Friday, June 4, 2010

சுஜாதா & பாலகுமாரன் 2

பொய்லயே பொறந்து பொய்லயே வளர்ந்து பொய்லயே செத்து போற இனம் எதுன்னா அது தமிழ் இனம்தான் போல. தூத்தேறிக்க. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தோட கலாசாரத்தை அழிச்சா போதுமாம். இந்த நாட்டில்  பெரும்பான்மையாக உள்ள பிராமணரல்லாதோருக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு.(சாரி இருந்தது).ஆனால்  வெகு ஜன ஊடகம் சுதந்திரத்துக்கு முன்னாடியிருந்து இன்னை வரைக்கும்  சிறுபான்மையினரான பிராமணர்களின் கலை, பண்பாடு,கலாசாரத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்கிட்டிருக்கு. பிராமணரல்லாதோரின் கலாசாரம்  இருட்டடிப்புக்குள்ளாகி காலாவதியாகிட்டிருக்கு.


பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு.  இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?


சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும்,  அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு  தேவைவு காலத்திற்கேற்ப  அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.

ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.

இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.

ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?

இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க  . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை.  ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை  தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)

சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.

வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//

"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.

மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா  என்னா மாதிரி  ஒருகமெண்டு பாருங்க.  சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்

வாசு சொல்றார்:

//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//

வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே


ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு

//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//

இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.

 KANTHANAAR சொல்றார்:

//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...

//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//

பல தடவை படிச்சுருக்கேண்ணா  (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)

//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//

அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா

//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//

இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?

//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//

தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?

தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல  நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.

வவ்வால் சொல்றார்:

// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!

 En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//

குறும்புக்கார புள்ளைப்பா!

 Vichu சொல்றார்:

//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//

இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி !  பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.

ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு

முருகேசன் அவர்களே:

//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//

என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம்  கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.

//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//

கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க

//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//

பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..

//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//

என் கருத்தும் அதுவே..