Tuesday, June 1, 2010

செக்ஸும் ஜோதிடமும்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட பெண் சாமியார் கொலை  பீடாதிபதி விரைவில் கைது? ங்கற பர பர சுறு சுறு பதிவும் போட்டிருக்கேன். படிச்சிப்பாருங்க. உங்க கருத்தை சொல்லுங்க‌ 

தலைப்பை பார்த்து முகத்தை சுளிக்காதிங்கண்ணா. ஜோதிடம் மனிதனி ஒட்டு மொத்த‌  வாழ்க்கைக்கானது. வாழ்க்கையில் செக்ஸும் ஒரு பாகம். ஒரு ஜாதகரின் செக்ஸ் பழக்க வழக்கங்களை அவரது 7 ஆம் பாவம், 12 ஆம் பாவம் ஆகியன பிரதானமாக காட்டுகின்றன. சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,விரயாதிபதி ஆகியோர் நிலை கொண்டு இவற்றை கணிக்கலாம். 18 டு 80 ஐ கவர் பண்றதுக்காக இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கேன். உடுங்க ஜூட்
இன உறுப்பு,  செக்ஸ் மீதான ஆர்வம், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு  இவற்றை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிர கிரகம் சில லக்னங்களுக்கு பாவியாகிறார். மேசம், கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம். அப்படியானால் இந்த லக்னக்காரர்களுக்கு செக்ஸ் கிடைக்காதா ? என்று கேட்டுவிடாதீர்கள். கண்ட நேரத்தில் கிடைக்கும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிட்டாது ,கிடைக்க வேண்டியவர்களிடம் கிட்டாது, கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை முடிவு செய்ய இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. பாவியான சுக்கிரன் இவர்கள் ஜாதகத்தில் 3,7,10 ஆகிய இடங்களில் அமைந்தாலோ 6 ஆமிடத்தில் அமைந்தாலோ இந்த நிலை மாறும். மேலும் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமித்தல் இத்யாதி நடந்தாலும் ஓகே.

இதர லக்னத்தாருக்கு இந்த சித்தாந்தத்தை அப்படியே உல்டா அடிக்க வேண்டியதுதான். அதாவது ரிஷபம்,மிதுனம், சிம்மம், கன்னி,துலா, மகரம்,கும்ப லக்ன காரவுகளுக்கு சுக்கிரன் 3,7,10ல அமைய கூடாது. 6 ல நிக்க கூடாது. சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்க கூடாது. அப்படி நடந்தா என்னாகும்னு பார்ப்போம்.

சுக்கிரன் 3:
3ங்கறது தைரிய ஸ்தானம். மொத மொத ஒரு குட்டிய கணக்கு பண்ணும்போது அட்வான்ஸ் ஆக வேண்டியது பையனோட டூட்டி. (இப்ப குட்டிங்கதான் அட்வான்ஸ் ஆகுதுனு கேள்வி).கசமுசா பண்றதுக்கும் ஒரு தில்லு வேணம். சுக்கிரன் பெண்கிரகம்ங்கறதால இந்த அமைப்பு உள்ளவங்களுக்கு தைரியமே வராது.

சுக்கிரன் 7:
7ங்கறது மனைவிய காட்டற இடம். இங்கே களத்திர (மனைவி) காரகனான சுக்கிரன் நின்னா என்ன தப்புன்னு கேப்பிக. குரு புத்திர காரகன். ஆனால் அவரு புத்திர பாவத்துல நிக்க கூடாது. நின்னா ஆண்குழந்தை கிடையாதுனு ஒரு ரூல்.7ங்கறது மனைவிய காட்டற இடம். ஸோ இங்கே களத்திர காரகனான சுக்கிரன் உட்கார கூடாதுங்கறது ரூல். இதனோட பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா..

 7ஆமிடத்துக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் சுக்கிரன். இவர்  காரகத்வம் வகிக்கிற முக்கியமான சமாசாரம் உடலுறவு. ஸோ இந்த பாட்டிங்க ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் யாரா இருந்தாலும் அவிகளை பலான கண்ணோட்டத்துலயே பார்த்து  பலான சமாசாரத்தையே மனசுல  வச்சி குமைஞ்சிக்கிட்டிருப்பாய்ங்க.

ஒரு விசயத்தை மறுபடி மறுபடி அசை போட்டுக்கிட்டிருந்தா அந்த விசயத்துல தூள் கிளப்பிரலாம்னு  நாம நினைக்கிறோம். ஆனால் செக்ஸ் விஷயத்துல எவனொருத்தன் அதை நினைச்சு உளப்பிக்கிறானோ அது அவனுக்கு பின்னடைவைத்தான் தரும்

ஏற்கெனவே பலதடவை சொல்லியிருக்கேன்..7 - 23 இந்த ரெண்டு நெம்பரை கரெக்டா ஞா வச்சுக்கிட்டா உங்க மேட்டர் சூப்பர் டூப்பர் ஹிட்டாயிரும்.ஆமாங்க உடலுறவுல ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்ளாற இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுக்கு ஆண் அவுட். பெண் உச்சம் பெற அவளுக்கு  23 அசைவுகள் தேவையாம். 7க்கும் 23க்கும் வித்யாசம் என்ன? 16 . இந்த 16 அசைவு வரை நாக் அவுட் ஆகாம (வீரியம் ஸ்கலிதமாகாம பார்த்துக்கிடனும். இதுக்கு அவன் செய்யவேண்டியது என்ன?

காரியத்துல இறங்கிற அந்த செகண்ட் வரை மேற்படி எண்ணமே இல்லாம இருந்தா தான் மேற்படி வித்யாசத்துல (16) நாலில் ஒரு பாகமாவது (4) பாலன்ஸ் பண்ண முடியும்.

இதனால சதா சர்வ காலம்  மனசளவுல அதையே போட்டு உளப்பிக்கிட்டிருக்கிறவன் பெண்ண நெருங்கற சமயத்துல  வீரியம் உறுப்பின் அடிபாகம் வரை வந்திட்டிருக்கும். இன்செர்ட் பண்ணதுமே வாந்தி தான். ஆட்டம் க்ளோஸ்.

ஒரு பெண்ணே கூட 24 மணி நேரம் தன்னை பலான கண்ணோட்டத்துலயே பார்க்கிறதுல சகிக்க மாட்டாள். ஆணோ பெண்ணோ இன உறுப்புல தான் வித்யாசம் உண்டே தவிர உணர்வுகள், வலி, ரசனை , மூட் மாற்றம், சில சமயங்களில் தனிமையை விரும்புதல், இப்படி எல்லாம் இரு பாலாருக்கும் பொதுவானது. அவள் தாய் தந்தையருக்கு மகளா, அண்ணனுக்கு தங்கையா, தம்பிக்கு அக்காவா, மாமியார் மாமனாருக்கு மருமகளா இப்படி தசாவதாரம் எடுத்து செயல்பட வேண்டியிர்க்கு. அவளுக்கு தூக்கம்,பசி எல்லாம் உண்டு.

இதனால இப்படி 24 மணி நேரமும் தன்னை  பலான கண்ணோட்டத்துல பார்க்கிற அதுவும் செயலில் வீணனான ஆணை வெறுக்க ஆரம்பிச்சுருவாள்.

10ல் சுக்கிரன்:
பத்துங்கறது ஜீவன ஸ்தானம். செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம். நாம செருப்பை சனியன்னு சொல்லலாம். செருப்புகடைக்காரருக்கு? அழுக்கு துணியை தரித்திரம்னு சொல்லலாம் லாண்டரி காரருக்கு? அது தான் லட்சுமி.சுக்கிரங்கறது காதல், காமம்,உடலுறவை காட்டற கிரகம். எப்படிப்பட்ட ஸ்த்ரீ லோலனா இருந்தாலும் குளிக்காம கடைக்கோ, தொழில் செய்ற இடத்துக்கோ போகமாட்டான். ஆனால் பத்தில் சுக்கிரன் உள்ள பார்ட்டிங்க வேலை செய்ற இடத்துலயே பலான வேலையையும் பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. இதனால என்ன ஆயிரும்னு கேட்கலாம்.

டாக்டர் நர்சை லவ் பண்ண வேண்டி வரலாம்.  எம்.டி. தன் பி.ஏவை  லவ் பண்ண வேண்டி வரலாம். மேஸ்திரி சித்தாளை  லவ் பண்ண வேண்டி வரலாம். அப்படி லவ் வரும்போது தொழில்ல கான்சன்ட் ரேசன் அடி வாங்கிரும். தொழில் நொடிச்சு போயிரும். தலைக்கு ஏறின காமம் இறங்கி வரும்போது அவளை பார்த்தா என்ன தோணும். என் அழிவுக்கு இவ தான் காரணம்னு ஒரு எண்ணம் வரும். அப்புறம் அவிக மத்தில எப்படி காதல் வரும்.

ஒர்க் வைல் ஒர்க் ப்ளே வைல் ப்ளேங்கற கட்டுப்பாடு இல்லாததால ரெண்டும் கெட்டான் பேரணாம்பட்டான் மாதிரி ஆயிரும்.

சுக்கிரன்+சூரியன்:
சுக்கிரன் சிற்றின்ப காரகன். சூரியன் ஆத்ம காரகன், சுய  மரியாதைக்கு காரகன். அகந்தைக்கு காரகன். பகுத்தறிவுக்கு காரகன். சிற்றின்பத்தில் சுயமரியாதை, அகந்தைகளுக்கு இடம் கிடையாது. திருமணத்துக்கு முன்னான உறவில் " ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே தடவை "என்பதே  காரிய ஜெயம் தரும் மந்திரவார்த்தை.

கால படுக்கையிலிருந்து எழுந்து செல்லும் போது மனைவி (அந்த காலத்துலங்கண்ணா) கணவனின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு போவாளாம். காரணம் என்னன்னா பலான மேட்டர்ல இவள் கால் அவன் தலை மேல பட்டிருக்கலாம், மார் மேல பட்டிருக்கலாம் (எப்படி பட்டிருக்கும்னு ரோசிச்சி பாருங்கண்ணா) அதுக்காக சொல்ற சாரி ட்ஹான் கால தொட்டு வணங்கறது. இதை எதுக்கு சொல்றேன்னா செக்சுல செல்ஃப் ரெஸ்பெக்டு வெங்காயத்துக்கெல்லாம் இடமே கிடையாது. தன்னை தான் தொலைக்கத்தான் செக்ஸ். ஆனால் இந்த சுக்கிர சூரிய சேர்க்கை கொண்ட பார்ட்டிகள் "அவளா கூப்பிடட்டும்னு இருக்கிறதோ,  கெஞ்ச வேண்டிய நேரத்தில போடி ங்கொய்யாலனு எந்திரிச்சு போயிர்ரதோ கூட நடக்கும். இதுக்கு காரணம் என்னன்னா (லக்னம் துலா,ரிஷபமா இருந்தா இது க்கு வாய்ப்பு அதிகம்) விந்து வறண்டிருக்கும். நீர் சத்து குறைவா இருக்கும். வறண்டு இருக்கிற விந்து பெருஸா அதை வெளி யேற்றனுங்கற உந்துதலை தராது. இதனால வந்தா வாடி வராக்காட்டி போடினு விட்டுருவாய்ங்க. இது படிப்படியா தாம்பத்ய உறவை மட்டுமில்லாம , கணவன் மனைவிங்கற ரிலேஷனுக்கும் ஆப்பு வச்சிரும். இதுக்கெல்லாம் பரிகாரம்:

நாம தொடர்ந்து எழுதற பலான பதிவுகளை படிக்கிறதுதான்.