை தெரியும். ப்ரைவேட் எலெக்ட்ரிக்க‌ல் வைர்மேன் ச‌ங்க‌ பி.ஆர்.ஓ வாக‌. உட‌னே யூனியனுக்கு  போட்டார் போனை. " எங்க‌யா உங்க‌ பி.ஆர்.ஓ? ப‌த்து நிமிஷ‌த்துல‌ என் முன்னாடி இருக்க‌னும். இல்ல‌ தூக்கிட்டு வ‌ர‌ச்சொல்லுவேன்" என்றார்.

யூனியன் காரவுக "த‌ பாருப்பா நீ இல்ல‌ன்னா ச‌ங்க‌ம் ந‌ட‌க்க‌ற‌து க‌ஷ்ட‌ம். காசு த‌ர்ரேன். எங்க‌னா போயிரு. நான் பேசிக்கிறேன்"னாய்ங்க. வ‌ர்ர‌ ல‌ட்சுமிய‌ ஏன் விட‌னும்னு சில்ல‌றை வாங்கி கிட்டு ஹைய‌ர் சைக்கிள் ஒன்னு எடுத்துக் கிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு போனேன்.

நம்ம முகத்துல உள்ள பிராமண களை , சந்தன பொட்டு, கழுத்துல மாலை,பவ்யமான நமஸ்காரம்லாம் பார்த்ததும் எம்.எல்.ஏவுக்கு சுதி இற‌ங்கி போச்சு. " என்ன‌யா நீ உன‌க்கு பிர‌ச்சினைன்னா என‌க்கு சொல்ல‌லாம்ல‌ " என்று இற‌ங்கி வ‌ந்தார்.

" அய்யா! என‌க்கு ஏதோ நால‌ணா த‌மிழ்,நால‌ணா தெலுங்கு ,ப‌த்து பைசா இங்கிலீஷ் தெரியும் பி.ஆர்.ஓ ஆகிட்டேன்,உங்க‌ளை தெரியும். ஒன்னுமே இல்லாத‌வ‌னையும் இப்ப‌டித்தானே சார் லொள்ளு ப‌ண்ணுவாங்க‌ எல்லாருக்கும் ரெக்க‌ம‌ண்ட் ப‌ண்ணி கார்டு வாங்கி த‌ந்துருவிங்க‌ளா " என்றேன் .

இவ‌ன் எங்க‌டா மாட்டினான் த‌மிழ் சினிமா மாதிரி பேசிக்கிட்டுன்னு எம்.எல்.ஏ. நினைச்சுருப்பாரு. " அட‌ நீ கூட்டிட்டு வாயா நான் வாங்கித் த‌ரேன்" என்றார். மேட்ச் ட்ராவில் முடிந்த‌து.

Wednesday, November 17, 2010

அனைத்து எம்.பிக்களோட மெயில் ஐடியும் போகஸ்

ஆமாம் பாஸ்..
நேஷ்னல் இன்ஃபர்மேட்டிக் சென்டர் ( www.nic.in) வெப்சைட்ல வச்சிருக்கிற அனைத்து எம்.பிக்களின் மெயில் ஐடியும் போகஸ். ஏன்னா அந்த ஐடிக்களூக்கு அனுப்பின எல்லா மெயிலுமே "நோ சச் யூசர்"னு ரிட்டர்ன் ஆயிருச்சு.

என்ன மயித்துக்கு ஐடி கொடுக்கனும். இவிகதான் நம்மை ஆள்றாய்ங்க. சொகம்மா தூங்குங்கப்பா..

இந்த பரபர சுறு சுறு மேட்டர் நடந்து மாமாங்கமாச்சு. இப்ப இதை கோர்த்துவிட்டது இந்திய வல்லரசு கனவுகளை நனவாக்க நான் பட்ட பாட்டை புது வாசகர்கள்/பதிவர்களோட பகிர்ந்துக்கத்தேன்..

இப்ப பழங்கதைக்கு போயிருவமா?

ஓல்ட் ஈஸ் கோல்டுங்கறது நெஜம்தான் போலும். ஒரு காலத்துல நான் போட்ட பதிவுகள் இன்னைக்கும் படிக்கப்படுது. மறுமொழிகள் வந்துட்டே இருக்கு.  என் பதிவுகள்ளயே சனம் கண்டுக்காத விட்டுட்டது இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றிய பதிவைத்தான்.

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஏழ்மை -ஏழ்மைக்கு காரணம் தேசீய உற்பத்தியில் பெருவாரியான மக்களுக்கு பங்கு இல்லாமை, மற்றும் தேசீய வருமானத்தில் உண்மையான பங்கு இல்லாமைதாங்கறது என் முடிவு.

அதுக்கு அதிரடி தீர்வுதான் ஆ.இ 2000. இதைபத்தி கழுகு வலைச்சரத்துல வல்லரசு கனவுகள்னு ஒரு பதிவு கூட வெளியானது.

இதைப்பத்தி கூகுல் க்ரூப்ஸ்ல நடந்த சர்ச்சையில சிலர் நாட்ல ஏழ்மையே இல்லைனு கூட வாதம் பண்ணாய்ங்க. தூத்தேரிக்க இன்னாடா இது படா பேஜாரா போச்சுனு விட்டுட்டன்.

சமீபத்துல ஒரு பார்ட்டி ஆரம்ப நாட்கள்ள நான் போட்ட பதிவை படிச்சுட்டு மீள் பதிவு போடுங்கனு சொல்லவே  இந்த விஷபரீட்சைல இறங்கியிருக்கேன்.

என் அதிரடி திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புது வாசகர்களுக்காக  ஒரு அறிமுகம்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000னு சொன்னேன்.. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000ங்கற பேரை வச்சேன்.

இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:

ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.

முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?
ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.

(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில். அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.

உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.

உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:
உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.

நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?

இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.

நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.

நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.

க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.

நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.

முயற்சிகள்:

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை.

அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல. (பாவம் மகராஜன் சமீபத்துல போய் சேர்ந்துட்டாரு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக)

சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன்.

மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.

மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன்.

ஆந்திர முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்:(1997 முதல் 2004 அக்டோபர் வரை)
அப்போதைய‌ ஆந்திர‌ முத‌ல்வ‌ர் ச‌ந்திர‌பாபு நாயுடு. தெ.தேசம் கட்சியின் தலைவரும் அவரே. அதே  க‌ட்சியை சேர்ந்த‌ பால‌யோகிதான் லோக்ச‌பா ச‌பாநாய‌க‌ராக இருந்தார்.
மேலும் சந்திர பாபு மத்திய அரசில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த காலம் அது.

என‌வே  நான்  இந்த திட்டம்  குறித்த விவரங்களை  தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு கூரிய‌ர்,ப‌திவு த‌பால் த‌ந்தி,இ மெயில் இத்யாதி மூலம்  அனுப்பி வ‌ந்தேன்.(இவற்றிற்கான ஆதாரங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன)

ஆனால் எனது தொடர்ந்த தபால்களுக்கு  2002 வ‌ரை முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ த்திலிருந்து எந்த‌ ப‌திலும் இல்லை. அதாவது ஐந்து வருடங்கள் ஒன் வே ட்ராஃபிக். இந்த அழகுல சந்திரபாபு போஸ்ட் கார்ட் போடுங்க கிழிச்சுர்ரன்னு வசனம் வேற விட்டுக்கிட்டு இருந்தாரு. தூர்தர்ஷன்ல  ப்ரஜலதோ முக்யமந்த்ரினு ஒரு ப்ரோக்ராம் வேற . எங்கே எரிஞ்சிருக்கும் பாருங்க.

மீடியா:
இது இப்படியெல்லாம் வேலைக்காகாதுன்னு லெட்டர் டு எடிட்டர் , அறிக்கைகள்னு ஆளுங்கட்சியை நல்லாவே கிழிக்க ஆரம்பிச்சேன்.  இதனோட உச்ச கட்டமா வார்த்தா - தெலுங்கு நாளிதழ் அரைப்பக்க அளவுக்கு என்னைபத்தி ஒரு ஸ்டோரியே பப்ளிஷ் பண்ணாய்ங்கன்னா பார்த்துக்கங்க. ஆனால் நம்ம தமிழ் மீடியா மட்டும் கண்டுக்கிடவே இல்லை.( மறுமலர்ச்சிங்கற முஸ்லீம்  பத்திரிக்கையும்,ஜன சக்திங்கற கம்யூனிஸ்ட் பத்திரிக்கையும் மட்டும் வெளியிட்டாய்ங்க)

யூஸ‌ர் சார்ஜ்:
அப்போது முத‌ல்வ‌ர் அரசு நிறுவனங்களில் யூஸ‌ர் சார்ஜ் முறையை அம‌ல் ப‌டுத்தி வ‌ந்தார்.உ.ம். அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ரூ.2 செலுத்த‌வேண்டும். இதை ம‌ன‌தில் வைத்து,முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு ரூ. 10 எம்.ஓ. மூல‌ம் அனுப்பிவைத்தேன்.. அது முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு டெலிவ‌ரியும் ஆன‌து. பணம் பெற்றுக்கொண்டதற்கான அக்னாலட்ஜ்மென்ட் வரவில்லை. உடனே தபால் துறையை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்யும் சர்ட்டிஃபிகேட் ஆஃப் பேமெண்ட் பெற்றேன்.

எதிர்கட்சி தலைவர்:
அப்போது டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருந்தார். அவருக்கு  இந்த அவலத்தை  கடிதம் மூலம் தெரிவித்தேன். காங்கிரஸ் சட்டமன்ற அலுவலகத்திலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் கூட வந்தது. அவர்கள் முதல்வர் அலுவலகத்தை  லேசாக குடைந்தார்களா என்ன தெரியாது.

மறுபடி முதல்வர் அலுவலகம்:
2002, ஆகஸ்ட் மாதம் முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்கொரு பதிவு தபால் வந்தது. அதில் நான் ஆந்திர முதல்வர் அலுவலக அலட்சியப்போக்கை குறித்து அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு அனுப்பிய புகாரின் ஃபேக்ஸ் பிரதி ( நானே சி.எம்.ஓக்கு அனுப்பியது) இருந்தது. அதன் மீது  முதல்வரின் செயலர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். முதல்வர் முன் வைக்க தங்களது ப்ரப்போசலை உடனே அனுப்பவும்னு எழுதியிருந்தார்.

ஆகா வந்துருச்சுய்யா வந்துருச்சு ஆப்பரேஷன் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துருச்சுன்னு வடிவேலு பாணில புலம்பிக்கிட்டே திட்டத்தோட முழு விவரத்தை DTP பண்ண வச்சு பதிவு தபால்ல அனுப்பினேன். இதனோட உடனடி விளைவு என்னடான்னா..

சந்திரபாபு தெ.தேசம் கட்சியோட ஆனிவர்சரில " நதிகள் இணைப்பால் தான் சுபிட்சம் சாத்தியம்"னு வசனம் விட்டதுதான். அதுவரை தன் அரசியல் வாழ்க்கைல நதிகளின்  இணைப்பு பத்தி அவர் பேசினதே இல்லை.

நுக‌ர்வோர் ம‌ன்ற‌ம்:
இது தொடர்பாக சித்தூர் மாவட்ட  நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தேன். இந்த‌ செய்தி தெலுங்கு தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்த‌தைய‌டுத்து "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ வ‌கையில் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்கிறோம் என்று முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் எனக்கு ஒரு க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி கொண்ட‌து. (அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிருச்சுங்கண்ணா)

நுகர்வோர் மன்ற  நடுவர்கள் இந்த கேஸ்ல டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீசே இல்லைன்னு சரித்திர பூர்வமான தீர்ப்பை கொடுத்து கழட்டிவிட்டுட்டாய்ங்க.

மானில நுகர்வோர் மன்றம்:
இவிகளுக்கு அப்பீல் பண்ணேன். ஒடனே மாவட்ட மன்றம் கொடுத்த தீர்ப்போட ஒரிஜினலை அனுப்புங்கனு கேட்டாய்ங்க அனுப்பிட்டன். அது ஆரம்ப எழுத்தாளன் பத்திரிக்கை ஆஃபீசுக்கு அனுப்பின படைப்பா போச்சு.

டாக்டர் ஒய்.எஸ்:
இந்த பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருந்த   காலத்திலேயே சந்திரபாபு மீது அலிப்பிரி கொலைமுயற்சி ந‌ட்ந்தது. இடைத்தேர்தல் நடந்தது. ராஜசேகர ரெட்டி முதல்வரானார். (இவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போதே நான் சி.எம்.ஓ பத்தி புகார் செய்ததும் , காங்கிரஸ் சட்டமன்ற கட்சி ஆறுதல் சொல்லி போஸ்ட் கார்டு எழுதினதும் ஞா இருக்கலாம்)

இந்நிலையில் முதல்வராகிவிட்ட ஒய்.எஸ்.ஆருக்கு ஆயிரம் கனவுகளோட ஃபாக்ஸ்,தபால்,கூரியர்,தந்திகள் மூலம் நினைவூட்டு கடிதங்கள் அனுப்பிக்கிட்டே இருந்தேன். பதில் தான் கிடைக்கவில்லை.சந்திரபாபு காலத்து சி.எம்.ஓ அதிகாரிங்க அப்படியே கன்டின்யூ ஆயிட்டிருந்தாய்ங்க. எங்கே தங்களோட பவிசு தெரிஞ்சு போயிருமோன்னு  என் கடிதங்களை சி.எம் பார்வைக்கு கொண்டுபோகலை.

சாகும்வரை உண்ணாவிரதம்:
2004 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில்  நான்  என் வீட்லயே சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன்.வருவாய்த்துறை,சி.ஐ,டி அதிகாரிகள் பதறியடிச்சு வந்து  உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

ஜஸ்ட் இமேஜின். புது அரசாங்கம் பதவியேற்று 100 நாள் ஆன உடனே அறிவிக்கப்பட்டு துவங்கின  உண்ணாவிரதம் அதுவும் சாகும் வரை உண்ணாவிதம்னா பார்த்துக்கங்க. பயங்கர ப்ரஷர். ஆனாலும் சமாளிச்சேன்.

உண்ணாவிரதம் தொடர்ந்தது. 11 ஆம் நாள் டூ டவுன் எஸ்.ஐ வ‌ந்தார். அவரது செல் போனில் எஸ்.பி என்னோட  பேசினார். (அப்பல்லாம் சோத்துக்கே லாட்டரிண்ணே. இதுல சொந்த செல் ஃபோனுக்கெல்லாம் எங்கே பவிசு?)  தாம் அனுப்பும் வாராந்திர அறிக்கையில் என்னோட  உண்ணாவிரத மேட்டர்  குறித்தும்  எழுதுவதாகவும்,முதல்வர் நிச்சயம் ரெஸ்பாண்ட் ஆவார் என்றும் உறுதி கூறினார். இதையடுத்து  நான்  உண்ணாவிரதத்தை முடிச்சேன்.

தகவலறியும் சட்டம்:
தகவல் அறியும் சட்டப்படியாவது தமது திட்டம் குறித்த அரசின் முடிவை தெரிஞ்சிக்கலாம்னு  முயற்சி பண்ணேன்  . சட்ட நிபந்தனைப் படி மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.

தகவல் அறியும் சட்டப்படி எனது திட்டத்தைப் பற்றிய மாநில அரசின் கருத்தை கேட்டு மாவட்ட தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை. கட்டணமாக இணைக்கப் பட்டிருந்த அஞ்சலாணை மட்டும் திரும்பி வந்தது. மாநில தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை.மத்திய தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிச்சேன். பதில் கிடைத்தது. என்ன பதில் தெரியுமா?

மாநில‌ ஆணைய‌த்திற்கும்,ம‌த்திய‌ ஆணைய‌த்திற்கும் உள்ள‌ அதிகார‌ வ‌ர‌ம்பு ஒன்றே என்ப‌தால் மாநில‌ ஆணைய‌த்தின் மேல் ம‌த்திய‌ ஆணைய‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியாதாம்.

போங்கடாங்கொய்யாலன்னு விட்டுட்டன்

ஆமா இந்த முயற்சிகள் இத்தோட ஏன் நின்னு போச்சுனு கேப்பிக. சொல்றேன்.

2004 அக்டோபர்ல 11 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எஸ்.பி உறுதி மொழி கொடுத்தும் ஒரு  ...ரும் நடக்கலை. தாளி ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதுன்னு 2005 ஏப்ரல்ல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை அனவுன்ஸ் பண்ணேன். ரிப்போர்ட்டர்ஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு புறப்படற சமயம்  பி.சி.,எஸ்.சி,எஸ்.டி சங்கம் காரவுக வந்தாக.

கையிலருந்து மைக்கை வாங்கி ( ஸ்பீச்செல்லாம் கொடுத்தோமில்லை) ஆ.இ.2000 த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறதாவும், பாதயாத்திரையை கைவிட்டு  பஸ்ல போறதா இருந்தா நாங்களும் வரோம்னு அறிவிச்சாய்ங்க.

கிடைச்ச ஆதரவை ஏன் விடறதுன்னு ட்ராப் ஆனேன். பஸ்ஸு யாத்திரை தான் பெண்டிங்ல நின்னு போச்சு.பாதயாத்திரைன்னா கடவுள் கொடுத்த கால்கள் போதும்.பஸ்ஸு யாத்திரைக்கு காசு வேணம்ல.

இதுமட்டுமில்லாம கிறிஸ்தவ பாதிரியார் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது பாவிகளே மனம் திரும்புங்கள்னிட்டு பிரச்சாரம் பண்றாப்ல இதை பத்தி பேசிக்கிட்டே இருந்தேன். பல பேரு ( நண்பர்கள் உட்பட) "மொதல்ல நீ பணக்காரனாக வழியப்பாரு அப்பாறம் இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு  நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒய்.எஸ்.ஆரும் பாசன நீர் பற்றாக்குறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபா பட்ஜெட்ல ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டாரு. விவசாயிகளின் மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம்னு செயல்படுத்த ஆரம்பிச்சாரு.

விவசாயமே வேஸ்டு ,விவசாயி மகனெல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கிடுங்கனு சொல்லிக்கிட்டிருந்த சந்திரபாபு ஒய்.எஸ்ஸை கிழிக்க ஆரம்பிச்சாரு. அந்த கிழிப்பை திருப்பியடிக்கவும், ஜலயக்னத்துக்கு தார்மீக ஆதரவை தரவும் தெலுங்குல ப்ளாக், மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை ஆரம்பிச்சு லோக்கல் பாலிட்டிக்ஸ்ல இறங்கி டைவர்ட் ஆயிட்டன்.

ஒய்.எஸ்ஸையும் சொம்மா சொல்லக்கூடாது ஜலயக்னம் மட்டுமில்லிங்கண்ணா ஏ.சி.பி ரெயிடுகளை மும்முரப்படுத்தறது, (கருப்புபண ஒழிப்பு) , தேர்வு செய்த மண்டலங்கள்ள கூட்டுறவு பண்ணை விவசாயம்னு ஆ.இ.2000 த்தை ஸ்மால் ஸ்கேல்ல அமல்படுத்திக்கிட்டிருந்தாரு.

ஒய்.எஸ். விபத்துல போனதுக்கப்பாறம் திரு திருனு முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்த திட்டத்தையும் ,இது தொடர்பா நான் செய்த முயற்சிகள்ளயும் ஏதேனும் தப்பு தவறு இருந்தா சொல்லுங்கண்ணா  திருத்திக்கிடலாம். ஒரு கை கொடுங்க.  இந்த பதிவை நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. மக்கள் மன்றத்துக்கு கொண்டு போகலாம். எனக்கும் ஒரு கமிட்மென்ட் வரும்.

ஓகே வுடு ஜூட்..

பணம் பணம் பணம் : 2

பணத்தை புரிஞ்சிக்கிட்டா பணத்தை சம்பாதிக்கலாம் அ தத் .. இந்த மயித்துக்குத்தான் சம்பாதிக்கிறாய்ங்களானு விட்டுரலாம்.

இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு.  பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..

ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..


13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.

14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை..  நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?

15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா  பொசுங்கிருவம்.

16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?

17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்


18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)

18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.

19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது  குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.

20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை .  இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான்.  மரணத்தின்  நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா  பணம் கொஞ்சம் போல  தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது  எல் ஐ சி பாலிசியா போடறோம்

21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.

22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது

23.பணம் ஜஸ்ட்  ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.

24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்


எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு  செல்  அங்கஜீவி - அது கொழுத்து  செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது ஜீவராசிகள்- குரங்கு குரங்குலருந்து மனிதன் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்தச்ச காலம் , தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது  -  ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு - ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு  மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க  செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க.  மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.


ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. 

வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும். 

அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.

செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம்  பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு  லோ லோனு அலையுது

குழந்தைக்கு தாய் முலைக்காம்பு மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா  விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம். 

அடங்கொய்யால முலைக்காம்புலயாச்சும் பால் கிடைக்கும், சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கடா கீது?

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல்  பல்லுயிரா  மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள்  டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால்  அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னா.. பணம் பணம்னு அலைஞ்சு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?

Tuesday, November 16, 2010

பணம் பணம் பணம் - 1

பணத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் வர காரணமே செக்ஸ் குறித்த தவறான பார்வையும்,புரிதலும் ,அதன் மீதான ஏறக்குறைய தடையும் தான்.

திருமணமே  ஆண்மை குறைவுக்கு ஆதி மூலம். இதுல தாளி ஒரே  சாதில கண்ணாலம் கட்டி கட்டி ஃபிசிக் ,ஆண்மை எல்லாமே ஃபணால்.  13 அ 14ல செக்ஸுக்கு தயாரானவனுக்கு 30க்கு மேலத்தான் கண்ணாலம். தாளி அதுக்குள்ள  பேட்டரி வீகககி, ஒய்ரிங் எல்லாம் மெல்ட் ஆகி கிடக்கும்.

ஆண்மையின் சிகரமா உள்ளவன் கட்டாந்தரையில கூட கில்மால தூள் கிளப்புவான். அதில்லாதவன் எனக்கு எவனாச்சும் பகத்து டோரை தட்டினா கூட படக்குனு விழுந்துருதும்பான். அல்லது ஏசி இல்லைன்னா  நம்மால ஆவறதில்லம்பான் . டபுள் காட், தனி பெட் ரூம், அட்டாச்ட் எல்லாமே "முடியாத "குறைய ஃபில் அப் பண்ணத்தான்.

ஆண்மை நிறைஞ்சவன் எப்பவும் நிறைவா உணர்வான். அவனோட செக்ஸ் பார்ட்னரும் அப்படியே. எப்போ செக்ஸ் பவர் விழ ஆரம்பிக்குதோ தன் குறைய ஈடுகட்ட வெளிப்பக்கமா தன் பார்வைய திருப்பறான்.

இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர் .அதான் கிரியேட்டிவ் பவர். செக்ஸ் பவர் ஃப்யூஸ் ஆனதும் படைப்பாற்றல் குறைஞ்சு போச்சு. தன் படைப்பு சக்தியை பணம் மூலமா நிறைவு செய்துக்க ட்ரை பண்றான். (பணத்தாலயும் படைக்க முடியும். ஆனால் நம்மாளு ஓஞ்சு ,தேஞ்சு போயி  இருக்கிறதால ரெடிமேடுக்கு தாவிர்ரான்.

அட கட்டிலை எடுத்துக்கங்களேன்...தாளி அதுலயும் ரெடிமேட். இப்படி சனம் பேட்டரி வீக் ஆகி ,குறையா உணர்ந்து, அதை நிறைவு செய்ய ஸ்தூல பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பிக்க பணம் தேவைப்படுது. மெஜாரிட்டி வர்கம் இப்படி இருக்கிறதால மனித உடல்ல ரத்தம் மாதிரி தங்கு தடையில்லாம சுத்தி வரவேண்டிய  பணம் முடங்கி போவுது. டெட் ஆகுது.

யூத் "அது"இல்லாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்க்கு செலவழிக்க (அன் ப்ரொடக்டிவ்) , மிடில் ஏஜ்ட் பீப்புள் அது இருந்தும் அதை எடுத்துக்க முடியாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்ஸுக்கு இறங்க, அந்த ஸ்தூல பொருட்களையும் தாங்களே உருவாக்கிற முயற்சி மிரட்ட ரெடிமேடுக்கு இறங்க உலகமே பணம் பணம்னு பேத்த ஆரம்பிச்சுருச்சு.

கிடைச்சத ஆவியாக்கிர்ரானுவ. அது கிடைக்கனுமேனு ஆவி சோர அலையறானுவ. மொத்தத்துல பணம் குறித்த சரியான புரிதல் இல்லாமத்தான் சனம் இப்படி அல்லாடுதுனு ஒரு சம்சயம். அதுக்காக பணம் குறித்த என் புரிதலை பதிவாக்குறேன்.

1.பணம் ரத்தம் போன்றது.அது சமுதாயம் என்ற உடலில் தங்கு தடையின்றி சுற்றிவரவேண்டும். அது உறைந்தாலோ, சுண்டினாலோபிரச்சினைதான்.

2.பணம் எப்படிப்பட்ட முட்டாளையும் அறிவாளியாக்கக்கூடிய அற்புத மூலிகை. எனவே முட்டாள்களுக்கே பணம் அதிகம் தேவைப்படுகிறது

3.பணம் ஊமையை பேச வைக்கும். குருடனை பார்க்க வைக்கும்.முடவனையும் நமக்காய் கைத்தட்ட வைக்கும். நொண்டியை கூட நமக்காய் ஓடிவரவைக்கும்

4.பணம்.. எந்த மொழியினருக்கும் புரியக்கூடிய உலகப்பொதுமொழி.

5. மனிதன் ஒரு ஈ பணம் தேன் நிறைந்த பாத்திரம்.  .அதன் உதட்டின் மேல் நின்று லேசாய் உறிஞ்சினால் பிரச்சினையில்லை. அதில் குதித்தால் இறக்கை நனைந்து ஒட்டி சாக வேண்டியதுதான்.

6 பணம் ஆக்சிஜனை விட மதிப்பு மிகுந்தது. பணத்தை கொண்டு ஆக்சிஜனையும் வாங்கலாமே..

7.பணத்தை கொண்டு காலம்,தூரத்தை வெல்ல முடிவது மனித குலத்தின் அதிர்ஷ்டம். ஆனால் அதே பணத்தை கொண்டு தான் இதயங்களையும் வெல்ல முடியும் என்பது துரதிர்ஷ்டம்.

8.பணம்...அதற்கான தேவையுடன் அதை ஈட்ட முனைபவனுக்கு கானல் நீர். அதற்கான தேவையின்றி முயல்பவனுக்கு ஆற்று நீர்

9. பணத்துக்கு ஈகோ அதிகம். எவன் தன் ஈகோவுக்காக அதை செலவழிக்கிறானோ அவனிடமிருந்து கழண்டு கொள்ளும்.

10 பணம் சுய கவுரவத்துடன் வாழ வகை செய்யும்.ஆனால் அதை ஈட்ட பலி கொடுக்க வேண்டியதும் சுய கவுரவத்தைதான்.

11. பணம் .. குறைவாக இருந்தால் வெளிச்சம் தரும் வீட்டு விளக்கு அளவுக்கு அதிகமானால் வீட்டை சாம்பலாக்கும் காட்டுத்தீ

12.பணம் புல்லெட் போன்றது. ட்ரிக்கரை அழுத்திய பின் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்கே ஆணையிடும் அதிகாரம் அதிகம்

தொடரும்)

Monday, November 15, 2010

15 கோடி லஞ்சம் தர மறுத்த டாட்டா உத்தமரா?

விமான சர்வீஸ் ஆரம்பிக்க முயன்ற போது ஒரு மந்திரி 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும், தாம் தர மறுத்ததால் தான் நாளிதுவரை விமான சர்வீஸ் ஆரம்பிக்கவில்லை என்றும் ரத்தன் டாட்டா  கூறியுள்ளார். உடனே சோடாபுட்டி கண்ணாடிகள் ( அறிவு ஜீவிகள்) ஆகா டாட்டா உத்தமர் என்றும், செட் அப்பே கரப்ட் ஆயிருச்சு என்றும் பீசிக்கொள்ள ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.

வி.ச ஆரம்பிக்க லஞ்சம் கேட்டவுக மத்த யாவாரத்துக்கும் நிச்சயம் கேட்டிருப்பாய்ங்க. இவர் தர மறுத்திருந்தா தாளி ஒரு தீப்பெட்டி கம்பெனி கூட ஆரம்பிச்சிருக்க முடியாது. ஆனால் இவர் சொல்ற காலகட்டத்துல எத்தீனி யாவாரம் ஆரம்பிச்சாய்ங்கனு நெனச்சி பாருங்க.

இந்தியாவுல தாளி லஞ்சம் கொடுக்காம தள்ளுவண்டில இட்லி கூட விக்க முடியாது. இது எந்த கேணையனுக்கும் தெரியும்.  ரோட்ல டூ வீலர்ல  போறச்ச கீப் லெஃப்ட், நோ என்ட்ரி அது இதுனு போட்டு ஐரன்  போர்டுங்க தெரியும். அல்லது டிவைடர் கட்டாத ரோட்ல நீட்டத்துக்கு போர்டுகளை வச்சி பிரிச்சிருப்பாய்ங்க. பார்த்திருப்பிங்க. போர்டுகள்ள கீழ் பாகத்துல ஏஏஏ அபார்ஷன் க்ளினிக், களவாணி அண்ட் கோனு கம்பெனிங்க பேரு இருக்கும்.

இந்த போர்டுகளோட ஏற்பாடு  எப்படி நடக்குது தெரீமா? யாவாரிங்களை ஸ்டேஷனுக்கு கூப்டுவாய்ங்க. நீ இத்தீனி போர்டு நீ இத்தீனி போர்டுனு சொல்லிருவாய்ங்க.அம்புட்டுதேங்.

வாத்யாரே நானு சித்தூர் வேலூர் பஸ்ல வேலை செய்தேன். அங்கனதான் பார்த்தேன் மாசா மாசம் கவர்ல போட்டு ஒன் டவுன் டூ டவுன் ட்ராஃபிக் ஆர்டிஓ, செக் போஸ்டுனு அனுப்பிட்டிருப்பாய்ங்க. இல்லாட்டி தொழில் நடக்காது.

நகைத்திருடன் பிடிபட்டான் 50ஒ கிராம் பறிமுதல்னு சேதி வரும். மேட்டர் என்னடான்னா அவன் திருடியே கூட இருக்கமாட்டான். ஒரு வேளை திருடியிருந்தாலும் எங்கனயோ வித்திருப்பான். தின்னு,குடிச்சு தீர்த்திருப்பான். அவனை ஒரு ஜீப்ல போட்டுக்கிட்டு எஸ்.ஐ வருவாரு. ஒவ்வொரு நகை கடையா ஏறி இறங்குவாரு.

திருடன் இங்கனதான் வித்தேம்பான். ஒடனே திருடன் சொன்ன கிராம்ஸ் ஆஃப் கோல்ட் ரிகவரி பண்ணிக்கிட்டு அடுத்த கடை ஏறுவாரு. இதான் நாட்டு நிலைம.

ஜுவெல்லரி காரன் திருட்டு நகைய வாங்கவே இல்லைன்னாலும் ரிக்கவரி கொடுத்துதான் ஆகனும். அதுவும் கேஸில்லாம மெயின்டெய்ன் பண்றதுக்கு மாமூல் வேற, ஜீப்புக்கு டீசல் செலவு வேற.

இந்த அழகுல டாட்டா தானேதோ உத்தமர் மாதிரியும் ஒரே ஒரு மந்திரிதான் 15 கோடி கேட்ட மாதிரியும் அதை தர விருப்பமில்லாமதான் விமான சர்வீஸ் ஆரம்பிக்காதது மாதிரியும் பீத்தியிருக்காரு.

தாளி நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டணும்னா கூட நகராட்சிக்கு லஞ்சம் தரவேண்டிய நிலை.  இவரு பீலா விடறாரு.

உண்மையிலயே டாட்டா உத்தமரா இருந்தா தங்களோட எந்தெந்த தொழில் ஆரம்பிக்க எத்தீனி எத்தீனி கோடி கொடுத்தோம்னு லிஸ்டை ரிலீஸ் பண்ணனும்.

இதெல்லாம் பிக்காலி பேச்சு. உப்பு வித்து, தீப்பெட்டி வித்து ஏழைதொழிலாளிங்க வயித்துல அடிச்சு அவிகளை பிச்சையெடுக்க வச்சு,திருடங்களாக்கி, அவன் வீட்டு பெண்களை தேவடியாளாக்கி நாறடிச்ச பெரியவுக இவிக.

அரசியல் வாதியோட லைன் க்ளியரா இருக்கும். தாளி பேர் வரனும். கெட்ட பேர் வரதாருந்தா சூட் கேஸ் வரனும்.

இவிக யாவாரத்துக்கு அனுமதி கொடுத்தா எப்படியும் கொள்ளைதான் அடிப்பாய்ங்க. பேரு ரிப்பேராயிரும்.அப்பாறம் ஓட்டு "வாங்கறது"எப்படியாம். அதனாலதான் 15 கோடி.

நல்ல அரசியல் வாதிங்க.. நல்ல தொழிலதிபருங்க. விளங்கிரும்யா..

Sunday, November 14, 2010

"ஏக் மார், தோ துக்டா" பதிவுக்கு எதிர்வினை

சுகுமார்ஜி அவர்களே,
முன்னமொருதரம் உ.வ பட்டு நீ..............ளமான கமெண்ட் போட முயன்று வில்லங்கமாகி அது காத்தா போயிருச்சு. அதனால உசாரய்யா உசாருன்னு தனிப்பதிவே ரெடி பண்றேன். உங்க "ஏக் மார், தோ துக்டா" பதிவுக்கு எதிர்வினையா.

உங்க கருத்துக்களுக்கு எதிரான என்  கருத்துக்கள் நம்மிடையிலான நட்பை பாதித்துவிடும் என்று எண்ணுமத்தனை முட்டாள் நானாய் இருந்தாலும் நீங்க அப்படியில்லை தானே.

//ஆத்திகம், நாத்திகமான பெரியாரோடு சம்மந்தமான வார்த்தைகள் வேண்டாம்... //
ஆன்மீகத்துல கடவுள் எவ்ள முக்கியமோ பெரியாரும் அவ்ளோ முக்கியம்னு நான் நினைக்கிறேன். கவுண்டர் பார்ட்டுனு சனங்க நினைக்கலாம். ஆனால் நான் பெரியாரையே ஒரு அவதாரமாதான் நினைக்கிறேன்.  நீங்க சொல்ற பாய்யிண்டையெல்லாம் சனம் ஃபாலோ பண்ணி ஆன்மீகத்துல உச்சிக்கு போயிட்டா அங்கன பெரியாரை பார்க்கலாங்கறது என் கருத்து

//இறைவனை நம்ப மறுப்பவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை...  “ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்திலும், நம்முள்ளும் இருக்கிறது//

பாஸ்! ஓஷோ ஒரு பாய்ண்ட் சொல்லியிருக்காரு. நாம பேசிக்கற சக்தி/ குண்டலி/ சக்கரங்கள் எல்லாம் கிடையவே கிடையாதாம் சாதனை காரணமா உருவாகுதாம். நீங்க எல்லாரையும் ஒரு பேட்டையில சேர்க்க ட்ரை பண்றிங்க. (எனக்கும் இந்த நப்பாசை உண்டு)

ஆனா சனத்துல பல ரகம் உண்டு. சிலர் உடலளவுல வாழ்ந்து முடிச்சுர்ராய்ங்க, சிலர் மன அளவுலயே அல்லாடி முடிஞ்சுர்ராய்ங்க ,சிலர் புத்து அளவுலயே நோண்டி நுங்கெடுத்து கழிஞ்சுர்ராய்ங்க. சக்தி இருக்குதுங்கறதை அவன் உணராதவரை இல்லேனு தான் அர்த்தம்.

//நிருபிக்கபட்டால் ஏற்றுக்கொள்ள தயார் என்பதெல்லாம் வேடிக்கைத்தனம். அதுவோ, இதுவோ மனிதனால் ஏற்படுத்திக்கொண்ட கணக்குகளில் அடங்குவதில்லை.//

இங்க நாத்திகவாதி கழண்டுக்கறான்..தாளி பல ஆயிரக்கணக்கான கோடி ரூ சொத்துக்களை நிர்வகிக்கிற மடாதிபதிங்கல்லாம் ஒன்னு சேர்ந்து நிரூபிக்கலாமில்லயா ( அவிகளுக்குத்தான் கிழவிகளை தடவவும், வாடகை கொலையாளிகளை அமர்த்தவுமே நேரம் போதலயே


//ஆனால் ஆசாமியான தன்னை சாமி என்று சொல்லுபவனை, ஏமாற்றுபவனை கழுவிலேற்றலாம்.//

என்ன பாஸ் இந்த பிக்காலிகளுக்காக ஒரு மரத்தை வெட்டி , சீவி,எண்ணெய் பூசு கலீஜு பண்ணிக்கினு சனம் இவிகளை சுத்தமா கழட்டி விட்டா போதும் எல்லாரும் பை.ஆஸ்பத்திரில வந்து சேர்ந்துருவாய்ங்க.

//அந்த சக்தியை நோக்கிய (யா இல்லை) பாதையில் இரண்டு வழிகள்.
ஒன்று வழிபாடு,
இரண்டு தன் வழிபாடு. //

ஓஷோவின் மறைந்திருக்கும் மர்மங்கள் படிச்சுபாருங்க. விக்கிரக ஆராதனைய பத்தி கொளுத்தி போடறாரு .அப்படியே தீபாவளிதான். அதை வச்சு பார்த்தா ஒரே வழிபாடுதான் .. தன் வழிபாடு


//அது கோவில், குளம், சடங்கு, மந்திரம், யாகம், நம்பிக்கை...//

// இது தியானம்... //

Ref:மறைந்திருக்கும் மர்மங்கள்

//எனக்குத்தெரிந்தவரையில் இரண்டையுமே வழிமொழிந்தவர்கள் சித்தர்கள்தான். உனக்கு எது முடியுமோ அது...//

ஓஷோ இன்னா சொல்றாருன்னா ( பல்லை கடிக்காதிங்க பாஸ்! சித்தூர்ல கேட்குது) உன்னால எது முடியலையோ அதான் உன் பாதை - ரிவர்ஸ் எஃபெக்ட்

//சடங்குகளின் உண்மை நிலை... தளர்ந்திருப்பதால் முதலானது இப்பொழுது கேலிக்குரியதாக மாறுகிறது.//

காதலியின் அழகை காதலன் கண் கொண்டு பார்க்கனும். இறைவனின் மகிமையை பக்தனின் மனம் கொண்டு பார்க்கனும். பக்தி கூட காதல் மாதிரிதான். நாம என்ன பை.தனம் பண்றோங்கறது முக்கியமில்லை. நாம எந்த பா(B)வத்தோட செய்றோங்கறதுதான் முக்கியம்.


//சித்தர் தியானமோ நிரூபணம் வேண்டுவதால் ஏற்றுக்கொள்ள ஆர்வமில்லை.//

இப்போ ஈஷா யோகானு கூட்டம் அம்முதே நிரூபணம் இல்லாமயா ? தலை சனம் அல்ப சந்தோஷிங்க. ஒரு சிப்பில கடல் நீரை முகர்ந்து இதாண்டா கடல்னா நம்பிருவாய்ங்க. அதை மொண்டுதர்ர தேஜஸ் கூட இன்னைக்கிருக்கிற காட் மென்ஸுக்கு இல்லை அதான் பிரச்சினை

//இரண்டிலும் விருப்பமுள்ளவருக்கோ, விளக்கம் தர ஆசானில்லை. கடல் நீரில் இனிப்பைத் தேடுவதாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றி, மூளையையும், கற்பையும் சுரண்டிவிடுகிறார்கள். //

கத்துக்க தேவை ஆசானில்லை.கத்துக்கனுங்கற வெறி. அதுதான் ஆசானை லபக்கிக்கிட்டு வருது

//மேயிற மாட்டை, நக்குற மாடு கெடுத்ததாக ஒரு சொலவடை உண்டு... அது போல, பக்தியிலும், தியானத்திலும் இருப்பவனை மறுதலிப்பவன் விடுவதே இல்லை.//

இங்கே நான் முரண்படறேன். எந்த நாத்திகனுக்கு தன் நாத்திகம் மேல சந்தேகம் இருக்கோ அவன் தான் இந்த வேலைய செய்வான்.

எந்த ஆத்திகனுக்கு  தன் ஆத்திகம் மேல சந்தேகம் இருக்கோ அவன் தான் நாத்திகவாதியால டிஸ்டர்ப் ஆவான்

//தன் சகதியை எதிராளிக்கும் பூசி மகிழும் சந்தோஷம்.//

இதை ரெண்டு தரப்புக்கும் சொல்லுங்க. பூசி மகிழும் என்பதை விட தன் சகதியை தானே முகர்ந்து பார்க்கும்னு சொல்லலாம்

//வழிபாடுகளை பொறுத்தவரை... வழிகாட்டி தேவையில்லை.//

என் அனுபவப்படி எதுக்குமே தேவையில்லை பாஸ்.. எல்லாத்துக்கும் வழிகாட்டி இயற்கை. இயற்கை எல்லா சனத்தையும் தன்ல ஐக்கியப்படுத்திக்கத்தான் பார்க்குது. என்ன சனம் கொஞ்சம் லேட். லேட் (அமரர்) ஆன பிற்பாடுதான் ஐக்கியமாவேனு லொள்ளு பண்றாய்ங்க

//உனக்கு எந்த தெய்வமோ அதே... அது ஆசியாவின் உயர்ந்த கோபுர வழியிலிருந்தாலும் சரி, இல்லை மொட்டை கோபுர வழியிலிருந்தாலும் சரி. அது முதன்மையான நம்பிக்கையின் அடிப்படையானது.//

இன்னா பாஸ்! கரண்ட் உண்மைன்னா நம்பிக்கையில்லாம ப்ளக் பாய்ண்ட்ல கை வச்சா கூட ஷாக் அடிக்கனும்ல


முறையான பிரணாயாமம்... இட, வல சுவாச வழியே காற்றை சுவாசித்தல்... இரண்டிற்குமிடையே ஒரு கணம் நிறுத்துதல்... இந்த நிறுத்தல் காற்றை சூடாக்கி, மூலாதாரம் நோக்கி நகர்ந்து குண்டலியை உசுப்பேற்றும்...

" நான் என்ன நினைக்கிறேன்னா நீங்க சொல்ற முறையான பிராணயாமம் தானாவே அமையறதுதான் பெஸ்ட் சாய்ஸ்னு நினைக்கிறேன்.

மழைக்காக யாகம் பண்றாய்ங்களே அதனோட கான்செப்ட் என்ன தெரியுமா?  மழை வர்ரதுக்கு முந்தி இயற்கையில ஏற்படக்கூடிய காட்சிகள் ( கார் மேகம் - யாகப்புகை) த்வனிகளை( சத்தங்கள் - அதே மூடிலான மந்திரங்கள்)  ஏற்படுத்தின மழை வந்துரும்.

பிராணயாமம் மேட்டர்லயும் இதே தலைகீழ்புத்தி வேலை செய்யுதோனு சந்தேகம்.
பிராணயாமம்ங்கறது பை ப்ராடக்ட். அது ரா மெட்டீரியலில்லியோனு சம்சயம்.

//அப்பொ... வழிபாடு பண்ணா இதெல்லாம் நடக்காதா?
நடக்கும்... அமெரிக்காவிற்கு விமானத்தில் போவதற்கும், கப்பலில் போவதற்குமான வித்தியாசம்தான்.//

இல்லை பாஸ்! பல கேஸ்ல இது ஆமை முயல் கதையானதை என் அனுபவத்துல பார்த்திருக்கேன்

என்னடா முருகேசன் வரிக்கு வரி வரிப்புலி கணக்கா கிழிக்கிறாரேனு நினைச்சுராதிங்க. ரெண்டு கார்ப்பரேஷன் குப்பை லாரி மோதிக்கிட்டா குப்பை தான் சிதறும்.

நாமதான் ரிசர்வ் பேங்க் கண்டெயினர் கணக்கா இருக்கோமே ..கட்டு கட்டா சிதறட்டும் சனங்களோட ஆன்மீக வறுமை ஒழியட்டும்.

நான் புரிஞ்சிக்கிட்ட கடவுளை படிச்சு அந்த பார்ட்டிய புரிஞ்சிக்காட்டாலும்  என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.