Sunday, November 25, 2007

ஏப்ரல் வரை மிதுனத்தில் செவ்வாய் ஸ்தம்பனம்:

செவ்வாய் வழக்கமாக ஒரு ராசியில் 45 நாட்கள் மட்டுமே தங்குவார். தற்போது 2008 ஏப்ரல் வரை மிதுனத்திலேயே ஸ்தம்பிக்கிறார். இது பொதுவாகவே உலகத்துக்கே கேடு விளைவிப்பதாகும். அதிலும் மிதுனம் என்பது காதல்,உடலுறவு போன்றவற்றை காட்டுமிடம் என்பதால் இந்த வகையில் சிக்கல்கள் ஏற்படும். எதிர் பால்,செக்ஸ் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும். ராசி சக்கரத்தில் இது 3 ஆவது ராசி என்பதால் சகோதர ,சகோதிரிகளே பகைவராவர்.விபத்துகள் அதிகரிக்கும். செவ்வாய் பூமி காரகன் என்பதால் பூகம்பங்கள் அதிகரிக்கும். மேலும் ராணுவ ஆட்சி,போலீஸ் அடக்கு முறை,என் கவுண்டர்கள்,அடித்து கொலை, ஆயுத புரட்சி,குண்டு வெடிப்பு,தீவிபத்து ,ரத்த சேதம் அதிகரிக்கும்.


இந்நிலையில் முதல் கட்டமாக செவ்வாய் கடக,விருச்சிக,மகரம்,சிம்மம் ஆகிய ராசியினருக்கு 2008 ஏப்ரல் வரை தர உள்ள பலன் களை பார்ப்போம்.


1.கடகம்:
உங்களுக்கு 5,10க்கு அதிபதியான செவ்வாய் 12 ல் ஸ்தம்பிப்பது நிச்சயமாக நல்லதல்ல. இதனால் ஞாபக மறதி,தவறான முடிவுகள் எடுத்து அவதி படுதல்,அவமானம்,பிள்ளைகளுக்கு தீமை ஆகிய பலன் கள் ஏற்படும். விற்ப‌னை துறையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும்,நில‌ம் விற்கும் முய‌ற்சியில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கும் எண்ணிய‌து ஈடேறும்.அதே நேர‌ம் ர‌த்த‌ம்,எரிச்ச‌ல் தொட‌ர்பான‌ தொல்லைக‌ள் ஏற்ப‌டும். மின்சார‌ம்,எரிபொருள்,பால் பொருட்க‌ளால் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌ட‌லாம். ச‌கோத‌ர‌ர்க‌ளால் தொல்லை ந‌ஷ்ட‌ம் நேர‌லாம். ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌வ‌ர்கள் தம் குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ர‌த்த‌தான‌ம் த‌ர‌லாம்.(ரத்தத்துக்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாயால் ஏற்படக்கூடிய ரத்த விரயத்தை முன் கூட்டியே நடத்திக் கொள்வது எதிர்கால விபத்து முதலானவற்றை தடுத்து விடும்). இய‌லாத‌வ‌ர்க‌ள் தீவிப‌த்தில் சிக்கிய‌வ‌ர்க‌ள், விப‌த்தில்/கலவரத்தில் கை,கால் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு மாமிச‌ உண‌வு இட‌லாம். தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

2.விருச்சிக‌ம்:

த‌ங்க‌ளுக்கு செவ்வாய் 1,6 க்கு அதிப‌தி என்ப‌தால் 50:50 என்ற‌ வித‌த்தில் ந‌ல்ல‌து,கெட்ட‌து க‌ல‌ந்து ந‌ட‌க்கும். 1 க்கு அதிப‌தி 8ல் வ‌ருவ‌தால் ர‌த்த‌ம்,எரிச்ச‌ல் தொட‌ர்பான‌ தொல்லைக‌ள் ஏற்ப‌டும். மின்சார‌ம்,எரிபொருள்,பால் பொருட்க‌ளால் ந‌ஷ்ட‌ம் ஏற்ப‌ட‌லாம். ச‌கோத‌ர‌ர்க‌ளால் தொல்லை ந‌ஷ்ட‌ம் நேர‌லாம். ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌வ‌ர்கள் தம் குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ர‌த்த‌தான‌ம் த‌ர‌லாம்.(ரத்தத்துக்கு காரகர் செவ்வாய் என்பதால் செவ்வாயால் ஏற்படக்கூடிய ரத்த விரயத்தை முன் கூட்டியே நடத்திக் கொள்வது எதிர்கால விபத்து முதலானவற்றை தடுத்து விடும்). இய‌லாத‌வ‌ர்க‌ள் தீவிப‌த்தில் சிக்கிய‌வ‌ர்க‌ள், விப‌த்தில்/கலவரத்தில் கை,கால் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு மாமிச‌ உண‌வு இட‌லாம். அதே நேர‌த்தில் அவ‌ர் 6க்கும் அதிப‌தி என்ப‌தால் க‌ட‌ன் தீர‌லாம். நோய்க‌ள் குண‌மாக‌லாம். வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ தீர்ப்பு வ‌ர‌லாம். எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர். தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

3.ம‌க‌ர‌ம்: ஆக‌ஸ்ட் 5 முத‌ல் அஷ்ட‌ம‌ ச‌னியாலும்,ந‌வ‌ம்ப‌ர் 22 முத‌ல் விர‌ய‌ குருவாலும் ப‌டாது பாடு ப‌ட்டுவ‌ரும் உங்க‌ளுக்கு 6 ல் செவ்வாய் ஸ்த‌ம்பிப்ப‌தை ஒரு பெரும் ஆத‌ர‌வாக‌வே கூற‌வேண்டும். இத‌னால் அஷ்ட‌ம‌ச‌னி,விர‌ய‌ குருவையும் மீறி
க‌ட‌ன் தீர‌லாம். நோய்க‌ள் குண‌மாக‌லாம். வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ தீர்ப்பு வ‌ர‌லாம். எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர். செவ்வாயால் நிகழக்கூடிய ந்ற்பலன் கள் இரட்டிப்பாக தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

செவ்வாய் த‌ங்க‌ளுக்கு 4,11 க்கு அதிப‌தி என்ப‌தால் தாய் நோய்வாய் ப‌ட‌லாம், அவ‌ருட‌ன் உர‌ச‌ல்க‌ள் ஏற்ப‌ட‌லாம், இத‌ய‌ ப‌ட‌ப‌ட‌ப்பு அதிக‌ரிக்கும், வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் எதிரிக‌ளாக‌ தோற்ற‌ம் த‌ருவ‌ர்.வாக‌ன‌ம் தொட‌ர்பாக‌வும் சிறு ம‌ன‌க்க‌ஷ்ட‌ம் அல்ல‌து சிறு விப‌த்து ஏற்ப‌ட‌லாம். எச்ச‌ரிக்கை. அவ‌ர் 11க்கும் அதிப‌தியாக‌ இருப்ப‌தால் மூத்த‌ ச‌கோத‌ர‌ர்,ச‌கோதிரிக்கும், அவ‌ர்க‌ள் வ‌கையில் த‌ங்க‌ளுக்கும் தொல்லைக‌ள் ஏற்ப‌ட‌லாம்.


4.சிம்ம‌ம்: த‌ங்க‌ளுக்கு செவ்வாய் 4,9க்கு அதிப‌தியாவார். இவ‌ர் 11 ல் ஸ்த‌ம்பிப்ப‌து ந‌ல்ல‌தே. மேலும் த‌ங்க‌ளுக்கு குருவும் 5 ல் வ‌ந்திருக்கும் இந்த‌ நிலையில் ஏப்ர‌லுக்குள் ஒரு ட‌ர்னிங் பாயிண்டே கூட‌ ஏற்ப‌ட‌லாம். தாய்,வீடு,வாக‌ன‌ம்,க‌ல்வி,தாய்வ‌ழி உற‌வு வ‌கைக‌ளில் அனுகூல‌ம் ஏற்ப‌டும். த‌ந்தை,த‌ந்தையுட‌ன் உற‌வு,அவ‌ர‌து சொத்துக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள், ந‌ல்ல‌ அபிவிருத்திய‌ட‌யும்.

செவ்வாயால் நிகழக்கூடிய ந்ற்பலன் கள் இரட்டிப்பாக தினந்தோறும் செவ்வாய்க்குரிய கடவுளான சுப்ரமணியரின் கீழ் காணும் மூல மந்திரத்தை ஜபிக்கவும்.(நேரமில்லாதவர்கள் "ஸௌம்" என்ற பீஜத்தை மட்டுமாவது தியானிக்க வேண்டும்)

" ஓம் ஸௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ"

குறிப்பு: ஜ‌ன்ம‌ச‌னி உட‌ல் ந‌லிவை,குழ‌ப்ப‌த்தை த‌ர‌ காத்திருக்கிறார். என‌வே எச்ச‌ரிக்கை தேவை.குரு பார்வை உங்க‌ள் ராசியின் மேல் விழுவ‌தால் உட‌ல் ந‌லிவையும்,குழ‌ப்ப‌த்தையும் த‌விர்த்து விட‌லாம். கையில் ஸ்டீல் மோதிர‌ம் அல்ல‌து வ‌ளைய‌ம் அணிய‌வும். கால் ச‌ட்டை, ச‌ட்டை ஒரே நிற‌த்தில் அணிவ‌தும் ந‌ல்ல‌து. ரொம்ப‌வே உட‌ல் சுத்த‌ம்,உடை சுத்த‌த்திற்கு மென‌க்கெட‌ வேண்டாம்.