Showing posts with label Astrologer. Show all posts
Showing posts with label Astrologer. Show all posts

Monday, February 21, 2011

போலி ஜோதிடர்களை கண்டறிய

1.வெளித்தோற்றத்தில் அக்கறை -24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப்:

ஒரு பெண்......... பாவம் ஏதோ சின்ன ஹெல்த் ப்ராப்ளத்துக்கு இருபத்து அஞ்சு பைசா மாத்திரை போட்டுக்கிட்ட பாவத்துக்கு என்னா கதியாச்சுன்னு ஜூ.வில போட்டிருந்தான் .கதி கலங்கி போச்சு.

ஒரு நேரம் முடிஞ்சு இன்னொரு நேரம் ஆரம்பிக்கிறச்ச இந்த நிமிசத்துக்கும் அடுத்த நிமிசத்துக்கும் லிங்க் கட்டாயிருது. என்னா வேணம்னா நடக்கலாம். மரணம் உட்பட. இந்த வாழ்க்கைங்கற நாடகமே டிவி சீரியல் மாதிரி படக்குனு கழட்டிவிட்டுட்டு இவருக்கு பதில் இவருன்னு வாழ்க்கை டைட்டில் கார்டு போட்டுருது.

காலகதி அறிந்த ஒரு பார்ட்டி வெளித்தோற்றத்துல அளவில்லாத அக்கறை காட்டறாருன்னா அவர் கோள்களையும் அவற்றின் சஞ்சாரத்தையும்,அவற்றின் பலா பலனையும் முழுக்க நம்பலைனு அர்த்தம்.

சாமானிய சனம் ரொட்டீனுக்கு அலையுதுன்னா அது வேற கதை .அவிகளுக்கு விவரம் போதாது. மேட்டர் தெரியாது.

செருப்புக்குள்ள காலை நுழைப்பான் காது அறுந்திருக்கும். ஒடனே நோயாளி பொஞ்சாதிய தாலியறுத்து ஸ்லாப் மேல இருந்து ஷூ எடுக்க சொல்லி அதுக்கு பாலிஷ் போட்டு போட்டுக்கிட்டு போவான். ஒரு விபத்து நடக்கும் -வேலை போகும் - தலை போகும் -நெஜமாலுமே அவன் பொஞ்சாதி தாலி அறுந்துரும்.

ஒனக்கு செருப்பு போடவே போதாத காலத்துல ஷூ போட்டா கிரகம் ஒத்துக்கிடுமா என்ன? ஒரு நாள் கூட மிஸ்ஸானதில்லை காலைல 5 மணிக்கு டாண்ணு எந்திரிச்சு , வாய் கொப்புளிச்சு , கக்கா போயிட்டு வாக்கிங் .. என்று ஆரம்பிப்பவர்களை பார்த்தா பரிதாபப்படுங்க. அவரோட ஜாதகத்துல உள்ள 9 கிரகங்களோட பலமும் அவரோட ரொட்டீனை மெயின்டெய்ன் பண்றதுலயே சரியாபோச்சு.

மாறாதது மாற்றம் ஒன்றே என்பது. ஜோதிடத்தின் சாரம். சந்திரன் 6 மணி நேரத்துக்கொரு தாட்டி பாதம் மாறிர்ராரு. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் லக்னம் மாறிடும். சைக்காலஜிப்படி கூட மனுசனுக்கு 4 நிமிசத்துக்கொருதரம் லேசா மூட் மாறுமாம். 2 மணி நேரத்துக்கொருதரம் அடியோட மாறுமாம்.

உண்மை நிலை இப்படியிருக்க பார்ட்டி 24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப் தர்ராருன்னா அவருக்கே கோள்களின் சுழற்சியின் மீது நம்பிக்கையில்லை என்று அர்த்தம். தான் முழுக்க நம்பாத மேட்டரை ஒருத்தன் எதிராளிக்கு சொல்றான்னா அந்த பேச்சுல அவனோட வில் கலந்திருக்காது. அது வாய்ப்பாட்டு.ஆன்மாவின் ராகமல்ல.

2.காசே தான் கடவுளடா என்ற நினைப்பு:

சனம் பணத்துக்கு அலையுதுன்னா அதுக்கு பல காரணம் இருக்கு.(ஒரே உயிரில் ஆரம்பித்து -பல்லுயிராய் பிரிந்து - ஓருயிராக மாற உடலே தடை என்ற பிரமையில் -கொலை தற்கொலை என்ற எண்ணத்தின் உந்துதலில் - முடியாதபோது செக்ஸ் -அதுவும் முடியாதபோது பணம் என்று கொன்ற படி கொல்லப்பட்ட படி வாழறாய்ங்க. இதை புரிஞ்சிக்கிடலாம். ஆனா நாளும் கோளும் அறிஞ்ச ஜோசியருக்கு வாழ்க்கையின் நிலையாமை அப்பட்டமா புரிஞ்சு போய் ,டர்ரடிச்சு கிடக்கனும். அப்படி டர்ரடிச்சு கிடக்கறச்சதான் புதிய கதவுகள் திறக்கும். நெஜமாவே காற்றுவரும்.

அடங்கொய்யால பல்லுயிரா பிரிஞ்சாலும் நாமெல்லாம் ஒரே உயிரய்யா, செல்ஃபோன்ஸ் ஆயிரம் பிராண்டுல இருந்தாலும், சர்வீஸ் ப்ரொவைடர் வேறயா இருந்தாலும் , சேட்டிலைட் ஒன்னுதான். நாமெல்லாம் எங்கய்யா பிரிஞ்சோம். பிணைஞ்சுதான் கிடக்கோம். அகந்தையின் காரணமா அதை புரியாமகிடக்கோம்னு புரிஞ்சிரனும்.

இந்த பிணைப்பை உணர்ந்தவனுக்கு சேரனுங்கற துடிப்பில்லை - அதுக்காக கொல்லனும் -கொல்லப்படனுங்கற அவசியம் இல்லை. அதுக்கான ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸையோ பணத்தையோ தேடிப்போகவேண்டிய அவசியமுமில்லை.

மேலும் ஒவ்வொரு ஜாதகம் ,ஒவ்வொரு ஜாதகரும் தன் ஆன்ம சக்தியை உறிஞ்சறதை அவரால உணரமுடிஞ்சுட்டா சாக்கு போக்கு சொல்லி தப்பத்தான் பார்க்கனுமே தவிர காசு காசுனு அலைய முடியாது.

அட்லீஸ்ட் அடப்போங்கடா நீங்களும் உங்க பணமும்.. நேரம்தாண்டா முக்கியம்ங்கற எண்ணம் அவருக்குள்ள பலமா இருக்கனும். அதை விட்டுட்டு அவரு காசை பார்க்கிறாருன்னா அவருக்கு நாளோ கோளோ முக்கியமில்லைன்னுதானே அர்த்தம். தானே நம்பாத ஒன்னை நம்பினதா பம்மாத்து பண்ற அந்தாளோட வாக்கு பலிக்குங்கறிங்களா?


3.பாசிட்டிவ் அப்ரோச் - மார்க்கெட்டிங் உத்திகள்:
கடந்த பாய்ண்டுக்கான விவரணையத்தான் இன்னொரு தாட்டி சொல்லனும். உண்மையான ஜோதிடன் "ஆளை விடுங்கப்பா"ங்கற மூட்ல தான் இருப்பான். வந்தவனை கழட்டி விடத்தான் பார்ப்பான். அதை விட்டுட்டு ஜாதகத்துல உள்ள மைனஸ் பாய்ண்டையெல்லாம் பூசி மெழுகிட்டு அதெல்லாம் ஒன்னும் பண்ணாது கோவில்ல விளக்கு போடுங்க கணக்கா ஜல்லியடிக்கிறான்னா என்ன அர்த்தம்?

தாளி தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபிடிச்சாச்சு. எல்லா கோவில்லயும் பல்புதேன் எரியுது. விளக்குங்கறது கர்பகிருகத்துல ஒன்னோ ரெண்டோ தான் இருக்கு. ஊர் உலகத்துல உள்ளவன் எல்லாம் விளக்கு போட ஆரம்பிச்சா எண்ணைய எங்கன டெப்பாசிட் பண்ணி வைக்கிறதாம்.

மார்க்கெட்டிங் எங்க ஊர்ல ஒரு ஜோசியர் 10 நாளைக்கு மிஞ்சி பலனே சொல்ல மாட்டார். அதுவும் பொத்தாம் பொதுவா இருக்கும். (கஷ்டமோ நஷ்டமோ நடக்கும்/ புதுசா ,நல்லதா எதையாச்சும் செய்விங்க) அதுக்கப்பாறம் என்ன நோண்டினாலும் ஒரு வார்த்தை பெயராது. 11 ஆவது நாள் மறுபடி அவரை போய் பார்க்கவேண்டியதுதேன்.

சிலர் எம்.எல்.எம் மாதிரி ஒருத்தன் மாட்டினா அவனை குழையடிச்சு அவனோட டிபபர்ட்மென்டையே கவுக்க பார்ப்பாய்ங்க. ஒன்னு பலன் சொல்றதால இவிக என்ன இழக்கறாய்ங்கனு தெரிஞ்சிருக்காது அல்லது இவிகளுக்கு இழப்புங்கறதே இருக்காது. ( சூட்சுமமா ரோசிச்சு புரிஞ்சிக்கிடனுங்கோ)


4.தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்:
ஜோதிடத்துக்கு காரகன் புதன். ஜாதகத்துல புத பலம் இல்லேன்னா தான் தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்லாம் வரும். ( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல புதன் பாதி உயிரோட இருந்து இப்படி வியாதிகளையும் கொடுத்து அப்படி பாண்டித்யத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தே கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)

5.ஒழுங்கற்ற பல் , கீச்சுக்குரல் ,திக்குவாய்,பொய் பித்தலாட்டம் -சொந்த ஃபேமிலிலயே வெட்ட்ப்பழி குத்துப்பழி:

ஜாதகத்துல ரெண்டாவதுபாவம் தான் வாக் பலிதத்தை காட்டுது. ரெண்டாமிடம் கெட்டாத்தான் மேற்சொன்ன தீயபலன் எல்லாம் ஏற்படும்.( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல தன பாவமும், தனபாவாதிபதியும் பாதி உயிரோட இருந்து இப்படிப்பட்ட பிரச்சினைகள் + வியாதிகளையும் கொடுத்து அப்படி வாக்பலிதத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)

இன்னம் ஒரு 9 பாய்ண்ட் இருக்குங்கண்ணா அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Sunday, February 20, 2011

கத்தோலிக்க பெரியார்



தமிழ் கத்தோலிக்கன் என்ற வ்லைப்பூவுக்கு சொந்தக்காரர் தாமென்னவோ ஈ.வெ.ரா என்ற நினைப்பில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.ஏதோ ஹிட்ஸை கூட்டிக்க இப்படி ஒரு பதிவை போட்டிருந்தா ஓகே. ( நாமளும் இந்த கேஸ்தானே சுஜாதாவையே கிழிச்சிருக்கன் -ஆனால் அவரோட எழுத்தை படிச்சுத்தேன் எழுத்து மேலயே ஒரு கவுரதை வந்துது -இதையும் மறைச்சதில்லை)

ஆனால் பாவம் ..தான் எழுதினதையெல்லாம் அவர் முழுக்க நம்பி பதிவு போட்டிருந்தா மட்டும் கஷ்டம். தவளை எங்கனா கத்திக்கிடலாம். பாம்பு கண்டுக்கிடாது. பாம்புக்கு மஸ்தா வேலை கீறப்ப, அது ஏதோ தன் வேலைய தான் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப "மணலுள் புதைந்து வாழ் நுணலெல்லாம்" கத்த ஆரம்பிச்சா அதுவும் ஊர் பேர் எல்லாம் மென்ஷன் பண்ணி சவால் கேட்டா விடாது பாம்பு.

இப்படித்தேன் ஒரு பார்ட்டி திருஷ்டி சுத்தி போட்ட லெமன்ல தான் ஜூஸ் போட்டு குடிப்பேன்னு அடம் பிடிச்சது .நம்ம கிட்டே மோதறச்ச ட்ராயிங் டீச்சர். நமக்கு வெட்டிப்பேச்செல்லாம் பிடிக்காதுங்கோ. உடனே ஒரு கால் காயிதம் எடுத்து 5 பாய்ண்ட் எழுதிக்கொடுத்தேன். 6 மாசம் கழிச்சு பேசிக்கலாம்னேன்.கால் காயிதத்துல நாம எழுதிக்கொடுத்தமாதிரி சாக்கடை ஓரமாவே டப்பாவ பிடிச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதாயிருச்சு.

ஆரோ ஒரு ஜோசியரை(?) -ஊர் பேர் போட்டு புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி உபகதையெல்லாம் ஞானும் நிறைய எழுதியிருக்கன். ஆனால் ஊர் பேர் எல்லாம் போடக்கூடாது. தமிழ் கத்தோலிக்கருக்கு என் அறிவுரை இதான். பை தி பை பெரியாரோட வாழ்க்கையில ஒரு சம்பவம். யாரோ வந்து விபூதி நீட்டறாய்ங்க. ( வச்சு விடறாய்ங்களா என்ன ஞா இல்லை) ஸ்பாட்ல எதிர்பார்ட்டி இருக்கிற வரை அதை துடைக்கலை. ஏன்னா விபூதி கொடுத்தவரோட மனசை காயப்படுத்தக்கூடாதுங்கற பெரியமனுஷத்தனம்.

பெரியாருக்கு வமிசா வழியா வந்த கோவில் தர்ம கர்த்தா பொறுப்பை கடைசிவரை நிறைவேத்திக்கிட்டிருந்த கதை தெரியுமா? சாமி பேரை சொல்ல ஊரை ஏமாத்தற சங்கராச்சாரி, நித்யானந்தா மாதிரி சாமிகளை விட ஈ.வெ.ராம சாமி தேன் உண்மையான துறவிங்கறது என் முடிபு.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா - இது உண்மையான ஆன்மீகம். " மானவ சேவே மாதவ சேவா -இது உண்மையான ஆத்தீகம். இது ரெண்டுத்துக்கும் நடுவுல பூந்தா அது அமாவாசை இருட்டு பெருச்சாளினு அர்த்தம்.

பார்ட்டியோட தர்ம சந்தேகம்(?) என்னடான்னா "ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?"
ஏன்யா டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல் வருவது தெரீமானு கூட கேப்பிக போல. பேசிக்கலா ஜோசியரும் ஒரு மனுஷ ஜன்மம் தேன். அவருக்கும் கக்கா,மூச்சா, நல்ல நேரம்,கெட்ட நேரம் எல்லாம் வரும். அவரு தன்னைப்பத்தியே 24 மணி நேரம் ,365 நாள் நினைச்சிட்டிருந்தா மக்களுக்கு என்னத்த சொல்லமுடியும்.
அப்படியே அவரு தன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பார்த்தாலும் அது அவரோட ஜாதகம்னாலும் சனி -செவ் சேர்க்கைக்கு கூட எங்கனா ரிலாக்சேஷன் இருக்கான்னுதான் பார்ப்பாரு. (இதுவே ஊரான் ஜாதகம்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு)

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியணும் தான். அவிக ஈகோ ,தன்னோடதுங்கற எண்ணம் முழுக்க தெரிய விடறதில்லை. அதுக்காவ அது பெரிய டிஸ்குவாலிஃபிகேஷன் ஆயிருமா என்ன?

லாயருக்கு தண்டனை கிடைக்காதா? தாளி தீர்ப்பு சொல்ற நீதிபதிக்கு , சட்டத்தை வடிவமைக்கிற எம்.எல்.ஏ,எம்.பிக்கே தண்டனை கிடைக்குது. ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே கைவிலங்கு போட்டாய்ங்க. அவிகளையும் நம்ம கத்தோலிக்க பெரியார் கூண்ட்ல் ஏத்திருவாரு போல.


"கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" கர்த்தர் வேற கர்த்தரோட படைப்பு வேற இல்லை. கோள்களும் படைப்பின் ஒரு பாகமே. நான் கர்த்தாவுக்கு மட்டும் பயப்படுவேன் அவரோட படைப்புக்கு பயப்படமாட்டேன்னா அது அவிக ஞானத்துக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். நாம அம்பேல்.

//நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது//

பாஸ்! உங்களுக்கு அந்த சந்தேகமே வேணா.. உங்களை மாதிரி பார்ட்டிகளோட சந்தேகத்தை நிவர்த்திக்கத்தான் கடவுள் சூப்பர் டூப்பர் யோக ஜாதகத்துல என்ன மாதிரி ஒரு அராத்தை படைச்சு - உங்களை மாதிரியெல்லாம் பேச வச்சு -ஸ்டெப் பை ஸ்டெப்பா தேத்தி வச்சிருக்காரு.

உங்களுக்கொரு ரகசியத்தை சொல்லவா? என்னோட ஜாதகம் யோகஜாதகம்னு ஜோதிடம் கன்ஃபார்ம் பண்ணாம இருந்திருந்தா தாளி ..நானும் உங்க பக்கம் இருந்துக்கிட்டு உங்களை மாதிரியே வெட்டிப்பதிவு போட்டுக்கிட்டிருந்திருப்பேன்.

//என் ஊரிலுள்ள ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.//

ஒரு ஜோசியருக்கே இல்லை. ஜோதிடத்தை ஜஸ்ட் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம்மா பார்த்து "தொழில்" நடத்தற எல்லா பிக்காலிகளுக்கும் இப்படித்தேன் நடக்கும். மேட்டர் ரெம்ப பர்சனலா போறதால நான் ஜகா வாங்கிக்கறேன் பாஸ்!

//இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.//

பதில் கொடுத்தாச்சு . வவுறு ரெம்பி போச்சா.(தொண்டை வரை வந்திருக்கனுமே ) உங்க நல்ல நேரம் சதீஷ் பார்வைக்கு உங்க பதிவு போகலை போல.அவரும் பரிமாறினாருன்னு வைங்க .. அஜீரணம்தான்

//இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?//
100% தெரியும் வாத்யாரே.. இப்ப நமக்கு செவ் தசையில குரு புக்தி நடக்கு. குரு 6/9 க்கு அதிபதி. மொதல்ல ஒரு வழக்கோ, கைதோ நடக்கும். அப்பாறம் லைம் லைட்டுதேன்.( நம்முது கடக லக்னம் -லக்னத்துல குரு உச்சம்)

தனி மனிதர்களை வைத்து முடிவெடுக்காதிங்க..அப்பாறம் எந்தெந்த பாதிரியெல்லாம் அஜால் குஜால் பண்ணினாய்ங்கனு லிஸ்ட் போடவேண்டிவந்துரும். கிறிஸ்தவம் புனிதமானது - யாரோ ஒரு பாதிரியார் வேணம்னா அராத்தா இருக்கலாம். அதே மாதிரி ஜோதிடம் புனிதமானது. யாரோ ஒரு ஜோதிடர் வேணம்னா டுபுக்கா இருக்கலாம்

பி.கு: தங்கள் உத்தேசம் ஜஸ்ட் ஒரு பரபரப்பை கிளப்புவது மட்டுமேயானால் என் பதிவில் இத்தனை காட்டம் தேவையில்லை. ஆனா என்ன பண்றது நமக்கு வாக்குஸ்தானத்துல சனி. பதிவு உங்க மனசை புண்படுத்தியிருந்தா சாரி.

Saturday, February 19, 2011

ஜோதிடத்தின் பெயரால் மோசடிகள்

முன்னுரை:
தனி நபர்களான குடுகுடுப்பைக்காரர்கள், நடைபாதையில் "பொழப்ப" பார்க்கும் கிளி ஜோதிடர்கள், புரோகிதத்துடன் உபரி வருமானம் கிடைக்கிறதே என்று இதில் தலை கொடுக்கும் பிராமணர்கள், தாங்கள் விக்கிரக ஆராதனை செய்வதாலேயே அவரது படைப்பான கிரகங்கள் தங்களுக்கு ரெம்ப க்ளோஸ் என்ற எண்ணத்துடன் "மேனேஜ்"செய்யும் அர்ச்சகர்கள், என் போன்று இதர சாதியில் பிறந்தாலும் பித்தாகி , பின் ஜோதிடர்களாய் மாறும் ஜோதிடர்கள், எங்களிலேயே தொழில் காரணமாய் கிடைக்கும் அங்கீகாரத்தால் அவாளாகவே மாறிவிட்ட பூச்சிகள் , அரைகுறைகள் முதல் கிராமப்புற ஜோதிடர்கள் வரை சிறிய அளவில் செய்யும் மோசடிகள் ஒருபுறம்.

நகரங்களில் ஏ.சி வசதியுடன் ஆஃபீஸ் ,தனியார் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆயிரக்கணக்கில் ஃபீஸ் என்று பட்டையை கிளப்பும் கார்ப்போரேட் ஜோதிடர்களின் மோசடிகள் ஒரு புறம் ,

பத்திரிக்கைகள், இணைய தளங்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகும் மோசடிகள் மறுபுறம். இப்படி பல முனை தாக்குதல்கள் நடக்கின்றன.

(இவை கூட சில நேரம் பலித்துவிடுகின்றன. சில நேரம் பலித்துப்போனதாலேயே மக்கள் விளக்கை நாடும் விட்டில் பூச்சிகள் மாதிரி மீண்டு மீண்டும் வட்டமிடுகின்றனர். வாட்டமடைகின்றனர். இது எப்படி என்பதை பின்னொரு சமயம் தனிப்பதிவாகவே இடுகிறேன். இப்போதைக்கு அம்பேல்)

இவை மக்களை தவறான வழியில் நடத்துவதோடு ஜோதிடத்தின் நம்பகத்தன்மையையும் குலைத்து வருகின்றன. ஜோதிடத்தின் பெயரால் நடை பெறும் மோசடிகளை விவரிப்பதும் , இவற்றிலிருந்து தப்ப வாசகர்களுக்கு சில டிப்ஸ் தருவதும் இக்கட்டுரையின் முககிய நோக்கம்.

ஜோதிடத்தின் பேராலான மோசடிகளை வெளிச்சம் போடுவது ஒரு ஜோதிடனாய் , ஜோதிட ஆய்வாளனாய் என் கடமை. அவற்றிலிருந்து தப்ப வழி கூறுவது ஒரு மனிதனாய் என் கடமை. ( இதை சேம் சைட் கோல் என்பீர்களோ? கோடாரிக்காம்பு என்று சக ஜோதிடர்கள் வைவார்களோ? அல்லது " இவாள் சொல்லிண்டா அது ஆராய்ச்சி நாம சொன்னா ஏமாத்தா" என்று அவாள் திட்டி தீர்ப்பார்களோ? அதது அவரவர் விருப்பம்.


இனி கட்டுரைக்கு போயிரலாமா?

எது தமக்கு அன் அவெய்லபிளாக இருக்கிறதோ அதற்காக தவிப்பது மனித மனதின் இயற்கை. எதிர்காலம் குறித்த அறிவும் அன் அவெய்லபிள். எனவே தான் மனிதர்களுக்கு ஜோதிடத்தின் மீது இத்தனை கவர்ச்சி. டிமாண்ட் சப்ளை தியரி படி ஒரிஜினல் சரக்குக்கான சப்ளை ரெம்ப ரெம்ப குறைச்சலாக இருக்கிற காரணத்தால் ஜோதிடர்களும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளின் ஜோதிட சிறப்பு பகுதிகளும் கடை பரப்பும் போலி சரக்குகள் சக்கை போடு போடுகின்றன.

கவர்ச்சிக்கு காரணம்:

மேலும் எதிர்காலம் குறித்த அறிவை பற்றி சிந்திக்கும்போது அது ஏதோ ஒரு காலத்தில் நமக்கு 100 சதவீதம் அவெய்லபிளாக இருந்துள்ளது. எப்படியோ அதை இழந்து விட்டோம் என்ற உள்ளார்ந்த உணர்வு நமக்குள் இருக்கிறது. அதை திரும்பபெற வேண்டும் என்ற வெறியும் இருக்கிறது .( ஆம் தற்போதும் அது அவெய்லபிள்தான். ஆனால் நமது மூளையில் உள்ள ஆழமான பகுதிகளில் அது புதைந்துள்ளது. அகந்தை /ஈகோ என்ற திரைக்கு பின்னால்) . தியாகய்யர் மாதிரி " தெர தீயகராதா"ன்னு உயிர் உருக பிரார்த்தனை செய்தால் அதுவாய் விலகலாம். விலகினால் எதிர்காலம் தரிசனமளிக்கலாம்.

முக்கால ஞானம் :

ஆம். முக்கால ஞானம் அனைவருக்கும் இருந்தது . ஏன் இப்போதும் உள்ளது. என்ன ஒரு அசௌகரியம் என்றால் அது வறண்டு வரும் நிலத்தடி நீர் மாதிரி சற்றே ஆழத்துக்கு போய்விட்டது . யூனிவர்சல் மைண்ட் ,இண்டிவியூஜுவல் மைண்ட் இந்த இரண்டு விஷயங்களையும் , இவற்றிற்கிடையே உள்ள வித்யாசத்தை தெரிந்து கொண்டால் நான் சொல்லவரும் விசயம் தெளிவாக புரியும்.

யூனிவர்சல் மைண்ட் & இன்டிவீஜுவல் மைண்ட்:

குழந்தை பிறக்கிறது. அதற்கு தன்னையும், தன்னை சுற்றியுள்ள பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. ஆனால் சுற்றியுள்ளவர்கள் அதன் மூளைக்குள் தான் என்ற எண்ணத்தை புகுத்துகிறோம். அதுவரை தான், தன்னை சுற்றி உள்ளவர்கள், தான் வாழும் இந்த பூமி, நவ கோள்க்ள், பால் வீதி இத்யாதிகளின் முக்காலத்தையும் உள்ளடக்கிய யூனிவர்சல் மைண்டுடன் இந்த பூமிக்கு வந்த குழந்தையின் மூளைக்குள் நாம் புகுத்தும் "தான்" என்ற எண்ணம் சென்று மூளையின் கோடானு கோடி யூரான்களில் முக்காலம் உணர்த்தும் நியூரான் களை தூக்க நிலையில் ஆழ்த்திவிடுகிறது.

இழந்ததை பெறவே துடிப்பு:

நாம் ஒவ்வொருவரும் முக்காலம் உணர்த்தும் யூனிவர்சல் மைண்டுடன் இம்மண்ணுக்கு வந்தவர்கள்தான்.பாழாய் போன ஈகோ நம் மூளைக்குள் நுழைந்து (பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நுழைக்கப்பட்டு) அது இண்டிவியூஜுவல் மைண்ட் ஆக்கிவிட்டது. இதனால்தான் முன்னொரு காலத்தில் நாம் பெற்றிருந்த செல்வம் என்ற காரணத்தால்தான் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஜோதிடத்தின் பேரில் இத்தனை ஈர்ப்பு.


இந்த முக்கால ஞானம் குறித்த ஈர்ப்பு சாதாரணர்க்கே அதிகம் என்றால் புத்திசாலிகள், பற்றி வேறே சொல்வதற்கென்ன இருக்கிறது. இதனால் தான் தமது துறையில் புலிகளாக விளங்கும் அறிவு ஜீவிகள்கூட ஜோதிடத்தின் பால் ஈர்க்கப்பட்டு ,ஜோதிடர்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த ஈர்ப்புக்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஜோதிடம் என்பது லாஜிக்கல் கேல்குலேஷன் தான் என்று என் போன்றவர்கள் கையில் அடித்து சத்தியம் செய்வதே.

என்னதான் பெரியார் குறித்த பயத்தால் இப்படி என் போன்றவர்கள் வாதனை செய்தாலும் அதில் ஒரு வித "நிச்சயமற்ற தன்மை" "இருண்மை தன்மை" இருக்கத்தான் செய்கிறது. அதுதான் மனிதர்களை தன் பால் ஈர்க்கிறது.

உண்மையில் ஏமாற்றுவதே அவர்களின் நோக்கமா ?

இல்லை என்றுதான் கூற வேண்டும் . அறியாமை - போதாமை என்று வேண்டுமானால் சொல்லலாம் . எதிர்காலம் என்பது தேவரகசியம். யாருக்கு இதன் பால் ஆர்வமில்லையோ அவர்களுக்கு மட்டுமே இது தரிசனமளிக்கும் . ஓஷோ சொல்வது போல் அந்தந்த நொடியில் வாழ்பவருக்கு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது. யார் மனதில் அகந்தை இல்லையோ, யார் மனதில் சுய நலம் எள்ளளவும் இல்லையோ அவர்களுககு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது.

அந்த ஆர்வமற்றவர்களுக்குதான் எதிர்காலம் தரிசனமளிக்கும். இந்த எளிய உண்மை சாதாரண மக்களை போலவே ஜோதிடர்களுக்கும் புரிவதில்லை. இதனால் தான் எதிர்காலம் குறித்த அறிவு என்பது குருவித்தலையில் பனங்காய் ஆகிவிடுகிறது. மேற்சொன்ன விவரங்கள் தெரியாது ஜோதிடர்கள் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள் . இதனால் அவர்கள் ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டில்லாத போதிலும் அவர்கள் கூறும் ஜோதிடம் பல்லை இளித்து ஏமாற்று வேலையாகிவிடுகிறது.

அறிவியல் கண்ணோட்டமில்லை:

முதற்கண் மக்களும் ஜோதிடர்களும் ஜோதிடம் குறித்த அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முன் சொன்னாற்போல் யார் மனதில் அகந்தையோ,சுய நலமோ எள்ளளவும் இல்லாமலிருந்தனவோ அந்த ரிஷிகள்,மகரிஷிகள் கிரகங்களின் சஞ்சாரத்தையும், அவை மக்கள் கூட்டத்தின் உடல்,மனம்,புத்தி மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் தொகுத்து எழுதி வைத்துள்ளனர். அவற்றை கூட உருப்படியாக படித்தறியாமல் ஐந்தோ பத்தோ ஜோதிட பழமொழிகளை மட்டும் தெரிந்து வைத்து கொண்டு ஜல்லியடிப்பது தவறு.

கோசார பலன்கள்:

தினசரி,வார, மாத பத்திரிக்கைகளில் வெளி வரும் பலன்கள் யாவுமே கோசாரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்றன. கோச்சார பலன் என்பது தற்போது உள்ள கிரக நிலையை பொருத்து கூறப்படுவதாகும் . ஜாதகர் பிறந்தபோது இருந்த கிரக நிலையை பொருத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது . ஓஷோ கூறுவது போல் தாயின் மணிவயிறு ஒரு கேமரா . ஷட்டர் திறந்து எதிரிலுள்ள காட்சி ஃபிலிமில் பதிவாவது போல் சகல பாதுகாப்புகளுடன் தாயின் வயிற்றிலிருந்த குழந்தை வெளியே வந்ததுமேஅந்த நேரத்து கிரக ஸ்திதி அக்குழந்தையின் மீது அழுத்தமான முத்திரையை பதித்து விடுகிறது. அதற்கு பின் மாறும் கிரக நிலைகளின் (கோசாரம்). பாதிப்பு என்பது புகைப்படத்தின் மீது படியும் தூசு போன்றதே.
ஆனால்பத்திரிக்கைகளும், இணைய தளங்களும் இதனை பெரிய விசயமாக்கி பலன்களை விரிவாக வெளியிட்டு தம் வியாபாரத்தை பெருக்கிக்கொள்கின்றன

கோசாரம் Vs தசாபுக்திகள் :

ஜாதகத்தை வாகனத்தோடு ஒப்பிட்டால் கோச்சாரத்தை சாலைக்கு ஒப்பிடலாம். மோசமான சாலையில் (தற்கால கிரக நிலை) பயணித்த மாத்திரத்தில் நல்லதொரு வேகம் குறைந்து விடாது , புகையை கக்க ஆரம்பித்து விடாது . சக்கரங்கள் கழண்டு போகாது வாகனம் கவிழ்ந்து விடாது. ஏனெனில் அந்த வாகனத்தில் அதற்கான ஏற்பாடுகள் ( உதாரணமாக :ஷாக் அப்ஸர்வர்ஸ்) அற்புதமாக அமைந்திருக்கும்.

மோசமான ஒரு வாகனம் என்ன தான் சிக்ஸ் ட்ராக் சாலையில் பயணித்தாலும் அதன் வேகம் அதிகரித்துவிடப்போவதில்லை. இந்த எளிய உண்மையை அறியாது அல்லது இருட்டடிப்பு செய்து கோசார பலன் களை வெளியிடுவதும். அவை தவறும்போது வாசகர்கள் ஜோதிடத்தையே விமர்சிப்பதையும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். இதனால் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே குறைந்து விடுகிறது.

(பேர்) ராசி பலன்கள்:

ஜாதகர்கள் தாம் பிறந்த நட்சத்திரம் ,பாதம் பிரகாரம் ராசிகளுக்கு அறிந்து கொள்ளும் கோசார பலனே முட்டாள்தனமானது என்று நான் கூறுகிறேன். ஆனால் பல ஜோதிடர்கள் ஜாதகர் வந்து அமர்ந்ததும் பெயரை கேட்டு பலன் சொல்லி முடித்து விடுகின்றனர். நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அந்த நாய் புலியாகிவிடுமா என்ன ? பெயர் என்பது LABLE மட்டுமே ..ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயருக்கு சொல்லும் பலனே 10 முதல் 20 சதவீதம் தான் பலிக்கும் என்ற நிலையில் இந்த பேர் ராசி பலன் களை என்னென்பது ?

திருமண பொருத்தம்:

தனிப்பட்ட பலன்களை ஏறுமாறாக கூறித்தொலைத்தாலும் ஓரளவு மன்னிக்கலாம். ஆனால் ஜோதிடர்களில் பலர் திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும்போதும் வெறுமனே நட்சத்திரத்துக்கும், பெயருக்கும், செல்லப்பெயர், தொட்டிலில் போட்டபெயர் , அந்த கணம் முடிவு செய்த பெயர்களுக்கு பொருத்தம் பார்த்து பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். இது அந்த மண மக்களுக்கே அல்ல அவர்கள் குடும்பத்துக்கும் , ஜோதிடத்துக்கும் செய்யும் துரோகமாகும். இப்படி டுபாகூர் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்து அவதி படுவதை விட சாமி முன்னே பூ போட்டு பார்த்து முடிவு செய்யலாம். அந்த சாமியாவது காப்பாற்றும். அல்லது பெரியார் வழிக்கு சென்று மருத்துவ சோதனை (முக்கியமாக ஹெச்.ஐ.வி ) செய்து முடிவெடுத்தால் பகுத்தறிவு வாதியென்ற பட்டமும் கிட்டும். ஐயா அவர்களின் புனித ஆத்மாவாவது அந்த தம்பதிகளை காக்கும். (ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா /மானவ சேவா மாதவ சேவா என்று வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மாவுக்கு அந்த சக்தி நிச்சயம் உண்டு)

அடைந்தால் மகா தேவி

ஒன்று ஒழுங்காக ஜாதகம் பார்த்து தோஷங்களை ஆராய்ந்து அதன் பிறகு நட்சத்திர பொருத்தம் பார்த்து ரஜ்ஜு,நாடி வெவ்வேறாக வந்தால் திருமணம் செய்ய வேண்டும். இல்லையா ஒன்று சாமி அல்லது ராமசாமி ! (பெரியார்) வழியை பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டு டுபாகூர் ஜோதிடர்களிடம், டுபாகூர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கேணத்தனம்.

ஆஹா ! ஓஹோ ! பலன்கள்:

சில ஜோதிடர்கள் முகஸ்துதி செய்தே ஜாதகர்களை ஒழித்து கட்டிவிடுவார்கள். வெறுமனே சில பாடல்களை பாடி அந்த யோகம் இந்த யோகம் என்று அளந்து விடுவார்கள். அடிப்படையான விஷயங்களை மறைத்து விடுவார்கள். ஜாதகத்தில் ஆயிரம் யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்கும் அமைப்பு அந்த ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக லக்னம்,லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும். லக்னம் முதல் 6,8,12 இடங்கள் காலியாக இருக்க வேண்டும். இந்த இடத்ததிபதிகள் லக்னாதிபதியை பார்ப்பதோ, அவருடன் சேர்வதோ கூடாது. முக்கியமாக லக்னாதிபதி நீசமடைதல், அஸ்தங்கதம் அடைதல் ,ராகு கேதுக்களுடன் சேருதல், பகை கிரகங்களுடன் சேருதல் இத்யாதி அமைப்புகள் கூடாது.

யோகத்தை அனுபவிக்க நிபந்தனைகள்:

ஏதோ ஒரு கிரகம் உச்சமானவுடனே அண்ட புளுகு,ஆகாச புளுகை அளந்து விட்டால் மயங்கி விடாதீர்கள். அந்த கிரகம் உங்கள் லக்னத்துக்கு யோககாரகனாகவோ ,கு.பட்சம் சுபனாகவோ இருக்க வேண்டும். நீசம்,ஹஸ்தங்கதம், மற்றொரு உச்சனால் பார்க்கப்படுவது போன்ற அவயோகங்கள் இருக்ககூடாது. நீங்கள் அந்த கிரகம் தொடர்பான துறை,தொழிலில் இருக்க வேண்டும். அந்த கிரகம் தொடர்பான மனிதர்களுடன் உறவாட வேண்டும். உங்களுக்கு இண்டியன் வங்கியில் கணக்கு திறந்து ஒரு நபர் அதி கோடி ரூபாய் போட்டிருந்தாலும் கு.பட்சம் ஏடிஎம் அட்டை வாங்கவாவது அந்த வங்கிப்பக்கம் போனால் தானே பணம் எடுக்க முடியும்.


நியூமராலஜி /நேமாலஜி :

அஸ்ட்ராலஜியில் கணக்கற்ற விதிகள் இருப்பதாலோ என்னவோ தொழில் முறை ஜோதிடர்களில் பலர் நியூமராலஜி /நேமாலஜிக்கு மாறிவிட்டனர். மக்களில் பலருக்கும்
முக்கியமாய் நடு வயதில்முன்னேறியவர்களுக்கும் பிறந்த தேதி இத்யாதி தெரியாத நிலையில் இவற்றிற்கு ஆதரவு பெருகி வருகிறது. (மேலும் ஜாதக நோட்டை தூக்கிகொண்டு அலையவேண்டி வராதே)

அஸ்ட்ராலஜி Vs நியூமராலஜி :/நேமாலஜி

அஸ்ட்ராலஜியில்கிரகங்கள், நியூமராலஜியில் எண்கள் அவ்வளவுதானே வித்யாசம் என்று நீங்கள் நினைக்கலாம். நியூமராலஜியில் உள்ள சிக்கல் என்ன என்றால் இதில் கூறப்படும் பிறப்பு எண் , கூட்டு எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலிமையுடன் வீற்றிருந்தால் தான் நியூமராலஜி நிபுணர் (?) கொடுக்கும் ரிசல்ட் ஒர்க் அவுட் ஆகும். இல்லையென்றால் நீங்கள் கொடுத்த காசு காக்கா தூக்கிட்டு போனமாதிரிதான். இதே விதிதான் நேமாலஜிக்கும். உதாரணமாக சுக்கிரன் சுபனாக பலனளிக்கும் ஜாதகத்தில் நீங்கள் பிறந்திருந்து , சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தாலன்றி நேமாலஜிப்படி செய்யும் பெயர் மாற்றங்கள் இத்யாதி காதலிலோ,
திருமணத்திலோ வெற்றியை தராது.

அனுபவ அறிவு:

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதி வைத்த விதிகளை மனப்பாடம் செய்து கொண்டுவிட்டால் மட்டும் போதாது. அவை அனுபவத்தில் எந்த அளவு பலிக்கின்றன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் எதையோ தப்பாக எழுதியிருக்கக்கூடும் என்று நான் கூற வரவில்லை. அவர்கள் எழுதிய போது இருந்த அரசாங்கங்கள் வேறு, அன்றைய சமுதாயம் வேறு , அன்றைய வாழ்க்கை முறை வேறு, அன்றைய கல்வி முறை வேறு. குடும்ப அமைப்பு வேறு . அன்றைய மன அமைப்புகள் வேறு. அவர்கள் அந்த காலத்துக்கு பலன் எழுதி வைத்தார்கள். அவை இன்றும் அதே அளவில் உண்மையாகும் என்பதற்கு என்ன கியாரண்டி ? இதனால் தான் நான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். செவ்வாய் எட்டிலிருக்கிறார் என்று உடனே பலன் கூறிவிடாது அந்த செவ்வாய் கிரகம் கடந்த காலத்தில் தன் புக்திகளில் எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ரஃப் கேல்குலேஷன் மற்றும் கணிப்புகள் மூலம் கேள்விக்கணைகள் தொடுத்து அறிய வேண்டும் .ஜாதகரின் கல்வி,வேலை,குடும்ப பின்னணி, இவற்றையும் கருத்தில் கொண்டு பலன் கூற வேண்டும் .இதுவே அனுபவ ஜோதிடம் .

அவ்வாறன்றி "அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழி என்பது போல் பலன் சொல்லும் ஜோதிடர்களால் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை நசிந்து போவதோடு ,தவறான வழி காட்டுதலால் கெட்டுப்போனவர்களின் சாபமும் வந்து சேரும்.

அடுத்த பதிவு:
அடுத்த பதிவில் ஜோதிடத்துக்கும் வாஸ்துக்கும் உள்ள தொடர்பென்ன ? வாஸ்து பெயரால் நடைபெறும் மோசடிகள் என்ன என்பதை விவரிக்க உத்தேசம்.நான் ரெடி நீங்க ரெடியா ?

Saturday, December 11, 2010

சோதிடம் தன்னை இகழ்

சோதிடம் தன்னை இகழ், அப்படின்னு நான் சொல்லலீங்க. நம்ம பாரதி தான் சொன்னாரு. அவரபத்தி நான் சொல்லனுமா என்ன? அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?

ஒரு வாரமா இதே சிந்தனைல இருந்தேன். முருகேசனும் எதாவது போடுங்க, போடுங்கன்னு சொல்லிட்டே இருந்தாரா... அதான் இப்படி ஒரு பாம் போட்டுட்டேன்.

சோதிடம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால ஜாதகம் அப்படின்னுதான் சொல்லுவாங்க... அதாவது சாதகமா சொல்லுறது...யாருக்கு? எவன் குறைகேட்டு வார்ரானோ அவனுக்கு... என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது? நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?

என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா? நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற... உங்க அவசரத்துக்கு நாங்க என்ன பிரியாணியா?

நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...

“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...

ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?

இப்ப நான், இனிமே என்ன சொல்ல போறேன்னு கண்டு பிடிச்சீங்களா? என்னடா உள்ள இருந்துகிட்டே நோண்டறேன்னு நினைக்கிறீங்களா? இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்...

மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...

ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...

சா(ஜா)தகமே இல்லன்னாலும் பரவாயில்ல, வாங்க பிரிச்சு மேஞ்சிரிவோம்... சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு... நாம கேக்குற கேள்வில பத்து பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற நிலமை வரணுங்கோ... அப்புறம் எங்கே பதிவு போடுறது... அதனால நல்ல பலமான கேள்வியா தயாரிங்க...

Sunday, July 25, 2010

ஒரு ஜோதிடரின் ஓப்பன் டாக்

ஒரு ஜோதிடனாக சில விஷயங்களை  மனம் விட்டு  ( வேணம்னா மானம் விட்டுனு கூட வச்சிக்கலாம்) பகிர்ந்துக்கலாம்னு இந்த பதிவை போடறேன்.

நீங்க ஜோசியர்கிட்டே போறிங்க. அவரு உங்க ஜாதகத்துல கிரகங்களோட இருப்பை வச்சி முதல்ல ஒரு சில கேள்விகள் கேட்பார். உ.ம் நீங்க தான் கடைசி பிள்ளையா?

உடனே நீங்க "அடங்கொய்யால இத  கூட கரெக்டா சொல்லத்தெரியல"னு ஜோசியரை பத்தி அண்டர் எஸ்டிமேட் போட்டுருவிங்க. உங்க  ஜாதகத்துல இளைய சகோதரத்தை காட்டற 3 ஆவது இடத்துல பாப கிரகம் இருந்திருக்கும் அதை வச்சி அவர் இப்படி சொல்லியிருப்பார் 3 ஆவது இடத்துல பாப கிரகம் இருந்தா நீங்க கடைசி வாரிசா இருக்கிறது ஒன்னு மட்டும் பலனில்லை.  அதுக்கு அனேக பலன் கள் சொல்லப்பட்டிருக்கு.  உதாரணமா : இங்கன பாபகிரகம் இருந்தா உங்க சவுண்ட் பாக்ஸ் அவுட்டாகலாம். உங்களுக்கு பிறகு பெண் குழந்தைகளே பிறந்திருக்கலாம். ஆண் குழந்தை பிறந்திருந்தாலும் அது ஜாதகரை விட இன்ஃபிரியர் க்வாலிட்டியோட இருக்கலாம். அல்லது வேறு இடத்துல வளரலாம். அல்லது ஜாதகருக்கு அப்புறம் அவிக அம்மாவுக்கு மிஸ் கேரி நடந்திருக்கலாம்.இப்படி மானாவாரியா பட்டியல் போட்டா பையில கல்லை போட்டு மாங்கா அடிச்ச கதையாயிராது

உண்மை நிலவரம் என்னடான்னா ஜோசியம்ங்கறதே ஒரு அட்வென்சர். எதிர்காலம்ங்கறது  கடவுள் கையில இருக்கிற அஜெண்டா. அது கடைசி நொடி கூட மாற்றப்பட வாய்ப்பிருக்கு.  ஜோசியம்ங்கறதே அந்த அஜெண்டாவை காப்பியடிக்கிற மாதிரிதான்.

மேலும் ஜோசியர்கிட்ட நீங்க காட்டினது உங்க ஜாதகத்தை மட்டும் தான்.அதுவும் மிஞ்சிப்போனா ராசி சக்கரம் , நவாம்ச சக்கரம் கொஞ்சம் போல விவரம் தெரிஞ்சவுகளா இருந்தா பாவ சக்கரம்.சாதாரணமா ராசி சக்கரத்துக்கும் பாவச்சக்கரத்துக்கும் மாற்றமே இருக்காது.

( நம்ம ஜாதகத்துல ராசியில ஏற்படாத குருசந்திர  சேர்க்கை கடகலக்னத்துலயே ஏற்பட்டிருக்கு - இந்த அமைப்பு ஸ்ரீராமனோட  ஜாதகத்துல இருந்ததாம். அதனால தான் 14 வருஷம் வனவாசம் அனுபவிச்சாராம்.- நம்ம கதையை எடுத்துக்கிட்டா 1993லருந்து  2007 வரை வனவாசம்  தான். கூடிய சீக்கிரம் பட்டாபிஷேகம் நடக்கப்போவுதுங்கோ. தமிழ் மணம் மாதிரி பார்ட்டிங்களுக்கு இந்த மேட்டர் தெரியாம  தடை பண்ணியிருக்காய்ங்க)

என்னதான் நல்ல டாக்டரா இருந்தாலும் ரிப்போர்ட்ஸ் கரெக்டா இருந்தாதானே கரெக்டா டயக்னைஸ் பண்ண முடியும். ஒரு ஜாதகத்துல ஒரு கிரகம் வலிமையா இருக்கா இல்லையானு டிசைட் பண்றதுக்கு 116 ரூல் இருந்தாலும் கிரகங்களோட பலங்களை அனுபவத்துலருந்துதான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அதனாலதான் நம்ம ஜோசியத்துக்கு அனுபவ ஜோசியம்னு நாமகரணம் பண்ணியிருக்கேன்.

சொம்மா மொக்கையெதுக்கு அண்ணாத்தை ! "அஸ்ட்ராலஜி மீன்ஸ் ஆப்ஷன்ஸ்"னு ஒரே வார்த்தைல சொல்லிரலாம். ஆமாங்கண்ணா. உ.ம் 1-7 ல ராகு கேது இருக்குதுனு வைங்க. உடனே அவன் விதவையோட தான் கெட்ட காரியம் பண்ணுவானு அடிச்சு சொல்லிரமுடியாது. இந்த கிரக ஸ்திதிக்கு சொல்ல வேண்டிய பலன்கள் பலப்பல இருக்கு. 

ஒரு ஜோசியரால மேற்படி பலன் களையெல்லாம் ஒரே மூச்சில சொல்லிரமுடியாது. இதான் நிலைமை. மேலும் இதை சைன்ஸ்னு நிரூபிக்க நான் உள்பட மஸ்தா பேரு ட்ரை பண்ணியிருக்காய்ங்க. இது சைன்ஸுதான்  ஆனால் மிஸ்டிக் சைன்ஸ்.

எதிர்காலம்ங்கறது தேவ ரகசியம். அதை டீ கோட் பண்ண தெய்வத்தோட அனுமதி தேவை. இந்த பதிவுல சொன்ன மாதிரியான  தர்ம சங்கடங்களை தவிர்க்க  ஜோசியருங்களுக்கு சில டிப்ஸ் தரேன். ( உங்க குடும்ப ஜோசியருக்கு இந்த பதிவொட ப்ரிண்ட் அவுட் ஒன்னை கொடுத்துருங்க தலை)

1.நான் சொல்றேன் நீ கேட்டுகங்கற ஸ்டைல் உதவாது
2.ஜாதகத்துல கிரகங்கள் நின்னதுக்கான பலன்  நீங்க படிச்சு உருப்போட்ட புஸ்தவங்கள்ள இருந்தா போதாது. ஜாதகனுடைய வாழ்க்கைல நடந்திருக்கனும். யானை வரும் பின்னே  மணி ஓசை வரும் முன்னேங்கற மாதிரி எதிர்காலத்துல பெரிய எஃபெக்டை கொடுக்க வேண்டிய கிரகம் ஆரம்பத்துல சின்ன சின்ன லொள்ளா கொடுத்திருக்கும். அதை ஜாதகர் கிட்டே பேசி கன்ஃபர்ம் பண்ணிக்கனும்.

3.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க, ராகு கேதுக்களுடன்  மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான். ராகு,கேதுக்களோட சேர்ந்தா சர்ப்ப தோஷ எஃபெக்டே வந்துருதுங்கண்ணா

4.லக்னாதிபதி ,ராசியாதிபதி ரெண்டு பேர்ல யார் ஸ்ட்ராங்கா இருககாங்கனு பாருங்க. ஒரு வேளை ராசியாதிபதி பவர் ஃபுல்லா இருந்தா ராசியையே லக்னமா வச்சி பலன் சொல்லுங்க .

5.கிரகங்களோட உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளை பாருங்க. அஸ் ட்ராலஜி கூட அல்ஜீப்ரா மாதிரி தான் . மைனஸையும் மைனஸையும் கூட்டினா ப்ளஸ் ஆயிரும். ப்ளஸ்ஸையும்,ப்ளஸ்ஸையும் கூட்டினா மைனஸ் ஆயிரும். அதாவது :
நீசனை நீசன் பார்த்தா நீசம் பங்கமாகும். உச்சனை உச்சன் பார்த்தா ரெண்டு பேரும் டப்பாஸு.

6.பரிவர்த்தனம் ஏதாவது இருக்கா பாருங்க . அவர் வீட்ல இவர் .இவர் வீட்ல அவர் . அப்படியிருந்தா ரெண்டு பேருமே ஆட்சில இருக்கிறாப்லதான்.


7.கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் இருக்கு.  இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ங்க.

இப்போ ஏற்கெனவே எழுதி அந்திமழைல டாப் லெவல் ஹிட்ஸ் பெற்ற "ஜோதிட மர்மங்கள் ஆயிரம்" பதிவை அப்படியே கட் பேஸ்ட் பண்ணியிருக்கேன். படிச்சு பாருங்க

நீங்க சொல்ற் நல்ல பலன்/கெட்ட பலன் தவற பல காரணங்கள் இருக்கு . உதாரணத்துக்கு சிலதை பாருங்க ( இலக்கண தமிழுங்கோ)

1.எல்லா கிரகங்களும் செவ்வாய்க்கு பின்னே தங்கியிருத்தல்
2.எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களிடையில் சிக்கியிருந்தல்
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.