Wednesday, August 31, 2011

இளமையில் வரும் சுக்கிரதசை+கில்மா


பால்யத்தில் வரும் சுக்கிர தசை ஏன் பலன் தராது:
இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார். டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

இதற்கு தீர்வுகள்:
1.ஜாதகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாது (பெரும் பிரச்சினைகளில் சிக்காது) விட்டு விட்டு 30 வயதுக்கு பிறகு இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்தல்.
2. இவருக்கு 18 வயது நிறைவடைந்ததும் இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை தேடி மணமுடித்து வைத்துவிடுவது. மணவாழ்வின் ஆரம்பத்தில் ஏற்படும் சிக்கல்களை பெரியவர்கள் பொறுப்பாய் கண்காணித்து தீர்த்துவைப்பது .

30 வயதுக்கு முன் ஏன் பலன் தராது:
முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் என்பவள் ஒரு அதிசயம். தன்னை கண்டு அதிசயிப்பவனை பெண் அலட்சியம் செய்வாள். தப்பித்தவறி அவளும் அவனை விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.

30 வ்யதுக்கு பின் எப்படி பலன் தரும்:
இவனுக்கு பெண் குறித்த பிரமைகள் விலகியிருக்கும். " பொயப்பை பார்க்கனும்டா சாமி"ங்கற தெளிவு வந்திருக்கும். ஆனாலும் இவனோட சுக்ர சை பெண்களை இவனை நோக்கி இழுக்கும். இவன் மனமோ விலகியிருக்கும். அப்பம் அந்த பெண் இவனை வேறு வழிகளில் சரிக்கட்ட இவனுக்கு லாபங்களை அள்ளித்தருவாள். நெஜமாலுமே சுக்ரதசை அடிக்கும். ( ஐ மீன் தோட்டம்,துறவு,வீடு ,வாசல் ,ஷேர்ஸ் இப்படி அவள் மூலம் லாபமடைவான்)

ஹி ஹி.. இந்த பதிவு ஜோதிட பால பாடத்தோட 12 ஆவது அத்யாயந்தான். கொஞ்சம் கேரா இருக்கட்டுமேன்னு இந்த பாடத்தை மேல போட்டேன். இப்பம் பாடம் தொடருது.
அஷ்டம சனிக்கு பரிகாரம்:
ஹனுமான் டாலர் அணிவிக்கவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும்.குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்ததானம் செய்யவும்.

5க்கு அதிபதி விரயம்:
இதனால் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புவார்.இல்லாத பொல்லாத சகுன பைத்தியம்,சென்டிமென்ட்ஸ் இருக்கும். மன நிலையில் திடீர் மாற்றங்கள் இருக்கும்.சொந்த புத்தி இருக்காது.எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்.
உங்க ஜாதகத்துல களத்ர புத்ர தோஷங்கள் இருந்தால்:
தங்கள் முன்னோர் வகையில் ஒருவருக்கு இரண்டு திருமணங்கள் ந்டைபெறுவது,திருமணத்துக்கு முன்பே இறப்பது, அகால மரணங்கள்,துர்மரணங்கள், வாரிசின்றி அல்லது ஆண் வாரிசின்றி இறப்பது, போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவேயல்லாது வாரிசில்லாத சொத்து ஏதோ முன்னோர் காலத்தில் குடும்பத்துக்கு வந்துள்ளது என்று பொருள்.

முக்கிய விதி:
ஜோதிஷத்தில் மரணம், பிரிவு, தீராத வறுமை எல்லாம் சமமே.


கோசாரத்தில் ஆறுல சனி ( தற்சமயம் ரிஷபராசிக்கு இந்த பலன் பொருந்தும்-சனி தரும் முன் கூட்டிய பலனால்)
இரண்டரை வருடங்களுக்கு ஜாதகர் வெற்றிவீரராக வலம் வர வாய்ப்புள்ளது. ஆனால் சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.
மகர லக்னம்/கும்ப லக்னத்துக்கு லக்னாதிபதி சனி எட்டில்
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். சதா ஒரு வித களைப்பு,ஆயாசம், தனிமை உணர்வு,தோற்றுப்போனது போன்ற ஃபீலிங் இருக்கலாம். நரம்பு,ஆசனம் தொடர்பான தொல்லைகள் வரலாம். நெகட்டிவ் தாட்ஸ், பெரிய,பெரிய ஆசைகள் அதே நேரம் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிகளை தொடர முடியாத மானசிக பலவீனம். நெருங்கிய உறவினர் மரணத்தால் லாபம் ஏற்படும். ( நஷ்ட ஈடு,எல்.ஐ.சி பணம் வரலாம்) உயில் மூலம் ஒரு சொத்து கிடைக்கலாம்.
தங்களுக்கு கேடு தரும் துறைகள்;
யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹேண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் ,வில்லங்க சொத்து, ஜப்தியான சொத்து, கஷ்டத்தில் விற்பவன் சொத்து, மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினர், 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமை.
பரிகாரம்:
பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். ( சனி தசா புக்தி காலங்களில் கட்டாயம் செய்யவும்)

கடேசி வரை படிச்ச உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி நம்ம சைட்/ப்ளாக்ல எல்லாம் வந்து சாக்கடை கமெண்டுகள் போட்டுக்கிட்டிருந்த சிவயசிவ புகழ் ஜானகிராமனின்  நீச  செயலுக்கு காரணங்களை காட்டும் அவரது   கண்ணீர் கடிதங்களை இங்க அழுத்தி படிக்கலாம் ( நமக்கு எழுதினதுதேன்)

Tuesday, August 30, 2011

ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் அல்ல (தற்போதைக்கு)


ஜோதிடக்கலையின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கான அடித்தளம் எது?
அவரவரது புரிதலோ/ஆழந்த ஞானமோ இதற்கு காரணம் என்றால் நான் இதை வரவேற்கிறேன்.

யதார்த்த நிலை அப்படியில்லையோ என்று தோன்றுகிறது.
காரணம் ஜோதிடம் என்பதை ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை நம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஜோதிடம் ஒரு விஞ்ஞானம். அது வெறுமனே நம்புபவர்களுக்கு மட்டுமானதல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கானது. இதை ஒட்டு மனித குல மேன்மைக்கு பயன்படுத்த வேண்டுமானால் ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை விஞ்ஞான நோக்குடன் அணுக கற்கவேண்டும்.

ஜோதிடரை கேட்டால் "என்னமோங்க யார் விஷயத்துல நடக்குதோ நடக்கலையோ என்னை பொருத்தவரை நான் சொன்னதெல்லாம் நடக்குது" என்று சொல்லும் நிலைதான் உள்ளது.

ஜோதிட ஆர்வலரை கேட்டால் " எனக்கு யார் மேலயும் நம்பிக்கையில்லைங்க பலானவர் சொன்னாதான் எனக்கு நடக்கு என்று சொல்லும் நிலையுள்ளது.
இவை ஜோதிடத்தின் விஞ்ஞான தன்மையை கடுமையாக பாதிக்கின்றன. எனவே தான் ஜோதிடம் தற்போதைக்கு விஞ்ஞானமாக மாற முடியாது இருக்கிறது.

ஜோதிடர்கள் ஜோதிட நிபுணதுவத்தை தம் தனி நபர் சொத்தாக பாவிப்பதும், ரகசியமாய் வைப்பதும் கூட இதற்கு ஒரு காரணம்.

ஜாதகசக்கரத்தில் இன்ன கிரகம் இன்ன இடத்திலிருந்தால் இந்த பலன் என்று அனேக ஜோதிஷ கிரந்தங்கள் கூறுகின்றன. இவற்றை ஜஸ்ட் மனப்பாடம் செய்து பலர் அப்படியே வாந்தி பண்ணும் நிலைதான் உள்ளது.

குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் என்று சொல்லு நிலை கவலை தருகிறது.எங்கோ ஆகாய வெளியில் பல கோடி மைல் தூரத்தில் உள்ள கிரகங்கள் மனிதனை எப்படி பாதிக்கின்றன ? என்று கேள்வி கேட்டால் எத்தனை ஜோதிடர்களால் பதில் சொல்ல முடியும் என்பது கேள்விக்குறியே.

இன்ன பலன் நடக்கும் என்று தகவல் சொல்கிறார்கள்.அந்த பலன் நடைமுறையில் எப்படி எந்த வழியில் மெட்டீரியலைஸ் ஆகிறது என்று சொல்வதில்லை (சொல்ல முடிவதில்லை)

மனித உடல்,மனம்,மூளை மீதான கிரகங்களின் பாதிப்பு உண்மையேயானாலும் ரிஷிகள் ,மகரிஷிகளேயானாலும் சரி என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எழுதி வைத்த பலன் இன்றைக்கும் அப்படியே நடக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி.அவிக முட்டாளுங்கனு சொல்ல வரலை.

அவிக பலன் எழுதின காலத்துக்கும், இந்த காலத்துக்கும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கு. அப்போ மன்னராட்சி, இப்போ மக்களாட்சி, அப்போ மாட்டுவண்டி,குதிரை வண்டிதான் வாகனம். மண் ரோடு. சனத்தொகை கம்மி. ட்ராஃபிக் கம்மி. இன்னைக்கு சிக்ஸ் ட்ராக் ரோடிருக்கு, லட்ச ரூபால இருந்து கோடி ரூபா வரை விலையுள்ள கார்கள் இருக்கு. இப்ப கூட இது பைக்குன்னா பைக்கில்ல, காருன்னா காரில்லைனு ஒரு விசித்திரமான வாகனத்தை விட்டிருக்காங்க.

அப்போ சனம் சூரியன் உதிக்கறப்பவே தாங்களும் விழிச்சு , வேலை வெட்டினு பார்த்து சூரியன் அஸ்தமிக்கிறப்பவே வீட்டை போய் சேர்ந்து முடங்கிக்கிட்டிருந்தாங்க. கூட்டுக்குடும்பம் இருந்தது. விவசாயம்தான் முக்கிய தொழிலா இருந்தது. சொந்தம்,பந்தம்ங்கற அட்டாச்மென்டெல்லாம் பக்காவா இருந்தது.

பொம்பள பசங்க 17 ,18 வயசுல மெச்யூர் ஆகிட்டிருந்தாங்க. பத்து வயசுலயே கல்யாணம் நடந்து கிட்டிருந்தது.காத்து,தண்ணி, எரி பொருள் எல்லாமே ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல கிடைச்சிட்டிருந்தது. அப்பல்லாம் பண்டிகை காலத்துல தான் அரிசி சோறு. இப்போ 365 நாளும் அதுவே .

அப்போ டீ,காஃபி கிடையாது. இப்போ அது இல்லன்னா ஆயே வராது. அப்போ படிப்புன்னா இலக்கணம்,இலக்கியம்,புராணம் ,இதிகாசம் தான் படிப்பு. இப்போ ?
இப்படி தனி மனிதவாழ்வு மட்டுமில்லே, வானும்,மண்ணும்,கடல் காற்றும் ஏன் தாய்பால் கூட மாறியிருக்கு.

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதிவச்ச பலன்களை இன்னைக்கும் ஈயடிச்சான் காப்பி மாதிரி சொல்லிக்கிட்டிருந்தா வேலைக்காகுமா? இந்த கோணத்துல யாராவது யோசிச்சதுண்டா?

ஜோதிஷம் உண்மைன்னா, அது ஒரு விஞ்ஞானம்னா எந்த ஜோதிடர் யாருக்கு பலன் சொன்னாலும் அது நடக்கனுமில்லயா? ஜோதிடர்கள் தாங்கள் சொல்லி நடந்த விஷயங்களை மட்டும் தினசரிகளில் விளம்பரமாக கொடுத்து பந்தா பண்ணுகிறார்களே தவிர தாம் பலன் சொல்லி நடக்காமல் போன சந்தர்ப்பங்களை மட்டும் வசதியாய் மறந்து போகிறார்கள்.

நான் இந்த துறைக்குள் அடியெடுத்து வைத்தது வெறுமனே ஈகோவாலதான். நான் வாழ்க்கையில் சந்தித்த முதல் ஜோசியன் பிளாட்ஃபாரத்து ஆசாமி சொன்ன பலன் ஆக்யுரேட்டாய் நடந்துவிடவே என் ஈகோ மரண அடி வாங்கியது.
அதன் பின் அதே ஆசாமியை அணுகியும் அவரால் சரியாய் பலன் சொல்ல முடியாமல் போயிற்று. அடுத்தடுத்து நான் அணுகிய நபர்களும் ரொம்பவே அந்தாசா பலன் சொல்லவும்தான் நானே களத்துல குதிச்சேன்.என் எதிர்காலத்தை நான் முழுக்க அறியவே ஜோதிஷம் கற்றேன்.

எத்தனை ஜோசியர்களுக்கு ஜோசியத்து மேல நம்பிக்கையிருக்கோ எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்பறேன். பாருங்க நானும் நம்பிக்கைங்கற வார்த்தைய உபயோகிக்கிறேன். நம்பிக்கை என்ற வார்த்தையே அது தர்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மாதிரி தொனிக்கிறது.

1989 முதல் என்னை அணுகிய ஆர்வலர்களுக்கு நான் என்ன சொன்னேன் என்ன நடந்தது. எத்தனை சதவீதம் சக்ஸஸ் ஆச்சு, எத்தனை சதவீதம் ஃபெயில் ஆச்சுங்கற தகவல் ஸ்தூலமா இல்லாட்டியும் ஒரு குன்சா ஞா இருக்கு. ரஜினி ஸ்டைல்ல சொன்னா கியாபகம் இருக்கு. ஆனால் இது ஆராய்ச்சிக்கு உதவாதுதான் .

இருந்தாலும் ஆயிரம் பேரை கொன்னா அரைவைத்தியங்கற மாதிரி பல பலன்கள் தவறினாலும் அது ஏன் தவறிப்போச்சுனு விடாப்பிடியா ஆராய்ச்சி பண்ற ஈகோ, பிடிவாதம்,சின்சியாரிட்டி இருந்ததால அனுபவ ஜோதிடம் னு தனியா ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கேன்.

அனுபவ ஜோதிடத்தோட சாரம் என்னடான்னா ஜாதக சக்கரத்துல ஒரு கிரகம் நின்னிருக்கிறதை பார்த்ததுமே படபடனு பலனை சொல்லிர்ரதுல்ல. அந்தந்த கிரகங்களை வச்சு முதல்ல ஒன்னு ரெண்டு பாயிண்டை சொல்லி அது நடந்திருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கனும். ஒரு வேளை நடக்கலன்னா ஏன் நடக்கலை அந்த கிரகஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்றமாதிரி வேற ஏதானா அம்சமிருக்கா பார்க்கனும். உ.ம் கிரக பாதசாரம், பாவச்சக்கரத்துல பலம் பெற்றுள்ளது

இப்படி ஒவ்வொரு கிரகத்தையும், ஒவ்வொரு பாவத்தையும் செக் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம்தான் பலன் சொல்லனும்.

லக்னம்னா அது ஜாதகரோட உடல், மனம்,புத்தியை காட்டுது. லக்னத்துல நின்ன கிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலாம், மனசு மேல வேலை செய்யலாம். இல்லே புத்தி மேல வேலை செய்யலாம். இத்தனை ஆப்ஷன் இருக்கு. லக்னத்துல சனியிருக்காருனு வைங்க . சனி பாடி மேல வேலை செய்தா பார்ட்டி கருப்பா இருக்கலாம், கால் ஊனமா இருக்கலாம். இரும்பு ,ஆயில் தொடர்பான வேலை செய்யலாம். ஒரு வேளை மனசு மேல வேலை செய்யறதா இருந்தா மனுஷன் கஞ்ச பிசினாறியா இருப்பார். கூலிக்கு மாரடிக்கிற் பார்ட்டியா இருக்கலாம். புத்தி மேல வேலை செய்தா ட்ராப் அவுட்டா இருக்கலாம். ( ஒரு வேளை சனி யோகத்தை தரக்கூடிய ஜாதகமா இருந்து , சனி பலம் பெற்றிருந்தா இந்த பலன் தலை கீழா மாறும்)

ஆக கிரக பலன் நீங்கள் கருப்பா, சிவப்பா, மணமானவரா இல்லையா? மணமாகாவிட்டால் பலான பெண்களை அணுகுபவரா இல்லையா? அப்பா அம்மாவை வைத்து போஷிப்பவரா இல்லையா? நல்லது கெட்டதுக்காவது அக்கா,மாமா, அண்ணா,தம்பிகளை கூப்பிடறவரா இல்லையா? வேலைக்காரவுங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கிறவரா இல்லையா இப்படி பல அம்சங்களை பொருத்து மாறிவிடுகின்றன.

எனவே கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன்.அவ்வப்போது பதிவுகளும் போட்டு வருகிறேன். இந்த முயற்சி தொடரும்.

எனவே ஜாதகத்தை பார்த்து ஜோதிடர் கூறும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. நீங்கள் அவரை அணுகும் சமயம் நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.
ஆகவே ஜோதிடர் கூறும் பலன் 60 சதவீதம் நடந்தாலே அவர் சூப்பர் ஜோதிடர் என்பதை மனதில் வைத்து பலனை படிக்கவும் .

முக்கிய விஷயம் என்னவென்றால் ஜோதிஷம் வேதத்துல ஒரு பாகம்னு பம்மாத்து பண்ணி, அதை தங்கள் இனத்துக்கு மட்டுமே உரிமையானதாக்கிக்கிட்டு ஆர்வமிருக்கோ இல்லையோ, தகுதி இருக்கோ இல்லையோ ஜோதிஷத்தை தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தபடி , பிராமணர்களில் பலர் இல்லாத பொல்லாத சீக்ரஸி மெயிண்டெயின் பண்ணதால இந்த விஞ்ஞானம் தலைமுறைக்கு தலைமுறை ஹோல்சேலா எக்சேஞ்ச் ஆகாம, பார்ஷியாலிட்டி காரணமா பார்ஷியலா தான் எக்ஸ்சேஞ்ச் ஆச்சு. இப்போ நாங்க சொல்ற ஜோசியமெல்லாம் ஜோசியமே இல்லனு கூட சொல்லலாம்.

என்ன செய்ய அவிக அன்னிய படையெடுப்பு சமயத்துல அன்னியர்கள் பூட்ஸை நக்கி, பர பாஷை கத்துக்கிட்டு துபாஷிகளா மாறி கிச்சன் கேபினட்டா
தயாராய்ட்டாய்ங்க.ராஜ சேவைக்கே அங்கிதமாயிட்டாய்ங்க.

வேதங்களை போலவே ஜோதிஷத்தையும் குப்பைல போட்டுட்டாங்க. என்னை மாதிரி சூத்திர பசங்க அதை பொறுக்கி எடுத்து ஸார்ட் அவுட் பண்ணி ஏதோ கதை பண்ணிக்கிட்டிருக்கம். ( எங்கள்ளயும் பலர் போலி பிராமணர்களா பில்டப் கொடுக்கிறதுலயே தங்கள் சக்தியை வீணடிச்சுர்ராய்ங்க)

ஹூம் .. நம்ம சனம் கொடுத்து வச்சது அவ்ளதான்.

இப்பவும் சான்ஸ் இருக்கு ஐபிஎல், அது இதுனு அலையற இளைஞர் கூட்டம் இந்த தலைமுறைல மிச்சமிருக்கிற ஜோதிஷ (விஞ்) ஞானத்தையாவது பாதுகாக்க முயற்சி பண்ணனும். அடுத்த தலைமுறைக்கு இதை சிந்தாம சிதறாம எக்சேஞ்ச் பண்ண நான் காத்திருக்கேன்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...

 

நெறைய பொண்ணுகளுக்கு அரவிந்தசாமி மாதிரி தான் பையன் வேணும்மாமே??

செவப்பான பொண்ணுதான் வேணுமுன்னு  சொல்லுற பையனுக்கும் ... செட்டில் ஆனா பையன் தான் வேணுமுன்னு சொல்லுற பொண்ணுகளுக்கும்...

அண்ணன் கவுண்டமணியின் evergreen டயலாக் 

பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா ???? :)
 

Monday, August 29, 2011

ஜோதிட பாலபாடம்: 11


இரண்டுக்கு அதிபதி 12 ல்:
தாராளமாக பேச தயங்குவீர்கள் அல்ல து சொல்ல நினைத்தது ஒன்றாய் இருக்க சொல்வது வேறு ஒன்றாய் முடியும்.குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். கண்பார்வை மங்கலாகலாம். வீண் விரயங்கள் ஏற்படும்.
10க்கு அதிபதி 11ல் அ பத்து பதினொன்று அதிபதிகள் இணைந்து சுபபலமாதல்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களில் ஈடுபடலாம்.
கேது சுபபலமாகி ஜீவன பாவத்துடன் தொடர்பு கொண்டால்:
எந்த தொழிலில் இறங்கினாலும் அதில் மாடர்ன் டெக்னிக்ஸ், லேட்டஸ்ட் இன்னோவேசன்ஸை உபயோகிப்பிங்க. வெளி நாட்டு தொடர்பிருக்கும்.
3 ல் சுக்கிரன் அ கேந்திர சுக்கிரன் (7 அ 10) :
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். நீங்க செய்றிங்களோ இல்லையோ அதைபத்தி நிறைய யோசிப்பிங்க. நிறைய பேசவும் செய்யலாம். இங்கே ஒரு சின்ன ரகசியத்தை சொல்லனும் யாரெல்லாம் அதை பத்தி நிறைய யோசிக்கிறாய்ங்களோ ,பேசறாய்ங்களோ அவிக சீக்கிரம் அது மேல இருக்கிற கவர்ச்சியை இழந்துருவாங்க காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால், விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
லக்னாதிபதி விரயத்தில் அ விரயாதிபதி லக்னத்தில்:
உங்க யோசனைகள் உங்களுக்கு பயன்படாது. பிறர் விஷயத்துல ஒர்க் அவுட் ஆகும்.
செவ் சுபபலமாகி லக்னத்தில் /ஐந்தில் :
நீங்க ஜஸ்ட் ஒரு சோல்ட்ஜர் தான். உங்களை உரிய பாதையில செலுத்த ஒரு கமாண்டர் ஒரு அட்வைசர் தேவை.
6க்கு அதிபதி 10ல் :
தொழில் வியாபாரத்துல கடன் ஏற்படலாம். போட்டி இருக்கலாம், விரோதம் வரலாம். பயப்படாதிங்க. இறுதி வெற்றி உங்களுக்கே. சற்று தாமதமாகவேனும் சதுர்ஜயம்,ருண விமுக்தி, ரோக நிவர்த்தி கிடைக்கும்.
7 ஆமிடத்துடன் சுக்கிரன் தொடர்பு கொண்டால்( இருந்தாலும்):
தென் கிழக்கு திசைல இருந்து வரலாம். அவிக வீட்ல பெண் ஜனத்தொகை அதிகமா இருக்கலாம். ஏரியா பேர் கூட பொம்பள பேரா இருக்கும். துர்கா காலனி எட்ஸெட் ரா. அவிக வாழ்க்கைல ( வீட்டு எண்,கிராஸ் நெம்பர்,பிறந்த தேதி முதலியன) 6 ஆம் நெம்பர் ரொம்பவே விளையாடியிருக்கும்.
பழம், பூ,லட்சுமி, தொடர்பான பேர் கொண்டவுகளா இருப்பாங்க. அழகிய தோற்றம், அழகியல் உணர்வு உள்ளவங்க. கலைத்துறைல ஈடுபாடு இருக்கும்.
பத்தில் சந்திரன் :
வெறும் இரண்டே கால் நாட்களில் 20 வருடங்களுக்கும் தீராத பிரச்சினையை க்ரியேட் செய்துவிடுவார். அதே நேரம் 20 வருடங்களாய் தீராத பிரச்சினையை வெறும் இரண்டே கால் நாட்களில் தீர்த்துவிடுவார்.
2ல் சந்திரன்:
தன் இரண்டே கால் நாள் வருமானத்திலிருந்தே ஒரு சொத்தை வாங்கினாலும் ஆச்சரிய பட முடியாது. அதே சமயம் சொத்தை விற்று தின்றபடி காலத்தை ஓட்டினாலும் ஆச்சரிய பட முடியாது.
லக்னாதிபதி+ரோகாதிபதி:
கடனை முதலாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டால் சக்ஸஸ் ஆகலாம்.
தனுசு லக்ன்ம:
இவரது மைண்ட் செட்டை புரிந்து கொள்வது கடினம். வயிற்றுக்கு கூட தாரளமாக செலவழிக்காது சேமிப்பை மேற்கொள்வார். அந்த சேமிப்பில் இருந்து சொத்து வாங்குவார். ஆனால் வாழ் நாள் பூரா சொத்து வாங்குதல், அதன் மீது விவகாரங்களை எதிர்கொள்ளுதலிலேயே இவர் நேரம் செலவழிந்து போகும். இவர் இருக்கும் இடத்தில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது. முக்கியமாய் பூனை . (முடி உதிர்க்கும் எந்த பிராணியும் வேண்டாம்)
இவர் மீது தந்தையின் இம்பாக்ட் அதிகம். தந்தை மகன் உறவை மீறி எல்லா தொழில்,வியாபார விஷயங்களிலும் கலந்து வேலை செய்யும் வாய்ப்பு உள்ள

லக்னம் ரிஷபமாகி லக்னத்தில் சனி:
அதே போல் 9/10 க்கு அதிபதியான சனி லக்னத்தில் நின்று டெக்னிக்கல் ப்ரெயின், புண்ணாக்கிலிருந்து கூட எண்ணெய் எடுக்கும் அத்தனை சாலாக்கை தந்திருந்தாலும் சொத்து சேர்க்கும் யோகத்தை தந்தாலும் அவர் ஏழையும் பார்த்து மனைவியாரின் உடல்,மன நலன் ,அவருடனான தங்கள் ஒற்றுமையையும் பாதிக்கிற நிலையில் உள்ளார். எனவே சனி தொடர்பான தொழில், மனிதர்களையும் தவிர்ப்பது நல்லது.
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள்:
4,13,22 , 7,16,25 எண்கள் தேதிகளை தவிர்க்கவும்.
இரண்டில் செவ்வாய்:
இது தனபாவம் என்பதால் வீண் விரயம், வாக்குஸ்தானம் என்பதால் எதிராளியை இர்ரிட்டேட் செய்யும் பேச்சு, நேத்திர ஸ்தானம் என்பதால் கண்களுக்கு ,வாய்,தொண்டைக்கு பாதிப்பு ஏற்படும்.குடும்பஸ்தானம் என்பதால் குடும்பத்திலும் கலகம் பெருகும்.
பரிகாரம்:
முருகன் மூலமந்திரத்தை வாய் விட்டு ஜெபித்தல் . யுத்தம் தொடர்பான சினிமாக்களை டிவிடியில் பார்த்தல். கழுத்தில் வேல், சூலம் போன்ற ஆயுதம் பொறித்த டாலர் அணிதல்.
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
(Om sowm sarahanabhava sreem hreem kleem klowm sowm namaha
4ல் சனி :
இது குடும்ப வறுமையை, வீட்டின் பாழடைந்த தன்மையை காட்டும். வீட்டை புதுப்பித்தால் ஏழ்மை வரும். இதை தவிர்க்க புதுப்பித்த பிறகு ஹாலில் விவசாயம் தொடர்பான சீனரியை வால் பேப்பராக ஒட்டவும்.ஆனால் தாய்க்கு தீர்காயுவை தரும் (ஆனால் அவருக்கு கால் தொடர்பான தொல்லையையும் தரும்) படிப்பில் தடை, வாகன யோகம், ஆனாலும் சிறு விபத்து ஒன்றும் நிகழலாம்,
4ல் சந்திரன்:
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். தாயின் உடல் ,மன நிலையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும்.
7ல் புதன்:
இது ஜாதகரின் நடத்தை குறைவை காட்டுகிறது (பெண்கள் விஷயத்தில்) தோல் அண்டம் தொடர்பான பிரச்சினயையும் தரலாம்.

Sunday, August 28, 2011

அன்னா அசாரே ஒரு அரசியல் பஃபூன்


நாம ஏதோ ஒழுங்கு மரியாதையா அவன் அவள் அது , ஜோதிட பால பாடம்னு உடுப்பி ஹோட்டல் தனமா எழுதிக்கிட்டிருக்கம். ஆக்சுவலா இது சேஃப். சேஃப்டி ஜோன். நம்ம வாழ்க்கையில என்னைக்கு நாம ஒழுங்கா பொளப்பை பார்த்தோம்.

நாம எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாய்ங்க. அவிகளுக்கு ஆன்மீகம் - ஜோதிடத்தை தாண்டியும் ஒரு தாகம் இருக்கும். ஒரு தாக்கம் இருக்கும். நமக்கும் ஒரு பொறுப்பிருக்கு. இப்படி ஆன்மீகம் -ஜோதிடம்னு மூழ்கியிருந்தா நாளைய தலைமுறை காறி துப்பும்.

அதனாலதேன் இந்த " அன்னா ஹசாரே ஒரு அரசியல் பஃபூன் " என்ற பதிவு இவ்ளோ பீடிகை எதுக்குன்னா அன்னா ஹசாரேவை நக்கல் அடிச்சு எழுதற பார்ட்டிகளை ஒரு பிடி பிடிக்கத்தான். அப்போபாலபாடம் கோவிந்தாவான்னு டென்ஷன் ஆயிராதிங்க.அதும்பாட்டுக்கு தொடருது.அதை படிக்க இங்கே அழுத்துங்க.

அன்னா ஹசாரேவுக்கு வக்காலத்து வாங்கறோம்ன ஒடனே நமக்கு பா.ஜ.க கலரை கொடுத்துரப்போறிங்க.

ஏதோ ஒய்.எஸ் .ஆர் மாயையில விழுந்து ஒரு கட்டத்துல காங்கிரஸுக்கு வேணம்னா வக்காலத்து வாங்கியிருக்கலாமே தவிர பா.ஜ.க பக்கம் தலை வச்சு கூட படுத்தது கிடையாது.

நம்ம அரசியல் ஆசான் என்.டி.ஆர் பா.ஜ.கவுடன் கூட்டு வச்சிக்கிட்ட காலத்துல பா.ஜ.க ஒரு அப்பிராணி. சந்திரபாபு காலத்துல பார்கெய்னிங் பொசிஷனுக்கு வந்துட்டாய்ங்க. பாபர் மசூதி இடிப்புக்கு அப்பாறம் நம்ம மைண்ட்ல பா.ஜ.கவுக்கான இடம் சு..த்..தம். ஆய்ருச்சு.

இப்பம் மோடிய வச்சு மோடி வித்தை காட்டறாய்ங்க. நாம அதுக்கெல்லாம் மயங்கற மாதிரி இல்லை. அரசாங்கம்னா 24 மணி நேரம் கரண்டு கொடுத்துட்டா போதும்னு பேசறவுகளும் நாட்ல இருக்காய்ங்க. ஆனால் ஜன நாயகத்துல அதுவும் ரைட் டு ஈக்வாலிட்டிய அடிப்படை உரிமையா தந்திருக்கிற நாட்ல அரசாங்கம் மக்களுக்கு சாதி மத வேறுபாடில்லாம பாதுகாப்பா நல்வாழ்வு வாழச்செய்யனும். அதான் முக்கியம்.

ஒய்.எஸ்.ஜகன் மீதான சி.பி.ஐ வழக்கை விமர்சிச்சு பா.ஜ.க தலைவர்கள் பார்லிமெண்ட்ல பேசியிருக்காய்ங்க. இதனால ஜகன் பா.ஜ.க கூட்டுன்னு அலப்பறை பண்றாய்ங்க. அதை எல்லாம் நம்பாதிங்க. ஸ்டேட் பாலிடிக்ஸ் வேற . சென்டர் பாலிடிக்ஸ் வேற.

சென்டர் பாலிடிக்ஸ்ல காங்கிரஸும் -பா.ஜ.கவும் மார்க்கெட் லீடர்ஸ். இதுல ஒவ்வொரு கட்சி ஒவ்வொரு காலத்துல ஹார்ம்லெஸ்ஸா தோணும். அப்பம் எதிர்கட்சிங்க ஒருத்தரை மாத்தி ஒருத்தரை சப்போர்ட் பண்ணியே ஆகவேண்டிய நிலைமை.

உ.ம் காங்கிரஸ் போஃபர்ஸ் ஊழல்ல சிக்கினப்ப பா.ஜ.கவை சகிச்சுக்கவேண்டியதாயிருச்சு.
பாபர் மசூதி இடிப்புக்கப்பாறம் காங்கிரஸை சகிச்சுக்கவேண்டியதாயிருச்சு.

சரி சரி ஃப்ளாஷ் பாக் போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.

பதிவுலகத்துல மஸ்தா பேரு அன்னா ஹசாரே மேல கல்லெறிஞ்சிருக்காய்ங்க. எல்லாம் நம்ம கண்ல படும். அந்தமாதிரி எழுத்துக்களுக்கெல்லாம் ரேண்டம் சாம்பிளா என்வழி வலைதள எழுத்துக்களை எடுத்துக்கிட்டு நம்ம கருத்தை சொல்லிரலாம்னு ஒரு ஐடியா.

//அன்னா ஹஸாரேவை தேசப் பிதா காந்தியடிகளை விட ஒரு படி மேலே வைத்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம்//

இங்கே ஒரு கூட்டம்னு சொன்னதை நெல்லா வாட்ச் பண்ணுங்க. காந்தி தாத்தாவை கூட ஒட்டு மொத்த தேசமே தலை மேல வச்சு கொண்டாடலை. அப்பவும் ஒரு கூட்டம் தேன் தாத்தாவை சப்போர்ட் பண்ணுச்சு.

தலை மேல வச்சு கொண்டாடற கூட்டத்துல நாம இல்லை. தாளி எவனும் கண்டுக்கிடலை.கம்யூனிஸ்டெல்லாம் தூங்கறான். பா.ஜ.க பஜனை மடம் மாதிரி ஆயிருச்சு. அங்கனயே ஊழலை பங்கு போட்டுக்கறதுல பங்கு தகராறு .

இன்னம் மாயாவதி, சந்திரபாபு ,லல்லு ,முலாயம் எல்லாம் பாவம் சொந்த பஜனை ,சொந்த சோகங்கள்ள சிக்கி தவிச்சிட்டிருக்காய்ங்க.

மீடியா மீடியான்னு கிழிச்சுக்கறானுவ. இந்த மீடியா என்னத்தை கிழிச்சது . முன்னொரு காலத்துல போஃபர்ஸை வெளிகொண்டு வந்திருக்கலாம். இன்னைக்கு அதே பத்திரிக்கை ஈழத்தமிழர்கள் மேட்டர்ல எப்படியா கொத்த தப்பாட்டம் போட்டதுன்னு நாடறியும்.

இந்த மீடியா ஊழல் மேட்டர்ல என்னத்தை கிழிச்சது.தமிழ் நாட்ல தினசரி முன்னாள் மந்திரியெல்லாம் நில ஊழல்ல மாட்டி செயிலுக்கு போறானுவ. அந்த மந்திரியோட அடிப்பொடிகள் கொடுத்த முழுப்பக்க விளம்பரங்களை பொறுக்கித் தின்னுதானே இந்த மீடியா காலம் தள்ளிட்டு இருந்தது. அப்பம் தெரியாதா இவன் எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்தவன்னு. இது மீடியாவோட இழி நிலை.

Something is better than nothing. சர்க்கஸ்ல பார் விளையாட்டு நடக்குது. ஒரு ஆளு தவறி விழறான். அவனை பிடிக்க சூரர்கள் தவறும்போது அந்த வேலைய செய்ய ஒரு பஃபூன் செய்ய முன் வந்தா அவனை பாராட்டனுமே தவிர நக்கலடிக்கக்கூடாது.

//காந்தியடிகளை கேவலப்படுத்துவது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, என்ன சொன்னாலும் இவர்களுக்கு ‘ஏறப்போவதில்லை//

இந்த சாஃப்ட் வேர் -ஐ பாட்- கால் சென்டர் தலைமுறைக்கு காந்தியடிகளை ஞா படுத்தினதே ஹசாரே தான். இதுல கேவலப்படுத்தறது எங்க வருது தெரியலை.

//மக்களை ஏமாற்றுவதில் ஹஸாரே கைதேர்ந்தவராக திகழ்கிறார். உலகிலேயே பேரம் பேசி உண்ணாவிரதமிருந்த முதல் நபர் இந்த ஹஸாரேதான்.//

மக்கள் என்ன வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்கிற குழந்தைகளா ஹசாரே ஏமாத்திர்ரதுக்கு. கலைஞராலயே ஏமாத்த முடியலை. ஹசாரே எந்த மூலைக்கு?

இத்தீனி காலம் ஜன நாயகத்தின் நாலு தூண்களும் மக்களை ஏமாத்திக்கிட்டிருந்ததை வெளிச்சம் போட்டாரு அன்னா. அப்படி என்னதான் மக்களை மோசம் செய்துட்டாருன்னு சொல்றாய்ங்களோ புரியலை

//கிட்டத்தட்ட ஒரு பிளாக்மெயிலர் ரேஞ்சுக்கு மாறி அரசை மிரட்டிக் கொண்டிருந்த ஹஸாரேவை சூப்பர் ஹீரோவாகக் காட்டுவதில் மீடியாவுக்கு அப்படியொரு அலாதி ஆர்வம்.//

காந்தி தாத்தா அம்பேத்கரை செய்த ப்ளாக் மெயிலை விடவா அதிகம்? சுத்த பேத்தல் . அடுத்து மீடியாவோட ஆர்வம்..

மீடியாவும் ஒரு விபச்சாரி நிலைக்கு வந்து பல காலமாச்சு. அவிகளுக்கு குறிப்பிட்டசெய்தி மேல ஆர்வம் இருந்துட்டா போதாது. ஒன்னு அவிக மக்களுக்கு தர்ர ப்ரோக்ராமை ஸ்பான்ஸர் பண்ண சில்லறை பார்ட்டிங்க வேணம்.அல்லது அந்த ப்ரோக்ராம் நெஜமாலுமே மக்களால பார்க்கப்படனும். மக்களால பார்க்கப்பட்டா ஸ்பான்சரர்ஸ் கிடைப்பாய்ங்க. ஸ்பான்சரர்ஸ் கிடைச்சுட்டா மக்களால் பார்க்கப்படலின்னாலும் காட்டலாம்.

அன்னா மேட்டர்ல இன்னாடா நடந்ததுன்னா த பார்ரா இந்த தாத்தா நம்ம மனசுல வச்சு புழுங்கிக்கிட்டு இருந்த மேட்டரை இம்மாம் தில்லா ஒடைக்கிறாருன்னு சனம் ஃபீல் பண்ணாய்ங்க. அதான் ஹசாரேவோட வெற்றிக்கு காரணம். அவர் சாமானியனோட மனக் குரலை எதிரொலிச்சாரு.

அவரு தமிழ் வருசத்துக்கு மொத தினம் பொங்கலா இருக்கனும்னு உண்ணாவிரதமிருந்திருந்தா முரசொலியில வேணம்னா கலைஞர் இடம் கொடுத்திருப்பாரோ என்னவோ.மத்தபடி சனம் சீண்டியிருக்காது.

//இதன் விளைவு தன் நிலை என்ன என்பதை மறந்து இவர் இஷ்டத்துக்கும் பேச ஆரம்பித்துவிட்டார்.//

அப்படி என்ன தான் ஜன நாயகத்துக்கு விரோதமா -சட்டவிரோதமா பேசிட்டாருன்னு பார்ப்போம்

//அரசு ஹஸாரேவை ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மன்மோகன் சிங் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளார்//

ஆரம்பத்துலன்னா அவரு சொந்த கிராமத்துல சாராயத்தை ஒழிச்சப்பயா? சனத்துக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தப்பயா? மன்மோகன் சிங்குக்கு வெற்றியாவது தோல்வியாவது . அவர் சோனியா கையில பொம்மைங்கோ. வேணம்னா சோனியான்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கும்.

//மீடியாக்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய ஒரு பலூனைப் பார்த்து மிரண்டுபோய், அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியது மக்களாட்சிக்கு நேர்ந்த அவமானம்.//

ஊதி ஊதி பெருசாக்கற மேட்டர்லாம் நடக்கனும்னா நீங்க முழுப்பக்க வண்ண விளம்பரங்களை அள்ளிக்கொடுக்கிற ஸ்டேஜுல இருக்கனும். ப்ரஸ் மீட் ஃபாலோட் பை லஞ்சுன்னு ப்ரஸ் க்ளப்புக்கு நோட் அனுப்பி நிருபர் பசங்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்கனும். வெளி நாட்டு செல்ஃபோன் பரிசா கொடுக்கனும். அல்லது நீங்க ஆட்சியில இருக்கனும். அரசு விளம்பரங்களை அள்ளி விடனும்.மோடி கவர்மென்டு கல்கியோட ஒரு இஷ்யூவை ஸ்பான்சர் பண்ணுச்சே ..அதுதான் ஊதி பெருசாக்கிறதுன்னா.

அரசு பயந்தது ஊதி ஊதி பெரிதாக்கிய பலூனை பார்த்து இல்லிங்க. அன்னா கையிலெடுத்த இஷ்யூ அப்படி. அவர் தெரிவு செய்த மார்கம் அப்படி. அவரோட ஃப்ளாஷ் பேக் அப்படி. அவரோட அச்சீவ்மெண்ட்ஸ் அப்படி.

//சட்டத்தை மீறிய ஹஸாரேவை கைது செய்தது வரை சரியாக செயல்பட்ட அரசு, அடுத்து அவரை விடுதலை செய்ததும், இரண்டு மூன்று நாள் திகாரில் வைத்து போஷித்ததும் மகா கேவலம். அப்படியே குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியே போட்டு ஜெயில் கதவைச் சாத்தியிருக்க வேண்டும். நியாயமாக மற்றவர்களுக்கு இந்த ட்ரீட்மெண்ட்தான் திகாரில் கிடைத்திருக்கும். மீடியாவின் செல்லப்பிள்ளை என்பதால் ஹஸாரேவுக்கு இந்த சிறப்பு மரியாதை போலிருக்கிறது!//

பாஸு ! நீங்க இந்த கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை தந்தது அரசியல் சாசனம் .அது தந்திருக்கிற எழுத்துரிமை (ரைட் டு ஒப்பீனியன்) இது ஆளும் வர்கங்களுக்கு எதிராபோனா நம்மை கூட திகார்ல போட்டுருவாய்ங்க பராவால்லியா?

நாம நம்ம கருத்தை ப்ளாக்ல மட்டும் எழுதறோம். ஹசாரே தெரிவு செய்த மோட் ஆஃப் கம்யூனிகேஷன் உண்ணாவிரதம். அவரை கைது செய்தது சரின்னுட்ட பிறவு நீங்க எழுதறது ஒரு எழுத்து இதுக்கு ..என்னத்தை எதிர்வினை?

//இந்த லோக்பால் முழுவதுமாக சட்ட வடிவம் பெறப்போவதில்லை.//

பார்த்தியா தலை ! ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கு. இந்த அரசு எப்படியா கொத்த அர்ராக்கட்டைன்னு . இதுக்கு உறைக்கறாப்ல சொல்லனும்னு தேன் ஹசாரே ப்ளாக் மெயிலை தேர்வு செய்தாரு.

// இப்போதே அன்னா ஹஸாரே கேட்டது போல பிரதமர், நீதித்துறை, சிபிஐ எதுவும் வலுவான லோக்பாலில் இடம்பெறவும் இல்லை. அவ்வளவு ஏன், ஊழல் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனை, லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு குறைந்த அளவிலான பங்கு என்ற நிபந்தனைகளைக் கூட அரசு ஏற்கவில்லை. ஆனால் இவை எதுவும் வெளியில் தெரியாமல் சமாளித்து, வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது ‘டீம் அன்னா//

அது சரி இதெல்லாம் லோக்பால்ல இடம் பெறனும்னு ஒரு ஆசை ஒங்களுக்கும் இருக்கில்லை. ஹசாரே கிழவாடி அவர் விட்டதை நீங்க தொடருங்க பார்ப்போம். டீம் அண்ணா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யலைங்ணா. கொண்டாட அனுமதி தந்திருக்கு. வேணம்னா அய்யரு கணக்கா நாளு நட்சத்திரம் குறிச்சு கொடுத்திருக்கு. மத்ததெல்லாம் தன்னிச்சையாத்தான் நடக்குது.

ஹசாரே தான் சொல்ட்டாரே ..இதுவரை நடந்தது பாதி யுத்தம் தேன் .இன்னம் ஒரு பாதி இருக்குன்னு சொல்ட்டாரே.

//உண்மையில் அரசும் தோற்று,//

இது மட்டும் 100 சதவீதம் கரீட்டு

//உண்ணாவிரதமும் தோற்றுப் போயிருக்கிறது. ஆனால் இதை யாருமே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ போதைக்கு அடிமையானவர்களைப் போல அன்னாவுக்கு வெற்றி என்று கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.//

உண்ணாவிரதம் தோத்துப்போறதுன்னா ஹசாரே சாந்தினி சவுக்ல காம்ப்ளெக்ஸ் வாங்கிக்கினு முடிச்சுக்கினாரா? இல்லை ஒரு கோரிக்கையும் ஏற்கப்படாம செத்துப்பூட்டாரா? இன்னா கான்செப்ட்ல தோத்துப்போச்சுங்கறிங்க புரியலை.

அன்னாங்கறது மக்களோட உணர்வுகளுக்கான பிரதிபிம்பம். அதுதான் ஜெயிச்சிருக்கு. இதை அன்னாவும் சொல்லிக்கீறாரே .இது மக்கள் வெற்றின்னுட்டு.

//மீடியாக்கள் எந்த அளவு மிக ஆபத்தானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.//

மீடியாக்கள் எந்த அளவுக்கு பலகீனமானவர்கள்னு நீங்க தேன் புரிஞ்சிக்கிடலை. அன்னாவை காட்டினா சனம் பார்க்கிறாய்ங்கண்ணே .இல்லைன்னா ரெண்டாவது நாளே கடாசியிருப்பானுவ.

//சரியான நோக்கத்துக்காக இவர்கள் ஒருபோதும் குரல் கொடுப்பதே இல்லை//
இதை ஞானும் ஏத்துக்கிடறேன். அன்னா மேட்டரு ஒரு விதிவிலக்கு.

//ஒரு மனிதன் சாவதை லைவ்வாக காட்டி பரபரப்பேற்படுத்தும் இவர்கள், ஹஸாரேவை வைத்து பரபரப்பு கிளப்பியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.//

உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டரை கூட கிளப்பத்தேன் பார்ப்பாய்ங்க. கிளம்பினாத்தானே. கிளம்பலின்னா திராட்ல விட்டுருவாய்ங்க. அதான் மீடியா நேச்சர். அன்னா மேட்டர்ல " கிளம்பிருச்சுய்யா கிளம்பிருச்சு"ங்கறது தேன் மீடியாவோட அனுபவம்.

//அன்னா ஹஸாரே இவர்களின் இப்போதைய டிஆர்பி மந்திரமாக மாறிவிட்டதால், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அன்னா நாமத்தை பார்வையாளர்களுக்கு போடப் பார்ப்பார்கள்.//

டி.ஆர்.பி மந்திரமா எப்படி மாறினாரு? மக்களோட மனக்குரலை எதிரொலிச்சாரு அதை விட்டுட்டிங்களே

//அன்னா ஹஸாரே… ஊழலைப் போலவே இந்த நாட்டைப் பீடித்த வியாதியாகிவிட்டார். அவரது போலித்தனத்தை ஆண்டவன் வெளிச்சம்போட்டுக் காட்டுவாராக!//

எப்டி? எப்டி? - அதையும் சொல்ட்டிங்கணா நல்லாருக்கும்.

//ஹஸாரே என்பவர் எந்த அளவு ஆபத்தான அரசியல்வாதி என்பதற்கு இந்த உண்ணாவிரதத்தில் வெளிப்பட்ட அவரது நேர்மையின்மையே சான்று. முதலில் பிரதமர், சிபிஐ, நீதித்துறை மூன்றையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

ஆனால் உண்ணாவிரதம் முடிவதற்குள் புதுப்புது கோரிக்கைகள், நிபந்தனைகளை அவர் முன்வைக்க, முந்தைய நோக்கங்கள் மறக்கடிக்கப்பட்டன. ஒரு நாள் கீழ்மட்ட அதிகாரிகளும் லோக்பாலுக்குள் வரவேண்டும் என்றார், பிறிதொரு நாள் குடிமக்கள் சாசனம் வேண்டும் என்கிறார். இவை ஏற்கப்பட்டால்தான் உண்ணாவிரதம் வாபஸ் என்று நின்றார். பிரதமரை சேர்க்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தை அவரோடு சேர்ந்து கோஷம் போட்ட மக்கள் உள்பட அனைவரும் மறந்துவிட்டார்கள்.//

அப்டின்னு நீங்க மட்டும் நினைச்சுட்டா எப்டிங்ணா? பேப்பர்ல டிவில துண்டு துண்டா வர்ரதை நம்பாதிங்க. எல்லாம் எழுத்து மூலமாத்தானே நடந்து கிட்டிருக்கு ( உங்க ஒக்காபிலரில பேரம்)

//இந்த லோக்பால் விவகாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட சமாச்சாரம்//

சோனியா அம்மா அவ்ள சீக்கிரம் முடிய விட்டுருவாய்ங்களா என்ன?

//கடந்த இரு தினங்களாக இவர் ( கிரண் பேடி) டெல்லியில் அடித்த கூத்துக்களைப் பார்த்தபோது, இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளும் இந்தப் பெண்மணியிடம் தோற்றுப் போவார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது! எனவே அடுத்த காட்சி மாற்றத்துக்கு அடி போட்டுள்ளனர்.//

யப்பா எவ்ளோ குட் நியூஸுங்ணா .. கிரண் பேடியும் தான் ஜெயிச்சு வரட்டுமே.. (அவிகஜெயிக்கிற மேட்டர் கூட முக்கியமில்லை அத்தனை அரசியல் வாதிகளும் தோத்துருவாய்ங்கன்னு சொன்னிங்களே அதான் செமை மேட்டரு. உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.


//தேர்தல் சீர்திருத்தம் உடனடியாக வேண்டுமாம். இப்போதைக்கு உண்ணாவிரதத்தை ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறாராம் ஹஸாரே. தேர்தல் சீர்திருத்தம் கோரி அடுத்த உண்ணாவிரதத்தை விரைவில் ஆரம்பிக்கப் போகிறாராம்.//

ஹும் ..நீங்க செய்தியாளரா இருந்திருந்தா இதை டாப்ல கொண்டு வந்திருப்பிங்க..


//“இப்போது பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் மோசமானவர்கள். இந்த மாதிரி யூஸ்லெஸ் எம்பிக்களை நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்காதீர்கள். இவர்களில் 150 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். நமக்கு தேவையான சட்டங்களை இயற்ற முடியாத பாராளுமன்றத்தில் இவர்கள் இருப்பதே தேவையற்றது,” என்றார். இதை அவர் பேசியபோது காலை 11.15 மணி.//

சூப்பரு.. தாத்தா ஏதோ விளக்கெண்ணையில கழுவுவாரு போலனு நினைச்சிருந்தேன்.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு அடிச்சு விட்டிருக்காரே.

//மாலையில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஒரு கடிதத்தோடு வந்து ஹஸாரேவைச் சந்தித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஹஸாரே இப்படி திருவாய் மலர்ந்தருளினார்:

“பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் நல்ல புரிதலோடு செயல்பட்டுள்ளனர். இந்த சிறந்த முடிவை மேற்கொள்ள உறுதுணையாக இருந்த அத்தனைப் பேரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்திய மக்களுக்கு வெற்றிகிடைக்கச் செய்த அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”//

ஹய்யோ ஹய்யோ,,, இவ்ளதானா உங்க புரிதல். ஹசாரே எம்பிக்கள் எல்லாம் உத்தமர்கள்னு சொல்லலியே .. புரிதலோடு செயல்பட்டிருக்காய்ங்கனு தானே சொல்றாரு. இதெல்லாம் சபை நாகரிகங்க. இதைப்போயி .............

//அடேங்கப்பா… ஹஸாரே நவீன யோவான்தான் போங்கள். அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவிட்டால் அனைவரும் உத்தமர்கள். இல்லாவிட்டால் தேவையற்றவர்கள், கிரிமினல்கள், யூஸ்லெஸ்கள்…//

கடந்த பாராவே ரிப்பீட்டு. உடுங்க ஜூட்டு ..

ஜோதிட பாலபாடம்: 10


4 ஆம் பாவாதிபதி ஐந்தில்/ ஐந்தாம் பாவாதிபதி 4 ல் :
தங்கள் அம்மா பற்றிய சங்கதியை சொன்னால் நக்கலாக சிரிப்பீர்களோ என்னவோ? ஏன் என்றால் கடந்த ஜன்மத்திலும் அவரே தங்கள் அம்மாவா இருந்திருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆதாரம் 1:
அவர் இன்ஃப்ளுயன்ஸ் இதர குழந்தைகளை விட அதிகமாக தங்கள் மீது இருக்கலாம்.
ஆதாரம்2:
அவரை பற்றி ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
அவரது மரணத்துக்கு பிறகும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது தோழிகளின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

7க்கு அதிபதி 7 ல் ஆட்சி பெற்றால்:
நண்பன்/காதலி /மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம்.

8க்கு அதிபதி 4 ல்:
தாயை ஸ்தூலமாகவோ மன அளவிலோ பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். சிறு வாகன விபத்து / தொழிலகம் அல்லது குடியிருப்பில் சிறு விபத்துக்கு வாய்ப்பிருக்கிறது. உயிர் பிரிவதும் வீட்டிலேயே இருக்கலாம். சிலர் விஷயத்தில் வீடு கை மாறிவிடும்.

9க்கு அதிபதி -4ல் :
தாயே தந்தையை போலோ அல்லது தந்தையே தாயை போலோ தங்களை வளர்த்திருக்கலாம்.

4 ல் புதன் சுபபலம் பெற்றால்:
தாய்மாமன் அ மாமனார் சொந்தஊரில் செட்டிலாகவே வாய்ப்புள்ளது. அது கூட பஜார் தெரு, மக்கள் கூடிக்களிக்கும் இடத்தை ஒட்டி வீடு அமைய வாய்ப்புள்ளது. வீட்டில் தோட்டம் நிச்சயம். அது பிரபல பெருமாள் கோவில் உள்ள ஊராகவோ அ வியாபாரத்துக்கு முக்கியமான ஊராகவோ இருக்கலாம்.

ஜாதகத்தில் புதன் சுபபலமானால் .அதிர்ஷ்டம் தருவன:
எண்: 5
தேதி: 5,14,23
நிறம்: பச்சை
கடவுள்:பெருமாள்
கல்: ஜாதி பச்சை ( இடது சிறுவிரலில் அணியவும்)
ஏரியா: பஜார் தெரு, சந்தை, பீச் (மக்கள் கூடுமிடம்)
சாதி: வைசியர்கள், வியாபாரிகள்,ஏஜெண்ட்ஸ்,டீலர்
மனிதர்கள்: மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,ஜோதிடர்கள்

குரு+சந்திரன்:
இவர் தம் தகுதிக்கு (அதிர்ஷ்டம்) எள்ளளவும் தொடர்பில்லாத வாழ்வை 14 வருடம் வாழவேண்டியிருக்கும். அது எப்போது துவங்கியது என்பதை அவரே தம் அனுபவத்தில் இருந்து கணிக்கவேண்டும்.

ஐந்தில் சுக்கிரன் சுபபலமானால்:
மகாலட்சுமி போன்ற பெண் குழந்தைகள் பிறக்கும். அது நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட், கலர் சென்ஸ் உள்ளவராக வளரும் . அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் போன்ற தொழில்களை துவங்கி நடத்தலாம். மேலும் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், துறைகளும் லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.

லக்னம் அ ராசி மகரமானால்:
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கர்ம யோகம் இவருக்கு ரொம்பவே பொருத்தம். அந்தந்த நேரத்துக்கு தன் உழைப்பின் பலன் எங்கே போகிறது என்று கேள்வி எழுப்புவாரே தவிர பிறகு கண்டு கொள்ளமாட்டார். உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் வேலை செய்து கொண்டே இருக்க விரும்புவார்.

4 -7 பாவங்களுக்கு ஒரே கிரகம் அதிபதியாக இருந்தால்: (இது எந்த லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆகும்னு சொல்லுங்க பார்ப்போம்)
இவரது தாய்க்கும், மனைவி/கணவருக்கு சில ஒற்றுமைகள் அமைந்திருக்கும். பெயரில்,குணத்தில் அ ஜாடையில்.

லக்னம்/ராசி கன்னியானால்:
கடன், நோய்கள், விரோதங்கள்,சொத்து தகராறுகள் இருந்து கொண்டே இருக்கும் . கடன் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பார். விரோதங்கள் இருக்கும் வரை கடன் இராது. ( சில கால கட்டத்தில் மட்டும் மூன்றுமே தொல்லை தரலாம்.) இவை குறித்து கவலை வேண்டாம்.

லக்னம் கடகமானால்:
அம்மா ஏதேனும் ஒரு கலை/அழகு படுத்தும் கலை கைவரப்பெற்றிருப்பார்கள். நல்ல ரசனை இருக்கலாம். ஆனால் இவருடன் ஒருவித ஹேட் அண்ட் லவ் தான் இருக்குமேதவிர அதில் தொடர்ச்சி இல்லாதிருக்கலாம். இவருக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம். (கருப்பை,ஓவரிஸ்,அண்டம்) பாட்டு டீச்சர், ட்ராயிங் டீச்சர் மாதிரி கூட இருந்திருக்கலாம்

சனி ஜீவனஸ்தானத்தில் தொடர்பு கொண்டால்:
ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறை. . எந்த துறையில் இருந்திருந்தாலும் கை,கால் அழுக்காகும் தொழில்/சீட்டில் இருந்திருக்கலாம். ஒர்க்கிங் என்விரான்மென்டில்குறைந்த பட்சம் தூசு, துர்வாசனை இருந்திருக்கும்.
இவருக்கு தொழில் உத்யோகத்தில் எதிர்ப்புகள் இருந்தால்:
காகத்துக்கு சோறு, பசு மாட்டுக்கு அகத்தி கீரை தரவும்.

Saturday, August 27, 2011

ஜோதிட பால பாடம்:9 & குரு வக்ர பலன்




அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்னைக்கும் தொடருது.இதை வரிசையா தரமுடியலை. படிச்சுட்டு நீங்க கேட்கிற கேள்விகளுக்கு பதில் தர முடியலை.(ஏற்கெனவே கேட்டு வச்சிருக்கிறவுக மன்னிக்கனும். கேட்க நினைக்கிறவுக ரோசிக்கனும்).

டோன்டுவின் பதில்கள் மாதிரி கேஸில்லை இது. டோண்டு சார் மொதல்ல பதிலை ரெடி பண்ணிக்கிட்டு அப்பாறம் கேள்வி கேட்டுக்குவாரோ அ டோன்டு சார் இப்படியா கொத்த கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பாருன்னு சனம் கேள்வி கேட்குதோ தெரியாது..

நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நாளா பொழுதா உட்கார்ந்து அடிச்சாலும் முழு பதில் தரமுடியாது. சோசியம் ஒரு சமுத்திரம் ( ஏழு சமுத்திரம்னு சொல்றாய்ங்க - நாம பாஆஆஆஆஆஅர்த்தது ஒரு சமுத்திரம்தானு வச்சிக்கங்க).

அதிலயும் நாம பதில் சொல்லனும்னா கால காலமா இருந்து வர்ர அப்செஷனையும் சொல்லனும். அதுல எதெல்லாம் இன்னைக்கும் பொருந்துது எதெல்லாம் பொருந்தாது ஏன் பொருந்தாதுன்னும் சொல்லனும்.
பார்ப்போம்.வாக்குல கீற சனி கழண்டுகிடட்டும் . குரல் பதிவானா போட்டு அசத்திருவம்ல. நெஜமாலுமே நேரம் இல்லிங்ணா.

வேலை செய்யறது எவ்வளவு முக்கியமோ அந்த வேலைக்கு தொடர்பில்லாம வெட்டியா கொஞ்ச நாழியாவது இருக்கிறதும் அவ்வளவே முக்கியம். இது நம்ம செயல் திறனை இரட்டிப்பாக்கும். அதனால வெட்டியாவும் கொஞ்ச நாழி அலையவேண்டியதா இருக்கு. மேலும் ..........

நாம லோக்கலா நடத்திட்டு வர்ர பத்திரிக்கை ரம்ஜான்+ வினாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தயாராகிவருது ப்ளஸ் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை எல்லாம் சேர்ந்து கழுத்தை நெறிக்குது. நம்ம சுகுமார்ஜி மணி,போன்றவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை.பார்ப்போம்.

ஹசாரே செயிச்சுட்டாரு. வாழ்க்கையில ஒரு குரூரமான விதி என்னன்னா சிலர் வெற்றியின் போது புத்தி சாலியா காட்சி தந்து தோத்துட்ட பிற்காடு மகாமடையர்களா எக்ஸ்போஸ் ஆயிருவாய்ங்க. ( மதுரை வீரர்களை பார்க்கிறிங்கல்ல)

சிலர் தோல்வியில மகா புத்திசாலிகளா ,உத்தமர்களா காட்சி கொடுத்து வெற்றியின் போது முட்டாள்களா, மகா கெட்டவுகளா எஸ்டாப்ளிஷ் ஆயிருவாய்ங்க. (அம்மா சம்ச்சீர் கல்வியில மாட்னாய்ங்களே- எமபுரத்து கதவை தட்டறவனுக்கு இதயத்துக்குள்ளாற நேரடியா இறக்கின ஊசி மருந்து அது)

வெற்றி தோல்வி ரெண்டுலயும் ஒரே மாதிரி காட்சி தரக்கூடிய பார்ட்டி உலகத்துல நாம ஒருத்தந்தேன்.
( மடையனா). நாம மக்கள் பார்வையில மடையனா இருக்க காரணம் இப்டி இருந்தாதான் ஆத்தா டொக்கா வந்து சி(ரி)க்கறா.

நம்ம சைட்ல திடீர்னு ரெட்டிங்கல்லாம் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டாய்ங்க. (ரெம்ப சந்தோசப்படாதிங்க) இதுவும் நம்ம ஜா.ராவோட லீலைகள்தான். அவரு ஹாரம்னு ஒரு மல்ட்டி லிங்குவல் அக்ரகேட்டர்ல மெம்பரு.அங்கன தெலுங்கு பிரிவுல பிடிச்ச பேரை வச்சுக்கிட்டு புல்க்கு காட்டறாரு.

நேற்றைய பதிவுல கம்ப்யூட்டர் திருடு போச்சுன்னு சொல்லியிருந்தேன். நமக்கு வந்த தகவலை வச்சுத்தேன் பதிவெழுதினன். மேட்டர் இன்னாடான்னா மானிட்டரை மட்டும் லபக்கிக்குனு பூட்டுக்கிறானுவோ. சிபியுவை கவுத்து போட்டுட்டு போய்க்கிறானுவோ. அதுக்கு பவர் ப்ளக் எல்லாம் போயி ஒரு வண்டி இன்சுலேஷன் டேப் போட்டு ஒப்பேத்தி வச்சிருந்தம். இதுல அப்பப்போ டிம் அண்ட் டிப் அடிக்கும். இது நம்ம கிட்டே இருக்கிறப்பவே பார்த்துட்டு ..........

நம்ம ஃப்ரண்ட் ஒருத்தரு ( ஹார்ட் வேர் கம் சாஃப்ட்வேர் சர்வீஸ்) "யப்பா.. பெரிய சைஸ் ப்ளாக் அண்ட் வைட் மானிட்டருங்க கேப்பார் மேப்பார் இல்லாம நம்ம கிட்ட டஜன் கணக்கா விழுந்து கிடக்கு ஒன்னை கொண்டு போயி வச்சுக்க. நான் என்ன காசு பணமா கேட்கறேன்" னு ரெம்ப நாளா சொல்லிக்கினு இருந்தாரு. நாம தேன் சொம்மா வந்தா கருமமும் சேர்ந்து வரும்னு ப்ரேக் பண்ணி வச்சிருந்தம். நாளைக்கு மானிட்டர் ரெடி நாமினலா நூறோ இரு நூறோ கொடுத்துட்டு கொண்டு வைக்கனும். ஆத்தா புகழ்பாடும் தெலுங்கு கவிதைகளை வலையேற்றியே தீர்ரதுன்னு ஒரு கெட்ட முடிவு எடுத்திருக்கமில்லை.

வர்ர நவராத்திரிக்குள்ள ஏதோ ஒரு அற்புதம் நடந்தே தீரனும். அதேன் டார்கெட்டு.

அப்பாறம் ரெம்ப முக்கியமான சமாசாரம் 2011 ,ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 25 வரையிலான குரு வக்ரகாலம் பத்தி சில வரியாச்சும் சொல்லனும்.

திருடு போன கடைக்கு சொந்தக்காரனோட ராசி ரிஷப ராசி. குரு இப்பம் மேஷத்துல இருக்காரு. ஆகஸ்ட் 30 முதல் வக்ரம்.. இந்த் எஃபெக்ட் ஒரு மாசம் முந்தியே வந்திருச்சு. ( மகனோட ஃபீஸ் மேட்டர் கடந்த ப்திவுலயே சொல்லியிருக்கன்) குரு அஷ்டமாதிபதி இவரு 12ல மறைஞ்சா யோகத்தை தானே தரனும். ஏன் ஆப்படிச்சுட்டாரு? அதான் வக்ரத்தோட ஸ்பெஷாலிட்டி .

நல்லது செய்யற இடத்துல இருந்து கிரகம் வக்ரமானா கெட்டதை செய்யும். கெட்டது செய்ற இடத்துல வக்ரமானா நல்லதை செய்யும்.

ஆனால் அந்த கிரகம் லக்னாதிபதின்னா மட்டும் எங்கன வக்ரமானாலும் நாஸ்திதேன். இதுலயும் ஒரு ப்ளஸ் இருக்கு.

நாம கடந்த சிலகாலமா சிங்கிள் டீக்கு சிங்கியடிச்சுக்கினு கீறோம்னு வைங்க. அப்பம் பார்த்து நம்மலக்னாதிபதி வக்கிரமானா அந்த வக்கிர காலம்வரை ஏக் தின் கா சுல்தான் கணக்கா இருக்க சான்ஸ் இருக்கு. இதுவே நாம க்ளாக் வைஸ் லைஃப்ல இருக்கிறச்ச லக்னாதிபதி வக்ரமானா டப்பா டான்ஸ் ஆடிரும். இதே விதியை உறவு -பிரிவு , நோய் -உடல் நலம்னு அப்ளை பண்ணிக்கிடுங்க.

குரு தனுசு மீனங்களுக்கு அதிபதிங்கறதால இந்த ரெண்டு ராசிக்காரவுக 2011 மே 8 க்கு அப்பாறம் இருந்த நிலைக்கு மாறான நிலை இப்பம் ஏற்படும்ங்கறதை புரிஞ்சிக்கிட்டு உசாரய்யா உசாரு.

மத்த ராசிக்காரவுகளை பொருத்தவரை குரு நல்லது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா கெட்டது .கெட்டது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா நல்லது. அடிபப்டை விதி இது . இதை வச்சு 12 ராசிக்கும் ஆருனா வக்ரகால பலன் எழுதினா பிரசுரிக்க காத்திருக்கம்.

ஆரும் எழுதலைன்னாலும் டோன்ட் ஒர்ரி இங்கே அழுத்தி உங்க ராசிக்கான 2011 குரு பெயர்ச்சி பலனை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க. அந்த பலனுக்கு நேர் எதிரிடை பலன் தான் நடக்கும். உடுங்க ஜூட்..

இனி ஜோதிட பால பாடம் ...........
7ஆமிடம் கெட்டால்:
ஜாதகருக்கு காதல்திருமணம் அ பெரியோரில் சிலருக்கேனும் விருப்பமில்லா திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அனைவரையும் எதிர்த்து மணந்தாலும் மனைவி வகையிலும் இவருக்கு நிம்மதி கேள்விக்குறியே.
லக்னத்தில்/ஐந்தில் சூரியன் பகை நீசம் பெற்றால் /சனி -ராகு-கேதுவுடன் சேர்ந்தால் :
தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம்.வலது கண்ணில் பிரச்சினை வரலாம். ஜாதகரை மறதி வாட்டும். அகந்தை மிக்கவராக இருந்து பின் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக மாறுவதோ , அல்லது ஆரம்பத்தில் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக இருந்து அகந்தை மிக்கவராகவோ ஆவார். ஆனால் இரண்டுமே ஜாதகருக்கு நலம் பயக்காது. சலாம் போட்டால் சட்ட விரோத சக்திகளுடன் உறவு ஏற்பட்டு விசாரணக்குட்பட வேண்டி வரும். அகந்தை மிக்கவராக இருந்தால் மேற்படி சட்ட விரோத சக்திகளால் தொல்லைகள் ஏற்படும்.
விரய பாவம் கெட்டால்:
ஜாதகருக்கு டீப் ஸ்லீப் இருக்காது. விழிப்பும்,தூக்கமும் மாறி மாறித்தொடரும்.இதனால் கனவுகள் அதிகம், சில நேரம் வாய்விட்டு உளறவும் கூடும்.
பரிகாரம்
மார்னிங்க்,ஈவினிங்க் வாக் செய்யவும்.( சூரிய ஒளி பாடி மேல படனும்) தந்தை வழி முன்னோர்களை நினைத்து தலை தொடர்பான பிரச்சினகள் உள்ளவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவும்.
சந்திர வீடு:
வீடு அமைந்திருக்கும் பகுதி நீர் நிலையை ஒட்டியதாகவோ, பள்ளமான பகுதியாகவோ இருக்கலாம். யார் எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத கட்டிடத்தை ஒட்டி இருக்கலாம். உ.ம் திருமண மண்டபம் -காய் கறி மார்க்கெட்
செவ்வாய் தொழில்:
போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே, எலகட்ரானிக்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ,நெருப்பு ,மின்சாரம் தொடர்பானவை
குரு தொழில்:
கோல்ட்,ஃபைனான்ஸ், டீச்சிங், பாலிடிக்ஸ், கோர்ட், சேவை நிறுவனங்கள், கோவில்,மத நிறுவனங்களில் வேலை.
சூரிய தொழில்:
தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்தல் அத்யாவசிய பொருட்கள், விளம்பரத்துறை, விற்பனை துறை (அட் டோர் ஸ்டெப்ஸ்)
சந்திர தொழில்:
ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் தொடர்பான சினிஃப்ளெக்ஸ்,ஏர் போர்ட்,பஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன்,திருமண மண்டபம், லாட்ஜு போன்ற துறைகள் , அழுகும் பொருட்கள் ,திரவ வடிவிலானவை, ரெண்டே கால் நாட்களுக்குள் முடிந்து விடக்கூடிய டீலிங்குகள், தினசரி செய்தித்தாள் விற்பனை/ஏஜென்சி
கடக குரு:
வாழ்வின் முற்பகுதியில் பயங்கர கடன் காரராகவும்,குடும்பத்துடன் ஒத்து போகாதவராகவும், தொண்டை ,கண் பகுதியில் நோய் உள்ளவராகவும் இருப்பார். ஆனால் பிற்பகுதியில் பெரும்பணக்காரராகவும், சொத்துக்கள் சேர்ப்பவராகவும், தர்ம காரியங்கள் செய்பவராகவும் இருப்பார். வயதான (பழுத்த) ஒரு தம்பதியை பராமரிப்பார்.( தாய்,தந்தையராகவும் இருக்கலாம்).
ராகு தொழில்:
லாட்டரி, சினிமா , சாராயம், லைசென்ஸ் இல்லா(வாங்காத) தொழில்கள் அனுகூலம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் . இருட்டில், இரவில் செய்யும் தொழில்
சனி மனைவி:
99.9 சதவீதம் காதல்+கலப்பு திருமணம் நடக்கலாம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமானால் தம்பதிகள் பிரிவர். அ மனைவி நோய்வாய்படுவார். மனைவி ஏழை குடும்பத்தில் பிறந்திருப்பார். ஜாதகரை காட்டிலும்மூத்தவராக இருக்கலாம் அ தோன்றலாம். சாலையில் மனைவியுடன் சென்றால் அக்காவா வீட்டு வேலைக்காரியா என்று பார்த்தவர்கள் நினைப்பர்.மேற்கு திசையில் இருந்து அல்லயன்ஸ் வரும். புதிய உறவில் தான் அமையும். ஒரு வேளை ஜாதகர் தமது ஊழியர் எவரையாவது மணக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Friday, August 26, 2011

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

அண்ணே வணக்கம்ணே !

சர்வ நிச்சயமா இந்த பதிவுல மொக்கை தான் போட போறேன். இதுபிடிக்காதவுக ஸ்ட்ரெய்ட்டா அவன் அவள் அது தொடருக்கும் , ஜோதிட பால பாடம் பதிவுக்கும் போயிரலாம். மொக்கை தான் எங்கள் சாய்ஸுங்கறவுக இந்த பக்கத்துல நில்லுங்க.

கிட்ண பரமாத்மா ஜொல்வாரு " பரதர்மம் எவ்ள உயர்ந்ததா இருந்தாலும் சுதர்மம் எவ்ள தாழ்ந்ததா இருந்தாலும் சுதர்மமே பெஸ்டு" அது நெஜம் தான்.. வழக்கம் போல அவன் அவள் அது -ஜோதிட பால பாடத்தோட நின்னிருக்கலாம்.

ஆத்தாவுக்கு லீவு விட்டு - ரா முச்சூடும் மன்னாடி அல்லாருக்கும் ஆட் சென்ஸ் பதிவை ஒர்க் அவுட் பண்ணினது தண்டமா போச்சு.( வெட்டி ..லு நித்திரைக்கு கேடு மாதிரி)

இண்ட்யாராக்ஸ் மூலமா கூகுல் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் வாங்கற மேட்டர் ( நேற்றைய பதிவு) அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா? அல்லது சனம் அசால்ட்டா இருந்துட்டாய்ங்களா தெரியலை. மொத்தத்துல நேரம் வீணாபோச்சு. ஹிட்ஸில் எள்ளளவு கூட வித்யாசமில்லை.

என்ன ஒரு ஆறுதல்னா இரண்டு புதுவரவுகளின் மறுமொழிகள்.

ரா தூக்கம் போச்சு.காலையில தூங்க முடியலை.மதியம் தூங்கமுடியலை. சாயந்திரம் 5மணிக்கு தூங்கி ராத்திரி 9 மணிக்கு எந்திரிச்சன். நமக்கு சனங்களோட இன்டராக்ட் ஆகறது ரெம்ப முக்கியம் . வெளிய இறங்கினம் சரக்கடிக்கிற பார்ட்டி தான் கிடைச்சாரு. கூட போயி ஒரு ஃபேண்டாவும் ரெண்டு சிகரட்டும் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்.

பால பாடம்ங்கற பேர்ல இந்தாளு கட்டற துணுக்கு தோரணத்தை படிக்க இத்தீனி சொந்தகதையை கேட்கனுமான்னு கோச்சுக்காதிங்கண்ணா. பாரதி சொன்னாரு " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,கவிதை" நம்ம ஸ்டேட்மென்ட் " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,ஜோதிடம்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனையில சில்லறை தாராளமாகவே புரண்டாலும் நமக்கு தொழில் ஆன் லைன் ஜோதிட ஆலோசனைங்கற ரேஞ்சு வந்தது ஒரு குடும்ப தலைவனா சந்தோசத்தை தந்தாலும் நாட்டுக்குழைத்தல் எல்லாம் பெண்டிங் ஆயிட்டே வருது. இது கில்ட்டிய தருது. ஆக இன்னைலருந்து இங்கே - இப்பம் - நாட்டுக்கு உழைக்க முடிவு பண்ணியிருக்கன்.

இந்தியாவுக்கு இது ஒரு சந்தியாகாலம். ( சூரியாஸ்தமனத்துக்கும் சந்திரோதயத்துக்கும் இடையிலான இடைவெளி) இந்த சமயம் நம்மை கருத்தை பதிவு செய்யலின்னா எதிர்காலத்துல ரெம்ப மொக்கையாயிருவம். இந்த காலத்துலயே இந்த நிருபர் பசங்க கேட்கிற வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அரசியல்வாதிங்க பேந்த பேந்த முழிக்கிறாய்ங்க.

நாம நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதி ஆனா கொத்துபரோட்டா போட்டுருவாய்ங்க போல. " இன்னிக்கு கிழிச்சுக்கறியே 2009 - 2011 பீரியட்ல ஆன்லைன்ல சோசியம் சொல்லி கல்லா மட்டும் தானே கட்டினேன்னு கேட்டுட்டா என்ன பண்றது?

அதனாலதேன் கருத்து கந்தசாமி கணக்கா நம்ம கருத்துகளை அவ்வப்போது சொல்லிரலாம்னு உத்தேசம்.

1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு செப் 9 அன்று மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு.

மனிதர்கள்னாலே குறைபட்ட சிந்தனை ( ஈகோ) - இயற்கையிலருந்து விலகி வந்துட்டதால குறைப்பட்ட உயிரியல் திறன் ( ஐ மீன் கில்மாலருந்து - மோப்பம் - கேட்புத்திறன் வரை) . இதுல தாளி மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எல்லா அமைப்புமே குறைபட்டதுதேன்.

குறைபட்ட திறன் கொண்ட - குறைப்பட்ட மனிதர்கள் ஏற்படுத்தின - குறைப்பட்ட அமைப்பு தரும் தீர்ப்புகள் மனித உயிரை பறிக்கும்னா அதை ஏத்துக்க முடியலை.

தூக்கு தண்டனைங்கறது சோனியாவுக்கு விதிக்கப்பட்டாலும் மொத ஆளா எதிர்ப்பு தெரிவிப்பேன் என்பதை இங்கன பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேலும் இத்தினி காலம் சிறையில் வாடிய அந்த பார்ட்டிங்களை தூக்குலயும் போட்டா ரெட்டை தண்டனை ஆயிருமில்லியா? குற்றத்திலான அவர்கள் பங்கை அரசு தரப்பு நிரூபிச்சதுலயே நிறைய ஓட்டை இருக்கிறதா சொல்லும் போது தூக்கு தண்டனைல்லாம் கொலைக்குற்றம்யா.


2.ஜன் லோக் பால்

இந்த மேட்டர்ல ரெஸ்பாண்ட் ஆற சனத்தை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். அன்னா அசாரே உலகத்தை உய்விக்க வந்த ரட்சகர் - அன்னா வாக்கெல்லாம் அருள் வாக்குங்கறது க்ரூப் நெம்பர் ஒன்.

இன்னொரு பகுதி சனம் ஹசாரே பின்னாடி பா.ஜ.க /மதவாத சக்திகள் இருக்கு. அமெரிக்கா இருக்கு. பார்லிமெண்ட் தான் சுப்ரீம். பார்லிமெண்டை ஹசாரே ப்ளாக் மெயில் பண்றாரு - அசாரே அத்வானிக்கு ஒன்னு விட்ட மச்சினன் - சாதி அமைப்பை ஆதரிக்கிறவர்னு கிழிச்சுட்டு இருக்காய்ங்க.

ரெண்டுமே பார்ஷியலா நெஜமா இருக்க வாய்ப்பு இருக்கு. பார்லிமென்டு தான் சுப்ரீமுன்னு பதர்ராய்ங்க. பார்லிமெண்டுன்னா என்ன? எம்.பிங்க. இவிகளை பார்லிமென்டுக்கு அனுப்பினது சோனியா ,ராகுலுக்கு ஜல் ஜக் போடவோ - துட்டுக்கு ஓட்டு போடவோ , கேஷுக்கு கேள்வி கேட்கவோ இல்லை.

இந்திய சனத்தொகை மொத்தமும் பார்லிமெண்டுக்குள்ள நுழைய முடியாது -அக்காமடேட் பண்ணமுடியாதுன்னு தான் இவிகளை அனுப்பினோம். இவிக சதா சர்வ காலம் நம்மோட இன்டராக்ட் ஆகி நம்மை கருத்து என்னனு தெரிஞ்சுகிட்டே இருக்கனும். இதையெல்லாம் பார்லிமென்டுல பேசனும் -சட்டமாக்க ட்ரை பண்ணனும்.

இவிக பொதுசனத்தோட சேவகர்கள் - வேலைக்காரவுக. வேலைக்காரன் சரியில்லை . தினம் தினம் சரக்கடிச்சுட்டு மட்டையாயிர்ரான்னா அவனை வேலைக்கு வச்ச எஜமான வாய்ல விரல் போட்டுக்கிட்டு உட்கார முடியுமா?

சரி கொய்யால இவனை நம்பினா வேலைக்காகாதுன்னு தன் வேலைய தானே செய்துக்க கோதாவுல இறங்கிர்ரான். ஜன நாயகத்துல ஜனம் தேன் சுப்ரீம். ( சுப்ரீம்கோர்ட்டு கூட சுப்ரிம் கடியாதுங்கோ)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நம்மில் குற்றம் குறை இல்லாதவர்கள் ஆருமில்லை. அதனால ஒட்டு மொத்தமா ஜானகிராமன் உத்தமர். முருகேசன் அராத்துன்னு தீர்ப்பு சொல்ல முடியாது. சிவயசிவாவில் பதிவு போடும் போது ஜா.ரா நல்லவர். போலி முருகேசனா கழிசடை கமெண்டு போடும்போது கெட்டவர்.

ஆன்மீக பதிவுகள் போடும்போது முருகேசன் நெல்லவரு. கில்மா ஜோக்கு போட்டு ஹிட் பொறுக்கறச்ச கெட்டவரு. அந்த மேரி அசாரே ஊழலை எதிரிக்கிறப்ப ஆதரிப்போம். சாதியை சப்போர்ட் பண்ணா கிழிப்போம்.


3.மத்திய அரசின் ஆயுள் -இடை தேர்தல்கள்

நாட் நாட் பீரியட்லயே சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு சோதிட பதிவு போட்ட பார்ட்டி நாம இன்னைக்கு உள்ள அரசியல் சீதோஷ்ண நிலைய பார்த்தா மத்திய அரசு இந்த நவம்பர் 8 வரை கூட தாங்காது போல. சீக்கிரமே இடைத்தேர்தல் வரும்னு பட்சி சொல்லுது.

ஜோதிட பாலபாடம்: 8

லக்னாதிபதி எட்டில்:
லக்னாதிபதி உங்களை காட்டும் கிரகம். எட்டு மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் மரணத்தை காட்டும் இடத்துல நின்னாரு. இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி மரணத்தின் மூலம் நன்மை செய்வார் அந்த மரணம் உங்க போட்டியாளரோடதா இருக்கலாம் -உங்க எதிரியோடதா இருக்கலாம் - அல்லது உங்கள் உறவினரா இருக்கலாம். அந்த மரணத்தின் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு -சொத்து -சுகம் வரலாம் என்பது இதன் பொருள். ஒரு வேளை நீங்க எதுனா பெரிய விபத்தில் சிக்கி நஷ்ட ஈடு இத்யாதி வரலாம்.

ரோகாதிபதி இரண்டில்:
நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் ஜாதகர் வீண் பேச்சு,வெட்டிப்பேச்சால் வம்புகளை விலை கொடுத்துவாங்குவார். அல்லது மிக அவசியமான நேரத்தில் கூட வாய் திறந்து பேசாது இருந்துவிடுவார்.அதனால் பல நஷ்டங்கள் ஏற்படும்.நோய்கள்,கடன்,விரோதங்களேற்படலாம். கண்,தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் வே ஆஃப் ப்ரசண்டேஷனில் பிரச்சினை வரலாம்.

லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றால்:

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன் எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"

மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க

மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.

எந்த கிரகம் கெட்டால் - எந்த கிழமையில் - எந்த கடவுளை வழிபடலாம்:

சூரியன் -ஞாயிறு -சூரிய நமஸ்காரம்,காயத்ரி
சந்திரன் -திங்கள் கிழமை -கன்னியாகுமாரி
செவ்வாய் -செவ்வாய் கிழமை - சுப்பிரமணியர் -ரத்த தானம்
ராகு -வெள்ளிக்கிழமை (காலை 10.30 முதல் 12 க்குள்) புற்றுள்ள -அய்யர் பூசை பண்ணாத அம்மன் கோவில்
குரு -வியாழகிழமை - தட்சிணா மூர்த்தி அ எவரேனும் குரு
சனி - சனிக்கிழமை - ஆஞ்சனேயர் அ கிராமதேவதை
புதன் - புதன் கிழமை - நாமம் போட்ட சாமி (எதுவானாலும் சரி) எஸ்பெஷலி கிருஷ்ணர்
கேது - திங்கள் காலை 7.30 முதல் 9 க்குள் வினாயகர்


குரு சுபனாகி/அசுபனாகி தனித்து நின்றால்;

அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்:
இது ஒரு ஜோதிட பழ மொழி. அந்தணன் என்பது குருவை குறிக்கு சொல். இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..


குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.( மேலும் உங்க ஜாதகத்துல செய்தொழிலை காட்டற 10 ஆமிடத்துக்கும் குருவே அதிபதியா இருக்காருங்கறதால இந்த பலன் ரொம்பவே ஒர்க் அவுட் ஆகும்)

யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?

உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.

ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)

குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.

தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?

கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.

அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.

இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.

உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.

கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.

குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.


மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.

இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.

குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.

அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.

6 ல் சந்திரன்: ரோக பாவம்:

இங்கே சந்திரன் நின்னாரு.இங்கு சந்திரன் நின்றதால் தீடீர் என்று உடல் நிலை ட்ரபுள் கொடுக்கும், மந்திரம் போட்டாப்ல குணமாயிரும். அதனால சின்ன சின்ன ஹெல்த் ட்ரபுள்ஸுக்கு மருந்துமாயம்னு போகாதிங்க போச்சுனு நினைச்சா மறுபடி தலை காட்டும்.(அவை வேறேதேனும் பெரிய பிரச்சைனைக்கு முன் அடையாளமா இல்லாதவரை) கடனும் திடீர்னு ஏற்படும் விளையாட்டா தீர்ந்துரும்னு நினைக்காதிங்க. வாழ் நாள் முழுக்க தொடர்ந்தாலும் தொடரும். அதனால் கடன் வாங்கறச்ச ஒரு முறைக்கு பல முறை யோசனை பண்ணி இறங்குங்க. வழக்கு,விவகாரம்,சண்டையும் இதே கேட்டகிரிதான். "அம்பாளே பார்த்துப்பா"ன்னுட்டு விலகி வந்துருங்க.
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன யதார்த்தத்தை புத்தியில் இருந்து மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். எதிரிகள் நண்பர்களா மாறுவாய்ங்க. நண்பர்கள் எதிரிகளா மாறுவாய்ங்க.

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அவன் -அவள்-அது : 22
அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. இங்கே அழுத்தி படிங்க.

கருத்து கந்தசாமி கணக்கா சமகால நேஷ்னல் டெவலப்மெண்ட்ஸ் பத்தியும் ஒரு ஐட்டம் தட்டி விட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிங்க

இனி அவன் அவள் அது ..................


கடந்த பதிவு ஒன்றில் ஆத்தாளுக்காவ தெலுங்குல நான் எழுதின தெலுங்கு கவிதைகளை வலையேற்ற ஒரு ஜகத் சோம்பேறிக்கு பிளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்தது ஞா இருக்கலாம்.

இன் கம் சர்ட்டிஃபிகேட் வைக்காததால காலேஜ்ல அவன் பையனுக்கு ரூ.31 ஆயிரம் அடிஷ்னலா கட்டவேண்டி வந்துருச்சு. அதை சாக்கா வச்சு வலையேற்றத்தை அவாய்ட் பண்ணிக்கிட்டு வந்தான். ஆத்தா அருளால காலேஜ் கண்டம் மலையேறிப்போச்சு.

இது நடந்து ஒரு வாரம் போல ஆனாலும் பார்ட்டி வலையேற்றத்தை கண்டுக்கற மாதிரி இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு எத்தனையோ ஆசையெல்லாம் காட்டினேன். மாசத்துக்கு இவ்ளன்னு காசுதரேன். எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆஃபீஸுக்கு போற வழியில தான் அவனோட மருந்து கடை . தாளி ஒரு டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் வாங்கித்தரேன். ஒரு மனு அடிச்சு கொடுத்தாலும் இருபது ரூபா வரும் இப்படி நிறைய.

ஆனால் பார்ட்டி எதையும் கண்டு்க்கலை. நேத்து ராத்திரி கடை பூட்டை உடைச்சு எல்லாத்தையும் வாரிக்கினு பூட்டானுங்களாம் ( நம்ம கம்ப்யூட்டர் உட்பட)

இதை எப்படி புரிஞ்சிக்கிறது புரியலை. காலையில 7 மணி அளவுல ஃபோன் வந்தது. இப்பம் 11.10 இதுவரை நாம என்ன ஏதுன்னு கண்டுக்கலை. இந்த சம்பவம் ஏன் நடந்தது? வலையேற்றத்தை நிரந்தரமா முடக்கவா? அது ஆத்தாளால கூட முடியாத வேலை.

வாழ்க்கையில லட்சியம்னு ஒன்னை வச்சுக்கிட்டு அதை தவிர மத்த எல்லாத்தையும் திராட்டுல விட்டுட்டு ஃபைட் பண்றவுக மேட்டர்ல கிரகங்கள் தோத்துப்போயிரனும்னு ஆத்தாளே ஒரு சாபம் விட்டு வச்சிருக்காளாமே தெரிமா?

இந்த சம்பவத்தால அசமஞ்சமா இருந்தா நம்மாளோட மைண்ட் உசுப்பப்பட்டு / இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் / கில்ட்டியால முழு வேகத்துல வலையேற்றம் நடக்குமோ?

அல்லது இதையே ஒரு சாக்கா வச்சு திராட்டுல விட்டுருவானோ? நமக்கு கம்ப்யூட்டர் திருடு போனதை பற்றி எள்ளளவும் கவலையில்லை.

எதுனா பூட்சின்னா கர்மம் தொலைஞ்சதுனு நினைக்கிற சாடிஸ்ட் நாம. எதுனா வந்தாதேன் பயப்படுவோம். இதும்பின்னாடி எந்த கருமம் வந்திருக்கோன்னு சிந்திப்பம்.


Thursday, August 25, 2011

அல்லாருக்கும் கூகுல் ஆட்சென்ஸ்: நெஜமாலுமே


வணக்கம்ணே.

கூகுல் ஆட் சென்ஸ்னா அல்லாருக்கும் தெரியும். அதுக்கு முயற்சி பண்ணாதவுகளை விரல் விடு எண்ணிரலாம். ஆரம்பத்துல ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி கச்சா முச்சான்னு கொடுத்த சமயம் நாம ஊர்ல இல்லை . இப்பம் ஆயிரத்தெட்டு கண்டிஷனு.

ஆனால் ஆட் சென்ஸ் மூலமா சில்லறை தேத்த ஒரு குறுக்கு வழி இருக்குதுங்ணா அதை சொல்லத்தேன் இந்த பதிவு.

.என்னடா இது ஆத்தாளை விட்ட மாதிரி பாலபாடத்தையும் திராட்டுல விட்டுட்டானான்னு பேஜார் படாதிங்கண்ணே. இன்னைக்கும் பால பாடம் தொடருது. நாளைக்கு ஆத்தாவும் வந்துருவா. மொதல்ல ஆட் சென்ஸ் கதைய பார்ப்போம்.

ஓசில எஸ்.எம்.எஸ் அனுப்பவே மஸ்தா சைட்டுங்க கீது. அதுல் இண்ட்யா ராக்ஸும் ஒன்னு. நாம டைரக்டா போயி ஆட்சென்ஸ் கேட்டாத்தானே கூகுல் காரன் டகுலு காட்டறான்.இண்ட்யா ராக்ஸ் காரவுக சூப்பர் ஆஃபர் வச்சிருக்காய்ங்கண்ணா.

ஒன்னுமில்லை இதே சைட்ல வலப்பக்கம் இருக்கிற இண்ட்யா ராக்ஸ் விளம்பரத்தை க்ளிக் பண்ணி அங்கே போய் சைன் அப் பண்ணிக்கங்கோ.

ஒருபத்து ஃபோட்டோ அப்லோட் பண்ணனும். ( கூகுல் காரன் கண்டிஷன்ஸுக்கு ஒத்துவரலைன்னா சங்குதேன்.போர்னோ வயலன்ஸ் தவிர்க்கவும்)

உங்க ப்ரொஃபைலை 50% ஃபில் அப் பண்ணிருங்கோ .கூகுல் ஆட்சென்ஸுக்கு நீங்க குவாலிஃபை ஆயிருவிங்கோ. (ப்ரிலிமினரியா) . கங்க்ராஜுலேஷன்ஸ் யுவார் குவாலிஃபைட் ஃபார் ஆட்சென்ஸுன்னு இன்ட்யா ராக்ஸ் சொல்லும்.அப்படியே நம்பிராதிங்க.

அதுக்கப்பாறம் இங்கே போயி கூகுல் ஆட்சென்ஸுங்கற ஐட்டத்தை க்ளிக் பண்னுங்கோ . உங்க மெயில் ஐடியை கேட்கும். ஏற்கெனவே ஆட்சென்ஸுக்கு அப்ளை பண்ணி ஊத்திக்கிட்ட ஐடிய தராதிங்க.

உங்க மெயில் ஐடி ஓகே ஆனதும் கூகுல் ஆட்சென்ஸ்லருந்து உங்களுக்கு மெயில் வரும் ( நீங்க கொடுத்த ஐடிக்கு) அதுல உள்ள லிங்கை க்ளிக் பண்ணி ஆட்சென்ஸ் அப்ளிக்கேஷனை ஃபில் அப் பண்ணனும்.

அதுல கடைசியில கிரான்ட் ஆக்சஸ் டு இண்ட்யா ராக்ஸுன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதுக்கு சம்மதிச்சு சப்மிட் பண்ணிருங்கோ.

உங்க ப்ரொஃபைல் ,உங்க ஃபோட்டோஸ்ல வில்லங்கம் எதுவும் இல்லின்னா ஆட்சென்ஸ் வந்தே உடும்.

துள் பண்ணுங்க.

இது மட்டுமில்லிங்ணா அஃபிலியேட் ப்ரோக்ராம்லாம் தர்ராங்கோ. அவிக குடுக்கற html கோடை கொண்டாந்து நம்ம சைட்ல போட்டுக்கினா போதும். நம்ம சைட்டுக்கு வர்ர சனம் அதை கிள்ளி அடச்சீ க்ளிக் பண்ணி அங்கன போயி -ஆட்சென்ஸுக்கு குவாலிஃபை ஆவனுங்கோ. அப்பத்தேன் சில்லறை . இல்லைன்னா நாயர் கடை பொறை.


இன்னாடா இது முருகேஸு அள்ளி உடறாரு போலன்னு சம்ஸயமா இருந்தா இங்கே பாருங்கோ. இப்பம் புரியுதா?

இதுல இன்னா இன்னாமோ ஆஃபர் எல்லாம் குடுத்துக்கிறாங்கோ. நம்ம மூலமா ஒரு பார்ட்டி இண்ட்யாராக்ஸ்ல சேர்ந்து அந்த பார்ட்டி கூகுல் ஆட்சென்ஸுக்கு குவாலிஃபை ஆயிட்டா தலைக்கு ரூ.15 வெட்றாய்ங்களாம்.

ச்சொம்மா ச்சொம்மா அக்கப்போருங்களை பட்ச்சிக்கினு கண்ணை டப்ஸாக்கிற நேரத்துல இதை ட்ரை பண்ணி பார்க்கலாம்ல.வெந்தா தலைக்கு பதினைஞ்சு இல்லாங்காட்டி பத்து நிமிட் வேஸ்டா போச்சுன்னு சமிச்சுருங்க நைனா..

இன்னாபா இது பாலபாடத்தை படிக்காம போய்க்கினே கீறே.. இன்னாது மொதல்ல இண்ட்யாராக்ஸா .. சரி பாஸு .. அதை முடிச்சுட்டு வந்து பால பாடம் பட்ச்சிக்கினம். கேள்வியெல்லாம் கேப்போமில்லை.

சந்திர சனி சேர்க்கை:
பொதுவாக சனி,சந்திர சேர்க்கை ஜாதகருக்கு நல்லதல்ல. இதனால் அடுத்தவரை அச்சுறுத்தி வேலை செய்யவைக்கும் தன்மை ஏற்படும் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு பிறர் மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். எதிர்காலத்தில் இவருக்கு நுரையீரல் ,சிறு நீரகம் ,மனம், கால், ஆசனம் ,நரம்பு தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

லக்னம் மிதுனமாகி 9ல் சந்திர சனி சேர்க்கை:
சந்திர சனிகள் தங்கள் லக்னத்துக்கு 10+ 4/5 க்கு அதிபதிகளானதால் இதன் இம்பேக்ட் மேற்சொன்ன விதத்தில் தொழில்,உத்யோகத்திலும் இருக்கும். வீட்டிலும் தொடரும். தாய் ,வீடு,வாகனம், புத்தி, மன அமைதி, நற்பெயர் வகைகளில் ஒரு வித அஸ்திரமான ( நிலையற்ற) தன்மை இருக்கும். மாதத்தின் ஒரு 14 நாட்களுக்கும் அடுத்த 14 நாட்களுக்கும் பெருத்த வித்யாசம் இருக்கும்.
பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும்.( அம்மன் பாவாடை சட்டை அணிந்து பெரிய மூக்குத்தியுடன் இருப்பார்) நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் அதிகமானவை என்னவோப்பா நல்லாதான் போய்கிட்டிருந்தது திடீர்னு அப்டி ஒரு முடிவை ஏன் எடுத்தேனு தெரியலை இப்படி ஆயிருச்சு என்பதாகவே இருக்கும்.

புத்ரஸ்தானாதிபதி+ரோகாதிபதி:
குழந்தை பேறு தொடர்பான வேலைகள் அனைத்தையும் கடன் வாங்கியே செய்யவும். ( உறவுக்கு முன் அருந்தும் பால், இரட்டைகட்டில்/பாய் வரை )
பாக்யாதிபதி ஐந்தில்:
இது ரொம்ப விசேஷமான அமைப்பாகும் . எனவே தங்கள் தந்தை இறந்திருந்தால் அவருடைய அல்லது அவர் வழி முன்னோரில் ஒருவரது மறுபிறவி உங்களுக்கு வந்து பிறக்கலாம்.
சூரியன் ரோகஸ்தானத்தில்/ விரயஸ்தானத்தில்/அஷ்டமஸ்தானத்தில்:
தந்தை வழி முன்னோரை நினைத்து சனிக்கிழமை தோறும் காகத்துக்கு சோறு வைத்து ப்ரீதிசெய்யவும்.

குழந்தை பிறப்புக்கு தடை :
2/8 ல் ராகு /கேது குடும்பம் பெருகுவதை தடை செய்யும் .உடல் நலத்தில் தற்போதைய வைத்தியத்தால் கண்டுபிடிக்க முடியாத/ தீர்க்க முடியாத பிரச்சினைகளை தரும்.
.செவ்வாய்+ கேது சேர்க்கை:
செவ்வாய் ரத்தத்துக்கு அதிபதி/ நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜைக்கு அதிபதி இவரே . இவர் கேதுவுடன் சேர்வது நல்லதல்ல
சனியுடன் சந்திரன்:
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர்



சூரியன் சுபனாகி பலம் பெற்றால்:
ஜாதகருக்கு தந்தை,சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
9 ஆம் பாவம் சுபபலமாகி அந்த பாவம் சரமானால்:
தூர தேச பிரயாணம், அங்கு வேலை வாய்ப்பு, ,தந்தை வழி சொத்து வகையறாவிலும் அனுகூலமே.
சுக்கிரன் சுபனாகி பலம் பெற்றால்:
தென் கிழக்கு திசையில் உள்ள நாடுகள் , ஊர்கள் ,பெண் பெயர் கொண்ட ஏரியா,ஊர்,மாவட்டம் அனுகூலம்.
4ல் சனி :
தாய் பெரிதாக கல்வியறிவில்லாதவராக, காலில்/ நடையில் பிரச்சினை உள்ளவராக, கரிய நிறம் கொண்டவராக நீண்ட ஆயுள் படைத்தவராக இருக்கலாம். என்றாலும் ஜாதகருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். ஓரிரண்டு கல்வியாண்டுகள் வீணாகலாம்.
2ல் சூரியன் /செவ்வாய்:
கண் ,( சிவத்தல், எரிச்சல்) தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம். ஜாதகர் அனாவசியமாக பேசி எதிராளிக்கு கோபம் வரவைப்பவராகவும் இருக்கலாம். வீண் செலவுகளை அஞ்சாது செய்வார்.குடும்பத்தின் அமைதியை குலைப்பவராகவும் இருக்கலாம்.
சந்திரன் பாவனாகி லக்னம் அ ஏழில் :
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம். ஜாதகர் தம் கருத்தை, நட்பு வட்டத்தை, காதலியை ,பிசினஸ் பார்ட்னரை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் இயல்புடையவராக இருப்பார். இவை கட்டுக்குள்ளிருக்கவே மேற்படி பரிகாரங்கள்.
6+8/12
ஜாதகர் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர்/இவர் வழக்கில் பிரதிவாதி ஒருவர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார் ஜாதகருக்கு எவ்வித சுகவீனம் ஏற்பட்டாலும் அது விரைவில் குணமடையும். ஜாதகர் எவ்வளவு கடன் வாங்கினாலும் அது தீர்ந்துவிடும். அதே நேரத்தில் ஜாதகருக்கு பொருளாதார நெருக்கடியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி பலம் பெற்று விரயத்தில் நின்றால்:
ஒரே நேரத்தில் பல விஷயங்களில் தலையிடும் குணமிருக்கும். அவற்றை இவர் தனக்காக செய்யாமல் ஒரு கன்சல்டன்ட் /லைசன் ஆஃபீசர்/பி.ஆர்.ஓ /அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் என்ற வகையில் தம் கட்சிக்காரர்களுக்காக செய்தால் பிரச்சினை குறையும்.
சூரியன்+புத
ஜாதகர் உடலில் எங்கேனும் வெள்ளை தேமல் போன்று இருக்கலாம். இது வியாதியல்ல யோகத்தின் அறிகுறி. கவலை வேண்டாம்.
5ல் சனி:
புத்திக்குறை,மானபங்கம், தோல்விகள் ஏற்பட்டிருக்கலாம். பித்தர் போல் பேசுதல், வாதம் செய்தலும் நடந்திருக்கலாம்.
6ஆமிடம் சுபபலமானால்: ( ஐ மீன் கெட்டு நாசமா போகனும்)
நினைத்ததை சாதிக்கும் வல்லமை ஏற்படும் கடன் தீரும். நோய் குணமாகும். எதிரிகள்,போட்டியாளர்கள் ஓடி ஒளிவர். வரவேண்டிய கடன் வசூலாகும். (ஜாதகருக்கு / குடும்பத்துக்கு வரவேண்டியவை வந்து சேரும்)
கோசாரத்தில் 6 ல் சனி வந்தால்:
சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.






Wednesday, August 24, 2011

ஜோதிட பாலபாடம்: 6


ஜோதிட பாடம் - ஆன் லைன் ஜோதிட ஆலோசனைன்னு பிசியா இருந்தாலும் - இடையில கொஞ்சம் போல காற்று திசை மாறி அடிச்சா கவிதைல்லாம் எழுதுவோம்ணே.

நம்ம எழுத்துக்களை வலையேற்றம் செய்ய நம்ம ஊரு பார்ட்டி ஒருத்தரு முன் வந்ததா முன்னொரு பதிவுல சொன்னது ஞா இருக்கலாம்.
அவருது கடகலக்னம் இல்லேங்கறதால இன்னைக்கும் மழைங்கற தலைப்புல நாம எழுதின கவிதைய தன்னோட கன்னிமரா லைப்ரரி வலைதளத்துல வலையேற்றியிருக்காரு. இங்கே அழுத்தி அதையும் படிச்சு பாருங்க.
இன்னைக்கும் ஜோதிட பால பாடம் இந்த பதிவிலயே தொடருது.

இடையில விட்டுப்போன அவன் அவள் அது தொடரும் தொடருது. ஆத்தாளை கண்டுக்க விரும்பறவுக இங்கே அழுத்துங்க.

அடுத்து என்ன ஜோதிட பால பாடம் தேன். ஜூட்..

செவ் கேது சேர்க்கை: ( 1-4-7-10-12 பாவங்களில்)
செவ்வாயுடன் கேது சேருவது பரிகாரம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் பார்க்கும்போது நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம். தீரலாம். மேலுக்கு சமாதானமாய் போனாலும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருக்கும். எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள். இவையாவும் தங்கள் உடல் நலனையும், மனைவியார் உடல் நலனையும்( 1-7 ல் என்றால்) பாதிக்க கூடியனவாகும்.

செவ் கெட்டால் பரிகாரம்:
போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் ,முருகனை வழிபடவும்.
வைத்தியத்திற்கு அடங்காத வலி, பலகீனம் இருப்பின் :
காலை வெறும் வயிற்றில் வேப்பந்துளிர் சாப்பிடவும். அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
மேற்படி பரிகாரங்களை கட்டாயம் செய்து வந்தால் தோஷங்கள் கட்டுப்பட்டு முருகப்பெருமான் அருளால்
சனி பிடித்த காலத்தில்:
சம்பளத்துக்கு வேலை செய்வதே நல்லது. க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயிஸிடம் பி கேர்ஃபுல். எஸ்.சி வகுப்பினராலும், உடல் ஊனமுற்றோராலும் (முக்கியமா கால் தொடர்பான ஊனம்) பிரச்சினை வரலாம்.
யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் நஷ்டம் தரலாம். மேற்கு திசை பயணம், முயற்சி தவிர்க்கவும்.

லக்னாதிபதி 4 ல் அமைந்த பலன்:
லக்னாதிபதி என்பவர் ஜாதகரின் உடல்,உள்ள நலனை காட்டுபவர். அந்த லக்னாதிபதி சுகஸ்தானமாகி தாய்,தாய்வழி உறவு ,வீடு,வாகனம்,கல்வி இத்யாதியை காட்டும் 4 ஆம் இடத்தில் அமைவது மேற்படி விசயங்களுக்கு நல்லதே. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுல்லயா. அதனால ஜாதகர் சோம்பேறியாக ,வீட்டோட மாப்பிள்ளையா மாறவும் வாய்ப்பிருக்கு.
லக்னம் துலா/ரிஷபமாகி அங்கன ஆட்சி பெற்றால்:
ஜாதகரை காட்டற கிரகம் சுக போகங்களை காட்டற சுக்கிரனாகி ,சுகஸ்தானமாகிய 4ல் அமைவது சுக போகங்கள், ஓய்வு, செக்ஸ், பண்டிகைகள்,விருந்து, பார்ட்டிகள் மீது ஆர்வத்தை அதிகரிக்கலாம் .இதனால் முன்னேற்றம் பாதிக்கப்படலாம். கலை,இலக்கியம்,சங்கீதம் இத்யாதியிலும் ஆர்வத்தை ஊட்டலாம். இது அளவுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் பிரச்சினை இல்லை.
ராகு கேது கெட்டால்:
உடல் நலம் பாதித்தால் முடிந்தவரை இங்கிலீஷ் வைத்தியம் வேண்டாம். தங்களுக்கு மெடிக்கல் ரியாக்ஷன் நடக்க வாய்ப்புள்ளது. முடியாத பட்சம் ஸ்பெஷலிஸ்டையே அணுகவும். ஜெனரல் ப்ராக்டிஷ்னர் வேண்டவே வேண்டாம். சொந்தமாய் மருந்து மாத்திரை வாங்கி விழுங்க வேண்டாம். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
எட்டு ,பனிரண்டில் செவ்வாய்:
சம்பந்தமே இல்லாது ஒரு முறை காவல் நிலையத்துக்கு செல்லவேண்டி வரலாம். விபத்து , எலக் ட்ரிக் ஷாக் கூட நடக்கலாம்.கொதி நீர்/கொதி எண்ணெய் கால் கையில் தவறி ஊற்றிக்கொள்ளுதல் கூட நடக்கலாம்.

சுக்கிர செவ் சேர்க்கை:
மனைவியாரின் உடல் நலனில் பாதிப்பு சிறிதளவேனும் தொடர்ந்து கொண்டே இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். இது போன்ற அமைப்பு திருமண தடை, பெரியோர் விருப்பத்துக்கு மாறான திருமணங்கள், தம்பதிகளிடையில் பிரச்சினைகளையும் தரலாம்.
7ல் செவ் அ 7 க்கு அதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது:
மனைவி விசயத்தில் அதீத ரத்தப்போக்கு /கணவர் விஷயத்தில் ரத்தசோகை போன்ற பிரச்சினைகளை தரலாம். தம்பதியிடையில் முணுக் கென்றால் சண்டை கிளம்பும் நிலமையையும் தரலாம்.

குரு + புத சேர்க்கை:
சாதாரணமாக எந்த லக்னத்தை எடுத்தாலும் இந்த இருவரில் யாரோ ஒருவர் பாவியாக இருப்பார். ஒரு சிம்ம லக்னத்துக்கு மட்டுமே இந்த இருவரும் நன்மை செய்பவர்களாக இருக்கின்றனர். எனவே சிம்ம லக்னகாரர்கள் தவிர மற்றவர்களுக்கு இந்த சேர்க்கை நல்லதல்ல.
இது ஐந்தில் ஏற்பட்டிருந்தால்:
ஐந்து என்பது நினைவுகள், ஞாபக சக்தி, புத்தி கூர்மை,தியானம், வாரிசுகள் . அதிர்ஷ்டம் இத்யாதியை குறிப்பதால் ஆண் வாரிசின்றி போகலாம். எல்லாத்துக்கும் கணக்கு பார்க்கிற குணம் கொலிக்சுக்கு எரிச்சலை தரலாம்
6+12 சேர்க்கை:
கடன் தீருதல், வரவேண்டிய கடன் வசூல், விவகார ஜெயம், கோர்ட்டு வழக்கில் வெற்றி, நோய்கள் குணமாதல், விவாதத்தில் வெற்றி, சத்ரு நாசம் ஆகிய பலனை தரும்.
3+12 அல்லது 3+6 சேர்க்கை:
சகோதர நாசம் அவர்கள் நஷ்டப்படுதல் , அவர்களால் ஜாதகர் நஷ்டப்படுதல் ,சகோதர வர்கம் நோய்வாய்படுதல், கோர்ட்டு வழக்கில் சிக்குதல் ஆகியவை நடக்கலாம்.
9+12 சேர்க்கை:
இதன் காரணத்தால் தந்தை வழி சொத்தில், நீண்ட கால சேமிப்பில் ஒரு பகுதி வீண் விரயமாகும். தூர பிரயணங்களால் நஷ்டமேற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காரணமாக சுப செலவுகளும் ஏற்படும்.
9+3 சேர்க்கை:
சொத்து வாங்குவதில் அ விற்பதில் அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். வெளி நாடு செல்வதாலும் ,வெளி நாட்டு காரர்களுடன் வியாபாரம் செய்வதாலும் நஷ்டமேற்படும். ஒரு கட்டத்தில் உடன் பிறப்புகளுடன் சொத்து விவாதமேற்பட்டு ஜாதகருக்கு லாபகரமாகவே விவகாரம் முடியலாம்.
9+6 சேர்க்கை:
தந்தை நோய்வாய்படலாம். தந்தை வழி சொத்து காரணமாய் கடன் வழக்கு ஏற்படலாம்.
9+6 சேர்க்கைக்கு பரிகாரம்:
சொத்து வாங்குகையில் கையில் பணமிருந்தாலும் சிறு தொகையாவது கடன் வாங்கி வாங்கவும்.
6ல் சூரியன்:
பொதுவாக இது பாவகிரகம் என்பதால் 6ல் நின்றது நலமே. சத்ருஜயம்,ரோக நிவர்த்தி ,ருண விமுக்தி ஏற்படும்.ஆனால் தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகளும் வரலாமுங்கோ.

எச்சரிக்கை:
பாடத்துக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டுறாதிங்க. கேட்கிறவுகளுக்கு ஒரு கேள்வி படத்துல உள்ள பெண் தன் பேனாவால் சுட்டிக்காட்டும் இடம் ஜாதகத்துல எத்தனையாவது பாவம்?

குறிப்பு:
படத்தை மட்டும் பார்க்கிறவுகனால இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாதுங்கோ?

பாடத்தை பார்க்கிறாய்ங்களா? படத்தை பார்க்கிறாய்ங்களா? தெரிஞ்சுக்க இதெல்லாம் ஒரு டெக்னிக் (உஸ் ..அப்பாடா படத்தை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு)

அவன் அவள் அது :20


கடந்த பதிவுல ஜகஜ்ஜால புரட்டனான ஒரு ரிப்போர்ட்டரோட மோத வேண்டி வந்தப்போ ஆத்தா எப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணினாங்கறதை சொல்றதா சொல்லியிருந்தேன். அப்பம் ஸ்டேட்ல சந்திரபாபுவோட உச்சா பெட்ரோலை விட வேகமா எரிஞ்சுக்கிட்டிருந்தது. அடுத்தும் சந்திரபாபு தான் சி.எம்னுட்டு 3 புதுப்பணக்காரவுக காசை தண்ணியா இறைச்சுக்கிட்டிருந்தாய்ங்க. அவிக கிட்ட அதிகமா குளிர்காய்ஞ்சது நிருபருங்கதேன். அவிகளுக்கு (பு.ப) ஸ்டேஷன்லயும் நல்ல வாய்ஸு.

அந்த நேரம் நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆளுங்கட்சியோட பழிவாங்கலுக்கு டார்கெட் ஆகி இருந்தாரு. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தானே. இந்த தெலுங்கு தேசம் ஸ்கூலை பத்தி நமக்கு நல்லாவே அனுபவம். தாளி என்.டி.ஆர் ஃபேன் என்ற முறையில என்.டி.ஆர் காலத்துலருந்து உழைச்சிருக்கம்ல. கடேசியா 1999 தேர்தல் வரை ( சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிற்காடும் கூட) தேர்தல் வேலையில எல்லாம் பார்ட்டிசிப்பேட் செய்திருக்கம். அவனுக (ஐ மீன் லோக்கல்) பவிசு நமக்கு நல்லா தெரியும்.

நம்ம எக்ஸ்பார்ட்டி போய் ஒரு ஆளை பிடிக்க நாமளும் அதே கட்சியில இன்னொரு ஆளை பிடிக்க குடுமிப்பிடியாயிரும்னு ஆந்திரபிரபா மேனேஜருக்கு நாம எம்.எல்.ஏ வை பார்க்கலாம்னு சஜஸ்ட் பண்ணேன். அவரு நீயே எதுனா சானலை பிடின்னாரு. ( நாம அவரு 3 தாட்டி ஜெயிச்சு ஹேட்ரிக் அடிச்சப்பல்லாம் அவருக்கு விரோதமாதான் வேலை செய்திருக்கம்)

எந்த சானலை பிடிக்கிற்துன்னு தலையை பிடிச்சுக்கிட்டம். முன்னாள் தி.தி.தே சேர்மன் பூமண கருணாகர் ரெட்டி (இப்பம் ஜகனோட முக்கிய தளபதிகள்ள ஒருத்தரு) ஞா வந்தாரு.

அவருக்கும் நமக்கும் என்ன லின்குன்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா ஒவ்வொரு வேலையா செய்தா. வஷக் வஷக்னு ஜெபிச்சதுல ஆராரையோ வசியமாக்கி வச்சுட்டா. நம்மை பத்தி வார்த்தால செய்தி வந்ததை படிச்சுட்டு தன்னோட சர்க்கிள்ள நம்மை ரெம்ப ஸ்லாகிச்சு பேசினதா தகவல்.

அப்பம் நமக்கு ஆ.இ.2000 தவிர வேற வேலையே கிடையாது. உடனே டைரக்டரில அவரோட நெம்பரை பிடிச்சு பேசினம். அவரும் ரெம்பவே ஆர்வம் காட்டினாரா ஃபோன் தொடர்பு அப்படியே கன்டின்யூ ஆயிருச்சு.

நீங்க எங்க எம்.எல்.ஏவுக்கு சொல்லுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்.அதனால பொதுவா மேட்டரை சொன்னம். அவரு " அவ்ளதானே நான் பாபுவுக்கு (எங்க தொகுதி எம்.எல்.ஏ) ஃபோன் போட்டு சொல்றேன்
நீங்க போயி அவரை பாருங்கன்னுட்டு ஃபோனை வச்சுட்டாரு.

எம்.எல்.ஏவை பொருத்தவரை அவரோட கட்சி பவர்ல இல்லைதான். ஆனால் ஆளுங்கட்சி டுபுக்குங்களை நம்பறதை விட இவரை நம்பினா நம்பினோர் கைவிடப்படார். அவரோட கேரக்டர் இது.

ஒடனே திருப்பதிக்கு ஃபோன் போட்டு மேனேஜர் அண்ட் கோவை வரச்சொன்னேன். ச்சொம்மா பார்த்தோம். அவரு " சி.ஐ கிட்டே போங்க என்னை பார்த்ததா சொல்லுங்க. தேவைப்பட்டா ஃபோன் போடுங்க நானே வர்ரேன்" னாரு அவ்ளதேன். அதுக்குள்ள தகவல் தீயா பரவ.. மறுபடி ஸ்டேஷன்ல இருந்து ஆளு. சுதி இறங்கிப்போயி " ஃப்ரீயா இருக்கிறப்ப ஒரு அஞ்சு நிமிஷம் சி.ஐ சாரை பார்த்துட்டு வந்துருங்க சார்"

நம்மை பேசவிட்டா போறாதோ வாத்தியார் படம் மாதிரி " எங் வகக்கை நானே வாகாடுகிறேன்"னுட்டு கிழிச்சு ஆறப்போட்டுர மாட்டோமா? போட்டுட்டம். சி.ஐ சுஸ்தாயிட்டாரு. நம்ம மேனேஜர் " எக்ஸ் பார்ட்டிய திருப்பதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு ஜாயின் பண்றதா இருந்தா பண்ணட்டும் சித்தூர்ல டிஸ்டர்ப் பண்ணா சிவியர் ஆக்சன் எடுப்பம்"னு சி.ஐக்கு சொல்ட்டாரு.

யுத்தம் தானே க்ஷத்திரிய தர்மம். அது முடிஞ்சதுமே நம்ம வேலை ஓவர். வெற்றியை அனுபவிக்க எங்கருந்தோ ஒரு பார்ப்பான் வந்துருவான் தானே. அப்படி திருப்பதி ஏடிவிடி பார்ப்பான் புத்தூர் பார்ப்பான் ஒருத்தனை ஸ்டாஃபரா ரெக்கமண்ட் பண்ண நாம வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதாயிருச்சு. அது வேற கதை.

நாம மட்டும் தெலுங்கு தேச க்ரூப்ல போய் வாய வச்சிருந்தம் தாளி ஊறப்போட்டே நாறடிச்சிருப்பானுவ.இது நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட்.

எம்.எல்.ஏவோட இன்டர் ஆக்ட் ஆக தடையா இருந்தா 15 வருச கம்யூனிகேஷன் கேப் /அல்லது ஒரு தயக்கம் தூளாகிருச்சு. இன்னைக்கு ஜஸ்ட் எம்.எல்.ஏவோட அடிப்பொடிகளுக்காகவே லோக்கல்ல பத்திரிக்கை அதுவும் மல்ட்டிகலர் ந்டத்திக்கிட்டிருக்கம். அதுவும் வெற்றிகரமா.

அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி கம் ரம்ஜான் ஸ்பெஷலும் ரிலீஸ் ஆகப்போகுது. மல்ட்டி கலராக்கி ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆயிருச்சு. பத்திரிக்கை நடத்தி போன்டியானவுக எத்தீனி பேரு கீறாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.

ஆத்தா மனசு வச்சா பத்திரிக்கை நடத்தி கூட காசு பார்க்கலாமுங்கோ.


Tuesday, August 23, 2011

ஜோதிட பால பாடம்: 5


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் "போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். சமீப காலமா (இடையில கொஞ்ச நாளு கேப்) மறுபடி பேண்டு வைக்க ஆரம்பிச்சுட்டாரு.
நம்ம அய்யரு வேற (கோபி கிருஷ்ணன்) "அண்ணா.. அந்த அடாசை இப்படியே விட்டுட்டா எப்படி ? அவன் ஆசனத்துக்கு ஒரு கார்க் அடிங்கோ - நீங்க ஊம்னா நான் அடிக்கறேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரு. நாமளும் ஊம் கொட்டிட்டம். இதை கூட ஜா.ராவுக்கு எச்சரிக்கையா சொல்லியாச்சு. ஊ ஹூம்..

நம்ம கோ.கி ஜா.ராவோட கண்ணீர் கடிதங்களை பதிவா போட்டு தூள் பண்ணிட்டாரு. அதை படிக்க இங்கே அழுத்துங்க .ஜா.ராவோட பிற்கால செயல்பாடுகளுக்கெல்லாம் தேவையான இருமனப்போக்கு - மன அழுத்தம் -இயலாமை - பொறாமை எல்லாத்துக்கும் அவரோட கண்ணீர் கடிதங்களே சாட்சி.
இப்பவும் மிஞ்சிப்போகலை. திருவாளர் ஜா.ரா அல்ப சங்கியைக்கு மட்டும் நவத்வாரங்களை திறந்து மத்த நேரம் பொத்திக்கிட்டு தன் வேலைய தான் பார்த்துக்கிட்டா சரி . உடனே இதை ட்ராஃப்டா மாத்திர சொல்லியிருக்கேன்
சொந்த பஞ்சாயத்து ஓகே. பால பாடம் தொடருது..
9ஆமிடம் கெட்டால்:
தந்தை, தந்தை வழி சொத்து, தூர பிரயாணங்கள், சேமிப்பு,முதலீடு,தூர தேச தொடர்பு வகையிலும் பாதிப்பு ஏற்படும் .
3ல் பாவ கிரகம்:
தங்கள் ஜாதகம் தங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கும், செவிக்கும் நல்லதல்ல. மித மிஞ்சிய தைரியத்தாலும், சாகசம் செய்யும் இச்சையாலும் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
சந்திரன் கெட்டால்:
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.

9ல் கேது/ராகு:
தந்தைக்கும், தந்தை வழி சொத்துக்கும் செதில்,பாம்பு தேள் இத்யாதி விஷ ஜந்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
விரய பாவம் கெட்டால்:
இதனால் தூக்கமின்மை, அகால போஜனம்,அகால நித்திரை ,துரித ஸ்கலிதம் - காதல் அ திருமணத்தில் தடைகள் , மனைவியுடன் தகராறுகள் ஏற்படலாம்.
சுக்கிர சூரிய சேர்க்கை:
சுக்கிர சூரிய சேர்க்கையால் விந்து வறளும். எனவே உடலுறவுகளுக்கிடையே யான இடைவெளியை அதிகரிக்கவும். அல்லது தம்பதியிடையே ஈகோ பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்
சுக்கிரன் கெட்டால்:
வெள்ளி அதிகம் உபயோகிக்கவும். லக்சரி,ஆடம்பரம், ஃபர்னிச்சர், டபுள் காட் பெட், ஹோம் நீட்ஸ்,வாகனம் ,பார்ட்டி, சுப காரியங்களில் நீண்ட நேரம் இருந்து எஞ்ஜாய் பண்ணுவது இத்யாதி தவிர்க்கவும். இதுவும்
3.சுக்கிர செவ்வாய் சேர்க்கை
இன உறுப்பில் காயம் ஏற்படலாம். முடிந்தால் அப்டமன் கார்ட் அணியவும். (ஸ்போர்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்) பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை
1+12
4.தாங்கள் உற்பத்தி துறையில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.

லக்னம் துலாம் அ ரிஷபமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர் துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்யவும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.

குரு+சனி /ராகு/கேது (ரிப்பீட்டு தான் இன்னம் ஸ்ட் ராங்கா சொல்லியிருக்கம்ல)
ஜோதிடனும் ஒரு குருதான். குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் .
உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
முதல் சாய்ஸ்:
தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், மனைவி ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது .
இரண்டாவது சாய்ஸ்:
நாத்திக வாதியாக மேற்கண்ட தொல்லைகள் பெரிதாக பாதிக்காது ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.

சனி கெட்டால் பரிகாரம்:
பித்ருக்களுக்கு பிண்டம் வைத்தல் , காகத்துக்கு சோறு வைத்தல், நொண்டிக்கு உதவுதல்.
செவ்வாய் தொடர்பான மனிதர்கள்:
வயதில் சிறியவர்கள், இளையவயது போல் தோற்றம் தரும் மூத்தவர்கள், சகோதரர்கள், வன்னியர், ராஜுக்கள் (ஒரு சாதி பெயருங்க),
ராகு தொடர்பான மனிதர்கள்:
அட்டை கரி நிறத்தவர் ,ஓரப்பார்வை பார்ப்பவர், காகம் போல் தலை சாய்த்து பார்ப்பவர் இதர மதத்தவர், இதர மொழியினர் ஆகியோருடன் கூட்டு வியாபாரம் , நட்பு , வேண்ட
ஜன்ம செவ்வாய்:
பரிகாரம்: போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் ,
.
சனி தரும் யோகம்:
தாங்கள் அதிர்ஷ்ட சாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிர்ஷ்டம் சற்று தாமதமாய் (முதுகு வளைந்த பின், தலைமுடியெல்லாம் வெளுத்த பின் வரிக்கும். பொறுமை தேவை. யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் தாமதமாக அதிர்ஷ்டம் தரும். மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினரும் 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமையும் கூட அப்படித்தான். பலன் தரும்.
சனி சுபனாகி ஐந்தில் நின்றால்:
முடிவுகள் எடுப்பதில், செயல்பாட்டில் மந்தம் இருப்பின் அதை அப்படியே தொடரவும். அதுவே அதிர்ஷ்டம் தரும். பிள்ளைகள் மட்டும் ரொம்பவே மந்த புத்தி அ கால்,ஆசனம் தொடர்பான தொல்லைகளை சந்திக்கவேண்டி இருக்கும்.
சனிக்கு பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாது,எதற்கும் முன்னே நிற்காது கும்பலில் கோவிந்தா போடவும்.
புதன் கெட்டால்:
புதன் கிழமை கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.
10ல் சந்திரன் அ 10 ஆமிடத்ததிபதி +சந்திரன்:
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
11ல் சந்திரன் நின்றால்:
லாப நஷ்டம் சமமாக இருக்கும். இதுல பயங்கர நஷ்டம் வரும் என்று முடிவு செய்துவிட்ட விஷயத்தில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. லாப விஷயத்திலும் இப்படியே குண்டக்க மண்டக்க நடக்கலாம்
4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.
6+8/12
நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார்,
7ல் சந்திரன் அ லக்ன சந்திரன்:
தங்கள் மனைவியார் உடல் திடீர் என்று புசுபுசுவென்று வந்து , திடீன் என்று ஒல்லியாகிவருவார். பரிகாரம் முத்துமாலை அணிதல். தங்கள் வேலை/தொழில் விசயமாக அவர் கூறும் யோசனைகள் பவுர்ணமிக்கு பின் வரும் காலங்களில் ஒர்க் அவுட் ஆக
சனி கெட்டால்:
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.


Monday, August 22, 2011

ஜோதிட பாலபாடம்: 4


அண்ணே வணக்கம்ணே !
பால பாடம் புரியலைன்னு நிறைய புகார் வருது. சனங்களுக்கு அதிகாரம் மட்டும் இருந்திருந்தா நம்மை திகாருக்கே அனுப்பியிருப்பாய்ங்க.அவிக புகார்ல முக்கிய அம்சம் என்னன்னா வரிசைப்படி இல்லை. ஜோதிடம் என்ன முருகன். நாம என்ன ஔவையாரா ஒன்று ரெண்டுன்னு வரிசைப்படுத்திப்பாட. (ச்சொம்மா நக்கல் தேன்)
ஜோதிஷத்துல உள்ளதெல்லாம் 9 கிரகம் , 12 பாவம் தேன். சொந்த சிஸ்டத்துல ப்ரவுஸ் பண்றவுக 9+12 =21 ஃபைல் ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டு இந்த தொடர்ல வர்ர மேட்டரை எல்லாம் அந்தந்த கிரகம் அந்தந்த பாவம் தொடர்பான ஃபைல்ல போட்டுக்கிட்டே வந்தா ஒழுங்கான தொகுப்பு தயாராயிரும்.
பாவ வரிசை:
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

கிரக வரிசை;
சூ ,சந், செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்
சமைத்துப்பார் புஸ்தவத்துல தாளி ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தேவை ,செய்முறைன்னு ஒரே முறை ரிப்பீட் ஆயிட்டே இருக்கும். ஆனால் நான் அய்யா சமையலுக்கு தேவை உப்பு,புளி,காரம். சிலதுக்கு கல்லுப்பு,சிலதுக்கு சால்ட் போடுவம் - சிலதுக்கு புளியை அப்படியே போடுவம்,சிலதுக்கு கரைச்சு விடுவம், சிலதுக்கு லெமன் ,காரம்னா சிலதுக்கு காஞ்ச மொளகா,சிலதுக்கு பச்சை மொளகா,சிலதுக்கு மிளகாய் பொடி இதான் சமையலுன்னு சொல்றேன்
வரிசையா எழுதித்தொலைச்சா நீங்க எனக்கு அடிமையாயிருவிங்க. அதே சமயம் நான் கச்சா முச்சான்னு எழுதி நீங்க உங்க சொந்த ஆர்வத்துல தொகுத்து மைண்ட்ல ஏத்திக்கிட்டா நீங்க சுதந்திரர்களா இருக்கலாம். இப்பம் புரியுதா..ஏன் வரிசைப்படி எழுதலைன்னு. (ஸ்..அப்பாடா கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா)

சரி இன்னைக்கும் பால பாடம் தொடருது
கேது கெட்டால்:
தினசரி ஒரு மணி நேரம் - வாரம் ஒரு தினம் (திங்கள்) காவி உடை உடுத்தி வினாயகரை தியானம் செய்யவும். இதர மத நூல்களையும் படிக்கலாம். ( தியானம்னா மனசுக்குள்ள எழும் சிந்தனைகளை கவனிக்கிறது - அந்த கூட்டத்துல வினாயகர் எங்கனா கிராஸ் ஆறாரா பாருங்க போதும்)
சனி காரகம் கொண்ட மனிதர்கள்;
கீழ் சாதியினர் கருப்பாக இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்
இவர்களால் தொல்லை ஏற்பட்டால் பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்யவும். (பன்றி முகத்துடன் விஷ்ணு) அல்லது வாராஹியையும் வணங்கலாம். ( பன்றி முகத்துடன் கூடிய அம்மன்)
செவ்வாய் கெட்டால்:
முருகனை வழிபடச்செய்யவும். செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு குடிக்க சொல்லவும். ரத்த விருத்திக்கு தேவையான ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்ற சொல்லவும். செம்பு காப்பு/வளையல் அணியவும் ஈயப்பூச்சு கொண்ட செம்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நல்லது. குறைஞ்ச பட்சம் இப்படியா கொத்த பாத்திரத்துல வச்சு சாப்பிடுங்க.குடிங்க
சந்திர மனிதன்:
சஞ்சல சுபாவம் கொண்டவராக கற்பனை, பரபரப்பு மிக்கவராக இருந்தாலும் ஆழமான யோசனை உள்ளவராக இருப்பார். தன் கருத்துக்களை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பார். சுற்றுபயணங்கள், பயணங்கள் என்றால் விருப்பம் உள்ளவராக இருக்கலாம்/சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மீது கவர்ச்சி இருக்கும்.
ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதை முழுமூச்சாக முடிக்கும் உறுதி இல்லாவிட்டாலும் பல்வேறு வேலைகளுக்கிடையே அனைத்து வேலைகளையும் தவணையில் சிறிது சிறிதாக முடிக்கும் தனமை இருக்கலாம்.
பரிகாரம்:
வண்ண மீன் வளர்ப்பு, கன்னியா குமாரி வழிபாடு, ஊஞ்சலாடுதல், நிலாச்சோறு, ஸ்படிக மாலை, முத்து மாலை , முத்து மோதிரம்.

4ல் ராகு:
ஜாதகருக்கு படிப்பில் தடை ஏற்படலாம். அன்னிய மொழியில்/ நடைமுறை வாழ்வில் வித்தகராவார்.இதய பகுதியில் மச்சம் இருக்கலாம்.
சூரியன் சுப பலமானால்:(பகல்ல பிறந்திருந்தா)
இவருக்கு சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
சனி தொடர்பான கணவர், மனைவி:
இவர் தகுதிக்கு சமமானவராக இல்லாது போகலாம். தம்பதியிடையில் சச்சரவுகளும் ஏற்படலாம். . சிறு வாகன விபத்தில் கால் தொடர்பான பிரச்சினை. பொருந்தா காதல் போன்ற விவகாரமும் தலை காட்டலாம்.
\பெண் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால்:
பிறப்புறுப்பு கருப்பை தொடர்பான மருத்துவ பிரச்சினைகளும் வரலாம்
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
லட்சுமிக்கு சுமங்கலி பூஜை, எளிய வாழ்வு. ஃபர்னிச்சர்ஸ், ஸ்னேக்ஸ், சுவீட்ஸ், சாட்டிங், டி.வி, ஏ.சி, வாசனா திரவியங்கள்,பார்ட்டி,கெட் டு கெதர் ,சுப காரியங்களில் பங்கேற்பது லக்சரி தவிர்க்கவும்.
11 கெட்டால்:
இவருக்கு முன் பிறந்த மூத்த உடன் பிறப்புக்கு இந்த ஜாதகம் அனுகூலமல்ல.
சனி செவ்வாய் சேர்க்கை:
தனது தாயின் கருவில் இருந்த போதே தூரத்து/ நெருங்கிய உறவில் துர்மரணம் அ அகால மரணம் சம்பவித்திருக்கலாம். மேலும் ரத்தம் கெடுவதால் வரும் நோய்களும் வாட்டலாம் . உ.ம் கட்டிகள், ப்ளட் ஷுகர் ஒரு உயில் மூலமாகவோ நஷ்ட ஈடு வகையிலேயோ தனவரவு ஏற்படலாம்.
பரிகாரம் : குல தெய்வத்துக்கு பலி பூஜை. நட்பு /உறவுக்கு நான் வெஜ் டின்னர் ஜாதகரும் சாப்பிடலாம்.
இரண்டில் ராகு/கேது:
இவருக்கு பேச்சு, கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல், ஈ என் டி பிரச்சினைகள் ( காது, மூக்கு, தொண்டை) தொல்லை தரலாம். குடும்பத்திற்கு கடன் ஏற்படலாம்.
ஜாதகர் அடிக்கடி பேச்சு மாறுதல், திடீர் என்று கிசு கிசுப்பாய் பேசுதல், திடீர் என்று கத்தி பேசுதல் , மிமிக்ரி செய்தல் நடக்கலாம்.
குரு கெட்டால்:
தனக்கு மீறிய தான தருமம் அ கோர்ட்டு நடவடிக்கை அ அரசியல் நடவடிக்கை காரணமாக பொருளாதார நெருக்கடி ,கேஸ்ட்ரிக், பிரச்சினைகள் வரலாம்.
லக்ன சனி:
மேலுக்கு மந்த புத்தி உடையவராக, சோம்பல் கொண்டவராக இருப்பார். சனி லக்னத்துக்கு சுபனாகில் அதிர்ஷ்ட சாலி. டெக்னிக்கலாய் முன்னேறி குறைந்தது 8 பேருக்கு வேலை வாய்ப்பு தருவார்.
சனி தொழில்:
இரும்பு,ஆயில், க்ரானைட்ஸ், செகண்ட் ஹேண்ட் பொருட்கள், விவசாயம் தொடர்பானவை , வெட்டினரி துறை, கருப்பான பொருட்கள், துர் நாற்றம் வீசும் பொருட்களில் நல்ல லாபம் முன்னேற்றம் கிட்டும் .
சனி சுபனாக இருந்து படிக்கும் வயதில் சனி தசை :
கல்வியில் சிறு தடைகள் ,ஆர்வமின்மை, பின் தங்குதல் நடக்கலாம். என்றாலும் கல்வி தொடரும். அது தொழில் நுட்ப கல்வியாக இருந்தால் பிரச்சினை இல்லை.
செவ்வாய் கெட்டால் /முக்கியமா புத செவ் சேர்க்கை::
உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், வெ ந் நீர் , சுடும் எண்ணை , மின்சாரத்தாலும் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கை தேவை.
சனி கெட்டால் ( முக்கியமாக எட்டாமிடத்துடன் தொடர்பு ஏற்பட்டால்) பலன் + பரிகாரம்:
ஜாதகருக்கு இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.
4ஆமிடம் சுபபலமானால்:
ஜாதகருக்கு சொந்த வீடு, வாகன யோகம் ஏற்படும்.
சூரியன் கெட்டால் பரிகாரம்:
பரிகாரம் : காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம்.
சூரியன் சுபபலமானால்:
ஜாதகர் வாழ்க்கை கல்வி பயின்று ஆஷாட பூதியாக இல்லாவிட்டாலும் தமக்கென்று ஒரு ஃபிலாசஃபியுடன் வாழ்வார்.
லக்னாதிபதி விரயம் :
சதா சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது போன்ற குணங்கள் ஏற்படும்.
கேந்திர சுக்கிரன்:
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால் விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
சுக்கிரன் கெட்டால் பரிகாரம்:
வெண் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வெள்ளியன்று லட்சுமி பூஜை செய்க.சுமங்கலிகளுக்கு (6 பேர்) தாம்பூலம் வழங்கவும். வெள்ளி ஆபரணங்கள் அதிகம் அணியவும். வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும்.