Monday, September 20, 2010

சித்தூரை வட்டமிட்ட ஹெலிகாப்டர்

நேத்து ( செப் 20,2010) சித்தூர் நகரத்தை ஒரு ஹெலிகாப்டர் ராட்சச  தும்பி மாதிரி மறுபடி மறுபடி வட்டம் போட்டதுங்கண்ணா. டாக்ஸி அனுப்பற ரேஞ்சுல தானே  நம்ம விமர்சனம் இருக்கும். ஹெலிகாப்டர் அனுப்பற ரேஞ்சுக்கு ஒன்னும் போடலியேனு ரோசிச்சப்பத்தான் ஞா வந்தது.

வினாயகர் சதுர்த்திய முன்னிட்டு சித்தூர் துரைசாமி ஐயங்கார் ரோட்ல 40 அடி பிள்ளையாரை நிறுத்தினாய்ங்க. சிவசக்தி வினாயகா பக்தர்கள் குழு வருசா வருசம் அங்கன வினாயகர் சதுர்த்தி கொண்டாடறது வழக்கம். இந்த வருஷம் அவிக வினாயகரை கரைக்க கொண்டு போகும்போது ஹெலிகாப்டர்லருந்து பூமழை பொழிவிக்கத்தான் இந்த ஹெலிகாப்டரை வட்டமிட வச்சாய்ங்க.அதுலருந்து பூமழை பொழிஞ்சது. நாலாவது முறையா எம்.எல்.ஏ வா ஜெயிச்சு அரசியல் எதிரிகளை டர்ராக்கிய சி.கே பாபு இந்த ஊர்வலத்துல கலந்துக்கிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.கடந்த காலத்துல பல முறை கொலை முயற்சிக்கு இலக்கானவர். சமீப காலத்துல வாடகை கொலையாளிகள் ஏகே47 ல சுட்டும், கண்ணி வெடி வெடுச்சும் இவரை  கொலை செய்ய முயற்சி பண்ணாய்ங்க. இருந்தாலும் மக்கள் கூட்டத்துல நீந்தி வர்ர எம்.எல்.ஏ வை பாருங்க. மசூதி-மந்திர் பதிவுல அதே போன்ற ஒரு லோக்கல் பிரச்சினைக்கு லோக்கல் சொல்யூஷன் தந்த பார்ட்டி இவர் தான். இந்தியாவுல டீ ஷர்ட் போடற ஒரே எம்.எல்.ஏ இவராதான் இருக்கும்னு நினைக்கிறேன்.