Showing posts with label deffects in Education. Show all posts
Showing posts with label deffects in Education. Show all posts

Tuesday, July 27, 2010

சரஸ்வதி சபதம்

28/7/2010

முன் கதை

( பூவுலகில் தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த அலைமகள்,கலைமகள், மலை மகள் டிசைட் ஆயிர்ராய்ங்க, இதுக்குண்டான ஸ்கெச்சுக்காக முருகேசனை தேடி லட்சுமி  ஸ்னேகா சைஸ்ல பூலோகம் வராய்ங்க. இதுக்கெல்லாம் வழி பண்ணனும்னா நீங்க மூணு பேரும் எம்.பி ஆகனும்னு முருகேசன் சொல்றாரு. ஆயிட்டாப்போச்சுனு ஸ்னேகா வடிவத்துல வந்த லட்சுமி சொல்ல அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதேன்னுட்டு முருகேசன் மயங்கி விழறாரு.)

ஸ்னேகா: வாட்டர் ப்ளீஸ்! ( நெட் ஓனர் தண்ணி கொண்டு வந்து கொடுக்க தெளிக்கிறாய்ங்க)
முருகேசன்: ( கண் விழிச்சு, தூசு தட்டிக்கிட்டே )  யம்மாடி நீ வா வீட்டுக்கே போவோம்

ஸ்னேகா: வீட்டுக்கா? என்னவோ எம்.பியா ஜெயிக்கனும்னே

முருகேசன்:
என்னங்க இது நீங்க நக்கல் பண்றிங்களா என்னனு புரியலை. எம்.பி ஆகனும்னா முதல்ல ஒரு கட்சில சேரனும்

ஸ்னேகா:
சேர்ந்தா போச்சு

முருகேசன்:
 தாயே நீ அட்லீஸ்ட் பஹுஜன் சமாஜ் கட்சில சேரனும்னா கூட மாயாவதி அம்மாவுக்கு ஆயிரம் ரூபா நோட்ல மாலை போடனும் தெரிஞ்சுக்க.

ஸ்னேகா:
அட்லீஸ்ட் ஆப்ஷன்  எல்லாம் வேணாம் . லீடிங் பார்ட்டிலயே சேரனும் .  வேற எந்த  கட்சில சேரலாம்னு சொல்லு

முருகேசன்:
விவரமில்லாம பேசாதிங்க. எல்லா கட்சிகளுக்கும் எல்லா கார்ப்போரேட் கம்பெனிகளும் நன்கொடை கொடுக்கிறாய்ங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் ஸ்கூல் நடத்தறாய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் கேம்பஸ் இன்டர்வ்யூ நடத்தி புள்ளைங்களை கொத்தடிமையாக்கிக்கறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் சில்லறை வணிகத்துல இறங்கி லட்சக்கணக்கான குடும்பங்களை ரோட்டு கொண்டுவராய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் அந்த குடும்பத்து புள்ளைங்களை கூலிக்காரவுகளாக்கி சுரண்டறாய்ங்க இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் வியாபார போட்டி காரணமா மாஃபியாவ வச்சு  குத்து கொலைனு போறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் மார்ஷ்ல் ஆர்ட்ஸ் ஸ்கூலோட ஆண்டுவிழாவையும் ஸ்பான்ஸர் பண்றாய்ங்க. இந்த அழகுல இதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்ட டொனேஷன் வாங்கி அரசியல் நடத்தற கட்சிகள்ள சேர்ந்து தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தையெல்லாம் நீங்க  எங்கருந்து கொண்டுவரமுடியும்?

ஸ்னேகா:
அப்ப நாமே ஒரு கட்சி ஆரம்பிச்சுருவம்.

முருகேசன்:
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே . கட்சி வைக்கிறதுன்னா என்ன தமாசா .மொதல்ல நீங்க எவனாச்சும் பெண்டாட்டி இல்லாத தலைவனுக்கு வலது கையாவோ இடது கையாவோ இருக்கனும். அவன் செத்த பிறவு அந்த கட்சியை அப்படியே ஹைஜாக் பண்ணனும்

ஸ்னேகா:
சீ சீ இதென்ன நாத்தம் பிடிச்ச வேலையா இருக்கு நான் மாட்டேம்பா

முருகேசன்:
பல கட்சிகளோட ரிஷிமூலம் இதான்.

ஸ்னேகா:
சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சா என்ன?

முருகேசன்:
என்ன என்.டி.ஆருனு நினைப்பா ? அது 1982. அந்த காலத்துல சனம் ஏதோ சிம்பிள் லைஃப் லீட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. சூடு சுரணை எல்லாம் இருந்தது. அதென்னடா தில்லிலருந்து சிட் ஸ்டாண்ட் சொல்றதுனு காங்கிரசுன்னா கடுப்படிச்சி போயி ட்டாய்ங்க. இதையெல்லாம் இஷ்யூவாக்கின என்.டி.ஆருக்கு  தேவுடுனு ஒரு இமேஜ் இருந்தது. பல்ப் மாட்டிக்கிச்சு. அதே என்.டி.ஆர் 1994 ல மதுவிலக்கை கொண்டுவரேனு வாய விட்டு ............ஐ புண்ணாக்கிக்கிட்டு தான் லிக்கர் லாபியோட சதியால ஆட்சியை சந்திரபாபுவுக்கு பலி கொடுத்து  கதியில்லாத சாவு செத்தாரு. இது 2010 .அந்த பருப்பெல்லாம் வேலை செய்யாது.

என் டி ஆராச்சும் சினிமாலதான் ஹீரோ. ஒய்.எஸ்.ஆர் நெஜமாலுமே ஹீரோ. கோதாவரி பேசின்ல எரிவாயு கிடைச்சது. அதை பங்கு போட்டுக்க ரிலயன்ஸ் ப்ரதர்ஸ் தங்களோட  தாயார் கிட்டே பஞ்சாயத்துக்கு போனாய்ங்க. அப்போ ஒய்.எஸ்.ஆர் வாயை விட்டாரு . அந்த எரிவாயு தேசீய சொத்து அதை பங்கு போட வேண்டியது திருபாய் அம்பானியோட திருமதி இல்லே மத்திய அரசுன்னு . வேட்டு வச்சிட்டாய்ங்க.


நீங்களும் நானும் ஒரு கணக்கா ? வேணம்னா அஜெண்டா கிஜெண்டா எல்லாம் தூக்கி குப்பைல போட்டுருங்க அதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்டே டொனேஷன் வாங்கி  கட்சி நடத்தலாம்.  தப்பித்தவறி ஆட்சியை பிடிச்சா அவிக சொல்றாப்ல ஆட்சிய   நடத்தலாம்.இதுக்கு நான் ரெடியில்லை. நீங்க ரெடியாயிருந்தா உடுங்க ஜூட்

ஸ்னேகா:
(பேஸ்தடித்து போய்) அய்யய்யோ இதுல இவ்ளோ விவகாரம் இருக்கா? இதென்னப்பா அநியாயமா  இருக்கு சன நாயகம் அது இதுனு கேள்வி பட்டேன்.  நீ சொல்றத பார்த்தா நிறைய ரத்த சேதமாகிறாப்ல இருக்கு  இதெல்லாம் நம்மால ஆவற வேலையில்லை பார்வதி அக்காவையே வரச்சொல்லிர்ரன்

முருகேசன்:
வெயிட் வெயிட். வரச்ச சிங்கம் கிங்கமெல்லாம் வேணா . பிராணிவதை சட்டம் பாயும். சூலம் கீலமெல்லாம் வேணா ஆயுததடை சட்டம் பாயும்.

ஸ்னேகா:
சரிப்பா அப்படியே ஆகட்டும்.

முருகேசன்:
வெயிட் வெயிட் இப்ப பார்வதியம்மா கோதாவுல இறங்கிட்டா நீங்க ஃபேட் அவுட் ஆயிருவிங்க பரவாயில்லையா..

ஸ்னேகா:
ஆங் அதெப்படி..

முருகேசன்:
உங்களுக்கென்ன அதிகாரத்தை பிடிக்கனும் அவ்ளதானே

ஸ்னேகா:
ஆமாம்.அப்படியே தரமான கல்வி

முருகேசன்:
நேர்மையான செல்வம், உண்மையான வீரம் ஓகே ஓகே. உங்க பட்ஜெட் என்ன?

ஸ்னேகா:
வானமே எல்லை.

முருகேசன்:
இது பாலசந்தர் படம்னு நினைக்கிறேன்

ஸ்னேகா:
அய்யோ எவ்ள செலவானாலும் பரவாயில்லேனு சொல்ல வந்தேன்.

முருகேசன்:

ஐ சீ.. நான் சொல்ற ஃபார்ம்லா நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு சொல்ல முடியாது. இந்த சனத்து மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. இருந்தாலும் என் ப்ரெயினோட பைசாவும் சேர்ரதால ஒரு ஆட்டம் ஆடிப்பார்ப்போம்.

ஸ்னேகா:
உன் ப்ளான் என்ன சொல்லு

முருகேசன்:
சொல்றேன். பிரச்சினை இல்லாத சனமே கிடையாது.  தீர்வு இல்லாத பிரச்சினையும் கிடையாது அவிக  பிரச்சினை என்ன? அதை எப்படி யாருக்கு சொல்றது ? அதுக்கு தீர்வு என்ன? அந்த தீர்வை எங்கே பெறலாம்னு கூட சனத்துக்கு தெரியாது. எடுத்த எடுப்புல கட்சியெல்லாம் வேணாம். பேசாம ஒரு வாலன்டரி ஆர்கனைசேஷன் ஃபார்ம் பண்ணலாம். நம்ம இயக்கத்தோட வேலை மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முயற்சி பண்றதா இருக்கட்டும். மக்கள் நம்ம கிட்டே வர ஆரம்பிக்கட்டும். அவிக தனிப்பட்ட  பிரச்சினைகளுக்கான  தீர்வுக்காக நாம  சின்சியரா ட்ரை பண்ணுவோம்.  நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லே. நம்ம நாட்டு நிர்வாக அமைப்புல இருக்கு பிரச்சினைனு நாளடைவுல அவிகளுக்கே தெரிஞ்சுரும். அப்ப , இரும்பு நல்லா காஞ்சி சிவந்து கிடக்கிறப்ப ஒரே போடா போடுவோம்.

ஸ்னேகா:
ஐடியா என்னவோ நல்லாருக்கு . இதை எப்படி சனங்க கிட்டே கொண்டு போறது?

முருகேசன்:
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க செக்ல சைன் மட்டும் பண்ணிக்கிட்டிருங்க.

ஸ்னேகா:
ஓகேப்பா.
_____________________________________-

Monday, July 26, 2010

சரஸ்வதி சபதம்

நடந்த கதை:
( சத்ய லோகத்தில் கோ பூஜை நடக்கிறது.  நாரதர் லட்சுமி கடாட்சமாக இருக்கிறதுனு சொல்லிர்ரார். சரஸ்வதி கோவிச்சுக்கிறாய்ங்க. நாரதர் பூலோகத்துல  கல்விக்கு மரியாதையே இல்லை . ஏம்மா அலட்டிக்கறேனு மொக்கை பண்ணிட்டு  வைகுண்டத்துக்கு போறார் . இங்கே நடந்தை லட்சுமிக்கு சொல்ல அவிக பணம் பத்தும் செய்யும்னு பத்தாம் பசலித்தனமா பழமொழி சொல்ல நாரதர் பணத்தால வர்ர தொல்லைகளையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றாரு.  அங்கே இருந்து நேர கைலாசம் போறாரு. இதுவரை நடந்த கூத்தையெல்லாம் விவரிக்க பார்வதி அப்பாடா என்னருந்தாலும் வீரம் தான் எவர் க்ரீனுன்னு சொல்றாய்ங்க. அதுக்கு நாரதர் வீரம் சோரத்தை விட மோசமாயிருச்சுனு யதார்த்தத்தை எடுத்து சொல்றாரு. பார்வதி கமிட்டி போடலாமானு கேட்க கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்கங்கறாரு. அப்பாறம் லட்சுமி,சரஸ்வதிக்கு எஸ்.எம்.எஸ்.கொடுத்து வரழைக்கிறார் . மூணு பேரும் மொதல்ல முட்டிக்கிறாய்ங்க. நாரதர் ஃபைர் இஞ்சின் வேலை செய்ய  சரஸ்வதி, லட்சுமி,பார்வதி கலந்துரையாடல் தொடர்கிறது)

சரஸ்வதி:
எனக்கென்னவோ இதுக்கெல்லாம் சொல்யூஷன் இங்கே கிடைக்கும்னு தோணலை
லட்சுமி:
பின்னே எங்கே போகனும் அதையாவது சொல்லு
பார்வதி:
பிரச்சினைக்கான  தீர்வு அப்புறம். முதல்ல பிரச்சினைக்கான மூலத்தை பார்க்கனும்
நாரதர்:
உள்மூலமா? வெளி மூலமா?
சரஸ்வதி:
நாரதா.! .(பற்களை கடித்தபடி)
லட்சுமி:
முதல்ல  நாரதனை இங்கே இருந்து வெளியே அனுப்பினாதான் இந்த பேச்சுவார்த்தைல நான் தொடர்வேன்
பார்வதி:
நாரதா .. நீ கொஞ்சம் வெளிய இரு

நாரதர்: ஹும்.. இன்னம் இந்த கலந்தாலோசனை உருப்பட்ட மாதிரிதான். வாணலிக்கு பயந்து அடுப்புல பாஞ்ச மாதிரி முருகேசன் கிட்ட மாட்டப்போறிங்க..

லட்சுமி:
ஹூ இஸ் தட் முருகேசன்?  .. சன் ஆஃப் சர்வேஸ்வரன்?

நாரதர்:
இல்லை தாயே முருகேசன் சன் ஆஃப் சுந்தரேசன்

பார்வதி:
நாரதா புதிர் போடாதே கரெக்டா சொல்லு

நாரதர்:
யம்மா முருகேசன்னா நீங்க நினைக்கிற முருகேசன் இல்லே. பூலோகத்துல இருக்கிற ஒரு வில்லங்க பேர்வழி. இந்தியாவையே சொர்க பூமியாக்கறேன்னு பீலா விட்டுக்கிட்டு பொழப்பை ஓட்டற பார்ட்டி

சரஸ்வதி:
சரியப்பா இப்ப நாங்க பேசப்போற பிரச்சினைக்கும் நீ சொல்ற பார்ட்டிக்கும் என்ன சம்பந்தம்?

நாரதர்:
நீங்க பாக்கெட் பாக்கெட்டா பிஸ்கட்டும், ட்ரம் ட்ரம்மா டீயும் சாப்பிட்டு எந்த முடிவையும் எடுக்கப்போறதில்லை. ஆனால் நான் சொல்ற முருகேசனை மட்டும் இங்கன வரழைச்சுட்டிங்க சிங்கிள் டீ, சிகரட்ல மேட்டரையே பைசல் பண்ணுருவாப்ல

பார்வதி;
நீதான் வில்லங்க பேர்வழிங்கறியே..

நாரதர்:
அதுக்கு நான் என்ன பண்ணட்டும்..க்லைஞர் கூடத்தான் குடும்ப பைத்தியம் பிடிச்சு அலையறாரு அதுக்குனு அவர் தமிழை அலட்சியப்படுத்திர முடியுமா என்ன?

சரஸ்வதி:
அதுசரி நாரதா.. நீயாச்சும் தெரிஞ்ச பூதம் .. தெரியாத பேய்கிட்டே எப்படி டீல் பண்றது. வில்லங்க பேர்வழின்னு மொட்டையா சொன்னா எப்படி?  ஒரு க்ளூ கொடுப்பா.

நாரதர்:
கொடுக்கறேன் கொடுக்கறேன்.என்.டி.ஆருக்கு ஆப்பு வச்சுட்டு சந்திரபாபு சி.எம் ஆன பீரியட்ல நடந்த சம்பவம் இது. என்.டி.ஆருக்கு இருந்த தேவுடு இமேஜுக்கு அவர் ஓவர் நைட்ல என்ன டிசைட் பண்ணி என்னா செய்தாலும் செலாவணி ஆயிட்டிருந்தது . பாபு பேக்யார்ட்ல இருந்து பூந்ததால என்ன செய்தாலும் வில்லங்கமாவே போயிட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்துல  பாபு ஒரு  அனவுன்ஸ்மென்ட் கொடுத்தாரு. " இது மக்கள் அரசு. மக்களே நல்லாட்சி நடத்த  யோசனை சொல்லுங்க, ஃபாலோ பண்ணிக்கிறேன்.  எங்கயாச்சும் தப்பு நடந்தா புகார் கொடுங்க நடவடிக்கை எடுக்கறேன். போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு குண்டுபோட்டார்.

லட்சுமி: நல்ல மேட்டர்தானே இதுல எப்படிவில்லங்கம் பண்ண முடியும்?

நாரதர்: அங்கனதான் முருகேசன் நிக்கிறாரு.  சி.எம் ஐடியா கேட்டா கொடுக்கிற அளவுக்கு எவன் வேலை வெட்டி இல்லாம இருந்தான். எல்லாருக்கும் கிழிஞ்சு தொங்கிக்கிட்டிருந்தது.பாபு கொஞ்சமா ஆடலே. கரண்ட் சார்ஜை டபுளாக்கிட்டாரு, ஒரு நாள் லேட்டானாலும் அம்பது ரூபா ஃபைன், ஆர்.டி.சி பஸ் சார்ஜை ஏத்திவிட்டுட்டாரு. ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் காலி. ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசிதிட்டத்துக்கு வாய்க்கரிசி. ஐஏஎஸ் ஐபிஎஸ்ஸையெல்லாம் கவர்மென்டு பில்டிங்குக்கு சுண்ணாம்படிக்க வச்சாரு பாபு. இந்த அழகுல
ஐடியாவாவது, ஐனாவரமாவதுனு சனம் கண்டுக்கிடலை .நம்மாளும் ப்ரெட் ஹண்டர்தான். ஆனால் ஜோசியம்ங்கறது தொழிலே கிடையாது. மக்கள் ஜோசியம் பார்த்துக்கிட்டு கொடுக்கிற பணம் மக்கள் பணம் நான் வெறும் ட்ரஸ்டிதான். மக்கள் நலத்துக்காகவே செலவழிப்பேனு சிலும்பற கேரக்டர்.

பார்வதி:
அடப்பாவமே இப்படி ஒரு கொடுங்கோலாட்சியா?

நாரதர்:
ஆமா இப்ப கேளுங்க. அவர் ஆண்ட ஒன்பது வருஷத்துல ஒன்பது கிரகமும் ஒரே நேரத்துல வக்கிரமாயிட்ட மாதிரி சனம் நா............றிப்போயிட்டாய்ங்க.  பெரிய லிஸ்டே கீது. அத்தல்லாம் எடுத்துவுட்டா சனம் பக்கத்தை மூடிட்டு ஓடிப்போயிருவாய்ங்க . மேட்டருக்கு வரேன். நம்ம முருகேசன் இன்னா பண்ணாருன்னா சென்ட்ரல் கவர்மென்டுக்கு ஒரு பேக்கேஜ் (ஆப்பரேஷன் இந்தியா 2000) ,ஸ்டேட் கவர்மென்டுக்கு ஒரு பேக்கேஜ் (எகானமி பேக்கேஜ்) ப்ரிப்பேர் பண்ணாரு. சி.எம்முக்கு அனுப்பினாரு.

சரஸ்வதி:
இதுல என்ன வில்லங்கமிருக்கு?

நாரதர்:
வருது வருது ..ஏன் அவசரப்படறிங்க. 1997லருந்து 2002 வரை 5 வருஷம் கன்டின்யுவஸா ரெண்டு பேக்கேஜையும் சி.எம் ஆஃபீஸுக்கு அனுப்பிக்கிட்டே இருந்தாரு.

லட்சுமி:
யாரும் கண்டுக்கலயா?

நாரதர்:
கண்டுக்கவே இல்லை தாயே. கண்டுக்கிட்டா தான் ஆச்சரியம். உங்களுக்கு கவர்மென்ட் ஆஃபீஸ் ரெட் டேப்பிசம் பத்தி தெரியாது. அதான் ஆச்சரியப்படறிங்க.  முருகேசன் என்ன பண்ணாரு தெரியுமா ? ஒரே ஒரு பத்து ரூபா அதுவும் இண்டியன் கரன்சிதான் சி.எம்முக்கு எம்.ஓ பண்ணாரு. அப்பல்லாம் சந்திரபாபு " நிதி நிலைமை மோசமா கீது .சனம தியாகத்துக்கு சித்தமாகனும்" னு சொல்லிக்கிட்டே இருப்பாரு அதனால முருகேசன் எம்.ஓ ஃபார்ம்ல ஸ்பேஸ் ஃபார் கம்யூனிகேஷன்ல  "அய்யா, பாவம் பதில் போட போஸ்டேஜுக்கு கூட கவர்மென்ட்ல துட்டில்லைனு நினைக்கிறேன்.அதுக்குதான் பத்து ரூ எம்.ஓ. உடனே ஸ்டாம்பு வாங்கி பதில் போடு துரை"னு  எழுதி விட்டாரு. அதை அங்கன சி.எம். ஆஃபீஸ்ல  யாரோ சீல் போட்டு வாங்கிட்டாய்ங்க.உடனே முருகேசன் பதினைஞ்சு நாள் பார்த்துட்டு டெஃபிஷியன்ஸி இன் பெய்டட் சர்வீஸுனு  கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸை போட்டுட்டாரு. ஸ்டேட்டே நாறிப்போச்சு

பார்வதி:
அய்யய்யோ அந்த முருகேசன் சங்காத்தமே வேணாம்பா. இருக்கிற பிரச்சினையையே தீர்க்க முடியாம தவிக்கிறப்ப இந்த பிரச்சினை வேற எதுக்கு

லட்சுமி:
ஆமாம் . வேணாம்.

சரஸ்வதி:
நீங்க ஏன் இப்படி பயந்து நடுங்கறிங்க. சந்திரபாபு மேல எப்ப கேஸ் போட்டாரு . அஞ்சு வருஷம் கழிச்சுத்தானே. நாம சந்திரபாபு மாதிரி  அவன் ஐடியாவ வச்சு  ஊறுகா போடவா ஐடியா கேட்க போறோம். உலகத்துல முக்கியமா கர்ம பூமியான இந்தியால உண்மையான கல்வி,செல்வம் ,வீரம் செழிக்க ஐடியா கேட்கப்போறோம்
பிடிச்சிருந்தா ஒடனே அப்ளை பண்ணப்போறோம். இல்லேன்னா தபாருப்பா உன் ஐடியா சரியில்லை. போய் வானு T.A, D.A கொடுத்து அனுப்பிர போறோம்.

பார்வதி,லட்சுமி:
ஆமாம். மொதல்லயே நம்ம கண்டிஷனையெல்லாம் எழுதி கை.எ வாங்கிருவம்.

சரஸ்வதி:
அதுவும் கரெக்டுதான். முருகேசனை மொதல்ல யார் போய் காண்டாக்ட் பண்றது?

நாரதர்:
நான் போகவா?

லட்சுமி:
வேண்டவே வேண்டாம் . இங்கன இருக்கிற வீக் பாயிண்டையெல்லாம் போட்டுக்கொடுத்துருவான். நானே போறேன்.

மற்றவர்கள்: (கோரஸாக) சரி

காட்சி: 4

(ஒரு இன்டர் நெட் சென்டர். ஸ்னேகா சைஸ்ல ஒரு  ஆன்டி. உள்ளே நுழையறாய்ங்க. முகம் லட்சுமிகரமா இருக்கு. அதே சென்டர்ல முருகேசன் ப்ரவுஸ் பண்ணிக்கிட்டிருக்காரு .)

ஸ்னேகா:
ஏங்க  நெட்ல ஒரு ப்ளாகை சர்ச்  பண்ணனும். தேடிக்கொடுக்கிறிங்களா?

இன்டர் நெட் காரர்:
ப்ளாகா? அதை பத்தி எனக்கு பெரிசா ஐடியா இல்லிங்க. இங்க முருகேசன்னு ஒருத்தர் இருக்காரு .அவர் தமிழ்ல லீடிங் ப்ளாகர். அவர் தேடித்தருவாரு. (உள்ளாற பார்த்து ) முருகேசன் சார் ஒரு லேடி ஏதோ ப்ளாக் சர்ச் பண்ணனும்னு வந்திருக்காய்ங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

ஸ்னேகா:
நீங்க.. முருகேசன்னா சித்தூர் முருகேசனா?

முருகேசன்:
ஆமாங்க.

ஸ்னேகா:
அட உன்னைத்தான் தேடிவந்தேன். தேடிக்கிட்டிருந்த ரிலீஸ்பட சி.டி ஃப்ரீ டவுன் லோட்ல மாட்ன மாதிரி கரெக்டா மாட்னிங்க.. வாங்க போலாம்

முருகேசன்:
யம்மா .. நீ என்ன தமிழ் நாடு மகளிர் போலீஸா?

ஸ்னேகா:
ஏன் அப்படி கேட்கிறே?

முருகேசன்:
ஒன்னுமில்லை கலைஞர் எழுதின பலான கதைன்னு ஒரு போஸ்ட் போட்டேன். அதான் தேடிவந்துட்டிங்களோன்னு

ஸ்னேகா:
அப்படித்தான் வச்சுக்கலாமே

முருகேசன்:
சரி. பேஸ்ட் ,ப்ரஷ்,லுங்கி எல்லாம் பேக்ல இருக்கு புறப்படலாமா?

ஸ்னேகா:
ஏம்பா போலீஸுன்னா உனக்கு பயமா இல்லே.

முருகேசன்:
மிஞ்சிப்போனா என்கவுண்டர் பண்ணூவாய்ங்க. அவ்ளதானே. நான் சாகனும்னு எத்தீனி பார்ட்டி வேண்டிக்கினு கீதோ . அவிக ஆசையும் ஒரு நா நிறைவேறனுமில்லியா?

ஸ்னேகா:
இல்லப்பா நான் தான் லட்சுமி

முருகேசன்:
யாரு பழம்பெரும்  நாவலாசிரியை லட்சுமியா? அய்யய்யோ ஒரே கதையை திருப்பி திருப்பி எழுதினாங்கனு எழுதிவச்சதுக்கு ஆவியா இருந்தவுக  உங்க உடம்புல இறங்கி வந்துட்டாய்ங்களா?

ஸ்னேகா:
இல்லப்பா.. நான் தேவலோகத்துல இருந்து இறங்கி வந்த லட்சுமி

முருகேசன்:
அ சொம்மா விடாதிங்க. நீங்க என்னை தேடிவர்ர அளவுக்கு நேரம் வந்துருச்சுங்கறது நிஜம்னா கூகுல் ஆட் சென்ஸ் என் ப்ளாகை அப்ரூவ் பண்ணியிருக்கனுமே

ஸ்னேகா:
மெயில் பாக்ஸை ஓப்பன் பண்ணி பாரு
(முருகேசன் பரபரப்பாக தன் ஜிமெயிலை ஓப்பன் பண்ன கூகுல் ஆட் சென்ஸ் கவிதை 07 ப்ளாகை அப்ரூவ் பண்ணியிருக்கிறதா மெயில் அனுப்பியிருக்கு)

முருகேசன்:
அட ஆமாங்க. ஆனா ஒரு சின்ன சந்தேகம் . நான் 1986லருந்து இந்தியாவை பணக்கார நாடா மாத்தனும்னு தான் துடிச்சேனே தவிர நான் பணக்காரனாகனும்னு நினைச்சதே இல்லியே .. நீங்க எப்படி என்னைத்தேடி

ஸ்னேகா:
இந்தியா கேடு கெட்ட நிலைல இருக்கிறதாலதான்பா நீ இன்டர் நெட்டுக்கு வந்து பத்துபதினைஞ்சு கொடுத்து ப்ளாக் மெயிண்டெய்ன் பண்றே. இந்தியா பணக்கார நாடாயிட்டா .. அதுவும் உன்னால ஆயிட்டா உனக்கிருக்கிற திறமைக்கு நீயும்  பணக்காரனாயிருவே. சைட் எஃபக்ட்.

முருகேசன்:
அப்படிங்கறிங்க. அது சரி என்ன தேடிவந்த காரணம்?

ஸ்னேகா:
சொல்றேன். வீட்டுக்கு போலாமா?

முருகேசன்:
அய்யய்யோ உங்க வீட்டுக்கா?  செத்தாதானேம்மா வைகுண்டம்  வர முடியும்? ஏதோ இந்த நாட்டுக்கு டைரக்ட் எலக்சன்ல ஜனாதிபதியாகி ஆப்பரேசன் இந்தியா 2000 ஐ அமல்படுத்திரனும்னு சின்னதா ஒரு ஆசை. அதுக்குள்ளவா ஆயுசு முடிஞ்சு போச்சு. குரு உச்சமா இருந்தா தீர்காயுசுனு ஒரு ரூல் இருக்கு தாயே

ஸ்னேகா:
தத்.. உங்க வீட்டுக்கு போலாம்பா

முருகேசன்:
எங்க வீட்டுக்கா? வேணாம் தாயே இந்த சாடே சத்ரா வருமானத்துக்கே வீட்டு சனத்துக்கு கண்ணு மண்ணு தெரியமாட்டேங்குது.

ஸ்னேகா:
மொத்தத்துல நாரதன் சொன்னது கரெக்டு

முருகேசன்:
நாரதனா? ஓ எஸ்.வி.சேகர் கொஞ்ச நாள் நடத்தி விட்டுட்டாரே அந்த நாரதன் பத்திரிக்கையா?  நம்ம ப்ளாக் தமிழ் 10 டாப் சைட்ஸ்ல நெம்பர் ஒன்னாவே  ஆனாலும் பத்திரிக்கைல எழுத மாட்டாய்ங்க..  முக்கியமா அவாள் பத்திரிக்கைல

ஸ்னேகா:
மனசை ரெம்ப தாவ விடறே. நாரதன்னா ஒரிஜினல் நாரதனே சொன்னானப்பா.

முருகேசன்:
த பார்ரா வாட் கென் ஐ டூ ஃபார் யூ !

ஸ்னேகா:
இந்தியாவை பணக்கார நாடாக்கனும்னு தானே நீயும் உழைச்சிக்கிட்டிருக்கே. உன் லட்சியத்துல உண்மையான  வீரம் நிறைஞ்ச  நாடா, கல்வியில் சிறந்த  நாடா மாத்தறதையும் சேர்த்துக்க நாங்களும் உதவி பண்றோம்.

முருகேசன்:
நாங்கன்னா..

ஸ்னேகா:
பார்வதியும்,சரஸ்வதியும்

முருகேசன்:
அதுக்கு மொதல்ல நீங்க 3 பேரும்  அட்லீஸ்ட் ஒரு எம்.பியாவாச்சும் ஜெயிச்சாகனுமே.

ஸ்னேகா:
ஜெயிச்சா போச்சு

முருகேசன்:
இன்னாமா நினைச்சிக்கினு பேசிக்கினு கீறே நீ .. எம்.பியா ஜெயிக்கனும்னா ஜெயிச்சா போச்சுங்கறே!  .மொதல்ல உனக்கு இந்திய ஜன நாயகத்தை பத்தி தெரியுமா? தேர்தல் பத்தி தெரியுமா? அரசியல் கட்சின்னா இன்னா தெரியுமா? ஒரு கட்சில சீட் வாங்கனும்னா இன்னா பண்ணனும் தெரீமா? ஒரு மீட்டிங் போட்டு சனத்தை சேர்க்கனும்னா இன்னா பண்ணனும் தெரீமா? அட்லீஸ்ட் ஒரு ப்ரஸ்மீட் வைக்க இன்னா பண்ணனும் தெரீமா? எவ்ளோ செலவாகும் தெரீமா.

ஸ்னேகா:
அதெல்லாம் நீ சொல்லுப்பா தெரிஞ்சிக்கிட்டா போச்சு. உனக்கென்னா நாங்க மூணு பேரு எம்.பி ஆகனும் அவ்ளதானே..

முருகேசன்: அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதே (மயங்கி விழுகிறார்)

(தொடரும்

Sunday, July 25, 2010

சரஸ்வதி சபதம்

நடந்த கதை:
( சத்ய லோகத்தில் கோ பூஜை நடக்கிறது.  நாரதர் லட்சுமி கடாட்சமாக இருக்கிறதுனு சொல்லிர்ரார். சரஸ்வதி கோவிச்சுக்கிறாய்ங்க. நாரதர் பூலோகத்துல  கல்விக்கு மரியாதையே இல்லை . ஏம்மா அலட்டிக்கறேனு மொக்கை பண்ணிட்டு  வைகுண்டத்துக்கு போறார் . இங்கே நடந்தை லட்சுமிக்கு சொல்ல அவிக பணம் பத்தும் செய்யும்னு பத்தாம் பசலித்தனமா பழமொழி சொல்ல நாரதர் பணத்தால வர்ர தொல்லைகளையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றாரு.  அங்கே இருந்து நேர கைலாசம் போறாரு. இதுவரை நடந்த கூத்தையெல்லாம் விவரிக்க பார்வதி அப்பாடா என்னருந்தாலும் வீரம் தான் எவர் க்ரீனுன்னு சொல்றாய்ங்க. அதுக்கு நாரதர் வீரம் சோரத்தை விட மோசமாயிருச்சுனு யதார்த்தத்தை எடுத்து சொல்றாரு. பார்வதி கமிட்டி போடலாமானு கேட்க கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்கங்கறாரு) .

பார்வதி:
நாரதா ! போதும் விளையாட்டு. உருப்படியான யோசனை இருந்தால் சொல்.

நாரதர்:
சொல்றேன் தாயே. பேசாம நீங்க மூணு பேரும் பூலோகத்துக்கு போங்க. போயி கல்வி,செல்வம்,வீரம் மூணுமே நாறிப்போயிருக்கிறதை கண் கூடா பாருங்க. ஏன் இந்த நிலைனு யோசனை பண்ணுங்க. உலகத்தை மாத்துங்க. உண்மையான கல்வி செல்வம் வீரம் தழைத்தோங்கறாப்ல செய்ங்க

பார்வதி:
இதுக்கு நான் தயார். சிவனார் ஒத்துக்கிடனுமே

நாரதர்:
அவரையும் கூட்டிக்கிட்டா போச்சு.

பார்வதி:
நல்ல யோசனை. ஆனா இந்த யோசனைக்கு சரஸ்வதி ,லட்சுமி ஒத்து வரணுமே

நாரதர்:
நான் எதுக்கு இருக்கேன். "குடி முழுகிப்போச்சு!  பார்வதியம்மா பூலோகம் போகப்போறாய்ங்க. கல்வி,செல்வம் மட்டும் பழசா இருக்க வீரம் மட்டும் துலங்க ஆரம்பிச்சுரும் . கல்வி மான், செல்வ சீமான்  எல்லாம் மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதானு உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பறேன். றெக்கை கட்டிக்கிட்டு வராங்க பாருங்க

பார்வதி:
உடனே செய்

( நாரதர் எஸ்.எம்.எஸ் அனுப்பறாரு. சரஸ்வதி,லட்சுமி தம்பதி சமேதரா வராய்ங்க.)

லட்சுமி:
இது கொஞ்சம் கூட நியாயமில்லை

சரஸ்வதி:
ஆமாம். கரெக்டா சொன்னே லட்சுமி! இது நல்லதில்லை

பார்வதி:
நீங்க எதைப்பத்தி சொல்றிங்கண்ணே தெரியலை.

லட்சுமி:
ஆமா ஆயிரம் கண்ணு வச்சிருக்கிற உங்களுக்கு எங்களை மட்டும் தெரியலை போலிருக்கு.

பார்வதி:
வார்த்தைகள் கொஞ்சம் சாக்கிரதையா வரட்டும். என் கண்ட்ரோல்ல இருக்கிற வீரம் காலாவதியாகிட்டிருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க புறப்படறேன். நான் என்ன சோனியா காந்தியா..தேர்தல் பிரசாரத்துக்கும், திறப்பு விழாவுக்கும் மட்டும் போறதுக்கு.

சரஸ்வதி:
அப்போ நாங்க சோனியா மாதிரிங்கறிங்களா?

பார்வதி:
நாரதன் உங்களையெல்லாம் சந்திச்ச பிறகு தான் என்னை வந்து சந்திச்சான். நான் உடனடியா  முடிவெடுத்தேன். நீங்க கோபூஜையும், டிவி சீரியலுமா இருந்தா நான் என்ன பண்றது

லட்சுமி:
இதை நான் கண்டிக்கிறேன். இந்திர சபைல ஒரு ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவந்து..( ஆவேசத்தில் மூச்சிரைக்கிறது)

சரஸ்வதி:
அத்தை ! நீங்க இன்னைக்கு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கலை போல இருக்கு. நான் பேசறேன்

பார்வதி:
(சற்று கோபமாக) ம்.. நீ என்ன சொல்லப்போகிறாய்?

சரஸ்வதி:
மாதா,பிதா,குரு,தெய்வம்னு சொல்றப்ப இந்த பட்டியல்ல  தெய்வம் கடைசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலதான் மாதா,பிதா,குரு எல்லாம் அமையறாய்ங்க. அதைப்போல கல்வி,செல்வம்,வீரம்னு சொல்றப்ப வீரம் கடைசில வந்தாலும் நீங்க தான் ஆதி. உங்க அம்சம் தான் நாங்க. நமக்குள்ள எதுக்கு தகராறு. பிரச்சினையை பார்ப்போம், தீர்வை யோசிப்போம்.

பார்வதி:
சேராதிருப்பது கல்வியும் செல்வமும்னு லட்சுமி நிரூபிச்சுட்டா.. செல்வம் மக்களை பிரிக்கும்,கல்வி அவிகள சேர்த்து வைக்கும்னு  நீ நிரூபிச்சுட்ட.

நாரதர்:
தாயே .. விவரம் புரியாம பேசாதிங்க. செல்வம் மக்களை ஏழை, பணக்காரன்,அப்பர் மிடில் க்ளாஸ்,மிடில் க்ளாஸ் ,லோயர் மிடில் க்ளாஸ் இப்படி பிரிச்சுப்போட்டது நிஜம் தான் கல்வி மட்டும் என்னத்த கிழிச்சது?  நாலெழுத்து படிச்சதுமே ஃபேன் கீழே வெள்ளையும் சள்ளையுமா உட்கார்ந்து நோகாத சம்பாதிக்கனுங்கற எண்ணம் வந்துருச்சு. அரசாங்க வேலையோட எண்ணிக்கை  லிமிட்டட். அதுல எப்படியாச்சும் இடம் பிடிக்கனும்னு ஸ்டேட், டிஸ்ட்ரிக்ட்,மொழி,சாதி ,மதம்னு மக்களை கச்சாமுச்சானு பிரிச்சுப்போட்டது கல்விதான்.

சரஸ்வதி:
அப்படியா?

நாரதர்:
ஆமாங்கம்மா..கல்விலயே எத்தனை பிரிவு? ஸ்டேட் சிலபஸ், சென்ட் ரல் சிலபஸ், இங்கிலீஷ் மீடியம், தமிழ் மீடியம், ப்ரைவேட் ,பப்ளிக், ஆர்ட்ஸ், சைன்ஸ்

பார்வதி:
சரியப்பா.. கொஞ்சம் டீ,காஃபி,ஸ்னாக்ஸ் எதுனா சாப்பிட்டுக்கிட்டே பேசுவம். இது ரெம்ப பெரிய சப்ஜெக்ட்  போல  இருக்கு.

( மும்மூர்த்திகள் ஏற்பாடுகளை கவனிக்க நாரதர் உதவுகிறார்)

(தொடரும்)

Saturday, July 24, 2010

சரஸ்வதி சபதம்

லட்சுமி:
என்ன நாரதா ! பணத்தால் இந்த உபயோகம் இருக்குன்னு என் மனம் குளிர்ராப்ல  ஒரு வார்த்தை கூட சொல்ல தெரியாதா உனக்கு?

நாரதர்:
(மனசுக்குள்ள)ஹும்.. அந்த தகுதி இருந்திருந்தா இன்னைய தேதிக்கு அம்மாக்கிட்டயோ ,தாத்தாகிட்டயோ செட்டிலாகியிருப்பனே ( வெளிப்படையாக) பணம் இருந்தா உங்க நரகத்தை நீங்களே டிசைன் பண்ணிக்கலாம் தட்ஸால்

லட்சுமி:
ஏன் நாரதா பணத்தை எல்லாரும் வெறுக்கறாய்ங்க?

நாரதர்:
மொட்டையா சொன்னா எப்படீ?  பணத்தை வெறுக்கறாய்ங்க தான் . அடுத்தவன் கிட்ட இருக்கிற பணத்தை.

லட்சுமி:
சரி அப்ப பணத்தை வச்சிருக்கிறவன் ப்ரஸ்டீஜியஸா ஃபீல் பண்ணனும் இல்லியா?

நாரதர்:
மேலுக்கு அப்படித்தான் சீன் போடறாய்ங்க. உள்ளாற அவிகளுக்கே தெரியுது.. அவிக ப்ரஸ்டிஜை அடகுவச்சித்தானே அந்த பணத்தையே ஈட்டியிருக்காய்ங்க

லட்சுமி:
அடுத்தவங்க கிட்ட இல்லாதது தன் கிட்டே இருந்தா பந்தா தானே

நாரதர்:
அப்படி நினைச்சுத்தான் வாழ்க்கைய தொலைச்சு பணத்தை ஈட்டியாறது. ஆனால் என்ன ப்ரயோசனம் அவிக கிட்ட இல்லாதது நம்ம கிட்ட இருக்குது ஓகே சந்தோஷம் தான். அதை அவிக ரெகக்னைஸ் பண்ணாதானே. ஒரே ஒரு பார்வையில தள்ளி வச்சுர்ராய்ங்களே. மேலும் நம்ம கிட்டே கொஞ்சம்போல காசு சேர்ந்ததும் காசில்லாதவனை நாம மனுஷனாவே மதிக்க மாட்டோம் . நம்மை விட அதிகம் காசு வச்சிருக்கிறவனோட இன்டராக்ட் ஆகத்தான் துடிப்போம். அவிக நம்மை மனுசனாவே மதிக்கமாட்டாய்ங்க. சரி நம்மை விட ஒரு படி கீழே இருக்கிறவனோட  இன்டராக்ட் ஆகலாம்னு நினைச்சா அவன் எங்கே கடன்,கைமாத்து கேட்டுருவானோனு பயம். மொத்தத்துல பணம் மனுஷனை ஐசோலேட் பண்ணிருது. தனிமைப்படுத்திருது.

லட்சுமி:
அதாவது நாம யார் நடுவுல  பந்தாவா வாழனும்னு நினைச்சமோ அவிகளோடவே கம்யூனிகேஷன் கட் ஆயிருதுங்கறே.

நாரதர்:
ஆமா தாயே.

லட்சுமி:
இதுக்கெல்லாம் என்ன தான் காரணம்?

நாரதர்:
பணம் வர்ர வழி சரியில்லை தாயே அது கண்டதை மிதிச்சுக்கிட்டுத்தான்  வருது. மனசு,புத்தி, வாழ்க்கை எல்லாமே நாறிப்போகுது

லட்சுமி:
எல்லாருமே லஞ்சம்,ஊழல் செய்துதான் சம்பாதிக்கிறாய்ங்கனு சொல்றியா?

நாரதர்:
பிஹைண்ட் எவ்ரி ஃபார்ச்சூன் தேர் ஈஸ் எ சின்

லட்சுமி:
ஏன் இப்படி ஆயிருச்சு.?

நாரதர்:
நான் புதுசா சொல்ல என்ன இருக்கு தாயீ ! நாட் நாட்லயே கார்ல் மார்க்ஸ் சொல்லிட்டாரு. ஒரு வியாபாரத்துல கூலிகாரன் வயித்துல அடிக்கலன்னா, கூலிய குறைச்சு கொடுக்கலன்னா  லாபமே வராதாம். ஒரே தொழிலை தனியார் பண்ணா லாபம் கொட்டுது. அரசாங்கம் பண்ணா  நஷ்டம் தான் தேள் மாதிரி கொட்டுது ஏன்? தனியார்ல ஜாப் கியாரண்டி கிடையாது.வேலை செய்தா கூலி.. இல்லாட்டி பார்த்துக்கலாம் வேற ஜோலி . கூலியை கிள்ளி கொடுத்து லாபத்தை அள்ளி எடுக்கிறான். அரசாங்கத்துல ? ஜாப் கியாரண்டி, கூலிய அள்ளி கொடுக்கனும். லாபத்தை தேடிப்பார்க்கனும். எப்பவாச்சும் முழிச்சுக்கிட்டு கரெக்டா வேலைபாருங்கப்பான்னா உடனே ஸட்ரைக்.அப்பாறம்   கூலிக்காரனை கெஞ்சி கூத்தாடனும்.

லட்சுமி:
ஏம்பா அப்போ சம்பாதிக்கிறவன் எல்லாமே கூலிக்காரன் வயித்துல அடிச்சித்தான் சம்பாதிக்கிறாங்கறியா?

நாரதர்:
சர்வ நிச்சயமா.

லட்சுமி:
அதனாலதான் பணத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சா?

நாரதர்:
அப்படியும் சொல்ல முடியாது தாயி. பணம்னா சனத்துக்கு ஹேட் அண்ட் லவ் ரிலேஷனிருக்கு. ஊரும் உறவும் மதிக்கலைனுதான் பணம் சம்பாதிக்கிறான். சம்பாதிச்ச பிறகு அந்த ஊருக்கும் உறவுக்கும் தூரமாயிர்ரான். ஃபர்ஸ்ட் அஃப் ஆல் அவன் ஊருக்கும் உறவுக்கும் தூரமானாதான் பணத்தையே சம்பாதிக்க முடியுது. அதனாலதான் சம்பாதிச்சவனுக்கும் பணம்னா கடுப்பு. சம்பாதிக்காதவனுக்கும் வெறுப்பு

லட்சுமி:
ஊர் உறவை விட்டுராம சம்பாதிக்க முடியாதா நாரதா? 

நாரதர்:
முடியும் தாயே.. அதுக்கு நீங்க தான் எதுனா பண்ணனும்

லட்சுமி:
நானா?

நாரதர்:
ஆமாம்மா நீங்க தான். நீங்க தானே பணத்துக்கு அதிபதி. நீங்க எந்த வழில சனங்க கிட்டே போகனும்னு  நீங்க தானே முடிவு பண்ணனும்

லட்சுமி:
என்னமோ நாரதா .. கல்வியோட நிலையா  அப்படி இருக்கு ..செல்வத்தோட நிலையா இப்படி  இருக்கு.. கலைமகளும் நாக் அவுட், திருமகளும் நாக் அவுட் இந்த வீரத்துக்கு பிரதி நிதியான அலைமகள் பாடு நிம்மதி

நாரதர்:
(மனதுக்குள்)  அப்படியா இருக்கக்கூடாதே (வெளிப்படையாக) அப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா?

லட்சுமி:( யோசனையாக) ம் ...ம்
காட்சி: 3
இடம்: கைலாசம்
பாத்திரங்கள்: பார்வதி, நாரதர்
நாரதர்:
நாராயண நாராயண

பார்வதி:வா நாரதா எங்கே இந்தப்பக்கம்?

நாரதர்:
ஒன்றுமில்லை தாயே தேவலோகமே பற்றி எரிகிறது தங்களுக்கேதும் தகவலில்லையா?

பார்வதி:
பெட்ரோல் டீசல் உயர்வை தானே சொல்கிறாய்?

நாரதர்:
என்ன தாயே நீங்க... கைப்புள்ள  கணக்கா இருக்கிங்க..கல்விக்கும், செல்வத்துக்கும் பிரதி நிதிகளான கலைமகளும், திருமகளும் அரக்க பரக்க  விழிச்சு எதைத்தின்றால் பித்தம் தெளியும்னு மண்டையை பிச்சிக்கிட்டிருக்காய்ங்க நீங்க என்னடான்னா  மெகாசீரியலோட மறு ஒளிபரப்ப பார்த்துக்கிட்டிருக்கிங்க

பார்வதி:
சொல்றதை திருத்தமா சொல். ஒரு இழவும் புரியலை..

நாரதர்:
தாயே.. இன்னைக்கு காலைல சத்யலோகத்துல கோபூஜை. மேட்டர் தெரியாம பூந்துட்டன். அங்கே இருந்த  இன்டிரியரை பார்த்துட்டு லட்சுமி கடாட்சமா இருக்குனு வாய் தவறி சொல்லிட்டேன்

பார்வதி:
வாய் தவறி சொல்வதென்ன சரியாகத்தானே சொல்லியிருக்க

நாரதர்:
கலிகாலமாச்சே.. சரியா சொல்றவுகளுக்குத்தானே ஆப்பு வைக்கிறாய்ங்க

பார்வதி:
முட்டாள் நாரதா நான் என்ன பண்ணிக்கிட்டிருக்கேன் பார்த்தே இல்லை. சீரியல். மெகா சீரியல். விளம்பர இடைவேளைக்குள்ள மேட்டரை சொல்லி முடி

நாரதர்:
இதோ முடிச்சிட்டன் தாயே. லட்சுமி கடாட்சம் ங்கற வார்த்தைய சத்யலோகத்துல சொல்லக்கூடாதுன்னிட்டாய்ங்க.

பார்வதி:
அரசியல்வாதி மாதிரி ஸ்டேட்மென்டை வாபஸ் வாங்கிக்க வேண்டியதுதானே

நாரதர்:
நான் அரசியல் வாதியில்லையே .. கலிகாலத்துல கல்வி என்னமா கச்சாடாவாயிருக்கு, படிச்சவன் எல்லாம் லட்சுமி காலை பிடிச்சவன் காலை எப்படி நக்கறான்னு எடுத்து விட்டேன்

பார்வதி:
அடடே அப்புறம்?

நாரதர்:
அவிகளுக்குள்ள சிந்தனை ஆரம்பிச்சுருச்சு. இடைத்தேர்தல்ல டெப்பாசிட் பறிபோன எதிர்கட்சி கணக்கா தலையை பிடிச்சிக்கிட்டாங்க.

பார்வதி:
தலையை பிடிச்சிக்கிட்டு என்ன செய்யறதாம்?

நாரதர்:
கல்வி அமைப்பை மாத்தி அமைக்க திட்டம் தீட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க

பார்வதி:
இவ்ளோ தூரம் நடந்து போச்சா

நாரதர்:
இது மட்டுமில்லை தாயே லட்சுமி அம்மா கூட முழிச்சிக்கிட்டாய்ங்க

பார்வதி:
இந்த மேட்டர் லட்சுமிக்கு எப்படி தெரிஞ்சது?

நாரதர்:
என்னை மாதிரி யாரோ நல்லவுக சொல்லியிருப்பாய்ங்க.. இதெல்லாம் ஒரு கேள்வியா?

பார்வதி:லட்சுமி என்ன பண்ண போறாளாம்?

நாரதர்:
பணம் பத்தும் செய்யும்ங்கறதெல்லாம் காலாவதி ஆயிருச்சாம். எதிர்கட்சிலருந்தா பத்து என்ன ஒன்னே ஒன்னை  கூட செய்ய மாட்டேங்குதாம்.அதனால டோட்டல் செட்டப்பை மாத்தப்போறாங்களாம்

பார்வதி:
எப்படியோ முட்டிக்கிட்டு அவஸ்தை படட்டும் நம்ம டிப்பார்ட்மென்ட் ஓகேதானே

நாரதர்:
ஆயிரம் கண்ணுடையாள்னு பீத்தறாய்ங்க. ஆயிரம் கண்ணும் மெகாசீரியலை மட்டும் பார்த்தா இப்படித்தான். வீரம் மட்டும் என்ன வாழுதாம் அது சோரத்தை விட கேவலமா போயிருச்சு

பார்வதி:
நாரதா? (பெரிய எழுத்தில்)

நாரதர்:
அடடா ஹெட் ஃபோன் யூஸ் பண்ணாமயே காது செவிடா போயிருக்கும் எதுக்கு இப்படி கத்தறிங்க?

பார்வதி:
உனக்கு என்ன தைரியம் இருந்தா வீரம் சோரத்தை விட கேவலமா போச்சுனு சொல்வே

நாரதர்:
இது தகிரியம் எல்லாம் தேவையில்லை தாயே. அந்த காலத்துலல்லாம் சண்டைன்னா முன் கூட்டி நோட்டீஸ் கொடுத்து, ரவுண்ட் கிழிச்சு ஒத்தைக்கு ஒத்தை
மோதுவாய்ங்க. இப்ப அப்படியா கீது. டொக்கா மாட்னா மாவோ  சி.ஆர்.பி எஃப்ஃபை  போட்டு கழட்டிருது. மாவோ டொக்கா மாட்டினா போலீஸ் என் கவுண்டர் பண்ணிருது. ஒருத்தனை போட்டுத்தள்ள கும்பலா வந்து  வெடிகுண்டு போடறாய்ங்க. அரிவாளால வெட்டறாய்ங்க. இது வீரமா சோரமா நீங்களே முடிவு பண்ணிக்கங்க

பார்வதி:
எப்படியோ பேனா பிடிச்சவன் பாணா பிடிச்சவனை பார்த்து நடுங்கறானா இல்லியா?

நாரதர்:
யம்மாடி..பாணா பிடிச்சவன் என்ன .. மெசின் கன் பிடிச்சவன் கூட என் கவுண்டர் லிஸ்ட்ல பேர் ஏறிட்டா பேனா பிடிக்கிறவுக காலைத்தான் பிடிக்கிறான்.

பார்வதி:
அய்யே இது என்ன அசிங்கம்?

நாரதர்:
இன்னம் பெரிய பெரிய அசிங்கமெல்லாம்  இருக்கும்மா.இலங்கைல  சாதாரண மக்கள் மேல விமானத்துல இருந்து குண்டுபோட்டிருக்காய்ங்க,  விஷ வாயுவெல்லாம் பிரயோகிச்சிருக்காங்க. பப்ளிக் ப்ளேஸ்ல புகை விட்டான்னு ஜீப்புல ஏத்தற போலீஸ் போபால்ல விஷப்புகைய விட்டு  நாலஞ்சு தலைமுறைய அழிச்ச  ஆண்டர்சனை மட்டும் ஸ்பெஷல் ஃப்ளைட் ஏத்தி அனுப்பிச்சிருச்சுங்கம்மா.

பார்வதி:
அப்போ வீரத்தால உபயோகமில்லேங்கறியா?

நாரதர்:
வீரத்தால உபயோகமில்லேனு எப்படிம்மா சொல்றது ..இன்னைக்கு வீரம்னு செலாவணில இருக்கிற ஐட்டத்தால உபயோகமில்லேனு சொல்றேன்.

பார்வதி:
உண்மையான வீரம்னா என்ன?

நாரதர்:
நியாயம் எவ்ளோ வீக்கா இருந்தாலும். அநியாயம் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தாலும்
நியாயத்தின் பக்கம் நின்னு உயிர் தியாகத்துக்கும் துணியறதுதான் உண்மையான வீரம்.

பார்வதி:
வீரம் இருந்துட்டா போதுமா? பலம் வேணாமா?

நாரதர்:
உண்மையான பலம் இருக்கனும்.இல்லேன்னா வீரம் எந்த கணம் வேணம்னா சோரம் போயிரும்

பார்வதி:
அதென்ன உண்மையான பலம்?

நாரதர்:
நான் தப்பு செய்யலே. என் முயற்சில சுய நலமில்லே. இது தர்ம சம்மதம்ங்கற அசைக்க முடியாத எண்ணம்தான்

பார்வதி:
இது எத்தனை பேர்கிட்டே இருக்குங்கறே?

நாரதர்:
ஆயிரம் கண்ணுடைய நீங்க தான் சொல்லனும்

பார்வதி:
ஏம்பா உண்மையான வீரம் காலாவதியாயிருச்சு

நாரதர்:
கல்வின்னா அது  மிருகமா இந்த பூமிக்கு வர்ர மனிதனை மனிதனா மாத்தனும். அவனோட உடல்,மனம்,புத்திய விகசிக்க வைக்கனும். ஆனால்  இன்னைக்கு செலாவணில இருக்கிற கல்வி மாணவனை ஒரு ஐ பேடை விட கேவலமா மோல்ட் பண்ணுது. அவனுக்கு ஒரு இழவும் தெரியாது தன் உடம்பை தெரியாது
மனசை தெரியாது, புத்திய தெரியாது, பெற்றோரை தெரியாது, குடும்பத்தை தெரியாது,ஏரியாவை தெரியாது, நாட்டை தெரியாது,உலகத்தை தெரியாது. அறியாமைங்கற இருட்டை விரட்டற சன் மாதிரி பிரகாசிக்க  வேண்டிய கல்வி சன் டிவியை விட கேவலமா இருக்கு. கலைஞர் டிவியை விட மோசமா இருக்கு. எல்லா அச்சங்களுக்கும் காரணம் அறியாமை. அச்சமுள்ள நெஞ்சில் வீரம் பூக்காது. அச்சம் கொண்ட நெஞ்சத்துக்கு  முக்கியமல்லாத மேட்டர் எல்லாமே முக்கியமா படுது, முக்கியமான மேட்டர் எல்லாமே முக்கியமில்லாததா படுது. அதனால தான் வாழ்க்கை வண்டிய லட்சியத்தை நோக்கி செலுத்த தேவையான பணம்ங்கற ஃப்யூயலையே லட்சியமாக்கிருச்சு.


பார்வதி:
அப்போ முதல்ல கல்வி அமைப்பு மாறனுங்கறே

நாரதர்:
ஆமாம்மா அப்பத்தான் பணம்னா என்ன? அதனோட ஜூரிஸ்டிக்சன் எதுவரைனு ஒரு தெளிவு வரும். எப்போ சரியான கல்வி அமைப்பு ,  நியாயமான பொருளாதார அமைப்பு ஏற்படுதோ அப்பத்தான் உண்மையான வீரம் பிறக்கும்

பார்வதி:
இப்ப எனன் செய்யலாம்? ஒரு ஹை லெவல் கமிட்டி போட்டு அறிக்கை கொடுக்க சொல்லலாமா?

நாரதர்:
கிழிஞ்சது போங்க. ஏறக்குறைய சோனியா காந்தி ரேஞ்சுக்கு போயிட்டிங்க. கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்க .

(தொடரும்)

Wednesday, July 21, 2010

சரஸ்வதி சபதம்

( சரஸ்வதி அம்மாவோட - பி.டி.சரஸ்வதி இல்லிங்கோ - ஹெட் குவார்ட்டர்ஸ்.  நாரதர் என்ட்ரி. )

நாரதர்:
நாராயண!  நாராயண ! நாமகளுக்கு  நமஸ்காரம். சத்ய லோகத்தில் என்ன விசேஷம்?  வேதவித்துக்கள்,பிராமணோத்தமர்கள் எல்லாம் மந்தை மந்தையாக பசுக்களை ஓட்டிச்செல்கின்றனர். மூட்டை மூட்டையாக  பொற்காசுகளை சுமந்து செல்கின்றனர்...

சரஸ்வதி:
 நாரதா உன் ஒக்காபிலரிய மாத்திக்க சொல்லி பல வருசமாச்சு. சனங்க லேங்குவேஜுக்கு வந்துரு..

நாரதர்:
இது என்ன தாயே தமிழகத்துல செம்மொழி மாநாடெல்லாம் நடத்தி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கி வரும் சமயம் சனங்களோட லேங்குவேஜ் என்று ஆங்கில கலப்போட பேசறிங்க

சரஸ்வதி:
முட்டாள் நாரதா ! பக்தர்களால தான் பகவான் சர்வைவ் ஆகிறார்.  பேசும் மக்களாலதான் மொழி சர்வைவ் ஆகுது. மக்கள் பேசும் மொழி தான் மொழி. மக்களுக்காகத்தான் மொழியே தவிர, மொழிக்காக மக்கள் இல்லை.

நாரதர்:
என்னவோ அம்மா தமிழ் நாடு பக்கம் போகும்போது சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

சரஸ்வதி:
அவிக பவிசு எனக்கு தெரியாதா? அதான் கேபிள் கனெக்சன் ஒன்னு வாங்கி வச்சிருக்கே . அந்த கருமாதியெல்லாம் பார்த்து பார்த்துதான் என் லேங்குவேஜே மாறிருச்சு

நாரதர்:
தாயே நான் கேட்ட கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை. சத்திய லோகத்தில் என்ன விசேஷம்?

சரஸ்வதி:
அது ஒன்னுமில்லை போது போகாத குறைக்கு அப்பப்போ பிரவுசிங் பண்றேனா   அதுல  ஓம்கார் ஸ்வாமிகள்னு ஒரு பட்சி சிக்குச்சு. பசுவை பத்தி ஆகா ஓகோனு எழுதியிருக்கவே ச.லோகத்துல இருக்கிற வத்தல் தொத்தல் பசுக்களுக்கு கோபூஜை செய்தோம்.

நாரதர்:
இதென்ன தாயே தேவலோகத்துல யாருக்கும் வயசே ஆகாது டீன் ஏஜ்லயே இருப்பாய்ங்கனு நினைச்சிருந்தா வத்தல் தொத்தல்ங்கறிங்க. வெளிய போன அய்யருங்கல்லாம் ஜெர்சி பசு ரேஞ்சுலதானே ஓட்டிக்கிட்டு  போனாய்ங்க

சரஸ்வதி:
ஹும். அதெல்லாம் அந்த காலம் இப்போ பூமியிலே பொல்யூஷன் காரணமா அமிர்தம் எல்லாம் பொல்யூட் ஆயிருச்சு. அதை ப்யூரிஃபை பண்ண பட்ஜெட்ல பாதி செலவாகுது. இதுல பசுக்களுக்கு எங்கருந்து அமிர்தம் கொடுக்கிறது

நாரதர்:
இப்போ ஓட்டிக்கிட்டு போன பசுவெல்லாம் ?

சரஸ்வதி:
க்ளோனிங்ல உருவானது.  தானமா கொடுத்த க்ளோனிங் பசுவை எல்லாம் பூலோகத்துக்கு ஓட்டிக்கிட்டு போறாய்ங்க

நாரதர்:அப்போ வத்தல் தொத்தல் பசுவெல்லாம்?

சரஸ்வதி:இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுட்டு கொட்டடில கிடக்குதுங்க

நாரதர்:
ஆக மொத்தத்துல சத்தியலோகத்தை  லட்சுமி கடாட்சமாக்கிட்டிங்க

சரஸ்வதி:
என்ன உளர்ரே. இது சத்திய லோகம். என் உலகம். என்னவோ லாயிட்ஸ் ரோட்ல கலைஞர் வாழ்கனு கோஷம் போட்டாப்ல லட்சுமி கடாட்சமாம் லட்சுமி கடாட்சம்

நாரதர்:
இதென்ன தாயே வம்பு. ஜெயலலிதா திரைப்பட கலைஞர்னு சொல்ல முடியும்.. புது வார்த்தையையா கண்டுபிடிக்க முடியும் லட்சுமி கடாட்சம்ங்கறது பொதுவான பேர்.

சரஸ்வதி:
இந்தியன்ங்கறது கூட பொதுவான பேரு. சந்திரபாபு ஒரு இந்திய குடிமகனா  பாப்லி பார்க்க போறேன் போனாரு என்னாச்சு தெரியும்ல?

நாரதர்:
தாயே இதென்ன தாயே அந்த காலத்து இந்திரகுமாரி மாதிரி பேசறிங்க..

சரஸ்வதி:
பேசுவதென்ன? வீட்டுக்கு ஆட்டோ வரும்

நாரதர்:
சரிம்மா என் ஸ்டேட்மென்டை வாபஸ் வாங்கிக்கிறேன். எனக்கென்ன போச்சு. எமர்ஜென்சி பீரியட்ல சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் கொடுத்த ரிப்போர்ட்டை  இந்திரா அம்மையார் நம்பின மாதிரி நீங்க ஏதோ நினைப்புல இருக்கிங்க அதை நான் ஏன் கெடுக்கனு?

சரஸ்வதி:
என்ன சொல்கிறாய்?

நாரதர்:
ஏதோ சொல்ல வசதியா இருக்குன்னு கல்வி,செல்வம்,வீரம்னு சொல்றாய்ங்க. இதை மெரிட் லிஸ்டா நினைச்சுட்டாப்ல இருக்கு

சரஸ்வதி:
அப்போ கல்விக்கு மரியாதையே இல்லேங்கறியா?

நாரதர்:
சீ ஃபீல்டுல மட்டும்  ஊமை விழிகள் பீரியட்ல கொஞ்சமா இருந்தது

சரஸ்வதி:கொஞ்சம் விவரமா சொல்லு

நாரதர்:
ஒரு முக்கியமான கூட்டத்துக்கு யார் யாரை அழைச்சிருக்கிங்கனு முதல்வரா இருந்த  காமராஜர் கேட்டாராம். அதிகாரிங்க ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காய்ங்க. உடனே அவர் என்னய்யா எல்லாம் படிச்சவனையே கூப்பிட்டிருக்கிங்க.. இவிக மேடையேறி மைக்கை பிடிச்சி அவன் என்ன சொன்ன தெரியுமா இவன் என்ன சொன்னான் தெரியுமானு வெறும் கொட்டேஷன்ஸா அடிச்சி விடுவானுகன்னாராம்

சரஸ்வதி:
படிச்சவனுக்கு சொந்தபுத்தியே இருக்காதுனு சொல்றியா?

நாரதர்:
இருக்குது தாயே .. இவிகளுக்கு லஞ்சம் வாங்குவது எப்படி? பெண் ஊழியர்களை மிரட்டி படுக்க போடறது  எப்படினு பாடம்  நடத்தியா டிகிரி தராய்ங்க

சரஸ்வதி:
படிச்சவனெல்லாம்  இதே கேசுங்கறியா?

நாரதர்:
அப்படி சொல்லலேம்மா. ஆனா படிச்சவனுக்கெல்லாம் முதுகெலும்பு ஜல்லியா தானே இருக்கு. அரசியல்வாதி படிக்காதவன். அவன் பி.ஏ படிச்சவன். இவனுக்கு முதுகெலும்பிருந்தா 100 நாள் பி.ஏவா  வேலை பார்த்து அந்த நாதாரி பண்ற பிக்காலி வேலையையெல்லாம் பட்டியல் போட்டு மக்கள் மன்றத்துல வைக்கவேண்டியதுதானே

சரஸ்வதி:
என்னப்பா இது அநியாயமா இருக்கு.. கல்வியை கண்ணுனு சொல்றாய்ங்க. படிச்சவுக இப்படி குருட்டுத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களா?

நாரதர்:
அது நகக்கண்ணா இருந்தாலும் ஊசி இறங்கினா வலிக்கும். கல்வி சைனா க்ளேல பண்ண கண்ணு மாதிரி ஆயிருச்சு. அ நீதி கண்டு சிவக்கவும் மாட்டேங்குது ? கொடுமை கண்டு கலங்கவும் மாட்டேங்குது

சரஸ்வதி:
சரிப்பா லஞ்சம் வாங்கறானோ, பெண் கொலிக்ஸை படுக்க போடறானோ, முழங்காலும், முதுகெலும்பும் ஜல்லியா இருக்கோ படிச்சவன்னா ஒரு மரியாதை இருக்கில்ல.

நாரதர்:
அன்யோ அன்யோ எந்த காலத்துல கீறே தாயி. உலகத்துல எட்டு மணி நேர வேலை அமலாகி இத்தீனி காலம் ஆச்சு. சித்தாளு, மேஸ்திரி கூட பொழுது சாஞ்சதும் வேலைய விட்டு இறங்கிர்ரான். ஆனால் சாஃப்ட் வேர் இஞ்சினீருங்க கக்கூஸ்ல கூட வேலை பார்க்கிறாய்ங்க

சரஸ்வதி:
சரிப்பா.. செல்வம் டெம்ப்ரரி.கல்வி பர்மெனென்டு இல்லியா?

நாரதர்:
அதெல்லாம் அந்த காலம் தாயி. நேத்திருந்தவன் இன்னிக்கில்லங்கற மாதிரி.. நேத்து படிச்சதை இன்னிக்கு அப்டேட் பண்ணிக்கலன்னா அவன் காலி

சரஸ்வதி:
என்ன நீ  அப்ப படிச்சவன்லாம் முட்டாள் தானா?

நாரதர்:
இல்லியா பின்னே. இப்போ ஜன நாயக யுகம் . சனம் போடற வாக்குதான் ஆட்சியாளர்களை தீர்மானிக்குது. பதிவாகற ஓட்டு சதவீதத்தை பார்த்தா 60 அ 70 சதவீதத்துக்கே முக்குது. படிச்சவன் எவனும் ஓட்டுப்போடறிதில்லை தாயே அதனாலதான் அரசாங்கமெல்லாம் இப்படி இழவெடுக்குது

சரஸ்வதி:
ஓட்டு போட வரலைன்னாலும் படிச்சவுக தான் எம்.எல்.ஏ எம்பிக்களுக்கு ஆலோசனை சொல்ற ஸ்தானத்துல இருக்காய்ங்கனு நீயே சொன்னே. அப்போ இந்த நாட்டை ஆள்றது படிச்சவுக தானே

நாரதர்:
சின்ன புள்ளத்தனமா பேசறிங்க. ஒரு பீரியட் வரை ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு, அவிக பேச்சு,கருத்துக்கு  ஒரு மரியாதை இருந்தது. இல்லேங்கலை. இப்போ சிங்கத்துக்கு வேட்டைய காட்டி கொடுக்கிற சிறு நரி கூட்டமாயிருச்சும்மா படிச்சவுக கூட்டம்.

சரஸ்வதி:
என்ன நீ எல்லாம் என் டிப்பார்ட்மென்டுக்கு எதிராவே பேசிக்கிட்டிருக்கே. பணம் சம்பாதிக்கனும்னா முதலீடு செய்ய  வேணம். ஆனால் கல்வி அப்படியில்லையே. ஊக்கமிருந்தா போதும்

நாரதர்:
க்கும் நீங்க வெறுமனே ஓம்கார் ஸ்வாமிகளோட ப்ளாகை மட்டும் விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டிருந்தா இப்படி தான் அவுட் டேட்டடாயிருவிங்க. எந்த காலத்துல இருக்கிங்க. பேபி க்ளாஸ்ல சேரனும்னா கூட டொனேஷன், அட்மிஷன் ஃபீஸ்,அட்வான்ஸ் ஃபீசுனு கொட்டிக்கொடுக்கனும்

(தொடரும்)