Monday, July 26, 2010

தாய்குலம் ட்ரைவரோட ஓடிப்போயி

"ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா "னு கவிஞர் எழுதி வச்சிட்டாரு.மனசு ஒத்துப்போனா ஒரு புளியமரத்து இலை மேல ரெண்டு பேர் படுத்துக்கிடலாமாம். ஒத்துப்போகலன்னா முழு உலகம் கூட பத்தாது.

நாப்பது வயசு வரை ஒரு புருசன் கூட குடும்பம் நடத்தின தாய்குலம்  ட்ரைவரோட ஓடிப்போயிர்ராய்ங்களே அவிக மனச எது மாத்திருச்சு? .

புருசங்காரன் மொடாக்குடியனா இருந்து , சாராயத்துக்கு காசு கேட்டு இழுத்து போட்டு அடிச்சாலும் அவனோட வாழ்ந்து அவனோடவே சாகிறாளே அவள் மனசுக்கு அந்த உறுதிய கொடுத்தது யாரு?

இந்த வேலையை சந்திரன் செய்யறதா ஜோதிஷம் சொல்லுது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்ட் அதனோட கெமிக்கல் காம்பினேஷன் சமுத்திர தண்ணியை ஒத்திருக்கிறது, சமுத்திர நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் இதையெல்லாம் மறுபடி மறுபடி சொல்றதுல எனக்கு விருப்பமில்லே .


1.ஜோதிஷத்துல சந்திரன் ஜலகாரகன்னு சொல்வாய்ங்க. நேத்தோ முந்தா நேத்தோதான் சந்திரன்ல வாட்டர் ரிசோர்ஸ் இருக்கிறதா ப்ரூவ் ஆச்சு.
2.சந்திரனோட ராகு,கேது சேர்ந்தா நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான வியாதிகள் வரும்னு சொல்லப்பட்டிருக்கு. உங்களுக்கோ உங்களை சுத்தி இருக்கிறவுகளுக்கோ வீஸிங்க இருந்தா விசாரிச்சு பாருங்க. வீசிங் இருக்கிற வரை சிறு நீரே வெளியேறாது. இதான் நுரையீரலுக்கும், கிட்னிக்கும் இருக்கிற லிங்க்
3.பல் பிரச்சினை இருக்கிறவுகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினை வர வாய்ப்பு அதிகம்னு முந்தா நேத்துகண்டு பிடிச்சாய்ங்க. ஆனால் சோசியத்துல பல்,இதயம் ரெண்டுத்துக்கும் பொறுப்பு சூரியன் தானு சொல்லப்பட்டிருக்கு.

இப்படி ஆயிரம் சொல்லலாம். மேட்டருக்கு வந்துர்ரன். சந்திரன் மனுசங்களோட மனசை இன்ஃப்ளுயன்ஸ் பண்றாருன்னா எப்டி எப்டினு ரஜினி காந்த் மாதிரி கேட்பிங்க. சொல்றேன்.


ஒன்பது கிரகங்கள்ள சந்திரனும்  ஒரு கிரகம்  . அதுவும் எலக்சன் எலக்சனுக்கு கூட்டணி மாத்திர்ர பா.ம.க மாதிரி  ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிர்ர பார்ட்டி. இவர் எப்படி என்னாத்த பாதிச்சுர முடியும்னு  ஜோசியருங்கள்ள கூட சிலருக்கு அண்டர் எஸ்டிமேஷன் இருக்கு.

தாகம், சிறு நீர் கழிக்கனும்ங்கற உணர்வு உந்துதல், உடலுறவு நாட்டம் இதெல்லாம் ஏற்படறது சந்திரனோட எஃபெக்ட் தான். உங்க சுவாசம்  இடது நாசி வழியா நடக்கும்போதுதான் இதெல்லாம் ஏற்படும் ( பெண்களா இருந்தா வலது) . இதை சந்திர நாடிம்பாய்ங்க.

தாகம்,சிறு நீர் கழிக்கனும்ங்கற உணர்வு உந்துதலால என்னா நடந்துரும். இது போய் மனசை எந்த அளவுக்கு பாதிச்சுரும்னு கேட்பிங்க. சின்ன உதாரணம்:

சித்தூர்ல  ஜில்லா பரிஷத் மீட்டிங்க் நடந்தது - சித்தூர் எம்.எல்.ஏ  சி.கே .பாபுவும் கலந்து கிட்டாரு - அவருக்கு இந்த ரெட் டேப்பிசம்னாலே அலர்ஜி. அவரோட ராஜாங்கமே தனி. உடனடி லாட்டரித்தான். அதனாலதான் நாலாவது தடவையா எம்.எல்.ஏ ஆகியிருக்காரு.

இந்த மாதிரி லொடக்காச்சி மீட்டிங்குக்கெல்லாம் போகறது ரேர். சமீபத்துல பிரஜா பதம்னு ஒரு ப்ரோக்ராம் பண்ணாய்ங்க. ( உங்க ஊர்ல கிராம சபைங்கறாங்களா) அதிகாரிங்கல்லாம் வார்டு வார்டா வந்து ஊர் சனத்துக்கிட்டருந்து மனு வாங்கிக்கிட்டு போனாய்ங்க. இதுல இந்த தடவை எம்.எல்.ஏவையும் அதுக்கு  புக் பண்ணிட்டாய்ங்க. சனம் பாபு (எம்.எல்.ஏ)கூட  வராரேமே.. மேட்டர் பைசல் தான்னு சனம் மனு கொடுக்கிறதுல  கின்னஸ் சாதனையே  பண்ணிட்டாய்ங்க.மாசம் மூணாகியும் அந்த மனுக்கள் மேல ஒரு நடவடிக்கையும் கிடையாது. வழக்கமா இங்கன என்னடா நடைமுறைன்னா "எம்.எல்.ஏ கிட்ட ஒரு பேச்சு சொல்லிருப்பா மேட்டர் க்ளோஸு"

இந்த சிச்சுவேஷன்ல ஜி.ப மீட்டிங் நடக்குது. சி.கே பாபு மனு மேல நடவடிக்கையில சுணக்கம் (?) பத்தி சாதாரணமா பேச ஆரம்பிச்சாரு. மேடையில இருந்த வனத்துறை மந்திரி   பெத்தி ரெட்டி ராமசந்திரா ரெட்டிக்கு அந்த அவசரம் படக்குனு எந்திரிச்சு போயிட்டாரு. கதை கந்தலாயிருச்சு.

சி.கே.பாபுவுக்கு  சித்தூர் டைகர்னு ஒரு பட்டம் உண்டு .புலி அன்னைக்கு சகட்டுமேனிக்கு உறுமிருச்சு.இத்தனைக்கும் காரணம் மந்திரிக்கு அந்த நேரம் பார்த்து மூத்திரம் வந்துட்டதுதான். பார்த்திங்கல்ல சந்திரன் என்னமா வேலை காட்டறாருன்னு.

இந்த சந்திரன் மேட்டர்ல ஒரு வசதி என்னடான்னா இவரு எங்கன இருக்காருனு பார்க்க ஜாதகத்தையே பார்க்க தேவையில்லை. ஜன்ம நட்சத்திரத்தை,பாதத்தை வச்சே சொல்லிரலாம். மேலும் சந்திரன் எந்த ராசில நிக்கிறாரோ அதைத்தான் உங்க ஜன்ம ராசினு கோவில்ல அர்ச்சனை செய்றப்பல்லாம் சொல்லிக்கிட்டிருக்கிங்க.

இந்த 12 ராசிகள்ள சந்திரனோட நிலைய வச்சு பார்க்கும் போது ரிஷபம், கடகம், விருச்சிகம் ங்கற மூணு ராசிகளை பத்தி மட்டும் ஸ்பெஷலா சொல்லவேண்டியிருக்கு.

ரிஷபராசி:
இவிக கேஸ்ல சந்திரன் உச்சமா இருக்கிறதால இவிகளை  வருத்தமடைய செய்யறது அவ்ள ஈஸியில்லை.மேலும் இவிக ராசியாதிபதியான சுக்கிரன் ஒரு வருஷத்துல ஒரே தடவைதான் நீசமாவார். ஜஸ்ட் மூணு மாசம்தான் ட்ரபிள் கொடுப்பார். ( 3,6,8 ல வரச்ச) சுக்கிரனை பத்தி தெரியுமில்லியா ஜுஜுலிப்பாவுக்கு பொறுப்பு வகிக்கும் கிரகம் இவர் . இதனால ரிஷபராசிக்கராவுக  இன்னா மாதிரி கிரைசிஸ்லயும் சின்ன சின்ன சந்தோஷங்களை விடவே மாட்டாய்ங்க ( உ.ம் கலைஞர். முள்வேலிக்குள்ள தமிழினம் என்னதான் தட்டுக்கெட்டாலும் பாராட்டு விழா, சினிமாவுக்கு கதை வசனம்னு எதையாவது விடறாரா பார்த்திங்களா. எல்லாம் உச்ச சந்திரனோட எஃபெக்ட் தான்)

அட் தி சேம் டைம் நல்ல கற்பனை திறன் இருக்கும் . சனத்துக்கு இவிக நல்லது பண்றாய்ங்களோ இல்லையோ சனம் விளக்குல போய் விழற மாதிரி இவிக கிட்டே விழுந்துக்கிட்டே இருப்பாய்ங்க.  நல்ல ரசனை  இருக்கும். பெண்களா இருந்தா பார்த்து பார்த்து சமைப்பாய்ங்க. ஹேண்டி க்ராஃப்ட்ஸ்ல கூட இன்டரஸ்ட் இருக்கும். ஆண்களா இருந்தா கேட்டு விசாரிச்சு சமைக்க சொல்வாய்ங்க. மேட்டர் அடுப்புல இருக்கிறச்சயே வெந்துச்சா இலலியானு எடுத்து ருசி பார்ப்பாய்ங்க. ஸ்னாக்ஸ், நொறுக்கு தீனின்னா பறப்பாய்ங்க. மனுஷனுக்கு என்னய்யா வேணும் நல்ல துணி, சாப்பாடு ,தூக்கம் பலானது"னு தத்துவம் பேசுவாய்ங்க.

உண்மை காரணம் என்னடான்னா ஒரு ரேஞ்சுக்கு மேல  பிரச்சினைகள் பத்தி  யோசிக்கவே பயப்படுவாய்ங்க, வில்லங்கமாயிரப்போவுதுனு அப்படி ஒரு பிரச்சினையே இல்லாதமாதிரி பிஹேவ் பண்ணுவாய்ங்க.

கடகராசி:
இவிகளுக்கு அதிபதியே சந்திரன்தான்.இவர் ஆட்சியடையறது ரெண்டேகால் நாள். உச்சம் பெறுவது ரெண்டேகால் நாள். ஆக ஏழரை நாட்கள் .ஆக இந்த ஏழரை நாட்கள் மட்டும் ரிஷபராசிகாரவுக மாதிரியே பிஹேவ் பண்ணுவாய்ங்க. ஆனால் இவர் பாதி நாள் ஏறுமுகமாவும் ,பாதி நாள் இறங்குமுகமாவும்  இருக்கிறதால காடாறு மாசம்  நாடாறு மாசம் கதையா இருப்பாய்ங்க. அதாவது சந்திரன் வளர்ர காலத்துல ஓரளவு  ரிஷபராசிக்காரவுக மாதிரி இருப்பாய்ங்க.ஆனால் அதே சந்திரன் தேய ஆரம்பிச்சதுமே விருச்சிகராசிகாரவுக மாதிரி பிஹேவ் பண்ணுவாக.

விருச்சிக ராசி:
இவிக ராசில மனோகாரகனான சந்திரன் நீசம் பெறுவதால எப்பவுமே கடுப்புல இருப்பாய்ங்க.அடுத்தவனையும் கடுப்பாக்கிக்கிட்டே இருப்பாய்ங்க. ஒரு ரோசாவ பார்த்தா கூட "ஹும் முள்ளுல தானே இருக்கு"ம்பாய்ங்க.உசரத்துல பறக்கிற கழுகை பார்த்தாலும் "ஹும்.. செத்த எலிய தூக்க கீழே வந்துதானே ஆகனும்பாய்ங்க" சந்திரன் ஜல காரகன்ங்கறதால ஒரு வீட்ல ஒரு  விருச்சிக ராசி இருந்தா போதும் தண்ணிக்கு லாட்டரிதான். இதனாலதான் போர் போடறச்ச கூட விருச்சிக ராசிக்காரவுக யார்னா இருந்தா காசு கொடுத்து வெளியூர் அனுப்பிருங்கப்பானு சொல்லிர்ரது. இவிக எப்பயும் அதிருப்திலயே இருப்பாய்ங்க. சண்டைக்கு தயாரா இருப்பாய்ங்க.

சண்டைல ஜெயிக்கனும்னா செவ்வாய்  அனுகூலமா இருக்கனும். செவ்வாய் 3,6,10,11ல இருந்தாதான் நல்லது. ஆனால் இந்த செவ்வாய் இவிகளுக்கு லக்னாதிபதியாவும் இருக்கிறதால 3,6 ராசிகள்ள ஒர்க் அவுட் ஆகமாட்டாரு. அதனால மொக்கை தான். அதுசரி செவ்வாய் லக்னாதிபதிங்கறதால கோணம் ப்ளஸ் கேந்திரமான லக்னத்துலயோ  கோண ஸ்தானமான  5,9 லயோ, கேந்திர ஸ்தானமான 4,7,10 லயோ வந்தா நல்லாருக்குமேனு கேட்பிங்க.

இருக்கும் தான் ஆனா பின்னாடியே சைட் எஃபெக்டும் வந்திரும் . உ.ம் அஞ்சுல வரும்போது கோபம்,அவமானம், ஒன்பதுல வரும்போது அப்பா கூட தகராறு . விருச்சிக ராசிக்கு நான் கொடுக்கிற அட்வைஸ் என்னன்னா தேள் மாதிரி பதுங்கி இருங்க. வாயை விடாதிங்க. ஃபிஸிக்கல் எக்ஸர்ஸைஸ் மஸ்ட். புகை,தூசுக்கு தூர இருங்க.

ஓகேங்கண்ணா மத்த ராசிகளை பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போமா. (கிழிஞ்சது போங்கறிங்க அப்படித்தானே. எதை எதை அரைகுறையா விட்டமோ அததுவெ தன்னை கம்ப்ளீட் பண்ணிக்கும் தலை. நாம என்ன ஜஸ்ட் ஒரு  கருவி மாதிரி)

இவிகளை திருப்தி படுத்தறது ரெம்ப கஷ்டம்.இவிக பேச்சு தேள் கொட்டினாப்ல இருக்கும். லங்ஸ் ,கிட்னி தொடர்பான பிரச்சினைக வரும்.