Thursday, July 22, 2010

சமையல் பாத்திரங்கள்ள மலம் கழிச்சு வச்சிருந்தா

எண்ணங்கள் ஈடேற, கனவெல்லாம் நனவாக (  நமீதா கனவுகள் தவிர) உங்க தொகுதில இடைதேர்தல் வர, இப்படி உங்க மனசுல என்னெல்லாம் கோரிக்கைகள் இருக்கோ இதெல்லாம் நிறைவேற ஒரு வழி சொல்லப்போறேன். பதிவை நக்கலா ஆரம்பிச்சாலும் ரெம்ப சீரியஸ் மேட்டருங்கண்ணா

நம்மள மாதிரி சாமானியப்பட்டவுக மட்டுமில்லே, பெருந்தலைவிகள்,தலைவர்கள் உட்பட எத்தை தின்னா பித்தம் தெளியும்னு அலையறாய்ங்க.  அனைத்து மானில லாட்டரிகள் மாதிரி அனைத்து மானில கோவில் கோபுரம்லாம் போயி உருண்டு புரள்றாய்ங்க.

மனசுக்கு பிரச்சினை வரும்ங்கறது வெஸ்டர்ன் தியரி. மனசே பிரச்சினைங்கறது ஈஸ்டர்ன் தியரி (நன்றி: ஓஷோ).

மனசே பிரச்சினையா? எப்டி எப்டி எப்டினு ரஜினி காந்த் மாதிரி கேட்கிறிங்க அப்படித்தானே.

இப்போ ஊருக்கு வெளிய ஒரு நல்ல லொக்கேஷன்ல இருக்கிற ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் . ஃபேமிலி ரூம்ல உங்க லவரோட ஃபலூடா சாப்பிட்டுக்கிட்டிருக்கிங்க. சூப்பர் சிச்சுவேஷன். ஆனால் இந்த மனசிருக்கே மனசு இன்னா பண்ணுது ? ஐயய்யோ ஃபலூடா தீர்ந்துக்கிட்டிருக்கே, சாப்பிட்டு முடிஞ்சதுமே வெளிய போகனுமே ,அவள் அவள் வீட்டுக்கு போயிருவாளேனு பதைக்குது.

ஏன்? உங்க மனசு எதிர்காலத்துக்கு தாவிருச்சு.

ரஜினியோட ஆருயிர் நண்பர் டாக்டர்(?) மோகன் பாபு . ஒரு பேட்டில சொன்னார்

" அப்ப நான் மெட்ராஸ் வந்து சினிமா சான்ஸுக்காக அல்லாடிக்கிட்டிருக்கேன்.ஒரு கார் ஷெட்ல குடியிருந்தேன். நேரம் கிடைக்கிறப்ப நானே சமைக்க சில பாத்திரம் வச்சிருந்தேன். ஒரு மாசம் வாடகை கொடுக்க லேட்டாயிருச்சு. ஹவுஸ் ஓனர் ஒரு பொம்பள. அவள் என்ன பண்ணா தெரியுமா? கார் ஷெட்ல வச்சிருந்த என்னோட சமையல் பாத்திரங்கள்ள மலம் கழிச்சு வச்சிருந்தா.."

இதை சொல்றப்ப மோகன்பாபுவோட ஃபீலிங்ஸ், வோர்டிங்ஸ், மாடுலேஷன் எல்லாம்  டிவி  ஸ்டுடியோல   இருக்கிறாப்ல இல்லே. அந்த ஹவுஸ் ஓனர் மலம் கழிச்சிருந்த பாத்திரங்களை பார்த்துக்கிட்டு பேசறாப்லயே இருந்தது.

அதாவது அவர் அந்த வாழ்க்கைய மறுபடி வாழ்ந்தாரு. எப்படி? அவர் மனசு இறந்த காலத்துக்கு தாவிருச்சு.

இப்போ புரியுதா? மனம்னா நினைவுகள். அதுவும்  நிகழ் காலத்துல நிக்காம இறந்த காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் தாவற நினைவுகள். இந்த நினைவுகள் எந்த வடிவத்துல சேகரிக்கப்பட்டிருக்குன்னா நூத்துக்கு தொன்னுத்தொன்பது சதவீதம் வார்த்தைகளாத்தான் சேகரிக்கப்பட்டிருக்கு.

ஒரு சின்ன டெஸ்ட் முத முதலா நீங்க லவ் லெட்டர் கொடுத்த அம்முலுவோட முகத்த்தை நினைவுக்கு கொண்டுவாங்க பார்க்கலாம்.

1
2
3
4
5
அஞ்சு நிமிஷம் முக்கினாலும் ஞா வரலை பார்த்திங்கல்ல. ஆக மனம்ங்கறதே வார்த்தைகள். வார்த்தைகளை எப்படி  நீக்கறது? ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ல வைரஸ் புகுந்து மொத்த ஃபைலும் கரப்ட் ஆயிருச்சு   அதை ஒழுங்கு பண்ணனும்னா என்ன பண்ணனும்? ஃபார்மெட் பண்ணனும். மனசுங்கற ஹார்ட் டிஸ்கை ஃபார்மெட் பண்ண சின்ன ட்ரிக் இருக்கு. ஏதாவது ஒரே எழுத்தை அ ஒரே  வார்த்தைய மறுபடி மறுபடி ஜெபிக்கனும்.

அப்போ உங்க நிகழ்கால வாழ்க்கைக்கு தேவையில்லாத டேட்டா எல்லாம் எராஸ் ஆயிரும். 1986 வரை என் மண்டைல என்னென்னமோ பாடாவதி சினிமா லிரிக்,டயலாகெல்லாம் குப்பையா கிடந்தது. ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்ச பிறகு
( 24 ஹவர் சர்வீஸுங்கண்ணா. என்ன செய்துக்கிட்டிருந்தாலும் ஒரு ட்ராக்ல போய்க்கிட்டே இருக்கும்)

ஜெபம்ங்கறது ஜஸ்ட் ஃபார்மெட் தானா? இதைவிட புதுசா ஒரு மொழிய கத்துக்கறேன். புதுசா ஒரு குட்டிய கரெக்ட் பண்றேனு சொல்விங்க. ஜெபத்துக்கும் நீங்க சொல்ற ஐட்டங்களுக்கும் இடையில சின்ன வித்யாசம் இருக்கு, நீங்க சொல்ற மேட்டர்ல இறங்கினா மெமரி டிஸ்க் மேலும் மேலும் ஃபுல்லாகுமே தவிர டி ஃப்ராக்மென்டைசேஷன் ஆகி ஸ்பேஸ் கிடைக்காதுங்கோ.

ராம நாமம் ஜெபிக்கிறச்ச கூட மெமரி அதிகரிக்கும்தான் . எதுவரை? ஏதோ அந்த காலத்து ஆஞ்சனேயர்,  நம்ம காலத்துக்கு முந்தின காலத்து காந்தி தட்ஸால்.

இது கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா மூலாதார சக்கரத்துல நித்ராவஸ்தைல இருக்கிற குண்டலி விழிப்பு பெறுது. எப்படி? சொல்றேன் சொல்றேன்.

வாயும், ஆசனவாயும் ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவுமா இருக்குது. ஒரு எழுத்தோட "ம்" சேர்த்து ஜெபிக்கும்போது அது பீஜாட்சரமாகுதுனு சொல்றாய்ங்க. நீங்க வாயால "ம்" சேர்த்து ஜெபிக்கும்போது ஒரு குழாயோட வாயை மூடினா அதன் பின் விளைவு மறுவாயையும் பாதிக்குமில்லியா? மேலும் நாம ஜபம்ங்கறது வாய் விட்டு சொல்றதில்லை. அஜபம்ங்கறாய்ங்க. அதாவது ஜபமல்லாத ஜபம். மனசுக்குள்ளாற ஜெபிக்கிறது.

இந்த கண்ணுக்கு தெரியாத அதிர்வுகள் ஆசனத்து சற்று மேல் பாகத்துல இருக்கிற மூலாதார சக்கரத்துல போய் முடியுது. அடி மேலடி அடிச்சா அம்மியும் நகரும்ங்கற மாதிரி இடைவிடாத  இந்த அதிர்வுகளால குண்டலி விழிக்குது.  ஓட்டுப்போடற சனம் விழிச்சிக்கிட்டாலே புரட்சி ஏற்பட்டுருங்கற போது குண்டலி விழிச்சா என்னென்ன அற்புதங்கள் நடக்கும்னு தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க.

சரி என்னவோ ஒரு எழுத்து அதோட ம் சேர்த்து (பீஜம்)  ஜெபிச்சாலே (அஜபம்) இவ்ளோ எஃபெக்டு. சப்போஸ் நீங்க இந்த தியரியெல்லாம் தெரிஞ்சிருந்து போன ஜென்மத்துலயே ஒரு பீஜாட்சரத்தை ஒரு  இருபது வருசம் போல ஜெபிச்சிருக்கிங்கனு வைங்க. அந்த பீஜாட்சரம் மட்டும் எதுனு தெரிஞ்சு இந்த ஜென்மத்துல அதையெ கன்டின்யூ பண்ணா எப்படி இருக்கும்?

இந்த எண்ணம் நம்ம ரிஷிகள்,மகரிஷிகளுக்கும் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் அவிக இதை டீகோட் பண்றதுக்கு ஒரு வழி செய்துவச்சிருக்காய்ங்க. அந்த வழி என்னன்னா
இயற்கை மேல கொச்சையா சொன்னா கடவுள் மேல அவருக்கு மனிதர்கள் பால் இருக்கிற கருணைய அடிப்படையா வச்சி ஆராய்ச்சி பண்ணாய்ங்க.

ஒவ்வொரு நட்சத்திர( கூட்டத்)த்தோட அதிர்வுக்கும் சில எழுத்துக்களை உச்சரிக்கிறப்ப ஏற்படற த்வனிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதை கவனிச்சாய்ங்க. சந்திரன் ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தினூடே சஞ்சரிக்கிறப்ப பிறக்கிற குழந்தைகள் ஒவ்வொரு விதமான குணாம்சங்களோட இருக்கிறதை கவனிச்சாய்ங்க.

ஒரு குழந்தை ஏன் குறிப்பிட்ட நட்சத்திரத்துலயே பிறக்கனும். புனரபி மரணம் புனரபி ஜனனம். உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதை  பார்த்தா இந்த பிறப்புகளுக்கு இடையில் ஒரு லிங்க் இருக்கனும். ஒரு நோக்கம் இருக்கனும். அது என்ன? ஒரு இலக்கை நோக்கின பயணம் இது. இந்த பயணம்  தடையில்லாம நடக்கனும்னா அதுக்கு சில ஏற்பாடுகள் அவசியம். அதை அவிக செய்தாங்க.

ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துல பிறந்தா அதனோட உடல்,மனம் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்களோட த்வனியை  அதனோட அதிர்வுகளை ஏத்துக்கிட்டு வலுப்படறதை பார்த்துத்தான்  இன்ன நட்சத்திரத்துல பிறந்த குழந்தைக்கு இன்ன எழுத்துல துவங்கறாப்ல பேர் வைக்க சொன்னாய்ங்க.

இன்ன எழுத்துல துவங்கற பேரை கொண்ட பெண்ணை கண்ணாலம் கட்டனும்னு தீர்மானிச்சாய்ங்க. அதுமட்டுமில்லிங்கண்ணா இன்ன நட்சத்திரத்துல பிறந்து இன்ன எழுத்துல துவங்கற பேரை கொண்டவன் இன்ன எழுத்தோட "ம்" சேர்த்து (பீஜம்) ஜெபிக்கனும்னும் ஒரு ஏற்பாடு பண்ணாய்ங்க. ஏன்னா அந்த எழுத்தைத்தான் அவன் கடந்த பிறவில ஜெபிச்சிருக்கக்கூடும்னு அவிக ஆராய்ச்சில கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு  ரகசிய விஞ்ஞானம்.

எந்த பிராமணரோடவும் எனக்கு வாய்க்கா தகராறு கிடையாது, வரப்பு தகராறும் கிடையாது. இருந்தாலும் நான் பிராமணீயத்தை கச்சா முச்சானு விமர்சிக்கிறேன்னா
அதுக்கு காரணம் இந்த மாதிரி ரகசிய விஞ்ஞானங்கள் பலதை அவிக ரகசியம் ரகசியம்னு மூடிவச்சு கடைசில அவிக வாரிசுகளுக்கு கூட கிட்டாம செய்துட்டாய்ங்க. இதான் இதான் என் கடுப்புக்கு காரணம்.

ஓம் நமோ நாராயணாய - இது அஷ்டாட்ஷர மந்திரம். இதை ராமானுஜருக்கு உபதேசிச்ச பார்ட்டி இதை லீக் பண்ணா நீ நாசமாயிருவனு சொன்னாராம்.ஒடனே ராமானுஜர் தாளி நாசமானா நான் ஒருத்தன் தானே நாசமாவேன். ஆனா இந்த அஷ்டாட்ஷர மந்திரம் சனங்களுக்கு கிடைச்சிட்டா பல்லாயிரக்கணக்கான பேர் முக்தியடைவாங்களேனு ரோசிச்சு கோபுரத்து மேல ஏறி நின்னுக்கிட்டு மேற்படி மந்திரத்தை  கூவிச் சொன்னாராம். சொல்லிட்டு கோபுரத்து மேல இருந்து குதிக்க  நாராயணரே வந்து கேட்ச் பண்ணி காப்பாத்தினாராம்.

இந்த ஸ்பிரிட் எத்தனை ஐயர்மாருக்கு இருந்திருக்கு ? அப்படி இருந்திருந்தா இந்த நிலை ஏன் வரப்போகுது.  சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துர்ரன். ஓகே இதுவரை சொன்ன தியரிய லாஜிக்கலாவோ அல்லது என் பேர்ல இருக்கிற நம்பிக்கையாலயோ ஏத்துக்கிட்டிங்கனு நினைக்கிறேன்.  பெயர்களிலான  முதலெழுத்து - நீங்க "ம்" சேர்த்து  ஜபிக்க வேண்டிய எழுத்தையும் தந்திருக்கேன். எழுத்துன்னா அந்த ஒரு எழுத்து மட்டும் கிடையாது "க"ன்னா க,கா,கி,கீ முதல் கௌ வரை.

பை தி பை இந்த பீஜம், மந்திரம் மேட்டர்ல எல்லாம் உச்சரிப்பு ரெம்ப முக்கியம். அதனால உச்சரிப்பை ஆங்கிலத்துலயும் தந்திருக்கேன்.

உங்கள் பெயரில் முதலெழுத்து:
அ, ka,ஹ, த்த (உ.ம் தமிழ்)

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
pa,ர,ta

உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஆ,த (உ.ம் தர்மம்), kka

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஐ, tta, ல
உங்கள் பெயரில் முதலெழுத்து:
இ, dha, ga

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஓ,வ, Da

உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஈ,dhdha, ga
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஓ,வ,da
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஈ, gga, ந
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஔ,ஸ்ய, DDa
உங்கள் பெயரில் முதலெழுத்து:
உ,pa, ஞ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அம், ஷ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஊ,ச்ச, pa
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
த்த( தமிழ்) ,ஸ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
Bha, ஜ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அ,ka,ஹ, த்த (தமிழ்)
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ச்ச,Ba
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அ, த(தர்மம்), kka
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ம, ஜ்ஜ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
இ,dhdha, ga
உங்கள் பெயரில் முதலெழுத்து:

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஈ, GGa, ந
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஏ,ர,Ta
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
உ,pa,ஞ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஐ,TTa ,ல
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
உ,ச்ச,ப்ப
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஓ,வ,DDa
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
Bha, ja
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஔ,ஸ்ய,Da
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ச்ச, ba
உங்கள் பெயரில் முதலெழுத்து:
அம், ஷ, ண
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ம, ஜ்ஜ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
த்த, ஸ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:


குறிப்பு: உங்க பேருக்கு  பொருத்தமான எழுத்துக்களை தேர்வு செய்தபிறகு அந்த எழுத்துக்கள்ள துவங்கற மாதிரி எந்த சாமிக்குன்னா பேரு கீதா பாருங்க. அதுல உங்களுக்கு பிடிச்ச சாமியா இருந்தா இன்னம் தூள் கிளப்பலாம்.

இன்னம் என்ன தலைவா?  பீஜாட்சர உபதேசம் ஆயிருச்சு. நல்ல நாளா பார்த்து அப்பா,அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு, பிள்ளையார், இஷ்ட தெய்வம் ,குல தெய்வம் எல்லாத்தயும் வணங்கிட்டு ஸ்டார்ட் பண்ணிருங்க. உங்க அனுபவத்தை எனக்கு எழுத மறந்துராதிங்க.

இதே சப்ஜெக்ட், இதே பீஜாட்சர உபதேசத்தை  ஒரு (விஷயம் தெரிஞ்ச) அந்தண குல தோன்றலான சாமியார் கிட்டே வாங்கனும்னா பத்து வருசம் மடத்துல எச்சில் இலை  எடுத்து , சாமியாருக்கு மூட் வந்தப்ப ஒரு தங்க குச்சி வாங்கி தந்து ,தட்சிணை அள்ளிக்கொடுத்து, அவர் குச்சில எழுதிட்டு மடில கட்டிக்குவார் (பல் குத்த?) .

இந்த லொள்ளெல்லாம் இல்லாம நான் 1986 முதல் 2000 வரை என் வாழ்க்கையையே பணயம் வச்சி சேகரிச்ச ஸ்டஃபை வாரி கொடுத்துட்டேன். அடிச்சு தூள்கிளப்புங்க.