Thursday, July 29, 2010

வாஸ்து வாஸ்தவம் தான்

ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். என் பரிசோதனைகளுக்கு  நான் தான் என்னோட லேப். நான் தான் எலி. மொத ஊசி எனக்கு தான். அப்பாறம் பூட்ட கேசுங்களுக்கு போட்டு பார்ப்பேன். (அதாவது இன்னம் கெட்டுப்போக வாய்ப்பே இல்லைங்கற கேசுங்களுக்கு) அப்பாறம் தான் சனத்துக்கு.

வாஸ்து கதை கூட அப்படித்தான். ஜோசியருங்க  மாதிரியே வாஸ்துகாரவுக கூட பயங்கரமா பீலா விடுவாய்ங்க. மொத்தமா நம்பிராதிங்க. தனித்தனியா பார்த்தா எல்லாமே பூதாகரமா தெரியும். மொத்தமா பார்த்தாதான் ஒரு ஐடியா வரும்.

ஜோசியக்காரவுக கிரகத்தையே கட்டி அழுவாய்ங்க. இந்த குரு வரட்டும் கண்ணாலமாயிரும்னுவாய்ங்க. கண்ணாலம் நடக்கலைன்னா  சனி லேசா பார்த்துட்டாரும், அடுத்த குரு வரட்டும் ஆயிரும்னு காலத்தை கடத்துவாய்ங்க.

பல தடவை சொல்லியிருக்கன் கோசார பலனோட இம்பாக்ட்  20 சதவீதம் கூட கிடையாது. தசாபுக்திகள் சாலை மாதிரி. உங்க ஜாதகம் ஒரு கார் மாதிரி . கார்ல ஷாக் அப்சர்பர் கரெக்டா இருந்தா எப்படி மோசமான ரோட்ல கூட குஷாலா பயணம் பண்றமோ அப்படி ஜாதகத்துல ஸ்டஃப் இருந்தா கெட்ட நேரமும் இல்லே ..ஒரு ....ரும் இல்லே.(லேசா குலுங்கும். பக்கத்துல குட்டி இருந்தா உரசிக்கலாம்). டப்பா காரு 6 ட்ராக் ரோடுக்கு போனதும் கண்டசாவா மாறிருமா? நோ .. சாலை தான் மாறுமே தவிர வண்டி மாறாது. மேல் மாடிக்கு வேலை கொடுக்காம எந்த வித அறிவியல் பார்வையோ ,ஆன்மீக பார்வையோ  இல்லாம ஜோசியத்தை ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி ஒப்பிக்கிற பார்ட்டிங்களாலதான் பிரச்சினையே.

ஒரு படத்துல சார்லி ஜோசியரா வருவாரு. செத்துப்போனவன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பலனை அள்ளிவிடுவாரு. ஜோசியர்களுக்கு ஒரு எச்சரிக்கை :

ஜாதகத்தை கையில கொடுத்ததும் பிட் பிட்டா பலன் சொல்லாதிங்க. முதல்ல லக்னம்,லக்னாதிபதிய பாருங்க. சூரிய சந்திரர்களை பாருங்க, ஆயுள் காரகனான சனி,அஷ்டம ஸ்தானம் , ஆயுள் ஸ்தானாதிபதி நிலைகளை பாருங்க. முக்கியமா ஜாதகம் வந்த நேரத்தை பாருங்க (ஆரூட லக்னம்) அப்பாறம் பலன் சொல்ல ஆரம்பிங்க.

ஜோசியருங்க  ஜாதகத்தை, கிரகபலத்தை எல்லாம் விட்டுட்டு கோசாரத்தை கட்டி அழறாப்ல வாஸ்துக்காரவுகளும் அசலான மேட்டருங்களை விட்டுட்டு ( உ.ம் காம்பவுண்ட் இல்லேன்னா வாஸ்துவே வேலை செய்யாது. அந்த வரிசைல காம்பவுண்ட் போட்ட வீட்டுக்கு இந்த பக்கத்து காம்பவுண்ட் வால் வரை ஒரே ப்ளாக் தான். இதுக்கு ப்ளாக் வாஸ்துனு நாமகரணம் பண்ணியிருக்கேன்) எத்தனை படி,எத்தனை சன்னலுனு ஜல்லியடிக்கிறாய்ங்க   அத்தை இடி இத்தை இடினு இடி அமீன் கணக்கா அமீனா வர்ர வரை வீட்டுக்காரனை  திவாலாக்கிர்ராய்ங்க.

மனித வாழ்வை வெறுமனே கிரகங்களோ வாஸ்துவோ மட்டும் இன்ஃப்ளுயன்ஸ் பண்றதில்லை. எத்தனையோ ஃபேக்டர்ஸ் இருக்கு.

இந்த ஜாதக ஆராய்ச்சி,வாஸ்து ஆராய்ச்சிங்கறது ப்ரிலிமினரி. மினிமம் கியாரண்டி. ரிட்டர்ன் டெஸ்ட் மாதிரி . நாரதர் சீதேவிக்கும் மூதேவிக்கு வச்ச ரிட்டர்ன் டெஸ்ட் இல்லிங்கண்ணா( நடந்து போய் ரிட்டர்ன் வர்ர டெஸ்ட்) எழுத்து தேர்வு. ரிட்டர்ன் டெஸ்டுக்கு அப்பாறம் எத்தனையோ ஃபில்ட்டர்ஸ் இருக்கு.

ஜெயலலிதா பிறந்த அதே நிமிஷத்துல இந்தியாவுல மட்டும் 4 குழந்தை பிறந்திருக்கும். மத்த 3 குழந்தை என்ன ஆச்சு? அவிக பிறந்த லக்னத்துல (சுமார் 2 மணி நேரத்துல 60 நி+60 நி = 120 நிமிடம். 120நிமி X  நிமிடத்துக்கு 4 குழந்தைன்னா மொத்தம் 480 குழந்தை ஏறக்குறைய அம்மா ஜாதகத்துல பிறந்திருப்பாய்ங்க. அவிகல்லாம் எங்க போனாங்க?

மனித வாழ்வை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.  ஒரு கிரகம் தன் இம்பாக்டை காட்டறதுக்கு நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ் இருக்கு. இங்கன ஒவ்வொரு நொடியும் ஒரு ஜங்ஷன் பாயிண்ட். இந்த நொடி நீங்க என்ன பண்றிங்கங்கறதுதான் அடுத்த செகண்டை டிசைட் பண்ணுதுங்கண்ணா.

உங்க டெசிஷன் மேக்கிங்கை தான் இந்த கிரகம்,வாஸ்து எல்லாம் துவைச்சி எடுக்குது.

உங்களை நீங்க இந்த படைப்புலருந்து தனியா உணர்ந்தா இதெல்லாம் ஃபுட் பால் மாதிரி அடிச்சு விளையாடும். நான் இந்த படைப்புல ஒரு அங்கம்.பிரிக்க முடியாத அங்கம்னு நீங்க அனுபவ பூர்வமா உணர்ரப்ப இதெல்லாம் ஜுஜுபி.


இந்த பதிவுல வாஸ்து ஜோதிடம்ங்கற ரெண்டு ஃபேக்டர்ஸை மட்டும் பார்ப்போம். இந்த ரெண்டுத்துக்கும் இடையில ஒரு லிங்க் இருக்கு. ஒரு குழந்தை பிறக்கும்போதே அது இன்னா மாதிரி வீட்ல வாழனும்னு அதனோட ஜாதகத்துலயே சொல்லப்பட்டிருக்கு. ( நாலாவது பாவம், அந்த பாவாதிபதி, அவர் நின்ன இடம், கூட சேர்ந்த கிரகங்களை வச்சு இதை டிசைட் பண்ணலாம்)

ஒவ்வொரு வீடும் கட்டப்பட்ட வாஸ்துவை பொருத்து அந்த வீட்ல எந்த மாதிரி ஜாதகன் வாழனும்னு டிசைட் ஆயிருது. எத்தனையோ பன்னாடைங்க அப்பா,அம்மாவுக்கு சோறு போடாம,கூட பிறந்த அக்கா தங்கச்சிக்கு நல்ல நாள்ள  ஒரு ப்ளவுஸ் பீஸ் கூட  வச்சி கொடுக்காம வாழ்ந்து பீ தின்னு பிண்ணாக்கு தின்னு வீடு கட்டிருதுங்க.ஆனால் அதுல குடியிருக்கமுடியாம போயி  வாடகை வீட்லயே காலத்தை தள்ளுதுங்க.

இங்கன ஒரு ரகசியம். ஜாதகத்துல பயங்கர தரித்திர யோகம் இருக்கும்.ஆனா இவன் லட்சம் லட்சமா சேர்ப்பான். எப்டி? எப்டி? இவன் சம்பாதிக்கிறது இவனுக்காக இல்லை. எவனோ இவனை ஏமாத்த போறான். அவனுக்காக முன்னே அனுப்பி வைக்கப்பட்ட கலெக்ஷன் ஏஜெண்ட் இவன்.

இதே ஃபார்முலா தான் வீடு கட்டற மேட்டர்ல கூட ஒர்க் அவுட் ஆகுது.இவனுக்கு நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறப்பான்.ஆனால் தாஜ்மகால் மாதிரி வீடு கட்டுவான். எதுக்குங்கறிங்க? எவனோ வந்து அனுபவிக்கபோறான். அவனுக்காகத்தான் இவன் ஓடி ஓடி வீடு கட்டறான்.

சின்ன குன்ஸ்:
1.ஒரு பிக்காலி. பணம் பணம்னு அலைஞ்சு பறை சாத்துதுனு வைங்க. நிச்சயமா அவனோடது சீடை ஜாதகம்னு அர்த்தம். அது பணத்தை சேர்க்க சேர்க்க கண்ணாலம் தள்ளி தள்ளி போகும். (குருதான் கங்கண-கல்யாண -காரகன், அதே குருதான் தனகாரகனும். தனகாரகனா ஒர்க் ஆகிறதால கங்கண காரகனா கை கொடுத்துர்ரார்). குறைபிரசவமா நடக்கும். ஆண்குழந்தை இருக்காது. (பிறக்காது), பொறந்ததெல்லாம் உருப்படாமத்தான் போகும். இவனுக்கு நடுவயசுல வயிறு ட்ரபிள் கொடுக்க ஆரம்பிக்கும். 50 தாண்டினதும் ஹார்ட் ப்ராப்ளம் வரும். உண்மையான தனயோகம் இருக்கிறவன் கனவுல கூட பணத்தை நினைக்க மாட்டான்.ஆனால் அது தானா இவனை வந்து சேரும்.

2.இன்னொரு பன்னாடை வீடு கட்டனும் வீடு கட்டனும்னு துடிக்குதா? அது சர்வ நிச்சயமா  நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறந்திருக்கும். இந்த மாதிரி கேஸ்ல வீடு கட்டிக்கிட்டிருக்கிறப்பவோ கட்டி முடிச்ச 3 அ 6 மாசத்துலயோ அம்மா செத்து போயிருவாய்ங்க அ பெண்டாட்டி. ஒரு வாகன விபத்து நடக்கும். அ செக்ஸ் ஸ்கேண்டல்ல மாட்டுவான் அ வீட்டு மேலயே வில்லங்கம் வரும் அ பேட்டரி சுத்தமா மெட்டாஷ் ஆயிரும்.

மேலே சொன்ன மேட்டர் எத்தனை கேஸ்ல ஒர்க் அவுட் ஆச்சுனு நீங்க தான் சொல்லனும் (  நம்முது தான்  அனுபவ ஜோசியமாச்சே)

மொதல்ல நான் பிறந்து 24 வருஷம் வாழ்ந்த  வீட்டையும் அதனோட வாஸ்துவை  பத்தியும்  சொல்றேன். 19X64 கிழக்கு பார்த்த வாசல். ( மினிமம் கியாரண்டி. கடைசி வரை எங்க வீட்ல சிதம்பரம் தான்) ஆண்களும் டம்மி பீஸுங்க கிடையாது. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு விதத்துல ஜூரிங்க தான்.

வடகிழக்குல தெருக்குத்து.( எங்கப்பா ஜாதகத்துலயும் குரு உச்சம், என் ஜாதகத்துலயும் குரு உச்சம் .ரெண்டு பேருதும் கடகலக்னம்தான் .அதனால சமாளிச்சுக்கிட்டம்)  மேற்குல கிணறு. ( எங்கம்மாவுக்கு யூட் ரஸ் கேன்சர். அப்பா ஜில்லா ஜில்லாவா போய் அரச(சு) சேவை செய்துக்கிட்டிருந்தாரு.அதனால மொத்த பாரமும் அவிக மேலதான்). 

நைருதில தான் தலைவாசல். எங்க அப்பா மாவட்ட கருவூல அதிகாரி. லாலா,மசாலா, பீடி,சிகரட்,பான் எதுவும் கிடையாது. ஜஸ்ட் டி.ஏ.எஸ் ரத்தினம் பொடி மட்டும் தான். அதையும் பெரிய டப்பாவா ஹோல்சேல் ரேட்ல ஒன்னு வாங்கிருவாரு. இருந்தாலும் மாசா மாசம் பட்ஜெட் போட்டுத்தான் செலவு பண்ணுவாய்ங்க. ஒரு கண்ணாலம், கல்லெடுப்புன்னா பட்ஜெட் உதைக்கும்.

 நம்ம டீன் ஏஜ்ல மணியகாரரான தாய் வழி தாத்தா எங்கம்மாவுக்கு சீதனமா கொடுத்த வெள்ளி கிளாஸெல்லாம் ஒவ்வொன்னா கால் முளைச்சு காசு கடைக்கு போயிருச்சு ( நம்ம வேலைதான்). அப்பா பாக்கெட்ல ,பூஜை ரூம் தகர டப்பால இருக்கிற கரன்ஸிய ஆட்டை போடறதும் உண்டு ஏழுமலையான் உண்டி உட்பட) .
இதெல்லாம் ஒரு பக்கம்னா 1983-84ல அம்மாவை சி.எம்.சில அட்மிட் பண்ணிட்டு ஏறக்குறைய திவால் ஆன நிலைல அரசு ஊழியர்களோட ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கி 3 வருஷம் அடிஷ்னல் சர்வீஸ் கிடைச்சு பொழச்சோம்.

மொதல்ல அப்பாவுக்கு ஊர் ஊரா ட்ரான்ஸ்ஃபர் பெரிய அண்ணன் எம்.ஏ படிக்க திருப்பதி ஹாஸ்டல்.கண்ணாலமான கையோட தனிக்குடித்தனம் போயிட்டான். சின்ன அண்ணன் எத்தனை வேலை வாங்கி கொடுத்தாலும் அவனே வாங்கினாலும் போகாம தண்டத்தீனி. நம்ம கதை தெரிஞ்சதுதானே. ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தினு ஊர்சண்டைய இழுத்துட்டு போறது, பலான இடத்துக்கெல்லாம் போறது ஒன்னா ரெண்டா .சின்ன அண்ணனுக்கு கண்ணாலம் நடக்கறதுக்கு முந்தி நமக்கு ஆயிருச்சு.இத்தனைக்கும் அவனை விட பத்து வயசு சின்னவன் நான்.

ஆரம்பத்துல தெற்கு திசைல மைதானம் இருந்தது. வீட்டுக்குள்ள தெற்கு திசையிலதான் கடைசி வரை பேசேஜ். அப்பாவை பிக் அப் பண்ண கலெக்டரே வண்டில வருவாரு. ஜீப்பை ரோட்ல நிறுத்திட்டு விறு விறுனு நடந்து வந்துருவாரு. போதாதா ஏரியா சனங்க காதுல புகை. அப்பனுக்கு ரத்தக்கொதிப்பு, பெப்டிக் அல்சர். தம்பின்னா  ரத்த வாந்தியே எடுத்தான் .கருப்பை புற்றுக்கு ஆதி என்ன தெரியும்ல ஒழுங்கற்ற மென்ஸ்ட்ருவல் சைக்கிள் தான்.


இந்த வாஸ்து  குறைகள்- குறைகளோட பலன்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒர்க் அவுட் ஆறதில்லைங்கறது தான் ஆச்சரியம். இந்த மாதிரி வீட்ல இருந்தும் ஸ்தூலமா வறுமைய அனுபவிச்சாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காம அவமதிக்கப்பட்டாலும் மனம் தளராம என்னை மாறு வேடத்துல அன்னிய தேசத்துல இருக்கிற இளவரசனாவே உணர காரணம் என்ன?


முதல் காரணம் உச்ச குரு. அடுத்த காரணம் பத்துல ராகு.  நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு வேலைய செய்துக்கிட்டே இருந்தேன். கரும யோகம்னு கீதை சொல்லுதே அப்படி.

மூணாவது காரணம் முக்கிய காரணம். எங்கப்பா எனக்கு மாடில தனி அறை கட்டிக்கொடுத்துட்டாரு. 1986 டு 1991 அதுலதான் இருந்தேன். மாடில இருந்தா வாஸ்து தோஷம் பாதி குறையும்ங்கண்னா

யுத்த‌ கைதிங்க கிட்டே இருந்து  உண்மைக‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ உயரம் குறைவான  கூரை,குறுகிய பரப்பளவு கொண்ட‌‌ அறைக‌ள்ள அடைச்சு வைப்பாய்ங்களாம்.  கைதிக‌ள் ஒருசில‌ தின‌ங்க‌ளிலேயே உண்மையை க‌க்கி விடுவாய்ங்களாம்.

சில‌ வீடுக‌ளுக்கு போனால் இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருக்க‌லாமா என்று தோன்றும், சில‌ வீடுக‌ளுக்குச் போனா  தாளி  எப்ப‌டா வெளிய‌ வ‌ருவோம்னிருக்கும். 

1997 ல் நான் ஒரு குடிசையில் குடியிருந்தேன். உஞ்ச விருத்தி பிராமணரை விட மோசமான நிலை.  என் ந‌ண்ப‌ரான‌ ஒரு  பால்கார‌ர் "சுவாமி..! ச‌ர்ரியான‌ (அச்சுப் பிழை இல்லை) இட‌த்தை பிடிச்சிருக்கிங்க‌ ..ப‌க்க‌த்து வீட்டுக்கார‌னுக்கு நீங்க‌ க‌ட‌ன் கொடுக்க‌ப் போறிங்கன்னாரு

நான் ப‌ட‌க்குனு  அவ‌ர் வாயை பொத்தி "பிழைப்ப‌ கெடுத்துருவிங்க‌ போலிருக்கே..இந்த குடிசை இருக்கிறதுஅவன் அண்ணனோட‌ இட‌ம். இந்த‌ குடிசை த‌ம்பிக்கார‌ன் தான் வீடுக‌ட்டும்போது சிமெண்டு மூட்டை அடுக்க‌ போட்ட‌ ஷெட்..த‌ம்பிக் கார‌ன் த‌ய‌வுல‌ இங்க‌ குடியிருக்கேன். ஆள‌ விடுப்பா"ன்னு பார்ஸ‌ல் பண்ணேன்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌. நம்பாட்டி போங்க ஒரே ஆறு மாசத்துல  ப‌.வீ. கார‌னுக்கு ரூ.35,000/ க‌ட‌ன் கொடுத்தேன். ரெண்டு வட்டிக்கு. இதான்யா வாஸ்து. வாஸ்து வாஸ்தவம்பா. வாஸ்துகாரவுக வேணம்னா பொய்யனுகளா இருக்கலாம். சரியான வாஸ்து கலைஞன் கிடைக்கனும்னாலும் உங்க ஜாதகம் அதுக்கு ஒத்துழைக்கனும் அண்ணாத்தை.

அடுத்த பதிவுல வாஸ்து பத்தின வாஸ்தவங்களை  இன்னம் விவரமா பார்ப்போம்.இப்போதைக்கு உடுங்க ஜூட்