Thursday, June 30, 2011

காதலால் கில்மாவுக்கு ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
இந்த படைப்புலயே உன் மனசை விட உசந்த வஸ்து கிடையாது. ஒருவேளை ஏதாச்சும் வஸ்து உன் மனசை விட உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.

மேற்படி ஸ்டேட்மெண்ட் நம்மோடது இல்லிங்ணா .விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான்னா என்ன அர்த்தம். இவன் லைஃப்ல அவளும் இருந்தாதான் இவன் லைஃப் பூரணமாகும்னு நினைக்கிறான்.

ஒரு கோணத்துல பார்த்தா இவன் லைஃப்  அரைகுறையா இருக்கு. அவள் வந்தா அது முழுசாகும்னு ஃபீல் பண்றான். அவள் உசந்த வஸ்துவா தெரியறான்னா என்ன அர்த்தம் இவன் மைண்ட் வீக்காயிருக்குனு அர்த்தம்.

லவ் பண்ற  பார்ட்டியெல்லாம் வீக் மைண்டடுன்னு சொல்லலை. ஆனால் வீக் மைண்டட் சனம் கூட லவ் பண்றாய்ங்க. இவிகளால தான் பிரச்சினையே வருது.

இவன் கடேசி வரை வீக் மைண்டடாவே இருந்துட்டா பரவால்லை. இடையில  மேற்சொன்ன விவேகானந்தர் ஸ்டேட்மெண்ட் இவனுக்குள்ள ஸ்பார்க் ஆயிருச்சுன்னு வைங்க. அப்பம் அந்த காதலி இவனோட கடந்த கால  பலகீனத்தை ஞா படுத்தி இம்சை கொடுக்க ஆரம்பிச்சுருவாள்

மேலும் லவ்ங்கறது ஆப்போசிட்ஸ் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்ங்கற தியரிப்படி தான் உருவாகுது. கருப்பா கீறவன் - சேப்பா கீறவளுக்கு ஜொள்ளு உடுவான். ஒல்லியா கீறவன் ஹார்லிக்ஸ் பேபிக்கு நூல் விடுவான்.

இனம் இனத்தோடு சேர்ந்தா போரடிக்கும் அவ்ளதேன்.ஆனால் இமிசை இருக்காது. தவறான முனைகள் - எதிரெதிர் குணாம்சங்களுடையவர்களுக்கிடையில் ஏற்படும் காதல் ஆரம்ப காலத்துல ரெம்ப த்ரில்லா இருக்கும்.

இளமை ஊஞ்சலாடும் வரை - ங்கொய்யால எங்க போகப்போறா எல்லாம் நம்ம சைஸுக்கு கிரைண்ட் பண்ணி ஏத்திவிட்டுரமாட்டேங்கற எண்ணம் இருக்கும்.

ஆனால் இளமை ஊஞ்சலோட வேகம் குறையும் போது " இன்னாடா இது பெரி எழவாப்போச்சு. இவளோட இன்னும் எத்தீனி காலத்துக்கு மாரடிக்கனுமோ" னு தோணிரும்.

மனித உடல் எளிமையானது. அப்பாவி. அன் எஜுக்கேட்டட். இதுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசறதெல்லாம் தெரியாது. என்னதான் கூரைக்குள்ள வசிச்சு கூடுதல் ரோமங்களை இழந்திருந்தாலும் - உடல் உழைப்பு குறைய குறைய சைஸு சின்னதா பொயிருந்தாலும்  மனித உடல் பழைய நியூஸ் பேப்பர் மாதிரி காட்டுமிராண்டி காலத்துலயே நின்னுருச்சு. நோ அப்டேஷன் 

ஆனால் மனித மனம் காம்ப்ளிக்கேட்டட்.- அடப்பாவி வேலைகளையெல்லாம் அசால்ட்டா செய்துட்டு அப்பாவி மாதிரி பில்டப் கொடுக்கும்.  நாம படிக்கிற அரைகுறை -எடக்கு மடக்கு படிப்பு -கேட்பு எல்லாமே இதுல ஃபீட் ஆகி கிடக்கு - உள்ளே ஒன்னை வச்சு -வெளிய ஒன்னை பேசறதுல அரசியல் வாதியை விட மோசமானது.

தன்னோட காட்டுமிராண்டி காலத்து பதிப்பு ஒன்னை கவருக்குள்ள போட்டு வச்சுக்கிட்டு அப்டேட்டட் பதிப்பை மட்டும் எக்சிபிட் பண்ணிக்கிட்டு ரெம்ப ஜாலாக்கா மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு வருது.

மனசுல எந்த அளவு காம்ப்ளிக்கேஷன்ஸ் அதிகமாகுதோ அந்த அளவுக்கு அது கொஞ்சம் போல அதிர்ச்சி -ஏமாற்றம் இத்யாதிக்கு இம்யூன் ஆகலாம்.

ஆனால் பாவம் இந்த அப்பாவி உடல் திருவிழாவுல காணாம போன கொயந்தை மாதிரி அல்லாடி போயிருது.

மனப்போராட்டங்கள் மனித உடலை -அதுவும் செக்ஸ் பவரை சட்டுனு பாதிச்சுருது.  அது எப்படின்னு அடுத்த பதிவுல இன்னம் கொஞ்சம் விவரமா பார்ப்போம்.

Wednesday, June 29, 2011

காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா :2


நாரத பக்தி சூத்திரத்துல சொல்றாப்ல (எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான பக்தி உண்டாம்) எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான காதல் இருக்கு.

எதையுமே ஒரு சித்தாந்தத்துக்குள்ள அடைக்க கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனால் என்ன பண்றது கடல் நீரை கூட ஒரு டெஸ்ட் ட்யூப்ல அடைச்சு அதை ஷூட் பண்ணி யு ட்யூப்ல விட்டாத்தான் பார்ப்போம்னு சனம் சொல்லுது.

அதனாலதான் நம்ம பாலிசிக்கு விரோதமா காதலை மொதல்ல சித்தாந்தப்படுத்தறேன். அப்பாறம் காதலித்தால் செக்ஸ் பவர் எப்படி கோவிந்தா ஆகும்னு சொல்றேன்.

காதலை பற்றி மட்டுமில்லே. ஒட்டு மொத்த படைப்பை -மனிதர்களை -உலகத்தை பிரிஞ்சிக்கிடனும்னா ஒரு அடிப்படை உண்மைய புரிஞ்சுக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.

*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது

*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்

*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை

*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு

*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.

*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு

*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு


(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது

*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்

*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது

*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு

*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா தனக்கே தனக்குன்னு ஒரு பெண் வேணும்ங்கற நிலை வந்துருச்சு.

அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்கான தேடலுக்கான துடிப்புத்தான் காதல்.

மேலும் மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு செக்ஸ்ல ஓரளவு - கொஞ்சம் நேரமாச்சும் நிறைவேறுது

செக்ஸ்ல கொல்லும் -கொல்லப்படும் இச்சை ஓரளவு நிறைவேறுது.

உடைச்சு சொன்னா ஆணுக்கு விந்து வெளியேறும் வரை கொல்லும் இச்சையும் விந்து வெளியேறிய பின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறுது.

பெண்ணை பொருத்தவரை உச்சம் என்பது ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா இருக்கு. அதனால அவனுக்கு விந்து வெளியேறும் வரை இவளின் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. அவனுக்கு விந்து வெளியேறிய பின் இவளது கொல்லும் இச்சை நிறைவேறுது.

இந்த இழவெல்லாம் மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். இதுக்கான பைலட் ப்ராஜக்டுதான் காதல்.

சோகம் என்னன்னா ஓருயிர் பல்லுயிரா மாறினாலும் எல்லா உயிரும் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. அந்த இணைப்பை உணர முடியாம ஈகோ தடுக்குது. ஈகோவை விட்டொழிச்சா உயிர்களிடையிலான இணைப்பை உள்ளபடி உணரலாம்.

ஆனால் ஆன்மாவை ஈகோ மூடி ஈகோவே ஆன்மா - ஈகோவே தான் என்ற மாயா உருவாகிவிட்டது.( நன்றி:ஓஷோ)

ஈகோ சுமக்கமுடியாத பாரமாயிருச்சு. அதை கழட்டி வைக்கிற இடமா மனசு காதலை நினைக்குது. அதனாலதான் காதலிக்கிறாய்ங்க.

இதான் காதல் கத்திரிக்காயோட செனெரியோ.

இப்பம் காதல்ல எத்தனை வகை இருக்குன்னு ஒரு குன்ஸா பார்ப்போம்:

1.தன் மீதான காதலால தன்னை காதலிக்கவும் ஒருத்தி வேணம்ங்கற ஈகோவால காதலிக்கிற காதல்

2.ஈகோவை சுமக்கமுடியாம ஆருக்காகவாச்சும் இந்த 'பாரத்தை" கொஞ்சம் போல இறக்கிவச்சா நல்லாருக்குமேங்கற எண்ணத்துல வர்ர காதல்

3.இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸால - தனிமை உணர்வால - சுய பரிதாபம் - தன்னவர்களால் நிராகரிக்கப்பட்ட உணர்வால வர்ர காதல்

4.தாய் மீதான காதலால் - தாயால் தள்ளி வைக்கப்பட்டு - தாய்க்கு மாற்றாக ஒரு பெண்ணை தேடும் காதல்

5.காமத்தை அங்கீகரித்து - அது குறித்த குற்ற உணர்வு ஏதுமின்றி - நேர்மையாய் அதை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் காதல்

6.காமத்தை ஓவர் லுக் செய்ய செக்ஸ் அப்பீலே இல்லாத சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்ட் தனமான சோடாபுட்டி பெண்ணை காதலிக்கும் காதல்

7.பிஞ்சிலே பழுத்து அல்லது மெச்சூர்ட் மைண்ட் காரணமாக தன் தந்தைக்கு நகலாக மாறி பெரிய மனுஷத்தனமாக விளையாட்டுத்தனம் மிக்க பெண்ணை காதலிக்கும் காதல்

8. தானும் முதலியார் -அவளும் முதலியார் - அவிகளுக்கு சினிமா தியேட்டருங்க இருக்கு -தங்களுக்கு சினிமா டிஸ்ட் ரிப்யூஷன் இருக்குன்னு கணக்கு போட்டு காதலிக்கு காதல்

9. யதார்த்த வாழ்க்கை நரகமாக இருக்க நிலத்தில் கால் பாவாத பிரதேசத்தில் சஞ்சரிக்க - சொந்த நரகத்தை மறக்க செய்யும் எஸ்கேப்பிஸ்ட் காதல்

10.சம்மதிச்சா செக்ஸ் இல்லாங்காட்டி தெய்வீகக்காதல்ங்கற சந்தர்ப்ப வாத காதல்

11.காதலிப்போம் - எல்லாம் கை கூடி வந்தா கண்ணாலமும் கட்டிக்குவோம் -இல்லாட்டி ஆருக்கு எங்கன போட்டுவச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்ங்கற வேதாந்த காதல்

இப்படி நூத்துக்கணக்கான காதல்கள் நாட்ல இருக்கு. ங்கொய்யால இந்த காதல்கள் சைவமோ அசைவமோ க்ளைமேக்ஸுல கில்மான்னு ஒன்னு நிச்சயம் உண்டு.

மேட்டர் இன்னாடான்னா லவ்வுன்னு இறங்கி லந்து பண்ணிக்கிட்டிருந்தா பேட்டரி வீக் ஆயிருதுங்ணா .. அது ஏன் எப்படி எந்த் அளவுக்குங்கறதை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஜோதிடம் என்ன சொல்லுது:

ஜாதகத்துல களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை பெற்று - லக்னாத் சுபர்களா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா பிரச்சினை இல்லை.

அதுக்கு மாறா மேற்சொன்ன களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை இழந்து - லக்னாத் பாபிகளா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா
பேட்டரி அவுட்டுதேன். (கண்ணாலமே கட்டினாலும் பல்பு வாங்க வேண்டியதுதேன்)

அனுபவத்துல பார்க்கும் போது லவ் பண்ற பார்ட்டியெல்லாம் எந்த கிரகம் தனக்கு ஆப்பு வைக்க பைனாகுலர்ல வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வமுள்ள பெண்ணைத்தேன் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.

காதலில் வெற்றி விதிக்கப்பட்டுள்ள ஜாதகன் லவ் பண்ணாமயே கூட இருந்துரலாம். ஆனால் காதலால காயடிக்கப்படனும்னு இருக்கிற பார்ட்டி மட்டும் நிச்சயம் லவ் பண்றான். இம்சைய அனுபவிக்கிறான்.

ஓகே இதுல தொட்டு காட்டின காதல் வகைகள் ஒவ்வொன்னையும் அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுப்போம்.

எந்தெந்த காதல்ல பேட்டரி அவுட்டாயிரும். எந்தெந்த காதலால பேட்டரி வீக்காயிரும்ங்கறதை எல்லாம் விலாவாரியா பார்ப்போம். டோன்ட் ஒர்ரி..

Tuesday, June 28, 2011

காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா!


அண்ணே வணக்கம்ணே ..

இன்னைக்கு ஒரு மாறுதலுக்கு ச்சொம்மா கடலை போடலாம் வாங்க !
என்னதான் நாட்டு நிலைமை முதல் - சனங்கள்ள சோசியத்தை பத்தின விழிப்புணர்வு வரை கவலைக்கிடமா இருந்தாலும் எப்பப்பாரு சீரியசா ..ரோசிச்சு ரோசிச்சு மண்டை காய்ஞ்சுப்போச்சு. மெகாசீரியல் ஓடற ஹால் மாதிரி டல் ஆயிருது. அதான் ச்சொம்மா கடலை போடலாம்னு ஒரு உத்தேசம்.

இதுக்கு காரகர் சுக்கிரன் விகட ,வினோத பரிகாச பிரசங்க பிரியம். ச்சொம்மா பேசிக்கிட்டே இருந்துட்டா சுக்கிர பலம்லாம் இதுல செலவாகி கில்மா பின் தங்கிரும். காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஏசி ரெஸ்டாரண்டை அவாய்ட் பண்ணிருங்க -சோடியா டூ வீலர்ல அலையறதை விட்டுருங்க - ஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட், கூல் ட்ரிங்ஸ்,சினிமா மாதிரி இழவையெல்லாம் விட்டுருங்க . இதெல்லாமே சுக்கிர காரகம் தேன்.

தப்பித்தவறி காதலிச்ச பார்ட்டியையே கண்ணாலம் பண்ணவேண்டி வந்தா மேற்படி மேட்டர்களோட விளைவா பேட்டரி வீக் ஆயிரும். இப்பல்லாம் கில்மாவுல வீக்காயிருந்தா குட்டிங்க உடனே விவாகாரத்துக்கு அப்ளை பண்ணிர்ராய்ங்களாம்.

குஷ்டம் வந்தவன் அவில் ஃபைவ் விழுங்கறான். கடப்பாறைய விழுங்கினவன் சுக்கு கஷாயம் சாப்பிடறான். அதென்னமோ நமக்கு சில்லியா சில்லி வேர்களை பிடிச்சு தொங்கற வித்தை கை வரலிங்ணா. அசால்ட்டா ஆணிவேரை புடிச்சுர்ரோம் .சனத்துக்கு கிலியடிச்சுருது. ஆப்பு வச்சிர்ராய்ங்க.

மொதல்ல கடலை -அப்பாறம் ஆப்பை பத்தி பார்ப்போம். அதுக்கு மிந்தி நேத்திக்கு நீங்க படிச்ச (ஏறக்குறைய 1094 பேர் இரவு 11.30 நிலவரம்) நவீனபரிகாரம் தொடர் 2000 வருடத்தில் ஆன்மீகம் மாத இதழ்ல துவங்கி ரெண்டு மூனு அத்யாயத்துல நிறுத்தப்பட்டதை சொல்லியே ஆகனும்.

நாம பிடிச்சதென்னவோ ஆணிவேர். அசால்ட்டா அசைக்க "அவாளோட" பழைய பொய்கள் எல்லாம் பல்லிளிக்க ஆரம்பிச்சுருச்சு.பொயப்பு கெட்டுப்போற நிலைமை வந்துருச்சு. ஆப்பு வச்சிட்டாய்ங்க.

கடலை:
வேர்கடலை விக்கிறவுகளை பார்த்திருப்பிங்க. எப்பமோ வறுத்து பொட்டலம் போட்டு வச்சிருப்பாய்ங்க. ஆனால் ச்சொம்மா சொம்மா ஜல்லி கரண்டிய வாணலில தட்டி சத்தம் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. அது விளம்பரத்துக்கு.

ஆனால் அசலான மேட்டரை விட்டுட்டு/காரியத்தை விட்டுட்டு வெட்டிப்பேச்சு பேசறதுக்கு கடலை போடறதுனு ஆரு பேரு வச்சாய்ங்க?

ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.

ஆப்பு:
மரத்தை கோடாரியில பிளக்க சின்னதா பிளவு வரும் ( ஒரே அர்த்தங்ணா - ரெட்டைன்னாலே நமக்கு பிடிக்காது - தப்பான அர்த்தம்லாம் நம்ம அகராதியில கடியாது) அதுல ஒரு மரத்துண்டை வச்சு அடிப்பாய்ங்க. மரம் பிளக்கும். அந்த மரத்துண்டுக்குத்தேன் ஆப்புன்னு பேரு. இதை எங்க அடிச்சா வலிக்கும்னு "பின்"னாடி கூட சொல்லமாட்டேங்ணா

நேத்து பதிவா போட்ட மேட்டரு கொடவுன்ல கிடந்த மேட்டருங்ணா. அந்த நாள்ள மேக்சிமம் 400 பேர் தான் படிச்சிருப்பாய்ங்க. இப்பம் ஆயிரம் தாண்டிருச்சே. மேட்டரா மாத்தி ரோசிக்க(ச்சு) சொல்ற மேட்டர் சனம் பின்னி பெடலெடுப்பாய்ங்க. பெரீ டிஸ்கசன்லாம் நடக்கும்னு நினைச்சேன். நிறைய விளக்கம்லாம் தரலாம்னு வெயிட்டிங். ஆனால் "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படலை"

இதை ரெண்டுவிதமா புரிஞ்சிக்கிடலாம். ஒன்னு குளவி கொட்டி கொட்டி பூச்சிகளை குளவியா மாத்தினாப்ல உங்க மைண்ட்ஸையெல்லாம் என் எழுத்துக்கள் ஏற்கெனவே ட்யூன் பண்ணியிருக்கனும். அல்லது ஆரோ ஒரு பத்தாறு போட்ட கமெண்ட் தான் சனங்க கருத்தோ என்னமோ ("பினாத்தலுக்கும் அளவு வேணும்")

கடலை போடலாம் வாங்கனு தலைப்புல கூப்டாலும் டீன் ஏஜ்ல கூட கடலை போடறது நம்ம சரித்திரத்துல கிடையாதுங்ணா.

நாம என்ன செய்தாலும் அதனோட முடிவான லட்சியம் நம்ம லட்சியமாத்தான் இருக்கும். நம்ம லட்சியம் (ஆப்பரேஷன் இந்தியா 2000) தெரியும்ல.

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனேங்கறாப்ல என் மனசு லட்சியத்துலயே நிக்குது. ( கால் வலிக்கப்போவுதுனு ஆருப்பா நக்கலடிக்கிறது?)

சமீபத்துல கலாம் அய்யாவோட மெயிலுக்கும் / விசயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்களோட மெயிலுக்கும் , தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும் ஆ. இந்தியா 2000 திட்டத்தின் சுருக்கத்தை அனுப்பினேன்.
பதில் வரவே வராதுனு தெரியும். இதெல்லாம் தெரிஞ்சே செய்யற லொள்ளு. ம்னமே அதை விட்டுத்தள்ளு.

கிரகங்கள் மனிதர்களை / மனிதர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துதுன்னு இத்தீனி நாளூ சொல்லிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல நவகிரக பாதிப்புகளை குறைப்பது எப்படின்னும் இன்னொரு கட்டத்துல நவகிரகங்களிடமிருந்து விடுதலைன்னும் தொடர் பதிவு போட்ட பார்ட்டி நாம.

இந்த க்ஷணம் என்ன தோணுதுன்னா நாம என்னதான் பரிகாரம், விடுதலைன்னு வாய்ல வவுத்துல அடிச்சிக்கிட்டாலும் சனம் கிரகங்கள் காலால கால்பந்தாய் உதைப்படறதை எண்ணி அவிக வருந்தவும் போறதில்லை திருந்தவும் போறதில்லை. நாம எதுக்கு ச்சொம்மா நை நைன்னு அடிச்சு சுஸ்தாகனும்.பேசாம "தொழிலை" கவனிக்கலாமேனு தோணுதுங்ணா..

இதுல ஒரு லாபம் என்னன்னா .. சனம் தங்களோட வில்லை ( Will) உபயோகிச்சு நம்மை முடக்க பார்க்க பார்க்க ஆத்தாளுக்கு கோவம் பொத்துக்கினு வந்து "பெரீ பெரீ சமாசாரத்தை எல்லாம் அசால்ட்டா தூக்கி கொடுத்துக்கினு கீறா"

இவிக வில் ( Will) என்ன ராமன் கை வில்லா? ங்கொய்யால ராம பாணத்தையே டுபுக்காக்கின ராம நாமம்ங்கற ஆயுதம் நம்ம கையில கீது.

பிட்டா புடிங்க:

இன்னைக்கு இளைய தலைமுறை அசால்ட்டா உபயோகிக்கிற பல வார்த்தைகளோட அசலான அர்த்தம் விபரீதமா இருக்குங்ணா. உ.ம் ஆப்பு

என்ன ஒரு ஆறுதல்னா பண விஷயத்துல க்ளியரா இருக்காய்ங்க. என்ன ஒரு பயம்னா கிரைமுக்கு கூட தயங்க மாட்டேங்கறாய்ங்க.அந்த காலத்துல வீட்டு ஏழுமலையான் உண்டி - அம்மாவோட சீர்வரிசையை சேர்ந்த வெள்ளி டம்ளர்களோட நம்ம கிரைம் நின்னுருச்சுங்ணா.

நமக்கும் வயசு ஆகுது. ச்சொம்மா கண்டவுகளை வம்புக்கிழுத்து அவிக வவுத்தெறிச்சலை ஏன் கொட்டிக்கனும்னும் தோணுது. தாளி வழக்கு போடுவான்/டாக்சி அனுப்புவாங்கறதுக்கெல்லாம் பயப்படற கேஸ் நாம இல்லிங்ணா.

பெட்டைபுலம்பல் மாதிரி புலம்புவாய்ங்க போல.அதெல்லாம் டெலிபதில வந்து ரெம்ப டார்ச்சர் பண்ணுது. எது எப்படியோ ஜாதகங்க வந்துக்கிட்டே இருக்கு. ரவுண்ட் தி க்ளாக் ஒர்க் அவுட் பண்ணாலும் "முடியலிங்ணா" அதனால வர்ர மாசம் 7 ஆம் தேதிவரை ஆரும் ஜாதகம் அனுப்பாம இருந்தா உள்ளதை பைசல் பண்ண வசதியா இருக்கும்.

நம்ம வலைதளத்துல பதிவு போடறவுக ஃப்யூச்சர்ட் ஐட்டமா போட்டா பொருத்தமான படத்தை ஃப்யூச்சர்ட் இமேஜா பொடுங்ணா.

பாண்டியண்ணன் எப்பத்தேன் பதிவு சைஸ்ல கமெண்ட் போடறத விட்டு பதிவு போட ஆரம்பிக்கப்போறாரு கேட்டு சொல்லுங்ணா..

அப்பாறம் சமச்சீர்கல்வி ஆய்வு கமிட்டி உறுப்பினர் ஒருத்தரு தங்களோட நிறுவன ஆசிரியருக்கு சம்பளம் சரியா கொடுக்காத வழக்குல இருக்காராமே நெஜமா ஆருப்பா அது?

பிரதமர் நாளை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறாராம். வாரா வாரம் சந்திப்பாராமே.. (அய்யய்யோ அப்ப இனிமே வாரா வாரம் பல ஊழல்கள் வெடிக்கப்போவுதா?)

பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிய குழு உறுப்பினர்கள் (காங்கிரஸ்) நக்கலடிச்சு சிரிச்சாய்ங்களாமே?

"நல்ல தீர்ப்பை உலகம் கூறும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது"

ராகுல் காந்தி எப்ப பிரதமராக போறாரு? தாளி ராகுல் பிரதமராகனும் - முன் கூட்டி தேர்தலுக்கு போகனும். காங்கிரஸ் போண்டியாகனும்.

ங்கொய்யால நேரு குடும்பத்துல இருந்து நாய்குட்டி வந்தா போதும் ஜெயிச்சுரலாம்னு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற காங்கிரஸ் கிழவாடிகளுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கக்கூடாது.

Monday, June 27, 2011

"அவாள் " கூறும் டுபுக்கு பரிகாரங்கள்

1. சூரியன் பேசுகிறேன்
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.
கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.
நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.
ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். 
மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.
நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.
இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.
என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். 
கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?
இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
2. சந்திரன் பேசுகிறேன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.
நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.
நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).
2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.
4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.
5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.
6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.
7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.
8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.
9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது
3. செவ்வாய் பேசுகிறேன்
இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!
ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே. 
நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா? 
ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா? 
அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா?
"ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். 
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். 
பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்
4. ராகுபேசுகிறேன்
சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். 
இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? 
கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். 
நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.
சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! 
நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவார்கள்.
இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 
சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. 
பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.
பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.
2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.
3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.
4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.
5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்
6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.
7. பரமபதம் ஆடுங்கள்.
8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.
9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.
10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.
11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
5. குருபேசுகிறேன்
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். 
கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். 
பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். 
சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 
அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். 
சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். 
எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!
உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.
பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.
2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.
3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.
4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.
5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.
6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.
7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.
8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.
9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.
10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.
11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
6. சனிபேசுகிறேன்
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். 
மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 
19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். 
சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். 
இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். 
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. 
சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். 
இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.
2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.
3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.
4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.
5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.
6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.
7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.
8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.
9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.
10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.
11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.
12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.
13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
7. புதன்பேசுகிறேன்:
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. 
விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். 
புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். 
சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். 
பரிகாரங்கள்:
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.
2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.
3. வியாபாரம் வேண்டாம்.
4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.
5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.
6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.
7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.
8. கள்ள உறவு உதவாது.
9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள்.
10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்
8. கேதுபேசுகிறேன்
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. 
இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 
பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.
2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.
3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.
4. யோகம் பயிலுதல்.
5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.
6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.
7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.
8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.
(குறிப்பு: ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். )
9. சுக்கிரன்பேசுகிறேன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. 
சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. 
தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. 
ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். 
நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.
பரிகாரங்கள் :
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.
2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.
3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.
4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.
5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.
6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.
7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).
8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.
9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.
10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

Sunday, June 26, 2011

பிரபலங்களையும் தாக்கும் சமூக சீரழிவுகள்

காலங்காலமா இருந்த வர்ணாசிரம (அ)தர்மத்தால இந்திய சமூகமே ரெண்டா பிளந்து கிடக்கு. மெஜாரிட்டி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதே  இந்த நிலைக்கான  ஆரம்ப புள்ளி.  ராஜாக்களை  யாகம் அது இதுனு கவர் பண்ணியும், படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களை துபாஷிகள் என்ற நிலையிலும் , பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை தமது விசுவாசம்+ கூர்மையான புத்தியாலும் கவர்ந்து தம் இனத்தை மட்டும் வளப்படுத்திக்கொண்டது ஒரு இனம்.

பிறர் உழைப்பில் -பிறர் சிரிக்க வாழ்ந்த அந்த இனம்  தம்மை செக்யூர்டா வச்சுக்க மத்த இனங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பிச்சு  நீ உயர்ந்தவன்னு ஒரு கூட்டத்தை ரெகக்னைஸ் பண்ணி  எனக்கு நீ எப்படியோ அவிக உனக்கு அப்படின்னு ஒர்க் அவுட் பண்ணி என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணாய்ங்க.

இதன் விளைவாத்தான் ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் தோன்றியது. ரூல்ட் க்ளாஸ் ,ரூலிங் க்ளாஸ் என்று இந்திய சமூகமே இரு கூறாகிவிட்டது. தொழில் மயத்தின் காரணமா மத்தியமர் எனும் ஒரு புது பிரிவும் தோன்றியது.

ஏழை பணக்காரன் வித்யாசம் அதிகரிச்சுக்கிட்டே போக தரம் தாழ்ந்த  அரசியல் ,ஊழல் , தனியார் மயம் ,தாராள மயம் உலகமயம் என்று ஸ்தூலமான காரணங்கள் பல இருந்தாலும் எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி வர்ணாசிரம தர்மம்தான்.

இன்னைக்கும் பிராமணர்கள் ஆளும் வர்கத்தின் அதிகாரத்தை - அதற்கான எவ்வித ரிஸ்கும் இழப்பும் இன்றி அனுபவிப்பது  நிஜம் தான் ( செகரட்டரி -ஆடிட்டர் -ஃபேமிலி டாக்டர் -ஷேர்ஸ் கன்சல்டன்ட் -சாஃப்ட் வேர் கன்சல்டன்ட் -ட்ரான்ஸ்லேட்டர் -ட்ராஃப்ட் மேன் -ஸ்டெனோ)

ஆனால் பிராமணர்களுடனான கூட்டுறவாலயோ என்ன இழவோ தெரியலை சூத்திரனெல்லாம் பிராமணனை விட க்ளாஸா, நாசூக்கா,  தாங்கள் என்னமோ நெல்லதையே பண்றாப்ல பம்மாத்து காட்டிக்கிட்டு கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இன்னைய தேதிக்கு பிராமணர்களை  சாடுவது எவ்ள முக்கியமோ பிராமணர்களா மாறிட்ட சூத்திரர்களை சாடுவது கூட  அவ்வளவு முக்கியம் தான்.


ஆளும் வர்கம்னா அதுல வெளிப்படையா தெரியற சூத்திரர்களும் - பின்னணியில் -திரைக்கு பின்னே செயல்படற பிராமணர்களும் சேர்த்துத்தான்ங்கறதை  ஞா வச்சுக்கிட்டு தொடர்ந்து படிங்க.

இந்த விசித்திரமான கூட்டணி தங்களை வளப்படுத்தி கொள்ள கடைபிடிக்காத வழியே இல்லை.
ஒரு காலத்துல அய்யர் மாரு எந்தெந்த ஃபீல்டுலல்லாம் மோனொப்பலியா இருந்தாய்ங்களோ அந்த ஃபீல்டுல எல்லாம் சூத்திர பசங்க தூள் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. அது இசையாகட்டும் -சாஃப்ட் வேராகட்டும், சார்ட்டட் அக்கவுண்டன்ஸி ஆகட்டும்.,மீடியா ஆகட்டும்

இன்னைக்கு அவாள் கிட்டேருந்து ஏறக்குறைய பறிக்கப்பட்டுவிட்ட துறைகளில்  ஊழல் வாதிகளா ஃபோக்கஸ் ஆன   சூத்திரர்கள் எல்லாருக்கும் நேர் குருவா இல்லாட்டாலும் குருவுக்கு குருவோ அந்த குருவுக்கு குருவோ ஒரு அய்யராதான் இருப்பாரு.

என்ன அவிக அளவா, நாசூக்கா , ப்ளாண்டா, பிடிபடாம செய்தாய்ங்க (இதுக்கு பயம் கூட ஒரு காரணம்) ஆனால் நம்மாளுங்க காஞ்சமாடு கம்பங்கொல்லையில விழுந்த மாதிரி தூள் பண்ணி மாட்டிக்கிட்டாய்ங்க.

கல்கிக்கும் ராஜாஜிக்கும் உள்ள தொடர்பு காவியம்னு இன்னைக்கும் கல்கி பீத்திக்குது . ஆனால் நக்கீரனுக்கும்  கலைஞருக்குமான தொடர்பு மட்டும் சந்தி சிரிக்குது. இங்கதான் அவாள் நிக்கிறாய்ங்க. நம்மாளுங்க நாறிர்ராய்ங்க.

ஆக இந்த ஆளும் வர்கம் (ஞா இருக்குல்ல இதுல சூத்திராளும் அடக்கம்) ஏழைமக்களை சுரண்ட என்னெல்லாம் செய்தாய்ங்களோ இவிகளால என்னெல்லாம் சமூக சீரழிவுகள் ஏற்பட்டதோ அதெல்லாம் இன்னைக்கு ஆளும் வர்கத்தையும் பாதிக்க துவங்கியிருக்குது. ஆளும் வர்கம் தன்னை வளப்படுத்தி கொள்ள செய்த சதிகள் அரங்கேற்றிய சமூக சீரழிவுகள் பற்றி  சொல்லனும்னா அதுக்கு தனி தொடர்பதிவு போடனும்.

 எளியவனை வலியவன் அடித்தால் வலியவனை தெய்வம் அடிக்கும்னு சொல்வாங்க. அது நெஜமாக துவங்கியிருக்கு.   தன் வினை தன்னைச்சுடும் என்பது போல ஆளும் வர்கத்தால் விதைக்கப்பட்ட  ஊக்குவிக்கப்பட்ட  சமூக சீரழிவுகள்  அந்த ஆளும் வர்கத்தையே தாக்க ஆரம்பித்திருக்கிறது.

முக முத்து கதை ? ( ஆல்க்கஹாலிக்) ப்ரமோத் மகாஜன் கதை ஞா இருக்கா? ( போதை மருந்துக்கு அடிமையான தம்பி டிக்கெட் கொடுத்துட்டாரு)

இந்த வரிசையில லேட்டஸ்டா மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி  ஜெய்பால் ரெட்டியின் தங்கை மகள் கணவனால் கொல்லப்பட்டார்.

அதுவும் எப்படி? பார்ட்டியில் ரெண்டு பேரும் குடிச்சிருக்காய்ங்க -வாக்கு வாதம் நடந்திருக்கு -போதையிலயே டிக்கெட் கொடுத்துட்டாரு ஆத்துக்காரரு.

இன்னைக்கு செய்தி ஒரு எம்பியோட அண்ணன் மகள் தீக்குளித்து தற்கொலை (திருமணமானவர்) இந்த நொடி ஞா வந்தது இவ்ளதான் ஒரு எஸ்.ஐயோட மகன் பழைய பேப்பர் பொறுக்குறான். ஒரு எம்.எல்.ஏவோட மகன் (55)  ஓட்டை சைக்கிள்ல ஊன்று கோலோட சுத்திக்கிட்டிருக்கான்.

"பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா"

தங்களது கோட்டைசுவரனைய காம்பவுண்ட் சுவர்களை தாண்டி தங்கள் குடும்ப பெண்களையே பலி வாங்கத்துவங்கிவிட்ட பிறகும் ஆளும் வர்கம் கண்விழிக்கலின்னா நீங்க உருவாக்கிவிட்ட சீரழிவுகள்  உங்க வீட்டு  பெட் ரூமுக்கெல்லாம் வந்துரும்யா !

அப்பாறம் ஒங்க இஷ்டம்.

Saturday, June 25, 2011

சனிப்பெயர்ச்சி 2011 : 12 ராசிகளுக்கு பலன்+ பரிகாரம்

இது கடந்த பதிவின் தொடர்ச்சி.  நீங்கள்  இந்த பக்கத்திற்கு புதிதாக வந்தவரானால் பதிவின் கடைசியில் தந்துள்ள தொடுப்பை க்ளிக்கி அதையும் படித்தால் முழுப்பலனை அடையலாம்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி நல்லதில்லை. ஆனாலும் சத்ருஜயம்,ரோக நிவர்த்தி ருணவிமுக்தி நிச்சயம் கிடைக்கும். அடுத்தவுகளை  இம்சை பண்ணி பார்க்கனுங்கற எண்ணம் வந்திருக்கும் .அதை விட்டுட்டு / குறைச்சுக்கிட்டு  கன்ஸ்ட் ரக்டிவா செயல்படறது நல்லது. மூத்த சகோதரம் நோய்வாய்படலாம்./அவிகளோட சண்டை சச்சரவு ஏற்படலாம்.

எச்சரிக்கை:
இப்பம் உங்க பார்கெய்னிங் பவர் அதிகரிச்சிருக்கும். இல்லேங்கலை.ஆனால் ரெம்ப ஓவரா போயிராதிங்க. அடக்கி வாசிச்சு காரியத்தை முடிச்சுக்கங்க.

2.ரிஷபம்:
இவிகளுக்கு சனி 9,10 க்கு அதிபதி. சிறப்பு விதிப்படி பார்த்தா அஞ்சுல வந்ததால சொத்து சுகம், வேலை வாய்ப்பெல்லாம் கிடைச்சிருக்கனும். ஆனால் பாருங்க பஞ்சம சனியாவே ஒர்க் அவுட் ஆகி ஆப்படிச்சிட்டதா தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு." பஞ்சம சனி வாடினி மஞ்சம் பக்கன கூட சேர்ச்சகுரா"

இதுக்கு அர்த்தம் "பஞ்சமத்துல சனி  உள்ள ராசிக்காரனை கட்டில் பக்க்த்துல கூட சேர்க்காதே" அவனுக்கு உதை கொடுக்க வ்ந்தவன் நம்ம முதுகுலயும் ரெண்டு போட்டுட்டு போயிருவானு அர்த்தம்.

உங்க ராசிய பொருத்தவரை இது வெறும் பஞ்சம சனி எஃபெக்ட் கிடையாது உங்க ராசிக்கு மட்டும் மரணத்துக்கு அதிபதியான குரு லாபத்துல உட்கார்ந்ததுதேன் ( மே,8 வரை ஒரு வருசமா)

இப்பம் அந்த குரு 12ல மறைஞ்சதால சொத்து,சுகம்,வேலை வாய்ப்பு எல்லாத்தையும் எதிர்பார்க்கலாம். பஞ்சம சனியால ஏற்பட்டுக்கிட்டிருந்த அவமானம், நிராசை, மான பங்கம்லாம் அவாய்ட் ஆயிரும். டோன்ட் ஒர்ரி

பரிகாரம்:
கிழிஞ்ச /சாயம் போன சட்டை, பிஞ்ச செருப்பு, டை போடாத தலைன்னு வேசம் கட்டுங்க பேர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. பசங்களை நொய் நொய்னு  கரிச்சு கொட்டாதிக


3.மிதுனம்:
இவிகளுக்கு சனி  8,9 க்கு அதிபதி .இவர் நாலுல இருக்காரு. இதனால நாளிதுவரை தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் விஷயங்கள்ள பாதிப்பை தந்திருக்கலாம். சிலருக்கு வீடு மாற்றம் ,வாகனமாற்றம் ரேஞ்சுக்கு கூட போயிருக்கலாம். ஆனால் இப்பம் த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் வகையறாக்கள்ள சூப்பர் ஒர்க் அவுட் நடக்கலாம். சிலர் கட்டின வீடா வாங்கலாம். சிலர் லீஸுக்கு போகலாம்.

எச்சரிக்கை:
பழைய வீடு வாகனம் வாங்கும்போது ஓவரா பேரம் பேசாதிங்க.அடுத்த ரவுண்டுல வாரிசுகளுக்கு ஆப்பா முடிஞ்சுரும்.

4.கடகம்:
இவிகளுக்கு சனி 7,8 க்கு அதிபதி. இவர் 3 ல இருக்காரு. கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா
பொஞ்சாதிக்கு/ அவிகளோட போறச்ச ஜாதகருக்கும் சின்னதா அடி ,கிடி கூட பட்டிருக்கலாம். அவிகளுக்கு பயணங்கள் அதிகம் செய்யவேண்டி வந்திருக்கலாம். இவிக உட்ன் பிறப்புகளுக்கு ஆப்பு. அவிகளோட நீயா நானா ரேஞ்சுலதேன் ரிலேஷன் இருக்கும்.

தைர்யே சாஹசே லக்ஷ்மி கணக்கா தைரியம் அதிகரிச்சிருக்கும். அதனால  லாபமா நஷ்டமாங்கறது நீங்க தைரியத்தை எக்சிபிட் பண்ண ஃபீல்டை பொருத்தது.

எச்சரிக்கை: தைரியம்னா ஓகே. அது குருட்டு  தைரியமா ஆயிராத பார்த்துக்கங்க. பொஞ்சாதி ஹெல்த்தையும் பாருங்க.

5.சிம்மம்:

இவிகளுக்கு சனி 6 ,7 க்கு அதிபதி. இவரு ரெண்டுல உட்கார்ந்தாரு. சலிச்சிக்கிட்டோ /  முனகிக்கிட்டோவாச்சும் வீட்டம்மா கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க. சில நேரம் உங்களையும் அறியாம உங்க பேச்சு எதிராளி மனசை புண்படுத்திரலாம். கொடுக்கல் வாங்கல்ல வாக்கு தவற வேண்டி வரலாம்.
இது வீடா வீட்டை பிடிச்ச பீடையா எங்கயாச்சும் ஒழியறேங்கற வசனம்லாம் கூட வாய்ல வந்திருக்கலாம். போயிராதிங்க. ங்கொய்யால சித்தூர்ல பத்து ரூபாய்க்கு கிடைச்ச அளவுச்சாப்பாடு இன்னைக்கு இருபத்தி அஞ்சு ரூபா. இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கிடைச்சுக்கிட்டிருந்த ஃபுல் மீல்ஸ் 40 ரூவா.

கடன் வாங்க வேண்டி வரும். கொடுத்தா திரும்பி வராது தெண்ட செலவும் ஆகும்.கண் பார்வையும்  மங்கும். டூவீலர்ல போறவுக தரமான கிளாஸ் யூஸ் பண்ணுங்க. மனைவி மனைவி வழி உறவினர் வகையறாவுலயும் விரயம் ஏற்படும்.

எச்சரிக்கை:
யாகாவாராயினும் நா காக்க.

6.கன்னி:
இவிகளுக்கு சனி 5 ,6 க்கு அதிபதி .இவரு ஜன்மத்துலயே உட்கார்ந்தாரு.  அஞ்சுக்கதிபதிங்கறதால ஒரு பக்கம் பணப்புழக்கம் அதிகரிச்சாலும் மந்த புத்தியும், சோம்பலும் இருக்கும். இது அளவுக்கு மீறிப்போயிராம பார்த்துக்கங்க. சொம்மா சுத்தம் சுத்தம்னு மெனக்கெடாதிங்க. ஃப்ரீயா உடு மாமேனு இருந்தா தோஷம் பரிகாரமாகும்.

கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக. எடக்கு மடக்கா பேசத்தோணும். கடன், நோய்,விரோதங்கள் வரலாம்.

பரிகாரம்:
சஃபாரி சூட் போடுங்க . அட்லீஸ்ட் ஒரே நிறத்தில் பேண்ட் சட்டை ,ஸ்டீல் செயின்,மோதிரம் ப்ரேஸ்லெட் போடுங்க.

7.துலா:

இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி. விரயத்துல உட்கார்ந்தார். இதனால தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் வகையறாவில் செலவுகள் கூடும். அல்லல் அலைச்சல் பெருகும். பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,
வகையறாவிலும் நிராசையே மிஞ்சும். வாரிசுகளே விரோதிகளா மாறலாம். அடக்கி வாசிங்க.

பரிகாரம்:
வீட்டு சன்னல் /கேட்டுக்கு, வண்டிக்கு  திருஷ்டி கயிறு சுத்திவிடுங்க. ரெம்ப சுத்தப்படுத்தாதிங்க. முக்கியமா பெட் ரூமை .  அம்மா இருந்தா அவிகளை நீல நிற உடை ,பொருட்களை அதிகம் யூஸ் பண்ண சொல்லுங்க. சனிக்கிழமை யாரேனும் உடல் ஊனமுற்றவருக்கு (கால் ஊனம் பெஸ்ட்)  சிற்றுண்டி அ உணவு கொடுங்கள்

8.விருச்சிகம்:

இவிகளுக்கு சனி 3,4 க்கு அதிபதி. லாபத்துல உட்கார்ந்தார். சகோதர சகோதிரிகளுடனான மனக்கசப்பு மாறும் அ உடன் பிறவா சகோதரர்/சகோதிரி  கணக்கா ஒரு பார்ட்டி உதவுவார்.அவரால உங்க தைரியம் ரெட்டிப்பாகும்.பிரயாணங்கள் அதிகரிக்கும். அதே சமயம் அவற்றின் மூலம் இரும்பு ஆயில் கிரானைட்ஸ் போன்ற சனி காரக அம்சங்களில் லாபம் கிட்டும். தாய்,தாய் வழி உறவு ,பூமி,வீடு ,வாகனம்,கல்வி,  தங்கள் பாசத்துக்குரியவர்கள் வகையறாவில் செலவுகள் குறையும். விட்டால் லாபமும் ஏற்படும். இரண்டாவது வீடு அ வாகனம் அமையவும் வாய்ப்பு.

9.தனுசு:
இவிகளுக்கு சனி 2 ,3 க்கு அதிபதி 10ல உட்கார்ந்திருக்காரு. இதனால உங்க தினசரி/மாதவருமானத்துல சுணக்கம் ஏற்படலாம் ( குறையாதுங்கோ - கைக்கு வர தாமதமாகலாம். அம்புட்டுதேன்)  உங்க பேச்சு குடும்ப உறுப்பினர்கள், தைரியம் ,சகோதரர்கள் வகையறாவில் தாமதித்த நன்மை ஏற்படலாம். ஆரம்பத்தில் இந்த அம்சங்களால் உங்கள் செய்தொழில்,உத்யோகத்தில் பாதிப்பே ஏற்பட்டிருந்தாலும் இந்த 6 மாத காலத்தில் நன்மை ஏற்படலாம்.

செய் தொழிலில் லொள்ளு பண்ணிக்கிட்டிருந்த வேலைகாரவுக இப்பம் நெல்லாவே கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க. இரும்பு ,ஆயில் தொடர்பான சனி காரகத்தொழிலில் இருந்தால் ரெட்டிப்பு யோகம்.அல்லது பார்ட் டைமாகவேனும் செய்யவேண்டி வரலாம். ஒரு சிலர் வீடு கட்டுதல்/மராமத்து ஆகியவற்றிலும் இறங்குவீர்கள்.

பத்தில் குரு வந்தா பதவிபறிபோகும் . சனி வந்தா? இன்னொரு லட்டு திங்க ஆசையானு கேப்பாரு. கேட்டுக்கிட்டே இருப்பாரு. அதுக்காவ எல்லாத்துலயும் தலைய விட்டுராதிங்க ( கெட்ட வார்த்தை இல்லிங்கண்ணா - பலான மேட்டரும் கடியாதுங்ணா )

10.மகரம்:
இவிகளுக்கு லக்னாதிபதி   தனபாவத்துக்கும்  ஆதிபத்தியம் பெற்று . 9 ல உட்கார்ந்திருக்காரு. சிறப்பு விதிப்படி இது தூளான அமைப்பு இதனால த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள், த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் வகையறாக்கள்ள தூள் கிளப்பனும்.

ஆனால் இவர் சனிங்கறதால  மனசு கஷ்டம் , அல்லல் ,அலைச்சல், அவப்பேர் , கிழிஞ்ச சட்டைக்காரன், சட்டை போடாதவன்,  தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சித்தேன் மேற்படி பலனை எல்லாம் பெற முடியும்.

உ.ம் ஜகன்மோக் ரெட்டி

இவிகளுக்கு நியாயமா வரவேண்டிய விசயம்லாம் சுவத்துல சூப்பர் சிம் மாதிரி ஒட்டியிருக்கும். ப்ரின்ஸ் ப்ளேட் வாங்கி சுரண்டிக்கிட்டு கிடக்கனும். ஆனால் இது கடைசி 6 மாசம்ங்கறதால மேற்சொன்ன பலன் எல்லாம் தேர்தலுக்கு முந்தின 6 மாசம் கணக்கா பெறவும் வாய்ப்பிருக்கு. முக்கியமா  தூர தேச உதவி -பயணம் ஒர்க் அவுட் ஆகலாம்.

11.கும்பம்:
இவிகளுக்கு லக்னாதிபதியே விரயாதிபத்யமும் பெற்று எட்டுல இருக்காரு. விரயாதிபதி எட்டுல நின்னா யோகம். அல்லல் அலைச்சல்,  செலவெல்லாம் குறைஞ்சு /தூக்கம் குறைஞ்சு /கில்மாவாலயே டயர்ட் ஆகனும். ஆனால் பாருங்க இவருக்கு லக்னாதிபத்யமும் இருக்கு . இதான் பிரச்சினை.

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன்  எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

அப்படியா கொத்த  லக்னாதிபதி எட்டுல மாட்டினா எம்.ஜி.ஆர் ப்ரூக்ளின்ல இருந்தப்ப அதிமுக காரன் நிலைதான்.  இதர கிரகங்களோட அமைப்பு ஒரு வீட்டின் ஒய்ரிங் மாதிரின்னா லக்னாதிபதிதான் ட்ரான்ஸ்ஃபார்மர்.

இதனால " நானே நானா மாறினேனா"னுட்டு பாடற மாதிரி ஆயிரும். நீங்க ஆனையாவே இருந்தாலும் எலியெல்லாம் டேட்டிங் கூப்பிடும். போகவேண்டிய நிலையும் வரலாம். சுருக்கமா சொன்னா உங்க சொத்த தேர்ட் பார்ட்டி அனுபவிக்க தேர்ட் பார்ட்டி கடனுக்கு நீங்க பதில் சொல்லவேண்டி வந்துரும்.

அடிபடுதல் ,சிறை செல்லுதல்,வீண் பழி சுமத்தல்,அபராதம் கட்டுதல், உறவில் அடிக்கடி டிக்கெட்டு அஷ்டமசனின்னா இதெல்லாம் சகஜமப்பா..

ஆறுதல்:
இவருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துட்டு 9 ஐ பார்க்கிறதால இந்த பிரச்சினைகள் ஓரளவு குறையலாம்

பரிகாரம்: இரும்பு தானம்,  நொண்டிக்கு அன்னதானம்,அஞ்சனேயர் வழிபாடு, முன்னோர் வழிபாடு

மீனம்:
இவிகளுக்கு சனி 12,11 பாவங்களுக்கு அதிபதி. 7 ல இருக்காரு. 7ங்கறது நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி ஆகியோரை காட்டுமிடம், இங்கன லாப,விரயாதிபதியான சனி நின்னதால  மேற்படி க்ரூப் ஆஃப் People  எண்ணிக்கை ஏறி இறங்கிக்கிட்டே இருக்கும். அவிகளால ஏற்படும் லாப நஷ்டங்களோட கிராஃபும் ஏறி இறங்கிக்கிட்டே இருக்கும்.

எச்சரிக்கை:
ஒன்னுக்கடிக்க போனாலும் தனியாவே போங்க. நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி ஆகியோருக்கு உரிய மரியாதைய கொடுத்து நீக்கு போக்கா நடந்துக்கங்க. இல்லாட்டி இவிகளே ஆப்படிச்சுருவாய்ங்க. ஒரு சிலர் போலீஸ் ஸ்டேஷன் வரை கூட போக வேண்டி வரலாம்.

2012ல இதே சனி எட்டுக்கு வரப்போறாரு. இந்த 6 மாசத்துல கும்பத்துக்கு நடக்கும்னு சொன்ன மேட்டர் எல்லாம் உங்களுக்கு 2012 + 13+6 மாசம்  ல நடக்க வாய்ப்பிருக்கு டேக் கேர். ரிஸ்கான வேலைகளையெல்லாம்  இந்த 6 மாசத்துல முடிக்க பாருங்க.

எதுக்குனா நல்லது இரும்பு தானம்,  நொண்டிக்கு அன்னதானம்,அஞ்சனேயர் வழிபாடு, முன்னோர் வழிபாட்டை இப்பமே ஆரம்பிச்சுருங்க. அஷ்டம சனியோட அட்வான்ஸ் எஃபெக்ட் கண்ட்ரோல் ஆகும். இருக்கிற பிரச்சினைகளை லாபமோ நஷ்டமோ முடிச்சுட்டு அஷ்டமசனிய ஃபேஸ் பண்ண ப்ரிப்பேர் ஆயிரலாம்.

உடுங்க ஜூட்.

பி.கு:
12 ராசியில மேஷத்துக்கு மட்டும் பலனை கொடுத்து ச்சூ காட்டி விட்டுட்டதால 11 ராசிக்காரவுகளூம் டெலிபத்தில பண்ண டார்ச்சர் தாங்கமுடியலிங்ணா.

மனசாட்சி:
ங்கொய்யால எப்படியோ திருப்பதி வேலைய தொடராம ஒரு மேட்டரையாச்சும் கம்ப்ளீட் பண்ணியே ..

Thursday, June 23, 2011

பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

நாம எதையெல்லாம் வளர்ச்சின்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நமக்கு ஆப்பாவே முடியுது. உ.ம் இந்த சைட். ப்ளாக் என்னமோ வித் அவுட் அப்டேஷன் மினிமம் 700 ஹிட்ஸோட சக்கை போடு போடுது.  சைட் என்னமோ பஸ்ட் ஆன லாரி ட்யூபுக்கு காத்தடிச்ச கணக்கா -க்ளைமேக்ஸுல ஹீரோயின் பல்ஸ் மாதிரி 1000 க்கும் 300க்கும் இடையில ஃப்ளக்சுவேட் ஆயிட்டு  கிடக்கு.

நாம ஏற்கெனவே டிக்ளேர் பண்ண மாதிரி நமக்குள்ள ஆயிரத்தெட்டு திறமைகள் இருக்கு. ஆனால் உலகம் சோசியத்தை மட்டும்தேன் அங்கீகரிச்சிருக்கு. நமக்கும் பைசா தேவைதான். ஆனால் பைசா மட்டும்தேன்னா சாரி.

ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன்.  என் ப்ரியாரிட்டிஸ் - என் லட்சியங்கள் எல்லாம் சைடு வாங்கி சோசியம் சோசியம்னு சுத்திவர ஆரம்பிச்சதுல ரெம்ப சுஸ்தாயிட்டன்.

அதனால ரூட்டை மாத்தி 360 டிகிரியில வலம் வரலாம்னு ஒரு ப்ளான். அனுபவஜோதிடத்துல ஜோதிட ஆராய்ச்சி தொடரட்டும். அவசியம்னு பட்டா நானும் கலந்துக்கிடறேன். இந்த புதுலைன் அப்ல இன்னைக்கு பேரண்ட்ஸ் வெர்சஸ் சில்ட்ரன்

வாத்தியார் என்னமோ ..( ஷார்ட்ஸ் போடற பார்ட்டிகள் கவனிக்கவும். வாத்யாருன்னா எம்.ஜி.ஆர்)

"தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள் - நோய்
 தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்"

என்று பாடி வைத்துவிட்டார். ( பாடல்: புதுமைப்பித்தன்?)

ஆனால் பிராக்டிக்கலா பார்க்கும்போது உலகம்/ குறிப்பா உலகத்திலான சர்வைவல்/ போட்டிகள் /பருவ குழப்பங்கள்/காதல்/கத்திரிக்காய்/ ஈவ் டீசிங்/ சமூகத்தின் ஒரு பக்கம் அம்பானியின் புதுவீடுத்தனமான செழிப்பு மறு பக்கமோ வறுமை வறுமை பத்து ரூபாய்க்கு கைக்குழந்தையை விற்றுவிடும் வறுமை இத்யாதியால் ஏற்படும் தாங்கமுடியாத  வலிக்கு  மார்ஃபின் தனமாகவே இருந்தாலும் பெற்றவர் புகழுரைகள்  அவசியம் தேவைப்படுகின்றன..

அந்த புகழுரைகள் ஆத்மார்த்தமாக இருக்கும்போது நிச்சயம் பலனளிக்கின்றன. அம்மாக்காரி சீட்டு ஏலத்துல, ஊர் பஞ்சாயத்துல பிசியா இருந்துக்கிட்டு உதட்டளவுல - உயிர் இல்லாத  படாடோப வார்த்தைகளில் புகழ்ந்துரைக்கும் போது அவை வேலை செய்வதில்லை.

புகழ்ந்துரைக்கனும்ங்கற அவசியம் கூட இல்லை. ஒரு பார்வை போதும். பையன்/பொண்ணு எதையாவது சாதிச்சு காட்டின சந்தர்ப்பத்துல "சரி சரி.. ஒடம்பை பார்த்துக்க ..கண்ணெல்லாம் உள்வாங்கி டொங்கு விழுந்துக்கிட்டுருக்குன்னு சிடு சிடுத்தா கூட போதும்"

ஆனால் இப்பம் என்ன  நடக்குது? சுஜாதா ஒக்காபிலரில சொன்னா இன்னம் கொஞ்சம் எலக்ட்ரானிக், பிளாஸ்டிக் குப்பைகளுக்காக தங்கள் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு -  பசங்களுக்கு தங்களோட  நேரத்தை /கவனத்தை தரமுடியாத பெற்றோர் அந்த கில்ட்டிய கொல்ல பணம் கொடுக்கறாய்ங்க.

பசங்களுக்கோ  அ  கல்வி நிறுவனத்துக்கோ? பணம் தர்ராய்ங்க. அந்த பணம் தெண்டப்பணம் (அபராதம்) . தெண்டப்பணம் தெண்டமா போகுது.  அந்த பணத்தை பெறும் கல்வி  நிறுவனம் அந்த பிள்ளைகளை மேலும் கொஞ்சம் இம்சிக்குது.

எங்க ஊர்ல ஒரு தனியார் பள்ளி புது ஸ்கீமை கொண்டுவந்திருக்காய்ங்க. அஞ்சாங்கிளாஸ்ல சேர்ரச்ச ரூ.1 லட்சம் ஸ்கூல்ல டெப்பாசிட் பண்ணிரனும். டிசி வாங்கிட்டு போறச்ச அந்த பணம் திருப்பித்தரப்படும். வட்டி கடியாது.

ங்ககொய்யால  டொனேஷனே வாங்கி வாயில போட்டுக்கிறதை கூட புரிஞ்சிக்கலாம். ஆனால் இது ரெம்ப கடுப்பாக்கிருச்சு.. காரணங்கள் சிலவே.

1.கண்டதுலயும் பெஸ்ட் - நெம்பர் ஒன் -டாப்புனு அலட்டிக்கற இவனுகளுக்கு வங்கிக்கடன் கிடைக்காதா?

2. நூத்துக்கு ரெண்டு வட்டின்னாலும் மாசத்துக்கு ரெண்டாயிரம் ஆகுது -5, 6,7, 8, 9 எல்லா கிளாஸுக்கும்  ஒரே ஃபீஸா?  -ஃப்ளாட் ரேட் -  ஓஹோ ! அஞ்சாம் வகுப்புல ரெட்டியா வாங்கின ஃபீஸ்ல அடிஷ்னல் ஃபீஸை பத்தாவதுல அஜீஸ் பண்ணிர்ராய்ங்களா? அது சரி முன் கூட்டி கட்டின ஃபீசுக்கு வட்டி ஆரு கணக்கு?

3.அந்த ஒரு லட்சம் ஸ்கூல் மேலதான் இன்வெஸ்ட் ஆகுதுன்னு என்ன கியாரண்டி? இவன் ரியல் எஸ்டேட் பண்றதுக்கு பெத்தவுக தாலியறுக்கனுமா?

4.எல்லாத்தயும் விட முக்கியமானது அந்த ஸ்கூல் பி.டி மாஸ்டர் ஒரு சைக்கோ. மரச்சேரை தூக்கி அடிச்சு ஒரு பையனுக்கு கை முறிஞ்சு போச்சு . இதுக்கு என்னப்பா சொல்றேனு கேட்டா கரெஸ்பாண்டென்ட் ஏ.சி ரூம்ல சீமை  சாராய வாசத்தோட விளக்கெண்ணையா பேசறான்.

நம்ம ஜெனரேஷன்ல அப்பா எஸ் .எஸ்.சி - நாம பிகாம். ஏற்கெனவே சொன்னாப்ல அப்பாவுக்கு  ஜில்லா ஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர். லீவுல வீட்டுக்கு வரும்போது "டே பையா இப்ப என்ன க்ளாஸ் படிக்கிறே" என்று விஜாரிப்பார் .தட்ஸால்.

இப்பம் அப்பன் டாக்டருன்னா -பையனும் டாக்டருக்கு படிக்கிறான் - அப்பன் இஞ்சினீருன்னா பிள்ளையும் இஞ்சினீருக்கு படிக்கிறான். அப்பங்காரன் அவுட் டேட்டட் ஆகியிருந்தாலும் அப்டேட் பண்ணிக்கிறான். பையன்/ பெண்ணை ரேஸ் குதிரை கணக்கா மெயின்டெய்ன் பண்றான். தோத்துப்போனாலோ - கால் முறிஞ்சாலோ துப்பாக்கியால சுடறதில்லைங்கறதுதான் ஒரே ஆறுதல்.

இது பாட்டின்  மொதல்வரிக்கான வியாக்கியானம். அடுத்தவரியை பாருங்க." நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்"

கற்றவர்னா என்ன? தியரியை படிச்சவனை வேலை வாய்ப்பு மார்க்கெட்ல மியூசிய பிறவி மாதிரி பார்க்கிறாய்ங்க. இதெல்லாம் தள்ளு கேஸு. சரித்திரம் போனியாகத கேஸு. தமிழ் தள்ளி வைக்கப்பட்ட கேஸு. சன் நியூஸ்ல வர்ர ஃப்ளாஷ் நியூசை பாருங்க. எழுத்துப்பிழை - பொருட்பிழை சகலமும் இருக்கு.

தியரியை விட்டுத்தள்ளுங்க. டெக்னிக்கல் ஸ்டடீஸ் மட்டும் என்ன வாழுது? பையனுக்கு கத்துக்கொடுக்கிற பார்ட்டி போன வருசம் படிச்சுட்டு வந்தவன். அப்படியே அந்த பார்ட்டி சரக்குள்ள பார்ட்டியா இருந்து ஒழுங்கா கத்துக்கொடுத்தாலும் இந்த பிக்காலி அவன் கிட்டே  படிச்சு முடிச்சு வெளிய வர்ரதுக்குள்ள மொத்தமே மாறிப்போகுது. நோ சான்ஸ் ஃபார் அப்டேஷன்.

அரசியல் பின்னணி உள்ள ப்ரைவேட் காலேஜ்/யூனிவர்சிட்டி  மேனேஜ்மெண்டையெல்லாம் பார்த்தா வா.வெ. ( வாழ்க்கையே வெறுத்துரும்)

எங்க ஊருல ஒரு ப்ரைவேட் காலேஜ் ஃபவுண்டரோட ஃப்ளாஷ் பேக். ஹீரோ மெஜஸ்டிக் டூ வீலர் வந்த புதுசுல அதை வச்சு  பம்பர் லாட்டரி நடத்தினவர். மாசாமாசம் குலுக்கல் .காங்கிரஸ் கட்சியில தில்லிவரை பெட்டி கொடுத்து கச்சா முச்சான்னு சீட் வாங்கி ஒவ்வொரு தாட்டியும் தோத்த பார்ட்டி.அம்பது வயசுல பயாஸ்கோப்புல ஹீரோவா வேசம் கட்டின பார்ட்டி..

இவிக சைக்காலஜிதான் என்ன? இவிகளை நம்பி இவிக காலேஜ்ல சேர்ந்து படிக்கிறவன் சைக்காலஜிதான் என்ன? ஒன்னம் புரியமாட்டேங்குதுங்ணா. தூத்தெறிக்க.

கற்றவர்னா என்ன? ஒரு டெஃபனிஷன் ப்ளீஸ். நான் பார்த்த கற்றவர் எல்லாம் .. பிகில் ரவுடி "இன்னா இன்னா"னுட்டு வந்தாலே கக்கூஸ் பூடற பார்ட்டிங்க. எனக்கு கற்றவர் மேல எல்லாம் மரியாதையே இல்லிங்ணா இதுல அவிக அறிவுரைகள்னா மாணாம் கெட்டவார்த்தையா வருது.


கடேசியா ஒரு முடிவான மனோதத்துவ உண்மை:

பெற்றவர் பேச்சு /செயல்களுக்கு காரணம்:

அய்யய்யோ.. நாம சின்னவயசுல எப்படி இருந்தமோ அப்படியே இருக்கானே.. இவன்/இவள்   நமக்கப்பாறம் இந்த  உலகத்தை எப்படி ஃபேஸ்  பண்ணப்போறான்/ள்

அடுத்த தலைமுறையின் பேச்சு செயல்களுக்கு காரணம்:

இந்த ஆளு/ இந்த பொம்பள பேச்சை கேட்டா இந்த ஆளை/பொம்பளை  போலவே  வாழ்ந்து முடிச்சுர வேண்டியதுதான்

Wednesday, June 22, 2011

2011 சனிப்பெயர்ச்சி பலன் : எக்ஸ்க்ளூசிவ்

இந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் - மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும்  பார்ப்போம்

என்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா?

பொதுப்பலன்:
கன்னி என்பது புதனுடைய ராசி. ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து செயல்படும் விவகாரங்கள், பிறரின் விவகாரங்களை அவர்களது பிரதி நிதிகளாய் இருந்து நடாத்தி கொடுக்கும்  நிறுவனங்கள் கம்பெனிகள் அனைத்துமே புத காரகத்வம் கொண்டவைதான் என்றாலும் சிறப்பாக கல்வி,மருத்துவம்,மீடியா,ஸ்டேஷ்னரி,போஸ்டல், டெலி கம்யூனிகேஷன், அக்கவுண்டிங், ஆடிட்டிங், ஏஜென்சி,டீலர்ஷிப் ஆகியன் புத காரகத்வம் கொண்டவையாகும்.

சனி இங்கு நின்றதால் தான் போர்டு,ஏஜென்ஸி,கம்பெனிகள்,டெலிகம்யூனிகேஷன் தொடர்பான ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன .உ.ம் கல்மாடியின் காமன்வெல்த், அம்பானிகளின் கேஜி பேசின் இவை இந்த ஆண்டு இறுதி வரை தொடரக்கூடும். பத்திரிக்கையாளர் கொலைகளுக்கும் இதுவே காரணம். மத்திய கணக்குக்குழு ஒவ்வொன்றாய் அதிர்வேட்டுகளை போட்டுவரவும் இதுவே காரணம். மருந்து ஆயுவு பெயரில் ஆந்திரத்தில் நடந்துவந்த ஃபார்மா கம்பெனிகளின்  முறைகேடுகள் ஆந்திரத்தில் பெரும்புயலை கிளப்பி உள்ளன.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி உண்டா இல்லையா என்ற விவாதத்துக்கும் - தனியார் கல்வி கட்டண முறைப்படுத்தல் தொடர்பான விவாதங்களுக்கும் இதுவே காரணம். கலைஞர் டிவி கூட புத காரகத்வமே.

இவ்ளோ எதுக்கு ஐ.நா சபை கூட புத காரகத்வம் தான்.யுனைட்டட் ஸ்டேட்ஸ் எனப்படுவதால் அமெரிக்காவும் புத காரகத்வமே.இவை இந்த ஆண்டு இறுதி வரை தொடரக்கூடும்.

புதனுடயகாரகத்வங்கள் என்னனு புதனே சொல்றார். இந்த காரகங்களில் கன்யா புதன் எப்படியெல்லாம் ஆப்பு வச்சிருக்காருனு கமெண்ட்ல சொல்லுங்க (இதான் ஹோம் ஒர்க். இதை  செய்யாதவுகளுக்கு அனுபவ ஜோதிட ரத்னா விருது நிச்சயம் கிடையாது)

புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.

இந்த கன்யா புதன் மேஷாதி மீன ராசிகளுக்கு என்னவிதமான பலன் தருவாருனு சுருக்கமா பார்ப்போம்.

சனி அவரவர் ராசிக்கு 3,6,10,11 ராசிகளில் இருந்தால் நன்மையை தருவார் என்பது பொதுவிதி.தற்போது சனி வந்து அமர்ந்துள்ள கன்னி  கடகத்துக்கு  3 ஆமிடம். மேஷத்துக்கு 6  ஆமிடம். தனுசுக்கு 10 ஆமிடம். விருச்சிகத்துக்கு 11 ஆமிடமாகும்.

ஆக கன்யா  சனி பொதுவிதிப்படி கடகம், மேஷம்,தனுசு,விருச்சிக ராசிகளுக்கு நன்மை தரும் நிலையில் உள்ளார். மற்ற ராசியினருக்கு தீமை செய்யு நிலையில் உள்ளார் என்று கொள்கை அளவில்(?) கூறலாம்.


ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இது மிக மிக தவறானதாகும். பொது விதி எனும்போதே சிறப்பு விதியும் இருப்பதாகத்தான் பொருள்.சிறப்பு விதியின் படி பார்க்கும் போது பலன் தலை கீழாய் மாறவும் வாய்ப்புள்ளது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் என்றதுமே ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பலன் எழுதிவிடுவது தான் வழக்கமாக உள்ளது. அப்படி எழுதும்போது ஒவ்வொரு வாசகரும் 12 ல் ஒரு பாகத்தை மற்றுமே படிக்கிறார். மற்ற 11 பாகங்களை அலட்சியப்படுத்திவிடுகிறார்.


ஆகவே அனைவரும் சனி குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொதுவில் சொல்லி விட்டு பிறகு வேண்டுமானால் ராசி வாரியாக பலன்களைப் பார்ப்போம். (சனியே சொல்கிறார்)

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

நான் பொதுவிதி+சிறப்புவிதிகளின் படி அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கிற போது  மேற்சொன்ன எனதுகாரகத்வங்களில் நல்ல பலனை தருகிறேன். பிரதிகூலமான நிலையில் சஞ்சரிக்கிற போது மேற்சொன்ன காரகத்வங்களில் தீய பலனை தருகிறேன்.

என் தன்னிலை விளக்கம் (சனி ஸ்பீக்கிங்)

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்
பொதுவித்ப்படி ஓகே - சிறப்புவிதிப்படி நாட் ஓகேன்னா 35% ரிசல்ட் எதிர்பார்க்கலாம். பொதுவிதிப்படி நாட் ஓகே சிறப்பு விதிப்படி ஓகேன்னா 65% வரை ரிசல் எதிர்பார்க்கலாம்.

சனி அனுகூலமானால்:
நீங்கள் சுதந்திரர் - அடிமைத்தொழிலில் இருந்தாலும் உங்களை கண்டுக்கற நாயே இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நீங்க ஆரம்பிக்கிற வேலை ஒன்னு பத்தா டெவலப் ஆகும். ( நல்ல +கெட்டவேலைகள்) உ.ம் ஒரு கடன் வாங்கினா அது இன் டைம் பைசலாகும் பத்து கடன் வாங்குவிங்க. ஒரு பொய் கேஸு போட்டா பத்து கேஸு போடுவிங்க.

ஆப்போசிட் செக்ஸ் அட் ராக்ட் ஆகும் அவிக கோ ஆப்பரேஷன் கிடைக்கும். சிஸ்டர் டைம் என்னனு கேட்டதுக்கு ஈவ் டீசிங் கேஸெல்லாம் தரமாட்டாய்ங்க. அகால போஜனம்,அகால நித்திரை,முகத்துல எண்ணெய் வழியறது, முடி உதிர்ரது மாதிரி லொள்ளெல்லாம் இருக்காது. என்றும் 16 கணக்கா வலம் வருவிக. நிமிர்ந்த நடை பழகும். நீங்க சம்பளமே தரலின்னாலும் தொழிலாளர்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க.

சனி பிரதிகூலமானால்:

சொந்த தொழிலிலே இருந்தாலும் கண்ட நாய்க்கு பயந்து நடக்கவேண்டியதாயிரும். வேலைகாரவுகளே ஆப்புவச்சிருவாய்ங்க. துவங்கின வேலை ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு  நின்னுரும். ஆப்போசிட் செக்ஸால லோள்ஸ். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக.

12ராசிக்காரவுகளுக்கும் ஒரு எச்சரிக்கை :

2011 இறுதியில் நடக்க விருக்கும் சனிப்பெயர்ச்சிக்கு ஜூன் மாதம் பலன் எழுதறதால சின்ன சிக்கல். இது சந்தியா காலம் மாதிரி. ஸ்தூலமா சனி கன்னியில இருந்தாலும் சூட்சுமமா பார்த்தா அவரோட கிரணங்கள் அடுத்த ராசியான துலாவை டச் பண்ண ஆரம்பிச்சுருச்சு. ( சனிப்பெயர்ச்சிக்கு 6 மாசம் முந்தியே இது துவங்கிரும் -இந்தகணக்குப்படி துவங்கியாச்சு)

ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வாங்கிட்ட ஐ.ஏஎஸ் அதிகாரி ரேஞ்சுல இப்பம் சனி வேலை செய்வாரு. சினிமா பாஷையில சொன்னா இன்னொரு ப்ராஜெக்ட்ல கமிட் ஆயிட்ட டைரக்டர் கணக்கா. பேட்ச் ஒர்க் எல்லாம் வேகமா நடக்க ஆரம்பிக்கும்.

ஏற்கெனவே நற்பலன் பெறும் நிலையில் இருந்து பெற்றுவிட்டவர்களுக்கு நற்பலனில் மந்தத்தன்மை ஏற்படும்.  சனி செய்த லொள்ளால நாறி நலிஞ்சவுகளுக்கு ரிலீஃப் கிடைக்க ஆரம்பிச்சுரும்.

ஒரு சில சிறப்புவிதிகள் காரணமா நற்பலன் பெறும் நிலையில் இருந்தும் பெறாது போனவர்களுக்கு இந்த 6 மாதத்தில் நற்பலன் கிட்டலாம்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி நல்லதில்லை. ஆனாலும் சத்ருஜயம்,ரோக நிவர்த்தி ருணவிமுக்தி நிச்சயம் கிடைக்கும். அடுத்தவுகளை  இம்சை பண்ணி பார்க்கனுங்கற எண்ணம் வந்திருக்கும் .அதை விட்டுட்டு / குறைச்சுக்கிட்டு  கன்ஸ்ட் ரக்டிவா செயல்படறது நல்லது. மூத்த சகோதரம் நோய்வாய்படலாம்./அவிகளோட சண்டை சச்சரவு ஏற்படலாம்.


சடன் ட்விஸ்ட்:

இந்த பதிவை படிச்ச உடனே நம்ம லைன் அப் என்னனு உங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்.ஆர்வமுள்ளவர்கள் மிச்சமிருக்கிற 11 ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சி பலன் எழுதி பதிவா போடலாம். அ எனக்கு மெயில் பண்ணலாம்.  பலனை நீங்க எழுதிட்டா நம்ம ஸ்பெஷல் ஃபீச்சரான நவீன பரிகாரங்களை நான் எழுதிருவன், ஓகேவா உடுங்க ஜூட்.

Tuesday, June 21, 2011

சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)

அண்ணே வணக்கம்ணே!
கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையாங்கற விளம்பரம் போல உங்களை ரெண்டு தாட்டி கேட்கனும்.ஏன்னா இந்த பதிவுல ஒன்னுக்கொண்டு தொடர்பில்லாத 3 பதிவுகள் அடங்கியிருக்கு. ஒன்னு தலைப்பிற்குரியது. ( சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்)

அடுத்தது பிரணாப் முகர்ஜி சாம்பர்ல ரகசிய காமிரா செய்தி குறித்த என் ஆய்வும் அதிரடி முடிவும்.

அடுத்தது நம்ம தமிழ் நியூஸ் சானல்களோட லட்சணத்தை பத்தினது. ஒழுங்கா படிக்காட்டாலும் கடைசி வரை ஸ்க்ரால் பண்ணிருங்ணா. ( வழக்கமா நாம பண்றதுதானே)


சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)

புட்டபர்த்தி சத்ய சாயி கதை முடிஞ்சு போனாலும் அவரோட ஆசிரமம் -ட்ரஸ்ட் பற்றிய திகீர் செய்திகளால்  டர்ராகி கிடக்கும் உண்மையான  ஆன்மீக வாதிகள் & பகுத்தறிவாளர்களை  சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள்  தலைமை நீதிபதி பி.என்.பகவதி மேலும் டர்ராக்கியிருக்கிறார்.  தாம் நீதிபதியாக இருந்தபோது சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் வழங்கியதாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இன்னம் எத்தனை நீதிபதி இப்படி சாமியார்கள் ஆணைக்கிணங்க தீர்ப்பு தந்துக்கிட்டிருந்தாய்ங்களோ -தீர்ப்பு தந்துக்கிட்டிருக்காய்ங்களோ சீக்கிரமா ஒரு என்கொய்ரி போட்டுருங்கப்பா. ங்கொய்யால இந்த நீதிபதிங்க  சட்டப்படியோ தங்களோட கான்ஷியஸ் படியோ தீர்ப்பளிப்பாய்ங்கனு நம்பித்தான் சனம் கோர்ட்டுக்கு போகுது.

இவிக காவி கும்பல் - மோடி மஸ்தான் கும்பல்  ஆணைகளுக்கிணங்க தீர்ப்பு கொடுத்தா நீதி என்னாகறது?

உபரியா ஒரு செய்தி : சாயிபாபா ஆசிரமத்துலருந்து ட்ரான்ஸ்போர்ட் ஆன கரன்சி மூட்டைகளை பகவதி ஐயாவுக்கு ப்ரோட்டகால் படி  அலாட் பண்ண  அஃபிஷியல் வாகனத்துல பாஸ் பண்ணதாவும் ஒரு தெலுங்கு சேனல் செய்தி வாசிச்சுக்கிட்டு இருக்கு.


பிரணப் சாம்பரில் ரகசிய  காமிரா?
மத்திய நிதித்துறை மந்திரி பிரணப் சாம்பரில் ரக்சிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததா? அங்கு நடைபெறும் சம்பாஷணைகள் பதிவு செய்யப்பட்டனவா? கான்ஃப்ரென்ஸ் ஹால் கதியும் இதுதானா? இதெல்லாம் நானோ - அ உதவாக்கரை எட்டணா பத்திரிக்கையோ சொல்லும் விஷயம் அல்ல. சாட்சாத் நிதி மந்திரி பிரணப் முகர்ஜியே இது குறித்து ரகசிய விசாரணை நடத்தும்படி பிரதமரை கோரியிருக்கிறார்.

ரகசியம்ங்கறிங்க அது எப்படி வெளிய வந்துருச்சுனு கேப்பிக. நம்ம நாட்ல ரகசியங்கள் அதுவும் ராஜரகசியங்களோட லட்சணம் இதுதான். ஸ்டார் நியூஸ் சானல்ல பம்ப் அடிச்சிக்கிட்டிருக்காய்ங்க. அதை தெலுங்கு சேனல் ஒன்னு காப்பியடிச்சு  ஃபிலிம் காட்டிக்கினு கீது.

பிரணபுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா சமீபத்துல ஒரு பத்திரிக்கையில வந்த செய்திதான் இதுக்கு காரணமாம்.

எனக்கொரு சந்தேகம் பிள்ளையில்லாத வீட்டில் கிழம் துள்ளி விளையாடுது கணக்கா பிரணப் எங்கனா தனி ஆவர்த்தனம் பண்றாரானு பார்க்க சோனியாஜீயே ஏற்பாடு பண்ணாய்ங்களோ என்னவோ?

என்னைக்கேட்டா கக்கூஸு, பெட் ரூம் தவிர எல்லா இடத்துலயும் சிசி கேமரா வச்சுரனும். தாளி மக்களாட்சியில மக்களுக்கு தெரியக்கூடாத ரகசியம் என்ன இருக்கு?

ரகசியங்கற கான்செப்ட் வந்தாலே சனத்துக்கு ஆப்புதேன். உ. அணு மின் உலைகள்

மேலும் இவிகல்லாம் யாவும் (மானம்,ஈனம்,சூடு,சுரணை,மனிதத்தன்மை)  கடந்த நிலைக்கு வந்து பல காலமாச்சு. ராம் தேவ் பாபாவோட கோவணத்தை துவைச்ச தண்ணிய தலை மேல தெளிச்சுக்கவும் - தீர்த்தமா குடிக்கவும் தயாரான பார்ட்டிங்க இவிக. ரகசியம்னு நினைச்சதெல்லாம் எப்பயோ வெளிவர ஆரம்பிச்சுருச்சு.

என்னடா இது முந்தா  நேத்து நடந்த சமாசாரம். இன்னைக்கு எவனோ நடவடிக்கை எடுக்கறான். நாம அதை தடுத்தா நமக்கும் ஷேர் இருக்கிறதா நினைச்சுரமாட்டாய்ங்களாங்கற லாஜிக் கூட இல்லாத கிராக்கிங்க இவிக.

மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டரையே எடுத்துக்கங்க. இந்த நெட் ஒர்க் ப்ரசிடெண்ட் பேங்க் கரப்ட் ஆகிற நிலையில இருந்து  கோடானு கோடி லாவாதேவி பண்றார்.

விதவைகள், கிழவிகள், நடைபாதை வாசிகளை கூட நெட் ஒர்க்ல சேர்த்து வட்டிக்கு வ்ட்டி வசூலிக்கிறாரு. இடையில சோனியா கிட்டே ஆசி வாங்கறாரு. ராகுல் இவரோட தோஸ்துங்கறாய்ங்க

ஆந்திராவுல மைக்ரோ ஃபைனாஸ் அட்டூழியம் ஓவரா போயி பொம்பளைங்கள " வரயா - வாடி - எங்கனா போடி"ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க.

இவிக அட்டாகாசத்துக்கு செக் வைக்க முதல்வர் ரோசய்யா ஆர்டினென்ஸ் கொண்டுவரப்போறோம்னு அறிவிக்கிறாரு. அங்கன தில்லியில இருந்து பிரணப் அதெல்லாம் தேவையில்லைனு பகிரங்கமா ப்ரஸ் காரவுகளுக்கு சொல்றாரு.

சுஜாதா கதையில கிழவாடிகளையெல்லாம் திரு நாடு அனுப்பறாப்ல வரும். சமீபத்துல ராம் தேவ் பாபா ஊழல்வாதிகளை தூக்குல போடனும்னு பேசினாரு. நமக்கு மன்சனை போட்டுத்தள்றதுல சம்மதம் கடியாது. ரஜினியாவே இருந்தாலும் சரியான பார்ட்டி சரியான முகூர்த்தத்துல சரிய்யா உபதேசம் பண்ணா திருந்திர வாய்ப்பிருக்கு.

ஆனால் சில கிழவாடிகளை முக்கியமா பிரணப் மாதிரி கிராக்கிகளை பார்க்கும் போது அவிகளை பத்தின ஒரு சில சேதிகள்  தெரியவரும்போது மேற்படி திரு நாடெல்லாம் ஞா வந்துருதுங்ணா.

இந்த 45 வயசுக்கே வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை புரிபட்டுப்போயிருச்சு. ஒரு வகையில இது மனிதத்தன்மைக்கு ரெம்ப ஆபத்தானது.

ஒரு காதலன்/காதலியோட உணர்வு புரிபடாது . ஒரு படைப்பாளியின் வேவ் லெங்த் செரிக்காது. இப்படி எத்தனையோ ஆபத்து இருக்கு.

அர்த்தமற்ற வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்கறது அட்லீஸ்ட் ஏதோ அர்த்தமிருக்குன்னு மழுப்பறது ஒரு ஐட்டங்கள் தான். அதுல காதல் -கவிதைக்கு முக்கியம் இடம் இருக்கு. இதையெல்லாம் நான் அங்கீகரிக்க காரணம்..

உண்மையான காதலன் ஒரு நாளில்லை ஒரு நாள் பாசாங்கில்லாத ஆன்மீக வாதியா மாற வாய்ப்பிருக்கு.

தமிழ்  நியூஸ் சான்லகள் பற்றி சில வரிகள்:

ஆமாங்னா தமிழ் தமிழ்னு உசுரை விடறோமே பேர் சொல்ற மாதிரி ஒரு தமிழ் நியூஸ் சானல் இருக்கா? சன் நியூஸுக்கு மொத்தமே 3 ரிப்போர்ட்டர் தான் இருக்காப்ல இருக்கு. என்னவோ ரேடியோவுல நியூஸ் வாசிக்கிற மாதிரி வாசிக்கிறாய்ங்களே தவிர விஷுவலா ஒரு மசுரையும் காட்டற மாதிரி இல்லே.

கனிமொழியோட ஜாமீன் மனுவை வாசிச்சு காட்டறாய்ங்க. பாவம் காட்சேவுக்கு ஒரு சேனல் இருந்திருந்தா அவரும் இப்படி தன் வாதங்களை சனத்துக்கு காட்டியிருப்பாரு.

தேர்தல்ல திமுக தோற்க ஆரம்பிச்சதுமே மானாட மயிலாட போட்டுட்டாய்ங்க (கலைஞர்) .ஆமா சன் நியூஸ்ல அம்மா வாசம் கும்முனு வீசுதே என்ன விஷயம்? ஆனால் அம்மா மட்டும் மாறனை போட்டு தாக்கறாய்ங்களே. பாவம் ஒரு தலைக்காதல்னா இதான் போல.

ஜெ நியூஸும் இதே இழவுதான். அம்மா அறிக்கைன்னா தாளி இப்படிக்கு அன்பு சகோதிரி வரைக்கும் ஒரு வார்த்தை விடாம படிச்சுர்ராய்ங்க.

வெறுமனே கேட்க ரேடியோ போதுமே. சாட்சி சேனல் ஒய்.எஸ்.ஜகனோட பைசாவுலதான் நடக்குது. எப்பயோ ஜகன் ப்ரோக்ராம் இருந்தா தவிர நடு நிலை சேனல் எல்லாம் பிச்சை எடுக்கறாப்லதான் நடக்குது.

சந்திர பாபு நியூஸை  ஈ நாடுவை விட  ( ராமோஜிராவ் - கம்மவார் நாயுடு) சாட்சி தான் சூப்பரா கவர் பண்ணுது. டப்பா சானல் எல்லாம் பைட்ஸ் போட்டு தாக்கறாய்ங்க.

என்னதான் வவுத்தெறிச்சலே ஃப்யூயலா போட்டு ஓடினாலும் ஆந்திர ஜோதி என்.டி.திவாரி மேட்டரை கிழி கிழினு கிழிச்சது இன்னம் ஞா இருக்கு.

கொடுக்கல் வாங்கல்ல செட்டில் ஆகாததை மட்டும் ( உம். நித்யானந்தா) சன்ல போடுவாய்ங்க போல.