Wednesday, September 1, 2010

தாயின் தலையை வெட்டி ஊர்வலம்

அண்ணே வணக்கம்ணே,
இந்த தினத்தந்தி ப்ராண்டு பதிவோட கடுமையான செந்தமிழ்ல ஆத்தாள் அருள் வேண்டி ஒரு கவிதையும்
எழுதியிருக்கேன். பல்லை உடைக்கும் தமிழ்னு ஓடிப்போயிருவிங்களோ .. படிக்காமயே அருமைன்னிருவிங்களோ உங்க இஷ்டம்
 தாயின் தலையை வெட்டி ஊர்வலம் - சூனியம் வைப்பதாய் சந்தேகம்
சூனியம் வைப்பவர் என்று   சந்தேகித்து பெற்ற  தாயின் தலையை வெட்டி சைக்கிளில் கட்டி ஊர்வலம் போன மகனின் கதை இது .

ஆந்திர மானிலம், நல்கொண்டா மாவட்டம்,நார்க்கட் பல்லி மண்டலம், தொண்ட்லாயா கிராமத்தை சேர்ந்தவர் சில்லி சத்தம்மா (60). இவிக மந்திரவாதினு சனங்களுக்கு  சந்தேகம் .ரெண்டு வருஷத்துக்கு மிந்தியே பஞ்சாயத்து கூட்டி அவிக பல்லை தட்டி எடுத்திருக்காய்ங்க.

அது முதல் சத்தம்மா தன் கணவருடன் சாலி கௌராரம் பகுதிக்கு ஷிஃப்ட் ஆகி குடிசை போட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தாய்ங்க. அந்த மாராஜி ( மகராசியின் -கொச்சை) கெட்ட நேரம் 6மாசத்துக்கு மிந்தி  சொந்த ஊருக்கு வந்து வாழ ஆரம்பிச்சாய்ங்க.

கிராமத்துல ஒரு பையனுக்கு ஜூரம் வந்தது. உடனே  ஊர்மக்களுக்கு சத்தம்மா மேல சந்தேகம். (அட டுபுக்குங்களே ! உங்க தியரி படி பார்த்தாலும் பல் போனா சொல் போச்சுல்லயா மந்திரம் எப்படி பலிக்கும்.)

செவ்வாய் கிழமை சத்தம்மா மகன் சைதுலு(40) கையில கோடாலியோட அம்மாவோட குடிசைக்குள்ள  நுழைஞ்சான். "மந்திரமா பண்றே"னு அம்மாவை வெளிய இழுத்து  வந்திருக்கான்.  அப்பா,மச்சினி தடுத்தாலும் அவிகளை நெட்டி தள்ளி  கோடாலியால சத்தம்மா கழுத்தை வெட்டினான்.

தலையையும், கோடாலியையும் சைக்கிள் ஹேண்டில் பாருக்கு கட்டி கிராமம் முழுக்க சுத்தி வந்தான் " என் ஆத்தா மந்திரக்காரி - என் ஒரே மகளுக்கு கூட சூனியம் வச்சுருவாளோனு பயந்து போட்டுத்தள்ளிட்டேன்" னு  கூவியிருக்கான்.

தமிழ் சினிமா மாதிரி போலீஸ் காரவுக எல்லாம் முடிஞ்ச பிற்பாடு வந்து சைதுலுவை அரெஸ் பண்ணி வழக்கு பதிவு பண்ணியிருக்காய்ங்க.

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில் உள்ள வித்யாசம் காதலுக்கும், காமத்துக்கும் இடையில் உள்ள வித்யாசம் மாதிரி ரெம்ப மைன்யூட் . காதல் எப்பவேணாம்னா காமமா மாறிரும். ( ஆனால் காமத்துலருந்து /காமத்துக்கு பின் உண்மையான காதல் உருவாகும் - மூட நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு திரும்ப சான்ஸே கிடையாது. 

தாளி எனக்கு வைக்க சொல்லுங்க சூனியம். சூனியமாம் சூனியம் ஞான சூனியங்க.
கர்பமா இருக்கிற கருப்பு பெட்டை நாயை கொண்டுவரணும்.அதை பச்சரியை தின்ன வைக்கனும். அப்பால அதை கக்க வைக்கனும் ( அது கடிச்சு வச்சா சாகனும்)

கருப்பு பூனை ஒன்னை பிடிக்கனும். அதை முகம் பார்க்கிற கண்ணாடி முன்னாடி வச்சா அதனோட உருவம் கண்ணாடில தெரியகூடாது

இந்த மாதிரியெல்லாம் எழுதி வச்சிருக்கானுவ. இந்த மாதிரி புஸ்தவங்க எல்லா ஊர் பஸ் ஸ்டாண்ட்லயும் நாலணா,எட்டணாவுக்கு கிடைக்குது. இப்பத்தான் மஞ்சள் முகங்கள் படிக்கிற குடும்ப பத்திரிக்கை எது , மஞ்சள் பத்திரிக்கை எதுனு வித்யாசமே இல்லாத நிலை வந்துருச்சே.

போலீஸ்காரவுக இந்த மாதிரி மாந்த்ரீக புஸ்தவங்களை பறிமுதல் பண்ணா என்ன?