Thursday, July 29, 2010

தமிழ் மணமே பதில் சொல் !

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவை மட்டும் படிச்சுட்டு போயிராதிங்க. சரஸ்வதி சபதம் தொடருது. அதையும் படிங்க. உங்க கருத்துக்கள், யோசனைகளையும் சொல்லுங்க. இன்னும் சில திரட்டிகளால் கவிதை07 தடை செய்யப்பட 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. உடனே மெம்பராயிருங்க அ சப்ஸ்க்ரைப் பண்ணிருங்க‌

போஃபர்ஸ் ஊழல் வெடிச்சப்ப ராம்ஜெத்மலானி  ராஜீவை தினசரி 10 கேள்வி கேட்டு குடைஞ்சாரு. அப்போ ராஜீவ் குலைக்கிற நாய்க்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்னாரு. அப்போ ரா.ஜெ " நாய் திருடனை பார்த்துதான் குலைக்கும்"னு போட்டாரு ஒரு போடு.

தினசரி 100 கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைல ரா.ஜெ.இருக்காரு .அது வேற மேட்டர். இந்த சீக்வென்ஸ்ல தமிழ் மணம் நிர்வாகிங்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.என்னதான் பதில் சொல்றாய்ங்கனு  பாப்போம். பதில் வரலைன்னா என் கேள்விகள்ள நெருப்பு இருக்குனு அர்த்தம். (அதாங்க நெஜம்)

2000 ஜூலை முதல் பதிவுகள் போட்டுக்கிட்டு இருக்கிற நான் டச் பண்ணாத மேட்டரே கிடையாது. எதையும் ஒளிச்சு வச்சு பதிவு போட்டதும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா யோகம், தியானம்,பக்தி,சமூக அக்கறை ,பெண்ணியம் தொடர்பான பதிவுகளுக்கு கூட  ஆபாச தலைப்பு வச்சி தான் பதிவு போட்டேன். அப்பல்லாம் தடை வரலை.

பத்துவருஷமா நான் டச் பண்ணாம இருந்து புதுசா டச் பண்ண மேட்டர் பிராபகனோட ஜாதக ஆராய்ச்சிதான். பிரபாகரன் மேல எனக்கு  வை.கோ மாதிரி, திருமா மாதிரி ஹீரோ ஒர்ஷிப் எல்லாம் கிடையாது.  என்னைக்கும் நான் விடுதலைப்புலிகளோட வீரத்தை(?) போற்றிப்பாடினதும் கிடையாது.எழுதினதும் கிடையாது.

ஜோதிட விதிகளின் படி  பிரபாகரன் சாக வாய்ப்பில்லேனு எழுதினதுதான் உங்க டர்ருக்கு காரணம்னு குற்றம் சாட்டறேன். என் வாதம் என்னன்னா பத்துவருசமா டச் பண்ணாத,புதுசா போட்ட  மேட்டர் இது ஒன்னுதான். இதை உங்களால மறுக்க முடியுமா?

உதிரி கேள்விகள்:

1.என் கடைசியா உங்க வலைதளத்துல வெளியான பதிவுல  ஆபாசம் இருக்கிறதா சொல்லி தடை பண்ணிங்க.ஓகே. அதுக்கு மின்னாடி வெளியான என் பதிவுகள் எல்லாம் யு சர்ட்டிஃபிகேட் தானு கியாரண்டி தரமுடியுமா?

2.நீங்க இப்போ தடை பண்ணாம வச்சிருக்கிற ப்ளாக்,பதிவுகள் எதுலயும் ஆபாசமில்லேன்னு உறுதி சொல்ல முடியுமா?

3.ஆபாசத்துக்கான  உங்க அளவுகோல்தான்  என்ன? அதை நீங்க வெளியிட்டா உங்க திரட்டிலருந்து தினசரி 10  பதிவுகள் உங்க அளவுகோல் படி ஆபாசம்னு நான் நிரூபிக்கிறேன். அதெல்லாத்தயும் தடை பண்ண நீங்க தயாரா?

4.கலைஞர் எழுதின பலான கதைனு ஒரு பதிவை போட்டிருக்கேன். படிச்சு பாருங்க. இந்த பலான கதைல இருகிறதை விட பலான மேட்டர் என் பதிவுல இருந்ததா ப்ரூஃப் பண்ண முடியுமா?

5.நான் என் பதிவுகள்ள பல பெரிய மனிதர்களோட முகத்திரையை கிழிச்சேன். அவிகளை பத்தின நிர்வாண உண்மைகளை  வெளிச்சம் போட்டேன். அவிகளோட ப்ரஷரை தாங்க முடியாமத்தான் நீங்க என் ப்ளாகை தடை பண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். உங்களால மறுக்க முடியுமா?

6.ஜோதிஷம்ங்கறது தெய்வீகமானது கலைஞருக்கும்,அவரோட வாரிசுகளுக்கும் ஜூலை 13 முதல் செப் 5 வரை கண்டமிருக்குனு நான் எழுதினதால தான் பயந்துக்கினு என் ப்ளாகை தடைபண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். மறுக்க முடியுமா? எங்க ஸ்டேட்ல என்.டி.ஆர் உயிரோட இருந்தப்பயே ஒரு முன்னாள் ஐ.ஏ,எஸ் பலான தேதில என்.டி.ஆர் செத்துப்போவாருனு தன் பத்திரிக்கைல எழுதினாரு. உடனே ரெஜிஸ்ட் ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் அதை தடை பண்ணலியே (அதும்படியே நடந்தது)

7.என் பதிவுகள்ள ஆபாசமிருந்ததா குற்றம் சாட்டி தடை பண்ணிங்க. ஓகே  உண்மையிலயே நீங்க கலாசார காவலர்களாயிருந்தால்  ஆபாசத்தை வெளியிடற எல்லா வலைதளங்கள், பத்திரிக்கைகளையும்  தடை செய்ய ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்ககூடாது.

(அரசியல், சமூக,பொருளாதார,மீடியா  தளங்களிலான ஆபாசத்தை ஜஸ்ட் 300 டு 400 பேர் பார்க்கிற தம்மாத்தூண்டு ப்ளாக்ல எழுதினதுக்கே என்னை தடை பண்ண வச்சுட்டாய்ங்க பாஸு.  நீ உ.வ பட்டு என் சவாலை ஏத்துக்கிட்டு வேட்டி வரிஞ்சு கட்டுனு புறப்பட்டிங்கனு வைங்க தமிழ் மணத்துக்கு சங்குதான்.வாணாம் ராசா. போர்த்திக்கினு படுத்துக்க. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் -குறள்)