Sunday, July 11, 2010

பிரபாகரன் சாகவில்லை


எச்சரிக்கை:1
1.நான் புலிகளை மட்டுமே அல்ல தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தையும், வன் முறையில் நம்பிக்கை வைத்து செயல்படும் (தடை செய்யப்படாதிருந்தாலும் சரி) எந்த இயக்கத்தையும் ஆதரிப்பதாயில்லை.அதே நேரம் மனிதம் காக்க, மனித குலத்தை காக்க குரல் கொடுக்கும் யாரையும் என்னவராகவே கருதுவேன் அவர்களுக்கு ஆதரவாக என்  ஒலித்துக்கொண்டே இருக்கும் . என் குரல் வளை நெறிக்கப்படும் வரை.

2.கண்ணை மூடிக்கொண்டு  தனி மனிதர்களை ஆதரிப்பதும் என் கொள்கை அல்ல. மகாத்மாவே ஆனாலும் பிரிச்சு மேஞ்சுருவமில்லே. அதுக்காக எம்.ஜி.ஆரிலான தரும குணத்தையும், ஜெயாவிலான தன்னம்பிக்கை,துணிச்சலையும் ,கலைஞரிலான கவிதையையும் ,பிரபாகரனிலான தீரத்தையும் ஏத்துக்க மறுக்க மாட்டோம்ல

3.இந்த பதிவு  நூத்துக்கு நூறு எண் கணித அடிப்படையிலானது. ப்ராக்கெட்ல இருக்கிற மேட்டர்ங்க மட்டும் நம்ம இன்டர்ப்ரிட்டேசன்ஸ்.எண் கணிதத்தோட மைனஸ் பாயிண்ட் என்னனு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதாவது குறிப்பிட்ட எண்கள் பிறப்பு, கூட்டு,பெயர் எண்களா அமைஞ்சா மட்டும் போதாது. அவிக பொறந்த ஜாதகத்துல மேற்படி எண்களுக்குரிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும். பிரபாகரன் மேட்டர்ல நம்மகிட்டே அவரோட டைம் ஆஃப் பர்த் இல்லே. அதனால நோ ஜாதகம், நோ கிரக பலம். இந்த பலன் எல்லாம் ஒத்தை கண்ணுல பார்த்து சொன்ன மாதிரி.

4.இப்படி பெரி பெரி மேட்டர்ல எல்லாம் பலன் சொல்ல உனுக்கு இன்னா தகுதி கீதுனு கேட்கலாம். உங்க புரட்சி தலைவி மேட்டர்ல அவிக ஜாதகபலனை அவிகளுக்கு  அனுப்பி தேங்க்ஸ் கார்டு கூட பெற்றவன். எங்க ஊர்ல சந்திரபாபு மூத்திரம் வைட் பெட்ரோல் கணக்கா எரியற காலத்துல "ஊத்திக்குவாரு"னு அவிக சம்சாரத்துக்கே தெரிவிச்சவன். கடந்த தமிழக தேர்தல்ல தாத்தாவுக்கு (கலைஞர்) மெஜாரிட்டி கிடைக்காது. ராமதாசு குடைச்சல் குடுப்பாருனு தினகரன் நாளிதழுக்கு குரியர் மூலம் தெரிவிச்சவன். 2009 ல நடந்த தேர்தல்கள்ள ஒய்.எஸ் மறுபடி சி.எம் ஆவார், சீட்ஸ் குறையலாம். பிரஜா ராஜ்ஜியத்துக்கு 20 டு 30 சீட் தான் வரும்னு தெலுங்கு ப்ளாக்ல எழுதினவன். லேட்டஸ்டா நித்யானந்தா சந்தேக மரணத்துக்கோ, விஷம் வைத்து சாவுக்கோ ஆளாவார்னு சொல்லியிருக்கேன்.

இனி பதிவுக்கு வந்துருவம் .பிரபாகரனோட பிறந்த தேதி 26 -11- 1954 . பிறப்பு எண் 2+6 எட்டு. கூட்டு  எண் (2+6+1+1+1+9+5+4 ) 29 ( 2+9) 11 (1+1) = 2 பெயர் எண் VELUPILLAI PRABAKARAN னு கணக்கு போட்டா  8 வருது.VELUPILLAI PRABHAKARAN னு  போட்டா 4 வருது. இலங்கை அரசோட டாக்குமெண்ட் படி எது கரெக்டுனு யாராச்சும் சொன்னா நல்லாருக்கும்.

கிரக நிலை;
பிரபாகரனோட டைம் ஆஃப் பர்த் தெரியாததால அன்னைக்கு கிரக நிலைய ஒரு லுக் விடலாம்னு காலை 6 மணி டைம் போட்டு ஒரு சாதகம் போட்டுப்பார்த்தேன்.
இனிய அதிர்ச்சிகள் ஒன்னா ரெண்டா ? பார்ட்டி அமாவாசைக்கு மறு நாள் பிறந்திருக்கு. அமாவாசைன்னா சூரிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்துல சஞ்சரிக்கிறதுதான் அமாவாசை.

ரஜினியோட மனிதன்  சினிமால  வர்ர விளக்கத்தை நம்பாதிங்க - திருடனாவான். அல்லது  போலீஸாவான்) சூரியன் செல்ஃப்னு சொல்ற சுயம். சந்திரன் மனோகாரகன்.சாதாரணமா மனிதனோட சுயம்/இகோ வேறா இருக்கும். ஆனால் அவன் மனசு வேற வேற மேட்டர்ல அலை பாய்ஞ்சுகிட்டிருக்கும். அதனால தான் பல லட்சியங்கள்  பொய்ச்சு போவுது. ஆனால் பிரபாகரன் மேட்டர்ல இப்படி நடக்க சான்ஸே இல்லை. ஒக்கட்டே மாட்டா, ஒக்கட்டே பார்யா மாதிரி ஒக்கடே எண்ணம், ஒக்கட்டே செயல்தான்.

அட..சொம்மா விடாதிங்க முருகேசன் பிரபாகரன் பிறந்தது அமாவாசைக்கு மறு நாள் தானேனு கேட்கிறிங்க அப்படித்தானே.

சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகள்ள இருந்தாலே சிவசக்தியோகம் அது இதுனு ஹைலைட் பண்றாய்ங்க ( இது நம்ம ஜாதகத்துலயும் உண்டுங்கண்ணா. மேலும் பரிவர்த்தனம் வேற) . ஒரே ராசிலருந்தா இன்னா மாதிரி கான்சன்ட்ரேசன் வரும் கற்பனை பாருங்க.

உபரிபலமா நட்சத்திரம் அனுஷமாகியிருக்கு ( அதிபதி சனிங்கோ. ஆயுஷ்காரகர்) . ராசி விருச்சிகம். விருச்சிகம்னா தேளுனு அர்த்தம் . தேளு மறைஞ்சி வாழத்தான் விரும்பும் . அது வெளிச்சத்துக்கு வர்ர வரை  அது இருக்குன்னு சொன்னாலும் எவனாச்சும் நம்புவானா? தேள் வந்து கொட்டற வரை இது இன்னா பண்ணிரும்ங்கற எண்ணம் தான் இருக்கும்.

இந்த ராசிக்காரவுகளுக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் ( தான்)  இவர் டீலாகிவிடுவார். ராஜபக்சே ராஜபோகமா கீராருங்களே.

இது எட்டாவது ராசிங்கறதால மரணம் அப்பப்போ வந்து ஹலோ சொல்லிட்டு போகும்.  ( இவிகளுக்கு ரத்தம்,எரிச்சல் தொடர்பான பிரச்சினைகளும், ப்ளட் ப்யூரிஃபிகேசன்ல பிரச்சினைகள் காரணமா கிட்னி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம்.அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வந்திருக்கலாம். .இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்

கடகத்துல குரு உச்சமா இருக்காரு. இவிக உள்ளுணர்வு இவிகளை ஏமாத்தவே ஏமாத்தாது.   புதன்,சுக்கிரன்,சனி எல்லாம் ஒரே ராசில அதுவும் துலாம்ல இருக்காய்ங்க. குரு சுபனா இருக்க கூடிய லக்னங்கள்ள பிறந்திருந்தா கடக குரு தூக்கிவிட்டுருவாரு. தர்காதீதமான  தெய்வ பலம்  அவரை பின் தொடர்ந்துகிட்டே இருக்கும். தீர்காயுசுனு ஜோதிஷ கிரந்தங்கள் அடிச்சு சொல்லுது.

அட குரு பாபனா இருக்ககூடிய லக்னங்கள்ளயே பிறந்திருந்தாலும்  புதன்,சுக்கிரன்,சனி சேர்க்கை சொம்மா தூக்கிவிட்டுரும். ஆயுள் காரகனாகிய சனி வேற உச்சம். சுக்கிரன் ஆட்சி. ஆயுள் காரகனான சனி உச்சம் பெற்றாலும் தீர்காயுசுக்கு நிறைய வாய்ப்பு ஏற்படுது. முக்கியமா சனி செவ்வாய்க்கு தொடர்பு ஏற்படாததால துர்மரணத்துக்கு வாய்ப்பில்லைன்னுதான் சொல்லனும்.

எண் கணித பலன்:

பிறப்பு எண் , கூட்டு எண்:
ரெண்டுமே 8 வருது. எட்டுக்குரிய கிரகம்  சனி.சனி காலை குறிக்கிற கிரகம், நிறம் கருப்பு. சின்னவயசுல வெடிகுண்டு தயாரிக்கிறச்ச பை மிஸ்டேக் அது வெடிச்சு பிரபாகரனோட கால் கருப்பா மாறிட்டதாவும் அதனால அவருக்கு கரி காலனு ஒரு பேர் வந்ததாகவும் படிச்சிருக்கேன். மேலும் எட்டு தொழில் நுட்ப அறிவை தரும் எண். அதிலயும் இரும்பு தொடர்பான டெக்னிக்கல் நாலெட்ஜுக்கு சனி ரெம்ப முக்கியங்கண்ணா.  கண்ணை கட்டிக்கிட்டு யந்திர துப்பாக்கிய  அக்கக்கா பிரிச்சு  பூட்டற ரேஞ்சுக்கு இருந்தாருனு தகவல்.லாங் டெர்ம் ப்ராஜக்டுல இறங்கனும்னாலே சனி பலம் தேவைங்கண்ணா.ட்

எட்டு எட்டா பிரிங்க:
பெயர் எண், பிறப்பு எண் இரண்டுமே எட்டுங்கறதால இவர் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கனும். ஒவ்வொரு எட்டு வருடம் கொண்ட காலத்துக்கும் ஒவ்வொரு பலன் வரும்.

இப்படி பிரிக்கனும்:

26/11/1954 முதல் 26/11/1962  முதல் எட்டு:
கடுமையான மலச்சிக்கல், கால் பாதம் தொடர்பான பிரச்சினைகள். தலித்துகளின் பராமரிப்பு, நெருக்கம். படிப்பில் தடை . ஸ்கூல் மாற்றம். செக்சன் மாற்றம்
26/11/1962 முதல் 26/11/1970  இரண்டாவது எட்டு:
கண், தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள். மித பாஷி. குடும்பத்தில் வறுமை அ எவரேனும் குடும்பத்திலிருந்து வெளியேறுதல். பிரபாகரனுக்கு டெக்னிக்கல் பிரிவில் ஆர்வம்
26/11/1970 முதல் 26/11/1978  மூன்றாவது எட்டு
தைரிய சாகசங்கள், சாகச பயணங்கள், அல்லல் அலைச்சல். கேட்கும் திறன் பாதிக்கப்படுதல்
26/11/1978 முதல் 26/11/1986  நான்காவது எட்டு:
தாய், தாய் வழி உறவினர் பிரிவு, வீட்டை விட்டு வெளியேறுதல், வாகன விபத்து, இயக்கத்தில் உச்சக்கட்ட உட் கலகம்.
26/11/1986 முதல் 26/11/1994  ஐந்தாவது எட்டு:
தவறான முடிவுகள், அவமானம், ஏமாற்றம், மிஸ் கேரி, பிள்ளைகள் தொடர்பான வேதனை.
26/11/1994 முதல் 26/11/2002  ஆறாவது எட்டு:
சத்ரு ஜயம், விவகார ஜெயம், எதிரிகளே அற்றுப்போதல், எதிரிகளில் பிளவு,
26/11/2002 முதல் 26/11/2010  ஏழாவது எட்டு
மரணம் அ  நோய்கள்

மேற்படி  காலகட்டங்களுக்குரிய பலனை தந்தாச்சு . விவரம் தெரிஞ்சவங்க ஆர்வம் உள்ளவுக இந்த பலனை யதார்த்தத்தோட பொருத்திப்பார்த்து எத்தனை சதவீதம் பொருந்துதுனு சொல்லுங்க.  இந்த பலன் 50 முதல் 60 சதவீதம் பொருந்தினா கூட பிரபாகரன் உயிரோட தான் இருக்காருனு அடிச்சு சொல்லலாம் !. அடிச்சு சொல்லலாம். !!   அடிச்சு சொல்லலாம். !!!

மேற்படி  கணக்குப்படி பிரபாகரனுக்கு 26/11/2010க்கு பிறகுதான் எட்டாவது ரவுண்டு ஆரம்பமாகுது. மரணம்னா இதுக்கப்புறம்தான் வாய்ப்பிருக்கு. ஆனால்  இப்போ அவரு யு.ஜில இருக்கிறதால ( அண்டர் கிரவுண்ட் லைஃப் ) இந்த எட்டாவது ரவுண்டோட தோஷம் வேலை செய்யாது. என்னைக்கேட்டா பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக்கறத விட அடுத்த எட்டு வருசங்களுக்கு  யு.ஜி லயே இருக்கிறது பெட்டர். அதான் அவருக்கு பலம். யு.ஜில இருந்தா இந்த தோஷம் நெர்வஸ் செட் அப் மேல எஃபெக்ட் காட்டலாம். அல்லது பைல்ஸ் மாதிரி வியாதிகளை தரலாமே தவிர அபாயம் ஆபத்து இருக்காது. அப்படி வெளிய வந்து கலக்கறேனு இறங்கினாலும் ஆயுள் காரகனான சனியோட எட்டாவது ரவுண்டு மரணத்தை கொடுக்காம நிரந்தர ஊனமாக்கிரவும் வாய்ப்பிருக்கு.

(அடுத்த பதிவுல பிரபாகரனோட  கூட்டு எண்  2  ஆனதால் நிகழக்கூடிய  பலன் களையும் புதிய புலிகள் அமைப்பை ஏற்படுத்தின தேதி, மதிவதனியுடனான திருமண தேதி ஆகியவற்றை பொருத்தும் நிகழக்கூடிய பலன் களையும் பார்ப்போம்.)