Tuesday, July 27, 2010

அனுமார் காட்சியளிக்காததால் பக்தர் தற்கொலை

அண்ணே வணக்கம்ணே பதிவு அனுமார்ல இருந்து அனுமார் மாதிரி பெரியாருக்கு தாவுது. கேராயிராம படிங்க மேட்டர் கீது. மேலும் சரஸ்வதி சபதம் தொடருது. உடுங்க ஜூட்

ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.

இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு  கமெண்ட் அடிப்பாய்ங்க.  நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.

பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும்,  வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு  சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.

நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.

குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.

படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட  வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.

கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து  ஸ்வாதிஷ்டானத்தை  நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே  கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.

தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா  ஆசனப்பருவம் தாண்டி ,  செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.

இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல   தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) .  குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க.  குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.

பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .

மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க  பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான ,  சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும்.  குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.

குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே  கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.

ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை  எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.

எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்"  தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்?  ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.


கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?

நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள்  சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க

எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர்  ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே  காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..