Thursday, June 3, 2010

ஃபிகர்களை மடக்க

அண்ணே வணக்கம்ணே,
ஃபிகர்களை மடக்க என்று அனாச்சாரமான தலைப்பை கொடுத்திருந்தாலும் மனித உறவுகளை மேம்படுத்த ஜோதிஷத்தோட உதவியோட 12 ராசிக்காரர்களின் குண நலன் களை விவரிச்சிருக்கேன். பை தி பை ..........

தினகரன் க்ரூப்ல அரசு  நிதி ஆதாரத்துக்கு  டாஸ்மாக்கை விட பெட்டர் வழியெல்லாம் இருக்குனு  நான் எழுதின ஐட்டம் பப்ளிஷ் ஆகியிருக்கு. இந்த எதிர்பாராத அதிர்ச்சிய பகிர்ந்துக்க ஒரு சின்ன பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க‌
ஜோதிட உதவியுடன் ஃபிகர்களை மடக்கமுடியுமா?
முன் குறிப்பு:
 சோளப்பொறி ரீடர்ஸுக்காகவே இந்த பதிவின் இறுதில 12 ராசியினரின் குண நலன் களை தொகுத்து தந்திருக்கேன் படிச்சு வைங்க உதவும். கு,பட்சம் ராங்க் கால் போட்டுராத இருக்கவாச்சும் உதவும்.

இந்த குண நலன்களை படிச்சுட்டு இது எந்தெந்த பெண் கிட்டே இருக்குனு கணக்கு போட்ட் கணக்கு பண்ண ஆரம்பிச்சுராதிங்க.  நீங்க முயற்சி பண்ற  பெண்ணோட ராசி உங்களுக்கு பகை ராசினு வைங்க என்ன தான் அவிக கேரக்டரையெல்லாம் கெஸ் பண்ணி கணக்கு பண்ணாலும் ராங்க் கனெக்சனாகி ஈவ் டீசிங்ல புக் ஆக வேண்டி வரலாம்.

பெண் என்றால் வெறுமனே ஊரான் பெற்ற பெண்களையே மனதில் வைத்து பார்க்காதீர்கள். உங்கள் தாயார், சித்தி, மாமி, அக்கா,தங்கை,அண்ணி எல்லோரும் பெண்களே. மேலும் இந்த ராசிகளை வைத்து சொல்லும் பலாபலன் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானதே.

லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நான் சொல்லும் குண நலன்களை முன் கூட்டி அறிந்து கொள்வதால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இந்த 12 ராசிக்குள் அடக்கம் என்பதால் அனைவருடனும் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.

திருமண உறவின்றி ஒரு பெண்ணை கட்டிலில் சந்தித்தால் அவள் உடலை மட்டும் தான் அறிகிறீர்கள். அவளது நடிப்பை (இளமை, ஃப்ரெஷ்னெஸ்(அனுபவமின்மை), நாணம், மடம்,பயிர்ப்பு இத்யாதி நாடகங்களை தான் காணமுடியும். இந்த நாடகம் சீக்கிரத்தில் அலுத்துவிடும். ஆனால் அதே பெண்ணை ஒரு   சகியாக, நண்பியாக, தோழியாக,சகோதிரியாக சிந்தித்து  சந்தித்து பாருங்கள். அதுதான் அவளது உண்மை சொரூபம் (ஓரளவேனும்),  அவளை ஒரு தாயாக கொள்ளுங்கள். உடனே  விஸ்வரூபம் எடுப்பாள்.உங்களை சிறு குழந்தையாக்கி தன் கண்களுக்குள் வைத்து காப்பாள்.


ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் காதலி, மனைவி ஆகியோரை காட்டுது. உங்களுக்கு காதலி அ மனைவியாக வேண்டிய பெண்ணின் லட்சணங்களை அறிந்து அவர் இருக்கும் திசை தூரம், அவர் பின்னணி, வீட்டு சுற்றுப்புறம் இத்யாதியை கணக்கிட்டு மணமுடிப்பதே நோக்கமாய் முயன்றால் அவரை மட(ண)க்க முடியும் என்று சொல்லலாம்.

ஆனால் வெறுமனே எதிராளியின் நட்சத்திரம்,ராசியை வச்சோ , ஏன் ஜாதகத்தையே வச்சு கூட அவிக கேரக்டரை ஊகிச்சு பிக்கப் பண்ண முடியுமான்னா.. நிச்சயமா முடியாது. ஏன்?

நட்சத்திரம்,ராசி:
இதெல்லாம் ஜோதிடத்தில் ரெம்ப ப்ரிலிமினரிஃபேக்டர்ஸ். இப்போ ராசியை எடுத்துக்கங்க. மொத்தமே 12 தான். மனிதர்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையை,குண நலனை ராசிகளே நிர்ணயிக்கிற மாதிரி இருந்தா உலக மக்கள் அனைவரோட வாழ்க்கையும் 12 விதமா தான் இருக்கனும். ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது அப்படியா இருக்கு? ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதமா இருக்கு.

ஜாதகம்:
ஜாதகத்தை வச்சு அவிக கேரக்டரை ஊகிக்கறது ரெம்ப கஷ்டம். ஏன்னா ஜாதகத்துல பல்வேறு அம்சங்கள் ஜாதகரோட குண நலன் களை நிர்ணயிக்குது. லக்னம்,ராசி,லக்னாதிபதி,ராசியாதிபதி மட்டுமில்லை தோஷங்கள், உச்சம் பெற்ற சுபன், நீசமுற்ற பாபன் ஆகியோரின் இம்பாக்டும் அதிகம். அட சொம்மா எதுக்கு பயமுறுத்துவானே ஜாதகத்தை வச்சி அவிக கேரக்டரை கெஸ் பண்ண  முடியுதுன்னே வைங்க.. நீங்க என்னத்த கிழிக்க முடியும். வேணம்னா நீங்க அவிகளுக்கு ஏத்தாப்ல நடிக்க வேண்டி வரும். நடிப்பை எத்தனை நாள் தொடரமுடியும் அ அவிக உங்களுது நடிப்புத்தான்னு கண்டுபிடிக்க எத்தனை நாளாகும்? அப்புறம் அந்த உறவு என்னாகும்?

அதனாலதான் சொல்றேன்.உங்களுக்கு காதலி/மனைவியாகனும்னு விதிக்கப்பட்ட பெண்ணை தவிர வேறு எவளையும் மடக்க முடியாது. இது சிம்பிள் லாஜிக்.

கண்டவன் கண்டவளை :
ஆனால் கண்டவன் கண்டவளை மடக்கிர்ரானேன்னு நீங்க கேட்பிங்க. அதெல்லாம் டெப்ரரி. உதாரணமா இப்போ மீனராசிக்கு சப்தம சனி. கன்னி ராசிக்கு ஜன்ம சனி. இவிக கோசாரப்படி நீசமான  பார்ட்டிக்கிட்டே கொஞ்ச நாளு காதல்ங்கற பேர்ல அவஸ்தை படனும்னு இருக்கு.

இந்த கிரக நிலைல தங்களுக்கு எம்மாத்திரமும் பொருத்தமில்லாத இன்ஃபிரியர் குவாலிட்டில ஒரு ஆணை கண்டு மயங்கனும்.. உடனே உங்க சர்க்கிள்ள எவளுக்கு மீனராசி,எவளுக்கு கன்னி ராசினு கிளம்பிராதிங்க. சனி இந்த மாதிரி வேண்டாத கனெக்சனை மட்டும் கொடுப்பாருனு நினைச்சுராதிங்க.

அந்த கனெக்சனுக்கு கால் போகவும் வைக்கலாம். செயற்கை காலுக்கு என்ன செலவாகும்னு விசாரிச்சுக்கிட்டு அப்புறம் முயற்சில இறங்குங்க. பை தி பை நீங்க சொந்த தொழில் அ வெள்ளையும் சள்ளையுமா செய்யற தொழில் உத்யோகத்துல இருந்தாலும் மேற்சொன்ன ராசிகளை பிக் அப் பண்ண இறங்கினா எட்டே நாள்ள உங்க தலை எழுத்து மாறிரும். கை,கால்,சட்டை  எல்லாம் எண்ணை கறை, க்ரீஸ் கறை ஆகிற மாதிரி தொழிலுக்கு மாற வேண்டி வந்துரலாம். சொந்த தொழில் செய்றவரா இருந்தா அடிமைத்தொழிலுக்கு இறங்க வேண்டி வந்துரலாம் டேக் கேர்.


லோலாயிகள்:
லோலாயின்னா கேரக்டர் சரியில்லாத பெண் என்று பொருள்.லோலாயிகள் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் உண்டு. இவர்கள் ஆள் மாற்றுவது சகஜம். மாத்தலன்னா தான் ஆச்சரியம். (இதற்கு பல காரணங்கள் உண்டு.)

மேலும் ஒரு பெண் இருக்கானு வைங்க. அவ ஜாதகத்துல மாங்கலிய தோசமிருக்கு.  அவள் லவ் பண்ற பையனுக்கு தீர்காயுசு இருக்குனு வைங்க. இப்ப என்னாகும்? ரெண்டு பேரும் பிரிஞ்சுருவாய்ங்க. அப்பத்தான் அவளோட மாங்கலிய தோசத்துக்கேத்த ஆயுசு இருக்கிறவனை அவிக கண்ணாலம் கட்ட முடியும். இவனும் மாங்கல்யபலம் இருக்கிற பெண்ணை கட்ட முடியும். ஜோதிஷத்துல பிரிவு,மரணம், வீண்பழி, தனிமை இதெல்லாம் சமம். அவளோட மாங்கல்ய் தோஷத்தை பொருத்து கணவன்/காதலன் செத்துரனும். பிரிஞ்சுட்டா அவன் செத்தவனாயிர்ரான். இவள் மேல் வீண்பழி வரும். தனிமைல தவிப்பா. இதெல்லாம் மரணத்துக்கு சமம்னு ஜோதிஷம் சொல்லுது.

9 வகை பெண்கள்:
இப்படி மடக்கறது, பிக் அப் பண்றதுங்கற வார்த்தையையெல்லாம் உபயோகிக்காம பெண்கள் 9 வகைனு ஒரு பதிவை போட்டேன். அதுல அவிக கேரக்டர்ஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிருந்தேன். இதெல்லாம் படிச்சா உங்க கேரக்டருக்கு சம்பந்தமில்லாத பெண் கிட்டே பல்ல காட்டி  பாதுகை அடி அதாங்க செருப்படி வாங்காம இருக்கலாம்.

பஞ்சாங்கத்துல திருமணத்துக்கு பத்து பொருத்தம் பார்க்கனும்னு சொல்லிட்டு எல்லாத்தயும் விட மனப்பொருத்தம்தான் முக்கியம்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. காந்தர்வ விவாகத்துக்கு ( காதல் திருமணமுங்கோ) பொருத்தமே பார்க்க தேவையில்லைனும் சொல்லியிருக்கு.

மனப்பொருத்தம்:

இதுலருந்து என்ன தெரியுது? மனம் ..மனங்கள் பொருந்துவது முக்கியம். பெண்மனத்தை புரிந்துகொண்டுவிட்டால் அப்புறம் இந்த கணக்கு,வழக்கெல்லாமே கேலிக்கூத்தென்பது புரிந்துவிடும். பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதிநிதி. எனவே பெண்ணை புரிந்துகொள்ள இயற்கையை புரிந்துகொள்ளுங்கள். அதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். இயற்கையை பயிலுங்கள். அப்புறம் பெண்ணை புரிந்து கொள்வது எளிது.

உங்க பொறுமைய ரெம்ப சோதிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ 12 ராசி பெண்கள்/ஆண்களின் குண நலனை காண்போம்.

எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தான். இதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது. அந்தந்த ராசி நாதன் பலம் பெற்று இருந்தாலன்றி இந்த பலன் பொருந்தாது. ஒருவேளை லக்னாதிபதி ராசியாதிபதியை விட பலம் பெற்றிருந்தால் அந்த லக்ன பலனே அதிகம் பொருந்தலாம். இவற்றை மனித உறவுகளின் மேம்பாட்டுக்கு மட்டுமே  பயன்படுத்தவேண்டும். உங்கள் மனதில்  நெகட்டிவ் தாட்ஸ் வந்த மறுகணமே இவையாவும் நிர்வீர்யமாகி  ப்ராக்டிக்கலாய் பார்க்கும்போது ஏறுமாறாக மாறியிருக்கும். டேக் கேர்.


1.மேஷம்:
சிவந்த நிறம்.போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே பின்னணி இருக்கலாம்.இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. முன்னேறனுங்கற துடிப்பு இருக்கும். படபடப்பு,பரபரப்பு இருக்கும். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமிருக்கும். கராத்தே ,ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள்ளயும் ஆர்வமிருக்கலாம். இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா இந்த மேஷ ராசிக்காரங்க தான். போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது. முக்கியமா பெவிலியனுக்கு திரும்பற டெக்னிக் தெரியாது.
2.ரிஷபம்:
ஜாதகர் மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாது உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி,- பேசுவதே சுகம் இவருக்கு- வம்பில் மாட்டிக்கொள்வார். ஸ்னாக்ஸ்,ஐஸ்க்ரீம், எஃப் எம், டிவி, வீடியோ, வெட்டிப்பேச்சுல  ஆர்வம் அதிகம். கொடுத்த பேச்சை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பார். தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லியாக பெயரெடுக்கலாம். இவருக்கு மாற்றம் என்பது வேப்பங்காயை போல கசக்கும். செக்கு மாடு என்று சொல்லலாம்.ரொம்பவே உணர்ச்சிவசப்படுவாய்ங்க. பொறாமை குணமிருக்கும். ஒரு வித கவர்ச்சி இருக்கும். வெறும் வாய்பேச்சாலயே சனங்க வயித்தை ரொப்பிருவாய்ங்க.
இவருக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. கலைகளில் ஆர்வமிருக்கும். நல்ல ரசனை இருக்கும். முரண்டு பிடிக்க ஆரம்பித்தால்  ரெம்பவே இம்சையாயிரும்.
3.மிதுனம்:
இவர்  வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ, அல்லது செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்,கசப்பான அனுபவங்களாலோ  மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். இதை மறக்க பக்தியில் அதிகம் ஈடுபடுவார். சற்றே ஆண்மை மிளிரும் நடை இருக்கலாம். மேலுதட்டில் கருமை படியலாம். இவர் வாழ்வின் மீது  உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம்இவர் வாழ்வில் கணவர்/மனைவி, உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம்.   பண விஷயத்தில் நிலையான வருமானம் இராது. இருந்தாலும் திடீர் செலவினங்கள், வருவாயில் திடீர் வெட்டுக்கள் திணற வைக்கும். சொன்ன பேச்சை காப்பாற்ற முடியாது( முக்கியமாக பண விஷயத்தில்) எனவே காமராஜர் மாதிரி (" பார்க்கலாம்ணேன்" ) என்றே சமாளிப்பது நல்லது.
4.கடகம்:
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், அடிக்கடி மூட் அவுட் ஆதல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
5. சிம்மம் :
லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம்.தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் (இந்த வயது முதல் அது மிளிர ஆரம்பிக்கும்), புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும்.இதன் அதிபதி சூரியனுக்கு பகலில் பலம் என்பதால் பகலில் உற்சாகமாக இருப்பார். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார்
6.கன்னி:
ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். தோல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். கண்ட களிம்புகளை உபயோகித்து மேலும் சிக்கலாக்கிக்கொள்வார்கள். நடமாடும் இன்ஃபர்மேஷன் சென்டர் மாதிரி கணக்கு,சைன்ஸ்ல ஆர்வமிருக்கும். கோர்ட்டு,ஆஸ்பத்திரி,ஃபைனான்ஸ்,தொடர்பான பின்னணி இருக்கும்.  போஸ்டல்,தொலை தொடர்பு குறித்த பின்னணியும் இருக்கலாம்.
7.துலா:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கே.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம்.
9.தனுசு:
நடுத்தர உயரம்,பிராமண லட்சணங்கள் இருக்கும். நல்ல மனசு இருக்கும். இருந்தாலு வெகண்டையா பேசி வில்லனாயிருவாய்ங்க.ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். இவர் வாழ்க்கையில் தந்தை தந்தை வழி உறவு, தந்தை வழி சொத்து ஆகியவற்றின் இம்பாக்ட் அதிகமாக இருக்கும்.
10.மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள். நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். (இதற்கு வாய்ப்புள்ள தொழிலிலேயே இருப்பார்கள்) சகோதர சகோதிரிகளில் ஒருவர் அரசு/அரசு சார் துறைகளில் இருக்கலாம். மனைவியுடன் ஊடலும், கூடலும் மாறி மாறி வரும். அடிக்கடி நண்பர்களை மாற்றிக்கொள்வார்கள்.
11.கும்பம்:
மாநிறமாக இருக்கலாம். ராசிச்சக்கரத்தில் 11 ஆவது ராசி என்பதால் எதிலும் ஆதாயம் பார்த்தே கால்வைப்பார்கள்.(அது கிடைக்குமா கிடைக்காதா என்பது வேறு விஷயம்) இவரிடத்தில்   ரகசியங்கள் உண்டு. குளியல்,சாப்பாடு,சுத்தம் இத்யாதியில் பெரிதாக ஈடுபாடு இராது. குடும்பத்துக்கு இரும்பு,ஆயில்,விவசாய பின்னணி இருக்கலாம். பேச்சு பெரிய மனுஷத்தனமாக இருக்கும். ஆனால் கஞ்சத்தனமும் இருக்கும். தொலை தூர   கிராமத்து பெண்/ஆண் வாழ்க்கை துணையாக வாய்ப்புண்டு. மூத்த சகோதரன்/சகோதிரியின் இம்பாக்ட் அதிகமாயிருக்கும்.  இவர் வாழ்வில் எல்லாமே தாமதமாக அமையும்.( வேலை திருமணம் முதலானவை) இவர்களின் வீட்ட்ல் தண்ணீருக்கு பற்றாக்குறை இருந்தாலும் பஞ்சம் வராது.
12..மீனம்:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பாதம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். ஜலராசி உண்டு. அடிக்கடி மூடை மாற்றிக்கொள்வார். இந்த விஷயத்தில் கடகராசிக்காரர்களை மிஞ்சி விடுவார்கள்.