Wednesday, June 30, 2010

கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட

கடந்த சில நாட்களா  மனித வாழ்விலான பிரச்சினைகளை அலசிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல இனியாச்சும் செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும்னு சொல்லியிருந்தேன்.

கடந்த பதிவுல  பிரச்சினைகளுக்கான  என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.

நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது  பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் +  அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.

ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை  எந்த அளவுக்கு  பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.

ஒரு தமாசுக்கு  ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய்  பண்ணிக்கங்க.  இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.

பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம்  புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.

வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு   புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, மனைவி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம்  எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்

சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம்  மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம்  சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.

சூத்திர இனம்:

தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி   தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன்  போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை  எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு  கலங்குவா.

அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).

இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்

இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.

சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.

அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது.  என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல  பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.

இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.

( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)

என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா  இருக்கான்.

இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.

நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு  வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம்.  நீங்க உங்க வழிலதான்  போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.

அவரு வெறுமனே பயத்தால  நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)

இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.

எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து  எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்

பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.

இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.

ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி  சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு

இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.

பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக  கு.பட்ச   நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?

எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.

நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா  நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..

பசிக்கு  ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம்  சம்பிரதாயமான  செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.

சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.

(மீதி அடுத்த பதிவுல