Wednesday, September 15, 2010

மனைவி அமைவதெல்லாம் - 4

கடவுள் என்னவோ குடையும், ஜோல்னா பையுமா மேரேஜ் ப்ரோக்கர் மாதிரி அலையறதாவும்  இருக்கிற சடை கிராகிக்கெல்லாம் பெண் பார்த்து முடிக்கிறதுதான் அவரோட வேலை மாதிரியும் சனங்க சொல்வாய்ங்க.  நம்பாதிங்க.

கடவுள் காந்திக்காக கஸ்தூரி பா, நேருவுக்காக கமலா  நேருன்னு ஸ்பெசிஃபிக்கா படைக்கிறதில்லை. ஆனால் "ஹூம் உனக்குன்னு ஒருத்தி பிறக்காமயா இருப்பான்னு " சனம் பேசும். என்னவோ அந்த நேரம் வந்ததும் அவள்  உல்வா பஸ் ஏறி வந்து சேர்ந்துருவாங்கற மாதிரி பேசுவாய்ங்க.   "எவனுக்கு எவளோட முடிச்சு போட்டிருக்கோ அவ தான் மாட்டி தாலியறுப்பா"ன்னு சனம் கன்ஃபார்மா  சொல்லுவாய்ங்க. ஆனா அதையெல்லாம் நம்பாதிங்க.

இந்த மேட்டர்ல நான் என் அனுபவத்துல கண்டுக்கிட்டது என்னன்னா பலான கிட்ண சாமிக்கு பலான ராதாபாய்னெல்லாம் சிஸ்டம் கிடையாது. ஆனா ஆள் மாற வாய்ப்பிருக்கே தவிர உங்க ஜாதகத்துல எந்த கிரகம் உங்களுக்கு மனைவியை தர்ர பொறுப்புல இருக்கோ அதனோட காரகத்வத்துல உள்ள மனைவிக்கான பின்னணி  குண நலன் பற்றிய ஆப்ஷன்ஸ் தான் மாறாது .

உதாரணமா என்னோடது கடகலக்னம். சப்தமாதிபதி சனி. என் பெண்டாட்டி ஒன்னு கருப்பா இருக்கனும் அல்லது நோயாளியா இருக்கனும். 1989ல கருப்பா இருக்கிற பெண்ணோட  கண்ணாலம்   நடந்தது. சனம் புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க. 1991ல இன்னொரு கண்ணாலம் நடந்தது பெண்டாட்டி சின்னதா ஒரு மருந்து அலமாரியை சுமந்துக்கிட்டு திரியறா.

இதுலருந்து என்ன தெரியுது விதி இவதான்னு ஸ்பெசிஃபை பண்றதுல்ல. இந்த மாதிரி குட்டின்னு ரஃபா ஒரு ப்ரப்போசல்  வச்சிருக்கு. அதனால  நான்   என்ன சொல்றேன்னா ஏதோ பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு குட்டிய பார்த்துட்டு "இவதான் இவதான்"னு துள்ளி குதிக்காதிங்க.  அந்த கேட்டகிரில  நிறைய குட்ட்டிங்க இருக்கும். அதுல எவளை கட்டினாலும் ஒரே எஃபெக்ட் தான்.

எவள் வந்தாலும் உங்க தலையெழுத்துப்படி இருக்கவேண்டிய ரூப,லாவண்ய (அவலட்சண) குண நலன் (குணக்கேடுகள்) காரம்  ,மணம் ,குணத்தோடுதான் வருவாள். இதை எந்த கொம்பனாலயும் மாத்தமுடியாது.

எங்கே நாஸ்தியாயிருதுன்னா நீங்க பார்த்த அதே குட்டித்தான் வேணம்னு கோவணத்தை இழுத்து கட்டி களத்துல குதிக்கிறிங்களே அங்கே நாஸ்தியாயிருது. உண்மையில உலகத்துல உங்க மனைவியாகக்கூடிய லட்சணங்களை கொண்ட பெண்கள் ஆயிரக்கணக்குல இருப்பாய்ங்க. மேலும்

மேலும் ஒரு குட்டியை பார்த்ததும் ஜொள்ளு விட்டுர காரணம் உங்க மனசு. அது ஈகோ சேர்ந்ததால பழங்கள்ளு சேர்க்கப்பட்ட நீரா மாதிரி புளிச்சு போச்சு. அதனால அது தவறான முனை நோக்கியே கவரப்பட்டுருது.

அதாவது எவள் இருக்கிற பக்கம் தலை வச்சு படுத்தா ஃபேமிலி கோர்ட்டுக்கு போக வேண்டி வருமோ அவளைத்தான் உங்க எதிர்கால மனைவின்னு மனசு அடிச்சு சொல்லும். அதுக்கு காரணம் மனசில்லே. அதுல கலந்துட்ட ஈகோ.

அதனாலதான் சொல்றேன் செலக்சனுக்கு ஆயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் உங்களால ஃபாலோ பண்ண முடியாது. இருந்தாலும் ஆசை விடுதா. சொல்லி வைப்போம். விதி வழி  விட்டு விலகி மதி வேலை செய்து  பொழச்சு போவட்டும்னு தான் இப்படி மாரடிக்கிறது.

சரி தலை.. ஒரு பெண்ணை பார்க்கறிங்க அ பொண்ணு இருக்கிறதா தகவல் வருது. ஃபோட்டோ பார்க்கறிங்க. மனசு ஞம ஞமங்குதா உடனே கமிட் ஆயிராதிங்க . நான் கடந்த பதிவுல சொன்ன மாதிரியான  டேட்டா  எல்லாத்தயும் கலெக்ட் பண்ணுங்க .அனலைஸ் பண்ணுங்க. அப்பாறம் முடிவெடுங்க.

உங்க குடும்ப ஜோசியரு நல்ல மூட்ல இருக்கிறப்ப வழக்கத்தை விட அதிகமான கட்டணத்தை கொடுத்து , பணிவா வணங்கி கேட்டு  உங்க ஜாதகப்படி உங்க எதிர்கால  மனைவி எப்படியிருப்பாய்ங்கனு ஒரு லிஸ்ட் வாங்கிக்கங்க.  நீங்க பார்த்து வச்சிருக்கிற பெண்ணுக்கு அந்த அம்சங்கள்ள எத்தனை அம்சம் அமைஞ்சிருக்குனு பாருங்க. பத்துக்கு ஆறாச்சும் இருந்தா அவிக தான் உங்க வைஃப். சந்தேகமில்லே சந்தேகமில்லே.

அடுத்தது ஜாதக பொருத்தம். தோஷங்கள் இருந்தா ரெண்டு பேருக்கும் இருக்கனும்னு குருட்டுத்தனமா பார்த்துருவாய்ங்க. உங்களுக்கு எந்த விதமான தோஷம் , எத்தனை பர்சண்ட் இருக்கோ அதே விதமான தோஷம் அதே பர்சண்டேஜ்ல இருந்தா சேஃபுங்கோ.

இந்த தச வித விவாக பொருத்தத்துல ரஜ்ஜு, நாடி நல்லாருக்கா ஸ்பெசிஃபிக்கா பாருங்க . பத்துல பாதிக்கு மேல வரணுங்கறது விதி.

இந்த வரதட்சிணை , நகை நட்டு மேட்டர் எல்லாம் நீங்க எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறிங்களோ எந்த அளவுக்கு ப்ரஷர் பண்றிங்களோ அந்த அளவுக்கு தரித்திரம் தான்.  இதனோட விளைவா உங்களுக்கு குழந்தையே இல்லாம போயிரலாம். அல்லது ஆண் குழந்தை இல்லாம போயிரலாம், அபார்ஷன்ஸ் நடக்கலாம்.

இது ஏன் இப்படி நடக்குதுன்னா குரு தான் கங்கண காரகன் ( கண்ணாலம்) குருவே சுவர்ண காரகன் ( தங்கம்) ,குருவே தனகாரகன் ( பணம்) .உங்க ஜாதகத்துல மேற்படி குரு சுப பலமா இருந்தா நீங்க கேட்காமயே காசு,பணம், நகை நட்டெல்லாம் போட்டு செய்வாய்ங்க.

அந்த குரு நல்லா இல்லைன்னு வைங்க. அப்பத்தான் பேச்சு,  வார்த்தை, முறிவு, முறிவுக்கு முறிவுன்னு இழு பறியெல்லாம் ஏற்படும். இதனோட இம்பாக்ட் உங்க மேரீட் லைஃப் மேல நிச்சயமா உண்டு.

உங்க மனைவி கொண்டுவர்ர ஃப்ளாட், வாகனம், வெள்ளிப்பாத்திரங்க உங்க ஆண்மையையே பாதிச்சுரும்னா நம்பமாட்டிங்க. ப்ரூஃப் பண்றேன். தொடர்ந்து படிங்க.

வாகனத்துக்கும், ஃப்ளாட்டுக்கும் மட்டுமில்லை செக்ஸுக்கும், சுக்கிரன் தான் காரகத்வம் வகிக்கிறார். உங்க ஜாதகத்துல சுக்கிரன் நல்ல இடத்துல சுப பலமா இருந்தா இது மேல எல்லாம் உங்களுக்கு மரியாதையோ,ஈர்ப்போ,ஜொள்ளோ இருக்காது. ஆனா இதெல்லாம் காலா காலத்துல அசால்ட்டா அமைஞ்சுரும். கொடுப்பினை இல்லாத பார்ட்டிங்க தான் அலைஞ்சு பறை சாத்தும்.

வாகனம் Vs செக்ஸ்
மனித உடலோட உஷ்ண நிலை 98.4 டிகிரி . இந்த உஷ்ண நிலைல உயிரணுக்கள் வாழ்வது கஷ்டம் அதனால தான் இயற்கை ஆணின் விதைகளை ( டெஸ்டிக்கல்ஸ்) பாடிக்கு வெளிய படைச்சிருக்கு. டெண்டெக்ஸ் போட்டு அதும்மேல ஜீன் போட்டு , அதுக்குள்ளாற சட்டைய இன்செர்ட் பண்ணி பிருஷ்டத்தை ரெக்சின் சீட் மேல வச்சு மணிக்கணக்கா பிரயாணம் பண்ணிங்கனு வைங்க விதையில் உஷ்ண நிலை எகிறும் . படிப்படியா உயிரணுக்களோட எண்ணிக்கை குறையவும், அவற்றின் நீந்தும் திறன் குறையவும் வாய்ப்பிருக்கு. இன்னொரு லாஜிக் என்னன்னா வண்டிதான்  இருக்கேன்னு ஆஃபீஸுக்கு ரெம்ப தூரத்துல வீட்டை பார்ப்பிங்க. பிரயாண நேரம் வேற அதிகரிக்கும். கூட்டிக்கழிச்சுப்பாருங்க கணக்கு கரெக்டா வரும்.

சரி ஒரு வழியா எல்லாம் செட் ஆகி  கண்ணாலத்தை உறுதி செய்யற நேரம் வந்துருச்சா?  நிச்சயதார்த்த தேதிக்கு கண்ணாலத்துக்கும் நிறைய கேப் இல்லாம பார்த்துக்கிடுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடியெல்லாம்  நம்ம வீடுகள்ள மஞ்சள் நிறத்தை அள்ளி வீசிக்கிட்டு குண்டு பல்பு எரிஞ்சிக்கிட்டிருந்தது. இப்போ ட்யூப்லைட் தான் எரியுது. மஞ்ச நிறத்துக்கு அதிபதி குரு. வெள்ளை நிறத்துக்கு அதிபதி சந்திரன்.

குருவோட காரகத்வம் வேற சந்திரனோட காரகத்வம் சஞ்சலம். இன்னைக்கு சனம்  சஞ்சலம் நிறைந்த மனசோட ,நிலையில்லாத வாழ்க்கை வாழ காரணம் இந்த ட்யூப் லைட்டுகதான்னும் ஒரு சம்சயம் உண்டு.

இது ஜோதிஷ கோணம். ப்ராக்டிக்கலா பார்த்தா இன்னைக்கு உள்ள லைஃப்  ஸ்டைல்ல ஆண்,பெண் நெருங்கி பழக பல சந்தர்ப்பம் இருக்கு. அட பச்சையா சொன்னா படுத்து வந்திருக்கவும் வாய்ப்பிருக்கு.  கம்யூனிகேஷன்ஸும் ரெம்ப டெவலப் ஆயிருச்சு. அதனால வில்லங்க தகவல்கள் வந்து சேர்ந்து நாறிப்போக வாய்ப்பிருக்கு.

ஒரு வேளை நீங்க ப்ரப்போஸ் பண்ற கண்ணாலத்தால உங்களுக்கு  நிம்மதி கிடைக்கனும்ங்கற தலையெழுத்திருந்தாலும் அதை கெடுத்து குட்டிச்சுவராக்க ஆயிரம் ஃபேக்டர்ஸ் வேலை செய்யும்.

கண்ணாலத்தை ஃபிக்ஸ் பண்றது ஜாதகப்படியோ,கோசாரப்படியோ ஓரளவாச்சும் நல்ல நேரமா இருக்கிறாப்ல பாருங்க.  நம்ம ரஜினி காந்த் மாதிரி கடந்த காலத்துல யார் யாரோட முட்டல் மோதல் இருந்துச்சோ அவிகளையெல்லாம் பார்த்து பணிவா பேசி இன்வைட் பண்ணுங்க.  கண்ணாலம் முடியற வரை உங்களுக்கு தெரிஞ்ச பிராமண் நண்பர்கள் ( ஆண்,பெண் இருபாலாரும்) இருந்தா அவிகளை டின்னருக்கு இன்வைட் பண்ணுங்க. முடிஞ்ச வரை யார் வயித்தெறிச்சலையும் கொட்டிக்காம இருங்க.

முக்கியமா கண்ணாலம் கட்டிக்கப்போற பெண்ணுக்கு ஃபோன் போடறது, எஸ்.எம்.எஸ் அனுப்பறது , அவள் போற பார்ட்டிக்கெல்லாம் முகர்ந்துட்டு போறதுல்லாம் பண்ணாதிங்க,  வாழ்க்கைங்கறது ஒரு கேண்டில். அதை ஒரு பக்கம் மட்டும் கொளுத்தினா பாதி வெளிச்சம் மட்டுமே வரலாம் ஆனால் லாங் லைஃப். ரெண்டு பக்கம் கொளுத்தினா இரட்டிப்பு வெளிச்சம் வரலாம் ஆனா ஷார்ட் லைஃப்.

கண்ணாலன் நிச்சயமாயிருச்சா அதுக்காக ஃபிசிக்கலா,சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆக முயற்சிக்கலாம்.அது வேற மேட்டர். ஆனால் அதே சிந்தனையா இருந்தா மட்டும் எதிர்கால திருமண வாழ்க்கை நாறிரும். அது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்