Friday, July 30, 2010

"அவா" மென்டாலிட்டி

நான் இந்த பதிவு மூலமா அவிகளுக்கு சொல்ல விரும்பற மெசேஜ் "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட்"
காலம் மாறிப்போச்சு. இன்னம் நீங்க பழைய நினைப்புலயே இருந்தா எப்படி? உங்க கிட்டே என்ன இருக்குங்கறது சனத்துக்கு தேவையில்லை. சனத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்தா போதும்.

இங்கே அழுத்தினா ஒரு மேட்டர் வரும். இது ஒரு பிராமணோத்தமர் - கிருஷ்ணர் கோவில் அய்யர் கிஷ்ண ஜெயந்தி  பாம்லெட்டுக்காக  எழுதின மேட்டர்.(அவரு தெலுங்குல எழுத வேணம்னே நானு ராமகிருஷ்ண மட வெளியீடுகளோட பாணில லேஹ்ய தமிழ்ல ட்ராஸ்லேட் பண்ணேன்) பாம்லெட்டோட கான்செப்ட் என்ன? பலான தேதி கிஷ்ண ஜெயந்தி வருது அல்லாரும் வாங்கப்பானு, பைசா கொடுங்கப்பானு  கூப்பிடனும். இதுக்கு அந்த  பா.பு எழுதின மேட்டரை பாருங்க. ஏதோ மதிய நேரத்துல போது போகாத பிராமண விதவைகள் மத்தில மைக்ல பேசவேண்டிய மேட்டரையெல்லாம் போட்டு குழப்பியிருக்கு.

இன்னைக்கு அவனவன் பறக்கறான். ஒரு காலத்துல புது சினிமா ரிலீஸுக்கு பாம்லெட் கொடுத்துக்கிட்டு வண்டி போனா தாய் குலம் பசங்களை கெஞ்சு கூத்தாடி வாங்கி படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாய்ங்க. இன்னைக்கு எவனுக்கு நேரம் இருக்கு.

நீங்க ஓஷோவோட "கிருஷ்ணா"வை  படிச்சிருந்தா  இந்த மேட்டர் எந்த அளவுக்கு பத்தாம் பசலித்தனமா இருக்கோ புரியும். கோவில் யாதவர்களோடது. பாம்லெட் போகவேண்டியதும் அவிகளுக்குத்தான். புரிய வேண்டியதும் அவிகளுக்குத்தான்.
ரெஸ்பாண்ட் ஆகவேண்டியதும் அவிக தான். எனக்கு 43 வயசாகுது எனக்கே இந்த மேட்டரை படிச்சா (அடிச்சேன் தலை அதான் சோகம் - கோவில் நிர்வாகிகள்ள ஒருத்தர் நம்ம டைப்பு. ஓஞ்சு போவுதுய்யா அப்படியே அடிச்சு கொடுத்துருனு கெஞ்சிக்கினார்) கடுக்குது.

இன்னைக்கு நூடுல்ஸ், கார்ட்டூன் சேனல்ல மூழ்கியிருக்கிற குட்டீஸுக்காகட்டும், ஜீனு, செல்லுனு பறக்கற டீன் ஏஜர்ஸுக்காகட்டும் இந்த பாம்லெட்டை பார்த்தா என்ன தோணும்? ஓடிப்போயிரமாட்டான்?

அய்யரோட இந்த  லேங்குவேஜுல பொது கக்கூஸுல  ஆண் பெண்கள்னு எழுதினா கூட குழப்பம் வந்துருமே.யாதவர்களை வச்சுத்தான் கோவில்.  கோவிலை வச்சுத்தான் அய்யரு.  யாதவர்கள், யாதவ குல வாரிசுகள் கிருஷ்ணனை பத்தியும், கிருஷ்ண ஜெயந்தியை பத்தியும் ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சிக்கிட்டா அய்யரோட சர்வைவலுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் பாருங்க தன்னோட மேதாவிலாசத்தை காட்டிக்க அய்யரு எழுதின பாம்லெட் மேட்டர் அவருக்கே ஆப்பா முடிஞ்சுரப்போவுது.

தேவையில்லாத மேட்டரையெல்லாம் வரிஞ்சு வரிஞ்சு எழுதின பார்ட்டி உறியடியை அவாய்ட் பண்ணிருச்சு. இப்படிக்குனு வருமே சூத்திரங்களோட பேரு அதையும் அவாய்ட் பண்ணிருச்சு. அதைல்லாம் சேர்த்து ஒப்பேத்தி அடிச்சு முடிக்கிறதுக்குள்ள நெஜமாவே கண்ணை கட்டிருச்சுப்பா

(வேணம்ணே பண்ணாரோ இல்லே தேவையில்லாத மேட்டர்ல சக்தி செலவழிஞ்சு போயிட்டதால ஓஞ்சுபோயி விட்டுட்டாரோ கெரகம்டா சாமி

பி.கு:
என்னதான் கச்சாடாவா இருந்தாலும் ரெண்டு பாயிண்ட் நம்ம கொள்கைக்கு நெருக்கமா வர்ரதால அந்த ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் பச்சை கலர்ல கொடுத்திருக்கேன்.  (க்ரீன் சிக்னல்)  தன் மூளையில படிஞ்சிருக்கிற  வேத, புராண ஒட்டடைகளை  மீறி செய்திருக்கிற  வித்யாசமான முயற்சிகளை  மெருன் கலர்ல கொடுத்திருக்கேன்.( இதுக்கு அதிபதி செவ்வாய். புரட்சிக்கு இவர்தான் காரகர்)