Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, August 19, 2011

இந்தியன் தாத்தா அண்ணா ஹசரே ??



See how Lokpal Bill can curb the politicians, Circulate it to create awareness
Existing System
System Proposed by civil society
No politician or senior officer ever goes to jail despite huge evidence because Anti Corruption Branch (ACB) and CBI directly come under the government. Before starting investigation or prosecution in any case, they have to take permission from the same bosses, against whom the case has to be investigated.
Lokpal at centre and Lokayukta at state level will be independent bodies. ACB and CBI will be merged into these bodies. They will have power to initiate investigations and prosecution against any officer or politician without needing anyone’s permission. Investigation should be completed within 1 year and trial to get over in next 1 year. Within two years, the corrupt should go to jail.
No corrupt officer is dismissed from the job because Central Vigilance Commission, which is supposed to dismiss corrupt officers, is only an advisory body. Whenever it advises government to dismiss any senior corrupt officer, its advice is never implemented.
Lokpal and Lokayukta will have complete powers to order dismissal of a corrupt officer. CVC and all departmental vigilance will be merged into Lokpal and state vigilance will be merged into Lokayukta.
No action is taken against corrupt judges because permission is required from the Chief Justice of India to even register an FIR against corrupt judges.
Lokpal & Lokayukta shall have powers to investigate and prosecute any judge without needing anyone’s permission.
Nowhere to go - People expose corruption but no action is taken on their complaints.
Lokpal & Lokayukta will have to enquire into and hear every complaint.
There is so much corruption within CBI and vigilance departments. Their functioning is so secret that it encourages corruption within these agencies.
All investigations in Lokpal & Lokayukta shall be transparent. After completion of investigation, all case records shall be open to public. Complaint against any staff of Lokpal & Lokayukta shall be enquired and punishment announced within two months.
Weak and corrupt people are appointed as heads of anti-corruption agencies.
Politicians will have absolutely no say in selections of Chairperson and members of Lokpal & Lokayukta. Selections will take place through a transparent and public participatory process.
Citizens face harassment in government offices. Sometimes they are forced to pay bribes. One can only complaint to senior officers. No action is taken on complaints because senior officers also get their cut.
Lokpal & Lokayukta will get public grievances resolved in time bound manner, impose a penalty of Rs 250 per day of delay to be deducted from the salary of guilty officer and award that amount as compensation to the aggrieved citizen.
Nothing in law to recover ill gotten wealth. A corrupt person can come out of jail and enjoy that money.
Loss caused to the government due to corruption will be recovered from all accused.
Small punishment for corruption- Punishment for corruption is minimum 6 months and maximum 7 years.
Enhanced punishment - The punishment would be minimum 5 years and maximum of life imprisonment.

 
 
Dear All, Please go through the details carefully & try to be part of this mission against corruption. Things to know about Anna Hazare and Lok pal Bill-: 

1.Who is Anna Hazare?
An ex-army man(Unmarried). Fought 1965 Indo-Pak war.

2.What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra.

3.This village is a self- sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills. In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.


4. This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.

5. He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

6. How that can be possible?
He is advocating for a Bill, The Lok Pal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), bureaucrats (IAS/IPS) accountable for their deeds.

7. It's an entirely new thing right..?
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit their theft (corruption).

8
. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time? The first thing he is asking for is: the govt should come forward and announce that the bill is going to be passed. Next, they make a joint committee to DRAFT the LOK PAL BILL. 50% government participation and 50% public participation. Bcoz u can't trust the government entirely for making such a bill which does not suit them.

9.What will happen when this bill is passed?
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished.

Pass this on n show ur support..


SRC:Forwarded Mail :)

Saturday, December 29, 2007

பல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

பல்துறை திறமைகளிபல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்
ன் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

சித்தூர்(டிச‌ம்ப‌ர்29)
தமிழ்,தெலுங்கு மொழிகளில் எழுத்து,கவிதை,விளம்பர வடிவமைப்பு,கணிணி போன்ற பல் துறை திற‌மைக‌ளின் உறைவிட‌ம் சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன் என்று ஆந்திர‌மாநில‌ம்,சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். வ‌ல்ல‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இல்லாத‌தால் தான் ந‌ம் நாடு ப‌ல்வேறு துறைக‌ளிலும் பின் த‌ங்கி வ‌ருகிற‌து என்ப‌தை நாட‌றியும். பல துறைகளில் வ‌ல்ல‌வ‌ராக‌ இருப்ப‌தோடு ந‌ல்ல‌வ‌ராக‌வும் இருப்ப‌தே முருகேஷ‌னின் புக‌ழுக்கு கார‌ண‌ம் என்று வேலூரை அடுத்துள்ள‌ சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் சொல்வ‌தை கேட்க‌ முடிகிற‌து. 1967 ல் ஓய்வு பெற்ற மாவட்ட க‌ருவூல‌ அதிகாரியின் 3 ஆவ‌து ம‌க‌னாக‌ பிற‌ந்த‌ முருகேஷ‌ன்
1987 க‌ல்லூரி தேர்த‌ல்க‌ளில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ர‌ட‌ரியாக‌ போட்டியிட்டு 468 வாக்குக‌ள் பெற்று த‌ம‌து ச‌ரித்திர‌த்தை துவ‌க்கி இந்த‌ 20 ஆண்டுக‌ளில் பிர‌ப‌ல‌ தெலுங்கு நாளித‌ழ் வார்த்தாவில் அரைப் ப‌க்க‌ அள‌வில் த‌ம்மை ப‌ற்றி செய்தி வெளிவ‌ரும‌ள‌வுக்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இவ‌ர‌து சாத‌னைக‌ளில் குறிப்பிட‌த்த‌க்க‌வை வ‌ருமாறு:


1984லேயே க‌ல்லூரி ஆண்டு ம‌ல‌ரில் முத‌ல் க‌விதை பிர‌சுர‌ம்
1987ல் பாக்யாவில் முத‌ல் சிறுக‌தை பிர‌சுர‌ம். 1990 க்குள் வாசுகி,க‌ல்கி,க‌விதாச‌ர‌ண் இத‌ழ்க‌ளில் க‌தைக‌ள் பிர‌சுர‌ம்.

1991 ல் க‌ல‌ப்புத்திரும‌ண‌ம். முத‌ல் குழ‌ந்தை வ‌யிற்றிலிருக்கும்போதே சமூக பொறுப்புடன் கு.க‌. செய்து கொண்ட‌மை

1992 முத‌ல் ஆண்டுக்கு ஒருமுறையாவ‌து ர‌த்த‌தான‌ம் செய்து வ‌ருவ‌து.

இந்தியாவின் எல்லா பிர‌ச்சினைக‌ளுக்கும் தீர்வாக‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌ம் தீட்டி அத‌ன் பிர‌ச்சார‌த்துக்கும்,அம‌லுக்கும் தொட‌ர்ந்து உழைத்து வ‌ருவ‌து

விள‌ம்ப‌ர‌ வ‌டிவ‌மைப்பில் ஈடுபாடு கொண்டு முத‌ல் 6 மாத‌ங்க‌ளிலேயே சென்னை,விவேகான‌ந்தா க‌ல்வி நிலைய‌ம், அபிசாரிக்கா தெலுங்கு மாத‌ இத‌ழ் நிர்வாக‌ங்க‌ளிட‌மிருந்து ரொக்க‌ப் ப‌ரிசு பெற்ற‌து
1986 முதல் தமது காம நினைவுகளிலிருந்து விடுதலை பெற அனுமனின் அருள் வேண்டி ராம நாமம் ஜெபித்து வருகிறார். குண்டலி விழிப்பு நிலைக்கு சென்றால் காலஞானம் ஏற்பட வேண்டும் என்பது யோகசாஸ்திர வாக்கு.

எந்த குருவிடமும் அப்பியாசம் செய்யாது ஜோதிட வியலை பயின்று தேர்ச்சி பெற்றதோடு அனுபவ ஜோதிடம் என்ற பெயரில் தனியொரு கலையை உருவாக்கியிருப்பது சிறப்பு.

நவகிரக தோஷங்களுக்கு சம்பிரதாய பரிகாரங்களோடு, தமது கண்டுபிடிப்பான நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்து பேரும் புகழும் பெற்று வருகிறார்.

தமது ஆன்மீக வாழ்விலும் தொடர்ந்து முன்னேறி 2000 டிசம்பர் 23 முதல் ஹ்ரீம் என்ற மாயா பீஜத்தை ஜெபித்து வருகிறார். இறையருளை பொறிவைத்து பிடிப்பது எப்படி என்று நூல் எழுதுமத்தனை அனுபவங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவேங்கடன் தீந்தமிழ் பாமலர் மாலை என்ற தலைப்பில் எளிய,அழகு,பழகு தமிழில் காவியம் எழுதி திருப்பதி திருமலை தேவஸ்தான ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் . ராகவாச்சாரியின் பாராட்டைப்பெற்றது

ஒரே நேர‌த்தில் ஆன்மீகம்‌ மாத‌ இத‌ழில் 2 தொட‌ர்க‌ள் எழுதிய‌மை.(ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்க‌ள்,ஸ்ரீ பிர‌ம்ம‌ங்காரு)
ஜோதிட பூமி மாத இதழில் தமது கண்டுபிடிப்பான ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்களை எழுதி முடித்து, அனைவருக்கும் தனயோகம் என்ற தொடரை ஜனவரி இதழில் துவக்க உள்ளார்.

தமிழனாய் இருந்து, தெலுங்கை கற்றுத் தேர்ந்து தெலுங்கிலும் இலக்கியங்கள் படைப்பதோடு 2 ஆண்டுகள் ஆந்திர பிரபா தெலுங்கு நாளிதழின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தினத்தந்தி நாளிதழின் சித்தூர் நிருபராக பணியாற்றிவருகிறார்.

Thursday, December 27, 2007

விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆந்திர அரசு திட்டம்.

மேலோட்டமாக பார்க்கும் போது இது சீரிய திட்டமாகவே தோன்றும்.முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெறும்போது அவர்கள் ஜீவனாம்சம் பெற வழியில்லை என்பதால் இது அவசியம் என்றே தோன்றும். முஸ்லீம் பெண்கள் என்றே இல்லை எந்த மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவள் பொருளாதார சுதந்திரம் பெற வழி வகுக்க வேண்டும். அதை அவள் பெற்ற பிறகே மணம் முடிக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வரவேண்டும்.

இந்த காலகட்டத்தில் ஆண் ஆண்மையை இழந்து வருகிறான். பெண் தன் பெண்மையை ,மென்மையை இழந்து வருகிறாள். உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம் ஆண்/பெண் உறவுக்கு வேட்டு வைத்திருப்பதை என்னால் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியும்.இனி பெண்ணுக்கு கணவன் ஆண் அல்ல. பணம் தான். ஒரு பெண்ணை காலமெல்லாம் வைத்து காப்பாற்றுமத்தனை ஆண்மை ஆண்களில் இல்லை. அவனவன் கார்ப்போரேட் கல்வி நிலையத்துக்கு கட்டியும், வேலை வாங்க லஞ்சம் கொடுத்தும்,குடித்தும்,சூதாடியும்,கூத்தாடியும் இழந்த பணத்தை வரதட்சிணை வடிவில் வாங்கிவிடத்தான் துடிக்கிறான்.


ருசி கண்ட பூனை உறிக்கே தாவுவதை போல், ஒரு திருமணம்,ஒரு வரதட்சிணை போதாது மறுமணம், மறு வர தட்சிணைக்கு திட்டமிடுகிறான். பெண்ணுக்கு ஆர்காசம் தருமத்தனை ஆண்மை இல்லாத இந்த அலிப்பயல்களுக்கு வரதட்சிணை கொட்டிக் கொடுத்து,பெற்ற‌ ம‌க‌ளை க‌ட்டிக் கொடுக்கும் பெற்றோருக்கு அறிவில்லை. இதைவிட‌ ந‌ல்ல‌தொரு வைப‌ரேட்ட‌ர் வாங்கித் த‌ர‌லாம்.

என்னை கேட்டால் ஸ்கேன் மூல‌ம் பால் அறித‌ல்,பெண் சிசுக்கொலை மீதான‌ த‌டையை நீக்கி விட‌ வேண்டும். ச‌ப்ளை குறைந்தால் தான் டிமாண்ட் ஏற்ப‌டும். கையில் பிடித்து கொண்டு(ஜாதகத்தை) அலைந்தால்,ஓரின‌சேர்க்கையில் எயிட்ஸ் வாங்கினால்,பீட்ஸா,ஓட்ட‌ல் சோறு சாப்பிட்டு அல்ஸ‌ர்,பைல்ஸ் வாங்கினால் தான் இந்த‌ கேடுகெட்ட‌ ஆண்க‌ளுக்கு பெண்ணின் பெருமை தெரியும்.

வ‌ர‌த‌ட்சிணையை ஒழிக்க‌ முடியாது. வ‌ர‌த‌ட்சிணைக்கீடான‌ தொகை ஒன்றை வ‌ர‌த‌ட்சிணையுட‌ன் சேர்த்து ஆண்/பெண் பெய‌ரில் ஜாயிண்ட் அக்க‌வுண்டாக‌ போட‌ வேண்டும்.விவாக‌ர‌த்தின் போது அந்த‌ தொகை பெண் பெய‌ருக்கு மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.
என்னைக்கேட்டால் திரும‌ண‌ம் என்ப‌தே வெட்டிச்செல‌வு. எல்லாத்திரும‌ண‌மும் காவ‌ல் நிலைய‌த்திலேயே ந‌ட‌க்க‌ வேண்டும்.(காவ‌ல‌ர்க‌ள் சாந்தி முகூர்த்த‌த்தை ந‌ட‌த்திவிடாதிருப்பார்க‌ளாக‌ இதை த‌விர்க்க‌ எல்லா காவ‌ல் நிலைய‌த்துக்கும் ஒரு சி.சி.கேம‌ரா வைத்து 24 ம‌ணி நேர‌மும் டைர‌க்ட் ரிலே கொடுக்க‌லாம்)

POWER : One line for a Movey

மின்சாரம் இல்லாத மலைகிராமத்துக்கும், அந்த கிராமத்து இளைஞன் ஒருவனுக்கும் பவர் வரும்போது எப்படி கெட்டழிகிறார்கள் என்பது நாட்.

கதை சுருக்கம்:

ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தலைவர்(பிழைக்க தெரியாத). ஒரு கோவில். ஒரு அம்மன். அம்மன் கழுத்தில் ஒரு வைர மாலை.(அதற்கு லாஜிக்கலான கிளைக்கதை) சப்பாணி மாதிரியான ஒரு நாயகன், வெள்ளந்தியான நாயகி. ஒரு லட்சியவாதி ஆசிரியர்.

பவர் இல்லாத காரணத்தால் படிப்பில் பின் தங்குவதாக கருதி ஆசிரியர் பவர் கேட்டு அலைகிறார். இறுதியில் ஸோலார் பவர் பெற திட்டம். அதற்கு காசு வேண்டும்.


விஜயகாந்த் மாதிரி புதிதாக அரசியலுக்கு வந்த நடிகரை தானம் கேட்டு மானம் போகிறது. ஊர் தலைவர் சப்பாணியை சூப்பர் ஸ்டார் ஆக்குவதாக சபதம். அம்மன் கழுத்து வைரமாலையை அடகு வைத்து லோ பட்ஜெட் படம் தயாரிக்கிறார்கள்.

கிராமம்,சப்பாணி இருவருக்கும் பவர் கிடைக்கிறது.

அத‌ன் விளைவுக‌ள் எதிரிடையாக‌ இருக்கிற‌து.

கிராம‌த்து பெரிய‌வ‌ர் சோலார் ப‌வ‌ர் யூனிட்டை வெடி வைத்து த‌க‌ர்க்கிறார்..டைட்டில்ஸ்

சுஜாதா : உன்னைப்பற்றி எழுதாதே

Jaya padma visalakshi, jaya thwam sri pathi priye,
Jaya mathar maha Lakshmi, samasarnavarnava tharini.
Mahalakshmi namasthubhyam, namasthubhyam sureswari,
Hari priye namasthubhyam, namasthubhyam daya nidhe.



1967 ல் பிறந்தேன் இது 2007 . ஆக 40 வருடங்கள் மெட்டாஷ் ! 1973 ல் மஞ்சா ஸ்கூல் ( க்ரிட்லி கேல்) 1978 ல் பி.ஜட் (10 ஆம் வகுப்பு வரை) 1982 ல் 10 ஆம் வகுப்பு. 1984 வரை இண்டர் மீடியட். 1987 வரை பி.வி.கே.என். இந்த 20 வருடங்கள் பற்றி பெரிதாய் குறைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. ரெகுலர் லைஃபில் தான் இருந்ததாக சொல்ல முடியும். அங்கிருந்து 2007 ஏப்ரல் வரை நாயடி தான். இந்த 20 வருடங்களில் தான் அனுபவம் என்று ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும். இன்றைய என் எழுத்துக்களில் ஏதேனும் முதிர்ச்சி தெரிந்தால் அது இந்த 20 வருடங்களில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சுஜாதா உன்னைப்பற்றி எழுதாதே என்று கூறுவது வழக்கம். இது அவர் மாதிரி வெள்ளை சாம்பார்களுக்கு பொருந்தும். அவரே சொல்வது மாதிரி சிறுகதைக்கு உயிர் நாடி முரண்பாடு. என் வாழ்க்கையின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் முரண்பாடு என்பது உறுதியாக தென்படும். இன்றைய தினத்தந்தி நிருபர் வேலை உட்பட. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பருவம் என்ற புத்தகத்தை (எட்டணா விலை) படித்திருக்கிறேன். செக்ஸுக்கு முயன்றிருக்கிறேன்.

வகுப்புத்தலைவன்,தமிழ் சங்கத்துணைத்தலைவன். பெட் ஸ்டூடண்ட் ஃபார் டீச்சர்ஸ். அதே நேரம் மாங்காய் அடிப்பது,நீவா நதியில் மீன் பிடிப்பது,சினிமா போடுவது,காத்தாடி நூலுக்கு மாஞ்சா போடுவது, பம்பரத்தில் பாப்பாரு(?), தலாரி, ஜவுரா பில்லை,சீன் பார்ப்பது,சைட் அடிப்பது, மிட்டூர் முக்கி ரெட்டி தோப்பில் நீச்ச‌ல் எதையும் விட்ட‌தில்லை. க‌டைசி பென்ச் ப‌ச‌ங்க‌ கூட‌ இடைய‌றாத‌ தொட‌ர்பு தொட‌ர்ந்து இருந்து வ‌ந்த‌து.

6,7, வ‌குப்பு ப‌டிக்கும்போது வாத்தியார்க‌ள் பெண் பிள்ளைக‌ளிட‌ம் செய்யும் சிலுமிஷ‌ங்க‌ளின் உண்மை உத்தேச‌ம் என‌க்கு தெரியும். ச‌காக்க‌ளை மோட்டிவேட் செய்து அணிதிர‌ட்டிய‌து நான். ஆனால் ச‌ந்தேக‌ ப‌ட்டிய‌லில் இருந்த‌வ‌ர்க‌ளை விசாரிக்கும் போது நான் த‌ப்பிவிட்டேன். இது தான் என் கேரக்டர்.(இரண்டாம் முறை பிடிப‌ட்டு ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி ப‌ட்ட‌ம் வாங்கிய‌து த‌னிக்க‌தை).5 ஆம் வகுப்பு முதலே எனக்கு செக்ஸில் நாட்டமிருந்தாலும் எனக்கே தெரியாது ஒருவித பெரிய மனிதத்தனம் என்னில் இருந்தது. நான் தர்மங்களை பின்பற்றாதிருந்திருக்கலாம். ஆனால் என் தர்மங்களை நான் கை விட்டதே இல்லை.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மாதிரி என் பால்யத்துக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தால் நோப‌ல் உறுதி. ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல‌ என்னிட‌மிருப்ப‌து இந்த‌ வ‌லைப்ப‌திவு ம‌ட்டுமே..

பார்ப்போம் மார்ச் , ஏப்ர‌லில் ந‌ம் கால‌த்து நாய‌க‌ன் என்ற‌ த‌லைப்பில் என்னைப்ப‌ற்றிய‌ ஒரு சிறு நூலை வெளியிட‌ உத்தேச‌ம். என் இல‌க்கிய‌ க‌ட‌மைக‌ளை விட‌ , நாடு குறித்த‌ க‌ட‌மை உண‌ர்வே என்னை பெரிதும் வ‌யப்ப‌டுத்துகிற‌து. அத‌ற்கு ப‌ய‌ன் ப‌டும் வ‌கையில், ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்டு போல் உப‌யோகிக்க‌ இந்த‌ நூலை ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்போகிறேன்.

என் வ‌லை த‌ள‌த்துக்கான‌ தொடுப்பை த‌ங்க‌ள் வ‌லைத‌ள‌த்தில் வைப்ப‌தாயிருந்தால் த‌ங்க‌ள் வ‌லை த‌ள‌த்துக்கான‌ தொடுப்பை என் வ‌லை த‌ள‌த்தில் வைக்க‌ ஆவ‌ல்

சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன்

Wednesday, December 26, 2007

கதை,திரைக்கதை,வசனம்,டைரக் ஷ‌ன் ,பாடல்கள்

இப்ப‌டி டைட்டிலில் பெய‌ர் வ‌ர‌வேண்டுமென்று க‌ன‌வு க‌ண்ட‌துண்டு. அந்த‌ க‌ன‌வு மெய்ப்ப‌டும் நாள் வெகு அருகில் உள்ள‌தாய் ஒரு உண‌ர்வு. இடையில் 1991 முத‌ல் நாளிது வ‌ரை அதை நனவாக்கிக் கொள்ளும் பொருளாதார‌ வ‌ச‌தி இல்லை. த‌ற்போது கார்ப்போரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் திரையுல‌கில் கால் ப‌தித்திருக்கும் நிலையில் என‌து திரைக்க‌தை சுருக்க‌ங்க‌ளை இந்த‌ வ‌லை த‌ள‌த்தில் வைக்க‌ நினைத்து 2 முறை ஷெட் ஆகிவிட்ட‌து.(முழுக்க‌ த‌ட்ட‌ச்சிய‌ பிற‌கு)

என‌வே மேலும் சுருக்(க‌மாக):

1.ஆண்பிள்ளை சிங்கம்:
இருவேடங்களில் ரஜினி. பெரியவர்(அப்பா) ஜொள்ளு பார்ட்டி. எஸ்டேட் அதிபர். வில்லி வலையில் சிக்கி உயிர் விடுகிறார். வில்லி மகன் ரஜினியை வளர்க்கிறார், வில்லனாக.

குறிப்பு: ராம்கியின் தொட்டில் சபதம் வெளிவருவதற்கு முன்பே எழுதப்பட்ட திரைக்கதை இது.


2.ந‌ண்ப‌ர்க‌ள்:


நான் கு ந‌ண்ப‌ர்க‌ள். ஒரே அறையில் வாச‌ம். மாத‌த்தின் 29 நாள் வெள்ளை சாம்பார்க‌ளாக‌ இருக்கும் இவ‌ர்க‌ள் ஒரு நாள் ம‌ட்டும் ஹீரோக்க‌ளாகிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அந்த‌ ஒரு நாளில் சென்னைக்கு வ‌ரும் கிராம‌த்தி நாய‌கியை காப்பாற்றி அறையில் வைத்துக் கொண்டு அவ‌ஸ்தை ப‌டுகிறார்க‌ள். நால்வ‌ரில் ஒருவ‌னால் திர‌ஸ்க‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் தான் ஹீரோயின். அதாவ‌து அப்பா பார்த்து ஓகே செய்திருப்பார். ஹீரோ போட்டேவைப் பார்த்து ரிஜெக்ட் செய்திருப்பார். இத‌னால் ஹீரோயின் அப்பாவுக்கு மார‌டைப்பு . ப‌ழி வாங்க‌ கி.ஹீரோயின் ப‌ட்டண‌ம் வ‌ந்து லொள்ளு ப‌ண்ணுகிறார்.
குறிப்பு: இது புதுவ‌ச‌ந்த‌ம் வ‌ருவ‌த‌ற்கு முன்பே எழுத‌ப்ப‌ட்ட‌ திரைக்க‌தை

Monday, December 24, 2007

மரம்

மரம் மாதிரி நிக்கறான் பாரு என்பார்கள். மரம் நிற்பதால் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மனிதனுக்கும்,சகல ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கிறது.உரம் கிடைக்கிறது. மனிதன் நிற்பதால் தான் இயற்கை தடுமாறுகிறது. குளோபல் வார்மிங் என் கிறார்கள். பனி உருகி சமுத்திரமட்டம் உயருமாம். சுனாமி வருமாம். ஜலபிரளயம் என்றால் இதுதானாம்.

தெலுங்கில் வம்சாவளியை (ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தம். தீபாவளி, தீபங்களின் வரிசை) வம்ச விருட்சம் என்பார்கள். என்.டி.ஆர் காங்கிரஸ் காரர்களை, மரத்தின் பெயர் சொல்லி காய்கள் விற்பவர்கள் என்று விமர்சித்தார்.

புத்த‌ருக்கு ஞான‌ம் த‌ந்த‌து ஒரு ம‌ர‌ம் தான். ஜோதிட‌த்தில் கூட‌ ஒவ்வொரு ந‌ட்ச‌த்திர‌த்துக்கும் ஒவ்வொரு ம‌ர‌ம் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. (அடிபாகத்தை கழுவி/நீர் ஊற்றி, ம‌ஞ்ச‌ள் பூசி/பூச்சி அரிக்காதிருக்கும், வ‌ல‌ம் வ‌ந்தால்/ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌ன் கிடைக்கும்,ந‌ல‌ம் விளையும் என்ப‌து ஆன்றோர் க‌ருத்து.

ஒவ்வொரு த‌ல‌த்துக்கும் ஒவ்வொரு ம‌ர‌ம் உண்டு. அந்த‌ த‌ல‌த்தில் அம்ம‌ர‌த்தை எவ‌ரும் வெட்ட‌ துணிய‌ மாட்டார்க‌ள்.

ஒவ்வொரு பொறுப்புள்ள‌ த‌க‌ப்ப‌னும் ம‌ர‌ம் மாதிரி. பிள்ளைக‌ள் த‌லையெடுத்து விழுது போல் தாங்க‌ வேண்டும். அநேக‌ பிள்ளைக‌ள் புல்லுருவியாக‌த் தான் வ‌ள‌ர்கிறார்க‌ள்.


இன்றைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் தாம் உட்கார்ந்திருக்கும் கிளையை (ம‌க்க‌ளை) வெட்டுகிறார்க‌ள்.

ஆலும்.வேலும் ப‌ல்லுக்குறுதி என்றார்க‌ள். ச‌மீப‌த்தில் புகையிலை க‌ரை ப‌டிந்த‌ என் ப‌ற்க‌ளை கிரானைட் க‌ல்லுக்கு பாலிஷ் போட்ட‌ தினுசில் ப‌ல் டாக்ட‌ர் சுர‌ண்டிய‌ போது இந்த‌ ப‌ழ‌ மொழி த‌மிழ் பாட்டில் ல‌ல்ல‌ல்லா மாதிரி கேட்டுக்கொண்டே இருந்த‌து.

ரிஷிக‌ள் ம‌ர‌த்தால் ஆன‌ கால‌ணியை அணிவார்க‌ள். கார‌ண‌ம் பூமி ஒரு காந்த‌ம். ம‌னித‌ உட‌லில் இரும்பு ச‌க்தி உண்டு. இதை அது க‌வ‌ராத‌ ப‌டிக்கு காப‌ந்து.

ம‌ர‌த்தாலான‌ உல‌க்கை,கொட்டாங்க‌ச்சியாலான‌ அக‌ப்பை இதையெல்லாம் யார் உப‌யோகிக்கிறார்க‌ள்.

தாவ‌ர‌ங்க‌ளுக்கு உயிர் உண்டு என்ப‌தை ஏற்கென‌வே ஜ‌க‌தீஷ் ச‌ந்திர‌ போஸ் நிரூபித்துவிட்டார். ஒரு ஆட்டை வெட்ட‌ அத‌ன் முன் க‌த்தி தீட்ட‌ப்ப‌டும்போது அத‌ன் ர‌த்த‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ளை யார் க‌ண்டா ?

இதே நிலை தாவ‌ர‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌டலாம் அல்லவா? அதிலும் காய்,க‌றிக‌ளை உலோக‌ பாத்திர‌ங்க‌ளில் போட்டு,உலோக‌ க‌ர‌ண்டியால் க‌ல‌க்கி விஷ‌மாக்கி தானே உண்கிறோம். உங்க‌ளில் யார் வீட்டிலாவ‌து ம‌ண் பாத்திர‌த்தில் ச‌மைப்ப‌துண்டா?( அடுத்த‌ மாத‌ம் 20 தேதிக்கு பிற‌கு நான் முய‌ற்சிக்க‌ போகிறேன்.

ரிக் ஷா தொழிலாளிகள் சார்பில்


சித்தூர்(டிச‌ம்ப‌ர் 24)சித்தூர் டவுன் மார்க்கெட் சவுக் பகுதியில் கை ரிக் ஷா தொழிலாளிகள் சார்பில் எம்.ஜி.ஆர் 20 ஆவது நினைவுநாள் அனுச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ழைய‌ இரும்பு வியாபாரி ஆர்.ராஜேந்திர‌ன் (அண்ணாச்சி),தலைமையில் ரிக்ஷா தொழிலாளிக‌ள் ஆர்.விஜயகுமார்,ஏழும‌லை,முருகேச‌ன்,முனுசாமி,சின்ன‌ப்பைய‌ன்,குமார்,ராஜா,நாக‌ராஜ்,மூர்த்தி,செல்வ‌ம் சின்னோடா ஆகியோர் அம‌ர‌ர் எம்.ஜி.ஆரின் ப‌ட‌த்துக்கு ம‌ல‌ர்மாலை அணிவித்து அஞ்ச‌லி செலுத்தின‌ர். ப‌ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் (இட‌து: ஆர்.விஜயகுமார், வ‌ல‌து: ஆர்.ராஜேந்திர‌ன்)

Sunday, December 23, 2007

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஐயா.. நான் பிராமணனல்ல. மூடநம்பிக்கையாளனுமல்ல. என்னை நம்பி வருபவர்களுக்கு ஜோதிடம் குறித்த என் ஆராய்ச்சியிலான இடைக்கால முடிவுகளை மட்டுமே தெரிவித்து வருகிறேன்.

கெட்ட நேரங்களை பற்றி சில வரிகள்:

ஜோதிடவியலில் ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அறிந்தால் ஜோதிடம் என்பது ஏய்த்து பிழைப்பவர்களுக்கானதே தவிர ,உழைத்து பிழைப்பவர்களுக்கல்ல என்பதை உணரலாம். என்னைப் பொருத்தவரை ஜோதிட விதிகளை வகுத்தளித்த நம் ரிஷிகள்,மகரிஷிகள் தாம் ஆதி கம்யூனிஸ்டுகள்.


ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்:


சுக்கிர அஸ்தமனத்தின் போது வீடு மாறுவது கூடாது என்பது விதி. இதற்கான விதிவிலக்கில் யுத்த பயம்,தொற்று நோய்கள் பரவும் காலம், பஞ்சம் பிழைக்க வீடு மாறும்போது சுக்கிர அஸ்தமனம் பற்றி கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தன்னலமற்ற லட்சியத்துடன் உழைப்பவர்கள் விஷயத்தில் கிரகங்கள் வேலை செய்யாது என்றும் ஒரு விதி உள்ளது. இதற்கு பார்வதி தேவி சாபம் காரணமாக கூறப்பட்டுள்ளது.

பத்து வட்டி வாங்குபவன் ராகு,எம, காலம் பார்த்தால் எத்தனையோ ஏழைகள் காப்பாற்றப்படுவார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் இதெல்லாம் பார்த்ததால் தான் இன்று சில கட்டிடங்களேனும் மிச்சம் உள்ளன. இல்லாவிட்டால் தமிழ்நாடே கபளீகரம் ஆகியிருக்கும்.

இருப்பவன் பஞ்சாங்கம் பார்த்தே வாழட்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. இல்லாதவன் ஆண்டுக்கு ஒரு முறை சேவை மனப்பான்மை உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்து பலனறிந்து அதற்கேற்ப செயல்பட்டாலே போதும். ஏழைக்கு ராகு,எம,காலங்கள் வேலை செய்யாது. இதை நிரூபிக்க நான் தயார்.


ச‌னி பிடித்த‌ போது பிற‌ரிட‌ம் வேலை செய்தும், ச‌னி விடுத‌லையான‌ போது சொந்த‌ வியாபார‌ம்,தொழில் செய்தும் வ‌ந்தாலே போதும் ஏழைக‌ள் ப‌ண‌க்கார‌ர்க‌ளாவ‌து உறுதி

விஞ்ஞானத்தை வளர்க்க போறேங்க !

கலைவாணர் தம் பாடலில் "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி' என்பார். தமிழ் நாட்டு பெண் மேயர்களிடம் (ப்ரவுஸர்ஸ்) உதை வாங்கும் தெம்பு இல்லாததால் பாட்டை மாற்றிவிட்டேன்.

விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சி தெருச்சாக்கடைகளிலெல்லாம் பாலும்,தேனும் ஓடவைக்கும் என்று சொல்ல‌ மாட்டேன். அது அலாவுதீன் பூத‌ம் போன்ற‌து. க‌ணிணி,செல் போன்ற‌ க‌ண்டுபிடிப்புக‌ளையெல்லாம் த‌ம் செக்ஸ் தின‌வை தீர்த்துக் கொள்ள‌வே பெரும்பாலோர் உப‌யோகிப்ப‌தை நான் ம‌றுக்க‌ மாட்டேன். அதே நேர‌ம் இத‌ற்கு ந‌ம் ம‌த‌,அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் கார‌ண‌ம். செக்ஸ் ப‌ற்றிய‌ த‌ம் த‌வ‌றான‌ க‌ருத்தை மாற்றிக்கொண்டு பாலிய‌ல் தொழிலாளிக‌ளுக்கு உரிய பயிற்சிக்கு பிறகு அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கி விட்டால் போதும், விஞ்ஞான‌த்துக்கும்/செக்ஸுக்கும் உள்ள‌ தொட‌ர்பு அறுந்து விடும்.

இன்றைக்கு உள்ள‌ விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சியில்,முக்கிய‌மாக‌ த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ புர‌ட்சியில் ராம‌ராஜ்ஜிய‌ம் என்ன‌ அந்த‌ ராம‌னும் வெட்கி த‌லை குனிய‌த்த‌க்க‌ ந‌ல்லாட்சியை வ‌ழ‌ங்க‌ முடியும்.

என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திவிட்டால் ஸ்தூல‌ பிர‌ச்சினைக‌ள் யாவும் ஒழிந்து நிர்வாக‌ சிக்க‌ல்க‌ள் ம‌ட்டுமே இருக்கும்.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ஒவ்வொரு வார்டு மெம்ப‌ருக்கும் க‌ணிணியை உப‌யோகிக்க‌ க‌ற்றுக்கொடுத்துவிட்டால் போதும் பிற‌கு எம்.பி,எம்.எல்.ஏ, க‌லெக்ட‌ர்,போன்ற‌ இர‌ண்ட‌டுக்கு,மூன்ற‌டுக்கு நிர்வாக‌ இய‌ந்திர‌மே தேவையில்லை. ஸ்விட்ஜ‌ர்லாந்து போல் நேரிடை ஜ‌ன‌நாய‌க‌த்தை வார்ட் அள‌வில் அம‌ல் ப‌டுத்தி விட‌லாம். காந்தி கூறிய‌ கிராம‌ ராஜ்ஜிய‌ம்,ராம‌ ராஜ்ஜிய‌ம் எல்லாமே சாத்திய‌மாகிவிடும். மாவ‌ட்ட‌ அள‌வில் உள்ள‌ நிதி,நீதி,நிர்வாக‌ இய‌ந்திர‌த்தை கிராம‌,வார்டு அள‌விலேயே ஏற்ப‌டுத்தி விட‌லாம். வார்டில் கொலை ந‌ட‌ந்த‌ 24 ம‌ணி நேர‌த்தில் தீர்ப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு கொலை செய்த‌வ‌ர் சிறைக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு விடுவார்.


தேர்த‌ல் சீர்திருத்த‌ம்:

நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் ஒரு ப்ரொஃபார்மாவை கொடுத்து அதை கிராம‌,வார்டு இய‌ந்திர‌ம் உத‌வியுட‌ன் நிர‌ப்பி ஆன்லைனில் அனுப்ப‌ச்சொல்லி,அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை ஒரு சூப்ப‌ர் க‌ணிணி உத‌வியுட‌ன் ச‌லித்தெடுத்து திட்ட‌ம் தீட்டினாலே போதும் ,அதை அம‌ல் ப‌டுத்தும் அதிகார‌த்தை ம‌ட்டும் கிராம‌,வார்டு நிர்வாக‌த்துக்கு த‌ர‌வேண்டும்.

தேர்த‌ல் என்ப‌து ஆன்லைன் மூல‌ம் 15 நாட்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும். 90 ச‌த‌வீத‌ம் வாக்குப்ப‌திவு ந‌ட‌க்கும் வ‌ரை முடிவு தெரிவிக்க‌ப்ப‌ட‌க்கூடாது. அவ‌ர‌ர் க‌ட்டை விர‌ல் ரேகையையே பாஸ் வோர்டாக்கி விட‌லாம்.



ஹ்ம்.. எத்த‌னையோ செய்ய‌லாம் ! ம‌ன‌மிருந்தால் மார்க‌ம் உண்டு. ம‌ன‌மில்லையே ஆள்வோருக்கு.

Thursday, December 20, 2007

ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும்

ஜோதிடம் குறித்த சுஜாதாவின் கருத்துக்கள் விடலைத்தனமாகவும், பொறுப்பற்றும் இருப்பதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மீண்டும் சுஜாதா குங்குமம் வார இதழில் ஜோதிடம் குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாளென்செயும் கோளென்செயும் என்று பழம் பாடலை குறிப்பிட்டுள்ளார். அந்த பழம் பாடலின் இறுதியில் ஒரு வரி வரும்: அதையும் சேர்த்து படிக்கும்போது:

குமரேசரிரு தாளும்,சிலம்பும்,சதங்கையும் நம் கண் முன் வந்து தோன்றிய பிறகு தான் நாள் என் செய்யும் , கோள் என் செய்யும் என்ற நிலை ஏற்படும் என்பது தெரிய வரும். இந்த 40 வயதுக்கே இந்த பாடலின் கடைசி வரியை சரியாக குறிப்பிட முடியவில்லை. குங்குமத்தை அரை,குறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை பார்க்கவே வாங்கி படிக்கும் டீன் ஏஜர்களுக்கு இந்த பாடலின் வாசனை கூட தெரியாதிருக்கலாம்.

சுஜாதா திட்டமிட்டே ஜோதிடம் குறித்து இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். ராமர் ஜாதகத்தில் குரு,சந்திர சேர்க்கை இருந்ததால் தான் வனவாசம் செய்தார், செவ்வாய் 7 ல் இருந்ததால் தான் சீதையை பிரிந்திருக்க வேண்டிவந்தது என்று கூறும் சனாதனர்களின் வழி வந்த சுஜாதா ஜோதிடத்தை பழிக்க ஒரே ஒரு காரணம் தான்:

பிராமணர்கள் தம் பஞ்சாங்கங்களை விட்டெறிந்தனர் , அநாதையாக்கிவிட்டனர்.தலைமை செயலகத்தில் ஆளப்போய் விட்டனர். சூத்திரர்கள் அவற்றை தத்தெடுத்து நாட்டுடைமை ஆக்கி விட்டனர். இந்த வயிற்றெரிச்சலில், குலாபிமானத்தில் தான் சுஜாதா ஜோதிடத்தை பழித்து வருகிறார்.

Wednesday, December 19, 2007

Logicla Remedies for the evil effects of 9 planets

Logicla Remedies for the evil effects of 9 planets

-Chittoor.s.Murugeshan
You might have already heard that “if u want to get some thing u have to give up some thing.” It is not at all a saying but also a scientific –logical fact . It is the basic for my logical remedies for the evil effects of the planets.

Do u agree with this? Are u ready to give up some thing and get some thing? Astrology gives you a clear picture to achieve your goal.

Roll of the God and 9 planets:
God is the prime minister and the 9 planets are the ministers. As a PM allots portfolio to the ministers the God had allotted portfolios to the planets.

Fruitful planets:
Think a minister is very close to you . What will happen? You can be benefited in the fields which come under the portfolio of the minister who is close to you. In the same way if a planet is in favorable condition at your horoscope there will a red carpet welcome at the fields which come under the portfolio of the concerned planet.

Neutral planets:
Now think that a minister is a distant relative to you. What will be the position? You can go with only one proposal, that too with a clean image. In the same way if a planet is in 50% favorable condition at your horoscope you can expect success in only one thing governed by particular planet. For this u may have to give up unnecessary matters and the fields which come under the portfolio of the concerned planet .

An example:
There is low voltage problem at your house. If u switch on all the electrical goods at home in a same time what will happened? Bulbs will give low light. Fans will give very little air. Refrigerator may give low chill. If you switch of all the goods except than one, you may get full result.

In the same way you can preplan the results to be given by the planets.

Is it applicable for all?
Sure. Except some exceptional horoscopes all the planets are not 100% harmful or 100% fruitful. If all the planets are 100% harmful u cannot expect good results even in a single filed even if you give up 99 fields that are governed by planets. But u can live a peaceful life without any fall downs.

Imagine that all the planets are 100% fruitful in your horoscope then u need not approach an astrologer for remedy.

If you reveal your problem, I will see which planet is creating the problem. I will tell you the portfolio of that planet. You have to go through it and give up which are not necessary to achieve your goal. Just u give-up. Concentrate on the things which are essential for your success. Then u will be free from the evil effect of that planet and your problem would be solved. Its dam sure.

Saturday, December 15, 2007

த‌ம்மையே க‌டித்து தின்னும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ பின் என் செய்வேன்?

அம்மா அச்சம் பிறக்கிறதடி நெஞ்சில்
மனதில் மிச்சமிருக்கும் மனிதமும்
ஆவியாகிவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறதடி நெஞ்சில்
எய்த‌வ‌னிருக்க‌ அம்பை நோவ‌து போல்
இவ‌ர் வ‌றுமைக்கு கார‌ண‌ம் எங்கோ இருக்க‌

ஒருவ‌ரையொருவ‌ர் தின்னும் இவ‌ர்க‌ளை க‌ண்டால்
அச்ச‌ம் பிற‌க்கிற‌த‌டி நெஞ்சில்

நான் க‌விஞ‌ன் ..என்னிட‌மிருப்ப‌தெல்லாம்
செத்த‌வ‌ரை உயிர்ப்பிக்கும் அமுத‌ வ‌ரிக‌ள்
நான் க‌விஞ‌ன் என்னிட‌மிருக்குது
ம‌னித‌ மிருக‌ங்க‌ளை க‌வி பாடியே அழிக்கும்
க‌ல‌ம்ப‌க‌ம்

என் செய்வேன்? இவ‌ர்க‌ள் ஆட்டைக் க‌டித்து,மாட்டை க‌டித்து ,ம‌னித‌ரை க‌டித்து த‌ற்போது த‌ம்மையே க‌டித்து தின்னும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ பின் என் செய்வேன்?

நான் செய்த‌ பாவ‌மெல்லாம் இர‌ண்டே !

பாரத தேசத்திலிருந்து ப‌சியை விர‌ட்ட‌ முனைந்தேன்
சுர‌ண்டலுக்கு சுறுக்கிட‌ முய‌ன்றேன்..அவ்வள‌வே!

பெரிய‌ சூதாட்ட‌மே ஆடிவிட்டேன்.
இதில் பசி என்னை உண்ணட்டும் என்று
என் உண‌வை ம‌ட்டும‌ல்ல
மண் உண்ணட்டும் என்று என்னையே ப‌ண‌ய‌ம் வைத்தேன்.

வெற்றி தான் கிட்ட‌வில்லை.
வ‌ட‌க்கில் வெள்ளம், தெற்கில் வ‌ற‌ட்சி
ந‌திக‌ளை இணைப்போம் என்றால்,
அந்த திட்டத்தை சிக‌ப்பு நாடா சுருக்கிட்டே கொன்று போடுவார்க‌ள்.

10 கோடி வேலைய‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ளை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் அமைத்திட‌ க‌ன‌வு க‌ண்டேன்.

என் க‌ன‌வுக்கு 20 வ‌ருட‌ உழைப்பை உண‌வாக‌ த‌ந்தேன். அத‌ன் ப‌காசுர‌ ப‌சி தீர்வ‌தாயில்லை.

ஆட்சி முறை மாறினால் வ‌ழி பிற‌க்கும் என்று அதிப‌ர் முறை தேர்த‌லுக்கு குர‌ல் கொடுத்தேன்.

என் தொண்டை வ‌ற‌ண்ட‌து.
அதை ந‌னைக்க‌ த‌ண்ணீர் கிடைக்க‌வில்லை. ஒரு ரூபாய் செல‌வ‌ழித்து மின‌ர‌ல் வாட்ட‌ர் வாங்குவ‌தை விட‌ யாரேனும் இர‌ண்டு த‌லைவ‌ர்க‌ளுக்கு 9999 ஆவ‌து முறையாக‌ இர‌ண்டு த‌பால் கார்டாவ‌து எழுத‌லாமே என்று தாக‌த்தை த‌ள்ளிப்போட்டேன்.

வீட்டு உரிமையாள‌ர்க‌ளின் உரிமையில்(?) த‌லையிடும் துணிச்ச‌ல் இல்லாத‌தால்
ந‌ள்ளிர‌வுக‌ளில் நாட்டுத்த‌லைவ‌ர்க‌ளுக்கு தாக்கீதுக‌ள் த‌யாரிக்க‌ என்னைப்போன்றே தானுருகி, ஒளிபெருக்கும் மெழுகுவ‌ர்த்திக‌ளை உப‌யோகித்தேன்.

இந்த‌ உழைப்பு த‌ந்த‌ நிறைவில் என் பிழைப்பையும் ம‌றந்தேன்.

நாட்டின் த‌லையெழுத்தை மாற்றும் உத்வேக‌த்தில் என் த‌லையெழுத்தின் த‌ர‌த்தை த‌ர‌ம் கெட்ட‌வ‌ரும் த‌ட்டித் த‌ர‌ம் பார்க்கும் நிலைக்கு வ‌ந்துவிட்டேன்.

என் ல‌ட்சிய‌த்தை அல‌ட்சிய‌ம் செய்த‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி என்றுமே நான் அல‌ட்டிக்கொள்ள‌வில்லை

கேவ‌ல‌ம் சுய‌ ந‌ல‌த்துட‌ன் முழு முட்டாள்க‌ள் தொட‌ர்ந்து வென்றாலும்
மாசு ம‌ருவ‌ற்ற‌ என் பொது ந‌ல‌த்துட‌ன் முப்போதும் நான் தோற்றாலும்
க‌வ‌லையுற வில்லை.

உழுத‌வ‌னுக்கு உழ‌க்கும் மிஞ்சாத‌ நிலை மாற்ற‌ கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌த்துக்கு வாதாடினேன்.
க‌ருப்புப்ப‌ண‌த்தை க‌ருவ‌றுக்க‌ புதிய‌ க‌ர‌ன்சி அறிமுக‌ம் என்றேன்.

வ‌ழுக்கை த‌லைய‌ர்க‌ள், த‌ம் சோடா புட்டி க‌ண்ணாடிக‌ள் வ‌ழியாக‌ என் திட்ட‌த்தை பார்த்து ஓட்டைக‌ளை தேடுவார்க‌ள் என்று தெரியும். அத‌ற்காக‌வே பொருளாதார‌ த‌த்துவ‌ங்க‌ளை புர‌ட்டினேன்.

என‌க்கு க‌லைம‌க‌ள் அருள் இருந்த‌தே த‌விர‌, அலைம‌க‌ள் அன்றும், இன்றும் ம‌ருள் த‌விர‌ வேறேதும் த‌ந்த‌தில்லை, பார‌திக்கு ச‌க்தியை த‌ந்த‌ அதே ச‌க்தி கொடுத்த‌ ச‌க்தியில் பார‌த‌ பாராளும‌ன்ற‌த்தின் க‌த‌வுக‌ளை ப‌ல‌மாக‌வே த‌ட்டினேன்.

ஆந்திர‌ முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ குப்பை கூடைக‌ளுக்கு தெரியும், என் திட்ட‌ம் ப‌ற்றி நான் எழுதிய‌ நினைவூட்டு க‌டித‌ங்க‌ளின் எண்ணிக்கை.

மேற்ப‌டி நினைவூட்டு க‌டித‌ங்க‌ள் எழுதிய‌ நேர‌த்தில் ஸ்ரீராம‌ஜெய‌ம் எழுதியிருந்தால் ராம‌ன் என்னிட‌ம் கொத்த‌டிமையாக‌ இருந்திருப்பான்.

ச‌ரி பார‌த‌த்தின் வ‌றுமை நிலை க‌ண்டு என் நெஞ்சு வேத‌னையில் வேக‌ வேண்டும், வெந்து சாக‌ வேண்டும் என்ப‌து விதியானால் டோன்ட் கேர் ..

Thursday, December 13, 2007

கலைஞரை விமர்சித்து குங்குமத்தில் ஒரு ஜோக்

கலைஞரை விமர்சித்து குங்குமத்தில் ஒரு ஜோக் வெளிவந்துள்ளது. தலைவர் ஏன் ரத்தவங்கிக்கு போறார்? _ இது கேள்வி.

"கட்சிக்கு புதிய இளரத்தம் வேண்டுமாம்" _ இது பதில்.

கலைஞர் கட்சிக்கு இளைஞர்களை வரவேற்று தொடர்ந்து உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதி வருவது தெரிந்ததே !

இந்நிலையில் இந்த ஜோக் வெளிவந்துள்ளது நிச்சயம் உள் நோக்கத்த்தோடு வெளிவந்திருப்பதாகவே கூறலாம்.

"வளர்த்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா போன ஜென்ம பாவமடி அம்மாளு" என்ற பாட்டு வரிதான் நினைவுக்கு வருகிறது.

யாரையெல்லாம் கலைஞர் வளர்த்து விடுகிறாரோ அவர்களெல்லாம் கலைஞரின் முதுகில் குத்துவது அவர் ஜாதக ராசி போலும்.

கலைஞர் இனியாவது நன்றி கெட்ட குடும்ப உறவுகளை விட்டு, முதுகில் குத்தும் அரசியலை விட்டுத்தொலைத்து தன் வாழ்வை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை முடிக்க அர்ப்பணிக்க வேண்டும் .

லிவிங் டு கெதர்

லிவிங் டு கெதர் பற்றி பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்யுமத்தனை சிகரத்துக்கு தமிழர்கள் உயர்ந்துள்ளது மனதை குளிர வைக்கிறது. இருந்தாலும் ஏதோ ஒரு சமயம் ஒரு பெண் எழுத்தாளர் குறிப்பிட்டதை போல நிர்வாணத்தை மறைக்காது முகத்தை மறைத்து என்ன பயன். எனவே தான் இந்த விஷயம் பற்றிய என் கருத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன்.


உடன் உறைதலில் ஆணுக்கு பொறுப்பு குறைகிறது.பெண்ணுக்கு ரிஸ்க் அதிகரிக்கரிக்கிறது அவ்வளவே..அதே சமயம் அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிறது.

பெற்றோர் இருந்தே குழந்தைகளின் பாதுகாப்பு கேலிக்கூத்தாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது.



இன்றுள்ள‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ம்,த‌னியார் ம‌ய‌மாக்க‌ம்,நுக‌ர்வோர் க‌லாச்சார‌த்தில் பெற்ற‌ குழ‌ந்தையை ப‌ந்த‌ய‌க் குதிரையாக்கி அதிலும் காசு பார்க்கும் த‌ன்மை பெற்றோரில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து.

என் வ‌ய‌து 40 தான். நான் 10 ஆம் வ‌குப்பு ப‌டித்த‌ கால‌த்தில் என‌க்கு 70 பெர்செண்ட். நான் ஸ்கூல் செக‌ண்ட். என்னைவிட‌ ஒன்றோ இர‌ண்டோ ச‌த‌வீத‌ம் அதிக‌ம் பெற்ற‌ தியாக‌ராஜ‌ன் ஸ்கூல் ஃப‌ர்ஸ்ட். இன்று 100 பெர்சென்ட் பார்ட்டியே ஸ்கூலுக்கு ரெண்டோ,மூன்றோ உள்ள‌ நிலை இருக்கிற‌து.

என் அப்பா ட்ர‌ஷ‌ரீஸ் அண்ட் அக்க‌வுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் அட‌க்க‌டி மாற்ற‌ல் ஆகிய‌வாறே இருப்பார். ஒவ்வொரு வ‌ருட‌ம் சொந்த‌ ஊர் வ‌ரும்போதும் ப‌க்க‌த்து வீட்டு பைய‌னை கேட்ப‌து போல் த‌ம்பி! இப்ப‌ எத்தனாம் க்ளாஸ் ப‌டிக்கிறே என்றுதான் கேட்பார்.

இப்போது ப்ரிகேஜி ப‌டிக்கும் குழ‌ந்தை ச‌ரியாக‌ ப‌டிக்க‌வில்லை என்று தாய்மார்க‌ள் ஜோதிட‌ம் கேட்க‌ வ‌ந்துவிடுகிறார்க‌ள்

இந்த‌ நிலையில் தாலி,திரும‌ண‌ம் இல்லாது உட‌னுறையும் பெற்றோர் பிரிந்துவிட்டால் ,பிரிந்த‌வ‌ர்க‌ள் ம‌றும‌ண‌ம் செய்து கொண்டுவிட்டால் அந்த‌ குழ‌ந்தைக‌ளின் க‌தி அதோ க‌திதான்.

தாலி க‌ட்டி க‌ல்யாண‌த்தில் ம‌ட்டும் என்ன‌ வாழுது என்று நீங்க‌ள் கேட்டு விட‌க்கூடாது என்று இத்த‌னை சொன்னேனே த‌விர‌ வேலி என்ப‌தே "தாவு !" என்று ம‌றைமுக‌மாய் தூண்டுவ‌து தான். தாலி ,உண்மையிலேயே வேலியாக‌ இருப்ப‌தானால் தின‌த்த‌ந்தியில் க‌ள்ள‌க்காத‌ல் எதிரொலிக‌ள் கேட்காத‌ல்ல‌வா?

Tuesday, December 11, 2007

கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும்.


இந்த சமூக,அரசியல்,பொருளாதார அமைப்பில் கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும். இந்த கேடு கெட்ட அமைப்பில் மாட்டிக்கொண்டு யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் பலியாகிக்கொண்டிருக்கிறேன்.

என் தவறு ஒன்றே இந்த அமைப்பின் ஓட்டைகள் தெரிந்த பிறகு இதை சுரண்டியே லக்ஸரியாக வாழும் அறிவுத்திறனிருந்தும் இதை மாற்றி ராம ராஜ்ஜியத்தை மீண்டும் ஸ்தாபிக்க தவிப்பது தான். அதுவும் நானே ப்ரெட் ஹன்டராக இருந்து கொண்டு இந்த முயற்சியை தொடர்கிறேனே இது தான் என் தலையாய தவறு.

தெய்வங்களுக்கு அச்சம் எங்கே இவன் தமது பிரளய கால அஜெண்டாவை நிறைவேறாது செய்துவிடுவானோ என்று.

எனக்கு யாரும் துணையில்லை, தருமம் காத்தால் அது என்னை காக்கும். தருமம் என்னை காத்தால் நான் நாட்டை காக்கலாமே என்றுதான் தருமத்தை காத்து வருகிறேன்.

தெய்வங்களின் இருப்பை உணர்கிறேன். தருமத்தை காத்திருந்த காரணத்தால்
தெய்வங்கள் எனக்கு எனக்கு எல்லையில்லாத ஞானத்தையும், அதிகாரத்தையும் கொடுத்திருந்தாலும் அதனால் என் லட்சியம் நிறைவேறாது என்பது எனக்கு புரிந்துவிட்ட‌து.

என் லட்சியம் நிறைவேற பணம் தேவை. அதையும் என் சங்கல்ப பலத்தால், தெய்வங்களை நச்சரித்து பெற்று விட்டேன். இருந்தும் பொறுப்பற்ற மனைவி,மகளால் அந்த பணம் வீணாகி எனக்குள் குற்ற மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

வெறுமனே தெய்வம் என் பக்கம் என்ற பிரமையில், கையில் காலணா இல்லாது ஒரு மாநில முதல்வரையே எதிர்த்து போராடிய நான், இன்று மாதம் ரூ.6,000 சம்பளம் வாங்கியும், ஆஸ்ட்ரோ கன்ஸல்டன்ஸியில் சில ஆயிரம் சம்பாதித்தும் என் லட்சிய போராட்டத்தை தொடரமுடியாது தவிக்கிறேன்.

எனக்கு புரிகிறது. இறைவனுக்கு என்னை கண்டு பொறாமை. இவன் எங்கே மக்களுக்கு கவுரவமான வேலை, உணவு,உடை,இருப்பிடம், உயிர் பாதுகாப்பு தந்து தன் பிராபல்யத்தை குறைத்துவிடுவானோ என்று அச்சம்.

மேலும் என் வாழ்வில் நான் நினைத்த‌தெல்லாம் ந‌ட‌ந்து வ‌ருகிற‌து. அது ந‌ட‌க்கும்போதுதான் அது புதிய‌ ந‌ர‌க‌மாகிவிடுகிற‌து. இந்த‌ ர‌க‌சிய‌ம் என‌க்கே தெரிந்திருக்கும் போது, இறைவ‌னுக்கு தெரியாதா என்ன‌? அத‌னால் தான் என் மேலான‌ க‌ருணையால் தான் இறைவ‌ன் என் ல‌ட்சிய‌ப்போரை முட‌க்கி வைத்திருக்கிறான்.

இருந்தாலும் என்ன‌ முட‌க்குவ‌து அவ‌ன் வேலை. தொட‌ர்ந்து முய‌ல்வ‌து என் வேலை.

Note: The photograph in this post is of my friend or a foe Mr.K.karthikeyan. He is running a lending library in chittoor.

For the many years he is conducting essay, and drawing comoetitions to the students in chittoor town.

In this year last sunday there was a prize distribution programme in a private chowltry in chittoor.

I had extracted his photo from a phorograph shot in the above occassion. He is allergetic of focusing. But for my psycological satisfaction I am to display his photo in this post.

Monday, December 10, 2007

மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை

மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை
ஆம். ஆனந்த விகடனில் குஜராத் தேர்தல்கள் பற்றிய கட்டுரையில் ஆ.வி. பார்ப்பணீயத்துக்கே உரிய நாசூக்குடன், சொல்லாமலே சொல்லும் வகையில் தன் தணியாத ஆசையை தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடியோ அவர் கட்சியினரோ கூட தயாரிக்க முடியாத அளவில், ஏறக்குறைய துண்டு பிரசுர ரேஞ்சுக்கு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மோடி இந்த முறை ஜெயித்து விட்டால் பாஜக அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட அறிவிக்கப்பட்டுவிடுவார் என்று அச்சம்( ஆசை) தெரிவித்துள்ளது.மோடியின் ஆட்சியில் நடந்த வளர்ச்சிப் பணிகளை கர்ம சிரத்தையுடன் பட்டியலிட்டிருக்கிறது. வளர்ச்சி பணிகள்தாம் முக்கியம் என்று முடிவெடுத்து விட்டால்...

கேவலம் பார்ப்பணர்களை மட்டும் வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்து தேவாலயங்களில் தூசு படிந்து கொண்டிருக்கும் தங்கத்தை அமெரிக்கா காலடியில் கொட்டி விற்றாலும் வளர்ச்சி பணிகள் நடக்கும் தான்.
விற்றுவிட‌லாமா த‌ங்க‌த்தை?


இந்திய‌ நாட்டு ச‌கோதிரிக‌ளின் அழகுக்கு அகில‌மே அடிப‌ணியும் தான். அவ‌ர்க‌ளை விற்றால் கூட‌ வ‌ள‌ர்ச்சி ப‌ணிக‌ள் ந‌ட‌க்கும் தான்..
விற்றுவிட‌லாமா ச‌கோதிரிக‌ளை?

என்ன‌டா இது த‌ங்க‌த்த‌மிழ்நாட்டில் த‌மிழுக்கு வ‌ந்த‌ சோத‌னை?

ஒரு மாநிலத்தின் வ‌ள‌ர்ச்சி,முன்னேற்ற‌ம் எல்லாம் விக‌ட‌ன் க்ரூப் ப‌த்திரிக்கைக‌ளின் ச‌ர்க்குலேஷ‌னா ? பாரத தேசத்து,த‌மிழ‌க‌த்து,ச‌கோதிரிக‌ளை நிர்வாண‌மாக‌வோ, அரை குறையாக‌வோ அச்சிட்டாலும் போதுமான‌து. ச‌ர்க்குலேஷ‌ன் எகிறும்.

ஒவ்வொரு முஸ்லீமும் இந்த‌ நாட்டின் பிர‌ஜை, முஸ்லீம் சகோதரனின் ர‌த்தத்தில் தோய்ந்த அபிவிருத்தியை அனுபவிப்பதை விட க‌ட்டை வ‌ண்டியில் ப‌ய‌ணிப்ப‌து மேல். அபிவிருத்திக்காக‌ என் ச‌கோத‌ர‌னை, ச‌கோதிரியை விட்டுக் கொடுப்ப‌து க‌டைந்தெடுத்த‌ க‌ய‌வாளித்த‌ன‌ம்

Saturday, December 8, 2007

பொறுத்திருக்கச் சொல்லும் சிரஞ்சீவி /அரசியல் குதிப்பு விவகாரம்


இன்று சிரஞ்சீவி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி தம்மிடமிருந்து அடுத்த அறிக்கை வெளியாகும் வரை, ரசிகர்களை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அமாவாசைக்காக காத்திருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை. பிரதமை கழித்து நல்ல நாள் பார்த்து அடுத்த அறிக்கை வெளிவரும் போலுள்ளது. என்னங்கடா இது..

வர்ர பார்ட்டியெல்லாம் நாட்டையும்,மாநிலத்தையும் ஆள நினைப்பதில் தவறில்லை. இதில் பார்ப்பனர்,ஜோதிடர்கள் சொற்படி நடந்து கொள்வதுதான் கவலை அளிக்கிறது.

நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்ற வகையில் கூறுவது என்னவென்றால் அமாவாசையில் சிரஞ்சீவி அறிக்கை வெளிவந்தால் ஒர்க் அவுட் ஆகும். எஸ்.வி.சேகர் அறிக்கை எந்த நாளில் வெளி வந்தாலும் அதன் கதி அதோ கதிதான். வாஸ்து,வாஸ்து என்று அரற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று ஏன் இந்த கதியில் இருக்கிறது?

அமாவாசை என்றால் என்னவோ ஏதோ என்னும் பிரமைகள் உள்ளன. எனவே அமாவாசை குறித்து சில வரிகள்:
இன்று அமாவாசை. அதாவது சூரிய ,சந்திரர்கள் ஒரே ராசியில்,ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். சூரியன் ஆத்ம காரகன்,சந்திரன் மனோகாரகன். சூரியன் அறிவை தருபவன், சந்திரன் உணர்ச்சியை ஊட்டுபவன். சாதாரணமாக மனம் ஒரு பாதை, ஆத்மா ஒரு பாதையில் போகும். அறிவு சொல்வதை உணர்ச்சி ஏற்காது. உணர்ச்சி செல்லும் பாதையை அறிவு ஒப்பாது. மொத்தத்தில் அமாவாசை என்றால் நல்ல கான்ஸன்ட்ரேஷன் ஏற்படும் அவ்வளவே.

இதில் அவரவர் ராசிக்கு சூரிய ,சந்திரர்கள் எந்த பாவத்துக்கு ஆதிபத்யம் வகிக்கிறார்கள், எங்கே சேர்கிறார்கள் என்பதை பொருத்து பலன் வேறுபடும். உதாரணமாக, சிம்மத்துக்கு சூரியன் ராசியாதிபதி,சந்திரன் விரயாதிபதி. இதனால் அமாவாசை என்பது சிம்மத்துக்கு விரயத்தை தரவே வாய்ப்பு அதிகம்.


இன்றைய அமாவாசை சூரிய சந்திரர்கள் விருச்சிகத்தில் சேர்கின்றனர். விருச்சிகம் இவர்களுக்கு 4,9 க்கு அதிபதியான செவ்வாயின் வீடு. செவ்வாய் இப்போது 11 ல் உள்ளார். இது ப்ளஸ் பாயிண்ட். 2,11 க்கு அதிபதியான புதனும் இங்கு சூரிய,சந்திரரோடு சேர்கிறார். இதுவும் ப்ளஸ் பாயிண்ட் தான். ஆனால் விரயாதிபத்யம் உள்ள சந்திரன் சேர்வதால் தன நஷ்டம்,வாக்கு தவறுதல்,வீண்செலவு,வீடு,தாய் விஷயத்தில் மனக்கஷ்டம் இத்யாதியும் ஏற்படலாம்.

நானே இறைவன்

நானே இறைவன் என்ற எண்ணம் அவ்வப்போது என்னில் தோன்றுவதுண்டு. எல்லோருக்கும் இப்படியேவா என்பது தெரியாது. "யத்பாவம் தத் பவதி" என்றால்.நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது இதன் பொருள். நான் 1986 ஜனவரி முதல் அனுமனையே நினைத்து,அவருக்கு பிடிக்கும் என்பதால் ராம நாமம் ஜெபித்து வருகிறேன். 1997 ல் என் கான்ஷியஸ் பரிசுத்தமாக இருந்ததாலோ என்னமோ பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்தன. 2003 ல் தான் ஜஸ்ட் இர்ரிடேஷன் காரணமாய் அஹிம்சையை கைவிட்டு ஹிம்ஸைக்கு தாவினேன். கெட்டது செய்தவனுக்கும் நல்லதே செய்வது என்ற நிலையை ஒரே ஒரு தடவை என்று விட்டொழித்தது என் கான்ஷியஸை மலினப்படுத்தி விட்டது உண்மைதான். என்றாலும் என் வாழ்வில் அற்புதங்களுக்கு பஞ்சமில்லை.

முந்தா நாள் கூட இலவச தங்குமிடம் கொடுத்து, பஜ்ஜி கடை போட, ஷ்யூரிட்டி ஏற்பாடு செய்து லோன் வாங்கித் தந்த முத்து சற்றே என்னை,என் ஈகோவை உரசிப்பார்த்த பாவத்துக்கு கை வெந்து போனது.

நேற்று ஒரு ஆசாமி சாமியெல்லாம் பணம் படைத்தவர்களுக்குத்தான் அது இது என்று ப்ளேடு போட நான் என் அனுபவத்தை, தெய்வீக சக்தி செயல்படும் விதத்தை, மனிதனுக்கும்,தெய்வத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்து விட்டேன். அவர் நக்கலாகவே ரெஸ்பாண்ட் ஆகிக் கொண்டிருந்தார். மறு நாளே சைக்கிளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே வரும்போது சர்ச் தெருவில் எதிர்பட்டார்.

இதையெல்லாம் சொல்வது நான் இறைவன் என்றோ,இறைவனுக்கு ஏஜெண்ட் என்றோ நிரூபிக்க அல்ல. இறைவனை நான் புரிந்து கொண்டதை அறிவிக்கும் நாள் இன்னும் வரவில்லை. தற்போதும் ஒரு குண்ட்ஸாக தான் புரிகிறது. திடீர் என்று என் கண்டுபிடிப்புகள் யாவுமே வாயை பிளந்துவிடுவதையும் காண முடிகிறது. எது எப்படியிருந்தாலும் தெய்வீக சக்தியின் இருப்பை என்னால் அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அது தூய ஆன்மாக்களின் சக்தியா அல்லது கடைசிவரை முட்டாள் தனமான் முருக பக்தராகவே வாழ்ந்து செத்த என் அப்பாவின் ஆன்ம சக்தியா புரியவில்லை. இருந்தாலும் ஒரு சக்தி யிருக்கிறது. அது என்னை காக்கவே விரும்புகிறது. நான் மக்களிடமிருப்பதாய் பட்டியலிடும் அருட்தடைகள் என்னிலும் இருப்பதால் முழுக்க காக்க முடியாது தவிக்கிறது. அதே நேரத்தில் இறைவ‌னின் அருளை நான் பூர‌ண‌மாக‌ பெறுவ‌தை சில‌ ச‌க்திக‌ள் த‌டுப்ப‌தையும் உண‌ர‌முடிகிற‌து.


என் ச‌க்தி உத‌வாக்க‌ரை விஷ‌ய‌ங்க‌ளில் செல‌வாவ‌தையும் உண‌ர‌ முடிகிற‌து. இனியேனும் ஒரு விதி செய்ய‌வேண்டும் அருட்த‌டை ச‌க்திக‌ளை முறிய‌டித்து இறைவ‌ன் திருவ‌ருளை முழுமையாக‌ பெற‌வேண்டும். நான் இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌ம் ஏற்ப‌டும‌த்த‌னை உற‌வு என‌க்கும்/இறைவ‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டு விட்ட‌ பிற‌கு கூட‌ அருட்த‌டைக‌ளை தொட‌ர‌ விடுவ‌து வ‌டிக‌ட்டிய‌ முட்டாள் த‌ன‌ம்.

Friday, December 7, 2007

சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார்?

சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆந்திரஜோதி தெலுங்கு நாளிதழ் சில தினங்களாய் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இத்தனைக்கும் சிரஞ்சீவி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.அவர் மகள் காதல் கடி மணம் புரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்தே அவர் வெளி வராத நிலையில் வெறும் வாய்க்கு அவல் கொடுத்து வருகிறது ஆந்திர ஜோதி. என்.டி.ஆருக்கும் சிரஞ்சீவிக்கும் பெங்களூருக்கும்/புங்கனூருக்கும் உள்ள அத்தனை வித்யாசமிருக்கிறது. என்.டி.ஆர் காலத்தில் காங்கிர‌ஸின் டெல்லி தலைமையால் முதல்வர்கள் பந்தாடப்பட்டார்கள். என்.டி.ஆர் தரித்த வேடங்கள்,அவரது கள்ளம்,கபடற்ற குழந்தை மனம்,ஆவேசம் நிறைந்த‌ பேச்சு , மக்களை கவர்ந்தது. திரையுலக வாழ்க்கையிலும் அவருக்கென்று ஒரு சரித்திரம் இருந்தது. அவர் அரசியலில் குதித்தபோது ஈநாடு பத்திரிக்கை மோனோபலியாக இருந்தது. அது ஜாதி அபிமானத்தில் கொடுத்த விளம்பரம் ஓரளவு என்.டி.ஆர் வெற்றிக்கு உதவியது.


சிரஞ்சீவி கதையே வேறு. விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் தவிர அவர் படங்கள் எல்லாமே டீன் ஏஜர்களை குறிவைத்து எடுக்க பட்டவையே. இப்போதைய டீனேஜர்கள் அவரை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 20 வருடங்களுக்கு முன்பு அவரை தம் ஆதர்ஸ புருஷனாக வரித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வாழ்வின் அர்த்த‌ம‌ற்ற‌ த‌ன்மையை புரிந்து கொண்டுவிட்ட‌ முக்கால் கிழ‌ங்க‌ளாகி விட்டார்க‌ள். நான் உட்ப‌ட. ஆனால் ஆந்திர ஜோதி சிரஞ்சீவி அரசியலில் குதித்து முதல்வராகவே வந்துவிட்டது போல் ஏக‌ பில்ட‌ப் கொடுத்துவ‌ருகிற‌து.

இந்த‌ நேர‌த்தில் நாம் யோசித்தே ஆக‌வேண்டிய‌ அம்ச‌ம்

நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்பதே.

பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?