Saturday, July 17, 2010

திருமலையில் தலைமை அர்ச்சகர் சம்பளம் ரூ.55 ஆயிரம்

  • இதர அர்ச்சகர்களுக்கு ரூ 30 ஆயிரம்
  • தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு
  • பெருமாள்  முகத்தை மறைச்சு பட்டை நாமம்
அண்ணே வணக்கம்ணே,
ஏழுமலையானுக்கே பட்டை நாமத்தை சார்த்தி அய்யருங்களுக்கு மாசத்துக்கு ரூ.55 ஆயிரம் படியளந்த இந்த கதையோட நம்ம எழுத்தாள பெருந்தகைகள், திரையுல பிரபலங்கள் எல்லாம் ஒரே கதையை திருப்பி திருப்பி எழுதி நம்மை கேணையங்களாக்கினதை "காலகாலமாய் ஒரே கதை"  ங்கற தலைப்புல  ஆதாரத்தோட விவரிச்சு தனிப்பதிவு போட்டிருக்கேன். அதையும் படிங்கண்ணா


    கோவிலோட ஸ்தல புராணத்தின் படி பார்த்தால் புற்றுக்குள்ள இருந்த மூல விராட் முதல் முதலா தன்னை வெளிப்படுத்தினது  ஒரு யாதவருக்குத்தான். அந்த மூலவிராட்டை  தூக்கி சுமந்து கொண்டு வந்து சேர்த்தது யாரோ? கட்டிடம் எழுப்பியது யாரோ? விரிவு படுத்தினது யாரோ? ஏழுமலையானுக்கு தங்கமும்,வைரமும் அள்ளித்தந்தது யார் யாரோ?  ஆண்டெல்லாம் தம் வீட்டு உண்டியலில் ஒவ்வொரு காசாய் போட்டு வைத்து  பணம் சேர்த்து, ஆத்திரம் அவசரத்துக்கு அந்த பணத்தை எடுத்து செலவழிக்க வேண்டி வந்தால் அந்த பணத்துக்கு பத்து வட்டி சேர்த்து போட்டு வைத்து கோவில் உண்டியலில் சேர்த்தது யாரோ?  அந்த கோவிலுக்கான கட்டமைப்பு வசதிகளை, சாலை வசதிகளை செய்தது யாரோ? ராத்துக்கம் தொலைத்து காவல் நிற்பது யாரோ?   இன்னைக்கு அந்த கோவில் கோவிலா நிற்க , உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து குவிய காரணம் யாரோ? யார் யாரோ ?

    மக்கள் தொகைல பிராமணர்களோட சதவீதம் எவ்ளோ? அதுலயும் ஏழுமலையான்  கோவிலுக்கு பக்தி பரவசமா பெண்டாட்டி பிள்ளைகளை இழுத்துக்கிட்டு வேகாத வெயில்ல, நடுக்கும் குளிர்ல,  நடந்து போறவன் எத்தனை பேரு? ,அட பஸ்ஸுலயாச்சும்  வருசா வருசம் போறவன் எத்தனை பேரு ? போனாலும் அந்த உண்டியல்ல காசு போடறவன் எத்தனை பேரு?  தங்கம் வைரம்னு அள்ளிக்கொடுத்தவன் எத்தனை பேரு.? ஏதோ அங்கன அர்ச்சகராவோ காரியஸ்தராவோ இருக்கிற பெரியப்பா பிள்ளை,சித்தப்பா பிள்ளைய பிடிச்சு தங்களோட முதலாளிகளுக்கு ( சூத்திர) தரிசனம் பாக்கியத்தை தர வரவன் தான் சாஸ்தி.

    இந்த மூல விராட்டை அடையாளம் கண்டவன் சூத்திரன், அதை கொண்டுவந்து சேர்த்தவன் சூத்திரன். கோவிலை கட்டி எழுப்பினவன் சூத்திரன். வாரி வாரி கொடுத்து
    பொன்னால இழைச்சவன் சூத்திரன். ஆனா பாருங்க தலைமை அர்ச்சகர் சம்பளம் ரூ.55 ஆயிரம். மாசத்துக்கு 55 ஆயிரம்னா வருசத்துக்கு எவ்ளோ ? அஞ்சு வருஷத்துக்கு எவ்ளோ அந்த பிராமணோத்தமரோட ஆயுஷ் எவ்ளோ ஆயுள‌த்தனைக்கும் தேவஸ்தானம் தரவேண்டிய தொகை எவ்ளோ? சின்னதா கணக்கு போடுங்க. இதுல இதர அர்ச்சகர்களுக்கும் ( திருச்சானூர்ல காத்தடிச்சிக்கிட்டிருக்குமே அந்த கோவில் அய்யருக்கும்) ரூ 30 ஆயிரம்..

    சரி சோத்துக்கில்லாத பக்தனெல்லாம் வாயை கட்டி வயித்த கட்டி போட்ட காசுல  இவ்ளோ பணத்தை கொட்டிக்கொடுத்துட்டா இவிக நரகல் தின்னாம இருப்பாய்ங்களா? அதுக்கு கியாரண்டி உண்டா ? கிடையாது.

    அப்பயும் இதுவரை பண்ண தில்லாலங்கடி வேலையெல்லாம் தொடரும். சம்பளத்தை உயர்த்தி கொடுத்துர்ரதால அவிக ஏழுமலையானுக்கோ, கோவிலுக்கோ பக்தர்களுக்கோ தரப்போற அடிஷ்னல் சர்வீஸ் எதுனா இருக்குமா? ஒரு ம........ரும் இருக்காது. இன்னம் சொல்லப்போனா அதிகப்படியா கிடைக்கிற பணம் காசுல லக்சரியா வாழ்ந்துக்கிட்டு தோல்,மனசு,புத்தி எல்லாம்  மந்தமாகி இவிக மனுதர்மத்துல சொல்லி வச்சிருக்கிற சூத்திர குணங்கள் (?) மொத்தம் வந்துரப்போவுது. இவிக மைண்டெல்லாம் ஃப்ளாட் வாங்கலாமா? வீடு கட்டலாமா? வட்டிக்கு திருப்பலாமா? மாதிரி கேள்விகளால நிறைஞ்சு போயிரும்.

    கோவிலுங்கறதே அன் ப்ரொடக்டிவ் இன்ஸ்டிடியூஷன். இதுல இந்த மாதிரி வேட்டு விடறது இந்து மதத்தையே கேலிக்கூத்தாக்கிருது.  கேட்கிறவனுக்கு பதில் சொல்ல முடியலைப்பா..