Sunday, June 13, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் 2

நேரு கிட்டே செக்ரட்டரி ரேஞ்சுல குப்பை கொட்டின ஐ.ஏ.எஸ்ஸுக்கு ஜோசியம் சொல்லி டப்பிங் ப்ராஜக்ட் வாங்கின கதையை கடந்த பதிவுல பார்த்தோம். இப்போ சப்ஜெக்டுக்கு போயிருவமா?




அந்த நேரத்துல இந்த நேரத்து தெளிவெல்லாம் கிடையாது (ஜோதிஷத்துல). அய்யரு ஜாதகத்தை பார்த்து அவருக்கு என்ன சொன்னேனோ அது பாபாவோட அருள்னு தான் நினைக்கிறேன்.



சரி ..1997 நவம்பர் 9 ஆம் தேதி வரை சாரி 10 ஆம் தேதி மதியம் 3 மணி வரை சிங்கிள் டீக்கு அடச்சீ ஒரு பீடிக்கு கூட கதி கிடையாது. ஆனால் 3 மணி 1 நிமிஷத்துக்கு ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாய்ங்க. அப்பா கட்டின வீட்டை வித்து வந்த பங்குபணமுங்கோ.



அந்த நேரம் செமர்த்தியான கெட்ட நேரம். அஷ்டமத்துல சனி. 1/7 ல ராகு கேது போதாததுக்கு கேது புக்தி வேற. அந்த நேரம் பார்த்து ஏன் பணம் வந்ததுன்னு கேட்டா அதுக்கு ஒரே பதில் கிரகம் எல்லாம் இறைவனோட படைப்பு. வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்த என்னானு ஒரு சொலவடை உண்டு.அதுமாதிரி இறைவன் நினைச்சுட்டா இந்த கிரகமெல்லாம் என்ன செய்யமுடியும்?



அந்த நேரத்து என் ஆத்யாத்ம சாதனைகளை சொல்லனும்னா அதுக்கு ஒரு தொடர்பதிவு போடனும். (ஸ் அப்பாடா தவளைப்பாய்ச்சல்னா இதான்பா) எப்படியோ 1.2 லட்சம் வந்துருச்சு.



அந்த நேரத்துல உசுரு பிழைச்சதே ஒரு சாதனை. இதுல காசு பணம் வேற. என்னதான் அந்த நேரம் நமக்கும் பெருமாளுக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தாலும் அப்ப இருந்த நேரத்துக்கு ஒரு சாதுவை வணங்கினா படக்குனு பரிகாரம் கிடைக்கும். இந்த மேட்டர் நமக்கு அப்பறமா தானே தெரியும்.பாபாவுக்கும்,பக்தவத்சலருக்கும் மின்னாடியே தெரியுமே. அவிக ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுட்டாப்ல இருக்கு.



கைல காசு வந்தது. கூடவே அதை சேர்த்து வச்ச எங்கப்பனோட கருமம்,புத்தி,அவருக்கிருந்த ஃபேட்டல் வீக்னெஸ், வியாதி (கேஸ் ட்ரபிள்) எல்லாமே வந்துருச்சு. பழைய பாக்கிஎல்லாம் ஒழிச்சு, புதுக்குடித்தனத்துக்கு (அதுவரை அப்பன் செத்த 3 வருஷம் வரை எங்கண்ணே குடித்தனம் பண்ணோம்.. ஏதோ காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம். ஜஸ்ட் வெயிட்டிங் ஃபார் ஆஃபர்ஸ்) தேவையான சாமான் செட்டெல்லாம் வாங்கி ஒரு பார்ட்டிக்கு 35 ரெண்டு பார்ட்டிகளுக்கு தலா 10 , ஒரு நாய்க்கு அஞ்சு கடன் கொடுத்து ( எல்லாம் ரெண்டு வட்டிக்குத்தேன். அப்ப மார்க்கெட்ல பத்து வட்டி ஓடுது. இப்பல்லாம் நாப்பது வட்டிதான். )



இப்படி வேட்டுவிட்டுட்டு பேங்க் அக்கவுண்ட்ல ஜஸ்ட் 3000 வச்சிருக்கேன். அப்பத்தான் மார்க்கெட் சவுக்குக்கு போனேன். நாலு பேருங்கற பதிவுல வர்ர டாக்டர்(?) பண்டரி, மிலிட்டரி ஓட்டல் மகேந்திரன், ஸ்லேட் வியாபாரி பரமேச்சு , மென்ஸ் ப்யூட்டி பார்லர் வடிவேலுல்லாம் அங்கனதான் டச்.



வடிவேலு பாபா பக்தன்.பாபா எப்படி அவனுக்கு டச் ஆனாரு? அவன் பக்தி எப்படிப்பட்டது? ங்கற மேட்டரை ஒரு பாரால முடிச்சுருவம்.



சாதாரணமா ஐயருங்க, செட்டியாருங்க, நாயுடு வீட்டு பசங்கல்லாம் என்னதான் ட்யூப் லைட்டுங்களா இருந்தாலும் அப்பன் ஆயி சொத்து, பதவி ,ஃபேமிலி பில்டப்புக்காகவாச்சும் கு.பட்சம் இண்டர் , அதிக பட்சம் டிகிரிய எட்டி பிடிச்சுருவாய்ங்க.



கெட்டுக்கீரை வழியா போறதெல்லாம் யாருன்னா ரெட்டி, நாயக்கர் பசங்க. இவிக கெட்டுப்போறதுமில்லாம இன்னபிற சாதி பசங்களையும் ஜமா சேர்த்துக்கிட்டு ஒரு நாலஞ்சு வருசம் ரவுசு விட்டுக்கிட்டிருப்பாய்ங்க. ஃபேமிலி பேக் கிரவுண்டை பொறுத்து ரெட்டி பசங்க சிமெண்ட் டீலரோ, ஹார்ட் வேரோ, பவுல்ட் ரி ஃபார்மோ பார்த்துக்கிட்டு செட்டில் ஆயிருவாய்ங்க. (இதுலயும் கெட்டுப்போன வமிசமா இருந்தா எங்கன குவார்ட்டர் கிடைக்கும்னு அலைஞ்சிகிட்டே கிடக்க வேண்டியதுதான்) நாயக்கர் பசங்க கதை வேற ஏறினா ரயில் இறங்கினா ஜெயில், இதுல நாறிப்போறதெல்லாம் யாருன்னா எஸ்.சி பசங்களும், வடிவேலு சாதி பசங்களும்தான். இவிக முழிச்சிக்கிறதுக்குள்ளாறவே இளமை இறங்கி போயிருக்கும். யதார்த்தம் கழுத்தை நெறிக்கும். இதுலயும் சிலர் ரியலைஸ் ஆகி புலி மேல இருந்து இறங்கி ரொட்டீனுக்கு வந்துர்ராய்ங்கனு வைங்க.



நம்ம வடிவேலு எந்த காலத்துலயுமே புலி மேல சவாரி பண்ணவன் கிடையாது. ஜஸ்ட் பிகில் ரவுடிதான். ( எதிர் க்ரூப் விசிலடிச்சா வீட்டுக்கு ஓடி வந்துர்ர பார்ட்டிக்கு இப்படி ஒரு பேரு). அண்ணன் பண்டரிய பிடிச்சு வார்ட் பாயா சேர்ந்துட்டான். வடிவேலு டென்த் ஃபெயிலாகி டைட் ஃபிட்டிங் பேண்ட், உடம்பை கவ்வி பிடிக்கிற டீ ஷர்ட்டு,முகமெல்லாம் லோக்கல் டால்க்கம் பவுடருமா ஹை ஸ்கூல், இண்டர் குட்டிகளை சைட் அடிச்சிக்கிட்டு கிடப்பான். வாய் உதாருன்னு கேள்விப்பட்டிருப்பிங்கள்ள. அந்த வாய் உதாருக்கு இருப்பிடம்,பிறப்பிடம்,கழிப்பிடம் எல்லாம் வடிவேலுதான்.



அண்ணன் ஜி.ஹெச் லயும் வேலை செய்துக்கிட்டு கடைல வேலையும் செய்திக்கிட்டு கண்ணாலம் கட்டிக்கிட்டு (ரியாலிட்டிய புரிஞ்சிக்கிட்டு) அம்மன் பக்தனா ப்ரயோஜகனா (யூஸ் ஃபுல் ) மாறிட்டான். வடிவேலுக்கு டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சது. இவனோட சுத்தின ரெட்டி, நாயுடு, நாயக்கர் பசங்கல்லாம் லைஃப்ல செட்டிலாயிட்டாய்ங்க. மேல கீழ காஞ்சு போயி ஒரு வித க்ரைசிஸ்ல சொசைட்டில தனக்கிருந்த இமேஜை மாத்திக்கவோ அல்லது ஊர்ல இருக்கிற கொலைகாரன் எல்லாம் பாபா பக்தனாகி காண்ட்ராக்டர், கவுன்சிலருன்னு செட்டில் ஆயிட்டதாலயோ வடிவேலுவும் பாபா பக்தனாயிட்டான் போல.



அவன் கிட்டே ஒருத்தன் வேலை செய்துட்டிருந்தான். பேரு முத்து. ரெம்ப சின்ஸியர் ஃபெல்லோ. வியாழக்கிழமைன்னா கடை மொத்தத்தயும் க்ளீன் அண்ட் க்ரீன் பண்ணி சாமி படம்லாம் துடைச்சி ,சந்தனம்,குங்குமம் வச்சி. ஊதுவத்தி,கற்பூரம்லாம் தயாரா வச்சி, லோக்கல் ஸ்வீட் ஸ்டால்ல இருந்து 50 கிராம் பூந்தி வாங்கியாந்து வச்சிருப்பான். நம்ம வடிவேலு 6 மணிக்கு இரவல் டூ வீலர்ல வீட்டுக்கு போய் ரெண்டு மணி நேரம் குளிச்சு முழுகி மூஞ்சிக்கி ஃபேர் அண்ட் லவ்லி, மீசைக்கு ஐ லைனர் எல்லாம் போட்டுக்கிட்டு ( வயசு 40) கடைக்கு வருவான் பட படன்னு இருக்கிற ஊதுவத்தியெல்லாம் கொளுத்திட்டு பூந்தி பொட்டலத்தை பிரிச்சு கற்பூர ஹாரத்தி காட்டிருவான். முட்டை கண்ணை திறந்து வச்சிக்கிட்டு ஒரு ரெண்டு நிமிஷம் என்னவோ முணு முணுப்பான் .இது முடிஞ்சதுமே ரெம்ப டயர்டாயிட்ட மாதிரி வெளிய வந்து ஒரு ரெட் வில்ஸ் பத்த வச்சுப்பான். இதான் அவனோட பூஜா விதானம்.



கேரக்டர் வைஸ் பார்த்தா பயங்கர டகுலு.பயங்கர பீலா.ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்,ஜொள்ளு பார்ட்டி, செல்ஃபிஷ், ஒரு பீரு கிடைக்குதுன்னா என்ன வேணம்னா செய்வான்

அநியாயத்துக்கும் ரெடி.டாக்டர் பண்டரியோட சிஷ்யன் (எடு பிடி). பண்டரி ஏட்டு, ஏ.எஸ்.ஐ ரேஞ்சுல பண்ற அநியாயத்தை எல்லாம் இவன் கான்ஸ்டபிள் ரேஞ்சுல பண்ணுவான். போலீஸ் நாய்களுக்கு லஞ்சம் கலெக்ட் பண்ணி கொடுக்கிறது இவன் வேலை. காயிதம் பொறுக்கிறவனை பத்தி கூட போலீஸுக்கு போட்டு கொடுத்து லஞ்சம் கலெக்ட் பண்ணுவான், சென்டர்ல அமுக்குவான். அதை வச்சி கான்ஸ்டபிள்களை குளிப்பாட்டுவான்.



(இத்தனை செய்தும் ஒரு நாள் நாங்கதான் அவனை ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டுவரவேண்டியதாயிருச்சு அது வேற கதை)



காரியம் பெரிசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசுன்னு பூட்ஸ நக்கவும் தயாராயிருவான். இதான் வடிவேலுவோட செனோரியா.என்ன தான் சாதில வேறயா இருந்தாலும் எல்லாமே அய்யரு புத்தி.



ஆனால் பாபா என்னை தன் பேட்சுல சேர்த்துக்க இந்த வடிவேலுவைத்தான் உபயோகிச்சாரு. அவன் பண்ண அட்டூழியங்களுக்கு அவனுக்கு தண்டனை வழங்க, என் காசை அவன் விழுங்கி என் கருமத்தையெல்லாம் அவன் அனுபவிக்க, என் உயிரை காப்பாத்த பாபா சூப்பர் ஸ்கெட்ச் போட்டாரு. அந்த விவரத்தையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.