Thursday, June 3, 2010

என்ன நடக்குது ஆந்திராவுல?

இப்படி ஒரு கேள்வி தமிழ் சனங்க மனசுல இருக்கும்னு நினைச்சு இந்த பதிவை போடறேன். நாகார்ஜூன சாகர் பிழைக்குமானு ஒரு பதிவை போட்டு அது பயங்கர மொக்கையாகிப்போக பலான ஜோக்+ மனோதத்துவத்துக்கு இறங்க வேண்டியதாயிருச்சு. உலகம் போற போக்கை தெரிஞ்சிக்கிடலைன்னா நஷ்டம் நமக்குத்தான். உலக போக்குக்கே இதான் விதி. பக்கத்து மானிலம்? சொல்லவே தேவையில்லை. தமிழ் நாட்டு சம கால சரித்திரத்தை உன்னிப்பா அப்சர்வ் பண்ணதாலதான் என்.டி.ஆரால கட்சி ஆரம்பிச்சு சி.எம் ஆக முடிஞ்சது.

நம்ம கலைஞர் தாத்தா ஆந்திர அரசோட நல திட்டங்களை உன்னிப்பா கவனிச்சதாலதான் சந்திர பாபு கிட்டேருந்து உழவர் சந்தை, ஒய்.எஸ்.ஆர் கிட்டே இருந்து ரெண்டு ரூபா அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ (கலைஞர் காப்பீடு) எல்லாத்தயும் சுடமுடிஞ்சது. ஸோ அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு ஒரு கண் போட்டு வைங்கண்ணா.

மேட்டருக்கு வந்துருவம்:

ஒய்.எஸ்.மரணம் - ஒய்.எஸ்.ஆரோட மரண துக்கத்தை தாங்க முடியாத நூத்துக்கணக்கான பேர் மாரடைப்பில் சாவு - தற்கொலை - செத்துப்போனவுகளோட வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்வேனு ஜகனோட அறிவிப்பு-ஜகனுக்கு 150 எம்.எல்.ஏ ங்க ஆதரவு தெரிவிச்சு கடிதம் கொடுத்தது- அதையும் மீறி சோனியா ரோசய்யா தாத்தாவை சி.எம் ஆக்கினது. சரி ஜகனை டெப்புடி சி.எம் மாதிரி எதாச்சும் போடுவாங்கனு பார்த்தா ஒய்.எஸ்.இறந்ததால காலியான கடப்பா எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒய்.எஸ்,மனைவி விஜய லட்சுமிக்கு சீட்டு கொடுத்தாய்ங்க.

ஒய்.எஸ் இருக்கறச்ச வாய்லயும் ... சூ..லயும்  ஃபெவிகால் வச்சிருந்த கிழவாடிங்களை எல்லாம் ரோசய்யா செட்டு சேர்த்து மந்திரிசபை மாற்றம் அது இதுனு வாலை அவிழ்த்துவிட ஆரம்பிச்சாரு. ஆட்டோமேட்டிக்கா ஜகனுக்குள்ளயும்,அவரோட ஆதரவாளர்கள்ளயும் இன்செக்யூரிட்டி ஜாஸ்தியாயியோருச்சு.,


ரோசய்யா சி.எம் ஆனதுமே மந்திரி கொண்டா சுரேகா ராஜினாமா பண்ணிட்டாய்ங்க. ரோசய்யா அந்த சி.எம்.  சீட்ல உட்கார்ந்ததுலருந்து 9 கிரகமும் வக்கிரமாயிட்டாப்ல வறட்சி ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம், தெலுங்கானா கேட்டு  மூக்கரோட (கே.சி.ஆர்) உண்ணாவிரத நாடகம் ஒரு பக்கம்- சிதம்பரம் ப்ளேட்டை மாத்தி மாத்தி தெலுங்கானா விஷயத்துல அறிக்கை - ஆந்திரா பகுதி எம்.எல்.ஏக்கள் கூண்டோட ராஜினாமா- பார்லிமெண்ட்ல தெ.தேசம் காரவுக ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ப்ளே கார்ட்ஸை காட்டி கத்தி, வெளி நடப்பு  செய்தப்போ ஜகன்  அந்த எம்.பிங்க கிட்டருந்து ஒரு ப்ளே கார்டை வாங்கி தானும் எக்ஸிபிட் பண்ணி வெளி நடப்பு செய்து வெளியே வந்து  கோல்டன் தெலுங்கானானு புதுசா ஒரு ப்ரபோசலை முன் வச்சாரு.
தெலுங்கானா ஆந்திரா பகுதிகள்ள மாறி மாறி கதவடைப்பு,வன்முறை- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி   நியமனம்.

சரி எல்லாம் ஓய்ந்ததுன்னு இருந்த சமயம் பார்த்து ரோசய்யா பஞ்சப்பாட்டு பாட ஆரம்பிச்சாரு. ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்கள் ரெம்ப பாரமாயிருச்சுனு கழட்டிவிட (அவர் பாஷைல மறு பரிசீலனை) முயற்சி.  பொங்கி எழுந்த ஜகன் . தன்னோட சாட்சி டிவி, சாட்சி தினசரில இந்த சதிகள் அம்பலமாக்க முயற்சி பண்ணார். ரோசய்யாவுக்கு தில்லி கண்ணசைவுல செயல்படற, சோனியா வகையறாவுக்கு உள் பாவாடை துவைச்சுப்போடற கிழவாடிகள் க்ரூப் ஒன்னு நல்லாவே நெருக்கம் காட்டுச்சு.

இடையில ஹைதராபாத் கார்ப்போரேட் தேர்தல்கள் வந்தது. ஜகன் பரவலா  பல வார்டுகளில்  சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோசய்யாவின் சொந்த வார்டில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஜகனுக்கு ஒரு  மெகாஸ்டாரை மிஞ்சிய ஃபாலோயிங் கவர்ச்சி வெளிப்பட்டது.

ஜகன் தன் அப்பா  மரணத்தை தாங்கமுடியாது செத்துப்போன குடும்பங்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். சமீபத்தில்  தெலுங்கானா பகுதியிலும் தன் சுற்றுப்பயணத்தை திக்விஜயமாக நடத்தி முடித்தார்.

அடுத்த கட்ட சுற்றுப்பயணமாக வரங்கல் புறப்பட போறதா அறிவிச்சாரு. உடனே ரோசய்யா, லோக்கல் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிங்க அஸ்து போட ஆரம்பிச்சாய்ங்க.  ஜகன் போடாங்கோத்தா.. நான் போறது போறதுதானு சொல்ட்டாரு.

உடனே சிரஞ்சீவி  தில்லிக்கு அழைக்கப்பட்டார். எந்த கட்சியுமே தேர்தல்ல ஜெயிச்சு அதிகாரக்கட்டில்ல உட்கார்ந்த பிறகுதான் ஊழல் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனா சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஊ.கு புற்றீசலா கிளம்பிருச்சு. சீட்டுக்கு இத்தனை கோடின்னு ரேட் வச்சு கூவி கூவி சீட் கொடுத்தாய்ங்க.

2009 தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் ஆப்பரேஷன் ஆகர்ஷானு துவங்கினார். பிற கட்சிகள்ள இருந்து ஆட்களை சொந்த கட்சிக்கு கொண்டுவர துவங்கினார். சந்திரபாபு  பிறகட்சிகளுக்கு(முக்கியமா பிரஜாராஜ்ஜியத்துக்கு )  போன தமது கட்சி ஆட்களை மறுபடி கட்சிக்கு கொண்டு வர ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா துவங்கினார். இந்த ரெண்டு ஆப்பரேஷன்லயும் டங்கு வார் அறுந்தது சிரஞ்சீவி கட்சிக்குதான். டர்ராகி திகிலடிச்சுகிடந்த சிரஞ்சீவிக்கு தில்லி அழைப்பு அற்புத தாயத்து மாதிரி இருந்தது. ஒடோடிப்போய் சோனியா கால்ல விழுந்தார்.

இவருக்கு ஆந்திர சட்டமன்றத்துல மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள். இவர் தெலுங்கானா பிரச்சினைல ஒன்று பட்ட ஆந்திரானு ஸ்டாண்ட் எடுத்ததுல தெலுங்கானாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ தாவிட்டாய்ங்க.

சோனியா மேடத்தோட ஸ்கெச் என்னன்னா  சொல் பேச்சு கேட்காம தெலுங்கானால ஆறுதல் யாத்திரைய துவக்கிட்ட ஜகன் ஒரு வேளை கட்சியை விட்டுப்போயிட்டாலும் பிரசாரத்துக்கு சிரஞ்சீவி இருப்பார். சட்டமன்ற கூட்டங்கள்ள அவரோட 16 எம்.எல்.ஏக்கள் இருப்பாய்ங்க. மேடம் கணக்கு இதான்.


இப்படி ஜகன் மேலிடத்து  உத்தரவை திரஸ்கரிச்சு வரங்கல் போன  போதுதான் திட்டப்படி மெகபூபாபாத் கல்லெறி,துப்பாக்கிச்சூடு, சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மேண்டேஜ் ஷாட்ஸா அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கியது. ஜகன் கைதானார் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.

மறு நாளே ஜகன் தில்லி புறப்பட்டார். மீடியால ரோசய்யா க்ரூப்போட சதியை போட்டு உடைச்சாரு. வீரப்ப மொய்லியை சந்திச்சார். சோனியாவின் அரசியல் உபதேசி அஹ்மது பட்டேலை சந்திச்சார். சோனியா மேடம் நோ அப்பாயிண்மென்ட்.

மொய்லி சிரிச்சிக்கிட்டே தெலுங்கானால தேர்தல் நடக்குது. அதை நெக்ஸ்ட்  ரவுண்ட்ல பார்த்துக்கப்பா. ஆந்திரா பகுதில உன் யாத்திரை தொடர்ந்து நடக்கட்டும்னு சொன்னதா ஜகன் மீடியாவுக்கு சொல்லிட்டு ஹைதராபாத் வந்தார்.

இங்கே பார்த்தா மந்திரிங்க குழு ஒன்னு மீடியாவை சந்திச்சு ரோசய்யா சின்னபாப்பா வாய்ல விரல் வச்சாலும் கடிக்க தெரியாதுனு முட்டு கொடுத்து பேசினாய்ங்க.

24 மணி நேரத்துல காங்கிரஸ் தில்லி தலைமை மறுபடி அந்தர் பல்ட்டி அடித்தது. இப்போ ஜகன் தாயாரு ஒய்.எஸ்.ஆர் மனைவியார் விஜயலட்சுமி சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டதா செய்திகள் வருது.

ஒரு தெ.தே.ஆதரவு சேனல் ஒன்னு   இந்த மேட்டர்ல   ஜகன் ஐசோலேட் ஆயிட்டதா  தொடர்ந்து கிண்டலடிக்க அதே மந்திரிங்க இப்ப சொரைக்காய்க்கு உப்பில்லைனு சப்பை கட்டு கட்டினாய்ங்க. ஈ நாடு அதிபரோட மார்க தர்ஸி சிட் ஃபண்ட் ஊழலை வெட்டவெளிச்சமாக்கி அவருக்கு பேதியாக்கின ராஜ மண்ட்ரி எம்.பி  உண்டவல்லி அருண்குமார் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. பல எம்பிக்கள், மந்திரிகள், மானில கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஜகனை சந்திச்சுக்கிட்டே இருக்காய்ங்க.

ஜூன் 8 ஆம் தேதி ஆறுதல் யாத்திரையில் ஒரு அங்கமா ஸ்ரீகாகுளம் சென்றாகனும். அதுக்குள்ளாற மேலிட அனுமதியை பெற முடிஞ்ச வரை முயற்சி பண்ணிருவம்னு ஜகன் நினைக்கிறாப்ல இருக்கு. மேலிடத்துக்கு கீழிடம் குளிர்ந்திருந்து அனுமதி கொடுத்தா சரி. இல்லன்னாலும் யாத்திரை நிற்கிற மாதிரி இல்லே.

இன்னைக்கு கேரளாவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷுக்கு ஆந்திராவுலருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. என்.டி.ஆர் முன்னெடுத்து சென்ற செல்ஃப் ரெஸ்பெக்ட் சுயமரியாதை கோசம் கிளம்பியிருக்கிறது. இதை பத்தி சானல்ஸ்ல டிஸ்கஷன்ஸ் சூடு பறத்திக்கொண்டிருக்கிறது. இந்த சுய மரியாதை குறித்த சர்ச்சைல தனிப்பட்ட யாத்திரை போக கூட ஜகனுக்கு மேலிடத்து அனுமதி தேவையா ? இது தெலுங்கர்களுக்கு அவமானமில்லையானு ஒரு கேள்வி எழும்பினதுதான் ஹைலைட்.

மொத்தத்துல ஜகனுக்கு 2009 , செப். 2 ஆம் தேதி முதல்வராகிற தகுதி இருந்ததோ இல்லையோ  அல்லாரும் சேர்ந்து நல்லாவே  தேத்திவிட்டுட்டாய்ங்க..