Friday, September 17, 2010

கேள்வி - பதில்

கே: நீங்க ஆத்திகமா நாத்திகமா?
ப:    மனிதம்  மறவாத வரை ஆத்திகம் ஓகே. சமூக பொறுப்பை தட்டி கழிக்காத வரை நாத்திகமும் ஓகேதான்.என்னைப்பொறுத்தவரை நான் பகுத்தறிவுள்ள ஆத்திகன்


கே: ஜோதிடம் விஞ்ஞானமா? மெய் ஞானமா?
ப:    ஜோதிடக்கடலின் கரையோரம் சிப்பிகள் பொறுக்கும் வரை விஞ்ஞானமாக தோன்றும். கடலில் குதிக்க அது மெய் ஞானமென்று விளங்கும்


கே:கடவுள் ?
ப: மனிதன் பின்னோக்கி பயணித்து மிருகமாகிவிடாது இருக்க,  மனிதனாகவே தொடர உதவும் தொடுவானம்

கே: உங்கள் எழுத்துக்களின் நோக்கம் தான் என்ன?
ப: சற்றே நாடு குறித்தும் சிந்திக்கும் சற்றே சமூக பொறுப்புடன் கூடிய வாக்காளர்கள், அரசியல் வாதிகள், சற்றே சரளமான உலக வாழ்க்கையினூடே  ஒரு மெலிதான  தேடல் நிலவும் சூழலை உருவாக்குவதே என் எழுத்துக்களின் நோக்கம்.

கே: கட்டை பஞ்சாயத்து பற்றி ..
ப :    நமது காவல், நீதித்துறைகளின் தோல்விக்கு சாட்சி க.ப

கே:பொன் மொழிகள் பற்றி ?
ப :  கட்டு சோற்று மூட்டைகள். பல ஊசிப்போய்விட்டன

கே: தங்கம் விலை ஏறிக்கொண்டே போகிறதே?
ப: மனிதனுக்கு சக மனிதன் மீதும், குடும்பம், சமுதாயம், அரசுகளின்  மீதும் உள்ள நம்பிக்கை நசிந்து கொண்டிருப்பதன் அடையாளம் இது

கே: மனிதனுக்கு இத்தனை வியாதிகள் வரக்காரணம்?
ப : அவன் சஞ்சார வாழ்க்கையை விட்டதும், சமைத்து சாப்பிட ஆரம்பித்ததும் தான்

கே: எழுத்தாளர்கள்?
ப : நிகழ்காலத்தை சீரணித்துக்கொள்ள முடியாத மென் தோலினர்.

கே: வியாபாரிகள்?
ப:    அடுத்தவன் நஷ்டத்தில் லாபம் காண துடிப்பவர்கள்

கே: மன்மோகன் சிங்  பற்றி ?
ப :   நீண்ட நாள் பதவியில் தொடரும் குல்ஜாரிலால் நந்தா

கே: சோனியா ?
ப : தான் துக்கத்தில் இருப்பதால் நாட்டை, தமிழரை துக்கப்படுத்தி பார்க்கும் பரிதாபத்திற்குரிய ஜீவன்

கே: கலைஞர் ?
ப : நீண்ட ஆயுள் பெற்றதாலேயே  மொக்கையாகிப்போன சரித்திர புருஷன்

கே: ஜெயலலிதா?
ப :   குழாயடியில் குடுமி பிடி சண்டையிட்டு  தண்ணீரை பிடித்தே தீர வேண்டும் என்ற  வெறி கொண்ட ஸ்லம் பெண்மணி. என்னடா பிரச்சினை என்றால் குழாயில் தண்ணீர் வந்தாலன்றி குழாயடிக்கே வரமாட்டார்